Wednesday, December 31, 2008

நடிகர் இரா. ஸ்ரீ. கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் பிறந்த ஊர் இராமநாதபுரம். தந்தைக்கு வேலை மாற்றத்தால் பிறந்து பல மாதங்களில் பக்கத்தில் உள்ள பரமக்குடிக்கு சென்றார். அங்கிருந்து சென்னை, களத்தூர் கண்ண்ம்மா,அப்புறம் உங்களுக்கு தெரியும் அவர் சினிமா உலகம் மற்றும் தனிப்பட்ட வாழக்கை. ஆனா என்ன காரணமோ தெரியவில்லை, இவர் பிறந்த ஊர் பரமக்குடி என்றுதான் நிறைய நேரங்களில் தவறுதலாகச் சொல்லப்படுகிறது. அதை கமலஹாசனே சரி செய்வதில்லை.

இங்கே இரா-> இராமநாதபுரம்

ஸ்ரீ-> ஸ்ரீனிவாசன் அய்யங்கார்

கமலஹாசன் ஒரு பார்ப்பனராகப் பிறந்தாலும், சமீபகாலம்வரை (அவரின் தசாவதாரம் வெளிவருமுன்னர் வரை) இவர் நாத்தீகர்கள் பலராலும் அரவணைக்கப்பட்டுத்தான் வந்தார், வரப்படுகிறார். தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று தைரியமாக சொன்னவர் இவர். இந்துக்களில் பொதுவாக 99.9% பார்ப்பனர்கள் மத, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். பல பார்ப்பனர்கள்தான் இந்து மதப்பாதுகாவலர்களாக இருக்கும் இந்த உலகத்தில் கமலஹாசன் போல ஒரு பகுத்தறிவுவாதி அக்ரஹாரத்திலிருந்து வந்ததைப் பார்த்ததும் திராவிட கழகத்தை சேர்ந்த பல நாத்தீகர்கள், கமலஹாசனை தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டார்கள். திராவிட பாரம்பரீகம் இவரை நவீனகால பாரதி என்றுகூட மிகைப்படுத்தி அழைத்தனர்.

ஆனால், சமீபத்திய தசாவதாரம் படம், பலவிதமான கேள்விகளை கொண்டுவந்து விட்டது. சினிமாவில் ஒரு நாத்தீகர், ஆத்தீகராக ஒரு வேடத்தில் நடித்தால் என்ன? இது ஃபிக்ஷன் தானே? என்று பல நாத்தீகர்களும் மற்றும் கமலஹாசன் விசிறிகளும் வாதிடத்தான் செய்கிரார்கள். இருந்தாலும் பல ஆத்தீகர்கள் இந்தப் படத்தைப்பார்த்து கமலஹாசன் நம் வழிக்கு வந்துவிட்டார் என்று பெருமிதம் கொள்வதுதான் பிரச்சினை.


இந்து மதத்தை தன் தாயைவிட மேலாக மதிக்கும் பார்ப்பனர்கள் பலரை கமலஹாசன் நடித்த "நம்பி ராஜன்" என்கிற மதவெறி பிடித்த ஒரு வெறியன் பாத்திரம், சந்தோஷப்படுத்தி இருக்கிறதென்பதை புத்தியுள்ள பகத்தறிவுவாதிகள் காணலாம். மொத்தத்தில், நாத்தீகள்களும், ஆத்தீகர்களும் அவரவர் கண்ணோட்டத்தில் கமலஹாசனை தன் "இனமாக" பார்த்ததால், தசாவதாரம் பெரிய வெற்றியை தழுவியது.

ஆத்தீகர்களுக்க்கும் இந்து மத வெறியர்களுக்கும், கமலஹாசன் ஆத்தீகப்பாதையில் வருவதுபோல் தோன்றினாலும், அவர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லாமல் தங்கள் மனதுக்குள் ரசித்துக்கொண்டார்கள்.


"பைத்தியக்காரன்" என்கிற ஒரு பதிவுலகத்தை சேர்ந்த ஒருவர், தசாவதாரத்தில் உள்ள பாத்திரங்களில் இருக்கும் மதவெறியை கண்டு, கோபமடைந்து கமலஹாசன் தன் பார்ப்பன புத்தியை காட்டிவிட்டார் என்று வசைமொழிகளில் விமர்சனம் எழுதினார்.


எழுத்தாளர் சாரு நிவேதிதா பொதுவாக கமலஹாசனை மதிக்கும் இவர், இந்தப்படத்திற்கு ஒரு நெகட்டிவ்க்ரிடிசிஸம் எழுதினார்.

அதே சமயத்தில், எழுத்தாளர் ஜெயமோஹன் இந்தப்படத்தை ஆஹாஓஹோ என்று புகழ்ந்து எழுதினார்.

பல நாத்தீகர்களுக்கு கமலஹாசனுடைய இன்றைய மனநிலை சந்தேகமாகவே உள்ளது. தசாவதாரம் பார்த்து குழம்பிப்போய் உள்ளார்கள் இவர்கள். ஆனால், வெளியில் இதை தெளிவாக சொல்லுவதில்லை.

கமலஹாசன் நாத்தீகராகவே சாகும்வரை இருக்கப்போகிறாரா? இல்லை ஆத்தீகராக மாறப்போகிறாரா அல்லது மாறிக்கொண்டு இருக்கிறாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

அவர் என்னவா இருந்தால் உனக்கென்ன என்கிறீர்களா?

அவர் ஆத்தீகப்பாதையில் போனால், என்னைப்போல் ஆட்களுக்கு அவர் கேலிக்கூத்தாக தோனுவார். அதான்.

Monday, December 29, 2008

தற்கொலை! சுயநலமும் தியாகமும்!!!

ஒரு வகை!

எனக்குத்தெரிய ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த “ஜான்” என்ற “நண்பன்” தொங்கிவிட்டான்.

பிரச்சினை என்னவென்றால், அவன் ஒரு அழகான பெண்ணிடம் தன் மனதை பறிகொடுத்துவிட்டான். அவள், அவனுடைய ஜூனியர், மற்றும் அவனுடைய ஆய்வகத்தில் வேலை செய்பவள். இவன் கொடுத்த இதயத்தை அவள் வாங்க மறுத்துவிட்டாள். இவனுக்கு அவளைப் பிடித்ததுபோல் அவளுக்கும் யாரையாவது பிடிக்கும் இல்லையா?

ஜானின் இதயம் அவள் வாங்க மறுத்ததால் கீழே விழுந்து நொறுங்கிவிட்டது. இதயத்தை உடைத்த இவனால் அதிகமான நாட்கள் வாழ முடியவில்லை. தூக்குப்போட்டுக்கொண்டு தொங்கிவிட்டான்.

அவன் உடலைப்பெற அவனுடைய ,அப்பா அம்மா வந்து இருந்தார்கள். ஒரு நடுத்தரக்குடும்பத்திற்கும் கீழே உள்ள ஒரு பரிதாபமான நிலைமை. அவர்களின் ஒரே "ஹோப்" இவந்தான் என்று விளங்கியது! மகன் படித்துவிட்டான்! இனிமேல் மகன் சம்பாரித்து அவங்க கஷ்டத்தை எல்லாம் தீர்க்கப்போகிறான் என்று நம்பி ஏமாந்தவர்கள் அவர்கள்.

இந்த தற்கொலையில் சுயநலம், தன்னலம், தகுதிக்குமீறிய ஆசை, மற்றும் அடுத்தவர்களும் தன்னைப்போல் தான், அவர்களுக்கும் ஆசை இருக்கும், அதையும் நாம் மதிக்கனும் என்ற எண்ணமில்லாமை. இதைத்தான் பார்த்தேன். அவனுக்காக நான் பரிதாபப்படவில்லை! எரிச்சல்தான் வந்தது! இது ஒரு வகை தற்கொலை!

இன்னொரு வகை!

இது என்னுடைய பாஸ் சொன்னார். அவர் அப்பாவுக்கு இப்போது வயது 89. இன்னும் அவராவே கார் ஓட்டிச்சென்று, அவரை அவரே கவனித்துக்கொண்டு தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு 90 வயது ஆள், அவர் என் பாஸ் அப்பாவுக்கு நண்பர் மாதிரி. அருகில் வசித்து வந்தவர். இந்த முறை என் பாஸ், அவருடைய அப்பாவை கிருஸ்துமஸ்க்கு அழைதுவர போனபோது, அவர் அப்பாவின் ந்ண்பர் இறந்துவிட்டதாக அவர் அப்பா சொன்னதும், என்ன ஆச்சு? என்று கேட்டாராம்!

கிடைத்த பதில் இதுதான். துப்பாக்கி எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டாராம் அந்த 90 வயது ஆள். காரணம்? அவருக்கு சாகும் அளவுக்கு எதுவும் பெரிய வியாதி இல்லை. இருந்தாலும், அவருக்கு சில வியாதிகள் இருந்தன. அதனால் தொடர்ந்து சில உதவிகள் தன் மகன்மற்றும் மகளிடம் இருந்து தேவைப்பட்டுக்கொண்டு இருந்ததாம். அது அவருக்கு தவறாக தோன்றியதாம். தன் குழந்தைகளுக்கு கடைசிக்காலத்தில் தான் பெரிய பாரமாக இருக்க வேண்டாம் என்று தன் உயிரை தானே மாய்த்து கொண்டாராம் அந்த பெரியவர். இதுவும் தற்கொலைதான்! இதில், சுயநலத்தைவிட, நம்மால் தன் குழந்தைகளுக்கு அளவில்லாத கஷ்டம் எதற்கு? என்கிற தியாக மனப்பான்மைதான் அவரிடம் இருந்தது.

In US, people who are in sixties are taking care of their father and mother who are in 80s or 90s. I know several cases. Some people are too healthy and they dont die even if they want to. Mainly bcos of the medical developments in dealing with heart diseases, controlling cancer and so on.

Who says Americans are selfish?

Who says Americans don't have much family value?

That is not what I see here! They take care of their old parents better than us in several cases I know of.

Sunday, December 28, 2008

கவனம்!!! நகைச்சுவை என்பது விபரீதமானது!

எதையாவது ஏடா கூடமாக சொல்லிவிட்டு, நான் நகைச்சுவைக்காக சொன்னேன் என்று சமாளிப்போம்! இதில் வெற்றியடைவது (சமாளித்து தப்பிப்பது) கடினம்.

ஒரு சிலர் நகைச்சுவை பதிவில் சில பெரிய நடிகர்களை இஷ்டத்துக்கு விமர்சனம் பண்ணி மாட்டிக்குவார்கள்.

இது பழையவிசய்ம்தான் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்ப்போம்!

எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி பற்றி திரு.ஜெயமோகன் எழுதிய விமர்சனத்தை பார்ப்போம்



////////

M G R (“தொப்பி”)

செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.

அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.

சிவாஜி ('திலகம்')

'...சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.

சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். 'வைக்கோலு பிடுங்கு கான்' என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. 'சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே... அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?'... /////////


எந்த ஒரு எம் ஜி ஆர் அல்லது சிவாஜி ரசிகர்கள் இதை “நகைச்சுவையாக” எடுத்துக்கொள்வார்களா? அல்லது எடுத்துக்கொண்டார்களா?



எம் ஜி ஆர் ஜால்ரா சத்யராஜ் சொல்கிறார்!


/////// ஜெயமோகன் முகத்தில் காறித்துப்ப வேண்டும் என்று பேசினார் சத்யராஜ். ஆனந்த விகடன் படிக்கும் போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அன்று மட்டும்தான் அழுதேன் என்றார் அவர். இன்னும் ஒரு வாரத்திற்குள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்படி கேட்காவிட்டால், இருவருக்குமே திரையுலகை சேர்ந்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. சிக்கல் என்னவென்றால், விகடன் நிறுவனத்தினர் சக்தி மனசில சிவா என்ற படத்தை எடுத்து வருகிறார்கள். ஜெயமோகன் நான் கடவுள், அங்காடி தெரு ஆகிய இருபடங்களுக்கும் வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். நடிகர் சங்கத்தின் இந்த ஒத்துழையாமை எச்சரிக்கை இருவருக்குமே தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. /////



காறிதுப்ப வேணும்??? என்ன ஒரு திமிர் இந்த நடிகனுக்கு என்று ஒரு பக்கம் நமக்கு எரிச்சல் வருகிறது.

இவர் எம் சி ஆர் ரசிகர் என்பதால் எம் சி ஆர் பத்தி எழுதினால் இவர் காறி துப்புவாராம்? இவர் நடிகர்களை ரசிக்கும் ரசிகர்கள் உணர்வுகளை என்றாவது புரிந்து இருக்கிறாரா என்ன???



ஃ எழுத்துச்சுதந்திரம் என்பதை ஜெயமோகன் துஷ்பிரயோகம் செய்தாரா? அவர் இல்லைனுதான் சொல்றார்.

ஃ ஆனாலும் செயமோகன் இந்த சிவாஜி ரசிகர்களுக்கு சாதிச்சாயம் இவர் பூசுவது படுகேவலமா இருக்கு!

ஃ இல்லை பேச்சு சுதந்திரத்தை அல்லது அவர் சொல்லும் “நகைச்சுவையை” நகைச்சுவையாக எம் சி ஆர் ரசிகர் சத்யராஜால் எடுக்கமுடிந்ததா?

ஃ நகைச்சுவை என்ற போர்வையில் யாரைவேணா எதுவேணா எழுதலாமா? I really don't understand, “What difference it makes whether you claim that as “comedy” or “just for fun” or a serious issue? அதனுடைய விளைவுகள் எதுவும் மாறப்போவதில்லை.

ஃ சத்யராஜ், யாரையும் கிண்டல் அடிப்பதில்லையா? இவர் கிண்டல் அடித்தால் இவரையும் இவர் சொல்வதுபோல் செய்யலாமா?


நகைச்சுவை என்பது ஒரு விபரீதமான விசயம். அதை கையாளும் விதம் பெரிய எழுத்தாளர்களுக்கே தெரியவில்லை. எழுத்தாளன் விமர்சனம் எழுதினால் பொதுவா வம்புதான். அடிக்கடி இவர்களுக்கு கதை எழுதுகிறோமா இல்லை ஒரு சில லெஜெண்டரி கேரக்டர்களை பலர் மனமுடையும் அளவுக்கு கொஞ்சம் கீழ்தரமாக (நகைச்சுவை என்க்ற போர்வையில்) விமர்சிக்கிறமானு இவர்களுக்கு மறந்துவிடுகிறது.

சத்யராஜ் ஒரு சாதாரண hypocrite! எங்க ஊரில் ஒரு சில நண்பர்கள் பார்த்து இருக்கேன். ஊருக்கு ஒரு நியாயம், அவனுகளுக்கு ஒரு நியாயம். அவர்கள் ஊரில் உள்ளவன் தங்கையை எல்லாம் என்ன மாதிரி வேணா “காமெண்ட்ஸ்” அடிப்பானுக. அவன் தங்கையை ஒருத்தன் திரும்பிக்கூட பார்க்ககூடாது! அதுபோல்தான் இருக்கு சத்யராஜ் நியாயம்! படுகேவலமாக!

மொத்தத்தில் நகைச்சுவை என்பது வில்லங்கமான ஒண்ணு. அதை சில பெரியமனிதர்கள் எழுதினால் வம்புதான்! இதில் விதிவிலக்கு யாருமே கிடையாது!

Wednesday, December 24, 2008

“நான்” என்னும் அகந்தை!

“நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” என்கிற கண்ணதாசன் வரிகள் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு இந்த “நான்” என்னும் அகந்தை ஒரு சில சின்ன வெற்றிக்குப்பிறகு வந்துவிடுகிறது. “நெனைப்பு” அதிகமாயிடுது. அது வந்துவிட்டால் அந்த இடத்தில் ஒருவன் முட்டாளாகிறான்.

“எப்படி?”

* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!

* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.

* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.

* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். ஒருமுறை வெளியூரிலிருந்து படிக்கும்போது, லீவுக்கு ஊருக்குப்போகும் போது, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக சொன்னார்கள். “என்ன ஆச்சு?” நு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ தண்ணியைப்போட்டு சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை திட்டினாராம். அப்பாவை திட்டியதை கேட்ட ஒரு 18 வயது பையன், அப்பாவை திடிவிட்டாரேனு அவன் கோபத்தில் கத்தியை வைத்து குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்! என்ன சண்டைக்கோழி கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை. என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா ஒரு சின்னப்பையன் கொன்னுபுட்டான்" என்று சிரித்தார்கள்.

“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.

ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?

Tuesday, December 23, 2008

தமிழ்மணமும் சில "மூத்தபதிவர்களின்" அநாகரீகமும்!

தமிழ்மணம் ஒரு நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட "ப்ளாக் அக்ரெகேட்டர்". இதில், கருத்துக்களை சொல்லி ஒரு சாதாரண பதிவர் தன் திறமையை வெளிக்கொண்டுவரலாம். அதனால் தமிழ்மணம் பல இளம் பதிவர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. இன்றைய பிரபலபதிவர்கள் தமிழ்மணத்தால் தன் வலைபூவை வளர்த்தவர்கள்.

வளர்த்தகடா மார்பில் பாய்வதுபோல் இவர்கள் (மூத்தபதிவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள்) அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டு தாங்கள் இல்லை என்றால் தமிழ்மணம் இல்லை என்று மிரட்டுவதுபோல நடப்பதை என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

எனக்கு தெரிய நிறைய கருத்துக்களங்கள், ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அந்த களநிவாகத்தை அவமானப்படுத்த முயற்சித்தால் அவரை களநிர்வாகம் நீக்குவது வழக்கம். ஆனால் பல தமிழ் கருத்துக்களங்களில் அதுபோல் செய்வதில்லை. தமிழ்மணமும் அதுபோல்தான் இன்றுவரை இருப்பதுபோல் தோன்றுகிறது. அதே சமயத்தில், ஒரு நிர்வாகிக்கு தன் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று கொஞ்சமாவது தெரியும் என்பதை மூத்த பதிவர்கள் உணரவேண்டும். நான் மூத்த பதிவர், நான் இல்லைனா நீ இல்லைனு மிரட்டும் வகையில் எழுதிவரும் பதிவர்களைப்பார்த்து தமிழ்மணம் கலங்கி, இவர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் சரி சரி என்று போகவேண்டும் என்று சில "மூத்தபதிவர்கள்" எதிர்பார்ப்பதுபோல் இருக்கிறது.

"சூடான இடுகை" பற்றி உண்மை என்னவென்றால், உங்கள் பதிவு சூடான இடுகையில் வந்தால், சாதாரணமாக அந்த இடுகைக்கு வருகிற பார்வையாளர்கள் 3-10 மடங்கு அதிகமாவார்கள். உங்கள் இடுகை சூடாக்கப்பட்டால் நீங்கள் சாதாரண பதிவராக இருந்தாலும் ஒரு பிரபலபதிவரைக்கூட ஓரத்தில் தள்ளலாம். இந்த சூடான இடுகை இருப்பதால்தான் பலர் தன் "ப்ளாக் களை வளர்க்கமுடிகிறது. இன்று "பெரிய பதிவர்" என்று தன்னை நினைத்துக் கொள்ள முடிகிறது. இதனால் மற்ற தரமான பதிவுகள் வாசகர்களின் பார்வையிலிருந்து மறைக்கபடுகிறது. துரதிஷ்டவசமாக சில சமயங்களில் சில கேலிக்கூத்துகளும், உப்புபெறாத பதிவுகளும் சூடான இடுகையில் இடம்பிடித்து பல நல்ல தரமான இடுகைகளை மறைத்துவிடுகிறது. :-(

சூடான இடுகையில் தன் இடுகை வரவேண்டும் என்பது ஒவ்வொரு பதிவரின் அவா. இதை ஒரு சிலர் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என்று அகந்தையுடன் சொல்லிக்கொண்டு ஆனால் சூடான இடுகையில் தன் பதிவுகளை கொண்டுவர பலவழிகளில் போராடுகிறார்கள்.

பொதுவாக, காமம், ரஜினி, கமல், கற்பு, நாய், செக்ஸ் போன்ற சொற்கள் தலைப்பில் இடம் பிடித்தால், அல்லது இன்னொரு பதிவரை விமர்சிப்பது போன்ற தலைப்புகள் உள்ள பதிவுகளை எளிதாக சூடான இடுகையில் கொண்டு வந்துவிடலாம். இல்லைனா சாரு நிவேதிதா அல்லது ஜெயமோஹன் பற்றி தலைப்பில் எழுதினாலும் சூடான இடுகையில் வரும்.

பல பதிவர்கள் சூடான இடுகைக்கு தன் பதிவை கொண்டு வந்து வந்து பழக்கப்பட்டு சூடான இடுகைக்கு "அடிக்சன்" ஆகிவிட்டார்கள். பல நேரங்களில் இவர்கள் முயற்சி எப்படி சூடான இடுகையில் இதைக்கொண்டு வருவது என்பது மட்டுமே? என்ன விசயம் நாம் சொல்கிறோம் என்பதல்ல! இதில் அதிகமாக இந்த "சூடான இடுகை" மயக்கத்தில் இருப்பது சில மூத்தபதிவர்கள்தான்.

இப்போது, ஒரு புதிருக்கு விடை தெரியாமல் இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் "பேக்-அப்" செய்துகொண்டு "ஜனநாயகம்" என்கிற வார்த்தையை "தவறாக" பயன்படுத்தி, தமிழ்மணத்தின் தரத்தையும் அதன் நிர்வாகத்தையும் கீழே கொண்டு வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒரு விசயம்.

இவர்கள் தமிழ்மண நிர்வாகத்திடம் தனிமடலில் பேசவேண்டிய விசயங்களை (புதிருக்கு விடை காண்பதை விட்டு விட்டு) ஊரைக்கூட்டி பஞ்சாயத்து வைக்கிறார்கள். இதுதான் தன்னை "மூத்த பதிவர்" என்று சொல்லிக்கொள்ளும் பதிவர்களின் லட்சணமா?

குறிப்பு: என்னுயை கருத்துக்களை ஓரளவுக்குத்தான் பின்னூட்டத்தில் சொல்ல முடிகிறது. அதனால்தான் இந்தப்பதிவு.

Monday, December 22, 2008

காதலுடன் - 5

அவள் உள்ளே சென்றதும் கொஞ்ச நேரம் டி வி பார்க்கலாம் என்று டிவியை உயிர்ப்பித்து சேனலை மாற்றினான். அமெரிக்கன் மூவி களாசிக் சேனலில், காட் ஃபாதர் பார்ட்-2 ஓடிக்கொண்டு இருந்தது. மைக்கேலின் "மாஸ்டர் மைண்ட்" ஆல், அவனை சட்டத்தால் ஒரு மாஃபியா என்று நிரூபிக்கமுடியாமல் போனவுடன், அவன் மனைவியுடன் அந்த ஹோட்டலில் நடக்கும் வாதம் ஓடிக்கொண்டு இருந்தது. புகழ்பெற்ற அந்த ஹோட்டல் காட்சியில், மைக்கேலிடம் அவன் மனைவி கே ஆடம்ஸ், தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு பிரிந்து போகப்போவதாக சொல்லும் உணர்ச்சிகரமான கட்டம் அது. கே ஆடம்ஸ், தன்னுடைய கருச்சிதைவு இயற்கையானது அல்ல, மைகேலை பழிவாங்க வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொண்டது, மைகேலின் குழந்தைகளை இனிமேல் பெற்றுக்கொள்வது சரியல்ல என்று அவள் நினைப்பதாக சொன்னவுடன் என்று சொன்னவுடன், மைகெல் அவளை முகத்தில் அறைவான், "என் குழந்தைகளை யாரும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது" என்று கோபத்துடனும், அதே சமயம் அவனுடைய மனைவியின் பழிவாங்கும் நடவடிக்கையால் மனமுடைந்தவனாகவும் பேசும் அந்தக்காட்சி முடியும்போது ரூமிலிருந்து வெளியே வந்தாள் சந்தியா.

நல்லா தலைப்பின்னி ரொம்ப மேக்-அப் போடாமல் அழகாக இருந்தாள். சற்றுமுன்னர் ரமேஷ் கண்களுக்கு ப்ரச்சோதகமாக காட்சியளித்த அவள் இப்போது சாத்தீகமாக காட்சி அளித்தாள்!

"இப்போ எப்படி இருக்கேன், ரமேஷ்?" என்றாள் புன்னகையுடன்.

"என் ஃப்ரெண்டுனு பெருமையா சொல்லிக்கிற மாதிரி அழகா, லட்சணமா தெய்வீகமா இருக்க, சந்தியா!"

"தேங்க்ஸ், ரமேஷ்! காட்ஃபாதர் பார்க்கறீங்களா?"

"ஆமாம், இது பார்ட் 2 சந்தியா. கார்ஃபாதர் பார்ட்1, & 2 படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் என்னால் பார்க்க முடியும்"

"அப்படியா! அவ்வளவு நல்லா இருக்குமா? நான் இதுவரை பார்த்ததே இல்லை ரமேஷ்"


"இந்த படம் Chick flick இல்லை சந்தியா, இருந்தாலும் உனக்கு பிடிக்கும்"

"அதில் அப்படி என்ன இருக்கு? சண்டை, மாஃபியா, கேங்க் இதை எல்லாம் தவிர?"

"இன்னும் நிறைய இருக்கு சந்தியா! உதாரணத்துக்கு கடந்த சீனில் ஒரு மனைவி தன் கணவனை எந்த அளவுக்கு நோகடிக்க முடியும் என்பதை அழகா காட்டி இருப்பாங்க. ஒரு மனைவியால் மட்டுமே இந்த அளவுக்கு செய்ய முடியும்!
"
"ஏன் அப்படி?"

"அவளுக்கு மட்டுமே அவனுடைய வீக்கென்ஸ் நல்லா தெரியும், அதனால் தான்."

"OK, முடிந்தால் நான் இந்தப்படம் பார்க்கிறேன், ரமேஷ். அதற்கப்புறம் சொல்லுறேன். இப்போ சாப்பிடலாமா? என்று அழைத்தாள்.

இட்லி, சட்னி, சாம்பார், வெண்பொங்கல், கேசரி எல்லாம் செய்து வைத்திருந்தாள். இருவரும் எதிரெதிரே டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள்.

"ஏய், நானே எனக்கு வேண்டியதை வேண்டிய அளவு நானே எடுத்து சாப்பிடுகிறேன். சரியா?"

"ஓ கே, ரமேஷ்"

அவன் சாப்பிடும்போது ஸ்பூன் எல்லாம் பயன்படுத்தாமல் சாதாரணமாக கையை பயன்படுத்தியே சாப்பிட்டான். அவளும் அவனுடன் சேர்ந்து சாப்பிட்டாள்.

"ஏன் ஸ்பூன்லாம் யூஸ் பண்ணுவதில்லையா, ரமேஷ்?"

"இட்லிலாம் ஸ்பூன் வச்சு சாப்பிட்டால் டேஸ்ட் குறைந்துவிடும். எனக்கு சாம்பார், சட்னியுடன் நல்ல மிக்ஸ் பண்ணி சாப்பிட்டால்தான் எனக்கு நல்லா இருக்கும், சந்தியா"

அளவா சாப்பிட்டுவிட்டு தான் சாப்பிட்ட கார்னிங் ப்ளேட்டை எடுத்து சிங்க் ல கொண்டுபோய், கழுவி வைத்தான். கையையும் கிச்சன் சிங்க் லயே கழுவிக் கொண்டான். சந்தியா காஃபி கொண்டு வந்து வைத்தாள். அவளுக்கு அவள் சமையல் எப்படி இருந்ததுனு அவன் சொல்லக் கேக்கனும்னு ஆசையாக இருந்தது.

"ஏய் ஒண்ணு செல்லம்மா சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?"

"சொல்லுங்க!"

"நீ நிஜம்மாவே ரொம்ப நல்லா சமைக்கிறடி, சந்தியா!"

"என்ன டீயா?"

"நீ தான் கோவிச்சுக்க மாட்டேனு நு சொன்ன இல்ல?"

"தேங்க்ஸ்டா பொறுக்கி!"

"ஏய் கோபமா?"

"இல்லையே. நல்லாத்தானே சமச்சு இருக்கேன் நு சொன்னீங்க?"

"ஆமா, எவ்வளோ நாளா என்னைப் பொறுக்கினு சொல்லனும்னு ஏங்கின? நான் என்ன பொறுக்கியா?"

"ரொம்ப நாளா! இல்லையா பின்னே? என்ன கொஞ்சம் டீசண்ஸி தெரிந்த பொறுக்கி"

"நீ வாடா போடா பொறுக்கினு சொன்னா ரொம்ப செக்ஸியா இருக்கு. அதனால் ஒழுங்கா வாங்க
போங்கனு கூப்பிட்டால் உனக்கும் நல்லது, உன் உடம்புக்கும் நல்லது. சரியா?"

"வாடா, போடானு சொன்னால் என்னடா செய்வ?"

"என்ன செய்வேனா? இரு வர்றேன்!" என்று அவன் எழுந்து சிரித்துக்கொண்டே அவளை அனுகினான்.

அந்த நேரம், அழைப்பு மணி அடித்தது..

"யாரு இந்நேரம்?" என்று சொல்லிக்கொண்டே வெளியே பார்த்தாள். அங்கே தோழி காவியா வந்து இருந்தாள். சந்தியா கதவை திறந்தாள்.

"என்னடி காவியா திடீர்னு?"

-தொடரும்

Friday, December 19, 2008

கமல், ரஜினியாக இருந்தால்!

கமலஹாசன் கவுதமி பற்றி ஒரு கிசு கிசு, அதாவது அவர்கள் இப்போது பிரிந்துவிட்டார்கள் என்று ஒரு கேள்விக்குறியுடன் ஆரம்பித்த இடுகைக்கு, கமல் ரசிகர்கள், இல்லை இல்லை, மன்னிக்கவும் "நடுநிலைவாதிகள்" பலர் வந்து, ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அநாகரீகம் என்கிறார்கள். I am certainly proud of them if and only if they respect everyone's private life!

சரி, just like that, நம்ம சாமியார் ரசினி அப்பப்போ இமயமலை போய் வருகிறார். அதுவும் அவருடைய தனிப்பட்ட வாழக்கைதான். அதை விமர்சித்தால், இதேபோல், அவர் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது தவறு என்று "இதே நடுநிலைவாதிகள்" சொல்வார்களா? இல்லை எங்கேயாவது சொல்லி இருக்கிறார்களா? என்ற கேள்வி கயலின் பின்னூட்டத்திலிருந்து எழுந்து உயிர்பெற்று வந்தது.

******கயல்விழி said...

கமலஹாசனைப்பற்றி மட்டுமல்ல, ரஜினியின் தனிப்பட்ட வாழ்வை(அவரின் இமயமலை பழக்கம்) போன்றவற்றை கிண்டலடித்தும், விமர்சனம் செய்தும் பல பதிவுகள்/கட்டுரைகளை படித்திருக்கிறேன். ******

நன்றி கயல்! :-)

ரஜனியின் இமயமலைப்பயணம் அவருடைய ப்ரைவேட் பிஸினெஸ் என்று எல்லோருக்கும் புரிந்ததாக எனக்கு என்னவோ தோனவில்லை. ப்ரைவேட் லைஃப் என்றால், ஒருவருடைய படுக்கை அறை வாழ்க்கை என்கிற தவறான புரிதல், கருத்து நம்மில் இருப்பதை உணரலாம். I thought we should fix ourselves right here! We need to really understand what is the meaning of one's "private life" when we go on advise others or not?

Another thought, ஒரு வேளை, ரஜினிக்கு பல மனைவிகள் (உலகறிய), கல்யாணம் என்பதில் நம்பிக்கை இல்லாமல், லிவ்-டுகெதெர் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து இருந்தால், இதே போல் ரஜினி-ஒரு நடிகை பற்றி நான் ஒரு கிசு கிசு எழுதி இருந்தால், விமர்சனத்திற்கு, பல நடுநிலைவாதிகள் வருவார்கள் வந்து இருப்பார்கள்.

* எதற்காக அவரின் (ரஜினியின்) படுக்கை அறை பற்றி பேசுகிறாய்? என்பார்கள்.

# ஆனால் அப்படி வரும் நடுநிலைவாதிகள் நிச்சயம் இன்று கமலை டிஃபெண்ட் பண்ணும் நடுநிலைவாதிகளாக இருக்கமாட்டார்கள்!

Are we really respecting a celebrity's or anyone's private life?

Or we just LOVE an ACTOR and DEFEND his WEAKNESSES because we love him?

Unfortuantely the latter statement seems like the TRUTH! :(

ஒருவேளை ஒபாமாவும்?

தோல்வியின் விளிம்பில் நிற்கும் ஜி.எம் மோட்டர்ஸ்,ஃபோர்ட் மற்றும் க்ரைஸ்லர் தொழிற்சாலைகளுக்கு, 17.4 பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கப்போவதாக புஷ் அரசு தீர்மானித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை புஷ் வீணடிப்பது இது முதல் முறையல்ல, வழக்கமாக செய்வது தான், இதில் வியப்படைய ஒன்றுமே இல்லை. ஈராக் பத்திரிக்கையாளர் செய்ததைப்போல எத்தனை செருப்பு பறந்தாலும் அதைப்பற்றி எல்லாம் புஷ் கவலைப்படவும் போவதில்லை. ஏற்கெனெவே சிலரது பேராசையால் திவால் ஆக இருந்த வால்ஸ்ட்ரீட்டை கைத்தூக்கி விட்டவர் தான் இவர். இப்படி ஏராளமான நிதி உதவியை பெறப்போகும் கார் தொழிற்சாலைகள், எப்படியும் தாக்குபிடிக்கப்போவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளில் சில,

1.பெட்ரோல் கம்பனிகளின் செல்லப்பிள்ளைகளாக விரும்பிய இந்த அமரிக்க கார் தயாரிப்பாளர்கள், வேண்டுமென்றே அளவில் பெரிய, Gas guzzling வாகனங்களையே தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர். சிறிய மாடல் வாகனங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை, சுற்று சூழலை அதிகம் மாசுப்படுத்தாத ஹைப்ரிட் வகை கார்களையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. டொயோட்டா, ஹாண்டா போன்ற வெளிநாட்டு கம்பனிகளோ, அளவில் சிறிய, சிக்கனமான வாகனங்களை தயாரித்தன. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் சிக்கனமான காரை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

2. அமரிக்க கார் உற்பத்தியாளர்களின் உதிரி பாகங்கள் கிடைப்பது அரிது, விலையும் அதிகம். மேலும் தரத்தோடு ஒப்பிட்டால் வெளிநாட்டு கார்களை விட தரத்தில் ரொம்ப குறைவு. பல வாடிக்கையாளர்கள் அமரிக்க வாகனங்களை திரும்பிக்கூடப்பார்ப்பதில்லை. உதாரணத்துக்கு, ஹாண்டா, டொயோட்டா போன்ற கார்களைத்தவிர வேறெந்த காரையும் நான் கன்சிடர் கூட பண்ணியதில்லை.

3. ஜி.எம், க்ரைஸ்லர் மற்றும் ஃபோர்ட் நிறுவனங்களின் சீஃப் எக்ஸிக்யூட்டிவ்கள், கையில் "கம்பனி திவாலாகிறது" என்ற ஒப்பாரியோடு எப்படி வந்து இறங்கினார்கள் தெரியுமா? ப்ரைவேட் ஜெட்களில்! ஊதாரித்தனத்தில் நம்ம ஊர் ஜெயலலிதாவையே மிஞ்சி விட்டார்கள். இதைப்பற்றி ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு, "தங்களுடைய ப்ரைவேட் ஜெட் உபயோகம் விவாதத்திற்கு அப்பாற்பட்டது" என்று அகங்காரத்துடன் ஒரு முதலாளி குறிப்பிட்டார். டெட்ராய்ட்டில் இருந்து வாஷிங்டன் வருவதற்கான முதல் வகுப்பு விமானக்கட்டணம்: $837, இதுவே ப்ரைவேட் ஜெட் உபயோகித்தால்: $20,000- பல மடங்கு அதிகம்! அமரிக்க மக்களிடத்தும், மீடியாக்களிடத்தும் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. "பிச்சை பாத்திரத்துடன் ப்ரைவேட் ஜெட்டில் வந்து இறங்கிய முதலாளிகள்" என்று பத்திரிக்கைகள் அடுத்த நாள் தலைப்புச்செய்தியாக வெளியிட்டனர்.

விரைவில் சுதாரித்த எக்ஸிக்யூட்டிவ்கள், ஜெயலலிதா ஸ்டைலில் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதாவது, அமரிக்க அரசு பண உதவி செய்தால் இவர்கள் "ஒரு டாலர்" மட்டும் பெற்றுக்கொண்டு வேலை செய்வதாக. இது ஒரு கேலிக்கூத்து, ஏனென்றால் இவர்களுடைய ஊதியம், சும்மா பெயருக்கு தான். இவர்களுடைய பெரும்பான்மையான வருமானம் ஸ்டாக் ஆப்ஷன் மற்றும் இன்ன பிற வழிகளில் இருந்து வருபவை, எனவே 1 டாலர் சம்பளம் வாங்கினாலும் இவர்கள் பில்லியனர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களுடைய தொழிலாளர்களும் யூனியன்களின் துணையோடு மற்ற கார் தொழிலாளிகளை விட அளவுக்கதிகமான ஊதியம் பெறுகிறார்கள். இவர்கள் எதில் செலவைக்குறைக்கப்போகிறார்கள் என்பது அனைவர் மனதிலும் எழும் நியாயமான கேள்வி.

4. ஒருவேளை எட்டாவது அதிசயமாக எப்படியோ அமரிக்க கார் தொழிற்சாலைகளை பிழைக்க வைத்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இவர்கள் வாகனங்களை யார் வாங்குவார்கள்? மக்கள் வாங்காமல் இருப்பதற்கு தரம் மட்டும் காரணமல்ல, வரலாறு காணாத அமரிக்க பொருளாதார பின்னடைவும் காரணம். அமரிக்க மக்கள் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பரிசுகள் வாங்கவே ரொம்ப யோசிக்கிறார்களாம், இந்த அழகில் கார் எப்படி? காருக்கு பெட்ரோல்? விந்தையாக இருக்கிறது!

இதைப்படிப்பவர்களுக்கு, அமரிக்க அரசு இந்தப்பணத்தை ஏன் மக்களுக்கு வழங்கக்கூடாது என்ற கேள்வி எழலாம். மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் கார் வாங்குவார்கள், வீடு வாங்குவார்கள். இது முதலாளிகளுக்கு லாபம் தானே? அது மட்டும் நிச்சயம் நடக்காது, எந்தக்காரணம் கொண்டும் அமரிக்கா "முதலாளித்துவத்தை" விட்டுக்கொடுக்காது, ஆனால் இந்த முதலாளித்துவம் ரொம்ப நாள் நிலைக்காது என்பது மட்டும் உறுதி. அமரிக்காவில் "கம்ப்யூனிசம்" என்பது ஏதோ ஒரு கெட்டவார்த்தையாகவே பாவிக்கப்படுகிறது, நடப்பைப்பார்த்தால் அமரிக்காவும் அதே பாதையில் போவதை தவிர வேறு வழி இருக்காது என்று நினைக்கிறேன்.

5. "அமரிக்க கம்பனிகள் திவாலாகுவதே நியாயமானது" என்று சில பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மற்ற வெளிநாட்டு கம்பனிகள் விரிவடைந்து, வேலை இழந்தவர்களுக்கு வேலை திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது, அதுவரை இருக்கவே இருக்கிறது "அன் எம்ப்ளாய்மெண்ட்". இத்தனை காலம் அவுட்சோர்சிங்குக்கு பெருமாதரவு கொடுத்து வந்த அமரிக்க முதலாளிகள், இன்று தங்களுக்கு ஆபத்து என்று வரும் போது திடீரென்று தேசப்பற்றாளர் வேடம் அணிந்து அமரிக்க மக்களிடத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். அமரிக்க அரசும் மக்களை விட "யாரோ சிலரை" திருப்திப்படுத்தவே அதிகம் முனைகிறது. பேசாமல் "Of the people, for the people and by the people" என்பதை "Of the rich, for the rich and by the rich" என் மாற்றிவிட்டால் சரியாக இருக்கும்.

இதில் வியப்பளிப்பது என்னவென்றால், சமீபத்தில் தேர்தலில் வென்ற வருங்கால அமரிக்க ஜனாதிபதியான ஒபாமாவும் ஆரம்பத்திலிருந்தே இந்த "பெயிலவுட்" திட்டத்தை ஆதரித்து வருவதேயாகும். உருப்படாமல் போகும் என்று தெரிந்தே உதவி செய்வதை ஒபாமாவும் ஆதரிப்பது ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. மெத்தப்படித்த புத்திசாலியான ஒபாமாவுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை! ஒபாமாவும் விலைபோய்விட்டால் அவருக்கு ஓட்டுப்போட்டவர்கள் வருத்தப்படப்போவது உறுதி. வழக்கமாக இப்படி நினைப்பதில்லை, ஆனால் இந்தமுறை என்னுடைய மேற்கண்ட கருத்துக்கள் தவறாக இருக்க வேண்டும் என ரொம்ப ரொம்ப விரும்புகிறேன்.

Wednesday, December 17, 2008

செருப்பு, அமெரிக்கா, புஷ், அவமானம்!

செருப்பால அடிப்பேன் என்பது ஒருவரை அவமானப்படுத்துவது என்பது இந்திய மற்றும் மிடில்-ஈஸ்ட் கலாச்சாரத்தில்தான். அமெரிக்கர்களை பொருத்தவரையில் செருப்பு ஒரு பொருள் அவ்வளவுதான். செருப்பை வைத்து எறிந்ததால் பயங்கரமாக அவமானப்பட்டதாக சிலர் “செருப்படி” என்று பேசுவது நகைப்புக்குரியது.

இதுபோல் ஒரு கேவலமான செயல் ஈராக் நாட்டின் ஒரு குடிமகன் செய்ததை நினைத்து ஈராக மக்கள் தலைகுனியனும். தன் குடியைக்கெடுத்தவனாக இருந்தாலும் போரில்தான் ஒருவர் ஒருவருக்கு எதிரி. இதுபோல் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் இடங்களில் அல்ல!

இந்த ஒரு விசயத்தை ஒரு பெரிய வெற்றியாக வேற வேலை வெட்டியில்லாத சில தமிழர்கள் கொண்டாதுவதும் நகைப்புக்குரியது. எதைப்பார்த்து சந்தோஷப்படுவதுனே தெரியாமல் மடமையில் வாழும் தமிழர்கள்தான் இதைக் கொண்டாடுவார்கள்!

Tuesday, December 16, 2008

கமல்-கெளதமி உறவு முறிவு???

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

நடிகர் கமலஹாஷன் ஒரு அபூர்வ பிறவி. அவர் சம்பிரதாயப்படி கல்யாணம் செய்த அய்யங்கார் வகுப்பை சேர்ந்த வாணியிடம் திருமணமாகி சில வருடங்களில் விவாகரத்து வாங்கினார். அவர்களுக்கு குழந்தை இல்லை.

பிறகு சரிஹா என்ற வடஇந்திய நடிகையை, மணம் முடித்தார். அவருடன் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. அவருடனும் சில ஆண்டுகளில் உறவு முறிந்தது.

பிறகு, கெளதமி கமல்ஹாஷனின் கேர்ள்-ஃப்ரெண்டாக இருக்கிறார் என்கிறார்கள். கெளதமியை இவர் மணக்காததற்கு காரணம், கமலஹாஷனுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. இனிமேல் யாரையும் மணம் முடிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்தார். கெளதமி-கமலஹாஷன் நட்பு மற்றும் உறவு ஊரறிய இருந்தது. ஆனால் இன்று அதுவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்கிறார்கள்.

அடுத்து இவர் மனதை கொள்ளை கொள்ளும் அதிர்ஷ்டசாலி யாரோ ?

காதலுடன் -4

அன்று, வெள்ளிக்கிழமை இரவு. சந்தியாவும் அவள் தோழி கவிதாவும் டின்னர்க்கு போய் இருந்தார்கள்.

கவிதாவுக்கு சில பர்சனல் விஷயங்களைப் பற்றி பேசவேண்டுமென்பதால் சந்தியாவைத்தவிர மற்ற தோழிகள் யாரையும் அழைக்கவில்லை. சந்தியாவின் நெருங்கிய தோழி கவிதாவுக்கு கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அவர்களுக்கு ஒரு வயது குழந்தை இருக்கிறது. அவள் கணவர் கார்த்திக், ரொம்ப நல்ல டைப்த்தான். கவிதாவுக்கு அவர் எல்லா விதத்திலும் சரியாக தான் இருந்தார். காதல் திருமணம் என்று சொல்ல முடியாது. தெரிந்த நண்பர்கள் மூலம் அறிமுகமாகி திருமணம் நடந்தது. கல்யாண வாழ்க்கை 3 வருடங்கள் இன்பகரமாகப் போனது. ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. நிர்மலா என்று அழைத்தார்கள்.

ஆனால் குழந்தை பிறந்ததிலிருந்து அவர்களுக்குள் தாம்பத்ய உறவு பிரச்சினை ஆரம்பித்தது. சந்தியாவிடம், அவள் கணவர் முன்புபோல் பிரியமாக இல்லை என்று புலம்பினாள், கவிதா. நாள் ஆக ஆக அவள் ரொம்பவே குறை சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் நிர்மலாவிற்கு காரத்திக் ஒரு நல்ல அன்பான தந்தை என்பதை அவள் மறுக்கவில்லை. இன்று இரவு சாப்பிட்டு முடித்த பிறகும் ஒரே புலம்பல், அழுகை.

"என்னடி சொல்ற கவிதா? கார்த்திக் ஏன் திடீர்னு இப்படி மாறுகிறார்?" என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் சந்தியா.

"தெரியலைடி, அவர் முன்னால்போல் இப்போது இல்லை. நான் சொல்வதை நம்புடி"

"அதுக்குள்ளேயே! உங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருடம்தான் ஆகிறது?"

"எனக்கும் ஆச்சர்யம்தான்"

"சரி, அவரோட இதுபற்றி பேசினயா? நீ தனியாக அவரை எங்காவது அழைத்துச் சென்று பேசுடி. உன் தேவைகளைப்பற்றி சொல்லு. நீ அவரிடம் எதைப்பற்றியும் பேச தயங்கக்கூடாது. கணவன் மனைவிக்குள் என்ன தயக்கம்?" என்றாள் சந்தியா ஏதோ அனுபவசாலிபோல.

"நான் பேசிப் பார்த்தேன். எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை! அதைப்பற்றிப் பேசினாலே அவருக்கு பிடிக்கவில்லை" என்றாள் அழும் குரலில்.

"எனக்கு இந்த திருமண வாழ்க்கை அனுபவமில்லைடி. அதனால் என்ன சொல்றதுனு என்ன தெரியலை. ஏதாவது தெரபிஸ்ட்டிடம் ரெண்டு பேரும் போய் பேசலாம் இல்லையா? உன்னுடயை தேவைகள் என்ன என்பதை அவர் மூலமா சொல்லாம் இல்லையா?"

"சரி இதுபற்றி வேணா கார்த்திக்கிடம் பேசிப்பார்க்கிறேன் சந்தியா. சரிடி, உன் வாழ்க்கை எப்படிப் போகுது?"

"ஒண்ணும் மாற்றமில்லை கவிதா! ரமேஷ் தெரியுமில்லையா? அவர் கால் பண்ணினார்!"

"ரியல்லி?"

"இப்போ சிகாகோவில் ஹில் சைட் ல தான் இருக்கிறாராம்"

"So, he moved back! You were always comfortable with him, Sandhya"

"எப்போதும்னு சொல்ல முடியாது! ஒவ்வொரு சமயம் ஒரு மாதிரி "ஈகோ க்ளாஷ்" மாதிரி வந்துவிடும். ஆனால் அவரோட பேசிக்கொண்டு இருந்தால் பொதுவா நல்லாத்தான் போகும். சரி, புறப்படுவோமா?" இருவரும் கிளம்பினார்கள்.

அடுத்த நாள், சனிக்கிழமை காலையில் ரமேஷ் வருவார் என்று எழுந்து குளித்துவிட்டு, சாதாரனமாக ஒரு சேலையை கட்டிக்கொண்டு, வீட்டை ஒதுங்க வைத்தாள். தலை குளித்து இருந்ததால், கொஞ்சநேரம் தன் கூந்தலை கட்டாமல் காயவிட்டுவிட்டு இருந்தாள் சந்தியா. நேரம் எதிர்பார்த்ததைவிட வேகமாகவே போனது. இன்னும் தலை பின்னாமல் இருந்தாள். கொஞ்சம் கூந்தல் காற்றில் "ட்ரை" ஆனவுடன் தலை பின்னிக்கலாம் என்றுகொண்டை போட்டுக்கொண்டாள் சந்தியா.

சரியாக 10:55 க்கு காலிங் பெல் அடித்தது. ரமேஷ்தான் என்பதை உறுதி செய்துகொண்டு கதவைத்திறந்தாள். ரமேஷ் உள்ளே வந்ததும் கதவை அடைத்தாள்.

"வாங்க ரமேஷ்! பரவாயில்லை 2 வருடத்தில் ரொம்ப மாற்றம் இல்லை. அப்படியேதான் இருக்கீங்க!"

"நீயும் அப்படியேதான் இருக்க சந்தியா, ஆனால், ஏதோ வித்தியாசம் தெரியுது" என்றான் அவளை ஆராய்ந்துகொண்டே, தான் வாங்கிவந்த சின்ன "கிஃப்டை" அவளிடம் கொடுத்தான்.

"இதென்ன ரமேஷ்? இதெல்லாம் எதுக்கு?! என்றாள் அவன் கொடுத்த பாக்கேஜை காட்டி.

"நான் போனவுடன் ஓப்பன் பண்ணிப்பாரு, தெரியும்!"

ரமேஷ்க்கு அவளின் அதிக ஒப்பனை இல்லாத கோலம் ரொம்ப செக்ஸியாக இருந்தது. எப்போதுமே லூஸ் ஹேர்ஸ்டைல் அணிபவள், அன்று கொண்டை போட்டு இருப்பதால் ரொம்பவே கவர்ச்சியாக தெரிந்தாள். அவன் ஆராய்ச்சி பார்வை அவள் உடலின் வேறு சில இடங்களிலும் பதிந்தது.

சந்தியாவுக்கு அவன் பார்வை ஒரு மாதிரியாக இருந்தது. அதை சமாளிக்க,

"என்ன என்னை இப்படி பார்க்கறீங்க ரமேஷ்? புதுசா பார்க்கிற மாதிரி?" என்றாள் அவனை பார்த்தும் பார்க்காமலும்.

"கொஞ்சநேரம் சென்று சொல்றேனே? வந்ததும் விருந்தாளியை இப்படியா கேள்வி மேலே கேள்வி கேப்பாங்க?"

வந்ததும் என்னை இப்படியா வேடிக்கை பார்ப்பார்கள்! எப்படி பார்க்க்குறீங்க? ஆனால் பேசுவதைப்பாரு!

"சரி, என்ன குடிக்கிறீங்க?"

"அல்கஹால்லாம் கொடுப்பியா என்ன?"

"டின்னெர்னா தரலாம். ப்ரேக் ஃபாஸ்ட்க்கு அதெல்லாம் கிடையாது"

"பொய் தானே?"

"அஃப் கோர்ஸ். என்னைப்பத்தி உங்களுக்கு என்னதான் எண்ணம்?"

"எப்படி அது? உண்மை மாதிரியே பொய்யைக்கூட இவளோ அழகா பேசுறயே அதை எங்கே பழகின, சந்தியா? சரி, என்னோட சண்டை போடாமல், கொஞ்சம் தண்ணி தா போதும், சந்தியா!"

சந்தியா, தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். "காஃபி தர்றேன் என்றால், வேறென்ன கிடைக்கும்னு சொல்லி கேட்டு என்னை நல்லா உபசரிக்க வச்சுட்டீங்க, ரமேஷ். உங்களுக்காக கஷ்டப்பட்டு இட்லி சட்னி எல்லாம் செய்து இருக்கேன்."

"ஏய் நான் அதைபத்தி சொல்லல. சரி, க்ரைண்டர் வச்சிருக்கியா என்ன?"

"அதைப்பத்தி சொல்லலயா? எனக்கு தெரியாதா என்ன? நீங்க நினைப்பதெல்லாம் இப்போ கிடைக்காது சார். என்னிடம் க்ரைண்டர்லாம் இல்லை, ரமேஷ்! மிக்ஸி வைத்தே அரைச்சேன்".

"புதுசா இட்லி அவியவச்சு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிப்பார்க்கிறாயா? நான் தான் கிடைச்சேனா?"

"அதெல்லாம் இல்லை. நல்லா வந்திருக்குனுதான் நினனக்கிறேன். சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க! சரி என்னிடம் என்ன வித்தியாசம்? கொஞ்சம் வெயிட் போட்டு இருக்கேனா?"

"இருக்கலாம். நீ வெயிட் போட்டு இருந்தால் அப்படி இருப்பது நல்லாத்தான் இருக்கு!"

"நல்லானா எப்படி, ரமேஷ்?"

"இதையெல்லாம் எப்படி விலாவரியா சொல்றது? நீ இப்போ இருக்கிற "கெட் அப்" ல உன்னை கொஞ்சம் வேற மாதிரி காட்டுது"

"வேற மாதிரினா, எப்படி? குண்டாவா? ஒல்லியாவா?"

"சொல்லத்தான் வேணுமா? இங்கே காதைக்கொடு சொல்றேன்!"

"இங்கே வேற யார் இருக்கா? சும்மா சத்தமா சொல்லுங்க!" அவள் சிரித்தாள்.

"நான் சொல்லுவது எனக்கே கேட்கக்கூடாது! அதான்.." அது சரி, நீ என்னை மாதிரி ஆட்களை இன்வைட் பண்னும்போது இப்படியெல்லாம் இருக்காதே! பேசாமல் தலை பின்னி விட்டு வந்திடேன், ப்ளீஸ்?"

"நான் என்ன "நேக்கடாவா" இருக்கேன்? என்னை ரொம்ப குழப்பாதீங்க? ஏன் தலை பின்னி வரனும்?"

"எதற்கெடுத்தாலும் ஏன் நு கேட்டால் நான் என்ன செய்றது? போய் தலை பின்னிட்டு வா, ப்ளீஸ்!"

"சொன்னால்தான் போவேன். சரி காதில் சொல்லி தொலைங்க! இல்லைனா எனக்கு தலையே வெடிச்சுடும்" என்று ரமேஷ் அருகில் சோஃபாவில் வந்து அமர்ந்தாள். அமர்ந்து அவள் காதை அவன் முகம் அருகில் கொண்டுவந்தாள்.

இயற்கையிலேயே சந்தியா ரொம்ப அழகு, அவளுடன் தனியாக இருக்கவே பயப்படுவான் ரமேஷ். அவனைப்பொறுத்தமட்டில் ஒரு ஆண் தன்னை நம்பும் பெண்ணிடம் கன்னியமாக நடந்துக்கனும். அப்போத்தான் அவன் ஒரு நல்ல ஆண்மகன். ஆனால் இப்போ அவன் மேலேயே அவனுக்கு நம்பிக்கை இல்லை. அவள் அருகில் அமர்ந்தது அவனுக்கு ரொம்ப ஒரு மாதிரியாக இருந்தது. சந்தியாவின் உடலில் இருந்து என்னவென்றே சொல்ல முடியாத நறுமணம் அவனை மயக்கியது. அவள் வலதுகாதின் அருகில் உதட்டை கொண்டு சென்றான். சூடான அவன் மூச்சுக்காற்று அவள் காதில் பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் அவள் அப்படியே இருந்து இருந்தால், அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் மற்றும் அழகான அவள் காதிலும் பதிந்து இருக்கும்.

அவளின் அருகாமையால் ரமேஷிடம் ஏற்படும் தடுமாற்றத்தை உணர்ந்த சந்தியாவின் நிலைமை அதைவிட மோசமாக ஆகிக்கொண்டு இருந்தது. காதருகில்படும் அவன் மூச்சுக்காற்று அவளை ஏதோ செய்தது. அவள் காதில் ஏதோ மெதுவாகச்சொன்னான். அவன் சொன்னதைக் கேட்ட உடனே அதிர்ச்சியில் உடனே எழுந்தாள்.

"நிஜம்மாவா? உங்களை வந்து கவனிச்சுக்கிறேன்" என்று எழுந்து தன் அறைக்குள் ஓடினாள்.


-தொடரும்

Friday, December 12, 2008

காதலுடன் -3

ராஜூ கோபத்துடன், “நான் உன்னிடம் அதெல்லாம் கேட்டேனா? என்றார். நான் உடனே, "கோபப்படாதீங்க ராஜு, நானும் என் ரிசல்ட்ஸ் தருகிறேன்" சொன்னேன், ரமேஷ்”

”ஆனால் நீ அப்படி கேட்டது பிடிக்கவில்லையா அவருக்கு?”

“ஆமா, அது நான் என்ன பண்ணுறது, ரமேஷ்?”

"உன் முதலிரவு ரொம்ப வித்தியாசமாக ஆரம்பித்து உள்ளது, சந்தியா! ஆனால் எனக்கு இதில் எதுவும் தப்பா தெரியலை! ஆனால் ஒரு சில பேருக்கு இப்படி கேட்பதில் உள்ள நியாயம் தெரிந்தும் ஒரு வரட்டு கவுரவம் இருக்கும் இல்லையா? இவ என்ன கேட்பது, நான் என்ன கொடுப்பது என்று. சரி, வேற என்ன கேட்ட அவரிடம்?”

“நான் அவரிடம் சொன்னேன், கல்யாணம் ஆனாலும், எனக்குனு ஒரு சில பர்சனல் விசயங்கள் சில இருக்கு, அதையெல்லாம் என்னால் முழுவதுமாக ஷேர் பண்ண முடியாது. என்னுடையை சாலரியை என் தனி அக்கவுண்ட்ல போடுவேன். ஏன் என்றால், என் அப்பா, அம்மா மற்றும் ஃப்ரெண்ட்ஸ் சம்மந்தப்பட்ட கம்மிட்மெண்ட்ஸ் க்கு தேவைப்படும். அதே போல் அவரும் செய்துக்கலாம் நு சொன்னேன். அவருடைய பணத்திற்காக நான் அவரை கல்யாணம் செய்யவில்லை! அதே சமயத்தில், வாடகை, வீட்டு தேவைகள் எல்லாவற்றையும் சரியாக கணக்குப்பண்ணி என் பங்கை நான் கொடுத்துவிடுவேன் என்றேன். அதேபோல் அவரிடம் எதிர் பார்ப்பேன் என்றேன். அந்த “ப்ராப்பசிஷன்” அவருக்கு சுத்தமா பிடிக்கவில்லை!”

“எதுக்கு இந்த மாதிரி “ப்ராபொஷிஷன்” சந்தியா?

“என் அப்பா, அம்மா என் ஃப்ரெண்ஸ்லாம் எனக்கு ரொம்ப முக்கியம், ரமேஷ். அவங்க மிடில்-க்ளாஸ். அவர்களுக்கு தேவைகள் இருக்கு. இன்னைக்கும் நான் அவர்களுக்கு தேவையான நேரம் பணம் மற்றும் பலவிதத்தில்உதவுகிறேன். என் கல்யாணம் இதை எல்லாம் மாற்றிவிடக்கூடாது இல்லையா? அதுவும் வயதாக ஆக மருத்துவ செலவு அது இதுனு வரும். நான் நிறைய உதவ வேண்டிய நிலை வரலாம். நான் இதை என் கணவருக்கு ஒரு சுமையாக வைக்க விரும்பவில்லை! என்னுடைய தனிப்பட்ட பிரச்சினையாகத்தான் நான் எடுத்துக்க விரும்புறேன்.”

“இதெல்லாம் ராஜுவுக்கு புரியும் இல்லையா? இப்படி ஒண்ணு கேக்காமலே இருந்து இருக்கலாம் இல்லையா?”

“Ramesh! I don't want to take any chance here! What if he does not understand? I don't want to overlook that possibility. புரியுதோ, புரியலையோ, ரமேஷ், என்னோட தலைவலி எனக்குத்தான் புரியும். அதை அவரும் புரிந்து கொள்ளனுமோ, புரிந்து கொண்டு எனக்காக உருகனுமோனோ, அல்லது அதுபோல் நடிக்கனுமோனு நான் அவரிடம் எதிர் பார்க்கவில்லை. நான் அவரிடம் போய் இதுபோல் சின்ன சின்ன விசயத்தை எல்லாம் சொல்லி, விளக்கி, ஏதோ அவரிடம் பிச்சை எடுப்பது போல் கேட்க எனக்கு இஷ்டம் இல்லை”

“சரி, அதற்கு அவர் ரியாக்ஷன் எப்படி இருந்தது?”

“இதெல்லாம் அவருக்கு சுத்தமா பிடிக்கவில்லை, ரமேஷ். அதாவது புரிந்தாலும், இவ என்ன இப்படி “லா-பாயிண்ட்” பேசுவது என்கிற ஆணாதிக்க எண்ணம் இருக்கு அவரிடம். நான் ஏதோ தேவையில்லாமல் சின்ன விசயத்தை பெருசாக்குவதுபோல நினைக்கிறார். நான் இது சம்மந்தமாக அவரிடம் கெஞ்ச விரும்பவில்லை. அதான் எங்கள் திருமண உறவு இந்த நிலைமைக்கு வந்துவிட்டது!”

“உனக்கு ஐஸ் வைக்கிறதுக்காக சொல்லலை, சந்தியா. எனக்கு உண்மையிலேயே இந்த டீல் பிடிச்சி இருக்கு. ஒரு சில அம்மா அப்பா ஃபேமிலி சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை நம்ம வாழ்க்கை துணை புரியாமல் போவ தற்கு வாய்ப்புகள் நிச்சயம் இருக்கு. திடீர்னு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவதை நிறுத்த முடியாது என்பது உண்மைதான்..அதேபோல் அவர்கள் உன்னுடைய உறவுகள், அவைகளை நீ உணருவதுபோல் உன் கணவர் உணருவது கடினம்னு எனக்கு தோனுது. என்னை ராஜு நிலைமையில் வைத்து யோசித்து சொல்றேன்”

“நிஜம்மாவா!! தேங்க் யு, ரமேஷ்!”

“எதுக்கு தேங்க்ஸ்லாம் சந்தியா?”

“இல்லை ரமேஷ், என்னை யாருமே புரிஞ்சுக்கலை ரமேஷ். ஒவ்வொரு சமயம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்பா, அம்மா எல்லாம் கூட நான் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணுவதாக சொன்னாங்க, ரமேஷ்”

“அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாதே சந்தியா. அது ராஜூவுக்கும் புரியத்தான் செய்யும்னு தோனுது”

“என்ன புரிஞ்சதோ போங்க . அவருக்கு இது பிடிச்ச மாதிரி தெரியலை. நானும் இதை கெஞ்சு கேக்கலை. ஒரு மாதிரி டிமாண்ட் பண்ணினேன் னு தான் சொல்லனும்”

"எதையுமே சொல்றவிதமா சொன்னால் புரிந்துகொள்வார்கள் னு சொல்லுவாங்க. அந்த சூழ்நிலையில் வின் - வின் சிச்சுவேஷன் என்பார்கள். ஆனால் அது எப்படினுதான் யாருக்கும் தெரியாதுனு நினைக்கிறேன்"

"நான் எனக்கு சரினு தெரிந்ததை எனக்கு தெரிந்தவிதத்தில் பேசினேன். பின்னால் நிறைய பிரசினையை தவிர்க்கலாம்னு பார்த்தேன். இப்போ ஆரம்பித்திலேயே பிரச்சினையாருச்சுனு நினைக்கிறேன்" அவள் சிரிக்க முயற்சித்தாள்.

”இதை எல்லாம் என்னிடம் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, சந்தியா!”

"சரி, ரமேஷ், அடுத்த சாடர்டே என் வீட்டுக்கு வர்றீங்களா? சும்மா ஏதாவது காஃபி கீஃபி தர்றேன்"

"வேற என்ன கிடைக்கும்?"

"நீங்க வாங்க, அப்புறம் பார்க்கலாம். சரியா?"

"சரி வர்றேன். யாராவது கம்பெணி அழச்சுண்டு வரவா?"

"யாரு உங்க கேர்ள் ஃப்ரெண்டையா? அழச்சிட்டு வாங்களேன்?"

"வேணாம் வேணாம்"

"ஏன்?"

"என்னுடைய ஆறாவது அறிவு வேணாம்னு சொல்லுது"

சத்தமாக சிரிக்கிறாள்

"என்ன சிரிப்பு?"

"பரவாயில்லை உங்க அறிவு அப்பப்போ ஒழுங்கா வேலை செய்யுது"

"உன்னை சனிக்கிழமை வந்து கவனிச்சுக்கிறேன்"

"ரொம்ப பயமுருத்தாதீங்க! உங்க வீரத்தை நேரில் காட்டவும்"

"சரி நான் ஃபோனை வைக்கவா?"

"இதென்ன பர்மிஷன் கேக்குறீங்களா? சரி பாவம் பொழச்சு போங்க!"

"பை சந்தியா, சீ யு சாட்டர்டே! ஹேய் வாட் டைம்?"

"ஒரு காலையில் 11 மணிக்கு வாங்க!"

"சரி கால் பண்ணுறேன். இஃப் தேர் இஸ் எனி சேஞ்ச் ஆஃப் ப்ளான், ஐ வில் லெட் யு நோ. பை"

-தொடரும்

Thursday, December 11, 2008

வயாகரா (viagara) = கவேர்ட்டா (Caverta)

வயாகரா பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கு புது வாழ்வு கொடுத்த ஒரு மருந்து. இதை பலர் தவறாக பயன்படுத்தினாலும் ஒரு சிலருக்கு உண்மையிலேயே அவர்கள் குறையை நிவர்த்தி செய்ய உதவுகிறது. அவர்களையும் அவர்கள் மனைவிமார்களை சந்தோஷப்படுத்துகிறது.

ஆண்மைக்குறைவை மறைத்து, கில்ட்டியாக ஃபீல் பண்ணி மனவியாதி வந்து பலர் பலவித பிரச்சினைகளில் இருப்பது என்னவோ உண்மைதான். அதுவும் இந்தியாவில் உள்ள ஆணாதிக்க மனப்போக்கு உள்ள, குறுகிய மனப்பான்மை உள்ள ஆண்கள் இதுபோல் குறைகளை ஏற்றுக்கொள்ளாமல் வாழ்ந்ததெல்லாம் ஒரு காலம், அது இப்போ மலை ஏறிப்போய்விட்டது என்றும் சொல்லமுடியாது.

வயாகராவால் ஃபைஸர் என்கிற அமெரிக்க கம்பெணி பற்பல கோடானு கோடிகள் சம்பாரித்து அமெரிக்காவின் #1 பார்மஸியூடிகல் கம்பெனியாக ஆனது என்று சொன்னால் அது மிகையாகாது.

சரி, இந்தியாவில் இந்த குறை உள்ளவர்கள் என்ன மருந்து சாப்பிடலாம்? வயாகரா இந்தியாவில் கிடைக்குமா? எங்கே கிடைக்கும்? என்கிற கேள்வி பலருக்கும் எழும். இதற்கு பதில்தெரிந்தவர்கள் இருந்தாலும், அதை கேட்க வெட்கப்படுபவர்களும் இருப்பார்கள்.

ரான்பாக்ஸி (Ranbaxy) என்கிற இந்திய ஃபார்மஸியூடிக்கல் கம்பெணி, வயாகராவை (அதில் உள்ள அதே ஆக்டிவ் கெமிக்கலை) கவேர்ட்டா என்கிற பெயரில் விற்கிறார்கள். ஆண்மை குறையுள்ளவர்கள் தனியாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, உங்கள் உடல்நலத்திற்கு இந்த மருந்து தீங்கு விளைவிக்காது என்று அறிந்துகொண்டு பயன்படுத்தவும்!

இந்த லிங்க் பார்க்கவும்!

http://www.xlpharmacy.com/Caverta/


Thursday, December 4, 2008

காதலுடன் - 2

"வேணாம் ரமேஷ்! நான் ஏதாவது சும்மா சொல்லப்போக, அது ஏதாவது வம்பா முடிஞ்சிடும்னு பயம்மா இருக்கு"

"நான் என்ன அவ்வளவு சகிப்புத்தன்மை இல்லாதவனா? நான் ரொம்ப மோசமா, சந்தியா?"

"இல்லையே, ஆனால், ரமேஷ் நீங்க கொஞ்சம் சென்ஸிடிவ்தான். பொதுவா நம்மிடம் உள்ள குறைகளை நாமே ஒத்துக்கொள்வோம். ஆனால், இன்னொருவர் அதையே சொல்லும்போது கொஞ்சம் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். இங்கே என்னை வைத்து நான் உங்களைப்பற்றி சொல்றேன்"

"சரி சொல்ல வேணாம், சந்தியா. நான் என்ன நினைச்சேன்னு (strange feeling) நானே சொல்லிடவா?"

"சொல்லுங்க, ப்ளீஸ்"

"நீ கோவிச்சுக்கக்கூடாது?"

"அதெப்படி எனக்குத் தெரியும்? சரி, முயற்சிக்கிறேன். சொல்லுங்க" அவள் சிரித்தாள்.

"எனக்கு உன் கல்யாணம் தோல்வியடைந்ததை சொல்லும்போது கொஞ்சம்கூட வருத்தமாக இல்லை. மாறாக ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் என்ன "செடிஸ்டிக்கா" (sadistic) என்னனு தெரியலை"

"ஏன், ரமேஷ், உங்களுக்கு சந்தோஷம்?"

"தெரியலையே. எனக்கு விளங்கும்போது உன்னிடம் வந்து உன் காதில் யாருக்கும் கேட்காமல் ரகசியமாக சொல்றேன். சரியா?" என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னான்.

"அவ்ளோ பெரிய ரகசியமா? சரி, நான் காரணத்தை சொல்லவா?"

"சொல்லேன், பார்க்கலாம்"

"என்னோட நீங்க சண்டைபோட்டுவிட்டு, கோபமா இருந்தீங்க இல்லையா? கோபித்துக் கொண்டு இருந்ததால்தான் எனக்கு ஃபோன் நம்பர்கூட கொடுக்காமல் நியூ ஜேர்ஸி மூவ் பண்ணினீங்க, சரியா? அந்தக்கோபம் இன்னும் இருக்கு போல, ரமேஷ். இன்று தியேட்டரில்கூட உங்க கேர்ஃப்ரெண்டோட இருக்கும்போது என்னைப்பார்த்தும் ஒரு ஹாய் கூட சொல்லலை. இல்லையா? அதனால் என்னுடைய தோல்வியில் ஒருவேளை உங்களுக்கு சந்தோஷமா இருக்கலாம்."

" சே சே, நான் அந்த மாதிரி டைப்லாம் இல்லை, சந்தியா. இது வேற மாதிரி ஃபீலிங். ஏய் அவள் என் கேர்ள் ஃப்ரெண்டெல்லாம் இல்லை"

"அப்போ அவள் என்ன பாய் ஃப்ரெண்டா?"

"சும்மா ஃப்ரெண்டு. அவ்ளோதான்!"

"அதென்ன சும்மா ஃப்ரெண்டு? "சும்மா ஃப்ரெண்டு" ஒரு கேர்ளா இருந்தால் "கேர்ள் ஃப்ரெண்டு" நு சொல்லக்கூடாதா, ரமேஷ்?" ஏதோ அப்பாவிபோல கேட்டாள்.

"உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு! சின்ன பாப்பா! வாயிக்குள்ளே விரலை விட்டாக்கூட கடிக்கத்தெரியாது உனக்கு!"

"விட்டுப்பாருங்களேன்!"

"சரி அப்போ, நீயும் என் ஃப்ரெண்டுதானே? "கேர்ள் ஃப்ரெண்டா" நீ எனக்கு?"

"லக்ஷ்மிட்ட என்னை கேர்ள் ஃப்ரெண்டுனு சொல்லுங்க. நான் ஒண்ணும் தப்பா நெனச்சுக்க மாட்டேன்"

"அவள் தப்பா நெனச்சுக்கிட்டா?"

"அவள் என்ன உங்க மனைவியா? தப்பா நினச்சாத்தான் என்ன? சரி, கேர்ள்-ஃப்ரெண்டுனா அப்படி என்ன தப்பு? ரொம்பத்தான் அந்த லக்ஷ்மிக்கு உருகுறீங்க"

"சரி உனக்கு இன்னொரு நாள் நேரில் பார்க்கும்போது சொல்றேன். நேரில் சொன்னால்தான் இதெல்லாம் உனக்கு புரிய வைக்க முடியும்"

"என்னைக்கு?"

"அடுத்த முறை நேரில் பார்க்கும்போது, சரியா? இப்போ என்னை ஆள விடும்மா!"

"சரி, நான் சொல்றதைக்கேளுங்க, ரமேஷ்! என் தோல்வியை நினைத்து அப்படி சந்தோஷம் வருவதால் ஒண்ணும் தப்பு இல்லை ரமேஷ். நாமெல்லாம் மனுஷங்கதானே? இதுக்காக ரொம்ப அழாதீங்க, சரியா ?" அவள் குரலில் கேலி தெரிந்தது.

"இல்லை, அது காரணம் இல்லைனு எனக்கு 100% உறுதியா தெரியும் சந்தியா!"

"சரி நீங்களே காரணத்தை சொல்லிடுங்க!"

"இப்போ உன்னோட என்ன வேணா பேசலாம். ஒருவேளை உன் கல்யாண வாழ்க்கை நல்லவிதமா போயிருந்தா இந்த அளவுக்கு உனக்கு நேரம் இருக்காது. நானும் உன்னோட இதுபோல் ஃப்ரீயா பேசமுடியாது என்கிற என்னுடய சுயநலம்தான்."

"உங்களுக்கு என்னோட பேசுவது அவ்ளோ பிடிக்குமா, ரமேஷ்?" அப்போ ஏன் நியூ ஜேர்ஸி போனதிலிருந்து ஒரு தரம் கூட என்னை கூப்பிடவில்லை? அவள் குரலில் கோபம் தெரிந்தது.

"பேசவில்லை உண்மைதான். ஆனால் உன்னைப்பற்றி நிறைய நினைப்பேனே, சந்தியா?" என்றான் அவளை சமாதானப்படுத்த.

"அப்படியா? என்ன மாதிரி நினைப்பு, அது, ரமேஷ்? சொல்லுங்க ப்ளீஸ்"

"அதெல்லாம் சொல்ல முடியாது, சந்தியா. அப்புறம் உன்னிடம் உதை யாரு வாங்கிறது?"

"அச்சச்சோ! அது என்ன ஒரு மாதிரியான நினைப்பா, ரமேஷ்? நீங்க ரொம்ப மோசமான ஆளா?"

"ஆமாம், நான் ரொம்ப கெட்டப் பையன் தான். கொஞ்சம் கவனமாவே இரு, சந்தியா"

"சரி, சும்மா சொல்லுங்க. நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன்!"

"நீ வேற! இதெல்லாம் ரொம்ப ப்ரைவேட்"

"ஒழுங்கா மறைக்காம உண்மையை சொல்லுங்க, 'அந்த மாதிரியான' நினைப்பா?"

"அப்படித்தான் நு வச்சுக்கோவேன், என் மனசுக்கு நாந்தானே ராஜா?"

"அதெல்லாம் இல்லை. உங்களை ரொம்ப நல்லவர்னு நெனச்சு பழகினால், இப்படி இருக்கீங்களே, ரமேஷ்"

"எல்லாம் உன் தப்புத்தான், சந்தியா"

"அதெப்படி என் தப்பு?"

"நீ ஏன் அப்படியெல்லாம் யோசிக்கிற மாதிரி இருக்க? எல்லோரையும் பார்த்து அப்படியா தோனுது?"

"என்னைப் பார்த்தால் எப்படி தோணுது?"

"சொல்லிடவா?"

"வேணாம், வேணாம்! சரி, ஆம்பளைங்களுக்கு ஏன் கொஞ்சம்கூட வெட்கமே இல்லை, ரமேஷ்?"

"ஏன் ஆம்பளைங்கனு சுத்தி வளைக்கிற? "உங்களுக்கு கொஞ்சம்கூட வெட்கமில்லை ரமேஷ்"னு சொல்ல வேண்டியதுதானே?"

"மெளனம்"

"என்ன யோசனை?"

"இல்லை, நீங்க என்ன மாதிரி என்னைப்பற்றி நினைத்து இருப்பீங்கனு யோசித்தேன்! உங்களை மாதிரி நினைத்துப்பார்ப்பதால் இப்போ நானும் ரொம்ப கெட்டபொண்ணா ஆயிட்டேன்"

"இது ரொம்ப கண்டேஜியஸ் போலிருக்கு, சந்தியா! சரி, ராஜு நல்ல படித்த, அழகான, உன்னை மணம்முடிக்க தகுதியுள்ள ஆள் தானே? என்ன பிரச்சினை, சந்தியா?"

"வாழ்க்கையை ஆரம்பிக்குமுன், நான் ஒரு சில கேள்விகள் கேட்டேன், கண்டிஷன்ஸ் போட்டேன். அது அவருக்கு பிடிக்கலை, ரமேஷ்!"

"வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பா? கொஞ்சம் புரியிறார்ப்போல சொல்லு, சந்தியா!"

"கல்யாணம் முடிந்தவுடன், அன்று இரவு தனியாக இருக்கும்போது முதலில் எனக்கு அவருடைய எச் ஐ வி டெஸ்ட் ரிசல்ட் வேணும்னு சொன்னேன். அப்புறம் சில பொருளாதார சுதந்திரம் எனக்கு தேவைனு ஒரு மாதிரி "ப்ராப்பஸிஷன்" கொடுத்து, அவரின் "அப்ரூவல்" கேட்டேன்!"

"அது சரி!. நீ உன்னுடைய ரிசல்ட்டையும் அப்போ அவருக்கு கொடுக்கனும் இல்லையா, சந்தியா?"

"அதை கொடுக்க ரெடியா இருப்பதால்தான் கேட்டேன் ரமேஷ்! அவர் செய்த தப்புக்கு நான் சாகத்தயாரா இல்லை. அவரும் என் தப்புக்காக சாக வேண்டாம் என்கிற நல்லெண்ணம்தான் ரமேஷ்"

"அதற்கு ராஜூ என்ன சொன்னார்?"

-தொடரும்.