Wednesday, August 31, 2016

மறுபடியும் ரஞ்சித் கைவண்ணத்தில் தாழ்த்தப்பட்டவராக ர*ஜ*னி*?!

கபாலி ஆரம்பமானபோது இதென்ன ஒரு லோபட்ஜெட் படம்..என்னத்த தேற? என்பது போலிருந்தது. தாணுவின் கில்லாடித்தனத்தால் ஹைப் அதிகமாகி மிகப்பெரிய ஓப்பனிங் பெற்று ஒரு வழியாக வெற்றிப்படமாகிவிட்டது.

கபாலி கபாலினு ஒரு வயழியாக ஆடி அடங்கி, அடுத்து 2. பாயிண்ட் ஓ தான் என்று இருக்கும்போது, மறுபடியும் ரஞ்சித்துடன் இணைவதாக அதிகாரப்பூர்வ்மான செய்தி.

தேவையானபோது தங்கள் வசதிக்கு எல்லாம் ஃபிக்‌ஷன். படத்தைப் படமாப் பார்க்கணும் என்றெல்லாம் சப்பை கட்டுபவர்கள் நம்மில் பலர் உண்டு. பல படங்களில் ஆதிக்க சாதியினர் எல்லாரும் அவர்கள் பெருமை பேசி ரசித்துத் தீர்த்துவிட்டார்கள். ஒலகநாயகரின் சபாஷ் நாயுடு கூட பெருவாரியான மக்களின் ஒரு சாதி அடையாளம்தான். சிறுபான்மையினர் பிரச்சினையை ஒலகநாயகர்கூட இதுவரை முன்வைக்கவில்லை!!

மதுரைவீரன் படத்தில் எம் ஜி ஆர் தாழ்த்தப்பட்டவராக நடித்ததாக சொல்வார்கள். ஆனால் வீரன் மாறுகால் மாறுகை வாங்கப்படுவான்.

 சவாலே சமாளியில் சி வா ஜி தாழ்த்தப்பட்டவராக நடித்ததாகக்கூட சொல்வார்கள். அதையும் அதில் பூடகமாகத்தான் சொல்லப்பட்டது எனலாம்.

"புதியதல்லவே தீண்டாமை என்பது! புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது"னு ஒரு பாடல்வரி அதில் உண்டு!

ஆனால் யாருமே அவர்கள் பிரச்சினைகளை ஒரு ஹீரோவாக நடித்து முன்வைத்து வெற்றியடைந்ததாக காட்ட மாட்டார்கள்.

அதே சமயத்தில் சி வா ஜி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக பல படங்களில் நடித்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அவரவர் பிரச்சினைகள், அவர்வர் படும் இன்னல்கள் எல்லாம் பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து இப்படி ஒரு ரஞ்சித் என்னும் திறமையுள்ள இயக்குநர் தன் முயற்சியால் முன்னேறி வந்துள்ளது முதலில் நாம் அனைவருமே சந்தோசப்பட வேண்டிய விடயம்.

மேலும் அவர்கள் பிரச்சினையை முன்வைப்பதற்கு இது ஒரு மிகப்பெரிய வாயப்பு அல்லது சந்தர்ப்பம். அதுவும் ஒரு மிகப்பெரிய ஸ்டாரை வைத்து முன்வைப்பது அதைவிட சிறப்பு- பலரையும் சென்றடைய வாய்ப்பு. சும்மா ஒரு லோ பட்ஜெட் படம் எடுத்து டி வி சீரியல் மாதிரி விடுவதைக் காட்டிலும் பெரிய ஸ்டாரை வைத்து எடுத்தால் உலகலவில் பலரையும் சென்றடையும்.

பெண்களை நாம் அடிமைப்படுத்தி அநியாயம் பண்ணியிருக்கிறோம் என்பதை எல்லா ஆண்மகனும் ஒத்துக்கொள்ளணும்.

அதேபோல் தாழ்த்தப் பட்டவர்கள் வாழ்க்கையை நாமும் தெரிந்ந்தோ தெரியாமலோ, சின்னா பின்னப் படுத்தியுள்ளோமென்பதை பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவேண்டிய தருணம் இது!

 Image result for kabali images


கபாலியில் நிச்சயம் தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்ச்சினைகளையோ, அவர்களும் வெல்லலாம் என்கிற ஒரு கருத்தையோ தெளிவாகவோ அல்லது அழுத்தமாகவோ  ரஞ்சித் முன்வைக்கவில்லை என்றே நான்  நினைக்கிறேன்.
இந்த இரண்டாவது வாய்ப்பிலாவது அதை ரஞ்சித் திறம்பட செய்வார் என நம்புவோம்.

ஆதிக்க சாதியினர் மற்றும் பார்ப்பனர்கள் எல்லாம் படத்தைப் படமாகவும், ஃபிக்‌ஷனாகவும் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். சில்லரைத்தனமாக சாதி வெறியுடன் இதில் முன்வைப்பதை அனுகாமல், தலித்கள் அவர்கள் படும் இன்னல்களை, மற்றும் அவர்களும் நம் எல்லோருக்கும் எல்லா வகையிலும் சமம்தான் என்று முன் வைக்கும் கருத்துக்களை ஒரு திறந்த கண்ணோட்டத்துடன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

It is about time to grow up, guys! And show the world that you are not stupid and ignorant anymore! And that you are really really civilized and open-minded!