Tuesday, December 16, 2008

கமல்-கெளதமி உறவு முறிவு???

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

நடிகர் கமலஹாஷன் ஒரு அபூர்வ பிறவி. அவர் சம்பிரதாயப்படி கல்யாணம் செய்த அய்யங்கார் வகுப்பை சேர்ந்த வாணியிடம் திருமணமாகி சில வருடங்களில் விவாகரத்து வாங்கினார். அவர்களுக்கு குழந்தை இல்லை.

பிறகு சரிஹா என்ற வடஇந்திய நடிகையை, மணம் முடித்தார். அவருடன் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. அவருடனும் சில ஆண்டுகளில் உறவு முறிந்தது.

பிறகு, கெளதமி கமல்ஹாஷனின் கேர்ள்-ஃப்ரெண்டாக இருக்கிறார் என்கிறார்கள். கெளதமியை இவர் மணக்காததற்கு காரணம், கமலஹாஷனுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. இனிமேல் யாரையும் மணம் முடிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்தார். கெளதமி-கமலஹாஷன் நட்பு மற்றும் உறவு ஊரறிய இருந்தது. ஆனால் இன்று அதுவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்கிறார்கள்.

அடுத்து இவர் மனதை கொள்ளை கொள்ளும் அதிர்ஷ்டசாலி யாரோ ?

67 comments:

  1. இந்த கமல் ஒரு ஈனப்பிறவி ஊருக்குத்தான் உபதேசம் செய்வது போல் அடுத்தவன் காசில் படம் எடுப்பான். அப்புறம் யாருக்கும் புரியாத வகையில் அதிமேதாவித்தனமாய் பேட்டி கொடுப்பான்.

    ஆனால் அவன் சொந்த வாழ்க்கை படு கேவலமான ஒன்று. கேட்டால் என் படுக்கை அறையை ஏன் எட்டி பார்க்கிறீர்கள் என்று எகத்தாளமாய் கேள்வி கேட்பான்.

    பெண்களை போக பொருளாய் என்னும் ஒரு sadist இவன். இவனுடைய இரண்டு பெண்களையும் இப்படி நாலு பேருக்கு அனுப்ப சொல்லுங்கள் பார்போம்.

    ReplyDelete
  2. //பெண்களை போக பொருளாய் என்னும் ஒரு sadist இவன். இவனுடைய இரண்டு பெண்களையும் இப்படி நாலு பேருக்கு அனுப்ப சொல்லுங்கள் பார்போம்.//

    Dude,

    if he is a sadist, then who are you?

    ReplyDelete
  3. //Vanangamudyy -இந்த கமல் ஒரு ஈனப்பிறவி ஊருக்குத்தான் உபதேசம் செய்வது போல் அடுத்தவன் காசில் படம் எடுப்பான். அப்புறம் யாருக்கும் புரியாத வகையில் அதிமேதாவித்தனமாய் பேட்டி கொடுப்பான்.
    ஆனால் அவன் சொந்த வாழ்க்கை படு கேவலமான ஒன்று. கேட்டால் என் படுக்கை அறையை ஏன் எட்டி பார்க்கிறீர்கள் என்று எகத்தாளமாய் கேள்வி கேட்பான்.
    பெண்களை போக பொருளாய் என்னும் ஒரு sadist இவன். //

    மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  4. மனம் திறந்த வாழ்க்கையென்றாலே பின்னூட்டம் எப்படி வருதுன்னு பாருங்க!அதே வச்சுகிட்டா?

    உறவுகள்,பிரிவுகள் கமலின் வாழ்க்கை.இதில் முத்திரை குத்துவதற்கு யாருக்கு தகுதி உள்ளது?

    நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?

    ReplyDelete
  5. கண்ட கண்ட குப்பனுக்கும் சுப்பனுக்கும் விளக்கம் சொல்லி விவாகரத்து வாங்க வேண்டிய நிர்பந்தம் எந்த ஒரு தனி மனிதனுக்கும் தேவை இல்லாத ஒன்று.

    அடுத்தவரைப் பற்றி குறை கூறும் முன் தன் நிலையையும் சற்று சிந்தித்து பாருங்கள் தோழரே ...

    ReplyDelete
  6. Well said Raja rajan...

    ReplyDelete
  7. //ராஜ நடராஜன் - நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?//
    நிச்சியமாக. கமல் அளவுக்கு மோசமானவர்கள் மிக சிலரே.

    ReplyDelete
  8. neenga indiavuku veliya irukeengala , inga india vula antha mathiri edum kisukisu onum varaliyay ...apdiyay irunthalum kisu kisuvai vachukitu aduthavarai thootruvathu entha vagaiyil niyam ..
    vivek.j

    ReplyDelete
  9. முதலில் தங்கள் பெயருடன் தைரியமாக பின்னூட்டம் கொடுங்கள்...
    இப்படி மறைமுக முகமூடி வாழ்க்கை வாழ்பவனுக்கு பேர் தான் யோக்கியன் என்று இந்த சமூகம் கருதுமானால் நான், ராஜா நடராசன் அனைவரும் சத்தியமாக உத்தமர்கள் இல்லை உயர் திரு பேரில்லா தோழனே

    ReplyDelete
  10. ஒரு மாலை நாளிதழில் கோடம்பாக்க கோடாங்கி என்ற கிசு கிசு பகுதியில் இந்த வதந்தியை நானும் படித்தேன். தங்கள் லாப நோக்கிற்காக அடுத்தவரின் அந்தரங்கத்தை விமர்சிப்பது கண்டிக்க தக்க ஒன்று ...

    நான் எந்த ஒரு நடிகருக்கும் ரசிகன் அல்ல என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
    ஒருவரின் தனிமையையும், அந்தரங்கத்தையும் விமர்சிப்பது என்பது அநாகரீகமான செயல் என்பது பலருக்கும் புரிவது இல்லை என்பதே என் வருத்தம்.

    ReplyDelete
  11. The so called uththamargal are none other than people who had never had opportunity to sin!

    What is good and what is bad, is a separate question for a huge discussion.

    I really don't care if Kamal is living together with Gauthami, broke up with her or sleeping around with a dozen girls every year.

    He made some good movies like Mahanadhi, anbe sivam and I like his acting skills.

    ReplyDelete
  12. இதுக்குதானேங்க கேக்குறாங்க பொது சிவில் சட்டம்.

    பெயர் சொல்ல விரும்பாதவன்.

    ReplyDelete
  13. கமல் ஒரு ஈனப்பிறவியா....? அய்யா.... கமலைத் தவிர மற்ற அத்தனை பேரும் உத்தமர்தானோ..... கமல் மற்றவர் பணத்தில் என்ன பலான படமா எடுத்தார்? அடுத்தவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தில் நுழையும் ஈனப்புத்தியை விடுவோம்.....

    ReplyDelete
  14. Appo Kalaingar Karunanidhi?

    ReplyDelete
  15. எதற்க்காக கமலுடைய தனிப்பட்ட கேவலமான வாழ்கையை சொன்னவுடன் மட்டும் சிலருக்கு உடனே கோவம் வருகிறது?

    ReplyDelete
  16. சரி எல்லாரும் வாங்கப்பா.....இன்னிக்கு எந்த நடிகர்/நடிகை பெட் ரூம்-ல எட்டி பார்க்கலாம்?

    பார்த்து....? மங்கா தமிழென்று சங்கே முழங்கு...!!!

    ReplyDelete
  17. //எதற்க்காக கமலுடைய தனிப்பட்ட கேவலமான வாழ்கையை சொன்னவுடன் மட்டும் சிலருக்கு உடனே கோவம் வருகிறது?//

    பிறரின் தனிப்பட்ட வாழ்கையை விமர்சிக்கும் சிலருக்கெல்லாம் உபயோகமாய் வேறு வேலை இருப்பதாகவே தெரியவில்லையே என்ற ஆதங்கத்தின் பேரில் வரும் கோபம் தான்.

    ReplyDelete
  18. //நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?//

    கண்ணதாசன் பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறதுன்னு சொல்றதுக்குள்ளே கை அநிச்சையா Enter ஐ தட்டிவிட்டது:).சரி வந்ததுக்கு ஒரு குட்டிக்கதை....

    கண்ணதாசன் பாடலுக்கு பொழிப்புரை இங்கே....

    குற்றமில்லாதவன் இவன் மேல் கல் எறியட்டும் என்றாராம் ஏசுநாதர்.ஒரு அனானி மட்டும் நான் கமல் அளவுக்கு மோசமா இல்லாட்டியும் என்றாராம்:)

    ReplyDelete
  19. ***Vanangamudyy said...
    இந்த கமல் ஒரு ஈனப்பிறவி ஊருக்குத்தான் உபதேசம் செய்வது போல் அடுத்தவன் காசில் படம் எடுப்பான். அப்புறம் யாருக்கும் புரியாத வகையில் அதிமேதாவித்தனமாய் பேட்டி கொடுப்பான்.***

    வணங்காமுடி!

    அவர் பொண்ணுங்களை விட்டுடுங்கோ, பாவம்!

    ReplyDelete
  20. ***உருப்புடாதது_அணிமா said...
    கிசு கிசு ................***

    கிசு கிசு வாக வருவதெல்லாம் உண்மையில்லை. ஆனால் உண்மையும் கிசு கிசு வாக வருவதுண்டு! :)

    ReplyDelete
  21. ***Sriram said...
    கண்ட கண்ட குப்பனுக்கும் சுப்பனுக்கும் விளக்கம் சொல்லி விவாகரத்து வாங்க வேண்டிய நிர்பந்தம் எந்த ஒரு தனி மனிதனுக்கும் தேவை இல்லாத ஒன்று.***

    அதென்ன குப்பன் சுப்பன்??

    ராமேன், நாராயணன், கிருஷ்ணன் னு இனிமேல் சொல்லவும்!

    ReplyDelete
  22. ***He made some good movies like Mahanadhi, anbe sivam and I like his acting skills.***

    Yeah but we dont discuss about that here in this thread! Thanks anyway!

    ReplyDelete
  23. ***vivek said...
    neenga indiavuku veliya irukeengala , inga india vula antha mathiri edum kisukisu onum varaliyay ***'

    குமுதத்தில் வந்ததாக ஃப்ரெண்டு ஒருவர் சொன்னார். நீங்க பார்க்காமல் இருக்கலாம் :)

    ReplyDelete
  24. ***Sriram said...
    முதலில் தங்கள் பெயருடன் தைரியமாக பின்னூட்டம் கொடுங்கள்...***

    I have seen even honorable folks come as "anony" sometimes. WE may look at what they say rather than who says that. As long as there is truth in it, you could care who said that!

    ReplyDelete
  25. ***Sriram said...
    ஒரு மாலை நாளிதழில் கோடம்பாக்க கோடாங்கி என்ற கிசு கிசு பகுதியில் இந்த வதந்தியை நானும் படித்தேன். தங்கள் லாப நோக்கிற்காக அடுத்தவரின் அந்தரங்கத்தை விமர்சிப்பது கண்டிக்க தக்க ஒன்று ...**

    Are you trying to TELL me that THIS is UNTRUE?

    On what basis?!

    ReplyDelete
  26. ***Anonymous said...
    சரி எல்லாரும் வாங்கப்பா.....இன்னிக்கு எந்த நடிகர்/நடிகை பெட் ரூம்-ல எட்டி பார்க்கலாம்?

    பார்த்து....? மங்கா தமிழென்று சங்கே முழங்கு...!!!***

    நான் என் பதிவில் இதுபோல் எதுவும் எழுதவில்லை. யாரும் இங்கே படுக்கை அறை பற்றி பேசவும் இல்லை!

    There is absolutely no need for bringing up bedroom bs here!

    ReplyDelete
  27. Indian said...
    ***//பெண்களை போக பொருளாய் என்னும் ஒரு sadist இவன். இவனுடைய இரண்டு பெண்களையும் இப்படி நாலு பேருக்கு அனுப்ப சொல்லுங்கள் பார்போம்.//

    Dude,

    if he is a sadist, then who are you?

    16 December, 2008 11:10 PM ***

    I dont support vanangAmudi's statement but why do Kh fans justify anything that actor does?!

    ReplyDelete
  28. ***Sriram said...
    நான் எந்த ஒரு நடிகருக்கும் ரசிகன் அல்ல என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
    ஒருவரின் தனிமையையும், அந்தரங்கத்தையும் விமர்சிப்பது என்பது அநாகரீகமான செயல் என்பது பலருக்கும் புரிவது இல்லை என்பதே என் வருத்தம் ***

    You often sound like a Kh fan to me. May be you just sound so.

    We are only talking about his relationships! My intention is certainly not talking about his "bed room activities". I would rather say I talk about his "current sweetheart". I dont think any harm is done here>

    Unfortunately, nobody seems to stay in his heart for ever. I find that as somewhat strange! May be he is still looking for the his soulmate. He may never find her in this life. That is unfortunate or not ?!

    ReplyDelete
  29. ஒரு கலைஞன் என்ற அளவில் கமலையோ வேறு எந்த கலைஞனையோ விமர்சிப்பதோ கிழித்து நார்நாராய் தொங்கவிடுவதோ, புறக்கணிப்பதோ ஒப்புக்கொள்ளக்கூடியதே ! காரணம் கமல் நம் அங்கீகாரம் தேடி நிற்பது தன் கலைத்திறமைக்கு மட்டுமேதான். அதை வழங்குவது அல்லது மறுப்பது என்ற அளவுக்குத்தான் நமக்கு உரிமை உள்ளது. அதை புரிந்துகொள்ளுதல் நன்று.

    அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு மட்டுமே உரியது. அங்கே கருத்து சொல்லக்கூட மூன்றாம் மனிதருக்கு எவ்வித உரிமையோ தகுதியோ இல்லை.

    அவருடைய படத்துக்கு காசு கொடுத்து (அல்லது கொடுக்காமல்) பார்ப்பதாலேயே அவரது மணவாழ்க்கையின் வெற்றி தோல்விகளையோ, அவரது தோழி பற்றியோ அவர்களுக்கிடையேயான உறவு பற்றியோ விமர்சனம் செய்ய நமக்கு உரிமை வந்து விடுவதில்லை.

    "உன் படுக்கையறை வரைக்கு வரவும் விமர்சிக்கவும் எனக்கு உரிமம் உண்டு; எப்போது திரைவாழ்க்கைக்கு வந்துவிட்டாயோ அப்போதே இதற்கெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்" என்று நமக்கு நாமே கிரீடமெல்லாம் சூட்டிக்கொள்ளவேண்டாம். அப்படிப்பட்டதொரு கிரீடத்திற்கு நமக்கு கிஞ்சித்தும் தகுதியில்லை என்பதை அந்தரங்கமாகவேனும் நாம் ஒவ்வொருவரும் அறிவோம்.

    அப்படி நினைப்பதுகூட கக்கத்தில் இடுக்கின துண்டோடு தன் முன்னே கைகட்டி நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அருவருக்கத்தக்க ஆண்டை மனப்பான்மையே தவிர வேறல்ல.

    உலகம் முழுக்கவே இது நடைபெறுகிறது என்றாலும் என்னால் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு கேவலமான நடைமுறை இது.

    காசுக்காக அடுத்தவன் அந்தரங்கத்தை முகர்ந்து பார்ப்பேன் ; அதை கடைவிரித்து ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி களிப்பேன் என்பது அருவருப்பான மற்றும் வக்கிரமான (சுஜாதா வார்த்தைகளில் 'மூன்றாந்தர') பத்திரிகை நடைமுறை.

    பத்திரிகைகளுக்கு இது காசு விஷயம். ஆனால் வருண் பதிவில் இதை எதிர்பார்க்கவில்லை.

    மேலும் சில விஷயங்கள் :

    கமலை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள்தான் முவருகிறார்களேயன்றி கமல் போய் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புக்காக நிற்பதோ அவர்களை நிர்பந்திப்பதோ இல்லை. கமலை வைத்து படம் எடுக்காமல் இருக்க தயாரிப்பாளர்களுக்கு எல்லாவித சுதந்தரமும் இருக்கிறது. எந்த தயாரிப்பாளரும் கமலை வைத்து படம் எடுத்தே ஆகவேண்டும் என்று துப்பாக்கி முனையில் நிர்பந்தப்படுத்தப்படுவதில்லை. ஆகவே 'அடுத்தவன் காசில்' என்ற அபத்தமெல்லாம் வேண்டாம்.

    தனிவாழ்வில் கேவலமாக இருந்துகொண்டு ஊருக்கு உத்தமர் வேடம் போடும் இரட்டை வாழ்வு இல்லாமல் கமல் வெளிப்படையாக இருப்பது உறுத்தினால் தவறு எங்கே என்று சற்றே ஆராயவும்.

    அவருடைய பெண்ணுக்கும் ஆண் சிநேகிதர் உண்டு என்பதும், அது கமலுக்கும் தெரியும் என்பதும், அது குறித்து கமலிடம் புகார் கூற முற்பட்ட அவருடைய நண்பர்களிடம், 'அது அவளது சுதந்தரம், நான் தலையிட விரும்பவில்லை' என்று கூறிவிட்டதாகவும் அதே பத்திரிகைகள் மூலமே அறிகிறேன்.

    அன்புடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  30. பாலகுமாரனின் சிறுகதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன :

    'தன் அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் உணராதவன்தான் அடுத்தவன் அந்தரங்கத்தைப்பற்றி பேசுகிறான்'

    "There is absolutely no need for bringing up bedroom bs here!"

    Varun, 'bedroom' is just a metaphor for his private life, not to be taken in it's literal sense.

    அன்புடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  31. திரு. முத்துக்குமார்!

    நீங்கள் வருத்தப்படுமளவுக்கு அவர் அந்தரங்கத்தை பற்றியோ, அவரை அசிங்கமாகவோ நான் விமர்சிக்க வில்லை என்று நான் நம்புகிறேன்!

    அவருடைய ரிலேஷன்ஷிப் பற்றி பேசுது அவர் "பெட் ரூமில்" எட்டிப்பார்ப்பதுபோல என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

    என்ன செய்வது ஒரு சிலருக்கு ஒரு சில நடிகர்கள் கடவுளுக்கு மேலாக தோன்றுகிறார்கள்!

    ReplyDelete
  32. ரஜனிக்கு மீனாவும் ஒரு காலத்தில் ஆஸ்தான நாயகிதான்.

    கார்த்தி

    ReplyDelete
  33. "நீங்கள் வருத்தப்படுமளவுக்கு அவர் அந்தரங்கத்தை பற்றியோ, அவரை அசிங்கமாகவோ நான் விமர்சிக்க வில்லை என்று நான் நம்புகிறேன்!"

    வருண், நீங்கள் அசிங்கமாக விமர்சிக்கிறீர்கள் என்று நான் சொல்லவில்லை. அவரது உறவு, அவருடைய தனி விஷயம், பொதுவிவாதத்திற்கு உரியது அல்ல என்பதே என் தரப்பு.

    "அவருடைய ரிலேஷன்ஷிப் பற்றி பேசுது அவர் "பெட் ரூமில்" எட்டிப்பார்ப்பதுபோல என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!"

    இரண்டுமே அவரது தனி விவகாரங்கள், அவரது அந்தரங்க விஷயங்கள் என்ற அளவில் இரண்டும் ஒன்றே.

    இப்படித்தான் ஆரம்பிக்கும். இதில்கூட பாருங்கள், நீங்கள் அவரது உறவு பற்றி பேசுகிறீர்கள், முதல் பின்னூட்டமே எப்படிப்பட்டதாயிருக்கிறதென்று.

    இது போன்ற உங்களது தனிப்பட்ட உறவை உங்களுக்கு சம்பந்தமே இல்லாத நபர் பொது விவாதத்துக்கு உள்ளாக்கினால் எப்படி எதிர்வினையாற்றுவீர்கள் என்று ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள். (அப்படி யாரும் விவாதிக்கவேண்டும் என்று அல்பத்தனமாக சொல்லவில்லை; ஒரு ஒப்பீட்டளவிலேயே கூறியிருக்கிறேன்)

    "என்ன செய்வது ஒரு சிலருக்கு ஒரு சில நடிகர்கள் கடவுளுக்கு மேலாக தோன்றுகிறார்கள்!"

    இது 'நான் பிரபலமாயிருப்பதாலேயே கல்லெறிகிறார்கள்' என்ற சுஜாதா பாணி தடுப்பாட்டம் :)

    அன்புடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  34. முதலில் கமலும் கெளதமியும் எப்பாது இணைந்தார்கள் என்று சொல்லுங்கள், பிறகு அவர்களின் முறிவை பற்றி பார்ப்போம்.

    சினிமா கிசுகிசுவை பதிவாக போடுவது தனிமனித தாக்குதலை ஒட்டிய சில்லறைத் தனமாக தெரிகிறது.

    அமெரிக்க வாழ்க்கை இதை தான் கற்று கொடுக்கிறதா?

    ReplyDelete
  35. ***வால்பையன் said...
    முதலில் கமலும் கெளதமியும் எப்பாது இணைந்தார்கள் என்று சொல்லுங்கள், பிறகு அவர்களின் முறிவை பற்றி பார்ப்போம்.***

    நீங்க கெள்தமினா யாருனு கேட்டு இருக்கலாம். அது இந்தக்கேள்வியைவிட ந்ல்லா தெளிவா இருந்து இருக்கும்!

    **சினிமா கிசுகிசுவை பதிவாக போடுவது தனிமனித தாக்குதலை ஒட்டிய சில்லறைத் தனமாக தெரிகிறது.**

    நான் உங்க அளவுக்கு பெரிய மனிதன் அல்ல,வால்ப்பையன்!

    **அமெரிக்க வாழ்க்கை இதை தான் கற்று கொடுக்கிறதா?

    18 December, 2008 3:11 AM***

    இந்த என்ன தெரியுமா?

    தனிமனித தாக்குதல் என்று ஒரு நடிகரைப்பற்றி பேசுவதை விமர்சிக்கும்போது பொங்கி எழும் நீங்கள் செய்யும் தனி நபர்தாக்குதல்தான்!

    பாவம் நீங்க கொடுக்கும் அறிவுறையை உங்களுக்கு சொல்லிக்கொள்வதில்லை போலும்.

    உங்க் தர்க்க சாஸ்திரப்படி,இது உங்களின் மிகவும் சில்ல்றைத்தனமான பின்னூட்டம்னு உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை!

    எனக்கு கமலஹாஷன் பெரிய தியாகியோ, கடவுளோ இல்லை, சாதாரண நடிகன். ஒவ்வொரு படத்திற்கும் கோடிகோடியாக சம்பாரிக்கும் ஒரு நடிகன் அவ்வளவுதான்!

    நீங்க அவரை வழிபடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை!

    ReplyDelete
  36. //தனிமனித தாக்குதல் என்று ஒரு நடிகரைப்பற்றி பேசுவதை விமர்சிக்கும்போது பொங்கி எழும் நீங்கள் செய்யும் தனி நபர்தாக்குதல்தான்!
    //

    பொங்கி எழுந்து நான் என்ன பொங்கலா வச்சிட்டேன்!
    அமெரிக்கவில் யாரும் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட மாட்டார்கள் என கேள்விப்பட்டேன்!

    இந்த பதிவை இங்குள்ளவர்கள் யாராவது எழுதியிருந்தால் நான் ஏன் கேட்க போகிறேன்

    ReplyDelete
  37. //பாவம் நீங்க கொடுக்கும் அறிவுறையை உங்களுக்கு சொல்லிக்கொள்வதில்லை போலும்.//

    அதான் நீங்க இப்ப சொல்லிட்டிங்களே!

    ReplyDelete
  38. //உங்க் தர்க்க சாஸ்திரப்படி,இது உங்களின் மிகவும் சில்ல்றைத்தனமான பின்னூட்டம்னு உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை!//

    ஒப்பிட்டளவில் அதாவது தனிமனித தாக்குதலை ஒட்டிய என்று குறிப்பிட்டுள்ளேன்!
    ஆனால் நீங்களோ நேரடியாகவே என் பின்னூடத்தை சில்லறைத்தனமானது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்

    நன்றி, இப்படி தான் புரிஞ்சிக்கனும்

    ReplyDelete
  39. //எனக்கு கமலஹாஷன் பெரிய தியாகியோ, கடவுளோ இல்லை, சாதாரண நடிகன். ஒவ்வொரு படத்திற்கும் கோடிகோடியாக சம்பாரிக்கும் ஒரு நடிகன் அவ்வளவுதான்!//

    அடடே நான் கமலைத் தான் பூஜை அறையில் வைத்து கும்பிட்டு கொண்டிருக்கிறேன்.

    நீங்கள் என்னவோ கமலுக்கு எதிரி போலவும், நான் கமலுக்கு தீவிர ஆதரவாளன் போலவும் இருக்கிறது.

    கமலை விட அதிகம் சம்பாதிப்பது அம்பானி, எனக்கு அவன் கூட சக மனிதன் தான். அதற்க்காக அவனுடய தனிபட்ட வாழ்க்கையை விமர்சிக்கலாமா என்ன?

    உங்களுடய சினிமா விமர்சனம் ஏற்று கொள்ளலாம்.

    ஆனால் இந்த பதிவு

    என்ன சொல்வது?????????

    ReplyDelete
  40. //நீங்க அவரை வழிபடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை!
    //

    ஆம் தினமும் எனக்கு சோறு போடுவதே கமல் தான்,
    பின் எப்படி கமலை எதிர்ப்பதாம்.

    நல்லா இருக்குங்க உங்க புரிதல்!
    ஏன் தனிமனித தாக்குதல் என்றால் நான் அந்த மனிதரை வழிபடுகிறேன் என்று அர்த்தமா?

    ReplyDelete
  41. வருண், இந்தப் பதிவிலிருந்து என்ன விவாதத்தின் மூலமா புரிஞ்சுக்க இங்கே கொண்டு வந்திருக்கிறோம்.

    முத்துக்குமாரின் பின்னூட்டங்களில் பல அடிப்படை புரிதலுக்கான விசயங்கள் விளக்கப்பட்டிருக்கிறது கவனிக்க!

    அவங்கவங்க வாழ்க்கை அவங்கவங்களை வாழ விடுங்கப்பா... ப்ரைவேட் லைஃப்ல...

    கீழே உள்ள பதிவோட லிங்க்ல அவசியம் பின்னூட்டங்களையும் படிங்க... காகிதப் புலிகளும் *வச்சிபார்க்கத் தெரியாத* கமலும்!!

    வால்பையன் அழகா சொல்லியிருக்கார், நமக்கு அமெரிக்கா கத்துக்கொடுக்கிற முதல் பாடம் என்னான்னு இங்கே வாழ நேரிடும் பட்சத்தில்.

    ReplyDelete
  42. வால்பையன்:

    நீங்க ஃபுல் ஸ்விங் ல இருக்காற்போல இருக்கு! :)

    எனக்கு என்ன தோனுதுனா, கமலஹாஷன் இதை படித்தால், சாதாரணமாக எடுத்துக்குவார்!

    நம்ம மக்கள்தான் ஒரு சாதாரண விமர்சனத்தை ரொம்ப சீரியஸா எடுத்துக்கொள்றாங்கனு தோனுது!

    நீங்க சொல்றதயெல்லாம் சொல்லீட்டீங்க. நான் சொல்ல வேறெதுவும் இல்லை! :-) LOL!

    ReplyDelete
  43. Varun, it seems the link didnt work for some reason, again here is the tag...

    http://thekkikattan.blogspot.com/2006/10/blog-post_116165144579488852.html

    ReplyDelete
  44. ***Thekkikattan|தெகா said...
    வருண், இந்தப் பதிவிலிருந்து என்ன விவாதத்தின் மூலமா புரிஞ்சுக்க இங்கே கொண்டு வந்திருக்கிறோம்.

    முத்துக்குமாரின் பின்னூட்டங்களில் பல அடிப்படை புரிதலுக்கான விசயங்கள் விளக்கப்பட்டிருக்கிறது கவனிக்க!

    அவங்கவங்க வாழ்க்கை அவங்கவங்களை வாழ விடுங்கப்பா... ப்ரைவேட் லைஃப்ல...

    கீழே உள்ள பதிவோட லிங்க்ல அவசியம் பின்னூட்டங்களையும் படிங்க... காகிதப் புலிகளும் *வச்சிபார்க்கத் தெரியாத* கமலும்!!

    வால்பையன் அழகா சொல்லியிருக்கார், நமக்கு அமெரிக்கா கத்துக்கொடுக்கிற முதல் பாடம் என்னான்னு இங்கே வாழ நேரிடும் பட்சத்தில்.

    18 December, 2008 7:48 AM ***

    இல்லைங்க, நம்ம சாரு நிவேதிதா சொன்னதுபோல, கமல ஹாசன் பற்றி நாகரீகமாகக்கூட விமர்சிக்க்க முடியவில்லை. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.

    கமல் என்ன சொல்வார்னா,

    ஆமாம், நாங்க ஒண்ணா இருந்தோம் இப்போ பிரிஞ்சிட்டோம். உறவும் வரும் பிரிவும் வரும்னு எடுத்துக்குவார்.

    வால்பய்யன் சொல்வதில் நிறைய பிரச்சினை இருக்கு. ஏன் என்றால், கமலஹாஷனுடைய போன பிறந்த நாளை கொண்டாடியதே கெளவதமிதான்!

    அவர்கள் இருவரும் "நெருங்கிய" நண்பர்கள் (சகோதர சகோதரி இல்லை) என்பதை யாருமே மறுக்கமுடியாது.

    அவர் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார்! :)

    ReplyDelete
  45. //அவர் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார்! :) ///

    நமக்கு இப்போது தெரிந்தது.
    கெளதமியாக இருக்கலாம், அதாவது கூட வாழ்ந்தது.
    ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் ஆயிரம் பெண்கள் வரலாம் போகலாம்.
    காதலியாக, தோழியாக, சகோதரியாக

    ஆனால் அவரவர் வாழ்வில் இருந்து பார்த்தால் தான் அந்தந்த உறவின் ஆழம் புரியும்.

    கமல், கெளதமியின் உறவுகள் நாம் நோண்ட தேவையில்லாத ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து!

    ReplyDelete
  46. அவர்கள் இருவரும் "நெருங்கிய" நண்பர்கள் (சகோதர சகோதரி இல்லை) என்பதை யாருமே மறுக்கமுடியாது.--------------

    அவங்க எப்படியோ இருந்துட்டு போகட்டுமிங்க behind their closed door, what is our business in that room? ஹாலிவுடிலும் தான் எத்தனையோ பிரிவுகள், சந்திப்புகள் சதா நிகழ்ந்த வண்ணம் உள்ளது, கிசு கிசு வாசிப்பினை ரசிக்கும் மக்களை தவிர்த்து யார் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள்.

    ஏன் நம் சமூகத்தில் மட்டும், காவலர்கள் அதிகமாக இதனைச் சார்ந்து இருக்கிறார்கள்? இதுவே, திருட்டுத் தனமாக பல செயல்களை செய்வதற்கு வழி கோனாதா? அதுதான் நம்மூரின் ஸ்டைல் போல...

    ReplyDelete
  47. ***Thekkikattan|தெகா said...
    அவர்கள் இருவரும் "நெருங்கிய" நண்பர்கள் (சகோதர சகோதரி இல்லை) என்பதை யாருமே மறுக்கமுடியாது.--------------

    அவங்க எப்படியோ இருந்துட்டு போகட்டுமிங்க behind their closed door, what is our business in that room? ***

    My question is ONLY when Kh is brought people like you worry about "privacy" and the issue became so touchy>

    Have you evev brought up this question when any other actor is criticized?

    Please cite that right here, let me have a look at this!

    Why Kh so "untouchable" and everrybody is getting agitated only when we talk about him? I just wonder!

    ReplyDelete
  48. ****வால்பையன் said...
    //அவர் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார்! :) ///

    நமக்கு இப்போது தெரிந்தது.
    கெளதமியாக இருக்கலாம், அதாவது கூட வாழ்ந்தது.
    ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் ஆயிரம் பெண்கள் வரலாம் போகலாம்.
    காதலியாக, தோழியாக, சகோதரியாக

    ஆனால் அவரவர் வாழ்வில் இருந்து பார்த்தால் தான் அந்தந்த உறவின் ஆழம் புரியும்.

    கமல், கெளதமியின் உறவுகள் நாம் நோண்ட தேவையில்லாத ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து!

    18 December, 2008 8:03 AM ***

    அவர் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, அவர் படம், தசாவதாரம் விமர்சிக்கப்பட்டபோதும், இதே விளைவுதான்!

    அதை மட்டும் "ப்ரஃபெஷனலா" எடுத்துக்கொண்டார்களா என்ன?

    ReplyDelete
  49. //Have you evev brought up this question when any other actor is criticized?//

    [சுட்டிக்காமிக்கிற அளவிற்கு யாரும் வெளிச்சத்தில் வைச்சு நம்மூர்ல பண்றதில்ல, நேற்றுக் கூட ஒரு கொலை நடந்திருக்கே அந்திரா சினிமாவில அந்தாளு மூணாவது வைச்சிக்க ட்ரை பண்ணியிருக்கான்... அது எப்படி வெளிச்சத்திற்கு வந்துச்சு...]

    Do we have any other actor who dare to live like this guy? Perhaps, we might have thousands of 'the others,' who live a secret life in the dark...

    That was why, we may not have a chance to backup someone in the same scenario...

    Living "truthful" to oneself is the toughest task ever one can have at his hand. Here this is what do you see, Varun!

    ReplyDelete
  50. ***Do we have any other actor who dare to live like this guy?***

    Like what? Please tell me waht you mean by "live like this"!

    Anyway, I went through your thread. I am sure you are beautifully defending Kh's personal life. Like "gramavaasi" told you are defe3nding him because YOU LOVE HIM as an ACTOR for his talents! I dont have much to say.

    All I am saying is people defend him because they love him. It is not that people want to respect everyboy's privacy or whatsoever!

    ReplyDelete
  51. "கமல் என்ன சொல்வார்னா,

    ஆமாம், நாங்க ஒண்ணா இருந்தோம் இப்போ பிரிஞ்சிட்டோம். உறவும் வரும் பிரிவும் வரும்னு எடுத்துக்குவார்."

    Only a wishful thinking Varun. Reality was otherwise.

    சிம்ரனோடு சம்பந்தப்படுத்தி ஊடகங்கள் தீபாவளி கொண்டாடியபோது விகடன் எடுத்த பேட்டியில் ("சிம்ரனோடு அப்படி என்னதான் பிரச்சினை ?") மிக நாகரீகமாக தன் துயரத்தை, சோகத்தை தான் மட்டும் அனுபவிக்க விடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    "My question is ONLY when Kh is brought people like you worry about "privacy" and the issue became so touchy>
    ....
    ....
    Why Kh so "untouchable" and everrybody is getting agitated only when we talk about him? I just wonder!"

    It's not that Kh is untouchable. It's just that, he happened to be the subject matter of this post. As far as I'm concerned, if you've blogged in a similar tone about any other artist (not necessarily an actor), my resonse would've been the same.

    அன்புடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  52. I enjoyed the comments more than the original post :-) nalla time pass for a lazy Friday Afternoon! :-)Good going guys ;-)

    ReplyDelete
  53. ***sriram said...
    I enjoyed the comments more than the original post :-) nalla time pass for a lazy Friday Afternoon! :-)Good going guys ;-)

    19 December, 2008 12:51 AM***

    I mistook the other
    "Sriram" as you. Glad you enjoyed the Kh fans defensive responses.

    You know in a way, my post being a good example for a bad post, I suppsoe. Let me watch the tamizmaNam and see how well other celebrities private lives are left being untouched hereafter! :-)

    ReplyDelete
  54. கமலஹாசனைப்பற்றி மட்டுமல்ல, ரஜினியின் தனிப்பட்ட வாழ்வை(அவரின் இமயமலை பழக்கம்) போன்றவற்றை கிண்டலடித்தும், விமர்சனம் செய்தும் பல பதிவுகள்/கட்டுரைகளை படித்திருக்கிறேன். பொதுவாக கமலஹாசனின் அந்தரங்கத்தை காப்பதில் மட்டும் அதீத கவனம் காட்டுக்கிறார்கள் என்று நினைக்கிறேன், அல்லது வருணிடம் இருந்து சினிமா கிசு கிசு வருவதை விரும்பாததால் வந்த எதிர்வினையாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  55. //பொதுவாக கமலஹாசனின் அந்தரங்கத்தை காப்பதில் மட்டும் அதீத கவனம் காட்டுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்,//

    தவறான புரிதல் தோழி!
    நான் அறிந்த நடிகர்களின் அந்தரங்களை வெளிட்டால் என் ப்ளாக் ஹிட்டாகலாம்,

    அதை வைத்து நான் ஒரு முட்டை கூட வாங்க முடியாது!

    விமர்சனங்கள் என்றுமே நமக்கு பிடிக்காதவர் மேல் தான் ஏற்படுகிறது போன்ற தோனி உங்கள் வார்த்தையில் அப்பட்டமாக தெரிகிறது.

    தனி மனிதனாக பார்க்கும் பொழுது கமல் ஒன்றும் யோக்கியனல்ல,

    ஆனால் இங்கே கமல் மட்டுமே யோக்கியனல்ல!

    புரிகிறதா?

    ReplyDelete
  56. //வருணிடம் இருந்து சினிமா கிசு கிசு வருவதை விரும்பாததால் வந்த எதிர்வினையாகவும் இருக்கலாம். //


    இது உண்மையாகவும் இருக்கலாம்,
    கிசு கிசு சில்லறை தனம் என்று தான் எனக்கு தோன்றுகிறது

    ReplyDelete
  57. ***தனி மனிதனாக பார்க்கும் பொழுது கமல் ஒன்றும் யோக்கியனல்ல,

    ஆனால் இங்கே கமல் மட்டுமே யோக்கியனல்ல!

    புரிகிறதா?***

    என்ன சொல்ல வர்றீங்க, வால்ப்பையன்?

    கமல், நல்லவரா கெட்டவரா என்று இந்த கிசு கிசுவை வைத்து யாருமே அவரை விமர்சனம் செய்யவில்லை!

    ReplyDelete
  58. //***தனி மனிதனாக பார்க்கும் பொழுது கமல் ஒன்றும் யோக்கியனல்ல,

    ஆனால் இங்கே கமல் மட்டுமே யோக்கியனல்ல!

    புரிகிறதா?***

    என்ன சொல்ல வர்றீங்க, வால்ப்பையன்?

    கமல், நல்லவரா கெட்டவரா என்று இந்த கிசு கிசுவை வைத்து யாருமே அவரை விமர்சனம் செய்யவில்லை! //


    பின்???????

    ReplyDelete
  59. வால்ப்பையன்: நான் இதை வைத்து கமலை நல்லவர் கெட்டவர்னு நிஜம்மாவே சொல்ல வரலைங்க! :)

    ReplyDelete
  60. //வால்ப்பையன்: நான் இதை வைத்து கமலை நல்லவர் கெட்டவர்னு நிஜம்மாவே சொல்ல வரலைங்க! :)//

    அப்போ என்னவாக இருக்கும் காரணம்?
    அவர் நல்லவரா கெட்டவரா என்று அலச அல்ல இப்பதிவு. சரி. ஒப்புக்கொள்கிறோம். வருண் என்ற பதிவர் தவறாக எதுவும் சொல்லவில்லை. சரி தான் . ஒப்புக்கொள்கிறோம். (ஆனால் நண்பரே உங்கள் பதிவுக்கு தவறான தரமின்றிய பதில்கள் குவிந்துவிட்டன என்பது தான் வருத்ததிற்குறிய விஷயம். இப்படி ஆகும் என்று அறியாத அப்பாவியா நீங்கள்?)

    சரி இப்பதிவு அவரின் அந்தரங்க வாழ்வைப் பற்றி அல்ல, அப்படியென்றால், அவரின் தனிப்பட்ட உறவு எத்தனை முறை முறிந்தது என்பது பற்றியா இப்பதிவு?

    அல்லது

    உறவு என்றால் என்ன? அது ஏன் முறிகிறது? அதிலும் கமலின் உறவு மட்டும் ஏன் அடிக்கடி முறிகிறது என்பது பற்றியா?

    அல்லது

    இந்த உறவு முடிந்து அடுத்த உறவில் யார் நுழைவார்கள் என தெரிந்து கொள்ளும் முயற்சியா?

    உறவைப் பற்றி (கெட்ட நோக்கம் இல்லாமல்) அலச மட்டுமே இப்பதிவு என்றால், ஏன் ஒருவரின் ஆண்-பெண் உறவை மட்டும் நடுச்சந்தையில் இட்டு அலசுகிறீர்கள்? ஒருவரின் பெற்றோரைப் பற்றி, சஹோதர சஹோதரிகளைப் பற்றி அல்லது நண்பர்களைப் பற்றி இப்படி ஆராயவது இன்றி, ஏன் ஒரே ஒரு உறவைப் பற்றி ஆராய்வதில் அக்கரை?


    இத்தனைக் கேள்வியும் அபத்தமாய்ப் பட்டால், இன்னும் ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும்.

    உங்கள் பதிவை சூடாக்க, சுயநலத்திற்காக எதோ ஒரு ஈர்பபன தலைப்பை வைக்க கமலின் தனிப்பட்ட உறவை இழுத்திருக்கிறீர்கள் என்ற எண்ணம் கண்கூடாய் தெரிகிறது.

    ReplyDelete
  61. அனானி:

    ஒரு சில பின்னூட்டங்கள் மோசமாக வந்ததென்னவோ உண்மைதான்.

    அதே சம்யத்தில் சில நல்ல பின்னூட்டங்களும் வந்து இருக்கின்றன.

    ஆனால், இந்த செய்தியை ஒருவர் சொல்லக்கேட்டதும், இதில் எவ்வளவு உண்மை இருக்கிறதென்று பார்க்கத்தான் இந்தப்பதிவு போடப்பட்டது.

    பதிவை சூடாக்கிறதெல்லாம் என்னால முடியாதுங்க. நடிகர்கள் பேர் போட்டாலே பொதுவா சூடாயிரும். உங்கலை மாதிரி ஆட்கள்தான் சூடாக்கி இருக்கீங்க! அதற்கு நான் பொறுப்பல்ல!

    தமிழ்மணத்தில் கடந்த சில வார்ங்களாக வருகிற இடுகைகள் எல்லாம் ஒரு ப்லாகரை இன்னொருவர் தாக்கி எழுதுவதுதான் வருது. இதை பல பிரபலங்கள் கூட செய்கிறார்கள்
    அதையெல்லாம் விட்டுவிட்டு எல்லோரும் என்னையே ஏதோ கொலை செய்ததுபோல் இப்படி அனானியா வந்து குற்றம் சொல்லுவது வேடிக்கையா இருக்கு!

    Relax Please!

    ReplyDelete
  62. // அதையெல்லாம் விட்டுவிட்டு எல்லோரும் என்னையே ஏதோ கொலை செய்ததுபோல் இப்படி அனானியா வந்து குற்றம் சொல்லுவது வேடிக்கையா இருக்கு!

    Relax Please!
    //

    :)) நான் அப்படியெதுவும் அபாண்டமாய் சொல்ல வரவில்லை. "நான் என்ன தவறாய் பதிவிட்டேன்" என்று நீங்கள் கேட்டதற்கு அடுக்கியவை அவை. புண்படுத்தும் நோக்கம் அல்ல.

    நான் ரிலாக்ஸ்ட். நீங்களும் ரிலாக்ஸ். truce. :)

    ReplyDelete
  63. tamil cinema people and tamil cinema.
    there are lots of eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women democrasy and equality from the mgr ,sivagi period and now in danush, simpu period.
    on other side non tamil womens {hindi,kanada,malayal etc} are grandly invited by tamil media people. non tamil womens earn money,enjoy, earn fame in tamil medias. tv serials,cinema, magazeens etc.
    this is also a kind of cheating tamil women.

    ReplyDelete
  64. there are lots of male domination supportive psychartist they write in tamil medias their views are oppose to women equality and democrasy.not only psychartist shalinee.
    from the period of mgr non tamil womens{kanada,hindi,telungu,etc} are grandly invited in tamil cinemas and given chances.
    barathi raja,kamal ,rajanai,vajay. seeman etc all do this
    for tamil womens tamil medias gives only eve teasing dialougs which is oppose to women democrasy and equality.

    ReplyDelete
  65. OK, vignath says tamiz cinema is bad for tamil women?

    May be.

    But these days Tamil series in TV are all in favor of Tamil women, right or not ?

    ReplyDelete
  66. கமல் ஒரு ஈனப்பிறவியா....? அய்யா.... கமலைத் தவிர மற்ற அத்தனை பேரும் உத்தமர்தானோ..... கமல் மற்றவர் பணத்தில் என்ன பலான படமா எடுத்தார்? அடுத்தவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தில் நுழையும் ஈனப்புத்தியை விடுவோம்.....

    ReplyDelete