Friday, May 31, 2013

தினகரனில் சுஜாதா பற்றி அவதூறு வருகிறதா?!

ஜெயமோஹன் தளத்தில் வெளியாகியுள்ள   கடிதம்தான் கீழே உள்ள சுஜாதா பற்றி பேசப்படும் ஒரு கட்டுரை! ஒரு தீவிர சுஜாதா ரசிகர், சுஜாதா மேல் அவதூறு வரப்போகிறது என்றும் வரும் ஞாயிறு அன்று தினகரன் பதிவில் அவரை இழிவு படுத்தும் கட்டுரை இடம் பெறப்போகிறது என்கிற கவலையுடன் ஜெயமோஹன் தளத்தில் பகிர்ந்து கொண்டது இந்தக்கடிதம்.

இதை அங்கேயிருந்து வெட்டி ஒட்டி இருக்கிறேன். இதற்கு ஜெயமோஹன், அவர் பாணியிலே பதில் சொல்லியிருக்கிறார். அவர் பதிலை நீங்க வாசிக்கணும்னா, நீங்க அவர் தளத்திற்குப் போக  சுஜாதாவை காப்பாற்ற வேண்டுமா? "இங்கே சொடுக்கவும்!

அதை விடுத்து கொஞ்சம் இந்த சுஜாதா ரசிகரின், பிரச்சினையை நாம் கவனமாகப் பார்ப்போம்.


அன்புள்ள ஜெயமோகன் சார்,

வணக்கம்..
திருச்சியில் தங்களை சந்தித்த பின் இப்போது தான் பேசுகிறேன்.. நலமா?
சமீபமாக எழுத்தாளன் தமிழ் சமூகத்தில் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான் என்பது குறித்து பல்வேறு கருத்து மோதல்கள் இணையம் எங்கும் தெறிக்கின்றன.. உங்கள் கருத்துக்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.. பல மனிதர்கள் அறிஞர்களை அல்லது ஏதேனும் ஒரு துறை வல்லுனரை சந்திக்கும் வேளையில் தங்களுக்கு தெரிந்த அச்சு பிச்சு தகவல்களை அவர்களுக்கு சொல்லிகொடுத்து விட்டு நகரவே முயல்கின்றனர்.. உண்மை..
சிறிது நாட்களுக்கு முன் சுஜாதா குறித்த பதிவுகளும், பதில்களும் அளித்திருந்தீர்கள்.. சுஜாதா தீவிர இலக்கியம் படைப்பதற்கான அத்தனை தகுதிகள் இருந்தும் அதை முயலவில்லை என்றீர்கள். சுஜாதாவின் எழுத்து காலம் தாண்டி நிற்குமா என்பது குறித்து நான் பேச போவதில்லை..
அவரது வாசகனாக சொல்கிறேன்.. சுஜாதா ஒரு கதாநாயகன் போல் எல்லோர் மனதிலும் இருந்தார்.. இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.. எழுத்தாளர் என்றவுடன் பலரும் அறிந்த மிக சில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்..
வெகுஜனம் விரும்பும் படைப்பை நோக்கியே தன்னை திருப்பிக்கொண்டவர். அவர் படைத்த சினிமாக்களில் கூட அந்த பட இயக்குனரை தாண்டி சுஜாதா டச் இருப்பதை நாம் உணரலாம்.

அத்தகைய ஆளுமையை பற்றி அவர் மனைவி அளித்த பேட்டி இந்த வாரம் வெளியாக உள்ளது..

’அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்… அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்… அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்… ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க… அவங்களை சொல்லி குற்றமில்லை. அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்…’’
———–
‘’அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு… சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது… சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை…
———-
‘’அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்…’’

இப்படி பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார். தமிழகமே அந்த எழுத்தாளரின் நடைக்கு இன்றும் மயங்கியிருக்கிறது. அப்படிப்பட்டவரின் இன்னொரு முகத்தை முதல் முறையாக பதிவு செய்திருக்கிறார் அவர் மனைவி.
சுஜாதா குடும்பத்தின் நெருங்கிய நண்பர் விசாரித்ததில், திருமதி சுஜாதா “ஆப் தி ரெகார்ட்” பேசியதை எல்லாம் பேட்டி என்று எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவந்தது.. “எந்தப் பத்திரிகை, என்ன பேட்டின்னு கூட சரியா விசாரிக்காம சும்மா பேசிண்டிருந்தேன், கொஞ்சம் உளறவும் செஞ்சேன்” என்று கூறியுள்ளார்..

இதோ அந்த நண்பர் திருமதி சுஜாதாவிடம் கேட்டவை..
https://www.facebook.com/losangelesram/posts/10201180569656870
வரும் ஞாயிறன்று இந்த பேட்டி தினகரனில் வெளியாகிறது..
இது என்ன? ஒரு எழுத்தாளர்.. அதுவும் இறந்து ஐந்து ஆண்டு ஆனா பின் நொந்து பொய் கிடக்கும் அவர் மனைவியிடம் பேட்டி எடுத்து மக்கள் அவர் என கருதி வைத்துள்ள பிம்பத்தை உடைக்க ஏன் இந்த ஆசை? உங்கள் பதிவொன்றில் சுஜாதா மரணத்தை எதிர்கொண்ட விதம் பற்றி சொல்லி இருந்தீர்கள்.. அதை படித்து விட்டு தூங்க முயன்றும், முடியவில்லை,.. அவரது தீவிர ரசிகன், வாசகன் என்ற முறையில் நான் வைக்கும் விண்ணப்பம் இது.. சுஜாதா என்னும் ஆளுமை வரும் ஞாயிறன்று நொறுங்க போவதை நினைத்தால் மனம் கனக்கிறது..
இலக்கியவாதியோ இல்லையோ.. சுஜாதா ஒரு தலைமுறை நாயகன் அல்லவா? அவருக்கு இப்படி நம் கண் முன் ஒரு அவமானம் நிகழ வேண்டுமா? இதை சக எழுத்தாளர்கள் தடுக்க முடியுமா? சங்கங்கள் இதை கவனிக்குமா?
- ஸ்ரீகாந்த்

சுஜாதாவின் பரம விசிறி, ஸ்ரீகாந்த், உண்மையிலேயே ரொம்ப கவலையோட இதை எழுதி இருக்கிறார் இந்தக் கடிதத்தை. சுஜாதாவின் விசிறிகள் பலர் இதைப் படித்துவிட்டு இவரைப்போலவே அழுது ஒப்பாரி வைக்கப்போறாங்க என்பதென்னவோ உண்மைதான்.

* சரி, இதில் எதுவும் ஷாக்கிங்கா உங்களுக்கு இருக்கா?

ஆமாவா? நம்ம மக்களிடம் இதுதான் பெரிய பிரச்சினை. தனிப்பட்ட வாழ்க்கையில் சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு சாதாரண குறைகள் நிறைந்த மனிதந்தான். அவர் எழுத்தை வைத்து அவர் கொடுத்த பேட்டிகளை வைத்து அவர் "கடவுளுக்கு" சமம் என்பதுபோல் ஒருவர் நினைத்திருந்தால் அது யார் குற்றம்?

சுஜாதாவின் குற்றமா? இல்லை அவர் ரசிகர்களின் குற்றமா?

சுஜாதா பற்றி நான் பலவாறு எழுதி இருக்கேன். அதை எல்லாம் தோண்டி எடுக்க முடியவில்லை. இருந்தாலும் எழுதிய ஒரு சிலவற்றை இங்கே தர்ரேன். இதில் சுஜாதாவின் ரசிகர்களின் பின்னூட்டங்களை நீங்க கவனிக்கணும்!

 கமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது!

சுஜாதாவை சமன் செய்த இன்றைய ஆண்லைன் விக்கிபீடியா!

எனக்கு இந்த கடிதம்  படித்து எந்த ஆச்சர்யமும் இல்லை! சுஜாதாவை எப்போவுமே நான்  குறைகளும் நிறைந்த ஒரு சாதாரண ஆம்பளையாகத்தான் பார்த்ததுண்டு! அவர் ஒரு "எம் சி பி" என்பதை உணர்ந்து நான் பலமுறை பச்சையாக சொல்லியுள்ளேன். அவர் போய் சேர்ந்துவிட்டதால அவரை கடவுளா வணங்கணும்னு நான் நம்பவில்லை! அவர் மேலே அப்படி எதுவும் கண்ணா பிண்ணானு மரியாதை வைக்காததால எதுவும் ஆச்சர்யப்படும்படி ஒன்றுமே இல்லை!

எனக்கு என்ன ஆச்சர்யம்னா.. எப்படி அவர் மனைவி இதுபோல் ஒரு பேட்டி கொடுக்க ஒத்துக்கிட்டார் (it does not matter off the record or on the record!)  என்பதே!

Tuesday, May 28, 2013

நாஞ்சில் நாடன் சாதி எனக்குத் தெரியும், ஜெயமோகன்!

பாவம் அந்த வயதான பெரிய மனுஷன்! நாஞ்சில் நாடன் சாதி இல்லைனா ஜெயமோகன் சாதி தெரியனும்னா அவர்களிடம் நேரிடையாக கேட்கவேண்டிய அவசியமே இல்லை! இந்த மேதாவிகள் உலகறிய தன் சாதியை தன் அப்பா பெயரை சொல்வதுபோல சாதியையும் சேர்த்து "பிள்ளை" னு சொல்லிக்கொண்டு அலைபவர்கள்! இதெல்லாம் தெரியாமல் அறியாமையில் வாழும் ஒரு வயதான ஆளிடம் போய் தன் வீரத்தைக்காட்டிக் கிட்டு திரிகிறார் ஜெயமோகன்..

 என்னவோ தான் பெரிய யோக்கியன், தன் சாதியை எல்லாம் எங்கேயுமே சொல்வதில்லை என்பதுபோல் பிதற்றல் எல்லாம் எதுக்கு ஜெயமோகன்???


Biography

Nanjil Nadan was born in Veera Narayanamangalam in Kanyakumari District to Ganapathiya Pillai and Saraswathi Ammal

 Biography

1962–1991

Jeyamohan was born on 22 April 1962 to S.Baguleyan Pillai and B.Visalakshi Amma in Arumanai, Nagercoil, Tamil Nadu. Baguleyan Pillai was an accounts clerk in the Arumanai registrar's office.
உலகத்திலே எத்தனையோ பேரு அறியாமையில் வாழ்றாங்க. வயதாக ஆக அறிவு வளரும் என்றோ, வயதானவங்க எல்லாரும் பண்போட நடந்துகொள்வார்கள் என்றோ நினைத்தால் நீங்கள் ஒரு அடி முட்டாள்!

அதுவும் 70 வயதாகிடுச்சுனா தன்னைவிட வயதில் சிறியவர்களைவிட தனக்கு அனுபவம் ஜாஸ்தினு நினைத்துக்கொண்டு எகத்தாளமாகப் பேசுபவர்களை நம்ம சொந்த பந்தங்களிலேயே எளிதாகப் பார்க்கலாம். ஏன் நமக்குப் பாடம் எடுத்த அறிவில் சிறந்த பேராசிரியர்கள்கூட நாம் அவர்களைவிட வளர்ந்தபின்னும் அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும்னு சொல்லி பிதற்றுபவர்களை நாள்தோரும் பார்க்கத்தான் செய்றோம, சகிச்சுக்கிட்டுத்தான் போறோம்.  ஏன் நம்ம ஜெயமோகனின் தூரத்து சொந்தத்திலும் ஏன் பக்கத்து சொந்தத்தில்கூட இதுபோல் வயதான முட்டாள்கள் இருக்கத்தான் செய்றாங்க. இதெல்லாம் சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்! ஆனால்தன்னைப் பெரிய மேதைனு நெனச்சுக்கிட்டு இருக்கவாக்குத்தான் தெரியமாட்டேன்கிறது!

முட்டாள்னு சுட்டிக்காட்ட இந்த மேதாவிக்கு  எப்போவும் கெடைக்கிறது எவனாவது  தி மு க காரன் தான். இதிலிருந்தே இந்த ஆள் என்ன ஒரு விசமினு தெரிந்துகொள்ளலாம்!  வயதாக ஆக பித்தம் ஏறி மத வெறி பிடித்து அலையும் இந்துத்தவாக் காரன், வயசான பர்வெர்ட்டட் மலையாளிகள், பண்டாரங்கள், பக்திமான்கள் எல்லாம் இவரிடம் வந்து பிதற்றினால் அவர்களை, அவர்கள் அநாகரிக செயல்களை எல்லாம்  கவனமாக வடிகட்டி ஒதுக்கிவிட்டு அதுபோல் எதுவும் நடக்காதமாரி  ஊரை ஏமாற்றும் அறிவுஜீவிதான் இந்த ஜெயமோகன்! 

ஒரு வயதான ஒரு ஆளு என்னத்தையோ கேள்வினு கேட்டு தனக்கு நெறையாத் தெரியும்னு காட்டியிருக்காரு. சரி, இந்தாளு ஏதோ பிதற்றுகிறான்னு பேசாமல்  ஒதுங்கிப் போறதை விட்டுப்புட்டு தான் அவனை கிழிச்ச கிழிய ஒரு பதிவாப்போட்டு தன்னைப் பெரிய மேதை, கோவக்காரன், னு பெருமையாகக் காட்டிக்கிறார் இந்த மேதாவி. இதுக்கெல்லாம் மேதைகளுக்கு எப்படிப்பா நேரம் கெடைக்கிது!

இவரு வெட்டி முறிச்சதைப் பார்த்து ரசிங்கப்பா!


நான் முடிவுசெய்தேன். இனி இந்த ஆளை இப்படி விடக்கூடாது. நான் இங்கே விருந்தினர் என்பதல்ல முக்கியம். இந்த மொண்ணைத்தனத்தை எங்கே நிறுத்துவது என்பதுதான். என் கோபம் தலைக்குள் அமிலம்போல நிரம்பியது. நாஞ்சில்நாடன் எழுந்து செல்லும்போது அவர் முகத்திலிருந்த கசப்பை நினைவுகூர்ந்தேன். சடென்று என் கட்டுப்பாடு அறுந்தது
‘வாய மூடுங்க..என்னய்யா நினைச்சிருக்கே நீ? நீ யாரு? ஒரு புத்தகம் ஒழுங்கா படிச்சிருப்பியா? உன்னோட வாழ்க்கையிலே ஒரு எழுத்தாளன நேரில பாத்திருக்கியா? உன் எதிர்ல உக்காந்திருந்தது நாஞ்சில்நாடன்… அவரு யாருன்னு தெரியுமா உனக்கு? தெரியுமாய்யா? அவருக்கு நீ கைய நீட்டி கிளாஸ் எடுக்கிறே…அவர் சொல்ற ஒரு வார்த்தைய நீ கேக்க ரெடியா இல்ல…ஆனா நீ கொண்டுவந்து அவர் மேல போடுற குப்பைய அவர் சகிச்சிட்டிருக்கணும் இல்ல?’ என்றேன்
அவர் எதிர்பார்க்கவில்லை. வாயடைந்துபோய் ‘நீ பாத்துப்பேசணும்…நான் …நான் பேசத்தான் வந்தேன்’ என்றார்
‘என்னய்யா பேசணும்? பேச நீ யாரு? நாஞ்சில்நாடன் முன்னாடி இப்டி உக்காந்து பேச நீ யாருய்யா? வாய அளக்கிறியா? ஒருத்தர் முன்னாடி வந்து உக்காருறதுக்கு முன்னாடி அவரு யாருன்னு தெரிஞ்சுக்கிடமாட்டியா? ஒரு ஸ்காலர் முன்னாடி வந்து வாயத்திறக்கிறதுக்கு முன்ன உனக்கு என்ன தெரியும்னு ஒரு நிமிஷம் யோசிக்கமாட்டியா? நம்ம நாட்டில மட்டும் ஏன் இப்டி வடிகட்டின முட்டாளுங்க கூச்சநாச்சமில்லாம திரிய முடியுது..’
‘ஆமா நான் முட்டாள்தான்…நீ பெரிய புத்திசாலி’
‘ஆமாய்யா நான் புத்திசாலிதான்… நீ வெத்துமுட்டாள். ஏன்னா நான் என்னோட எடம் என்னன்னு தெரிஞ்சவன். அந்த எல்லைய மீறி எங்கயும் போயி அவமானப்பட மாட்டேன்…ஒரு அறிஞன் முன்னாடி என்ன பேசணும் எப்டி பேசணும்னு எனக்கு தெரியும்… உன்னை மாதிரி முட்டாளுக்குத்தான் தான் ஒரு முட்டாளுன்னுகூட தெரியாது….இப்ப நாஞ்சில் எந்திரிச்சு போனாரே, அவரு உன்னை முட்டாள்னு மனசுக்குள்ள திட்டிட்டுதான் போனார். அவரை விட எனக்கு உன் மேல கொஞ்சம் இரக்கம் ஜாஸ்தி. அதனால நான் உங்கிட்ட சொல்றேன். நீ ஒரு முட்டாள். அந்த ஒண்ணை மட்டுமாவது தெரிஞ்சுக்கிட்டேன்னா மேற்கொண்டு அவமானப்படாம இருப்பே…’
‘எனக்கு எழுபது வயசாச்சு…அதை நீ நினைக்கலை’
‘எந்திரிச்சு போய்யா…. எழுபது வயசுவரை மூளைய காலிச்சட்டி மாதிரி வச்சிருந்தா நீ பெரியாளாயிடுவியா? போய்யா” என்றேன்

நமக்கும் 50 க்கு மேலே வயசாகிப்போச்சு! இன்னும் இருபது ஆண்டுகளில் அந்த எழுபது வயதுக்காரர் போல நமக்கும் மரைகழண்டு போகும் முன்னால  இலக்கியம் மண்ணாங்கட்டினு எதையாவது எழுதறதைவிட்டுப்புட்டு முட்டாள்களை தேடி அலையாதிங்கப்பா, உங்களை அறிவாளியா காட்டிக்க!

இதெல்லாம் ஒரு பதிவுனு போட்டு ஒரு வயதான ஆளை இரக்கமே  இல்லாமல் திட்டிப்புட்டேன்னு கொஞ்சம்கூட அதற்காக வருத்தமடையாமல், அதை  உலகறியச் சொல்லி கேவலப்படுத்தும் ஒரு மிருககுணமுள்ள எழுத்தாளன்தான் இந்த ஜெயமோகன் னு எல்லாரும் தெரிஞ்சுக்கோங்கப்பா!

Monday, May 27, 2013

நல்லவேளை சென்னை சூப்பர் கிங்குஸ் தோற்றது..

ஐ பி எல் ஃபைனல்ஸ்ல சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியர்களிடம் தோத்துப்புட்டாங்களாம்! இந்த மேட்ச் -ஃபிக்குஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு, பொய்க் குற்றச்சாட்டெல்லாம் தலை விரித்தாடும் வேளையில், சூப்பர் கிங்ஸ் தோற்று தமிழர்களின் மானத்தை தக்க வைத்துக்கொண்டதுனு நம்ம சூப்பரு கிங்குஸு விசிறிகளெல்லாம் ஆறுதல் அடைஞ்சுக் கோங்கப்பா!

ஜெயித்திருந்தால் ஊர் உலகம் என்ன சொல்லும்..

* என்ன எல்லாமே மேட்ச் ஃபிக்ஸிங்தான்.. இதையெல்லாம் வெற்றினு வெட்கங்கெட்டவந்தான் சொல்லிக்குவாணுக..

* என்ன எல்லாம் நம்ம இந்தியா சிமெண்ட் ஏழுமலையான் முடிவு செய்ததுதான். இதெல்லாம் ஒரு வெற்றிணு முட்டாத்தமிழர்கள்தான் கொண்டாடுவான்..

இதுபோல் ஊர்ப்பேச்சை பொய்யாக்குவது கடினம்.

சரி, இப்போ தோற்றதாலே அந்த "அழுக்குக் கறையை" அகற்ற முடியுமா என்ன?

அதுதான் இல்லை!

* இதுவும் மேட்ச்ஃபிக்ஸிங்குதான்..இந்த ஒரு சூழலில் நம்ம "ஏழுமலையான்" (அதேன் சீனிவாசன்) டீம் வெற்றியடைந்திருந்தால் இதைவிடக் கேவலமாப் பேசுவாணுகனு புரிந்துகொண்டு, மேட்ச் ஃபிக்ஸிங் பண்ணி, வேணும்னே சி எஸ் கே யைத் தோற்க வச்சுட்டான் இந்தப் "பார்ப்பான்"ணு சொல்லுவாணுக.

There are some fuck-ups which can never be fixed. This is one of that kinds of fuck-up!

Wednesday, May 22, 2013

நம்பள்கி ப்ரிடிக்ட்ஸ்!! குச்சி முட்டாய் குட்டன் கிழிச்சிஃபைய்ஸ்!

ஒரு க்ரிக்கட் மேட்ச் நடந்தால் அதில் யாரு வெற்றியடைவாங்க, அல்லது அடையணும்னு ப்ரிடிக்ட் பண்ணுவதில் ஒண்ணும் பெரிய தப்பில்லை. ஆமா, நம்ம சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி என்ன தமிழனுகளுடைய தொப்புள் கொடி உறவுல உள்ளவனா? சென்னை சூப்பர் கிங்ஸ் ஓன் பண்ணுவது யாரு? யாரோ இண்டியா சிமெண்ட் வச்சிருக்க பரம்பரை பணக்காரன் சீனிவாசனா? அவன்  தமிழனா?  இல்லைனா பார்ப்பானா? வைஸ் ப்ரெஸிடெண்ட் நம்ம மறத்தமிழன் தோனினு சொல்றாங்க! இப்போ யாரு அதில் ஷேர் அதிகமா வச்சிருக்கா? தமிழ்நாட்டில் உள்ள ஏழை பாழையா?

சரி, அந்த சூப்பர் கிங்க்ஸ் டீமில் வெளையாடுறவன் எல்லாரும் தமிழனா? காசு கொடுத்தால் எல்லா இவனும்தான் பந்தையும் மட்டையையும் வச்சுண்டு அடிச்சுண்டு திரியப்போறான். இதுதான் ஐ பி எல் என்னும் வியாபாரம்! இதுல மேட்ச் ஃபிக்ஸிங் மண்ணாங்கட்டினு வேற பலவிதமான குற்றச்சாட்டுகள் வேற!

இதில் நம்மாளு நம்பள்கி சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கும்னு தைரியமாக ப்ரிடிக்ட் பண்ணி அதை தைரியமாக சொல்லிப்புட்டாரு! எவனுக்கு தில்லு இருக்கும், யாரு ஜெயிப்பார்னு ப்ரிடிக்ட்ப் பண்ணி சொல்ல? இப்போ தனது தோல்வியை வீரனாக ஏற்றுக்கொண்டார்.

சரி இப்போ நம்பள்கியை சேட்டுனு (இவனுகளுக்கு எப்படி எவன் சேட்டு எவன் முஸ்லிம்னு தெரியும்னு தெரியலை) சொல்லி பெரிய பெரிய மேதாவி எல்லாம் பட்டம் கொடுக்கிறாணுக. சரி இருந்துட்டுப் போகட்டும். நம்பள்கி சேட்டாகவே இருக்கட்டும்! ஒரு சேட்டு, தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் வலைபதிவில் வந்து தமிழ்ல்ல எழுதுவது தமிழுக்கே பெருமைதான். அப்புறம் குட்டன்னு எனக்குத் தெரிய எந்தத்தமிழனும் பேரு வச்சிட்டு திரிஞ்சதில்லை! அதுவும் ஒரு ஃபோட்டோ ஒண்ணு ஐ டி ல போட்டு இருக்கானே? சுத்தமான மரைகழண்ட ஒருத்தந்தான் அது மாதிரி ஒரு புகைப்படத்தை வச்சுட்டு திரிய முடியும்!

 இந்த குட்டன்னு பேர வச்சுட்டு குஞ்சுக்குட்டன்னு ஓட்டுப் போட்டு திரிகிற ஓட்டுப்பொறுக்கி என்னதான் சொல்றான்னு பார்ப்போம்..

நம்பள்கி சொல்றான் நிம்பள்கி கேக்குறான்!



கல் மேட்ச் சென்னை ஜெயிச்சிருச்சி.
நம்பள்கி நெனச்சான் மும்பாய் ஜெயிக்கும்னு.
மகர் யார் ஜெயிச்சா நம்பள்கி என்ன?
நம்ம பொளப்புதான் முக்கியம்.
சென்னையிலே மேட்ச் நடந்தாலாவது டிக்கட் வாங்கக் காசுக்காக நம்ம கிட்ட ஏதாவது அடகு வப்பாங்க!
அது இல்லாமப் போச்சுப்பா!
நான் இந்த மேட்செல்லாம் பாக்கறதில்ல.
ஆனா பஞ்சாப் ஆடற மேட்ச் மட்டும் கண்டிப்பா பாத்துருவேன்
நம்பள்கி பஞ்சாப் ஊர் இல்லீங்கோ.
பின்னே ஏன் பாக்குறேன்னு நிம்பள் கேக்குதா?
அந்த டீம் ஓனர் அங்க உங்காத்துக்கிட்டு அளகா சிரிச்சு,கையாட்டி,குதிக்கிறது நம்பள்கி ரொம்பப் பிடிக்கும்!
அவங்க நடிக்கறதே இல்லேன்னு நெனெச்சேன் .
லேகின் இன்னிக்குப் பேப்பர்ல ஒரு விளம்பரத்திலெ சிரிச்சுக்கிட்டே நிக்கிறாங்கோ!
’இஷ்க் இன் பாரிஸ்’ னு ஒரு படம் ரிலீஸ் ஆகப் போகுதாம்.
அவங்க சொந்தப்படம்தான் !வேறே என்ன?
கிரிக்கெட்லே சூதாட்டம்னு சொல்றாங்க!
பாலிவுட்ல கனெக்சன் இருக்குதுன்னெல்லாம் சொல்றாங்க.
நம்பல்கி சொல்றான் ஜிந்தகியே ஒரு சூதாட்டம் மாதிரிதான்!
ஊர் மேல போன ஒரு லட்கா நேத்து திரும்பி வந்தான்.
அவனுக்கு ஊர் போபால் பக்கம்.
அவங்க ஊர்ல அரசாங்கம் நடத்துற கூட்டு  ஷாதில கலந்துக்கணுனா,வீட்டுல டாய்லெட் இருக்கணுமாம்.
கல்யாணம் கட்டற லட்கா,அந்த டாய்லெட்ல நின்னு ஃபோட்டொ பிடிச்சு அனுப்ப ணுமாம்!
தமாஷா இருக்குதா?!
ஏன்னா அந்த ஊர்லே டாய்லட் அதிகமில்லயாம்!
அங்க போய் ஒரு டாய்லட் கட்டி அதை ஃபோட்ட எடுக்க வாடகைக்கு விட்டா 
நல்லாருக்காது?!
எங்கன்னாலும் நம்பள்கி பொளப்புக்கு ஏதும் வளி இருந்தாச் சரி!

 மேலே இருக்கு அவன் குச்சுமிட்டாயி திண்ணுட்டு  எடுத்த வாந்தி! இவன் எடுத்த  இந்த வாந்திக்கு 9 பாஸிடிவ் ஓட்டு வேற!!

குச்சி மிட்டாயிக்காரன்  has comment moderation enabled so that we can not express our freedom of speech in his HIGH QUALITY BLOG. Now he can come over here and explain what the heck he is doing in his blog!

இவரு என்னத்தை வேணுமானாலும் எழுதிப்புட்டு, என்ன எழவை எழுதினாலும் ருட்டீனா தவறாமல் ஓட்டுப்போடுற ஒரு எட்டுப் பேரிடம் ஓட்டை வாங்கிக்கிட்டு இஷ்டத்துக்கு பேசினால் இவன் எல்லாம் மறத்தமிழனாயிடுவானா என்ன? எல்லாம் நேரம்தான் போங்கோ!


அறிவியல் சொல்லிக்கொடுப்பது கற்றுக்கொள்ளத்தான்? மூன்று

அறிவியல் என்பது கடல்! அது சரி, எதுதான் கடல் இல்லை? தமிழும் கடல்தான்!  பெண்கள் மனமும் கடல்போல ஆழமானதுதான். உண்மைதான் அறிவியல்போலவே அவைகளும் கடல்போல ஆழமானதுதான். ஆமா, ஏகப்பட்ட கடல்கள் இருக்கு நம்மைச் சுத்தி! :-))

"ஒரு ஆசிரியர்னா அவர்களுக்கு எல்லாம் தெரியும். அவங்க சொல்றதை எல்லாத்தையும் மதிக்கணும்" என்பது  நம்மிடம் உள்ள தவறான புரிதல். அந்த ஆசிரியர்  அந்த சக்ஜெக்ட்ல பி எச் டி வாங்கி இருக்கலாம்..அதனால என்ன இப்போ? இங்கேதான் அறிவியலாளன் என்பவன் பிரச்சினைக்குரிய ஒரு ஆளாகிறான். எதையும், யாரையும்  ஆராய்வதில தப்பில்லை! அறிவியலாளனுக்கு அடிப்படை என்னவென்றால் உண்மை! வெறும் நம்பிக்கை கெடையாது! அதனால அவன் எதையும் சும்மா நம்ப மாட்டான்! உண்மையைத்தவிர! உண்மையைக் கத்துக்கணும்னா நீ உண்மையானவனா இருக்கணும். அட் லீஸ்ட் புரியாததை புரிஞ்சதுனு சொல்லி நடிக்கக்கூடாது. அப்படி உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டால் அது நீயே உனக்கு வச்சிக்கிறத் தடைக்கல்!

நான் ஒருமுறை என் வாத்தியாரிடம் போயி வெட்கத்தைவிட்டு "இது எனக்கு புரியலை சார். இதுக்கு என்ன அர்த்தம்? கொஞ்சம் விளக்க முடியுமா?" னு கேட்டேன். அதுக்கு அவர் என்னை அழச்சுண்டு போயி பல புத்தகங்களைப் புரட்டி என் அறியாமையைப் போக்குவார்னு நெனச்சுண்டு இருந்ததால் நான் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தேன். அவர், உடனே இந்தப் புத்தகத்தை எடுத்துப் பாரு, அதில் விளக்கி இருப்பான்னு பதில் சொன்னாரு. இதில் என்ன பிரச்சினைனா இவர் சொல்ற புத்தகம் எனக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது!  மேற்படிப்புக்கு பாடம் நடத்தும் நம்ம வாத்தியார்கள் வாரத்துக்கு ரெண்டு க்ளாஸ்தான் எடுப்பது வழக்கம். மத்த நேரமெல்லாம் காண்டீன், ஷேர் மார்க்கட்,  மண்ணாங்கட்டினு பொழைப்பை ஓட்டிக்கிட்டு திரிகிறது. ஒருத்தன் தெரியலைனு வந்து கேட்கிறான். நீதான் ரெண்டு மணி நேரத்துக்கு பதிலா இன்னொரு மணி நேரம் செலவழிச்சு விளக்கினால்த்தான் என்ன? என்றெல்லாம் கேள்வி அவர்களைக் கேட்கமுடியாத பருவம் அது. பல வாத்தியார்களுக்கு மாணவர்கள் கேள்வி கேட்பதே பிடிக்காது! அப்படியே கேட்டுப்புட்டான்னா இப்படி எதையாவது சொல்லி பொழைப்பை ஓட்ட வேண்டியது. அப்புறம் எங்கேயாவது அவனைப்போட்டு சுழிக்கிறது! எதுக்குடா வம்புனு முட்டாளாவே இருந்துட்டா நெறைய மதிப்பெண்களுடன் வெளியே போயி "சாதிக்கலாம்"!

எனிவே, பாடம் நடத்துவது எதுக்குனு பார்த்தால், கற்றுக்கொள்வதற்கே என்பேன் நான். அறிவியல் கட்டுரைகள் எழுதுவது அறிவியல் கற்றுக்கொள்ளவே! உங்களுக்கு ஒண்ணு நல்லாப் புரிஞ்ச மாரி இருக்கும். ஆனால் அதை இன்னொருவருக்கு விளக்கும்போதுதான் நமக்கே இன்னும் அது சரியாப் புரியலைனு புரியும். நான் சொல்வது வேறமாரிப் புரிதல். சும்மா விக்கில தோண்டி எடுத்து வந்து, தோண்டி வந்ததெல்லாம் நமக்குப் புரிந்துவிட்டதுபோல நடிப்பதல்ல!

கற்றுக்கொடுக்கணும்னா நமக்குப் புரியாததை ஏற்றுக்கொண்டு, மேலும் அதைப்பத்தி படிச்சு கற்றுக்கொண்டு விளக்கணும். அப்படியெல்லாம் எல்லாரும் செய்வதில்லை!

இது புத்திசாலிகளுக்கான உலகம்! இதுபோல் சிரத்தையுடன் கற்றுக்கொண்டு கற்றுக்கொடுக்கும் முட்டாள்களுக்கானது அல்ல! அப்படிக் கற்றுக்கொள்வதால், கற்றுக்கொடுப்பதால் வேறு யாருக்கும் நன்மையோ இல்லையோ, உங்களுக்குத்தான் நன்மை. அதைப்பற்றி நீங்க இப்போ இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

அதனால் பாடம் சொல்லிக்கொடுப்பதே நாம் இன்னும் கற்றுக் கொள்வதற்குத்தான், நாம் இன்னும் நன்றாக புரிந்துகொள்ளத்தான். என்ருமே நாம் அனைவருமே மாணவர்கள்தான்.

சரி, ப்ரோட்டீன்னா என்ன?

அமினோ அசிட்கள் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்து பெரிய ஒரு பெரிய மாலிக்யூலா எப்படி ஆகும்?



மேலே உள்ளமாரித்தான் ஒண்ணோட ஒண்ணு சேரும். இதுபோல் நூற்றுக்கணக்கான வேற வேற அமினோ ஆசிட்கள் ஒண்ணு சேர்ந்தால் ஒரு ப்ரோட்டீன் உண்டாகும். நான் சொன்னதுபோல் அந்த ப்ரோட்டினுக்கு உயிர் இருக்கு!

சரி, இந்த மாரி யாரு ஒரு ப்ரோட்டினை உருவாக்குவது?


டி என் எ தான் எந்த மாரி ப்ரோட்டீன் உருவாகணும் என்கிற "கோடிங்" எல்லாம் கொடுக்கும், அதை உருவாக்குவது ஆர் என் எ வும்,  என்ஸைம்களும் (ப்ரோட்டின்கள்தான்) சேர்ந்து.

நம்ம ஆய்வகத்தில் வேதிக்குடுவைகளில் செய்வதைவிட இந்த டி என் எ  சொல்லும் "கோடிங்"கை (அதாவது என்ன மாரி ப்ரோட்டீன் அல்லது டி என் எ வேணும்னு சொல்றதை), ஆர் என் எ வும், ப்ரோட்டீன்களும் (என்சைம்களும் ) சேர்ந்து உருவாக்கிவிடும்!

அப்படி உருவாக்கும் உயிருள்ள ப்ரோட்டீன் எப்படி இருக்கும்?




என்ன மறுபடியும் கலர் கலரா ரிப்பனா? :)) ஆமா, இது டி என் எ இல்லை! ப்ரோட்டீன் ரிப்பன்கள்! அதாவது பக்கத்துல போயி பார்த்தால்..
 

பக்கத்திலே போயி ரிப்பனைப் பார்த்தால் மேலே இருக்கமாரித்தான் இருக்கும்.

நீங்க மட்டுமில்லை, பெரிய பெரிய பயாலஜிஸ்ட்ஸ்களுக்குக்கூட அதை கீழே கொடுக்கப்பட்டது போல் பார்க்கப் பிடிக்காது. ரிப்பனாகத்தான் பார்க்கப் பிடிக்கும்!

இப்போ ப்ரோட்டின்னா என்னனு புரிஞ்சிருச்சா? :)))

-தொடரும்

Tuesday, May 21, 2013

மனிதனை விட நாய்க்கு அதிக க்ரோமோசோம்கள்! அறிவியல்! ரெண்டு

மனிதனை (46) விட நாய்களுக்கு (78) க்ரோமோசோம்கள் அதிகம் னு தெரியுமா உங்களுக்கு? நாய்க்கு மட்டுமல்ல நெறைய விலங்குகளுக்கு மனுஷனை விட க்ரோமோசோம்கள் அதிகம்!

ஒரு சிலர் X chromosome அம்மாட்ட  இருந்து வருவது, Y chromosome அப்பாட்ட இருந்து வரும்னு என்னவோ இந்த ரெண்டு க்ரோமோசோம்கள்தான் ஒருவருடைய ஜெனெடிக்ஸையே முடிவு செய்யும்னு நெனச்சுக்கிறா.

எக்ஸ் மற்றும் வை க்ரோமோசோம்கள், நமக்கு அப்பா அம்மாவிடமிருந்து வரும் 23 க்ரோமோசோமில் ஒண்ணே ஒண்ணுதான். இது நம்ம பாலியலை முடிவு செய்வது. மற்ற 22 க்ரோமோசோம்கள் நம்ம மற்ற குணங்களை முடிவு செய்யும். அதனால் இந்த எக்ஸ் வையை மட்டுமே பிடிச்சு தொங்காதீங்கப்பா.

 Human cells have 23 pairs of chromosomes (22 pairs of autosomes and one pair of sex chromosomes), giving a total of 46 per cell. 

இருக்கது 23 க்ரோமோசோம் ஜோடிகள். அதாவது 46 க்ரோமோசோம்கள். ஆனால் ஒரு க்ரோமோசோமில்  எத்தனை ஜீன்கள் இருக்குணு தெரியுமா? ஆயிரக்கணக்கான ஜீன்கள்!

அப்போ க்ரோமோசோம் என்பது ஒரு டி என் எ இல்லையா? ஒரே ஒரு டி என் எ இல்லையா? அது ஒரே ஒரு ஜீன் இல்லையா? என்றால்..

க்ரோமோசோம் என்பது டி என் எ மற்றும் ப்ரோடீன் கலந்தது. நம்ம செல் நியூக்ளியஸ்ல ஒரு பெரிய டி என் எ வை வளைச்சு சுருட்டி கட்டி வைக்கப்பட்டிருக்கும். எதால்? பல ப்ரோட்டீன்களால். அப்போ க்ரோமோசோம்ல ப்ரோட்டீன்களும் உண்டா? ஆமா உண்டு! ஒரு டி என் எ வாக இருந்தாலும் அது 6 அடி நீளம் உள்ள ஒரு மாக்ரோ மாலிக்யூல்! அதை சுருட்டி உருட்டி வைத்திருப்பது பல ப்ரோட்டீன்கள். ஒரு டி என் எ வில பல ஜீன்கள் உள்ளது எப்படி? ஒரு டி என் எ வில் ஒவ்வொர் பகுதியும்  ஒரு சில மரபுக் குணங்களை முடிவு செய்யும்!


Chromosome Genes Total base pairs Sequenced base pairs[15] Cumulative (%)
1 4,220 247,199,719 224,999,719 7.9
2 1,491 242,751,149 237,712,649 16.2
3 1,550 199,446,827 194,704,827 23.0
4 446 191,263,063 187,297,063 29.6
5 609 180,837,866 177,702,766 35.8
6 2,281 170,896,993 167,273,993 41.6
7 2,135 158,821,424 154,952,424 47.1
8 1,106 146,274,826 142,612,826 52.0
9 1,920 140,442,298 120,312,298 56.3
10 1,793 135,374,737 131,624,737 60.9
11 379 134,452,384 131,130,853 65.4
12 1,430 132,289,534 130,303,534 70.0
13 924 114,127,980 95,559,980 73.4
14 1,347 106,360,585 88,290,585 76.4
15 921 100,338,915 81,341,915 79.3
16 909 88,822,254 78,884,754 82.0
17 1,672 78,654,742 77,800,220 84.8
18 519 76,117,153 74,656,155 87.4
19 1,555 63,806,651 55,785,651 89.3
20 1,008 62,435,965 59,505,254 91.4
21 578 46,944,323 34,171,998 92.6
22 1,092 49,528,953 34,893,953 93.8
X (sex chromosome) 1,846 154,913,754 151,058,754 99.1
Y (sex chromosome) 454 57,741,652 25,121,652 100.0
Total 32,185 3,079,843,747 2,857,698,560 100.0

*******************************8

பொதுவாக திடப்பொருளாக உள்ளவை அதாவது "solids" வுடைய "density" அதனுடைய  திரவ வடிவத்தில் இருப்பதைவிட அதிகமாக இருக்கும்.  காரணம்? திடப்பொருளாக இருக்கும்போது அந்த மூலக்கூறுகளெல்லாம் ரொம்ப "டைட்லி பாக்டா" இருக்கும். ஆனால் அது திரவநிலையில் கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆக இருக்க முடியும். ஆனால் நம்ம தண்ணீர் (H2O) மட்டும் இதற்கு விதிவிலக்கு!

தண்ணீர் அல்லது வாட்டர் மாலிக்யூல்ஸ் ஏன் வித்தியாசமானது என்றால்...

அதில் "ஹைட்ரஜன் பாண்டிங்" இருப்பதால்னு சொல்லலாம்.

அது திடப்பொருளாக இருக்கும்போது  "density" குறைவா இருப்பதற்கு ஹைட்ரஜன் பாண்டிங் ஒரு காரணம்!

இப்போ என்ன எழவுக்கு டி என் எ ல இருந்து "ஹைட்ரஜன் பாண்டிங்க்" கு தாவுற?னு கோவப்படாதீங்க.

"ஹைட்ரஜன் பாண்டிங்" மிக மிக முக்கியமான ஒண்ணு! டி என் எ அமைப்பு பத்தி புரிஞ்சுக்கணும்னா அதைப் புரிந்துகொள்ளாமல் கொஞ்சம் கஷ்டம்.

ஏன் பனிக்கட்டி தண்ணீரில் மிதக்குது? அது தலையெழுத்து மிதக்குது?
இதிலே என்ன இருக்குனு பெரிய வியாக்யாணம் பேசுறனு தெரியலைனு புலம்பாமல் கவனிங்க.

இதுக்கு முக்கியக் காரணம் ஹைட்ரஜன் பாண்டிங்!




ரெண்டு தண்ணீர் (water) molecules. சிவப்பில் உள்ள முதல் மாலிக்க்யூள்ல் ஆக்ஸிஜனுக்கும் வெள்ளையா இருக்க ரெண்டாவது மாலிக்யூல்ல உள்ள ஹைட்ரஜனுக்கும்  உள்ள பாண்ட் (பிணைப்பு) தான் ஹைட்ரஜன் பாண்டிங்





 



ஐஸ்ல தண்ணீர் ஹைட்ரஜன் பாண்ட்களுடன் இருக்கும் தண்ணிர் மூலக்கூறு எப்படி இருக்குனு பாருங்க! இடையில் பெரிய பெரிய ஓட்டை இருக்கா?






அதே வாட்டர் மாலிக்யூல், தண்ணியா, திரவமா  இருக்கும்போது  இருக்கும் அமைப்பில் அதுபோல் பெரிய ஓட்டை "இடைவெளி" கெடையாது.
இதனால் ஐஸ்வுடைய டென்ஸிட்டி தண்ணீர் (திரவம்)ல இருக்க டெண்சிட்டியை விட குறைவு! இதை ஏன் தெரிஞ்சுக்கணும்?

டி என் எ, மற்றும் ப்ரோட்டீன்களிலும் ஹைட்ரஜன் பாண்டிங் இருக்கு.

சரி ப்ரோட்டின்னா என்ன டி என் எ னா என்ன?

ப்ரோட்டீன் என்பது  அமினோ ஆசிட்களால் ஆனது. டி என் எ என்பது அமினோ ஆசிட்களால் ஆனதல்ல!

ப்ரோட்டீன்னா என்ன?

பல அமினோ ஆசிட்கள் இணைந்து ஒரு பெரிய மாக்ரோ மாலிக்யூல் ஆவது ப்ரோட்டீன். அந்த ப்ரோட்டீனுக்கு பயலாஜிக்கல் ஆக்டிவிட்டி இருந்தால் அதனை என்சைம் எனலாம்!

அப்போ ப்ரோட்டீனும் என்சைமும் ஒண்ணுதானா?

அப்படினு சொல்லலாம்! இரண்டுமே அமினோ ஆசிட்கள் சேர்ந்து அமைக்கப் பட்ட பெரிய மாலிக்யூல்கள்தான்.

அமினோ ஆசிட்னா என்ன?

கீழே பாருங்க! இவைகள்தான் அமினோ ஆசிட்கள்!






 சரி அப்புறம்?

இவைகள் எல்லாவற்றிலுமே குறைந்தது ஒரு அமினோ க்ரூப் (NH2) அப்புறம் ஒரு ஆசிட் க்ரூப் (COOH) ரெண்டுமே இருக்கும்.

இவைகள் தனியாக இருக்கும்போது எதுவும் பெரிதாக சாதிக்க முடியாது. ஆனால் இவைகள் ஒன்றோட ஒன்று இணைந்து ஒன்றாகக்கூடி மாக்ரோ மால்க்யூல் ஆகும்போது இவைகளுக்கு "உயிர் வந்துவிடும்"!

-தொடரும்


Friday, May 17, 2013

அறிவியல்! அறிவியல்! அறிவியல்! -ஒண்ணு

அறிவியலை எளிய முறையில் புரிந்துகொள்ள முடியுமா? முடியாது! அப்போ எதுக்கு இந்த அறிவியல்? ஒரு சிலர் புரிந்து கொண்டாலும் பரவாயில்லை! என்ற பெரிய மனசு எனக்கு! :-)

இப்போ எல்லாம் ஆத்திகர்கள்தான் அறிவியலை கையிலே வச்சுண்டு அறிவியலாளன் எல்லாம் முட்டாள்கள்! டார்விந்தான் மிகப்பெரிய முட்டாள்! எங்க ஆண்டவந்தான் எல்லாருக்கும் மேலேணு அவங்களுக்குள்ளே நிரூபித்து, அவங்களுக்குள்ளேயே கதை சொல்லி, கை தட்டல் வாங்கிக்கிட்டு நெஞ்சை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள்! எல்லாம் அவங்க ஆண்டவன் காப்பாத்திப்புடுவான்னு தைரியத்திலே தான். வேறென்ன?

ஆன்ஜலீனா ஜோலி தனக்கு வரப்போகும் வியாதியை உணர்ந்து அதற்காக முன் எச்சரிக்கையுடன், தன் மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து அதற்காக பதிலாக செயற்கையான மார்பகத்தை வைத்துக் கொண்டுள்ளார். இதை மூடி மறைக்காமல், உலகுக்கும் சொல்லி, பலருக்கும் உதவும் வகையில் நடந்துள்ளார்.

சரி இவருக்கு எப்படித் தெரியும்? தனக்கு 87% சாண்ஸ் மார்புப்புற்று நோய் வர வாய்ப்பிருக்கு என்று?  

அவரோட கடவுள் கனவுல வந்து சொன்னாரா? இல்லைனா நம்ம கிருஷ்ண பரமாத்மாதான் நேரிடையாகப் போயி சொன்னாரா? இல்லைனா எப்படி?

ஆத்திகந்தான் சொல்லுவானே எல்லாப் புகழும் இறைவனுக்கே! னு ஆக, நம்ம க்ரிடிட்டை அந்த இறைவனுக்கு அள்ளிக் கொடுத்துப் புட்டு சில அறிவியல் உண்மைகளைப் பார்ப்போம்.

க்ரோமோசோம்னா என்ன?

ஜீன் என்றால் என்ன?

ஜெனட்டிக்ஸ் னா என்ன?

அவர் அம்மாக்கு அந்த கேன்சர் உண்டாக்கும் ஜீன் இருந்தால் இவருக்கு எப்படி கேன்சர் வரும்?

இப்போ நம்ம ஜெனட்டிக்ஸ் தெரிஞ்சுக்கனும்.

அதான் க்ரூமோசோம், எக்ஸ்-வை (XY) இருக்கு. அப்புறம் எக்ஸ்-எக்ஸ்(XX) அதெல்லாம்தான். இதெல்லாம் தெரியுமே னு எல்லாம் புரிஞ்சமாரி நடிச்சுக்கலாம்.

ஆனால் உண்மையிலே புரிஞ்சதா?

அப்படினா?

உண்மையிலே புரியலைனா நான் ஏன் புரிஞ்சதுனு சொல்றேன்? னு எரிச்சலுடன் சொல்றீங்களா?

கோவிச்சுக்காதீங்க! இது சம்மந்தமாக எனக்கு இன்னும் நெறையா கேள்விகள் இருக்கு! அதான் கேட்டேன்.

உங்களுக்கு கேள்வியே இல்லையா? சரி, நல்லாயிருங்க!

புரியாதவர்கள், புரிந்துகொள்ளணும்னு நெனைக்கிறவங்களைப் பார்ப்போம்!

கீழே ஊதாவா ஒரு ரிப்பன் மாரி இருக்கு இல்ல? அதான் டி என் எ!  அப்போ பின்க்கா உள்ளது? அதுவும்தான் டி என் எ. அப்போ, ஊதாவும் பிங்கும் சேர்ந்த கலர் ரிப்பன்? அதுவும் டி என் எ தான்.

கலர் கலரா அழகா இருக்கு ரிப்பன்! :))






சரி, இந்த ஊதா ரிப்பன், டி என் எக்கும் ஜீன்க்கும் என்ன சம்மந்தம்?

டி என் எக்கும்  க்ரோமோஸோம்க்கும் என்ன சம்மந்தம்?

ஜீனுக்கும் க்ரூமோசோமுக்கும் என்ன சம்மந்தம்?

இது ஒரு ப்ரோட்டீனா?

இல்லைனா என்ஸைமா?

இது அமினோ ஆசிட் களால் ஆனதா?

இல்லையா?

அப்போ இந்த ரிப்பன் எதால் ஆனது?

கீழே உள்ள படத்தைப் பாருங்க!







மேலே இருக்கதும் அதே ரிப்பன் தான். கொஞ்சம் பக்கதிலே போயி ரிப்பனை பார்க்கிறோம். அம்புட்டுத்தான்.

பயமா இருக்கா?

 சரி கீழே உள்ள இன்னொரு நமக்குக் கொஞ்சம் புரிகிற படத்தைப் பாருங்க!

 

இப்போ ஏதாவது புரியுதா?

புரிஞ்சிருச்சா?

அட இம்பூட்டுத்தானா? னு சொல்றீங்களா??? :)))

-தொடரும்

Thursday, May 16, 2013

கேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்!

யாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா?? போயி வாசிச்சுப் பாருங்கப்பா! 

சினிமா வியாபார உக்தி பத்தி பேசும்போதெல்லாம் எல்லாத்தையும் கண்டுபிடிச்சவன்  கம்லஹாசந்தான்னு கேவலமா ஒரு லைன் எழுதாமல் இருக்க மாட்டான் இந்த ஆளு! 





The money from Malaysia & Singapore, Dasavatharam, sivaji
சினிமா வியாபாரம்

He is paid off by Kamalhassan or what??

In every article he writes,  he is licking Kamlahassan's behind in behindwoods! கீழே கொடுக்கப்பட்டதை வாசிங்கப்பா!


Before anyone, it was Kamal who understood there are business possibilities for Tamil movies in regions like US, UK, Far East and Middle East. He also urged the individual sales of rights rather than bundled rights. Through his model, big stars’ films started to earn really good returns through FMS sales. Distributors indeed owe a lot to Kamal for bringing in this new trend.

 If that is the case, how did he screw up in viswaroopam???  


Endhiran FiveStar $3,048,246



Vishwaroopam FiveStar




$325,871

Why dont you write Kamalhassan screwed up in Viswaroopam showing Viswaroopam collection in Malaysia and Singapore and middle east??

Kamal’s Dasavatharam and Rajini’s Sivaji enjoyed price and collections in Telugu equal to their Tamil versions. Kamal’s many films have been dubbed into Tamil from Telugu and became super hits as well. Salangai Oli was as big a hit in Tamil as it was in Telugu. Similarly, Kamal’s Tamil movies enjoy success in Telugu too.
Movies like Dasavatharam, Sivaji and Endhiran are built with universal storyline and themes that would not look out of place in a Tamil, Hindi, Telugu or even Malayalam. That is how the humongous budgets of 100+ crores are made possible.

* What kind of Chronological order you follow, anyway??
 

* Based on which movie came out first?? In other words, based on the dates those were released??

If that is the case it should go like 

Sivaji, Dasavatharam, Enthiran and Viswaroopam 


* Or Is this based on alphabetical order?

If that is the case it should go like..

Dasavatharam, Enthiran, Sivaji, Viswaroopam!!


You don't seem to follow any f***king order properly?  Because you think you can write anything, some 2000 morons will follow you right??

Or your only motivation is kissing Kmalahassan's bottom shamelessly??

ஆமா, நீ பாடுதெல்லாம் ஹாசன் புகழ்,  அப்புறம் ஜினி ஸ்டில்லை மட்டும் ஏன் பெருசா போட்டுக்கிற? வியாபாரிதானே நீ? அதான? ஆனால் இதெல்லாம் வியாபாரம் இல்லை! விபச்சாரம்!

What an worthless trash he writes in the name of "cinema business" as if he distributed million movies! This book should be tossed in the GARBAGE CAN as it is packed with LIES!

Tuesday, May 14, 2013

எழுத்தாளனின் நல்ல படைப்பிற்கு செக்ஸ் ஹார்மோன்கள் அவசியமா?

நம்ம ஊர் எழுத்தாளர்களை எடுத்துக்கொள்ளுங்கள், இவர்களுடைய சிறந்த படைப்புகள்னு பார்த்தால், இவர்கள் இளமையாகவோ அல்லது நடுவயதிலேயோ இவர்களிடம் இருந்து உருவாகி வெளிவந்தவைகள்தான்.
பொதுவாக இவர்களுக்கு வயதாக ஆக இவர்கள் எழுத்து மங்க ஆரம்பித்து விடுகிறது.

ஒருவர் அனுபவம் மிக்கவராக ஆகும்போது அவரால் இன்னும் நல்லா எழுதமுடியவேண்டும்! ஆனால் வயதான காலத்தில் சாண்டில்யன் எழுதிய சரித்திர காமக்கதைகளோ, ஜானகிராமனின் பர்வேர்ட்டெட் சிந்தனைகளுடன் வந்த நளபாகமோ, அல்லது பாலகுமாரனின் ஆன்மீகக கட்டுரைக் குப்பைகளோ விமர்சகர்களையோ வாசகர்களையோ அதிகமாகக் கவரவில்லை! அதே சமயத்தில் இளமையில் இவர்கள் எழுதிய, கடல் புறா, யவன ராணி, அம்மா வந்தாள், மரப்பசு போன்றவை விமர்சகர்களையும் வாசகர்களையும் அதிகம் கவர்ந்தது எனலாம்.

சிறந்த திரைப்பட இயக்குனர்களின்  படைப்புகளும் அதேபோல்தான். அது இயக்குனர் இமயமாக இருக்கட்டும், இல்லை இயக்குனர் சிகரமாக இருக்கட்டும்! மணிரத்னம், பாலுமஹேந்திரா, மகேந்திரன், பாக்ராஜ், டி ராஜேந்தர் யாருமே இதற்கு விதிவிலக்கு கெடையாது! வயதாகிவிட்டால் இவர்கள் இயக்கத்தில் நடிக்க இவர்களே உருவாக்கிய நடிகர்களே தயங்கி ஒதுங்கி ஓடுகிறார்கள்.

 File:Testosteron.svg



எனக்கென்னவோ, நம்ம எழுத்தாளர்களையும், இயக்குனர்களையும் எடுத்துக்கொண்டு, கொஞ்சம் இன்னொரு கோணத்தில் பார்த்தால் இவர்களுடைய செக்ஸ் ஹார்மோனுக்கும் (டெஸ்டாஸ்டீரோன் லெவலுக்கும்) க்ரியேட்டிவிட்டிக்கும் சம்மந்தம் இருப்பதுபோல இருக்கு!


 File:Testosterone-from-xtal-3D-balls.png
When their sexual performance goes down they could not do well in their profession as well or WHAT?  புதிராக இருக்கிறது?!

Monday, May 13, 2013

பகுத்தறியத் தெரியாத உலகநாயகன்!

 குறைகள் இல்லாத மனிதனோ, நிகழ்வுகளோ கெடையாது. இதற்கு நானும் நீங்களும் விதிவிலக்கு இல்லை. ஆனால் நம்மைச்சுற்றிய பெரிய உலகில் நாம் ஒரு சிலரைத்தான்  ரொம்ப கவனமாக கவனிக்கிறோம். ஏன் அப்படி?

 

ஒண்ணு அவர்களை நமக்கு ரொம்பப் பிடிக்கணும் இல்லைனா அவர்களைப் பார்த்தாலே பிடிக்காமல் இருக்கணும்.

 

அழகான பெண்ணைப் பார்த்து ரசிக்கிறோம்.

 
அழகான பிடித்த நடிகையின் நளினமில்லாதா அசைவுகள்கூட நமக்கு அழகாத்தான் தோனுது.

 அதே சமயத்தில் பிடிக்காத நடிகை அழகா செய்வதுகூட அசிங்கமாத் தோனுது. நம்ம எல்லாம் புத்தர் இல்லை! சாதாரண மனிதர்கள்தான். ஒரு பக்கம் பெரிய பெரிய தத்துவத்தை எல்லாம் அள்ளி விடுவோம். இன்னொரு பக்கம் அதற்கு எதிர்மாறாக வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டு இருப்போம். அதையெல்லாம் சப்பைகட்டுக் கட்ட பழமொழிகள், இதிகாசத்தில் நடந்த நிகழ்வுகளை மேற்கோல் காட்டுவது இதுபோல் பொழைப்பை ஓட்டிக்கிட்டு திரிவோம்.


ஆனால் ஒண்ணு நமக்குப் பிடிக்காதவர்களுக்கு நடந்த  ஒரு நிகழ்வை, அல்லது நமக்குப் பிடிக்காதவர்களைப்பத்தி விமர்சிக்கும்போதுகூட உண்மையை என்றுமே சொல்லணும். உண்மையைப் பேசும்போது மற்றவையெல்லாம் அடிபட்டுப் போயிடும்! வாய்மையே என்றும் வெல்லும்!

உலகநாயகன் கலந்துகொண்டு கலக்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைப் பத்தி ஏற்கனவே விமர்சிச்சாச்சு. இருந்தாலும் அதுல ஒரு முக்கியமான மேட்டரை விட்டுப் புட்டேன்.

அதென்னானா.. இந்த விஸ்வரூப பிரச்சினை தலைவிரிச்சு ஆடிய நேரம். அதாவது தமிழ்நாட்டு அரசாங்கம் இஸ்லாமியர்களை கைகாட்டி படத்தை வெளியிட முடியாமல் இடைக்காலத் தடை விதித்த நேரம் அது. நம்மாளு, லோகா அவர்கள்  யு எஸ் வந்துட்டாரு! படத்தை ப்ரமோட் செய்வதற்கு. ஆனால் நம்ம ஊர்ல ஜெயா, படத்துக்கு முட்டுக்கட்டை கொடுத்துக்கொண்டு இருந்தாரு..

இந்த ஒரு சூழலில், யு எஸ்ல வந்து ப்ரிமியர் ஷோ எல்லாம் முடிஞ்சதும்  நம்மாளு பிரச்சினையை சமாளிக்க இந்தியா திரும்பி வந்துவிட்டார்.

இப்போ இவரு மேற்கேயும் கிழக்கேயும் 20,000 மயில்கள் மாறி மாறி பறந்து இருக்காரு. அப்போ அவர் நிலைமை எப்படி இருக்கும்? அமெரிக்காவிலிருந்து இந்தியா பறக்கிறவனுக்குத் தெரியும்.. ஜெட் லாக்! பகலெல்லாம் எங்கடா படுத்து தூங்கலாம்னு இருக்கும். நைட் எல்லாம் தூக்கமே வராது. இந்த எழவு சரியாக ஒரு வாரம்கூட ஆகலாம்!

ஆனா நம்மாளு இந்த ஜெட் லாக் கைக்கூட அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கிட்டாருப்பா..

கேள்வி!

* விஸ்வரூபப் பிரச்சினை முத்திப்போயி இருக்கிற இந்த சூழலில், இது சம்மந்தமான முடிவு எடுக்க  சில மணி நேரங்கள் ஆகும்னு சொன்னதும்.. நீங்க எப்படி இருந்தீங்க? டென்ஷனா இருந்தீங்களா?

என்பது பிரகாஷ் ராஜின் கேள்வி!

இவரு உடனே, அம்மணிட்டக் கேளுங்கனு கவுதமியை கையைக்காட்ட, அம்மணி  சொன்னாரு, "கொஞ்ச நேரம் (இடைப்பட்ட ரெண்டு மணி நேரம்?) தூங்கி எழுந்துக்கிறேன்னு படுத்துட்டாரு" னு பெருமையுடன் சொன்னாங்க கவுதமி.

அதாவது  இதுக்கு என்ன அர்த்தம்னா, நம்மாளு இம்பூட்டு பிரச்சினையிலும் தூங்கும் அளவுக்கு ஒரு இரும்பு இதயம் படைத்தவர் என்பதுபோல ஒரு ஸ்டண்ட், பப்ளிசிட்டி அள்ளிக்கிட்டுப் போயிட்டாரு.

ஆனால் உண்மை என்ன? நம்மாள "ஜெட் லாக்" போட்டு கொன்னுடுச்சு! அப்போதைக்கு அவரோட பெரிய பிரச்சினை தூக்கம்தான்! எங்கேடா துண்டைப் போட்டுப் படுப்போம்னு இருந்து இருக்கும். பகுத்தறியிறேன் மண்ணாங்கட்டினு சொல்லிக்கிட்டு திரிகிற ஒலகநாயகனுக்கு ஜெட்லாக் வந்ததுகூட தெரியலையா? இல்லைனா  அதைக்கூடத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு விளைந்த பார்ப்பானா இவரு னு நீங்கதான் சொல்லணும்!

பட்டாபட்டி! மலரும் அநாகரிக அடி தடி நினைவுகள்!

பதிவுலகில் உலா வரும் யாரையுமே பார்த்ததில்லை! பேசியதில்லை ஆனால் பதிவுலக உறவு என்று ஒன்று உருவாவதுண்டு! அது நல்லதாகவும் கண்ணியமானதாகவும் இருக்கலாம். இல்லைனா அடிச்சுட்டு நாறிய  ஒரு உறவாக இருக்கலாம்.

திடீரென மறைந்த முனைவர் பட்டாபட்டி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர் குடும்பம், அவரு வயது, அவர் படிப்பு, அவர் நண்பர்கள் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவருடன் ஓரிரு முறை மிகவும் கடுமையாக, அநாகரிகமாக விவாதித்ததுண்டு. எங்களுக்குள்  கருத்து வேற்றுமைதான் அதிகமாக இருந்ததாக ஞாபகம். கருத்து வேற்றுமை என்பது  சர்ச்சையாகி, சர்ச்சைக்குப் பிறகு அது  சண்டையாகி, அநாகரிக வார்த்தைகளை அள்ளி எறிந்து, கடைசியில்  ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்த திருப்தியுடன் போவது என்று ஒரு சில பதிவுலக உறவுகளுடன் விவாதங்கள் முடிவதுண்டு.. அதுபோல் ஒரு அனுபவம்தான் இவருடன் எனக்குக் கிடைத்தது..

கீழே கொடுக்கப்பட்டள்ளது, அவர் தளத்தில் நடந்த  ஒரு விவாதக் கருத்துச் சண்டை, மற்றும் தனிநபர் தாக்குதல்கள். இதுதான்  நான் "கடைசியாக" அவருடன் கொண்ட "பதிவுலக உரையாடல்".

******************************


***கோவையில் - ஊழலை ஒழிக்க.. இன்று***

அண்ணே ஊழலை ஒழிக்கிறதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. வேணா "குறைக்க" இல்லை கட்டுப்படுத்தப் பார்க்கலாம்! மனிதன் கேவலமானவன் அண்ணே! ஊழல், ஃப்ராடுத்தனம், திருட்டுத்தனம் எல்லாம் அவன் கூடப்பிறந்தது. சட்டம் ஒழுங்கு வைத்துத்தான் தான் இதை கட்டுப்படுத்த முடியும்!

கவலைய விடுங்கோ! மே 15 ல ஆத்தா ஆட்சிக்கு வந்தததும் எல்லாமே சரியாகிவிடும்! "ஊழல்"னா என்ன? எப்படி இருக்கும்னு மக்கள் வியப்பார்கள்!

@வருண்
கவலைய விடுங்கோ! மே 15 ல ஆத்தா ஆட்சிக்கு வந்தததும் எல்லாமே சரியாகிவிடும்! "ஊழல்"னா என்ன? எப்படி இருக்கும்னு மக்கள் வியப்பார்கள்!
//

1. அல்லக்கை உள்ள வரவேண்டாம்னு சொல்லியிருந்தேன்.. பரபரப்புல பார்க்கலை போல..

2. உங்க ப்ளாக் டெம்பிளேட் நிறம் கண்ணை கட்டுது , சில மாதங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்.. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில கவனிக்கல போல..

3. கலீஞர் பன்ணிய ஊழல் பார்த்து.. நிற்க்காம போய்கிட்டு இருக்கு..
சம்பாரிச்சாசில்ல?.. மக்கள்..கோமணத்தய்யாவது விட்டு வைக்கலாமில்ல..

:-)


முடியாதா?..
உடன்பிறப்புகள் களம் இறங்கட்டும்.. உருவிய கோமணத்துடன்.. ”சங்கமம்” ஆவோம்..


***2. உங்க ப்ளாக் டெம்பிளேட் நிறம் கண்ணை கட்டுது , சில மாதங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்.. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில கவனிக்கல போல..***

Yeah, so many people told me that. If it bothers your eyes so much, dont come there. I will visit here to say hi to you!



***3. கலீஞர் பன்ணிய ஊழல் பார்த்து.. நிற்க்காம போய்கிட்டு இருக்கு..
சம்பாரிச்சாசில்ல?.. மக்கள்..கோமணத்தய்யாவது விட்டு வைக்கலாமில்ல..

:-)


முடியாதா?..
உடன்பிறப்புகள் களம் இறங்கட்டும்.. உருவிய கோமணத்துடன்.. ”சங்கமம்” ஆவோம்..***

அதேன் ஆத்தா வந்து மே 15 ல கிழிக்கப்போதுனு சொன்னேன் இல்லை? ரெண்டு மாதம் பொறுக்க முடியாதா? ஊழலே இல்லாத தமிழ்நாட்டை பார்க்க?


1. அல்லக்கை உள்ள வரவேண்டாம்னு சொல்லியிருந்தேன்.. பரபரப்புல பார்க்கலை போல..***
//
ஆமா நீர் என்ன லூசா? வீட்டை எப்படி அடச்சுவைக்கனும்னு தெரியாதா?
//

சே..சே.. பின்பிழை வழியாக பிறந்தவர்கள் ..திருட்டு ரயில ஏறி வருவதை வேலி போட்டா.. தடுக்கமுடியும. என் குஞ்சே..


வருண் said... 28

***2. உங்க ப்ளாக் டெம்பிளேட் நிறம் கண்ணை கட்டுது , சில மாதங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்.. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில கவனிக்கல போல..***

Yeah, so many people told me that. If it bothers your eyes so much, dont come there. I will visit here to say hi to you!
///

ya ya.. I will wait for you to say "bye" to you..

யோவ்..
.. நான் லூஸ்னு கண்டுபிடிச்சுட்டியா?..

ஆமா..மூளக்காரன்யா நீ..

கலீஞர் தூக்கி பீடத்துல வெச்சுப்ட்டு
அப்பால வா.. அதுவரைக்கு இங்கந்தான் இருப்பேன்.

கிளம்பு.. காற்று வரட்டும்..

போகும்போது சயாமியா..சாக்கடைய கூட்டிக்கிட்டு போ..


learn how to activate comment moderation if you want to implement "untoudchability" inyour fucking blog responses!!

Or, get your fucking stupid brain changed, moron!
//

அப்படியே உங்க தலீவன் பேசறமாறி இருக்குயா...

சரி விடு...பின்புறவாயிலிலே உலகத்தை பார்க்க வந்தவர்கள்.....

வேறு எப்படி பேசுவார்கள்.. நீ பேசு மச்சி...

அப்படியே பேசிக்கினே இரு.. .அப்பால வரேன் நான்

:-)

******************************

Few death quotes:



**************

Like I always say, It was just an argument and it took wild turn and it was never personal! I hope he knew that!

My heart-felt condolences to Dr. Pattapatti's family members!  :(

மரணம் வந்தால் தெரிந்துவிடும்!

Friday, May 3, 2013

விஸ்வரூபம்-2 ஏன் ஃப்ளாப் ஆகும்னா...

இப்போத்தான் விஸ்-2 கன்ஃபர்ம் ஆயிருக்கு! அதுக்குள்ள என்ன? வாயை மூடுடா வருண்! அபசகுனம் பிடிச்சாப்ல ஏண்டா இப்படி? எங்க கமல் மேலே உன் காண்டுக்கு ஒரு அளவே இல்லையா? கேவலமா இல்லை? னு சொல்றேளா?

என்னைத் திட்டுறத நிறுத்திப்புட்டுக் கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருங்க.

 இன்னும் விஸ்வரூபம் ஒண்ணே, தமிழ் படத்துக்கு தமிழ் சப் டைட்டில் போட்டுப் பார்த்துவிட்டு நம்ம மக்கள் எல்லாம் என்னப்பா ஒரு எழவும் புரியலைனு புலம்பிட்டு.. சரி இன்னொரு தர பார்ப்போம்னு தொடர்ந்து  அஞ்சு தர, பத்துத் தர பார்த்துப்புட்டு, அதுக்கப்புறமும் முதல்தர பார்த்தபோது இருந்த அதே கேள்விகளோட லூசா அலைந்துகொண்டு.. "நல்லாப் படம் எடுத்தான் இந்த நாத்திகன்! இவன் நாசமாப் போகட்டும்! இப்படியா லூசுத்தனமா தமிழனுக்கே தமிழ்ப் படம் புரியாமல் எடுத்து வெளியிடுறது?"னு கொலை வெறியிலே திரிகிறார்கள்.

விஸ்வரூபம் ஒண்ணே இப்படி இருக்கும்போது புத்தியுள்ள எவன் தைரியமா காசப்போட்டு விஸ்வரூபம் ரெண்டைப் பார்ப்பான் சொல்லுங்க?

படம் 10 தரப் பார்த்தும் படம் புரியாதது மரமண்டை ரசிகனுடைய தப்புனே வச்சுக்குவோம்! அதே தப்பை அவன் ஏன் திரும்ப செய்றான், சொல்லுங்க? நல்ல மாட்டுக்கு ஒரு சூடுனு அவன் திருந்திடுவான் னு உங்களுக்கு தோணலையா? ஏன்???

ஆனால் நான் எல்லாரையும் குறைத்து மதிப்பிட மாட்டேன். ஒரு சில தைரியசாலிகள் மட்டும் விஸு ரெண்டையும் ஒரு 25 தர பார்த்துப்புட்டு, "எனக்கு இன்னும் ஒண்ணே புரியலை, ரெண்டு என்னைக்குப் புரிய?" னு தலையை பிச்சுக்கிட்டு அலைஞ்சாலும்.. தனக்கு புரியலைனு சொன்னா அசிங்கம், அதனால ஊர் உலகத்துக்கு மட்டும்,"கமல் மாரி ஒரு கலைஞன் கீழ் லோகத்திலும் இல்லை! மேலோகத்திலும் இல்லை!" பீலா விட்டுக்கிட்டு அலைவா. ஆனா அந்த எண்ணிக்கை நிச்சயம் குறைந்த ஒரு எண் தான்.
அதனால விஸ்வரூபம் ரெண்டும் மொக்கைப் படமா அமைய வாய்ப்புகள் அதிகம் னு நான் நம்புறேன்.

சினிமா தயாரிப்பு என்பது சூதாட்டம் போலதான். சூதாடியவன் போலவே சினிமால சம்பாரிச்சத சினிமாலே விடணும்னு அடம்பிடிக்கும் தயாரிப்பாளர்களை "எந்தக் கடவுளும்" காப்பாத்த முன்வரமாட்டான்!