Sunday, August 31, 2008

மரணம் வந்தால் தெரிந்துவிடும்!

மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதனென்று புரிந்துவிடும்
ஊர் சுமந்துபோகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும்!

என்பது ஒரு திரைப்படப்பாடலில் வரும் கண்ணதாசன் வரிகள் (இருவர் உள்ளம்). தன்னை மிருகமாக நினைக்கும் மனைவியிடம் தானும் மனிதந்தான் என்றும், அதை நீயும் நான் இறந்தபிறகு உணர்வாய் என்று ஒருவன் அழுதுகொண்டே சொல்லும் சூழல் அது.

மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.

எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!

ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!

இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.

நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!

* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.

* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.

* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.

* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.

மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!

Friday, August 29, 2008

எனக்கும் முதல் முறைதான்!

கல்யாணம் முடிந்து முதலிரவுக்கு அடுத்தநாள் காலையில் அவளைப்பார்க்க வந்த அவள் நெருங்கியதோழி சுமதி கேட்டாள், "எப்படியிருந்தது?" என்று.

"இரண்டு பேருக்குமே முதல் அனுபவம் என்பதால் முழுவதும் வெற்றி அடையவில்லை" என்று வெட்கத்தோடு சொன்னாள் ராஜி!

"அப்படியா?! குஷ்பு தியரியை டிஸ்ப்ரூவ் பண்ணிவிடுவார் போல இருக்கு உன் கணவர்?"

"இது பரந்த உலகம், குஷ்பூ ஒரு அறியாமையில் வாழும் ஒரு அரைவேக்காடு என்கிறார், அவர்," என்றாள் ராஜி!

"சரி, சரி, இன்னும் நிறைய காலம் இருக்கு மெதுவாக வெற்றிவாகை சூடலாம்! வாழ்த்துக்கள்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள் தோழி சுமதி!

"எனக்கும் இது முதல் முறைதான்" என்று கணவன் முத்துக்குமார் அவளிடம் சொன்னவுடன், ராஜிக்கு அதிசயமாகத்தான் இருந்தது “ஆண்களில் இப்படி மக்குக்களும் உண்டா என்று”? அதே சமயத்தில் அவளுக்கு ஏதோ ஒரு அளவில்லாத சந்தோஷம். பெருமை!

தன் அனுபவமில்லாமைக்கு காரணம் அவளுக்குத்தெரியும். ராஜி வளர்ந்த விதம் வேறு. இன்று வரை ஒர் நாள் கூட அவள் தனியாக எங்கும் இரவு தங்கியதில்லை. ஏன் பகலில் கூட ஒரு மணிநேரம் தோழிகள் வீட்டில்கூட தங்கியதில்லை. பெரியவளானவுடன் அம்மா அப்பாவுடன் தவிர யாருடனும், சினிமாவுக்கோ, பீச்சுக்கு, கோயிலுக்கோ போக அனுமதி ராஜிக்குக்கிடையாது. அவள் அம்மாவுக்கு காதல் என்றால் கெட்ட வார்த்தை. வாழ்க்கைக்கு அவசியமில்லாத ஒரு இன்பம். ராஜியின் அண்ணன் பாலுகூட அவளை தொட்டுப்பேசவோ அடிக்கவோ அனுமதி கிடையாது. அப்படியிருக்கும்போது தெரியாத ஆண்கள், முறைப்பையன்கள் போன்றவர்களெல்லாம் இவள் வயதுக்கு வந்த பிறகு இவளை தனியாகப்பார்ப்பது, பேசுவது, பழகுவதெல்லாம் குதிரைக்கொம்பு. பள்ளிக்கும் கல்லூரிக்கும் போகும்போது ராஜியை அப்பா அல்லது அண்ணா வந்து சரியாக அவளை ட்ராப் பண்ணி, பிக் அப் பண்ணி விடுவார்கள். அதனால் அவளுக்கு இன்னொரு ஆணுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு ஒரு போதுமே இருந்ததில்லை. பீரியேட்ஸ் ரெகுலராக இல்லை என்றாலும் அதைப்பற்றி ராஜி கவலைப்பட்டதே இல்லை.

ஆனால், தைரியமாக, தன் கணவர், முத்துகுமாரிடம் கேட்டுவிட்டாள், ராஜி! "நீங்க ஹாஸ்டலில் இருந்து படித்து இருக்கீங்க. என் அளவுக்கு கட்டுப்பாடும் உங்களுக்கு கிடையாது. அப்படி இருந்தும் உங்களுக்கும் எப்படி இது முதல் அனுபவம்?" என்று.

அவள் கணவர் சொன்னார் "ஆண்களிலும் பல வகை இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில், காதல் என்பது நம் சமுதாயத்தில் வெற்றி அடைவதைவிட தோல்வி அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் காதல், அதுனுடன் காமம் கலப்பது முட்டாள்த்தனம்- இது என்னுடைய நிலைமையில்! என் தங்கை திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நினைப்பவன் நான். இன்னொருவன் தங்கையை அல்லது இன்னொருவர் மகளை மட்டும் நான் ஏன் துச்சமாக நினைக்கனும்?. அது மட்டுமல்ல, வாழ்க்கையில், நான் படிப்பு, மார்க்ஸ், ஃப்யூட்சர் என்று போராடிக்கொண்டு இருக்கும்போது, எல்லோருக்கும் ஒரு காதலி கிடைப்பதில்லை. மேலும் அழகான பெண்கள் வந்து என்னை “ஃபோர்ஸ்” பண்ணி என்னைக்காதலிக்கும் அளவுக்கு நான் பெரிய மன்மதனும் இல்லை என்று"

"என்னைப்போல் பல ஆண்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். விபச்சாரியிடம் காமம் கற்றுக்கொள்வதெல்லாம் அவமானமாக, அசிங்கமாக, அருவருப்பாக நினைப்பவன் நான். அதுவும் எயிட்ஸ் நமது நாட்டில் இப்படி பரவிக்கொண்டு இருக்கும்போது, ஏன் வம்பை நான் விலைகொடுத்து வாங்கனும், ராஜி?" என்று முடித்தார் அவள் கணவர், முத்துக்குமார்.

Monday, August 25, 2008

காதல் கல்வெட்டு-10

வருண், நேராக தன் காரில் ஏறி வீட்டை நோக்கி போகும்போது கயலைப்பற்றி யோசித்துக்கொண்டே போனான். அவனுக்கு கயலின் கோபம் புரிந்த மாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது. ஒன்று மட்டும் தெரிந்தது, இரண்டு மூன்று சந்திப்பிலேயே கயலுக்கு அவனிடம் எந்தவிதமான பயமோ, தயக்கமோ இல்லை. தன் மனதில் தோன்றியதை அப்படியே வெளிப்படையாக அவனிடம் சொல்லிவிடுகிறாள். வருணைப்பொறுத்தவரையில் அவளை கஷ்டப்படுத்த நிச்சயம் இந்த ஆலோசனை அவன் கொடுக்கவில்லை. அவனுக்கு உண்மையிலேயே தோன்றியதைத்தான் சொன்னான். வருணுக்கு ஒரு சிலரைத்தான் பிடிக்கும். பிடித்துவிட்டால் அவர்கள் நலம்விரும்பியாகி விடுவான். கயல், தவறான யாரிடமும் மாட்டிக்கக்கூடாது என்று நினைத்தான் அவன். கயல், இவனிடம் எதையுமே மறைப்பதில்லை. ஆனால், வருண், அவளிடம் அப்படியொன்றும் திறந்த புத்தகமாக இல்லை என்று அவனுக்குத்தெரியும். மேலும் கயல், ரொம்ப "நோஸி" டைப் கிடையாது. தேவையில்லாத கேள்விகள் கேட்கமாட்டாள். இது அவளுடைய இயற்கையான குணம். ஜோக் என்ற பெயரில் மற்றவர்களை புண்படுத்துவது போல் ஒருபோதும் அவள் பேசி இன்னும் அவன் பார்க்கவில்லை. எவ்வளவுதான் யோசித்தாலும் அவனால் அவளிடம் எந்த குறையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. இன்றுவரை தான்தான் ரொம்ப நேர்மையானவன் என்று கிணற்றுத்தவளையாக வாழ்ந்தது போல் தோன்றியது. கயலிடம் பழகியபிறகு, அவனுடைய பார்வையில், கயல், அவனைவிட எல்லா வகையிலும் ஒரு படி மேலேயே இருப்பதுபோல் தோன்றியது. She really challenged him without her knowledge.

வீடு வந்ததும், காரை பார்க் பண்ணிவிட்டு அப்பார்ட்மெண்ட் உள்ளே சென்றான். வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஃபோன் மணி அடித்தது. ரிசீவரை எடுத்தான். இன்னொரு முனையில் அவன் அமெரிக்க நண்பன் ஸ்டீவன்!

"What's up, Steven?"

"Hey! There is a change of plan. I am going out for dinner in the evening and I don't know what time I will come back. Can we talk some other time?"

"Sure, Steven!"

"BTW, How did it go with Kayal?"

"It went on fine but I think I sort of made her upset by suggesting something stupid. I enjoy being around her and talking to her. Found a sensible girl who challenges me, Steven"

"Jeez, you like her THAT MUCH?!"

"Yes, I do! I dont see why not? She is beautiful, honest and very intelligent and speaks thamizh and of course has a nice "you know what"

" I never heard you complimenting any girl like that"

"She is exceptional I suppose"

"Talk to you later. bye"

"Bye!"

வருண், ஒரு கேன்சர் "ரிசேர்ச் காண்ஃபரன்ஸ்" போய்விட்டு ஒரு வாரம் சென்றுதான் வந்தான். வந்ததும் நிறைய வேலைகள், அடுத்த ஒரு வாரமும் வேலை வேலை என்று போய்விட்டது. கயலிடம் கால் பண்ணி பேசனும்போல இருந்தது, சும்மா, "எப்படி இருக்கிறாள்" என்று குசலம் விசாரிக்கலாம் என்று நினைத்தான். ஆனால் அவளைக் கூப்பிட ஏதோ தயக்கமாக இருந்தது. அப்பொழுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது இன்றுவரை அவளை அவனாக ஃபோனில் கூப்பிட்டதில்லை என்று. இப்படியே வாரங்கள், மாதங்கள் கடந்தன. அவன் கயலை அதற்குப்பிறகு கூப்பிடவோ பார்க்கவோ இல்லை.

பல மாதங்களுக்குப்பிறகு ஒரு நாள் இரவு, ஜென்னிஃபருடன் ஃபோனில் பேசிக்கொண்டு இருக்கும்போது, ஜென்னி,

"How is your Tamil friend?" என்று கேட்டாள்.

"You mean Kayal?"

"Yeah, How is she?"

"I have not talked with her for months, Jenny! May be I should call her sometime" என்று சொல்லிவிட்டு, கயலைப்பற்றி நினைத்துக்கொண்டே இரவு படுக்கையில் படுத்தான், வருண். கனவில் கயல் வந்து தூங்கவிடாமல் தொந்தரவு செய்தாள்.

வருண் நூலகத்தில் ஒரு புத்தகத்தை செக்கவுட் பண்ண லைனில் நிற்கும்போது, அவனுக்கு முன்னால் கயல் நின்று ஒரு புத்தகம் செக்கவுட் பண்ணிக்கொண்டு இருந்தாள். செக் அவுட் பண்ணிவிட்டு அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு அவள் திரும்பும்போது வருண் பின்னால் லைனில் நிற்பதை நன்கு கவனித்தும் அவனிடம் ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை. மேலும் அவனை கவனித்தவுடன் வேகமாக நூலகத்துக்கு வெளியே நடந்தாள், கயல். இவனிடம் இருந்து அவள் விலகி ஓடுவதுபோல் இருந்தது. வருண், லைனிலிருந்து வெளியில் வந்து தான் எடுத்துப்போக வந்த புத்தகத்தை அங்கேயே ஒரு டேபிலில் போட்டு விட்டு, வேகமாக அவளை தொடர்ந்து வெளியே போனான்.

கயல், வெளியில் வந்தவுடன் பார்க்கிங் லாட்டில் உள்ள அவள் காரை நோக்கிப்போனாள். வருண் வேகமாக பின்னால் சென்று,

"கயல்!" என்று சற்றே சத்தமாக கூப்பிட்டான்.

அவள், வருணை நோக்கி ஒரு வினாடி திரும்பினாள், பிறகு கவனிக்காத மாதிரி காருக்கு சென்று அவள் கார் கதவைத் திறந்து காரில் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்தாள். கதவை அடைக்கவில்லை! பேசாமல் அமர்ந்து இருந்தாள்.

வருண், அவள் காருக்கு அருகில் சென்று மூடாமல் இருந்த அவள் கார் டோருக்கும் அவளுக்கும் இடையில் போய் நின்றான்.


வருண், அவள் முகத்தை நோக்கிக்குனிந்து, "என்ன கயல் ஏன் இப்படி ஒரு ஹாய் கூட சொல்லாமல் போகிறாய்?" என்றான் கனிவுடன்.

"நீங்க யாருனே தெரியலை எனக்கு" என்றாள் கயல், அவன் முகத்தைப் பார்க்காமல். அவள் குரலில், இன்னதென்றே புரியாத உணர்வுக்கலவைகள்!

அவள் கன்னத்தை தன் வலது கரத்தால் பிடித்து அவள் முகத்தை தன்னை நோக்கித் திருப்பினான், வருண். "நிஜம்மா என்னைத் தெரியவில்லை, கயல்?" என்றான் அழுத்தமான குரலில் அவள் கண்களைப்பார்த்து. அவள் கண்கள் கலங்கி இருந்தன

அடுத்த வினாடி, அவள் அழகான உதடுகளில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான், வருண்.

கண் விழித்தான் வருண்!!!

கடிகாரத்தில் நேரம் பார்த்தான். அதிகாலை 1 மணி! எழுந்துபோய் தண்ணீர் ஒரு தம்ளரில் பிடித்துக்குடித்துவிட்டு மறுபடி படுக்கையில் படுத்தான். "ஏன் கயல் பற்றி இப்படியெல்லாம் கனவு வருகிறது?" என்று யோசித்தான். இது வெறும் உடல் கவர்ச்சி மட்டும் தானா இல்லை அதையும் மீறி?

இதற்கிடையில், கயல், இந்த சில மாதங்களில் வேரொருவரை டேட் பண்ணிக்கொண்டிருந்தாள். அவரும், ஒரு தமிழர்தான், இவளுடன் வேலை பார்ப்பவர். இவள் கம்பெணியில் வேறொரு டிப்பார்ட்மெண்டில் இருப்பதால் அவரை இவள் பார்த்ததில்லை. இவளை எப்படியோ விசாரித்து தெரிந்துகொண்டு திடீர்னு ஒரு நாள், ஒரு ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்டில் லன்ச் சாப்பிடும்போது தன்னை அறிமுகம் செய்துகொண்டார். பெயர், ராமகிருஷ்ணன், மதுரையை சேர்ந்தவர் என்றும் இங்குதான் வேலை செய்வதாகவும். ஹாண்ட்சம் ஆகவே இருந்தார். மிகவும் நாகரீகமாக கவனமாகவே பழகினார் என்றே சொல்ல வேண்டும். முதலில் ஒரு லன்ச் டேட்டுக்கு அழைத்தார். வேலையில் இருந்து அப்படியே போய் வந்தாள் கயல். பிறகு தொடர்ந்து அவருடன் இரண்டு மூன்று டேட்ஸ் தொடர்ந்து போய் வந்தாள். அவர் அடுத்த கட்டத்துக்கு போவதற்காக இவள் குடும்பத்தைப்பற்றியெல்லாம் விசாரித்தார்.

அன்று ராமுடன் ஒரு ஹாலிவுட் படம் பார்க்க போயிருந்தாள். வீடு வந்த பிறகு அவரைப்பற்றி அசைபோட்டுக்கொண்டே படுத்திருந்தாள் கயல். ராமை அவள் காதலிக்கிறாளா என்று அவளையே கேட்டுக்கொண்டாள். அதற்கு பதில் இல்லை என்றுதான் வந்தது. ஒவ்வொரு சமயம், அவருடன் இருக்கும்போது, வருண் இப்போ இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பாள். அவளுக்கு அந்த மாதிரி நினைவு வரும்போது ரொம்பவே கில்ட்டியாக இருக்கும்! ஏன் இப்படி ராமோட இருக்கும்போதும் வருண் ஞாபகம் வருகிறது? மறுபடியும் முன்பு ராம்ஜியுடன் இருக்கும்போது தோன்றிய அதே நினைவுகள், என்ன இது இனிமேல் நான் யாரையும் டேட் பண்ணக்கூடாதோ? என்று குழம்பினாள். சரி, நான்தான் இந்த வருணையே நினைத்து உருகுகிறேன். ஆனால் அவர்? அவரை சந்தித்து எத்தனை நாளாச்சு? ஒரு கால் பண்ணி உயிரோடு இருக்கிறேனா என்று கேட்டால், குறைந்தா போய்விடுவார்? இந்த முறை கூப்பிடவேண்டியது நிச்சயம் அவருடைய டேர்ன் தான். அவர்தான் என்னைக்கூப்பிட்டு பேசி இருக்கனும் என்று பிடிவாதமாக நம்பினாள்.

அப்பொழுது அவள் செல்பேசி அலறியது!

"ஹாய், நான் வருண் பேசுறேன். என்னை நினைவிருக்கா கயல்?"

"எப்படி இருக்கீங்க, வருண்?"

"நல்லா இருக்க்கேன் கயல். நீங்க?"

"என் மேல் எதுவும் கோபமா, வருண்?"

"சே சே ஏன் கயல் இப்படியெல்லாம் சொல்றீங்க"?

"இல்லை, உயிரோட இருக்கிறேனானு பார்க்க இப்போவாவது மனது வந்ததே" அவள் குரலில் கோபம் தெறித்தது!

"இல்லை, கயல், நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன். உன்னை கடைசியா பார்த்த பிறகு ஒரு காண்ஃபரன்ஸ் போய்ட்டு வந்தேன். அப்படியே வேலை வேலைனு நேரம் போயிடுத்து. ஒரு சேலஞ்சிங் ப்ராபிளத்தில் வொர்க் பண்ணிக்கொண்டு இருந்தேன்"

"அப்படியா? எப்படி திடீர்னு என் ஞாபகம் வந்தது?"

" சொன்னால் அதுக்கும் உங்களுக்கு கோபம் வரும். அதை நேரில் பார்க்கும்போது சொல்றேனே, கயல்? இந்த சனிக்கிழமை ஈவெனிங் என் வீட்டுக்கு வர்றீங்களா? சும்மா டீ க்குத்தான்"

" மன்னிக்கவும் வருண்! நான் அன்று கோயிலுக்குப்போகனுமே. நீங்களும் வர்றீங்களா என்னுடன்?"

"ஐயோ! நான் சாமியெல்லாம் கும்பிடுவதில்லையே கயல்"

"நான் மட்டும் என்னவாம்? சாமியெல்லாம் கும்பிடுவதில்லை, வருண். ஆனால் அன்று அம்மாவின் பிறந்த நாள். சும்மா அவங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணனும். ஒரு மாதிரி பழகியாகிவிட்டது சிறுவயதில் இருந்து. அதனால் கோயிலுக்குப் போகனும் அம்மாவுக்காக!"

" சரி, நானும் கட்டாயம் வர்றேன் கயல்"

"அப்போ உங்களை வந்து பிக் அப் பண்ணிக்கவா ?"

"சரி அந்த ஸ்டார் பக்ஸ்லயே பிக் அப் பண்ணிக்கிறீங்களா?"

"இல்லை உங்க வீட்டுக்கே வர்றேனே. அட்ரஸ் சொல்லுங்க, வருண்."

"எழுதிக்கோங்க என்று அட்ரஸ் மற்றும் டைரக்ஷன்ஸ் சொன்னான்"

"ஷார்ப்பா 3:50 க்கு வர்றேன், வருண்"

"ஓ கே. பை கயல்!"

-தொடரும்