தந்தை பெரியார் சொன்னது இது. உன் தாய் தந்தையர் உன்னைவிட படிப்பிலும், அனுபவத்திலும், உலக அறிவிலும் குறைவான அறிவு, அனுபவம் பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் சொல்லுவதை நீ கேட்க வேண்டாம். பகுத்தறிந்து நீயே ஒரு சரியான தீர்வை கண்டுபிடி!
அமெரிக்கா வந்து அடிமையாக வாழ்வது ஒண்ணும் பெருமைக்குரிய விசயம் அல்ல! வடிகட்டிய சுயநலம் என்றுகூட அடித்துச் சொல்லுவேன். அதில் சம்பாரிக்கும் டாலர்கள் பெரிதல்ல! நம் வாழ்க்கையை நம் வருமானத் திற்கேற்ப திருத்தி அமைத்துக் கொள்கிறோம். டாலரில் சம்பாரித்து டாலரில் செலவழிப்பதால் அம்மாவிடம் என் சம்பளத்தைக் கூட சொல்வதில்லை. ஏன் என்றால், நான் எவ்வளவு செவழிக்கிறேன் என்று சொன்னால் அம்மாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, வருத்தப் படுவாங்க- மகன் ஊதாரி ஆகிவிட்டான் என்று.
பணம், டாலர் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
பிறந்த ஊரிலேயே வாழ்ந்து சாவதுக்கும், பிறந்த கலாச்சாரத்தை விட்டு வந்து மற்றொரு நாட்டில் குடியேறி அவர்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து அதிசயப்பட்டு,பிறகு புரிந்துகொண்டு, அதில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்து வாழ்ந்து நீ சாவதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. முந்தையர்கள் வாழ்க்கையை உயர் தரம் என்பது போலும், பிந்தையர்கள் எல்லாம் ஏதோ மட்டமான ஜென்மங்கள் போலவும் பார்ப்பது அறிவீனம். இப்போதாவது புரிந்து கொள்! கொள்வாயா?
டீன் ஏஜில் சரி என்று தோன்றுவது 10 வருடங்கள் சென்றவுடன் நகைக்கத்தக்கதாகத் தெரியும். அதேபோல் வாழ்க்கை அனுபவம் அதிகமாக ஆக ஆக பழைய வாழக்கை கேலிக்குரியதாகவும் தோணும். உன்னைப் பார்த்து நீயே சிரிப்பதுதான் வாழ்க்கை. உலகைப் புரிந்துகொண்டவர்களுக்கு.
அதேபோல்தான் ஒரு கலாச்சாரத்தில் பிறந்து இன்னொரு கலாச்சாரத்தை அறிந்து அலசி ஆராய்ந்து புரிந்துகொண்ட பிறகு பிறந்த கலாச்சாரப் பெருமை பேசுவது குறையும். ஏன் என்றால் நீ வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் மாறுகிறது. உன் அனுபவத்தால் உன் அறிவு விசாலமடைகிறது. நீ கலச்சார பெருமையை ஓரமாக வைத்துவிட்டு உண்மையை உணறுகிறாய். உன்னை சரிப்படுத்திக் கொள்கிறாய். உன்னை மட்டும்தான். உன் அனுபவம் இல்லாத உலகைத் திருத்த முயலாதே! பழம் பெருமை பேசுவதையும், தன் அம்மாதான், தன் தமிழ் மொழிதான், தான் பிறந்த கலாச்சாரம்தான் உலகில் உயர்ந்தது என்று தற்குறிபோல் பேசுவதை நிறுத்துகிறாய். ஆமாம் நீ மாறுகிறாய். உன் அனுபவம் உன்னை மாற்றுகிறது.
அப்பா திரைப்படம் பற்றி எல்லாரும் சிலாஹிக்கிறாங்க. கட்டாயம் பார்க்கணும் என்கிறார்கள்.
நிற்க. ஒவ்வொரு அப்பாவும் ஒவ்வொரு வகை. உன் அப்பா, என் அப்பா, சினிமாவில்பார்க்கும், செயற்கையாக உருவாக்கப்பட்ட அப்பா (சமுத்திரக் கனி அப்பா). அவரவருக்கு அவர் அவர் அப்பா உயர்வு.
ஒரு சிலருக்கு அவர்கள் அப்பாவையே பிடிக்காது, சம்பாரிக்காத அப்பா, குடிகார அப்பா,பொறுக்கி அப்பானு பல அப்பாக்களும் உண்டு.
படத்தில் காட்டப்படும் அப்பாவைவிட உன் அப்பா சிறந்தவராக இருந்தால்? படத்தை ஆஹா ஓஹோனு சிலாகிக்க மாட்டியா? இல்லைனா ஊர் உலகுக்குக்காக நடிப்பியா? அனேகமாக நடிப்பாய். இல்லைனா உன்னை விதண்டாவாதம் பேசுபவன் என்று கூறுமே இவ்வுலகம். நீதான் கோழையாச்சே? ஆமா எதற்கு வம்பு. பூமியைத், தட்டை என்று நம்பிய காலத்தில் உருண்டை என்று நீ உணர்ந்தால் வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் இல்லையா? நிம்மதியாக வாழ ஆசைப்பட்டால். உலகம் உன்னை "சரியாக"ப் புரிந்து கொள்ள அதுதானே தீர்வு?
அமெரிக்கக் கலாச்சாரத்தில் முக்கியமாக ஏழைகள் கலாச்சாரத்தில் அப்பா என்பவன் முக்கியமானவன் இல்லை. 90% குழந்தைகள் அம்மாவுடந்தான் வாழ்கின்றன.அம்மாதான் அவர்களை வளர்க்கிறாள், அடிக்கிறாள், அவனுக்காக அழுகிறாள். அப்பா என்பவன் ஒரு பொறுப்பில்லாத வனாகத்தான் இருக்கிறான் இவர்கள் வாழ்க்கை முறையில். அப்பா திரைப்படம் எல்லாம் உண்மைக்கு புறம்பான ஒன்று அவர்களைப் பொருத்தவரையில்.
ஆடு மாடு கோழியை எல்லாம் கொன்று தின்கிறோம் நாம். வாழத்துடிக்கும் புற்களைக்க்கூட களை என்று வெட்டி எறிகிறோம். நம் வசதிக்காக! ஆமா அதுவும் ஓர் உயிர்தானே? களை என்கிற தாவரமும், ஃபோட்டோ சின்ந்தசிஸ் செய்து உலகைத் தூய்மைப்படுத்தினாலும், அதை வெட்டி எறிகிறாய்தானே? அவைகளும் வாழ ஆசைப்படத்தானே செய்யும்? உனக்கென்று ஒரு நியாயம். நீயே ஒரு கடவுளை உருவாக்கி உன்னை நீயே ஏமாற்றி வாழ்கிறாய். விலங்குகள், தாவரங்கள் எல்லாம் உனக்காகத்தான் வாழ்கின்றன என்று நீயே பித்துப் பிடித்து உளறுகிறாய்? இல்லையா?
"அப்பா" வை ஒரு தேவையில்லாத, எனக்கு உபயோகப்படாத ஒரு ஃபிக்ஷன். இதில் கற்றுக்கொள்ளவோ, அல்லது இதனால் என் வாழக்கைக்கு எந்த பிரையோசனமோ இல்லை என்று ஒருவர் சொன்னால்.. உடனே அவனைப் பிதற்றுகிறான் என்று வழக்கம்போல் முத்திரை குத்துவதைவிட்டு விட்டு புரிந்து கொள்ள முயலு. உனக்கு எல்லாம் தெரியாது! நீ கற்றது கைமண் அளவேனு இப்போது நீயே உன்னிடம் சொல்லிக்கொள்ள வேண்டிய தருணம் இது. அந்தப் பழமொழியைச் சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் நேரமல்ல இது.
Friday, July 29, 2016
Wednesday, July 27, 2016
வைரமுத்துவிடம் தமிழ் தடுமாறுகிறது! கபாலியின் தாக்கம்?
கபாலி சம்மந்தமான அரசியல் என்னவென்று புரியவில்லை. தாணு, கபாலியை செயா சே ன லுக்கு விற்றதுடன் ஜாஸ் சி னி மா வுக்கு தமிழ்நாட்டு ரைட்ஸையும் கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.
இதற்கு காரணம், அப்போத்தான் சிங்காரவேலன்கள் அக்கப்போர் இல்லாமல் படம் விதிப்படிப் போகும் என்பது.
ஆக படத்துக்கு எதிர் விமர்சனம் என்பது வடிகட்டப் படும் மறைமுகமாக "அரசாங்க" உதவியுடன்.
இந்த ஒரு சூழலில், படத்தைப் பற்றி எதுவும் புரளி கிளப்பப்படாமல் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
* அரிமா சங்கத்தில் பேசிய வைரமுத்து..
கபாலி கோட் பத்தி பேசுகிறார், கபாலி தோல்வி என்கிறார்..
யு ட்யூப் வீடியோவில் அவரே தான் பேசியதைப் பார்த்தால்.. "என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு?" னு அவரே அவரைப் பார்த்து வியக்கும் அளவுக்கு தேவையே இல்லாத உளறல்.
* பாதிக்கப்பட்ட தாணு வைரமுத்துவை சாடுகிறார்
* தாணு ஜாஸ் சினிமாவுக்கு ரைட்ஸ் வித்துள்ளார். செயா வுக்கு சாட்டலைட் ரைட்ஸ். அது மட்டுமல்லாமல், கபாலி டிக்கட்ஸ் நெறையவே வைரமுத்துக்கு கொடுத்துள்ளார்.
தான் வைரமுத்துக்கு டிக்கட் ஃப்ரியா கொடுத்ததையெல்லா போட்டு உடைத்துத் தள்ளுகிறார், அவருக்கு பாடல்கள் எழுத வாய்ப்புக் கொடுக்கவில்லைனு கோபம் என்கிறார்.

* வைரமுத்து தான் பேசியதை, தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டதாக விளக்கம் கொடுக்கிறார்..

"அதாவது தான் "வெற்றி தோல்வி"னு சொல்ல வந்தேன். "வெற்றி" எப்படியோ விடுபட்டுவிட்டது. " என்பது இவர் கொடுக்கும் விளக்கம்!
------------------------------------------
ஆக, கவிப்பேரசர் வைரமுத்துவிடம் தமிழ் தடுமாறுகிறது என்பதென்னவோ உண்மமைதான்! என்ன கொடுமை இது! :(
இதற்கு காரணம், அப்போத்தான் சிங்காரவேலன்கள் அக்கப்போர் இல்லாமல் படம் விதிப்படிப் போகும் என்பது.
ஆக படத்துக்கு எதிர் விமர்சனம் என்பது வடிகட்டப் படும் மறைமுகமாக "அரசாங்க" உதவியுடன்.
இந்த ஒரு சூழலில், படத்தைப் பற்றி எதுவும் புரளி கிளப்பப்படாமல் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
* அரிமா சங்கத்தில் பேசிய வைரமுத்து..
கபாலி கோட் பத்தி பேசுகிறார், கபாலி தோல்வி என்கிறார்..
யு ட்யூப் வீடியோவில் அவரே தான் பேசியதைப் பார்த்தால்.. "என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு?" னு அவரே அவரைப் பார்த்து வியக்கும் அளவுக்கு தேவையே இல்லாத உளறல்.
* பாதிக்கப்பட்ட தாணு வைரமுத்துவை சாடுகிறார்
* தாணு ஜாஸ் சினிமாவுக்கு ரைட்ஸ் வித்துள்ளார். செயா வுக்கு சாட்டலைட் ரைட்ஸ். அது மட்டுமல்லாமல், கபாலி டிக்கட்ஸ் நெறையவே வைரமுத்துக்கு கொடுத்துள்ளார்.
தான் வைரமுத்துக்கு டிக்கட் ஃப்ரியா கொடுத்ததையெல்லா போட்டு உடைத்துத் தள்ளுகிறார், அவருக்கு பாடல்கள் எழுத வாய்ப்புக் கொடுக்கவில்லைனு கோபம் என்கிறார்.

* வைரமுத்து தான் பேசியதை, தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டதாக விளக்கம் கொடுக்கிறார்..
"அதாவது தான் "வெற்றி தோல்வி"னு சொல்ல வந்தேன். "வெற்றி" எப்படியோ விடுபட்டுவிட்டது. " என்பது இவர் கொடுக்கும் விளக்கம்!
------------------------------------------
ஆக, கவிப்பேரசர் வைரமுத்துவிடம் தமிழ் தடுமாறுகிறது என்பதென்னவோ உண்மமைதான்! என்ன கொடுமை இது! :(
Monday, July 25, 2016
ரஞ்சித்தின் கபாலி மாபெரும் வெற்றி!
ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்கள்போல் இப்படத்தில் தரமில்லைனு பலர் சொல்றாங்க. அது உண்மையாகவே இருந்துட்டுப் போகட்டும்.
விமர்சகர்கள் எல்லாம் படம் ரொம்ப ரொம்ப சுமாருனு சொல்லி விமர்சிக்க முடியுமோ அவ்வளவும் செய்தார்கள்.
படம் தோல்வியடையணும்னு பகவானிடம் வேண்டிய பக்தர்கள் பல.
பதிவுலகில் பலவாறு உளறிக்கொண்டு திரியும் மேதாவிகளும் பலர்!
படம் தோல்வியடையணும் என்பதற்காகவே படம் பார்த்து வந்து மெனக்கட்டு பதிவு போட்டவர்கள் விமர்சனம் எழுதியவர்கள் பலர்.

இப்படி ஒரு சூழலில் ரஞ்சித்-ரஜனி-ராதிகா ஆப்தே-சந்தோஷ் நாராயணன் காம்போவில் வந்த கபாலிப் படம் வசூலில் வரலாறு படைத்துள்ளது .
சும்மா விடாதீங்கப்பு! அப்படி என்ன பெருசா வசூலில் வரலாறு படைத்தது?னு நீங்க கேக்கணும்! அதானே முறை?
சும்மா, சண்டியர் கரன், பழுவேட்ரையர்னு சில ஈனஜென்மங்கள் போல ஒரு ட்விட்டர் ஹாண்டில் வச்சுட்டு புளுகிற ஆள் இல்லை நான்.
கபாலிடா.. ஐ மீன் வருண்டா!
ஷங்கரின் எந்திரன் சாதித்ததைவிட பல படிகள் மேலே!
----------------------------
* வடஅமெரிக்காவில் 4 மில்லியனைத் தாண்டியது கலக்சன்
July 22-24, 2016
Weekend
அமெரிக்காவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும் 4 நாட்களில் 4 மில்லியன் கலக்ஷன் செய்ததில்லை!
---------------------------------------
* கேரளாவில் என்னனு பார்ப்போமா?
KeralaBoxoffice @KeralaBO1
2h2 hours ago
#Kabali 3 Days Kerala BO : Gross: 10.41 Cr Nett: 8.38 Cr Share: 5.01Cr !
கேரளாவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 10.4 கோடி கலக்ஷன் செய்ததில்லை!
------------------------------------
* ஆந்திராவில் என்ன ஆச்சு?
ஆந்திரா/தெலுங்கானா AP/TG - 27 கோடிகள்.
ஆந்திராவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 27 கோடிகள் கலக்ஷன் செய்ததில்லை
------------------------------
* வட இந்தியாவில் என்ன ஆச்சு? ப்ளாப்பா?
taran adarsh @taran_adarsh
13h13 hours ago
#Kabali Fri 5.20 cr, Sat 6.20 cr, Sun 7.75 cr. Total: ₹ 19.15 cr nett

விமர்சகர்கள் எல்லாம் படம் ரொம்ப ரொம்ப சுமாருனு சொல்லி விமர்சிக்க முடியுமோ அவ்வளவும் செய்தார்கள்.
படம் தோல்வியடையணும்னு பகவானிடம் வேண்டிய பக்தர்கள் பல.
பதிவுலகில் பலவாறு உளறிக்கொண்டு திரியும் மேதாவிகளும் பலர்!
படம் தோல்வியடையணும் என்பதற்காகவே படம் பார்த்து வந்து மெனக்கட்டு பதிவு போட்டவர்கள் விமர்சனம் எழுதியவர்கள் பலர்.
இப்படி ஒரு சூழலில் ரஞ்சித்-ரஜனி-ராதிகா ஆப்தே-சந்தோஷ் நாராயணன் காம்போவில் வந்த கபாலிப் படம் வசூலில் வரலாறு படைத்துள்ளது .
சும்மா விடாதீங்கப்பு! அப்படி என்ன பெருசா வசூலில் வரலாறு படைத்தது?னு நீங்க கேக்கணும்! அதானே முறை?
சும்மா, சண்டியர் கரன், பழுவேட்ரையர்னு சில ஈனஜென்மங்கள் போல ஒரு ட்விட்டர் ஹாண்டில் வச்சுட்டு புளுகிற ஆள் இல்லை நான்.
கபாலிடா.. ஐ மீன் வருண்டா!
ஷங்கரின் எந்திரன் சாதித்ததைவிட பல படிகள் மேலே!
----------------------------
* வடஅமெரிக்காவில் 4 மில்லியனைத் தாண்டியது கலக்சன்
July 22-24, 2016
Weekend
| N | Kabali | CineGalaxy | $2,157,621 | - | 236 | - | $9,142 | $4,083,000 | - | 1 | |
---------------------------------------
* கேரளாவில் என்னனு பார்ப்போமா?
KeralaBoxoffice
Biggest ever opening ! #NeruppuDa
கேரளாவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 10.4 கோடி கலக்ஷன் செய்ததில்லை!
* ஆந்திராவில் என்ன ஆச்சு?
ஆந்திரா/தெலுங்கானா AP/TG - 27 கோடிகள்.
ஆந்திராவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 27 கோடிகள் கலக்ஷன் செய்ததில்லை
------------------------------
* வட இந்தியாவில் என்ன ஆச்சு? ப்ளாப்பா?
taran adarsh
[Hindi+Tamil+Telugu]. GOOD! Note: 1000 screens in NORTH INDIA markets.
வட இந்தியாவிலும் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 19,15 கோடிகள் கலக்ஷன் செய்ததில்லை.
-----------------------------------
* கர்நாடகாவில் என்ன நிலைமை?
கநாடகாவிலும் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 20 கோடிகள் கலக்ஷன் செய்ததில்லை.
----------------------------------------------------------
தமிழ்நாட்டை நான் ஏன் தவிர்த்தேன் என்றால்..தமிழன் மட்டும்தான் சினிமாப் பார்த்துக் கெட்டுப்போறான் என்று பெரியமனிதர்கள் சொல்வதை நீங்களும் கேட்டு இருக்கலாம்.
----------------------
இது மட்டுமன்றி,
ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,பிரான்ஸ் போன்ற நாடுகளிலும், தமிழர்கள் அதிகமாக வாழும் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, போன்ற நாடுகளிலும் வசூலில் வரலாறு படைக்கிறான் கபாலி!
----------------------
இது மட்டுமன்றி,
ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,பிரான்ஸ் போன்ற நாடுகளிலும், தமிழர்கள் அதிகமாக வாழும் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, போன்ற நாடுகளிலும் வசூலில் வரலாறு படைக்கிறான் கபாலி!

Subscribe to:
Posts (Atom)