Showing posts with label தமிழ் ஈழம். Show all posts
Showing posts with label தமிழ் ஈழம். Show all posts

Monday, February 23, 2009

முத்துக்குமார், சீமான், கருணாநிதி!!!

தமிழர்கள் பல வகை. தலைப்பில் சொல்லப்பட்ட மூவரும் மூன்று வகையான தமிழர்கள். அவர்களின் செயல்கள் அவர்கள், நிலைமை, தகுதி, வயது, உணர்ச்சிவசப்படும் தன்மைக்கு ஏற்றார்போல் இருக்குனு தோனுது

இதில் மறைந்த தோழர் முத்துக்குமார் ஒரு வகை. என்னிடம் உங்களுக்கு கொடுக்க ஒண்ணுதான் இருக்கு. அது என் உயிர் என்று தன் உயிரையே ஈழத்தமிழருக்காக கொடுத்துவிட்டு போய்விட்டார் இந்த தமிழர். அதற்கு நம் பதிவர்கள் எல்லாம் மறைந்த உடன்பிறவா சகோதரர் முத்துக்குமாருக்காக கண்ணீர் விட்டார்கள். அவருடைய வீரச்செயலை பாராட்டினார்கள். நிச்சயம் அவருடைய தியாகம் பொன்னெழுத்தில் எழுதப்பட வேண்டியது.

அடுத்த வகை! இயக்குனர் சீமான்! இவர், ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து இப்போது சிறையில் இருக்கிறார். அவரையே நாம் தலைவராக்கினால் என்ன? என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். அவர் தலைவராகி, தமிழ் நாட்டு முதல்வர் ஆனா இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடுவாரா? எப்படி? விளக்கம் சொல்லவும்!

மூன்றாவது வகை, முதல்வர் கருணாநிதி. சமீபகாலமாக, திரு கருணாநிதி மேல் பயங்கர தாக்குதல் நடக்கிறது. அவருடைய அரசியல்தான் தமிழர்களை கொல்லுவதுபோல், அவர் தான் தமிழ் இனம் அழியக்காரணம் என்று பலர் அவரை அவமானப்படுத்துகிறார்கள்.

எனக்கு உண்மையிலேயே புரியலை. அவர் தமிழின துரோகியா? இப்போ கருணாநிதி என்னதான் செய்ய முடியும்? என்னதான் அவர் செய்யனும் இந்த ஜீனோசைட தடுக்க ? அவருக்கு அவ்வளவு சக்தி இருக்கா?

இந்தியா என்கிற நாட்டின் கொள்கைகளை எதிர்த்து போய், ஈழத்தமிழர்களுக்கு எப்படி அவர் உதவ முடியும்? அவருக்கு உண்மையிலேயே நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இனத்தின் மேல் கருணை, அன்பு இல்லாமல் எப்படிப் போகும்?

நான் ஒண்ணும் முதல்வரின் ஜால்ரா கிடையாது. ஆனால் ஈழத்தமிழர்கள் பிரச்சினையை அவர் ஆசைப்பட்டாலும் அதை அவரால் மட்டும் தீர்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

என்ன, அவர் ஒரு தியாகம் பண்ணலாம், ஈழத்தமிழருக்காக அவர் ஆட்சியை இழந்து, ஜெயலலிதாவிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியும். அதைத்தான் எல்லோரும் எதிர் பார்க்கிறார்களா? அப்படி அவர் செய்தால் அவர் தமிழினத்தைக் காப்பாற்ற உதவியதாக ஆகுமா?

அப்படி ஆட்சி இழந்து, ஜெயலலிதா வந்தால், அவரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்க போவதில்லை!

என்னைக்கேட்டால் மேலே சொல்லப்பட்ட மூன்று தமிழர்களுமே, ஈழத்தமிழர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள். ஒவ்வொருவருடைய நிலைமையும் வேறு வேறு! ஒருவர் தன் உயிரை இழந்து தியாகியானர். ஒருவர் சிறை சென்று இருக்கிறார். இன்னொருவர் தன்னால் எதுவும் பெரிதாக செய்ய முடியாத நிலையில் இந்தியா என்கிற நாட்டு துரோகியாகாமல் இருக்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் இயலாமையைப்பற்றி கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் தாறுமாறாக, அவர்தான் தமிழ் இனம் அழியக்காரணம் என்று சொல்வதெல்லாம் நல்லாயில்லைனு எனக்கு தோனுதுங்க!

Tuesday, October 28, 2008

தமிழ் ஈழப்பிரச்சினை- எனது குறுகிய பார்வையில்

ஈழத்தமிழர்கள், உயிர், உரிமைகள் பறிக்கப்பட்டு நாடுவிட்டு நாடு போய் என்னவெல்லாமோ துன்பம் அனுபவித்து இருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சினையைப் பற்றி பேசும்போது நல்ல பக்குவம் வேண்டும். அது என்னிடமில்லை என்பதால் என் எழுத்தில் நிறைய குறைகள் வரலாம். சகித்துக்கொள்ளுங்க, ப்ளீஸ்!

* ஈழத்தமிழர்கள் உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கும்போது சில பெரிய நாடுகள் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிக மிகத்தவறு. அது எந்த நாடாக இருந்தாலும் அப்படி செய்வது மிருகத்தனம். அதென்னவோ தெரியவில்லை தனிமனிதனுக்கு உள்ள மனிதாபிமானம், நாடு சம்மந்தப்பட்ட அரசியலில் இருப்பதில்லை! :(


* பொதுவாக, பத்திரிக்கைகள் "பிராமண க்ரிடிக்ஸ்" 95% மேல் ஈழப்பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.

கவனம்! நான் தமிழ் பிராமண உடன்பிறப்புக்களைப் பற்றி இங்கே சொல்லவில்லை

இது சமீபத்தில் வந்த ஹிந்து ஆர்ட்டிகிள் மற்றும் சோ ராமசாமி, ஹிந்து ராம் போன்றவர்கள் எழுதுவதில் இருந்து வரும் 'குற்றச்சாட்டு".

சரி, இந்த மெத்தப்படித்த அரைகுறை ஞானம் கொண்ட க்ரிடிக்ஸ் ஈழத்தமிழருக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், முழு ஆதரவு கொடுத்தால், இந்த பிரச்சினை முடிவாகிவிடப் போகிறாதா என்பது என் கேள்வி?

இல்லை என்றுதான் நினைக்கிறேன்! அதனால் இவர்களை சும்மா உளறிக்கொண்டு திரியட்டும் என்றுவிட்டுவிடுவது நல்லது! இவர்கள் ஈழத்தமிழர்களை கஷ்டத்துக்கு உண்டாக்கி ஏற்கனவே இவர்கள் மேல் உள்ள "ப்ரிஜடிஸ்" மற்றும் "பயஸ்" போன்றவற்றை இன்னும் பலமடங்காக்கி, தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் முட்டாள்கள் இந்த க்ரிடிக்ஸ்!

பேசாமல் இவர்கள் வேலையைப்பார்க்க வேண்டியதுதானே?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சனுமா?

இவர்களுக்கு மட்டும் ஏன் ஈழத்தமிழர்கள் மேல் இரக்கமே இல்லை?

ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள்?

என்பது போன்ற கேள்விகளுக்கு பதில்கள் பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை! ஏன் இவர்களாலேயே புரிந்துகொள்ள முடியயுமா என்றும் தெரியவில்லை! உபகாரம் செய்யவில்லையென்றாலும் உபத்திரவம் செய்யாமல் இவர்கள் மூடிக்கொண்டு இருக்கலாம்!


* இதைவிட கொடுமை, தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல்வாதிகளும், யார் காங்கிரஸுடன் கூட்டமைப்பது என்கிற போட்டியில், காங்கிரஸ்காரர்களை திருப்திப்படுத்த மனசாட்சியை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, ஈழப்பிரச்சினையில் சில அரசியல் செய்கிறார்கள்! இதுவும் கண்டிக்கதக்க/மிகவும் வருந்தத்தக்க ஒன்று. மனதளவில் அவர்கள் ஆதரவு ஈழத்தமிழருக்கு இருந்தாலும், மேலே உள்ளவர்களை திருப்திப்படுத்த அவர்கள் மனதை கல்லாக்கி அரசியல் செய்வதை பார்க்கலாம்! :(


* ஈழத்தமிழர்களிடம் இந்த பிரச்சினை பற்றிப்பேசும்போது/விவாதிக்கும்போது நான் கண்ட குறை.

அவர்கள் இந்த பிரச்சினையைப்பற்றிப்பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். :( பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் வலி தெரியும் என்பது எனக்குத்தெரியும். இருந்தாலும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல், தமிழ் உறவுகள் கொஞ்சம் மாறுபட்ட கருத்துகள் வைத்தாலும் அவர்கள் அறியாமையால் வைத்திருந்தால், அந்த அறியாமையை கனிவாக அவர்களிடம் இருந்து போக்க வேண்டும்.


ஈழத்தமிழ் உறவுகள் என்ன செய்ய வேண்டும்?

* ஈழத்தமிழ் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யும் எந்தத் தமிழ் அரசியல்வாதி யையும் அவர்கள் நம்பக்கூடாது!

* பிராமண பத்திரிக்கையாளர்களை துச்சமாக நினைத்து ஒதுக்க வேண்டும்!

* ஒரு உண்மையை நம்புங்கள்! தமிழ்நாட்டில் மற்றும் உலகில் உள்ள எல்லாத்தமிழ் சகோதர சகோதரிகளுமே நீங்கள் அதிவிரைவில் தனி தமிழ் ஈழம் அமைத்து, மனநிம்மதியுடன் நீங்கள் நீடூழிவாழவேண்டும் என்றுதான் மனதாற எண்ணுகிறார்கள், பிரார்த்திக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை .