Showing posts with label சைபர் க்ரைம். Show all posts
Showing posts with label சைபர் க்ரைம். Show all posts

Friday, October 26, 2012

சைபர் க்ரைம் என்கிற பீதி! வருகிறது பதிவுலகின் இருண்டகாலம்!

சின்மயி ஹராஸ்மெண்ட் கேஸ் போட்டாலும் போட்டார். ஒரு நாளும் இல்லாத திருநாளா காவல்துறை உடனே செயல்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்தது மட்டுமல்லாமல், அதற்குள் ஒருவரை வேலையில் இருந்து தற்காலிகமாக விலக்கியுள்ளார்கள்!!!

 இப்போ கருத்துச் சுதந்திரம்னா என்ன? என்ன எழுதினாலும் சைபர் போலிஸ் நம்மள அரெஸ்ட் செய்வாங்களா? என்கிற பீதி பதிவுலகில் உண்டாகியுள்ளது.

பதிவெழுதும் முன்னால் யோசிச்சு யோசிச்சு, எதுக்கு வம்புனு பலர் ட்ராஃப்ட்லயே விட்டு விட்டதுபோல இருக்கு.

இது பத்தாதுனு, சைபர் க்ரைம் னு யாரைவேணா ஜோடிச்சு உள்ளே பிடிச்சுப் போடலாம் என்பதுபோல் சட்டம் அறிந்த பிரபு ராஜதுரை ஒரு பதிவை எழுதி எல்லாருக்கும் இன்னும் கொஞ்சம் பீதியைக் கிளப்பியுள்ளார்.

சின்மயி கேஸுக்கு பலம் வகிப்பது..

* அவர் ஒரு கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்.

* அவர் தாயாரையும் இகழ்ந்து பேசியுள்ளனர்.

* தொடர் தொந்தரவு என்பது ரொம்ப முக்கியம். ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டு போவது வேறு. தொடர்ந்து "டார்கெட் "செய்வது வேறு

* அவர் ஒரு பிரபலம் என்பதால் " defamation" முயற்சியா? என்றும் ஒரு கேள்வியைத் தொடுக்கிறார்.

* அவர் யாரையும் வரம்புமீறி தனிமனிதரைத் தாக்கவில்லை. ஆனால் அவர் தாக்கப்பட்டு இருக்கிறார். இது ஒருபக்கத்தாக்கு!

* அவர் இட ஒதுக்கீடு மற்றும் மீனவர் பற்றி சொன்ன கருத்துக்கள், பொதுக் கருத்துக்கள். அதையும் வலையுலகில்  திரிக்கப் பட்டதாக ஒரு விளக்கப் பதிவு வேறு போட்டு இருக்கிறார்.

 Facing abuse and a backlash of rumours

 மேலே உள்ள இந்தப் பதிவில் உள்ள ஒரு முக்கியமான  ட்வீட் சம்மந்தமாக காட்டியிருக்கும்  ஸ்க்ரீன் ஷாட் டை கடுமையாக, விமர்சிச்சு  பதிவர் மாமல்லன், ஏதோ ஒரு "manipulation"  நடந்து இருப்பதாகவும் சொல்கிறார்.  அதையும் கட்டாயம் வாசிச்சுடுங்க!

ஒரு ஸ்கிரீன் ஷாட்டும் அதன் நோய்க்கூறுகளும்


 * "அசிங்கப் பட்டாள் சின்மயி" என்கிற ஐ டி யை எப்படி நியாயப் படுத்துவது ??? இந்த ஐ டி தயாரித்தவர் எப்படி சட்டத்தின் முன்னிருந்து தப்பிக்க முடியும்??

சரி, வரம்பு மீறீட்டாங்க! மறுப்பதற்கில்லை!

ஆனால் இதற்கு என்ன தண்டனை?

* இதுபோல் தமிழ் நாட்டு வரலாற்றில் எந்த கேஸும் நடந்ததில்லைனு சொல்லலாம்.

* இணையதள உலகில் கருத்துச் சுதந்திரம் என்பது அதைப்பற்றி பேசும் யாருக்குமே தெளிவாகத் தெரியாத ஒரு நிலையில் என்ன தண்டனை கொடுக்கலாம் இவர்கள் செய்த குற்றத்திற்கு?

* இதுபோல் தவறுகள் செய்து பலர் தண்டனை அனுபவித்து இருந்தால், இதுபோல் இவர்கள் தொடர் தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள் என்பதென்னவோ மறுக்க முடியாது.

* இவர்களை சட்டம் மன்னித்து, கடுமையா எச்சரிக்கை செய்து விட்டுவிட்டால் என்ன?

* ஏற்கனவே எல்லாப் பத்திரிக்கைகளிலும் அவர்கள் படம் வந்து அவர்கள் பட்ட அவமானம் போதாதா? இதைவிட என்ன தண்டனை இவர்களுக்கு வேண்டிக்கெடக்கு?

என்றெல்லாம் பலரும் எண்ணுவதென்னவோ மறுக்க முடியாது.


பதிவுலகிற்கு பெரிய இழப்பு?

* இனிமேல் பெண்கள் எழுதும் பதிவிற்கு மாற்றுக்கருத்து வைக்கவே யாரும் முன்வரமாட்டார்கள். எதுக்கு வம்பு?

* பின்னூட்டங்கள் எழுதவும் பலவிதமாக யோசிப்பார்கள்.

* 8 + 2 = 11 என்றாலும் "ஆமா ஆமா"னுதான் எல்லோரும் போவார்கள்!

* உப்புச் சப்பில்லாத பின்னூட்டங்கள் நிறையவே பார்க்கலாம்.

* இப்படி அநியாயத்துக்கு மரியாதை கொடுப்பதால் பெண்கள் "சம உரிமையை" ஒரு மாதிரியாக "அதிக மரியாதை கொடுக்கப்பட்டு"  இழக்கிறார்கள்னு கூடச் சொல்லலாம்.

* இதுபோக இனிமேல் நியாயமான எதிர்வினைப் பதிவுகள், பிரபலங்களை விமர்சிக்கும் பதிவுகள், விவாதப் பதிவுகள் எல்லாம் குறைய வாய்ப்பதிகம்.

* இங்கே யாரும் சம்பாரிக்க வரவில்லை. சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கத்தான் பதிவுலகுக்கு வருகிறார்கள். அதற்குக் கிடைக்கும் சம்பளம் உங்கள் வேலை இழப்பு என்று வருமானால், யாரு பதிவெழுதுவா?

* பதிவுலகம் ஒரு உப்பு சப்பில்லாத இடமாவதால், கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்கள் வேறு வேலையைப் பார்க்க கிளம்பலாம். பதிவுலகத்தின் இருண்ட காலம் ஆரம்பிக்கலாம்!

எனிவே, இப்போது cyber crime சம்மந்தமாக நடப்பதெல்லாம் வருங்கால பதிவுலகுக்கு நல்லதுக்கா கெட்டதுக்கானு தெரியவில்லை! 

பொறுத்திருந்துதான் பார்க்கனும்.

Friday, October 19, 2012

பாடகி சின்மயிக்கு ஒரு சபாஷ்!

 நமக்கு இந்த ப்ளாக்ரை கட்டி அழவே நேரத்தைக்காணோம். அதனால இந்த முகநூல், ட்விட்டரு பக்கமெல்லாம் போறதே இல்லை. அந்த உலகம் என்னனே தெரியாது. பாடகி சின்மயி தன் பிரச்சினைகளோட காவல்துறைக்கு போனதும்தான் என்னனு தெரியுது.

கீழே உள்ள தகவல் ஒரு இணைய தளத்திலிருந்து அள்ளிட்டு வந்தது.

குழலி பக்கங்கள் பதிவிலிருந்துதான் என்ன நடந்ததுனு பார்க்க "அங்கே" சென்றேன்! குழலி பக்கங்களில் கொடுத்த ஒரிஜினல் இணைப்பு இங்கே!
 
சவுண்ட் கேமரா ஆகஷன்?

இது சம்மந்தமாக என்னுடைய கருத்தை தெளிவாகச் சொல்லத்தான் இந்தப் பதிவு! :)

மற்றொரு புகார் மனுவில்,"ட்விட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி,"சமீப காலமாக ட்விட்டர் இணையதளத்தில் அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும் மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.

இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.
குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும் என்னை பற்றி நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம் மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் யார் என்ற விவரங்களையும், 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன். எனவே இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்”என்றார்.
என்னைப் பொறுத்தவரையில் இணையதள கருத்துச் சுதந்திரம் என்பது என்ன? அது தனிமனிதருக்கு எந்த அளவுக்கு உண்டு என்பது யாருக்குமே சரியாத் தெரியாது.

சட்டப் பாதுகாவலர்கள் மற்றும் "சைபர் க்ரைம்" போன்ற சட்டங்கள் என்னவென்று யாருக்குமே தெளிவாகத் தெரியாது.

ஆனால் இந்த மாதிரி கோஷ்டி சேர்ந்துகொண்டு ஒருவரை தொடர்ந்து போய் "சித்ரவதை" செய்வதை, அட் லீஸ்ட் தாழ்மையுடன் சின்மயி வேண்டி கேட்டுக் கொள்ளும்போது நிறுத்தி இருக்கனும்.

ஒருவர் தன்னால "தாங்கமுடியலை இந்த டார்ச்சர்" னு சொல்லும்போதும் தொடர்ந்து போயி சித்ரவதை பண்ணுவது மிருகத்தனம்!

இந்த கேஸ் எப்படிபோகுதோ? எப்படி முடியப்போதோ? என்னனு  தெரியலை.

ஆனால், இதுபோல் "கம்ப்ளைன்ட்" பண்ணுவதால்  அந்த வில்லன்கள் ஆறு பேரும் இனிமேலாவது மூடிக்கிட்டு இருப்பானுகனு நம்புறேன். 
இதுபோல் கேஸ்கள் பதிவு செய்தால்தான் கொஞ்சமாவது நம்மாளுக ஒழுங்கா நடப்பானுக.

ஒருவர் அனானிமஸாக இருந்தாலும், ஐ பி அட்ரெஸை வைத்து அவர்களை பிடிப்பது மிகவும் எளிது என்பது நெறையப்பேருக்கு தெரியுமா என்னனு தெரியலை.

 இணைய தளத்தில் இன்னொரு பிரச்சினை என்ன என்றால், இதுபோல் ஹராஸ் பண்ணுபவர்கள் வயதில் இளையவர்களாவும், மைனராகவும் கூட இருக்கலாம்.

எனிவே, அம்மா ஆட்சி நடக்குது. அம்மா, அந்த ஆறு பேரையும் பிடிச்சு உள்ளே போட்டு கொஞ்சம் "பேர்" சம்பாரிக்கலாம்!

இதுபோல் அந்த ஆறு மூதேவிகளையும், அதுக செய்த அநியாயத்தையும்  போலிஸிடம் போயி,  சட்டப்படி இதை அணுகும் சின்மயி க்கு ஒரு "ஓ" போடுங்கப்பா!