Thursday, September 27, 2012

சவுதியைப் பார்! துபாயைப் பார்!


இளம் பெண்
வஞ்சிக்கப்பட்டாள்
வன்புணர்வு செய்யப்பட்டாள்
யாரோ தீண்டத்தகாதவளாம்
யார் இப்படி செய்தது?
உயர் சாதி வேஷிமகன்களாம்!
 உயிரை மாய்த்துக் கொண்டானாம் தந்தை
அவளுக்கு நீதி கிட்டாதெனதறிந்து
என்ன ஒரு பரிதாபம்
இதுதான் இந்தியாவா?
இவர்கள்தான் இந்துக்களா?

யாரப்பா நீ?
உன் பெயரென்ன?
இக்பாலா? இமானுவேலா?
கிருத்தவனா? இஸ்லாமியனா?
 ஏன் உலகறிய செய்கிறாய் இந்த அவலத்தை?
எம் வர்ணாஸ்திரத்தை இகழவா ?
 என் நாட்டவரை இழிவுபடுத்தவா?
எம் உயர்சாதியினர் வன்புணர்ந்ததாலா?
 உன் மதத்தில் தலித் இல்லை என்பதாலா?
என்ன ஒரு மதவெறி!
 இதுதான் இந்தியாவா?
இவர்கள்தான் இந்துக்களா?

 விஷமியடா நீ
கீதை படித்தவன் நான்
உலகில் உயர்ந்த மதம் என் இந்து மதம்
வர்ணாஸ்திரம் எம்மதத்தின் இதயம்
சவுதியைப் பார்!
துபாயைப் பார்!
 அபுதாபியைப் பார்!
துருக்கியைப் பார்!
ஈரானைப் பார்!
என்ன ஒரு நியாயப்படுத்தல்!
இதுதான் இந்தியாவா?
இவர்கள்தான் இந்துக்களா?


************************


சம்மந்தப்பட்ட செய்தி!

Mother of two gang-raped by intruders in Jind

IANS Sep 26, 2012, 03.28PM IST
JIND: Close on the heels of the gang-rape of a teenaged Dalit girl by eight youths in Hisar district earlier this month, a married woman in Haryana's Jind district has alleged that she was gang-raped at gun-point last Friday by three youths inside her house.
The victim, who is in her mid-30s and is the mother of two children, and her husband Wednesday threatened to commit suicide in front of the office of the superintendent of police (SP) here, alleging that the Haryana Police were deliberately not taking any action against the accused.

In her complaint to the police, the victim, who lives in Jind district, said three youths entered her house Sep 21 (Friday) and raped her at gunpoint in the presence of her children.
"I filed a complaint with the police Sep 21 itself. The accused are roaming free but the police is not taking any action," the victim said.
The police registered a case of rape following her complaint but did not make any arrest.
She and her husband have now threatened that they will commit suicide in front of the SP's office if the police fail to take action against the accused.
"We have registered a case after her complaint. The accused are on the run but we are trying to arrest them," investigating officer Subhash Chander said Wednesday.
In neighbouring Hisar district, the father of a 16-year-old gang-rape victim committed suicide by consuming a poisonous substance Sep 18 after he came to know that his daughter was gang-raped Sep 9 near Hisar by eight youths, who later circulated an MMS clip of the crime. 
 ---------------------

Well, seems like we have got lots of high-class sick mother-f**kers in Haryana!

பின்னூட்டப் பிரச்சினை! UNMAIKALum, உண்மைகளும்!

முருகன் துணை! உ (பிள்ளையார் சுழி) போட்டு ஆரம்பிக்கிறேன்! பதிவுலகக் கண்மணிகளே! நம் பதிவுகளில் "UNMAIKAL" என்கிற ஒரு பதிவரும், இப்போது "உண்மைகள்" என்னும் அவரை பழிவாங்கவே உருவான இன்னொரு பதிவரும் ஒரே அட்டகாசம் செய்றாங்க! இவங்க, பதிவுக்கு சம்மந்தம் இருக்கோ இல்லையோ ஒரே நேரத்தில் பல பின்னூட்டங்களை "ரெடி மேட்" ஆக தயாரித்து வைத்து எல்லாப் பதிவிலும் ஒரே பின்னூட்டங்களைப் போயி கொட்டுறாங்க.

இந்த  UNMAIKAL என்கிற பதிவர் இடும் பின்னூட்டங்களை நான் பொதுவாக பிறதளங்களில் வரும்போது வாசிப்பதில்லை. கடந்து போய்விடுவேன். இதை வெளியிடும் தளத்திற்கும் நான் அறிவுரை எல்லாம் சொல்வதில்லை! அவங்க தளம், அவங்க இஷ்டம். நமக்கென்ன? னு  இவர்களைப் பற்றி விமர்சிக்காமலே போயிடுறது. என் தளத்தில் அதுபோல் பின்னூட்டம் வந்தால் அதை அகற்ற வேண்டுமென்றுதான் எண்ணியிருந்தேன். இந்தத் தொல்லை எதுவும் சமீபத்தில் வரவில்லை!

இப்போ இந்த UNMAIKAL பின்னூட்டங்களை பழிவாங்க வென்றே "உண்மைகள்"னு ஒரு பதிவர் கெளம்பியிருக்காரு. UNMAIKAL பொதுவாக இந்துமதவாதிகள், புலிகள் ஆதரவாளர்கள் போன்றவர்கள் முகத்தில் சேற்றை வாரி எறியவே இந்தப் பின்னூட்டங்களை இடுவார்- அதில் உண்மைகளும் இருக்கலாம்தான். இப்போ இந்த "உண்மைகள்" இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவே இதுபோல் "ரெடிமேட்" பின்னூட்டங்களிடுகிறார்- இதிலும் உண்மைகளும் இருக்கலாம்தான்.  

இதுபோல் பின்னூட்டங்கள் யாருடைய தளத்துக்கும் உதவுதா என்னனு தெரியலை. என் நிலைப்பாட்டை நான் தெளிவா சொல்லிடுறேன். என்னைப் பொறுத்தமட்டில் இது ரெண்டுமே பதிவுலகில் தேவையில்லாத உபத்திரவங்கள்னு தாழ்மையா என் கருத்தை சொல்லிக்கிறேன்!

 இது தவிர, ஒரு சிலர் நம் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டுவிட்டு அவர்களுடைய பதிவுக்கு தொடுப்பும் கொடுப்பார்கள். இவர்கள்  இப்படி செய்வதின் காரணம் இவர்கள் நேரம் செலவு செய்து எழுதிய பதிவை பலர் வாசிக்கவேண்டும் என்கிற எண்ணமே! இதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது பதிவரைப் பொறுத்து. எனக்கு இதுபோல் பின்னூட்டங்கள் வரும்போது அதை அப்படியே விட்டுவிட்டு, முடிந்தால் அவர் தொடுப்புக்கொடுத்த அவர் பதிவுக்குப் போவேன். இல்லையெனறால் "வருகிறேன்" என்பதோட முடிந்துவிடும்.

நன்றி,  வணக்கம்!

Wednesday, September 26, 2012

தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் திராவிட இந்துக்கள்!

தந்தை பெரியாரால் தங்கள் முகத்திரை கிழிக்கப்பட்டதால், பெரியாரை வஞ்சம் தீர்த்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் நமக்குப் புதிதல்ல! கடந்த ஆண்டுகளில் பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியால் பெரியாரை இழிவுபடுத்தி, தாங்கள் சாதிக்க வேண்டியதை  சாதித்து பெருமிதத்தில் இருக்கும் இந்த  உலகில், இப்போ புதுசா கெளம்பியிருக்கானுக திராவிட இந்து பக்திமான்கள்! இவனுகளப் பார்த்தா பக்திமான் மாதிரி தெரியாது! நீங்க நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள்! அவ்வளவு அழகாக நாத்திக வேடமணிந்து இருக்கானுக இந்த திராவிட பக்திமான் பண்டாரங்கள்!

இவனுகளுடைய சமீபத்திய சாதனை என்னனா தந்தை பெரியாரை இழிவுபடுத்துவது! இவனுகள பார்த்தா பண்டாரம் மாதிரி தெரியவே தெரியாது! ஆமா, நாத்திகவாதி மாதிரித்தான் பேசுவானுக, விவாதிப்பானுக! பெரிய தத்துவம், ஆன்மீகம், எல்லாத்தையும் கலந்து மேதாவிமாரி எதையாவது அள்ளி விடுவானுக. ஆனால் இவனுகளை நீங்க கவனிச்சுப் பார்த்தால்த்தான் தெரியும், இவனுக பெரியாரை இழிவுபடுத்தக் கிளம்பியிருக்கும் திராவிட பக்திமான்கள் என்று! சரியான முட்டாப்பயலுக இந்த திராவிட இந்துக்கள்!

கடவுள் நம்பிக்கை உள்ள இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும்  கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை ஒன்றும் சொல்வதில்லை! அவர் கொள்கை அவருக்கு! நான் என் சாமியைக் கும்பிட்டுக்கிட்டுப் போயிடுறேன், என் மதம் எனக்கு என்று போய் விடுகிறார்கள்.

ஆனால் இந்த நாத்திக வேடமணிந்து பகுத்தறிவுவாதியாக ஏமாற்றிக்கொண்டு திரியும் திராவிட இந்துக்கள், பெரியாரை இழிவுபடுத்தி பார்ப்பானர்கள் சாதிச்ச பாதி வெற்றியை முழுவெற்றியடைய வச்சுட்டானுக இன துரோகிகள்!

இவனுக இஸ்லாமியரையும், கிருத்தவர்களையும் எதிர்த்து போராடி சாதிச்சது என்னவென்றால் பெரியார் சிலையில், அவர் முகத்தில் சேற்றை அள்ளி வீசியது! பதிவுலகில் இந்த திராவிட இந்துக்களின் தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் தொண்டு தொடரும்!

பெரியாரை இழிவு படுத்தும் இந்த இந்து வேடதாரிகளைப் பார்த்து சந்தோஷத்தில் இருப்பது பார்ப்பனர்களே! ஆக இந்த திராவிட பக்திமான்கள் பார்ப்பனர்களுக்குக்  கைக்கூலியா இருக்கானுகனு இவனுகளுக்கே இவனுகளோட லோ-க்ளாஸ் பகவான் தெளிவுபடுத்த மறந்துட்டாரு!

Tuesday, September 25, 2012

டோண்டு ராகவர் கேள்விக்கு பதில்!

நம்ம டோண்டு ஐயாவுக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கு! அதைப் பத்தி யோசிச்சு யோசிச்சு ஒரு பதிவைப் போட்டு வழக்கம்போல  "தான் சொல்ல வேண்டியதை எல்லாம்"  அவரு வசதிக்கு சொல்லிக்கிட்டாரு!

ஆமா, டோண்டு ஐயா , என்னத்தை போட்டு குழப்பிக்கிட்டு இருக்காரு??!

 விடுதலைப் புலிகளை யூதர்களுடன் ஒப்பிடலாமா?


அதிசயமாக, இந்த விடயத்தில், அவரு கருத்தோட நம்ம கருத்தும் ஒத்துப் போவதால ஒரு பின்னூட்டம் ஒண்ணைப் போட்டுவிட்டு வந்தேன். அதுக்கு பதில்னு ஏதாவது வெளக்கெண்ணை, வெங்காயம்னு "பெரியார்" லெவலுக்கு குதற்கமான பதில் அவரிடம் இருந்து வந்தாலும் வரலாம்தான்.

இன்னும் திருப்தி இல்லை! ஒரு வேளை நம்ம பின்னூட்டம் வெளியே வராதோ? (அவருடைய டெக்னிக்தான் இதுவும்)! அப்படி வரலைனா நம்ம நேரம் எல்லாம் விரயமானதால ஆயிப்போயிடும்?

அதனால எதுக்கு வம்புனு..இந்தப் பதிவுல அந்தப் பின்னூட்டத்தை வெளியிடுறேன்..

ஆமா, கீழே  இருக்கு  நான்  அவர் தளத்தில் இட்ட பின்னூட்டம்.

[இது அங்கே பதிவிட்ட பின்னூட்டத்தை அப்படியே எடுக்கப்பட்ட நகல் இல்லை. சில பிழைகள் திருத்தப்பட்டு, மேலும் சில மாற்றங்களுடன்தான் வந்திருக்கு இங்கே]

சரி, என்ன சொல்லியிருக்கேன்னு பாருங்க!

ஐயா!

1) யூதர்கள் பொதுவாக மாட்டுக்கறி சாப்பிடுவாங்க. நம்ம ஈழத்தமிழர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது இல்லை.  அதனால அவங்க ரெண்டு பேரையும் ஒப்பிடக்கூடாது, ஒப்பிட முடியாது! தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமல்ல!  தமிழர்களில் உம்மைப்போல  மாடு திங்காத பார்ப்பனரையும்தான் யூதர்களுடன் ஒப்பிடக்கூடாது, முடியாது. 


பார்ப்பனர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை தானே? 


இரண்டு இனங்களை ஒப்பிடும்போது சாப்பாட்டுப் பழக்க வழக்கங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமானதுனு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லைனு நம்புறேன்!

2) தமிழர்களில் தன்னை  உயர் சாதி என்று பிதற்றிக்கொள்ளும் "பார்ப்பன துரோகிகள்" போல் 
யூதர்களில் "உயர்சாதி யூத துரோகிகள்" எல்லாம் கெடையாது. 

அவர்கள் உம்மைப்போல் உயர் சாதி, தாழ்ந்தசாதி என்கிற வேற்றுமை யெல்லாம் பார்க்காமல் வாழ்பவர்கள்.


 அதாவது "தமிழர்களில் தன்னை உயர்சாதினு சொல்லிக்கொண்டு, அதில் தவறென்ன?" என்று வியாக்யாணம் பேசிக்கொண்டு  திரியும் பார்ப்பணர்கள் எல்லாம் இன்றும் பார்க்கிறோம்.  ஆனால்  யூதர்கள்,  உயர்சாதி என்று பிதற்றும் நம்ம பார்ப்பனர்களைப் போல், தன்னையும்,  தன் சாதியையும் மட்டும், தன் இனத்திலிருந்து, தன் மொழி பேசுகிறவர்களிடம் இருந்து பிரித்து ஒதுங்குபவர்கள் அல்ல. அதுபோல் பிரிவுகள் இல்லாமல் ஒற்றுமையாக இருப்பதால்தான் அவர்கள் பல விடயங்களை சாதிக்க முடியுதுனுகூட சொல்லலாம்
 

ஆமா, எதுக்கு ஐயா நீங்க, யாரோ என்னத்தையோ சொன்னார்கள்னு சொல்லிகிட்டு எதையாவது உங்க வசதிக்கு உங்க கருத்தை அள்ளி விட்டுக்கிட்டு இருக்கீங்க??.
 

ஐயா கவனிக்க! My conclusion is same as yours but it has TRUTH in it! :)))

Monday, September 24, 2012

பதிவுலக அடி முட்டாள்!

அறிவியலா? பொருளாதாரமா?
தொழில்நுட்பமா? சினி நுட்பமா?
மாற்று எரிபொருளா? அணு மின்சாரமா?
வரலாறா? பூலோகமா?
சாதியா? மதமா?
பெரியாரா? பகுத்தறிவா?
பிள்ளையாரா? கொழுக்கட்டையா?
எல்லாமே எனக்குத்தான் தெரியும்
எனக்கு மட்டும்தான் தெரியும்
நான் யார் தெரியுமா?

நான் கடவுள் இல்லை
நான் மேதைகளுக்கெல்லாம் மேதை
பின்னூட்டங்களில் வாய்கிழிய பேசுவேன்
இந்தப் பதிவருக்கு எதுவுமே தெரியவில்லை என்பேன்
ஆம் அது என் பேச்சுரிமை
நான் யாரு தெரியுமா?
பதிவுலக அடி முட்டாள் என்பர் என்னை!

Friday, September 21, 2012

காம விரதம்! கடலை கார்னர் -78 (18+ மட்டும்)

"வாங்க கண்ணன்!"

"என்ன பிருந்த்!  உபசரிப்பெல்லாம் பிரமாதமா இருக்கு? இன்னைக்கு சமையல் செய்ய ஒரு அடிமை கெடச்சுட்டான்னா?"

"சேச் சே! ஆமா அப்படியென்ன பிரமாதமா இருந்துச்சு?"

"நீ பார்க்கிறதே ரொம்ப அன்பாயிருக்கமாதிரி இருக்கு! நான் சமையல் செய்றேன்னதும்!"

"ஹா ஹா ஹா... என்ன பண்ணப்போறீங்களோனு ஒரு பயம்.. அதுல மருண்டு போயிருக்கேன்"

" இங்கே வாடி!"

"என்ன?"

"அது ஏன் உதட்டை அப்படி வச்சுக்கிற? ஏதோ நான் உன் உதட்டில் கிஸ் பண்ணப்போற மாதிரி?"

"ஐயோ ஐயோ"

"என்னடி ஐயோ?"

"என்னவோ நான் முத்தம் கொடுங்கனு உதட்டாலேயே கெஞ்சின மாரி சொல்றீங்களே.. இதெல்லாம் அநியாயம் "

"இல்லையா பின்னே?'

"ஊஹூம்!"

" "

"இதென்ன கன்னத்துல மட்டும்தான் முத்தமா? நீங்க என்ன விரதமா இன்னைக்கு?"

"என்ன விரதம்?"

"அதான்..காம விரதம்!"

"புதுசு புதுசா எதையாவது சொல்லு!"

"எனக்கு தெரிந்த தமிழ் அவ்ளோதான்.. அப்புறம்..உங்களுக்கு ஒரு நியூஸ்,,நான் செக்ஸ்ல ரிசேர்ச் பண்ணிண்டு இருக்கேன்?"

'நான் என்ன உன் "எக்ஸ்பெரிமெண்டல் அனிமலா"?"

"ஆமா!"

"கொழுப்பாடி?"

"ஹா ஹா ஹா"

"என்ன ரிசேர்ச்?  எப்படிப் பண்ணும்போது திருப்திகரமா பெரிய ஆர்கசம் வருதுனா?"

"ஆமா!"

" உனக்கு ஏண்டி இத்தனை வருது?"

"எனக்கென்ன தெரியும்? இதுல மட்டும் நீங்க என்னோட போட்டிபோட முடியாது"

"அதான் ஆண் பெண்ணை மதிக்கனும்! அவளால் முடியிறது ஆம்பளையால முடியாது"

"அதுக்காக மதிக்கனுமா? என்னை எல்லாம் நீங்க செக்ஸ் ஸ்லேவா ட்ரீட் பண்ணினாலும் பிடிக்கும் எனக்கு"

"நீ கொஞ்சம் ஸ்ட்ரேஞ், பிருந்த்!'

"என்ன அது?"

"சரி சரி, சண்டைக்கு வராதே! நான் சமைக்கனும். "மெனு" என்ன சொன்னேன்?"

"பாஸ்டா, சாதம், ஸ்பினாச், ஃப்ரென்ச்ஃப்ரைஸ், பட்டர் மில்க், பிக்கில்ஸ்னு ஏதோ சொன்னீங்க!"

"தேவையான எல்லாமே வாங்கி வந்தாச்சு!"

"நெஜம்மாவே உங்களுக்கு நல்லா சமைக்கத் தெரியுமா, கண்ணன்?"

"தெரியும்! சரி, முட்டை சாப்பிடுவியா?"

"சாப்பிடுவேனே?"

"அபச்சாரம்! நீ நெஜம்மாவே பிராம்மண ஆத்துப் பொண்ணுதானா?"

"ஏன் என்னைப் பார்த்தால் அப்படி தோணலையா?"

"கொஞ்சம் மாமிமாரித்தான் இருக்க"

"அதுக்குள்ள மாமியாக்கிட்டீங்க?"

"ஐ மீன் பிராமண ஆத்து பொண்ணுமாரித்தான் பார்க்கிறதுக்கு இருக்கனு சொன்னேன்"

"பார்க்கிறதுக்கு மட்டும்தானா?"

"சரி சரி, ரைஸ் குக்கர் எங்கேயிருக்கு?"

"உங்களுக்கு தேவையான "வெசெல்ஸ்" எல்லாம் இங்கே இருக்கு!"

"சரி, நீ போய் டி வி பாரு!'

"நான் குளிக்கப் போறேன்!"

"போயித் தொலை!"

"அப்புறம் இன்னொன்னு..பாத்ரூம் கதவு லாக் பண்ணாம திறந்துதான் இருக்கும். எதாவது வேணும்னா கதவை தட்டிட்டு உள்ள வாங்க!"

"நான் சமைக்கிறதுக்கு மூடு கொண்டு வந்துண்டு இருக்கேன். நீ "எனக்கு முதுகுக்கு சோப் போட்டு விடுங்க"னு சொல்லாமல் சொல்ற? உன்னை என்ன செய்யலாம்?"

"ஹா ஹா ஹா"

"என்ன ஹா ஹா ஹா?"

"அதெப்படி உங்க ஆசையை எல்லாம் நான் நெனச்சதா சொல்றீங்க?"

"நீ புறப்படும்மா செல்லம்!"

"கொஞ்சாதீங்க.. நான் அப்புறம் இங்கேயிருந்து போக மாட்டேன்."

"போய் தொலைடி!"

"இதுவும் கொஞ்சிறமாதிரித்தான் இருக்கு"

"பிருந்த்.. ப்ளீஸ்டா?"

"சரி போறேன்! அழுதுடாதீங்க"

- தொடரும்

தொடர்புடைய முந்தைய பதிவு!

இந்தியா திரும்பிப் போகவேண்டியதுதான்! கடலை கார்னர்-77

Wednesday, September 19, 2012

கூடங்குளம் அணு உலை பிரச்சினைக்கு தீர்வு!

என்னைப் பொறுத்தவரையில் கூடங்குளம் அணு உலை தேவை என்றும், அது இல்லையென்றால்  நாம் வாழவே முடியாது என்கிற "தியரி"யை எல்லாம் நான் வாங்கத்தயாரா இல்லை!

அணு உலைகளால் நாம் பெரும் மின்சாரம் 3% மட்டுமே என்கிறார்கள். 97% மின்சாரம் அணுவுலைகளால் நாம் அடைவதில்லை!

As of 2011, India had 4.8 GW of installed electricity generation capacity using nuclear fuels. India's Nuclear plants generated 32455 million units or 3.75% of total electricity produced in India.[55]
அந்த 3% மின்சாரத்தை நாம் பலவகையில் ஈட்டலாம்!

எப்படி ஈட்டுவடா? னு கேக்குறீங்களா?

சரி படிப்பறிவில்லாதவனாக இதை அனலைஸ் பண்ணி சொல்லுறேன்.

* எரிபொருள், பெட்ரோல் எல்லாம் இறக்குமதி செய்கிற நாம் மின்சாரத்தையும் இன்னொரு நாட்டிலிருந்து வாங்க முடியுமா? அவன் அதை எப்படி வேணா தயாரிக்கட்டும், நாம் அதற்கு ஒரு விலை கொடுத்து வாங்கினால் என்ன?

* நாம் தயாரிக்கும் மின்சாரம் பலவ்கையில் விரயமாகிறது என்கிறார்கள். அதை விரயமாகாமல், புது வயர்கள் மற்றும் சாதங்களை மாற்றி அமைத்தால் பல விழுக்காடுகள் மின்சாரத்தை "பெற"முடியும்

* கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பாருங்கள்!

India and U.S. Share Energy Woes: Stealing Electricity

 One of the problems that helped cause the blackout in India is relatively unknown: About a third of the people there get their electricity for free and many by stealing it.

kaushik 1 month ago
I think Mr. Silverstein’s statement – ‘About a third of the people there get their electricity by stealing it’ – is utterly wrong, misleading and derogatory. This statement amounts ot saying that every third Indian is an electricity thief.
The electricity revenue loss is often stated to be 30% – that does not mean that every third Indian steals electricity. I hope I dont have to explain the simple mathematics that 2% offenders can contribute to 30% loss.

Ken Silverstein , Contributor 1 month ago
Hi, I think your comment is reasoned but here’s another story that backs up the claim in the story: http://www.compasscayman.com/caycompass/2012/08/06/India-left-in-dark-by-utilities-losing-$10B-a-year/
In that story, it says that 40 percent is not paid for and that the ‘bulk’ is stolen.
I can appreciate the sentiment expressed here. But if the power is not paid for, then I’m not sure how else to state those facts.

* அதாவது என்ன சொல்றாங்கன்னா நம்ம தயாரிக்கும் மின்சாரத்தில் 33% நம் மக்களால் திருடப்படுகிறதாம்!! அதாவது நாம் திருட்டை குறைத்தால் பல விழுக்காடுகள் மின்சாரம் சேமிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அதாவது 3% மின்சாரம் அணு உலையில் இருந்து தயாரிக்கிறோம்.  33% மின்சாரம் களவு போகிறதாம்.

உடனே களவு போச்சுனா, அதுவும் "ஏழை மக்களுக்குத்தான்" போகிறது என்ற வியாக்யாணம் வேண்டாம் ! திருடுறவன் ஏழையாக இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. பெரிய பெரிய பணக்கார முதலைகளும் இதை செய்யலாம்! பொதுவாக அவனுகதான் இதெல்லாம் செய்வானுக!

* கூடங்குளம் அணு வுலை இல்லாமல் வாழவே முடியாது என்பதுபோல் பேசுவது அறியாமை!

* அணு உலைகளை முழுவதுமாக மூடினாலே நமக்கு இழப்பு, 3% மின்சாரம்தான்!

* 33% மின்சாரம் நம்மில் நம்மால் திருடப்படுகிறது. அந்தத் திருட்டை மட்டுறுத்தினால், அந்தப் பணத்தை வைத்து மின்சாரம் வாங்கலாம், இல்லையென்றால் வேறு வழிகளில் (97% தயாரிப்பதுபோல) அதை தயாரிக்கலாம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!

சரி, சண்டைக்கு வர்ரீங்களா?

பேசலாம் வாங்க! என் அறியாமையை போக்கும்  மேதைகள் வரலாம்!

---------------------

பின்னால் சேர்த்தது  பதிவில் இந்தப் பகுதி!  

2008 ல veteran பதிவர் கயல்விழி இதே தளத்தில் எழுதியது!

யாராவது போயி தோண்டி எடுக்கும் முன்னே.. நானே இங்கே பதிவைக் கொடுத்துடுறேன்.இந்தத் தொடுப்பைப் பாருங்கள்!

அணு சக்தி, ஒரு மாறுபட்ட பார்வை

ஆனால்..இந்தப் பதிவில், அணு உலைகள் சரி என்பதுபோல பின்னூட்டங்களில் வாதிட்டுள்ளேன்!

ஜப்பானில் நடந்த சமீபத்திய விபத்து எல்லாருடைய வியூவையும் மாற்றியமைத்துள்ளதா??? அதனால்தான் இன்று எல்லோருமே கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கருத்து தெரிவிக்கிறோம் போல!

Tuesday, September 18, 2012

எய்ட்ஸுக்கு சித்தமருந்து கண்டுபிடித்த ஜெயமோகன்?

"என்ன சொல்றீக? மருந்து கண்டுபிடிச்சிட்டாரா? நம்ம ஜெயமோகனா?"

"ஆமா!"

"நெஜம்மாவா?"

"இதையே எத்தனை முறை திரும்பத் திரும்ப கேக்கப்போற?"

"இல்ல ஆச்சர்யமா இருக்கே?"

"ஐந்தாவது மருந்துனு ஒரு கட்டுரை மாதிரி கதையெழுதி, அதில் சில கேரக்டர்களை உருவாக்கி சொல்லியிருக்காரு"

"என்ன மாரி மருந்தாம்?"

"எல்லாம் உலகப் புகழ்பெற்ற நம்ம சித்த வைத்தியம்தானாம்! அதை வச்சுதானே நாம் எல்லாவியாதியையும் குணப்படுத்தினோம்?"

"எல்லா வியாதியையுமா?"

"ஆமா, நம்ம கடவுள் சத்ய சாய்பாபாவை எப்படிக் காப்பாத்த முயன்றோம்? சித்த மருத்துவமணையில்தானே அவர் நம்மைவிட்டுப் போனாரு? மறந்துட்டியா?!'"

"ஏய்! நீ சும்மா ஜெயமோஹனை வச்சு காமடி கீமடி பண்ணலையே?"

"சே சே! அவரு எவ்ளோ பெரிய மனுஷன்"

"என்ன மருந்துனு எனக்கு புரியிறாப்பிலே சொல்லேன்?"

"ஜெயமோகன்,  உண்மையைப் பொய் போல, கட்டுரையை கதைபோல எழுதிச் சொல்லியிருக்காரு. அதை படிச்சுப் பார்த்து புரிந்துகொள்வது உமது சாமர்த்தியம்"

"ஏய் ஏய் நீயே சொல்லிடு!"

"இந்தா பாரு! ஒருத்தர் கஷ்டப்பட்டு எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிச்சு, அதை அடக்கமாக புனைவுபோல சொல்லியிருக்காரு. அதை படிச்சு புரிஞ்சு கொள்றதுக்கு உனக்கு சோம்பேறித்தனம்?"

"எனக்கு அவர் கதை புரியாது!"

"ஏன்? தமிழ்த் தெரியாதா உனக்கு?"

"இல்லை! அவர் எழுதுற சுத்தமான தமிழ் புரியாது!"

"அப்போ எய்ட்ஸ் வந்தால் சாவு!"

"எனக்கு எய்ட்ஸ் இல்லை! நான் எச் ஐ வி நெகட்டிவ்!"

" சித்த வைத்தியத்தில் கண்டுபிடிச்சியா?'

"இல்லை, எச் ஐ வி ஆண்ட்டிபாடி இல்லைனு சொன்னேன். அல்லோப்பதிதான்"

"அல்லோபதியாவது க்ரோர்பதியாவது! சித்த வைத்தியம்தான் சரியான விடையைச் சொல்லும்! உனக்கு எய்ட்ஸ் இல்லைனா,அவர் கதையை படிக்காதே! படிச்சாலும் புரியாது!"

"எய்ட்ஸ் இருந்தால் புரிஞ்சிருமா?"

"அதுக்காக எய்ட்ஸை வாங்கிட்டு வந்து படிச்சு புரியலைனு சொல்லாதே!"

"உனக்கு இன்னைக்கு நாந்தான் கெடச்சனா?"

"ஆமா, நம்ம பேசியதையெல்லாம் இணையத்தில் போட்டு நீ ஒரு மரமண்டைனு மானத்தை வாங்குறேன்! என்ன உன் பேரை மட்டும் போடமாட்டேன்."

"போடா இணையதளப் பொறுக்கி!"

"ஹா ஹா ஹா!"

Monday, September 17, 2012

சாருவுக்கும், ஜெயமோகனுக்கும் மறுபடியும் கருத்து வேறுபாடு?!

தமிழைக் காப்பாத்த வேண்டுமென்றே தமிழ்த் தொண்டு செய்ய வந்த மலையாளிதான் நம்ம திருவாளர் ஜெயமோகன் அவர்கள். சமீபத்தில் எதையாவது மேதாவித்தனமாகச் சொல்லி ஊருப்பயலுக  வாயில விழாதனால அவர் தளத்துக்கு ரொம்ப ஹிட்ஸ் குறைந்து அலக்ஸா ரேட்டிங்ல கீழ போயிடுச்சாம், பாவம்.

அதை இப்போச் சரிக்கட்ட தமிழர்களையும், தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை குறைவையும், நகைச்சுவை இல்லாத தமிழர்களையும் ரொம்ப கவனமாக, அவர்கள் மனது புண்படுறமாதிரி விமர்சிச்சியிருக்காரு. 

தமிழந்தான் உணர்ச்சிவசப்படுபவர்களாச்சே!

அவர் தளத்துக்கு ஹிட்ஸ் அதிகமாயிடுச்சு!

வென்றுவிட்டார் ஜெயமோகன்!

மலையாளப் படங்களிலும், ஆங்கிலப்படங்ளிலும் வரும் நகைச்சுவைக் காட்சிகள்தான் அவரை சிரிக்க வைக்குதாம்.
* என்னுடைய மனதுக்குகந்த நகைச்சுவைக் காட்சிகளில் அனேகமாக எல்லாமே மலையாள சினிமா அல்லது ஆங்கில சினிமா சம்பந்தமானவை. மிகமிகக்குறைவாகவே நான் தமிழ் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கிறேன். என்னுடைய அவதானிப்பில் பொதுவாகத் தமிழ்நாட்டில் நகைச்சுவை உணர்ச்சி மிகமிகக் குறைவு.
* என் சொந்தப் புரிதலைவைத்து இந்தியாவிலேயே தமிழ்மக்கள்தான் நகைச்சுவையற்றவர்கள் என நான் மதிப்பிட்டிருக்கிறேன்.இது ஒரு பொது அவதானிப்பாகவே என் மனதில் இருந்தது. ஆனால் சினிமாவுக்குச் சென்றபின் அது உறுதிப்பட்டது.
 தமிழ்ப் படங்களில் வருகிற நகைச்சுவையை நகைச்சுவையே இல்லை என்கிறார், ஜெயமோகன். ரொம்ப நாளைக்கு முன்னால எம் ஜி ஆரையும், சிவாஜியையும் ரொம்ப கீழ்த்தரமா இவர் விமர்சிச்சி இருக்காரு. அது பெரிய பிரச்சினை ஆகி முடிந்தது. இவருக்கு பழைய தமிழ் சினிமாப்படங்கள் பத்தியோ, அவைகள் தரம் பத்தியோ  எந்த அளவுக்குத் தெரியும்னு தெரியவில்லை!

ஜெயமோகன் ஒரு தவறு செய்துவிட்டார்..

* மலையாளப் படங்களிலும், ஆங்கிலப் படங்களிலும் இவர் ரசித்த நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் இவர் ரசித்த நகைச்சுவைப் படங்களையும் ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்து இருக்கனும்!

* ஆனால் வேண்டுமென்றே அப்படிக் கொடுக்காமல், பொதுவாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு போய்விட்டார். அப்படி லிஸ்ட் கொடுத்திருந்தால் அதில் என்ன பிரச்சினையினா, இவரோட நகைச்சுவை ரசனை எள்வோ மட்டமானதுனு எல்லாருக்கும் தெரிஞ்சிரும் பாருங்க!

நம்ம சாருநிவேதிதா தமிழர்களில் நகைச்சுவை உணர்வு பத்தி என்ன சொல்றார்னு பார்ப்போம்!

சாரு தமிழர் நகைச்சுவை உணர்வைப் பத்திச் சொன்னது இது..

* 3) வெளியே வழக்கம் போல் புத்தக விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தமிழில் இல்லாதது எதுவுமே இல்லை; உலகில் தோன்றிய முதல் மனித இனமே தமிழ் இனம்தான் என்று ஒருவர் கரகர குரலில் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களும் உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தனர். தமிழர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.
எனக்கு உணமையிலேயே புரியலை..சாரு, என்ன சொல்றாரு? ஜெயமோகன் சொல்றது சரினு சொல்றாரா? இல்லைனா தவறுனு சொல்றாரா?

நான் சாருவுடைய இந்த  எழுத்தை வாசிச்சுப்புட்டு நகைச்சுவையா இருக்குனு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஜெயமோகன் இதற்கு என்ன சொல்றாருனு தெரியலை! அதான் நான் சிரிச்சதுக்கு..இவனுக்கு எதுக்கு சிரிக்கிறதுனே தெரியலைனு சொன்னாலும் சொல்லுவார்? ஆமா, எல்லாமே அவருக்குதானே தெரியும்! அதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லையே?? அதான், "எல்லாம் தெரிந்த மேதாவி ஜெயமோகன்" என்ற கருத்தில்!

"தமிழர்களிடம் மறைந்து இருக்கும் நகைச்சுவை உணர்வை அறியாமல் அறியாமையில் வாழ்கிறார் ஜெயமோகன்" னு  ஒரு உண்மையை நான் சொன்னால், அதை குதற்கம் என்று சொல்லும் மலையாளிகளை கட்டி அழும் இந்த வீணாப்போன தமிழுலகம்!

Friday, September 14, 2012

பதிவுலக நாட்டு நடப்பு மற்றும் குழப்பங்கள்!

* எடக்கு மடக்குத் தளத்தில் "பாகுபாடில்லாமல் எல்லாரையும்தான் நாங்க கடுமையாக விமர்சிக்கிறோம்" என்பதுபோல் நண்பர் கேபிள் சங்கரோட பதிவுகள் சமீபத்தில் மகுடத்தில் ஏறுவதை கடுமையாக விமர்சிப்பதுபோல ஒரு பதிவு! இந்தப் பதிவு அவருக்கு மேலும் புகழ் சேர்க்குதேயொழிய அவரையோ அவர் தளத்தையோ இழிவு படுத்தவில்லை என்பது  புரியாத "முத்தால் பையனா" என்ன நாம் எல்லாம்?

* அனானியாகவும் மற்றும் ஒரு ஒரிஜினல் ஐ டி யாகவும் ஒரே நபர் வருவது குழப்பத்தை உண்டாக்குதுனு உண்மையை எடுத்துச்சொன்னால் அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று  நொண்டிச் சாக்கு வேற! சரி, நண்பரே, "லாக் இன்" செய்யாமல்  நீங்க வந்ததால அப்படி செய்தேன் என்கிற விளக்கம் சரி. ஆனால், அனானி  பின்னூட்டத்தின் முடிவில், -நீங்க இன்னாருனு உங்க பேரை (கையொப்பம் இடுவதுபோல) எழுதினால் குழப்பம் தீருமே! அது அவ்வளவு கஷ்டமா என்ன? நீங்க என்னதான் "நான் நியாயஸ்தன்" என்று  பூசி மொழுகினாலும் நீங்க  எல்லாரையும் குழப்புறீங்க என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

* தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் இடம்பெறுவது "தலைப்பைப் பொருத்தே", பதிவின் தரத்தையோ, அல்லது பதிவில் உள்ள விசயத்தை பொருத்து அல்ல என்கிற பிரச்சினையை சரி செய்ய எவ்வளவோ தமிழ்மணம் முயன்றும், அதில் இன்னும் முழுமையான வெற்றியடையவில்லை என்பதை அனைவரும் அறிவோம்! இப்போ அந்தப் பிரச்சினை போதாதென்று, வாசகர் பரிந்துரையும், மகுடப்பதிவும் பல கள்ள ஓட்டுகளாலும், இன்னொருவரை கவிழ்த்த வேண்டுமென்றே ஒருவரை வம்புக்குனு தூக்கிவிடுவதென்ற பொறுப்பில்லாத பதிவர்களின் சிறுபிள்ளைத்தனத்தாலும் பல குழப்ப நிலைக்கு உள்ளாகி, இதற்கு என்ன தீர்வு என்று சொல்லமுடியாத நிலையில் நிற்கிறது! :(

* ஈழத் தமிழர்கள் பல இன்னல்களுக்கு ஆளானவர்கள். அவர்களையும் அவர்கள் விடுதலைக்காக போராடிய தலைவர்களையும் எதற்காகவோ, யாருக்காகவோ, பழிக்குப் பழி வாங்குவது என்று சில தமிழ் இஸ்லாமியப்பதிவர்கள் அவர்களை பதிவெழுதித் தாக்குவது, தேவையில்லாதது, அர்த்தமற்றது. என்னதான் நீங்க பேசினாலும், எழுதினாலும், ஈழத்தமிழர்கள்போல் தமிழ்நாடில் வாழும் நீங்கள் எந்தவகையிலும் பெரிதாக எதையும் இழக்கவில்லை, உயிர்ச்சேதம் அடையவில்லை என்பதை மறக்க வேண்டாம்! சொல்லனும்னு தோனுச்சு. சொல்லிட்டேன். மற்றபடி உங்கள் இஷ்டம்!

Thursday, September 13, 2012

செக்ஸ் கலக்காத கதை- பகுதி 2 (18 + மட்டும்)

"சாரி, காமினி, ஐ ஹாவ் டு ஸ்லீப் நவ்" னு ஃபோனை ஹேங் அப் பண்ணிட்டான் சோமு.

அவனைப்பொறுத்தவரையில் ஏற்கனவே இந்த விசயத்தில் ஒருத்திட்டப்பட்ட அவமானம் வாழ்நாளுக்கும் போதும். திடீர்னு வந்த இந்தக் காமினியை நம்பி எதையாவது ஒளறிட்டு எதுக்கு வம்பு? னு அவனுக்கு புத்தி வந்துவிட்டது.

ஆனால் ஒரு கணம்தான் அப்படி தோன்றியது அவனுக்கு. மறுகணமே, ஏதோ தவறு செய்துவிட்டது போல உணர்வு வேறு வந்து அவனைக் கொன்றது.

ஒரு வேளை வித்யா போலில்லாமல் காமினி வேற டைப்பாக இருந்து தன்னுடைய உளறல்களையெல்லாம் ரசித்தாள் என்றால்?  நான் இழுக்கும் இழுவைக்கெல்லாம் சரியாக வருவாளோ? ஒருவேளை என்னுடைய  காமப் பித்துக்கு காமினிதான் சரியான மருந்தோ? அவளுக்கும் என்னைப்போலவே இதேபோல் வியாதி இருக்குமோ? அதனால்த்தான் ராஜுடன் அவளால் திருப்தியாக நிம்மதியாக வாழ முடியவில்லையோ? இவளோடு இணைந்தால், ஒருவர் வியாதிக்கு இன்னொருவர் மருந்தாக ஆகி இருவரும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறதோ?  என்று குழம்பி குழம்பி தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து கடைசியில் எப்படியோ அன்று இரவு தூங்கினான் சோமு.

அடுத்த நாள், ஈவ்னிங்,  அதே நேரத்தில் வழக்கம்போல் காமினியை "ஜிம்" ல பார்த்தான். அவளோ, இன்று அவனுக்கு ஒரு "ஹாய்"கூட சொல்லாமல் வேண்டும் என்றே சோமுவைத் தவிர்த்துவிட்டு கண்டுக்காமல் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். அடுத்து ஒரு முறை அவன் லாக்கர்க்கு சொல்லும் வழியில் அவளை மறுபடியும் பார்க்க நேர்ந்தது. அப்போவும், அவனை  தவிர்த்து வேகமாக அவன் முன்னால் நடந்துபோனாள். அப்படி நடந்துபோகும்போது  காமினியின் பின்னழகு அவனை கேலி செய்வது போல் அழகாக நடனமாடிக்கொண்டே நகர்ந்தது. சோமுவால் அவள் ஆடைகளை கலைந்து அவளை நிர்வாணமாக நடக்கவிட்டு அவள் பின்னழகை மனக்கண்ணால் வேடிக்கை பார்க்காமல் இருக்கமுடியவில்லை .

பாவம் சோமு, அன்று இரவு, "சரி இதோட போய் தொலையிறா சனியன்,  நமக்குக் கிடைத்த  சுதந்திரம் பறிபோகாமல் இருக்கிறதே"னு காமினியை உதறித்தள்ளிவிட்டு  சந்தோஷப்படமுடியாமல் அடி முட்டாளாகிக்கொண்டு போனான். அதென்ன வென்று புரியவில்லை, அவனை அவள் தவிர்ப்பதால் அவள் இன்னும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாள். தனிமையில் துணையில்லாமல் வாடும் அவனுக்கு தனாகவே அவனை நோக்கி வந்டஹ்  அவள் தேவைப்பட்டது.  படுக்கையில் படுத்த அவன் அவளை  தன் மனதில் கொண்டு வந்து ஒவ்வொரு ஆடையாகக் கலைந்து  நிர்வாணமாக்கி காமினி அழகை மறுபடியும் ரசிக்க ஆரம்பித்தான்.

அமுதம்போல் அவன் ஃபோன் இனிமையாக இசைத்தது

"ஹல்லோ?"

 காமினிதான்!

"what did you think? I am a whore or something, you bastard!" என்று கத்தினாள்.

"இல்லங்க.."

" Dont you ever hang up on me! Do you UNDERSTAND?"

"சாரிங்க, காமினி! நான் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன்"

"என்ன குழப்பம்?"

"இல்லை திடீர்னு என்னைப் பத்தி எல்லாம் தெரிந்தது போல.. பேசினீங்க"

"நான் சைக்காலஜி டீச் பண்ணுறேன். அதான் என்னுடைய வேலை! மேலும் உங்க ஆத்துக்காரி உங்களப் பத்தி எல்லாத்தையும் என்னிடம் புட்டுப் புட்டு வச்சுட்டா"

" "

"Are you there?"

"Yes"

"நான் சொல்றதைக் கேளுங்க, சோமு!"

"சரிங்க"

"I know we are made for each other!"

"எப்படித் தெரியும்?"

"நான் இன்னைக்கு "ஜிம்" ல உங்களைக் கடந்து போனேன் இல்லை? நீங்க லாக்கர் ரூம் போகும்போது?"

"ஆமா?"

"பின்னால என்ன பண்ணினீங்க அப்போ?"

" "

"Did you look at my butt?"

" "

"Did you undress me and watched my naked butt in your fucking mind or not?"

" "

"உண்மையை சொல்லுடா, பொறுக்கி!"

"காமினி"

"வாட்?"

"உன்னை நான் மனசுக்குள்ளேயே வேறென்னவெல்லாம் செஞ்சேன்னு தெரியனுமா, உனக்கு?"

"யெஸ்"

"நாளைக்கு நைட் நீ வீட்டிலேதான் இருப்பியா?"

"ஆமா"

"உன் வீட்டிற்கு வந்து நானே செஞ்சு காட்டுறேன். சரியாடி? தேவடியா!'

"என்னால அவ்ளோ நேரம் பொறுமையா இருக்க முடியாது"

"நீ சைக்காலஜி டீச்சர்னு சொன்ன? எப்படியோ ஒரு நாள் சமாளி."
----------------------------

அடுத்த நாள் காலையில் வேலைக்குப் போகுமுன்  சோமு சீரியல் சாப்பிட்டுக்கொண்டு இருக்குந்தான்.. யாரோ பெல் அடிச்சாங்க. யோசனையுடன் கதவைத் திறந்தான்.

"டாடீ!" னு  ப்ரவீன் கத்தினான். அருகில் வித்யா நின்னுகொண்டிருந்தாள்.

ப்ரவீனை தூக்கி வைத்துக்கொண்டு,

"என்ன திடீர்னு?" என்றான் வித்யாவிடம்.

"அண்ணாவுக்கும், மன்னிக்கும் ரொம்ப பிரச்சினை. டெய்லி சண்டை போடுறா. டைவோர்ஸ் பண்ணிக்கப்போறாளாம்! அங்கே இருந்தால் ப்ரவீன் படிப்பும், மனசும் ரொம்ப  பாதிக்கப்படுது.."

"ஈவ்னிங் பேசலாமா? நான் இப்போ வேலைக்குப் போகனும்!" என்றான் சோமு.

"ஈவ்னிங் சீக்கிரம் வாங்கோ! நான் நெறையா பேசனும்"னு மிகவும் அன்பாகச் சொன்னாள், வித்யா!

வேலைக்குப் போக தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு யோசனையுடன் காரில் அமர்ந்து புறப்பட்டான், சோமு!

-முற்றும்

வாசகர்களுக்கு: முடிவு பிடிக்கலைனா, நீங்களா கதையை இஷ்டம்போல முடித்துக் கொள்ளவும்.

Wednesday, September 12, 2012

செக்ஸ் கலக்காத கதை- பகுதி 1

"மனைவியென்றால் ரொம்ப இண்ட்டிமேட், ஒருவன் தன் எல்லா ஆசைகளையும், வீக்னஸையும் சொல்லி தன் காமதாபத்தை தீர்த்துக்க ஒரு வடிகால்" னு சோமுவிடம் எந்த மடையன் சொன்னான்னு தெரியவில்லை! அதையெல்லாம்  நம்பி கண்டதையும் மனைவி வித்யாவிடம் இருட்டில்  உளறி இன்னைக்கு நாசமாப் போயி நடுத்தெருவில் நின்னான் சோமு!

வக்கீல், கோர்ட், அது இதுனு போயி கடைசியில் எல்லாம் ஒரு வழியா நல்லபடியா  முடிஞ்சது. அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இருப்பதால தேவையில்லாத ஒப்பாரி, செண்டிமெண்ட்ஸ் எதுவும் இல்லாம விவாகரத்தானது.

இருவருக்கும் ஒரே ஒரு ஆண் குழந்தை. பையன் ப்ரவீனும், "அம்மா, அம்மா" னு வித்யா பின்னாலேயே ஓடிட்டான்.  எல்லாம் முடிஞ்சு இப்போ ஒரு வருடத்திற்கு மேலாகுது.

****

அன்று வேலை முடிஞ்சு வந்து ஈவனிங் "ஜாகிங்" போயிக்கொண்டிருந்த சோமு, வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தான். "ஜாகிங்" போகக்கூட எட்டு வருடமாக இழந்திருந்த சுதந்திரம்  கடந்த ஒரு வருடமாக திரும்ப கிடைத்து இருந்தது- டைவோர்ஸ்க்கு அப்புறம். சினிமா, பார், டென்னிஸ் க்ளப், வொர்க் அவ்ட், அரை மாரத்தான் ஓடுறது னு தன் நேரத்தை இப்போதெல்லாம் அர்த்தமாக செலவழித்துக் கொண்டு இருந்தான், சோமு.

போன வாரம் ஈவனிங் இண்டோர் ஸ்விமிங் பூல் ல அவளைப் பார்த்தான்.   எக்ஸ் வைஃப் வித்யாவுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் அவள். எதிரும் புதிருமாக அந்த்க் காமினியைப் பார்த்ததும், "இவ எங்கே இங்க வந்தாள்?"னு யோசனையுடன் ஒரு  "ஹாய்" சொல்லிட்டு ஒதுங்கி லாக்கர் ரூமுக்குள்  நுழைந்து விட்டான்.

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி அங்கே பார்த்தான். அவளும் அதே சிட்டி செண்டருக்குத்தான் வொர்க் அவ்ட் பண்ண வருகிறாள்னு  புரிந்தது அவனுக்கு.


*****

சோமு-வித்யா தம்பதிகளுக்குள் காதல், காம லீலைகள் எல்லாம் ஆடி அடங்கியவுடன், கருத்து வேறுபாடு வந்தது. அடுத்து  ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவர் குறையை இன்னொருவர் சொல்லிக்காட்டி அசிங்கச் சண்டை போடும்போது,  சோமுவுடைய வரம்புமீறல் மற்றும்  எல்லா வீக்னெஸுகளும் தெரிந்த வித்யா அவனை  எளிதில், குற்றவாளியாக ஆக்கி வாய்ச்சண்டையில் வென்றாள். மனைவி என்று  நம்பி  அவளிடம் படுக்கை அறையில் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் அவனுக்கு எதிராக அவள் திருப்பும்போது சோமுவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"இதெல்லாம் துரோகம்டி வித்யா! ஆம்படையான் படுக்கையறையில், படுக்கும்போது  சொன்னதையெல்லாம் எனக்கு எதிரா ஆக்குறியே! உன்னை பகவான் மன்னிப்பானா?" என்றெல்லாம் வசனம் பேசிப்பார்த்தான் சோமு.

அவளோ  "நானும் பொறுமையா பார்த்துண்டே இருந்தேன். ஒரு நாளாவது, ஒரு நேரமாவது, ஏதாவது நல்லவிதமா சொல்லுவேளானு ஏங்கினேன்! ஒவ்வொரு நாளும் அந்த இருட்டில் என் ஆசை கனவை எல்லாத்தையும் நொறுக்கிப் பாழாக்கிட்டேள்!" என்றாள் அழுகையுடன்.

"உனக்காகத்தானடி எல்லாம் செஞ்சேன்! உன்னை சந்தோஷப்படுத்தனும்னு"

"இந்தா பாருங்கோ! அந்தக் கண்றாவியை எல்லாம் எனக்காக செஞ்சேன்னு சொன்னேள்னா,  அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்?!"

"ஆம்படையான், அவனோட ஆசையை எல்லாம் ஆத்துக்காரிட்ட சொல்லாமல், தீர்த்துக்காமல்,  யாருட்டடி சொல்றது?"

"ஆசையில்லை அதெல்லாம்! உங்களுக்கு காமப் பித்து பிடிச்சு இருக்கு! நேக்கென்ன மனமருத்துவமா தெரியும்? உங்க காமப் பித்தையெல்லாம் கேட்டு, அதற்கு தீர்வு சொல்ல?"

"ஊரு ஒலகத்துல எல்லா ஆம்படையானும் இப்படித்தாண்டி இருப்பா!"

" உங்களை மாதிரியா? நானும் ருக்மிணி. பத்மா, காமினி எல்லார்ட்டையும் இந்தக் கொடுமையை எல்லாம் சொல்லி அவா ஆத்துக்காரர பத்திக் கேட்டுப் பார்த்தேன். "என்னடி சொல்ற வித்யா?" "இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லைடி!" னு அதிசயமா கேக்குறா! அவா ஆத்துக்காரர் எல்லாம் உங்களை மாரி காமப்பித்துப் பிடிச்சு அலையலை. அவா எல்லாம் பக்கா  ஜெண்டில் மேனாக்கும்"

"அப்போ யாராவது வப்பாட்டியிடம் இல்லைனா தேவடியாளிடம் போயித்தான் என் ஆசையை எல்லாம் தீர்த்து இருக்கனும்ங்கிறயாடி? அப்போ எதுக்குடி நீ? சும்மா சமச்சுப் போடவா?"

"இனிமேல் யாருட்டனாலும் போங்கோ! நேக்கென்ன? உங்களைத்தான் நான் ஒரேயடியா தலை முழுகியாச்சே?"னு அவ  எல் எ க்கு போனவதான். அதோட அவ திரும்பி வரவே இல்லை! ப்ரவீன்கூட அவனை கால் பண்ணுவது இல்லை!

 தனிமரமானான் சோமு!

****

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி ஜிம்ல பார்த்தான். வேற நண்பர்களிடம் கால்ப் பண்ணி அவளைப்பத்தி விசாரித்தபோது  காமினிக்கும் அவள் கணவன் ராஜ்க்கும் டைவோர்ஸ் ஆகிவிட்டதாக சொன்னார்கள். அவனுக்குத் தெரிய ரெண்டு பேருக்கும் குழந்தையும் கெடையாது!

ஈவனிங்  பக்கத்தில் இருந்த "கால்டிஸ் காஃபி"ல  மறுபடியும் காமினியைப் பார்த்தான் . அவள் தனியாக வந்திருந்தாள். காஃபி வாங்கிக்கொண்டு சோமுவைப் பார்த்து ஸ்மைல் பண்ணிக்கொண்டு அவன் அருகில் வந்தாள். அவனுக்கு அவள்  இவனை  "ஸ்டாக்" பண்ணுவதுபோலக்கூட  ஒரு பிரமை.

"ஹாய் சோமு! ஹவ் ஆர் யு" என்றாள் காசுவலாக.

"ஐ அம் ஃபைன், காமினி"

"டு யு மைண்ட்?"னு அவன் உக்காந்து இருந்த டேபிலில் எதிரில் அமர்ந்தாள்.

 அவள் ஒரு மாதிரியா ஸ்கேர்ட் போட்டு செக்ஸியாக இருந்தாள். அவளுக்கு ரொம்ப கவர்ச்சியான மார்பகங்கள். மேலும் அவள் உடலில் இருந்து வந்த அவள் போட்டிருந்த பர்ஃப்யூம் இவனை ஏதோ செய்தது. கொஞ்ச நேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.

"ஆமா, உங்க எக்ஸ் வித்யா எங்கே இருக்கா இப்போ?" என்று அமைதியை உடைத்தாள் அவள்.

"டைவோர்ஸ்க்கு அப்புறம் "எல் எ" க்கு மூவ் பண்ணிட்டாள். அவளோட ப்ரதர் அங்கே டாக்டரா இருக்கார். ஹி இஸ் சப்போர்டிங் ஹெர்"

"ரியல்லி?"

"ஏங்க, வித்யா  உங்க ஃப்ரெண்ட்தானே? அதிசயமா என்னிடம் இதையெல்லாம் கேக்குறீங்க?" என்றான் சோமு ஒரு மாதிரியான வாய்ஸில்.

"இல்லை எனக்கும் ராஜ்க்கும் நெறையா பிரச்சினை வந்ததும். நான் யாரையும் கால் பண்ணலை.  ஐ லாஸ்ட் டச் வித் ஹெர்" என்றாள்.

"குழந்தை எதுவும் உண்டா உங்களுக்கும் ராஜ்க்கும்?!"

"இல்லை, சோமு! அதான் எல்லாம் ஈஸியா முடிந்தது. நான் இங்கே ரெண்டு ப்ளாக் தள்ளி ஒரு அப்பார்ட்மெண்ட்லதான் இருக்கேன். ஐ அம் லிவிங் அலோன்" என்றாள் அழுத்தமாக.

"ராஜ், ஜெண்டில்மேன் ஆச்சே? என்ன ஆச்சு?"

"ஜெண்டில்மேன் எல்லாம் ஃப்ரெண்டா இருந்தாத்தான் நல்லாயிருக்கும். புருசனா இருந்து டெய்லி அரச்ச மாவையே அரச்சா  ரொம்ப போர் அடிக்கும்!"னு ஒரு மாதிரியாகச் சிரிச்சாள் காமினி.

ஏற்கனவே அவள் உதடுகள் அவனை என்னவோ செய்தது. அவள் இதுபோல் பேசுவது அவனை மேலும் உன்மத்தம் கொள்ளச் செய்தது.

"சரி, நான் போயிட்டு வர்ரேன்ங்க. ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு"னு புறப்பட எத்தனித்தான்.

"உங்க ஃபோன்  # கொடுங்களேன்?" என்றாள் காமினி.

"இது என் ஹோம் #"னு அதை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

*************
அன்று இரவு  டின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போகும்போது, அவன் ஹோம் ஃபோன் அலரியது.

"ஹல்லோ! நாந்தான் காமினி"

"சொல்லுங்க "

"உங்ககிட்டு ஒண்ணு கேக்கனும்"

"என்னங்க?"

"இல்லை, உங்க எக்ஸ் வித்யா உங்களைப் பத்தி நெறையா கம்ப்ளைய்ன் பண்ணுவா?'

"என்னனு?"

"நீங்க ரொம்ப "டேர்ட்டி"யா பேசுவீங்களாமே?"

" "

"படுக்கை அறையில்"

" "

"இல்ல, அதுமாரிப் பேசினால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்"

- தொடரும்

 (அடுத்த எப்பிசோடில் முடிந்துவிடும்)

சில்லரையும் நாந்தான்! பெரியமனுஷனும் நாந்தான்!

பின்னூட்டப் பிரச்சினைகள் பத்தி நெறையப் பேருக்குசரியாகப் புரிவதில்லை. நான் திரும்பத் திரும்ப சொல்வது இதுதான். அனானிகள் நிறைந்த உலகம் இந்த பதிவுலகம். அனானியாக உங்க எதிரியும் வரலாம், நண்பனும் வரலாம். இவர்களுடன் போராடி வெல்வதென்பது அர்த்தமற்றது.

ஆனால் அனானியாக வருவதால் நீங்க நண்பரை எதிரியாக நினைத்து ஏமாறுவதையும், எதிரியை நண்பனாக நம்பி ஏமாறுவதையும் தவிர்க்க முடியாது.

"இல்லை இல்லை!  நான் அதி புத்திசாலி, யாரை வேணா கண்டு பிடிச்சிருவேன்"  என்கிற வீண் ஜம்பம் எல்லாம் அர்த்தமற்றது. இதற்காக உங்க பொன்னான நேரத்தை செலவழிச்சு ஆராய்ந்து கண்டுபிடிச்சி.. அட போங்கப்பா!

ஒரு சிலர் பதிவுலகில் அனானிகளை அனுமதிக்கிறது இல்லை. இருந்தாலும் "பெயருடன்" ஒரு அனானி ஐ டி தயார்ப் பண்ணி வருவதும் நடக்கத்தான் செய்யுது. ஒரு ஒரிஜினல் ஐ டி யும் கைவசம் இருக்கும்.

சமீபத்தில் ஒரு தளத்தில் நடந்த கூத்து இது!

ஒரு பதிவரை, அவர் பெயரில் நல்லாத்தெரியும் அந்த தள நிர்வாகிக்கு. இவர்கள் இருவரும் நண்பர்கள்னு கூட சொல்லலாம். கருத்து ஒற்றுமைதான், கருத்து வேற்றுமையைவிட இவர்களுக்குள் அதிகம்.

ஆனா, என்ன காரணம்னு தெரியாது, நண்பர் தளத்திலேயே இவர் அனானியாக ஒரு பின்னூட்டமிடுறாரு. இதற்கு ஆயிரம் காரணம் சொல்லி தான் செய்ததை சரி என்று இவர் விவாதிக்கலாம். ஆனால் அதைப்பத்தி இப்போ பார்க்க வேணாம்.

 அனானியாக வந்து இவர் இட்ட இவரோட ப்ரவோக்கிங் காமெண்ட் டை தள நிர்வாகி, அனானி இவருதான்( நண்பன்னு)னு தெரியாமல் அழிச்சு விடுகிறார்.

சரி, அதோட போய்த் தொலையுதுனு விட்டு இருக்கலாம். இவரு, அதையும் விடாமல், மறுபடியும் இவரோட ஒரிஜினல் ஐ டியில் வந்து, நல்லாத் தெரிந்த பதிவராக, நண்பனாக வந்து, "பெயரிலி" நாந்தான் என்கிறார்.


Anonymous said...
This comment has been removed by a blog administrator.
naren said...
வவ்வால்,

அந்த பெயரிலி மறுமொழி அடியேனதுதான்.

இந்த பின்குறிப்பை சேர்த்து அதனுடன் படிக்கவும்.

நன்றி.

இதுபோல் அனானியாக வருவதால் பல பிரச்சினைகள் உண்டாகும் என்பதை பலரும் உணருவது இல்லை. நான் இங்கே இதைவைத்து ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதெல்லாம் சொல்லப் போவதில்லை.

 பதிவுலகில் ரெண்டு ஐ டி வச்சுண்டு, ஒரே பதிவில், ஒரு கருத்தை நீங்க அனானியாக அல்லது இன்னொரு அனானி பெயருடனும், இன்னொரு கருத்தை உங்க ஒரிஜினல் ஐ டியுடன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன???

அப்படி சொல்வதால் நீங்க என்ன எழவை சாதிக்கிறீங்க?? இதெல்லாம் உங்களுக்கு தப்பாத் தெரியலையா? இருந்துட்டுப் போகட்டும், நீங்க எல்லாரையும் குழப்புறீங்கனு தெரிஞ்சுக்கோங்கப்பா!


இதைப் பத்தி நல்லாப் புரிஞ்சுக்கணும்னா இந்தத் தளத்தில் போய் வாசிக்கவும்!

இதில் நான் யாருடைய பெயரையும் சொல்லாமல் நாகரிகமாக சொல்லியிருக்கலாம்தான். அப்படி நான் சொன்னால் நான் சொல்வதை யாரு நம்புவா??. ஒரு சிலரை பலி கொடுத்துத்தான் ஒரு சில திருத்தங்கள் செய்ய இயலும்!

சம்மந்தப்பட்டவர்கள் என்னை மன்னிக்கவும்!

Monday, September 10, 2012

லாக்பிமா ஜெயலலிதா கார்டூன்! இது கருத்துச்சுதந்திரமா?

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதா கார்டூன் பற்றி பரபரப்பா பேச்சு வந்ததும் என்னதாண்டா இந்த சிங்களவர்கள் போட்டு இருக்காங்கனு தேடிப் பார்த்தால், பல தளங்களில் தெளிவான படம் கிடைக்கவில்லை.

யாரோ ஒருத்தன் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டு இருக்கான்!



http://groundviews.org/wp-content/uploads/2012/09/Screen-Shot-2012-09-09-at-8.00.33-PM.jpg

இதையும்  கருத்துச் சுதந்திரம்னு ஒரு சிலர் சொல்றானுக, விவாதம் செய்றானுக!

 எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை, இது கருத்துச் சுதந்திரமா என்று?

டெய்லி ஒரு கார்ட்டூன் போடும் நம்ம சோ ராமசாமி மாதிரி ஆட்களுக்குத்தான் தெரியும். இது கருத்துச் சுதந்திரமா என்னனு!!!

இந்த கார்ட்டூன் இந்தத் தளத்தில் இருப்பது சட்டவிரோதம் என்றால், சொல்லவும், அகற்றி விடுகிறேன்.

என்ன மாரி கார்ட்டூன்னு தெரிந்தால்த்தானே, அதைப்பத்தி விமர்சிக்க முடியும்?

Sunday, September 9, 2012

நண்பர்களை அழைக்க முடியவில்லை!

அவர்கள் மேல் கோபமில்லை
எள்ளளவு வருத்தமும் இல்லை
அவர்களை பழிவாங்கவும் இல்லை
கடவுளை சந்திக்கப் போகும் அவசரத்தில்
ஆருயிர் நண்பர்களை அழைக்க முடியவில்லை
எனது இறுதி சடங்கிற்கு!

Thursday, September 6, 2012

பிடிக்காதவர்களை பிடிப்பதுபோல் நடிப்பது தப்பில்லையா சார்??

"இந்த பாருங்க, உங்களை எனக்குப் பிடிக்கலை! நீங்க  எவ்ளோ பெரிய ஆளா இருந்துட்டுப் போங்க! நான் அடிமுட்டாளாவே இருந்துட்டுப் போறேன். என் பதிவிலே வந்து, ஆமா என் தளத்திலே வந்து,  நீங்க பெரியாளு,  நான் அயோக்கியன், அடிமுட்டாள்னு காட்டப்படாது" னு பச்சையா சொல்வதில் என்ன தப்பு?

"நில்லு! நில்லு! நில்லு! மெண்டலு! சயண்டிஸ்டு! சொல்றேன் இல்ல? நில்லுடா! சயண்டிஸ்டு வெண்ணை! ஆமா யாரு அப்படி செய்தா?"

"யாருனு காட்டிட்டா?"

"காட்டுடா வெண்ணை!"

"சும்மா கத்தப்படாது! கீழே பாரு! இரண்டு உதாரணங்களுடன்."

------------------

உதாரணம் 1)

"நிலா" னு ஒரு பதிவர் , "வருண், ஏதாவது அறிவியல் சமம்ந்தமா எழுதுங்களேன்?" என்பார்.

சரி, எதையாவது நமக்கு தெரிந்ததை எழுதுவோமேனு ஒரு கட்டுரை (எனக்கு தெரிந்ததை வச்சு).

தங்கம் பதுக்க ஒரு விபரீத வழி!


அதில் வந்த முதல் பின்னூட்டம், இளா உடையது..அதுக்கு பதில் பின்னூட்டமும் இருக்கு.
ILA(@)இளா said...
நீங்கதான் வவ்வாலோ?
வவ்வால் said...
@இளா,

//நீங்கதான் வவ்வாலோ?//

இப்படி கேட்க எப்படி மனசு வந்துச்சு ராசா? இது போல பிழையான பதிவெல்லாம் நான் போட மாட்டேன்னு தெரிய வேண்டாமா! இன்னிக்கு நைட் ரெண்டு பெக் எட்ச்ராவா போடனும் போல இருக்கு :-((

ஏதோ, தங்கம், தாமிரம்னு தலைப்பு பார்த்து வந்தேன்(எல்லாம் கம்மோடிடி டிரேட் பண்ணதால வந்த வினை)


நான் கற்ற பாடம் 1): 

இவரு ரொம்ப பெரிய ஆளு போல. இருக்கட்டும். ஆனா என்னை எதுக்கு இவரு பெரிய ஆளுனு சொல்ற  மாதிரி அவமானப்படுத்துறாரு? சரினு 
இங்கே ஒண்ணும் சொல்லாமல் விட்டுட்டேன்.

ஆனா, எனக்கு இவரை, இவரோட "ஆட்டிட்டூட்" சுத்தமா பிடிக்கலை!

----------

உதாரணம் 2)

பொங்கல் சம்மந்தமாக கோவி கண்ணன் பதிவுக்கு எதிர் பதிவு எழுதினேன்.

கோவியாரு ரம்ஷான், பக்ரித் எல்லாம் கொண்டாடுவாரா?



அங்கேயும் இவரு தொடர்ந்தார். "தான் எல்லாம் தெரிந்தவன், நீ ஒரு முட்டாள்!" என்பது போல!
வவ்வால் said...
// திராவிடர்களான தமிழ் இந்துக்கள் திருநாள்தான். தமிழர் திருநாள்னு சொல்லி பிற மதத்தவரை குற்றம் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?//

வருண்,

எதாவது வரலாறு தெரியுமா? இல்லைனா சும்மா இருக்கலாம். அமெரிக்கா போல நாட்டுக்கு போயிட்டா இப்படி தான் பேச தோனும்னு அடுத்தவங்க சொல்லிடுவாங்க அதுக்காக சொன்னேன் :-))

ஒன்னு நீங்க ஆரியனா இருக்கனும் இல்லை ஆரிய அபிமானியா இருக்கனும் அப்போ தான் திராவிட தமிழ் இந்துக்கள் னு எல்லாம் சொல்ல முடியும். அவங்க தான் எல்லாத்தையும் இந்துத்துவ டப்பாக்குள்ள போட வருவாங்க, சந்தர்ப்பவாதமா பேசி , பிரச்சினையை திருப்புவாங்க.

பொங்கலை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் அது உழவர் திருநாள், பின்னர் தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள். அப்புறம் உங்க விருப்பம் போல எது வேண்டுமானாலும். இது தமிழ் மண்ணுக்கான விழா.

//சங்க்ராந்தினு தெலுங்குக்காரன் கொண்டாடுறான். “தமிழர் திருநாள்”னா அவன் கொண்டாடுறான்? //

சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன் என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட இல்லையே :-))

இப்போ பேசுறது தமிழ் பேசும் மக்களுக்காக, தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்களூக்காக .

நாங்க எல்லாம் அரபி, இரான் சொல்லிக்கிட்டா யார் கேட்க போறா :-))இல்லை இட்டாலி, ரோம் சொல்லிக்கோங்க. :-))
வருண் said...
***வருண்,

எதாவது வரலாறு தெரியுமா? ***

நீங்க எழுதின வரலாறா. சொல்லுங்க கேட்டுக்கிறேன்.

***இப்போ பேசுறது தமிழ் பேசும் மக்களுக்காக, தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்களூக்காக .***

நீங்களா பிதற்றுறீங்க! எவன் உங்ககிட்ட வந்து சொன்னான்?
வருண் said...
***சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன் என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட இல்லையே :-))***

இஸ்லாமியரை எதுக்கெடுத்தாலும் தாக்குறவனிடம்தான் காமன் சென்ஸெல்லாம் இருக்கும். இங்கே வந்து அதையெல்லாம் தேடாதீங்க!
வருண் said...
***பொங்கலை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் அது உழவர் திருநாள், பின்னர் தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள். அப்புறம் உங்க விருப்பம் போல எது வேண்டுமானாலும். இது தமிழ் மண்ணுக்கான விழா.***

நீங்க எடுத்துக்கோங்க! உழவர் அல்லாதவர் எல்லாரும் இப்படித்தான் எடுத்துக்கனும்னு சொல்ல நீங்க யாரு சார்?
வருண் said...
***சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன் என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட இல்லையே :-))***

தமிழர் திருநாள்னு சொல்றதே அபத்தம். மெஜாரிட்டி (தெலுங்குக்காரன் நம்மலவிட அதிகம்) ஒத்துக்க மாட்டான்! நல்லளா சொல்லிக்கிட்டு திரிய வேண்டியஹ்துதான்

வருண் said...
***இப்போ உங்களுக்கு ஒரு நாளில் பிறந்த தினம் வருது. நீங்க அதை கொண்டாடுறிங்க. அதே நாளில் உங்க பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுல தாத்தா இறந்த நாளுக்கு நினைவு தினம் வருது. இப்போ அவங்களைப்பார்த்து நீங்க என் பிறந்த தினம் கொண்டாடுறிங்க சொல்வீங்களா? இல்லை அவங்க உங்களைப்பார்த்து எங்க தாத்தாவுக்கு நினைவு தினம் கொண்டாடுறிங்க சொல்வாங்களா? ***

வவ்வாலு!

ரொம்ப காமெடியா பேசுறீங்க போங்க! இந்தியாவே ஜனவரி 14 லை "உழவர் தினம்" னு கொண்டாடுறாக. நீங்க ஏதோ இது ஒரு "coincidence" என்பதுபோல பேசிக்கிட்டு இருக்கீங்க!

***உங்க பிரபல ஆசைக்கு இதை எல்லாம் கையில் எடுக்க வேண்டாம்***

இதெல்லாம் எரிச்சலைத்தான் கெளப்புது. Why do you have this filthy attitude? என் ஆசை என்னோடு. சும்மா தேவைல்லாமல் நீங்க பெரிய இவரு மாதிரி பேசிக்கிட்டுத் திரியக்கூடாது

நானும் பார்க்கிட்டே இருக்கேன். பதிவுலகில் வவ்வாலாக பறக்க ஆரம்பிச்சதுல இருந்து என்னவோ நீங்கதான் பெரிய புடுங்கி, எல்லாத்துக்கும் அத்தாரிட்டி மாதிரி இஷ்டத்துக்கு தற்பெருமை விமர்ச்னம் செய்தால் அப்புறம் நல்லாயில்லை சொல்லிட்டேன்!

If you want to show you are superior in every response you are posting, Get the hell out of here, vavvaal!

நான் கற்றபாடம் 2):

இவரோட நமக்கு நிச்சயம் இந்த ஜென்மத்துல  ஒத்துப் போகாதுனு தெளிவாத் தெரிஞ்சு போச்சு!
 ------------------

முடிவுரை:

* முதல்க் கோணல் முற்றிலும் கோணல்னு ஏதோ சொல்லுவாங்க. ஆரம்பமே (இவர் மறுபடியும் "ஆக்டிவ்" ஆன பிறகு)  இவரோட ஒத்துப்போகவில்லை!

* நான் கத்துக்கிட்டது.. இவருக்கும் நமக்கும் சந்தேகமே இல்லாமல் ஒத்துப் போகாது போல. ஆனா இவரு எவ்ளோ பெரிய ஆளாயிருக்கட்டும்,  எனக்கு நாந்தான் பெரியவன்!  அதுவும் என் தளத்தில் வந்து, "இவரு பெரிய ஆளு! வருண் ஒரு அறிவு கெட்டவன்" னு சொல்றதை எல்லாம் அனுமதிக்க முடியாது.

பச்சையா சொல்றேன், இவரு கடவுளாவே இருக்கட்டும், எனக்கு இவரைப் பிடிக்கலை. என் தளத்தில் என்னை அவமானப் படுத்துவதுபோல் பின்னூட்டம் வந்தால் இந்தாளை விடமாட்டேன்!

ஆமா, பிடிக்காதவர்களை, பிடிப்பது போல நடிப்பது தப்புத்தானே?

எனக்கு நடிக்கப் பிடிக்காதுங்க! :) ஆமா, பதிவர் வவ்வாலுக்கும் எனக்கும் இந்த ஜென்மத்தில் ஒத்துப் போகாது!

இங்கே யாரும் பஞ்சாயத்துக்கு வர வேணாம்! புரிஞ்சுக்கோங்க! 

என்னது?

வருண் தான் அயோக்கியனா?

ஆமா, நான் அதை  இல்லைனு எப்போ சொன்னேன்? :)))


நன்றி, வணக்கம்! :))

பின்குறிப்பு: இந்தப் பதிவுக்கு, மாடெரேஷன் ரொம்ப கடுமையாகவும் கொடுமையாகவும் இருக்கும்! :)

Wednesday, September 5, 2012

அம்மா, அப்பா என்னும் அரக்கர்கள்!

அப்பா, அம்மா என்பவர்கள் பிள்ளைங்களுக்கு நல்லதுக்குத்தான் செய்றோம்னு அடாவடியா நடந்துக்கிறது எல்லாம் அநியாயம். சமீபத்தில் ஒரு விவாதம் விஜய் டி வி ல பார்க்க நேர்ந்தது. வேறென்ன நம்ம கோபிநாத்தோட நீயா நானாதான்.

ஒரு சில அப்பாமார்கள் எல்லாம் பெரிய ஹிட்லர்க மாதிரி பொது இடத்திலேயே நடந்துக்கிறாங்க!! அவங்க பேசுற தினுஷைப் பார்க்கவே ரொம்ப பயம்மா இருந்துச்சு! தங்கள் பிள்ளைங்க, ஹார்மோன்கள் சுரந்து குழப்படி செய்யும் அறியாத வயதில் இருக்கதால அவங்க ரூம் கதவை அடச்சா குத்தம், பசங்களோட பேசினால் குத்தம், முகநூல் வச்சுக்கிட்டா குத்தம்னு ஒரே சட்ட திட்டங்கள்தான்.

நான் கவனிச்சவரைக்கும் பசங்க யாரும் தங்கள் கருத்தை, அப்பா அம்மா திட்டுவாங்கனு, உலகம் என்ன நினைக்குமோனு  பயந்துகொண்டு சரியாக சொன்ன மாதிரி தெரியவில்லை.

ப்ரைவசி எதுக்குனா? இதெல்லாம் தெரியாதா? நான் ஒரு இன்ஸ்ட்ருமெண்ட் பயன்படுத்தும்போதுகூட, எனக்கு அடுத்து பயன்படுத்துபவர், 5 நிமிடங்கள் முன்பே வந்து, அருகில் அமர்வது சுத்தமாகப் பிடிக்காது! நான் தப்பு எதுவும் செய்யலை, என் வேலையை என் நேரத்தில், நான் திட்டமிட்டபடி செய்றேன். அடுத்தவர் அருகில் என்னை வேடிக்கை பார்த்தால் என்னால காண்ச்செண்ட்ரேட் செய்ய இயலாது. இதுக்கே எனக்கு "ப்ரைவசி" தேவைப்படுது. ஒரு சில சமயம் நான் சொல்லிடுவேன், "ப்ளீஸ், போயிட்டு 5 நிமிடம் சென்று வா. அப்போத்தான் உன் நேரம் ஆரம்பிக்குது"னு.

நம்ம பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

ப்ரைவசினா, செக்ஸ் (உடலுறவு) வச்சுக்கிறதுக்கும், மாஸ்டர்பேட் (சுய இன்பம்) செய்துக்கிறதுக்கும், திருட்டுத்தனம் செய்ய மட்டும்தான் தேவைனு இல்லை. பல நேரங்களில் சிந்திக்கக்கூட, ஒரு வேலையை ஒழுங்கா செய்யக்கூட "ப்ரைவசி" தேவைப்படுது. படிக்கவும்தான். ஒருசில அம்மா அப்பா மார்களுக்கு இவ்ளோ வயதாகியும் கொஞ்சம்கூட கூறே இல்லை! என்னவோ இவங்க பக்கத்தில் இருந்தால் தன் பிள்ளைகளை கட்டுப்படுத்திவிடலாம்னு நினைக்கிற முட்டாள்களா இருக்காங்க.

ஒரு  மனசை யாருமே கட்டுப்படுத்த முடியாதுங்க! இது தெரியாதா இவர்களுக்கு?

கற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது 
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

-கண்ணதாசன்

இதெல்லாம்  புரியாதா இந்த ஹிட்லர்களுக்கு? புரிஞ்சுக்கோங்கப்பா!

Tuesday, September 4, 2012

உங்க எதிரிகளை உருவாக்க ஒரு அழகான வழி!

நீங்க இணைய தளத்துல போயி உங்க கருத்தை "உண்மையா", ஆமா "ஆனஸ்ட்டா" பின்னூட்டத்திலே சொல்றீகளா? என்ன நீங்களும் குறையில்லாத மனிதர் இல்லையா? யாருங்க இந்த  ஒலகத்துல குறையில்லாத வெங்காயம்? அதாவது நீங்க ஒருவர் பதிவில் உள்ள குறைகளை, தெரிந்தவர், தெரியாதவர், பெரியவர், சிறியவர் என்றெல்லாம் பார்க்காமல், கருத்து வேற்றுமையால் எதிர் கருத்தை அங்க போயி பின்னூட்டத்துல சொல்றீங்க!  அவ்வளவுதானா? அதைத்தான் சொல்றேன். அந்தப் பதிவரின் பின்புலத்தைப் பொறுத்து நீங்க உங்களுக்கு, ஒரு அல்லது  பல எதிரிகளை உருவாக்குறீங்க. 

நீங்க தனி நபரா?  நீங்க ஏங்க "ஆனஸ்ட்டா" ஒருத்தன் தப்பை, குறையை எல்லாம் உலகறியப்போயி பெரிய யோக்கியசிகாமணி மாதிரி சொல்லிக்கிட்டு? பேசாமல், த ம #7 னு ஓட்டைப்போட்டு விட்டு நல்ல பதிவுனு சொல்லிடுங்க. என்ன  இப்போ? ஒரு சில வரியை எடுத்துக்காட்டி "ரசித்தேன்"னு உண்மையோ பொய்யோ சொல்லுங்க! உங்க நண்பர்கள் பெருகுவாங்க! உங்க மொக்கைப்பதிவுக்கும்  4 அல்லது அஞ்சு மதிப்பெண்கள் கிடைக்கும். அதெல்லாம் முடியாதா?

இந்த உலகமே திருட்டுப்பயலுக நெறைந்த  உலகம். என்ன இப்படி சொல்றியா? எவன் எவனோட கூட்டுக்களவானினு இந்த "உலகில்" கண்டு பிடிக்கனும்னா நீங்க வேலையை ராஜினாமா பண்ணிட்டு முழுநேர இணையதள ஆராச்சில இறங்க வேண்டியதுதான்- இந்த வீணாப்போனவனுகளை தோண்டிக்கிட்டு. நீங்க இதுக்கு தயாரா? இல்லையா?

 நீங்க பின்னூட்டதிலே சொன்னது உண்மையா இருந்தாலும், நீங்க அடுத்து ஒரு பொதுநலப்பதிவு எழுதினாலும், உங்கட்ட அடி வாங்கியவர்கள் எந்த அனானிகளோடையும் கூட்டு சேருவார்கள் ! யாரு? அதான் உங்களால் எதிர் விமர்சனம் செய்யப்பட்ட பதிவை எழுதிய பதிவர்கள். பழிக்குப்பழி! அம்புட்டுத்தான்!

என்ன பண்ணுவாங்கனா, கரெக்ட்டா உங்க பதிவுக்கு முதல் வேலையாக வந்து, உங்களை, நீங்க செய்த அதே விமர்சன்ம்போல. ஒரு பொய்யை ஜோடிச்சு உண்மை போலவே எதையாவது சொல்லி உங்களை பழி வாங்குவாங்க. இப்படி நீங்க பதிவுலகில் ஏகப்பட்ட எதிரியை உருவாக்கலாம்! உருவாக்கிட்டீங்களா? இது எல்லாருக்கும் நடக்கிறதுதான். ஆனால்..

தெரிஞ்சுக்கோங்க, பல சமயங்களில், உங்க பின்னூட்டக்கருத்து ஒரு கருத்து ஒரு குழுமத்தையே தூண்டி விடுதுங்க.

நீங்க என்ன குறையில்லாமலா பதிவு போடுவீங்க? உங்க பதிவில், எழுத்துப் பிழை, கருத்துப்பிழை எல்லா எழவும் இருக்கத்தான செய்யும்? அதை இதுவரை கண்டுக்காமல் போனவங்க எல்லாம் இப்போ குழுமமாக ஒண்ணுகூடி வந்து, "உங்களுக்கு நல்லது செய்வதுபோல" பொறுப்பா எதாவது பின்னூட்டமிடுவாங்க!

 ****

சொல்லுங்க, சார்! உங்க இன்றைய நிலைமை என்ன??

என்னது? ரொம்ப எதிரிய உருவாகிட்டீங்களா? உண்மையை, மனசுல தோன்றியதை எல்லாம் பெரிய இவன்மாரி பின்னூட்டதுல சொல்லி? இப்போ நான் என்ன பண்ணுறதா? 

* 1) பேசாமல் பின்னூட்டப் பெட்டியை மூடி வச்சுட்டா?

நல்ல அறிவுரைதான் ஆனால்..எதுக்கு அப்படி செய்யனும்? பிடிக்கலை..

* 2) மூடி வச்சுட்டு மாடெரேட் பண்ணுறேன்னு பழிவாங்க வர்றவனையெல்லாம் கப்பு சுப்புனு ஒழிச்சுட்டா?

ஆமா, அடுத்தமுறை உங்க பதிவில் பின்னூட்டமிட மாட்டாங்க! ஆனால்...எதுக்கு அப்படி செய்யனும்? இதுவும் பிடிக்கலை..

* 3) இதுக்கெல்லாம் பயந்தா வாழவே முடியாது! செய்றதை செஞ்சுக்கோ! எனக்கு சரியா  தோணுச்சுனா உன் பின்னூட்டம் தெரியும். இல்லைனா அகற்றிவிடுவேன்னு திறந்து வைக்க போறீங்களா?

இந்த 3) வது ஐடியா ரொம்ப நல்லாயிருக்கே! அதைத்தான் நானும் செய்வேன்!

என்ன?  நீங்க அகற்றினால், உங்களைப்பத்தி, மேலும் நீங்க அகற்றிய பின்னூட்டம், மேலும் நீங்க காரசார விவாதத்தில் போட்ட பின்னூட்டத்தை யெல்லாம் இஷ்டத்துக்கு ஜோடிச்சு, ஏதாவது கதை கட்டி, ஒரு பதிவு போடப்போறாங்களா?

இது நல்ல ஐடியாவாத் தெரியலையே.  உங்களை ரொம்ப பாப்புளர் ஆக்கிப்புடுவாக போலயிருக்கே! :) எனக்கு உங்க மேலே பொறாமையா இருக்குங்க! :)

Saturday, September 1, 2012

எடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு?

எடக்கு மடக்குனு  ஒரு அனானிமஸ் தளம் நடத்தி  வரும் "தமிழ்சேட்டுப் பையனும்" இன்னொரு "முட்டாளுப் பையனும்" யாருங்க?  அப்புறம் அந்தத் தளத்தில் மட்டும்  பின்னூட்டங்கள் இடுவதற்கென்றே ஒரு "பாவாடை சாமி", ஒரு "உடும்பன்" , அப்புறம் ஒரு "ப்ளாக் பக்கிரி" இப்படி பல அனானிமஸ் ஐ டி கள் உலவுது. எவனையாவது போட்டு தாக்கனும்னா இந்த முகமூடிகளை மாட்டிக்கிட்டு இந்த அனானிமஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டுட்டு வந்திடுவானுக பின்னூட்டமிட!

 இந்த அரை டவுசர்கள் ஐந்தும் (இன்னும் சிலவும் இருக்கலாம்) யாருக்கு கூலி வேலை பண்ணுதுகள்னு தெரியலை. ஆனால் அடிக்கடி எவனையாவது, எவனுக்கோ பிடிக்காதவனை  இஷ்டத்துக்கு விமர்சிக்க வேண்டியது. ஒரு கவர்ச்சியான தலைப்பு கொடுத்துப்புட்டு, இந்த மாதிரி ஒரு 5-6 அனானிமஸ் ஐ டி வச்சுக்கிட்டு,  ஆளாளுக்கு பின்னூட்டம்னு எதையாவது ஒளறிக்கிட்டு மாத்தி மாத்தி  இவனுகளுக்குள்ளேயே பேசிக்கிட்டு பதிவை சூடாக்குறது.

தமிழ்மணம்  திரட்டியில் இந்தப்பதிவுகளை திரட்டலைனா இவனுகள நான் கண்டுக்கவே மாட்டேன். 

ஆமா, யாருக்கு கூலிப்படை இந்த அரை டவுசர்கள்? சிங்களவர்களுக்கா? பார்ப்பணர்களுக்கா? எவனாவது தமிழின துரோகிக்கா? இல்லைனா யாருக்கு?   இந்த ஐ டிக்கள் அனைத்துமே போலிகளா? இதுபோக இவர்களுக்கு இன்னும் பல ஐடி க்கள் இருக்கா? என்ற கேள்விகள் எழுகின்றன

ஆமா, இவனுகள அடியாளா பயன்படுத்திக்கிற அந்த  "முழு டவுசர்" யாருனு பலர் யூகிச்சு வச்சிருந்தாலும், நம்ம யாரையும் "இவரா இருக்குமோ?" னு கைகாட்டுவது அநாகரிகம்!

நீங்களும் யூகம் செய்ய  இவனுகளோட சாம்பிள் பதிவு ஒண்ணு

தமிழ் புத்தாண்டு சித்திரையில் கொண்டாடினால் ஆபாசமா?


பல வருடங்களாக தமிழ் புத்தாண்டை சித்திரையில் சித்திரைக்கனி என்னும் பெயரில் நான் சிறுவனாக இருந்த போதிருந்து கொண்டாடி வருகிறேன். ஆரஞ்சு, திராச்சை, ஆப்பிள், மாங்கனி என கிடைக்கு பழங்களையெல்லாம் ஒரு வட்ட தட்டில் வைத்து கொஞ்சம் பணம், நகை வைத்து காலை எழுந்தவுடன் அதில் விழித்து அன்றைய வருடம் சீரோடும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு கோவில்களுக்கு செல்வதும், பொங்கல் வைத்து கொண்டாடுவதும் இந்து தமிழர்களின் மரபு. நாளை மலையாளிகள் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் அவர்களும் அதே முறையை பின்பற்றுகிறார்கள்.


மஞ்சள் துண்டு மைனர் பகுத்தறிவு பசு கலைஞர் தான் புலியல்ல என நிருபிக்க கொண்டு வந்ததுதான் இந்த தமிழ் புத்தாண்டு மாற்றம். ஆனா ஒரு பய மதிக்கலை மேல் கூறிய சம்பவங்கள் அனைத்து இந்து குடும்பத்திலும் நடந்தது. பிராமணர்கள் அல்லாதவர்களும் கொண்டாடினார்கள், 


நானும் பார்க்கிறேன் ஒரு இந்துவுக்கு தெரியாத பாசுரங்களையும், புராணங்களையும் கரைத்து குடித்து மனப்பாடம் செய்துவிட்டு இது இப்படி அது அப்படி என்று சும்மா விடுறதுல பகுத்தறிவு முட்டாள்களுக்கு இணை வேறு யாரும் இல்லை. விநாயகர் தும்பிக்கைய பிறப்பு உறுப்புல வைத்து மறைத்தார் ஆபாசம் அப்படிங்கறாங்க...இந்து மதமே வெறும் ஆபாசம் அறுவருப்பு என்று சொல்லுகிறார்கள், அப்படி சொல்லுகிற நீ வானத்தில் இருந்து குதித்தாயா? அதே ஆபாச பிறப்பு உறுப்பில் இருந்துதானே பிறந்தாய்! அறுவருப்பு என்று நீ எதை சொல்கிறாய், ஒரு பூ இறைவனால் படைக்கப்பட்டது அதில் மகரந்த சேர்க்கை அறுவருப்பா? உங்கள் மனைவியோடு நீங்கள் கலவியில் ஈடுபடுவதில்லையா? அப்புறம் எதற்கு பகுத்தறிவு பகலவனுக்கு இரண்டு பொண்டாட்டி. 

இந்துமத கோயில்களில் இருக்கும் சிற்பங்களை இன்று உன்னால் உருவாக்க முடியுமா? கங்கை கொண்ட சோழபுர கட்டிட அமைப்பை ஆராய்ந்து பார்த்த அமெரிக்க பொறியாளர்கள் வியந்து அதே முறையில் லாக்கிங் சிஸ்டம் முறையில் கட்டிடங்களை கட்டுவதை தொடங்கியிருக்கிறார்கள் பூகம்பத்தை தாங்கும் மிக திறமையான 
கட்டிட தொழில் நுட்பத்தை வியக்கிறார்கள்.


உங்களுக்கு பிராமினை எதிர்க்க அவர்களை கேவலப்படுத்த எடுக்கும் ஒரே ஆயுதம் இந்துமதம். உண்மையில் எனக்கு தெரிந்து மிகச்சாதுவான மக்கள் அவர்கள், ஒரு முட்டாள் கஜுரஹோ கோவில்களை இடிக்க வேண்டும் என்கிறான்.  ஒரு கலையை ரசிக்கமுடியாதவன் சைக்கேவாகத்தான் இருப்பான், கலைகளின் தேசம் பிரான்ஸ்ல் இருக்கும் அற்புத நிர்வாணசிலைகளை அங்கு அகற்றவேண்டும் என்று கூறிப்பார் அடித்தே கொன்றுவிடுவார்கள் உன்னை. 
இந்திய ஓவியங்கள் சிற்பங்கள் கலைகள் எல்லாவற்றிலும் பாலியல் சார்ந்து இருப்பதுக்கு காரணம், ஏன் அனைத்து கோவில்களில் உறவுகாட்சிகள் இருப்பதின் காரணம் அவை ஆபாசம் அல்ல இறைவனின் படைப்பில் அதுவும் ஒரு அங்கம் என்பதுதான். அன்றைய பெண்கள் ஆண்கள் உடலுறவு பற்றி எதையும் அறியாமல் இருந்தார்கள், இன்றைய காலகட்டத்தில் செல்போன்ல எல்லாம் பார்க்கிறார்கள், அப்பொழுது இது ஒரு மருத்துவமாக இருந்தது, இந்த சிலைகளை பார்க்கும் பெண்கள் கிளர்ச்சியடைந்து வம்சவிருத்திக்கு தயாராக வைக்கப்பட்ட சிலைகளே இவை.


உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒரு சங்கம் மாதிரி யாராலோ தொடங்கப்பட்டது ஆனால் இந்து மதம் யாராலும் தோற்றுவிக்கப்பட்டது அல்ல தானே வளர்ந்தது இதில் உள்ள யோகா, தியானம், மருத்துவம் விஞ்ஞாணம், எந்த மதத்திலும் இல்லை. அதே அளவு மூடநம்பிக்கையும் கொண்டது இன்றைய காலகட்டத்தில் அவை எழுபது சதவீதம் ஒழிக்கப்பட்டது, இனி வரும் காலத்தில் சாதி மூடநம்பிக்கை ஒழிக்கப்பட்டு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் காரணிகள் இதில் நிறைந்து உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை


வேப்பிலை துளசி போன்ற மருத்துவ மூலிகைள் பல நோய்களை குணப்படுத்தக் கூடியது. நெற்றியில் வைக்கும் சந்தனம் குளிர்ச்சியானது இந்து கோவில்கள் வான் சக்தியை நமக்கு அளிக்கும் ஏரியல்கள் இது போன்ற பல நல்ல விசயங்கள் உள்ளது இந்து மதம். அதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். 


கனிகள் கிடைக்கும் இந்த மாதத்தில்தான் சித்திரைகனி எனும் தமிழ்புத்தாண்டை கொண்டாட வேண்டும், அறுவடைகாலத்தில் அறுவடை திருநாளாம் தைதிருநாளை விவசாயிகளின் புனிதநாள், இரண்டையும் சைக்கோகளின் சூழ்ச்சியால் குழப்பிக்கொள்ளாமல் இன்றைய நாளை தமிழ் புத்தாண்டை இனிமையாக கொண்டாடுவோம்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்தப்பதிவில் இருந்து இவனோட பின்புலம் என்னவாயிருக்கும்னு யோசிச்சுக்கோங்க.

இவனுக ப்ரஃபைல்  படங்களையும் ப்ரஃபைலையும் பாருங்க!!!

அனானி 1)

* தமிழ்சேட்டுப்பையன்

My Photo

My blogs


அனானி 2)

* முட்டாப் பையன்


 My Photo

My blogs


அனானி 3)

* பாவாடை சாமி

 My Photo

My blogs


அனானி 4)

* உடும்பன்

 My Photo

My blogs


அனானி 5)

* ப்ளாக் பக்கிரி

 My Photo

My blogs


தமிழ்வலைதளம் நடத்துற மொகறைக்கட்டைகளைப் பார்த்தீங்களா? இவனுகளால பாதிக்கப் பட்ட பதிவர்கள் யார் யாருனு பாருங்க!


* சி பி செந்தில் குமார்  (இவர் பிரபல பதிவராக இருந்ததால வயிரெரிஞ்சவனுக இவனுக)

* இளா

* ராஜன் (சி பி சப்போர்ட் பண்ணி இந்தப்பதிவு! :) )

* மோகன் குமார்

* ஜாக்கி சேகர்

* பொதுப்படையா இஸ்லாமியப் பதிவர்கள்!

பிரபலப் பார்ப்பனர்கள் எவனையும் இன்னும் விமர்சிக்லைனு தெரியுதா???

அனானியாத் திரியும் அரை டவுசர்களான இவனுக ஏதோ பெரிய இவனுக மாதிரி யாரையாவது வம்பு இழுக்கிறது.  அறிவியல்னா என்னனே தெரியாமல் அறிவியல் பேசுறேன்னு ஏதோ அறிவுகெட்டதனமா ஒளறுறது.  இதே வேலைக் கழுதையாப் போச்சு இதுகளுக்கு.

இவனுகளுக்கு இன்னொரு வாழ்க்கை இருக்கானு கேட்டால், நிச்சயம் இருக்கும்.  அதான் நல்லவனா, வல்லவனா உயர்தரப் பதிவனா இன்னொரு வலைதளம் (பெரியவீடு) நடத்திக்கிட்டு.அப்புறம் இந்தமாரி எடக்கு மடக்குனு ஒரு தளத்தையும் வச்சுக்கிட்டு (சின்னவீடுமாரி) ஒரு 5-6 ஐ டிகளை இந்தத்தளத்துக்குனே வச்சுக்கிட்டு மொள்ளமாரித்தனம் எல்லாம் செஞ்சு பொழைப்பை ஓட்டும் பெரிய மனுஷனுகளாக்கூட இருக்கலாம்.

விசயத்துக்கு வர்ரேன்..

வெள்ளைக்காரன் நம்மள எப்படி ஆண்டான்னா, பிரித்தாளும் கொள்கைனு சொல்லுவாங்க. நமக்குள்ள, எப்போவுமே சண்டை சச்சரவு, கருத்து வேறுபாடு இருப்பது தமிழர்களின் அடையாளம்.  நமக்குப் பிடிக்காத பதிவர்கள்,  நம்மைப் பிடிக்காத பதிவர்கள் இதுபோல் தமிழர்களுக்குள் பதிவுலக வாழ்வில் இருப்பதும் ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை. ஆனால் நம்ம என்ன சண்டை போட்டாளும் பதிவர்களுக்கு ஒரு ஐடெண்டிடி இருக்கு. நாம் பல மோசமான பதிவுகள் எழுதினாலும் ஒரு சில நல்ல பதிவுகள் எழுத முயற்சிக்கிறோம், அதில் சிறிதளவாவது வெற்றியடைகிறோம்.

நம்மை விமர்சிக்க ஒரு வலைதளம்தானே! அதனால் தப்பே இல்லை? நம்மை ஏன் இன்னொருவர் விமர்சிக்கக் கூடாது? நாமும் பதிவுலக "பிரபலம்"தான் நம்மை, நம் எழுத்தை நம் கருத்தை  நிச்சயம் பலர் விமர்சிக்கலாம். ஆனால், நம்மை விமர்சிப்பவர்கள் தகுதி என்ன? இன்னொரு சகபதிவரா? இல்லை ஒரு அனானித்தளம் வச்சு நடத்தும் நாலு அரை டவுசர்களா?? என்பதை யோசிக்கனும்.

என்னை விமர்சிப்பது,  கோவிகண்ணனா? இக்பால் செல்வனா? பெரியவர் தருமியா? தெகாவா?  இளாவா? இல்லை ஆசிக் அஹமதா? இல்லைனா சிராஜுதீனா? இல்லைனா ராபினா? சித்ராவா? இல்லைனா ஜாக்கி சேகரா? பழமை பேசியா?  குடுகுடுப்பையா?  இவர்கள் யார் வேணா விமர்சிக்கலாம். ஏன் என்றால் இவர்கள் யாவருக்கும் ஒரு தரம் இருக்கு. இவர்களுக்கு நம்மைப் பிடிக்காமல் போக, நம்மை விமர்சிக்க நிச்சயம் உரிமை இருக்கு.

ஆனால் விமர்சிப்பது அனானித் தளம் நடத்திவரும் அனானி அரை டவுசர்கள் முட்டாள் பையனும், சேட்டுப் பையனும்!  அப்புறம் ஒரு பாவாட சாமியும்!
அப்புறம் ஒரு "ப்ளாக் பக்கிரி" அப்புறம் ஒரு "உடும்பன்"!! இவனுக யாருங்க? சேட்டா? இல்லைனா சிங்களவனா? இல்லைனா கேரளாக்காரனா? ஆந்திராக்காரனா? கன்னடிகாவா? யாருப்பா இவனுக?

மேலும் அந்த எடக்கு மடக்குத்தளத்தில் உங்களுடியை ஐ பி அறியப்படும். அதை வைத்து நீங்க மிரட்டவும் படுவீங்க!  இந்த நாகரிக உலகத்தில் எடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வருகிறார்கள் ரெண்டு மூனு கூமுட்டைகள். இவனுகள, ஏன் கூமுட்டைனு சொல்றேன்னா இவர்கள் (முட்டாப்பையன், தமிழ்சேட்டுப்பையன் அப்புறம் பாவாடை சாமி, இன்னும் என்னனென்ன கூமுட்டைகளோ) ஒரே நிமிடத்தில் எழுதும் 10 அல்லது 15 பின்னூட்டங்கள் உங்களை கிறுக்குப் பிடிக்க வைக்குமளவுக்கு உளறலா இருக்கும். சுத்தமான கேணப்பயலுக, படிப்பறிவில்லாத பாமரனுக எதையோ ஒளறுவது போல இருக்கும் பின்னூட்டங்கள் எல்லாமே. ஒழுங்கா மேற்கோள் காட்டத்தெரியாது! எவன் சொன்னதையோ எவனோ சொன்னதுபோல வெட்டி ஒட்டி எழவைக் கூட்டுறது.

வேணும்னா சாம்பிள் தர்ரேன்.

இந்த அரை டவுசர்கள், ஏதோ பதிவுலக பெரியார்கள் போலவும், அனானிகளான இவனுக  பதிவர்கள் பலரையும் இஷ்டத்துக்கு விமர்சிக்க வேண்டியது. நாங்க யாரை  வேணா என்ன வேணா கேப்போம், எங்க தளம் சீர்திருத்தத்தளம்னு எதையாவது வீண் ஜம்பத்தோட ஒளற வேண்டியது.

 சரி, இவர்களிடம் போய் விவாதிக்கலாம்னு சின்சியராப் போனா, சுத்தமான கூறுகெட்ட தனமா இருக்கும் பின்னூட்டங்கள் எல்லாம். ஒரு எழவையும் ஒழுங்கா பேச முடியாது இவனுகளால. ஏதோ மெண்டல் ஹாஸ்பிடல் உள்ள போன மாரி இருக்கும் இவனுக இடுகிற பின்னூட்டங்கள்!.

இவனுகளை வளரவிடுவது தமிழ் பதிவுலகத்துக்கே இழுக்கு! தமிழ்மணத்திலிருந்து இந்த அனானிமஸ் பதிவர்கள் நடத்தும் அனானிமஸ் தளமான "எடக்கு மடக்கை" அகற்றனும்.

 தமிழ்மணமே! இந்த எடக்கு மடக்கு தளத்தை தமிழ்மணம் திரட்டியிலிருந்து அகற்றுங்களேன்! னு தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்.


குறிப்பு:  பின்னூட்டம்னு எடக்கு மடக்கு அரை டவுசர்கள் எதையாவது உளறினால் உடனுக்கு உடன் அகற்றப்படும்!  

தமிழ்சேட்டுப்பையனா? என்ன பார்க்கிற?  ஊருப்பயலை எல்லாம் விமர்சிக்கிற? உன்னையும் உன் அரை டவுசர் கோஷ்டியையும் விமர்சிக்க எங்களுக்குத் தெரியாதா என்ன?

----- 
This post is edited after 24 hrs in order to remove one person name! Thanks, Sep3, 2012, 6:38 am, CDT.