Friday, April 15, 2016

நோபல் பரிசு வெல்ல ஒரு கண்ணாவது வேண்டும்!

"உங்களுக்குத் தெரியுமா?" "கவனம்" னு நாம் இன்று தெரிந்து கொண்ட ஒரு உண்மையை பலரிடமும் சொல்வது என்னைப்போல் ஒரு சிலருக்கு வழக்கம். இந்த ரோட்டில் ட்ராஃபிக் ஜாம். வேற ரூட்ல போங்க!னு சொல்வது அல்லது ஒரு எக்ஸ்ப்ளோஸிவ் ரியாக்சன் கேர்ரி அவ்ட் பண்ணும் போதும் நம் கலீக் கிடம் "கவனம்" என்று சொல்து போல் அமையும். நாம் சொல்வதை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா? என்பது வேற விசயம். சொல்வது நம் "நல்ல ஹாபிட்". இதெல்லாம் இண்டிவிஜுவாலிட்டி. கடவுள் அப்படி செய்தால் நம்மை "கவ்னிச்சுக்குவ்வார்" என்கிற சுயநலம் இல்லை. நாம் அடைந்த துன்பம், கஷ்டம் பாவம் அவன் அடையவேண்டாம் என்பதில் ஏதோ ஒரு திருப்தி.

விளையாட்டு மைதானத்தில் எங்களோட விளையாடும் ஒரு வெளிநாட்டு நண்பர் லங் கேன்சர் சர்வைவர் னு எனக்கு பல மாதங்களுக்கு அப்புறம்தான் தெரியும். அந்த உண்மை தெரிந்தபோது  இது பற்றி ஏற்கனவே தெரிந்ந்தவர்கள் என்னிடம் ஏன் சொல்லவில்லை னு கோபம் வந்தது. ஒரு சில விசயங்களை மற்றவர்களிடமும் சொல்லணும் என்பது என் நம்பிக்கை. சொல்லப்பட வேண்டிய இதுபோல் "ரகசியங்கள்" அவ்வகையைச் சாரும்.

தலைப்புக்கு வருவோம்.

இவர் பெயர் "கார்ல் பேர்ரி ஷார்ப்லெஸ்"! நோபல் பரிசு வென்றவர். எம் ஐ டி ல ஆரம்ப காலங்களில் இருந்துவிட்டு பின்னால் ஸ்க்ரிப்ஸ் ரிசேர்ச் இண்ஸ்டிடூட்க்கு போயி அங்கேயே இன்றும் பணியாற்றுகிறார்.

எப்படி  நோபல்ப்  பரிசு வென்றார்?

ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் சாதித்ததற்காக! "ஷார்ப்ளஸ் ஈப்பாக்ஸிடேஷன்".

போனவாரம் எதார்த்தமாக இவ்வரைப்பற்றி வாசிக்கும்போது 1970 களில் இவருக்கு ஒரு ஆய்வக ஆராச்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு கண் பார்வை இழந்துவிட்டது என்பதை அறிந்தேன். இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்ந்து இருக்கும் எனக்குத்தான் கடைசியாகக் தெரிகிறது என்று நினைத்துக்கொண்டு பலரிடம் இதைப் பகிர்ந்தபோது, அவர்களுக்கும் தெரியாது என்பதை உணர்ந்தேன்.

அதாவது கவனக்குறைவு என்பது நோபல் பரிசு வென்றவர்கள்கூட செய்வதுதான். ஆய்வகத்தில் எவ்வளவுதான் கவனமாக "சேஃப்ட்டி க்ளாஸ்" அணிந்து இருந்தாலும் ஒரு சில நிமிடங்கள் அணியாமல் இருந்தாலும் உங்கள் கண் பறிபோக வாய்ப்புண்டு என்பதே பாடம்.

http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2001/illpres/images/fig16-sharpless.jpg
Karl Barry Sharpless (Nobel prize winner)


ஷார்ப்லஸ் எம் ஐ டி யில் அஸிஸ்டன்ட் பேராசிரியராக பணிபுரியும்போது, வேலைகளை முடித்துவிட்டு சேஃப்ட்டி க்ளாஸை கழட்டி வைத்துவிட்டு வெளியில் போகும்போது மாணவன் ஒருவனிடம் தான் செய்யச் சொன்ன எக்ஸ்பெரிமெண்டை எப்படி போச்சுனு கேக்கப் போயிருக்கிறார். அப்போது மாணவன் ஒரு சின்ன க்ளாஸ் ட்யூபை லிக்விட் நைட்ரஜனில் கூல் பண்ணி சீல் பண்ணிக்கொண்டு இருக்கிறான். அப்போது அந்த ட்யூப் -100 செல்சியஸ்க்கும்  கீழ் இருக்கிறது. அதில் லிக்விட் ஆக்ஸிஜன் (எக்ஸ்ப்லோசிவ்) ) கொஞ்சம் கண்டன்ஸ் ஆகி இருக்கிறது. அதை இவர் தன் கண் முன்னால் வைத்து உள்ளிருக்கும் திரவத்தைப் பார்க்கும்போது அந்த சிறிய ட்யூப் வெடித்து கண்களில் அந்த உடைந்த கண்ணாடிகள் தாக்க. அவருக்கு இரண்டு கண்களும் போகலாம் என்று நிலை வந்து.. கடைசியில் ஒரு கண்ணை இழந்து இன்னொரு கண்ணை இழக்காததால்தான் பின்னால் இவரால் நோபல் பரிசை வெல்ல முடிந்தது. ஆக அவர் அதிர்ஷ்டத்தால் ஒரு கண்ணையாவது அவர் இழக்காததால்தான் அவர் நோபல் பரிசை பெற முடிந்தது. இரண்டு கண்ணையும் இழந்து இருந்தால் அவர் அறிவியலில் இருந்து ஓய்வு பெற்று வேறு ஏதாவது செய்து இருப்பார்.

அவரே சொல்கிறார்.. கேட்டுக்கோங்க! ஏன் ஆங்கிலம்? அவருக்குத் தமிழ் தெரியாது..

A cautionary tale from the past



The following essay was written some time ago, but continues to pop up on laboratory doors around MIT, most recently at the Ceramics Processing Research Laboratory where it was read by a Tech Talk reporter. It is reprinted here with Dr. Sharpless' permission in an effort to reach everyone in the MIT community. Dr. Sharpless was a long-time member of the MIT faculty, last holding the Arthur C. Cope Professorship in Chemistry. He is now at the Scripps Research Institute in California.

Many of you may know that I was blinded in one eye during a lab accident in 1970, shortly after I arrived at MIT as an assistant professor. I always wore glasses whenever I was at my bench, and while I felt I conscientiously observed safety measures, my experience proves one can't be too cautious about wearing safety glasses.

As I prepared to go home from the lab during the early hours of the morning of the accident, I looked in the bays to see what my co-workers were doing, and then returned to my own bench, removed my safety glasses, and put on my parka. As I was walking to the door, I passed the bench where a first-year graduate student was flame-sealing an NMR tube. I asked how it was going, and he replied, "Good, I've got it sealed."

He was sealing off the tube at atmospheric pressure under a flow of nitrogen gas while cooling the tube in a liquid nitrogen bath, a technique neither of us had performed before. Nor, I regret to say, had we looked up the procedure, which we subsequently discovered to be incorrect.

I stopped by his bench, picked up the tube from the bath, and held it to the light. The tube immediately frosted over, and, as I wiped it to better see the contents, I noticed that the solvent level was exceedingly high. Suddenly the solvent level dropped several inches. Though I instantly realized condensed oxygen had been sealed in the NMR tube, I was quite literally unable to move a muscle before it exploded. Glass fragments shredded my cornea, penetrated the iris, and cause the partial collapse of one eye. My only other injuries were superficial face cuts.

My first two weeks at Mass Eye & Ear were spent totally immobilized and with both eyes bandaged. The pain was terrific, but my fear was even greater: I had been warned that when my eyes were uncovered there was a small chance I might blind in both eyes due to "sympathetic ophthalmia." Because eyes are walled off from the rest of the body in utero, eye protein driven into the blood stream can raise an immune response that leads to the "killing" of the uninjured eye. My disappointment at having no functional vision in my injured eye was, needless to say, surpassed by my joy at retaining full vision in my good eye.

The lesson to be learned from my experience is straightforward: there's simply never an adequate excuse for not wearing safety glasses in the laboratory at all times.

A version of this article appeared in the March 11, 1992 issue of MIT Tech Talk (Volume 36, Number 23).



Thursday, April 7, 2016

இன்னும் உயிரோடதான் இருக்கேன்! அனாதையான தமிழ்!

எனக்கு மட்டும் ஏன் இப்படி தோனுதுனு தலைப்பு வைத்திருக்கலாமோ? மேலே படிங்க, புரியும்!

நான்தான் இங்கே  பிரபலம்! இல்லை நாந்தான் இங்கே உன்னைவிட பிரபலம்னு அடிச்சுக்கிட்டு இருந்தவர்கள் எல்லாம் செத்து சுடுகாட்டுக்குப் போயாச்சு! கூகிள் பிளஸ் இல்லைனா முகநூல், இல்லைனா ட்விட்ட னு போயிட்டார்கள் இந்த பிரபலம்னு பிதற்றிக்கொண்டு அலைந்தவர்கள்.

ஒரு காலத்தில் எப்படி இருந்த த மி ழ் ம ண ம் இன்று தானியங்கியாக அனாதையாக ஆகி நிற்கிறது. ஒரு பிரச்சினையைச் சொல்லி இதை த மி ழ் ம ண ம் நிர்வாகம் சரி செய்தால் என்னனு கேள்வி ஏதாவது கேட்டால்.. உடனே..ஏன் தமிழ்மணத் திரட்டியையே கட்டி அழுறீங்க? புதுசா ஒரு திரட்டி ஆரம்பித்தால் என்ன? என்று சில தமிழ்மண நிர்வாகிகளிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும். அதன்னனு தெரியவில்லை. எத்தனையோ திரட்டிகள் ஆரம்பித்தார்கள். அவைகள் எதுவுமே தமிழ்மணத்திற்கு இணையாக வரமுடியவில்லை. திரட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக வளர்ந்து சீக்கிரமே அழிந்து விடுகின்றன. அதனால் தமிழ்மணத்தை ஓரளவுக்கு சிறப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி செய்யவில்லை யென்றால் அது தமிழுக்கு அவர்கள் செய்யும் இழுக்கு! தமிழ் செத்தால் என்ன? தமிழ்மணம் செத்தால்தான் என்ன?னு ஏன் போயிவிட முடியவில்லை?னு எனக்குப் புரியவில்லை! எனக்கு மட்டும் ஏன் இப்படி தோனுது?

--------------------------

வராத ஒரு பின்னூட்டம்! சிரடி சாய்பாபா பற்றி திருமதி உஷா ஷ்ரிகுமார் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதாவது அவர் ஒரு கடவுள். வாழ்ந்து செத்த கடவுள். செத்து உயிரோட வாழும் கடவுள்னு. நல்லவர்களை எல்லாம் கடவுள் ஆக்குவது நம் கலாச்சாரம். ஒருவர் வாழும்போது நாலு பேருக்கு  உதவி செய்துவிட்டு  செத்தால் அவரை நாம் கடவுளாக்கி விடுவோம். இப்படிதான் நாம், விஷ்ணு, சிவன், முனியசாமி, மாரியம்மன்னு ஏகப்பட்ட கடவுளை உருவாக்கி இன்னைக்கும் சாய்பாபா, நிதயானந்தானு கடவுளை உருவாக்கிக்கொண்டே போகிறோம். இந்த உண்மையச் சொல்லி ஒரு பின்னூட்டம் எழுதி அவர் தளத்தில் வைத்தால் அது இன்னும் வெளிவரவில்லை. என்னவோ போங்க! எல்லாம் கடவுள் செயல். ஒரு கடவுள் என்னைப் பின்னூட்டம் எழுதச்சொல்லி தூண்டிவிட்டார். இன்னொரு கடவுள் அதை வெளியிட வேண்டாம் என்று தடுத்துவிட்டார் போலும். இப்படி கடவுளக்ளுக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருந்தால், கடவுள் மனிதனைப்போல் தன் தரத்தைக் குறைப்பதுபோல் தோனுது..எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் தோனுதுனு தெரியலை..

-------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

 Isn't she the prettiest girl in the Earth today?

 தீபிகா படுகோனே!  சாமுவேல் ஜாக்‌ஷனுடன்.

 Note! Just today she is the prettiest! Not after 5 or10 years! ஏன் எனக்கு மட்டும் இப்படித் தோனுது?

--------------------------

பதிவெழுதவோ பின்னூட்டம் இடவோ நேரமில்லை. வேலை அதிகம்னு சொல்லலாம். என்ன அப்படி வேலை?  வர வர ஒரு காம்ப்ளெக்ஸ் வந்துடுச்சு. என்ன காம்ப்ளெக்ஸ் அது? காலங்காலமாக படித்த சப்ஜக்ட்லயும் ஏகப்பட்ட சந்தேகங்கள்..புதிதாக ஒரு சப்ஜெக்ட் எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் கேக்கவே வேணாம். அதுவும் இதுனா என்ன? இதுனா என்ன?னு உள்ளே நுழைந்து நுழைந்து போனால், போயிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. எந்த இடத்தில் நிறுத்தணும் என்பதே விளங்க மாட்டேன் என்கிறது. என் நேரமெல்லாம் இப்படித்தான் "வீணாகிறது"! .எவ்வளவு நேரம் படித்தாலும் இன்னும் புரியாதவை ஏகப்பட்ட விசயங்கள் இருக்குனு அடிக்கடி உணருகிறேன். நான் இப்படி இருக்கும்போது.. ஒரு சிலர், "நான் எல்லாத்தையும் கரைத்துக் குடிச்சுட்டேன்" "எனக்கு தெரியாததே இல்லை" என்பதுபோல் எப்படிப் பேசுறாங்கனு விளங்கவில்லை! புதிராகவே இருக்கு. அப்படிப் பேசுபவர்கள் மேல் மரியாதை வருவதற்கு பதிலாக.."உளறுகிறான் பாரு முட்டாள்"னுதான் தோனுது. ஏன் எனக்கு மட்டும் இப்படித் தோனுது?

----------------------------