Monday 30 November 2009

அமீரின் யோகி, TSOTSI படத்தின் "காப்பி"யா?


என் அபிமான இயக்குனர் அமீர் ஹீரோவாக அறிமுகமாகும் யோகி வெற்றிநடைபோடுகிறது. ஆனால் இது ஒரு அயல்நாட்டுப்படமான "TSOTSI " யின் காப்பி என்கிறது உலக சினிமா அறிந்த உலகம்! :(

ஸோட்ஸி படத்தின் Plot

அவன் அம்மா கொடியவியாதியால் சாகிறாள். அவனுடைய அப்பா அவனை அப்யூஸ் பண்ணுகிறார். சிறுவயதிலேயே டேவிட் அப்பாவிடம் இருந்து தப்பி ஓடி, மற்ற அனாதைக்குழந்தைகளுடன் பெரிய காங்க்ரீட் குழாய்களில் வாழ்கிறான். பிறகு அவன் பெயர் ஸோட்ஸி ஆகிறது. பிறகு அவன் தன் சகாக்களின் (3-4 பேர்) தலைவனாகிறான். தன் சகாக்களில் ஒருவன் திருடும்போது ஒரு கொலை செய்தவுடன் , இவனும் இவ்ன் இன்னொரு நண்பனும் ஒரு சண்டை போடுறாங்க, அதில் அவன் நண்பன் காயமடைகிறான்.

பிறகு ஒரு காரை திருடும்போது ஒரு இளம்பெண்ணை சுட்டுக்கொல்ல முயல்கிறான். அவளை தாக்கிவிட்டு காரை எடுத்துக்கொண்டு போகிறான். காரில் அந்த மூன்று மாத கைக்குழந்தை இருக்கிறது. அதையும் கடத்திக்கொண்டு போகிறான் தன் இடத்திற்கு. அந்தப்பெண் அவன் முகஅடையாளத்தை போலிஸிடம் சொல்கிறாள், அதைவைத்து இவன் படம் தினசரியில் வருகின்றது. பிறகு தன்னால் அந்த கைக்குழந்தையை வளர்க்கமுடியாதுனு ஒரு இளம்பெண்ணை மிரட்டி அதை வைத்து குழந்தையை பார்க்கச்சொல்லுகிறான். நண்பர்கள் துரோகியாகிறார்கள். ஒரு நண்பனையே கொல்லுறான். கடைசியில் குழந்தையை திருப்பிக்கொடுக்கிறான். இதுதான் அந்த ஃபாரின் ஸோட்ஸி படத்தின் கதை.

இது "பெஸ்ட் ஃபாரின் படம்" ஆஸ்கர் வின்னர் என்பது குறிப்பிடதக்கது.

யோகி படத்தின் Plot

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் வலைதளங்களில் படித்த விமர்சனத்துப்படி, ஸோட்ஸி போல் யோகி ஒரு அனாதை, அதேபோல் ஒரு gang-related ஹீரோ. ஸோட்ஸி படத்தின் ப்ளாட் போலவே ஒரு குழந்தையைச்சுற்றி கதை என்று சொல்லப்படுகிறது.

அமீரிடம் இதைப்பற்றி கேட்டதற்கு, அவர் இதை காப்பி என்றோ, இல்லை இண்ஸ்பிரேஷன் என்றோ ஒத்துக்கொண்டதாக தோனவில்லை. ஆனால் ரெண்டு படத்தின் கதையைக்கேட்டால் ஏதோ நெருடுகிறது.


Wednesday 25 November 2009

நீயும் கன்னியா! பொய்தானே? -கடலை கார்னர் (32)

பிருந்தா, கண்ணன் விரல்களூடன் தன் விரல்களை பின்னிக்கொண்டே அவனை இழுத்துக்கொண்டு அருகில் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்தாள். ஏதோ இண்டெரெஸ்டா ஆண்ட்டி பேச ஆரம்பித்துவிட்டார்கள். கண்ணனுக்கு கொஞ்சம் போர் அடிச்சது , மெதுவாக பிருந்தா மடியில் தலையை வைத்துப் படுத்துக்கொண்டான். அவள் பேசும் அழகை பார்த்து ரசித்தான். பிருந்தா பேசிக்கொண்டே அவன் தலைமுடியை கோதிவிட்டாள். ஆண்ட்டி, அடுத்த எண்ட்ல இருந்து பேசியது எல்லாம் ஒரே ஊர்ப்பொறணி! "அவ இப்படி சொன்னா" , "உங்க அப்பா அப்படி சொன்னாரு" , "கல்யாண வீட்டுக்கு இந்த பட்டுச்சேலை கட்டிப்போனேன்" னு அள்ளி விட்டுக்கொண்டு இருந்தாங்க. "இவளை விட்டா அவங்க அம்மாவோட நாள்க்கணக்கா பேசிக்கிட்டே இருப்பாள் போல" னு கடைசியில் பிருந்தா பேசுவதை எப்படி நிறுத்த வைப்பதென்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான், கண்ணன். அதை உடனே செயல்ப்படுத்தினான்.

"சரிம்மா அடுத்த வாரம் பேசுறேன்... கெஸ்ட்டைக் கவனிக்கனும்மா" என்று ஒரு வழியாக அவசரமாகப் பேசி முடித்தாள்.

"எழுந்திரிங்க, கண்ணன்! இப்படியெல்லாம் மடியில் படுக்கக்கூடாது! "

"என்ன திடீர்னு?"

"மக்கு! திடீர்னு இப்படியெல்லாம் மடியில்முகத்தை வைத்துப் படுக்கக்கூடாது. அதுவும் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது"

"ஏன், பிருந்தா? இப்படி மடியில் படுத்தால் என்ன தப்பு?" என்றான் இன்னொசண்டா.

"ஏனா? இதெல்லாம் ஒரு கேள்வியா?"

"ஆமா என்ன ஆயிடும் பிருந்தா? ஏன் தப்புனு சொல்ற?"

" ஏன்னா, நான் கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணு இல்லையா? அதனாலதான்"

"நீயும் கன்னியா!! பொய்தானே?" அவன் சிரித்த்தான்.

"உங்களுக்கு ரொம்ப ரொம்ப கொழுப்பு! உங்களைமாதிரி ஊரைக்கூட்டி நான் வெர்ஜின் னு சிகாகோமுழுவதும் சொல்லிக்கொண்டு திரிவதில்லை அழகு."

"ஐயோ என்ன ஒரு அடக்கும்! எப்படி பிருந்தா இதெல்லாம்?'

"உங்ககிட்ட இருந்து கற்றதுதான்"

"உன்னை மாதிரி அடக்கம் எல்லாம் இல்லையே நான்."

"உங்களை மாதிரி இருக்கக்கூடாதுனு உங்ககிட்டயிருந்து கற்றுக்கொண்டது." அவள் அழகா சிரித்தாள்.

"ஏய் நீ ரொம்ப அழகா சிரிக்கிற, பிருந்த். உன் உடம்பெல்லாம் மணக்குது தெரியுமா? " என்று அவள் அருகில் நெருங்கி உட்கார்ந்தான்.

"மணக்கிறேனா? இது வேறயா? பானு சொன்னது சரிதான். நீங்க என்னை ஐஸ் வச்சே ஒரு வழி பண்ணிடுவீங்க போல."

"நெஜம்மாத்தான்டா சொன்னேன்" என்று ரகசியமாக அவள் காதில் சொல்வதுபோல காது மடலை வருடினான்.

"நெஜம்மாவா? சரி.. என் காதிலே இப்படி கை வைக்காதீங்க. கூச்சமா இருக்கு"

"கூச்சமா இருக்கா? இல்லை வேறென்னவும் வேறெங்கவும் நடக்குதா?'

"வேறெதுவும்னா?'

"ஏதாவது கெமிக்கல் ரியாக்ஷன் நடக்குதா? ஆமா, நீ என்ன ரொம்ப மூடா இருக்கியா?"

"அதெப்படி இது மட்டும் உங்களுக்கு நல்லாப் புரியுது, மிஸ்டர் ட்யூப் லைட்?"

"எது?'

"இந்த மாதிரி விசயம் மட்டும் நல்லாப் புரியுது. மற்றதுல எல்லாம் ட்யூப் லைட்டா இருக்கீங்க. இதுலமட்டும் பெரிய ஆளா இருக்கீங்க, எப்படி அது?'

"நான் கேட்கிற கேள்விக்கெல்லாம் நீ பதில் சொல்ற விதமே தனி அழகுதான் பிருந்த்."

"நீங்க ரொம்ப ரொம்ப மோசம் கண்ணன்."

"ஏய் உன் உதடு என்ன இவ்வளவு ட்ரையா இருக்கு? நான் வெட் பண்ணி விடவா?"

"அதெல்லாம் வேண்டாம்." என்று சொல்லிக்கொண்டே அவன் முகத்து அருகில் முகத்தை கொண்டு சென்றாள்

"ஒரு சின்ன உதவிகூட செய்யக்கூடாதா, பிருந்த்? நீ எனக்காக கஷ்டப்பட்டு சமைத்து இருக்க இல்லையா?"

"உதட்டை வெட் ஆக்கி விடுவது நன்றியா?"

"மாட்டினேனா? அப்படி சொல்லல"

"நல்லா மாட்டினீங்க!"

"சரி சரி, ஏன் சும்மா உங்கம்மாவோட பேசிக்கிட்டே இருந்த? நான் நல்லாயிருக்கேன்னு சொல்லி முடிக்க வேண்டியதுதானே?"

"திடீர்னு எப்படி வைக்க முடியும்? நான் ஒழுங்கா பேசலைனா மறுபடியும் 20 முறை கூப்பிடுவாங்க. நல்லா சந்தோஷமா இருக்க மாதிரி நடிக்கனும்."

"அதெல்லாம் உண்மையான காரணம் இல்லை.."

"இல்லையா? வேறென்ன காரணம்? நீங்களே சொல்லுங்க!"

"அது வந்து, உன் மனசைக் கேட்டுப்பார்."

"சும்மா நீங்களே கேட்டு சொல்லுங்க!"

"இது நல்லா ஐடியா பிருந்த்! காதை இதயத்தில் வச்சு கேக்கவா?" அவள் மார்பில் தன் முகத்தை சாய்த்து காதை வைத்தான்.

"உடனே இங்கே காதை வச்சுட்டீங்களா?"

"வேற எப்படி உன் இதயம் என்ன சொல்லுதுனு கேக்கிறது?"

"இதயம் பேசுதா?"

"ஸ்ஸ் இதைக்கேளு! உன் இதயம் என்ன சொல்லுதுனா, "டேய் மக்கு! டோண்ட் யு நோ, ஐ டாக்ட் மோர் அண்ட் மோர் பர்ப்பஸ்லி ?"

"அப்படியா சொல்லுச்சு என் இதயம், ஜீனியஸ்? நீங்க காதை வச்சு எதையும் கேக்கிற மாதிரி இல்லை"

"இதெல்லாம் அநியாயமான குற்றச்சாட்டு! இப்போ உன்னை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணினால் என்ன பண்ணுவ?"

"சும்மா சொல்லிண்டே இருங்க"

"அப்ப சரி! வித் யுவர் பெர்மிஷன்" என்று அவளுக்கு முத்தம் கொடுத்தான்.

"இப்போமட்டும் நல்லா வெட் ஆயிருச்சா என்ன? இன்னும் ட்ரையாத்தான் இருக்கு" என்றாள் இன்பமான குரலில்.

"யாருக்கு கொழுப்பு? உனக்கா எனக்கா??"

"ஸ்ஸ்ஸ் அங்கே எல்லாம் கிள்ளக்கூடாது"

"வலிக்குதாடா?'

"இதை சாக்கு வச்சு மறுபடியும் கை வைக்கிறீங்க? சரி, சும்மா சொல்லுங்களேன், ப்ளீஸ்?"

"எதைச் சொல்ல?"

"அம்மாட்ட நான் ஏன் வளவளனு பேசிண்டே இருந்தேனாம்?"

"நீ பேசிக்கொண்டு இருக்கும்போது எனக்கு கொஞ்சம் போராடிக்குதா? நீ ரொம்ப ரொம்ப அழகா கவர்ச்சியா ஒரு மாதிரியா வேற இருக்கியா? அதனால எனக்கு போர் அடிக்காமல் இருக்க நான் உன்னை அங்கே இங்கே பார்த்து உன் அழகை ரசிக்க ஆரம்பிச்சுடுறேனா?.."

"அதனால?"

"உன்னிடம் ஏதாவது சேஷ்டை பண்ணனும்னு தோனுது. உன்னை அங்கே இங்கே தொட்டு ஏதாவது சில்மிஷம் பண்ணுறேன். ஆனால் அது மாதிரி லேசா சிமிஷம் உனக்கு ரொம்பப் பிடிக்குதுதா.. அதான் நீ சும்மா ஆண்ட்டியோட பேசிக்கிட்டே இருக்கயாம்.. எப்படி இருக்கு என் தியரி?"

"ரொம்ப நல்லா இருக்கு, கண்ணன், உங்க தியரி."

"இதையும் ஏதாவது ஜேர்னல்ல பப்ளிஷ் பண்ணிடுவோமா?"

"லவ் ஜேர்னல்லயா?"

"ஆமா"

"யாரு எடிட்டர்?"

"நீ தான்"

"நீங்க எழுதிஅனுப்புவீங்களாக்கும். நான் ரிவியூ பண்ணி, பப்ளிஷ் பண்ணனுமாக்கும்?

"ஆமா உனக்குத்தானே என் தியரி சரியானு தெரியும்? காதல்ல கதைலாம் விடக்கூடாது. உண்மையைத்தான் எழுதனும். நாலு பேர் பண்ணிப் பார்க்கனும் இல்லையா?"

"அது சரி"

"இங்கே பக்கத்தில் வா, பிருந்த்"

"வந்துட்டேன்"

"பயம்மா இல்லையா உனக்கு?"

"ஹுஹூம்... ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு"

"எனக்கு பயம்மா இருக்கு"

"ஐயோ பாவம்!"

"என்ன சமச்சு இருக்க?"

"இதை கேக்கத்தான் பக்கத்தில் வரச்சொன்னீங்களா?"

"ஆமா"

"அப்போ ஏன் கடைசில பேசுவவதை நிறுத்தினேனாம்?"

"லேசா சில்மிஷம் பண்ணினால் நீ பேசிக்கிட்டே இருக்கயா? அதனால கொஞ்சம் அளவுக்கு மீறிப் பார்த்தேன்.. நான் நெனச்சது மாதிரி உன்னால தொடர்ந்து பேச முடியலை. அதான்.."

"அளவுக்கு மிஞ்சுதுனு தெரிந்தே செய்தீங்களா?'

"எனக்கு ரிசல்ட் தெரியாது. சும்மா எக்ஸ்பெரிமெண்ட்தான். ஆனால் ஒரு மாதிரி நெனச்ச ரிசல்ட்தான் வந்தது"

"எனக்கு உதடு மறுபடியும் ரொம்ப ட்ரையா இருக்கா, கண்ணன்?"

"இரு கொஞ்சம் நல்லா கவனிக்கிறேன் இப்போ" அவள் உதட்டில் தன் இதழ்களை பதித்தான். அவள் அவனை கட்டி அணைத்துக்கொண்டாள்.

"இப்போ வெட் ஆயிடுத்து" என்று இதழ்களைப் பிரித்துவிட்டு சொன்னான், கண்ணன்.

கதவை யாரோ தட்டினார்கள்.

"இந்த பானுவை என்ன செய்யலாம்?" என்று எரிச்சலாக எழுந்தாள் பிருந்தா.

- தொடரும்

Saturday 21 November 2009

கமல்-பாலசந்தர் உறவு!


கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்துல அறிமுகமானார்னு உலகத்துக்கே தெரியும். கமல், படித்துக்கொண்டே பகுதி நேரம் ல தொடர்ந்து நடித்ததாக தெரியவில்லை. இளவயதிலேயே படிப்பை ஒரேயடியாக தலைமுழுகிட்டு சினிமாவைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்.

குழந்தை நட்சத்திரத்திலிருந்து வளர்ந்த ஹீரோவாக வயது வேணுமில்லையா? பெரிய நட்சத்திரமாகுமுன்னர் பதின்ம வயதிலே அவர் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்து இருக்கிறார். காதல் இளவரசனாகுமுன்னே "நான் ஏன் பிறந்தேன்" போன்ற படங்கள் ல எல்லாம் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்து இருக்கிறார் கமலஹாசன்.

பிறகு, பாலச்சந்தர்தான் கமலுக்கு நிறையப்படங்களில் சரியான வாய்ப்புக் கொடுத்து கமல் திறமையை வெளிக்கொண்டு வந்தார். முதலில், அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற பாலசந்தர் படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க ஆரம்பித்தார், கமல். அந்த சமயத்தில் பாலசந்தர் படத்தில் பொதுவா பல முக்கிய பாத்திரங்களைச் சுற்றி கதை இருக்கும். அதில் கமல் திறமையை வெளிக்கொண்டு வரும் ஒரு சில நல்ல ரோல்கள் இவருக்கு கொடுக்கப்பட்டதால் கமலுக்கு நிறைய புகழை அள்ளித்தந்தது.




கமல், பாலசந்தர் இயக்கத்தில் நடித்த தமிழ்ப் படங்கள். (ஒரு சில படங்களை விடுபட்டு இருக்கலாம்! )

* சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)

* அரங்கேற்றம் (1973)

* அபூர்வ ராகங்கள் (1975)

* மூன்றுமுடிச்சு (1976)

* மன்மதலீலை (1976)

* அவர்கள் (1977)

* அவள் ஒரு தொடர்கதை (1978)

* நிழல் நிஜமாகிறது (1978)

* நினைத்தாலே இனிக்கும் (1979)

* வறுமையின் நிறம் சிகப்பு (1980)

* புன்னகை மன்னன் (1986)

* உன்னால் முடியும் தம்பி (1988)



பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த பிற மொழிப்படங்களில் சூப்பர் ஹிட் ஆன படங்கள் இரண்டை கட்டாயம் சொல்லியாகனும்.

* மரோச்சரித்ரா (தெலுகு, 1978)

* ஏக் துஜே கே லியே (ஹிந்தி, 1981)


இயக்குனர்கள் எல்லாம் பள்ளி வாத்தியார்கள் போலதான். இன்று கமலுக்கு உள்ள பெயர், ஸ்டார் வால்யூ எல்லாம் இவரை மேலே கொண்டுவந்த பாலசந்தர் பாரதிராஜாவுக்கு கிடையாது என்பது கசப்பான உண்மை. இன்று பாலசந்தருக்கு வய்து 79 ஆகிவிட்டதாம். தமிழ் திரையுலகில் பாலசந்தர் ஏற்படுத்திய மாற்றம் கமல் மற்றும் ரஜினியின் பங்கைவிட பன்மடங்கு உயர்ந்தது. வாழ்க அவர் இன்னும் நூறு ஆண்டுகள்!

Thursday 19 November 2009

ஏன்டி அவரைப்போட்டுப் படுத்துற? -கடலை கார்னர் (31)

"என்னங்க பானு நீங்க! நீங்களே கேள்விகேட்டு அதற்கு சரியான பதிலும் சொல்லிக்கிறீங்க?" என்று சமாளித்தான் கண்ணன்

"இங்க கேளுடி பிருந்தா!"

"என்ன சொன்னாரு?"

"உன்னை ரொம்பப் பிடிக்குமாம்! இவர்ட்ட நீ கவனமாவே இரு! ஐஸ் வச்சே உன்னை காலி பண்ணிடுவாரு போல!"

"ஏன்டி அவரைப்போட்டுப் படுத்துற? பிடிக்குமானு கேட்டா அபப்டித்தான் சொல்லுவாரு"

"நானா படுத்துறேன்!!"

"ஆமா, நீதான்"

"எல்லாம் என் நேரம்தான், போ!"

"ஆமா நீங்க எந்த ஊருங்க பானு?"

"நான் சென்னைதான், கண்ணன்."

"யாரோ ஃபோன்ல கூப்பிடுறாங்க உன்னை, பானு!"

"ஹாய்! கேன் யு ஹோல்ட் ஆண் ஃபார் எ மினுட்? பிருந்தா!

இது முக்கியமான கால்டி. நான் உன் டீ கப்போட அப்படியே புறப்படுகிறேன். தேங்க்ஸ்! ஹேவ் ஃபன் கண்ணன்."

"பார்க்கலாம்ங்க, பானு."

**************

"பக்கத்திலேயே பானு இருக்கிறது உனக்கு நல்ல கம்பெணிதான், பிருந்தா"

"இதுபோல் பானு ஜாலியாப்பேசி ரொம்ப நாளாச்சு, கண்ணன்"

"ஏன் அவங்க ரொம்ப சீரியஸ் டைப்பா?"

"லாஸ்ட் மந்த் இந்தியாவில் அவ கல்யாணம் நடக்க வேண்டியது, நின்னுபோயிடுத்து."

"என்ன ஆச்சு?"

"மாட்ரிமோனில பார்த்து பேசி, இங்கே அவர் இருக்கிற மினியாப்போலிஸ் போய் ஒருவரை ஒருவர் சந்திச்சு, பேசி, இந்தியாவில் ரெண்டுபேருடைய ஃபேரண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணித்தான், கல்யாணமும் ஃபிக்ஸ் பண்ணினாங்க. போன மாசம் ஹைதராபாத் போய் கல்யாணம் செய்வதா எல்லாம் முடிவாயிருந்தது. கல்யாணத்தேதிக்கு ஒரு வாரம் முன்பு, திடீர்னு, அஷோக், அதாவது இவளோட எக்ஸ் ஃபியாண்ஸே, கால்ப் பண்ணி கொஞ்சம் வெடிங்கை போஸ்ட்போன் பண்ணனும்னு சொல்லி இருக்கான்."

"ஏனாம்?"

"அவன் ஏன் னு காரணம் சொல்ல மாட்டானாம். எவ்வளவு நாள் போஸ்ட்போன் பண்ணனும் அல்லது டேட் எதுவும் சொல்ல மாட்டானாம். என்ன விசயம்னு இவ கேட்டால், ரொம்ப பர்சனலான மேட்டராம்!"

"காரணம் சொல்லமாட்டானா?"

"ஆனா, இவள் அவனை நம்பனுமாம்."

"அவன இவளுக்கு கொஞ்ச நாளாத்தான தெரியும்? அப்புறம் என்ன ஆச்சு?"

"இவளுக்கு பல வகையில் சந்தேகம். வேற வழியே இல்லாமல் இந்தியா டிக்கட் கேன்சல் பண்ணிட்டு, பேரண்ட்ஸ்ட்ட என்ன சொல்றதுனு தெரியலை. ஒரே குழப்பம் இவளுக்கு. கடைசியில் இவளே இது சரிப்பட்டு வராதுனு முடிவுக்கு வந்துவிட்டாள், ஒரே அடியா எல்லாத்தையும் கேன்சல் பண்ணிவிட்டாள்"

"பர்சனல்னு சொல்லிட்டான். எப்படி ஃபோர்ஸ் பண்ணிக்கேப்ப? என்ன் பிரச்சினையோ"

"தட் வாஸ் வியேர்ட், கண்ணன்."

"ஸோ எல்லாம் ஓவெரா இப்போ? கல்யாணம் நின்றுச்சு. காரணம் என்னனு தெரியலை?"

"ஆமாம்."

"நமக்குத் தெரியாமல் நெறைய விசயம் இருக்கலாம், பிருந்தா. For some people life can be complicated, Brindha"

"கண்ணன்! இவ லைஃப் பார்ட்னெர் ஆகப்போறவ? சொன்னால்தான் என்ன?"

"மே பி இட் ஹாஸ் நத்திங் டு டு வித் தெம், பிருந்தா."

"எனிவே, இட் இஸ் ஆல் ஓவெர் நவ். பட் பானு வாஸ் வெர்ரி வெர்ரி அப்ஸெட், கண்ணன். அவளுக்கு ஏற்கனவே ஒருமுறை இது மாதிரி நடந்து இருக்காம்"

"ஏற்கனவே என்ன பிரச்சினை?"

"அவ காலேஜ்ல ஒருத்தனோட க்ளோஸாப் பழகி இருக்காள். ஆனா கடைசியில் அவனும் சும்மா ஃப்ரெண்டா பழகினேன்னு சொல்லிக் ஒதுங்கிட்டான் போல."

"ஒருதலைக்காதலா? இவளா கற்பனை பண்ணிக்கிட்டாளோ என்னவோ?"

"அப்படித்தானோ என்னவோ, தெரியலை. ஆனால் அவன் ஒரு ப்ராமினாம். இவ ப்ராமின் இல்லை. அதனாலதான் அவனோட பேரெண்ட்ஸ் ஒத்துக்கலை, அதான் திடீர்னு ஒதுங்கிட்டானு இவ சொல்றா. அதுவும் பாஸிபிள் கண்ணன், சம் ப்ராமிண்ஸ் ஆர் சீப். ஈவன் டுடே தே கேர் எபவ்ட் கேஸ்ட் அண்ட் ஆல்"

"ஷி டிட் நாட் கோ டூ ஃபார் வித் ஹிம், ரைட்? யு நோ வாட் ஐ மீன்? "

"புரியுது. அதான் ஃப்ரெண்டா பழகினேன்னு ஈஸியா ஒதுங்கி இருக்கான்."

"ஸோ, இது ரெண்டாவது தோல்வியா? "பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்"னு சொல்லுவாங்க தெரியுமா?"

"என்னவோ போங்க. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா காண்பிடண்ஸ் போகுது."

"அவசரமாக் கல்யாணம் பண்ணி என்ன சாதிக்கப் போறா? Let me tell you this. There are some good guys certainly out there, Brindha. She just has to wait till she meets a good guy."

"எப்படிச் சொல்றீங்க?" அவள் ஒரு மாதிரியா சிரித்தாள்.

"எனக்குத் தெரிய என் ஃப்ரெண்ஸே அது போல் முதல்ல ஃபெயிலாகி, கடைசியில் தே செட்ல்ட் வித் எ வொண்டர்ஃபுள் கை. தே டோண்ட் லுக் பேக். நவ் த கப்புள் இஸ் வெர்ரி வெர்ரி ஹாப்பி. அது மாதிரி, பானு ஹாஸ் டு மூவ் ஆண். தேர் ஆர் வொர்ஸ்ட் திங்ஸ் இன் த வோர்ல்ட், பிருந்தா"

"இட் இஸ் ஈஸி வென் வீ ஆர் தேர்ட் பேர்சன். அவ நிலைமையில் இருந்தால் கஷ்டம், கண்ணன். ஷி இஸ் ரியல்லி ஸ்கேர்ட்."

"ஆஃப் வாட்?"

"வில் ஷி எவெர் கெட் மேரிட் அண்ட் சச்"

"வெல் ஷி இஸ் ஸ்டில் யங். ஸ்டில் ஹாஸ் லாட்ஸ் ஆஃப் டைம். சரி என்ன சமைச்சு இருக்க, பிருந்த்?"

"பசிக்கிதா உங்களுக்கு, கண்ணன்?"

"பசிக்கிதாவா? என்ன நீ இப்படி கதைசொல்லியே நேரத்தை ஓட்டி அனுப்பிடாதே."

"உங்களை யார் அனுப்பப்போறா? இங்கேயே ஒரு வாரம் தங்கிட்டு போங்க!"

"ஏன் ஒரு வாரம்? பேசாமல் நான் இங்கேயே மூவ் இன் பண்ணிடுறேனே? நம்ம ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்கலாம். வி கேன் சேவ் சம் மணி" அவன் சிரித்தான்.

"நல்ல ஐடியா. இப்படி ஏதாவது உருப்படியான ஐடியாலாம் எப்படி வருது உங்களுக்கு?'

பிருந்தாவின் செல் ஃபோன் பாடியது.

"யாரு அது? ஆண்ட்டியா?"

"ஆமா. இருங்க கொஞ்சம் பேசிக்கிறேன், ப்ளீஸ்?"

"ஹல்லோ"

" ... "

"ஃப்ரெண்டா? வந்து விட்டாள். இங்கேதான் இருக்காள்.. பேசுறியா?"

".... "

"சரி, இன்னொரு நாள் அவளிடம் பேசு"

" ஏய் யார் அவள்? நானா?" என்றான் கண்ணன் அவள் இன்னொரு காதில். அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே லேசா அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் செய்கையால் அவள் இடது கை விரல்கள் அவன் வலது கை விரல்களுக்குள் போய் பின்னிக்கொண்டது. அவளால் அம்மா பேசுவதை கவனித்து கேட்கமுடியவில்லை.

"என்னம்மா சொன்ன?"

".... "

"இல்லை எனக்கு லைன் க்ளியரா இல்லை.. அதான்" என்று அம்மாவிடம் கூசாமல் பொய் சொன்னாள், பிருந்தா.

-தொடரும்

Wednesday 18 November 2009

பாலசந்தர்-ரஜினி (குரு-சிஷ்யன்) படங்கள்!


அபூர்வ ராகங்களில் ரஜினியை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர் அவர்கள்தான். இன்றும் ரஜினி, அவரை தன் குருநாதர் என்றுதான் அழைக்கிறார். ஆனால் தமிழில் ரஜினியை வைத்து கே பி இயக்கிய படங்கள் ஆறே ஆறுதான்.

* அபூர்வ ராகங்கள் (1975)

* மூன்று முடிச்சு (1976)

* அவர்கள் (1977)

* தப்புத்தாளங்கள் (1978)

* நினைத்தாலே இனிக்கும் (1979)

* தில்லு முல்லு (1981)

இதில் முழுக்க முழுக்க ரஜினியை ஹீரோவாக வைத்து எடுத்த படங்கள் இரண்டே இரண்டு. * தப்புத்தாளங்கள், * தில்லு முல்லு இரண்டிலும்தான் ஹீரோ. ஒரு 6 வருடகாலத்தில், 1981 லயே குரு சிஷ்யன் "எரா" முடிந்தது.

பிறகு, கவிதாலயா தயாரிப்பில் ரஜினியை ஹீரோவாக வைத்து மற்றவர்களை வைத்து இயக்க வைத்தார் கே பி. இதில் முக்கியமானவர் எஸ் பி எம். இவர் கவிதாலயா ரஜினியை வைத்து தயாரித்த படங்களில் 4 அவுட் ஆஃப் 8 படங்களை இயக்கியுள்ளார். அமீர்ஜான், சுரேஷ் கிருஷ்ணா, கே எஸ் ரவிக்குமார், பி வாசு தலா ஒரு படம் இயக்கியுள்ளார்கள்.

கே பி தயாரிப்பில் ரஜினி நடித்த படங்கள்

* நெற்றிக்கண் (எஸ் பி எம், 1981)

* புதுக்கவிதை (எஸ் பி எம், 1982)

* நான் மஹான் அல்ல (எஸ் பி எம், 1984)

* வேலைக்காரன் (எஸ் பி எம், 1987)

* சிவா (அமீர்ஜான், 1989)

* அண்ணாமலை (சுரேஷ் கிருஷ்ணா, 1992)

* முத்து (கே எஸ் ரவிக்குமார், 1995)

* குசேலன் (பி வாசு, 2008).

எந்திரன் குழுவில் இரண்டு ஆஸ்கர் நாயகர்கள்!


ரஜினிகாந்த்- ஐஸ்வர்யா ராய் நடிக்க சங்கர் இயக்கும் பிரம்மாண்டமான படம் எந்திரன். அகில உலக பொருளாதார சீர்குழைவினால், இதை தயாரித்த ஐங்கரன் பாதியிலேயே எடுத்த பாதிப்படத்தை சன் டி வியிடம் பேரம் பேசி விற்றுவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். இப்போது சன் க்ரூப் இதை தயாரித்து வருகிறது. 2010 ஏப்ரல் அல்லது ஜூன் மாதம் இது வெளிவரும் என்று எதிரபார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் வின்னர் ஏ ஆர் ரகுமான் தான் இதில் இசையமைக்கிறார் என்பது பழைய செய்தி.

ஆஸ்கர் வின்னர் ரஷூல் பூக்குட்டி (ஸ்லம்டாக்மில்லியனர்) என்பவரும் இந்தக்குழுவில் சேர்ந்து உள்ளார் என்பது புதுச்செயதி!

இந்தப்படத்திற்கு "ஆடியோக்ராஃபி" செய்பவர் ரஷூல் பூக்குட்டிதான் என்று சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்தியிருக்கிறது இவருடைய சமீபத்து நேர்காணல்!

Tuesday 17 November 2009

ஆத்திகர்கள்தான் கடவுளை திட்டுறாங்க!

நாத்திகனை பொறுத்தவரையில் கடவுள் இல்லை. அவரை விட்டுட்டு வேற வேலையைப்பாருங்கனுதான் சொல்றாங்க! ஆனா, கடவுளை வச்சு பொழைப்பு நடத்திய மனிதர்களையும், கடவுளுக்கு நாங்கதான் ரொம்ப க்ளோஸ்னு சொல்லிக்கொண்டு திரிந்த சில பார்ப்பனர்களையும்தான் நாத்திகர்கள் திட்டினார்கள்.

அப்படி திட்டலைனா பார்ப்பனர்கள் தானாவே திருந்தி இருப்பார்களா என்ன? கடவுளே கனவுல வந்து திருந்தச்சொன்னாலும் திருந்தி இருக்க மாட்டார்கள் இவர்கள்! இவர்களுக்கு சொந்தப்புத்தி இருந்து இருந்தால் கண்டவனும் ஏன் வந்து திட்டுறான்? தன் சாதியையும், தன்னையும் மற்றவர்களைவிட பெரிதாக ஏன் நினைத்தார்கள்? இவர்கள் கூடவே பிறந்து வாழ்ந்த பாரதிக்கே இவர்கள் அட்டகாசம் தாங்கமுடியலை. மற்றவர்கள் என்ன செய்வார்கள்?

ஆத்திகர்கள் பொதுவா கடவுளை நல்லா துதிபாடி, புகழ்ந்து நீதான் எங்களை காப்பாத்தனும். நாங்க என்ன அயோக்கியத்தன்ம் செய்தாலும் எங்களை மன்னித்து அருள்புரியனும்னு கடவுளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்து ஐஸ் வைப்பார்கள்.

ஆனால், திடீர்னு, வாழ்வில் தாங்கவே முடியாத துயரம் ஏற்படும்போது உணர்ச்சிவசப்பட்டு கடவுளை, "இரக்கமில்லாதவன்" "கொடுமைக்காரன்" என்று திட்டுபவர்களும் ஆத்திகர்கள்தான்! அப்புறம் உணர்ச்சி வேகத்தில் திட்டிவிட்டு என்ன இப்படி செய்துவிட்டோம்னு, பின்னால போயி அதுக்கும் ஏதாவது சாக்குச்சொல்லி கடவுள்ட்ட மன்னிப்பு கேட்டுக்கொள்வார்கள்.

கடவுள் என்னைக்கு மன்னிக்க மாட்டேன்னு வாய் திறந்து சொன்னாரு? இவங்க சொல்றதை எல்லாம் கேட்டுக்கிட்டு கல்லாத்தானே இருக்காரு?