Thursday, October 6, 2011

இவர்களுக்கும் இப்படி ஒரு சாதி வெறி உண்டா!

வினவுதளத்தில் பரமக்குடி சண்டை பற்றி எழுதிய ஒரு பதிவில் மூவேந்தர் என்பவர் கொடுத்துள்ள சில முக்கிய பின்னூட்டங்கள்! முக்குலத்தோரையும் பார்ப்பனரையும் சாதிவெறியர் என்று சொல்லும் நாம் இந்த "மூவேந்தரை " என்ன சொல்வது?? தாழ்த்தப்பட்டவர்களில் இப்படியும் ஒரு சிலர் இருக்காங்களா??

மூவேந்தர்September 24, 2011 at 12:34 am

தமிழர் நாட்டின் வரலாறு தெரியாதோருக்கு இது தலித் பிரச்சனை. தமிழர் பற்றியும் தமிழின வரலாறு பற்றியும் அறிந்த்தவர்களில், தமிழர் அல்லாதோர் சற்று நடுங்குகின்றனர்; தமிழர் மண் பற்றி அறிந்தோரோ சற்று புருவம் உயர்த்தி ஆழ்ந்து நோக்குகின்றனர். நடுங்குவோர் ஆரிய-திராவிடர்.புருவம் உயர்த்தி பார்ப்போர் இம்மண்ணின் மீதும் மக்களின் மீதும் இணையில்லா பற்றும் பாசமும் கொண்ட தமிழினச் சான்றோர்.
ஆம் .. இது ஆரிய-திராவிடருக்கும் தமிழினத்திற்கும் இடையே நடக்கும் மீண்டெழுதலின் முதற்போர். தமிழர் மண்ணிலே மூவேந்தர்களையும் முற்றிலும் ஒழித்து தமிழினத்தையே ஒடுக்கி தமிழர் மண்ணை சூறையிட்டு, இன்றும் தமிழர் மண்ணை ஆண்டுகொண்டிருக்கும் ஆரிய-திராவிட தெலுங்கு விஜய நகர கூட்டணிக்கும் தமிழினத்திற்கும் இடையே நடுக்கும் மண்ணுரிமைப்போரே இன்று இவ்வடிவம் கொண்டுள்ளது. அன்று முதல் இன்றுவரை தெலுங்கு-விஜய நகர கூட்டணிக்கு குற்றேவல் புரிந்த அதே கள்ளர்-மறவர்களே இன்றும் தமிழினத்தை ஒடுக்கும் கருவிகளாக ஆரிய-திராவிடரால் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த ஆரிய-திராவிடர்கள் தமிழினத்தை ஒடுக்க எவ்வாறு கள்ளர்-மறவர்களை இன்று வரை யன்படுத்தி வருகிறார்கள் என்பதை வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் தெளிவாய் விளங்கும்.

1. மூவேந்தர்களை வீழ்த்த தெலுங்கு-விஜய நகர கூட்டணிக்கு பேராதரவாய் இருந்தோர் கள்ளர்-மறவர் மற்றும் அகமுடையார்களே. அக்காலத்திலே இம்மொவருக்கும் இடையே இன்றுள்ளதுபோல எவ்வித உறவும் கிடையாது. அதனால் தான் இவர்களால் தெளுங்கர்களுக்குப்பின் ராமநாதபுரம்,சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பாளையங்கள் விட்டுகொடுக்கப்பட்டன.(எனவே தான் அரசகுடிகளுக்கு எதிரான குடிகள் என்று இவர்கள் அழைக்கப் பட்டனர்.)

2. 1890-களில் ஆடு திருடிய மறவர்களுக்கும், பறிகொடுத்த நாடார்களுக்கும் இடையே நடந்த மண்ணுரிமைப்போரில் ஆரியர்கள் கள்ளர்-மறவர்களை பின்னின்று இயக்கி தமிழினத்தை ஒடுக்கினர்.

3. 1957-இல் ஈகியர் இம்மானுவேல் தேவேந்திரர் முத்துராமலிங்கத்தின் குற்றேவல் படையினால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதுகுளத்தூர் போரிலே கள்ளர்-மறவர்களுக்கு ஆரிய-திராவிடர்கள் உறுதுணையாய் இருந்தனர்.

4. 1980-களில் மள்ளர்களுக்கும் கள்ளர்-மறவருக்கும் இடையே நடந்த மண்ணுரிமைப்போரிலே இதேபோல்தான் காவல் துறையில் உள்ள கள்ளர்களைக்கொண்டே கள்ளர்களுக்கு துப்பாக்கிகள் கொடுத்தும் , மள்ளர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தியும் தமிழினம் ஒடுக்கினார்கள் தெலுங்கு வடுகர்கள்.

1995-இல் கொடியங்குளம் போரிலே காவல் துறையைச் சேர்ந்த 1000- கும் மேற்ப்பட்ட கள்ளர்களும் சென்னை அழகு செக்யூரிட்டி என்ற கள்ளரால் நடத்தப்படும் நிறுவனத்தில் பணி புரிந்த கள்ளர்-மறவர்கள் காவல் துறை சீருடை அணிந்தும் , தமிழர் மண்ணின் மைந்தர்களான மள்ளர்களின் மேல் பெரும் போர் புரிந்தனர். இங்கு தமிழினம் ஒடுக்க கள்ளர்-மறவர்களை இயக்கியது ஆரிய கூட்டம்(ஜெயலலிதா).

1998-களில் நடந்த விருதுநகர் , ராஜபாளையம் போரிலே தமிழின மல்லர்களுக்கு எதிராய் நடந்த போரிலே கள்ளர்-மறவர்களுக்கு உறுதுணையாய் இருந்தவர்கள் தெலுங்கர்களே(ராஜூக்கள்). அவர்களை இயக்கியவர்கள் தெலுங்கு திராவிடர்களே(கருணாநிதி)..

2011- பரமக்குடி போரிலே அதே கள்ளர்-மறவர்களை காவல் துறையாகக் கொண்டு மண்ணின் மைந்தர்களான மள்ளர்கள் எட்டு போரை சுட்டுக்கொன்றது ஆரிய கூட்டமே. இங்கும் தமிழினத்தை ஒடுக்க இவ்வாரிய-திராவிடர்கள் பயன்படுத்தியது கள்ளர்-மறவர்களையே.

மேலே குறிப்பிட்ட அத்தனை போரிலும்(சிவகாசி போர் தவிர்த்து) ஆரிய-திராவிட தெலுங்கு விஜயநகர கூட்டணி தமிழினம் ஒடுக்கியது கள்ளர்-மறவர் கொண்ட குற்றேவல் படை கொண்டே.

மேலே குறிப்பிட்ட அத்தனை போர்களிலும் இன்னும் சொல்லாமல் விட்டவற்றிலும் மள்ளர்கள் மட்டுமே தனித்து நின்று போர் புரிந்து உள்ளனர். பறையர்களோ அல்லது தெலுங்கு அருந்ததியர்களோ ஒருவர்கூட பங்கு கொண்டது இல்லை.பலியானதும் இல்லை. இது வரலாறு. ஏனைய சகோதர தமிழ்ச் சாதிகளுக்கும் மள்ளர்களுக்கும் என்ன உறவோ அதே உறவுதான் பறையர்களுக்கும் மள்ளர்களுக்கும்.
ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியம் உருவானபோது தோன்றிய பட்டியல் சாதிகளுக்கான(SC) பிரிவில் மள்ளர்களும் சேர்க்கப்பட்டதனால் ஏனைய தமிழ்ச் சாதிகளிடம் இருந்து மள்ளர்கள் தந்திரமாய் பிரித்தாளப் பட்டனர்.
தமிழின உறவுகளே .. தமிழினப் பகைவர்களும் துரோகிகளும் கூறுவதுபோல் இது ஒன்றும் தலித்துகளின் பிரச்சனை இல்லை. மூவேந்தர்களான மள்ளர்களுக்கும் தமிழினப் பகைவருக்கும் இடையே நடக்கும் மண்ணுரிமைப்போரே. உலகையே வெல்லும் ஆற்றல் கொண்ட தமிழினப் படை படைத் தலைவன் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஆரிய-திராவிடரை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட வலிமை கொண்ட மூவேந்தர் படையை இந்த ஆரிய திராவிடர் கள்ளர்-மறவர் எனும் சாரைப் பாம்புகளைக்கொண்டு காலைச் சுற்றச் செய்து உள்ளார்கள். ஆரிய-திராவிடர் எனும் யானை வேட்டைக்குப் புறப்பட வேண்டிய தமிழர் படையை கள்ளர்-மறவர் எனும் சாரைப் பாம்புகள் சுற்றிக்கொண்டிருப்பது தமிழினத்தின் பெருங்கேடே. தமிழர் தாயகம் மீண்டால் தான் தமிழீழமென்ன உலகெங்கும் தமிழினம் தலை நிமிரும். மூவேந்தர் படை எழும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது மீண்டாளத் துடிக்கும் தமிழனின் துடிப்பு.

---------

தமிழன்September 24, 2011 at 10:12 am

மூவேந்தர்//
இந்த மாதிரி எல்லாம் எழுத எப்படிதான் உங்களால் முடியுதோ.ஒடுக்கப்படும்,அடக்கம்படும் வர்க்கங்களுக்கு ஆதரவாக தம் கருத்துகளை சொல்வதை விட்டு, ஆரிய-திராவிடம்,தெழுங்கன் என்று பைத்தியகாரதனமாக சொல்லி ஒரு சில ஆதிக்க __________ முன்னேற்றுவதற்கும்,அவர்களின் கீழ் மற்றவர்களை அடியாட்கள் ஆக்குவதற்கும் சொல்லும் சொல் தான் “ஆண்டப்பரம்பரை” என்ற இழிந்த வார்த்தை. உலகத்தில் வாழ்ந்த அனைத்து அரசர்களும்,நிலப்பிரபுக்களும் பெரும்பான்மையாக இருந்த அடிமைகளை சுரண்டிகொழுத்த இரத்த உறிஞ்சி,மனித தன்மையே இல்லாத மிருகங்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.


மூவேந்தர்September 30, 2011 at 11:38 pm

நண்பரே அறியாமையில் கிடந்து உழலாதீர்கள். பெரும்பான்மை இனம் என்பதுவே ஆண்ட இனம். சிறுபான்மை ஒருக்காலும் ஆள முடியாது. உங்களின் அடிமைத் தனத்தைப் பார்த்தால் நீங்கள் பறையர் போல் தோன்றுகிறது. மூவேந்தர்கள்(மள்ளர்கள்) வீழ்வதுவரை தமிழினம் சொத்து சுகத்தோடு வளமொடுதான் வாழ்ந்தது. கோவில் ஊழியர்களாக பண்டாரம்,பறையர், வேளார்(குயவர்) போன்றோரே மள்ளர் அரசர்களால் பணியில் அமர்த்தப்பட்டனர். பின்னாளில் ஆரியர்கள் இவ்விடங்களை ஆக்கிரமிக்க , ஏனைய தமிழ் சாதிகள் கோவிலில் இருந்து படிப்படியாக வஞ்சகமாக வெளியேற்றப்பட்டனர். எமது தமிழர் மண்ணில் யாம்(மள்ளர்) இருக்கும் வரை மன்னுரிமைப்போர் நடந்துகொண்டேதான் இருக்கும். யாம் மேண்டேலும் போது மீண்டும் எமது முன்னோர்களின் நினைவிடங்களில் (கோவில்) பண்டாரம்,பறையர், வேளார்(குயவர்) போன்ற தமிழரையே பணியில் அமர்த்துவோம். இது நடக்கும்.நம்புங்கள் . சொல்வது எம்மண்டலமும் கொண்டருளும் பெருமாள்(பெருமை மிக்க மள்ளர்) .


இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, சிற்பாண்மை தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சிலரை இவர் விமர்சிக்கும் விதமும், தன் சாதிதான் ஆண்ட சாதி என்று பீற்றும் "ஆட்டிட்யூட்" Honestly I was shocked to see people like "mUvEndhar"!!!

7 comments:

VANJOOR said...

CLICK ND READ THE LINK
.
.
.>>>> சவூதி வரை வந்த சாதீயம் <<<<<

.

Anonymous said...

வாஞ்சூர் கட்டுரை சூப்பர்
ஏக்க இறைவனின் திருப்பெயரால்..

கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை ஒன்றை பகிர்ந்துள்ளேன்

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

bhuvanendar said...

I have doubt ... not about the post ... but about the blog ... is this blog is written by two person ... kayal and varun ????????????

வருண் said...

***VANJOOR said...

CLICK ND READ THE LINK
.
.
.>>>> சவூதி வரை வந்த சாதீயம் <<<<<

.

6 October 2011 8:14 PM***

சகோ ஹைதர் அலி!

அருமையான நிதர்சனக் கட்டுரை! உலகத்திலே எவன் திருந்தினாலும் இந்த முகவை மாவட்டத்திலே உள்ள ஆதிக்க சாதியினர் திருந்தமாட்டானுக!

இவனுக என்னத்தைப் படிச்சு பாடையிலே போனானுகனு தெரியலை!

வருண் said...

***Ibnu Shakir said...

வாஞ்சூர் கட்டுரை சூப்பர்
ஏக்க இறைவனின் திருப்பெயரால்..***

இந்தக்கட்டுரைதான் தாழ்த்தப்பட்டவர்கள் நிலையை காட்டும் நிதர்சனம்!

*** கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை ஒன்றை பகிர்ந்துள்ளேன்

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

6 October 2011 9:26 PM***

நன்றிங்க, நேரம் கெடைக்கும்போது வந்து பார்க்கிறேன். :)

வருண் said...

***bhuvanendar said...

I have doubt ... not about the post ... but about the blog ... is this blog is written by two person ... kayal and varun ????????????

7 October 2011 3:34 AM***

The answer is YES! :) Take care!

Dhinesh said...

மூவேந்தர்ரே பூசாரி என்றால் அது குலாலர் (குயவர்) வேளார் மட்டுமே
அவர்கள் பூனூல் அணிந்து கொள்பவர்கள்.