Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Sunday, November 16, 2014

லிங்கா! இது எப்படி இருக்கு?!

நான் ஏற்கனவே சொன்னேன். ஒரு புகைப்படத்தில் இவர் இருந்தால் அவர் பக்கம் உங்க கண்கள் திரும்பும் என்று. அதற்கு விதிவிலக்கும் உண்டு என்றேன். நீங்கள் அனைவருமே என்னை ஆமோதித்தீர்கள். இப்போது இன்னொரு சேலன்ஞ்.

இந்தப் படத்தை ஹிந்து தளத்திலிருந்து எடுத்து வந்தேன். லிங்கா ஆடியோ ரிலீஸ்ல எடுத்த புகைப்படம் இது.

Actor Rajinikanth with Sonakshi Sinha and Anushka Shetty at 'Lingaa' audio launch in Chennai on Sunday. Photo: R. Ragu


உலகை எப்படிப் புரிந்து  கொள்வது?

முதலில் உங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உலகைப் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொருவரையும் நீங்கள் விமர்சிக்கும்போது உங்களை அங்கே பொருத்தி, அந்நிலையை யோசிச்சுப் பாருங்க. பல உண்மைகள் வெளிப்படும்.

மேலே உள்ள படத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத்தான் விமர்சிப்பார்கள். காரணம்? நாம் அனைவருமே ஒரே படத்தை பலவாறுதான் பார்க்கிறோம்.

உங்க விமர்சனத்தை வைத்து உங்களை எடை போடலாம். நீங்க வாயைத் திறக்கும்போது, வார்த்தைகளை கொட்டும்போது, உங்களை நீங்கள் உலகுக்கு காட்டுறீங்க என்பதே உண்மை.

ஏன் என்றால் ஒவ்வொருவர் விமர்சனமும் வேற வேற மாதிரி இருக்கே? படம் ஒண்ணுதானே?

பார்ப்பவர் கோணம் மாறுவதால் படமும் மாறுகிறது. படத்தை மாற்றுபவர் யார்?

நீங்கள்தான்!

எதுக்கு வம்பு வருண்? நான் விமர்சிக்காமலே போயிடுறேன். :)))

Monday, April 28, 2014

நாந்தான் ஸ்பெஷல்! இல்லை நாந்தான்! போடாங்!

"நாந்தான் ஸ்பெஷல்!"

"இல்லை! நாந்தான்!"

"ஆமா, நீ யாரு?"

"நான் ஹைட்ரஜன்! நீ யாரு?"

"நான் ஆக்ஸிஜன்!"

"ஆக்ஸிஜனா? ஆமா நீ ஏன் ஸ்பெஷல்?"

"நான் இல்லைனா இவ்வுலகில் எந்த உயிரினமும் வாழமுடியாது! எல்லோருடைய உயிரோட்டமும் என்னால்தானே ஓடுது. இதுகூடத் தெரியாதா?"

"நான் இல்லைனா வாழ்ந்திடுமாக்கும்?  தண்ணீரில் ரெண்டு மடங்கு நாந்தான். நீ ஒரு மடங்குதான்!  தெரியுமில்ல? பூமியைவிடு!  இந்த பிரபஞ்சத்திலேயே நாந்தான் அதிக அளவு இருக்கேன் தெரியுமா?"

"எதாவது ஒளறாதே! ஆக்ஸிஜன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழமுடியாதுனுதான் சொல்லுவாங்க. ஹைட்ரஜன் இல்லாமல்னு யாராவது சொல்லுவாங்களா?"

"யாரு சொல்றாங்க?  மனிதர்களா?"

"ஆமா."

"அதுகளுக்கு ஆறு அறிவுதான். எனக்கு உடம்பெல்லாம் அறிவு!"

"அது சரி."

 "கீழே பாரு!"



இரண்டு ஹைட்ரஜன் அனுக்கள் சேந்து நியூக்ளியர் ஃப்யூஷன் ரியாக்சன்


"என்ன இது? ஏதோ ரியாக்சன் மாதிரி இருக்கு"

"நீ  அந்த ரியாக்ஷன் சீக்வென்ஸில் இல்லாதனால இதெல்லாம் புரியாது உனக்கு! சரிதானே? "

"நான் இல்லைங்கிறது இருக்கட்டும். என்ன நடக்குதுனு சொல்லு!"

"சூரிய ஒளி உயிரினங்களுக்கு அவசியமா?"

"ஆமா"

"அது எப்படி உருவாகுது?"

"சூரியன்ல இருந்து"


The Sun by the Atmospheric Imaging Assembly of NASA's Solar Dynamics Observatory - 20100819.jpg
சூரியன்: இதில் உண்டாகும் ஒளிக்கு மூலகாரணம், ஹைட்ரஜன்கள் இணைந்ஹ்டு உண்டாகும் நியுக்ளியர் ஃப்யூசன் ரியாக்சன்


"சூரியன்ல இருந்து எப்படி ஒளி உண்டாகுது?"

"ஏதோ நியூக்ளியர் ஃபிஷ்ஷன், நியூக்ளியர் ஃப்பியூஷன்னு சொல்றாங்க!"

"அது யாரு யாரு "சேர்ந்து"  "ஒளி சக்தி" உருவாகுது தெரியுமா?"

"யாரு யாரு?"


" நாந்தான் ஹைட்ரஜன். என்னை அழித்துக்கொண்டுதான் நான் ஒளி உருவாக்குறேன். ஒளியில்லைனா இந்த உயிரினங்கள் வாழ முடியாது. நான் இல்லைனா உயிரிங்கங்கள் இல்லை! இனிமேலாவது சும்மா நான் ஆக்ஸிஜன் க்ரேட், மண்ணாங்கட்டினு ஒளறாதே!"

"நீங்க ரெண்டு பேரும் லூசா? ஹைட்ரஜனாம், ஆக்ஸிஜனாம்!  மனிதனால் மதிக்கப்படுவது நாந்தான்!"

"ஐயா யாரு?"

"நாந்தான் "கோல்ட்" என்னை "தங்கம்" என்பார்கள் தமிழில்! பார்க்க அழகா இருப்பேன்"

பொற்காசுகள் (உயிரினங்கள் வாழ அவசியமே இல்லாதது)



தங்கம்! மனிதனால் மதிக்கப்படும் விலை உயர்ந்த பொருள்


"அது சரி, ரொம்ப அழகுதான் நீ! நீ யாருக்கு வேணும்?"

திராவிடர்கள் மட்டுமல்ல பொதுவாக மனிதன் என்றுமே அறியாமையில்தான் வாழ்கிறான். அவன் வாழும் அற்ப வாழ்வு, சுமார் 30 ஆயிரம் நாட்கள்தான். இந்த குறுகிய காலத்தில் அவன் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை, மதிப்புக் கொடுப்பவைகள், போற்றிப் புகழ்பவைகள்  எல்லாம் அவன் உயிர் வாழ எந்தவகையில் உதவாத தங்கம் போன்றவைகள்தான்.

இப்படிப் பட்ட மனித முட்டாள்கள் நிறைந்ததுதான் நம் தமிழ் பதிவுலகமும் கூட! அதனால் இவர்கள் வழங்கும் சான்றிதழ்களை வைத்து உங்களை  நீங்க எடை போடாதீங்க! தாழ்வாவோ, உயர்வாவோ நினைக்காதீங்க!



தொடர்புள்ள பதிவுகள்:


Thursday, November 15, 2012

பெண்களும் தத்துவமும்!

பெண்கள் பொதுவாக தத்துவம் பேசுவதில் ரொம்ப ஆர்வம் காட்டுவதில்லைனு சொல்லுறாங்க. நான் பார்த்த வரைக்கும் அது மிகவும் உண்மையும்கூட. ஒருவகையில் பார்த்தால் பெண்கள் நிறைகுடம்னு சொல்லலாம். லூசுத்தனமா எதுவும் செய்வதும் இல்லை. அப்புறம் செஞ்சுபுட்டு தத்துவம் பேசுவதும் இல்லைனு சொல்லலாம். இது நம்ம ஊரில் மட்டுமல்ல, எல்லா ஊர்லயும்தான், வெள்ளைக்காரப் பெண்கள்கூட  தத்துவம் பேசுவதில் இறங்குவதில்லைனு சொல்றாங்க.

நீங்க கவனிச்சுப் பார்த்தால் அந்தக்காலத்திலிருந்து இன்னைக்குவரைக்கும், பொதுவாக தத்துவ ஞானிகளெல்லாம் ஆண்களாகத்தான் இருக்காங்கலாம்.

சரி, தத்துவம்னா என்ன?

இது எதுக்கு வாழக்கைக்குத் தேவை? என்று தத்துவத்தை கஷ்டப்பட்டு வரையறுப்பதைவிட, நான் படித்ததில் பிடித்த சில தத்துவங்களைத் தருகிறேன்.


1) Love isn't finding a perfect person. It's seeing an imperfect person perfectly.

இணையத்தில் இருந்து படம் 1


2) Love is a state in which a man sees things most decidedly as they are not.
இணையத்திலிருந்து படம் 2

3) Immature love says: 'I love you because I need you.'
Mature love says: 'I need you because I love you'

Love Images Couple
இணையத்லிருந்து படம் 3


4) You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.

5) Judge a man by his questions rather than by his answers.

6) I cannot believe in a God who wants to be praised all the time.

7) I'm not upset that you lied to me, I'm upset that from now on I can't believe you.

8) The true man wants two things: danger and play. For that reason he wants woman, as the most dangerous plaything.

9) It is not a lack of love, but a lack of friendship that makes unhappy marriages.

10) Is man one of God's blunders? Or is God one of man's blunders?

11) He who cannot lie does not know what the truth is.

12) Whatever is done for love always occurs beyond good and evil.


Most of them are by German Philosopher "Friedrich Nietzsche" Here is his photo! :)


ஆமாங்க, இதுவும் ஒரு மீள் பதிவே!

பெண்களும் தத்துவமும்!