ராதா கிருஷ்ணன், ஜாக்குலின் தம்பதியினர் ரெண்டு பேரும் ஐ டி கம்பெனில வேலை பார்த்தாங்களாம்! நெறைய சம்பாரிச்சாங்களாம். திடீர்னு ரெண்டு பேருக்கும் வேலை போயிடுச்சாம். உடனே இந்த ஐ டி கம்பெனி வேலையில்லாமல் இவர்கள் மனம் உடைந்து, சுக்கு நூறாகி இந்த உலகில் வாழ வழிதெரியாமல் புத்தி பேதலிச்சுப் போயி தற்கொலை பண்ணிச் செத்துட்டாங்களாம். அதுவும் ஆறு மாதக் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு, ரெண்டு பேரும் "பொறுப்பாக"ப் போய் சேர்ந்துட்டாங்களாம்!
வினவு தளத்தில் வந்த கண்ணீர் கதை இது!
ஜாக்குலின், ராதாகிருஷ்ணன் தம்பதியினர் தங்களது 6 மாதக் குழந்தையுடன் சென்னை தில்லைகங்கா நகரில் வசித்து வந்தனர். மே 20, 2015 அன்று காலை ராதாகிருஷ்ணன் பழவந்தாங்கல் அருகே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது உடல் போலீசால் மீட்கப்பட்டது. முன்னதாக, ஜாக்குலின் வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டு இறந்திருக்கிறார். அவர்களது ஆறு மாத குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு இந்த இளம் தம்பதியினர் இந்த கொடூரமான முடிவை எடுத்திருக்கின்றனர்.
ஜாக்குலின், ராதாகிருஷ்ணன் இருவரும் ஒரே ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்திருக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் பணி புரிந்த நிறுவனத்தினால் வெளிநாட்டில் வேலை செய்ய அனுப்பப்பட்டிருக்கிறார். கடந்த ஓராண்டாக ஐ.டி துறையில் அதிகரித்து வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, அவர் வெளிநாட்டிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டு, எந்த வேலையும் கொடுக்கப்படாமல் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஜாக்குலினும் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது குடும்பத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நிகழ்ந்துள்ள இந்தத் துயர சம்பவம் ஐ.டி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மார்ச் மாதம் இதே போன்று சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் 2 ஐ.டி துறை இளைஞர்கள் அப்ரைசல் மன அழுத்தம் தாங்க முடியாமல் எட்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இவற்றைப் போன்ற பல தற்கொலைகள் செய்தியாக வெளிவராமல் மூடி மறைக்கப்படுகின்றன.
தற்கொலை எனும் துயரமான முடிவுக்கு ஐ.டி. ஊழியர்கள் செல்ல வேண்டாம் என்றும் வேலை இழப்புகளுக்கு எதிராக போராட முன்வருமாறும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின், ஐ.டி ஊழியர் பிரிவு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.
டி.சி.எஸ், சின்டெல் போன்ற ஐ.டி நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக கொத்துக் கொத்தாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருவதையும், அதன் விளைவாக தற்கொலைகள் அதிகரிப்பதையும் அறிந்துள்ள தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
டி.சி.எஸ். சில் 25 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர்கள் பிரிவு சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றது.
.ஐ டி வேலை பண்ணுறவங்களுக்கு இன்னுமா புரியவில்லை? வேலைனு ஒண்ணு கெடச்சதுனா அது போகவும்தான் செய்யும்! எப்ப வேணா போகலாம்! இதெல்லாம் சாதாரணமாக மேலை நாடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கு. அமெரிக்கர்களுக்கும் இதே நிலைதான். ஏன் அமெரிக்கா எல்லாம் போக வேணாம். இங்கேயே கொடிகட்டி பறந்த நடிகர், நடிகையர். பாடகர் இப்போ என்ன பண்ணுறாங்கனு பாருங்க! மேலை நாடுகளில் அவன் அவன் வயதான காலத்தில் படிச்சதுக்கும், வேலை அனுபவத்துக்கும் சம்மந்தமே இல்லாத வேலை எடுத்துக் கொண்டுதான் பொழைப்பை ஓட்டுறானுக. ஏனென்றால் டெய்லி சாப்பிடப் பணம் வேணும் இல்லையா? ஒரு சிலர் பேங்க்ரப்ஸி ஃபைல் பண்ணுகிறார்கள். மேலை நாடுகள் வாழ்க்கைத் தரத்தில் வாழும் ஐ டி கம்யுனிட்டிலயும் இதுபோல் ஒரு சூழல் வரத்தான் செய்யும். ஐ டி வேலை போனா, அந்த பொருளாதார மாற்றத்துக்கு ஏற்ப தன்னை, தன் வாழ்க்கையை மாற்றிக்க முடியாமல் வாழமுடியாமல் தற்கொலை செய்து சாகணுமா என்ன? அதுவும் ஒரு பச்சைக்குழந்தையைப் பெத்து அதை உயிரோட விட்டுவிட்டு இவர்கள் இருவரும் பரலோகத்தில் போயி ஐ டி வேலை பார்க்க போயிட்டாங்களாம்!
சரி, ஐ டி வேலை போனா என்ன இப்போ? கை கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு? கொஞ்ச நாள் சரவணபவன்ல போயி சர்வரா வேலை செய்ய வேண்டியதுதானே? இல்லைனா ஒரு ஆட்டோ ஓட்டு! அந்தம்மா யாருக்காவது நாலு பிள்ளைங்களுக்கு ட்யூஷன் எடுக்க வேண்டியதுதானே? அதெல்லாம் வேலை இல்லையா என்ன? அதெல்லாம் செய்றவன் அதற்கேத்த சம்பளம் வாங்கி சாப்பிடலையா என்ன? அவனும் வாழவில்லையா? அவனுக்கும் சுயமரியாதை இருக்கத்தான் செய்யுது. இல்லையா? அதெல்லாம் தெரியாதா? நான் ஐ டி வேலைதான் பார்ப்பேன் எனக்கு லட்ச லட்சமா பணம் வேணும். இல்லைனா என்னால வாழ முடியாதுனா, செத்துத் தொலை! உன் பிள்ளை அனாதையா அலையட்டும்!
மறந்துட்டேனே..இருக்கவே இருக்கானுக ஊருக்காக ஒப்பாரி வைக்கும் வினவு சகாக்கள். அவனுக பொழைப்பை ஓட்ட, ஆடம்பர வாழ்க்கை இல்லாததால நீ செத்து தொலைந்ததுக்காகவும் அமெரிக்காவை திட்டி, அரசாஙக்த்தைத் திட்டி பதிவெழுதி எழவைக் கூட்டிவிட்டு. உன் பிள்ளையையும் வளர்த்து ஆளாக்குவானுக!