Wednesday, January 14, 2009

தெய்வம் நின்று கேட்குமா?

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஊருக்கு திரும்பி வந்து இருந்தேன். ஜெட்-லாக் எல்லாம் போன பிறகு, சாயங்காலமாக நண்பன் மணியோட ஒரு வால்க் போகலாம் என்று புறப்பட்டேன். அப்படிப் போகும்போதுதான் ஊர் நிலவரம் ஊர் முன்னேற்றம் எல்லாம் தெரிந்துகொள்வது.

"ரவி! நான் சொல்றதைக் கேளுடா! ரொம்ப நாளைக்கு அப்புறம் ஊருக்கு வந்திருக்க. ஆளாளுக்கு நூறைக்கொடு, இருநூறு கொடுனு கொல்லுவானுக கவனமாக இரு!" என்றான் நண்பன் மணி.

அவன் அப்படி சொல்லி வாய் மூடும்முன்னால நம்ம அண்ணே "கஞ்சா பாலு" எதிரே வந்தார்! அண்ணனை சின்ன வயசில் இருந்து தெரியும். எந்நேரமும் போதையில்தான் இருப்பார். ஒரு காலத்தில் பெரிய சண்டியர். ரவி ரவி னு என் மேலே உயிரா இருப்பாரு பாலு அண்ணே!


"என்ன ரவி எப்போ வந்தீங்க? நல்லா இருக்கீங்களா? ஆஸ்த்ரேலியாவிலயா இருக்கீங்க?" என்றார் பாலு அண்ணே.

"இல்லண்ணே அமெரிக்காவில் இருக்கேன். ஒரு மாசம் இங்கதான் இருப்பேன். நீங்க எப்படி இருக்கீங்க?"

"என்ன தம்பி அமெரிக்காவில் இருந்து வந்து இருக்கீங்க! அண்ணனை கவனிக்கிறதில்லையா?"

"நாளைக்கு சாயங்காலம்போல வீட்டுக்கு வாங்க அண்ணே!"

"அதெல்லாம் எதுக்குப்பா, எதுவும் ஃபாரின் சரக்கு கிரக்கு கொண்டு வந்து இருக்கீங்களா?"

"இல்லையே அண்ணே! வேற டி-ஷர்ட் மாதிரி ஏதாவது வீட்டிலே இருக்கும். வீட்டுக்கு வாங்க அண்ணே உங்க சைஸ்க்கு சரியா இருக்கானு பார்த்து தர்றேன்!"

"இல்லைப்பா ஒரு குவாட்டருக்கு காசு கொடுத்தால், அண்ணே உன் பேரைச்சொல்லி நீ ஊருக்கு வந்த சந்தோஷத்தை கொண்டாடுவேன்!"

"இந்தாங்க 200 ரூபா இருக்கு போதுமா?"

நான் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக நகர்ந்தார் அண்ணன் பாலு. என் நண்பன் மணி என்னை திட்டினான்.

"ஏண்டா இப்படி தண்ணி அடிக்கிறதுக்கு காசு கொடுக்கிற?"

"என்ன பண்ண சொல்ற? சின்ன வயசில் இருந்து தெரியும். நமக்கு ஒண்ணுனா உயிரைக் கொடுப்பாரு மனுஷன்! உனக்கு தெரியுமா என்னனு தெரியல. பலபிரச்சினைகளில் அண்ணன் உதவி செஞ்சிருக்காருடா"

"நீ வேற அதெல்லாம் அந்தக்காலம்டா. இப்போ தண்ணி அடிச்சு அடிச்சு தண்ணிக்கு அடிமையாயிட்டான் மனுஷன்!"

"ஆமா, ரொம்பவே தளர்ந்துட்டார்டா! சரி விடுடா. இதுதான் அவருக்கு சந்தோஷம்! நம்ம சொல்லியா திருந்தப்போறாரு!"

"என்னவோ போ! இந்த ஊரில் பொறந்து நீ எப்படிடா அமெரிக்கா போன? என் ஃப்ரெண்டு அமெரிகால இருக்கான் னா எவன் நம்புறான்?!"

"என்ன செய்றது? என் தலை எழுத்து! பொறந்த ஊர்ல ராஜாவா இருக்கிறதைவிட, அங்கே போய் பிச்சை எடுக்கனும்னு இருக்கு!"

"சரி வாடா, அப்படியே நடந்து போய் டீ குடிச்சுட்டு வரலாம்! ரவி! அங்கே பாரு! யார் வர்றா தெரியுதா?"

"யார்டா அது? சரியா தெரியலையே!"

"இதாண்டா நம்ம "மன்னாரு விஜயன்"! இப்போ தாசில்தாரா இருக்கான்"

"நிஜம்மாவா!"

" அதை ஏன் கேக்கிற. இவன் கதை தெரியுமில்லை?"

"காலேஜிலே என்னா அநியாயம் பண்ணுவான் தெரியுமா மணி! பாவம்டா பொண்ணுங்களும் ப்ரொஃபசர்களும் நடுங்குவானுக. இவன் இன்னைக்கு தாசில்தாரா! என்னத்தை சொல்ல போ!"

"இப்போ அதான் அனுபவிக்கிறான்"

"என்னடா சொல்ற?"

"உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு ஸ்கூல் பொண்ண சைட் அடிச்சு கல்யாணம் பண்ணி வந்தான் இல்லையா?"

"ஆமா"

"இவன் எப்போபார்த்தாலும் குடிச்சிட்டு குடிச்சிட்டு வர்றது. அவளைப்போட்டு அடிக்கிறது. இவன் தம்பி, பாண்டி, வீட்டிலேயே இருப்பான் இல்லை?

"ஆமாம் ஏதோ கரஸ்ல படிச்சான்லடா? அவனா?"

"ஆமா, அவனுக்கும் இவன் மனைவிக்கும் "பிக் அப்" ஆகி "லவ்" ஆகிப்போச்சு"

"கூடப்பிறந்த தம்பியா!!!"

"இங்கே போற போக்க பார்த்தா அமெரிக்கா பரவாயில்லைனு சொல்லுவ! ஊரு முந்திமாதி இல்லப்பா எல்லாம் நாறுது"

"அப்புறம்?"

"என்ன செய்வான்? அதுக்கு தம்பியைத்தான் பிடிக்குதாம்!"

"லவ் மேரேஜ்தானேடா அவன் பண்ணினான்?"

"ஆமா. இதுவும் லவ்தான். அண்ணன் மேலே இருந்தது இன்ஃபாக்சுவேஷனாம்! அந்த அம்மா உண்மையான லவ் தம்பிட்டதான் பார்த்ததாம்"

"சரி, விசயத்துக்கு வாடா, மணி! இப்போ என்ன ஆச்சு?"

"என்ன ஆகும்? நாலு பேர் சொல்லிப்பார்த்தானுக. இவன் தம்பி கேக்கிறதா இல்லை! அடிச்சு பார்த்தான். நாலு பெரிய மனுஷன்கள் சொல்லிப்பார்த்தானுக. அந்த பொண்ணும் அவரு ரொம்ப குடிக்கிறாரு, அடிக்கிறாருனு எதிர்த்து பேசுது. அவரோட வாழ முடியாதுனு சொல்லுது"

"அப்புறம்?"

"என்ன பண்ணுவான் பாவம்?. இப்போ அந்தப்பொண்ணு பொறந்த வீட்டுக்கு போயிருச்சு. அவங்க வீட்டில் இவனை சுத்தமா பிடிக்காது.தன் பொண்ண ஏமாத்தி இழுத்துட்டு போயிட்டான்னு கோபமா இருந்தானுக. அது அங்கே என்ன சொல்லுதோ அதுதான் வேதம். இப்போ விவாகரத்து பண்ணப்போகுதாம் இவனை!"

"பண்ணிட்டு?'

"தம்பியை கல்யாணம் பண்ணப்போதாம்! அது ஃப்யூச்சர் ப்ளானாம்'

"நாசமா போச்சு போ!"

"படிக்கும்போது கொஞ்ச நஞ்ச அக்கிரமமா பண்ணினான் இவன்? அதான் இந்த லைஃப்பிலயே அனுபவிக்கிறான். ஊரில் மானம் போச்சுடா! வேலைக்குபோறது, ஈவனிங் வந்து தண்ணியப் போட்டுட்டு போதையிலேயே திரிகிறான்"

6 comments:

ஆளவந்தான் said...

//
என்ன செய்றது? என் தலை எழுத்து! பொறந்த ஊர்ல ராஜாவா இருக்கிறதைவிட, அங்கே போய் பிச்சை எடுக்கனும்னு இருக்கு!
//

Why blood? Same blood!

வருண் said...

வாங்க ஆள்!

அப்படியெல்லாம் ஊரில் சொல்ல முடியாது, ஆள்! :-)

ஆளவந்தான் said...

Now I am watching "The Age of Innocence" Movie. There is one dialogue related to this post


She made an awful marriage.

Should she hid her head as if it's her fault?

Should she go slinking around as if she disgraced herself?

She's had an unhappy life.
That doesnt make her an outcast.



If that guy had some bad relationship. why the hell he has to suffer himself by drinking. that is total BS.

Suppose say that he got punishment becaz of his karma.. well.. he got punishment. He has to start his life fresh in new dimension.

வருண் said...

It is easy to suggest when we are third person. But when it happens to us, it is not that easy. Yes, one can move on. Will he have any confidence in a new relationship after all these?

வால்பையன் said...

இதையும் ஒரு மேட்டரா எழுதுறிங்க பாருங்க! உங்களை பத்திரிக்கையில வேலைக்கு சேர்த்துக்கலாம்.

இந்த மாதிரி மேட்டர் தான் அவுங்களுக்கும் தேவை

வருண் said...

வாங்க வால்ப்பையன்!

நம்ம பாழாப்போய்க்கிட்டு இருக்கோம் என்கிற ஆதங்கத்தில் எழுதியது. :-(