
இன்னும் நான் "ஸ்லம் டாக் மில்லியனர்" பார்க்கவில்லை. நம்மதான் தமிழனாச்சே! நமக்கு இந்திப்படமெல்லாம் பிடிக்குமா? இது ஒரு இந்தி-ஆங்கிலம் கலந்த படம்னு சொல்றாங்க!
நம்ம ஏ ஆர் ரகுமான் "பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர்" க்கு ஒரு "கோல்டன் க்ளோப்" அவார்ட் வாங்கி இருக்கார்! இதை அடுத்து ஒரு ஆஸ்கரும் வாங்கினாலும் வாங்கிவிடுவார்.
http://edition.cnn.com/2009/SHOWBIZ/Movies/01/11/golden.globe.list/
ஏ ஆர் ரகுமானிடம் என்ன ஒரு சிறப்புனா, இவர் எதுக்குமே அலட்டிக்கொள்வது இல்லை! அதுதான் இவர் வெற்றிக்கு காரணமானு தெரியலை. நம்ம "ஆஸ்கர் நாயகரெ"ல்லாம் இன்னும் "கோல்டன் க்ளோப்" கூட வாங்கவில்லை.
ஏ ஆர் ரகுமான் இந்திப்படத்திற்கு போனதால்தான் இதுபோல் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றுதான் தோன்றுகிறது. என்னதான் நம்ம 70 கோடி யில் சிவாஜி தசாவதாரம் மற்றும் 150 கோடியில் எந்திரன், மர்மயோகி போன்ற படங்கள் எடுத்தாலும் இந்திப்படத்திற்குத்தான் உலக அளவில் கவனிப்பு அதிகம். "யு கே பாக்ஸ் ஆஃபிஸ்" பார்த்தால் தெரியும், ஒரு சாதாரண "சாருக் கான்" மற்றும் அமீர் கான் படங்கள் நம்ம பெரிய பொருட்செலவில் எடுத்த படங்கள் தசாவதாரம் மற்றும் சிவாஜியை விட அதிக கலக்ஷன் பெறுகிறது. அதனால் இந்திப்படத்தில் நுழைந்ததால்தான் இவருக்கு இந்த அளவுக்கு உயர முடிந்தது என்பது ஒரு கசப்பான உண்மை!
எது எப்படி இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் ஒரு தமிழர். கே பாலசந்தர் தயாரிப்பில், மணி ரத்தினம் இயக்கிய "ரோஜா" என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகிற்கு வந்தவர்.
அவர் தாய் மொழி தமிழ்! அதனால் நம்ம எல்லோரும் இந்த வெற்றியை நினைத்து பெருமிதம் அடையனும்! விரைவில் அவருக்கு ஆஸ்கர் கிடைத்து அவர் அலட்டாத ஆஸ்கர் நாயகனாக வாழ்த்துக்கள்.
எது எப்படி இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் ஒரு தமிழர். கே பாலசந்தர் தயாரிப்பில், மணி ரத்தினம் இயக்கிய "ரோஜா" என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகிற்கு வந்தவர்.
அவர் தாய் மொழி தமிழ்! அதனால் நம்ம எல்லோரும் இந்த வெற்றியை நினைத்து பெருமிதம் அடையனும்! விரைவில் அவருக்கு ஆஸ்கர் கிடைத்து அவர் அலட்டாத ஆஸ்கர் நாயகனாக வாழ்த்துக்கள்.