Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Wednesday, November 2, 2016

கமலு அவர்களே! கல்யாணம் மட்டுமா உடையுது?

உலகநாயகன் விசிறிகள் மன்னிக்கவும். சில வருடங்கள் முன்னால "திருமணங்கள் உடைகின்றன! அதனால் என்னைப் போல் சேர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிதாக இருக்கும். கம்மிட்மெண்ட் இல்லாத உறவுகள் உடையாது. பலப்படும்"  என்பதுபோல் எடுத்துவிட்டார் நம்மாளு.

இப்போ இவருக்கும் கவுதமிக்கும் ஏதோ பிரச்சினையால் பிரிய வேண்டிய கட்டாயம். இவர் கல்யாணம் செய்து ரெண்டு பேரிடம் இருந்து பிரிந்ததுக்கும், சேர்ந்து வாழ்ந்து பிரிந்ததுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இப்போ?

சேர்ந்து வாழ்வதும் திருமணம் செய்து வாழ்வதுபோல்தான். பிரியும்போது ரெண்டிலுமே ஏற்படும் வலி சமமானதுதான். என்ன இவரோட பணம் சொத்து எதையும் சேர்ந்து வாழ்ந்தவர் பெற முடியாது. அந்த வசதிக்காகத்தான் இவரு (அவரும்தான்) சேர்ந்து வாழ்ந்தது. அதைப் பச்சையாக சொல்வதை விட்டுப்புட்டு என்னவோ எனக்குத்தான் வாழத் தெரியும்னு சும்மா எதையாவது சொல்லக்கூடாது.

இந்தக்காலத்தில் நட்பே எளிதாக உடையுது. இதில் கல்யாணம் என்ன? லிவிங்க் இன் டுகெதெர் என்ன?  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்!

எதற்க்கெடுத்தாலும் எனக்குத்தான் எல்லாம் நல்லாப் புரியுது, எனக்குத்தான் வாழத் தெரியும் என்பதுபோல்  எதையாவது உளறாமல் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளுங்கப்பா!

Sunday, December 15, 2013

வித்யா,சோமு,காமினி! (மெச்சூர் வாசகர்களுக்கு மட்டும்)

"மனைவியென்றால் ரொம்ப இண்ட்டிமேட், ஒருவன் தன் எல்லா ஆசைகளையும், வீக்னஸையும் மறைக்காமல்ச் சொல்லி தன் காமதாபத்தை தீர்த்துக்க ஒரு வடிகால் அவள்" னு சோமுவிடம் எந்த மடையன் சொன்னான்னு தெரியவில்லை! கண்டவன் சொன்னதையெல்லாம்  நம்பி தன்னுடைய "பாண்டஷி உலகை" மனைவி வித்யாவிடம் இருட்டில்  உளறி இன்னைக்கு நாசமாப் போயி நடுத்தெருவில் நின்னான் சோமு!

வக்கீல், கோர்ட், அது இதுனு போயி கடைசியில் எல்லாம் ஒரு வழியா நல்லபடியா  முடிஞ்சது. அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இருப்பதால தேவையில்லாத சொந்தக்காரர்கள் ஒப்பாரி, செண்டிமெண்ட்ஸ், நண்பர்கள் அறிவுரைகள் எதுவும் இல்லாம ஒருவழியா "நல்லவிதமாக" விவாகரத்தானது.

இவர்களுக்கு இல்லரவாழ்வினால் ஒரே ஒரு ஆண் குழந்தை. பையன் ப்ரவீனும், "அம்மா, அம்மா" னு சோமுவுக்கு "பை" சொல்லிவிட்டு வித்யா பின்னாலேயே ஓடிட்டான்.  எல்லாம் முடிஞ்சு இப்போ ஒரு வருடத்திற்கு மேலாகுது. விவாகரத்து "அஃபிஸியல்" ஆகிவிட்டது.

****

அன்று வேலை முடிஞ்சு வந்து ஈவனிங் "ஜாகிங்" போயிக்கொண்டிருந்த சோமு, வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தான். "ஜாகிங்" போகக்கூட எட்டு வருடமாக இழந்திருந்த அவனுடைய தனிமனிதச் சுதந்திரம்  கடந்த ஒரு வருடமாக திரும்ப கிடைத்து இருந்தது. சினிமா, பார், டென்னிஸ் க்ளப், வொர்க் அவ்ட், அரை மாரத்தான் ஓடுறது னு தன் நேரத்தை இப்போதெல்லாம் "அர்த்தமாக" செலவழித்துக் கொண்டு இருந்தான், சோமு.

போன வாரம் ஈவனிங் இண்டோர் ஸ்விமிங் பூல் ல காமினியைப் பார்த்தான்.   எக்ஸ் வைஃப் வித்யாவுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் அவள். எதிரும் புதிருமாக அவளைப் பார்த்ததும், "இவ எங்கே இங்க வந்தாள்?"னு யோசனையுடன் ஒரு  "ஹாய்" சொல்லிட்டு ஒதுங்கி லாக்கர் ரூமுக்குள்  நுழைந்து விட்டான்.

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி அங்கே பார்த்தான். அவளும் அதே சிட்டி செண்டருக்குத்தான் வொர்க் அவ்ட் பண்ண வருகிறாள்னு  புரிந்தது அவனுக்கு.


*****

சோமு-வித்யா தம்பதிகளுக்குள் கவர்ச்சி, காதல், காம லீலைகள் எல்லாம் ஆடி அடங்கியவுடன், ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடு தலைதூக்கியது. அடுத்து  ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவர் குறையை இன்னொருவர் சொல்லிக்காட்டி அசிங்கச் சண்டை போட ஆரம்பித்தபோது,  சோமுவுடைய வரம்புமீறல் மற்றும்  அவனோட எல்லா வீக்னெஸுகளும் தெரிந்த வித்யா அவனை  எளிதில், குற்றவாளியாக ஆக்கி வாய்ச்சண்டையில் வென்றாள். மனைவி என்று  நம்பி  அவளிடம் படுக்கை அறையில் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் அவனுக்கு எதிராக அவள் திருப்பும்போது சோமுவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"இதெல்லாம் துரோகம்டி வித்யா! ஆம்படையான் படுக்கையறையில், படுக்கும்போது  சொன்னதையெல்லாம் எனக்கு எதிரா ஆக்குறியே! உன்னை பகவான் மன்னிப்பானா?" என்றெல்லாம் வசனம் பேசிப்பார்த்தான் சோமு.

அவளோ  "நானும் எத்தனை காலமா பொறுமையா பார்த்துண்டே இருந்தேன். ஒரு நாளாவது, ஒரு நேரமாவது, ஏதாவது நல்லவிதமா சொல்லுவேளானு ஏங்கினேன்! ஒவ்வொரு நாளும் அந்த இருட்டில் என் ஆசை கனவை எல்லாத்தையும் நொறுக்கிப் பாழாக்கிட்டேள்! இன்னும் இருண்டுகொண்டேதான் போகுது" என்றாள் அழுகையுடன்.

"உனக்காகத்தானடி எல்லாம் செஞ்சேன்! உன்னை சந்தோஷப்படுத்தனும்னு" என்றான் கோபத்துடன்.

"இந்தா பாருங்கோ! அந்தக் கண்றாவியை எல்லாம் எனக்காக செஞ்சேன்னு சொன்னேள்னா,  அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்!"

"ஆமடி, ஆம்படையான், அவனோட ஆசையை எல்லாம் ஆத்துக்காரிட்ட சொல்லி தீர்த்துக்காமல்,  யாருட்டடி சொல்றது?"

"ஆசையில்லை அதெல்லாம்! உங்களுக்கு காமப் பித்து பிடிச்சு இருக்கு! நேக்கென்ன மனமருத்துவமா தெரியும்? உங்க கண்றாவி காமப் பித்தையெல்லாம் கேட்டு, அதற்கு தீர்வு சொல்ல?"

"ஊரு ஒலகத்துல எல்லா ஆம்படையானும் இப்படித்தாண்டி இருப்பா!"

" உங்களை மாதிரியா? நானும் ருக்மிணி. பத்மா, காமினி எல்லார்ட்டையும் இந்தக் கொடுமையை எல்லாம் சொல்லி அவா ஆத்துக்காரர பத்திக் கேட்டுப் பார்த்தேன். அவா எல்லாம் "என்னடி சொல்ற வித்யா?" "இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லைடி!" னு அதிசயமா கேக்குறா! அவா ஆத்துக்காரர் எல்லாம் உங்களை மாரி காமப்பித்துப் பிடிச்சு அலையலை. அவா எல்லாம் பக்கா  ஜெண்டில் மேனாக்கும்"

"அப்போ யாராவது வப்பாட்டியிடம் இல்லைனா தேவடியாளிடம் போயித்தான் என் ஆசையை எல்லாம் தீர்த்து இருக்கனும்ங்கிறயாடி? அப்போ எதுக்குடி நீ? சும்மா சமச்சுப் போடவா?"

"இனிமேல் எவட்ட வேணா போங்கோ! நேக்கென்ன? உங்களைத்தான் நான் ஒரேயடியா தலை முழுகியாச்சே?"னு சண்டை போட்டுட்டு அவ  எல் எ க்கு போனவதான். அதோட அவ திரும்பி வரவே இல்லை! ப்ரவீன்கூட அவனை கால் பண்ணுவது இல்லை!

 தனிமரமானான் சோமு!

****

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி ஜிம்ல பார்த்தான். வேற நண்பர்களிடம் கால்ப் பண்ணி அவளைப்பத்தி விசாரித்தபோது  காமினிக்கும் அவள் கணவன் ராஜ்க்கும் டைவோர்ஸ் ஆகிவிட்டதாக சொன்னார்கள். அவனுக்குத் தெரிய ரெண்டு பேருக்கும் குழந்தையும் கெடையாது!

ஈவனிங்  பக்கத்தில் இருந்த "கால்டிஸ் காஃபி" ஷாப்ல  மறுபடியும் காமினியைப் பார்த்தான் . அவள் தனியாக வந்திருந்தாள். காஃபி வாங்கிக்கொண்டு சோமுவைப் பார்த்து ஸ்மைல் பண்ணிக்கொண்டு அவன் அருகில் வந்தாள். அவனுக்கு அவள்  இவனை  "ஸ்டாக்" பண்ணுவது போலக்கூட  ஒரு பிரமை.

"ஹாய் சோமு! ஹவ் ஆர் யு?" என்றாள் காசுவலாக.

"ஐ அம் ஃபைன், காமினி. ஹவ் ஆர் யு?"

"டு யு மைண்ட்?"னு அவன் உக்காந்து இருந்த டேபிலில் எதிரில் அமர்ந்தாள்.

 அவள் ஒரு மாதிரியா ஸ்கேர்ட் போட்டு செக்ஸியாக இருந்தாள். அவளுக்கு ரொம்ப கவர்ச்சியான மார்பகங்கள். மேலும் அவள் உடலில் இருந்து வந்த அவள் போட்டிருந்த பர்ஃப்யூம் தனிமையில் வாடும் இவனை ஏதோ செய்தது. கொஞ்ச நேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.

"ஆமா, உங்க எக்ஸ் வித்யா எங்கே இருக்கா இப்போ?" என்று அமைதியை உடைத்தாள் அவள்.

"டைவோர்ஸ்க்கு அப்புறம் "எல் எ" க்கு மூவ் பண்ணிட்டாள். அவளோட ப்ரதர் அங்கே டாக்டரா இருக்கார். ஹி இஸ் சப்போர்டிங் ஹெர்"

"ரியல்லி?"

"ஏங்க, வித்யா  உங்க ஃப்ரெண்ட்தானே? அதிசயமா என்னிடம் இதையெல்லாம் கேக்குறீங்க?" என்றான் சோமு ஒரு மாதிரியான வாய்ஸில்.

"இல்லை எனக்கும் ராஜ்க்கும் நெறையா பிரச்சினை வந்ததும், நான் யாரையும் கால் பண்ணலை.  ஐ லாஸ்ட் டச் வித் ஹெர்" என்றாள்.

"குழந்தை எதுவும் உண்டா உங்களுக்கும் ராஜ்க்கும்?!"

"இல்லை, சோமு! அதான் எல்லாம் ஈஸியா முடிந்தது. நான் இங்கே ரெண்டு ப்ளாக் தள்ளி ஒரு அப்பார்ட்மெண்ட்லதான் இருக்கேன். ஐ அம் லிவிங் அலோன்" என்றாள் அழுத்தமாக.

"ராஜ், ஜெண்டில்மேன் ஆச்சே? என்ன ஆச்சு?"

"ஜெண்டில்மேன் எல்லாம் ஃப்ரெண்டா இருந்தாத்தான் நல்லாயிருக்கும். புருசனா இருந்து டெய்லி அரச்ச மாவையே அரச்சா  ரொம்ப போர் அடிக்கும்!"னு ஒரு மாதிரியாகச் சிரிச்சாள் காமினி.

ஏற்கனவே அவள் உதடுகள் அவனை என்னவோ செய்தது. அவள் இதுபோல் பேசுவது அவனை மேலும் உன்மத்தம் கொள்ளச் செய்தது.

"சரி, நான் போயிட்டு வர்ரேன்ங்க. ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு"னு புறப்பட எத்தனித்தான்.

"உங்க ஃபோன்  # கொடுங்களேன், சோமு?" என்றாள் காமினி.

"இது என் ஹோம் #"னு அதை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

*************
அன்று இரவு  டின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போகும்போது, அவன் ஹோம் ஃபோன் அலறியது.

"ஹல்லோ! நாந்தான் காமினி"

"சொல்லுங்க "

"உங்ககிட்டு ஒண்ணு கேக்கனும்?"

"என்னங்க?"

"இல்லை, உங்க எக்ஸ் வித்யா உங்களைப் பத்தி நெறையா கம்ப்ளைய்ன் பண்ணுவா..'

"என்னனு?"

"நீங்க ரொம்ப மோசம் அது இதுனு."

"ஆமா நான் மோசம்தான்"

" இல்லை இல்ல, படுக்கையறையில்  ரொம்ப "டேர்ட்டி"யா பேசுவீங்களாமே?"

" "

"உண்மையா, சோமு?"

" "

"இல்ல, அதுமாதிரிப் பேசினால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்"

"சாரி, காமினி, ஐ ஹாவ் டு ஸ்லீப் நவ்" னு அவசரமாக ஃபோனை ஹேங் அப் பண்ணிட்டான் சோமு.

சோமுவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே இந்த விசயத்தில் ஒருத்திட்டப்பட்ட அவமானம் வாழ்நாளுக்கும் போதும். திடீர்னு இப்போ வந்த இந்தக் காமினியை நம்பி எதையாவது ஒளறிட்டு எதுக்கு வம்பு? னு அவனுக்கு அந்த வினாடி  புத்தி வந்துவிட்டது. ஆனால் ஒரு கணம்தான் அப்படி தோன்றியது அவனுக்கு. ஃபோனை கட் பண்ணிய மறுகணமே, ஏதோ தவறு செய்துவிட்டது போல உணர்வு வந்து அவனைக் கொன்றது.

ஒரு வேளை வித்யா போலில்லாமல் காமினி வேற டைப்பாக இருந்து தன்னுடைய உளறல்களையெல்லாம் ரசித்தால்?  படுக்கை அறையில் நான் இழுக்கும் இழுவைக்கெல்லாம் சரியாக வருவாளோ? என்னுடைய  தேவைக்கெல்லாம் காமினிதான் சரியான மருந்தோ? அவளுக்கும் என்னைப்போலவே இதேபோல் காமப்பித்து பிடிச்சு இருக்குமோ? அதனால்த்தான் ராஜுடன் அவளால் திருப்தியாக நிம்மதியாக வாழ முடியவில்லையோ? இவளோடு இணைந்தால், ஒருவர் இன்னொருவருவருக்கு மருந்தாக ஆகி இருவரும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறதோ?  என்று குழம்பி குழம்பி தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து கடைசியில் எப்படியோ அன்று இரவு தூங்கினான் சோமு.

அடுத்த நாள், ஈவ்னிங்,  அதே நேரத்தில் வழக்கம்போல் காமினியை "ஜிம்" ல பார்த்தான். ஆனால் அவளோ, இன்று அவனுக்கு ஒரு "ஹாய்"கூட சொல்லாமல் வேண்டும் என்றே சோமுவைத் தவிர்த்துவிட்டு கண்டுக்காமல் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். அடுத்து ஒரு முறை அவன் லாக்கர்க்கு சொல்லும் வழியில் அவளை மறுபடியும் பார்த்தான். அப்போவும், அவனை  தவிர்த்து வேகமாக அவன் முன்னால் நடந்துபோனாள். அப்படி நடந்துபோகும்போது  காமினியின் பின்னழகு அவனை கேலி செய்து கொண்டே நகர்ந்தது. சோமுவால் அவள் ஆடைகளை கலைந்து அவளை நிர்வாணமாக நடக்கவிட்டு அவள் பின்னழகை மனக்கண்ணால் வேடிக்கை பார்க்காமல் இருக்கமுடியவில்லை .

பாவம் சோமு,  "சரி இதோட போய் தொலையிறா சனியன்,  நமக்குக் கிடைத்த  சுதந்திரம் பறிபோகாமல் இருக்கிறதே"னு காமினியை உதறித்தள்ளிவிட்டு  சந்தோஷப்படமுடியாமல் அடி முட்டாளாகிக்கொண்டு போனான். அதென்ன வென்று புரியவில்லை, அவனை அவள் தவிர்ப்பதால் அவள் இன்னும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாள். தனிமையில் துணையில்லாமல் வாடும் அவனுக்கு தானாகவே அவனை நோக்கி வந்த  அவள் ரொம்பவே தேவைப்பட்டாள்.  அன்று இரவு படுக்கையில் படுத்த அவன் அவளை  தன் மனதில் கொண்டு வந்து ஒவ்வொரு ஆடையாகக் கலைந்து  நிர்வாணமாக்கி காமினி அழகை மறுபடியும் ரசிக்க ஆரம்பித்தான்.

அமுதம்போல் அவன் ஃபோன் இனிமையாக இசைத்தது

"ஹல்லோ?"

 காமினிதான்!

"what did you think? I am a whore or something, you bastard!" என்று கத்தினாள்.

"இல்லங்க.."

" Dont you ever hang up on me! Do you UNDERSTAND?"

"சாரிங்க, காமினி! நான் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன்"

"என்ன குழப்பம்?"

"இல்லை திடீர்னு என்னைப் பத்தி எல்லாம் தெரிந்தது போல.. பேசினீங்க..அதான்"

"நான் சைக்காலஜி டீச் பண்ணுறேன். அதான் என்னுடைய வேலை! மேலும் உங்க ஆத்துக்காரி உங்களப் பத்தி எல்லாத்தையும் என்னிடம் புட்டுப் புட்டு வச்சுட்டா"

" "

"Are you there?"

"Yes"

"நான் சொல்றதைக் கேளுங்க, சோமு!"

"சரிங்க"

"I know we are made for each other!"

"எப்படிச் சொல்றீங்க?"

"நான் ஈவனிங் "ஜிம்" ல உங்களைக் கடந்து முன்னால போனேன் இல்லை? நீங்க லாக்கர் ரூம் போகும்போது?"

"ஆமா?"

"பின்னால இருந்து என்ன பண்ணினீங்க அப்போ?"

" "

"Be honest and tell me. Did you look at my butt?"

" "

"Did you undress me and watched my naked butt in your fucking mind or not?"

" "

"உண்மையை சொல்லுடா, பொறுக்கி!"

"காமினி"

"வாட்?"

"உன்னை நான் மனசுக்குள்ளேயே வேறென்னவெல்லாம் செஞ்சேன்னு தெரியனுமா, உனக்கு?"

"யெஸ்"

"நாளை நைட் நீ உன் வீட்டிலேதான் இருப்பியா?"

"ஆமா"

"உன் வீட்டிற்கு வந்து நானே செஞ்சு காட்டுறேன். சரியாடி? தேவடியா!'

"இப்போத்தான் வித்யா சொன்ன சோமு மாதிரி பேசுறீங்க..என்னால அவ்ளோ நேரம் பொறுமையா இருக்க முடியாது"

"நீ சைக்காலஜி டீச்சர்னு சொன்ன? எப்படியோ ஒரு நாள் சமாளி."
----------------------------

அடுத்த நாள் காலையில் வேலைக்குப் போகுமுன்  சோமு சீரியல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.. யாரோ வீட்டு பெல்லை அடிச்சாங்க. யாருடா இப்போ?னு யோசனையுடன் கதவைத் திறந்தான்.

"டாடீ!" னு  ப்ரவீன் கத்தினான். அருகில் வித்யா நின்னுகொண்டிருந்தாள்.

ப்ரவீனை தூக்கி வைத்துக்கொண்டு, "என்ன திடீர்னு?" என்றான் வித்யாவிடம்.

"அண்ணாவுக்கும், மன்னிக்கும் ரொம்ப பிரச்சினை அதிகமாகி டெய்லி சண்டை போடுறா. டைவோர்ஸ் பண்ணிக்கப்போறாளாம்! அங்கே இருந்தால் ப்ரவீன் படிப்பும், மனசும் ரொம்ப  பாதிக்கப்படுது.."

"ஈவ்னிங் பேசலாமா? நான் இப்போ வேலைக்குப் போகனும்!" என்றான் சோமு.

"ஈவ்னிங் சீக்கிரம் வாங்கோ! நான் நெறையா பேசனும்"னு மிகவும் அன்பாகச் சொன்னாள், வித்யா!

வேலைக்குப் போக தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு யோசனையுடன் காரில் அமர்ந்து புறப்பட்டான், சோமு!

-முற்றும்

இது இந்தத்தளத்தில் ஏற்கனவே வந்தஒரு மீள் பதிவுதான். Older version has been edited and modified a bit.

Tuesday, January 6, 2009

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) – 10



பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9.

எல்லா நேரமும் என்னுடைய குடும்பத்தில் இத்தனை பிரச்சினைகள் இருந்தது என்று சொல்ல முடியாது, ஒரு சில சமயம் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டார்ளோ? என்று நான் நினைத்து சந்தோஷப்படும் அளவுக்கு ஏதாவது முன்னேற்றம் நிகழும். ஒன்று சொன்னால் எனக்கே நம்ப சிரமமாக இருக்கும், என்னுடைய பெற்றோர்களின் திருமணம் காதல் திருமணம்! 4 வருடங்கள் அம்மாவை ஒரு தலையாக(!) காதலித்து அப்பா திருமணம் செய்துக்கொண்டாராம். காதல் என்றால் வேறெதுவும் ரொமாண்ட்டிக்காக கற்பனை பண்ணிவிடாதீர்கள். அம்மாவுக்கு ஸ்கூல் முடிந்து வரும் போது பத்திரமாக வீடு வரை பின் தொடர்ந்து வந்து பாதுகாப்பு கொடுப்பது, டைப்பிங் க்ளாஸில் இருந்து பாதுகாப்பு கொடுப்பது- இப்படி தொடர்ந்து இலவச செக்யூரிட்டி சர்வீஸ் செய்து கொடுத்திருக்கிறார். இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொண்டதில்லையாம்(Do you hear a alarm going off in your head?)

இவர்களின் கல்யாணக்கதையைப்பற்றி பேசினால் மட்டும், இருவர் முகத்திலும் புன்சிரிப்பு அரும்புவதை பார்த்திருக்கிறேன். அப்பா,அம்மா பின்னால் சுற்றியதை நேரடியாக ஒப்புக்கொள்ளவே மாட்டார். அம்மா எங்களிடம் ஏதாவது கல்யாணக்கதை சொன்னால், "நம்பாதேமா, பாவம் ஏதோ கற்பனையில் மிதக்கிறாள்" என்றெல்லாம் இடையிடையே கமெண்ட் அடித்துக்கொண்டே இருப்பார். எனக்கே ஒரு வேளை அம்மா ரொம்ப கற்பனை பண்ணுகிறாரோ? என்று சந்தேகாமாக கூட இருந்தது, ஒரு நாள் பெரியம்மாவின்(அம்மாவின் அக்கா) பழைய திருமண ஆல்பம் பார்க்கும் வரை.

சில படங்களில் ஓரமாக ஒல்லியான உருவத்துடனும், கட்டம் போட்ட சட்டை, பெல் பாட்டம் பேண்டுடன் அசடு வழிய சுப்ரமணியபுரம் ஹீரோ மாதிரி நிற்பது அப்பாவா? அப்பாவே தான்! அம்மாவின் அக்கா கல்யாணத்துக்கு, தானே வலிய வலிய எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்திருக்கிறார், எல்லாமே அம்மாவுக்காக! அதே புகைப்படங்களில், கொஞ்சம் தள்ளி பட்டுப்பாவாடை தாவணியுடனும், முகம் முழுக்க பெருமிதத்துடனும் தேவதைப்போல அம்மா நிற்கிறார். இருவர் முகத்திலும் எத்தனையோ எதிர்பார்ப்புகள், கனவுகள்! இங்கே யார் எதிர்ப்பார்ப்பை யார் நிறைவேற்றவில்லை, ஏன் இப்படி எல்லாம் ஆக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு இன்னும் புரியவில்லை. புகைப்பட ஆதாரத்துடன் அம்மா மடக்கியவுடன், அப்பாவுக்கு பேச்சே வராது. சிரித்துக்கொண்டே, "உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லை" என்று ஏதோ அவசரமான வேலை இருப்பது போல எழுந்து சென்றுவிடுவார்.

பெப்சி உமாவுக்குப்பிறகு வேறொரு பெண்ணும் அப்பாவின் கருத்தைக்கவர்ந்தார், வேறு யாரும் இல்லை, சிம்ரன்! ஒரு நாள் டிவியில் "மனம் விரும்புதே" பாட்டுக்கு சிம்ரன் ஆடுவாரே, அந்தப்பாடல் வந்தது, அப்பா உடனே, “யாருமா இந்த பொண்ணு?” என்று ஆர்வமாக கேட்டுத்தெரிந்துக்கொண்டார். அதற்குப்பிறகு எல்லாம் சிம்ரன் மயம். சிம்ரன் படம் என்றால் அது எத்தனை கேவலமான படமாக இருந்தாலும் குடும்பதோடு கிளம்பிவிடுவார். அம்மாவுக்கு ரொம்ப எரிச்சல் வரும், “இவள் ஒரு அழகா? பல்லிக்கு பாவாடை சட்டை போட்ட மாதிரி” என்று திட்டிக்கொண்டே கிளம்புவார்.

“ஓவர் வெயிட்டாக இருப்பதால் அப்பாவுக்கு பிடிக்காமல் போய்விட்டதோ” என்ற சந்தேகம் அம்மாவுக்கு வந்துவிட, அதற்கு பிறகு இரவு நேரத்தில் சாப்பிடாமல் டயட் பண்ண துவங்கினார். இரண்டு நாள் பேசாமல் இருந்த அப்பா, மூன்றாவது நாள் “ஏன் அம்மா சாப்பிடாமல் இருக்கிறாள்” என்று கேட்க, நான் உடனே “சிம்ரன் மாதிரி இளைக்க டயட் பண்றாங்க” என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் க்ளாசிக்! “உங்க அம்மா தான் எனக்கு சிம்ரன்! அந்தப்பொண்ணு எல்லாம் என்ன அழகு, சும்மா பல்லிக்கு பாவாடை சட்டை போட்டது மாதிரி” என்று அம்மாவின் டயலாக்கை குறும்பாக அவரிடமே திரும்ப சொல்ல, அம்மாவுக்கு ஒரே பூரிப்பு. அதில் இருந்து அம்மாவை கிண்டல் பண்ண “அம்மா” என்று அழைக்காமல், “சிம்ரன்” என்று கூப்பிடுவோம், காலப்போக்கில் அது “சிம்” என்று உருமாறியது. இங்கே கூட பல முறை “சிம்” என்று எழுதி விட்டு பிறகு அம்மா என்று திருத்தி இருக்கிறேன்.

இப்படி ஒரு சில மணி நேரம் இரண்டு பேரும் பழைய ரொமாண்டிக் கனவுகளில் மூழ்குவார்கள், வீடு கொஞ்சம் கலகலப்படையும். ஆனால் அந்த மகிழ்ச்சி எல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது, மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏறிவிடும். இந்த உலகத்திலேயே ரொம்ப அசிங்கமான சண்டையாக நான் கருதுவது என்ன தெரியுமா? கணவன் –மனைவியிடையே நடக்கும் பொருளாதாரம் சம்மந்தமான சண்டைகள்! அப்பாவின் வரவு- செலவு கணக்குகளில் அம்மாவுக்கு ரொம்ப சந்தேகம். முக்கியமாக பொங்கல், தீபாவளி போனஸ் சமயங்களில் சண்டை ரொம்ப தீவிரமடையும்.

சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சரியாக கணக்கு காட்டாமல் மறைக்கிறார் என்பது அம்மாவின் ஆதங்கம். “அதென்ன ஆச்சு, இதென்ன ஆச்சு” என்று தொடர்ந்து அப்பாவை நச்சரிப்பார்(எனக்கு அப்போது அது நச்சரிப்பாக தோன்றியது). ஒரிரண்டு முறை பொறுமையாக பதில் சொல்லும் அப்பா, மூன்றாவது முறை பொறுமை இழப்பார். அவருக்கு கோபம் வந்தால் ரொம்ப அதிகமாக கோபம் வரும், அன்பும் அப்படியே. “ஆமாம் எல்லா பணத்தையும் தே---------- கொடுத்துட்டு வந்தேன், என்ன செய்யனுமோ செய்” என்று பதிலுக்கு இவர் கத்த, அப்புறம் ஒரே கூச்சல், சண்டை, அழுகை. இதுவே ஒரு தொடர்கதையாகப்போனது. அப்போது நான் முடிவு செய்தது தான், “அன்புக்குரியவர்களிடம் பணம் காரணமாக என்றுமே சண்டை போட மாட்டேன்” என்பது.

நான் கொஞ்சம் வளர்ந்து, வரவு செலவு கணக்குகள் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டவுடன், ஒரு முறை அப்பா அக்கவுண்டுகளை சரி பார்த்தபோது ஒன்றை கண்டுபிடித்தேன். நிச்சயமாக கணக்கு சரியாக இல்லை. அம்மா எல்லாவற்றுக்கும் அழுது சண்டை போடுவாரே தவிர, என்னை மாதிரி ஆதாரம் எல்லாம் கண்டுபிடிக்கத்தெரியாத அப்பாவி அவர். எல்லாவற்றுக்கும் ஒழுங்காக கணக்கு எழுதி வைக்கும் பழக்கமுடைய அப்பா, சில செலவு கணக்குகளை எழுதாமல் மறந்திருப்பார் என்பதை நான் நம்பவில்லை. ஏதோ நடந்திருக்கிறது அல்லது நடந்துக்கொண்டு இருக்கிறது. இதை வெளியே சொல்ல எனக்கு பைத்தியமா? அம்மாவிடம் இன்று வரை இதைப்பற்றி மூச்சுவிட்டதில்லை.

- நினைவுகள் தொடரும்

Friday, August 29, 2008

எனக்கும் முதல் முறைதான்!

கல்யாணம் முடிந்து முதலிரவுக்கு அடுத்தநாள் காலையில் அவளைப்பார்க்க வந்த அவள் நெருங்கியதோழி சுமதி கேட்டாள், "எப்படியிருந்தது?" என்று.

"இரண்டு பேருக்குமே முதல் அனுபவம் என்பதால் முழுவதும் வெற்றி அடையவில்லை" என்று வெட்கத்தோடு சொன்னாள் ராஜி!

"அப்படியா?! குஷ்பு தியரியை டிஸ்ப்ரூவ் பண்ணிவிடுவார் போல இருக்கு உன் கணவர்?"

"இது பரந்த உலகம், குஷ்பூ ஒரு அறியாமையில் வாழும் ஒரு அரைவேக்காடு என்கிறார், அவர்," என்றாள் ராஜி!

"சரி, சரி, இன்னும் நிறைய காலம் இருக்கு மெதுவாக வெற்றிவாகை சூடலாம்! வாழ்த்துக்கள்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள் தோழி சுமதி!

"எனக்கும் இது முதல் முறைதான்" என்று கணவன் முத்துக்குமார் அவளிடம் சொன்னவுடன், ராஜிக்கு அதிசயமாகத்தான் இருந்தது “ஆண்களில் இப்படி மக்குக்களும் உண்டா என்று”? அதே சமயத்தில் அவளுக்கு ஏதோ ஒரு அளவில்லாத சந்தோஷம். பெருமை!

தன் அனுபவமில்லாமைக்கு காரணம் அவளுக்குத்தெரியும். ராஜி வளர்ந்த விதம் வேறு. இன்று வரை ஒர் நாள் கூட அவள் தனியாக எங்கும் இரவு தங்கியதில்லை. ஏன் பகலில் கூட ஒரு மணிநேரம் தோழிகள் வீட்டில்கூட தங்கியதில்லை. பெரியவளானவுடன் அம்மா அப்பாவுடன் தவிர யாருடனும், சினிமாவுக்கோ, பீச்சுக்கு, கோயிலுக்கோ போக அனுமதி ராஜிக்குக்கிடையாது. அவள் அம்மாவுக்கு காதல் என்றால் கெட்ட வார்த்தை. வாழ்க்கைக்கு அவசியமில்லாத ஒரு இன்பம். ராஜியின் அண்ணன் பாலுகூட அவளை தொட்டுப்பேசவோ அடிக்கவோ அனுமதி கிடையாது. அப்படியிருக்கும்போது தெரியாத ஆண்கள், முறைப்பையன்கள் போன்றவர்களெல்லாம் இவள் வயதுக்கு வந்த பிறகு இவளை தனியாகப்பார்ப்பது, பேசுவது, பழகுவதெல்லாம் குதிரைக்கொம்பு. பள்ளிக்கும் கல்லூரிக்கும் போகும்போது ராஜியை அப்பா அல்லது அண்ணா வந்து சரியாக அவளை ட்ராப் பண்ணி, பிக் அப் பண்ணி விடுவார்கள். அதனால் அவளுக்கு இன்னொரு ஆணுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு ஒரு போதுமே இருந்ததில்லை. பீரியேட்ஸ் ரெகுலராக இல்லை என்றாலும் அதைப்பற்றி ராஜி கவலைப்பட்டதே இல்லை.

ஆனால், தைரியமாக, தன் கணவர், முத்துகுமாரிடம் கேட்டுவிட்டாள், ராஜி! "நீங்க ஹாஸ்டலில் இருந்து படித்து இருக்கீங்க. என் அளவுக்கு கட்டுப்பாடும் உங்களுக்கு கிடையாது. அப்படி இருந்தும் உங்களுக்கும் எப்படி இது முதல் அனுபவம்?" என்று.

அவள் கணவர் சொன்னார் "ஆண்களிலும் பல வகை இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில், காதல் என்பது நம் சமுதாயத்தில் வெற்றி அடைவதைவிட தோல்வி அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் காதல், அதுனுடன் காமம் கலப்பது முட்டாள்த்தனம்- இது என்னுடைய நிலைமையில்! என் தங்கை திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நினைப்பவன் நான். இன்னொருவன் தங்கையை அல்லது இன்னொருவர் மகளை மட்டும் நான் ஏன் துச்சமாக நினைக்கனும்?. அது மட்டுமல்ல, வாழ்க்கையில், நான் படிப்பு, மார்க்ஸ், ஃப்யூட்சர் என்று போராடிக்கொண்டு இருக்கும்போது, எல்லோருக்கும் ஒரு காதலி கிடைப்பதில்லை. மேலும் அழகான பெண்கள் வந்து என்னை “ஃபோர்ஸ்” பண்ணி என்னைக்காதலிக்கும் அளவுக்கு நான் பெரிய மன்மதனும் இல்லை என்று"

"என்னைப்போல் பல ஆண்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். விபச்சாரியிடம் காமம் கற்றுக்கொள்வதெல்லாம் அவமானமாக, அசிங்கமாக, அருவருப்பாக நினைப்பவன் நான். அதுவும் எயிட்ஸ் நமது நாட்டில் இப்படி பரவிக்கொண்டு இருக்கும்போது, ஏன் வம்பை நான் விலைகொடுத்து வாங்கனும், ராஜி?" என்று முடித்தார் அவள் கணவர், முத்துக்குமார்.