Sunday, June 28, 2009

போதை மருந்து விற்ற அமெரிக்க இந்திய டாக்டர்!

நரேந்திர குமார் அகர்வால் (நல்லவேளை தமிழன் இல்லை!) அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த ஒரு டாக்டர், போதை மருந்துகளை தேவை இல்லாமல் ப்ரிஸ்க்ரைப் செய்து விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். போதை மருந்துகளை நோயாளிகளுக்கு ப்ரிஸ்க்ரைப் பண்ணுவது நெறையவே ரொம்பச்சாதாரணமாக நடக்கிறது. காலம் சென்ற மைக்கேல் ஜாக்ஷன் முதல் கொண்டு பல “டிப்ர்ஸெட்” நோயாளிகள் வாழ இவைகள்தான் உதவுகின்றன. இல்லை என்றால் இவர்கள் தற்கொலை செய்து போய் சேர்ந்துவிடுவார்களாம்! ஆனால் அதே சமயத்தில் நல்லா உள்ள இதுபோல போதை மருந்து தேவைப்படாத நோயாளிக்கு இதை ப்ரிஸ்க்ரிப்ஷனாகக் கொடுப்பது சட்ட விரோதம். நம்ம அகர்வால் அதுபோல் ஏதோ செய்து இருப்பார்போல தெரிகிறது.

இந்த டாக்டர், Rapid Response Medical Center என்று ஆரம்பித்து சட்டவிரோதமாக போதை மருந்துகளை “நோயற்றவர்களுக்கும்” டிஸ்ட்ரிப்யூட் பண்ணியதாக சொல்லப்படுகிறது.

Saturday, June 27, 2009

"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு க்ளாசிக்!


எம் ஜி ஆர் படங்களிலேயே சிறப்பான ஒரு படம்னா அது, பி ஆர் பந்துலு வின் ஆயிரத்தில் ஒருவன் தான் என்பேன் நான். 1965 ல் வந்த படம் இது. பாடல்கள் அனைத்துமே முத்தானவை. ஜெயலலிதா அறிமுகமான (வெண்ணிற ஆடை) அதே வருடத்தில் முதல் முதலாக எம் ஜி ஆர் வுடன் ஜோடியாக நடித்த படம் இதுதான். அதே வருடம் வந்த எங்க வீட்டுப் பிள்ளை யை விட இது நல்ல படம் ஆனால் ஆயிரத்தில் ஒருவன் எங்க வீட்டுப்பிள்ளை அளவுக்கு அன்று வெற்றியடையவில்லை என்கிறார்கள்!

நம்ம எம் ஜி ஆர், மணிமாறன், ஒரு நாட்டு வைத்தியர், பாம்புகடி விஷத்துக்கு மருந்து கண்டுபிடிப்பார். அவர் வாழும் நெய்தல் நாட்டில் ஒரு சர்வாதிகாரியின் கொடுமையால் புரட்சி வெடிக்கும். மணிமாறன் சில புரட்சியாளர்கள் உயிரைக் காப்பாற்றுவார். உடனே அங்கே உள்ள சர்வாதிகாரி மனோகர் அவரை குற்றம் சாட்டி அடிமையாக விற்க அவரை கன்னித்தீவுக்கு நாடுகடத்துவார். அடிமையோட அடிமையாக கன்னித்தீவுக்கு அனுப்பப்படுவார் அழகும், வீரமும் நிறைந்த மருத்துவர் மணிமாறன்.

கன்னித்தீவின் இளவரசி, பூங்கொடி (நம்ம அம்மையாருக்கு 16 வயது இருக்கும்).

* "பருவமெனது பாட"லில் அழகும் இளமையுமாக அறிமுகமாவார்!

* "ஏன் என்ற கேள்வி" கேட்கும் ஆயிரத்தில் ஒருவன், மணிமாறனின் அழகில் மயங்கி தன் இதயத்தைப் பறிகொடுப்பார்.

* "ஓடும் மேகங்களே" என்று பாடி, நாடாளும் வண்ண மயில் நீ, நாட்டிலுள்ள அடிமை நான்! உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று சொல்லி இளவரசியின் காதலை நிராகரித்துவிடுவார், மணிமாறன்.

* "உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்" என்று காதல் தோல்வியில் ஏங்குவார், பூங்கொடி!

காலச்சக்கரம் சுழலும், அடிமை மணிமாறன் கொள்ளைக்காரர் ஆவார் இல்லை ஆக்கப்படுவார். ஆனால் அவர் கொள்ளையரைத்தான் கொள்ளையடிப்பார்!! கொள்ளையர்போல் நடிக்கும் நல்லவர், பூங்கொடியின் இதயம் கவர்ந்த அடிமை, மணிமாறன், இன்று கொள்ளையராகி கொள்ளையர் கப்பல்போல் இருக்கும் உல்லாசக்கப்பலை- பூங்கொடியின் கப்பலையே- சூரையாடுவார்.

இளவரசி அடிமையாவார்! ஏலத்தில் விலைக்குப்போகும் (*ஆடாமல் ஆடுகிறேன்) அவர் இதயத்தைத் திருடிய “திருடன்” மற்றும் கொள்ளைக்காரன் மணிமாறன், தானே அவளை விலைக்கு வாங்கிக்கொள்வார்!

இருவருக்கும் இடையில் ஊடல், ஊடல் முடிந்து கூடலாகும்போது!

* நாணமோ இன்னும் நாணமோ பாடலில் ஜோடிப்பொருத்தம் நல்லாயிருக்கும்! ரொம்ப சிறப்பான டூயட் இது! மிகவும் ரசிக்கத்தக்க இருக்கும் இந்தப்பாடல்.

அதுக்கப்புறம் கொள்ளையர்களை நல்லவராக்கி "அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்" பாடல் பாடிக்கொண்டே சொந்த நாடான “நெய்தல் நாட்டுக்கு" திரும்பி வந்து சர்வாதிகாரியிடம் போராடி அவரையும் திருத்தி, குடியாட்சி கொண்டு வருவார்!

எடிட்டிங் பிரமாதம், காமெடி (நாகேஷ்), வில்லன்கள் (நம்பியார், மனோகர்) எல்லாமே அபாரம்!

சண்டைக்காட்சிகள் சிற்ப்பாக இருக்கும். எம் ஜி ஆர், இளமையாகவும் மிகவும் அழகாகவும் இருப்பார்! ஜெயலலிதாவும் சிறப்பா நடித்து இருப்பார்.

மதிப்பெண்கள் 64/100!

Friday, June 26, 2009

உழைக்கும் கரங்கள்! பெரிய குப்பை!

எம் ஜி ஆர் 1976 வெளியிட்ட படம் இது. அதாவது முழுக்க முழுக்க அரசியலில் இறங்கிய பிறகு. எம் ஜி ஆருக்கு வயது 60-61 இருக்கும். இளமையெல்லாம் குட் பை சொல்லிருச்சு! இதுல அவருக்கென்று ஒரு தனி "ஸ்டெயில்", ஒரு தலைப்பாகை, கையில் ஒரு தடி (இது என்ன இழவுக்கோ தெரியலை), ஒரு செருப்பு ஒண்ணு போட்டுக்கிட்டு திரிகிறார் இல்லை ஊருக்காக உழைக்கிறார் எம் ஜி ஆர்.

பொதுவாக எம் ஜி ஆர் படங்களில் பாடல்கள் நல்லா இருக்கும். ஆனா இந்தப்படத்தில் அதுவும் இல்லை. இவர் லதாவுடன் செய்யும் ஊடல் சகிக்கலை. அதுவும் ரெண்டுபேரும் ஒரு ஒத்தையடிப்பாதை பாலத்தில் எதிரெதிரா வந்து சின்னப்பிள்ளைங்க போல சண்டைபோட்டு விளையாடுவது! மாம்பழம் புடுங்கி விளையாடுவது! அப்பா ஆளை விடு!

படத்தில் என்ன ப்ளாட்? மு க வை ஒரு மாதிரியாக சாடுவதுதான். இவர் தி மு க வில் இருந்து வெளியே வந்த காரணத்தை ஜஸ்டிஃபை பண்ணுவதுபோல இருக்கு. இவரை ஆடு மாடு முதல்கொண்டு படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் நல்லவர்னு புகழுது! ஒரே சலிப்பா இருக்கு இவருக்குப் பாடும் புகழாரம்! இவர் நல்லவராம், மக்களுக்கு தொண்டு செய்ய தன் "எஜமானை" விட்டு வெளியே வந்து இருக்காராம். முழுக்க முழுக்க அரசியல் நிறைந்த ஒரு படம் இது!

படம் டைரெக்ஷன்: அடிமைப்பெண், ஆலயமணி, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய அதே கே. சங்கர்!

என்ன கொடுமை இது சங்கர்? :(

"இந்தப்படத்துக்கு என்ன குறை?" என்று யாராவது சொன்னால், நிச்சயம் அவர் ஒரு விசிலடிச்சான் குஞ்சி! கண்மூடித்தனமான எம் ஜி ஆர் வெறியர்! அ தி மு க தொண்டர்!

நல்லவேளை அடுத்து வந்த தேர்தலில் எம் ஜி ஆர் ஜெயித்தார். அப்படியில்லாமல் தொடர்ந்து நடித்து இருந்தால் எல்லோருக்கும் கஷ்டகாலம்தான்! உழைக்கும் கரங்களை படத்தை விட்டு ஒதுங்கி இருப்பது விவேகம்- நீங்க எம் ஜி ஆரை தெய்வமாக நினைக்காத சாதாரண ரசிகர் என்றால்.

மதிப்பெண்கள் 29/100! சரியான குப்பை!

Thursday, June 25, 2009

மைக்கேல் ஜாக்ஷன் மரணம்!

கிங் ஆஃப் பாப் என்று பாராட்டப்பட்ட மைக்கேல் ஜாக்ஷன் இன்று மாரடைப்பில் இறந்தார். இவருக்கு வயது 50. இவருடைய த்ரில்லர் என்கிற ஆல்பம் 50 மில்லியன் பிரதிகள் விற்று ரெக்கார்ட் செட் பண்ணியது. இது மிகவும் எதிர்பாராத மரணம். :(

அனுபவம் புதுமை!

அது அவள்தான்! அவளேதான்! அவள் நடையிலேயே தெரிந்தது அது பிருந்தாதான் என்று, சாரதிக்கு. எவ்வளவு அழகா இருக்கிறாள்! என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை அவனால்.

பிருந்தா, அவளுடைய கணவனோட வந்திருந்தாள்! அவர், அவளுக்கேற்ற அழகு, மற்றும் உயரம். நல்ல நிறம். பார்ப்பதற்கு ரொம்பவே ஹேண்ட்சம்மாக இருந்தார். சந்தோஷமாக இருவரும் கோயில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள்.

நல்லவேளை, அவர்களை பார்த்தான், பார்த்தசாரதி. அவளும் அவனை கவனிக்கவில்லை! கவனிக்காமல் உள்ளே போய் அவளைப் பார்க்க நேர்ந்திருதால்? இங்கே எப்படி வந்தாள் இவள்? டாலஸிலிருந்து பிட்ஸ்பர்க் வந்துவிட்டாளா? சாரதி, கோயிலுக்குள் நுழையாமல் அப்படியே காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். காரில் போகும்போது பழைய நினைவுகள்...

அவளுடன் பேசியவை, அவளுடன் விளையாண்டவை, அவளுக்கு எழுதிய கடிதங்கள், அவள் குரல், அவள் உதடுகள், அவள் கண்கள், அவள் பின்னழகு எல்லாம் ஞாபகம் வந்தது அவனுக்கு. இவ்வளவு நாளாக அவளை நினைக்காமல் மிகவும் கவனமாகத்தான் இருந்தான் . இன்று அவளைப் பார்த்ததால் அவன் நினைவலைகளை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பிருந்தா ஒரு தனிப்பிறவி! சாரதி, எவ்வளவு கோபமாக இருந்தாலும் பேசினாலும் அவள் குரலை கேட்டவுடன் எல்லாம் போய்விடும் அவனுக்கு. அவள் ஒரு பார்வை கனிவாகப் பார்த்தாலே குற்ற உணர்வு வந்துவிடும் அவனுக்கு! அவளிடம் ஒரு மென்மை உண்டு! தேவையே இல்லாமல் வார்த்தையை வெளியே விடமாட்டாள். அவள் திட்டினால்கூட அதில் ஒரு அழகு! "உன்னைப் பிடிக்கவில்லை" னு சொல்வதுகூட கேட்பவர்களுக்கு பிடிக்கும்படி சொல்லுவாள். எதிலும் அவளிடம் ஒரு தனி அழகு உண்டு. இல்லை இல்லை அவனுக்கு பிருந்தா பைத்தியம் பிடித்து இருந்தது என்றுகூட சொல்லலாம்!

கரடு முரடு குணமுள்ள தனக்கு அவள் ஒருபோதும் தகுதியற்றவள் அல்ல என்று அவன் அடிக்கடி நினைப்பதுண்டு. அவன் பயந்ததுபோலவே எல்லாம் முடிந்துவிட்டது. ஆமாம் இதெல்லாம் வாழ்க்கை படிக்கட்டில் ஒரு பாடம். எல்லாம் நன்மைக்கே என்று ஆறுதல் அடைந்து கொள்ள முயற்சித்து ஓரளவுக்கு வெற்றியும் அடைந்தான்.

அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்தினான். காதல் என்பது ஒரு நிலையான ஒன்றல்ல! இன்று காதலர்கள்! நாளை கணவன் மனைவி! இன்னும் 10 வருடம் சென்று காதல் எல்லாம் மறைந்துவிடும்! எங்கே போகும்? தெரியவில்லை! எங்கோ போகும்! அதைத்தானே நேற்றைய காதலர்கள் இன்றைய தம்பதிகளிடம் பார்க்கிறோம்? நல்லவேளை அவனுக்கு அந்த நிலைமை ஆகப்போவதில்லை என்று முட்டாள் மாதிரி ஆறுதல் அடைந்துகொண்டான்

அவளை இழந்ததில் அவனுக்கு ஒரு வகையில் சந்தோசம். இன்னொரு வகையில் கவலை. அவனுக்கு சந்தோஷமும் கவலையும்.

தன்னைவிட தகுதியுள்ள ஒருவனிடம் தானே போய் சேர்ந்து இருக்கிறாள் என்று அவனுக்கு சந்தோஷம். ஆனால் அதே சமயத்தில் அவளுடன் 100% உறவை முறித்தது அவனுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கியது அவனுக்குள். பல வருடங்களாக அவளைச்சுற்றியே அவன் சிறிய உலகம் இருந்ததால், இப்போது புது உலகம் தேடி அலைந்தான் இந்த பெரிய உலகத்தில்.

முதலில் இந்த ஊரை காலி பண்ணனும் என்று முடிவுக்கு வந்தான். ஏதாவது ஒரு மூலைக்கு போய்விட வேண்டியதுதான். இது மிகப்பெரிய உலகம் ஆச்சே. ஏன் முடியாது?

சாரதி, ரொம்ப சிம்பிள் கேரக்டர். பிடிக்கும் அல்லது பிடிக்காது. சிரிப்பு வரும் இல்லை எரிச்சல் வரும்! இப்போ ரொம்ப காம்ளிகேட்டெட் சிச்சுவேஷன் அவனுக்கு! பிடித்தவர்களை பிடிக்காமல் ஆக்க வேண்டும் என்பதுதான் அவனுக்கு சேலெஞ்ச்! ஏன்? அதுதான் சரி. எது? தனக்கு ரொம்ப பிடித்தவளை நினைக்காமல் இருப்பது! எப்படி? அவளை வெறுக்கனுமா? அதெப்படி வெறுப்பது? வேறென்ன செய்வது? மறக்கனும்! ஏன் மறக்கனும்? இனிமேல் உனக்கும் அவளுக்கும் என்ன இருக்கு? ஒண்ணுமே இல்லையா?

நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா?
பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத்தெரியாதா?


பாடல் பாடியது அவன் ஐ பாடிலிருந்து! பாட்டை ஸ்கிப் பண்ணினான், சாரதி.

அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே என்று சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே

என்ற எ எம் ராஜா பாடல் பாடியது.

அதையும் ஸ்கிப் பண்ணி, ஷஃபுள் மோடில் போட்டான்,

ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகிப் பிரிவது துயரம்


என்ற பி பி எஸ் பாடல் வந்தது. பேசாமல் அதோட விட்டுவிட்டான்.

அந்தப்பாடலைக்கேட்டு அவனுக்கு சிரிப்பாக வந்தது. ஆசை, பாசம், அன்பு, நட்பு, உறவு இல்லாமல் வாழனுமாம்! அப்போத்தான் துன்பமே உங்களை அனுகாதாம்! என்ன ஒரு தத்துவம்! அர்த்தமில்லாத தத்துவம்! இதெல்லாம் இல்லாமல் எப்படி வாழ்வது? அப்படி எதுக்காக வாழனுமாம்?

அவளில்லாத இந்த சிந்தனைகள், இந்த அவளில்லாத அனுபவம் அவனுக்குப் புதுமையாகத்தான் இருந்தது. ஆனால் ரசிக்க முடியாத புதுமையான அனுபவம் இது. இதையும் ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்!

ஒருவேளை ஒரு ஐந்து வருடம் சென்று இன்றைய மனநிலையை- அவன் நாட்குறிப்பில் எழுதிவைக்கும் எல்லாவற்றையும் - நினைத்துப்பார்த்தால் அவனுக்கு சிரிப்பாக வந்தாலும் வரலாம். இல்லை வராதா? காலம்தான் பதில் சொல்லனும்.

Tuesday, June 23, 2009

பதிவுலக அரசியல் -சூடான, வாசகர் பரிந்துரை பற்றி!

நான் எழுதிய "தவிர்க்க முடியாத பதிவுலக அரசியல் பதிவில்" சில நண்பர்கள் பின்னூட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்கு தெளிவாக பதில் சொல்வதற்கு இந்தப் பதிவு!

T.V.Radhakrishnan said...

பதிவு போட்ட கொஞ்ச நேரத்தில..உங்க பதிவுக்கு விழுந்துள்ள -ve ஓட்டுகளைப் பார்த்தீங்களா வருண்....நாம என்னதான் அலட்சியப் படுத்தினாலும்...வேணும்னே போடற -ve ஒட்டுங்க கொஞ்சம் வருத்தத்தையே கொடுக்குது...கண்ணுக்கு தெரியாம நமக்கு வேண்டாதவங்க உருவாகிட்டாங்களேன்னு.


டி வி ஆர் அவர்களே!
தமிழ்மணத்தில் இப்போது -1 க்கு பதிலாக பிடிக்காதவர்கள் வாக்குக்கு "0" மதிப்பெண்கள் என்று மாற்றி இருக்கிறார்கள்!

உங்கள் முயற்சி ஓரளவுக்கு வெற்றியடைந்துள்ளது. மகிழ்ச்சிதானே?
----------------------------------------

ஜோசப் பால்ராஜ் said...

இதுக்குத்தான் நான் என்னோட பதிவுல ஓட்டுகளப்பத்தி கவலப்படுறதேயில்ல.
பின்னூட்டம், ஓட்டு, பரிந்துரை , சூடாண இடுகை இதுக்காகவா பதிவு எழுதுறோம்?


உண்மைதான் திரு. பால்ராஜ், உங்களைப்போல் இதைப்பற்றி சட்டை செய்யாமல் இருக்கிற பதிவர்கள் இருக்காங்க! உங்களையும் உங்களைப்போல் பலரையும் நான் மனதாற பாராட்டுகிறேன்! ஆனால், எல்லோரும் அப்படி அல்ல, திரு பால்ராஜ்! பலருக்கு தன் பதிவு முகப்பில் தெரிவதில் மகிழ்ச்சி உண்டு. அதனால் அவர்கள் சொல்கிற விசயம் பலருக்கும் போய் சேர அதிக வாய்ப்பிருக்குனு நம்புறாங்க!முன்னால் முகப்பில் தெரிய பயன்படுத்திய யுக்தி, இப்போ உபயோகப்படாது. இப்போ அதுக்கு வேற ஸ்ட்ரேடஜி பயன்படுத்தனும்! :)

ஒரு நல்ல விசயம் என்னவென்றால், சூடான இடுகையை எடுத்ததில் இருந்து அட் லீஸ்ட் தனிநபர் தாக்குதல் பதிவுகள் (ஒரு பதிவரை அவமானப்படுத்தும் இடுகைகள்) சூடான இடுகையாகி முகப்பில் அதிகம் தெரிவதில்லை! இது ஒருவகையில் முன்னேற்றம்தான்!

Monday, June 22, 2009

உரையாடல் கதைப்போட்டியும் ரவியின் மதிப்பெண்களும்!

திரு ரவி அவர்கள் தமிழ் வலைபதிவில் மூத்தவராக இருக்கலாம். உரையாடல் சிறுகதைப்போட்டி நிர்வாகம் அவர் மேல் மதிப்பு வைத்திருக்கலாம். ஏன் தமிழ்மணமும், பதிவுலகும் அவரை மதிக்கலாம். ஆனால் அவர் ஒரு நீதிபதி நிலையில் தன்னை நிறுத்தி மதிப்பெண்கள் கொடுத்து மற்றவர்களின் படைப்புகளை பகிரங்கமாக எடைபோடுவது ரசிக்கத்தக்கதாக இல்லை என்று என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அந்தந்த வலைபூக்களில் போயி அவர் பின்னூட்டமிடலாம். ஏன் மதிப்பெண்களே கொடுக்கலாம். அதில் தவறில்லை! ஆனால் அதுபோல் செய்யாமல் இப்படி உலகமறிய மதிப்பெண்கள் கொடுத்து விமர்சிப்பதால் பலர் காயமடைந்து இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவருடைய மதிப்பெண்களால், தோல்வி பெறுமுன்பே பெற்றுவிட்ட உணர்வு ஒரு சிலரை வாட்டலாம். இவர் மதிப்பெண்கள் இதை மதிப்பிட இருக்கும் நீதிபதிகளையும் அவர்கள் முடிவுகளையும் பாதிக்க சாத்தியமிருக்கிறது.

I believe creators are sensitive and one can easily destroy their creativity and confidence by criticizing them openly especially by rating the stories by giving marks! It is okay to do it between walls and confidentially but not like this even if it is done politely and carefully!

திரு ரவி, அது தன்னுடைய உரிமை என்கலாம்!

“அவரை நாங்க கட்டுப்படுத்த முடியாது” என்கலாம் இந்தப் போட்டியை நடத்தும் நிர்வாகம்.

ஆனால் என்னைப்பொறுத்த வரையில் ரவியின் மதிப்பீடு அவசியமில்லாதது மட்டுமல்ல அது இந்த போட்டியின் தரத்தை குறைக்கிறது.

இதே கருத்தை உணர்ச்சிவசப்பட்டு இன்னொரு பதிவரின் வலைதளத்தில் அசிங்கமான ஆங்கிலத்தில் சொன்னேன். அதை அந்த வலைதள உரிமையாளர் எடுத்துவிட்டார் என்பதால் இங்கே சொல்கிறேன்.

எனக்கும் பேச்சுரிமை இருக்கு இல்லையா?

என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லையென்றால் எனக்குத் தூக்கம் வராது!

Sunday, June 21, 2009

சில தமிழ்க்கழிசடைகள் கையிலும் தமிழ்வலையுலகம்!

தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதலாம் என்று யு-ட்யூபில் தேடினேன்.

அழகான இரண்டு மணியான பாடல்கள் உண்டு அதில்!

* மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன? அழகர் மலையழகா இந்தச் சிலையழகா?

* நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?

சரி இந்தப் பாடல்கள் லின்க்ஸ் கொடுக்கலாம் என்று கொஞ்சம் தேடினேன்.

ஒரு யு-ட்யூப் லின்க் கிடைத்தது. சரி என்னவென்று பார்ப்போம் என்று அந்த ஃபைலை திறந்தால்.. அதிர்ச்சியும் அவமானமும்தான் அதில் இருந்தது! எவனோ ஒரு கழிசடைத்தமிழன் அழகான வசனங்களையெல்லாம் எவ்வளவு கேவலமாக மாற்றமுடியுமோ அப்படி மாற்றி -அசிங்கமான தமிழில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளையும் வைத்து -ஒரு கேவலமான யு-ட்யூப் ஃபைல் அப்லோட் செய்து இருக்கிறான்.

இதை தமிழ் நல்லாத் தெரிந்த ஒரு தமிழன் மட்டும்தான் செய்யமுடியும். வேற்று மொழிக்காரன் எவனும் இதைச்செய்ய இயலாது! என்ன ஒரு கேவலமான தமிழ்க்கழிசடைகள் நம்மில் உள்ளார்கள்! தமிழையும், தமிழர்களையும் தலைகுனிய வைக்கின்றன இது போல் சில பொறுக்கிகளின் ஈனத்தனமான செயல்!

BTW, I found the correct sources for the original songs. I am not going to give the link of such a shameful youtube file here. I wish we could lynch such bastards!

Saturday, June 20, 2009

சினிமாவில் பாட்டு வேண்டாம்! இசை எதுக்கு?!

புதுசா ஒரு சில மேதாவிகள் கிளம்பி இருக்கிறார்கள். எதையாவது (edited) சும்மா உளற வேண்டியது. தமிழ் சினிமாவில் பாடல்கள் இடம் பெறக்கூடாதாம். அப்போதுதான் அது உயர் தரமாகுமாம்! ஏன் என்றால் அது எதார்த்தத்தை காட்டவில்லையாம்.

ஆங்கிலப்படங்களுக்கு இணையாக அப்போதுதான் நம் படங்கள் வருமாம்! கமலஹாசன் இந்த தியரியை எக்ஸகூட் பண்ணமுடியாமல் தூக்கம் வராமல் இருக்காராம். இந்த மேதாவி அவரை தூங்க வைப்பதற்காக இப்படி ஒரு தாலாட்டுப் பதிவு எழுதுகிறாராம். என்ன ஒரு கரிசனம்?

சினிமா என்பது ஒரு தனி உலகம். அது எல்லோருக்கும் தெரியும். அது இயல்பாகத்தான் இருக்கனும்னா இந்த மேதாவி சொல்லுகிற கமலஹாஷனின் சமீபத்திய மிகப்பெரிய குப்பை தசாவதாரத்துக்கும் ரியாலிட்டிக்கும்/எதார்த்ததுக்கும் எவ்வளவு தூரம்?

ஹாலிவுட் படங்கள்

* க்ரீஸ்

* ஹை ஸ்கூல் ம்யூசிகல்ஸ்

* சிகாகோ

எல்லாம் மக்கள் ரசிக்க முடியவில்லையா என்ன?

இன்னும் எத்தனையோ ஹாலிவுட் படங்களில் செயற்கையான பாடல்கள் இடம் பெறுகின்றன. அவைகளை ரசிக்க முடிகிறது.

ஏன் OSCAR winner SLUMDOG MILLIONAIRE படத்தில் பாடல்களில்லையா? ஜெய் ஹோ பாடலை வெள்ளைக்காரர்கள் மிகவும் ரசித்தார்கள் என்றுகூட சொல்லலாம்.

12 OSCAR winner TITANIC had songs in it!

ஸ்டார்வார்ஸ், பேக் டு த ஃப்யூட்சர், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், ஸ்பைடெர்மேன், ஹாரி பாட்டர், இதிலெல்லாம் உள்ள கதையோட்டம் ரொம்ப எதார்த்தமாகத்தான் இருக்கிறதா என்ன?

* தெய்வம் தந்த வீடு, காற்றுக்கென்ன வேலி பாடல்கள் இருப்பதால் அவள் ஒரு தொடர் கதை, அவர்கள் போன்ற படங்களின் தரம் குறைந்துவிட்டதாக இந்த மேதாவி கண்டுபிடித்துவிட்டாராம். என்ன ஒரு கண்டு பிடிப்பு!!!

என்னைப்பொறுத்தமட்டில் பாடல்கள் இல்லா தமிழ்ப்படம் வருவதில் தவறில்லை. ஆனால் சினிமா என்பது பொழுதுபோக்குக்காவும் மக்கள் பார்க்கிறார்கள். அதில் வரும் பாடல்கள்தான் அவர்களை பொதுவாக மகிழ்விப்பது.

பாடல்கள் வேணாம், சரி! அப்போ தமிழ்ப்படத்தில் பேக் கிரவ்ண்ட் ம்யூசிக் எதுக்காம்? அதையும் எடுத்து விடலாமே? அழுவதற்கென்று கொடுக்கப்படும் பேக்ரவ்ண்ட் ம்யூசிக்தான் ஒரு ரசிகனை அழவைப்பது. இல்லைனா அழுகை சீனில் எல்லாம் மக்கள் சிரிப்பார்கள்! பேக் க்ரெவ்ண்ட் ம்யூசிக்கும் எதார்த்தத்துக்கு முரணானதுதானே? அது மட்டும் எதுக்கு?

இவர் கனவு நிறைவேறனும்னா இவரே ஒரு படம் கமலஹாஷனை வைத்து பாடல்கள், பேக் க்ரவ்ண்ட் ம்யூசிக் எதுவுமே இல்லாமல் படம் எடுக்க வேண்டியதுதான்!

நம்ம ஆளு புதுமையா யோசிப்பது என்றால் இதைப்போல் ஏதாவது குப்பை தியரியைவிட்டு தன்னைத்தானே பெரிய அறிவு ஜீவினு நெனச்சுக்க வேண்டியதுதான்!

Friday, June 19, 2009

அன்று "நம்பவேண்டாம்"!! இன்று "நம்பிக்கை"!

பதிவுலகில் தான் சொன்னதை தவறென்று ஏற்றுக்கொள்வது நாகரீகம்! பிரபலமாவதற்காக, சூடாவதற்காக எதையாவது எழுதவேண்டியது பிழைப்பாகிவிட்டது. தான் நம்பவேண்டாம் என்று சொன்னது இன்று நம்ப வேண்டியதாகி விட்டது. அதை முதலில் மேற்காட்டி தான் நினைத்தது சொன்னது தவறு என்று சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு மறுபடியும் உபதேசம் செய்யக்கூடாது.

அன்று எதையும் "நம்ப வேண்டாம்" என்று ஒரு பதிவு!

இன்று, தான் சொன்னது (எதையும் நம்பவேண்டாம என்று) தவறுபோல் இருக்கிறது, என்பதை உணர்ந்தவுடன், அதற்கு வருத்தம் தெரிவிக்காமல், "நம்பிக்கை" வேணும் என்று மறுபடியும் உபதேசம்.

* யார் நம்பவேண்டாம் என்று சொன்னது??

நீர்! உமக்குத்தான் ந்ம்பிக்கை இல்லை.

* பொய்யை நம்பி சந்தோஷப்படுவது நல்லது என்று சொல்லாமல் சொன்னது யார்?

நீர்!

* யாருக்கு நம்பிக்கை வேண்டும் என்று இன்று சொல்கிறீர்?

உம்க்குத்தானே?

நம்பவேண்டாம் என்கிற உபதேசம் பண்ணியவர் "நம்பி இருக்கனும்" என்று சொல்வதுபோல் எழுதிவிட்டு அதற்கு தலைப்பு "நம்பிக்கை" என்று?

என்ன கொடுமைடா இது?

Thursday, June 18, 2009

அம்மா மரணம்! உடனே புறப்படு!

அந்த தந்தியை பார்த்தவுடனே ராமகிருஷ்ணனுக்கு இதயமே நின்னுவிட்டது!

"Mother expired, start immediately - your brother" என்று இருந்தது அந்த செக்யூரிட்டி கொடுத்த தந்தியில்.

அருகில் இருந்த நண்பர்கள், ப்ரேம் மற்றும் கண்ணன் உடனே ராமகிருஷ்ணனுடன் புறப்பட்டார்கள். அப்பொழுதுதான் டின்னர் சாப்பிட்டுவிட்டு மூவரும் மெஸ்ல இருந்து வந்திருதிருந்தார்கள். உடனே திண்டுக்கல் போகனும்! அங்கேயிருந்துதான் ராமகிருஷ்ணன் பங்களூர் வந்து படித்துக்கொண்டு இருக்கிறான். இப்போ பங்களூரிலேயே வேலை தேடிக்கொண்டு இருக்கிறான். நாளைக்குக்கூட ராமகிருஷ்ணனுக்கு ஒரு இண்டர்வியூ இருந்தது. மூவரும் உடனே ஆட்டோ பிடித்து மெஜெஸ்டிக் போய் மதுரை பஸ்ஸை பிடித்து, எப்படியோ அந்த கண்டக்டரிடம் கெஞ்சி கூத்தாடி திண்டுக்கல்லுக்கு 3 டிக்கட் வாங்கினார்கள்.

பஸ் புறப்பட்டு போகும் வழியில், மூவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ராமகிருஷ்ணன் அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அம்மா, ராஜேஸ்வரிதான் அவனுக்கு எல்லாம். அம்மாவுக்கு 52 வய்துதான் ஆகிறது! எந்தவிதமான ஹெல்த் பிரச்சினையும் இது நாள் வரை இல்லை. திண்டுக்கல் போய் சேரும் வரை மூவரும் ஒண்ணுமே பேசவில்லை.

திண்டுக்கல் வந்து சேர பல யுகங்கள் ஆனதுபோல இருந்தது! இறங்கி ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்தால், வீட்டில் எந்தவிதமான அறிகுறியே இல்லாமல் அமைதியாக இருந்தது. போய் வீட்டு கதவை தட்டினாலன், ராமகிருஷ்ணன்.

"என்னடா ராமா திடீர்னு வந்திருக்க?" என்று அவன் அம்மாவே வீட்டுக்கதவை திறந்தார்கள்.

நண்பர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டார்கள்.

"இல்லம்மா, சும்மாதான் ஒரு ஃப்ரெண்ட் அப்பா தவறிட்டார். அதுக்காக மதுரை வந்தோம்" என்று சொல்லிச் சமாளித்தான் ராமகிருஷ்ணன்.

அம்மா தந்த காஃபிய குடித்துவிட்டு நண்பர்கள் ப்ரேமும், கண்ணனும் உடனே பங்அளூர் புறப்பட்டார்கள். ராமகிருஷ்ணன் இரண்டு நாள் அம்மாவுடன் இருந்துவிட்டு வருவதாக முடிவு செய்தான்.

நண்பர்களை பஸ் ஏற்றிவிட வந்த ராமகிருஷ்ணனிடம், கண்ணன் கேட்டான்.

"என்னடா ராமா? யார்டா இப்படி செஞ்சது?"

"இன்னைக்கு எனக்கு ஒரு இண்டெர்வியூ இருந்ததுடா. ஒரு ரிசேர்ச் அஸிஸ்டண்ட் பொசிஷன். நான் வரலைனா, இந்த பொசிஷனுக்கு விஷ்ணு என்கிற ஆந்திரா பையனுக்கு கிடைக்கும் என்பதுபோல இருந்தது. அவன் ரொம்ப கன்னிங்டா. அவந்தான் ஏதோ இப்படி ஒரு பொய் செய்தியை கொடுத்து இருப்பான் னு தோனுது. இப்போ அவனுக்கு இந்த வேலை கிடைத்து இருக்கும். நான் தந்தியைக்கூட சரியா எங்கே இருந்து வந்தது எதுனுகூட கவனிக்கலைடா" என்றான் ராமகிருஷ்ணன்.

"மனிதர்கள் இவ்வளவு கேவலமானவர்களா?" என்றான் கண்ணன் கசப்பாக.

"டேய் ராமா! இது மாதிரி எதிரியையெல்லாம் உன்னையே அறியாமல்கூட உருவாக்காதடா! ரொம்ப கவனமாக பழகு! முடிந்தவரைக்கும் "Be nice to anybody" என்றான் ப்ரேம்.

சேலம் பஸ்ஸில் அவர்களை ஏற்றிவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றான் ராமகிருஷ்ணன். அவன் அம்மா அவனுக்கு வித விதமாக சமையல் செய்து கொண்டிருந்தார்கள். மகன் ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு இளைத்துப் போயிருக்கிறான் என்று அவனுக்கு நாலு வேளையும் சமைத்து போடுவார்கள் அவன் அம்மா, ராஜேஸ்வரி. அவர்களுக்கு தன் மகன் கடந்த 24 மணிநேரம் பட்ட நரக வேதனை எதுவுமே தெரியாது, பாவம்.

Wednesday, June 17, 2009

அபிக்குட்டியும் அழகான குட்டிக்குதிரையும்!

அபி என்று ஒரு குட்டிப்பெண் இருந்தாள். அவள், ஒரு நாள் தன் அப்பா அம்மாவுடன் காரில் வலம் வந்தாள். அந்த கிராமத்து வயல்ப்பகுதியில் காரில் போகும்போது வெளியே வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டே வந்தாள், அபி.

அப்போது ஒரு அழகான வெள்ளை நிறக்குட்டிக்குதிரையை அபி பார்த்தாள். அது மட்டுமன்றி, அதன் அருகில் “இந்தக் குட்டிக்குதிரை விற்பனைக்கு” என்கிற ஒரு பலகையும் போட்டிருப்பதை கவனித்தாள், அபி.

“அப்பா! எனக்கு அந்த அழகான குட்டிக்குதிரை வேணும்” என்றாள் தன் அப்பாவிடம்.

“இல்லை அபி! அந்தக்குதிரையையெல்லாம் வாங்கித்தர முடியாதும்மா, செல்லம்” என்றனர் அப்பா அம்மா இருவரும்.

“அம்மா! எனக்கு அந்தக்குட்டி குதிரை கட்டாயம் வேணும்!” என்றாள் அபிக்குட்டி அழுத்தமான குரலில்.

“இல்லைடா, அபிக்குட்டி! அந்த குதிரையை வாங்கித்தர முடியாது! வீட்டுக்கு போனவுடன் உனக்கு ஐஸ்க்ரீம் தருகிறேன். சரியா?” என்றாள் அம்மா.

“எனக்கு ஐஸ்க்ரீம் எல்லாம் வேணாம்! எனக்கு அந்தக் குட்டிக் குதிரைதான் வேணும்! எனக்குக் கட்டாயம் அந்தக்குதிரை வேணும்!” என்றாள் அபிக்குட்டி பிடிவாதமாக.

“இப்படியெல்லாம் அடம் பிடிக்கக்கூடாது அபிக்குட்டி! அப்பா அம்மா சொன்னால் கேக்கனும்!” என்றாள் அம்மா கொஞ்சம் கடிந்து.

உடனே அபிக்குட்டி அழ ஆரம்பித்துவிட்டாள். அழுதுகொண்டே அவள்,

“அந்த குட்டிக்குதிரை நீங்க வாங்கித்தரவில்லை என்றால் நான் செத்துப்போய்விடுவேன். எனக்கு அந்த அழகான குட்டிக்குதிரை வேண்டும்”

“குதிரை கிடைக்கவில்லையென்றால் அப்படியெல்லாம் நீ சாக மாட்டாய்! அதுபோல் யாரும் இறந்ததில்லை!” என்றார் அப்பா, அம்மாவுடன் சேர்ந்து.

வீட்டிற்குபோனவுடன் அபிக்குட்டி படுக்கைக்குப்போனாள், அவளால் சாப்பிடமுடியவில்லை, தூங்கமுடியவில்லை, அழுதுகொண்டே இருந்தாள், அபிக்குட்டி, அந்தக்குட்டிக்குதிரையை நினைத்து. கடைசியில் அபிக்குட்டி இறந்தே விட்டாள்- அந்தக் குட்டிக்குதிரை கிடைக்காததால்! :(

----------------

இது என்னுடைய ஒரிஜினல் சிந்தனை அல்ல! எனக்குப்பிடித்த ஒரு ஆங்கில கவிதையை உரைநடையாக தமிழில் சொல்ல முயன்றுள்ளேன். ஒரிஜினல் ஆங்கிலக்கவிதை கீழே உள்ளது! The poem is really beautiful unlike my crude translated version! :)

Little Abigail and the Beautiful Pony


There was a girl named Abigail
Who was taking a drive
Through the country
With her parents
When she spied a beautiful sad-eyed
Grey and white pony.
And next to it was a sign
That said,
FOR SALE--CHEAP
"Oh," said Abigail,
"May I have that pony?
May I please?"
And her parents said,
"No you may not."
And Abigail said,
"But I MUST have that pony."
And her parents said,
"Well, you can't have that pony,
But you can have a nice butter pecan
Ice cream cone when we get home."
And Abigail said,
"I don't want a butter pecan
Ice cream cone,
I WANT THAT PONY--
I MUST HAVE THAT PONY."
And her parents said,
"Be quiet and stopp nagging--
You're not going to get that pony."
And Abigail began to cry and said,
"If I don't get that pony, I'll die."
And her parents said, "You won't die.
No child has ever died yet from not getting a pony."
And Abigail felt so bad
That when they got home she went to bed,
And she couldn't eat,
And she couldn't sleep,
And her heart was broken,
And she DID die--
All because of a pony
That her parents wouldn't buy.

(This is a good story
To read to your folks
When they won't buy
You something you want.)

Tuesday, June 16, 2009

வருணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


வருணுக்கு சற்று காலம் கடந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Monday, June 15, 2009

காமக்கல்வி பற்றி யார் விவாதிக்கனும்?!

கல்யாணம் ஆனவன் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி இல்லைனா விவாகரத்து பத்தி பேசனும்! காதலிப்பவர்கள் கல்யாணத்தை பத்தி பேசனும்! தாய்மை அடைந்துள்ளவர்கள் கைக்குழந்தை வளர்ப்பு பற்றி பேசனும்! அப்படி பேசினால்தான் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்!

அதேபோல் யாரு காமக்கல்வி பற்றிப் பேசனும்? விவாதிக்கனும்? உங்களுக்கு டீனேஜ் வயதில் பசங்க இருக்காங்களா? உடலில் பல ஹார்மோன்களும் சுரக்க ஆரம்பித்த இளம்வயது பதின்மர் இருக்காங்களா? நீங்கதான் காமக்கல்வி பற்றி பேசனும்! விவாதிக்கனும்!

இந்த இணையதள பதிவுலகில் பெரிய காமெடி என்னனா இளம் வயது ஆண்களும் பெண்களும் பெரிய பெரிய விசயங்களை பற்றி பேசுறாங்க! 10-15 வருடம் சென்று இவர்கள் இன்னைக்கு எழுதுவதை இவர்களே ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகத்துக்குரியது. மனிதன் மனம், அவனுடைய "ஒப்பீனியன்" காலப்போக்கில் மாறக்கூடியது. பெரிய பெரிய வீரர்களும் வீரங்கணைகளும் ஆடி அடங்குவதை நாம் பார்க்கவில்லையா? தனக்கென்று வரும்போது அவர்கள் சொன்னதெல்லாம் தண்ணீரில் எழுதியதாக முடிவதை நேற்றும், இன்றும், என்றும் பார்க்கிறோம்.

காமக்கல்வி பற்றி பேசனும்னா, பொதுவாக டீனேஜர் (பதின்மர்) வைத்திருப்பவர்கள் தங்கள் கருத்துக்களை அள்ளிவிடுவது நல்லது. அவர்களுக்குத்தான் தெரியும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள்! அவர்களுக்குத்தான் கொஞ்சமாவது "ரியாலிட்டி" "ப்ராக்டிகாலிட்டி" னா என்னனு தெரியும்!

ஆனால் பொதுவாக இணையதளத்தில் டீனேஜரும், மற்றும் கல்யாண வயதில் உள்ளவர்கள், கைகுழந்தை வைத்துள்ளவர்கள் எல்லாம் ரொம்ப முற்போக்குவாதிகள்போல் காமக்கல்வி, இளம் வயதில் காமம் பற்றியெல்யாம் அடித்துப்பேசுவதெல்லாம் அர்த்தமற்றதாக தோனுது!

டீன் செக்ஸ்ல தப்பு இல்லை! நாங்கல்லாம் "லிபெரல்" என்று சொல்லும் அரைவேக்காடுகள் பலர் தன் 13 வயது மகளுக்கு காண்டம் வாங்கி கொடுத்து அவள் பாய்ஃப்ரண்டுடன் அனுப்பி வைப்பார்களா?

இல்லை தன் மகளோ, மகனோ தவறு செய்து எச் ஐ வி +ve ஆக வந்தால், அதை சமாளிக்க இவர்களுக்கு தைரியமோ பக்குவமோ இருக்கிறதா?

சும்மா பேசலாம்! அவ்வளவுதான்!

Sunday, June 14, 2009

திருத்த முடியாதுடி! உங்களை திருத்தவே முடியாது!

“அந்த புதுசா குடிவந்துள்ள பொம்பளை சாந்தா என்னை பார்த்தால் ஏதோ எதிரியை பார்ப்பது போல பார்க்கிறாங்க!” என்று ஆரம்பித்தாள் அவனுக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்த அவன் மனைவி கலா.

“ஆரம்பிச்சுட்டியா? ஏன்டி இப்படி இருக்க? அவளுக்கு உன்னைப்பிடிக்கலைனா நீ ஒதுங்கி இரு” என்றான் பாண்டி எரிச்சலாக.

“இல்லைங்க, நம்ம அந்த காசிக்கு சொந்தக்காரங்கனு அவளுக்குத் தெரியும் போல. அதான் ரொம்ப திருப்புறா!” நு அதன் காரணத்தையும் சொன்னாள் கலா.

“அதிலென்ன தப்பு? அந்த ஆளு, உன் அருமைத்தம்பி, கல்யாணம் ஆகி, குழந்தையுடன் இருக்கும் இந்தம்மாட்ட கேவலமா நடந்து இருக்கான்! அதனால் கோபம் வந்து வெளக்கமாத்தை வச்சு அடிச்சு இருக்காள் உன் ஒண்ணுவிட்ட தம்பியை! உடனே அந்தத்தெருவில் உள்ள பெரிய மனுஷனுங்க எல்லாம் பஞ்சாயத்து வச்சு இந்த அம்மா மேலே ஏதோ தப்புங்கிற மாதிரி இவங்களை காலி பண்ண வச்சிருக்காங்க! யாரு பஞ்சாயத்து வச்சது? உன் தம்பிபோல உள்ள இன்னும் நாலு பொறுக்கிகள்! அவனுகதானே தெருத்தலைவரா இருக்கானுக இப்போ?”

“என்ன இருந்தாலும் ஒரு பொம்பளை வெளக்கமாத்த வச்சு அடிக்கலாமா, ஒரு ஆம்பளைய?”

“அந்த அளவுக்கு நடந்து இருக்கான் உன் அருமைத்தம்பி! மானம் போகுதுடி! இந்த மாதிரி மிருகத்தை எல்லாம் சொந்தம்னு வெளியே சொல்லிக்காதே!” என்று தலையில் அடிச்சுக் கொண்டான் பாண்டி.

“அவன் அப்படியெல்லாம் பெருசா தப்பு பண்ணி இருக்க மாட்டான்!” என்றாள் கலா வாய்க்குள்ளேயே, தன் ஒண்ணுவிட்ட தம்பியை விட்டுக்கொடுக்காமல்.

“ஏண்டி! நீயும் ஒரு பொம்பளைதானே? ஒரு தாய் ஒரு ஆம்பளையை வெளக்கமாத்தை வச்சு அடிக்கிறானா, அந்த ஆளு எவ்வளவு கேவலமா நடந்து இருப்பான்? கொஞ்சமாவது யோசிக்கனும்டி!”

“என்னவோ, உண்மையிலேயே என்ன நடந்ததுனு எனக்கு என்ன தெரியும்?” என்றாள் விடாமல்.

“அப்போ பேசாமல் வாயை மூடிக்கிட்டு இரு! இனிமேலாவது அவன் ஊரில் உள்ளவளிடம் எல்லாம் தப்பா நடக்காம இருக்கட்டும்! இவனுக்கும் ஒரு பொண்டாட்டி இருக்கா இல்லை? ஏன் இப்படி நாய் மாதிரி அலையிறான் பொறுக்கிப்பய!”

“என் சொந்தக்காரர்களை திட்டுவதுனா உங்களுக்கு அல்வா திங்கிற மாதிரி!”

“பெண்களுக்கு எதிரி உன்னை மாதிரி அறிவுகெட்ட பெண்கள்தான்!”

“உங்ககிட்ட வந்து இதை சொல்ல வந்தேன் பாருங்க” என்று கோபமாக சமையல்கட்டுக்குப் போனாள் கலா.

“திருத்த முடியாதுடி! உங்களை திருத்தவே முடியாது!”

Saturday, June 13, 2009

“ராமனை” சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுங்கள்!

சங்கராஜிக்கு பெரிய தொந்தரவா வந்து சேர்ந்துவிட்டான் இந்த ராமன். “குருஜி சிற்றின்பத்துக்கு ஆசைப்படுகிறான்!" "இதுபோல் சபலப்புத்தி உள்ளவனை எல்லாம் குருஜியா இருக்க தகுதி இல்லாதவன்!” என்கிறான் நேத்து வந்த இந்தப்பாவி ராமன்.

நான் எவ்வளவு பெரிய ஆள்? என்னையே இப்படிப் பேசுறான்! என்று கோபம் வந்தது குரு சங்கராஜீ க்கு!

ஆனால் ராமன் சொல்வதுபோல இப்போலாம் தன் உணர்வுகளை/உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை உணர்ந்தார் குரு சங்கரா. காமத்தை ஏன் இன்பம் என்கிறார்கள் என்பது விளங்கியது அவருக்கு. புகழ்ச்சி ரொம்பப் பிடித்தது. இந்த வயதிலும் பெண்களைப்பார்த்தாலே ஒரு மாதிரியாக இருந்தது, குரு சங்கராவுக்கு. அவர்களை நிர்வாணமாக கற்பனை பண்ண ஆரம்பித்துவிட்டார், குருஜி. தப்பு தப்பு என்று உள் மனது சொன்னாலும், பெண் என்னும்இன்பத்தை அனுபவிக்காமலே எப்படி சாவது? ஏன் இப்படி என் மனது இந்த வயதில் இப்படி அலையுது? என்று யோசித்தார். அவரால் தன் உணர்வுகளை சுத்தமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இது என் குற்றமா? எல்லாம் அந்த பகவானின் செயல்! என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டார்.

சங்கரா ஜி யோசித்தார். முதலில் இந்த ராமனை ஒரு வழி பண்ணனும்! அப்போத்தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்! நம்ம கடவுளிடம் வேண்டி தண்டிக்கச் சொல்வோமா? கடவுள் ரொம்ப பிஸியா இல்ல இருப்பார். நம்ம சொல்றதை அவர் கேட்பதற்கு முன்னால் நம்மளே போய் சேர்ந்துவிடுவோம். மேலும் நம்ம காம உணர்ச்சிகளும், ஆசைகளும் கடவுளுக்குத் தெரியும். எதுக்கு வம்பு?

அப்போ என்ன செய்யலாம்? இவன் இருக்கிறவரை நம்ம வாழ்க்கையை ஓட்டமுடியாது. பேசாமல் இந்தப்பதவியை விட்டு ஓடிவிட்டால்? அதெல்லாம் முடியாது! “இந்த ராமனை என்ன செய்வது? ரொம்ப நல்லவனா வேற இருக்கான். பேசாமல் இவனை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்!” என்று முடிவுக்கு வந்தார் குருஜி.

எப்படி இந்த ராமனை அனுப்பலாம்? கொலை செய்வதெல்லாம் நம்மால் முடியுமா? அது பாவம் இல்லையா? உடனே தோன்றியது அவருக்கு! “இருக்கவே இருக்கானுகள் திராவிட கைக்கூலிகள்”! சும்மாவே நம்மள சாமி சாமினு கும்பிடுவானுகள்! நம்ம கொஞ்சம் பணத்தை அள்ளி எறிந்தால், “முடிச்சிருவோம் சாமி” என்று ராமனை சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுவார்கள். இப்படித்தானே நம்ம காலங்காலமா பிழைப்பு நடத்துறோம்?

பொன்னையா, மாடசாமி, மற்றும் முனியாண்டியை கூப்பிட்டு காதும் காதும் வைத்ததுபோலப் பேசினார், குருஜி.

“என்ன சாமி?”

“இந்த ராமன் ரொம்ப நல்லவனா இருக்கான்! அவனை சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுங்கள்! இது பாவிகள் வாழும் உலகம்! நல்லவர்கள் எல்லாம் சொர்க்கத்தில் கடவுளுடன் இருக்கனும்” என்றார் குருஜி.

“சரி சாமி, இது தப்பு இல்லைங்களா, சாமி?” என்றான் முனியாண்டி.

“சாமி, தப்பு செய்யச் சொல்லுவேனா? ராமன் இறந்ததும் எங்கே போவார்? கடவுளிடம்! அதுவும் சொர்க்கத்துக்குப் போவார். அவரை கடவுள் நல்லாப் பார்த்துக்குவார்!'

“இருந்தாலும் அவரை கொல்லுவது..”

“உனக்கு வயிற்றில் ஒரு கட்டி இருக்கு. வலியால் உயிரே போகுது. அதை எடுக்க ஒரு ஒரு ஆப்பரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்லுறார். அப்படிப் பண்ணும்போது வலிக்கும் இல்லையா?”

“ஆமா”

“ஆப்பரேசன் செய்து கட்டியை எடுத்த பிறகு?”

“கொஞ்சநாளில் நல்லா ஆயிடும் சாமி. அப்புறம் வலியே இருக்காது சாமி”

“அது மாதிரித்தான் இது. ராமனை கடவுள் நல்லா பார்த்துக்குவார். அனுப்பிவிடுங்கள்” என்றார் குருஜி.

குருஜியின் கட்டளைப்படி, கைக்கூலிகள் ராமனை கவனமாக் சொர்க்கத்துக்கு அனுப்பிவைத்தார்கள்! ஆனால் பாவம், குருஜி மாட்டிக் கொண்டார்! இப்போ என்ன செய்வது? என்று யோசித்தார் குருஜி. ஒரு வழி தோன்றியது அவருக்கு! பேசாமல் இந்த கேசை வாய்தா போட்டு ஒரு 20 வருசம் இழுத்தால் என்ன? அதுக்குள்ள நம்மளும் சொர்க்கத்துக்குப் போய் சேர்ந்து விடுவோம்! குருஜி முகத்தில் புன்னகை வந்தது.

Thursday, June 11, 2009

"காதலுடன்" முடிந்துவிட்டது!

ஆறு மாதங்கள் கடந்த பிறகு!

“என்னடா ரமேஷ், நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா? உன் சந்தியாவுக்கு அரேஞ்சிடு மேரேஜ் யாரோ சாஃப்ட்வேர் இஞ்சினியரோட முடிந்துவிட்டதாம்! நீ அவளை கல்யாணம் பண்ணுவனு நெனச்சேன்?” என்றான் நண்பன் கணேசன்.

“ஆமாடா, எல்லாம் முடிந்துவிட்டது. அவள் எங்கிருந்தாலும் வாழ்க!”

“என்ன ஆச்சு?”

“தெரியலைடா. ஏனோ இது வொர்க் அவுட் ஆகல”

“உனக்கு வருத்தம் இல்லையா?”

“கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்ணுறது? லைஃப் கோஸ் ஆன்”

“கொஞ்சம் விபரமா சொல்லுடா, ரமேஷ், ப்ளீஸ்?”

“நானும் கூடத்தான் இருந்தேன் அன்னைக்கு நைட். அவளுக்கு ஜாலியா ஃபுட்பால் டீச் பண்ணிக்கொண்டு இருந்தேன். திடீர்னு அவங்க அம்மாவுக்கு மறுபடியும் உடம்புக்கு சரியில்லைனு ஒரு கால் வந்தது. உடனே மறுபடியும் லீவ் எடுத்துக்கொண்டு லாஸ் ஆஃப் பே ல மறுபடியும் இந்தியா போனாள் சந்தியா. அங்கே போனா, அவ அம்மா ரொம்ப சீரியஸாம். இவ கல்யாணத்தை உடனே நடத்தனும்! அவங்களுக்கு ஏதாவது ஆகுமுன்னே கல்யாணத்தைப் பார்க்கனும்னு அவங்க அம்மா சொன்னாங்களாம். யாரோ ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர் இந்தியா விசிட் பண்ணியவர் டெஸ்பரேட்டா இவளை கல்யாணம் பண்ணுவேன்னு வந்து நின்னாராம். இவ கண்டிஷன் எல்லாவற்றுக்கும் சரி என்று ஒத்துக்கொண்டாராம்”

“என்ன கண்டிஷன்?'

“ஏதோ “ப்ரிநப்” பாம். பெரிய கம்மிட்மெண்ட்ஸ் எதுவும் இல்லையாம். பிடிக்கலைனா எப்போ வேணா டைவோர்ஸ் வாங்கிக்கலாமாம். இவளும் சரினு சொல்லிட்டாளாம்”

“உன்னிடம் எதுவும் கேட்கலையா?'

“இல்லைடா அவமேலே எதுவும் தப்பில்லை! என்னிடம் கேட்டாள். அங்கே இருந்து கால் பண்ணி, நிலைமையைச் சொன்னாள். எனக்கென்னவோ எதுவும் தெளிவா பதில் சொல்ல முடியலை. சரி அவரையே கட்டிக்கோனு சொல்லிட்டேன்”

“ஏன்டா?”

“I loved her for sure but ரைட் ஃப்ரம் தி பிகன்னிங், எனக்கு ஏதோ ஒரு ஃபீலிங் இருந்ததுடா. I never felt like it will work out”

“என்னவோ போ!”

“என்ன பண்ணுறது? எங்க உறவு காதலுடன் முடிந்துவிட்டது டா"

“சோகம்டா”

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை!”


-முற்றும்

கண்ணதாசனும் உயிரும்!

காதல் பாடல்களில் கண்ணதாசன் காதலியை பார்த்து "உயிரே!" என்று உருகுவது ஒரு தனி அழகுதான்! கண்ணதாசனுக்கே உரித்தான ஒன்று என்றுகூட சொல்லலாம். ஒருவன், அவன் காதலியை உயிரே! என்றழைத்தால் அவள் எப்படி அவனிடம் மயங்காமல் இருப்பாள்? அவள் மனம் அவனுக்காக இரங்காமல் இருக்காது! அவர் எழுதிய சில பாடல்களில் உள்ள "உயிரை"ப் பார்ப்போம்!

* ஏன் அழுதாய்? ஏன் அழுதாய்? என்னுயிரே ஏன் அழுதாய்? (இருவர் உள்ளம்)

* சொன்னது நீ தானா? சொல் சொல் சொல் என்னுயிரே! சம்மதம்தானா? ஏன் ஏன் ஏன் என்னுயிரே? (நெஞ்சில் ஓர் ஆலயம்)

* நான் உன்னை அழைக்கவில்லை! என் உயிரை அழைக்கிறேன்! கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை! (எங்கிருந்தோ வந்தாள்)

* பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே! புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே! (ஆலயமணி)

* உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி! (பாரதியின் வரிகள்)
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ? (வியட்நாம் வீடு)


உண்மையான காதலில், என்றுமே காதலன் காதலியிடம் தன் சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள ஆசைப்படுவதில்லை! மற்றும், தான் என்கிற அகங்காரத்தையும் என்றும் காட்டுவதில்லை! இதில் கண்ணதாசன் சொல்லும் "உயிர்" காதலன் இதயத்திலிருந்து வருவது! வாயளவில் அல்ல!

Tuesday, June 9, 2009

சார்! கொஞ்சம் தள்ளி உட்காருங்க, ப்ளீஸ்!

"ஏண்டா அந்த ஆளுக்கு இப்படி ஒரு "மூக்கு உடை" கொடுத்த கார்த்திக்? பாவம் அவன்! அவன் மூஞ்சி போன போக்கை பார்த்தியா?" என்றான் சுந்தர்.

"நான் என்னடா செய்தேன்? "சரி அப்போ நீங்க உட்காருங்க நான் நிக்கிறேன்" னு சொன்னேன். இதிலென்ன பெரிய தப்பு?!"

"என்னடா சுந்தர்? என்னாச்சு?" என்றான் அப்போத்தான் வந்த ஆனந்த்.

"இல்லடா இன்னைக்கு ஆட்டோ எல்லாம் ஸ்ட்ரைக்காம்! படம் பார்த்துட்டு ஆட்டோ கிடைக்காமல் பஸ்ல ஏறி சிவாஜி நகர்ல இருந்து வந்தோம். வரும்போது நானும், கார்த்திக்கும் பஸ் ஸ்டாண்டிலேயே ஏறியதால் உட்கார இடம் கெடச்சது. அந்த சீட்ல இன்னொரு குண்டான ஆளும் ஜன்னல் ஓரத்தில் இருந்தான். அது 3 பேர் உட்காருகிற சீட். அந்த குண்டான ஆளு, நான் கார்த்திக் மூனு பேரும் உட்கார்ந்து இருந்தோம் அந்த சீட்ல. நான் நடுவில், கார்த்திக் ஓரமா இருந்தான். அடுத்த ஸ்டாப்ல ஒரு ஆள் ஏறி கார்த்திக் பக்கத்தில் நின்னுகொண்டு வந்தான். அவனுக்கு 35 வயசுபோல இருக்கும். நல்லாத்தான் கிழங்கு மாதிரி இருந்தான். அவன் கார்த்திக்கிடம் சொன்னான் "கொஞ்சம் தள்ளி உட்காருங்க! நானும் உட்கார்ந்துக்கிறேன்".

"சரி, அதுக்கு இவன் என்னடா செஞ்சான்?"

"உடனே கார்த்திக் சொன்னான், "இது 3 பேர் உட்காருகிற சீட், சார். நீங்களும் உட்கார்ந்தா யாரும் ஒழுங்கா வசதியா உட்காரமுடியாது" னு கனிவா இடம் கொடுக்க முடியாதுனு சொன்னான். ஆனால் அவன் இவனை விடலை. "கொஞ்சம் தள்ளி உட்காருங்க அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்துக்கலாம்" னு விடாமல் நிக்கிறான்"

"அவனை திட்டிவிட்டானா, கார்த்திக்?"

"இல்லைடா, "அப்போ நீங்க உட்காருங்க சார் நான் நிக்கிறேன்!" என்றேன். இதைப்போய் பெருசா சொல்லிக்கிட்டு இருக்கான், சுந்தர்"

"அது ஒரு செம சிக்ஸ் டா அவனுக்கு. பாவம் அவன் மூஞ்சி போன போக்க பார்க்கனும் நீ!"

"ஏண்டா கண்டவனையும் போட்டு கடிக்கிற, கார்த்திக்?"

"இங்கே பாரு! நான் உண்மையிலேயேதான் சொன்னேன். I was ready to give that seat to him. It will be so uncomfortable for everybody otherwise. நாலு பேர் அதில் உட்காருவது இம்பாஸிபிள்டா. I could stand more comfortably than sitting with great difficulty. அதனாலதான் சொன்னேன். I really meant it"

"என்னவோ போ! அவன் இனிமேல் யாரிடமும் இப்படி இடம் கேக்க மாட்டான்"

"நீ வேற! காலம்பூராம் அவன் இப்படித்தான் இருப்பான்! இதைக்கேளுடா சுந்தர்! ஒரு 4 மாசத்துக்கு முன்னாலே பங்களூர்ல இருந்து மதுரைக்கு போனேன். கடைசி நேரத்தில் போனதால, ட்ரயின், டீலக்ஸ் பஸ் எதுலயும் டிக்கட் புக் பண்ண முடியலை. தீபாவளிக்கூட்டம் என்பதால் டிக்கட்டுக்கு சாண்ஸே இல்லை. சரி, மக்களோட மக்களா போவோமேனு ஒரு சேலம் பஸ்ஸை பிடிச்சு போனேன். சேலம் போய் மாறி போய்க்க்லாம்னு. நான் கடைசி சீட்ல உட்கார்ந்து இருந்தேன் இன்னும் 5 பேரோட சேர்த்து. கடைசி சீட்னால பஸ் தூக்கி தூக்கிப் போட்டுக்கிட்டே போச்சு. ஹொசூர் போனதும் அங்கே இதே மாதிரி அப்பாவி வேசத்துடன் வந்தான் ஒருத்தன்" "சார் கொஞ்சம் எடம் கொடுங்க, ஓரமா உட்கார்ந்துக்கிறேன்" என்றான் மரியாதையா.

"நானும், சரி தொலையிறான் னு உட்காரவிட்டேன். உட்கார்ந்தான் அந்த அப்பாவி. கொஞ்ச நேரத்தில் என்ன ஆச்சுனா, நான் ஏதோ அவன் இடத்தில் உட்கார்ந்த மாதிரி ஓரத்தில் ஒண்டிக்கிட்டு இருக்கேன். அவன் எதைப் பத்தியும் கவலைபடாமல் 2 பேர்க்கு தேவையான சீட் எடத்தை எடுத்துக்கிட்டான். என்னால உட்காரவே முடியலை. If anybody, who does not know the "history" sees us, it will look as if he was generous enough to accomodate me in his seat! He does not even remember I let him sit, there! You believe that? We have got these sort of cheap bastards everywhere"

"நீ என்னடா பண்ணின?"

"என்ன பண்ண சொல்ற? அவனுக்கு ஞாபகப்படுத்த சொல்றியா? நீதான் ஒண்ட வந்த பிடாரினு? நான் பேசாமல் எழுந்து நின்னுட்டேன். இதைக்கேளு! அப்பவும் நான் நிக்கிறதைப்பத்தி அவன் கவலையே படலைடா! அவன் 2 ஆளு இடத்தில் வசதியா உட்கார்ந்து வரான், சந்தோஷமா!"

"அந்த கசப்பான அனுபவத்தில் இவனிடம் "ரியாக்ட்" பண்ணுறியா?"

"இல்லடா, இவனுகளை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் விட்டேனா, அதையும் நம்ம ஊர் மாதிரி ஆக்கிவிடுவானுக! காட்டுமிராண்டிகள்! கொஞ்சம்கூட புத்தியே கிடையாது"

Monday, June 8, 2009

தவிர்க்க முடியாத பதிவுலக அரசியல்!

தமிழ்மணம், இன்று வாசகர் பரிந்துரையை மேல்தூக்கி வைத்துள்ளதன் நோக்கம், தரமான பதிவுகள் பலருக்கும் போய் சேரனும் என்கிற நல்லெண்ணத்தில். மேலும் கள்ள ஓட்டுக்களை தவிர்க்க இ-மெயில் ஓப்பென் ஐ டி மற்றும் ப்ளாக் ஐடெண்ட்டி சரிவர கவனித்து கள்ள ஓட்டுக்களையும் தவிர்க்க முயன்று ஓரளவுக்கு வெற்றியும் அடைந்துள்ளனர் தமிழ்மண நிர்வாகிகள்.


டி வி ஆர் அவர்கள் சமீபத்தில் எழுதிய பதிவில் "-ve பரிந்துரைக்கு -1 மார்க் என்பது எப்படி சரி?" என்பதுபோல பதிவில் வருத்தத்துடன் சொல்லியுள்ளார்.


http://tvrk.blogspot.com/2009/06/blog-post_07.html


அதற்கு காரணம், பதிவுலகில் உங்க பதிவுக்கேற்ப உங்களுக்கு நண்பர் பகைவர் உருவாகிவிடுகிறார்கள். உங்கள் முன்னேற்றத்தில் எரிச்சலடையும் சில பெரியமனிதர்கள்கூட இதில் அடக்கம். உங்களை வெறுப்பவர்கள் நீங்க சிறந்த பதிவு எழுதினாலும் உங்களுக்கு தவறாமல் -ve பரிந்துரைக்கு -1 மார்க் கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். இந்த மதிப்பெண் பொதுவாக உங்களுடைய இந்தப் பதிவுக்காக அவர்கள் கொடுப்பதல்ல! உங்களுக்காக கொடுக்கும் ஒரு "அன்புப்பரிசு"!

* இதைத் தமிழ்மணம் வாசகர்பரிதுரையை மாற்றியமைப்பதன் மூலம் சரி செய்ய முடியுமா?

* சரி செய்யனுமா?

* எப்படி செய்யமுடியும்?

என்கிற கேள்விகளுக்கு பதில் அளிப்பது மிகவும் கடினம்!

ஏன் என்றால்,

* உங்க பதிவை ரசிப்பதற்கு வெறுப்பதற்கும் ஒவ்வொருவர்க்கும் சம உரிமை உண்டு!

ரசிப்பவர் +1 கொடுத்தால், வெறுப்பவன் -1 தானே கொடுக்கனும்? இது எப்படி தவறாகும்?

இல்லை, இவருக்கு என்னை பிடிக்காது. அதனால் இப்படி செய்கிறார் என்றால், வினை விதைத்தது நாம் தானே?

I know it is not fair lots of times but we just have to learn to live with it! If we are really good, the time will tell. Whatever you write is going to stay here for ever. Your post which is treated unfairly today, might get recognized may be after 10 years! Who knows? The truth never dies as far as I know! :)

* பொறாமை, பாலிடிக்ஸ், வயிற்றெரிச்சல், வெறுப்பு இதையெல்லாம் பதிவுலகில் இல்லாமல் பண்ணுவது மிகவும் கடினம்.

* என்னைக்கேட்டால் தமிழ்மணம் இதை ஓரளவுக்குத்தான் சரி செய்ய முடியும். கடவுளே வந்தாலும் இதுபோல் பலவித மனநிலையில் உள்ள பதிவர்களை சரி செய்வது- நியாயமாக ஓட்டளிக்க வைப்பது- கடினம்!

பேசாமல் போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றறட்டும் என்று போய்விடுவது நல்லது!

Saturday, June 6, 2009

விதியை மதியால் வெல்லலாம், அம்மா!

சரஸ்வதியால் நம்பவே முடியவில்லை! அவள் கண்களுக்கு ஏதோ சினிமா நடிகை, இல்லை மாடல் போல இருந்தாள் அவள் பேத்தி வசந்தி. அமெரிக்காவில் இருந்து 5 வருடம் சென்று வந்த தன் பேத்தியின் வளர்ச்சியைப் பார்த்து வியந்தாள்! வசந்திக்கு வயது 17 ஆகிறது. கொள்ளை அழகா இருக்காள் என் பேத்தி என்று அவளுக்கு சுத்திப்போட்டாள். ஊர்க்கண்ணு பட்டுறப்போகிறது என்று யாரிடமும் வசந்தியை காட்டக்கூட பயந்தாள், சரஸ்வதி. வசந்தி பேசும் ஆங்கிலமும், மழலைமொழி போல் பேசும் தமிழும்! எல்லாமே சரஸ்வதிக்கு அழகாத்தான் தெரிந்தது.

பார்ப்பதற்கு சரஸ்வதி சிறுவயதில் இருந்தது போலவேதான் இருந்தாள் வசந்தி. கண் மூக்கு, காது, நிறம், ஏன் உடல்வாகுகூட அப்படியே சிறுவயதில் சரஸ்வதி இருந்ததுபோல்தான் இருந்தது. ஆனால் வசந்தியின் வெண்மையான பல்வரிசை மட்டும்.. அவள் புன்னகைக்கும்போது எவ்வளவு அழகா இருக்கிறாள்! வசந்தியின் பல்வரிசை தன் பல்வரிசைபோல் தாறுமாறாக இல்லாமல் எவ்வளவு வரிசையா இருக்கு! என்று வியந்தாள். தன் பேத்திக்கா இவ்வளவு அழகான பல்வரிசை! என்று சரஸ்வதியால் நம்பவே முடியவில்லை!

தனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து சரஸ்வதி வாழ்நாளில் சிரிக்ககூட பயப்படுவாள். வாயை பொத்திக் கொண்டுதான் சிரிப்பாள். அவளுக்கு 50 வயதாகும்வரை யாராவது ஃபோட்டோ எடுத்தால்கூட ஒதுங்கி ஓடிவிடுவாள். அவ்வளவு விஹாரமாக இருந்தது அவள் பல்வரிசை. தன் பல்வரிசைமட்டும் நல்லா இருந்தால் எவ்வளவு அழகா நான் இருந்து இருப்பேன் என்று சரஸ்வதி வாழ்நாளில் ஏங்காமல் இருந்த நாளே இல்லை. சமீபத்தில் பார்த்த படையப்பா படத்தில் வரும் அந்த பாடல் வரி (முகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை) எவ்வளவு சரியாக உள்ளது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்வாள். இப்போது அவளுக்கு பல்லெல்லாம் போய் 78 வயதாகிவிட்டது. பல்லெல்லாம் போய்விட்டதால் அந்த பிரச்சினை இல்லை!

சரஸ்வதி அன்று மகனுடன் கோவிலுக்கு போகும்போது மருமகள் சாந்தி, மற்றும் பேத்தி வசந்தி யாரும் இல்லாமல் அவனிடம் தனியாக பேச நேரம் கிடைத்தது. அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் மகன் ராஜேந்திரனுடன் நடந்து எங்கே போனாலும் அவளுக்கு பெருமையாக இருக்கும். அதுதான் அவளுக்கு சொர்க்கம்!

சாமி கும்பிட்டுவிட்டு கோயிலில் மணல் பகுதியில் அம்மாவும் மகனும் அமர்ந்தார்கள்.

“உன் பேத்தி அபப்டியே உன்னை மாதிரியேதான் இருக்காம்மா” என்றான் மகன் ராஜேந்திரன் பெருமையாக.

“குணம் சரிதான்டா. ஆனால் பார்க்க அவள் என்னை மாதிரி இல்லைடா! அவள் பேரழகியா இருக்காள் என் பேத்தி. என்னை மாதிரியா இருக்காள்?” என்றாள் பெருமையாக.

“இல்லம்மா அவள் உன்னை மாதிரியே டபுள் ஆக்ட்டாக இருந்தாள்” இங்கே பாரு அவளுடைய பழைய படங்கள் எல்லாம்” என்று தன்னிடம் இருந்த ஒரு சின்ன ஆல்பத்தை காட்டினான்.

சரஸ்வதியால் நம்பவே முடியலை!! 4 வருடம் முன்னால் எடுத்த படத்தில் அவள் பேத்தியின் முகம் தான் சிறுபிள்ளையாக 13 வயதில் இருந்தது போலவே இருந்தது. முக்கியமாக அவள் பல்வரிசை!

“எப்படிடா இப்போ முகம் வேற மாதிரி இவ்வளவு அழகா இருக்கு?” என்றாள் அம்மா புரியாமல்.

“நீ பிறந்து வளர்ந்த காலத்தில் “ஆர்தோடாண்டிக்ஸ்” என்கிற பல் வைத்தியம் எல்லாம் இந்தியாவில் இல்லை அம்மா. அதனால் உனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வசந்திக்கு உனக்குப் போலவே இருந்த பல்வரிசையைத்தான் “ஆர்த்தோடாண்டிக்ஸ்” பல் வைத்தியம் செய்து அவள் பல்வரிசையை சரி செய்தோம் அம்மா” என்று விளக்கினான்

“எப்படிடா? அம்மாவுக்கு புரியவே இல்லை. அதெப்படி இப்படி அழகா மாற்றமுடியும்?” என்றாள் சரஸ்வதி ஆச்சர்யமாக.

“அமெரிக்காவில் பொதுவாக எல்லோருக்கும் பல்வரிசை சரியாக இருக்கும் என்பதை பார்த்து இருக்கியா அம்மா?”

“ஆமாடா வெள்ளைக்காரங்களுக்கெல்லாம் சரியாக அழகா பல்வரிசை இருக்கும், பார்த்து இருக்கேன் அங்கே வசந்தி பிறந்த போது வந்தபோது மற்றும் டி வி யில் பார்க்கும்போது. அவங்க வெள்ளைக்காரங்க இல்லையா? அவங்களுக்கு ஏன்டா நமக்கு மாதிரி பல்வரிசை வருது?”

“இல்லம்மா அவர்களிலும் பலருக்கும் உனக்கு, மற்றும் வசந்திக்கு போலதான் சிறுவயதில் இருந்து இருக்கும். ஆனால் அவர்கள் அதை சின்ன வயதிலேயே சரி செய்துவிடுவார்கள், அம்மா”

“எப்படிடா இப்படி மாற்ற முடியும்!!!”

“வசந்திக்கு பர்மனெண்ட் பற்கள் வந்தவுடன், மேலே இரண்டு பற்கள், கீழே இரண்டு பற்கள் நாலு பற்களை ஆப்பரேஷன் செய்து முதலில் எடுத்துவிட்டார்கள் அம்மா! அப்புறம், பலவிதமா ப்ரேஸஸ் (உலோக கம்பிகள் வைத்து) அழுத்தி அந்த இடைவெளியை சரி செய்தார்கள். ஒரு நாளில் ஒரு மாதத்தில் இதையெல்லாம் செய்ய முடியாது! இரண்டு வருடம் வைத்தியம் செய்து அவள் பல்வரிசையை சரி செய்தார்கள்”

“நெஜம்மாவாடா! இப்படியெல்லாம் செய்யமுடியுமா!”

“நீயும் அமெரிக்காவில், ஏன் இந்தியாவில்கூட இப்போ பிறந்து இருந்தால் உன் புன்னகையையும் அழகா ஆக்கியிருக்கலாம் அம்மா” என்றான் ராஜேந்திரன்.

“நான் அதைப்பற்றி இப்போ கவலைப்படலைடா, ராஜா. என் அழகான பேத்தியை பார்க்கும்போது என்னை சரிசெய்து பார்ப்பது போலதான் இருக்குடா அம்மாவுக்கு” என்றாள் சரஸ்வதி குரல் தளுதளுக்க.

“இப்போ எல்லாம் விதியை மதியால் வெல்லலாம் அம்மா! விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் ரொம்ப முன்னேறிவிட்டது அம்மா” என்றான் ராஜேந்திரன்.

Friday, June 5, 2009

"பிரபலப்பதிவுகள்" ஏன் பரிந்துரைக்கப்படுவதில்லை?!

பதிவுலகில் சில பிரபலங்கள் இருக்காங்களாம்! நான் யாரு பேரையும் சொல்லவில்லை! எல்லோரும் நம்மல பிரபலம்னு நெனச்சுக்கோங்க! இவர்கள் எழுதும் காரசாரமான பதிவுகள், தரமான பதிவுகள் மற்றும் பல குப்பைகள் எல்லாமே உடனே சூடாகிவிடும். உண்மையிலேயே பதிவுகளை சூடாக்குவதில் தான் இவர்கள் பிரபலம்னு சொல்லலாம்!

ஆனால் வாசகர் பரிந்துரையில் இவர்கள் சூடான "பிரபலப்பதிவுகள்" அவ்வளவாக இடம் பெறுவதில்லை! அது ஏன்? என்கிற கேள்வி எழுகிறது.

இதற்கு நான் பதில் தேடுகிறேன்!

* நான் என்ன நினைக்கிறேன் என்றால் "இந்த பிரபலங்கள்" மேலே பலருக்கு வெறுப்பு!

வெறுப்பா? ஏன்? காரணம்?

வேறென்ன? பொறாமைதான்!

ஏன் பொறாமை?

இவர்கள் எழுதுற சில குப்பைகளும் சூடாகுது ஆனால் அதே நேரத்தில் பதிவாகிய என்னுடைய நல்ல தரமான பதிவுகள் கூட சூடாகலைனு பலருக்கும் வெறுப்பு, எரிச்சல்!

அதனால?

நான் என்ன நெனைக்கிறேன் என்றால்...

* வாசகர் பரிந்துரையில் ஒரு சில பொறாமைக்காரகள் சென்று இவர்களுக்கு தவறாமல் நெகடிவ் மதிப்பெண்கள் போட்டுவிடுகிறார்கள்! இவர்கள் பதிவுகளை படிப்பதெல்லாம் இல்லை! போயி நெகடிவ் மதிப்பெண் போட்டுவிட்டு இடத்தை காலி செய்துவிடுகிறார்கள்!

இப்போ 50 பேர் பரிந்துரை செய்கிறார்கள், பொறாமையில் 50 பேர் நெகட்டிவ் பரிந்துரை செய்றாங்கனு வச்சுக்குவோம். மொத்த மதிப்பெண் 0 இல்லையா? எங்கே இது தேற? பேசாமல் சூடோட நிக்கும்!

வேற ஏதாவது காரணம் இருக்காதா?

* அல்லது, இவர்களுக்கு வரும் "சூடான வாசகர்களுக்கு" பரிந்துரை செய்வது எல்லாம் பிடிக்காது! அதெல்லாம் எதுக்கு வெட்டி வேலை னு நெனைக்கிறாங்க போல!

* அல்லது பொதுவாக இவர்களுடைய பெரும்பாலான பதிவுகள் பரிந்துரை செய்யப்படும் அளவுக்கு ஒண்ணும் பெருசா விசயமோ தரமோ இருப்பது இல்லை போல! சும்மா சூடா வாசிச்சுட்டு மக்கள் போயிட்டே இருக்காங்க போல!

எனக்கு அவ்வளவுதான் தெரியுது. வேற யாராவது தெரிந்தால் விளக்கலாம்!

சரி, இந்தப்பதிவுக்கு வாசகர் பரிந்துரையில் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும்?

அனேகமாக "-ve 100"! LOL!

WHY???

Nobody likes this kind of analysis, I believe, but I just have to do it! :))

ரஜினி என்கிற நடிகனை பார்க்கனுமா? (2)

இந்தப்படத்தில் நடிப்பில் ரஜினிதான் #1 என்று விமர்சகர்களும் பொதுமக்களும் பொதுவாக ஏற்றுக்கொள்வார்கள். ரஜினி கேரக்டர் அப்படி அதனாலேதான் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏன் என்றால், முள்ளும் மலரும், அவர்கள் போன்ற படங்களில் ரஜினி கேரக்டர் மோசமாக இருந்தாலும் அதிலும் ரஜினிதான் ஜொளித்தார்! சிவகுமார் எப்படி இந்த "வில்லன்" மாதிரி ரோலுக்கு சரி என்றார் என்பது இன்னும் எனக்குப் புரியவில்லை!

நெறைய நேரங்களில் ஒரு சில பெரிய நன்மையை கருதி மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஒரு சில காரியம் செய்வதுண்டு. ஆனால் அதன் விளைவுகளை நாளடைவில் அவர்களாலேயே சமாளிக்க முடியாது. ஆம், ஆண்கள் பொதுவாக வலுவிழந்த மனிதர்கள்தான். அதேபோல்தான் இந்தப்படத்தில் வரும் சம்பத்தும்.

சம்பத்தின் இன்றைய நிலைமை!

அன்று காதலி இறந்துவிட்டாள். வாழ்க்கையே முடிந்துவிட்டதுனு சாகப்போவான். புவனாவை பேருக்குத்தான் கல்யாணம் செய்துகொண்டு பெரிய தியாகியாவான். ஆனால், காலப்போக்கில் அவன் புவனாவையே காதலிக்க ஆரம்பித்துவிடுவான். புவனாவின் மகன் இவன் மகனாகி விடுவான். "அப்பா" அப்பா" என்று அந்தப்பையன் சம்பத்தை விளிப்பது/அழைப்பது அவனுக்கு பிடிக்கும். ஆனால், சம்பத், அன்று அவ்வளவு பெரிய தியாகம் செய்தாலும் தான் ஒரு சாதாரண மனுஷந்தான் நான் என்று வெட்கமே இல்லாமல் ஒத்துக்குவான். புவனா இளமையா இருப்பாள், நல்லவள், அழகா இருப்பாள். அவளோட பிரிந்து "சும்மா" வாழும் சம்பத் காலப்போக்கில் அவளை காதலிக்க ஆரம்பித்துவிடுவான். அதை வெட்கமே இல்லாமல் அவளிடமும் சொல்லாமல் சொல்லிவிடுவான்! ஏன் பச்சையாகவே சொல்லிவிடுவான்!

புவனா, இன்றும் அதே மன உறுதியுடன் இருப்பாள். பிடிவாதம் அவளுக்கு பலம்! காலப்போக்கில் மாறமாட்டாள். சம்பத்தை தெய்வம் நிலையில் வைத்து அவனை உயர்த்தி ஒதுக்கிவிடுவாள்! தான் முடிவெடுத்தது போலவே வாழ்ந்து முடிக்க முடிவு செய்துவிடுவாள்.

ஒரு மாதிரி புவனா மனது "டபுள் ஸ்டாண்டார்ட்" வச்சிருக்கும். அதாவது தனக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேற என்பது போல.

Sampath will tell Bhuvana about his latest disturbance and his love for her, is not the same as what he had. Sampath will bring up a situation to Bhuvana, regarding what she thinks of young widows' remarriage?

அதற்கு, Bhuvanaa, இளம் விதவைகள் மறு கல்யாணம் செய்துகொள்ளனும்னு சொல்லுவாள். அதாவது தனிமையில் சாக வேண்டியதில்லை என்று சம்பத்திடம் சொல்லுவாள்.

உடனே சம்பத், அப்போ நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன? என்று வெட்கத்தைவிட்டு (நாகரீகமான முறையில்தான்) கேட்பான். புவனா சொல்லுவாள் "நம்ம வேற". "நீங்கள் எனக்கு தெய்வம்போல!" "நான் உங்களுக்கு தகுதியானவள் அல்ல!" என்று சொல்லுவாள்!

ஆனால் சம்பத் சொல்லுவான், நான் ஒரு சாதரண மனுஷந்தான். பலஹீனம் நிறைந்த மனுஷன் என்பான்! புவனா அவனைப் புரிந்துகொண்டாலும் அவளால் இந்த ஒரு விசயத்தில் அவனுக்கு உதவ முடியாது!

இந்த சூழ்நிலையில்தான்

* "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ" பாடல் இந்தப்படத்தில் இடம் பெரும்.

இது பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல்! ஆனால் கண்ணதாசன் லெவலுக்கு இருக்கும்!

அந்தப்பாடலில், சம்பத், புவனாவிடம்:

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜியம் இல்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ!

ஒரு உறவும் இல்லை! அதில் பிரிவுமில்லை!

அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகின்றேன் நானே!


ஆசைக்கு வெட்கமில்லை!

அனுபவிக்க யோகம் இல்லை!

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை!

ஏன் படைத்தானோ இறைவன் என்னை?

எனக்கு உலகில் நிம்மதி இல்லை!


புவனா, சம்பத்திடம்:

தெய்வத்தில் உன்னைக்கண்டேன்!

தினம் தினம் பூஜை செய்தேன்!

நிலவுக்கு களங்கம் என்று உறவுக்கு விலகி நின்றேன்!

கலக்கம் ஏனோ? தயக்கம் ஏனோ?


Friend of mine said long time ago that "Human minds have double standards" and that which is not uncommon! I did not believe it then but it is true!

புவனா மனதும், நாகராஜ் மனதும் இதில் "டபுள் ஸ்டாண்டார்ட்" வைத்திருப்பதை தெளிவாகப் பார்க்கலாம்! அது ஒருவர் மன உறுதி, மன தைரியத்துக்கு உதவும்னு தோனுது.


நாகராஜ்,

இந்த புவனா பிரச்சினை முடிந்ததும் நிம்மதியா இருப்பான். அந்த நிம்மதி ரொம்ப நாளைக்கு நிலைக்காது! He cant become a father anymore. His "sperm count" will go down. So he will become INFERTILE (not impotent!). அதனால் ஊர் உலகம் அவன் மனைவியை மலடி என்பார்கள்! ஆனால் பிரச்சினை நாகராஜ்க்குத்தான் என்று அவள் தெரிந்துகொள்வாள் அவனை ஹர்ட் பண்ண வேண்டாம் என்று அவளுக்குள்ளேயே வைத்திருப்பாள். நாகராஜுக்கும் உண்மை தெரியும். ஆண் என்ற ஆணவத்தாலும், அவன் ஏற்கனவே நெறைய பேரை கற்பம் உண்டாக்கியதாலும் அதை ஏற்றுக்கொள்ள அவன் மனம் முதலில் மறுக்கும்.

That marital problem has been very well taken in this movie. Their arguments and the discussion of this sensitive issue is taken exceptionally well in this movie!

இப்போ நாகராஜின் குழந்தை, நண்பன் சம்பத்திடம் வளரும். அவனை தினமும் நாகராஜ் பார்ப்பான். நாகராஜை அவன் அங்கிள் னு கூப்பிடுவான்! I loved this part!

இந்த நிலைமையை சமாளிக்க As usual, Nagaraj will come up with another plan! That is, he will adopt his own son! This time he wont win! Because that is the only thing (the child) helps Bhuvana and Sampath to live at least this life. Moreover, Bhuvana will HATE nagaraj for what he has done and she will NEVER forgive him!

Even sampath will get tired of his friend. Their friendship will sort of crack.

சம்பத், நல்லவந்தான் ஆனால் நாகராஜிடம் அவன் எப்போவுமே ஒரு மாதிரி செடிஸ்டிக்காத்தான் நடந்து கொள்வான்! நண்பன் என்கிற உரிமைனு கூட சொல்லலாம்! அவன் நாகராஜிடம் பேசும் சில வசனங்கள்!

* நாகராஜ் அண்ணே! கல்லுளிமங்கன் நீங்க! கடப்பாறைய முழுங்கிட்டு சுக்கு கஷாயம் சாப்பிடுற ஜாதி நீங்க!

* நாகராஜ் அண்ணே! நீங்க முழுங்கிய கடப்பாறை ஒரு நாள் வயித்தை கிழிச்சுட்டு வெளியே வந்துடும்!

* நாகராஜ்! கடப்பாறையை முழுங்கிட்டு, இப்போ குத்துது கொடையுதுனு சொன்னால் எப்படி!


ஒருமுறை நாகராஜ் வெறுப்புடன் சம்பத்திடம் சொல்லுவான்,

* உன்னை அன்னைக்கே சாக விட்டுருக்கனும்! உன்னை காப்பத்தினேன் பாரு! அதுக்கு நன்றிக்கடனா இது?! என்பான்.

அதற்கு சம்பத் சொல்லுவான்!

* அன்னைக்கே நிம்மதியா போய் சேர்ந்து இருப்பேன்! இப்போ பாரு என் வாழ்க்கையை! என்பான் ஒரு விரக்தியுடன்!

Conclusion!

Anyway, this world is not for "good people" and kind-hearted gentleman like Sampath! It is for people who knows how to survive rather. That we can see in our life. Not only in this movie but also in movies like "Gone with the wind"!

Kind-hearted, nice person Sampath dies of heart attack as this world is not for good people! :(

Bhuvana and Nagaraj will cry but I am sure they know how to survive and they have hearts which are strong enough to survive and continue living in this world!

Thursday, June 4, 2009

ரஜினி என்கிற நடிகனை பார்க்கனுமா? (1)

இன்றைய வலையுலக மக்களில் பலர் ரஜினி என்கிற நடிகனை உணராதவர்கள்! ரஜினிகாந்த் என்கிற நடிகன் அபார நடிப்புத்திறன் கொண்ட பிறவி நடிகன் என்பதை உணரனும்னா நீங்க புவனா ஒரு கேள்விக்குறி படம் கட்டாயம் பார்க்கனும்! முள்ளும் மலரும் பார்க்கனும்! அவர்கள் பார்க்கனும்! நீங்க திறமைமிக்க நடிகன் ரஜினிகாந்தை அங்கேதான் பார்க்கலாம்.

அந்தப்படங்கள் வந்த நேரம் புகழ் என்கிற போதையில் மயங்கி மிகவும் உயர்ந்து நிற்கும் இன்றைய சூழலில் அல்ல! அன்று ரஜினிக்கு புகழ் கிடையாது, ஸ்டார் வால்யூ கிடையாது, வசதி கிடையாது, எதிர்காலம் தெரியாது. ஒரே மோட்டிவேஷன் முன்னேறனும்! நடிப்பால் முன்னேறனும்! என்று ஒரே வைராக்கியத்தில் நடித்த ரஜினிகாந்தை பார்க்கலாம்! எங்கே? புவனா ஒரு கேள்விக்குறியில் அந்த நடிகனை பார்க்கலாம்!

என்னைபொறுத்தவரை இது காலத்தால் அழியாத மிகவும் எதார்த்தமான காவியம். ஆண் என்பவன் ஒரு சில தெய்வீக குணாதிசீகங்களுடன் இருந்தாலும் அவன் காம மற்றும் காதலுணர்வு க்கு எளிதில் உள்ளாகிவிடுவான் என்பது உண்மை. பலஹீனம் நிறைய உள்ளவன் ஆண்.

ஆண் பெண் இருவரும் சரி சமம் சமானம்தான் என்றாலும் ஆண் வேறு பெண் வேறு! அவர்கள் உணர்வுகள் வேறு! ஒவ்வொரு பிரச்சினையையும் ஆணும் பெண்ணும் அனுகும் விதம் வேறு வேறு.

பொதுவாக பல ஆண்கள் ஒரு சில உயர்ந்த குணங்களுடன், உண்மை தத்துவங்களுடனும், மிகப்பரந்த மனதுடன் உள்ள உயர்ந்த ஜீவனாக இருந்தாலும், வாழ்ந்தாலும், அந்த குணங்களுடன் சேர்த்து அதே ஆண்மகனுக்கு மிகப்பெரிய பலஹீனங்களும் இருப்பதுண்டு. காதலில் பலஹீனம்! காமத்தில் பலஹீனும்! புகழ் என்னும் போதையில் பலஹீனம். பொதுவாக காமம், காதல் என்ற உணர்ச்சிகள் வரும்போது ஆண்கள் பெண்களைவிட மிகவும் கீழே போய்விடுவார்கள். உணர்ச்சி வசப்படக்கூடிவர்கள் ஆண்கள். காமம் என்கிற மிருக இச்சை இவர்களை எளிதாக ஆட்கொண்டுவிடும். ஒரு சிட்டி பஸ்ஸில் போகிற பெண்ணூக்கு, "எந்த ஆம்பளைதான் இந்த உலகத்தில் யோக்கியன்?" என்கிற தீவீர சந்தேகம் வருமளவுக்கு அநாகரீகமாக நடந்துகொள்வார்கள். தெய்வீக குணம் கொண்ட தத்துவங்கள் பேசும் அதே ஆண்மகந்தான் தன் பலஹீனத்தால் மிருக இச்சைக்கு உள்ளாவதும்.

அதே சமயத்தில் பெண் பொதுவாக சுயநலமாக வாழ்பவள்தான். பரந்த நோக்கெல்லாம் பொதுவாக பெண்களுக்குக் கிடையாது. அவர்களை கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாலோ என்னவோ அவர்கள் அப்படித்தான் தெரிகிறார்கள், இருக்கிறார்கள். தாய் என்பவள்கூட தன் பிள்ளைகள் என்கிற சுயநலத்தால்தான் தியாகிபோல் தோன்றுவாள் என்று விவாதிக்கலாம். பெண்களிடம் ஆண்கள் அளவுக்கு பெரியமனதோ, பரந்த மனமோ பொதுவாகக் கிடையாது! பெண்கள் விளைவுகளை யோசிக்காமல் தவறுகள் செய்வதுண்டு. கவனக்குறைவாக இருப்பதுண்டு. தத்துவங்கள் எல்லாம் பெண்ணுக்கு பொதுவாகப் பிடிக்காது! ஆனால் மன உறுதி என்பது பெண்களுக்கு ஆண்களை விட பல மடங்கு அதிகம். பெண் என்பவள் பொதுவாக மிருக இச்சையான காமம், மற்றும் காதல் உணர்வுகளை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெல்லத்தெரிந்தவள். பெண்களிடம் இதுபோல் பலஹீனம் அதிகம் கிடையாது. உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்து அவ்வளவு சீக்கிரம் தன்னை தன் உயர்ந்த தரத்தை கீழே கொண்டு போய்விடமாட்டாள். கூட்டி, கழிச்சுப்பார்த்தால் ஆணும், பெண்ணும் சமம்தான் ஆனால் வேறு வேறு என்பதை மறுக்கவோ மாற்றவோ முடியாது.

இதெல்லாம் இப்போ எதுக்கு? புவனா ஒருகேள்விக்குறி படத்தைப்பார்த்ததால் இதையெல்லாம் யோசிக்கச்சொல்லுது! இப்படியெல்லாம் பேசச்சொல்லுது! சரி இப்போ பட விமர்சனத்தை பார்ப்போம்!

புவனா ஒரு கேள்விக்குறி!

இந்தப்படம் எஸ் பி முத்துராமன் படம்.

எந்த எஸ் பி எம்?

ஆமா, பின்னால் பாயும் புலி, சகலகலாவல்லவன் போன்ற கமர்ஷியல் குப்பைகளை டைரெக்ட் செய்த அதே எஸ் பி எம் தான்! பாலசந்தர், ஒரு திறமைமிக்க டைரக்டர் என்றாலும் அவர் படங்களில் பொதுவாக நாடகபாணி இருக்கும். ஆனால் எஸ் பி எம் மின் இந்தப்படத்தில் அந்த நாடக பாணிகூட இருக்காது. நல்ல திரைக்கதை ஓட்டம். அபாரமான வசனங்கள்!

ரஜினியும் எஸ் பி எம் மும் முதன் முதலில் இணைந்த படம் இதுனுகூட சொல்லலாம். எஸ் பி எம் உடைய முதல்ப்படம்னு கூட இதைச் சொல்லலாம்! முதல் படமா என்னனு உறுதியா எனக்குத் தெரியலை.

சிவகுமார், ரஜினிகாந்த், சுமித்ராவை வைத்து எடுத்த ஒரு காவியம் இது! நடிப்பில் யாரையும் எந்த வகையிலும் குறை சொல்லமுடியாது.

என்ன கதை? ரஜினியும் சிவக்குமாரும் நண்பர்கள்! ரெண்டுபேரும் அனாதைகள்! இவர்கள் வாழ்வது நாகர்கோயிலில். இருவரும் எதிரும் புதிருமான கேரக்டர்களாக இருந்தாலும் நல்ல நண்பர்கள்! வாழ்க்கையை வாழ விரும்பும் விதம் வேற வேற மாதிரி! இருவருக்கும் தொழில் என்னனா சிறிய அளவில் ஜவுளி வியாபாரம். ரெடிமேட் துணிகள் தெருவில்விற்று சம்பாரித்து வாழக்கையை ஓட்டும் வாலிப ஏழைகள்.ஒரு முதலாளியிடம் ஜவுளி எடுத்து சந்தையில், மற்றும் பொது இடங்களில் விற்பது.

ரஜினி பெயர் சம்பத்! சம்பத் என்றால் உதவி னு ஒரு அர்த்தம் உண்டா? சம்பத் ஒரு அனாதை, ரொம்ப நல்லவன். நல்லவன்னா? நல்ல மனசு! அப்படினா? அளவுக்கு மீறி ஆசை கிடையாது. யாரையும் ஏமாற்றத்தெரியாது. ஏமாற்றிப்பிழைப்பதில் திருப்தி இல்லை. பொழைக்கத்தெரியாத பிள்ளை என்று சொல்லலாம். பாலிடிக்ஸ் பண்ணத்தெரியாது. கடவுள் நம்பிக்கை உண்டு. அன்பு பாசம், தியாகம் என்று உருகும் வகை. சம்பத்துக்கு ராஜி என்கிற அழகான காதலி. அவள் அருகில் இருக்கும்போது அவளுடனும், அவள் இல்லாத நேரம் அவள் நினைவுகளுடனும், கனவிலும் வாழ்கிறான், சம்பத். அழகான வாழக்கைதான் ஆனால்..!நல்லவனா இருந்தா நல்லா வாழ்ந்து விடலாமா என்ன? அவ்வளவு எளிதானதா மனித வாழ்க்கை?

ரஜினிக்கு ஜோடி மீரா (ஜெயா?). இவர்களுக்கு ஒரு நல்ல டூயட், * விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது என்கிற பாடல்.

ஆனா சம்பத்க்கு ஒரு பெரிய பலஹீனம் உண்டு. அவன் கொஞ்சம் குடிப்பான். புகை பிடிப்பான்! தன் உடலை கெடுப்பதால் மற்றவர்களுக்கு என்ன தீங்கு? என்று நினைப்பானோ எனன்வோ.

சிவகுமார் பெயர் நாகராஜன்! சம்பத்துக்கு நேர் எதிர் குணாதிசீனங்கள் உள்ளவன். நாகராஜும் ஒரு அனாதைதான். ஆனால் அவனுக்கு மன தைரியம் அதிகம், கடுமையாக உழைப்பவன். Very motivated. Very determined. நாகராஜ் knows how to do business. He knows the psychology of customers. He does not mind lying to sell his products. He is very practical and very very shrewd. His conscience is different from Sampath's. Nagaraj does not believe in love. Unlike Sampath he has not fallen in love with any girl. He is very practical than foolish and he is not philosophical like sampath. நாகராஜிடன் கெட்ட பழக்கங்கள் கிடையாது. குடிக்க மாட்டான். புகைபிடிப்பதும் கிடையாது. ஆனால் இளம் பெண்களை மயக்கி அவர்களை வஞ்சித்து உடலுறவு வைத்துக்கொண்டு பிறகு கழட்டிவிட்டுவிடுவான். சம்பத்தை பொறுத்த வரையில் இது காதல் அல்ல! அந்தப்பெண்கள் காமத்துக்காகத்தான் அவனை விரும்புகிறார்கள். இருவருக்கும் கிடைத்தது சுகம். இதில் என்ன தப்பு? அப்படியே அவர்களுக்கு கரு உண்டானால் அவர்களை ஒரு டாக்டரிடம் கூட்டி சென்று “அபார்ஷன்” செய்துவிடுவான். இந்த வீக்னெஸை தவிர்த்தால் நாகராஜ் சம்பத்தைவிட 10 மடங்கு அதிகமாக உழைப்பவன் சம்பாரிப்பவன் by cook or crook he know how to do successful business.

சீக்கிரமே அழகாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பத்தின் வாழ்க்கையில் இடி விழுந்துவிடும்! காதலி எதிர்பாராத வகையில் ஒரு விபத்தில் அவன் கண்முன்னே மரணமடைகிறாள். கவலையில் சம்பத் சாப்பிடாமல் இருப்பான். நண்பன் நாகராஜ்தான் வனை கவனித்துக்கொள்வான். சம்பத் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து சாகப்போவான். நாகராஜ்தான் காப்பாற்றுவான். இனிமேல் தற்கொலை செய்யாதே என்று சத்தியம் வாங்கிக்குவான். சம்பத் மேல் உண்மையிலேயே பிரியமாக, கனிவுடன் இருப்பான் நாகராஜ்.

காதலி மறைவுக்குப்பின் சம்பத் முன்பைவிட அதிகமாக குடித்துக்கொண்டே அவள் நினைவில் வாழுவான்! ஒரு மாதிரி அல்கஹாலிக் போல ஆகிவிடுவான்! நண்பன் நாகராஜ் அவனுக்கு ஆறுதல் சொல்வதுடன் அவனை நல்லா பார்த்துக்குவான். ஆனால் சம்பத்க்கு நாக்ராஜ் தவிர வேறெதுவும் உறவு இருக்காது.

ஒருநாள் இருவரும் சென்னைக்கு ரயிலில் போவார்கள் ஒரு பெரிய வியாபார நோக்கோடு. ஆனால் அத்ற்கு தேவையான பணம் இருக்காது. இருந்தாலும் முயன்று பார்ப்போம் என்று சென்னை போவார்கள். அப்போ அவர்களுடன் அதே பெட்டியில் இன்னொருவர் வருவார். அது ஒய் ஜி மஹேந்திரன். அவர் பெட்டி நிறைய பணம் வைத்திருப்பார். விழுப்புரத்தில் தண்ணி குடிக்க வெளியே இறங்கிப்போன அவர் ஹார்ட் அட்டாக்கில் ப்ளாட்ஃபார்மிலேயே இறந்துவிடுவார். அவருடைய அந்தப்பணப்பெட்டியில் உள்ள பணத்தை நாகராஜ் எடுத்துக்கொள்வான். சம்பத் நண்பனுக்காக ஒத்து ஊதுவான். போலிஸ் விசாரிக்கும்போது நாகராஜ் மற்றும் சம்பத் பொய் சொல்லிவிடுவார்கள்.

அந்தப்பணமும் கருப்புப்பணம் என்பதால் அதன் சொந்தக்காரர்கள் அதைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால், புவனா (சுமித்ரா), அண்ணன்கூட ட்ராவெல் செய்த பிரயாணிகளை கண்டுபிடித்து இதைப்பற்றி விசாரிக்க வருவாள். வரும்போது அங்கே இருந்த இறந்த அண்ணன் கொண்டு சென்ற சூட்கேசை பார்ப்பாள். அதைப்பற்றி விசாரிப்பாள். ஆனால் அதில் பணம் இருக்காது. நாகராஜ் ஏதோ சொல்லி மழுப்பிவிடுவான். ஆனால் புவனா சந்தேகப்படுவது தெரிந்து, அவளுடன் வேணும்னே பழகுவான், நாகராஜ். அவள் நாகராஜை நம்பி அவனை காதலிப்பாள். நாகராஜ் அவளை காதலிப்பதுபோல் நடிப்பான்.

இவர்களுக்கு ஒரு டூயட் வரும். * பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும்பாடிவா பாடிவா..

நாகராஜ் அவளையும் கெடுத்து, வயிற்றில் குழந்தை உண்டாக்கிவிடுவான். ஆனா புவனா பிடிவாதக்காரி. நாகராஜை கல்யாணம் பண்ண சொல்லுவாள். நாகராஜ் அவளை அபார்ஷன் பண்ண சொல்லுவான். அவள் முடியாது என்பாள் அடித்து. இந்த நேரத்தில் நாகராஜ் அந்த திருடிய பணத்தை வைத்து பெரிய ஜவுளிக்கடை ஆரம்பிப்பான். பெரிய பணக்காரன் ஆகிவிடுவான் நாகராஜ். புவனா ஒரு ஏழை என்பதால் அவளை மணப்பதென்பது நாகராஜை பொறுத்தவரையில் சாண்சே இல்லை.

நாகராஜ், திறமை வளர்ச்சியை பார்த்த அவனுடைய பழைய முதலாளி (சுருளிராஜன்) அவனுக்கு தன் பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடு செய்வான். நாகராஜ் உடனே சரி என்பான். இப்போ புவனாவை எப்படி கழட்டிவிடுவது என்று நாகராஜ் யோசிப்பான். சம்பத்திடம் பேசுவான். அப்போது, அவள் நாகராஜ் முன்னேற்றத்துக்கு தடையா இருந்தால் அவளை கொலை கூட செய்ய தயாராக இருக்கிறான் தன் நான்பன் நாகராஜ், என்று சம்பத் புரிந்துகொள்வான். சம்பத், இவன் எது வேணா செய்வான் என்று பயந்துவிடுவான். இந்த நிலைமையில் சம்பத், ஒரு ப்ளானுடன் புவனா வீட்டிற்கு சென்று அந்த குழந்தைக்கு தாந்தான் அப்பா, புவனாவை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்பான். புவனா வீட்டில் யாரு புவனா குழந்தைக்கு அப்பா என்று தெரியாமல் இருப்பார்கள். நாகராஜை அவர்களுக்கு சுத்தமாக தெரியாது. அதானல் சம்பத் தான் அப்பா என்று நம்பிவிடுவார்கள். ஆனால் புவனா எதிர்ப்பாள். பிறகு சம்பத் அவளிடம் உள்ள நிலைமையையும் நாகராஜ் கொலைகூட செய்வான் என்றும், தான் "பேருக்கு" "ஊருக்குத்தான்" புருஷன் என்று விளக்கிய பிறகு புவனா வேறுவழியில்லாமல் சரி என்பாள். நாகராஜ் தன் ஆசைப்படி அந்த பணக்கார பெண்ணை (ஜெயா?) கல்யாணம் செய்வான். சம்பத் புவனாவை கல்யாணம் செய்துக்குவான். ஆனால் புவனாவுக்கும் அவனுக்கும் உடலளவில் எதுவும் உறவு இருக்காது.

எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா? அதெப்படி முடியும்? அடுத்த பகுதியில் மிகுதி!

Wednesday, June 3, 2009

அடங்காத காளை ஒண்ணு அடிமாடானது!

"என்ன மோகன் என்னைக்கு வந்தீங்க இந்தியாவுக்கு? என்று விசாரித்தார் அவனுடைய பி எஸ் ஸி க்ளாஸ்மேட் ராஜாராம்.

"நேற்றுத்தான்" என்றான் கனிவாக.

"மனைவி, மகன் எல்லாம் வரலையா?"

"இல்லை" என்று அதோட முடித்துவிட்டான்.

மோகனுக்கும் அவன் மனைவி வித்யாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவன் மகன், விக்ரம், அம்மாவுடன் போய்விட்டான். அவனுக்கு 17 வயது ஆகிறது. ஹைஸ்கூல் முடித்துவிட்டான். கடந்த ஒரு ஆண்டு சில மாதங்களாக வாழ்க்கையை அவனுக்காக தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான் மோகன்.

மோகன் ஒரு நாள் உட்கார்ந்து தன் வாழ்க்கையைப்பற்றி யோசித்தான். கடந்த 50 வருட வாழ்க்கையில் எப்போ அவனுக்கு சுதந்திரம் இருந்தது? பள்ளியில் சந்தோஷமாக இருந்தான், பிறகு, கல்லூரியில். ஆனால் கல்யாணம் ஆனதிலிருந்து அவனுடைய ஒவ்வொரு சுதந்திரமும் பறிபோனது. புகை பிடிப்பதை நிறுத்தினான், குடிப்பதை நிறுத்தினான், நல்ல நண்பர்களையும் குறைத்தான். மனைவி, குழந்தை, குடும்பம், இதுதான் வாழ்க்கை என்று போனது. ஒரு சினிமா பார்ப்பதில்லை, ஒரு டிவி ஷோகூட பார்க்க முடியவில்லை. எதுவுமே அவனுக்கென்று செய்ய முடியவில்லை! தான் சம்பாரித்த பணமெல்லாம் அவன் மனைவியும் மகனும் இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். வர வர வீட்டில் அவன் ஒரு ட்ரைவர் போல ஆனான். அவன் குரலுக்கு எந்த மதிப்பும் அந்த வீட்டில் இல்லை. வீட்டில் அதிகமாக சம்பாரிப்பது அவன். குறைய தனக்கென்று செலவழிப்பதும் அவன் தான். தன் மகன் படிப்புக்காக எல்லா பணத்தையும் செலவழித்தான், சேமிப்பில் போட்டு வைத்தான். தனக்கு என்று ஓய்வு காலத்தில் வாழக்கூட போதுமான பணம் போட்டு வைக்கவில்லை அவன். பிச்சை எடுக்க வேண்டியதுதான் வயதான காலத்தில்.

எதுக்காக சம்பாரிக்கிறோம்? யாருக்காக வாழ்கிறோம்? என்ன வாழ்க்கை? என்கிற விரக்தி வந்தது அவனுக்கு. மகன், மனைவி என்பதே சொந்தம்போல் தோனவில்லை அவனுக்கு. மேலும் இந்த தன் குடும்ப வாழ்க்கையால் அவனால் தன்னை பெற்ற தாய் தந்தையர்களுக்கும் தைரியமாக உதவ முடியவில்லை. போய் நிம்மதியாக அவர்களிடம் பேச முடியவில்லை, ஆறுதல் சொல்ல முடியவில்லை. இந்தியா வரும்போதுகூட மனைவி ராஜியம்தான்! மகன் மனைவி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான் . அப்போதுதானே ஒரு நல்ல குடும்பத்தலைவன் என்று சொல்வார்கள்? என்னதான் அவன் குடும்பத்திற்காக தியாகம் செய்தாலும் அவனை அவன் மனைவி ஆயிரம் குறை சொல்லத் தயங்கவில்லை.

யோசிக்க யோசிக்க இப்படி வாழ்வதற்கு பேசாமல் போய் சேர்ந்தால் என்ன? என்று தோன்றியது மோகனுக்கு.

தன் அம்மா அப்பாவுக்கு எதுவும் செய்யனும் என்றால் பயந்துகொண்டு செய்யும் நிலைமை போல் ஆனது. அதை அடியோடு வெறுத்தான் மோகன். எல்லாமே ஏதோ போலி வாழ்க்கைபோல வாழ்க்கை தோன்றியது. வாழ்க்கையில் எந்த விதமான இனிப்பும் இல்லை அவனுக்கு.

அமெரிக்காவில் பிறந்த அவன் மகனோ, தான் வெறுத்த அமெரிக்க கலாச்சாரத்தின் மொத்த முழு உருவமாக இருந்தான். தன் மகனிடம் உள்ள இதே குணங்களை அமெரிகர்களிடம் பார்த்து வெறுத்து இருக்கிறான். இன்று அதேபோல் தான் இருக்கிறான் அவன் மகன். அப்போ அவன் மகனையும் அதே அளவு தான் வெறுக்கனுமா என்ற கேள்வி வந்தது மோகனுக்கு? ஆக மொத்ததில் நன்றிகெட்ட மனைவி! நன்றினா என்னனு கேட்கிற மகன். இவன் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குடும்பத்தலைவன்!

ஒரு நாள் புதிதாக லைசெண்ஸ் வாங்கிய அவன் மகன் விக்ரம், எப்போதும்போல அது இல்லை, இது இல்லை, என்பதுடன் எனக்கு புது Sports car வேணும் என்றான். அதன் விலை $30,000.

"நீ சம்பாரிதித்து வாங்கு! என்னால் அவ்வளவு பணம் உனக்கு செலவழிக்க முடியாது!" என்றான் மோகன்.

"ஏன் நீங்க வாங்கி தந்தால் என்ன?" என்றாள் வீட்டில் ராஜியம் நடத்தும் மனைவி வழக்கம்போல. அவள் எதிலும் தோல்வியே அடைந்ததில்லை.

"அப்போ நீ சம்பாரித்து வாங்கிக்கொடு" என்றான்.

"என்ன சொல்றீங்க?!" என்றாள் எரிச்சலுடன்.

"நான் தமிழ்லதானே சொன்னேன்?" என்றான் மோகன்.

"அப்போ அவனுக்கு கார் வேண்டியதில்லையா?. நீங்க வாங்கி கொடுக்க போவதில்லையா?"

"ஒரு புது ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிக்கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அது தேவையும் இல்லை. ஒரு பழைய கார் $2000 வாங்கி இப்போதைக்கு ஓட்டட்டும். அவன் சம்பாரிக்கும்போது அவன் காசு போட்டு பின்னால் ஒரு லெக்ஸஸ், இல்லைனா ஒரு மெர்சிடெஸ் கன்வேர்ட்டிபிள் வாங்கிக்கொள்ளட்டும்" என்றான் மோகன்.

அவன் சொல்வதையெல்லாம் அந்த வீட்டில் யாரும் மதிப்பதில்லை! வழக்கம்போல அவன் மனைவி மோகன் சொல்வதை கேட்காமல் மகனுடன் கார் டீலரிடம் சென்றாள். அந்த நேரத்தில் மோகன் ஒரு லாயரைப்போய் பார்த்தான். ஆனால் இந்த முறை வெற்றி கிடையாது என்பது தெரியாது பாவம் அவளுக்கு.

புது காருடன் மனைவியும் அவன் மகனும் வரும்போது, டைவோர்ஸ் நோட்டிஸை அவன் மனைவியிடம் கொடுத்தான், மோகன்.

"எனக்கு இந்த கார் வேணாம் அப்பா" என்றான் மகன்.

"I am really tired of my family. I want to live alone for a while" என்றான் மோகன் நிதானமாக.

அவன் மனைவி அழுதாள், சாவேன் என்றாள். அது இதுனு பேசினாள். அதற்கெல்லாம் மோகன் இந்தமுறை மசியவில்லை. டைவோர்ஸ் பண்ணி முடித்துவிட்டான் குடும்ப வாழ்க்கையை.

நல்ல ஏரியாவில் அரை மில்லியன் மதிப்புள்ள வீட்டை மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு, தனி அப்பார்ட்மெண்ட் ல ரொம்ப மோசமான ஏரியாவில் குறைந்த செலவில் வாழ்ந்தான் விவாகரத்துக்குப் பிறகு, ஆனால் நிம்மதியாக!

ஒரு சில நண்பர்கள், டி வி, வேலை என்று பொழுது போனது. அவனுக்காக மட்டும் வாழ்ந்தான் மோகன். குடுமபத்திற்கு போதுமான அளவு தியாகம் செய்தாகிவிட்டது! வேலையில் அதிக நேரம் செலவழித்து ப்ரமோஷன் கிடைத்தது. தான் சம்பாரிக்கும் பணத்தில் பாதி மனைவி குழந்தைக்குப்போனாலும், மீதி இருப்பதே பெரிய தொகையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு மன நிம்மதி இருந்தது. எல்லா முடிவும் அவனே எடுக்க முடிந்தது. தன் தவறுக்கு தான் பொறுப்பேற்க அவன் என்றுமே தயங்கியது இல்லை!

இப்போ இந்தியா வர ஒரு மாதம் அவனுக்கு லீவ் கிடைத்தது. வசதி என்ன என்றால், மனைவிக்கு லீவ் இருக்கா, மகனுக்கு லீவ் இருக்கா என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியா வந்தான், தன் ஊருக்கு வந்தான், வந்து அவன் வயதான அம்மா அப்பாவிடம் நிறைய விசயங்கள் பேசினான், நிறைய நேரம் செலவழித்தான். அவர்களுடன் செலவழிக்கும் இந்த நேரம் மிகவும் அர்த்தமானதாக இருந்தது. பழைய நண்பர்களை பார்த்தான். தான் படித்த பள்ளி, போய் வந்த இடங்களுக்கு சென்று வந்தான்.

கடந்த 30 வருடமாக அவனுக்கு இந்த சுதந்திரம் பறிபோய் இருந்தது. அவனுக்கு இந்த வாழ்க்கை ரொம்பவே பிடித்தது. மனைவி குழந்தை என்று தியாகியாக வாழ்ந்து, என்னதான் செய்தாலும் கடசியில் கெட்ட பெயரு வாங்கி கட்டிக்கொள்வதைவிட இது அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருந்தது அவனுக்கு.

Tuesday, June 2, 2009

கோழைகள் எல்லாம் துரோகிகளா?

சாதாரண மனிதர்கள் கோழையாக இருப்பது இயற்கை! கோழைகளை பல நேரங்களில் நாம் துரோகிப் பட்டம் கொடுத்து கீழே அமர்த்திவிடுகிறோம். கோழைகள் பலவகை! நம்மில் பல கோழைகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுடந்தான். இன்றும், இப்பொழுதும்தான்!

1) ஒரு வியாபாரியிடம் வந்து ஒரு ரெளடி நல்ல வியாபரம் நடந்துக் னொண்டிருக்கும்போது மிரட்டுகிறான். எனக்கு இப்போ தண்ணியடிக்க 200 ரூபாய் கொடு என்று. இவன் கலாட்டாவால் கடைக்கு வந்த கஸ்டமர் எல்லாம் பயந்து நடுங்குகிறார்கள்.


* அந்த கடைக்காரன் போலிஸை கூப்பிட்டு அவர்களுக்கு ஒரு ரூ 500 லஞ்சம் கொடுத்து, ரெளடியை ஜெயிலில் தள்ளலாம். ஆனால் அதோடு இது முடியாது.

* அதைவிடுத்து, அந்தக்கடைக்காரர் இன்னொரு ரெளடி கும்பளை ரூ 300 செலவழித்து "ஹயர்" பண்ணி அவனை சமாளிக்கலாம். ஆனால் அதுவும் அதோட முடியாது.

* ஆனால் அதையும் விடுத்து, நான் ஒரு வியாபாரி. ஏன் என் பொழைப்புல மண்ணள்ளி போடற என்று அவனிடம் கெஞ்சும் தொணியில் பேசி 100 அல்லது 200 ரூபாய் கொடுத்து அனுப்பி விடுவது படு கோழைத்தனம்தான். அந்த ரெளடி திரும்பவும் நாளை வரலாம். ஆனால் அதைத்தான் பொதுவாக செய்கிறான் ஒரு வியாபாரி. இதுவும் இதோட முடிவதில்லை. பொதுவாக பல வியாபாரிகள் கோழையாக்த்தான் வாழ்கிறார்கள்.


2) அதுபோல் தமிழ் ஈழத்திற்காக புலிப்படை போராடுவது நியாயம்தான். ஆனால் போராட்டம்னு வந்தால் உயிர் சேதம் வரும். என் மனைவி மகள் மற்றும் தங்கைகள் கற்பு சூரையாடப்படலாம். நான் ஒரு கோழை! என்னால் அதுபோல் விளைவுகளை தாங்க முடியாது. இலங்கையில் சிங்களவர்கள் செய்யும் அநியாயத்திற்கு கடவுள் இவர்களை தண்டிப்பான். கடவுள் நிச்சயம் இருக்கான். அநியாயம் செய்பவர்களை அவன் இன்று அல்லது நின்று கேட்பான் என்று போராடாமல், புலிகள் கொள்கைக்கு ஆதரவு கொடுக்காமல் பயந்து திரியும் கோழைத் தமிழர்களும் நிச்சயம் உண்டு. மனதைரியம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

* அதுபோல் பயந்து கோழையாக இருக்கும் தமிழர்களுக்கு, துரோகிப்பட்டம் சூட்டுவது சரியா?

* இதுபோல் கோழைகள் பரிதாபத்துக்கு உரியவர்கள் இல்லையா?

* இல்லை இதுபோல் கோழைகளும் துரோகிகள்தானா?


3) ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதாற காதலிக்கிறான். ஆனால் அந்தக் காதலில் பல சிக்கல்கள். அவனுடைய சந்தர்ப்ப சூழ்நிலையில் இது நிச்சயம் சரிப்பட்டு வராது என்று தெளிவாகத் தெரியுது. ஆனால் அவனால் காதலிக்காமலும் இருக்க முடியவில்லை. அவள் அவனை அன்பால் குளிப்பாட்டுகிறாள். He could not resist. The emotions take over. நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது. ஒரு முடிவுக்கு வந்தே ஆகனும்னு நிலைமை வரும்போது, அவன், உலகம் சந்தர்ப்ப சூழ்நிலை இவைகளுக்கு பயந்து ஒரு கோழையாகிறான். இதுபோல் கோழைகள் சினிமாவில் மட்டுமல்ல, நமது கலாச்சாரத்தில் பல லட்சம், பல கோடிகள் இன்றும் வாழ்கிறார்கள்.

அதனால் கோழை என்பவன் மனிதர்களில் அசாதாரணம் அல்ல என்பதை நாம் உணருகிறோமா? அதை நாம் ஏற்றுக்கொள்ளனும்! கோழைகளுக்கு எல்லாம் தூரோகிப்பட்டம் சூட்டுவது தவறு இல்லையா?

Monday, June 1, 2009

இலங்கை தமிழரில் இன்னொரு வகை!

இலங்கையில் தமிழீழப் போராட்டமும், இனப்படுகொலையும் ஒரு புறமிருக்க, ஒரு சில தமிழர்கள் இந்த சண்டை ஒரு முடிவுக்கு வந்ததைப் பார்த்து மனதாற சந்தோஷப்படுகிறார்கள்.

எனக்குத்தெரிய இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர் ஒருவர், இன்றைய நிலையை,
"Sri Lanka _ One Country One Nation" என்று தன் மனதுக்குள் கொண்டாடுகிறார். பொதுவாக இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர்கள் தமிழ் ஈழம் மலர ஆசைப்படவே இல்லை!

தமிழீழப்பிரச்சினை பற்றிய ஞானத்தில் கற்றுக்குட்டி நான். அறிந்துகொள்ள கேட்கிறேன்!

அது ஏன் இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர்கள் மட்டும், தமிழீழத்தை வரவேற்கவில்லை?

சிங்களவரோடு அவர்களால் எப்படி சேர்ந்து வாழ முடிகிறது?

இந்த இனப்படுகொலையைப் பார்த்து அவர்கள் ஏன் கண்ணீர் சிந்தவில்லை? :(

இந்த நியாயமான தமிழீழப் "போராட்டத்தை' அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை?

மதத்தால் அவர்கள் வேறுபட்டாலும் மொழியால் அவர்களும் தமிழர்கள் தானே?

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. தாய் மொழி தமிழ். தயவு செய்து இந்த கேள்வி இந்த நேரம் நான் எழுப்பியதால் வீண் தனிநபர் தாக்கு வேண்டாம். நன்றி!