Friday, April 10, 2009

Unforgiven (A)-மன்னிப்பே கிடையாது! (4)



மேலே படத்தில், பாதிக்கப்பட்ட விலைமாது டெலைலியா மற்றும் விலைமாது ஸ்ட்ராபெர்ரி


ஐந்து நாட்கள் வைரல் ஃபீவருக்கு அப்புறம் வில்லியம் மன்னி பிழைத்துவிடுவார்! ஜுரம் சரியாகி முழிக்கும்போது, பார்ட்னர்கள், நெட் லோகன் மற்றும் ஸ்கோஃபீல்ட் கிட் இருவரும் இருக்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட அந்த விலைமாது, முகத்தில் கீறல்களுடன் அருகில் வில் மன்னி அருகில் இருப்பாள். வில்லியம் மன்னிக்கு சாப்பாடு கொடுப்பாள். சாப்பிட்டுவிட்டு, வில்லியம் மன்னி ப்ரெண்ட்ஸ் ரெண்டுபேரும் எங்கேனு கேட்பார். அவர்கள் அந்த கவ்பாய்ஸ் ரெண்டு பேரையும் தேடிப் போயிருக்காங்க என்பாள்.

அவள் அஹோர முகத்தை பார்த்துவிட்டு,

"உன்னைதான் வெட்டி கீறினார்களா?" என்பார் வில் மன்னி.

"ஆமா" என்பாள் கவலையுடன்.

" உன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் பேமெண்ட்ல அட்வாண்ஸ் வாங்கிக்கொள்கிறார்கள்.
காசு கொடுக்காமல் எங்களிடம் செக்ஸ் வச்சிக்கிறாங்க" என்பாள்.

"அப்படியா?"

"உனக்கு ஃப்ரீயா வேணுமா?" என்பாள்

"உன்னோடவா? வேணாம்!" என்பார் வில் மன்னி.

அவள் கீறுபட்டு இருப்பாதால் அப்படி சொல்வதாக நினைத்துக்கொண்டு "நான் என்னிடம்னு சொல்லல. மற்ற விலைமாதுகளிடம் நீங்க வச்சுக்கலாம்" என்பாள் ஒரு காம்ப்ளெக்ஸுடன்.

வில் மன்னி சொல்வார், "நீ இப்படி வெட்டுப்பட்டு இருப்பதால் நான் அப்படி சொல்லவில்லை. என் மனைவியால் விலைமாதிடம் என்னால் போகமுடியாது. If I wish to have sex I would certainly have with you than other two girls. You are a beautiful women and you just ahve scars" என்பார்.

"I admire you for being truthful to wife and all. I know lots of men who are not like you!"

"I suppose"

"Your wife is back in Kansas?"

"yeah, she is watching over the younger ones"

The way he says seem as if his wife is alive and taking care of the children in Kansas. He will sound like an excellent human being for her.

"இந்தாங்க உங்களுடைய தொப்பி. நீங்க க்ரீலிஸ்ல விட்டு வந்துட்டீங்க" என்று வில் மன்னியிடம் அவன் தொப்பியை கொடுப்பாள்.

"அந்த செரீஃப், பெரிய முரடன் அவன், அடி அடினு அடிச்சே என்னை கொல்லப்பார்த்தான். இன்னும் என்னை தேடிக்கிட்டு இருக்கானா?"

"லிட்டில் பில்? இல்லை, நீங்க பயந்துகொண்டு திரும்பி போயிட்டதாக நினைக்கிறான்" என்பாள்.

"Are you really gointg to kill those cowboys?" க்யூரியஸா கேட்பாள்.

"I guess so. Still the payment coming. right?"

"yeah".

இதுவரைக்கும், வில்லியம் மன்னி ஒரு நல்ல "வைஸ் மேன்" ஆகத்தான் தெரிவார். ஒரு கொலைகாரன், அயோக்கியன் என்பது இதுவரை தோனாது. He will not take the sherif's brutal beating personally either. He will let it go. All he cares now is the money and killing those two guys and get the money, go back. He does not care about anything. He gets into business now!


முதல் கொலை (டேவி):

டேவி என்கிற அந்த இளைஞன் நண்பர்களுடன் ஒரு குன்றுப்பகுதியில் குதிரையில் ரைட் பண்ணி விளையாண்டு கொண்டு இருப்பான். பக்கத்தில் உள்ள குன்றுகளில் இவர்கள் மூவரும் மறைந்து நின்று அவனை சுட முயல்வார்கள். முதலில் "நெட் லோகன்" தன் ஸ்பென்ஸர் ரைஃபிலை வைத்து அவனை சுடுவார். அந்தப்பையனின் குதிரையில் குண்டு பட்டு குதிரை கீழே சாய்ந்து விழும். அது விழும்போது டேவியின் கால் குதிரைக்கும் தரைக்கும் இடையில் மாட்டி அவன் கால் உடைந்துவிடும். சுடுவதிலிருது தப்பிக்க அவனால் குன்றுகளின் மறைவுக்கு ஓடிப் போகமுடியாது. நண்பர்கள் எல்லாம் சுடுகிற சத்தம் கேட்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள். டேவி கால் உடைந்து தைரில் இருப்பான்.

இப்போ இதெல்லாம் தூரத்தில் நடப்பதால் ஷாட்-ஷைட்டெட் ஸ்கோஃபீல்ட் கிட்-க்கு ஒரு மண்ணும் விளங்காது. என்ன நடக்குது? அவன் செத்துட்டானா? சுட்டுட்டியா? னு கேட்பான்.

நெட் லோகனுக்கு அவனை சுட்டுக்கொல்ல மனசு வராது. தயங்குவான். "

அவன் மலைக்குன்றுகளில் மறையும் முன்னால அவனை முடிக்கனும், “நெட்”" என்பான் வில் மன்னி.

“நெட்” ர¨ஃபிலை வில் மன்னியிடம் கொடுத்துவிடுவான்- நீ சுடு என்பதுபோல். வில் மன்னி இரண்டு குண்டு மிஸ் பண்ணிய பிறகு கடைசி ஷாட்ல அவனை சரியாக வயிற்றில் சுடுவான். அவன் அந்தக்காயத்தில் செத்துவிடுவான்.

இந்த கொலை செய்துவிட்டு திரும்பி வரும்போது நெட் லோகன் ஒரு மாதிரியாகிவிடுவான். அவனுக்கு திடீர்னு பெரிய கில்ட்டி ஃபீலிங்/பயம் வந்துவிடும்.

டேவியை கொன்னுட்டு அடுத்தவனை எப்படி கொல்வதுனு ப்ளான் பண்ணும்போது, நெட் சொல்லுவான், "நான் திரும்பிப்போறேன்" என்று.

வில் மன்னி சொல்லுவான், "நெட்" நீ இங்கேயே இரு, அவனையும் சுட்டுட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சீக்கிரம் போயிடுவோம் என்று. ஆனால் நெட், வில் சொல்வதை கேட்காமல் புறப்பட்டு திரும்பி போவான். அவன் ஸ்பென்சர் ரைஃபிலை வில் மன்னிக்கு வேணுமானு கேட்பான். வில் மன்னி வேணாம். நான் உன் ஷேரை கொண்டு வறேன் என்று அனுப்பிப்வைப்பான்.

நெட் லோகன் மாட்டிக்குவார் (செரீஃப்பால் கொல்லப்படுவார்):

நெட் திரும்பிப்போகும்போது, அவனை சில ஃபார்ம் வொர்க்கர்ஸ் அடையாளம் கண்டு பிடித்து கொண்டுவந்து லிட்டில் பில்லிடம் கொண்டுவருவார்கள். லிட்டில் பில் நெட் லோகனை சித்ரவதை செய்து ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருடைய பெயர், ஊர் பற்றி கேட்பார். நெட் லோகன் உண்மையை சொல்லாமல் பொய் பெயர் விலாசம் சொல்லி சமாளிப்பான். ஆனால் அவனை விசாரிக்கும்போது அருகில் அந்த கதை எழுதுகிறவன் நோட்ஸ் எடுப்பார். அதில் அவன் சொல்லும் பெயர்கள் முன் பின் முரணாக இருப்பதை காட்டுவான். உடனே லிட்டில் பில் நெட் சொல்றது பொய்கள் என்று புரிந்து கொள்வான். அவனை இன்னும் சித்ரவதை பண்ணுவார் செரீஃப்.

இரண்டாவது கொலை (க்விக் மைக்):

நெட் மாட்டியது வில் மன்னிக்கும், கிட் க்கும் தெரியாது. அவர்கள் க்யிக் மைக்கை கொல்ல ஆயத்தமாகி காத்திருப்பார்கள். க்விக் மைக் நண்பர்களுடன், டெபுட்டியின் பாதுகாப்பில் இருப்பார். அப்போது அவன் எப்போ வெளியே வருவான் என்று வில் மன்னியும், கிட் டும் காத்திருப்பாங்க. அவன் வெளியில் உள்ள டாய்லெட் போவதற்காக் தனியாக வெளியே வருவான். ஒரு டாய்லெட் உள்ளே நுழைந்ததும், வில் மன்னி, கிட் இடம் சொல்லி அவனை சுட சொல்லுவான். கிட் அவன் அருகில் சென்று டாய்லெட்லயே வைத்து சுட்டு க்விக் மைக்கை சுட்டுக் கொல்லுவான். சுட்டுவிட்டு உடனே இருவரும் குதிரையில் ஏறி பறந்துவிடுவார்கள்.

இதுதான் கிட் செய்யும் முதல் கொலை என்பதால் கொலை செய்துவிட்டு அவனால் அதை ஜீரனிக்க முடியாது. பயங்கர கில்ட்டி ஃபீலிங்குடன் இருப்பான். நிறைய குடிப்பான்.

நெட் லோகன் மற்றும் கிட் இருவருமே கொலை செய்ததால் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணுவார்கள். வில் மன்னிதான் எதுக்குமே கலங்க மாட்டான்.

அந்த நேரத்தில் அவர்கள் சொன்னபடி சரியாக $1000 கொண்டுவந்து ஒரு விலை மாது அவர்களிடம் கொடுப்பாள். கொடுத்ததும் பணத்தை 3 ஷேரா பிரி என்பார் வில் மன்னி. நெட் ஷேரை நான் கொண்டு போய் கொடுக்கிறேன் என்பான் வில் மன்னி.

அதைக்கவனித்த விலைமாது, நெட் இறந்துவிட்டதாகவும், அது அவர்களுக்கு தெரியும் என்று நினைத்ததாகவும் சொல்லுவாள். அது மட்டுமில்லாமல், அவன் "பாடி"யை க்ரீலிஸ் முன்னால் வைத்து “அசாஸின்களுக்கு இதுதான் இங்கு நடக்கும்” என்று அவன் மேல் ஒரு “சைன்” வைத்து இருப்பதாகவும் சொல்லுவாள்.

இந்த இடத்தில் வில் மன்னி பயங்கர கடுப்பாகிவிடுவான். இதுவரை அவன் பணத்துக்காக கொலை செய்துவிட்டு போவதாக இருப்பான். செரீஃப் அவனை அடித்ததை எல்லாம்பற்றி கவலையே படமாட்டான். ஆனால் இப்போ தன் நண்பன் "நெட் லோகனை" லிட்டில் பில் கொன்னுட்டதாக சொன்னதும் பயங்கர கோபம் வந்துவிடும். அதுவும் அவன் மேலே ஒரு “சைன்” வைத்து இருப்பதை கேட்டதும் வெறியே வந்துவிடும்.

இதுவரை குடிக்காமல் இருந்த வில்லியம் மன்னி, கிட் இடம் இருந்த விஷ்கியை வாங்கி குடிப்பான். பிறகு அந்த விலைமாதிடம் என்ன நடந்ததுனு தெளிவாக கேட்பான்.

அவள் சொல்லுவாள், "நெட் டை ஒரு சில ஃபார்ம் வொர்க்கர்ஸ் பிடிச்சிட்டு வந்தாங்க. அவனை அடிச்சு நீங்க யாருனு விசாரித்தான் லிட்டில் பில். முதலில் நெட் எதையுமே சொல்லவில்லை ஆனால் நீங்க க்யிக் மைக்கை கொன்னவுடன், அதிஅ கேள்விப்பட்ட லிட்டில் பில் அவனை ரொம்ப சித்ரவதை பண்ணியதும், அவன் உங்களைப்பற்ரி உண்மையைச் சொன்னான், நீங்க வில்லியம் மன்னி என்றும், மிசவ்ரியிலிருந்து வருகிறீங்க என்றும், நீங்க ரொம்ப மோசமான கொலைகாரர் என்றும், நெட்டை லிட்டில் பில் கொன்னால், நீ நிச்சயம் திரும்பி வந்து லிட்டில் பில்லை கொன்னுடுவ என்றும் சொன்னான். லிட்டில் பில் சிதரவைதிலேயே அவன் செத்துட்டான்"

“என்னைப்பற்றி உண்மை தெரிஞ்சதும் அதைக்கேட்டு லிட்டில் பில் பயந்தானா?”

“இல்லை” என்பாள்.

“நெட் லோகன் யாரையும் கொல்லவில்லை. நம்ம ரெண்டு பேரும் செய்த கொலைகளுக்கு அவனை கொன்னுருக்கான் லிட்டில் பில்” என்பால் கிட் டை பார்த்து.

பிறகு, "உன்னுடைய ஸ்கோஃபீல்ட் ரிவால்வாரை கொடு!" என்பான்.

"எதுக்கு வில்?"

"என்னிடம் கொடு" என்பான் கோபமாக.

"கிட்" பயந்துகொண்டு அதை அவனிடம் கொடுப்பான்.

“நீ லிட்டில் பில்லை கொல்லப்போறியா? நான் உன்னை மாதிரி இல்லை, வில். நான் இனிமேல் நான் யாரையும் கொல்ல மாட்டேன்” என்பான் கிட்.

வில் மன்னி, "நீ திரும்பி போ மிஸ்" என்று விலைமாதை அனுப்பிவிட்டு,

“நீ ஒண்ணும் பயப்படாதே கிட்! நான் சொல்வதுபடி நீ கேட்கவில்லையென்றாலும் நான் உன்னை கொல்ல மாட்டேன். நீ ஒரு நண்பந்தான் எனக்கு இருக்க” என்பான் வில் மன்னி. பயந்து போய் இருக்கும் கிட் இடம் பணத்தை கொடுத்து, நீ என் ஷேரையும், நெட் ஷேரை என் வீட்டில் கொடுத்துவிடுனு சொல்லுவார் மன்னி. அவனிடம் இருந்து ஸ்கோஃபீல்ட் ரிவால்வாரை வாங்கிக்கொள்வான் வில் மன்னி.

விஷ்கியை எல்லாம் குடித்துவிட்டு, கிட் டை சவுத் நோக்கி அனுப்பிவிட்டதனியாக நேர சலூனுக்கு வருவான் வில்லியம் மன்னி.

அந்த சலூன் முன்னால “நெட் லோகன்” பிணத்தை ஒரு சவப்பெட்டியில் வைத்து இருப்பார்கள்.



அவன் மேலே “திஸ் இஸ் வாட் ஹேப்பன்ஸ் டு அசாஸின்ஸ்” அப்ப்டினு ஒரு சைன் வச்சிருப்பாங்க.



வில் மன்னி நண்பனின் அந்த கோலத்தை பார்த்துவிட்டு உள்ளே நுழைவான்


ஆனால், அவன் வருகையை யாருமே எதிர்பார்க்க மாட்டாங்க. அவர்கள் அனைவரும் லிட்டில் பில் தலைமையில் இவர்கள் இருவரையும் எப்படி துரத்திபோய்ப் பிடிப்பது என்று ப்ளான் போட்டுக்கொண்டு இருப்பார்கள். அதாவது அடுத்த நாள் காலையில் புறப்பட்டு போய் அவர்களை பிடிப்பதாக பேசிக் கொண்டு இருக்கும் போது, வில் மன்னி தன்னுடைய ஷாட் கன்னை காக் செய்கிற சத்தம் கேக்கும்.

எல்லோரும் திரும்பிப்பார்ப்பார்கள். அங்கே தனியாக தன்னுடைய “ஷாட் கன்” துப்பாக்கியை லிட்டில்பில்லை நோக்கி பாயிண்ட் பண்ணி நிற்பான், வில்லியம் மன்னி.



விலைமாதுகள், அந்த எழுத்தாளர், டெபுட்டிகள் எல்லோருமே ஷாக் ஆயிடுவாங்க! எழுத்தாளனுக்கு ஒரே சந்தோஷமாகவும் ஆகும். உள்ளே நுழைந்தவுடன் வில் மன்னி, லிட்டில் பில்லை நோக்கித்தான் தூப்பாக்கியை பாயிண்ட்பண்னி பிடித்து இருப்பான்.

“சலூனுக்கு சொந்தக்காரன் யாரு?” என்பான் வில் மன்னி.

யாரும் ஒண்ணும் சொல்லாமல் இருக்கும்போது, ஒரு குண்டா இருக்கிற டெப்புட்டியை நோக்கி, “நீ சொல்லு!” என்பான்.

அதற்குள் ஸ்கின்னி “நான் தான் இதன் ஓனர்” என்று முன்னால் வருவான்.

அவனை சுடப்போவான் வில் மன்னி. அவனை சுடப்போகும்போது, லிட்டில் பில் கத்துவான், “ஹோல்ட் இட்” என்று.

அதையெல்லாம் சட்டை செய்யாமல் ஸ்கின்னியை தன் முதல் குண்டுக்கு பலியாக்கி சுட்டு கொல்லுவான்.



ஸ்கின்னியை கொன்னதும், லிட்டில் பில் டென்ஷனாகி, “நீ ஒரு கோழை! நிராயுதபாணியை சுட்டுட்ட!” என்பான்.

அதைப்பத்தி எல்லாம் வில் மன்னி கவலையே படமாட்டான்.

“He should have armed himself if he is going to decorate the salon with my friend (ned logan)” என்பான்.

“நீ தான் வில்லியம் மன்னியா? பெண்களையும் குழந்தையையும் கொல்லும் அயோக்கியன்!” என்பான் லிட்டில் பில்.

"That's right. I've killed women and children. Killed just about everything that walks or crawled at one time or another. And I'm here to kill you, Little Bill, for what you done to Ned." என்பான் வில் மன்னி.

அவன் ஷாட் கன் ல மிச்சம் இருக்கிற ரெண்டாவது குண்டை வைத்து லிட்டில் பி லை சுட அவனை குறிவைப்பான்.

“அந்த ஒரு குண்டை வைத்து என்னைய சுட்டதும், இவனை சுட்டுக்கொல்லுங்கள்!” என்று தைரியமாக சொல்லுவான் லிட்டில் பில்.

வில் மன்னி சுடபோவான், ஆனால் அதில் குண்டு இருக்காது (மிஸ் ஃபயர் ஆயிடும்).

உடனே லிட்டில் பில் நேர்வஸா அவன் துப்பாக்கியை எடுக்கப்போவான், எல்லா டெப்புட்டியும் துப்பாக்கியை எடுத்து வில் மன்னியை சுட ரெடியாவாங்க!

வில் மன்னி மிஸ் ஃபயரானதும் உடனே சுதாரிச்சு தன்னுடைய ஷாட் கன் னை லிட்டில் பில் மேலே தூக்கி எறிவான். கன் லிட்டில் பில் மேலே விழுந்ததும் அதனால் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகி, வில் மன்னியை தன் ரிவால்வார் வைத்து சுடும்போது ஃபர்ஸ்ட் ஷாட்டை மிஸ் பண்ணிவிடுவான். ஆனால் அதற்குளவில்மன்னி தன்னுடைய ஸ்கோஃபீல்ட் ரிவால்வாரை எடுத்து, லிட்டில் பில்லை மிஸ் பண்ணாமல் நெஞ்சில் சுட்டுவிடுவான். லிட்டில் பில் கீழே விழுந்துவிடுவான். அடுத்து அவனை நோக்கி சுடும் நாலு டெபுட்டிகளையும் தொடர்ந்து வில் மன்னி சுடுவான். 5 பேரும் மரண காயங்களுடன் கீழே விழுவார்கள்.

-அடுத்த பகுதியில் முடியும்

No comments: