Wednesday, September 30, 2009

இருமலர்கள்- திரை விமர்சனம்


சிவாஜி - பத்மினி - கே ஆர் விஜயா நடித்த படம். இயக்கம்: எ சி திருலோகசந்தர் இசை: எம் எஸ் விஸ்வநாதன், பாடல்கள்: கண்ணதாசன். மறுபடியும் ஒரு முக்கோணக் காதல்தான். கே ஆர் விஜயா சிவாஜியின் அத்தை மகள். அவருக்கு அப்பா அம்மா கிடையாது, தாய் மாமாதான், சிவாஜியின் தந்தை (நாகையா) அவரை தன் வீட்டில் வளர்ப்பார். சிறுவயதிலிருந்து சிவாஜியுடன் வளர்ந்தவர். கல்லூரியில் சென்று படிக்கவில்லை. அத்தான் அத்தான் என்று சிவாஜி மேல் உயிராக இருப்பார். சிவாஜிக்கு அவள் காதல் புரியாது, அவரால் உணரமுடியாது. அவர் அன்பு புரியும்.

* 1) வெள்ளிமணி ஓசையிலே பாடல் கே ஆர் விஜயாவுக்கு

சிவாஜி, அவருடன் கல்லூரியில் படிக்கும் சகமாணவி பத்மினியை காதலிப்பார். இருவரும் உயிருக்கு உயிராக காதலிப்பார்கள்

* 2) மாதவிப் பொன்மயிலாய்

* 3) மன்னிக்க வேண்டுகிறேன்

இரண்டு பாடல்கள் இவர்களுக்கு வரும்.

ஆனால் இவர்கள் காதல் துரதிஷ்டவசமாக கல்யாணம் வரைக்கும் போகாது. பரீட்சை லீவுக்காக ஊருக்கு செல்கிற பத்மினி, என் அண்ணனிடம் பேசி கல்யாண சம்மதம் பெற்று கடிதம் எழுதுறேன் என்று ஊருக்குப்போவார். திடீர்னு தன் அண்ணனுக்கு நடக்கும் விபத்தால் எல்லாம் மாறிவிடும். அநாதையாகிய அண்ணன் குழந்தைகளை வளர்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை பத்மினிக்கு உருவாகும். தன் காதலை, காதலனை மறந்து ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து அண்ணன் குழந்தைகளை வளர்க்க வேண்டிய பெரிய பொறுப்பால், சிவாஜியை “டம்ப்” பண்ணியாக வேண்டிய நிலை. தான் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதாக பொய் சொல்லிக்கடிதம் எழுதிவிடுவார். ஆனால் அவர் கல்யாணமே செய்துகொள்ளாமல் கன்னியாக இருப்பார் அந்தக் குழந்தைகளுக்குத் தாயாக.

கே ஆர் விஜயா, சிவாஜி தன்னை மணக்க விரும்பவில்லை என்று தெரிந்ததும், அவர் மேல் கோபமோ, வெறுப்போ அடையாமல் தொடர்ந்து அவரை அன்போடும் பரிவோடும் இருப்பார்.

காதல் தோல்வியால் சிவாஜி தற்கொலை செய்யுமளவுக்கு போய்விடுவார். மனம் உடைந்து இருப்பார். இதற்கிடையில் கே ஆர் விஜயாவுக்கு சிவாஜியின் தந்தை நாகையா திருமணம் செய்துவைக்கப் பார்ப்பார். ஆனால் ஊர் உலகம் சிவாஜிக்கும் கே ஆர் விஜயாவுக்கும் ஏதோ உறவு இருப்பதுபோல் பேசும். சிவாஜி, கே ஆர் விஜயாவை மணம் முடித்துக்கொள்வார்.

வாழ்க்கைச் சக்கரம் ஓடும், இருவரும் 1 பெண் குழந்தைக்கு பெற்றோர்கள் ஆவார்கள். ஒரு 10 வருடம்போல போய்விடும். காதல் வாழ்க்கை, காதல் தோல்வியை மறந்து குடும்பம், மனைவி, குழந்தைனு சந்தோஷமாக இருப்பார்கள்

* 4) ஒரு மஹராஜா ஒரு மஹா ராணி இந்த இருவருக்கும் ஒரு குட்டிராணி பாடல்

சிவாஜி பத்மினியை மறந்து வாழ்ந்துகொண்டு இருக்கும்போது, மறுபடியும் பத்மினி அதே ஊருக்கு டீச்சராக வருவார். சிவாஜியின் மகளுக்கே டீச்சராக இருப்பார். இருவரும் எதிரும் புதிருமாக சந்திப்பார்கள்.

சிவாஜி, பத்மினி அவருக்கு துரோகம் செய்துவிட்டதாக நம்புவார். பத்மினியை பார்த்த்திலிருந்து சிவாஜி- கே ஆர் விஜயா உறவில் பிரச்சினை வரும்.

கே ஆர் விஜயாவும் பத்மினியும் தோழிகள் போல பழகுவார்கள். ஆனால் கே ஆர் விஜயாவுக்கு பத்மினியின் கடந்த காலம் மற்றும் அவர் சிவாஜியின் பழைய காதலி என்கிற உண்மை தெரியாது. பத்மினியுடன் கே ஆர் விஜயா தோழிபோல பழகுவார். தன் கணவனுக்கும் தனக்கும் பிரச்சினை வருது. என்னனு தெரியலை என்பார். பத்மினிக்கு விபரம் நல்லாப் புரியும்.

ஒருமுறை சிவாஜியும் பத்மினியும் சிவாஜி குழந்தையுடன் சந்திப்பார்கள். அந்த சந்திப்பை சிவாஜி கே ஆர் விஜயாவிடம் மறைப்பார். அதை அறிந்த் குழந்தை அப்பா பொய் சொல்லுகிறார்னு அவர் மேல் பயங்கர கோபமும் எரிச்சலும் கொள்ளும். அதனால் குழப்பத்திற்கு மேல் குழப்பமாகும் .

இந்த சூழ்நிலையில்

“ 5) கடவுள் தந்த இருமலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே (கே ஆர் விஜயா)
ஒன்று பாதை ஓரத்திலே (பத்மினி)

பாடல் வரும்! பத்மினியும் கே ஆர் விஜயாவும் பாடுவார்கள்.

அருமையான பாடல்! பத்மினி நிலைமையை நினைத்தால் அழுகை வந்துவிடும். கடைசியில், சிவாஜிக்கு உண்மை தெரியும். பத்மினி கல்யாணம் செய்யாமல் தன் அண்ணன் குழந்தைகளுக்காகத்தான் இப்படி செய்தார் என்று.

* 6) மன்னிக்க வேண்டுகிறேன் (சோகப் பாடல் வரும்)

அந்த சூழ்நிலையில் சிவாஜியிடம், கே ஆர் விஜயாவுடன் தான் தொடர்ந்து வாழனும்னு சொல்லிவிட்டு அந்த அண்ணன் குழந்தைகளுடன் பத்மினி அந்த ஊரைவிட்டே போய்விடுவார்.

It is really a beautiful movie but very sad movie. It made me cry when I was watching it.

ஷங்கர் vs கே. பாலசந்தர்! & சாருவின் அறிவுரைகள்!

நம்ம சாருநிவேதிதா என்ன சொல்லி இருக்கார்னா, கமலஹாசன் இயக்குனர் ஷங்கர் போல தமிழ் சினிமாவை உலக சினிமாவா மாத்தி இருக்கனும். இல்லை இல்லை, ஷங்கர் போல பெரிய குப்பைப்படங்கள் எடுக்கக் கூடாது. அவர் போல படங்கள் தயாரித்து சாதித்து இருக்கனும்! அப்படித் தயாரித்து இருந்தால் கமல், தமிழ் சினிமா உலகை இன்னொரு லெவெல் மேலே தூக்கி இருப்பார்னு இவருக்கு ரொம்ப கவலையாம்!

ஷங்கர் தயாரித்த படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவை உலக சினிமாவா ஆக்கியிருச்சா என்ன? ஆமா உலக சினிமா பத்தி யாருக்குத் தெரியும்? ஒரே ஒரு ஆளைத் தவிர?

கலைஞர்கள் ஒவ்வொரும் விதம். பாலசந்தர் ஒருவிதம், ஷங்கர் ஒரு விதம், கமல் ஒரு விதம். ஒருவர் போல ஒருவர் செய்து இருக்கனும், படம் எடுக்கனும்னு சொல்றதெல்லாம் தேவையே இல்லாதது.

கமலுக்கு நேர் எதிர் உதாரணமாக, இயக்குநர் ஷங்கரை எடுத்துக் கொள்வோம். இவருடைய ஒரு படத்தைக் கூட நான் ரசித்ததில்லை. இவரது இயக்கத்தில் வந்த பாய்ஸ், அந்நியன், சிவாஜி போன்ற படங்களை நார்நாராய்க் கிழித்துத் தோரணமே கட்டியிருக்கிறேன். ஆனால் இதே ஷங்கர் வேறோர் விஷயத்திலும் ஈடுபட்டார். புதிய இயக்குனர்களை வைத்து குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரித்தார். அந்தப் படங்கள்தான் தமிழ் சினிமாவுக்கு இதுவரை இருந்த அடையாளத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது.

இது நடந்தது ஐம்பது ஆண்டுகளில் அல்ல; வெறும் ஆறே ஆண்டுகளில் ஆறே படங்களின் மூலம் இந்த மாற்றம் நடந்தது. இப்போது ஷங்கர் என்ற இயக்குனரையே பிடிக்காத நான் அவருடைய தயாரிப்பில் வரும் படங்களை ஓடிப் போய் பார்க்கிறேன். சமீபத்தில் கூட ஈரம் என்ற படத்தை முதல் நாள் முதல் காட்சியில் சென்று பார்த்தேன். தமிழில் அப்படி ஒரு படத்தை இதுவரை பார்த்ததில்லை. அந்த அளவுக்குப் புதிதாக இருந்தது ஈரம்.

-இந்தியா டுடே



இந்த எழுத்தாளர்கள் தொந்தரவு இருக்கே! யப்பா! இளையராஜாக்கு இசை தெரியாது, ஜெயமோஹனுக்கு கதை எழுதத்தெரியாது, கமல் ஒண்ணும் சாதிக்கலை இத்யாதி இத்யாதி!

ஆமா நீங்க என்னத்தை கிழிச்சீங்கனு கேட்டால் என்ன சொல்லுவீங்க? தமிழ் இலக்கியத்தை காம இலக்கியமா மாற்றி நாலு அரைவேக்காடுகளை சம்பாரிச்சு இருக்கேன்னு வேணா பெருமையா சொல்லலாம்!

ஷங்கருக்கு இப்படித்தான் டைரக்ட் பண்ணத்தெரியும். இப்படித்தான் படம் தயாரிக்கத்தெரியும்! ஏன்னா சங்கர் அப்படி! இப்படி நான் குப்பைகளை இயக்குவதால், இப்படி நல்ல படங்களை தயாரிச்சு என் பாவத்தை கழுவிக்கிறேன்னு ஷங்கர் சொல்லவில்லை!

நம்ம பாலசந்தர், தரமான படங்கள் இயக்கி எடுத்து வெளியிட்டார். ஆனால் அவர் தயாரிப்பைப் பொருத்தமட்டில் என்ன செய்தா? தரத்தைவிட வியாபார நோக்கம்தான் இருந்தது. ரஜினியை வைத்து எஸ் பி முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே எஸ் ரவிக்குமார், வாசு போன்றவர்களை வைத்து வியாபார நோக்கில்தான் படம் எடுத்தார். ஏன்னா பணம் இல்லைனா மனுஷன் பொணம்தான்! மற்றபடி தமிழ் சினிமாவை குப்பையாக்கனும்னா அவர் செய்தார்??

இப்போ ஷங்கரும் அதையேதான் சிறிய அளவில் செய்கிறார். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். ஆனால் ஷங்கர், தமிழ் சினிமாவை நான் வளைக்கிறேன், உலக சினிமாவா ஆக்குறேன் என்றெல்லாம் கதை விடல! இதுபோல் லோ-பட்ஜெட் படம் எடுத்து சம்பாரிக்கிறார்.

ஆமா கமலைப்பாராட்ட விசயமா இல்லை??? இவர் நடித்த

* களத்தூர் கண்ணம்மா

* 16 வய்தினிலே

* நாயகன்

* இந்தியன்

* உன்னைப் போல் ஒருவன்

போன்றவற்றில் அவர் நடிப்பை புகழ்ந்து அதிலுள்ள நல்லவிசயங்களை சொல்லிவிட்டு இருக்கலாம். கமல், உ போ ஒ வனில் மோகன்லாலை ஹீரோவாக்கி தன்னை பின் இருக்கையில் அமர்த்தியதே ஒரு பெரிய விசயம்தான்.

கமல், ஷங்கரைப்போல படம் எடுத்து இருக்கனும். கமல், விஜய் காந்த், ரஜினி காந்த் போல இருக்கக்கூடாது. ஆனா நான் மட்டும் தமிழ் இலக்கியத்தில் போர்னை கலந்து எல்லா அரைவேக்காடையும் முழுலூசா ஆக்குவேன்னு பேசுறதெல்லாம் நல்லாவா இருக்கு?

Tuesday, September 29, 2009

பின்னூட்டங்களா? இல்லை ஹிட்ஸா?!

ஒரு பதிவு போட்டதும், அதற்கு நெறைய ஹிட்ஸ் கிடைத்தால் அதிகமான பேர் அதை வாசித்ததாக சொல்லலாம். அல்லது என்னனு வந்து பார்த்தாங்கனு சொல்லலாம்.

ஆனால் ஒரு பதிவுக்கு அதிகமான பின்னூட்டம் வந்தால், ஒண்ணு அதில் பிரச்சினை அதிகமாக இருக்கனும். இல்லைனா நல்ல தரமான பதிவா இருக்கனும்.

ஹிட்ஸ் அதிகமாவருவதால் உங்க சைட்க்கு ட்ராஃபிக் அதிகமாக ஆகிறது.

பின்னூட்டம் அதிகமாக வந்தால் உங்களுக்கு ட்ராஃபிக்கிம் அதிகம் வரும், அதே சமயத்தில் கொஞ்சம் வேலையும் அதிகம்!

வேலை அதிகமா??? அதாவது ஒரு சில பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது ரொம்ப சேலஞ்சிங்கா இருக்கும். பதில் சொல்லவே முடியாத அளவுக்குக்கூட இருக்கும். அதனால்தானோ என்னவோ ஒரு சில பெரிய் எழுத்தாளர்கள் பின்னூட்டங்கலெல்லாம் அனுமதிப்பதில்லை!

உங்களுக்கு எது வேணும்?

ரெண்டும்னு சொல்லாதீங்க, ப்ளீஸ்!!!

* அதிக ஹிட்ஸா?

இல்லைனா

* அதிக பின்னூட்டங்களா?

Monday, September 28, 2009

தி மு க தொண்டர்கள் வெறுத்த "சிவாஜி" க்கு விருது!



சிவாஜி படத்தை எந்த ஒரு தி மு க தொண்டரும், தி மு க வுக்கு கொடிபிடிக்கும் வலையுலக சிங்கங்களும் பாராட்டவில்லை! சிவாஜி போல் ஒரு படம் வருவதால் தமிழர் சமுதாயமே சீரழிவதாக வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இன்று, தி மு க ஆட்சியில் நடக்கும் தமிழக அரசு சிவாஜிக்கு விருது வழங்கி அந்தப்படத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

* கருமை நிறத்தில் உள்ள அழகிகளை இழிவு படுத்திய படம் சிவாஜி

* இன்றைய அரசில் உள்ள ப்யூராக்ரஸியை ஏளனம் செய்த படம் சிவாஜி

இருந்தபோதிலும், அதை நல்ல முறையில் எடுத்துக்கொண்டு, திறந்தமனதுடன் தமிழக அரசு அதை தேர்ந்தெடுத்துள்ளதுனு அரசை பாராட்டவேண்டியதுதானா???

நம்ம அண்ணே அமீர், மாமு ஞாநி எல்லாம் சிவாஜியை கிழித்தறிந்ததெல்லாம் இப்போ ஞாபகம் வருது. ஆமா, மொழிக்கு ஏன்ப்பா முதல் விருது தரலை???


ஆனால் ஒண்ணு சிவாஜில தமிழர் முறைப்படி திருமணம் நடத்தி தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார்கள். அந்த ஒரே காரணத்திற்காகத்தான் இந்த விருதா? என்னவோ போங்கப்பா!

Sunday, September 27, 2009

கமலஹாசன் ஒரு இந்துமதப் பற்றாளரா?!!!

இந்தத் தலைப்புக் கேள்வியை வாசித்தாலே சிரிப்புத்தான் வருது. கமலஹாசனைப் பற்றி சமீபகாலமாக ஒரு தவறான கண்ணோட்டம் உருவாகியுள்ளது என்பதால் இந்தப்பதிவு. நான் கமல் ரசிகன் அல்ல.

விமர்சகர்கள் பலர் இத்தனை நாள் கண்டுக்காமல்விட்ட கமலை இன்று ரசிக்க ஆரம்பித்து உள்ளார்கள். விமர்சகர்கள், மற்றும் பத்திரிக்கை நடத்துபவர்கள் பொதுவாக இந்துமதத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் எடுக்கப்படும் படங்களை மேலே உயர்த்திவிடுவதை நீங்கள் பார்க்கலாம். நடிகர் கமலஹாசன், நாத்தீகக் கொள்கையுடன் இருப்ப(ந்த)தால், அவரை கொஞ்சம் இறக்கிக்கொண்டே வந்த இவர்கள் இப்போது இவர் நடித்து வெளிவந்த தசாவதாரம் மற்றும் உன்னைப்போல் ஒருவனை மேலே தூக்கிக் கொண்டாடுவதை கண்கூடாகக் காணலாம்.

தசாவதாரத்தால் நாத்தீகவாதிகள் மற்றும் பார்ப்பீனியத்தை பிடிக்காத பலர் இப்போது தாங்கள் பூஜித்துவந்த கமஹாசனுக்கு எதிராக கொடிபிடிக்க ஆரம்பித்து உள்ளார்கள். இதுபோதாதென்று உன்னைப்போல் ஒருவனை எந்த ஒரு இஸ்லாமியரும் ரசித்ததாகத் தோனவில்லை. உ போ ஒ க்கு அப்புறம் நாத்தீகர் மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களும் கமலுக்கு எதிராக கொடிபிடிக்கிறார்கள்.

பொதுவாக சாதி அடிப்படையில் ரசிகர்கள் இருப்பதில்லை. அப்படி இருந்திருந்தால் எம் ஜி ஆர், ரஜினி போன்றவர்க்கு தமிழ்நாட்டில் பெரிய ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் போயிருக்கும். பொதுவாக ரசிகர்கள் ஜாதி மதத்திற்கு அப்பார்பட்டவர்கள். ஆனால் ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை இழிவு படுத்துவதுபோல் ஒரு படம் எடுக்கும்போது அந்த மதம் சார்ந்த நம் மக்களிடம் பெரிய வெறுப்பு உண்டாவதை பார்க்கலாம். அதற்கு ஒரு பெரிய விளைவு அந்த மத மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது.

கமலஹாசன், உன்னைப்போல் ஒருவனில் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இதனால், அவரை பார்ப்பணர் என்றும் இஸ்லாமிய எதிரி என்றும் பலரும் இன்று அவரைக் குற்றம் சாட்டுகிறார்கள். நிச்சயம் இது இவர்களுடைய தவறான கண்ணோட்டம்தான்.

என்னைப்பொறுத்தவரையில், கமலஹாசன், இந்துமதப் பற்றாளரோ அல்லது கொள்கைகளால் அவர் பார்ப்பணரோ அல்லவே அல்ல! அவர் நிச்சயமாக ஒருபோதும் இஸ்லாமியர்களுக்கு எதிரி அல்ல. அவரிடம் பல குறைகள் இருக்கலாம், ஆனால் அவர் எந்த மதத்தவருக்கும் நிச்சயம் எதிரி அல்ல! நாத்தீகன், காலம் செல்லச் செல்ல ஆத்திகத்தில் நம்பிக்கை உள்ளவராக மாறலாம். ஆனால் முன்னால் நாத்திகன் என்றுமே ஒரு மதவாதியாக மாறமுடியாது என்று நம்புபவன் நான்.

கமலில் படங்களின் மூலம் அவருக்கு தேவையில்லாமல் வரும் அவதூறுகள் அவருடைய வியாபார நோக்கால் அல்லது கலை வெறியால் ஏற்பட்ட கவனக்குறைவால் வந்தவையேயொழிய அவரின் மதசார்புள்ள கொள்கை அல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

Friday, September 25, 2009

கில்ட்டி ப்ளெஷர்னா தெரியுமா? - கடலை கார்னர் (22)

“So, How was your weekend, Brindha?”

“It was fun, Stacy. I spent some time with Kannan!”

“WHAT?!

“We had dinner, watched a movie in his apartment”

“What kind of movie is that?”

“Tamil movie. I could not watch it as I was falling asleep”

“Jeez! You slept with him?”

“I slept beside him in his bed but don't worry, he is still a virgin. LOL”

“How that is possible?”

“I had couple of glasses of wine and had some pizza and sort of passed out and slept. Woke up only in the morning”

“You want me to believe this story?”

“I am honest, Stacy”

“May be he did do you while you were sleeping, LOL!”

“You think so? I kind of like that thought”

“LOL”


“Hey Girls!”

“Hi kaNNan! I hear Brindha warmed your bed during the weekend”

“She had couple of glasses of wine and ate pizza and fell sleep! And woke up only in the morning”

“You both tell the same story consistently”

“Cant you sleep like that, stacy?”

“Keep you in my bed and not doing anything? That is impossible. I know how to turn you on, unlike Brindha”

“Really? How?”

“I just know. I really love turning on guys”

“Teach me how, Stacy”

“I am kind of jealous of you, Brindha”

“Next time you can also join. LOL”

“Oh my God, you guys are really dirty!”

“Hey! I did not mean that. Just for dinner and movie, OK?”

“I will see you later, Kannan and Brindha. I have got to go now!”

“என்ன சொன்ன அவளிடம்?”

“ஒண்ணுமில்லையே. நீங்க ஒண்ணும் பண்ணலைனு உண்மையத்தான் சொன்னேன்”

“வேற என்ன சொன்ன?”

“நீங்க இன்னும் வெர்ஜின் தான் நு சொன்னேன்”

“அம்மாவோட சண்டே பேசினயா?”

“ஆமா, கண்ணன். நீங்க சண்டே என்ன பண்ணினீங்க?”

“சும்மா ஃபுட்பால் பார்த்தேன்”

“யாரோட?”

“மைக் வந்தான்”

“எனக்கு சண்டே ரொம்ப போர் அடிச்சது”

“ஏன் அம்மாவோட பேசின இல்லையா?”

“ஆமா. அவங்க பேசுறதை நீங்கதான் கேட்டு ரசிக்கனும்”

“அதுக்குள்ள அம்மா போர் அடிச்சுருச்சா?”

“வைன் குடிக்காம இருந்து இருக்கனும்”

“குடிக்காம இருந்து இருந்தால்”

“உங்களை ஒரு வழி பண்ணி இருப்பேன்”

“அது ஏன் ஆண்களை டேர்ன் ஆண் பண்ணுவதில் உங்களுக்கு அத்தனை இன்பம்?”

“It makes us feel good”

“Really?”

“நீங்க மட்டும் என்னை கிஸ் பண்ணி டேர்ன் ஆண் பண்ணலாமா?”

“தப்புத்தான்”

“தப்புனு தெரிந்தும் செய்வீங்களா?”

“கில்ட்டி ப்ளெஷர்னா தெரியுமா உனக்கு?”

“அதெல்லாம் தெரியாது. உங்களுக்கு நல்லா கிஸ் பண்ணத்தெரியுது”

“பண்ணி இருக்கக் கூடாதுதான்”

“ஏன்?”

“நீ கர்ப்பமாயிட்டேனா?”

“கிஸ் பண்ணிலாம் யாரும் கர்ப்பமாக மாட்டாங்க”

“அப்படித்தான் ஆரம்பிக்கும். அதோட நிக்காது”

“அடுத்து என்ன பண்ணத்தோனும்?”

“உனக்குத் தெரியாதா?”

“தெரியாது”

“சின்ன பாப்பா! உனக்கு ஒண்ணுமே தெரியாது. சரி வேலை இருக்கு, பிருந்தா. பார்க்கலாம்”

-தொடரும்

Thursday, September 24, 2009

உன்னைப்போல் ஒருவன் யு கே பாக்ஸ் ஆஃபிஸ் விபரம்

ஆங்கிலப்படங்களுக்கு இணையாக சில மேதைகள் ஆசைப்பட்டதுபோல பாட்டே இல்லாமல், உலகத்தரத்துடன், ஒரு நல்ல ப்ளாட்டுடன், குறைந்த ரன்னிங் நேரத்துடன் எடுத்த "உன்னைப் போல் ஒருவன்" யு கே பாக்ஸ் ஆபிஸில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு போகவில்லை என்பது உறுதியாகிவிட்டது.



UK Box Office: 18 - 20 September 2009

Weekend 18 September - 20 September 2009 UK box office

Rank Title Country of Origin Weekend Gross Distributor % change on last week Weeks on release Number of cinemas Site average Total Gross to date

1 Cloudy with a Chance of Meatballs USA £1,583,544 Sony Pictures 1 438 £3,615 £1,583,544

2 District 9 USA/NZ £810,673 Sony Pictures -32 3 453 £1,790 £6,380,720

3 Gamer USA £641,568 Entertainment 1 346 £1,854 £641,568

4 500 Days of Summer USA £511,055 20th Century Fox -12 3 324 £1,577 £3,346,233

5 The Final Destination USA £485,989 Entertainment -48 4 329 £1,477 £11,711,421

6 Dorian Gray UK £436,538 Momentum -51 2 349 £1,251 £1,783,112

7 Julie & Julia USA £389,717 Sony Pictures -28 2 357 £1,092 £1,455,646

8 Sorority Row USA £347,817 E1 Films -56 2 349 £997 £1,450,476

9 The Firm UK £310,060 Warner Bros 1 265 £1,170 £310,060

10 Away We Go USA £250,211 E1 Films 1 152 £1,646 £250,211

11 Inglourious Basterds USA/Ger £238,225 Universal -36 5 251 £949 £9,984,897

12 Aliens in the Attic USA/Can £192,160 20th Century Fox -28 6 425 £452 £6,256,601



13 Dil Bole Haddipa Ind £138,189 Yash Raj 1 34 £4,064 £138,189

14 Funny People USA £114,570 Universal -48 4 165 £694 £3,427,741

15 Adventureland USA £107,364 Disney -49 2 175 £614 £489,686



http://www.ukfilmcouncil.org.uk/15940?action=fullscreen




It did not make top 15 movies in the opening weekend. Even Kuselan did better than this!

கமலஹாசன் என்கிற வியாபாரி!

வரவர கமலஹாசன் பெரிய சினிமா வியாபாரியா மாறிக்கொண்டு வருகிறார். ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கிற நம் நாட்டில், மைனாரிட்டிக்கு எதிராக படம் எடுத்தால், மைனாரிட்டி எதையும் சாதிக்க முடியாது, மேலும், நம்ம க்ரிடிக்ஸ் எல்லாம் ஒருமாதிரி ஹிந்துக்களுக்கு ஆதரவா எடுத்தால்தான் படத்தை தூக்கிவிடுவார்கள் என்பதை சமீபகாலமாக புரிந்துகொண்டார்.

* தசாவதாரத்தில், சைவம்- வைணவம் என்பதை கிளறி எடுத்து, நம்பிராஜன் என்னும் மத வெறியனை பெரிய ஹீரோவாக்கி, தன் மதம் கலந்த சினிமா வியாபாரத்தில் வெற்றியடைந்தார்!

* இன்னைக்கு உன்னைப்போல் ஒருவனில் 12% இஸ்லாமியர்கள் உள்ள நம் நாட்டில், 75% பயங்கரவாதிகள் அவர்களில் இருப்பதுபோல 3:1 என்கிற பேரில், முஸ்லிம்: ஹிந்து என்று பயங்கரவாதிகளுக்கு மதச்சாயம் பூசி இருக்கிறார்.

"என்ன இப்படி செய்றீங்களே கமல்?" னு கேட்டால், அவர் என்ன சொல்லுவார்?

அன்பே சிவம் னுதானே நான் சொன்னேன்? அன்பே அல்லா அல்லது அன்பே ஜீசஸ்னு நான் சொல்லலயே. அங்கேயே புரியலையா என்று சிரிப்பார் கமலஹாசன்!

ஒரு வியாபாரி அவர் பொருளை எப்படி மதச்சாயமிட்டு வித்தால் விற்குமோ, அதற்கேற்றார்போல்தான் விற்பார். கமலும் ஒரு வியாபாரிதானே? அதைத்தான் செய்துள்ளார்.

Wednesday, September 23, 2009

ஆண்டவன் கட்டளை- திரை விமர்சனம்




சிவாஜி, கே சங்கர் இயக்கத்தில் நடித்த இன்னொரு படம் இது. பி எஸ் வீரப்பாவின் பி எஸ் வி பிக்ச்சர்ஸ், ஆலயமணி யின் வெற்றிக்குப் பிறகு அதே குழுவுடன் எடுத்த இரண்டாவது படம்.

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி, பாடல்கள்: கண்ணதாசன்.

சிவாஜி, தேவிகா, அசோகன், எ வி எம் ராஜன், புஷ்பலதா, சந்திரபாபு மற்றும் பலர் நடித்த படம்.

சிவாஜி, இந்தப்படத்தில் ஒரு ப்ரஃபெஸர்! பெயர், கிருஷ்ணன். மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடல். கட்டை பிரம்மச்சாரி. காதலால் வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை. காதலை அகற்றி வாழ வேண்டும் என்று வாழ்ந்துகொண்டு தன் மாணவர்களையும் வலியுறுத்தி வாழ்பவர். He is well known for his punctuality, honesty and he is an excellent teacher. எதுவரைக்கும்? ஒரு பெண் மேல் காதலில் விழும்வரை!

எ வி எம் ராஜன் ஒரு ஏழை புத்திசாலி மாணவன். சிவாஜி, அவர் நிலைமை தெரிந்து அவருக்கு தன் செலவில் எல்லா உதவிகளும் செய்வார். எல்லாம் ஒழுங்காகப்போகும்.

எ வி எம் ராஜன் - புஷ்பலதா ஜோடிக்கு ஒரு பாடல் உண்டு

* 1) கண்ணிரண்டும் மின்ன மின்ன - என்கிற பாடல்

சந்திர பாபுவும் சிட்டிபாபு என்கிற மாணவனாக நடித்து இருப்பார்,

* 2) சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது- என்கிற கண்ணதாசன் எழுதி இவர் பாடிய பாடலும் இதில் தான்

தேவிகா, சிவாஜியுடைய மாணவி. அழகானவள், கவர்ச்சியானவள். ஒரு நாள் லேடீஸ் ஹாஸ்டலில் எதையோ மாணவர்கள் பிரச்சினையை விசாரிக்கப் போவார். அப்போது தேவிகா ஒரு நாடக ஒத்திகை செய்து கொண்டு இருப்பார், தன் தோழியுடன். பேராசிரியர் போகும் நேரத்தில் பவர் போய்விடும். கவர்ச்சியும் அழகும் நிறைந்த தேவிகா இவரை கட்டி அணைத்து காதல் வசனம் பேசுவார். அதோட பேராசிரியர் கிருஷ்ணனுடைய பிரம்மச்சரியம் காலி!!

சிவாஜி காதலில் விழுவார். யாருடன்? தன்னைவிட வயதில் மிகவும் குறைந்த ஒரு மாணவி மேல்! தேவிகா இவரை ஒரு மாதிரி செட்யூஸ் பண்ணிவிடுவார்!

* 3) அழகே வா அருகே வா - பாடல் வரும்.

He will get involved with Devika (இவர் பெயர் ராதா னு நினைக்கிறேன்) very seriously. He cant live without her!

ஒருமுறை, எ வி எம் ராஜன் புஷ்பலதாவுடன் சுற்றுவதைப் பார்த்து, "நீ படிப்பில் கவனம் செலுத்தனும், இப்படி சுற்றலாமா?" என்பார் பேராசிரியர் கிருஷ்ணன். ஆனால், பின்னால் அதைவிட மோசமான நிலையாகிவிடும் பேராசிரியர் நிலைமை, தேவிகாவை காதலிக்க ஆரம்பித்தவுடன்.

* 4) அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்-

பாடலின் போது நீர்ச்சுழலில் மாட்டி தேவிகா காணாமல் போய்விடுவார். அவரை பேராசிரியர் கொன்றுவிட்டதாக கொலை குற்றம் சாட்டப்படுவார். தலை நிமிர்ந்து நடந்த பேராசிரியர் தலைகுனியும் நிலைமை வந்துவிடும்! எப்படியோ விடுதலையாவார். ஆனால் அவர் மீது இருந்த மதிப்பு, மரியாதை எல்லாம் போய்விடும்.

* 5) ஆறு மனமே ஆறுனு பாடலை பண்டாரம் மாதிரி பாடிக்கொண்டு திரிவார் பேராசிரியர்.

கடைசியில் தேவிகா திரும்ப வருவார். சிவாஜி, அவளை மணம் செய்துகொண்டு மறுபடியும் அவர் பேராசிரியர் பணியை தொடர்வார்! சுபமாக முடியும்!

Tuesday, September 22, 2009

பாக்ஸ் ஆஃபிஸில் உன்னைப்போல் ஒருவன் நிலவரம்!


சந்தேகமே இல்லாமல் பத்திரிக்கைகளில் க்ரிடிக்ஸ் இந்தப் படத்தை மேலே தூக்கி உள்ளனர். தமிழ் வலையுலகம் எல்லாம் கமல் புகழ்பாடுவது ஆச்சர்யம் அல்ல. ஆனால் இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனம் எழுதினாலும், இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக காட்டி இருப்பது பலருக்கு எரிச்சலை கிளப்பியுள்ளது. கமலைத் தவிர வேறு யாரும் இதைச் செய்து இருந்தால் இதை வைத்தே பொழைப்பை ஓட்டியிருப்பார்கள். கமலென்பதால் அதையும் பூசி மொழுகி மற்ற நல்ல விசயங்களை பாராட்டி இருக்கிறார்கள் வலையுலக கமல் பக்தர்கள். சரி, இப்போ உன்னைப்போல் ஒருவன் பாக்ஸ் ஆஃபிஸில் எப்படி போகிறது என்று பார்ப்போம்.

இன்றுவரை ஓவெர் சீஸ்ல படம் சுமாராகத்தான் போகிறது. அமெரிக்கா, யு கே யிலெல்லாம் பெரிய அளவில் போகவில்லை! எதோட கம்பேர் பண்ணினால்? தசாவதாரத்துடன் கம்ப்பேர் பண்ணினால் மட்டுமல்ல பொதுவாகவே எல்லா வெளிநாடுகளிலும் இந்தப் படம் பெரியவிதமாகப் போகவில்லை.

சென்னையில் 11 திரையரங்குகளில் நல்லவிதமாக வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் 3 வாரங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் தெளிவாகத் தெரியும். மற்றபடி B and C செண்டர்களில் படத்தை பெரிய தொகைக்கும் விற்கவில்லை. படமும் ஓரளவுக்குத்தான் நல்லாப் போகிறது. பாடல்கள், சண்டைகள் இல்லாததால் லாங் ரன்னில் பி அண்ட் சி செண்டர்களில் பெரிய அளவில் போகாதுனு அடித்துச் சொல்கிறார்கள். இப்போதே டிக்கட்டும் ஈஸியாக கிடைப்பதாக சொல்கிறார்கள்.

பாக்ஸ் ஆஃபிஸை பொறுத்தவரையில்

தசாவதாரம்>>>வேட்டையாடு விளையாடு >>உன்னைப்போல் ஒருவன் unless the trend changes drastically because of the word of mouth being too good. Let us see!

My girl friend, Brindha!- கடலை கார்னர் (21)

யாரோ கதவை தட்டினார்கள்

"ஹு இஸ் இட்?"

"It is Mike, KannAn!"

"Hi Mike! what's up man?"

"I thought you might want to join me go, get some coffee in Starbucks?"

"Hey, I got some company now. Sorry I can't"

"Who is that?"

"My girl friend, Brindha!"

"OK, sorry for the trouble. Have fun, buddy!"

"No trouble! Take it easy, Mike!"

***************************************

"ஹு வாஸ் இட், கண்ணன்?"

"பக்கத்தில் இருக்க ஃப்ரெண்டு. காஃபி குடிக்க கம்பெணி வேணுமாம்"

"வாட் டிட் யு டெல் ஹிம்?"

"நீ இருக்கதாலே நான் வரமுடியாதுனு சொன்னேன்"

"டி யு சே, ஐ ஆம் யுவர் கேர்ள் ஃப்ரெண்ட் ஆர் சம்திங்?"

"ஏன் நீ என் பாய்ஃப்ரெண்டா, என்ன?"

"ஐ ஆம் நாட் எ பாய். யு வாண்ட் டு செக் மி அவ்ட் அண்ட் மேக் ஷூர்?"

"ஹவ் வுட் ஐ டு தட்?"

"இஃப் யு ஸீ மி நேக்கட் யு வில் நோ, ஐ ஆம் எ கேர்ள்"

"ஒரு முடிவோட இருக்கியா நீ? நம்புறேன்ம்மா, ஆளை விடு"

"நெக்ஸ்ட் டைம் டெல் யுவர் ஃப்ரெண்ட் மைக் ஐ ஆம் யுவர் ஃபியாண்ஸி"

"ஓ கே, ஐ வில்"

"இஃப் யு ஆர் மை பாய்ஃப்ரெண்ட், வை டோண்ட் யு ட்ரீட் மி அப்ரோப்ரியேட்லி?"

"ஹவ் இஸ் தட்?"

"யு ஷுட் நோ ஹவ். ஆஸ்க் யுவர் ஃப்ரெண்ட் மைக் வாட் ஆல் ஹி டஸ் வித் ஹிஸ் கேர்ள் ஃப்ரெண்ட்"

"ஓ தட்! யு வாண்ட் மி டு டு எவ்ரிதிங்?"

"தென் ஒன்லி ஐ ஆம் யுவர் கேர்ள் ஃப்ரெண்ட். கண்ணன்! ஐ நீட் டு கோ டு பாத்ரூம் நவ்"

"ஓ கே, வா, பாத்ரூம் காட்டுறேன். கீழே விழுந்திடாதே"

"அப்படியே என்னை தாங்கி பிடிச்சு கூட்டிப் போங்க! ஐ மைட் ஸ்லிப் அதர்வைஸ்"

"சரி, வா"

"உங்க அணைப்பில் வர்றது நல்லா இருக்கு, கண்ணன். இட் ஃபீல்ஸ் ஸோ குட்"

"இதான் பாத்ரூம்! உள்ளேலாம் வந்து ஹெல்ப் பண்ண முடியாது"

"டோண்ட் வொர்ரி, ஐ வில் மேனேஜ்"

"கதவை அடச்சுக்கோ"

"யு ஷட் டவ்ன் த டோர் ஃப்ரம் அவ்ட்சைட். டோண்ட் பீக் இன்சைட்!"

"டோண்ட் டெம்ப்ட் மி டு மிஸ்பிஹேவ், பிருந்தா!"

"LOL"

*************************************

" பீரியேட்ஸ் டயமா என்ன உனக்கு? இந்தா பீட்ஸா வந்து டெலிவர் பண்ணிட்டு போயிட்டான்! சாப்பிடலாமா?"

"பீரியேட்ஸ்லாம் இல்லை. டோண்ட் வொர்ரி இஃப் யு ஹாவ் எனி அதர் ப்ளான்ஸ்"

"ஐ ஆம் நாட் வொர்ரீட். சாப்பிட முடியுமா? இல்லை ஊட்டி விடனுமா?"

"ஊட்டி விடுறீங்களா, கண்ணன்?"

"ஆண்ட்டியை கால்ப் பண்ணி சொல்லுறேன். குடிச்சுட்டு உங்க பொண்ணு அநியாயம் பண்ணுறானு"

"மாம் நம்பர் வேணுமா?"

"குடிச்சுட்டு என்னை கெட்டவார்த்தை சொல்லி திட்டுன தெரியுமா?'

"யு ஆர் எ லையர், கண்ணன்"

கண்ணன் அவள் அருகில் வந்து உட்கார்ந்தான். அவள் கடைசி சிப் வைனை குடித்தாள்.

"எங்கே நீ டேஸ்ட் பண்ணிய வைன் எப்படி இருக்குனு பார்ப்போம்?" என்று சொல்லி அவள் உதட்டில் தன் இதழ்களை பதித்தான். கொஞ்ச நேரம் கிஸ் பண்ணி அவள் வாயில் இருந்த வைனை சக் பண்ணி சுவைத்தான். அவள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.

"வைன் டேஸ்ட்ஸ் குட், பிருந்தா" என்று சிரித்தான்.

"தட் வாஸ் மை லிப்ஸ் யு டேஸ்டெட், மிஸ்டர்"

"இட் ஹாட் வைன் இன் இட்"

"யு டேஸ்டெட் மை லிப்ஸ். யு வாண்ட் டு டேஸ்ட் மை டங் டூ?'

"சம் அதர் டைம். இப்போ பீட்ஸா சாப்பிடு"

"எனக்கு வாயில் கொடுங்க!"

"என்ன ஆச்சு உனக்கு?"

"தெரிய்லை"

"இந்தா சாப்பிடு"

"கண்ணன்!"

"என்ன?'

"நைட் இங்கேயே தங்கிட்டுத்தான் போகப்போறேன்"

"இன்னொரு பெட் ரூம் இருக்கு"

"நான் என்ன லூஸா அங்கே போய் தூங்க?"

"இல்லையா பின்னே?"

"பீட்ஸா தாங்க"

"இந்தா கோக் கொஞ்சம் குடி! சிந்தாமல் குடி"

"யு ரியல்லி டேக் கேர் ஆஃப் மி, கண்ணன்"

"நீ விருந்தாளி இல்லையா? அதான்.."

"உங்க விருந்தாளியை எல்லாம் இப்படித்தான் கிஸ் பண்ணுவீங்களாக்கும்?"

"எப்படி கிஸ் பண்ணினேன்?"

"பண்ணிக்காட்டவா?'

"சாப்பிடுடா!"

"ஏதாவது படம் பார்க்கலாம்னு சொன்னீங்க?"

"அதெல்லாம் ஞாபகம் இருக்கா, உனக்கு?"

"என்ன படம் பார்க்கலாம்?"

"என்னிடம் நெறைய டிவிடி இருக்கு. உனக்குப் பிடிச்சது ஏதாவது ஒண்ணு பார்க்கலாம். மொதல்ல சாப்பிடு'

-தொடரும்



Monday, September 21, 2009

80, 90 களில் சிவாஜி படங்கள்!


நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பராசக்தியில் நடிக்க ஆரம்பித்து படையப்பாவில் நடித்து முடித்தார். நடிப்பில் என்றுமே இவர்தான் #1 என்பதில் சந்தேகமில்லை. இவருடைய ரைவல் எம் ஜி ஆர், 1976-1977 போல் திரையுலகில் இருந்து ஒதுங்கி அரசியலில் இறங்கிவிட்டார் அரசியலில் மிகப்பெரிய வெற்றியும் அடைந்தார். அதனால் மதுரையை மீட்டிய சுந்தர பாண்டியனுடன் எம் ஜி ஆர் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருந்தார். சிவாஜி அவர்கள் இன்று ரஜினி, கமல் மாதிரி இரண்டு வருடத்திற்கு 1 அல்லது 2 படங்கள் நடிக்கவில்லை. வருடத்திற்கு 5-10 படங்கள் நடித்தார். இவரை வைத்து படம் எடுத்து சம்பாரித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவரை என்றுமே ரசித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் சிவாஜி ரசிகர்கள் பலருக்கு இவர் வயதானபிறகு இத்தனை படங்கள் நடிக்கனுமா என்கிற வருத்தம் இருந்தது. சிவாஜி ரசிகர்கள் பலருக்கு சிவாஜியின் பழைய படங்கள்தான் பிடிக்கும். என்னைப்பொருத்தமட்டில் 80 க்கு பிறகு வந்த படங்களில் எனக்குப் பிடித்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

* முதல் மரியாதை

* தேவர் மகன்

* படிக்காதவன்

* படையப்பா போன்றவைகள்தான்

சிவாஜி வெறியர்கள் பலர் அவர் என்ன நடித்தாலும் ரசிக்கத்தான் செய்தார்கள். ஆனால், சிவாஜியின் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்த பலர், இவர் 80 க்கு அப்புறம் நடித்து வந்த பல படங்கள் இவர் சம்பாரித்தபேரையும் புகழையும் இழந்தார் என்ற எண்ணம் உண்டு. முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற படங்கள் விதி விலக்காக அமைந்தாலும் இவர் நடித்த எமனுக்கு எமன், ரத்த பாசம் போன்ற படங்களைப் பார்த்து நெறையப்பேர் தலையில் அடித்துக் கொண்டார்கள் என்பதென்னவோ கசப்பான உண்மைதான்.

Sunday, September 20, 2009

பட்டைச்சாராயம் குடிப்பீங்களா?-கடலை கார்னர்-20

"பரவாயில்லை, கண்ணன், வெறும் தண்ணிதான் இருக்கு உங்க க்ளாஸ்ல. ஒண்ணும் அல்கஹால் ஸ்மெல் இல்லை"

"ஆமா, உனக்கு வைன்க்கு தொட்டுக்க என்ன வேணும், ஊறுகாயா?"

"LOL! என்ன ஊறுகாயா?"

"எங்க ஊரில் பட்டைசாராயம் குடிக்கிறவங்க எல்லாம் ஊறுகாய்தான் தொட்டுக்குவாங்க, குடிகாரி!"

"பட்டைச்சாராயம் குடிப்பீங்களா?"

"ஏய்! நான் குடிச்சதில்லை!"

"அப்போ கள்ளச்சாராயம் காய்ச்சி வித்து இருக்கீங்களா? எப்படி இதெல்லாம் தெரியும்?"

"கொழுப்புத்தானே உனக்கு?"

"எனக்கு ஏதாவது சிப்ஸ், கடலை, மிக்சர் ஏதாவது இருந்தா எடுத்து வைங்க"

"இந்தா கொட்டிக்கோ! ஏய்! என்ன அதுக்குள்ளே எல்லா வைனையும் காணோம்? ஒரே மடக்குல குடிச்சுட்டியா?!"

"ரீ ஃபில் பண்ணுங்க!"

"ஏய் போதும்பா!"

"எனக்கு பத்தாது. இன்னொரு ட்ரிங்க் வேணும்!"

"சரி, உன் இஷ்டம். இந்தா!"

"கண்ணன்!"

"என்ன?"

"ஐ லைக் யு வெர்ரி மச்"

"தேங்க்ஸ், உளற ஆரம்பிச்சுட்டியா?'

"ஐ ஆம் ஹானஸ்ட். யு நோ வை ஐ ஆம் ட்ரிங்கிங் இன் யுவர் ப்ளேஸ்?"

"வை?"

"ஐ நோ யு வோண்ட் டேக் அட்வாண்டேஜ் ஆஃப் மி. இட் இஸ் சேஃப் ஹியர்"

"தட் யு டோண்ட் நோ, பிருந்தா. ஐ மைட்"

"யு மைட் வாட்?'

"ஐ மைட் டேக் அட்வாண்டேஜ் ஆஃப் யு"

"வாட் வில் யு டு? வில் யு கிஸ் மி இன் மை லிப்ஸ் அண்ட் டேர்ன் மி ஆன்?"

"ஐ மைட்"

"நோப், யு வோண்ட்"

"வை நாட்?"

"பிகாஸ், ஐ ஜஸ்ட் நோ, யு வோண்ட்"

"குடிகாரி! யு லுக் வெர்ரி செக்ஸி டுடே. ஐ மைட் டு தட்"

"யு ரியல்லி தின்க் ஐ ஆம் செக்ஸி, கண்ணன்?. தேன்க் யு, டியர்"

"என்ன போதை ஏறிடுத்தா?'

"ஐ டோண்ட் நோ, பட் ஐ வாண்ட் டு லுக் செக்ஸி டு யு"

"வை?'

"ஐ டோண்ட் நோ, ஐ லவ் வென் யு சே தட் ஐ ஆம் செக்ஸி"

"ஐ தாட் யு மைட் கெட் அஃபெண்டெட்"

"வை? இட் இஸ் எ காம்ப்லிமெண்ட், டியர்"

"ரியல்லி?"

"யெஸ், ட்யூப்லைட்!"

ஏய் உன் ஃபோன் பாடுது!

"அய்யோ தட்ஸ் மை மாம். ஷி ரெகுளர்லி கால்ஸ் மி சாட்டர்டே திஸ் டைம்!"

"டோண்ட் பிக் அப் நவ், பிருந்தா! யு ஆர் ட்ரங்க்"

"ஐ ஹாவ் டு பிக் அப், கண்ணன்"

"ஹல்லோ"

""

"ஐ ஆம் ஓ கே அம்மா"

""

"ஓ கே ஓ கே நான் நல்லாயிருக்கேன்"

""

"ஐ காண்ட் டு இட் நவ்"

""

"ஐ ஆம் இன் மை ஃப்ரெண்ட்ஸ் ஹவ்ஸ்'

""

"ஐ வில் கால் யு டுமார்ரோ. ஐ காண்ட் டாக் மச் நவ்"

""

"இங்கே எல்லாரும் இருக்காம்மா. ஐ காண்ட் டாக் மச்"

""

"ஐ டோண்ட் நோ, ஐ ஆம் ஃபைன்"

""

"இல்லம்மா, ஐ ஆம் ஃபைன். நாளைக்கு நான் கால் பண்ணுறேன்"

""

"பை"

"லூஸாடா நீ? இப்போ எதுக்கு ஃபோனை பிக் அப் பண்ணுற"

"அதர்வைஸ் ஷி வில் பி வொரீட். ஷி வில் கீப் காலிங் மில்லியன் டைம்ஸ்"

"இப்போ நீ பேசுறது வித்தியாதமா இருக்கு, தெரியுமா? ஒரே இங்லிஷ்! யு ரிப்பீட் சேம் ஃப்ரேஸ் மில்லியன் டைம்ஸ்"

"ஷி வாஸ் வொண்டெரிங் அபவ்ட் தட் டூ"

"நீ குடிக்கிறதெல்லாம் ஆண்ட்டிக்கு தெரியுமா?'

"நீங்க வேற! கண்ணன்! வை டிட் யு கிஸ் மி தட் டே?"

"பிகாஸ் யு வேர் கிஸ்ஸபிள்"

"ரியல்லி? வாட் வில் யு சே, சப்போஸ் யு ஸ்லீப் வித் மி தட் ஐ ஆம் '''''"

"ஸ்ஸ்! இப்படிலாம் டேர்ட்டியா நீ பேசுவியா?'

"ஒன்லி வித் யு"

"வை?"

"பிகாஸ் ஐ லைக் டாக்கிங் டர்ட்டி டு யு?"

"என்ன சாப்பிடுற?"

"வாட் டு யு ஹாவ்?"

"கேன் ஐ ஆர்டர் இன் சம் பீட்ஸா?"

"ஓ கே"

"யு லைக் ஆலிவ் டாப்பிங்ஸ்?"

"தட் வில் பி ஓ கே"

"லெட் மி ஆர்டெர் இட்"

-தொடரும்

Friday, September 18, 2009

பாசமலர் vs முள்ளும் மலரும்!


இந்த ரெண்டு படங்களுமே அடிப்படையில் ஒரே மாதிரியான “ப்ளாட்டை” கொண்ட படங்கள்தான். ஆனால் ஒன்றிலிருந்து ஒன்றை காப்பியடித்ததாக வோ, தழுவி எடுத்ததாகவோ எதுவுமே சொல்ல முடியாது. அண்ணன் - த்ங்கை பாசத்தை அடிப்படையால வைத்து எடுத்தது.

பாசமலர் (1961):

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நடிகையர் திலகம் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக நடித்த இல்லை வாழ்ந்த படம் பாசமலர். சிவாஜியின் ஒரே தங்கை சாவித்திரி. இருவருக்கும் அம்மா அப்பா இல்லை. தங்கைனா அண்ணனுக்கு உயிர். அண்ணன்னா தங்கைக்கு தெய்வம். ஆனால், பருவ வயதில் வரும் காதல், காதலன் பிறகு கணவனானா மாறிய ஜெமினிகணேசனுக்கு சிவாஜினா ஆகாது. சிவாஜிக்கு ஜோடி, எம் என் ராஜம். அண்ணன் - தங்கை பாசம் என்பது கணவன் - மனைவி உறவைவிட சிறந்தது என்பதுபோல முடியும்.

நடிப்பு? சொல்லவே வேண்டாம். Outstanding!

பாடல்கள் அனைத்துமே தேனா இருக்கும்.

இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி; பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன்

1) எங்களுக்கும் காலம் வரும்

2) மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்

3) காலங்களில் அவள் வசந்தம்

4) பாட்டொன்று கேட்டேன் பரவசம் அடைந்தேன் நான் அதை பாடவில்லை

5) வாராய் என் தோழி வாராயோ

6) மலர்ந்து மலராத

முடிவு: அண்ணனும் தங்கையும் கடைசியில் இறந்துவிடுவார்கள். சோகமான முடிவு. என்னைப் பொருத்தவரையில் இது மிகைப்படுத்தப்பட்ட படமோ, நடிப்போ இல்லை. ஆனால் சோகமான முடிவு.

முள்ளும் மலரும் (1978):

மகேந்திரன் டைரக்ஷனில் ரஜினி, ஷோபா, படாஃபட் ஜெயலக்ஷ்மி, சரத்பாபு நடித்த அண்ணன் தங்கை பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த படம்.

ரஜினிகாந்த், காளி என்கிற ஒரு வீம்புபிடிச்ச அடாவடித்தனம் செய்யும் ஆனால் தங்கை, வள்ளி மேல் பாசத்தையும் அன்பையும் பொழியும் அண்ணனாக நடித்து இருப்பார். இவர்களும் அனாதைகள்தான். ரஜினி காளியாக நடித்து நடிப்பில் எல்லோரையும் மிஞ்சிவிடுவார். ரஜினிக்கு பாதிப்படத்தில் ஒரு கை வேற போயிடும்.

சோஃபா, ரஜினியின் தங்கை, வள்ளியாக அவரையும் மிஞ்சுமளவுக்கு முயன்று நடித்து இருப்பார். இருந்தாலும் ரஜினிதான் நடிப்பில் வின்னர்.

சரத்பாபு, ரஜினியின் அகந்தை, அடாவடித்தனத்தை வெறுக்கும் கண்டிப்பான மேலதிகாரியாக, அதே சமயத்தில் ரஜினியின் தங்கையின் காதலனாக கன்னியமாக கச்சிதமாக நடித்து இருப்பார்.

ரஜினி ஜோடியாக படாஃபட் ஜெயலக்ஷ்மியும் நடிப்பில் அசத்தி இருப்பார்.

இசை: இளையராஜா (தேங்க்ஸ் டு முகிலன்)

பாடல்கள்: கண்ணதாசன்

1) நித்தம் நித்தம் நெல்லுச்சோறு

2) செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்

3) ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலையில்லை

முடிவு:

காளியும் வள்ளியும் முடிவில் சாகமாட்டார்கள். காளி, தன் தங்கை வள்ளிக்காக தன் பிடிவாதத்தை விட்டு இறங்கிவந்து தங்கை ஆசையை பூர்த்திசெய்து வைப்பார்.

Finally, அடிக்க வராதீங்க, முள்ளும் மலரும் ஹாஸ் அன் எட்ஜ் ஓவர் பாசமலர்னு எனக்கு தோனுது.

உன்னைப்போல் ஒருவன் ( * * * *)- க்ரிடிக்ஸ் லவ் திஸ் ஒன்!


விகடன், கமல் படங்களுக்கு இப்பொதெல்லாம் சரியான மதிப்பெண்கள் கொடுப்பதில்லை. 50 மதிப்பெண்களுக்கு மேல் விகடனில் பெற்ற கமல் படம் சமீபத்தில் இல்லை. "கமல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறார். விகடந்தான் கீழே போகிறது" என்று குற்றச்சாட்டுக்கள் விகடன் மேல் உண்டு. அது ஓரளவுக்கு நம்பும்படியாகவும் உள்ளது.

இப்போ விகடன் விமர்சனத்தை "சேலன்ச்" செய்ய கமலின் உன்னைப்போல் ஒருவன் வந்திருக்கிறது.

sify and Rediff விமர்சனங்கள் (****) மேலே கொடுத்துள்ளன. க்ரிடிக்ஸ் இந்தப்படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள். கட்டாயம் பார்க்கவேண்டியபடம் என்கிறார்கள்! இதேபோல்தான் அனேகமாக எல்லா விமர்சனங்களும் வரப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த முறை ஆனந்த விகடன் எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கப்போகிறது? என்பது மில்லியன் டாலர் கேள்வி!

ஆனந்த விகடனுக்கு சரியான விமர்சனம் செய்து தங்கள் உயர்தரத்தை காப்பாற்றிக்கொள்ள அரிய வாய்ப்பு!

இல்லையென்றால் கமல் ரசிகர்களின் குற்றச்சாட்டு மெய்யாகிவிடும்!

விகடன் விமர்சனக்குழு!!! கவனம்! கவனம்!

Thursday, September 17, 2009

அழகா இருக்கிறது வரமா? இல்லை சாபமா?



அந்தக்காலத்து fairy tale ல கூட ஹீரோ, ஹீரோயின் அழகானவங்களாத்தான் இருப்பாங்க. சிந்தரல்லா, ஸ்னோ வைட், ஆலிஸ் (in wonderland) இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் வந்த "ஸ்ரெக்" மட்டும் ஒரு எக்ஸப்ஷன்னு சொல்லலாம். அதாவது fairy tale ல எல்லாமே அழகா, பணக்காரரா இருக்கவங்கதான் நல்லவங்களா, இளவரசியா, ஹீரோயினா இருப்பாங்க. கொஞ்சம் கருப்பாவோ, அவலச்சணமாவோ இருந்தால் அவங்களுக்கு உள்ளத்திலும் நல்ல எண்ணமோ, நல்ல குணமோ இருக்காது என்பது போலதான் இருக்கும். பார்க்க நல்லா இல்லாதவங்க ஏதாவது மோசமான செயல்கள்தான் செய்வாங்க! அவர்களுக்கு நல்ல உள்ளமும் இருக்காது!!!

பொதுவா உலகில் ஒருவர் அழகா இருந்தாத்தான் நடிகையாகலாம். நாலு பேர் உங்களைப் பார்ப்பாங்க! உங்களோட பழகத் துடிப்பாங்க. உங்களை காதலிப்பாங்க! அரேஞ்சிட் மேரேஜ் செட்டிங்ஸ்ல அழகா இருந்தால்தான் உங்களைக் கல்யாணமும் ஆசையுடன் பண்ணிக்குவாங்க! Lots of my friends say that their top priority is how beuatiful the girl is. அழகு என்பது ஒரு கிஃப்ட்னு தான் அழகுப்போட்டி நடத்துறவங்களும் பெருமையாக சொல்லிக்கிறாங்க!

இருந்தபோதிலும், அழகா இருக்கிறதிலே பல பிரச்சினைகளும் உண்டு!

* இன்று நடிகையாக இருந்து எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்தவர் ஒரு 10 வருடமான பிறகு (நம்ம 80ஸ்ல இருந்த கதாநாயகிகளைப் பாருங்க), குண்டா, முதுமைதட்டி இருக்கும்போது, டிப்ரெஷன் இவர்களை தொத்திக்கொள்கிறது. இன்று உள்ள இளநடிகைகளைப் பார்த்து பெருமூச்சு விடுறாங்க. அன்று இவர்களைப்பார்த்து ரசித்த ஆடியண்ஸ் இன்று இவர்கள் வரும் சீன் களில் தம் அடிக்க வெளியே போயிடுவாங்க!

* இன்னொரு கொடுமைஎன்னனா உங்கள் தகுதிக்காக, திறமைக்காக கிடைத்த ஒரு வேலையை, அல்லது ப்ரமோஷன் அல்ல்து ரிவார்டைக்கூட நீங்க அழகா இருப்பதால் உங்களுக்கு சும்மா கொடுக்கப்பட்டதாக ஊர் உலகம் பேசும்! நீங்க அழகா இருப்பதால் அந்த ஜொள்ளன் (வாத்தியான்) உங்களுக்கு மார்க்கை அள்ளிப்போட்டுட்டான் னு சொல்லுவாங்க. இதுபோல பொறாமையில் பலர் வ்யிறெரிவதை தவிர்க்க முடியாது. உங்களுக்கே உங்கள் திறமைமேல் சந்தேகம் வைத்து விடுவார்கள்.

* ஒரு சில அழகா உள்ளவுங்க எந்நேரமும் மேக் அப் போடுவது, கண்ணாடி முன்னால் 24 மணி நேரமும் நிற்பது, மற்றவர்கள் அவர்களை வேடிக்கை பார்ப்பதை ரசிப்பது, அடுத்தவர் அட்டென்ஷனுக்காகவே வாழ்வது என்று இதுபோல் வெட்டி விசயங்களில் தன் மனதை செலவழித்து வீணாப் போவதும் உண்டு. They care only about the look most. Nothing else. They forget that there is so much in this world which has nothing to do with beauty.

Let us leave the beauty aside and look at some issues in general. Life would be fair if and only if everyone is born equal. That is not what we see. Some of us are born beautiful or rich or brainy and some of us are not good-looking or poor or dumb. Some of us are having a good mom and dad and some of us are born for a prostitute and pimp as well.Life is not fair, some unfortunate ones will certainly complain. God is not being fair, they will curse the God. Dont you think a son or daughter of a prostitute or a pimp has the right to say God is not fair? However we all should know that NOBODY is superior than ourselves. Somehow when we add and subtract, we all should come up with the same #. We have to dig out deep into ourselves and see what is the best thing we have. We must have something special. We must be good at something. At least we should try, find that and excel in it.

திருட்டுப்பயலே ஜீவன் ஒழிந்தானா?


சிலவருடங்கள் முன்பு ஜீவன் னு ஒரு நடிகன் தமிழ் சினிமாவை சாக்கடையாக்க முயற்சி செய்து ஒரளவுக்கு வெற்றியும் அடைந்தார். கெளதம் மேனன் என்கிற ஒரு மலையாளி இந்த நடிகரை சினிமாவுக்கு கொண்டுவந்தார். இந்த சிக்கோ டைரக்டர் இந்த நடிகரை காக்க காக்க ல வில்லனாக அறிமுகப்படுத்தினார். அதுலயே இந்த ஆளை வில்லனாக பார்க்கவே எரிச்சலா இருந்தது. பேசியே கொல்லுவான் படம் முழுவதும்.

ஹீரோவாக நடிப்பதற்கு தேவையான ஒரு முகமோ, தகுதியோ இல்லை இவரிடம். அதனால் "பொறுக்கி ஹீரோ"வாக நடிக்க முயற்சிசெய்தாரோ என்று தோன்றுகிறது.

* 1) திருட்டுப்பயலே படத்தில் ஒரு கல்யாணம் ஆன பெண்ணுக்கு உள்ள "அஃபையரை" வைத்து அவளையும் அவள் "காதலனையும்" மிரட்டி, அவர்களிடம் பணம் பறிக்கும் ஒரு ரோல் இவருக்கு. இந்தப்படம் ஒரு வெற்றிப்படம்!!!

I am not supporting an affair or anything. Nobody is proud of doing such but it does happen in our society. People those who involved like that already have to answer their own conscience and God and whatnot?. They live in hell already by doing such act. It is wrong, no doubt! But threatening such people and making money or taking advantage of it is an ANIMAL behavior! How can one even tolerate or enjoy watching such things in a movie? Younger generations are becoming sadistic or sick people or what? Is that because of domination of porn-world? Young people minds are all becoming SICK?? . Beats me!

என்னைபொருத்தமட்டில், இதுபோல் படங்கள் தமிழ் சினிமாவில் தேவையில்லை. இதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை!

* 2) அடுத்து "நான் அவனில்லை" னு ஒரு மட்டமான படம்! இதுல இவர் நெறையப்பேரை காதலிச்சு கை கழுவி விடுவார். இப்படி ஒரு ஹீரோ! இதுவும் பெரிய வெற்றிப்படம்!.

தமிழ் சினிமாவில் இப்படியே குப்பைகூட்டுவது கஷ்டம். ரெண்டு படம் பண்ணலாம். மூனாவது படத்தில் தூக்கி குப்பையில் எறிந்துவிடுவார்கள். அதுதான் இந்த ஜீவனுக்கும், இவர் "மச்சக்காரனில்" நடந்தது.

விக்கிப்பீடியாவில் பார்க்கும்போது, இன்னும் இவருக்கு சில படங்கள் தயாரிப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. I doubt whether he has any future in Tamil cinema! Good bye "jeevan"!

Wednesday, September 16, 2009

"நெஜம்மாவா? நீ குடிகாரியா?!"- கடலை கார்னர் (19)

"கண்ணன், நெஜம்மாவே உங்களுக்கு ஒரு லைன் இருக்கத்தான் செய்து. கேர்ள்ஸ் கெட் அட்ராக்ட்டெட் டு யு ஈஸிலி"

"நான் நம்பிட்டேன், பிருந்தா பொய்கூட ரொம்ப அழகா சொல்ற"

"அதெல்லாம் இல்லை! நீங்க கொஞ்சம் இண்டரெஸ்டிங் பர்சனாலிட்டிதான்"

"ஏய் எதுக்கு இப்படி ஐஸ் வைக்கிற, பிருந்தா?"

"நான் மட்டும் சொல்லல, ஸ்டெய்ஸியே சொன்னாள் கண்ணன்"

"என்ன சொன்னாள்?"

"உங்களோட பேசிக்கொண்டு இருக்க நல்லாயிருக்காம். யு சம்ஹவ் டோண்ட் போர், கேர்ள்ஸ்"

"ஏய், என்னை விட்டுரு, ப்ளீஸ். எனக்கு தலை சுத்துது"

"சரி, வீக் எண்ட் படத்துக்கு போகலாமா?'

"ஏதாவது ரெண்ட் பண்ணி வீட்டிலேயே பார்க்கலாமே? சாட்டர்டே என் வீட்டுக்கு வர்றியா?"

"சரி வர்றேன்"

"நானே வந்து உன்னை பிக அப் பண்ணிக்கிறேன்"

"சரி, எத்தனை மணிக்கு?'

"ஒரு 6 மணி?'

"ஓ கே"

*******************************************************

"ஏய் பிருந்தா! என்ன இதெல்லாம். ஊருக்கு போறமாதிரி பாக் பண்ணி இருக்க?"

"சும்மா ஒரு நைட் ட்ரெஸ், அப்புறம் இன்னொரு செட் எடுத்து வச்சிருக்கேன். அப்புறம் எமர்ஜெண்ஸி ஐட்டம்"

"சரி, வா போகலாம்"

அவள் கதவை அடைக்கும்போது, பக்கத்து அப்பார்ட்மெண்ட்ல இருந்த ஒரு பெண் வந்தாள்.

"ஆர் யு லீவிங், பிருந்தா?"

"என்ன வேணும், பானு? இதுதான் கண்ணன்"

"இவர்தானா அது? ஹல்லோ'

"ஹல்லோ பானு"

"பிருந்தாவை எங்கே கடத்திட்டுப் போறீங்க, கண்ணன்?'

"சரி உண்மையை சொல்லிடுறேன். யாரோ பானுவாம்.. பக்கத்தில் இருந்து உயிரை வாங்குறாளாம், இந்த பானு! அவ தொந்தரவு இல்லாமல் கொஞ்சம் நிம்மதியா இருக்கனுமாம். கெஞ்சி கேட்டுக்கிட்டாள்.. அதான்.."

"இவர் கதை நல்லாவிடுவாரு, நம்பிறாதே, பானு!"

"இவ சொன்னாலும் சொல்லி இருப்பாள்"

"சரிடி, அப்புறம் பார்க்கலாம்"

அவள், ஒரு சல்வார் காமிஸ் அணிந்து இருந்தாள். அவள் நடியில் எப்போவும்போல் ஒரு நளினம். அவன் முன்னால் நடந்து அவன் ஹாண்டா அக்கார்ட் டில் முன் இருக்கையில் அமர்ந்தாள். காரெல்லாம் அவள் மணம் அடித்தது.

"இந்தியா விசிட் பண்ணலையா?"

"அங்கே போனால் ஒரே தொந்தரவு, கண்ணன்"

"என்ன தொந்தரவு?"

"எங்க அப்பாவுடைய அக்கா இருக்காங்க, அவங்க மகனுக்கு என்னை கட்டி வைக்கனும்னு அப்பாட்ட வந்து சண்டை போடுவாங்க"

"கஸினை எல்லாம் நீங்களும் கல்யாணம் செய்வீங்களா?"

"ப்ராமின்ஸ்லயும் செய்வாங்க கண்ணன். க்ராஸ் கஸினை"

"உனக்கு அவரை பிடிக்கலையா?"

"ஹி இஸ் நைஸ். அதுக்காக கல்யாணம்லாம் பண்ணிக்க முடியாது"


********************************

"உள்ள வா பிருந்தா!"

"2-பெட்ரூம் அப்பார்ட்மெண்டா?"

"ஆமா"

"உட்கார் பிருந்தா இந்த சோஃபால! ஏதாவது குடிக்க வேணுமா?'

"என்ன இருக்கு?"

"ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்ச் ஜூஸ், கோக், ரெட் வைன்"

"ரெட் வைன் தாங்க!"

"நெஜம்மாவா? நீ குடிகாரியா?!"

"LOL! ஆமா, ரெட் வைன் ஹார்ட்டுக்கு நல்லதுனு சொல்றாங்க"

"இப்படி ஒரு எக்ஸ்க்யூஸா!'

"அந்த ஆர்டிக்கிள் வேணா தரவா?'

'வேணாம் வேணாம். நல்லா குடி! இரு கொண்டு வர்றேன்"

"குடிச்சுட்டு ஏதாவது உளறினால் அதையெல்லாம் யார்ட்டயும் சொல்லக்கூடாது!"

"இது வேறயா? இரு வர்றேன்"

"இந்தாம்மா நல்லா குடிச்சு உன் இதயத்தை பலப்படுத்து!"

"நீங்கள்?"

"நான் தண்ணி மட்டும் குடிக்கிறேன்"

"எங்கே நான் ஸ்மெல் பண்ணி பார்க்கிறேன். ஏதாவது எத்தில் அல்கஹால் அதில் இருக்கானு. அதான் கலர்லெஸ் ஆச்சே!"

"குடிச்சுட்டு எதுவும் கண்டபடி என்னைத் திட்டாதே!"

"LOL"

-தொடரும்

Tuesday, September 15, 2009

பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து (வாக்ஸின்) ரெடி!!!

இன்று யு எஸ் food and drug administration, பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து (வாக்ஸின்) அப்ரூவ் செய்து இருக்கிறார்கள்!

FDA approves swine flu vaccine: US health secretary

WASHINGTON — The US Food and Drug Administration (FDA) Tuesday approved a swine flu vaccine keeping officials on track to begin a mass vaccination campaign by next month, Health Secretary Kathleen Sebelius said.

"I am pleased to report that today the Food and Drug Administration has approved applications for vaccine for the 2009 H1N1 virus for four of the (five) manufacturers of the US licensed seasonal influenza vaccine," Sebelius told US lawmakers.

The US government has purchased 195 million doses of swine flu vaccine and will make shots available free of charge starting next month, Sebelius said.

"The large scale 2009 H1N1 vaccine program will begin mid-October with small amounts of vaccine becoming available the first week of October," she said.

The fifth US manufacturer was also expected to be licensed, she added.

Shots for the A(H1N1) virus will be available "free of charge to the American people" but providers might charge a fee to administer them.

Vaccination will be on a voluntary basis, with priority given to five groups deemed to be at particular risk from the novel swine flu virus.

The US Centers for Disease Control and Prevention (CDC) has recommended that pregnant women, people in contact with infants, medical personnel, people between the ages of six months and 24 years old, and adults under the age of 65 with underlying medical conditions should be the first to get the shots.

That is about 160 million people in the United States -- which is less than the 195 million doses of vaccine purchased by the government, only about one third of which are expected to be ready by October.

The vaccine will be available as either a flu shot made with killed H1N1 virus, or as a nasal spray made with live, weakened virus, Sebelius said.

Clinical trials are under way to determine if there is "any harm" in having a seasonal flu vaccine -- which is already available -- at the same time as the vaccine for H1N1 influenza, said Sebelius.

Monday, September 14, 2009

கருத்துக்களங்களில் கருத்துச்சுதந்திரம் இல்லை!

நீங்கள் நாகரீகமாக விவாதம் செய்பவரா? உண்மையை அடிப்படையாக வைத்து பேசுபவரா? ரொம்ப விசயம் தெரிந்தவரா? நாகரீகம் தெரிந்தவரா? இதெல்லாம் இருந்தும் ஒருசில கருத்துக்களங்களில் உங்களுக்கு கருத்துச்சுதந்திரம் இல்லை போல் இருக்கா?

* நீங்கள் மாடரேட்டர்களுக்கு ஜால்ரா அடிப்பதில்லையா?

அப்போ உங்க கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்!

* நீங்கள் ரஜினி ரசிகர் ஆனால் மாடரேட்டர் எல்லாரும் கமல் ரசிகர்களா?

அந்த கருத்துக்களத்தை விட்டு முதலில் வெளியே வாங்கள்!

* நீங்க பெரியார் பக்தரா? இல்லை நாத்தீகவாதியா? அந்தக்களம் ப்ராமின்ஸ் ரன் பண்ணுவதா?

ஏன் சார் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி அந்தக் களத்தை வளர்க்குறீங்க?

கருத்துச் சுதந்திரம் என்பது , கருத்துக்களங்களில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை! அங்கே உள்ள மாடரேட்டர் மற்றும் நிர்வாகிகள் நியாயமாக ஏதோ செய்வதுபோல், தங்கள் சுயநலத்திற்காக பல அயோக்கியத்தனம் பண்ணுவார்கள். அவர்களுக்கு அது நியாயமாகத்தான் தோனும். உங்களுக்கு மட்டும்தான் அவர்கள் செய்வது அநியாயம்னு தெரியும்.


அப்போ கருத்துக்களத்தைவிட்டு வந்து என்னதான் நான் செய்றது? னு கேட்கிறீர்களா??!

உங்கள் கருத்துக்களை, எண்ணங்களையும் உலகுக்குச் சொல்ல ஒரு தமிழ் வலைதளம் ஆரம்பிங்க! மறக்காமல் தமிழ்மணத்தில் இணையுங்கள். உங்கள் கருத்தை நாகரீகமாக வரம்பு மீறாமல், சத்தமாக, தெளிவாகச் சொல்லுங்கள்!


நீங்கதான் உங்க தளத்துக்கு ராஜா/ராணி! உங்கள் சிந்தனைகளை, ஆதங்கத்தை, எண்ணங்களை, ஆக்கங்களை ஒரு நாலு பேர் படித்தால்கூட போதும்ங்க! உங்க பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரத்தை யாரும் இப்போப் பறிக்க முடியாது! உங்க சுயமரியாதையையும் நீங்க காப்பாற்றிக் கொள்ளலாம்!

ஐஸ்-ரஜினி- சன் பிக்சர்ஸ் எந்திரன்! (ஒரு முன்னோட்டம்)



தமிழ் வலையுலகில், ரஜினி படத்தை கீழே கொண்டுவர ஒரு பெரிய கூட்டமே உண்டு! இருக்ககூடாதா என்ன? தப்பே இல்லை! பிடிக்காத நடிகரின் படத்தை அந்த நடிகரின் ரசிகர்கள் பார்க்குமுன்னால் பார்த்து வந்து மனசாட்சியே இல்லாமல் ஒரு மட்டமான விமர்சனம் எழுதும் "பிரபலப் பதிவர்கள்" நிறைந்ததுதான் இந்த வலையுலகம்! ஆனால் அப்படிப்பட்ட வலைபதிவர்களுக்கு எந்திரன் ஒரு "சேலஞ்ச்"தான்!

ரஜினியின் சந்திரமுகி மிகப்பெரிய வெற்றியடைந்தது! இதனுடையை டி வி ரைட்ஸ் சன் டி வி வாங்கியது! அதனால் சன் டி வி மற்றும் மீடியா இந்தப்படத்தை கொஞ்சம் அதிகமாகவே வெற்றியடைய வைத்தார்கள். அடுத்து வந்தது மிகப் பிரம்மாண்டமான எ வி எம் தயாரித்த சிவாஜி. இதனுடைய டி வி ரைட்ஸ் கலைஞர் டி விக்கு போனது. சன் டி வி, சன் மீடியா இந்தப் படத்தை, சந்திரமுகி அளவுக்கு தூக்கிவிடவில்லை! வண்ணத்திரை, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகள் சில நெகட்டிவ் விமர்சனங்களும் கொடுத்தன.

ஒண்ணுமில்லாத படத்தையெல்லாம் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பாக இருந்தால் அதை சன் டி வி மிகப்பெரிய வெற்றியடைய வைத்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். 100 கோடி பொருட்செலவில், சங்கர் டைரக்ஷனில், ஆஸ்கர் வின்னர் ஏ ஆர் ரகுமான் இசையில், சூப்பர் ஸ்டார்- ஐஸ்வர்யா நடித்து வெளிவரும் எந்திரனை சன் மீடியா எப்படி தூக்கி விடும்? வானளவில்!

எந்திரன் கமர்ஷியலாக தோல்வியடைய வாய்ப்பு மிக மிக குறைவு! அதை இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஸ்டில்ஸே சொல்கிறது!

Sunday, September 13, 2009

எம்ஜிஆர்-கமல் vs எம்ஜிஆர்-ரஜினி விசிறிகள்!


விசிறிகள் பல வகை. ஜாலியாக பொழுது போக்குக்காக படம் பார்ப்பவர்கள் ஒரு வகை. இவர்களுக்கு பொதுவாக அழுகைப் படம் சீரியஸான படம்லாம் பிடிக்காது. சண்டை பிடிக்கும். ஹீரோயிஸம் பிடிக்கும், பாடல்கள் நல்லா இருக்கனும். பொதுவா எம் ஜி ஆர் விசிறிகள் இந்த வகையில் சேருவார்கள்னு சொல்லலாம். எம் ஜி ஆர் ரொம்ப சீரியஸான படம்லாம் ரொம்பப் பண்ணியது கிடையாது!

ரஜினிகாந்த் விசிறிகளும் இதில் சேர்க்கலாமா? ஏன் கூடாது? ரஜினி படங்களும் பொதுவாக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் தானே?

அப்போ எம் ஜி ஆர் விசிறிகள் எல்லாம் ரஜினிகாந்த் விசிறிகளாக இருப்பார்களா?

அதுதான் இல்லை! ஏன்???? தெரியலை!

ஏன் எம்ஜிஆர் விசிறிகள், கமல் விசிறிகளாக இருக்கிறார்கள்? இது எனக்குப் புரியாத ஒரு புதிர்! எம் ஜி ஆர் பொழுதுபோக்குப் படங்கள் எடுத்தவர். கமல் சீரியஸ் படங்கள் எடுப்பவர்! எம் ஜி ஆர் விசிறி எப்படி கமலை ரசிக்க முடியுது??

ஒருவேளை இவர்களுக்கு நடிகர்கள் வெள்ளையா இருந்தால்தான் பிடிக்குமா? தெரியலை!

Saturday, September 12, 2009

ஆலயமணி- திரை விமர்சனம்

சிவாஜி - சரோஜாதேவி - எஸ் எஸ் ஆர் (முக்கோண காதல்) நடித்த காவியம். அரேஞ்சிட் மேரேஜ் கலாச்சாரத்தில் கற்பு வாழ்க்கையை மேம்படுத்தி, காதல் வாழ்க்கையை அசட்டை செய்து நம் கலாச்சாரத்தை உயர்படுத்தும் ஒரு அழகான உணர்ச்சி மிக்க காவியம் இது.

டைரகஷன்: கே. சங்கர்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல்கள்: க்ண்ணதாசன்

ஏழை “வானம்பாடி” (சரோஜாதேவி), காதலில் விழுகிறாள். காதலன் எஸ் எஸ் ஆர் (ராஜு) ஒரு படித்த ஏழை பட்டதாரி. இருவருக்கும் ஒரு டூயட்

1) கண்ணான கண்ணனுக்கு அவசரமா? (சீர்காழிக்கு டூயட் பாடல்)

சிவாஜி (தியாகு) ஒரு பெரிய ஜமீந்தார். ஆனால் சிறுவயதில் ஜெயிலுக்கு போய் வந்தவர். “எக்ஸ்ட்ரீம்லி பொசஸிவ்”. ஒரு மாதிரியான மன வியாதி உள்ளவர். தியாகு சிறுவயதில் “மீனா” என்கிற அழகான பொம்மை வைத்திருப்பான். அதை நண்பன் பாபு கேட்பான். கொடுக்க மாட்டான். பாபு அதைப் பறித்துக்கொண்டு ஓடும்போது ஒரு புதை சேறில் விழுந்து விடுவான். தியாகு அவனிடம் இருந்து மீனாவை வாங்கிக்கொண்டு பாபுவை மிருகவெறியுடன் சாகவிடுவான். அதனால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி போய் வருவான். ஆனால் இன்றும் தியாகுவிடம் அந்த மிருக குணம் இருக்கும்.

சிவாஜியும் எஸ் எஸ் ஆரும், ஒரு டென்னிஸ் போட்டியில் மீட் பண்ணுவாங்க. சிவாஜியால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. எஸ் எஸ் ஆர் சிவாஜியை பீட் பண்ணுவதுபோல ஒரு ட்ரெண்ட் வரும்போது, எஸ் எஸ் ஆர் சிவாஜியின் மனநிலையைப் புரிந்து, விட்டுக்கொடுத்து சிவாஜியை வெற்றியடைய செய்வார். அதை புரிந்துகொண்ட சிவாஜி எஸ் எஸ் ஆரை உயிர் நண்பனாக்கிவிடுவார்.

சிவாஜி குடும்பத்தின் உதவியால்தான் எஸ் எஸ் ஆர் படிக்கவே செய்வார். இப்படி நண்பர்களாக இருக்கும்போது, ஒரு நாள் தன் எஸ்டேட் வேலை சம்மந்தமாக சுற்றிப் பார்க்க சிவாஜி காரில் போவார். அப்போ எதார்த்தமாக சிவாஜி சரோஜாதேவியை சந்திப்பார். சரோஜாதேவியின் காதல், காதலன் பற்றி தெரியாது. அவளை காதலிக்க ஆரம்பித்துவிடுவார்.

2) மானாட்டம் வண்ண மயிலாட்டம் பாடல்

சரோஜாதேவியின் பெயர், “மீனா”. ஆனால், அவள், எஸ் எஸ் ஆரிடன் தன் பெயர் “வானம்பாடி” என்று சொல்லி இருப்பார்.

சிவாஜி, தன் எஸ்டேட் வேலையாள் நாகையாவைப் பார்க்கப்போவார். அப்பொழுது நாகையா பெரும் பிரச்சினையில் இருப்பார். நாகையாவுக்கு 2 மகள்கள். மூத்தவள் புஷ்பலதா, இளையவள் சரோஜாதேவி (மீனா). புஷ்பலதா, நடிகவேள் மகன் மேல் காதலில் விழுந்து கற்பிணியாகிவிடுவாள். நாகையா ஏழை என்பதால் புஷ்பலதாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள நல்ல நடிகவேள் மறுத்துவிடுவார். புஷ்பலதா ஜோடி, எ வி எம் ராஜன்னு நினைக்கிறேன், சரியா தெரியலை. இந்த ஒரு சூழ்நிலையில், சிவாஜி நாகையா குழம்பி, அழுதுகொண்டு இருக்கும் நிலையில் நாகையாவுவுக்கு உதவி செய்து (பண்மதானே பிரச்சினை), நடிகவேள் கேட்கும் வரதட்சணை மற்றும் தேவையான பணம் கொடுத்து கல்யாணத்தை ஏற்பாடு செய்வார். இந்த பேருதவியை செய்துவிட்டு, சரோஜாதேவியை தான் மணம் முடிக்க ஆசை என்பதையும் சொல்லிடுவார். அவளை யோசித்து பதில் சொல்ல சொல்லுவார்.

சரோஜாதேவி தன் காதலை (எஸ் எஸ் ஆர்) தன் தந்தையிடம் சொல்ல முடியாது. அக்கா கெட்டுப்போயிட்டாள், தன் நிலையும் அதே என்று சொல்ல முடியாத நிலையாகிவிடும். மேலும் அக்கா திருமணம் சிவாஜியால் நடக்கப் போவதால், சிவாஜிக்கு நன்றிக்கடன் செய்வது அவர் ஆசைப்பட்ட தன் சின்ன மகளை தன் எஜமானுக்கு திருமணம் செய்துவைப்பது என்று நாகையா நினைப்பார்.

இதற்கிடையில், சிவாஜியும் எஸ் எஸ் ஆரும், தான் விரும்பும், காதலிக்கும் பெண்ணைப்பற்றி வர்ணிப்பார்கள். ரெண்டு பேரும் காதலிப்பது ஒரே பெண் என்று தெரியாது. இவர், வானம்பாடி என்பார், அவர் மீனா என்பார். இருவரும் தன் காதலிதான் பெஸ்ட் என்பார்கள். இவரும் ஒரே அதே சரோஜாதேவிதான். இது பின்னாலதான் தெரியும்

சிவாஜியின் விருப்பப்படி எஸ் எஸ் ஆரே சிவாஜிக்கு பெண் பார்க்கப்போவார். அங்கே போனதும்தான் தெரியும், சிவாஜி விரும்புவதுதன் ஆருயிர் காதலியை என்று! இந்த சூழ்நிலையில் வீட்டு நிலைமை ரொம்ப மோசமாக இருப்பதால் (அப்பா தற்கொலை செய்துகொள்வார். அக்கா மானம் போயிடும் போன்ற பிரச்சினைகள்)சரோஜாதேவிக்கு எஸ் எஸ் ஆரை டம்ப் பண்ணுவதைத்தவிர வேறு நல்ல வழி தெரியாது. They will show as if it is an infatuation rather than love. எஸ் எஸ் ஆரிடம், தன் அக்கா நிலைமையை சொல்லி சரோஜாதேவி விளக்குவார். எஸ் எஸ் ஆருக்கு என்ன செய்வதென்று தெரியாது.

இந்த நிலையில் எஸ் எஸ் ஆரை விஜயகுமாரி காதலிப்பார். அதுவும் ஒருதலைக் காதல்தான்.

3) தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே
அநத தூக்கமும் அமைதியும் நான் ஆனால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன்

என்கிற அருமையான ஜானகி பாடல் இந்த ஜோடிக்கு!

சிவாஜிக்கு, எஸ் எஸ் ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இருந்த ரிலேஷன்ஷிப் தெரியாது. அது நன்மையைக் கருதி இவர்களால் சிவாஜியிடமிருந்து மறைக்கப்படும். சிவாஜிக்கு சரோஜா தேவியை நிச்சயம் செய்துவிடுவார்கள். எஸ் எஸ் ஆரால் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியும் இல்லைனு ஆகிவிடும்.

கல்யாணத்திற்கு முன்பே சரோஜா தேவி சிவாஜி மாளிகையிலேயே தங்குவார். சிவாஜி, சரோஜாதேவிக்கு ட்ரைவிங் சொல்லிக்கொடுப்பார். நம்ம வில்லன் நடிகவேள், நாகையா மேல் உள்ள பொறாமையில் காரில் ட்ரைவிங் பழகும் காரில் ப்ரேக்கை கழட்டிவிட்டு விடுவார். அன்று சரோஜா தேவிமட்டும் தனியாக காரில் ட்ரைவ் பண்ணுவார். சிவாஜியும் எஸ் எஸ் ஆரும் ஃபாளோ பண்ணுவாங்க இன்னொரு காரில். சரோஜாதேவி காரில் ப்ரேக் பிடிக்க்கவில்லை என்று தெரிந்ததும். சிவாஜி அவரை காப்பாற்ற கார் விட்டு கார் தாவி, காரை மரத்தில் மோதி நிறுத்துவார்.

விபத்துக்குப் பிறகு சரோஜா தேவிக்கு சின்ன காயம். அவரை காப்பாத்தப் போன சிவாஜிக்கு கால் ஊனமாகிவிடும். He wont lose his legs but he will lose the feelings in them.

உடனே சிவாஜி சரோஜா தேவிவை வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ என்பதுபோல சொல்லுவார். ஆனால், சரோஜா தேவி, என்னாலதான் உங்க கால் போனது என்று சொல்லி அவரையே மணம் முடிக்கப் போவதாக சொல்லுவார். Now Saroja devi will start loving Sivaji but wedding will be postponed.

4) கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?


5) பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே

பாடல்கள் வரும்.

எஸ் எஸ் ஆரால் விஜயகுமாரியை காதலிக்க முடியாது. சரோஜா தேவியை மறக்கவும் முடியாது. சரோஜா தேவி ஓரளவுக்கு எஸ் எஸ் ஆரை மறந்து சிவாஜியை காதலிக்க ஆரம்பித்துவிடுவார்.

இந்த நேரத்தில், ஒரு கல்யாணப் பத்திரிக்கை வரும். அந்த கல்யாணத்திற்கு சிவாஜி உடல் நிலை கோளாரால் போகமுடியாது என்பதால், தன் உயிர் நண்பனையும், தன் வருங்கால மனைவியையும் சேர்த்து போய் வரச் சொல்லுவார். எஸ் எஸ் ஆரால் சரோஜா தேவியை காதலிக்காமல் இருக்க முடியாது. அவன் மனது அவளிடம் இன்றும் சஞ்சலப்படும்.

இந்த நேரத்தில் நம்ம நடிகவேள் சிவாஜியிடம் “சாவி" போட்டு விடுவார்.

“என்ன இருந்தாலும் நீங்க நண்பரோட அனுப்பக்கூடாது. ஊர் உலகம் ரெண்டு பேருக்கும் ஏதோ தொடர்புனு பேசும்” என்பார்.

“சுத்த லோ-க்ளாஸ்யா நீ!” என்று நடிகவேளை திட்டுவார் சிவாஜி.

“லோ-க்ளாஸ்ல இது மாதிரி நடந்தா வெட்டிப்புடுவாங்க. ஹை-க்ளாஸ்தான் ஊருக்கெல்லாம் தெரிந்த பிறகு நமக்குத்தெரியும்” என்பார் விடாமல்.

அவரை திட்டி அனுப்பிவிடுவார் சிவாஜி.

ஆனால்...இங்கே உளமனதில் சிவாஜிக்கு ஆரம்பிக்கும் சந்தேகம்.

அவருடைய பொஸஸிவ்னெஸ். மிருக வெறி தலைதூக்கும்! சிவாஜிக்கு நண்பனை சந்தேகப்படுகிறோமே என்று அவமானமாக இருக்கும் அதே நேரம், நண்பன் நடத்தைமேல் சந்தேகம் தீராது! அவர் வெறி ஒருபுறம் நண்பனை பழிவாங்க தூண்டும்.

அவர்களிடம் (நண்பன் மற்றும் மனைவியாகப்போகிறவள்) தன் நிலைமையை சொல்லுவார். அதாவது தான் ரொம்ப கேவலமான ஒருவன். சுயநலக்காரன். சிறுவயதில் ஜெயிலுக்குப்போனவன். கொலைகாரன்! இன்றும் அதே போல் உங்களை சந்தேகப்படுகிறேன் என்று. நீங்கள் அப்படி இல்லை என்பார். ஆனால் எஸ் எஸ் ஆர் மனது சஞ்சலப்படுவதால் சிவாஜி நிலைமை ரொம்ப மோசமாகும். இருவரும் தங்கள் பழைய காதலை மறைத்ததால் கில்ட்டியாக ஃபீல் பண்ணுவார்கள். இங்கேதான் படம் சூடு பிடிக்கும்.

பிறகு பல திருப்பங்களுக்குப் பிறகு சிவாஜி, தன் நண்பனுடைய காதலியை தான் பறித்துக்கொண்ட அவமானத்தில் தான் தற்கொலை செய்ய மலை உச்சியில் இருந்து கீழே விழுவார். நண்பனையும் அவர் காதலியையும் சேர்ந்து வாழ சொல்லி வலியுறுத்திவிட்டு. அவரை அவர் வேலை ஆள் ஒருவர் காப்பாற்றி விடுவார்.

6) சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா பாடல்!

அப்புறம் க்ளைமாக்ஸ்! :))

Thursday, September 10, 2009

"மர்மயோகி"யால் கமலுக்கு லீகல் பிரச்சினை!

மர்மயோகி கைவிடப்பட்டதால், சில பணப்பிரச்சினைகள் ஒழுங்காக செட்டில் பண்ணப்படவில்லை என்று தோன்றுகிறது.

சிதம்பரம் என்கிற ஒரு வக்கீல், பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சார்பில், கமலுக்கு (ராஜ் கமல் பிக்ச்சர்ஸ்) ஒரு லீகல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

Legal notice for Kamal

Special Correspondent

CHENNAI: An entertainment company has issued a legal notice to Rajkamal Films International and actor Kamal Hasan seeking return with interest of Rs. 10.90 crore which had been paid pursuant to a memorandum of understanding in respect of a joint venture project of Tamil picture “Marmayogi.”

In his notice, counsel A. Chidambaram said his client Pyramid Saimira Production International Ltd., had entered into the MoU for the project at an estimated budget of Rs. 100 crore. The notice said it was unfortunate that though Rs. 10.90 crore had been received by Rajkamal Films and the actor, they had failed either to confirm the crew or commenced the production of “Marmayogi”. Besides not refunding the amount with 24% interest, the two had started own production of Tamil and Telugu versions of “Unnaipol Oruvan” by diverting the funds received from Pyramid Saimira Production. The notice warned that failure to return the amount would invite court proceedings, both civil and criminal.

-ஹிந்து


கமலஹாசனை, அவர் வாங்கிய அட்வாண்ஸ் 10.9 கோடியை திருப்பி கொடுக்க வேண்டும் இல்லை என்றால், அவர் மேல் சிவில் மற்றும் கிரிமினல் கேஸ் தொடரப்படும் என்று சொல்லியிருக்கிறது!

என் மேலே கோபமா, கண்ணன்?- கடலை கார்னர் (18)

"வாங்க பிருந்தா அவர்களே!"

"என் மேலே கோபமா, கண்ணன்?" அவள் குரலில் வருத்தம் தெரிந்தது.

"இல்லையே, பிருந்தா. நான் கொஞ்சம் அதிகமா அப்படி பேசி இருக்கக்கூடாதுதான். ஸ்டெய்ஸி கோபித்துக்கொண்டால் என்ன செய்றது? நான் கவனமாத்தான் பேசனும் இல்லையா?"

"அவளாவது உங்க மேலே கோபித்துக்கொள்றதாவது? அவ எதுவுமே சொல்லல"

"உன்னை மாதிரி அவ வெளியிலே காட்ட மாட்டாள், அவ்வளவுதான்"

"தெரியலை. நான் ஏன் இப்படி ரியாக்ட் பண்ணினேன் னு. Then I felt bad for being rude to you and thought of calling you. அப்புறம் ஃபோன்ல நீங்க ஏதாவது சண்டை போட்டுருவீங்களானு பயம். சரினு கால் பண்ணாமல் விட்டுட்டேன்"

"நல்லா தூங்கினயா? இல்லையா?"

"சரியா தூங்கலை. எல்லாம் உங்களாலதான்"

"என்னை கால் பண்ணி இருக்கலாம் இல்ல? அவளுக்கு சேலை எப்படி இருந்தது? பொம்மை மாதிரி இருந்தாளா?"

"ரொம்ப நல்லா இருந்தாள் சேலையில். நீங்கதான் இல்லாமல் போயிட்டீங்க அவளைப் பார்த்து ரசிக்க"

"நல்லவேளை அவ வந்தாள்"

"வரலைனா? உங்களை நான் கெடுத்து இருப்பேனா என்ன?"

"அப்படி பண்ணினால் பரவாயில்லையே. என்னை கெடுக்க வச்சிருப்ப"

"அதுவும் எங்க தப்பா?"

"அழகா இருக்கிறது தப்புதான்"

"உங் ஸ்டெய்ஸிகூட சேலைல அழகாத்தான் இருந்தாள்"

"உனக்கு "க்ரீன் ஐட் மான்ஸ்டர்" பத்தி தெரியுமா, பிருந்தா?"

"You mean green-eyed monster?"

"ஆமா"

"இப்போ யாரு, நானா green-eyed monster, கண்ணன்?"

"நீ மாண்ஸ்டெர்லாம் இல்லை, நீ க்ரீன் - ஐட்- ஏஞ்சல்"

"குறை சொல்வதில்கூட ஒரு மாதிரி ஐஸா?! உங்களால மட்டும்தான் முடியும்!"-

"ஏய் மக்கு! உன்னைப்போயி யாராவது மாண்ஸ்டர்னு சொல்லுவாங்களா?"

"இப்போ எதுக்கு இந்த மான்ஸ்டரை பிடிச்சு வந்தீங்க?"

"ஷேக்ஸ்பியர் இருக்கார் இல்லை? அவர் "பொறாமையை" இப்படி சொல்லியிருப்பாராம்"

"என்ன லிட்டெரேச்சர்லாம் படிச்சிருக்கீங்களா என்ன? சேக்ஸ்பியர் அது இதுனு பயமுருத்துறீங்க?"

"நீ வேற! நானாவது லிட்டெரேச்சர் படிக்கிறதாவது? யாரோ சொன்ன ஞாபகம்"

"யார் அது?"

"யாருனு ஞாபகமில்லையே"

"சரி என்ன சொல்ல வர்றீங்கனு, சுத்தி வளைக்காமல் சொல்லுங்க"

"நீ என்னோட ரொம்ப க்ளோஸ், இல்லையா? நீ ஏதாவது கோபத்தில் சொன்னல் உன்னிடம் எனக்கு கோபமோ, எரிச்சலோ வராது, நீ என்னை என்ன சொன்னாலும். அதனால் இப்படி எதுவும் நெனச்சு கவலைப்படாதே"

"நெஜம்மா?"

"எங்க அடிச்சு சத்தியம் பண்ண?. அதுக்காக பொறுக்கி அது இதுனு திட்ட ஆரம்பிச்சுறாதே"

"இந்த டயலாக் க்கு மட்டும் உங்ககிட்ட குறைச்சலே இல்லை"

"ஆமா நான் சிவாஜி, நீ வாணிஸ்ரீ உன்னிடம் நான் வசந்த மாளிகை டயலாக் பேசுறேன்"

'அது யாரு வாணிஸ்ரீ?"

"பழைய நடிகை. ரொம்ப செக்ஸியா இருப்பாள்"

"அந்தக்காலத்து ஆண்ட்டியைக் கூட விடமாட்டீங்களா, கண்ணன்?"

'அதுக்காக நான் மற்ற பெண்களை பத்தியே பேசவே கூடாதா?'

"எதுக்காக? நீங்க ரொம்ப இண்ட்டிமேட் மாதிரி ஸ்டெய்ஸிட்ட பேசுறீங்க தெரியுமா?"

"அவ எதுக்கும் கோவிச்சுக்க மாட்டேன்கிறாடா. அதனால் சும்மா அப்படி பேசுவேன். அவ்வளவுதான்"

"என்னை வாடா போடானு சொல்லி ரொம்ப ஏமாத்துறீங்க, கண்ணன்"

"ஏன் அப்படி கூப்பிடுவது பிடிக்கலையா?"

"பிடிக்காத மாதிரியா தெரியுது?"

"தெரியலை. நீயே சொல்லு"

"என்னை நீங்க ரொம்ப ஏமாத்துறீங்க"

"நான் ஏமாத்தவெல்லாம் இல்லை! உன்னை அப்படி கூப்பிடத் தோனுது கூப்பிடுறேன். பிடிக்கலைனா சொல்லு "வாடி போடி" னு கூப்பிடுறேன்"

"நானா ஏமாறுகிறேன்னு சொல்றீங்களா? "வாடி போடி" ரொம்ப நல்லாயிருக்கு"

"இப்போ என்ன வேணும் உனக்கு?"

"ஏதாவது தர்றீங்களா?"

"பசிக்குதா?"

"எப்படி ரொம்ப இண்ணொசண்ட் மாதிரி அப்பப்போ நடிக்கிறீங்களே, அதெப்படி?'

"ட்யூப் லைட் சான்றிதழை அப்பப்போ யூஸ் பண்ணிக்கனும். இது காண்டீன், இங்கேலாம் எல்லாம் தரமுடியாது"

"இட் இஸ் ஓ கே வித் மி. எனக்கு பப்ளிக அட்டென்ஷன் பிடிக்கும்"

"நீ அந்த கேஸா?"

"ஆமா. சரி, ஏதாவது படத்துக்கு கூட்டிப்போறீங்களா, இந்த வீக் எண்ட்?"

"ஏன் உன் ஃப்ரெண்ஸ்லாம் எங்கே? லூசு மாதிரி ஒர் ரெண்டு மூனு திரியுமே உன்னோட"

"அவளுக இருக்காளுக. லூசுனு நீங்க சொன்னதை சொன்னா, உங்களை நானே காப்பாத்த முடியாது"

"எங்கே பிடிச்ச அதுகளை?"

"அவங்களை விடுங்க. உங்களோட போய் படம் பர்ர்த்தால் எப்படி இருக்கும்னு ஒரு சின்ன க்யூரியாஸிட்டி"

"என்ன படம் போகனும்?"

"எதாவது படம்"

"படம் பார்க்கத்தானே?"

"LOL"

"நீ ரொம்ப மோசம், பிருந்தா"

"நல்லா என்னை காப்பி அடிக்கிறீங்க", அவள் சத்தமாக சிரித்தாள்

"சரி, நான் முடியுமானு பார்க்கிறேன்"

"ஏன் வேற எவளோடையும் டேட் இருக்கா?"

"ஆமா, வந்து லைன்ல நிக்கிறாங்க. நீ வேற!"

-தொடரும்

Wednesday, September 9, 2009

மறுபடியும் ஒரு கமல் vs ரஜினி!!!

நம்ம அனுபவத்தை பொறுத்துத்தான் நம்ம கருத்துக்கள் வெளிவருகிறது. மாறுபட்ட அனுபவங்கள் உள்ளவர்கள் வேறுபட்ட கருத்துக்களைத்தான் சொல்வார்கள் என்பதை இதிலிருந்து பார்க்கலாம்.

"எந்த கஷ்டம் வந்தாலும் கணவனுக்கு மனைவிதான் துணையாக நிற்கிறார். எனவே கணவன் - மனைவி என்பதைவிட துணைவன்-துணைவி என்பதே பொருத்தமானது. எவ்வளவு கஷ்டத்திலும் கூடவே இருந்து பகிர்ந்து கொள்பவள் மனைவி என்கிற துணைவிதான்"

-நடிகர் ரஜினிகாந்த் (மணிவண்ணன் மகள் திருமணத்தில்)


திருமணங்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றன. அது தொன்மையானதுமல்ல! சக்தி வாய்ந்ததும் அல்ல! ஆனால் குடும்பம்தான் சக்தி வாய்ந்த அமைப்பு. அதை நீங்கள் என்னிடமும் சுருதியிடமும் பார்க்க முடியும்.

-நடிகர் கமலஹாசன் (சமீபத்திய பேட்டியில்)

ரஜினிக்கு அடுத்து விஜய்தான் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்!


ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவில் நம்ம விஜய்தான் பாக்ஸ் ஆஃபிஸ்ல ரொம்ப தோல்விகளைத் தராதவர்னு சொல்லலாம். இதற்கு காரணம் என்னனா இவர்களுக்கு சி செண்டர்ல இருந்து எ செண்டர் வரை ஓரளவுக்கு ரசிகர்கள் பலம் அதிகம்.

இப்போ விஜய் நடித்த அ த ம, குருவி, வில்லு மூன்றும் தோல்வியடைந்தாலும் இவருக்கு சூப்பர் ஸ்டார் மதிப்பு குறைந்ததாக தோனவில்லைனு நான் சொன்னால் அடிக்க வராதீங்க!

தோல்விகளில் பல வகை உண்டு. விஜயோட இந்த மூன்று படங்களும் தோல்வியடைந்தாலும், இவர் இன்னும் இளம் நடிகர்களில் முதலிடத்தில்தான் இருக்கார். ஆனால் இதே மாதிரி இன்னும் ஒரு மூனு படம் விழுந்தால் என்ன ஆவார்னு தெரியலை.

குருவி-> வில்லு-> வேட்டைக்காரன்!

ஏன் இவர் படப்பேரெல்லாம் இப்படி ஒரு "பேட்டர்ன்"ஆ இருக்கு?!!!

Monday, September 7, 2009

படித்தால் மட்டும் போதுமா?


இன்னொரு பீம்சிங் “ப” வரிசைப்படம். இசை: விஸ்வநாதன் -ராமமூர்த்தி. பாடல்கள்: கண்ணதாசன். சிவாஜியை ஹீரோவாக வைத்து. கணவன் - மனைவி உறவு பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு காவியம் இது. குடும்பப்பிரச்சினை இல்லாத வீடு ஏது? பெண், அன்பின் வடிவமாகவும் இருப்பாள், பேயாகவும் அரக்கியாகவும் மாறுவாள். ஒரு ஆணை மனிதனாக்குவதும் பெண்தான், மிருகமாக்குவதும் பெண்தான்! ஒருவனை ஆக்குவதும் பெண்தான், அழிப்பதும் பெண்தான்.

சிவாஜி-ராஜ சுலோசனா, சாவித்திரி-பாலாஜி, ரங்கா ராவ், எம் வி ராஜம்மா, சஹஸ்ரநாமம்-கண்ணாம்பா, நடிகவேள் எம் ஆர் ராதா, முத்துராமன், எ. கருணாநிதி, மனோரமா நடித்த ஒரு குடும்பப்படம்.

சிவாஜி ஒரு இல்லிட்டரேட், ஆனால் பெரிய ஜமீந்தாருடைய ஒரே பையன். ஜமீந்தார் குடும்பமான கண்ணாம்பா-சகஸ்ரநாமமுடைய ஒரே மகன். வேட்டையாடுவது பொழுதுபோக்கு. ஆனால் நல்லவன். படிப்பறிவு இல்லாததால் வீட்டிலும், அப்பாவிடமும் மரியாதை கிடையாது.

1) ஓஹோஹோ மனிதர்களே ஓடுவதெங்கே செல்லுங்கள் பொய்களை விற்று உண்மையை வாங்கி உருப்புட வாருங்கள். பாடலில் சிவாஜி அறிமுகமாவார்.

சிவாஜியின் கசின் பாலாஜி. அதாவது பெரியப்பா மகன். அண்ணா என்றால் தம்பிக்கு உயிர். பெரியப்பா-பெரியம்மா உயிருடன் இல்லை. சிவாஜியின் அம்மா அப்பாதான் இவரையும் பாசத்துடன் வளர்ப்பார்கள். பாலாஜி நல்லா படித்து பட்டம் பெற்றவர். வீட்டில் அவருக்கு மரியாதை அதிகம். நாகரீகம் தெரிந்தவர்.

அண்ணன் - தம்பி இருவரும் ராமன் லக்ஷ்மணன் போலதான் இருப்பாங்க. சிவாஜி, அண்ணனான பாலாஜியின் படிப்புக்கு உதவுவதுடன், அண்ணன் அறிவாளினு பொறாமைப்படாமல் பெருமைப்படுவார். பாலாஜியும் தம்பிமேல் உயிரா இருப்பார். எதுவரை? ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும் வரை.

நடிகவேள்தான் கல்யாணத் தரகர். தரகரா வந்து கிளப்பி இருப்பார்- அவருக்கே உள்ள தனி பாணியில். அண்ணன், தம்பி ரெண்டுபேருக்கும் பொண்ணு பார்க்கலாம்னு ஜமீந்தாரிடம் சொல்லுவார்.

அண்ணன் படித்தவன், அவனுக்கு படித்த பெண்ணாகவும், படிக்காத தம்பிக்கு படிக்காத ஒரு பெண்ணை பார்க்க ஜமீந்தார் கட்டளைப்படி ஏற்பாடு நடக்கும்.

அண்ணன் பெண்ணைப் பார்க்க தம்பியும், தம்பி பெண்ணைப் பார்க்க அண்ணனும், “பெண் பார்க்க”ப் போவார்கள்.

வித்தியாசமான இந்த முயற்சி விபரீதமாக முடியும்.

இங்கே சிவாஜி பாலாஜிக்காக ராஜ சுலோச்சனாவை பார்க்கப் போகும்போது பாலாஜி, சிவாஜிக்கு சில ஆங்கில வாக்கியங்கள் சொல்லிக் கொடுத்து அனுப்பிவிடுவார். சிவாஜியும் அதை வைத்து மேனேஜ் பண்ணுவார். சிவாஜி, படிக்காதவர்னு ராஜ சுலோச்சனாவுக்கோ, அவர் அப்பா ரங்காராவுக்கோ தெரியாது. சிவாஜி, ராஜ சுலோச்சனாவை அண்ணியாகத்தான் பார்ப்பார்.

ஆனால், சாவித்திரியை சிவாஜிக்காக பார்க்கப்போன பாலாஜிக்கு சாவித்திரியை ரொம்ப பிடித்துவிடும். அவர், தம்பிக்கு போன பெண்ணை காதலிக்க ஆரம்பித்துவிடுவார். அவளை தான் மணக்க ஆசைப்படுவார்.

2) பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா? பாடல் வரும். இருவரும் தான் பார்த்த பெண்ணைப் பற்றி கருத்தை இருவரும் “நண்பர்கள் போல” பரிமாறிக்கொள்வார்கள்

தம்பிக்கு பார்க்கப்போன படிக்காத பெண்ணை தானே மணப்பதற்காக ஒரு சின்ன பித்தலாட்டம் பண்ணுவார், பாலாஜி. அதாவது இவர் மணக்கவேண்டிய, ராஜசுசுலோச்சனாவின் அப்பா ராவ் பகதூர் (ரங்காராவு)க்கு தன்னைத்தானே குறைத்து, தன்னை ஒரு குடிகாரன், காட்டுமிராண்டி நு எழுதி இவரை வெறுக்குமளவுக்கு பொய் சொல்லி ஒரு கடிதம் எழுதிப்போட்டு விடுவார்.

அதேபோல் சிவாஜியைப்பற்றி மோசமாக சாவித்திரி அண்ணன் முத்துராமனுக்கும் எழுதிப்போட்டுவிடுவார். ரெண்டுமே மொட்டை கடிதாசிகள். இதைப்படித்து நம்பிய படித்த ராஜசுலோச்சனா, மேலும் அவர் அப்பாவான வரட்டு கவுரவத்தில் வாழும் ராவ் பகதூர் ரங்காராவ், பாலாஜியை வெறுத்து, சிவாஜியை ராஜ சுலோச்சனாவிற்கு மணம்முடிக்க முடிவு செய்துவிடுவார்கள். சிவாஜி ஒரு படிக்காதவர் என்று இருவருக்கும் தெரியாது. பாலாஜி, சாவித்திரியை ப்ளான் பண்ணியபடி மணந்துகொள்வார்!

இங்கே மிகப்பெரிய மிஸ்-மேட்ச் சிவாஜி- ராஜ சுலோச்சனா ஜோடி!

சிவாஜி, படிக்காதவன் நு தெரிந்ததும், படித்த அவர் மனைவியும் (ராஜ சுலோச்சனா), மாமனாரும் (ராவ பஹதூர் ரங்காராவ்) அவரை அவமானப்படுத்து வதுடன், அவர்தான் இந்த மொட்டைக் கடிதாசி எழுதியதாக குற்றம் சாட்டப்படுவார்.

3) கோமாளி கோமாளி கோமாளினு ஒரு பாட்டு வரும். படித்தவன்போலே நடிப்பவன் கோமாளினு ஒரு வரி வேற! இவர்கள் கல்யாண ரிசப்ஸனில் வரும்!

ராஜ சுலோச்சனா அவரை முழுமனதாக வெறுப்பார். Sivaji's life is completely screwed up because of Balaji's manipulation. சிவாஜி படிக்காதவர் என்பதால் அவர் அப்பாவும் அவரை மதிக்கமாட்டார். அவர் அம்மா, கண்ணாம்பா மட்டும் சிவாஜியை நம்புவார் பிரியமாக இருப்பார்.

அதே சம்யத்தில் சாவித்திரி-பாலாஜி ஜோடி எல்லா வகையிலும் நற்பெயருடன், பெரியவர்கள் ஆசியுடன் அழகா குடும்பம் நடத்துவாங்க. பாலாஜி செய்த துரோகம் தெரியாத சிவாஜி, அண்ணன் அண்ணி மேலே உயிராக இருப்பார். அவர்களாவது சந்தோஷமாக இருக்கிரார்களே என்று சந்தோஷப்படுவார். சாவித்திரியும் சிவாஜி மேல் அன்பாகவே இருப்பார். ஆனால் சிவாஜியின் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு பாலாஜி மொட்டை கடிதம்தான் காரணம் என்று சிவாஜிக்கோ, சாவித்திரிக்கோ தெரியாது.

குடும்பப்பிரச்சினை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருக்கும். இந்த சமயத்தில் இந்தப் பாடல் வரும்! சிவாஜி தன் நிலையை விளக்கி தன்னை வெறுத்து ஒதுக்கும் மனைவியிடம் பாடும் பாடல்!

4) நான் கவிஞனும் இல்லை!
நல்ல ரசிகனும் இல்லை!
காதலெனும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை!

இரவு நேரம் பிறரைப்போல என்னையும் கொள்ளு(ல்லு)ம் துனை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும்?

கூட்டு வாழக்கை, குடும்ப வாழ்க்கை புரியவில்லையே நான் கொண்டுவந்த பெண் மனதில் பெண்மை இல்லையே!

What a song! Written by genius KaNNadAsan!!!

இன்னும் நல்ல பாடல்கள்

5) தன்னிலவு தேனிரைக்க (பி சுஷீலா பாட்டு)

6) நல்லவன் எனக்கு நானே நல்லவன் (டி எம் எஸ், பி பி எஸ்)

7) அண்ணன் காட்டிய வழியம்மா

கடைசியில், உண்மை வெளியே வரும். எல்லா பிரச்சினைக்கும் காரணம் அந்த மொட்டை கடுதாசி. அதை எழுதியது யார் நு பார்த்தால், அது பாலாஜி என்று தெரியவரும்! தன் உயிருக்கு உயிரான அண்ணன்!!!

வெறி பிடித்த சிவாஜி, வேட்டை துப்பாக்கியுடன் உண்மையை விசாரிக்க அண்ணனிடம் போவார். அப்போது சாவித்திரி, தன் கொளுந்தனார் அவர் அண்ணனை (தன் கணவனை) கொல்லப்போகிறாரோ என்று பயந்து துப்பாக்கியை சிவாஜியிடம் இருந்து பறிக்க முயற்சிப்பார். இப்படி இழு பறியில் இருக்கும்போது சாவித்திரி தெரியாமல் ட்ரிகரை அழுத்திவிடுவார். குண்டு பாலாஜிமேல் பாய்ந்து பாலாஜி இறந்து விடுவார்.

கடைசியில் சிவாஜி/சாவித்திரி போராட்டத்தில் ஆக்ஸிடெண்டலாக யாரோ ட்ரிகரை அழுத்தி குண்டு பாய்ந்து இறந்ததாக சாவித்திரி சாட்சி சொல்லி சிவாஜி விடுதலை செய்யப்படுவார்.

தரமான, குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் (பாடம்) இது!

SHUT UP Kannan! -கடலை கார்னர் (17)

“ஸ்டெய்ஸிதான் கண்ணன்”

“ஹாய் ஸ்டெய்ஸி”

“What a surprise, Kannan! Why didn't you pick up the phone, Brindha?”

“I thought it was a just a casual call, Stacy”

“It is but I went and got the Saree and blouse from that shop. I want to try it right now! I am sorry if I came in an awkward time, guys”

“Not at all. You know what? I can help you too, Stacy”

“yeah, kaNNan, you can help me wear the petticoat. LOL!”

“Did you get a matching panties too, Stacy? LOL”

“Of course! LOL”

“SHUT UP, Kannan!”

“Hey! He is only joking, Brindha! Take it easy”

“OK, OK, OK, sorry if crossed the line. I better get going, Stacy”

“Why? I want you to tell me how I look in Saree”

“Nope, I have to be going Stacy. I was getting ready to leave. Some other time I will check you out, OK?”

“OK, Kannan!”

“பார்க்கலாம் கண்ணன். தேங்க்ஸ் ஃபார் எவ்வெரிதிங்”

“See you both!”

-to be continued

Sunday, September 6, 2009

நீங்க ரொம்ப மோசம் தெரியுமா? -கடலை கார்னர் 16

"எங்கே உங்களை ஆளையே காணோம்? எங்கே போனீங்க, கண்ணன்"

"கண்ணை மூடுனா சொன்னபடி அப்படியே கேக்கிறயே. ரொம்ப நல்ல பொண்ணு நீ!" அவன் குரல் அவள் முதுகுப்புறமிருந்து வந்தது.

"உங்க மேலே ஒண்ணும் பெரிய நம்பிக்கைலாம் இல்லை! ஒரு ஹிடன் கேமரா ஆண் பண்ணி வச்சிருக்கேன். நான் கண்னை மூடி இருக்கும்போது நீங்க ஏதாவது திருட்டுத்தனம் பண்ணினால் அதிலே தெரியும். ஜாக்கிரதை"

"உன் வீட்டில் இருந்து எதையாவது திருடினாலா?"

"அந்தத் திருட்டுத்தனம் இல்லை! இவதான் கண்ணை மூடி இருக்காளேனு உங்க ஆராய்ச்சியை என் மேலே பாய்ச்சினால்"

"நீ திருட்டுத்தனமா மனசுல கற்பனை பண்ணுவதை எல்லாம் நான் எப்படி படம் பிடிப்பது?"

"என்ன கற்பனை பண்ணினேன்?"

"நீ ரொம்ப கெட்ட கற்பனைலாம் பண்ணுறனு என் சிக்ஸ்த் செண்ஸ் சொல்லுது. உண்மையா பிருந்தா?"

"என் மனசுலகூட எனக்கு ப்ரைவஸி கிடையாதா? இதெல்லாம் அநியாயம், கண்ணன்"

"என்ன கற்பனை பண்ணின, பிருந்தா?"

"அதெல்லாம் சொல்ல முடியாது!"

"இப்படியெல்லாம் கெட்ட கெட்ட கற்பனைபண்ணினால் எப்படி தூக்கம் வரும்?"

"அது எனக்கு கெட்ட கற்பனையா தோனலையே. அதான் உங்களை இங்கே இருந்து என்னைத் தூங்க வைக்க சொல்றேன்"

"நீ நல்லாத் தூங்கிடுவ, சரி. என் கதி?"

"ஆமா, என் பின்னால போய் நின்னு என்ன ஆராய்ச்சி பண்ணுறீங்க, கண்ணன்?"

"ஒண்ணும் பண்ணல" அவள் காதருகில் அவன் குரல் கேட்டது.

"கண்ணை மூடி இருக்கும்போது அங்கே இங்கே ஆராய்ச்சி பண்ணுறீங்களா?"

"நீ பேசுறதைப் பார்த்தால் உன்னை திருட்டுத்தனமா நான் பார்த்து ரசிப்பதை ரெக்கார்ட் பண்ணி டேப்ல பார்த்து ரசிப்ப போல இருக்கு"

"கண்ணன்! நீங்க ரொம்ப மோசம் தெரியுமா?'

"சரி, வேலையிலிருந்து வந்ததும் இப்போ குளிச்சியா?"

"ஆமா. எப்படித் தெரியும்?"

"பார்த்தா தெரியுது. ஏய்! உன் கழுத்திலே ஏதோ நறுமணம் வருது, பிருந்தா. உங்க அம்மா சொன்னது என்னவோ சரிதான்"

"அம்மாவா? என்ன சொன்னாங்க?"

"அதான்.. நான் உன் அழகில் மயங்கி உன்னை ஏதாவது செஞ்சிருவேன்.. நீ கவனமா இரு.. அது இதுனு சொன்னாங்க இல்ல?"

"உங்களை ரொம்ப நல்லவர்னு நெனச்சேன். நான் மோசம் போயிட்டேனா?"

"ஏன் நான் கொஞ்சம் கெட்டவரா இருந்தால் பிடிக்கலையா?'

"இல்ல.."

"பிடிக்குமா?'

"---"

"நீ ரொம்ப பொல்லாதவள் தெரியுமா?" அவள் பின்புறமிருந்து தோள்களை இரண்டு கைகளாலும் மெல்ல பிடித்து அவள் கன்னத்தில் லேசாக முத்தமிட்டான். அவன் நாடி அவள் வலது தோளின் மேல் இருந்தது.

அவன் உதடு அவள் கன்னத்தில் பட்டதால் அவள் உடம்பில் என்னென்னவோ நடந்தது. அவள் பதிலேதும் சொல்லவில்லை.

"---"

"இல்லையா?"

"---"

"ஏய்!"

"இப்போ எதுக்கு இந்த முத்தம்?"

"சும்மா அன்பா. கன்னத்திலேதானே கொடுத்தேன்? அதில் தப்பில்லை"

"யார் சொன்னா? அதோட விளைவுகளை அனுபவிப்பது நான். எனக்குத்தான் தெரியும்"

"நெஜம்மாத்தான் கன்னத்தில் முத்தம் கொடுப்பது சும்மா அன்பு முத்தம். வேணும்னா உங்கம்மாவை கால் பண்ணி கேளேன்?'

"என்ன கேக்க?'

"அம்மா! உதட்டில் முத்தம் கொடுத்தாத்தான் தப்பு, கன்னத்தில் கொடுத்தா தப்பில்லைனு ஒருத்தர் சொல்றாரு. அது உண்மையானு" கேளு!"

"சரியாப் போச்சு! உங்க அகராதிப்படி வேறெங்கே முத்தம் கொடுத்தா ரொம்ப தப்பு?'"

"உன் காதில் சொல்லுறேன். சரியா?"

"சொல்லுங்க'"

அவன் அவள் காதில் முனுமுனுத்தான்.

"நீங்க ரொம்ப ரொம்ப மோசம், கண்ணன்"

"ஏன் உன் முகம் இப்படி செவக்குது?"

"இப்படி ஒரு அசட்டுக்கேள்வி வேறயா? உங்களை என்ன செய்யலாம்"

யாரோ டோரை நாக் பண்ணினார்கள்

"யாரோ கதவை தட்டுறாங்க"

"சரி போய் யாருனு பாரு!"

பிருந்தா டோர் ஹோல் வெளியாகப்பார்த்தாள். கதவைத் திறந்தாள்.

-தொடரும்

Saturday, September 5, 2009

நடிகவேள் vs சத்யராசு!


பகுத்தறிவுவாதிகளில் எம் ஆர் ராதா ஒரு தனித்துவம் வாய்ந்தவர்தான். திராவிட பாரம்பரீகத்தில் வந்த எம் ஜி ஆர் தாய் மூகாம்பிகா பக்தர் மற்றும் இன்றைய முதல்வர் கருணாநிதிகூட சாய்பாபாவிடம் நட்பு பாராட்டுகிறவர் மற்றும் நாத்தீகவாதிகள் ஒதுக்கும் மஞ்சள் கலரை ஏற்றுக்கொண்டு தழுவிக்கொள்பவர் என குற்றச்சாட்டுகளை அடுக்கலாம். ஆனால் நடிகவேள் எம் ஆர் ராதா நாத்தீகவாதிகளில் இதுபோல் எதுவும் குறை சொல்ல முடியாதவர்.

இவர் நடித்த ரத்தக்கண்ணீர் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு! மேலும் தனிப்பட்ட தன் சொந்தப்பிரச்சினையில் எம் ஜி ஆரையே எதிர்த்து சுடுகிற அளவுக்கு ஒரு தைரியமான ஆள். ஊருக்காக வாழ்ந்தவனல்ல எம் ஆர் ராதா. அவருக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்டுகளும் இருந்தார்கள் என்பது உலகமறியும். அதை என்றுமே மறுத்ததும் இல்லை!

எம் ஆர் ராதா கடவுள் பக்தராக நடித்த "ஆளவந்தான்" (பாவ மன்னிப்பு) போன்ற ரோல்களிலும் அவர் கடவுளை கேலிபண்ணுவது போல்தான் இருக்கும். கடவுள் பேரைச்சொல்லி ஊரை ஏமாற்றும் ஒரு கேரக்டராகத்தான் நடித்தார். He was always himself- னு சொல்லாம். அவர் கடவுளை வணங்குவது கூட கேலி பண்ணுவதுபோல்தான் இருக்கும்.

நடிகர்களில் இப்போ நம்ம பார்க்கிற பகுத்தறிவுவாதி சத்யராஜ், கமலஹாஷன் எல்லாம் எம் ஆர் ராதா பக்கத்தில்கூட நிற்கமுடியாது! நடிப்பும் சரி, ஒரிஜினாலிட்டியும் சரி, தன் பகுத்தறிவு எண்ணங்களை தைரியமாக சொல்வதிலும் சரி.

நடிகவேளுக்கும் சத்யராஜுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணு இருக்கு. அது என்னனா நடிகவேள், எம் ஜி ஆருக்கு ஒரு நாளும் ஜால்ரா அடித்ததில்லை. சத்யராஜ், எம் ஜி ஆருக்கு ஜால்ரா அடிக்காமல் இருந்த நாளில்லை!

Wednesday, September 2, 2009

என்னைப் பற்றி கொஞ்சம்

thanks to nila

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABC s of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.

The Tag:

1. A – Available/Single? : Not available

2. B – Best friend? : Several

3. C – Cake or Pie?: Cake

4. D – Drink of choice? : Tea

5. E – Essential item you use every day? : Car, Computer

6. F – Favorite color? : Blue

7. G – Gummy Bears Or Worms?: What are these?

8. H – Hometown? : Southern Tamilnadu

9. J – January or February? : September

10. K – Kids & their names?: n/a

11. L – Life is incomplete without?: love, of course

12. M – Marriage date?: who knows

13. N – Number of siblings?: Two wonderful sisters

14. O – Oranges or Apples?: Why not both?

15. P – Phobias/Fears?: Nothing serious

16. Q – Quote for today? : உங்களுக்கு மிக மிக சந்தோஷமா இருக்கும் அதே நிமிடம் இன்னொருவருக்கு மிகவும் "நரக வேதனை" அனுபவிக்கும் நிமிடமும் கூட!

17. R – Reason to smile? : என்னைப் பார்த்து புன்னகைத்தால் புன்னகைப்பேன் :)

18. S – Season?: American Football season :)

19. T – Tag 4 People?

குறை ஒன்றும் இல்லை

ராமலக்ஷ்மி

சுரேஷ் (பழனியிலிருந்து)

துளசி டீச்சர்

20. U – Unknown fact about me? : People, in general, misunderstand me always as I am sort of mysterious!

21. V – Vegetable you don't like?: Beet root

22. W – Worst habit?: Expectations from friends

23. X – X-rays you've had?: Checking for presence of TB germs in lungs as the "skin test" was +ve due to the earlier BCG vaccination.

24. Y – Your favorite food? : வெண்பொங்கல் (தேங்காய்ச் சட்னி, சாம்பாருடன்)

-----------------------
  1. அன்புக்குரியவர்கள்: என் குறைகளை விலக்கி என்னிடமும் அன்போடு இருப்பவர்கள்.
  2. ஆசைக்குரியவர்: சொல்ல மாட்டேன் :-)))
  3. இலவசமாய் கிடைப்பது: அறிவுரைகள்
  4. ஈதலில் சிறந்தது: அனுபவம்
  5. உலகத்தில் பயப்படுவது: நல்லவர்கள், ஹானஸ்ட்டா இருக்கவங்களைப் பார்த்து மட்டும்.
  6. ஊமை கண்ட கனவு: பதில் சொல்ல தெரியலை
  7. எப்போதும் உடனிருப்பது: கவலைகள்
  8. ஏன் இந்த பதிவு: nila அழைத்ததால்...
  9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: தன்னலமில்லா அன்பு
  10. ஒரு ரகசியம்: எனக்கு பொய் சொல்றவங்களை சுத்தமா பிடிக்காது
  11. ஓசையில் பிடித்தது: நதியோசை
  12. ஔவை மொழி ஒன்று: ஊக்கமது கைவிடேல்
  13. (அ)ஃறிணையில் பிடித்தது: கோழிக்குஞ்சு

காலம் கடந்த "பசங்க" விமர்சனம்!

இந்தப் படத்தை ரொம்ப நாள் பார்க்க இஷ்டமில்லை. பசங்கனு ஏதாவது அசிங்கமா எடுத்து இருப்பானுக நம்ம ஆளுகனு விட்டுவிட்டேன். கடைசியில் டி வி டி வந்ததும் எடுத்துப் பார்த்தா! ஐய்யோ ரொம்ப நல்ல படமா இருக்கேனு ஒரு திருப்தி! ஒரு கான்வெண்ட்டை காட்டி, பெரிய சாஃப்ட்வேர் இன்ஜினியர்களும், டாக்டர் பிள்ளைகளும், வேதம் சொல்லுறவங்க பிள்ளைகளையும் ஹை ஃபையா காட்டாமல், ஒரு சாதாரண அரசுப்பள்ளியையும் அந்த பசங்க போடும் சண்டைகளையும், அவர்களுக்குள் இருக்கும் போட்டியையும் அழகா படம்பிடிச்சு இருக்காங்க!

அந்த ரெண்டு பசங்க வீட்டில், அவங்க அப்பா-அம்மா வுக்கு இடையில் உள்ள குடும்ப பிரச்சினை, அவர்களுக்குள் ஏற்படும் பூசல்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.

தன் மகன் மேல் அன்புடனும், அதே சம்யத்தில் ஹானஸ்ட்டாகவும் ஒரு வாத்தியாரை காட்டுவது மனதில் சந்தோஷத்தை உண்டு பண்ணுது.

ரெண்டு அப்பாமார்களும், அவர்களுக்குள் நடக்கும் டிஸ்கசனும் ஒரு ஜானகிராமன் சிறுகதை லெவலுக்கு நல்லாவே இருக்கு.

அந்த காதல் ஜோடி பரவாயில்லை. ஆனால் ஏன் இப்படி தலையை தலையை ஹீரோ ஆட்டுராரு! சுப்பிரமணியபுரத்தில் பிடிச்ச வியாதி இங்கேயும் வந்துருச்சா!

விரசமில்லாமல், அசிங்கமில்லாமல், கவர்ச்சியை வைத்து பிழைப்பு நடத்தாமல், சில நல்ல விச்யங்களை அழ்கா சொல்லி இருக்கிற இந்த "பசங்க" குழுவுக்கு பாராட்டு!

ஐயா ராமதாஸே அசந்து இருப்பாரு போங்க இந்த பசங்க படத்தை பார்த்து! நல்ல படம்!

Tuesday, September 1, 2009

நாடோடிகள்- காதலுக்காக பெருசா கிழிக்கிறாங்க!

நாலு வீணாப் போனவர்கள் ஒண்ணா சேர்ந்து ஒரு காதல் சோடியை, காலைக் கொடுத்து, காதைக்கொடுத்து, கண்ணைக்கொடுத்து சேர்த்து வைச்சு ஒரே கிழியாக்கிழிக்கிறாங்களாம்! இப்படி ஒரு படம்! அதுவும் இந்த இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டில்! இன்றைய தமிழ் சினிமாவிலே இப்படி ஒரு அர்த்தமில்லாத படமா?

காதல் எனபது நிச்சயம் நல்ல விசயம்தான். அதை காப்பாத்த, காதலர்களைச் சேர்த்து வைக்க இப்படி கையை காலக் கொடுத்துப் போராடி வெற்றியடைவது எல்லாம் என்னவோ கேணத்தனமா இருக்கு! கிறுக்குத்த்னமான ஒரு படம்!

ஆமாம், பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் தான்.

அதனாலென்ன?

படம் எடுக்கிறானுகளாம் படம்!

தலைவர் சசிக்குமார் ஏதாவது தமிழ் மக்களுக்கு செய்யனும்னு நெனைச்சா சீக்கிரம் நடிக்கிறதை நிறுத்தனும்.