Friday, July 8, 2016

பெருமாள் முருகன்! தொடர்ந்து எழுதுங்க!

நீங்க மாதொரு பாகனில் திருச் செங்கோடு பக்கத்தில் தமிழர்கள் குழந்தை பாக்கியம் இல்லைனு தன் அருமை  மனைவியைக் கூ ட் டிக்கொடுத்தார்கள்னு எழுதியது வெறும் ட்ரைலெர்தானே? இன்னும் நெறையா எழுதுங்க! நம்ம ஜானகிராமன் நளபாகத்தில் எழுதினாரு. வளர்ப்பு மகன் துரைக்கு குழந்தை பாக்கியம் இல்லைனு மருமகள் அம்புஜத்தை, மாமியார் ரங்கமணி சமையல்க்காரன் காமேஸ்வரனுக்கு கூ ட் டிக் கொடுக்க முயல்வாள். அம்புஜத்துக்கு குழந்தை காமேஸ்வரன் வரவால்தான் கிடைத்தது என்பதுபோல் சொல்லி அழகாக முடிச்சு இருப்பார். அதே மாதிரித்தானே இதுவும்? என்ன அவரு பார்ப்பனர்கள் இப்படி செய்ததாக புனைந்து எழுதி இருப்பாரு. நீங்க நம்ம திராவிடத் தமிழர்கள் செய்தார்கள்னு எழுதி இருக்கீங்க. பார்ப்பனர்கள், திராவிடர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே? மடத்தமிழர்கள் தானே?

இது மாதிரி நெறைய விசயங்கள் இலைமறை காயாக தமிழ்க் கலாச்சாரத்தில் நடந்துதான் இருக்கும். அதையெல்லாம் தொடர்ந்து சேகரிச்சு இந்த காளி-பொன்னாள் மாதிரி இன்னும் பல கதாபாத்திரங்களை உருவாக்கி பல கதைகள் எழுதி பழந்த்தமிழர்களின் பெருமை எல்லாம் தொடர்ந்து பேசுங்க! என்ன ஊர் உலகத்தில் நடக்காததையா எழுதிட்டீங்க?

தமிழ் செம்மொழி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் தமிழர்கள், அப்படி இப்படினு பெருமை பேசினாலும் தமிழன் எல்லாம் கூட்டிக்கொடுத்த கலாசாரத்தில் இருந்து வந்தாலும் தமிழன் உயர்வானவந்தான். இல்லையா? தமிழ் மொழியைப் பேசினால் போதாதா என்ன? அவன் யாரைக்கூட்டிக் கொடுத்து இருந்தாலும் புனிதமானவாகிவிடுவானே, தமிழன்?

அப்புறம் உங்களுக்கு உண்மைக் கதை எதுவும் வேணும்னா, நானே நெறைய கேள்விப்பட்டு இருக்கேன். எங்க ஊரில் நடந்ததுனுதான் சொல்றாங்க. அதையெல்லாம் கேட்டீங்கனா, காளி-பொன்னாள் வாழ்க்கையெல்லாம் ஜுஜுபினு ஆயிடும்.

 உயர் நீதி  மன்றமும், இலக்கிய போதையில் அலையும்  தமிழ் அறிஞர்களும் உங்களைத் தொடர்ந்து ஆதரிப்பார்கள், ஊக்குவிப்பார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை! தொடருங்கள் உங்கள் தமிழ்க் காம இலக்கிய சேவைகளை.

கண்டார ஓழி, நொப்பன ஓழி, தாயோழி, ஊருப்பயல ஓத்தாள், தேவடியாள், வக்கால ஓழி, னு தமிழில் உள்ள எல்லா கெட்டவார்த்தைகளை உங்க கதைகளில் தவறாமல் தொடர்ந்து எழுதுங்க. அப்போத்தான் தமிழ் இலக்கியச் சுவை கூடும்! வார்த்தைகள் தேர்வு உங்களுடையதாக இருந்தாலும் நீங்க காளி சொல்ற மாதிரி இதுபோல் கெட்டவார்த்தைகளைச் சொன்னால் அது இலக்கியமாயிடும் இல்லையா? திணிச்சுவிடுங்க. தமிழர்கள் எல்லாம் உங்க "கெட்ட வார்த்தைகள்" நெறைந்த இலக்கிய சேவைக்காக ஏங்கிப் போயிருக்காங்க!

இனிமேல் எவனாவது தமிழ் செம்மொழி, தமிழர்கள் கலாச்சாரம் உலகில் சிறந்ததுனு சொல்லட்டும். அவனை சட்னி ஆக்காமல் விடக்கூடாது!

2 comments:

Yarlpavanan said...

அருமையான பதிவு

G.M Balasubramaniam said...

எதையும் ஒரே மாதிரி எழுதினால் வரவேற்பு குறையும் பெருமாள் முருகன் எழுதட்டும் தளைகள் நீங்கினவா பார்க்க வேண்டும்