Friday, May 29, 2009

மக்களாட்சியிலிருந்து மீண்டும் மன்னராட்சியா?!

திரு கருணாநிதியின் மகனான திரு ஸ்டாலின் அவர்கள் துணைமுதல்வராக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்தப்பதவிக்குத் தகுதியும், திறமையும் இருக்கிறதா என்பதை தி மு கழகம் மூத்த தலைவர்கள்தான் ஆய்ந்து விவாதிக்க முடியும். இதிலிருந்து தி மு க சார்பில் அடுத்த முதல்வர் இவர்தான் என்று தெளிவாகத் தோன்றுகிறது.

மேலே காங்கிரஸில் நேரு குடும்பம் காலங்காலமாக ஆள்கிறது. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, என்று போய்க்கொண்டே இருக்கிறது. அதுபோதாதென்று அதேபோல் தமிழ்நாட்டில் குடியாட்சியில் இருந்து மன்னராட்சிக்கு நாம் மாறுவதுபோல் ஒரு பிரமை உண்டாகிறது.

மேலே நடப்பதற்கும் இங்கு தமிழ்நாட்டில் நடப்பதற்கும் ஒரே வித்தியாசம். அங்கே ஆரியர்கள்! இங்கே திராவிடர்கள்! வாழ்க மலரும் “மன்னராட்சி” என்று வாயளவில் வாழ்த்திவிட்டுப் போவோம்! வேற என்ன செய்ய முடியும்?

கவனம்!! பெண் பன்றி உங்களை காதலிக்கிறதா?!

பெண்களை கவர செக்ஸ் ஃபிரமோன்ஸ் வந்துள்ளதாக நிறையவே பொய் செய்திகள் வருகின்றன. அப்படி எதுவும் கண்டு பிடித்ததாக இன்றுவரை விஞ்ஞானம் சொல்லவில்லை! அப்போ, இதெல்லாம் கட்டுக்கதையா? அப்படித்தான் தோனுது.

ஆனால் பூச்சிகள் ஃபிரமோன்ஸ் வைத்து எதிர் பாலை கவர்வது உண்மைதான்.

அதேபோல் பன்றிகள் ஆண்டிரோஸ்டெனால் என்கிற ஒரு வேதிப்பொருளை ஃபிரமோனாக பயன் படுத்துவது உண்மைதான். இந்த வேதிப்பொருளால் ஆண் பன்றிகள் பெண் பன்றிகளை கவர்வதும் உண்மை.

http://en.wikipedia.org/wiki/Androstenol


இந்த ஆண்ட்ரோஸ்டெனால் என்கிற வேதிப்பொருள், டெஸ்டாஸ்டீரோன் (Human male sex hormone) போன்ற வடிவம் உள்ள ஒன்று. இது ஆண் பன்றிகளின் எச்சிலில் இருப்பதாகவும், இதுக்கு ஃபிரமோனல் ஆக்டிவிட்டி இருப்பதாகவும் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

WARNING!!

When you buy such perfumes which are claimed to be female attractant, please keep off from female pigs! They may try get you! Because the perfume might very well have the chemical androstenol which only attracts female pigs not a hot chick!

Thursday, May 28, 2009

நான் திராவிடன்-கருணாநிதி!!!

பொய்! பொய்! பச்சை பொய்!!! எது பொய்? திராவிடர்- ஆரியர் பிரச்சினை இன்றும் தலைவிரித்து ஆடவில்லை என்று எவரும் மறுத்துச் சொன்னால் அது பச்சை பொய்!

என்னைக்கேட்டால் முதல்வர் கருணாநிதி தனக்குத்தானே தன்னை திராவிடன் என்று ஞாபகப்படுத்தி தன்னைத்தானே குட்டிக்கொள்வது நல்லதுதான். அவருக்கு மற்றும் ராமதாஸு, வை கோ போன்ற எல்லாருக்கும் தாங்கள் திராவிடன் என்பது அரசியல் ஆதாயம் தேடுவதில் மறந்துவிட்டது!

தமிழனுக்கு தமிழன் உதவமுடியாதற்கு காரணம் என்ன? தமிழன் இந்தியாவை ஆளவில்லை! இன்னும் திராவிடன் - ஆரியன் பிரச்சினைதான் இதற்கு அடிப்படைக் காரணம். இன்னும் ஆரியன்தான் நம்மை ஆண்டு கொண்டு இருக்கான் என்பதென்னவோ உண்மைதான். ஒரு தமிழன் பிரதம மந்திரியாக இருந்து இருந்தால், ஈழமக்கள் கண்ணீர் என்றோ துடைக்கப்பட்டு இருக்கும். எல்லாவற்றிற்கும் காரணமான இந்திய அமைதிப்படையே இலங்கைக்கு போய் இருக்காது.

மன்மோஹன் சிங், சோனியா காந்தியெல்லாம் திராவிடர் அல்ல அல்ல் என்பதை நாம் மறுபடியும் ஞாபகப்படுத்திக்கொள்ளனும்! சேது சமுத்திர திட்டத்தை எக்ஸக்யூட் பண்ண முடியாதற்கு காரணம் இன்னும் ஆரிய சுப்ரீமஸிதான். "ராமர் கட்டாத அந்தப் பாலத்தை" இடிக்க முடியாததற்கு காரணம் ஆரியர்கள் அன்று விதைத்த விதைதான். அவர்கள் எழுதிய இராமாயாணம் என்கிற கதைதான். ராமாயாணத்தில் ஆரிய சுப்ரீமஸி அழகா சொல்லப்பட்டு இருக்கிறது. அதை திராவிடன் மறந்து கொண்டு வருகிறான்.

வன்முறையின் தோல்வியா சாரு அண்ணாச்சி ?!

நம்ம சாரு அண்ணாச்சி ரொம்ப நாளா மெளனம் காத்து இப்போ வாயை திறந்து இருக்கிறார்! அவர் என்ன சொன்னாலும் ஜால்ரா அடிக்கத்தான் சில பிரபலங்கள்தான் அலைகிறதே! பெரிய ஆளாக வேண்டுமென்றால் இதுபோல் ஜால்ரா அடித்தால்தான் உண்டா என்ன? தன் திறமைமேல் நம்பிக்கை இல்லாதவந்தான் ஒரு விமர்சகரை அளவுக்கு மீறி என்ன எழவை எழுதினாலும் சரி சரி என்பான்!

நம்ம சாரு என்ன சொல்றார்னா... காந்தி, அஹிம்சை எல்லாம் பேசி, கடைசியில் வன்முறை தோற்றதாக கதைவிடுகிறார்!

வன்முறை யாரிடம் தோத்தது? புத்தரிடமா? இல்லை அஹிம்சை போராட்டத்தாலா?

வன்முறையை இலங்கை வென்றது எப்படி, சாரு?

கருணாவை வைத்து, இந்தியாவை வைத்து வஞ்சகமுறையில்! அஹிம்சையால் அல்ல!

போராட்ட வீரர்கள் தோல்வியை தழுவிய பிறகு வாயைத்திறக்கும் நீங்கள் என்றாவது வன்முறை அனுகுமுறை தப்பு என்று போதித்துள்ளீர்களா?

ஆமாவா எங்கே???

இல்லையா? ஏன்?

உயிரை துச்சமாக மதித்து போராடிய அவர்கள் வென்றுவிடுவார்கள் என்று உள்மனது சொன்னதோ? வென்றிருந்தால் என்ன எழுதி இருப்பீர்கள்? வன்முறை வென்றது என்றா? மாட்டீர்கள்!

எல்லாம் முடிந்த பிறகு உங்க பாட்டால் யாருக்கு நன்மை, சாரு?

நீங்க சொல்வது எப்படி இருக்கு தெரியுமா?

இந்தியா செய்தது சரி! நியாயம் வென்றது என்று சொல்வது போல் உள்ளது! ஆனால் நியாயம், சத்தியம் வெல்லவில்லை! வஞ்சமும், சூழ்ச்சியும்தான், வலியவர்களும், மாற்று வன்முறையும் வென்றது! என்பதுதான் உண்மை!

அப்புறம் அஹிம்சையால் வென்ற காந்தி, மதவெறியால் கொல்லப்பட்டார்! அங்கே அஹிம்சை எங்கே வென்றது? மதவெறியும் வன்முறையும்தான் காந்திய கொன்னது!

Dont worry, there are so many low-life s are there to cover your butt no matter whatever bullshit you write!

Tuesday, May 26, 2009

காதலுடன் 16

"ஃபோனை எடுக்கலையா?"

"இல்லை"

"ஃபுட்பால் அவ்வளவு பிடிக்குதா?"

"ஃபுட்பால் சொல்லிக்கொடுக்கிற வாத்தியாரை பிடிக்குது"

மறுபடியும் ஃபோன் ரிங் ஆச்சு. ரிங் டோனில் இருந்து அவளுக்கு அது காவியா என்று தெரிந்தது.

"இது காவியாதான் சும்மாதான் கூப்பிடுறாள், விடுங்க"

"ரமேஷ், டி வி யை பாருங்க! இதென்ன இப்போ ஆடுறது, எக்ஸ்ட்ரா பாயிண்டா? இதென்ன, 3 பாயிண்ட் ஸ்கோர் பண்ணுறாங்க!! நீங்க ஒரு பாயிண்ட்னு சொன்னீங்க?"

"இல்லை இது என்ஸ்ட்ரா பாயிண்ட் இல்லை! ஃபீல்ட் கோல்"

"ஃபீல்ட் கோலா?! என்னை ஏமாத்துறீங்களா?'

"இல்லடா, இது ஃபீல்ட் கோல், இது சரியா அந்த போல்ஸ்க்கு இடையில் போறாப்பிலே கிக் பண்ணினால், 3 பாயிண்ட் கிடைக்கும்"

"ஏன் டச் டவுன் (6 பாயிண்ட்ஸ்) ஸ்கோர் பண்ணாமல் இப்படி ஃபீல்ட் கோல் அடிக்கிறாங்க"

"நல்ல கேள்வி"

"நல்ல பதில் வேணும்"

"இப்போ அஃபெண்ஸ் டீம் பந்தை எடுத்துக்கொண்டு அதர் சைட் போகும்போது, 4 சாண்ஸ்க்கு உள்ளே அவர்கள் 10 யார்ட் மூவ் பண்ணியே பண்ணனும். அப்படி செய்தால், they get first down. அதாவது அவங்களுக்கு மறுபடியும் 4 சாண்ஸ் கொடுக்கப்படும் அடுத்த 10 யார்ட் மூவ் பண்ண"

"4 சாண்ஸ்ல, 10 யார்ட் மூவ் பண்ணலைனா?"

"பிரச்சினைதான். பந்தை டிஃபெண்ஸ் ஆடும் எதிர் டீம் இடம் கொடுத்துடனும்"

"அப்படியா! எப்படி கொடுப்பாங்க?"

"ரெண்டு விதத்தில் பொதுவா கொடுப்பாங்க. 3 சான்ஸ்ல 10 யார்ட் மூவ் பண்ணலைனா, 4 சாண்ஸ்ல, ஒண்ணு பண்ட் (punt) பண்ணலாம், இல்லைனா ஃபீல்ட் கோல் (field goal) ட்ரை பண்ணலாம்"

"10 யார்டுக்கு மேலே, 20 யார்ட் அல்லது 50 யார்ட் மூவ் பண்ணினால்?"

"மினிமம் 10 யார்ட், மாக்ஸிமம் "டச் டவுன்" கூட ஸ்கோர் பண்ணலாம்"

"சரி, 10 யார்ட் மூவ் பண்ணல. எப்போ பண்ட் பண்ணுவாங்க எப்போ ஃபீல்ட் கோல் போடுவாங்க?"

"இப்போ சப்போஸ் 70 யார்ட் + போல எதிர்த்த பக்கம் வந்துறாங்கனு வச்சுக்கோ. பொதுவா ஃபீல்ட் கோல் ஸ்கோர் பண்ணுவது எளிது. அதனால் 3 சாண்ஸ்ல 10 யார்ட் மூவ் பண்ணலைனா, 4 சாண்ஸை வச்சு, ஃபீல்ட் கோல் கிக் பண்ணி 3 பாயிண்ட் ஸ்கோர் பண்ணுவாங்க. அப்படியே மிஸ் பண்ணினாலும், பால் எதிர் பக்கம்தான் இருக்கும். அதனால் பாதகமில்லை"

"இப்போ 30 யார்ட்தான் மூவ் பண்ணியிருக்காங்கனா? அப்போ என்ன செய்வாங்க?"

"இப்போ 30 யார்ட் தான் மூவ் பண்ணி செண்டர் ஃபீல்ட் (50 யார்ட்ஸ்) கூட வரலைனு வச்சுக்கோ. 3 சாண்ஸல 10 யார்ட் மூவ் பண்ணலைனா, 4 வது சாண்ஸ்ல பண்ட் பண்ணுவாங்க"

"பண்ட் னா? அதுக்கு எத்தனை பாயிண்ட்?'

"பண்ட்னா, பந்தை அந்தப் பக்கம் (எதிர் பக்கம்) எவ்வளவு அதிக தூரம் கிக் பண்ண முடியுமோ அவ்வளவு தூரம் கிக் பண்ணி விடுவாங்க. அப்புறம் அந்த டீம் அஃபெண்ஸ் ப்ளே பண்ணும் இவங்க டிஃபெண்ஸ் விளையாடுவாங்க"

"ரொம்ப போர் அடிக்குது, ரமேஷ். வேற ஏதாவது விளையாடலாமா, ரமேஷ்?" அவள் கொஞ்சினாள்.

"என்ன வெளையாட்டு?"

"அந்த விளையாட்டுத்தான்"

"அதுவும் போர் அடிச்சா?"

"எனக்கு அடிக்காது"

"நீ ரொம்ப மோசம்டா"

"ஆமா" அவள் சிரித்தாள்.

"நீ ஆராதனா படம் பார்த்து இருக்கியா?"

"ஹிந்திப்படமா?"

"ஆமா, அந்தக்காலத்து க்ளாசிக்"

"சரி சொல்லுங்க. அதில் விளையாடுவாங்களா?"

"ஆமா, கல்யாணத்திற்கு முன்னால. அண் ப்ரொடெக்டெட் செக்ஸ்"

"அப்புறம்?"

"அவன் கல்யாணத்துக்கு முன்னாலேயே ஒரு ஆக்ஸிடெண்ட்ல செத்துருவான்"

"அப்புறம்?"

"ஒரே சோகம்தான்"

"ப்ரக்ணெண்ட் ஆயிடுவாளா?"

"ஆமா"

"அப்புறம்?'

"அப்புறம் என்ன? ரொம்ப சோகமாயிடும் அவள் வாழ்க்கை"

"They should have used a condom"

"Well"

"என்ன "வெல்"?"

"சரி, நான் சொல்றதை கேளு! அடுத்த வாரம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவோம்.பண்ணிக்கொண்டு அப்புறம் ஃபுட் பால் சொல்லித்தரேன். போரடிச்சா.."

"நீங்க ஆக்ஸிடெண்ட்ல சாக மாட்டீங்க"

"யு நெவர் நோ"

"சரி, அடுத்த வாரம் கல்யாணத்துக்கு அப்புறம் ஃபுட் பால் எனக்கு ரொம்ப போரடிச்சா?"

"அடிக்காது"

"நிச்சயம் அடிக்கும்!"

"போர் அடிக்காத விளையாட்டு விளையாடுவோம். ஆனா, நீதான் சொல்லித்தரனும்? நீதான் எனக்கு டீச்சர்'

"ஏன்.. நான்? கொழுப்பா?"

"நீதான் இதில் எக்ஸ்பெர்ட் மாதிரி எனக்கு தோனுது!"

"உங்களை என்ன பண்ணுறேன் பாருங்க!"

-தொடரும்

Monday, May 25, 2009

நான் சொன்னதும், சொல்லாததும் நடந்தது!!!

சொன்னதும் நடந்ததும்!

* விசயகாந்து ஒரு சீட் கூட வெற்றியடையமாட்டார் என்று சொன்னேனா?

ஆமா!. 3 வது இடத்திலேயே எவ்வளவு நாள் இருக்கப்போகிறாரோ :-))

* ரித்தீஸ் வெற்றியடைவார்- அதுவும் திருநாவுக்கரசரால் வெற்றியடைவார் என்று சொன்னேனா?

ஆமா! அதுதான் நடந்தது!

* வைகோ ஜாதி ஓட்டுப்பிரிவதால் தோல்வியடைய சாண்ஸ் இருக்கு என்பதுபோல சொன்னேனா?

விருதுநகரில் பாண்டியராஜனால் நாடார் ஓட்டு பிரிக்கப்பட்டது. பெருஅளவு முக்குலத்தோர் ஓட்டு காங்கிரஸ்க்கு போய்விட்டது. நாடார்களால்தான் வைகோ தோல்வியை தழுவினார்.

* ப சிதம்பரம் வெற்றியடைந்துவிடுவார்னு சொன்னேனா?

அதை இதைப் பண்ணி கடைசியில் வெற்றியடைந்துவிட்டார்!


சொல்லாதும் நடந்தது!

பா ம க இந்த அளவு தோல்வியடையும்னு நான் கனவுகூட காணவில்லை!

அதனால், நான் சொன்னதும் நடந்தது சொல்லாததும் நடந்தது!

Sunday, May 24, 2009

நக்கீரனை லட்சம் மடங்கு நம்பவா?!!

ஹிந்து பார்ப்பான் நடத்துற பத்திரிக்கை! அவன் எழுதுற செய்தியை நம்பாதீங்க! எதையும் நம்பவேண்டாம்! ஆனால் தமிழன் நடத்தும் நக்கீரனை 1000 மடங்கென்ன லட்சம் மடங்கு நம்பலாம் என்றார்கள் சில "பெரிய மனிதர்கள்"!

ஹிந்து பத்திரிக்கை "பொய் செய்தி" சொல்கிறது என்கிறார்களா இன்னும்???...

Prabakaran is dead, says LTTE
London (PTI) The LTTE for the first time on Sunday admitted that its supremo Velupillai Prabakaran is dead, nearly a week after Sri Lanka said that the rebel leader was killed. LTTE's head of International relations Selvarasa Pathmanathan told BBC that their "incomparable leader had attained martyrdom."
The LTTE leader said Prabakaran had died on May 17 but did not give details of the circumstances, it reported.

Pathmanathan said the Tigers would now use "non-violent" methods to fight
for the rights of Tamils.


நக்கீரனை நம்பவா? இல்லை ஹிந்துவை நம்பவா?

தயவுசெய்து என்னை தமிழின துரோகி ஆக்காதீங்க! :(

Friday, May 22, 2009

ரசித்த ஐயப்பன், முருகன் பாடல்கள்!

எனக்கு கடவுள் நம்பிக்கைலாம் கெடையாதுங்க. ஆனால் ஒரு சில பக்திப்பாடல்கள் கேட்கப்பிடிக்கும். இசைக்கு மதம் கிடையாது என்று நம்புகிறேன்.


* முக்கியமா கி. வீரமணி பாடிய பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல்

http://www.youtube.com/watch?v=h7t22ZU5CmE&feature=related


* தெய்வம் படத்தில் மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே முருகைய்யா பாடல்!

http://www.youtube.com/watch?v=82qfhI7uZf0


* திருவிளையாடல் படத்தில் பழம் நீ அப்பா பாடல்!

http://www.youtube.com/watch?v=dZAyEPftHe4&feature=related


* எஸ் பி பி பாடிய ஆயர்பாடி மாளிகையில்

http://www.youtube.com/watch?v=0iW0mbrE3D8&feature=related


* அழகென்ற சொல்லுக்கு முருகா

http://www.youtube.com/watch?v=yTkeCO30_Ro&feature=related


* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்.
http://www.youtube.com/watch?v=pDlR5s6eiiI



கேட்டு/பார்த்து மகிழுங்கள்! :-)))

நக்கீரன் செய்தது பொறுக்கித்தனம் என்றால்?

பார்ப்பன பத்திரிக்கைகள்தான் நம்ம நாட்டை கெடுத்துவிட்டார்கள், மீடியாவை கையில் வைத்துக்கொண்டு பொய்யையும் புரட்டையும் எழுதி நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்றார்கள். நான் அதை நம்பினேன், அது ஓரளவுக்கு உண்மையும்கூட. இன்னைக்கு நாம என்ன செய்றோம்???

இன்று தமிழன் நடத்தும் பத்திரிக்கையான நக்கீரன், பிரபாகரன் சம்மந்தமாக பரபரப்பான "manipulated truth" (corrected after the author's concern) கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

http://naayakan.blogspot.com/2009/05/blog-post_3256.html

நக்கீரன் என்பது ஒரு மஞ்சள் பத்திரிக்கை, அதை ரொம்ப நம்ப முடியாது என்று நன்றாகத் தெரிந்த பதிவுலக விமர்சகர்கள் பலர், "ஜோடிக்கப்பட்ட பொய்" யாக இருக்கும் என்று தெரிந்தும், அதை வைத்து தான் எப்படி ஆதாயம் அடையலாம் என்று பொய் செய்தியையும் உண்மைபோல் எழுதி தன் பொழைப்பை நடத்திக்கொண்டார்கள்!

நக்கிரன் செய்தது பொறுக்கித்தனம் என்றால் இவர்கள் செய்தது என்ன??

தமிழ் ஊடகங்களும், பதிவுலகும் பொய் செய்தியை வைத்தே பிழைப்பு நடத்துகிறது! :((

BTW, I heartfully wish Prabhakaran is healthy and alive and shows up soon!

Thursday, May 21, 2009

I HATE the word "லக்கி"! (18 + for language)

"ஏண்டா இளங்கோ உன் பாஸை இப்படி திட்டுற? டிஃபெண்ஸ் நல்லாத்தானே போச்சு? டாக்டர் ஆயிட்ட இல்லை? விசாவும் கெடெச்சிருச்சு! பேசாமல் பறக்க வேண்டியதுதானே கனடாவிற்கு?"

"தேவடியாள் மகன் ! இவனெல்லாம் ஒரு பேராசிரியர்! இவனமாதிரி ஆட்களால்தான் இந்தியா இப்படி இருக்கு!"

"என்னடா ஆச்சு?"

"இந்தா பாருடா சுந்தர்! 6 வருசம் இரவு பகலா வேலை பண்ணி தீஸிஸ் சப்மிட் பண்ணி இருக்கேன். இதுல எல்லாமே என்னுடைய உழைப்பு, என் ஐடியா. டிஃபெண்ஸ் ப்ரெசண்டேஷன் செமினார் ஹால் ல முடிஞ்சதும் "closed viva" நடந்தது. எக்ஸ்டேர்னல் எக்ஸாமினர் இருக்கான்ல, அந்தாளு, ஏதோ டெல்லில இருந்து வந்த ஒரு பெங்காளி. தமிழன் இல்லை அவன்! அவன் சொல்றான், "I must tell you this! Ilango, you have really done an excellent piece of work". He is complimenting based on my work in his own judgment! அதுக்கு என் பாஸ் இந்த கன்னடிகா தேவடியாமகன் சுப்பாராவ் என்ன சொன்னான்னு நினைக்கிற?"

"என்னடா சொன்னான்?"

"This guy is lucky to get results! You believe that?!!!"

"விடுடா"

"What the hell that supposed to mean? I worked my butt off for six f'king years and I deserve what I earned. Dont I deserve a compliment from an external examiner who is an expert in this field? Cant my boss, the moron, keep his mouth shut for few minutes?'"

"You know that he is a sadistic bastard and he hates Tamils. Dont you?"

"ஓ கே இவன் தான் பாராட்டல, எவனோ ஒருத்தன் டெல்லில இருந்து வந்திருக்கான். அவன் பாராட்டுவதையும் ஏத்துக்க முடியலை! இவனெல்லாம் என்னடா மனுஷன்! "லக்கி" யாம்! ஐ ஹேட் தட் வோர்ட் "லக்கி"! I am not lucky. I have never been lucky! I dont believe in luck either "

"இந்தியா முன்னேறாமல் போனதுக்கு இதுபோல் முட்டாள்கள்தான் காரணம். திறமையானவனை வளர விடுவது இல்லை. அவனுக எல்லாம் ஃபாரின்ல போயி செட்டில் ஆயிடுறானுக. இவன் ஏதாவது ஒரு ஜால்ராவை பெரிய ஆளாக்கிவிடுவது. அதான் Science and Technology இப்படி இருக்கு!"

"I dont think I will ever come back to this country. There are so many idiots like this Subbarao to screw up India!"

Wednesday, May 20, 2009

சுயநலம் ஒரு வியாதி!

"யார் அது காயத்ரி? இவ்வளவு நேரம் ஃபோன்ல பேசியது?

"மரகதம்தான்"

"என்னவாம் இப்போ?"

"ஈவனிங் வீட்டுக்கு வராங்களாம், லாவண்யாவோட. இன்னும் 45 நிமிடத்தில்!"

"எத்தனை தடவைதான் அவங்க சண்டையை கேட்பது? 108 தடவை இதே கதையைக் கேட்டு காது புளிச்சுப்போச்சு! போர் அடிக்குது காயத்ரி! ஏன் இப்படி வந்து நம்ம உயிரை எடுக்கிறாங்க?

"நான் என்ன பண்ணறது? நானா அவங்களை இப்போ இன்வைட் பண்ணினேன்?. அவங்க வீட்டுக்குப்போனா இதைவிட மோசம். அங்கே போனால் லாவண்யா எதையும் தொடவிட மாட்டாள். உங்க பொண்ணு சுகந்திக்கு மூட் அவுட் தான் ஆகும். பேசாமல் இங்கேயே வந்தால் பரவாயில்லை!'

"சுகந்திக்கு ஹோம் வொர்க்லாம் இருக்குமில்லையா? லாவண்யாவோட 4 மணி நேரம் இருந்தால்னா ஒண்ணும் பண்ண முடியாது. அப்புறம் 12 மணி வரை அவ ஹோம் வொர்க் பண்ணனும்?'

"என்னைய கொஞ்சம் ஃப்ரீயா விடுறீங்களா? நான் ஏதாவது குக் பண்ணனும். ஏதாவது ஸ்னாக்ஸ் ரெடி பண்ணனும்'

"ஏன் வீக் டேஸ்லயும் நம்ம உயிரை வாங்குறாங்க? பாரசைட் மாதிரி அசிங்கமா வாழ்றாங்க!"

"வரவேண்டாம்னு நீங்க சொல்றீங்கனு சொல்லிறவா? இல்லை நீங்களே கால் பண்ணி சொல்றீங்களா?"

"சொல்லிடேன். இப்போ என்ன ஆகப்போது? 1/2 பைசா பிரையோசனம் இல்லாத ஒரு ஃப்ரெண்ஷிப்!"

"இது தெரிந்ததுதானே? 5 வருஷமா இப்படித்தானே ஓட்டிக்கிட்டு இருக்கோம்? நாடுவிட்டு நாடு வந்தால் இப்படித்தான் எல்லாரையும் கட்டி அழனும்"

"சரி, என்ன ஆச்சு அவங்க பிரச்சினை? இப்போ டைவோர்ஸ் ஆயிடுச்சா கண்ணனோட?"

"என்னவோ செப்பரேட்டெட்டாம். அவர்தான் வேற அப்பார்ட்மெண்ட்ல இருக்கார் இல்ல? இன்னும் டைவோர்ஸ் ஆகல. டைவோர்ஸ் ஆனா கண்ணனுக்கு பெனிஃபிட்/ ஹெல்த் இண்சூரண்ச்லாம் கவர் பண்ண முடியாதாம். அதனால் இப்படித்தான் வாழப்போறாங்களாம். வீட்ட விட்டு அவர் ஒழிஞ்சுபோனா சரினு இருக்காங்க மரகதம்"

"அவர் இவங்க உயிரை வாங்குறதுல இருந்து தப்பிச்சு, இவங்க நம்ம உயிரை வாங்கிறாங்க!எந்தவிதமான நாகரீகம், நியாயம், எதுவுமே தெரியலை. யாரைடா போய் கொல்லலாம்னு அலையிறாங்க. அறிவே இருக்காதா என்ன? இல்லை இவங்க மூளையெல்லாம் வேற மாதிரி வேலை செய்யுமா?"

"எனக்கு உண்மையிலேயே தெரியலைங்க. நீங்க செத்தாக்கூட, எனக்கு உதவி செய்வதுபோல, இதைவச்சு அவங்க என்ன ஆதாயம் அடையலாம்னு பார்ப்பாங்கனு தோனுது!'

"தோன்றதென்ன? அதான் உண்மை. அய்யோ லாவண்யா உயிரை வாங்குவாப்பா! என்னால ஒரு நிமிஷம்கூட பேசமுடியாது அவளோட!"

"17 வயசாயிருச்சு இன்னும் ஒரு டூ-இயர் ஓல்ட் மாதிரித்தான் நடந்துக்கிறா"

"நீ வேற டூ-இயர் ஒல்ட்லாம் இவளைவிட பெரியமனதுடன் நடந்துக்கும்"

"ஒரு ஃப்ரெண்டுகூட கிடையாது அவளுக்கு!உங்க பொண்ணு எத்தனை ஃப்ரெண்ஸ் வச்சிருக்கா?"

"பெரியவர்கள் நம்மளே அவளை டாலெரேட் பண்ண முடியலை. க்ளாஸ்மேட்லாம் எப்படி டாலெரேட் பண்ணமுடியும்? அதுவும் அமெரிக்கன்ஸ்லாம் நீ கரெக்டா இல்லைனா தண்ணி தெளிச்சு விட்டுருவாங்க'

"எனக்கு உண்மையிலேயே புரியலை. அப்படி என்ன பெரிய குறை இருக்கு அவளிடம்? லாவண்யா ஆள் பார்க்க எவ்வளவு நிறமா? எவ்வளவு உயரமா? எத்தனை அழகா இருக்கா?"

"அழகா இருந்து என்ன செய்ய? நியாயம்னா என்னனே தெரியலை! என்ன பேசினாலும் சுயநலம் தலைவிரிச்சு ஆடுது. அமெரிக்கர்களிடமெல்லாம் இது சுத்தமா ஒத்து வராது. நம்ம ஊரில் வேணா பாவம்னு ஒரு சில ஏப்பசாப்பைக அனுசரிச்சு போவாங்க!"

"இது ஒரு மாதிரி வியாதியா என்ன?"

"எது?"

"இப்படி சுயநலமா இருக்கிறது?'

"அப்படித்தான் தோனுது. இதுவும் ஒரு மாதிரியான மனோவியாதிதான். எக்ஸ்ட்ரீம் செல்ஃபிஸ்னெஸ்"

"அவங்க அப்பா அம்மாவால இதை ஏன் சரி செய்ய முடியலை? அதுவும் அவ ஒரு குழந்தையா தனியா பொறந்தவ கிடையாது. அவளுக்கு ப்ரவீன் ஒரு அண்ணா இருக்கான்ல"

"அப்பா, அம்மாவா? அவங்களுக்கும் நியாயம்னா என்னனே தெரியலை. அவங்களும் படு சுயநலம். தனக்குனுதான் யோசிக்கத்தெரியுது. நமக்குனு இல்லை. அவங்க எப்படி சொல்லிக் கொடுப்பாங்க பாவம்! எப்படியோ படிச்சு வந்துவிட்டார்கள்"

"நீங்க எல்லாம் நிறைய விசயத்தில் மோசம்தான். ஆனா, இவங்க மாதிரி சுயநலம் இல்லை உங்களிடம்"

"நான் என்ன மோசம், காயத்ரி?'

"You are sick! You know what I mean?"

"That is not sickness"

"yeah?"

"I am honest with you. I could have lied about all those things, then I cant become intimate with you, you see?'

"நல்லா வக்கனையா பேசுங்க. வரவர உங்களோட வாழவே பயம்மா இருக்கு. அருவருப்பா இருக்கு தெரியுமா?'

"ஆரம்பிச்சுட்டயா? உண்மையிலேயே நம்மதான் டைவோர்ஸ் பண்ணனும். நமக்குள்ள பிரச்சினையெல்லாம் அவங்களுக்குள் இல்லை"

"அதெப்படி உங்களுக்குத் தெரியும்?'

"எல்லாம் ஒரு யூகம்தான். இதை எல்லாம் நம்ம போய் சொல்லி அறுத்து, அழுதுக்கிட்டா இருக்கோம்? யாருக்குத்தான் உலகத்தில் பிரச்சினை இல்லை?"

ஒரு 1/2 மணி நேரத்தில் காலிங் பெல் அடித்தது!

"வாங்க மரகதம்! வா லாவண்யா!"

“ஹலோ சுந்தர்!”

"ஹலோ அங்கிள்! ஹவ் ஆர் யு?" என்றாள் லாவண்யா.

"நான் நல்லா இருக்கேன், லாவண்யா. How is it going?"

"You know uncle, my classmate is being so mean to me?'

"Really? What is the problem, Lavanya?"

"She is saying I am not sharing anything with her. She is always being mean to me"

"Why dont you share?'

"That is my special pen. How can I let her borrow that, uncle?'

"OK. Tell her that it is special"

"All my classmates are mean to me, uncle!"

"O K, Lavanya, I really have to work on in a project. Why dont you go to Suganthi's room and help her do her homework?"

அவள் சுகந்தி ரூமில் நுழைந்தவுடன், தன் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான், சுந்தர்.

Tuesday, May 19, 2009

பிரபாகரன் : ஒரு சகாப்தம்

சமீப காலமாக தமிழ்நாட்டு செய்தி என்ன, இந்தியச்செய்தி எதையுமே படிப்பதில்லை. படிக்கக்கூடாது என்பதெல்லாம் இல்லை, படிக்க நேரமில்லாமல் நிறைய மாற்றங்கள், வேலைகள், எப்போதாவது யாஹு செய்திகள் படிப்பதோடு சரி. யதேச்சையாக கண்ணில் பட்ட ஒரு செய்தி என்னை உறைய வைத்தது: தலைவர் பிரபாகரனின் மரணச்செய்தி, அதுவும் உறுதிப்படுத்தப்படாத குழப்பமான/வேதனையான செய்தி. புலிகள் குறிப்பிடுவது போல, பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்பது என்னுடைய நம்பிக்கை.

தமிழினத்தலைவர் என்ற வார்த்தைக்கு தகுதியானவர் பிரபாகரனே. இந்த மரணச்செய்தியைக்கேட்டு வருத்தப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க, சிலர் மகிழ்ச்சியடைந்திருப்பதையும் ஒரு சில தளங்கள் படித்த போது அறிய முடிந்தது. ஒரு மனிதரின் சாவில் கூட மகிழ்ச்சியடையும் ஜென்மங்களை என்ன சொல்லி திட்டுவது என்று தெரியவில்லை. ஒன்று, அடுத்தவீடு தானே பற்றி எரிகிறது, நமக்கு ஆபத்தில்லை என்று நினைப்பது முட்டாள்தனம். இனப்படுகொலை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், இலங்கையில் மட்டுமே நடக்க வேண்டியதில்லை.

பிரபாகரன் ஒரு வேளை மரணமடைந்திருந்தாலும், அவர் விதைத்த கொள்கைகள் மரணமடைவதில்லை! பிரபாகரனைப்போன்ற மாவீரர்களுக்கு மறைவு என்பதே இல்லை. மனிதரை கொல்லலாம், சிந்தனையை கொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது! தமிழீழமும் அப்படியே, அது ஒரு சிந்தனை- உண்மையான தமிழர்களின் கடைசிச்சொட்டு இரத்தம் இருக்கும் வரை தமிழீழ போராட்டம் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும்.

யார் சாவையும் வச்சு பொழைப்பு நடத்தும் விமர்சகர்கள்!

உலகத்திலேயே மிகக்கேவலமான ஈனப்பிறவி யார்னு பார்த்தால் கூட்டம் சேர்ப்பதற்காக யார் சாவை பற்றியும் கவலையோ, இரக்கமோ படாமல், எதையும் உண்மையோ பொய்யோ என்கிற எந்தவிதமான ஆராய்ச்சியோ செய்யாமல், மனசாட்சியோ, இதயமோ இல்லாமல் எதோ பெரிய மேதாவிகள் போல அரைவேக்காட்டுத்தனமாக "நம்பாதீங்க" "உயிரோடதான் இருக்கிறார்" என்று என்னத்தையாவது எழுதி தன் பதிவை படிக்கவைக்கும் இழிதொழில் செய்யும் சில விமர்சகர்கள்!

அரசியல்வாதி, நடிகர்கள், வேசிகள், மாமாக்கள்கூட பரவாயில்லை சில விமர்சகர்களின் சமீபத்து பதிவுகளை பார்க்கும்போது :( .

இவர்களுக்கு மனசாட்சியோ, உண்மையான உணர்வுகளோ, இரக்கமோ, எதுவுமே கிடையாது! எதாவது ஒரு கவர்ச்சியான தலைப்புக்கொடுத்து இவர்கள் பொழைப்பை ஓட்டனும்! என்ன ஒரு இழிபிறவிகள் இன்றைய விமர்சகர்கள்! :(

Monday, May 18, 2009

காதலுடன் 15

ஒரு 15 நிமிடம் கழித்து உள்ளே வந்தாள் சந்தியா. ரமேஷ் சோஃபாவிலே உட்கார்ந்து, டி வி யில் அமெரிக்கன் ஃபுட் பால் பார்த்துக்கொண்டு இருந்தான். உள்ளே நுழைந்த சந்தியா, நேராக கிச்சன் போனாள். 15 நிமிடத்தில் இருவருக்கும் காஃபி போட்டுக்கொண்டு வந்தாள். காஃபியை சோஃபாவுக்கு அருகில் இருந்த காஃபி டேபிலில் வைத்துவிட்டு, அவன் அருகில் அமர்ந்தாள். அவள் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் சென்று.

"அந்தம்மா கார் ஸ்டார்ட் ஆச்சா?" என்றான் ரமேஷ்.

"ம்ம்"

'உனக்கு ஸ்போர்ட்ஸ் சேனல் பிடிக்காதுல்ல?. சேனல் மாத்தவா?"

"நான் உங்க மடியில் படுத்துக்கவா ரமேஷ்?"

"ஏண்டா? சரி படுத்துக்கோ"

அவன் சோஃபாவின் ஓரத்தில் நகர்ந்து அமர்ந்தான். சந்தியா, ரமேஷ் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள். அவளை குனிந்து பார்த்த ரமேஷ், எவ்வளவு அழகா இருக்காள்? என்று நினைத்தான். சந்தியாவிற்கு பெரிய கண்கள், அழகான பெரிய உதடுகள். அவள் மீதிருந்து ஏதோ மணம் வந்தது. குனிந்து அவள் கன்னத்தில் லேசாக முத்தமிட்டான், ரமேஷ்.

"ரமேஷ்! I never have been kissed by anyone until today"

"Neither did I misbeahave like this with anyone before" என்று அவள் காதுமடல்களை வருடினான்.

"It feels so good lying down in your lap, Ramesh"

"நீ ரொம்ப அழகா இருக்க சந்தியா"

"உங்களுக்கு கவிதை எழுத்தெரியுமா, ரமேஷ்?'

"எனக்கு எதையுமே ரசிக்க மட்டும்தான் தெரியும். கவிதையா? சாண்ஸே இல்லை!"

"ரசிப்பதுடன், நான் மயங்கிறார்போல கிஸ் பண்ணவும் உங்களுக்கு தெரியுது, ரமேஷ்"

"I missed you a lot and it made me to "react" like this, I suppose"

"I was very busy in india and worried, stressed but still I thought about you. You dont have Kavya's #? YOu could have talked to her about me'

"எனக்கு காவியாவை அவ்வளவு தெரியாது. It is OK. You made it up now"

"உங்களுக்கு என்ன பயம்?"

"என்ன?!"

"என்னிடம் என்ன பயம்?"

"உனக்கு என்னை சரியா தெரியாது. I believe you need to know my -ve points very well"

"I know what I need to know for now. எதுவும் கிரிமினல் குற்றம் எதுவும் பண்ணியவர்போல தெரியலையே? That is good enough for me" அவள் சிரித்தாள்.

"May be I will make you upset once I come into your life. You cant put up with me?"

"We will see"

"இப்போ என்ன வேணும் உனக்கு?"

"என்ன வேணுமானாலும் என்னிடம் இருந்து எடுத்துக்கலாம்!"

"American football ரூல்ஸ்ல தெரியுமா, உனக்கு?"

"அமெரிக்கன் ஃபுட் பாலா? அதான் பார்த்துக்கொண்டு இருக்கீங்களா?'

"இது லைவ் இல்லை, சும்மா பழைய கேம் தான் போடுறாங்க. சொல்லித்தரவா?"

"என்ன?"

"ஃபுட் பால்"

"நம்ம ஊர் soccer மாதிரித்தானே? 11 ப்ளேயர் விளையாடுறாங்க!"

"இது ரொம்ப வேற மாதிரி"

"சொல்லுங்க"

"இப்போ ஒரு டீம், டிஃபெண்ஸ் ஆடுறவங்க, இந்த பால் இருக்குல்ல அதை 30 யார்ட் ல இருந்து "கிக் ஆஃப்" பண்ணுவாங்க"

"அப்படினா?'

"அந்தப்பக்கம் கிக் பண்ணி விடுவாங்க"

"அந்த அஃபெண்ஸ் ஆடுற ப்ளேயர்கள் அதை எடுத்துக்கொண்டு இந்தப்பக்கம் ஓடி வருவாங்க"

"Two different teams for offense and defense? So, 22 pLayers in each team?"

"That is correct"

"That does not sound like soccer then"

"Yes, this is different"

"சொல்லுங்க"

"offense team இந்த எண்ட் வரை கொண்டு வந்துட்டா (100 yards) "டச் டவுன்" னு சொல்லுவாங்க"

"அப்படினா?"

"6 பாயிண்ட், அவங்களுக்கு கிடைக்கும்"

"அப்புறம்?"

"அதோட, அப்புறம் 2 யார்ட்ல இருந்து இந்த கோல் போஸ்ட்க்கு இடையில் கிக் பண்ணி ஒரு கோல் போட்டுட்டா அதுக்கு ஒரு extra பாயிண்ட் கிடைக்கும். ஸோ 6 ப்ளஸ் 1 . மொத்தம் 7 பாயிண்ட் ஸ்கோர் பண்ணலாம்"

'அவ்வளவு தானா?'

"இன்னும் நெறையா இருக்கு!"

"சொல்லுங்க! கொஞ்சம் இருங்க"

"என்ன?"

"உங்களுக்காக இதெல்லாம் கேக்கிறேன் இல்லையா?"

"ஆமா?"

"ஒரு கிஸ் கொடுங்க!"

அவள் கன்னத்தில் இன்னொரு முத்தம் கொடுத்தான். அவள் செல் பேசி அலறியது. அவள் ஃபோனை எடுக்கவில்லை.

"சரி சொல்லுங்க"

-தொடரும்

இது இந்தியா! நாங்க "தமிழ் இந்தியர்கள்"!

பங்களூரில் அந்த ஹாஸ்டல் அறையில் மதி, சுந்தர் என்கிற இரண்டு நண்பர்கள், நண்பன் பாலு வருகைக்காக காத்திருந்தார்கள். அன்று சனிக்கிழமை மூவரும் சேர்ந்து தமிழ்ப்படம் பார்க்கப்போகலாம் என்றிருந்தார்கள்.

"மதி! அவன் ட்ட இது இந்தியா னு சொல்லுடா! நம்ம எல்லாம் இந்தியர்கள்னு சொல்லு! சும்மா மடத்தனமா கன்னடத்துலதான் பேசனும்! தமிழர்லாம் தமிழ்நாட்டில் இருக்கனும் னு எல்லாம் பேசக்கூடாதுனு தெளிவா சொல்லுடா!" என்றான் சுந்தர்

"யார்ட்டடா சுந்தர்?" என்றான் அப்போத்தான் அந்த அறையிக்குள்ளே நுழைந்த நண்பன் பாலு.

"இல்லைடா இந்த "ஸ்ரிதர்" இருக்கான்ல? இவன் லாப்மேட்! அவன் ஒரு கன்னடிகா! அவன் மங்களூர்ல இருந்து பேங்களூர்ல இருக்க இந்த இண்ஸ்டிடூட் க்கு வந்தவன். அவனுக்கு இங்கே நெறையப்பேர் தமிழ் பேசுவாங்கனு தெரியாது! அவன் ஏதோ காய்கறி பழங்கள் வாங்க மார்க்கட் போயிருக்கான். அங்கே போய் கன்னடத்தில் ஏதோ கேட்டிருக்கான். அங்கே கறிகாய் விக்கிற எல்லோரும் தமிழ்க்காரங்க! ஒரு சில பேருக்கு கன்னடமே தெரியாது. இவன் வாங்கப்போன இடத்திலே அந்தம்மாக்கு கன்னடம் தெரியுமா என்னனு தெரியலை. அவள் இவனிடம் தமிழ்ல விலை சொல்லி இருக்கா. இவன் மறுபடியும் கன்னட்த்தில் பேசி ஏதோ சண்டை போட்டு வந்திருக்கான். அங்கே பார்த்தா எல்லோரும் தமிழ்ல பேசுவதைப்பார்த்து, இதென்ன பங்களூர் தமிழ்நாடா இல்லை கர்நாடகாவா ?னு கோபம் வந்து கண்ணாபின்னானு தமிழனை எல்லாம் திட்டுறானாம்" என்றான் சுந்தர் விளக்கமாக.

"மதி! ஸ்ரிதரை தமிழ் கத்துக்க சொல்லுடா! அப்போத்தான் பங்களூர்ல குப்பை கூட்டாலாம்னு சொல்லு" என்று சொல்லி சிரித்தான் பாலு சத்தமாக.

"ஏண்டா டேய்! சும்மாவே கடுப்புல திறிகிறானுக, இந்த இண்ஸ்டிடூட் ல தமிழந்தான் அதிகமா இருக்காங்கிறதைப் பார்த்து" என்றான் சுந்தர்.

"நீ அவன் பேசும்போது இல்லைடா. கண்டமேனிக்கு பேசுறாண்டா, சுந்தர்!" என்றான் மதி.

"என்னடா சொன்னான்?"

"Why you tamils come here and live in slum like pigs! Not learning the home-land language. Always brag how great your f'king Tamil is blah blah" னு சொல்றான். இதையெல்லாம் கேட்டுட்டு சும்மா இருக்க வேண்டி இருக்கு!

"இது இந்தியானு சொன்னியா? நம்ம எல்லாம் இந்தியர்கள்னு சொன்னியா?"

இதைக்கேளு! "You Tamils are never Indians. You always worry about your language. I have never seen fanatics like you" னு வேற சொல்றான்.

"ஃப்ரீயா விடுடா! கொஞ்ச நாள்ல அவனும் தமிழ் கத்துக்குவான்!" என்றான் பாலு.

"நான் எல்லாம் கன்னடம் கத்துக்கிட்டேன்ப்பா" என்றான் சுந்தர்.

"ஆமா! என்ன தெரியும் உனக்கு, கன்னடம்?" என்று சீண்டினான் பாலு.

"ஹேகிதீரா?, எஷ்டு? ஏன்றி இதூ? சென்னாகிதே, யாக்கேறீ? ஏன்றி சும்னே கலாட்டா மாடுத்தீரா?" சாக்கு, ஏனு பேக்கு?" அவ்வளவு தாண்டா கன்னடம்!' என்றான் அவனுக்குத்தெரிந்த சில கன்னட வார்த்தைகளை சொல்லிய சுந்தர்.

"என்னவோ போ! அந்தம்மா கன்னடத்திலேதான் பேசினால் என்னடா?" என்றான் மதி.

"நீ வேற! எனக்குத்தெரிய 20 வருஷம் இங்கே உள்ள ப்ரஃபசர்களும் கன்னடம் கத்துக்கிறதில்லை!" என்றான் பாலு.

"இதை கேளு! அவன் கேக்கிறான், "Why do you Tamils want ThiruvaLLuvar statue here in our land?"னு கேக்கிறான். இதுக்கு என்ன சொல்லச் சொல்ற, சுந்தர்?"

"இது இந்தியா. நாங்க தமிழ் இந்தியர்கள்! இந்திய சட்டதிட்டப்படி அதில் தப்பில்லைனு சொல்லுடா, மதி! ஆனா, கன்னடத்தை கத்து தொலைங்கப்பா! பாவம் அவனுக!" என்றான் சுந்தர்.

Sunday, May 17, 2009

ஹீரோ ராமதாஸ், ஹீரோயின் ஜெயா! படம் ஃப்ளாப்!

என்ன ஆச்சு நம்ம ஜெயா- ராமதாசு நடிச்ச நீலிக்கண்ணீர் படம்? என்ன ஆகும்? அட்டர் ஃப்ளாப் ஆச்சு! அப்போ இனிமேல் அவங்க மார்க்கட்? ஹீரோயின் ஓரளவுக்கு சூப்பர்ஸ்டார் என்பதால் மற்ற படங்களில் நடிச்சு சமாளிச்சுருவார்.

ஆனா ஹீரோ ராமதாஸ்தான் பாவம்! என்ன பண்ணுறதுனே தெரியலை! மனுஷன் காய்ஞ்சிட்டார்!

நம்ம சக்கண்ட் ஹீரோ "வை கோ" வின் உணர்ச்சிப்பூர்வமான இயற்கையான நடிப்பும் எடுபடலையா?

நம்ம மக்களைப்பற்றிதான் உனக்குத் தெரியுமே? உண்மையிலேயே அழுதாலும் சும்மா நடிக்கிறான் என்பார்கள். நடிப்புக்கு அழுதால் இவனுகளும் சேர்ந்து அழுவானுகள்!

அப்போ அடுத்த படம் என்ன நம்ம ஹீரோவுக்கு? யாருக்கு தெரியும்? ஆனா அவர் இப்போ விரும்பி பாடுற பாட்டு ஒண்ணு தெரியும்! என்ன அது?

சட்டி சுட்டதடா! "கை" விட்டதடா!
புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா! :-)))

பணநாயகம் வெல்கிறது! யார் தப்பு, வருண்?!

இன்றைய அரசியலில் பணத்தால் பல ஆயிரக்கணக்கான ஓட்டுக்கள் வாங்கப்படுகின்றன என்பதை யாருமே மறுக்க முடியாது. யாருடைய ஓட்டுக்கள் இப்படி வாங்கப்படுகிறது? யாரை நாம் குறை சொல்லனும்? இதை ஒரு பேசும் நடையில் எழுதுகிறேன்.

“வருண்! அரசியலே கேவலமா போச்சு போங்க! ஒரு வீட்டுக்கு 1000 னு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிக்கிறார்கள்!”

“யாருடைய ஓட்டு இது?”

“பொதுவா அந்த அந்த கட்சிக்காரன் அவர்கள் கட்சிக்குத்தான் போடுவாங்க. இதில் வாங்கப்படுவது எந்தக் கட்சியிலும் பிடிப்பில்லாத ஏழைகள்னு இல்லைனா சந்தர்ப்பவாதிகள்னு சொல்லலாம்.”

“பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குவதில் இந்த அரசியல்வாதிகளுக்கு வெட்கமில்லையா?”

“இல்லை வருண், அவர்கள் அரசியல்வாதிகள்! அவர்கள் செய்வது பெருந்தவறுதான். ஆனால், மக்கள்தானே அதை ஊக்குவிக்கிறாங்க? அவங்க செய்வது எப்படி நியாயம்? தன் ஓட்டை கேவலமாக ஒரு விலை வைத்து விற்பது யார்? இதில் என்ன ஒரு விசயம் தெரியுமா? காசு வாங்கியவன் கட்டாயம் அந்த கட்சிக்குத்தான் போடுறான் ”

“ஏன் மாத்திப்போட்டால் எப்படி தெரியும்?”

“தெரியலை. நிச்சயம் அவர்கள் ஓட்டு காசு வாங்கிய கட்சிக்குத்தான் போகிறது. மனசாட்சிக்கு பயந்தவர்களா? இல்லை பயமா? னு தெரியலை. ஓட்டுக்காக பணம் வாங்கிய அவர்கள் ஏமாற்றுவதில்லை”

“நிச்சயம் நம் மக்கள்தான் இதுபோல் கேவலமான பணநாயகத்திற்கு காரணம்”

ஆமாம், "தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி!" என்பது அன்றும் இன்றும் உண்மைதான் போலும்! :( :( :(

Saturday, May 16, 2009

பா ம க/ ராமதாசு தோல்வி! ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி!


பா ம க வின் தோல்வியை ரஜினி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்! தமிழ் நாட்டு அரசியல் சாக்கடையில் தெரிந்தோ தெரியாமலோ மாட்டிக்கொண்டவர் ரஜினிகாந்த். இவர் ஜெ ஜெ யை எதிர்த்துக் குரல் கொடுத்தபோது ஜெ ஜெ தோல்வியைத் தழுவினார். அதேபோல் 2004 ல் இவரை தனிப்பட்ட முறையில் ராமதாஸ் தாக்கியதால், இவர் ரசிகர்களும், இவரும் மனதுடைந்து போனார்கள்.

இவர் ரசிகர்கள் ராமதாசுக்கு எதிராக ஓட்டுப்போட்டும் பிரச்சாரம் செய்தும் ராமதாசு பெரு வெற்றி வாகை சூடினார். அதனால் ரஜினி ரசிகர்கள் மனம் தளர்ந்து போனார்கள்.

ஆனால் வெற்றி தோல்வி எல்லாம் நிரந்தரம் இல்லை என்பதென்னவோ உண்மைதான். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் இந்தத்தேர்தலில் ராமதாசும் அவர் கட்சி பா ம க வும் படு தோல்வியடைந்துள்ளார்கள்.

இதற்கு காரணம், அவரே அவர் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டது போல் அவர் செய்த "இன்கண்ஸிஸ்டண்ட் பாலிடிக்ஸ்" . காங்கிரசுடன் கடைசி நிமிடம் வரை சேர்ந்து இருந்துவிட்டு காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்தது எடுபடவில்லை என்று சொல்லலாம்.

ஆனால் ராம்தாசின் இந்தத்தோல்வியை மிகவும் ரசித்துக்கொண்டாடுவது ரஜினி ரசிகர்கள்தானாம். இதில் ரஜினி பங்கு எதுவும் இல்லை என்றாலும், ராமதாசுடைய தோல்வியை கொண்டாடுகிறார்கள்.

எங்கே??

தங்கள் மனதுக்குள் கொண்டாடுகிறார்களாம் போனமுறை அடி வாங்கிய ரஜினி ரசிகர்கள்! :-)

Friday, May 15, 2009

பார்ப்பானிடம் உள்ள ஒரு நல்ல விசயம்!

பொதுவாக பார்ப்பனர்கள் எல்லாம் இந்து மத வெறியர்கள் என்றும் காந்தியை கொன்னதுகூட தப்பு இல்லைனு சாண்ஸ் கெடச்சா சொல்லுவார்கள் என்றும் சொல்லலாம். தனக்குத்தான் அறிவு இருக்குனு நெனப்பு இருக்கிற "நெனப்பு பரதேசிகள்" என்றும் சைவம் சாப்பிடுபவந்தான் மனுஷன் என்று தன்க்குத்தானே கேட்கும்படி பிதற்றுபவர்கள் என்றும் சொல்லலாம்! மாடு திங்கிற யூதனும் தானும் ஒரே இனம் என்று மாடு திங்கும் யூதனோடு தன்னை இணைத்துக் கொள்ளத் தயங்கமாட்டார்கள் என்றும் சொல்லாம்! இப்படியெல்லாம் பல முட்டாள்த்தனமான எண்ணங்களுடன்தான் பார்ப்பனர்கள் பலர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், இந்தியா என்கிற நாட்டை காதலிப்பதில் பார்ப்பனர்களை எந்தக்குறையும் சொல்ல முடியாது. ஹிந்தியா அது என்பாதால் அப்படி என்கலாம்! இந்துக்கள் மெஜாரிட்டியாக இருப்பதால்தான் அது என்று சொல்லலாம். இருக்கலாம். ஆனால் பார்ப்பனர்களுக்கு நிச்சயம் "இந்தி"ய நாட்டுப்பற்று மட்டும் இல்லை என்பதை ஒரு குறையாக என்றும் சொல்ல முடியாது! இவர்கள் சுயநலத்தால்தான் இந்தியா இப்படி ஆயிடுச்சு, இவர்களுக்கு பொது நோக்கு இல்லைனு வேணா பலவிதமான ஜாதி உருவாக்கியதுக்கு க்ரிடிட் கொடுத்து இவர்களை இஷ்டத்துத் திட்டலாம். ஆனால் பார்ப்பனர்களுக்கு இந்திய நாட்டுப்பற்று இல்லை என்று சொல்லமுடியாது.

தமிழினப்பற்று vs நாட்டுப்பற்று என்று வரும்போது, பொதுவாக பார்ப்பனர்கள் தமிழினப்பற்றைவிட நாட்டுப்பற்றையே பெரிதாக கருதுகிறார்கள் எனலாம். இதனால் இவர்கள் பொதுவாக தமிழின துரோகியாகிறார்கள் என்றுகூட சொல்லலாம்.

என்னுடைய பார்வையில் பார்ப்பன வகுப்பை சேர்ந்த ஒருவரை, இந்திய நாட்டு துரோகியாக ஆக்குவது மிகவும் கடினம்! அதற்காக மற்றவர்கள் மோசம் என்று நான் சொல்லவில்லை!

Wednesday, May 13, 2009

காங்கிரஸ், ஜெ யுடன் கூட்டமைத்து ஆட்சி அமைத்தால் ?


இப்போதிருக்கும் நிலையை பார்த்தால், அ தி மு க கூட்டணிக்கு குறைந்தது 20 + எம் பி கள் கிடைக்கும் என்றே தோனுது. மேலும் காங்கிரஸும் படுதோல்வியடையாமல் ஓரளவுக்கு வெற்றிடையும் போல் இருக்கிறது.

காங்கிரஸ், அ தி மு க வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது! ராமதாஸ், வை கோ, ஜெயலலிதா, மற்றும் காங்கிரஸ் இணைந்து மத்தியில் ஆட்சி அமைத்தால், நம் ஈழத்தமிழ் மக்கள் ஆதரவாளர்கள் நிலைப்பாடு என்ன?

முதல்வர் கருணாநிதியை பழி வாங்கியாச்சு! சரி, அதற்கப்புறம் என்ன?

அப்படி வருகிற சூழலில்,

* ஜெயலலிதா, சோனியாவை கண்வின்ஸ் பண்ணி, இந்திய அமைதிப்படையை அனுப்பி தனி ஈழம் அமைத்துக்கொடுப்பாரா ?

* இல்லை, சோனியாவை புறக்கணித்து இதை ஜெ சாதிப்பாரா ?

* இல்லைனா ஜெ யே பிரதமராகி எல்லாவற்றையும் சாதிப்பாரா?

* இன்னொரு விஷயம்! அது என்ன பரிதாபம்னா சிதம்பரம் கட்டாயம் வெற்றி பெறுவார் போல இருக்கிறது!

உலகநாயகன் பெயரைக்காணோம்!! :( :(


ஹிந்து நாளிதழில் கமலஹாஷன் பெயர் வோட்டர்ஸ் லிஸ்ட் ல காணோம் என்று போட்டிருக்கிறது.


***Speaking to The Hindu on Wednesday, he said: “As an average citizen, as one of the hundred crore people in the country, I am truly concerned. I do not mean to ask ‘I am a star, how can you exclude my name?’ All I am asking is why should anyone’s name be left out?”***

இது யாரோடைய சதி?!

இல்லை கமலஹாஷனின் கவனக்குறைவா?!

கொஞ்ச நாள் முன்பே இதை இவர் கவனித்து இருக்க முடியாதா?

I feel very sorry for the "Universal Hero"! :( :( :(

Tuesday, May 12, 2009

திருநாவுக்கரசரால் ரித்தீஸ்க்கு வெற்றி வாய்ப்பு!

* ரித்தீஸ் (தி மு க) தொகுதியில் இவருடன் மோதும் * அ தி மு க (சத்திய மூர்த்தி), * திருநாவுக்கரசர் (பா ஜ க ), இருவருமே ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளவர்கள். திருநாவுக்கரசருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. அவர் வெற்றி பெறாவிட்டாலும், கனிசமான வாக்குகள் பெறுவார் என்று நம்பப்படுகிறது.

திருநாவுக்கரசர் பெறும் ஓட்டுக்கள் யாருக்கு போக வேண்டியது என்று கவனித்தால், அவைகள் பெரும்பாலும் * சத்திய மூர்த்தி ( அ தி மு க) வுக்கு போக வேண்டியவை என்கிறார்கள்!

ரித்தீஸ் வெற்றி பெற்றால், அதற்கு பேருதவி செய்தது திருநாவுக்கரசர் தான்! இவர் சத்தியமூர்த்தியின் ஓட்டுக்களை பறித்துக்கொண்டு ரித்தீஸ்க்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கிறார் என்பதே உண்மை!

Monday, May 11, 2009

ஜெயலலிதாவின் இந்திய அமைதிப்படை புலிகளுக்கு எதிரி!

நம்ம தெய்வம் ஜெயலலிதா சொல்லி இருக்காங்க, "I would send the Indian Army to Sri Lanka to create a separate Eelam"

இதெல்லாம் எப்படி சாத்தியம்? உண்மையிலேயே என்ன ப்ளாட்? திராவிடன் உணர்ச்சிவசப்படுபவன். அதனால் அவன் சரியாக யோசிக்க முடிவதில்லை!

புலிகள் ஆதரவாளர்களுக்கு புரியவேண்டியது இதுதான்!

* அப்படி அனுப்பபடும் "இந்திய அமமதிப்படை" முதலில் புலிகளை ஒழிக்கும்!

* பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்!

* பிறகு, மெதுவாகத்தான் இலங்கை ராணுவத்தை தாக்கும்!

இப்படி தாக்கும்போது உலக நாடுகள், வல்லரசுகள் இலங்கையை இந்தியா தாக்குவதை பார்த்து இந்தியாவை கண்டிக்கும்! இந்தியப்படை வல்லரசுகளுக்கு பயந்து பின் வாங்கும்! பாதிவேலையை வெற்றியுடன் முடித்து இந்திய அமைதிப்படை வெளிவரும்!

ஜெயலலிதாவின் "இந்த ப்ளாட்" ஆல் புலிகளும், பிரபாகரனும் ஒழிக்கப்படுவார்கள்.

இதை தெளிவாக புரியாமல் போடுங்கம்மா ஓட்டு ரெட்டை இலையப்பார்த்து என்று கோசம் போடுகிறார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்! என்ன பரிதாபம்! :( :(

Sunday, May 10, 2009

கமலஹாஷனின் தசாவதாரம் ஹிந்தியில் படுதோல்வி!


கமலஹாசனின் தசாவதாரம் தமிழில் ஒரு ப்ளாக் பஸ்டர்! ஆனால் இந்தியில் வெளியான அதனுடைய “டப்” படு தோல்வி அடைந்துள்ளது.

கடைசியாக கமலஹாஷன் ஹிந்தியில் வெற்றியடைந்தது, சாச்சி 420 (அவ்வை ஷண்முகி ஹிந்தி வேர்ஷன்). அதன் பிறகு வந்த ஹே ராம், அஃபே (ஆளவந்தான்), மும்பை எக்ஸ்ப்ரெஸ், மற்றும் தசாவதாரம் எல்லாமே தோல்வியைத் தழுவியுள்ளன.

இந்த தசாவதாரம் படத்தை டப் பண்ணி வெளியிடாமலே இருந்து இருக்கலாம்! இந்தி மக்கள் ரசனை என்றுமே வேறுபட்டது.

சங்கர் முதல்வனை ஹிந்தியில் ரி-மேக் செய்து தோல்வியடைந்தார். நல்ல வேளை எந்திரனை ஹிந்தியில் எடுக்கவில்லை.

அதேபோல் தமிழில் வெற்றியடைந்த சிவாஜி யை ஹிந்தியில் டப் செய்துவிடாமலே விட்டுவிட்டார்கள். டப் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். விளைவுகள் நல்லா தெரிந்ததாலோ என்னவோ அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டார்கள் போலும்!

Saturday, May 9, 2009

தமிழ்மணத்தில் பெண் பதிவர்களின் உயர்தரம்!


பதிவுலகத்தில் எத்தனையோ பிரபலங்கள் இருக்கிறார்கள். பிறர் பதிவையும், சகபதிவரையும் தேவையே இல்லாமல் தனிநபர்தாக்குதலுடன் அநாகரீகமாக விமர்சிக்கும் சைக்கோக்களும். பதிவர்களை தன் கற்பனைப்படி சாதிச்சாயம் பூசி இஷ்டத்துக்கு தனிப்பட்டமுறையில் விமர்சிக்கும் அரைவேக்காடுகளும், அரைலூசுக்களும் இருக்கிறார்கள். இதுபோல் தரங்கெட்ட "பிரபல பதிவர்களும்" உண்டு! ஆனால், பொதுவாக இதெல்லாம் ஆண் பதிவர்களுக்கே உரித்தான முத்திரைகள். இதில் என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

என்னுடைய அனுபவத்தில், தமிழ்மணம் திரட்டும் வலைபூக்களில் பொதுவாக பெண் பதிவர்களுடைய பதிவுகளும், அவர்களின் வலைபூக்களும் மற்றும் பின்னூட்டங்களும் மிகவும் தரமானவைகளாக நான் காண்கிறேன். மேலும் பெண் பதிவர்கள் அநாகரீகமாகவோ, அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதற்க்கோ எதையாவது எழுதனும் என்று எழுதுவதில்லை!

மேலும் பொதுவாகவே இவர்கள் அரசியல் இல்லாமல், அர்த்தமற்றதனமாக எழுதாமல், சாதி, மதப்பிரச்சினையை கலக்காமல், உணர்ச்சிவசப்படாமல், உண்மையையும் தங்கள் அனுபவம் மற்றும் தங்கள் படைப்புகளை மிகவும் அழகான முறையில் தெளிவான தமிழில் சொல்கிறார்கள்.

பெண்கள் ஆண்களைவிட நிச்சயம் உயர்ந்தவர்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறது இவர்களுடைய கவனமான அனுகுமுறையும், பின்னூட்டங்களும்.

மரியாதைக்குரிய பதிவுலக அன்னையர்களுக்கு என் அன்னையர்தின வாழ்த்துக்கள்!

தமிழனுக்கு ஏதுடா நாட்டுப்பற்று?!

தமிழனத் தலைவர் என்று அழைக்கப்பட்ட, பார்ப்பனர்களால் அன்றும், இன்றும், என்றும் வெறுக்கப்பட்ட தமிழர் திரு கருணாநிதியை இன்று "பார்ப்பன நண்பர்", "தமிழின துரோகி" என்று "மானமுள்ள தமிழ்ப்பற்றாளர்கள்" நம்புவதுடன் இவரை வெறுக்கிறார்கள். வழக்கம்போல இவரை பார்ப்பனர்கள் எப்போவும் போலவே வெறுக்கிறார்கள்.

சரி கருணாநிதி இன துரோகி என்றால் இவருக்கு நாட்டுப்பற்று ஏதாவது உண்டா? நாட்டுக்காக இனத்தை தூக்கி எறிந்த தேசபக்தரா இவர்? நாட்டுப்பற்று உண்டு என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

யார் நம்புவது? தமிழரல்லாதவர்கள் சிரிப்பார்கள்! தமிழரல்லாதவருக்கு, கருணாநிதி ஒரு தமிழ் ஃபெனாடிக்! தமிழனத்தலைவன்!

ஆனால் தமிழனுக்கு? கருணாநிதி ஒரு இன துரோகி! மொழி துரோகி! என்ன ஒரு பரிதாபம்!

சரி திரு. கருணாநிதியை விட்டுவிடுவோம். இப்போ தமிழனால் தமிழனை காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழர்கள் என்ன செய்வார்கள்? இது என்ன இன்னைக்கு நேத்தா நடக்குது? அப்படி ஒரு நிலைமையில் என்ன செய்வார்கள் தமிழ் பற்றாளர்கள்?

தமிழ்பற்றுடன் இருக்கும் இன்னொரு திராவிடனை தமிழின தலைவனாக்கி வெற்றியடைவார்களா?

காமெடி பண்ணாதீங்க! அதெல்லாம் அவர்களால் என்றுமே முடியாது! ஏன் முடியாது? அதுமட்டும் முடியவே முடியாது!

ஏன்? ஏன்? ஏன்?

எனக்குத்தெரியாது! வை கோவை கேளுங்க! இல்லை சீமானை கேளுங்க! இல்லைனா ராமதாசை கேளுங்க!

அப்போ என்னதான் செய்வார்கள்?

திராவிடரான தமிழர்கள், பார்ப்பன தெய்வங்களை வணங்குவார்கள்! தெய்வம் அருள் புரியாமல் இருக்குமா?


இப்போ பார்ப்பன தெய்வமான ஜெயலலிதாவை ராமதாசு, வை கோ போன்ற திராவிட பூசாரிகள் வழிபட்டு, தெய்வம் அருளை பெற்று விட்டார்கள்!

ஆக, இன்று தமிழனுக்காக குரல் கொடுப்பது பார்ப்பன வகுப்பை சேர்ந்த தெய்வம் அன்னை ஜெயலலிதா!

ஆமாம், கைபர் போலன் என்று பிதற்றும் ஒரு சில அரைவேக்காடுகளும் தெய்வம் ஜெயலலிதாவின் கைபர் போலன் பூர்விகத்தை மறந்த மரமண்டைகள்தாம்.

பார்ப்பன தெய்வம் ஜெயலலிதாதான் தமிழன் கண்ணீரை துடைக்கப்போகிறது. எப்படி? இன்னொரு இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி! பயப்படாதீர்கள்! இந்தமுறை இது நல்ல இந்திய அமைதிப்படை! இது சிங்களர்களைத்தான் தாக்கும்! தமிழர்களை அல்ல! என்று தெய்வத்தை வழிபடும் தமிழர்கள் நம்புகிறார்கள்! பார்ப்பன தெய்வத்தை நம்பாமல் இருக்கலாமா?

மொத்தத்தில் தமிழனுக்கு இனப்பற்று கிடையாது! அதனால் அவர்கள் வழிபடும் பார்ப்பன தெய்வங்கள்தான் தமிழன் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று மறத்தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

சரி, தமிழ்நாட்டுத் தமிழனுக்கு நாட்டுப்பற்றாவது உண்டா?

நீங்க வேற! நாட்டுப்பற்றுனா கிலோ எத்தனை ரூபாய்னு கேட்பவன் தமிழ்நாட்டுத்தமிழன்! அவனுக்கு என்னைக்குமே நாட்டுப்பற்று கிடையாது! நாட்டுப்பற்றின்மையை பெருமையாக நினைப்பவன் தமிழன்.

அப்போ தமிழனுக்கு என்னதான் இருக்கு? என்னதான் தெரியும்?

* பெரிய வாய்! வாய்கிழிய நெறையவே உளறத்தெரியும்!

* வாய்விட்டு அழுது பார்ப்பனதெய்வங்களை வணங்கத்தெரியும்!

* தமிழனுக்கு எதிரா சதி செய்ய பார்ப்பன தெய்வ வழிபாடு தெரியும்!

வேறென்ன வேணும்?

Thursday, May 7, 2009

வருண்! நீங்க "செலிப்ரிட்டி" ஆயிட்டீங்க!!!

"என்ன வருண் நீங்க செலிப்ரிட்டி ஆயிட்டீங்க போல?"

"என்ன சொல்றீங்க?"

"உங்களை மையமா வச்சு ரெண்டு திரி ஆரம்பிச்சு இருக்காங்க! கண்ணா பின்னானு திட்டு உங்களுக்கு"

"வாழ்க!"

"ஒரு திரியில் உங்களை செருப்பால அடிக்கனும்னு பின்னூட்டம். இன்னொன்னுல உங்களை ஆணா பெண்ணானு அலசுறாங்க. ஏதோ உங்களை பாவம்னு விட்டு வச்சிருக்கார்களாம்?!"

"யாரு ஜெயலலிதா ஜால்ராவா? இல்லை என்ன செய்வாங்களாம்? தலையை வாங்கிவிடுவார்களா?"'

"அப்படித்தான் தோனுது"

"என்ன பண்றது? இப்படி வாய்ச்சொல்லில் வீரர்களை நான் இன்னைக்கு நேத்தா பார்க்கிறேன்?"

"ஏன் இதெல்லாம்?"

"நான் சாரு, ஞாநி, சீமான் பற்றி எல்லாம் எழுதுறேன் இல்லையா? நானும் ஒரு விமர்சகராஆயிட்டேன் போல. அவங்களுக்கு என் கருத்து பிடிக்கலை. திட்டுறாங்க"

"இருந்தாலும் ஒரு பிரபலப்பதிவர் இப்படி எழுதுறது- நீங்க ஒரு ஸ்ப்லிட் பர்சனாலிட்டி, அது இதுனு? இதெல்லாம் அவருக்கு எதுக்கு?"

"ஊர் உலகம் ஆயிரம் சொல்லும். நான் என்ன பண்ண முடியும்? அவர்ட்ட போயி நான் யாருனு ப்ரூவ் பண்ண எந்த அவசியமும் இல்லை. அவர் ப்ளாக்ல நான் பின்னூட்டமெல்லாம் இடுவதில்லை. ஹானஸ்ட்லி ஐ ரியல்லி டோண்ட் கேர்"

"நீங்களும் அவரைப்பற்றி எழுத வேண்டியதுதானே?'

"இதென்னங்க சிறுபிள்ளைத்தனமா இருக்கு? ஒருவரை ஒருவர் இப்படியே விமர்சித்துகொண்டே போனால் வேற எதுவுமே எழுதமுடியாது. என் தரத்தை நான் இன்னொரு பதிவரை அவமானப்படுத்தி குறைத்துக்கொள்ள இஷ்டப்படவில்லை. அவர்களின் "ஃப்ரீடம் ஆஃப் ஸ்பீச்" னு போக வேண்டியதுதான். வரம்பு மீறினால் அவங்க தலையில் அவங்களே மண்ணள்ளி போட்டது போல்தான்"

'என்னவோ போங்க!"

"I dont think JJ is a God or something. She is a politician. She used ezham issue for HER ADVANTAGE in early nineties. She does the same even today. Why do one need to worship her for? That is ridiculous, imho. I criticized that as Seeman made her look like God or something. I still feel the same and I dont have any regrets. I did not do anyhting wrong! Thanks!

"ஆமா, நீங்க ஆரிய ஜால்ராவா?"

"Give me a break! LOL!"

Tuesday, May 5, 2009

சீமான் என்கிற முட்டாளின் உளறல்கள்!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்கிற பேரில் இந்த முட்டாளின் உளறல்கள் அளவுக்கு மிஞ்சுகிறது.

“ஜெயலலிதாவை வணங்குகிறேன்” இது இன்றைய உளறல்!!

அதென்னடா தமிழனுக்கு ஜெயலலிதாவை வணங்குவதுனா அவ்வளவு பிடிக்குது? “பாராட்டுகிறேன்” என்று சொல்வதே அதிகம். எதுக்காக வணங்குகிறாராம்?

தெரியாமல்தான் கேக்கிறேன், பிரபாகரனை கொஞ்சுவாரா என்ன இந்த ஜெயலலிதா? சும்மா உளறித்தள்ளுகிறான் இந்த காட்டுமிராண்டி திராவிடன்!

எம் ஜி ஆர் எந்தக்காலத்தில் பிரபாகரனை பாராட்டினார்? அன்றைய அரசியல் சூழல் என்ன? ராஜிவ் காந்தி மரணத்திற்குப்ப்பிறகு எம் ஜி ஆர் இருந்திருந்தால் அவரும் இன்று கருணாநிதி செய்வதைத்தான் செய்வார் என்று ஏன் இந்த முட்டாளுக்கு புரியவில்லை!

15 லட்சம் தமிழர்கள் இவரோட இலங்கைக்கு வராங்கலாம், இவர் போய் புடுங்கப்போறாராம்! அறிவு கிடையாதா இந்த முட்டாளுக்கு? ஒரு நாடுனா என்ன? ஒரு அந்நிய நாட்டு பிரச்சினையில் என்ன செய்ய முடியும் முடியாதுனு தெரியாத காட்டுமிராண்டி மாதிரி உளறுகிறான் இந்த முட்டாள். இவனை பிடிச்சு மறுபடியும் உள்ளே போடனும்!

Monday, May 4, 2009

“ரஜினி - எ வி எம்” மின் கெமிஸ்ட்ரி!

திரையுலகில் எ வி எம் ஒரு மிகப்பெரிய நிறுவனம். இவர்கள் சிவாஜி, எம் ஜி ஆர், கமல், ரஜினி என்று எல்லா பெரிய நடிகர்களையும் வைத்து படம் தாரித்துள்ளார்கள்.

அமரர் எம் ஜி ஆர், எ வி எம் முடன் ஒரே ஒரு படம்தான் செய்தார். (சுரேஷ் பின்னூட்டத்தில் சொன்னதற்கு அப்புறம், சரிசெய்யப்பட்டது :-))) )

* அன்பே வா (1966).

அன்பே வா எம் ஜி ஆர் படங்களில் வித்தியாசமான படம் மட்டுமன்றி இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம். இருந்தபோதும் அதன்பிறகு எம் ஜி ஆர் படம் எதுவும் எ வி எம் எடுக்கவில்லை.

நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படம் பராசக்தி யே எ வி எம் தயாரிப்புதான். பிறகு

* பார்த்தால் பசி தீரும் (1962, வெற்றிப்படம்),

* பச்சை விளக்கு (1964, வெற்றிப்படம்),

* உயர்ந்த மனிதன் (1968, வெற்றிப்படம்)

போன்ற படங்களை எ வி எம் சிவாஜியை கதாநாயகனாக வைத்து தயாரித்தது. உயர்ந்த மனிதனுக்குப் பிறகு வேறு படம் எடுத்ததாக தெரியவில்லை.


கமலுடைய முதல்ப் படம் * களத்தூர் கண்ணம்மா எ வி எம் தயாரிப்பு. பிறகு

* சகலகலா வல்லவன் (1982, வெள்ளிவிழாப்படம், வசூலில் சாதனை புரிந்தது)

* தூங்காதே தம்பி தூங்காதே (1983, வெற்றிப் படம்) போன்ற பெரிய வெற்றிப்படங்களை எ வி எம் தயாரித்தது.

அதன் பிறகு

* பேர் சொல்லும் பிள்ளை (1987) என்கிற படம் தயாரித்தது. இது அவ்வளவு வெற்றியடைய வில்லை. அதன் பிறகு கமல் எ வி எம் படத்தில் நடிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு கமல் மசாலா படமே நடிக்கவில்லை என்று சொல்ல முடியாது.


எ வி எம் ரஜினியை வைத்து எடுத்த முதல்ப்படம் * முரட்டுக்காளை. இது மிகப்பெரிய வெற்றிப்படம். ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய படங்களில் எ வி எம் தயாரித்த இந்தப் படம் முக்கியமான இடம் பெறும். நீண்ட இடைவெளிக்குப்பிறகு படம் தயாரிக்க முடிவு செய்த எ வி எம் ரஜினியை வைத்து எஸ் பி எம் இயக்க, இளையராஜா இசையமைக்க, ஜெய்சங்கர் முதல் முறையாக வில்லனாக அறிமுகமாக வெளிவந்த படம்தான் * முரட்டுக்காளை! இது வரலாறு காணாத வெற்றி பெற்றது! ரஜினிக்கும் சரி, எ வி எம் க்கும் சரி இது ஒரு பெரிய வெற்றிப்படம். இதை அடுத்து ரஜினியை வைத்து எ வி எம் தயாரித்த படங்கள்,

* போக்கிரி ராஜா (1982, வெற்றிப்படம்)

* பாயும் புலி (1983, வெற்றிப்படம்)

* நல்லவனுக்கு நல்லவன் (1984, பெரிய வெற்றிப்படம்)

* மிஸ்டர் பாரத் (1986, வெற்றிப்படம்)

* மனிதன் (1987, வெள்ளிவிழா கொண்டாடிய படம்)

* ராஜா சின்ன ரோஜா (1989, வெற்றிப்படம்)

* எஜமான் (1993, ஓரளவுக்கு வெற்றிப்படம்)

* சிவாஜி (2007, வெள்ளிவிழா கொண்டாடியபடம்)

இதில் ராஜா சின்ன ரோஜா வரைக்கும் ரஜினியின் 7 படங்களுக்கு எஸ் பி முத்துராமன் தான் இயக்குனர். மேலும் கமல் நடித்த 3 படங்களுக்கும் எஸ் பி எம் தான் இயக்குனர்.

எஜமான் படத்தை ஆர் வி உதயக்குமார் இயக்கினார். சிவாஜி யின், இயக்கம் சங்கர்!

1980 ல இருந்து 2007 வரை 9 படங்கள் ரஜினியை வைத்து தயாரித்துள்ளனர். இதுபோல் எந்த ஒரு நடிகருக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் எ வி எம் சரவணனுக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் “கெமிஸ்ட்ரி” எப்போதுமே நன்றாக வொர்க் அவுட் ஆச்சு என்பதுதான் இதற்கு காரணம்! இது சினிமா உலகில் மிக அரிய விசயம்.

"கலியுலக கர்ணன்" ஜே கே ரித்தீஷ்!

ரித்தீஷ்க்கு "பெரிய மனசு", இவர் ஒரு "கலியுலக கர்ணன்", "வள்ளல் பாரி பரம்பரை" என்று பலரும் சொல்கிறார்களாம் இவர் தொகுதியில். அவரை பார்ப்பது எளிது. பார்த்தால் நிச்சயம் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் அவர் என்று இந்த தொகுதி மக்கள் நம்புறாங்க. ரித்தீஷ் ஜெயித்தால் நிச்சயம் தொகுதிக்கு செய்வார் என்றும் நம்பப்படுகிறது.

பலகோடி சொந்தக்காரர்களுக்குத்தான் இந்த முறை எம் பி டிக்கெட் கொடுக்கப்பட்டது! ஜே கே ரித்தீஷ் ஒரு கோடிஸ்வரர் என்பதால்தான் இவருக்கும் கொடுக்கப்பட்டது என்பதும் உண்மை. இன்றைய கோடீஸ்வரர் ரித்தீஷ்குமார் ஒரு 20 வருடங்கள் முன்னால் ஒரு ஏழை சிவக்குமார். "குமாரு" என்று அழைக்கப்பட்டார். எப்படியோ கிடைத்த ஒரு "லாட்டரி" தொகையை வைத்து "ரியல் எஸ்டேட்" பிஸினெஸ் செய்து குறைந்த நாட்களிலேயே முன்னேறியவர்தான் இன்று கோடிஸ்வரான இந்த ரித்தீஷ் குமார்.

இவர் பரந்த மனது, அள்ளிக்கொடுக்கும் கரம் எல்லாம் தெரிந்த இவர் தொகுதியில் உள்ள மக்கள் பேசிக்கொள்வது..

நம்ம குமார பார்த்தியா? காசு கொடுத்தானா?


அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசுவதற்கு காரணம் "குமாருடன்" அவ்வளவு "இண்ட்டிமேட்" ஆ பழகுறாங்க மக்கள்

எலக்ஷன் முடிந்ததும் செய்வது எல்லாம் அந்தக்காலம்! எலக்ஷனுக்கு முன்னாலேயே காசு வாங்கிக்கொள்வது இந்தக்கால வாக்காளர்கள்! யார் சொன்னா வாக்காளர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று?

பி ஜே பி இல் இருந்து நிற்கும் முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்த திருநாவுக்கரசர்க்கு "நல்ல மனிதர்" என்கிற பெயர் இருக்கு என்பது உண்மைதான். ஆனால் இந்தக்காலத்தில் பணம்தான் எல்லாம் என்று நம்பப்படுகிறது. அ தி மு க வேட்பாளர் சத்தியமூர்த்தியும் தேவர்தான். இருந்தாலும் "ரித்தீஷ்" அளவுக்கு கொடுக்கும் கரமல்ல இவர் கரம் என்று சொல்லப்படுகிறது.

ஒருவரிடம் பணம் வாங்கிவிட்டு இன்னொருவருக்கு ஓட்டுப்போடும் பழக்கம் என்னவோ நம்ம மக்களிடம் இல்லை போல் தோனுது. "கலியுலக கர்ணன்" ரித்தீஷ் வெற்றி பெறுவாரா? பெறுவார் என்று நம்பப்படுகிறது :-))

Friday, May 1, 2009

தசாவதாரத்தின் தோல்வியும் சிவாஜியின் வெற்றியும்!



சிவாஜியும் தசாவதாரமும் மிகப்பெரிய வெற்றிப்படங்கள். 70 கோடி போல செலவு செய்து எடுத்த படங்கள் இரண்டுமே. தயயரிப்பாளர்கள்/விநியோஸ்தகர்களுக்கு 70 கோடிக்குமேல் இலாபம் சம்பாரித்த கொடுத்தப்படங்கள்.

இரண்டுமே தமிழ்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மாபெரும் வெற்றி பெற்றவை. இரண்டு படங்களுடைய டி வி ரைட்ஸ்ஸையும் கலைஞர் டி வி நெறைய பணம் கொடுத்து பெற்றுவிட்டது.

அப்புறம் ஏன் தசாவதாரம் தோல்வினு சொல்றப்பா?

இருங்க விசயத்துக்கு வரேன்.

கமல், சினிமாவைப் பொறுத்தமட்டில் ரஜினியின் போட்டியாளர் என்று அவரே சொல்லி இருக்கிறார். எங்கே சொன்னார்? படையப்பா 200 வது நாள் விழாவில் கமலஹாஷனே மேடையில் சொன்னார்.

"நானும் ரஜினியும் நண்பர்கள் ஆனால் தொழிலில் எங்களுக்குள் நிச்சயம் போட்டி இருக்கு. படையப்பா வெற்றியை கொண்டாடுகிறோம். ஆனால் இதே போல் ஒரு வெற்றியை நானும் கொடுக்கனும் என்கிற எண்ணம் என்னிடம் இல்லாமல் இல்லை" என்றார்.




சிவாஜியை ஆரம்பித்தது எ வி எம், ஆரம்பம் பூஜையுடன் நல்லா ஆரம்பித்து, சங்கர் கேட்ட டைம், மற்றும் தேவையான பணம் கொட்டப்பட்டு எடுத்து வெளியிட்டார்கள். படம், வெற்றியடைந்தது.

அதோடு முடியவில்லை. 175 வது நாள் விழாவும் கொண்டாடப்பட்டது! எ வி எம் அழகாக முடித்தது சிவாஜி அத்தியாயத்தை.

தசாவதாரம் ஆரம்பமும் அதே போல்தான். கே எஸ் ரவிக்குமாருக்கு தேவையான எல்லாமே கொடுக்கப்பட்டு பிரமாண்டமாக வெளிவந்து (இடையில் ஜாக்கி ச்சான் வேற வந்து ஆடியோ கேஸட் வெளியிட்டார்), பிரமாண்ட வெற்றி பெற்றது.

அதோட முடிந்துவிட்டது.

100 வது நாள் விழாவோ, 175 நாட்கள் விழாவோ கொண்டாடப்படவில்லை! முந்தாநேற்று பெய்த மழையில் நேற்று மொளைத்த காளான்தான் இந்த ஆஸ்கர் ரவிச்சந்திரன். கேவலம் ஒரு வெற்றிவிழாகூட எடுக்காமலே தசாவதாரம் அத்தியாயம் முடிந்துவிட்டது :( கமலுக்கு வருத்தம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இது ஒரு சோகமான விசயம்.