Tuesday, October 18, 2011

தமிழ்மணமும் மதமும்!

மதச்சார்பற்று நடந்து வரும் தமிழ்மணத்தில் மதம் என்கிற வைரஸ் நுழைந்தது போனவாரம் இல்லை! இந்தச் சமீபத்திய "பெயரிலி பிரச்சினைக்கு" முன்பே தமிழ்மணத்தில் மதம் நுழைந்து தலைவிரித்தாடுகிறது.

மதப் பிரச்சாரம் செய்யும் தளங்களை தமிழ்மணம் ஆதரிக்கவில்லை என்று கோபத்தில் இருந்த பலர் வேண்டுமென்றே பெயரிலியின் பின்னூட்டத்திற்கு மதச்சாயம் பூசி, அதை பயன்படுத்தி வஞ்சம் தீர்க்க தமிழ்மணத்தின் மேல் பாய்கிறார்கள் என்பதே உண்மை!

ஒரு சாதாரண பின்னூட்டத்தில் சொன்னதை பெரிசுபடுத்தி, மத அடிப்படையில் ஒன்றுகூடி மதச்சார்பற்ற தமிழ்மணத்திற்கு எதிராக கொடிபிடித்து, "தமிழ்மணமே மன்னிப்புக் கேள், தமிழ்மணத்தை விட்டு வெளியேறுகிறோம்" என்றல்லாம் வாய்கிழிய தாறுமாறாக பேசி, ரோசமாக, "அதிபுத்திசாலித்தனமாக" தன் தளத்திலிருந்து தமிழ்மணப் பதிவுப்பட்டையை எடுத்து வெளியேறி, தமிழ்மணத்தை இழிவு படுத்த முயன்ற கண்மணிகளுக்கு நான் சொல்வதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். தயவு செய்து திரும்ப தமிழ்மணப் பதிவுப்பட்டையை மாட்டிக்கிட்டு தமிழ்மணத்திற்குள்ளே வராதீங்க! நீங்க எடுத்த நல்ல முடிவை மாற்றிக்காதீங்க!

இப்படி நான் எழுதிவதை தமிழ்மணமே விரும்பாமல் இருக்கலாம். என்னை தண்டிக்கக்கூட செய்யலாம். இருந்தாலும் திரும்பவும் சொல்லுறேன் தயவு செய்து திரும்ப தமிழ்மணத்திற்கு உள்ளே வராதீங்க! ஆமாம் இது மிகப்பெரிய பரந்த உலகம்! தமிழ்மணமே உலகமல்ல! என்பது நீங்கள அறியாததல்லவே!

என் பார்வையில் பெயரிலி தவறு செய்திருந்தாலும் அந்தத் தவறு ஒரு "நல்ல தவறு". ஒரு ஆண்டுக்கு முன்னால் இன்று இருப்பதுபோல் தமிழ்மணத்திலோ, தமிழ் வலைதளங்களிலோ மதம் புகுந்து தலை விரித்தாடவில்லை என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் சமீபத்தில் நடந்த விடயங்களை ஒன்றுகூட்டிப் பார்த்தால் மதம் என்கிற மோசமான வைரஸ்/வியாதி தமிழ் வலைபதிவுகளில் நுழைந்துவிட்டது என்றுதான் தெளிவாகத் தெரிகிறது

மேலும், தமிழ்மணத்தின் மேல் அவதூறு சொல்லி ஒதுங்கிப்போன கண்மணிகள் இல்லாமல் தமிழ்மணம் திரட்டி என்னதான் ஆகுது (மென்மேலும் வளருதா இல்ல மதமணம் இல்லாமல் தரம்குறைகிறதா) னு பார்க்க நான் மட்டுமல்ல, அமைதியாக பொறுமையாக, எதிர்வாக்குப் போடாமல்,தேவையில்லாமல் கொதித்தெழுந்து பேசிய பேச்சை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் எல்லாருமே ஆசைப்படுவார்கள் என்பது எனது நம்பிக்கை.

என்னுடைய கணிப்பில் தன் ஜாதி என்று ஜாதி அடிப்படையில் ஒன்று கூடுகிறவர்கள் இன்னைக்கு தமிழ்ப்பதிவுலகில் இல்லை! தன் சாதியைப் பதிவுலகில் சொல்லவே அஞ்சும் அளவுக்கு ஒரு நிலைமையை கொண்டுவந்து நாம் முன்னேறியுள்ளோம். அப்படி இருக்கும்போது மதச்சாயம் மட்டும் என்ன எழவுக்கு?

தமிழ்வலைதளங்களில் மதம் என்கிற அடிப்படையில், ஒன்று சேர்ந்து சகோதரத்துவம் பாராட்டுவது, போராடுவது எல்லாம் ஒழியனும்! மத உணர்வை தூக்கி எறிந்துவிட்டு கருத்துப் பரிமாற்றம் செய்யும் நிலை வரனும்! அதுதான் நம்மில் ஏற்படும் முன்னேற்றம்!

தன் மதத்தை இழிவுபடுத்தியதாக் குற்றம் சாட்டி, "என் மதம், என் மதம்" என்கிற முக்கியத்துவம் கொடுக்கும் அந்த மதரீதியான எண்ணம் ஒழியனும்னா, மதச்சார்பற்ற தமிழ்மணத்தைவிட தன் மதம்தான் உயர்ந்தது என்று எண்ணி பதிவுப்பட்டையை தூக்கியவர்கள் அப்படியே ஒதுங்கி இருப்பதுதான் எல்லாராலும் விரும்பப்படுகிறது.

கண்மணிகளா! எங்கேயாவது போய் நல்லா இருங்க! தயவு செய்து மறுபடியும் பதிவுப்பட்டையை மாட்டிக்கிட்டு வந்திடாதீங்க! ஏன் என்றால், உங்களைப் பதிவர்கள் பார்க்கும் பார்வை மாறிவிட்டது! இல்லை நீங்களே உங்கள் மேலே மதச்சாயத்தைப்பூசிக் காட்டி எல்லோரையும் மாற்றிவிட்டீர்கள்!

27 comments:

  1. பொறுத்தார் பூமியாள்வார். பொறுத்திருப்போம்.

    ReplyDelete
  2. உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
  3. //"அதிபுத்திசாலித்தனமாக" தன் தளத்திலிருந்து தமிழ்மணப் பதிவுப்பட்டையை எடுத்து வெளியேறி, //
    LOL

    ReplyDelete
  4. //என்னுடைய கணிப்பில் தன் ஜாதி என்று ஜாதி அடிப்படையில் ஒன்று கூடுகிறவர்கள் இன்னைக்கு தமிழ்ப்பதிவுலகில் இல்லை! தன் சாதியைப் பதிவுலகில் சொல்லவே அஞ்சும் அளவுக்கு ஒரு நிலைமையை கொண்டுவந்து நாம் முன்னேறியுள்ளோம்.//

    நான் அப்படி நினைக்கவில்லை. சிலர் ஜாதி அடிப்படையில் தான் ஒன்று கூடியிருக்கிறார்கள்.

    //தன் சாதியைப் பதிவுலகில் சொல்லவே அஞ்சும் அளவுக்கு//

    ஆக பயமுறுத்தி தான் சொல்ல வைக்கவில்ல. இது எந்த எதிர் விளைவுகளை உருவாக்காதா? கண்டிப்பாக உருவாக்கும் என்றே நான் நம்புகிறேன்...

    ReplyDelete
  5. துணிச்சலான பதிவு!
    இந்த கூச்ச்சல் குழப்பத்தில் உங்களை கவனிக்கவில்லை போலிருக்கிறது. இல்லை என்றால் உங்களுக்கும் ரெட் கார்ட் கொடுத்திருப்பார்கள்!

    ReplyDelete
  6. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ்மணத்தை கேவலமாக எழுதி அதை தமிழ்மணத்திலேயே வெளியிடுவது. இதில் ஒரு புண்ணியவான் மகுடத்திலையே ஏறி விட்டார்.

    ReplyDelete
  7. மிகவும் அருமையான பதிவு வருண். பாராட்டுகள்.

    ReplyDelete
  8. நகைச்சுவை என்பது வேறு, அடுத்தவர் மனதை, அதுவும் முன்பின் தெரியாதவர் மனதை காயப்படுத்துவது என்பது வேறு. (நான் தமிழ்மணம் விவகாரத்தை குறிப்பிடவில்லை). கேலியும் கிண்டலுமாக, பலநேரங்களில் ஆபாசமான வார்த்தைகளையும் மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி சிலர் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

    தனது முகத்தையும் முகவரியையும் மறைத்துக்கொள்ள முடியும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா?

    இப்படியொரு சிக்கல் ஏற்பட்டது வியப்பளிக்கக் கூடியதாக இல்லை. இது ஒருவகையான "பட்டாம்பூச்சி விளைவு": http://en.wikipedia.org/wiki/Butterfly_effect

    தமிழ் மணத்திற்கு பயோடேட்டா வெளியிட்ட வகையில் - தொடர் விளைவுகள் நிகழ்ந்துள்ளன. எது எப்படியோ "டெர்ரர் கும்மி: இது ரத்த பூமி...!" என்கிற அவர்களது தலைப்பை காப்பாற்றி விட்டார்கள்.

    ReplyDelete
  9. இதெல்லாம் ஒரு மேட்டரு அதுக்கு ஒரு மன்னிப்பு. இதுக்கு வேலைய விட்டுப் போட்டு ஒரு பதிவு. hahah

    ReplyDelete
  10. ////////கண்மணிகளா! எங்கேயாவது போய் நல்லா இருங்க! தயவு செய்து மறுபடியும் பதிவுப்பட்டையை மாட்டிக்கிட்டு வந்திடாதீங்க! /////////

    கண்ணாபினாவென வழிமொழிகிறேன்.
    A long time silent tamilmanam reader

    ReplyDelete
  11. ////////////////
    கண்மணிகளா! எங்கேயாவது போய் நல்லா இருங்க! தயவு செய்து மறுபடியும் பதிவுப்பட்டையை மாட்டிக்கிட்டு வந்திடாதீங்க! /////////////


    கண்ணாபினாவென வழிமொழிகிறேன். A long time silent tamilmanam reader

    ReplyDelete
  12. அப்ப, முஸ்லிம்களுக்கு மட்டும் தான் பிரச்சினையா? வேறயாரையும் பத்தி ஒண்ணுமே சொல்லலையா?

    //
    டெரர்கும்மியா இருந்தாலும் அடுத்தபக்கம் மகளோட போட்டோவைப் போட்டு நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனேயெனப் பொங்கிப் பதிவு போட்டிருக்கானே என்ற இக்குணி இரக்கமேதான். இப்போ உப்பு தின்றிருக்கிறதாலே சொல்கிறேன். கழட்டிடடுமா?

    நானும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் உங்களுக்குப் பதிலெழுதிவிட்டு வந்தால், உமக்கு பயடேட்டா சூப்பரா மட்டுமிருக்காது; சூப்புறமாதிரியுமே இருக்கும்.....

    ஏங்கவண்டிக்காரன் மகனுல, முரட்டுக்காளையில ஜெய்சங்கரோட ஏதாச்சும் சவால்விட்டுக்கிட்டிருற சீன் பாக்கறப்ப உங்க அம்மா உங்கள பெத்தாங்களா?
    //

    இந்த முத்துக்களை எல்லாம் உதிர்த்தது யார் ராசா?, பொறுப்புமிக்க ஒரு திரட்டியின் நிர்வாகி இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளால் சக பதிவர்களை திட்டலாமா?

    ReplyDelete
  13. Saha: நான் இங்கே தமிழ்மணமும் மதமும் என்கிற தலைப்பின் கீழ் மதம் தலைவிரித்தாடுவதை விமர்ச்சி இருக்கேன்.

    நீங்க இடையில் வந்து ஒரு பின்னூட்டத்தை எங்கோவோ இருந்து எடுத்து வந்து, "மதம் சம்மந்தமே இல்லாத" ஒரு மேட்டரை சொருகுறீங்க.

    நீங்க நெனைக்கிறாப்பிலே நான் எல்லா இடங்களிலும் தரமான பின்னூட்டமிடும் ஒரு ஆள் இல்லை. பல அனானிகள் வரும் இணையதளத்தில் பின்னூட்டங்களில் வாக்குவாதம், சண்டை, தாறுமாறான பேச்சு எல்லாம் வரும். நானும் இதேபோலும் இதற்கு மோசமாகவும் பின்னூட்டமிட்டு இருக்கேன். எந்டஹ் ஒரு பிரச்சினையையும் ஆரம்பத்திலிருந்து பார்ப்பது நல்லது. அதனால் சும்மா இந்தப் பின்னூட்டத்தை வச்சு நான் யாரையும் ஜட்ஜ் பண்ணத்தயாரா இல்லை! வருகைக்கு நன்றி. தலைப்புக்கு நம்மந்தமில்லாத உங்க பின்னூட்டம் அகற்றப் படலாம்! :)

    ReplyDelete
  14. நான் ஒரு சாதாரண வாசகன். தம் மதத்தை இழிவு படுத்தியதாக கருதாமல் ஒரு மதத்தை இழிவு படுத்தியுள்ளார் என கருதும்போது அது உண்மை தானே.

    ReplyDelete
  15. மதச்சார்பற்றவர் என்ற போர்வையில் ஓர் சங்க்கும்பல் நுழைந்திருக்கிறது, உஷார்!

    ReplyDelete
  16. கருத்தால் வேசித்தனம் என்பது இதுதானோ. கருத்துக்களம் என்பது ஒரு விவாதம். அதனை முன் வைப்பதில் என்னத்தவறு. கொச்சையாக பேசுவதிலிருந்து தாம் யார்? தம் குடும்ப பின்னணி என்பதனை அறியலாம். கருத்துக்களையும், விவாதங்களையும் தாங்க முடியாதவர்களின் கோழைத்தனமே இவ்வற்க்கையெல்லாம். திறன் இருந்தால் விவாதி அதைவிட்டு விட்டு இங்கிருந்து ஒடிவிடி என்பது 23ம் புலிகேஸியின் வீராவேசம்.

    ReplyDelete
  17. ***எழிலருவி said...

    நான் ஒரு சாதாரண வாசகன். தம் மதத்தை இழிவு படுத்தியதாக கருதாமல் ஒரு மதத்தை இழிவு படுத்தியுள்ளார் என கருதும்போது அது உண்மை தானே.

    19 October 2011 12:04 PM***

    "சாந்தியும் அவ அக்கா சமாதினியும் உங்க கூடவே இருக்கட்டும்" என்ற வாக்கியம் "இஸ்லாமியர்கள் வாக்கியம்" என்பதே எனக்கு இப்போத்தான் தெரியும். இவ்வளவுக்கும் நான் இஸ்லாமியர்களுடன் பிறந்து வளர்ந்தவன். பெயரிலி இஸ்லாமியர்களை இழிவுபடுத்த இதை சொன்னதாக எனக்குத் தோணலை. வாதத்தில் இதுபோல வார்த்தை ஜாலங்கள் வருவது சாதாரணம். இதே வாக்கியத்தை "ராமரையோ" "கிருஷ்ணரையோ" இழிவு படுத்துவதாக சொல்லியிருந்தால் எவனும் கவலைப்பட்டு இருக்க மாட்டான். ஏன் இவங்க மட்டும் எதுக்கெடுத்தாலும் துள்ளிக்குதிக்கிறாங்க???? BTW, I did make a comment similar to this in dondu raghavan blog not too long ago about "lord ramaaa". Nobody cared. That is the normal reaction in blog world. What these guy did is very ABNORMAL and weird!!

    ReplyDelete
  18. ***HIDAYATH said...

    மதச்சார்பற்றவர் என்ற போர்வையில் ஓர் சங்க்கும்பல் நுழைந்திருக்கிறது, உஷார்!

    19 October 2011 12:09 PM***

    உங்களுக்கு என் "மத நம்பிக்கை" பத்தித் தெரியாது. அதான் இதுபோல் எதையோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க!

    ReplyDelete
  19. உங்க கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  20. இனிமேல் வருணை இஸ்லாமியப் பதிவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவராக்கிடுவாங்க பாருங்க :)

    ReplyDelete
  21. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  22. ***Saha, Chennai said...

    முஸ்லிம் பதிவர்களுக்கு மட்டும் தான் தமிழ்மணத்துடன் பிரச்சினை என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தினை ஏற்படுத்த ஒருசிலர் முயலுகிறார்கள். ***

    It is OBVIOUS from my tilte I am addressing only "religious issue" and "religious painting" but YOU DONT LISTEN. You keep digressing with some other INTENTION. It is not that I cant debate about it. But, this is how any discussion gets fucked up! Now take your issue elsewhere and keep posting the same "response" in million blogs. Good luck. I am reemoving your comment as I find it IRRELEVANT to the TOPIC I am addressing here!

    ReplyDelete
  23. ****Robin said...

    இனிமேல் வருணை இஸ்லாமியப் பதிவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவராக்கிடுவாங்க பாருங்க :)***

    ராபின்: :)))

    வலைய்லகத்தில் யாருக்குவேணா என்ன பட்டம் வேணாக் கொடுக்கலாம்! காசாப் பணமா இல்லை உண்மை எதுவும் இருக்கனும்னு அவசியமா? சும்மா டைப் அடிக்க வேண்டியதுதானே? :)

    ReplyDelete
  24. 83.VANJOOR on October 18th, 2011 11:43 am

    in link http://blog.thamizmanam.com/archives/359

    HEADER: தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்

    • VANJOOR on October 18th, 2011 11:43 am

    திரு.சங்கரபாண்டி அவர்களின் விளக்க‌த்திற்கு நன்றி.

    அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வரஹ்)

    ம‌ன‌ உளைச்ச‌லுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களே ! வாச‌க‌ர்க‌ளே !!

    இனிமேலும் இதுபோன்ற‌ நிக‌ழ்வுக‌ள் த‌மிழ்ம‌ண‌த்திலோ தமிழ்மணத்தின் பெயராலோ இட‌ம் பெறாது என பரிபூரணமான ந‌ம்பிக்கையுடன்

    மன்னிப்போம் மறப்போம் என்ற மானுட வசந்த‌ பாதையில் பயணிப்போம்.

    நாம் சந்திக்கும் பல இடங்களில் ஒன்றாக தமிழ்மணமும் வ‌ழக்க‌ம் போல் இருக்க‌ட்டும்.

    த‌ன்மான‌ உண‌ர்வுட‌ன் இதுவ‌ரையிலும் த‌மிழ்ம‌ண‌த்திலிருந்து தானாகவே வில‌கிக்கொண்ட‌ அனைத்து சக‌ முஸ்லீம் ப‌திவ‌ர்களும் மீண்டும் த‌மிழ்ம‌ண‌த்தில் இணைந்து கொள்ளுங்க‌ள்.

    ந‌ல்லெண்ண‌த்தின் அடிப்ப‌டையில் நேச‌ க‌ர‌ம் நீட்டும் செய‌லாக‌ இதுகாறும் தானாக‌வே வில‌கிக்கொண்ட‌ ம‌ன‌ உளைச்ச‌லுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களை
    த‌மிழ்ம‌ண‌ம் அடையாள‌ம் க‌ண்டு

    த‌மிழ்ம‌ண‌ம் தன்னிச்சையாக அவர்களை தமிழ்மனத்தில் இணைத்து திரு.ச‌ங்க‌ர‌பாண்டிய‌ன் உள்ளிட்ட‌ த‌மிழ்ம‌ண‌ நிர்வாகிக‌ளின் நேச‌க்க‌ர‌த்தை வலுவூட்ட‌லாமே ..

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
    =====================

    த‌மிழ்ம‌ண‌ நிர்வாகிக‌ளுக்கு நான் அனுப்பிய‌ மெயில்.

    From: VANJOOR
    Date: 2011/10/19
    Subject: GOODWILL

    To: admin@thamizmanam.com

    Dear Administrators,

    After I have registered the following comment

    83.VANJOOR on October 18th, 2011 11:43 am

    in link http://blog.thamizmanam.com/archives/359

    HEADER: தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்

    I was delighted to receive positive response and support from majority of muslim Bloggers to my call and agreed in good faith to forget and put an end to this unfortunate episode .

    So let us shake hands in goodwill with goodwill for goodwill.

    Your acknowledgement regarding this much appreciated.


    Regards.
    vanjoor

    http://vanjoor-vanjoor.blogspot.com/

    E&O.E.


    .

    ReplyDelete
  25. ***ம‌ன‌ உளைச்ச‌லுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களே ! வாச‌க‌ர்க‌ளே !!**

    இனிமேலும் இதுபோன்ற‌ நிக‌ழ்வுக‌ள் த‌மிழ்ம‌ண‌த்திலோ தமிழ்மணத்தின் பெயராலோ இட‌ம் பெறாது என பரிபூரணமான ந‌ம்பிக்கையுடன்

    மன்னிப்போம் மறப்போம் என்ற மானுட வசந்த‌ பாதையில் பயணிப்போம்.***

    நல்ல முயற்சி. உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். தமிழ்மணம் குழு உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் என நம்புறேன்!

    ReplyDelete
  26. சாதியும் மதமும் சமயுமும் காணா
    ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

    சாதியும் மதமும் சமயமும் பொய் என
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


    Utube videos:
    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
    www.youtube.com/watch?v=FOF51gv5uCo


    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete