Showing posts with label ஆத்தீகர். Show all posts
Showing posts with label ஆத்தீகர். Show all posts

Friday, January 23, 2009

கண்ணதாசனுக்கு “கடவுள்" செய்த உதவி!

கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகள் ஒரு தனி ரகம்தான். காதலாக இருக்கட்டும் தத்துவமாக இருக்கட்டும், அவருக்கு இணை அவர்தான். தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு பல குறைகள் உண்டு. ஒரு பெரிய குடிகாரர், அவருக்கு பல மனைவிகள்.

கண்ணதாசன், நாத்தீகராக இருந்து ஆத்திகப்பாதையில் வந்தவர். நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பில் பிறந்த இவர் அர்த்தமுள்ள இந்துமதம் என்கிற புத்தகமும் எழுதியுள்ளார்.

ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை அவசியமா? கடவுள் நம்பிக்கை செய்யும் தொழிலுக்கு உதவுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். தன்னம்பிக்கை, நேர்மை, உழைப்பு இருந்தால் போதும் என்றுதான் சொல்லுவேன். கடவுள்நம்பிக்கை கோயில் பூசாரிக்கு உதவும். ஏன்னா கடவுள் இல்லைனு ஆயிடுத்துனா அவருக்கு அந்த தொழில் செய்யமுடியாது. ஆனால், கண்ணதாசனுக்கு அவருடைய கடவுள்நம்பிக்கை நிச்சயம் பலவகையில் உதவியது என்றுதான் சொல்வேன். அவர் எழுதிய கவிதைகளில் உணர்ச்சிப்பூர்வமான வரிகள் அனைத்திலும் கடவுளை சாடுவார், புகழ்வார், குற்றம் சொவார் கவியரசர் கண்ணதாசன். ஒருவேளை அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அந்த வரிகளை அவரால் உருவாக்கி இருக்க முடியாது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்.

கடவுள் பற்றி அவர் எழுதிய கவிதைகளில் உள்ள சில வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது!

ஃ பெண்ணைப்படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!

ஃ கடவுளை தண்டிக்க என்ன வழி?

ஃ ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ?

ஃ அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே! அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே.

ஃ ஆண்டவன் படச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்.

ஃ படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே!

ஃ உன்னைச் சொல்லி குற்றமில்லை! என்னைச்சொல்லிகுற்றமில்லை! காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி!

ஃ இரண்டு மனம் வேண்டும்! இறைவனிடம் கேட்டேன்!


ஒரு நாத்தீகரால் இதுபோல் வரிகள் எழுதமுடியாது. அதனால், கடவுள் இருக்காரோ இல்லையோ, கண்ணதாசனுடைய கடவுள் நம்பிக்கை இங்கு அவர் “தொழிலுக்கு” உதவி உள்ளது என்கிறேன்.

டி வி ஆர் அவர்களின் இந்தப்பதிவையும் பார்க்கவும்:
http://tvrk.blogspot.com/2009/01/blog-post_24.html