Tuesday, April 19, 2011

குரங்காட்டி சசிகலாவால் அதிமுக தோல்வி- சு சுவாமி!

நம்ம சுப்பிரமணிய சுவாமி ஹார்வேட்ல போயி படிச்சுட்டு வந்து இந்தியாவில் அரசியல்வாதியா ஓட்டுவது நாமெல்லாம் செய்த புண்ணியம்தான் போங்கோ! எந்த ஊழலா இருக்கட்டும் அதை தோண்டி எடுத்த பெருமை இவரைத்தான் சாரும். என்னடா இந்த ஒரு மாதம் தேர்தல் ரிசல்ட் இல்லாமல் போர் அடிக்கும் என்று நாம் நெனச்சுக்கொண்டிருந்தோம், ஆனா அண்ணா ஆரம்பிச்சுட்டார்!

* அதிமுக எம் எல் எ சீட்க்கு ஒவ்வொண்ணுக்கும் கோடிக்கணக்கில் வசூல் செய்து சீட் கொடுத்ததாக சொல்கிறார். ஆமா ஆத்தாதான் லஞ்சம் ஊழல்னா என்னனு தெரியதவரே.. இதெல்லாம் எப்படி? அதனால் சசிகலாதான் குரங்காட்டி வேலை செய்து வசூல் செய்ததாக சொல்கிறார்!

இதெல்லாம் உண்மையா? அதிமுக இப்படியெல்லாம் செய்யுமா? ஜெயா மற்றும் சசிகலா எல்லாரும் கைசுத்தம் உள்ளவங்களாச்சே? திமுக மட்டுட்ம்தானே ஊழல் கட்சி???

ஆனால் ஆமாம் உண்மைதான் என்கிறார் நண்பர் ஒருவர்! கடந்த சட்டமன்றதேர்தலில் ஒரு கனிசமான தொகை எல்லா எம் எல் எ சீட் வாங்கியவர்களிடமும் வசூலிக்கப்பட்டதாக ஒருவர் சொல்லி நான் கேள்விப்பட்டேன். இந்த முறை எல்லாரும் திருந்திட்டதாக நான் நெனச்சேன். ஆனா யாரோ சீட் கெடைக்காத திராவிடக்கண்மணி போய் சு சாமிட்ட ஒப்பாரி வச்சிருக்கான் போல!

ஆமா இப்படி கோடிக்கணக்காக கொடுத்த காசை எப்படி வசூல் பண்ணுவது? எம் எல் எ வுக்குத்தான் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறாங்க இல்லையா?
தோத்துப் போயிட்டா? கஷ்டம்தான்!

சு சுவாமி என்ன நெனைக்கிறார்னா, இப்படி "குரங்காட்டி வேலை" சசிகலா செய்ததால் அதிமுக தோல்வியடையும்னு நம்புறார்!

* அப்புறம் சு சுவாமி நம்ம கேப்பிட்டனை பத்தி...

குடிகாரன் விஜய்காந்துமேலே நம்பிக்கை வைத்து மக்கள் ஓட்டுப்போடவில்லைனு சொல்றார் சு சுவாமி!


அம்மாடி!!! இவரென்னவோ அதுக்குள்ள அதிமுக கூட்டணி தோத்துட்டதுபோல சொல்றாரு!

கழக கண்மணிகளே எதையும் நம்பாதீங்கப்பூ!


2 comments:

படித்துறை பாண்டி said...

முதல் ஓட்டு இந்த படித்துறை பாண்டியோடது

வருண் said...

வாங்க படித்துறைப் பாண்டி! நன்றிங்க :)