Showing posts with label மணிகண்டன். Show all posts
Showing posts with label மணிகண்டன். Show all posts

Friday, January 24, 2014

நிசப்தம் வா மணிகண்டன் மேல் வயித்தெரிச்சல்?!

பதிவுலகில் ஒரு சில பதிவர்கள், தொடர்ந்து எழுதும்போது, எழுத்தில் ஒரு ரிதம் பெற்று பலரையும் கவர்ந்து தனக்கென்று ஒரு இடம் பெற்று விடுகிறார்கள். ஒரு சிலர் அப்படி ஒரு இடத்தை, தகுதியைப் பெற்று விட்டார்கள் என்பதை அறிவது எளிது. எப்படி? பெரிய மனுசன் போர்வையில் வாழ்ந்துகொண்டு தான் பெரிய புடுங்கினு நினைப்பில் இருக்கும் ஒரு சில  வயித்தெரிச்சல் கோஷ்டி எல்லாம் அந்தப் பதிவரைப் பார்த்து வயிரெரிந்து ஊரறிய விமர்சிப்பது உலகிற்கே தெரியும்.

சுஜாதா விருது பெற்ற நிசப்தம் மணிகண்டனுடைய எழுத்து எனக்குப் பிடிக்கிதோ இல்லையோ, அவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கொண்டுள்ளார்.  வாசகர்கள் பலரையும் கவரும் வண்ணம் எழுதக் கத்துக்கொண்டுள்ளார். எழுத்தில் ஒரு நல்ல ஃப்ளோ கிடைத்து  நன்றாவே எழுதுகிறார். அப்படி ஒரு மேல்ப் படிக்குப் ஒரு தமிழ்ப் பதிவர் போகும்போது அவரைப் பாராட்டணும். இல்லைனா அவர் எழுத்து உனக்குப் பிடிக்கலையா, "இவன் என்ன பெரிய இவன்?" "நாந்தான் பெரிய புடுங்கி" னு முழுவதும் தவிர்த்துவிட்டுப் போயிடணும். இது ரெண்டையும் செய்ய வக்கிலாத கோமாளி என்ன செய்வான்? தன்னை பெரிய மேதாவினு நினைத்துக்கொண்டு அந்த நெனைப்பில் திரியும் இவர்கள்  பலவாறு அந்தப் பதிவவரை தாக்குவதைக் காணலாம்!

மணிகண்டன் யாருனே எனக்குத் தெரியாது. இவர் சாதீயப் பதிவையும், ஆத்திக நம்பிக்கையையும் நான் இந்தத் தளத்திலேயே விமர்சிச்சு இருக்கேன். அதே நேரத்தில் நமக்குப் பிடிக்கிதோ இல்லையோ அவர் முன்னேற்றத்தை, ஒரு சக தமிழனாகப் பார்த்து பாராட்ட கத்துக்கணும் என்கிற நம்பிக்கையில் வாழ்பவன் நான். அவர் எழுத்தைப் பார்த்து, அவர் முன்னேற்றத்தைப்  பார்த்து வயிரெரிந்து, எதற்கெடுத்தாலும் அவரை விமர்சிப்பது, அவர் பதிவை விமர்சிப்பது,  நக்கலடிப்பது  என்பதெல்லாம் கீழ்த்தர்மான செயல்! அப்படி கோஷ்டி சேர்ந்துகொண்டு அவரை கலாய்ப்பது ஈனத்தமிழன் செய்வது.

அப்படி ஒரு சில அரைவேக்காடுகள் செய்வது அந்தப் பதிவரின் முன்னேற்றத்தை ஒரு படி உயர்த்துமே தவிர நிச்சயம் கீழே இறக்காது!

தொடர்புடைய பதிவுகள்..

பகுத்தறிவுவாதியைச் சாடும் மணிகண்டப் பண்டாரம்!