Showing posts with label பெண் சுதந்திரம். Show all posts
Showing posts with label பெண் சுதந்திரம். Show all posts

Tuesday, November 11, 2014

நாம் எங்கே போகிறோம்? பெண் சுதந்திரம்னா இதுதானா?

உலகம் வேகமாக முன்னேறுகிறது. நல் வழியில் மட்டுமல்ல! கெட்ட வழியிலும்தான். எல்லா ஆர்கனைசேஷன் களிலும் கட்டிடத்துக்குள்ளே சிகரெட் குடிக்கக்கூடாது என்பதை அமல்படுத்திவிட்டார்கள். அதனால் புகைபிடிப்பவர்கள் எல்லாம் அவங்களுக்குனு கொடுக்கப்பட்ட ஒரு இடத்தில் கூடி புகைபிடிப்பதைப் பார்க்கலாம்.


பெண் சுதந்திரம் அதிகமாக உள்ள மேலை நாட்டில் முதன்மையானது அமெரிக்கா. இங்கே வெளியில் நின்னு புகைபிடிப்பவர்களில் பெண்களே அதிகம்.

புகைபிடிக்கும் கல்லூரி மாணவிகள்



கல்லூரிக்குச் சொல்லும் அனைத்து மாணவிகளும் (எழுத்துப்பிழை இல்லை! ஆமாம், மாணவிகள்தான்) 18 வயதிலேயே மதுபானம் அருந்துகிறார்கள். அமெரிக்காவில் 21 வயதுதான் சட்டப்படி மது அருந்தலாம் என்கிற நிலை இருந்தும் இவர்கள் 18 வயதிலேயே  மதுபானம் அருந்துவது சாதாரணம். இதுதான் இன்றைய அமெரிக்க கல்லூரி நிலைமை!


மாணவிகள் வைன் குடிக்கிறாங்க..


என்ன? அமெரிக்காலதான் அப்படியெல்லாம் நடக்குதுனு சொல்றீங்களா?

 கலாச்சாரக்காவலர்களை நாம் முட்டாள்கள் என்கிறோம்! சாரு நிவேதிதா அடிவருடிகள் ஒரு பக்கம்! கமலஹாசன் அடிவருடிகள் இன்னொரு பக்கம்! இவர்கள் நாளைய இந்தியா எப்படி இருக்கணும்னு மேலை நாடுகளில் நடக்கும் இதுபோல் முன்னேற்றைத்தைக் காட்டி நாமும் "நாசமாகப் போவோம்" என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

நாம் எங்கே போகிறோம்?

இன்று ஒரு செய்தி, பால்ட்டிமோர் ரேவென்ஸ் என்கிற அமெரிக்க ஃபுட்பால் டீமில் ச்சியர் லீடராக இருந்ந்த 47 வயதுப் பெண்மணி இவர்.


molly shattuck
இன்று Molly Shattuck வயது 47, ஒரு தாய்



ஒரு காலத்தில் ச்சியர் லீடராக இருந்தவர் இவர்



சரி, ஒரு காலத்தில் ச்சியர் லீடர். இன்று இவர் 47 வயதான ஒரு தாய்!

 என்ன செய்தார்?

ஒரு 15 வயது பையனை வன்புணர்வு செய்துள்ளார்!!

அவனை எப்படித் தெரியும்?

இன்ஸ்டக்ராம் என்கிற சமூக வலைதளம் மூலம் பரிச்சயம்..

தன் மகனிடம் அவனுடைய அட்ரெஸ் வாங்கி தன் வீட்டிற்கு அவனை இன்வைட் பண்ணி, தனியாக இருக்கும்போது அவனை ஃபோர்ஸ் பண்ணி வன்புணர்வு செய்துள்ளார்.

தன் குழந்தைகளுடன் இவர்

 இது கதை எல்லாம் இல்லை!

நடந்த உண்மை!

முழுமையான பெண் சுதந்திரம் பெற்றவுடன் நாம் சாதித்தது என்ன? ஆண்களை விட நாங்க எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதே! ஏன் நாங்க சிறுவர்களை வன்புணர்வு செய்தால் என்ன? காலங்காலமா ஆண்கள் மட்டும்தான் செய்யணுமா என்ன? எங்களாலயும் முடியும்!

அதாவது, புகை பிடிப்பது, குடிப்பது, பால்ய பருவத்தில் உள்ள சிறுவனை வற்புறுத்தி "ஓரல் செக்ஸ்" கொடுப்பது!

உலகம் முன்னேறிவிட்டது!

முழுமையான பெண் சுதந்திரம் கிட்டிவிட்டது.

 பாவம் பாரதி இதையெல்லாம் பார்க்காமல் போயிட்டாரே!!

அவர் என்னவோ நினைக்க.. நடப்பது என்னவோ வேறமாதிரிதான் இருக்கு! ஒரு வேளை இதைத்தான் அவரும் எதிர்பார்த்தரோ? யாருக்குத் தெரியும் அவர் என்ன கனவு கண்டார் என்று?