Friday, January 28, 2011

சாரு இல்லாத எஸ் ரா வின் நூறு சிறந்த புத்தகங்கள்!

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள், தமிழில் சிறந்த 100 புத்தகங்கள்னு ஒரு லிஸ்ட் வெளியிட்டு உள்ளார். இதில் சாரு புத்தகம் ஒண்ணுகூட இடம்பெறவில்லை! எஸ் ரா, ஜெ மோ, மனுஷ்ய புத்ரன் புத்தங்கள் எல்லாம் இதைல் இடம் பெற்றுள்ளன!

இங்கே இருக்கு அவர் கொடுத்த லிஸ்ட்! இது தரவரிசைப்படுத்தப்படாத லிஸ்ட்னு சொல்லியிருக்கார்.

----------
••
1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார்
2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்
3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு
4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்
5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு
6) திருக்குறள் – மூலமும் உரையும்

7) திருஅருட்பா – மூலமும் உரையும்

8)சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு
9) மணிமேகலை – மூலமும் உரையும்
10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்
11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்
12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
13)பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு
14)பாரதிதாசன் கவிதைகள்.
15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – 12 தொகுதிகள்
16)பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து தொகுத்தவை.
17)திருப்பாவை – மூலமும் உரையும்
18)திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்
19)சித்தர் பாடல்கள்– மூலமும் உரையும்
20)தனிப்பாடல் திரட்டு.
21)பௌத்தமும் தமிழும்– மயிலை சீனி வெங்கடசாமி
22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
23)கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
24)மௌனி கதைகள்
25)சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
26)ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
29)வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு
30)பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு
31)அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு
32)ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
33)லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு
34)தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு
35)ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி
36)விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்
37)ராஜேந்திரசோழன் சிறுகதைகள்
38)நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்
39)சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்
40)பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
41)சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு
42)பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்
43)முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு
44)கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு
45)சுயம்புலிங்கம் சிறுகதைகள்
46)மதினிமார்கள் கதை – கோணங்கி
47)வெயிலோடு போயி – தமிழ்செல்வன்
48)இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்
49)கடவு – திலீப்குமார் சிறுகதைகள்
50)நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு
51)புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
52)புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
53)கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன்
54)மோகமுள் – தி.ஜானகிராமன்
55)பிறகு – .பூமணி
56)நாய்கள் நகுலன்
57)நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்
58)இடைவெளி – சம்பத்
59)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
60)வாசவேஸ்வரம் – கிருத்திகா
61)பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு
62)கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்
63)தலைமுறைகள் – நீல பத்மநாபன்
64)பொன்னியின் செல்வன்– கல்கி
65)கடல்புரத்தில் – வண்ணநிலவன்
66)நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்
67)சாயாவனம் சா.கந்தசாமி
68)கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன்
69)காகித மலர்கள் ஆதவன்
70)புத்தம்வீடு. – ஹெப்சிபா யேசுநாதன்
71)வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
72)விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
73)உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
74)கூகை – சோ.தர்மன்
75)ஆழிசூழ்உலகு– ஜோசப் டி குரூஸ்
76)ம் – ஷோபாசக்தி
77)கூளமாதாரி – பெருமாள் முருகன்
78)சமகால உலகக் கவிதைகள் – தொகுப்பு பிரம்மராஜன்
79)ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு
80)பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு
81)கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு
82)கல்யாண்ஜி கவிதைகள்
83)விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு
84)நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு
85)ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு
86)தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு
87)தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு
88)ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு
89)பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு
90)சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு
91)கோடைகால குறிப்புகள் சுகுமாரன்
92)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன்
93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்
94) ரத்த உறவு– . யூமா வாசுகி
95)மரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு
96)சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.
97)தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு.– கி.ராஜநாராயணன்
98)தமிழக நாட்டுபுறபாடலகள் – நா.வானமாமலை
99)பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவம் கட்டுரைகள்
100)கண்மணி கமலாவிற்கு – புதுமைபித்தன் கடிதங்கள்

------------------------------------
* ஜானகி ராமனின் மோகமுள் இடம்பெற்றிருக்கிறது

* கல்கியின் பொன்னியின் செல்வன்

* ஜெயமோஹனின் விஷ்ணுபுரம்

* எஸ் ராவின் உபபாண்டவம்

போன்ற நாவல்கள் இடம் பெற்றிருக்கின்றன!


ஆனா, சாரு, இதைப்பத்தி கவலைப்பட வேண்டியதில்லை! ஏன் என்றால் சாருவின் புத்தகங்கள் மட்டுமன்றி தமிழில் நல்ல ஆசிரியர்கள் பலருடைய தரமான நாவல்கள், புத்தகங்கள் இந்த லிஸ்டில் இடம் பெறவில்லை!


* பாரதியஞான பீடம் பரிசுபெற்ற அகிலனின் எந்த நாவல்களும் (சித்திரப்பாவை, பாவை விளக்கு போன்றவை) இடம் பெறவில்லை!


* சாண்டில்யன் எழுதிய எந்த சரித்திர நாவல்களும் (யவனராணி, கடல் புறா, மன்னன் மகள், கன்னி மாடம்) இடம் பெறவில்லை!


அதனால எஸ் ராமகிருஷ்ணனின் இந்த லிஸ்ட் ஒண்ணும் உலகத்தரம் வாய்ந்த வரிசப்படுத்தல் இல்லை என்பது என் எண்ணம்! ஃப்ரியா விடுங்க சாரு! :)

6 comments:

பழமைபேசி said...

”அதுக்கென்ன இப்ப? உங்களுக்குப் பிடிச்ச மரப்பசு கூட இல்ல??”, அப்படின்னு குகு பின்னூட்டம் இடலாம்!

Philosophy Prabhakaran said...

// சாண்டில்யன் எழுதிய எந்த சரித்திர நாவல்களும் (யவனராணி, கடல் புறா, மன்னன் மகள், கன்னி மாடம்) இடம் பெறவில்லை! //

அப்படின்னா இந்த லிஸ்ட் சரியில்லை...

வருண் said...

***பழமைபேசி said...

”அதுக்கென்ன இப்ப? உங்களுக்குப் பிடிச்ச மரப்பசு கூட இல்ல??”, அப்படின்னு குகு பின்னூட்டம் இடலாம்!

28 January 2011 1:09 PM**

மோகமுள்ளைவிட மரப்பசு நல்ல நாவல்தான். :)

வருண் said...

***Philosophy Prabhakaran said...

// சாண்டில்யன் எழுதிய எந்த சரித்திர நாவல்களும் (யவனராணி, கடல் புறா, மன்னன் மகள், கன்னி மாடம்) இடம் பெறவில்லை! //

அப்படின்னா இந்த லிஸ்ட் சரியில்லை...

28 January 2011 1:46 PM***

என்னவோ அவருக்குப் பிடிச்சதை அவர் சொல்ல்யிருக்கார். அம்புட்டுத்தான்.

ADMIN said...

அவருக்கு என்ன எண்ணம் அப்போ தோன்றியதோ.. அதையே வரிசைப்படுத்தியிருக்கிறார்.. சொல்வதற்கு ஒன்றும்.. இல்லை..!

வருண் said...

***தங்கம்பழனி said...

அவருக்கு என்ன எண்ணம் அப்போ தோன்றியதோ.. அதையே வரிசைப்படுத்தியிருக்கிறார்.. சொல்வதற்கு ஒன்றும்.. இல்லை..!

29 January 2011 2:20 **

உண்மை தாங்க, தங்கம்பழனி! :)