Wednesday, September 12, 2018

என்ன? உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா?!

"ப்ரியா! என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம்? எங்கே போன?" என்றாள் ரம்யா!

"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனால்.."

"ஒரேயடியா இழுக்காதே. இதெயெல்லாம் நான் கேக்கிறதுதான் தப்பு. என்னதான் க்ளூஸ் ஃப்ரெண்ட்னாலும் உன் பெட்ரூம் ரகசியம் எல்லாம் கேக்கிறது அனாகரிகம். இல்லையா? சரி விடு"னு சலித்துக் கொண்டாள் ரம்யா.

"இப்போ உனக்கு என்னடி வேனும்? அந்த "டேட்" யாருனா? இல்லை என் பெட்ரூம் ரகசியமா?"

"என்ன! டேட் டா? யாருடி அந்த அன்பர்? இல்லைனா அன்பியா?"

"இல்லடி..சரி யார்ட்டயும் சொல்லாதே..அது என் எக்ஸ்தான். ஏதோ கான்பரண்ஸ்க்கு வந்தாராம். சும்மா டின்னர்க்கு போகலாம்னு சொன்னார்?"

"அடிப்பாவி! டைவோர்ஸ் பண்ணீட்டு இப்போ என்னடி அவரோட குழாவல்"

"குழாவல் எல்லாம் இல்லை. சும்மா ஒரு ஃப்ரெண்ட்லி டேட். நீ நெனைக்கிற மாதிரி ஒன்னுமில்ல"

"ஆமா நான் என்ன நெனச்சேன்?"

"உன்னைப் பத்தி தெரியாதா? பச்சையா சொல்லவா?"

"வேணாம் வேணாம்! நீ சொன்னாலும் சொல்லிருவ! அப்படினா வெஜ் டேட்டா?"

"ஆமா அப்படித்தான்னு வச்சுக் கோவேன். நீ சப்பாட்டில் மட்டும்தான் வெஜ். இல்லடி? பிராமண ஆத்துப் பொண்ணூங்க எல்லாம் உன்ன மாதிரித்தானா?"

"ஒரு சர்வே எடுடி, அனானிமஸா? நானும் தெரிஞ்சுக்கிறேன்"

"நல்ல ஐடியா.  பட் ஐ நோ யு ஆர் நாட் அலோன்"

"உண்மை என்னதான்னு சொல்லு? என்ன திடீர்னு எக்ஸ் மேலே இத்தனை அன்பு? அதுவும் இப்போ நீ சிங்கிளாத்தான் இருக்க?னு எல்லாம் நான் நுழச்சு சுழச்சு கேக்க மாட்டேன். என்னதான் நீ க்ளூஸ்ணாலும் அது அநாகரிகம்!"

"அடிப்பாவி! எல்லாத்தையும் கேட்டுட்டு.. கேக்க மாட்டேன்னு சமாலிப்பு வேற. ஏன்டி வயசாக ஆக இப்படி கரப்ட் ஆகிக்கிட்டே போற நீ, ரம்யா?"

"நான் மட்டுமா? இந்த லோகமே அப்படித்தான்டி ரம்மி என்பார் என்னோட எக்ஸ் பாய்ஃப்ரெண்ட்!"

"யார்டி அது?"

"இப்போ அதெல்லாம் எதுக்கு? அவரைத் தலைமுழுகி ரொம்ப வருடமாச்சு. விடுடி ப்ளீஸ்"

"சரி உனக்கு என்ன தெரியனும்? என் எக்ஸ் ஒரு டீசன்ட்டான ஆள் தான். ஆனால் எங்க நிலைமையில் டைவோர்ஸ்தான் பெஸ்ட் சொலுஷன் னுதான்... டைவோர்ஸ் பண்ணீனேன்.'

"புரியுறமாதிரி சொல்லுடி, ப்ரியா, ப்ளீஸ்?  தமிழ்ல்ல, இல்லைனா ஆங்கிலத்தில்.  எனக்கு நீ பேசுற "ஹீப்ரு" எல்லாம் தெரியாது"

"சரி சரி சொல்றேன். எங்களூக்கு நடந்தது அரேஞிட் மேரேஜ். அதுவும் ரெண்டு பேரும் இந்தியாவில் விசிட்ல இருக்கும்போது, திடீர்னு பேசி முடிவு செய்தார்கள். ஆள் ஹான்ட்சம்மா இருந்தார், மேலும் ஹை பொசிஷன்ல இருந்தார்னதும் நானும், "லெட் அஸ் கிவ் அ ட்ரை" னு  சரினு சொல்லீட்டேன். ஆனால் அப்புறம்தான் தெரிந்தது அவரைப் பத்தி"

"ப்ரியா ப்ளீஸ்டி..சுத்தி சுத்தி வராதே! எனக்குத் தலை சுத்துது நீ சுத்துறதுல"

"இல்லடி அவரு "------------" யாம்!' னு ரம்யா காதில் சொன்னாள். அந்த கோடிட்ட வாக்கியத்தை"

"என்னடி சொல்ற? ரொம்ப எஜுகேட்டட் ஆள் அவரு. அப்புறம் ஏன் உன்னை கட்டிக்க சம்மதிச்சாராம்?"

"அவங்க அப்பா அம்மா ரொம்ப கன்சர்வேட்டிவாம். ஆச்சாரமான, கவுரவமான குடும்பமாம்.  என்னதான் இவர் சொன்னாலும் கல்யாணம் ஆனா, ஒரு அழகான பொண்ண அம்மனமாப் பார்த்தால் எல்லாம் சரியாயிடும்னு நம்பினார்களாம் பாவம்"

 'ஆமா, நீ நேக்கடா இருக்கும்போது ரொம்ப அழகா இருப்பியா ப்ரியா"ணு சிரித்தாள் ரம்யா.

"நீதான் பார்த்துச் சொல்லனும்! பார்த்துச் சொல்றீயா? அழகா இருக்கேனா இல்லை செக்சியா இருக்கேனா? இல்லை பார்த்ததும் கட்டிக்க தோனுதா? னு?"

"ஹா ஹா ஹா"

"சொல்றதைக் கேளூடி. என்னிடம் எல்லா விபரத்தையும்  அவர் சொன்னாரு. "எனக்கு ஒரு உதவி செய் ப்ளீஸ், ப்ரியா. இந்தாளூ சரியில்லைனு நீயே என்னை டைவோர்ஸ் பண்ணீடு அப்போத்தான் என் பேரென்ட்ஸ் என்னை யார்னு புரிந்து கொள்வார்கள்" ணு சொன்னாரு. அதுக்கப்புறம் நடந்தது உனக்கும் வெளீ உலகத்துக்கும் தெரியும்!"

"சரி, நீ எப்படி? ஸ்ரைட்டா? இல்லைனா? நீயும் அவரைப் போலதானா?"

"வெல், எனக்கே அப்பப்போ இந்த சந்தேகம் வருதுடி. ஒரு நாள் "ஸ்லீப் ஓவருக்கு" என் வீட்டுக்கு வாவேன். உன் ஹஸ்பண்ட்ட ஏதாவது சாக்குச் சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டு. நம்மளே கண்டுபிடிச்சுடலாம்.  என்ன சொல்ற? " ஒரு மாதிரியாப் பார்த்தாள் ப்ரியா.

"என்னை ஆள விடுப்பா"

"ஹா ஹா ஹா! ஏன்டி, உன் மேலேயே உனக்கு நம்பிக்கை இல்லையா?"

"சரிடி, பார்க்கலாம். நான் போகனும்டி"ணு புறப்பட்டாள் ரம்யா.

*******************

ட்ரைவ் பண்ணீக்கொண்டே ப்ரியா எக்ஸ் நிலைமையை நினைத்துப் பார்த்தாள், ரம்யா. இந்தியாவில் இவரைப் போல் எத்தனை பேரு வெளீயில் சொல்ல முடியாமல் குடும்ப சகிதமாக வாழ்ந்து கொண்டு இருக்காங்களோ..பாவம்..

முற்றும்.

Sunday, September 9, 2018

ரஞ்சனியின் அன்புத் தோழி நித்யா!

இது ஒரு மாதிரி கதை! படிச்சுட்டு என்னைத் திட்ட வேண்டாம். நான் முதல்லயே சொல்லீட்டேன். சமீபத்திய தமிழ்நாட்டை கவனிக்கும்போது, அமெரிக்கா எல்லாம் மிகவும் பின்பட்ட நிலையில் இருக்க மாதிரி இருக்கு. சரி இனிமேல் தமிழ் மக்கள் லெவெலுக்கு நாமும் எழுதுவோம்னு..

************************

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள் ரஞ்சனி . ரஞ்சனிக்கு தூக்கம் வரவில்லை. அதிசயமாக இருந்தது. எப்படி அவளால் அந்த நிமிடம் அசையாமல் எப்படி இருக்க முடிந்தது? ஒருவேள அவளுக்கும் பிடித்ததா நித்யாவின் அந்தச் செயல்?அந்த இதம்?

நித்யா ஏன் அப்படி நடந்து கொண்டாள்? சரி அவள்தான் விளயாட்டா அப்படி நடந்து கொண்டாள் என்றால்..  போடினு தள்ளி விட்டுவிட்டு நான் விலகி இருக்கலாமே? ஒரு நிமிடம் நானும் என்னை மறந்துவிட்டேனே? ஒரு வேள எனக்கும் பிடித்ததா? நித்யாவின் உதடுகள் எத்தனைதான் சாஃப்ட். நிஜமாவே வெந்த அந்த வலி தெரியாமல் இதமாகத்தான் இருந்தது அவளுடைய அந்த ஒத்தடம். என்ன ஆச்சு எனக்கு?

*************************

நித்யாவுக்கு திருமணம் ஆகி, 6 மாதங்களில் டைவோர்ஸ் ஆகிவிட்டது. அடுத்து இன்னொருவனை டேட் பண்ணினாள். அவனும் பிடிக்கவில்லை. அடுத்து இன்னொருவன். அதே கதைதான். அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.  எல்லா ஆண்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.  மாஜி  கணவனும் சரி, கட்டி அழுத ஆண் நண்பர்களும், அன்பர்களும் சரி, அவளுக்குத் தேவையான இன்ப உச்சிக்கு அவளை அழைத்துச் செல்ல அவர்களால் இயலவில்லை. எல்லாமே ஒருதலைப் பச்சமாக இருந்தது அவர்கள் உறவில். ஆனால்  என்னவோ அவளுக்குத்தான் ஏதோ குறை இருப்பதுபோல் அவர்கள் பேசியது எரிச்சலாக இருந்தது. அவளைப் பார்த்து யாரும் பரிதாபப்படுவதும் அதைவிட பிடிக்கவில்லை.

ஆமாம், அவளுக்கு 10-15 நிமிடங்கள் பத்தவில்லை. ஒரு  மணி நேரம் தேவைப்பட்டது. இன்ப வெள்ளத்தில் நீந்தி கரையை அடைய.  அழைத்துச் செல்லத்தான் ஆண்கள் இல்லை. அவளுக்கு ஆண்களில் யாருமே அவள இன்ப உச்சிக்குக்கு அழைத்துச் செல்ல இயலாதவர்களாக தோன்றியது. இனிமேல் இன்னொரு ஆளைத் தேட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள். தனியாகவே வாழ ஆரம்பித்தாள்.

நித்யாவின் நெடு நாள்த் தோழிதான் ரஞ்சனி. கல்லூரியில் படிக்கும்போததிருவரும் க்ளூஸ். அவள் கணவன் இந்தியா போயிருந்ததால், போர் அடித்தது என்றூ தனியாக வாழும் நித்யாவுடன் அதிக நேரம் செலவழித்தாள் ரஞ்சனி.  நித்யாவிடம் அவள் திருமணத் தோல்வி பத்தி தோண்டித் துருவி கேள்விகள் கேட்டதில்லை.  ஏதோ பிரச்சினை என்று தெரிந்தது. விட்டுவிட்டாள்.

வழக்கம்போல ரஞ்சனி அன்று வேலை முடிந்து வீட்டிற்கு போகும்போதே போர் அடிப்பது போலிருந்தது. சரி நித்யாவை போய் பார்த்து இன்னைக்கும் அவள அறுக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தாள். ஷவர் எடுத்துவிட்டு, டெக்ஸ்ட் பண்ணினாள்.

"நித்யா! கேன் ஐ கம் டு யுவர் ஹோம்?"

"பர்மிஷன் எல்லாம் எதுக்கு? புறப்பட்டு வாடி. ஓசி டின்னர் தானே வேணும்? நான் தர்ரேன். ஹேய் ஜஸ்ட் கிடிங்"

"வர வர நீ ரொம்ப கணக்கு பார்க்கிற, நித்யா. ஐ வில் ரைட் எ செக் எவ்வெரி டைம் ஐ விசிட் யு, ஓ கே?"

"வாட்டவர்"

******************

20 மினுடஸ் ட்ரைவ். காரை பார்க் பண்ணீட்டு அவள் அப்பார்ட்மென்ட் பில்டிங் உள்ளே போனாள். டாப் ஃப்ளோரில் இருந்தாள், நித்யா.

டோர் பெல் அழுத்திய உடனே கதவைத் திறந்தாள்.

"ஏய் இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கடி  ரஞ்சி " என்றாள் நித்யா புன்னகையுடன்.

"என்ன வேண்டும் உனக்கு? ரொம்ப ஐஸ் வைக்காதே!"னு அவள் "பட்" ல் தட்டினாள்.

"என்னடி தனியா இருக்க பொண்ணுட்ட இப்படி எல்லாம் தப்பா நடக்கிற?" னு சிரித்தாள் நித்யா.

இருவரும் சிரித்தார்கள். ரஞ்சனிக்கு ஏனோ ஒரே வெட்கமாக இருந்தது அவள் அப்படிச் சொன்னது.

காஃபி போட்டு எடுத்து வந்தாள், நித்யா.

" ரஞ்சி! காஃபி  ரொம்ப சூடாயிருக்கு. மெதுவாக் குடி! இல்லைனா உதட்டை பதம் பார்த்துடும்! னு வார்ன் பண்ணினாள் நித்யா.

நெட்ஃப்ளிக்ஸ்ல "orange is the new block" ஓடிக் கொண்டு இருந்தது.

"என்னடி இது? அவன் என்ன இவ  பெஸ்ட் ஃப்ரெண்டோடயே? அடப்பாவி"

"ஆமடி, அவ்ளோதான் காதல் எல்லாம்..பிரிந்து இருந்தால் கொஞ்ச நாள்தான் தாக்குப் பிடிக்கும் போல"

'என்ன இருந்தாலும் அவளோட பெஸ்ட் ஃப்ரெண்ட்தான் கெடச்சாளா இவனுக்கு? இதை எப்படித்தான் திரும்பத் திரும்ப பார்க்கிறயோ?"

"நீயும் தான் ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும், தேடிப்பிடிச்சு தொடர்ந்து இதைப்பார்க்கிற? ஆமா உனக்கென்ன லாரா  ப்ரெட்டான் மேலே லவ்வா?" னு  விஷமமாக சிரித்தாள்.

"கொழுப்புடி உனக்கு."

"ஐ தின்க் ஷி இஸ் ஹாட்!" என்றாள் நித்யா காசுவலாக.

"என்னவோ போ!"

நித்யா டின்னர் டேபில் செட் பண்ளிக்கொண்டு இருந்தாள். சீரியலை பார்த்துக் கொண்டே, சூடான காஃபியை பருக வாயில் வைத்துவிட்டாள் ரஞ்சனி. ஒரு சிப் உள்ளே போயி அது சுட்டவுடந்தான் அவளால் சூடாக இருப்பதை உணர்ந்து குடிப்பதை நிறுத்த முடிந்தது.

"ஓ மை காட், இட் இஸ் ஹாட்"ணு கத்தினாள்.

"நான்தான் சொன்னேன் இல்ல?"னு ஓடிவந்தாள் நித்யா.

"ஆமடி நீ சொன்ன. ஆனால் மறந்துட்டேன். சீரியல் பார்த்துட்டே"

"ரொம்ப எரியுதா உதடு?"

"ஆமடி, லிப்ஸ்ல ப்ளீஸ்டர் வரப்போது"

"இருடி,  கொஞ்சம் ஐஸ் எடுத்து வர்ரேன்"  னு ஐஸ் க்யூப்ஸ் கொண்டு வந்தாள் நித்யா.

"ஏய் ஐஸ் வைத்தால்  ரொம்ப குளிரும்.. விடுடி வேணாம்" என்றாள் ரஞ்சனி

"ஐஸ் வச்சா நல்லாயிருக்கும்டி. இட் வில் ஹெல்ப். சரி கொஞ்சம் பேசாமல் இரு"

ஒரு ஐஸ் க்யூபை தன் வாயில் போட்டு கொண்டாள் நித்யா. ; அவள் வாயை குளிரவைத்துவிட்டு பிறகு அதை துப்பிவிட்டு..

இங்கே வாடி பக்கத்திலே, பார்க்கலாம்னு அருகில் உட்கார்ந்து. அவள் நாடியைப் பிடித்து தன் பக்கம் கொண்டு வந்து  ரஞ்சனி உதட்டை ஆராய்ச்சி செய்தாள்.

 Image result for orange is the new black laura prepon


Related image




திடீர்னு குளிர்ந்த நித்யா இதழ்களை  ரஞ்சி உதட்டில் பதித்து, தன் நாக்கால் ரஞ்சியின் இதழ்கள இதமாக தடவுவதுபோல் மெதுவாக அசைத்தாள்.


இதை ரஞ்சனி கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் ஷாக் னாலயோ அல்லது அந்த குளிர் உதடு  அவள் உதட்டுக்கு இதமாக இருந்ததாலோ என்னவோ அவள் உடனே விலகாமல் இருந்தாள். மறுபடியும் இன்னும் அழுந்த முத்தமிட்டாள் நித்யா. எல்லாம் சில நொடிகள்தான். யுகம் போல் இருந்தது

"யு ஃபீல் பெட்டர் நவ்?" னு அவள் வாயிலிருந்து தன் உதடுகள விடுத்துச் சொன்னாள் புன்னகையுடன்.

"போடி நீ ரொம்ப மோசம்" அவள் முகம் சிவந்தது

"சரி டின்னர் சாப்பிடலாம் வா"

இருவரும் டின்னர் சாப்பிட்டார்கள். வேலை சம்மந்தமான பேச்சு. அவ ஹஸ்பண்ட் எப்போ யு எஸ் திரும்புகிறார்னு பேசுவதிலேயே போச்சு.

**************************

படுக்கையில் புரண்ட ரஞ்சனிக்கு உதட்டில் வலி தெரியவில்ல, ஆனால் நித்யாவின் இதழ்கள்தான் ஞாபகம் வந்தது. நித்யா பத்தி மட்டுமல்லாமல் தன்னைப் பத்தியே நெறய சந்தேகங்கள் வந்தன ரஞ்சனிக்கு. ஒரு வேளை எனக்கும் பிடித்ததா? அப்படித்தான் இருக்கனும். அப்போ நான் என்ன...


முற்றும்.




Thursday, September 6, 2018

ரெண்டாவது முறை அவ(ள்)மானம் !

அவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு  அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை.  அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி! எத்தனை மட்டமான ஆள் இவன்! இவனைப்போயி கல்யாணம் பண்ணி இத்தனை நாள் வாழ்ந்து இருக்கோமே? என்று அழுகை அழுகையாக வந்தது

அபர்ணா அவளுடைய பாய்ஃப்ரெண்டுக்கு டெக்ஸ்ட் அனுப்பினாள்.

"வினோத்! நான் அந்தாளோடு வாழ முடியாது. அவன் மிகவும் கேவலமான ஜென்மம்" என்று.

ஆனால் அவள் பாய்ஃப்ரெண்ட் வினோத்திடம் இருந்து உடனே பதில் வரவில்லை!

"நம்ம விசயம் தெரிந்து விட்டதா?" என்று சில மணிநேரங்கள் கழித்து வந்தது.

"ஆமா,அதனாலென்ன இப்போ? இவனோட இனிமேல் வாழ முடியாது. என்ன சொன்னான் தெரியுமா அவன்? இந்தாளைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாயிருக்கு. அவன் சொன்னதை நினைத்தால் .."

அவள் கணவன் அப்படி என்னதான் அபர்ணாவிடம் சொன்னான்? என்று அவன் கேக்கவில்லை! அவனுக்கு ஏனோ பயம். அவளும் அதைச் சொல்லவில்லை!

அபர்ணாவைப் பொறுத்தவரையில் தவறான ஆளை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். வர வர அவனைப் பார்த்தால் அவளூக்குக் காதலோ காமமோ வரவில்லை. பாய்ஃப்ரெண்ட் வினோத்தான் தெய்வீக காதலனாகத் தெரிந்தான். அவனுடன் வைத்திருக்கும் "அந்த உறவு" அவளுக்குத் தவறாகத் தோணவில்லை. அவனுக்கும் அபர்ணா இனித்தாள்.

வினோத் மனைவி, லலிதா,  வினோத்தை மனிதனாக மதிப்பதே இல்லை. படுக்கையிலும் சரி, சாதாரண உரையாடல்கள் போதும் சரி ஏதோ ஒரு உதவாக்கரைபோல் அவனைப் பார்ப்பாள்.

அபர்ணா வினோத்  இருவருக்குமே தன் கணவனை
/மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன் தெய்வீக காதலன்/காதலியுடன் உலக நியதிப் படி மணந்து ஒன்று சேர இயலவில்லை. குடும்ப சூழல். பெற்றோர் மனம் நொந்துவிடுவார்கள் என்கிற பயம். மேலும் இருவரும் கோழைகள்.  இதுபோல் வைத்துள்ள தகாத உறவுதான் தெய்வீகமாகத் தோன்றியது.

அபர்ணாவிடம் அவள் கணவன் சொன்னது மறுபடியும் அவளுக்கு ஞாபகம் வந்தது. "அபர்ணா! உனக்கு என்னைப் பிடிக்கலைனா விவாகரத்து செய்து இருக்கலாம். இன்னொருத்தந்தான் இனிக்கிறான்னா அவனோட பர்மணன்ட்டா நீ போயி செட்டில் ஆக ஆயத்தம் செய்து இருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு.. சரி இருந்துட்டுப் போகட்டும். உனக்கு இப்படியே  தொடருணும்னு நீ எதிர்பார்த்தால், ஒண்ணு வேணா செய்யலாம்..னு  சொல்லி கூச்சமே இல்லாமல் "அதை" அவள் இடம் சாதாரணமாகச்  சொன்னான். அவளால் அதை இப்போவும் அதை மட்டும் ஜீரணீக்கவே முடியவில்லை. ஏனோ அவளுக்கு அவமானமாக இருந்தது.

சில நாட்களில், அவள் கணவனே, அவங்க அப்பார்ட்மென்ட்ல இருந்து மூவ் அவ்ட் பண்ணினான்.  சீக்கிரமே விவாகரத்து நோட்டிஸ் அனுப்பினான். "அவனுக்கு அபர்ணாவைப் பிடிக்கவில்லை. அவள் மேல் எந்தவிதமான அட்ராக்சனும் இல்லை. வாழ்க்கையில் தெரியாமல் பெரிய தவறு செய்துவிட்டேன் " என்று அவள் நினைத்ததையே அவன் சொன்னான், அந்த  விவாகரத்து பத்திரத்தில். ஆனால் ஏனோ அவன் இவளிடம் குறை இருப்பதுபோல் சொல்வது அபர்ணாவுக்கு அவமானமாக இருந்தது.

விவாகரத்து நோட்டிஸை பார்த்த அபர்ணாவின் பெற்றோர்கள், அவளை விட்டுவிட்டு அவள்  கணவனை கரிச்சுக் கொட்டினார்கள். "இனிமேல் நீ இவனோட வாழ வேண்டியதில்லை" என்றார்கள். ஒரு வழியாக அவர்கள் விவாகரத்து முடிந்தது. ரெண்டு வருட மண உறவில் இருவருக்கும் குழந்தை இல்லாதது வசதியாகப் போய்விட்டது.

எல்லாம் முடிந்த பிறகு, வினோத்திடம், "அவன் மனைவி லலிதாவை விவாகரத்து செய்ய" ச் சொல்லி சொன்னாள் அபர்ணா. வினோத், இவளுக்கு விவாகரத்து ஆன உடனேயே அபர்ணாவிடம் அத்தனை ஈடுபாடு காட்டவில்லை. அவள், லலிதாவை விவாகரத்து செய்யச் சொல்லி நச்சரித்ததும், அவனால் உடனே சரி என்று சொல்ல முடியவில்லை. ஏதோ சொல்லி கொஞ்ச நாள் தட்டிக்கழித்துப் பார்த்தான். அபர்ணாவுக்கு அவள் கணவனிடம் இருந்து கிடைத்த விடுதலை வினோத்தை அப்படி எதுவும் சந்தோஷத்தில் ஆழ்த்தவில்லை. கடைசியில் வேற வழியே இல்லாமல், வினோத் லலிதாவை ஒரு வழியாக விவாகரத்து செய்தான்.

அபர்ணாவும் வினோத்தும் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு ஆறு மாதத்திலேயே இருவருக்கும் இடையில்  புதுப் புதுப் பிரச்சினைகள் வர ஆரம்பித்து விட்டது. எவ்விதத் தடையும் இல்லாமல், யாருக்கும் பயப்படாமல் தன் அன்புக் காதலனுடன் சேர்ந்தவுடன், அவன் என்னவோ ரொம்பச்  சாதாரணமான ஆம்பளையாகத் தெரிந்தான், அபர்ணாவுக்கு அவர்கள் உறவில் இருந்த அந்த த்ரில் எல்லாம் போயி எல்லாம் ஏனோ தானோ என்று அலையில்லாத கடலில் குளிப்பதுபோல் போனது.

ஒரு நாள் ஆவலுடன் படுக்கை அறையில் இருக்கும்போது,  வினோத்தும் தயங்கி தயங்கி "அதையே"  அவள் கணவன் சொன்ன அருவருப்பானதை  ஜாடையாக அவளிடம் சொன்னான், ஒரு மாதிரியாக! ஆமாம், அவள் கணவன் கோபமாக இவளை அவமானப்படுத்த சொன்ன "அதை"யே!! அவளுக்கு இரண்டாம் முறையாக அவ(ள்)மானம். ஆனால் இம்முறை அபர்ணா அழவில்லை. அபர்ணாவுக்கு எல்லாமே தெளிவாகப் புரிய ஆரம்பித்தது.

முற்றும்