Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

Wednesday, April 2, 2014

ஆன்மீகம் பேசுவதும் ஃபேஷன் தான்!

கண்ணதாசன் குடிகாரரா? இல்லை நல்ல ஆன்மீகவாதியா? இன்னைக்கு திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டுவதைவிட, கண்ணதாசன் கவிதைகளை மேற்கோள் காட்டுபவர்கள்தான் அதிகம்னு சொல்லலாம். ஆத்திகன், நாத்திகன், பகுத்தறிவுவாதினு தன்னை சொல்லிக்கொள்பவன், தான் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டதாகவும் தன்னை நல்ல ஆன்மிகவாதினு தானே நினைத்துக் கொள்பவன் எல்லாருமே குடிகாரர் மற்றும் ஆன்மிகவாதி கவியரசர் கண்ணதாசன் கவிதையை தன் வசதிக்காக பயன்படுத்திக்கொள்வதைப் பார்க்கலாம்.

நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறியவர் கண்ணதாசன்! அர்த்தமுள்ள இந்து மதம்னு ஒரு புத்தகம் எழுதி இந்து மதத்தில் உள்ள சில மூடப் பழக்க வழக்கங்களை "அர்த்தமுள்ளதாக" இருப்பதாக்ச் சொல்லி தெளிவு படுத்த முயன்றவர் இவர். ஆனால் ஒருத்தன் நாத்திகனா இருந்து ஆத்திகனாயிட்டான்னு மட்டும் வச்சுக்கோங்க, அவன் குடிகாரனா இருந்தாலும் சரி பொம்பளைப் பொறுக்கியாக இருந்தாலும் சரி, அவனை ஆஹா ஓஹோனு புகழ்ந்து பேசுவது ஆத்திக்க அறிவீனர்களின்  வழக்கம்!

கவியரசருக்கு பல மனைவிகள், இவர் ஒரு முழுக் குடிகாரராக வாழ்ந்து இந்து மதப்புகழ் பாடி, ஆன்மிகத்தில் இறங்கினாலும், அதனால் முழுப்பயன் அடைய முடியாமல் குடி உடலைக் கெடுத்து உடல்ந்லம் பாதிக்கப்பட்டு நம்மை விட்டு கொஞ்ச வயதிலேயே மறைந்தவர் இந்த இதுமதப்பற்றாளர் மற்றும் ஆன்மீகவாதி மற்றும் கவியரசர் என்று எல்லாராலும் பாராட்டப் படும் இவர்! இவருடைய அரைவேக்காட்டுத்தனமான ஆன்மிகமோ, அந்த  வழியோ, அல்லது இந்துமதப்பற்றோ இவரை காப்பாற்றவில்லை. எத்தில் ஆல்கஹால் அடிக்ஷன் இவரை பலியாக்கிவிட்டது என்பதை மனசாட்சி உள்ள எவனும் மறுக்க முடியாது.

நண்பர் ஒருவர் பகுத்தறிவு பேசுவது ஃபேஷன் என்கிறார்! என்னைப் பொறுத்தவரையில் பகுத்தறிவு பேசுவது தந்தை பெரியார் காலத்தை சேர்ந்த ஃபேஷன். அது ஓல்ட் ஃபேஷன்.

இப்போ அரைவேக்காடுகளும், ஆத்திக சண்டியர்களும் பேசும் ஆன்மீகம் தான் இப்போதைய ஃபேஷன்!

* ஆன்மிகம் பேசுபவர்கள் குடிப்பதில்லையா?

* யோகா செய்பவர்கள் சரக்கு எதுவும் அடிப்பதில்லையா? என்பது என் கேள்வி.

எனக்குத் தெரிய அமெரிக்காவில் யோகா, தியானம்  செய்யும் வெள்ளைக்காரர்கள்  குடிப்பழக்கமும் உள்ளவர்கள்தாம். நம்ம ஊரில் ஆன்மீகம் பேசுறவா எல்லாம் (முக்கியமாக ஆண்கள்) எப்படினு எனக்குத் தெரியவில்லை!

ஆன்மீக வழி, யோகா செய்வது குடிகாரர்களை குறைக்கிறது, அடியோடு ஒழிக்கிறது என்றால் குடியை மறக்க ஒரு வழி கண்டுபிடித்து அதை செயல்படுத்தும் ஆன்மிக வழி செல்பவர்களை ஏன் நானும் பாராட்டுகிறேன். நல்லதை நம்ம பாராட்டத் தயங்ககூடாது!

 ஒரு பக்கம் வீக் எண்ட், பார்ட்டி ஃபங்க்ஷன்ல எல்லாம் அப்பப்போ  குடிச்சுக்கிட்டே ஆன்மீகம் பேசுவேன்! ஆத்திக சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு ஆன்மீகம் பேசுவேன்னா நீ முழு அயோக்கியன்!  ஆமா நான் அயோக்கிய்ந்தான், கண்ணதாசன் மாதிரி அரைக்கிணறுதான் தாண்டுகிறேன்னு மனசாட்சிக்கு பயந்து உண்மையைச் சொன்னால், உங்களை நான் பாராட்டினாலும், ஊர் உலகம் உங்களைப் பார்த்து சிரிக்கும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். சாதாரண ஒரு குடிப்பழக்கத்தை  நிறுத்த முடியாத ஆன்மிக வழி எனக்கு என்னவோ நல்வழியாகத் தோணவில்லை! உங்களுக்கு எப்படியோ???

நெறையாப் பேருக்கு மனச்சாட்சி வந்து சப்பு சப்புனு அறையும்!  அதனால் இங்கே வந்து நான் யோக்கியன் என்று பின்னூட்டம்கூட இட முடியாது! அதனால் என்ன இப்போ? நம்ம பகவானைப் போயி வழிபட்டால் எல்லாம் சரியாயிடும். அதுக்குத்தானே நம்ம பகவானை உருவாக்கி வச்சிருக்கோம். இல்லையா? :)

Friday, January 23, 2009

கண்ணதாசனுக்கு “கடவுள்" செய்த உதவி!

கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகள் ஒரு தனி ரகம்தான். காதலாக இருக்கட்டும் தத்துவமாக இருக்கட்டும், அவருக்கு இணை அவர்தான். தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு பல குறைகள் உண்டு. ஒரு பெரிய குடிகாரர், அவருக்கு பல மனைவிகள்.

கண்ணதாசன், நாத்தீகராக இருந்து ஆத்திகப்பாதையில் வந்தவர். நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பில் பிறந்த இவர் அர்த்தமுள்ள இந்துமதம் என்கிற புத்தகமும் எழுதியுள்ளார்.

ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை அவசியமா? கடவுள் நம்பிக்கை செய்யும் தொழிலுக்கு உதவுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். தன்னம்பிக்கை, நேர்மை, உழைப்பு இருந்தால் போதும் என்றுதான் சொல்லுவேன். கடவுள்நம்பிக்கை கோயில் பூசாரிக்கு உதவும். ஏன்னா கடவுள் இல்லைனு ஆயிடுத்துனா அவருக்கு அந்த தொழில் செய்யமுடியாது. ஆனால், கண்ணதாசனுக்கு அவருடைய கடவுள்நம்பிக்கை நிச்சயம் பலவகையில் உதவியது என்றுதான் சொல்வேன். அவர் எழுதிய கவிதைகளில் உணர்ச்சிப்பூர்வமான வரிகள் அனைத்திலும் கடவுளை சாடுவார், புகழ்வார், குற்றம் சொவார் கவியரசர் கண்ணதாசன். ஒருவேளை அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அந்த வரிகளை அவரால் உருவாக்கி இருக்க முடியாது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்.

கடவுள் பற்றி அவர் எழுதிய கவிதைகளில் உள்ள சில வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது!

ஃ பெண்ணைப்படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!

ஃ கடவுளை தண்டிக்க என்ன வழி?

ஃ ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ?

ஃ அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே! அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே.

ஃ ஆண்டவன் படச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்.

ஃ படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே!

ஃ உன்னைச் சொல்லி குற்றமில்லை! என்னைச்சொல்லிகுற்றமில்லை! காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி!

ஃ இரண்டு மனம் வேண்டும்! இறைவனிடம் கேட்டேன்!


ஒரு நாத்தீகரால் இதுபோல் வரிகள் எழுதமுடியாது. அதனால், கடவுள் இருக்காரோ இல்லையோ, கண்ணதாசனுடைய கடவுள் நம்பிக்கை இங்கு அவர் “தொழிலுக்கு” உதவி உள்ளது என்கிறேன்.

டி வி ஆர் அவர்களின் இந்தப்பதிவையும் பார்க்கவும்:
http://tvrk.blogspot.com/2009/01/blog-post_24.html