Friday, September 20, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்! -ஏழு

மோகன், விஜியைப் பற்றி "சீரியஸாக" யோசித்தான். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம். சாதாரண ஜோக்கைகூட பின்னால் சீரியஸாக எடுத்து ஆராய்வான். "ஜோக்" என்பதால் அது அர்த்தமற்றது என்று சிரித்துவிட்டுப் போகாமல் அதையும் எடுத்து சீரியஸாக அசைபோடுவான் அனலைஸ் செய்வான்.
ஒருமுறை அவனுக்கு நன்கு தெரிந்த இன்னொரு தோழியிடம் இதேபோல் பிரச்சினை வந்தது.

"க்ளோஸ் ஃப்ரெண்ட்" என்றால் என்ன? நம்ம "ஸ்ட்ரெங்த்" மற்றும் நம் "வீக்னெஸ்"கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள்!  நம்மைப்பற்றி, நம்மிடம் உள்ள குறைபாடுகளை, நம் வீக்னெஸ்களை  நன்கு அறிந்தவர்கள்தான் நம் க்ளோஸ் நண்பர்கள், தோழிகள். நம் மனது சங்கடப்பட்டு, குழம்பி  இருக்கும் ஒரு குழப்ப நிலையில் அவர்களிடம் மனம் திறந்து நம்மை திறந்து காட்டலாம். அவர்கள்மேல் நாம் அதிக நம்பிக்கை வைத்து இருப்பதால் நாம் அவர்களிடம் கவனக்குறைவாக இருக்கலாம். ஒருவரிடம் கவனக்குறைவாக இருக்கலாம் என்றால் உங்களுக்கு "ஸ்ட்ரெஸ்" குறையும். "ஸ்ட்ரெஸ்" குறையும்போது உங்க மனநிலை சந்தோஷப்படும். அதனால்தான் நாம் ஒவ்வொருவருக்கும்  நண்பர்கள் தேவைப்படுகிறது. ஆனால் அதே நண்பர்களுக்குள் உறவு முறிந்துவிட்டால்? அல்லது மனஸ்தாபம் வந்துவிட்டால்?  எந்த ஒரு சாதாரண உறவு நாளுக்கு நாள் பலப்பட்டு  நட்பு என்ற பாலம் உறுதியானதோ. அதே பாலம் கீறல்பட்டு, பலவீனப்பட்டு உடைவதும் இயற்கைதான். இதைப் புரிந்துகொள்ளாமல் நட்பென்கிற உறவு எல்லாம் அப்படி இல்லைனு விவாதிப்பது விதண்டாவாதம். நட்பென்கிற உறவு முறியும்போது  இருவருக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஒன்று உண்டு. அவர்கள் நண்பனாக நம்மை நம்பி காட்டிய அவர்கள் வீக்னெஸுக்கு எதிராக நடந்து கொள்ளக்கூடாது. இது எழுதப்படாத ஒரு உடன்பாடு! நம் நண்பர்களின் வீக்னெஸை அறிந்த நான் முந்தைய நண்பரை குத்திக் கிழிப்பது, காயப்படுத்துவது மிக மிக எளிது..அவன் தோழி அதைத்தான் செய்தாள், "நீ மூச்சுவிட்டால்கூட அதன் அர்த்தம் எனக்குத்தெரியும். என்னிடம் கதை விடாதே" என்று சொன்ன ஒரே வாக்கியத்தில் பட்ட கீறல் என்றுமே சரியாகவில்லை..அப்படியான பிறகு, அவனால் அந்த உறவை மதிக்க முடியவில்லை  நாகரிகமாக ஒதுங்கிவிட்டான் மோகன். இதேபோல் மோகனின்தோழியும் மோகனிடம் உள்ள குறைகளை அடுக்கலாம். அவனை சுயநலக்காரன் என்கலாம். பிடிக்கலைனா ஒதுங்கிக்கொள்வது நல்லது. இல்லை நாங்க 10 வருடம் நண்பர்கள், என்ன எழவுவந்தாலும் கட்டி அழத்தான் செய்வோம் என்றால் அழுங்க!

அதுவும் இன்றைய நட்பு? முகநூல் நட்பு, இணையதள நட்பு என்று அர்த்தமில்லாத, உருப்படியில்லாத உறவுகள் நிறைந்த modern f'cking world இது. முக நூலில் ஒருத்தனுக்கு நண்பர்கள் ஆயிரம் பேர் இருந்தால், அவன் ஒவ்வொரு நாளும்  குறைந்தது மூனு பேருக்காவது பொறந்தநாள் வாழ்த்துசொல்லணும்! ஆக முகநூல் நண்பர்களில் டெய்லி நண்பன் எவனுக்காவது ஒருத்தனுக்கு ஒவ்வொரு நாளும் பொறந்தநாள் இருக்கும். நண்பர்கள் வட்டம் கூடக்கூட நட்பு என்பது அர்த்தமற்றதாகிறது என்பதற்கு முகநூல் நட்பு ஒரு அழகான உதாரணம்! கிறுக்குப்பயலுகதான் எல்லாரையும் நண்பர் தோழன்னு சொல்லிக்கிட்டு அலைவான். முகநூல் நண்பர்கள் உலகம் சரியான முட்டாப்பய உலகம்தான். இன்றைய நட்பு இப்படி கேலிக்கூத்தாக இருக்கும்போது, அப்பப்போ திருக்குறள் பழமொழி மண்ணாங்கட்டினு எதையாவது சொல்லி நாங்க அப்படிப்பட்ட  "நண்பர்கள்" இப்படிப்பட்ட நண்பர்கள்னு ஒளறிக்கொண்டு திரிய எப்போவுமே ஒரு கோமாளிகள் கூட்டம் இருக்கத்தான் செய்யுது.

விஜியை நினைத்தால் அவனுக்கு ஒரு வகையில் குழப்பமாக இருந்தது. மேலும் பயம்மாகவும் இருந்தது. உறவு என்பது ஒருவரை ஒருவர் நம்பணும். அந்த நம்பிக்கையில் மண் விழுந்தால் அதுக்கப்புறம் இன்று இல்லை என்றாலும் நாளை அது பெரிய பிரச்சினையாகும். மோகனிடம் மிகப் பெரிய குறைபாடு ஒன்று உண்டு.  விஜி அழுவதை அவனால் தாங்க முடியாது. அவனைப்பொறுத்தவரையில், அவனை "பாஸ்டட்"னு அவள் உண்மையான கோபத்துடன் திட்டினாலும் தாங்கிக்கொள்வான். அவள் அழுதுகொண்டு பேசினால் அல்லது அழுதுவிட்டு அவனிடம் பேசாமல் விட்டுவிட்டால் பயந்துவிடுவான். அழுகைதான் பெண்களுக்கு வடிகால். அது மோகன்போல் ஆண்களுக்கு மிகப்பெரிய சங்கடம். அழுதழுது ஆண்களை பெண்கள் கொல்வது பெண்களுக்கு விளங்குவது இல்லை! பிரச்சினை என்றால் பேசித் தீர்த்துக்கொள்வோம்! எதற்காக இந்த அழுகை? ஒப்பாரி? மோகனால் அவனுடைய சுயநலக்கோணத்தில்தான் எந்தப் பிரச்சினையையும் பார்க்க முடியும். அவளிடம் உள்ள குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தினான்.

மோகனின்  நினைவலைகளை உடைக்க அவன் செல் ஃபோன் அலறியது. யாரென்று பார்த்தான். அனுடைய கோ-வொர்க்கர் "லாரா" கால் பண்ணினாள்.

"What's up Laura?"

"Nothing. Just called to say "hi" to you.."

"There must be something. Tell me."

"I dont know, your friend manikkam.."

"He is not my friend. I just know him because he is from my home state. He just moved from France  and so I talked to him. "

"Well.."

"What about him?'

"I dont know. I used to talk to him when I go for coffee and sometimes in the hallway. He somehow finds me"

"I did not know that you talk to him that much.. What now?"

"Well, he was asking me out today!"

"Really?"

"Yeah. I am sure, he knows that I have a fiance. I have told him several times. YOu know me, I tell this to anyone I know.  Also you told me that he is married. Right?"

"Well..That's what he told me. But I never met his wife"

"I think, him asking me out is.. that's kind of creepy, you know."

"So, now you bring this issue to my attention because he is an Indian and I am an Indian and we speak the same language..Right? You fucking racists whites"

"Ha ha ha. No, I just wanted to tell you that he asked me out. As he is kind of a mutual friend to us."

"What did you tell him?"

"I kind of got confused and asked, "Is your wife joining us too?

"Interesting. And?"

"I thought he wanted to go out with me and my fiance and him and his wife or something. He was kind of shocked when I asked about his wife. He says that she is in India now."

"He wants to go out with you for dinner. Some kind of date? Or just wants to talk to you."

"Well, you know..He was very nervous for some reason.. he said, how about friday for dinner?"

"Did you say "No"?"

" Not yet, but I will soon. Honestly I know how to deal with this. I just wanted to tell that he asked me out. I did not think he would"

"You want to tell me because.. you want to brag that you are attractive and so many people wants to take you out?"

"Ha ha ha"

"How come I never asked you out, Laura?"

"That's funny, Mohan"

" I cant tell you what I know of him, Laura. But I am kind of shocked too. You know that all men are bastards. Right?"

"Ha ha ha"

"OK, thanks for sharing this.  I will talk to you tomorrow at work."

"OK, mohan!"

ஏன்னு தெரியவில்லை, மாணிக்கத்தை நினைத்தால் மோகனுக்கு பயங்கர எரிச்சலாக வந்தது. மாணிக்கம் ஃப்ராண்ஸிலிருந்து அமெரிக்கா வந்து ரெண்டு மாதங்கள்தான் இருக்கும். இந்த கம்பெணியில் சேர்ந்த உடனே, இன்னொரு டிவிஷன்ல வேலை பார்க்கும் அவன்  எப்படியோ மோகனைத் தெரிந்துகொண்டு அவனிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். இருவரும் தமிழ்ல பேசிக்கொண்டார்கள். அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, மனைவியும் அவனுடன் அமெரிக்கா வந்து இருக்கிறார்கள். இருவருக்கும் குழந்தைகள் இல்லைனு மோகனுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்குள் என்ன பிரச்சினைனு புரியவில்லை, அவன் மனைவியைப்பற்றி அவன் அதிகம் பேசுவதில்லை. அரேஞ்சிட் மேரேஜ் என்பதுபோல்தான் சொன்னான். அவனைப்பற்றி மோகனுக்கு அவ்வளவுதான் தெரியும்.

மாணிக்கத்துக்கு லாராவை "இந்த அளவுக்குத்" தெரியும்னு இன்று அவள் சொல்லித்தான் மோகனுக்கே தெரியும். எவன் எவளோட ஜொள் விடுறான், யாரை "ஸ்டாக்" பண்ணுறான் னு பார்த்துக்கொண்டு இருக்க எல்லாம் யாருக்கு நேரம் இருக்கு? போனவாரம் மாணிக்கத்துடன் பேசும்போது அவன் மனைவி இந்தியா போயிருக்கதா சொன்னான். பார்க்க, பழக எல்லாம் சாதாரண தமிழ்ப் பையன் மாதிரித்தான் "நல்ல" "அப்பாவிபோல்"தான் தெரிந்தான். லாராவிடம் இதுபோல் "டேட்டிங்" போக கேட்டிருப்பான்னு மோகன் நினைக்கவில்லை.

என்ன வேணும் இவர்களுக்கு? வெள்ளைக்காரியோட டேட்டிங் போயி அவர்களை மணம் முடிக்கணும்னா ஏன் ஊருக்குப்போயி  இப்படி அரேஞ்சிட் மேரேஜ் பண்ணிக்கொண்டு வந்து ஒரு பொண்ணோட நிக்கிறாணுகனு விளங்கவில்லை. சரி யாராவது "சிங்கிள்"யிடம் போய் கேட்டாலாவது பரவாயில்லை. லாராவுக்கு போனவருடம் டைவோர்ஸ் ஆகி, இப்போ ஒரு "ஃபியாண்ஸெ" இருக்கான். இருவரும் இன்னும் ரெண்டு மாதத்தில் திருமணம் செஞ்சுக்கப் போறாங்க. லாரா, நிச்சயம் இதை மானிக்கத்திடம் பலமுறை சொல்லி இருப்பாள். அது தெரிந்தும், மனைவி ஊரில் இல்லாதபோது இவளோட "டின்னர்"க்கு முயற்சி?  "லாரா" ஒரு ஓட்டை வாய். எல்லாவற்றையும் மோகனிடம் சொல்லிவிடுவாள். லாரா, மோகனின் கோ-வொர்க்கர்னு தெரிந்தும், எப்படியோ அவளை மோகனுக்குத் தெரியாமல் அணுகி அவளுடன் பழகி இருக்கிறான், மாணிக்கம்.

ஒரு முடிவுக்கு வந்தான் மோகன். இனிமேல் மாணிக்கத்திடம் எதிரும்புதிருமாகப் பார்த்துவிட்டால், "ஹாய்" சொல்லிவிட்டு ஒதுங்க வேண்டியதுதான். Manickam is certainly too smart to be friends with Mohan. தமிழன், நம்ம ஊர்க்காரன் என்பதால் கண்ட தரங்கெட்டவனையும் கட்டி அழணும்னு எதுவும் இல்லை. தமிழர்களில் எல்லாவகையான தேவடியாமகன்களும்தான் இருக்காணுக! தமிழில் பேசுறான்னு ஒரே காரணத்திற்காக கண்ட தேவடியாமகன்களையும் தொப்புள்கொடி உறவுனு சொல்லிக்கொண்டு திரிய மோகன் ஒண்ணும் ஈழத்தமிழரல்ல! சாதாரண சுயநலமுள்ள தமிழ்நாட்டுத் தமிழன்ந்தான் அவன்.

-தொடரும்.

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கதையும் காராசாரமா இருக்கு,

'பரிவை' சே.குமார் said...

நல்லாப் போகுது...
தொடர்கிறேன்.