Thursday, December 3, 2020

கொஞ்சம் நம்மை, உலகைப் புரிந்து கொள்வோம்!

எனக்கு அருகில் ரெண்டு இந்தியர்கள் குடும்பம் இருக்காங்க. ஒருத்தர் தமிழ் குடும்பம். இன்னொருவர் தமிழ் தெரியாத இந்தியர் குடும்பம். உண்மைய சொல்லப்போனால், தமிழ் தெரியாதவரை நம்பலாம், உதவி கேக்கலாம்னு தோணும். தமிழர்? எதுலடா ஆதாயம் பார்க்கலாம் னு பார்ப்பாரு. நம்ம கஷ்டப்பட்டா சந்தோஷ்ப்படுவார். நம்க்கு ப்ரமோஷ்னன்னா அவர் நாலு நாளைக்கு சாப்பிட மாட்டார்.

இதில் யாரை நீங்க நண்பரா வச்சுக்குவீங்க?

தமிழ், தமிழ்ப் பற்று, தமிழ் மொழிதான் செம்மொழினு உளறிக் கொண்டு திரியும் தமிழ்ப் பற்றாளர்களைக் கேட்டால் என்ன சொல்வார்கள்?னு எனக்குத் தெரியலை.

நான் என்ன பண்ணுவேன்னா, தமிழ் குடும்பத்தை விட்டு ஒதுங்குவேன். தமிழ் தெரியாதவரிடம் விரும்பிப் பழகுவேன்.

 ------------------------------

ரெண்டாவது சூழ்நிலை!

 தமிழ் தெரிந்தவன் = உங்க சாதிக்காரன்

தமிழ் தெரியாதவன் = வேறொரு சாதிக்காரன் னு

 இதே சூழல்ல எடுத்துக் கோங்க. 

இப்போ? 

 சாதி சாதினு அலையும் சாதி வெறியர்களை விடுங்க.

நான் என்ன பண்ணுவேன்னா, என் சாதிக்கார்னைவிட்டு ஒதுங்குவேன். இன்னொரு சாதியைச் சேர்ந்தவருடன் ப் பழகுவேன்.

----------------------------

தமிழர், நம்ம சாதிக்காரன் என்பதெல்லாம் இதுபோல் சூழல்களில் அர்த்தமற்றதாகிவிடும். எனக்கு மட்டும் இல்லை. இதுதான் மனித இயல்பு.

 In every community, good, bad and ugly people are there. We prefer good people and less trouble!

ஆனால், பொத்தாம் பொதுவாக நாம் தமிழர்னு ஒற்றுமையா இருக்கணும். நம்ம சாதிக்காரன்னு அவனிடம் அனுசரிச்சுப் போகனும் என்பதல்லாம் இதுபோல் ஸ்பெசிஃபிக் சிச்சுவேஷன் வரும்போது அர்த்தமற்றதாகிவிடும்.

----------------------

Most of the time, we dont realize what we really are! What we like and what we dislike, we just get carried away! We dont have time to think! Some can not think!

We all live and die. It is better to understand what life is all about! Again not everyone can! Only a very few understands!

No comments: