Thursday, May 28, 2009

நான் திராவிடன்-கருணாநிதி!!!

பொய்! பொய்! பச்சை பொய்!!! எது பொய்? திராவிடர்- ஆரியர் பிரச்சினை இன்றும் தலைவிரித்து ஆடவில்லை என்று எவரும் மறுத்துச் சொன்னால் அது பச்சை பொய்!

என்னைக்கேட்டால் முதல்வர் கருணாநிதி தனக்குத்தானே தன்னை திராவிடன் என்று ஞாபகப்படுத்தி தன்னைத்தானே குட்டிக்கொள்வது நல்லதுதான். அவருக்கு மற்றும் ராமதாஸு, வை கோ போன்ற எல்லாருக்கும் தாங்கள் திராவிடன் என்பது அரசியல் ஆதாயம் தேடுவதில் மறந்துவிட்டது!

தமிழனுக்கு தமிழன் உதவமுடியாதற்கு காரணம் என்ன? தமிழன் இந்தியாவை ஆளவில்லை! இன்னும் திராவிடன் - ஆரியன் பிரச்சினைதான் இதற்கு அடிப்படைக் காரணம். இன்னும் ஆரியன்தான் நம்மை ஆண்டு கொண்டு இருக்கான் என்பதென்னவோ உண்மைதான். ஒரு தமிழன் பிரதம மந்திரியாக இருந்து இருந்தால், ஈழமக்கள் கண்ணீர் என்றோ துடைக்கப்பட்டு இருக்கும். எல்லாவற்றிற்கும் காரணமான இந்திய அமைதிப்படையே இலங்கைக்கு போய் இருக்காது.

மன்மோஹன் சிங், சோனியா காந்தியெல்லாம் திராவிடர் அல்ல அல்ல் என்பதை நாம் மறுபடியும் ஞாபகப்படுத்திக்கொள்ளனும்! சேது சமுத்திர திட்டத்தை எக்ஸக்யூட் பண்ண முடியாதற்கு காரணம் இன்னும் ஆரிய சுப்ரீமஸிதான். "ராமர் கட்டாத அந்தப் பாலத்தை" இடிக்க முடியாததற்கு காரணம் ஆரியர்கள் அன்று விதைத்த விதைதான். அவர்கள் எழுதிய இராமாயாணம் என்கிற கதைதான். ராமாயாணத்தில் ஆரிய சுப்ரீமஸி அழகா சொல்லப்பட்டு இருக்கிறது. அதை திராவிடன் மறந்து கொண்டு வருகிறான்.

2 comments:

ராஜ நடராஜன் said...

//என்னைக்கேட்டால் முதல்வர் கருணாநிதி தனக்குத்தானே தன்னை திராவிடன் என்று ஞாபகப்படுத்தி தன்னைத்தானே குட்டிக்கொள்வது நல்லதுதான். அவருக்கு மற்றும் ராமதாஸு, வை கோ போன்ற எல்லாருக்கும் தாங்கள் திராவிடன் என்பது அரசியல் ஆதாயம் தேடுவதில் மறந்துவிட்டது!//

ஏன் உங்க வீட்டுத் திண்ணை காலியா கிடக்குது?

வருண் said...

இந்தப்பதிவில் ஒண்ணும் புதுசா விசயம் இல்லைனு காலியா விட்டுட்டாங்க போல, நடராஜன் :-)