நல்ல விசயங்கள் எங்கே இருந்தாலும் எடுத்துக்கனும். அதுதான் புத்திசாலித்தனம். சும்மா “ஆண்ட்டி அமெரிக்கன்” கொடி பிடிச்சே ஆகனும்னு அலையக்கூடாது.
அமெரிக்க பொருளாதார பிரச்சினையை சமாளிக்க, பலவிதங்களில் செயல்படுகிறார்கள். அதில் ஒண்ணுதான் ஐ ஆர் எஸ் (இண்டேர்னல் ரெவென்யு சர்விஸ், யு எஸ் எ), யு பி எஸ் (ஸ்விஸ் வங்கி) யை வலியுறுத்துவது.
என்னவென்று?
ஸ்விட்சர்லாந்தில், யு பி எஸ் வங்கியில் அமரிக்க குடிமகன்கள் வைத்துள்ள ரகசிய அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை எல்லாம் அவர்களுக்கு சொல்லனும் என்று ஐ ஆர் எஸ் ஆஃப் அமெரிக்கா கேட்டுள்ளது.
* அமெரிக்க குடிமகன் யாரும் அந்த வங்கியில் ரகசிய அக்கவுண்ட் வைத்திருக்கக்கூடாது.
* அதாவது எந்த அமெரிக்க குடிமகன்(ள்) அக்கவுண்ட் ம் $10,000 க்கு மேலே இருந்தால் அமெரிக்கா அரசாங்கத்திற்கு அந்த ஸ்விஸ் வங்கி சொல்லியே ஆகனும்!
காரணம் என்ன?
அந்தப்பணத்திற்கு வரும் வட்டி வருமானத்திற்கு அமெரிக்க குடிமகன்(ள்) வரி கட்டவேண்டு மென்பதால் ஐ ஆர் எஸ் க்கு அந்த யு பி எஸ் வங்கி இதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்கிறது.
இப்போ அமெரிக்கர்களிடம் உள்ள கறுப்புப்பணம் எல்லாம் வெளியே வந்தே ஆகனும் என்கிற ஒரு சூழ்நிலை!
இதுபோல் இந்தியாவும் செய்யுமா?
செய்யனும்!
<http://www.nytimes.com/2009/01/09/business/09ubs.html?_r=1>
நன்றி திரு.ராஜராஜ்!