Friday, September 19, 2014

நண்பர்களை அழைக்க முடியவில்லை!

அவர்கள் மேல் கோபமில்லை
எள்ளளவு வருத்தமும் இல்லை
அவர்களைப் பழிவாங்கவும் இல்லை
கடவுளைச் சந்திக்கப் போகும் அவசரத்தில்
ஆருயிர் நண்பர்களை அழைக்க இயலவில்லை
எனது இறுதி சடங்கிற்கு!


புகைப்படம் இணையத்தில் திருடியது


இது ஒரு "மீள் கவிதை" தான்!

அப்புறம் அழுதுடாதீங்க! நான் உயிரோடதான் கிழங்குமாதிரி இருக்கேன்!  சும்மா ஒரு கவிதைமாதிரி..ஆமா, ஆமா, இழவுக்கவிதைதான்! :-)

25 comments:

  1. அடடா! ஒரு சின்ன "ஒரிஜினல் சிந்தனையை" மெச்சாமல் இப்படி கவலைப்படுறீங்களே [ :(((( ], மைதிலி! :-)

    ReplyDelete
  2. ****Angelin said...

    WHY ???
    :( ****

    Whether I like it or not I will die one day, Angelin. :)

    Take it easy, Angelin!

    ReplyDelete
  3. ***சே. குமார் said...

    நல்ல கவிதை...
    :( ***

    நன்றி, குமார். :)

    ReplyDelete
  4. varun,
    please provide ''follow by mail facility''
    karthik amma

    ReplyDelete
  5. அய்யா சாமி
    கவிதையாயா இது கொலை நடக்கதை தருகிறதே

    ReplyDelete
  6. அசத்திட்டீங்க. உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு கவிதைய எதிர் பார்க்கல.


    ReplyDelete
  7. அவங்கெல்லாம் வந்திருப்பாங்க நமக்குத்தான் தெரியாது. ஹிஹிஹி

    ReplyDelete

  8. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  9. சோகம் ததும்பும் கவிதை.

    ReplyDelete
  10. திக்கென்று இருந்தது எனக்கு. :-)

    ReplyDelete
  11. ***Ponniyinselvan/karthikeyan said...

    varun,
    please provide ''follow by mail facility''
    karthik amma***

    வாங்க கார்திக அம்மா!

    நீங்க கேட்ட அந்த வசதியை செய்தாச்சு! வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  12. ***Mathu S said...

    அய்யா சாமி
    கவிதையாயா இது கொலை நடக்கதை தருகிறதே ***

    Death is just a part of life, Madhu!

    ReplyDelete
  13. *** டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    அசத்திட்டீங்க. உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு கவிதைய எதிர் பார்க்கல.***

    உண்மைதான் முரளி.. இதை எதிர்பார்த்திருக்க முடியாதுதான்..:)

    ReplyDelete
  14. ***Yarlpavanan Kasirajalingam said...


    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்***

    நன்றிங்க! :)

    ReplyDelete
  15. ***rajalakshmi paramasivam said...

    சோகம் ததும்பும் கவிதை.***

    இறப்பு பற்றிய சிந்தனைகள் மனிதனை பண்படுத்தும்னு சொல்றாங்க, ராஜி மேடம்! :)

    ReplyDelete
  16. ***viyasan said...

    திக்கென்று இருந்தது எனக்கு. :-)***

    வாங்க வியாசன். என்ன வருண் ஆவியா வந்து கவிதை எழுதியிருக்கான் னு நெனச்சீங்களா? :)))

    ReplyDelete
  17. y.... y... y... y .... y this கொலை வெறி வருண். அட கடவுளே இப்படியா... திக்கினுச்சு vacation ல நிம்மதியா நிக்க விடமாட்டீங்களே, டூ பாடு.ம்..ம்..

    ReplyDelete
  18. வாங்க இனியா! நீங்க வெக்கேசன்ல இருக்கீங்கனு தெரிந்து இருந்தால், கொஞ்சம் தாமதிச்சு வெளியிட்டு இருப்பேன்.

    மன்னிச்சுக்கோங்க, தோழி!

    ReplyDelete
  19. இப்படித்தான் கண்ணதாசன் ஒரு முறை 'நண்பர்களை அழைத்திருந்தார்' அவர் செய்ததையே நீங்கள் கொஞ்சம் மாறுபட்ட பாணியில் செய்திருக்கிறீர்களோ......?

    ReplyDelete
  20. ***Amudhavan said...

    இப்படித்தான் கண்ணதாசன் ஒரு முறை 'நண்பர்களை அழைத்திருந்தார்' அவர் செய்ததையே நீங்கள் கொஞ்சம் மாறுபட்ட பாணியில் செய்திருக்கிறீர்களோ......?***

    வாங்க சார்!

    கண்ணதாசன், "நண்பர்களை அழைத்தது" எங்கோ படித்த மாதிரி இருக்கிறது (பதிவிலோ பின்னூட்டத்திலோ) ஆனா என்னவென்று சரியாக ஞாபகம் இல்லை.

    பொதுவாக கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம், சார். :)))

    நம் எதிரியாக இருந்தாலும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்தால் அழைக்கும் திருமணங்களுக்கு கட்டாயம் போகணும் என்றும், "இறுதிச் சடங்கிற்கு" அழைக்காவிட்டாலும் போகணும் என்றும் யாரோ சொல்லிக் கேட்டதன் விளைவுதான் "இது"னு நெனைக்கிறேன். :)

    உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சார். :)

    ReplyDelete