Tuesday, November 11, 2014

நாம் எங்கே போகிறோம்? பெண் சுதந்திரம்னா இதுதானா?

உலகம் வேகமாக முன்னேறுகிறது. நல் வழியில் மட்டுமல்ல! கெட்ட வழியிலும்தான். எல்லா ஆர்கனைசேஷன் களிலும் கட்டிடத்துக்குள்ளே சிகரெட் குடிக்கக்கூடாது என்பதை அமல்படுத்திவிட்டார்கள். அதனால் புகைபிடிப்பவர்கள் எல்லாம் அவங்களுக்குனு கொடுக்கப்பட்ட ஒரு இடத்தில் கூடி புகைபிடிப்பதைப் பார்க்கலாம்.


பெண் சுதந்திரம் அதிகமாக உள்ள மேலை நாட்டில் முதன்மையானது அமெரிக்கா. இங்கே வெளியில் நின்னு புகைபிடிப்பவர்களில் பெண்களே அதிகம்.

புகைபிடிக்கும் கல்லூரி மாணவிகள்



கல்லூரிக்குச் சொல்லும் அனைத்து மாணவிகளும் (எழுத்துப்பிழை இல்லை! ஆமாம், மாணவிகள்தான்) 18 வயதிலேயே மதுபானம் அருந்துகிறார்கள். அமெரிக்காவில் 21 வயதுதான் சட்டப்படி மது அருந்தலாம் என்கிற நிலை இருந்தும் இவர்கள் 18 வயதிலேயே  மதுபானம் அருந்துவது சாதாரணம். இதுதான் இன்றைய அமெரிக்க கல்லூரி நிலைமை!


மாணவிகள் வைன் குடிக்கிறாங்க..


என்ன? அமெரிக்காலதான் அப்படியெல்லாம் நடக்குதுனு சொல்றீங்களா?

 கலாச்சாரக்காவலர்களை நாம் முட்டாள்கள் என்கிறோம்! சாரு நிவேதிதா அடிவருடிகள் ஒரு பக்கம்! கமலஹாசன் அடிவருடிகள் இன்னொரு பக்கம்! இவர்கள் நாளைய இந்தியா எப்படி இருக்கணும்னு மேலை நாடுகளில் நடக்கும் இதுபோல் முன்னேற்றைத்தைக் காட்டி நாமும் "நாசமாகப் போவோம்" என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

நாம் எங்கே போகிறோம்?

இன்று ஒரு செய்தி, பால்ட்டிமோர் ரேவென்ஸ் என்கிற அமெரிக்க ஃபுட்பால் டீமில் ச்சியர் லீடராக இருந்ந்த 47 வயதுப் பெண்மணி இவர்.


molly shattuck
இன்று Molly Shattuck வயது 47, ஒரு தாய்



ஒரு காலத்தில் ச்சியர் லீடராக இருந்தவர் இவர்



சரி, ஒரு காலத்தில் ச்சியர் லீடர். இன்று இவர் 47 வயதான ஒரு தாய்!

 என்ன செய்தார்?

ஒரு 15 வயது பையனை வன்புணர்வு செய்துள்ளார்!!

அவனை எப்படித் தெரியும்?

இன்ஸ்டக்ராம் என்கிற சமூக வலைதளம் மூலம் பரிச்சயம்..

தன் மகனிடம் அவனுடைய அட்ரெஸ் வாங்கி தன் வீட்டிற்கு அவனை இன்வைட் பண்ணி, தனியாக இருக்கும்போது அவனை ஃபோர்ஸ் பண்ணி வன்புணர்வு செய்துள்ளார்.

தன் குழந்தைகளுடன் இவர்

 இது கதை எல்லாம் இல்லை!

நடந்த உண்மை!

முழுமையான பெண் சுதந்திரம் பெற்றவுடன் நாம் சாதித்தது என்ன? ஆண்களை விட நாங்க எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதே! ஏன் நாங்க சிறுவர்களை வன்புணர்வு செய்தால் என்ன? காலங்காலமா ஆண்கள் மட்டும்தான் செய்யணுமா என்ன? எங்களாலயும் முடியும்!

அதாவது, புகை பிடிப்பது, குடிப்பது, பால்ய பருவத்தில் உள்ள சிறுவனை வற்புறுத்தி "ஓரல் செக்ஸ்" கொடுப்பது!

உலகம் முன்னேறிவிட்டது!

முழுமையான பெண் சுதந்திரம் கிட்டிவிட்டது.

 பாவம் பாரதி இதையெல்லாம் பார்க்காமல் போயிட்டாரே!!

அவர் என்னவோ நினைக்க.. நடப்பது என்னவோ வேறமாதிரிதான் இருக்கு! ஒரு வேளை இதைத்தான் அவரும் எதிர்பார்த்தரோ? யாருக்குத் தெரியும் அவர் என்ன கனவு கண்டார் என்று?

Thursday, November 6, 2014

வருணின் உளறல்கள் (6)

மூத்த பதிவர் தருமிக்கு பதில் சொல்றேன்னு மதுரைத் தமிழன் கொடுத்த காணொளி மற்றும் பார்வையாளர்கள் "டேட்டா" பதிவர்களை ஊக்குவித்ததோ இல்லையோ, பல பதிவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையைத்தான்  உண்டாக்கியுள்ளது என்பதை அவர் அறிவாரா என்று தெரியவில்லை!

மதுரைத் தமிழர் தன்னுடைய ஒரு சில பதிவுகளை 30,000 முதல் 50,000 பேர் வாசிக்கிறார்கள்  என்று சொல்லி, அதற்கான ஆதாரத்தையும் கொடுத்து இருக்கிறார். வாழ்த்துக்கள்!

அவருடைய முயற்சி என்னவென்றால்.. பதிவுலகை குறைத்து மதிப்பிடாமல் முகநூல், ட்விட்டர் போன்றவைகளை புறக்கணித்துவிட்டு பதிவர்கள் பதிவுலகில் நெறைய ஆக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஊக்குவிப்பது.  அதாவது  பதிவர்கள் மனம் தளராமல் நீங்கள் பதிவு எழுத எழுத, வருடங்கள் கடக்கக் கடக்க அவருக்கு கிடைத்த வாசகர்கள்போல் உங்க பதிவுகளையும் குறைந்தது 10,000  வாசகர்களாவது  வாசிப்பாங்கனு சொல்ல முயன்றுள்ளார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? மதுரைத் தமிழரின் பார்வையாளர்கள் டேட்டா வைப் பார்த்துவிட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு  எழுதும் பதிவர்கள் பலரும் பயந்து பீதியடைந்துள்ளனர். தன் தளத்தில் வந்து வாசித்த  வாசகர்களை எண்ணிப் பார்த்த இவர்கள் ..மிகச்சிறிய பார்வையாளர் வட்டத்தையே தங்கள் பதிவு இப்போதும் அடைகிறது  என்பதை உணர்ந்து  "10 வருடம் எழுதும் நம்ம ஒவ்வொரு பதிவுக்கும் 1000 பார்வையாளர்கூட வரவில்லையே!  நம்ம எல்லாம் எதுக்கு பதிவு எழுதுறோம்?"  என்கிற ஒரு மனச் சோர்வுதான்  இப்பதிவால் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு சில நேரங்களில் நம்ம செய்கிற "ஊக்குவிப்பு" முயற்சி  தடம் மாறி,  "டிஸ்கரேஜ்மெண்ட்" ஆகத்தான் முடியும்! அதற்கு இது ஒரு நல்ல உதாரணம்! 

படைப்பாளிகள் கவனிக்கவும்!

நீங்க எத்தனை அழகாக எழுதினாலும், சிறந்த ஆக்கசக்தி உள்ளவராக இருந்தாலும் கவிதை, கட்டுரை, கதை போன்ற ஆக்கங்களுக்கு வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைக்காது. ஆக்கங்களுக்கு மிகவும் குறைவாகவே  வாசகர்கள் வருவார்கள். இது பதிவுலக அனுபவத்தில்  பலருக்குத் தெரியும். அதாவது தக்க  சமயத்தில் வம்பு, சினிமா, டி வி, அரசியல் போன்ற பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதினால், அல்லது கவர்ச்சியான வார்த்தைகளை தலைப்பில் மற்றும் குறிச்சொற்கள் போன்றவற்றில் இட்டு எழுதினால் மட்டுமே அதிக வாசகர்கள் வருவார்கள்.

நீங்க என்னதான் தலைகீழா  நின்னு தண்ணி குடிச்சாலும் ஒரு பதிவுக்கு 30,000 - 50,000 வாசகர்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கமாட்டாங்க. அப்படி ஏதாவது வேணும்னா நீங்க "அவர்கள் உண்மைகள்" தளத்தை ஹேக் பண்ணி உங்க தளமாக்கிக் கொண்டால் மட்டுமே சாத்தியம். :) நான் சொல்வதெல்லாம் உண்மை!

********************
சொந்தக்கதை:

அமெரிக்க நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்வதுண்டு. அவர் வீட்டில் இரண்டு பெரிய நாய்கள் வளர்க்கிறார்கள். அவைகள் மனிதருக்கு உதவி செய்யும் நாய்கள். ஹெல்ப்பர் டாக்ஸ் என்பார்கள்.

குறையுள்ள சிறுவனுக்கு உதவும் ஹெல்ப்பர் டாக்




வயதானவருக்கு ஷாப்பிங் செய்யும் ஹெல்ப்பர் டாக்


 அவைகளில்  ஒன்று கொஞ்சம் வயதானது. பெயர் பெத். 12 வயதாகிறது என்கிறார்கள். தன் வயதிற்கேற்றார்போல் நிதானமாக இருக்கும் பெத். இரண்டாவது ஒன்றுக்கு 4 வயதாகிறது. பெயர் ஜாஸ். முதலில் அன்னியமாகத் தெரிந்த நான் இப்போது ஜாஸ்க்கு நண்பனாகிவிட்டேன் . நண்பர் வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஜாஸுடன் ஒரு 10 நிமிடம் செலவழிக்காவிட்டால், (அதுக்கு உடம்பு சொறிந்துவிடணும், கொஞ்சணும்) என்னை வீட்டுக்கு உள்ளே போகவோ பேசவோ விட மாட்டான் ஜாஸ்! He demands me to give him attention FIRST!

மனிதர்கள் மட்டுமல்ல நாய்களும் அவைகள் மேல் அன்பாக இருந்தால் நம்மிடம் எல்லா நேரங்களிலும் தொடர்ந்து அன்பைக் கொடுக்கும்படி "டிமாண்ட்" பண்ணுகிறதுகள். வீட்டிற்குள் நுழைந்தவுடன் "மொதல்ல என்னைய கொஞ்சிட்டு அப்புறம் போய் உன் நண்பன் வில்லியமைப் பார்!"  என்கிறது ஜாஸ்!

 *************************
பதிவர் சந்திப்பு:

வழக்கம்போல பதிவர்கள் சந்திப்பு மதுரையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தவுடன், சிரத்தையுடன் அதை எடுத்து நடத்திய பதிவர்களுக்கு, சக பதிவர்கள் சிலருடைய விமர்சனங்களால் எரிச்சல், கோபம்!

கடந்த மூன்று  சந்திப்புகளில் ஒவ்வொரு பதிவர் சந்திப்பு நடந்த முடிந்த பிறகும் இதுபோல் ஒரு நிலையைத்தான் பார்க்கிறோம். இது பழகிப்போன விடயம் என்பதால் இந்த முறை இந்தச் சர்ச்சையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

அடுத்த பதிவர் சந்திப்பு முடிந்த பிறகும், அதை எடுத்து நடத்தியவர்களிடம் இருந்து  "இனிமேல் பதிவர் சந்திப்பு அவசியம்தானா?" என்று ஒரு பதிவு கட்டாயம்  வரத்தான் செய்யும் என்பதை இப்போதே சொல்வதற்கு உங்களுக்கு ஆரூடம் தெரியவோ, அல்லது நீங்கள் முக்காலமும் அறிந்த முனிவராக இருக்க வேண்டிய அவசியமோ  இல்லை! தமிழ் அன்பர்கள் எப்படி "அன்பு பாராட்டுவார்கள்" என்பது பற்றிக் கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதும்! :)

***********************

புதிர் மாதிரி!




என்ன முழிக்கிறீங்க? என்னடா இது இழவு னு நினைக்காதீங்க. மேலே உள்ள என் பெயர் என்ன தெரியுமா?


வயாகரானு சொல்லுவாங்க இல்லை? அது ஷாத்சாத் நானேதான்! :)

Saturday, November 1, 2014

மேதாவி ஜெயமோகன் தளத்தில் ஒரு சி னி மா விளம்பரம்!

நித்யானந்தாவுக்கு சாரு விளம்பரம் செய்து அவர் தலையில் அவரே  மண் அள்ளிப்போட்டுக் கொண்டது, பிறகு சாரு தன் தளத்தில் நித்யா பற்றி கட்டுரை என்று எழுதிய அந்த "பொய் மூட்டைகளை" வைரஸ் வந்து தின்றுவிட்டுப் போனது. அதற்கப்புறம் அக்கட்டுரைகளை சாரு, வைரசோட மல்லுக்கட்டி, "வேணும்னே" வைரஸிடம் தோற்று அந்தப் பொய்க்கட்டுரைகளை "ரெக்கவர்" பண்ண முடியாமல் போனது. கடைசியில் வைரஸால் அவைகள் அழிக்கப்பட்டதாக சாரு "கணக்குக் காட்டியது" எல்லாம் எல்லாருக்கும் தெரியும்.

அவர் புளுகும்போதே சாரு தளத்தில் உள்ள நந்தி சில்க்ஸ் கமெர்ஷியல் போல இதுவும் ஒரு நித்யானந்தா கமர்ஷியல்தான் என்பதைப் பலர் புரிந்துகொண்டாலும்,  நித்யா படுக்கையறை ரகசியங்கள் எல்லாம் "மீடியாவால்" அம்பலப் படுத்திய பிறகே  அந்த வைரஸ் வந்து "கவனமாக" அந்தக்கட்டுரைகளை முழுமையாக சாப்பிட்டுவிட்டுப் போனது. இதெல்லாம் பழைய கதை.

இப்போ புதுக்கதைக்கு வருவோம்..

இலக்கிய மேதாவி ஜெயமோகன்  ஒரு சினிமா கமர்ஷியல் கொடுக்கிறார்! யாருக்கு? இன்னுமொரு மேதைக்கு! அதான் இந்த சினிமா மேதை கமலஹாசன் நடிக்கும் "பாபநாசம்" என்கிற படத்துக்கு. மலையாளப் பட "ரீமேக்"க்கான இப்படத்திற்கு  "கட்டுரை வடிவில்" ஒரு கமர்ஷியல் கொடுக்கிறார்.

இந்தக் "கமர்ஷியல் கட்டுரை"யில் இவர் சினிமா கலைஞர்களைப்பற்றி சிலாகித்து  புகழோ புகழோனு புகழ்ந்து (புளுகித்) தள்ளியுள்ளதைப் பார்த்தால்..தன் தேவைக்காக, யாரை வேணா தூக்கி வச்சு காவடி ஆடும் மகா மட்டமான ஒரு ஆள் இந்த இலக்கிய மேதை என்று தெளிவுபடுகிறது.




ஜெமோ - காஷ்மீர்


இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் இலக்கிய மேதாவி ஜெயமோஹந்தான் இதை எழுதினதா? இல்லைனா யாரோ இவர் "சகா" எழுதியதை  இங்கே வெட்டி ஒட்டி வச்சிருக்காரா? னு அதை வாசித்துவிட்டு நான் குழம்பிக் கொண்டிருக்கும் போது வினவு தளத்தில் இதை விமர்சிச்சு ஒரு பதிவு வந்துள்ளது.

அதுக்கப்புறம்தான் இந்த முழு உளறலுக்கு ம் சொந்தக்காரன் மேதாவி ஜெயமோவன் தான்னு இந்த மரமண்டைக்குப்புரிஞ்சது. உளறலில் ஒரு பகுதி, கீழே!!
ஆனால் டீக்கடைக் கிசுகிசுப்பேச்சாளர் முதல் வணிகசினிமாவை கரைத்துக்குடித்து அலசும் அறிவுஜீவி வரை எவருக்கும் தமிழ்சினிமாவைப்பற்றி அனேகமாக ஒன்றுமே தெரியாது! (இந்த எழவும் இந்தாளுக்கு மட்டும்தான்  தெரியும்!)

தமிழ் சினிமாவுலகம் உண்மையில் சிரித்துக்கொண்டே இருக்கிறது என எப்போதும் நினைப்பேன். தமிழ் அரசியலை, பண்பாட்டை, அறிவுஜீவிகளை தமிழ் சினிமா உலகம் பகடிசெய்துகொண்டே இருக்கிறது. வணிக சினிமாவை மிகமிக அதிகமாக கிண்டல்செய்வது சினிமாக்காரர்கள்தான். 
அப்படி பேசப்பட்ட சில பகடிகள் சினிமாவுக்குள்ளும் வந்துள்ளன. எப்படியும் ஒருலட்சம் நகைச்சுவைகளாவது இருக்கும். நாட்கணக்கில் ஒவ்வொரு நிமிடமும் சிரித்தால் தீராது. சினிமாக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு உயர்ந்த இலக்கிய ரசனை உண்டு, நல்ல சினிமா தெரியும். ஆனால் தமிழ் ரசனையின் ஒரு சரியான சராசரியை தொடுவதே அவர்களுடைய சவால். அதற்காகவே முயல்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியை இடைவெளியில்லாமல் பகடி செய்துகொண்டும் இருப்பார்கள்.
கட்டுரை கமர்ஷியல் புரிந்ததா?

ஆனால் ஒன்னு, என்ன எழவைப்பத்தி எழுதினாலும் அதில் தான் ஒரு "மேதை" என்பதுபோல்தான் எழுதும்  இந்தாளு. சினிமாவைப்பத்தி இவர் "சிலாகித்து உளறித் தள்ளுவது" பிறந்ததிலிருந்து சினிமாக்காரனா இருந்த சிவாஜி அல்லது எம் ஜி ஆர் கூட செய்ய முடியாது. சினிமா கலைஞர்கள் பத்தி இயக்குனர் சிகரமோ, அல்லது இலக்கிய திலகமோகூட  கூச்சமே இல்லாமல்  இப்படி   பொய்யும் பிரகடமுமா பீத்து பீத்துனு பீத்தி இருக்க மாட்டாங்க.

சினிமா என்பது ஒரு சொர்க்க பூமி என்றால்..சினிமா கலைஞர்கள் எல்லாருமே, எல்லா நிமிடங்களும் ஜாலியாக இருக்கிறார்கள் என்றால்..ஷோபா, படாப்பட் ஜெயலட்சுமி, லக்ஷ்மி ஸ்ரீ, சில்க் ஸ்மிதா என்று இவ்வளவு பேர் ஏன் தற்கொலை பண்ணி சாகிறாங்க? இந்தாளு சினிமா கலைஞர்கள்னு பிதற்றுவது முழுக்க முழுக்க "கீழ்த் தரமான ஆம்பளைகளை" மட்டுமேவா?

சினிமாவையும் சினிமாக் கலைஞர்களையும் உயர்தரமாக்கி எழுதுகிறேன் என்று இவ்வளவு கேவலமாக ஏன் இந்தாளு புளுகிறான்னு தெரியலை. அருவருப்பா இருக்கு இந்த ஆளை நெனச்சா!

ஒருவரை அநாகரிகமாக, கடுமையாக இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி விமர்சித்தால் அப்படி விமர்சிப்பவரைப் பார்த்தால் அருவருப்பாத்தான் இருக்கும். அதேபோல் ஒரு விசயத்தை, தமிழ் சினிமா கலைஞர்களை தன் தேவைக்காக இப்படி புகழோ புகழ்னு கூச்சமே இல்லாமல் புகழ்ந்து தள்ளியிருக்கான் இந்தாளு. இதுவும்  அருவருக்கத் தக்கவே இருக்கு!