ஆனால் இந்த கடவுள் புகழ்பாடும் ஆத்திகர்கள் எதையும் விடுவதில்லை! ரொம்பவே, அறிவியல், பகுத்தறிவு வாதம் செய்வதில் எல்லாம் தீவீரமாக இறங்கிட்டாங்க!
இவர்களுக்கு ஏதுப்பா இம்பூட்டு தில்லு!
மெஜாரிட்டி உலகம் இது! இது முட்டாள்கள் மெஜாரிட்டியாக இருக்கும் ஒரு "முட்டாள்களின் உலகம்" ! இதிலே எவனுக்கும் சந்தேகம் இருக்கா?
ஆத்திகர்களா? பகுத்தறிவுவாதாமா? என்னப்பா சொல்றீங்க?!
ஆமாண்ணே!
* டார்வினுடைய பரிணாமத்தை கவனமாக "அனலைஸ்" செய்து அதை இஷ்டத்துக்கு அதில் உள்ள குறைகளை இன்று விமர்சிக்கிறவர்கள், ஆத்திகர்கள்தான்! சரி, இவர்கள் சொல்வது போலவே பரிணாமத்திற்கு போதுமான "எவிடெண்ஸ்" (தடயங்கள்) இல்லை! Carbon dating of fossils are not quite correct! னு வச்சுக்குவோம்! இவர்கள் வாதப்படி டார்வினுடைய பரிணாமம் தப்புனே சொல்லிட்டுப்வோம்! இருந்துட்டுப் போகட்டும்! இப்போ என்ன குடிமுழுகிப் போச்சு?
எனக்கு என்ன புரியலைனா, நீங்க கடவுள் மண்ணாங்கட்டினு ஒரு 1008 கடவுளை சொல்லிக்கிட்டு கும்பிட்டுக்கிட்டு அலையிறீங்களே! அவர் இருப்பதற்கு ஏதாவது "எவிடெண்ஸ்" கொடுங்களேன்?!னு கேட்டு வைப்போமே? இப்போ, பரிணாமம் பற்றி பகுத்தறிவுவாதம் பேசிய அதே வாய் எதையாவது ஒளற ஆரம்பிச்சுடும்! பரிணாமம் பேசும்போது இவர்கள் மூளை ஒரு மாதிரி வேலை செய்யும்! இப்போ இன்னொரு மாதிரி வேலை செய்யும்! இல்லாத கடவுளை இஷ்டத்துக்கு உருவம் கொடுத்து கற்பனையில் உருவாக்கி வணங்குவார்கள்!
யார் இவர்கள்? கொஞ்ச நேரம் முன்னால பகுத்தறிவு பேசி, டார்வின் பரிணாமம் தப்புனு சொன்னவர்கள்தான்!
* மறைந்த ஒருவருக்கு சிலை வைத்தல். உயிரில்லாத சிலைக்கு மரியாதை கொடுத்தல் போன்றவை அபத்தம் என்பது ஒரு வாதம். என்னை பொறுத்தவரையில் அபத்தம் என்பது எவன் செஞ்சாலும் அது தப்புத்தான். சரி, தி க காரன் எல்லாம் முட்டாப் பயளுக, மாலை மரியாதை எல்லாம் பொணமாப் போனவனுக்கு எதுக்கு?! அவர்கள் வணங்குற சிலைய எல்லாம் எடுத்துடலாம். சரியா?
அப்புறம், அதேபோல் கோயில்ல உள்ள கடவுள்னு சொல்லிக்கிட்டு வச்சிருக்க கற்சிலையை (கிருஷ்ணா பரமாத்மாவையும் சேர்த்துத்தான்) எல்லாம் தூக்கி குப்பையில் போடத்தயாரா? சரி சாமி சிலையாவது பரவாயில்லை!
கீழே உள்ள சிலை ஒரு கோவிலில் உள்ளதாம்!!!
நான் தெரியாமல்த்தான் கேக்குறேன். ஆமா, கோயிலுக்கு சாமி கும்பிடத்தானப்பா போறீங்க? கோயிலுக்குப்போயி செக்ஸ் கல்வி கற்கவா போறீங்க? கோயில் என்ன அடல்ட்ஸ் ஒன்லியா என்ன? வயதுக்கு வராத விடலப்பசங்க, பருவப்பொண்ணுங்களை எல்லாம் அழச்சுண்டுத்தான கோயிலுக்கு போவீங்க? எதுக்கு இதுபோல் போர்னோக்ராஃபி அங்கே வச்சு இருக்கீங்க? நம்ம பத்தினி பெண்கள் எல்லாம் இதை பார்த்து கெட்டுப் போயிற மாட்டாளா?
டார்வினையும், பெரியாரையும் விமர்சிக்கும் நீங்கள் கோயில்களில் உள்ள இது போல போர்னோக்ராஃபிக் சிலையை எல்லாம் இடித்து தகர்த்தால் என்ன? எனக்குத் தெரிய தி க காரான் போர்னோக்ராஃபியை உலகறிய சிலை வடிச்சு சொல்லிக் கொடுக்கலை! ஆனால் இந்த ஆத்திக அயோக்கியர்கள் பித்துப்பிடிச்சு அலையிதுக!
உடனே மறுபடியும் எதையாவது ஒளறுவார்கள்.
ஆத்திகர்கள் பகுத்தறிவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே சமயத்தில் இவர்கள் செய்கிற அடிமுட்டாள்தனத்தை எல்லாம் பகுத்தறியாமல், தி க காரனை மட்டும் கேள்வி கேட்பதுதான் அபத்தம்! தி க காரனையாவது திருந்த்துவோம், ஆத்திகர்கள் எல்லாம் அடிமுட்டாள்கணு இவர்களே இவர்களை தலைமுழுகிட்டாங்களா?
நம்ம ஜெயவேல்தான் பகவானிடம் கேட்டு வந்து விளக்கணும்! :)))