Saturday, April 11, 2009

Unforgiven(A)-மன்னிப்பே கிடையாது! (முடிவு)


லிட்டில் பில், சரியாக இடதுமார்பில் குண்டு துளைக்கப்பட்டு கீழே கிடப்பான். அவனை சுற்றி அவன் டெபுட்டி நான்கு பேர் சாக/செத்தும் கிடப்பார்கள். அதில் ஒரு குண்டான டெபுட்டி, அந்த எழுத்தாளன் மேலே விழுந்து கிடப்பான்.

எல்லோரும் ஒடிவிடுவார்கள்- உயிரோடு இருக்கும் சார்லி என்கிற டெபுட்டியும் வெளியே ஓடிவிடுவான். அப்போ, அந்த எழுத்தாளன் கீழே இருந்து எழுந்திரிப்பான்,

“என்னை சுட்டுட்ட, என்னை சுட்டுட்ட” என்றான் தன் மேல் உள்ள ரத்தத்தை பார்த்து அழுதுகொண்டே எந்திரிப்பான்.

“உன் மேலே குண்டு படல” என்பான் வில் மன்னி தன் ரிவால்வாரை அவனை நோக்கி பாயிண்ட் பண்ணி.

“என்னிடம் துப்பாக்கி இல்லை. தயவு செய்து என்னை சுடாதே!"

“அந்த ரைஃபிலை எடு” என்பான் வில் மன்னி

"நான் ஒரு எழுத்தாளன்” என்பான்.

"கடிதம் எழுதுவியா?"

"இல்லை புத்தகங்கள்!" என்பான்

“அந்த ரைஃபிலை எடுத்து என்னிடம் தா”

“நீ ஐந்து பேரை கொன்னுட்ட! நீ ஒரே ஆளு” என்று சொல்லிக்கொண்டே அவனிடன் ரைஃபிலை எடுத்துக்கொடுப்பான்.

மரணக்காயங்களுடன் கிடக்கும் லிட்டில் பில் இதை வேடிக்கை பார்ப்பான். இப்போ அந்த எழுத்தாளன் ஹீரோ வில்லியம் மன்னி ஆகி இருப்பான்!

“yeah” என்பான் வில் மன்னி.

“யாரை முதல்ல கொன்ன?”

“என்ன?!!” எரிச்சலுடன் கேட்பான் வில் மன்னி.


“இல்லை, திறமையான கன் ஃபைட்டர்ஸ் உடைய பெஸ்ட் ஷாட் முதல் ஷாட்டாகத்தான் இருக்கும்னு லிட்டில் பில் சொன்னான். நீ அவனை கொன்னுட்ட. நீ அவனைத்தான் முதல்ல சுட்ட இல்லையா?” என்பான்.

“ஐ ஆம் அல்வேஸ் லக்கி” என்பான் வில் மன்னி.

“ரெண்டாவது யாரை சுட்ட?” என்பான்.

வில் மன்னி எரிச்சலாகி, “ஐ கென் ஒன்லி டெல் ஹு இஸ் கோயிங் டு பி லாஸ்ட்?” என்று அவனை நோக்கி துப்பாக்கியை காட்டுவான். Meaning, he will kill him if he keeps talking/annoying like this!

அதோடு, அந்த எழுத்தாளன் வெளியே நடந்து போயிடுவான். William Munny wont fall for his compliments or anything. He just has finished what he has to and want to get back home. So, his hero-worshipping wont please him or anything. He will just say I AM LUCKY that I am alive and they are dead. That is all.

அந்த எழுத்தாளன் வெளியே போனதும், வில் மன்னி மறுபடியும் ரைஃபிலை லோட் பண்ணிட்டு கொஞ்சம் விஷ்கியை ஊற்றி குடிப்பான்.

அந்த நேரத்தில் மரணக்காயங்களுடன் இருக்கும் லிட்டில் பில் தன் ரிவால்வாரை வைத்து வில் மன்னியை சுட பாயிண்ட் பண்ணப்போவான். வில் மன்னி தன் ரைபிலை வைத்து அவன் ரிவால்வாரை தட்டிவிட்டு விட்டு, அவன் அருகில் போவான். தன்னுடைய துப்பாக்கியை அவன் கழுத்தில் க்ளோஸாக வைத்து ட்ரிகரை “காக்” பண்ணுவான்.



இந்த நேரத்தில் சாகக்கிடக்கும் லிட்டில் பில் சொல்லுவான்.



“நான் ஒரு வீடு கட்டிக்கொண்டு இருந்தேன். I don't deserve to die like this”

“Deserve got nothing to do with it” என்பான் வில்லியம் மன்னி.

“See you in Hell, William Munny” என்பான் லிட்டில் பில்- வில் மன்னி சுடப்போகும் குண்டை வாங்க தயாராகிக்கொண்டு.

“Yeah” என்று எந்தவித இரக்கமும் இல்லாமல் சுட்டு கொல்லுவான் வில் மன்னி.

It is interesting to note that Little Bill hated Assassins all his life. He said that to the writer “I hate assassins and that assassins are low characters” not long ago. Now that Little Bill himself finally gets killed by an Assassin for his brutality and for his dictatorship! Yeah, it is not fair that an assassin is killing him. God is not fair either lots of times or not?

அங்கே அரைகுறையாக இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு சில டெபுட்டிகளையும் சுட்டு கொன்னுட்டு வெளியே வர தயாராவான், வில் மன்னி. அவனுக்குத்தெரியும் எல்லோரும் மிரண்டு போய் இருக்கிறார்கள் என்று. அவர்களை மிரட்டியே இங்கிருந்து தப்பிக்கனும் என்று முடிவு செய்வான்.

“நான் இப்போ வெளியே வரேன். எவனாவது என் மேலே சுட முயற்சி செய்த உன்னை மட்டுமல்ல, உன் குடும்பம், நண்பர்கள் யாரையும் உயிரோட விடமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே வெளியே வருவான்.

லிட்டில் பில் மற்றும் 4 டெப்டிகள் செத்துட்டானுக, என்கிற சூழலில் யாருக்கும் அவனை சுட தைரியம் இருக்காது.

வெளியே வந்து, தன் குதிரையை அவிழ்த்துவிட்டு தன் நண்பன் நெட் லோகனுடைய பாடியை பார்ப்பான்.

“என் நண்பனை ஒழுங்கா மரியாதையா புதைத்து விடுங்கள். இனிமேல் எந்த விலைமாதையும் குத்துறது வெட்றது என்பதெல்லாம் செய்யாதே! அப்படி ஏதாவது செய்தால் நான் திரும்ப வந்து உங்க எல்லோரையும் கொல்லுவேன்” என்று சொல்லிவிட்டு குதிரையில் ஏறி போவான்.

அவனை பயத்துடன் ஊரே வேடிக்கை பார்க்கும். விலைமாதுகள் அவனை நன்றியுடன் பார்ப்பார்கள். அந்த் எழுத்தாளன் இந்த அதிசயத்தை கண்கூடாக பார்த்து தன் கதையை எழுதி முடிக்க தயாராவான்.

வில் மன்னி, மிசவ்ரிக்கு திரும்பி வந்து தன் மனைவி புதைபட்ட இடத்தில் அவளுக்கு ஒரு மலர் வளையம் வைத்துவிட்டு அந்த ஊரை காலி செய்து குழ்ந்தைகளுடன் வேறு ஊருக்கு போய்விடுவான்.

கடைசிப்பகுதி இந்த யு-ட்யுப் க்ளிப்ல இருக்கு!

http://www.youtube.com/watch?v=5SO5VO2ixWY



அவ்வளவுதான் :-)))))

4 comments:

சென்ஷி said...

:-))

தினமும் முதல் வேளையா உங்க பதிவுல இந்த விமர்சனம் படிக்குறதை வேலையா வச்சிருந்தேன். இன்னிக்கு நல்லவேளையா முடிஞ்சுடுச்சு.

பகிர்விற்கு நன்றிகள்..

வருண் said...

வாங்க சென்ஷி! :-))

நான் ஒரு மாதிரி அப்செஸ்ஸெட் ஆகிவிட்டேன் இந்த படத்தின் மேலே :-))))

உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி:-)

Prosaic said...

It could have been better if you have written what you have perceived from this movie. This one talks loads of things through untold words!

Otherwise nice narration except for very little factual errors! Good job. :)

வருண் said...

***Prosaic said...
It could have been better if you have written what you have perceived from this movie. This one talks loads of things through untold words!***

I agree. I dont know what I wrote. A review or whatever. I just felt like writing a lot about this movie. That is all :))

**Otherwise nice narration except for very little factual errors! Good job. :) **

Thanks :)