Saturday, September 27, 2014

பெண்கள்மேல் சட்டம் பாயுது! கனிமொழி அன்று ஜெயா இன்று!

கனிமொழி 2 ஜி ஸ்கேமில் அரெஸ்ட் ஆகி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட போது பார்க்க கஷ்டமாகத்த்தான் இருந்தது. இன்று சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு நாலு வருடம் சிறை தண்டனை என்று நீதி வழங்கப்பட்டபோதும் பாவமாகத்தான் இருக்கிறது. அதென்னவென்று தெரியவில்லை ஒருவர் வீழ்ச்சியை என்றுமே ரசிக்க முடியவில்லை! ஆனால் சட்டம் பெண் என்றுகூட பார்க்காமல் பாயத்தான் செய்கிறது!


சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும்  2 ஜி ரெண்டுக்கும் பிள்ளையார்சுழி போட்டவர் ஐயாதான்!
காமெடியனா? வில்லனா??? இல்லைனா ஹீரோவா நம்ம சாமி??

அன்று கனிமொழி


இன்று ஜெயலலிதா


நீதி வழங்கிய john michael cunha





Thursday, September 25, 2014

வருணின் உளறல்கள் (5)

கொலைச்சரம்:

வலைச்சரத்தில் ஐயா சீனா அவர்கள் "தரமான ஆசிரியர்களை"த் தேர்ந்தெடுத்து அவர்களால் தரமான சில பதிவர்களை அறிமுகப் படுத்த வைக்கிறார்.

அதென்ன கொலைச்சரம்?

நீங்க பதிவுலகில் யாரையெல்லாம் படிக்கக்கூடாது, அல்லது அசட்டை செய்யணும் என்கிற லிஸ்ட் இது.

பதிவர் பெயர்: . (ஒரு புள்ளி தெரியுதா?). 

இவர் ஒரு "பெரும் புள்ளி" பதிவர்! இவரிடம் இருந்து வரும் பதிவுகளில் எல்லாமே "ஒரிஜினல் சிந்தனைகள்" தான்!!! . ஒரு நாளைக்கு 10 அல்லது 15  அல்லது 20, ஏன் 25 பதிவுகளைக்கூட தமிழ்மணத்தில் வெளியிடுவார் இந்தப் "பெரும் புள்ளி"!

இந்த மாதிரி "பிரபலப் பதிவர்களை" நீங்க கண்டுபிடிச்சு, இவர்கள் வலைதளத்திற்கு நுழைவதைத் தடுக்க ஒரு சின்ன ஐடியா!

 தமிழ்மணத்தில் இன்றைய பதிவர்களில் இந்தப் "பெரும் புள்ளி"யை க்ளிக் பண்ணினால், இன்றைக்கு 10 இடுகைகள் அல்லது 25 இடுகைகள்னு காட்டும்! பொதுவாக "அனுபவம்" இல்லை "திரைப்படம்" பற்றி பதிவுகள் இருக்கும்.

உடனே  இவர் "கொலைச்சரத்தில் " அறிமுகம் செய்ய வேண்டியவர்ணு இவர் தளத்தை நீங்க தவிர்க்கலாம்!

இந்த "பெரும் புள்ளிகள்" இப்போதெல்லாம் அவர்கள் "பெயர்களையும்" அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள். 

இன்றைய "புள்ளி", நாளைய "ஆச்சர்யக்குறி" யாக இருக்க வாய்ப்புண்டு!

********************

சிரிக்கவைக்கும் தொழில் செய்யும் காமெடி வியாபாரிகள்!

ராபின் வில்லியம்ஸ் மரணத்திற்குப் பிறகு பொதுவாக ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பலரும் விமர்சிக்கிறாங்க. இவர்கள் மற்றவர்களை சிரிக்க வைத்தாலும், தங்கள் வாழ்வில், தனிமையில், கவலையுடன் மனநோயாளியாகத்தான் இருக்கிறார்களாம்!  அதற்குத் தேவையான ட்ரீட்மெண்டை  இவர்கள் எடுப்பவதில்லையாம்! அதாவது, தன் மனநிலையை சரிசெய்ய  மனநலமருத்துவர்களிடம் சென்று  அதற்கான "தெரப்பி"கள் வேண்டுமென்றே எடுத்துக்கொள்வதில்லை என்கிறார்கள்.

ஏன் மனநலத்தை புறக்கணிக்கிறார்கள்?

தெரப்பியோ, மருந்தோ எடுத்துக்கொண்டால் என்ன?

ஏன் இப்படி தன் உடல்நலத்தை அசட்டை செய்கிறார்கள்? என்றால்..

அப்படி ஏதாவது செய்தால் அவர்கள் 'தொழில்" மற்றும் "இயற்கையான ஜோக்" சொல்லும்  திறமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்கிற பயமாம்! ஆக மற்றவர்களை சிரிக்க வைப்பதை ஒரு தொழிலாகக் கொண்டதால் இவர்களே பலியாகிறார்கள்!

ஸ்டாண்ட் -அப் காமெடியன்கள்னா யாரு?

சிலர் பெயர்களை சொல்லுகிறேன்..

*  ஜெர்ரி சைன்ஃபெல்ட் 

 

*  டேவிட் லெட்டெர்மேன்

 Dave Letterman.jpg

* ஜே லெனோ





இதிலிருந்து என்ன தெரியுது?

உங்களால் பாராட்டப்படும் இவர்கள்  எல்லாருமே இன்று எப்படியாவது எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டுமே என்கிற கவலையில் இருக்கும் பரிதாபத்திற்குரிய "காமெடி வியாபாரிகள்"!

**********************************

இரண்டு வாரம் முன்பு, இந்துவில் செய்தி..

மதுரையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இருவர் மீது ஒரு "வீரன்" ஆஸிட் (அமிலம்) ஊற்றியதாக!

 Two College Girls Hospitalised After Acid Attack in Madurai

 ஆமாம், கல்லூரியில் படிக்கும் மாணவிகள்  பட்டப் பகலில் நடந்துபோகும்போது "இந்த வீரன்" அவர்கள் மீது ஆஸிடை ஊற்றிவிட்டு ஓடிவிட்டானாம்!

இந்த வயதில் முகத்தில் முகப்பரு வந்தாலே, அதைப்பற்றி கவலைப்படும் மனநிலையில் உள்ள இளம் பெண்கள் முகத்தில் கொண்டுபோயி எப்படி ஒருவனால் அமிலத்தை ஊற்ற முடியும்?

அப்படி முயலும் ஒருவனை என்ன செய்யணும்?

இந்த வீரன் பெயர் சங்கர நாராயணனாம் !!! பகவான் பேரை வச்சிருக்கார்கள்!!


 


மனநிலை சரியில்லாதவன் என்று சொல்லி "ஜோடிக்கிறார்கள்"!!!

அதனால் என்ன? மனநிலை சரியில்லாதவனாகனாக இருந்தாலும் இவனுகளை எல்லாம் பிடிச்சு வந்து நடுரோட்டில் ஊரே பார்க்கத் தூக்கில் தொங்க விடணும்!

இதுபோல் அப்பாவிப் பெண்கள் மீது ஆஸிட் ஊத்துவது போன்ற ஈனத்தனமான செயல் மேலை நாடுகளில் எல்லாம் அதிகம் நடப்பதில்லை! கருணைக்கு "பெயர் போன" இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில்தான் அதிகம் நடக்கிறது.

என்ன பெரிய காரணமா இருக்கும்?

இவரு அவளை லவ் பண்ணி இருப்பாரு. அவ அவரை விரும்பி இருக்க மாட்டா.. இல்லைனா "பிடிக்கலை! வேற ஆளைப் பாரு"னு சொல்லியிருப்பா..உடனே இந்த வீரர் வந்து ஆசிடை வாங்கி வந்து பழி வாங்குறாராம்!

What an IDIOT!!!

**************************************

Tuesday, September 23, 2014

தமிழ்நாட்டில் ஏன் அம்பேத்கார்கள் உருவாகவில்லை?!

காந்தி, என்னதான் நம் தேசத் தந்தையாக இருந்தாலும் அவருக்கு இந்து மதப் பற்று அதிகம். காரணம்? காந்தி ஒரு பார்ப்பணர் இல்லை என்றாலும் ஒரு ஹை க்ளாஸ் இந்து! காந்தியால் நெறைய சாதிக்க முடிந்ததற்கு அது ஒரு முக்கியக் காரணம்!  காந்தி, கீழ் சாதியிலிருந்து வந்தவரில்லை என்பதை நினைவில் கொள்ளுவோம்! சப்போஸ், காந்தியே ஒரு தாழ்த்தப் பட்டவரா பிறந்து இருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவர் போராடி இவ்வளவு உயரத்திற்கு ஒரு பெரிய தலைவராக வந்திருக்க முடியுமா? என்றால்..,,சாண்ஸே இல்லை!  என்பதே கசப்பான உண்மை!

சில உண்மைகளை ஏற்றுக்கொள்ள திறந்த மனது இருக்கிறதா உங்களிடம்?

தொடருங்கள்!

காந்தி, உயர் சாதியில் பிறந்தது அவர் தப்பில்லை! ஆனால் அவர் தாழ்த்தப்பட்டவரா பிறந்து வளர்ந்து இருந்தால் நிச்சயம் இந்துமதப் போதகரா இருந்து இருக்க மாட்டார்! ஏன்? இருந்து இருக்க முடியாது! ஏன்? சக இந்துக்கள், தாழ்த்தப் பட்டவரான தன்னை இழிவு படுத்துவதை தாங்க முடியாமல், இந்து மதத்தை வெறுத்து புத்தமதம் இல்லைனா இஸ்லாம், இல்லைனா க்ரிஷ்டியனாக ஆகி இருப்பார்!

காந்தி மேலே எனக்கு நெறையவே மரியாதை எல்லாம் உண்டு. அஹிம்சை முறையில் போராட்டம் நடத்தலாம் என்று உலகத்துக்கே கற்றுக் கொடுத்தவர் காந்தி! இருந்தாலும் உயர் சாதியில் பிறந்ததால் அவருக்கு நெறையவே அனுகூலங்கள்  இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. காந்தி பொறந்தது குஜராத்! நம்ம தமிழ்நாடு இல்லை! ஒரு வேளை அவர் தமிழ்நாட்டில் பொறந்து இருந்தால்  காந்தியும் வீணாப்போயி இருப்பார்!

அடுத்து நம்ம ஜீனியஸ் அம்பேத்கார் பற்றி பார்ப்போம்! அம்பேத்கார் பிறந்தது மத்யபிரதேஷ்! ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து இவர் இந்த அளவுக்கு படித்து முன்னேறி மேலே வந்திருக்கார்னா, இது எவ்வளவு பெரிய விசயம்னு சாதி வெறிபிடித்து அலையும் தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு நல்லாவே தெரியும்! இச்சாதனையை  உலக அதிசயங்களில் முதல் அதிசயமாக வைக்கணும்! என்னைத் தவறா புரிஞ்சுக்காதீங்க! அதாவது ஜீனியஸ்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தததை நான் பெரிதாகச் சொல்லவில்லை! தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு ஜீனியஸ், போராடி வளர்ந்து  நாடறிய உலகறிய முன்னேறியதை சொல்லுகிறேன்! அவருக்கு எவ்வளவு தன்னம்பிக்கை இருந்து இருக்கணும்?

ஒரு வேளை அம்பேத்கார் தமிழ் நாட்டில் பொறந்து இருந்தால்? 

நெனைக்கவே எனக்கு பயம்மா இருக்கு!  அம்பேத்கார் படித்து மேலே வளரவிடாமல் நம்ம ஊர் உயர்சாதி முட்டாள்களால், சுத்தமாக தடுத்து ஒடுக்கப்பட்டு அழிந்து இருப்பார்! அவர் சிந்தனைகளை, முன்னேற்றத்தை, படிப்பறிவை வளர்க்கவிடாமல் சாதி வெறிபிடித்த தமிழர்களால் அழிக்கப்பட்டு இருப்பார்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அந்தக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த இன்னல்களுக்கு அளவே இல்லை! அம்பேத்காரை மட்டும் விட்டு வைத்து இருப்பார்களா என்ன? மூளையைக் கசக்கி யோசிக்கவும்!

பார்ப்பணர்கள் பலரிடம் எனக்குப் பிடிக்காத விசயம் ஒண்ணு இருக்கு. எதுக்கெடுத்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இன்று கொடுக்கப்படும் ரிசெர்வேஷன் பத்தி மட்டும் வயிறெரியிவார்கள்! நாங்க தீண்டாமையை வளர்த்தோமே ஒழிய, தாழ்த்தப்பட்டவர்களை எந்தவையிலும் "ஃபிசிக்கல் அப்யூஸ்" பண்ணவில்லை என்பார்கள். அதுபோல் "அப்யூஸ்" செய்தவர்களெல்லாம் ஹைக்க்ளாஸ் திராவிட முட்டாள்கள்தான் என்பார்கள். அந்தக் குற்றச்சாட்டு  ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் பார்ப்பணர்கள் என்னைக்காகவது தாழ்த்தப்பட்டவர்களுக்காக, அவர்கள் பட்ட இன்னல்களுக்காக அழுதிருக்காங்களா? அவங்க படுகிற இன்னல்களைப் பத்தி கவலையாவது பட்டு இருக்காங்களா? இல்லை, அவர்களுக்குகாக இரங்கச்சொல்லி இவங்க கடவுளிடம் பூஜை செய்து இருக்காங்களா? அவங்களும் மனிதர்கள்தான், ஏன் அவர்களை நாம் இவ்வளவு கீழ்த்தரமா ட்ரீட் பண்ணுகிறோம்?னு யோசிக்கவாவது செய்தார்களா? அந்த அளவுக்கு பார்ப்பணர்களுக்கு மூளை இருந்ததா? இல்லை திறந்த மனதுதான் இருந்ததா? னு பார்த்தால்... கெடையவே கெடையாது என்றுதான் தோனுது. அதுபோல் நற்சிந்தனை கொண்ட பாரதியையே அக்ரஹாரத்தைவிட்டுத்  தள்ளி வைத்தவர்கள் இவர்கள்! கொஞ்சம்கூட பொது நோக்கில்லாமல் இவங்க முன்னேற்றம், இவங்க கல்வியறிவு, இவங்க மதம், இவங்க கடவுள் நம்பிக்கை இதில்தான் இவர்கள் எப்போதுமே முழு கவனம் செலுத்தினார்கள். தாழ்த்தப் பட்டவர்களையோ, அவர்கள் பட்ட இன்னல்களையோ பற்றி இவங்க ஒருபோதிலும் கவலைப்பட்டதே இல்லை! வடிகட்டின சுயநலம்!

பெரியார்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்காக ரொம்ப வரிந்துகட்டிக்கொண்டு வந்து அவர்களை இழிவுபடுத்திய  "ஹை க்ளாஸ்" திராவிட முட்டாள்களை கண்டித்தாரா என்பது தெரியவில்லை!

அம்பேத்கார்கள் நம் தமிழ்நாட்டில் உருவாகி இருக்க முடியுமா? னு யோசித்தால் ... நிச்சயமாக அந்த காலகட்டத்தில் உருவாக முடியாத ஒரு சூழல்தான் இருந்ததுனுதான் தோனுது. நிச்சயம் அம்பேத்கார் போன்ற ஜீனியஸ்கள் தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து, உலகறியாமலே வளர்ந்து,  வாழ்ந்து பிறகு நாமறியாமலே மறைந்தும்தான் இருப்பார்கள். அவர்கள் அம்பேத்கார்போல் மேல் வந்து பெரிய ஆளாகததற்கு காரணம்?  தாழ்த்தப்பட்டவர்களை நசுக்கிய நம் உயர்சாதி தமிழர்களந்தான் நிச்சயம் இதில்  பெரிய பங்குபெறுவார்கள்! தீண்டாமையை கண்டுபிடித்து, கடைபிடித்து, வளர்த்த பார்ப்பணர்களும் இவ்விசயத்தில் "இண்ணொசண்ட்" எல்லாம் கெடையாது.

ரொம்ப யோசித்தால், அறியாமைதான் (நம்ம முட்டாள்களா இருந்து இருக்கோம்) எல்லாவற்றிற்கும் காரணம்னு பொத்தாம் பொதுவாக சொல்லிட்டுப் போகலாம்! இல்லைனா இருக்கவே இருக்காரு நம்ம கடவுள். ஆமா, அவர் என்னத்த கிழிச்சாரு தாழ்த்தப்பட்டவர்களை இந்த முட்டாள்கள் சீரழிக்கும்போது?

குறிப்பு: அம்பேத்கார் திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை! அந்த திரைப்படத்தைப் பத்தி யோசிக்கும்போது வந்த சிந்தனைகளின் தொகுப்புதான் இது!

பின்குறிப்பு: இது ஒரு காலத்தில் எழுதிய பதிவு. ஆமாம் மீள் பதிவு இது! அதனால் காரசாரமாக இருக்கும்! பயந்துடாதீங்க! :)

Friday, September 19, 2014

நண்பர்களை அழைக்க முடியவில்லை!

அவர்கள் மேல் கோபமில்லை
எள்ளளவு வருத்தமும் இல்லை
அவர்களைப் பழிவாங்கவும் இல்லை
கடவுளைச் சந்திக்கப் போகும் அவசரத்தில்
ஆருயிர் நண்பர்களை அழைக்க இயலவில்லை
எனது இறுதி சடங்கிற்கு!


புகைப்படம் இணையத்தில் திருடியது


இது ஒரு "மீள் கவிதை" தான்!

அப்புறம் அழுதுடாதீங்க! நான் உயிரோடதான் கிழங்குமாதிரி இருக்கேன்!  சும்மா ஒரு கவிதைமாதிரி..ஆமா, ஆமா, இழவுக்கவிதைதான்! :-)

Wednesday, September 17, 2014

விருது கொடுக்க தகுதிகொடுத்த தோழி மைதிலி!

"versatile blogger award" பெற்ற தோழி மைதிலி, விருது வாங்குவதைவிட கொடுப்பதில்தான் இன்பம் அதிகம் என்பதை உணர்ந்து, தான் பெற்ற  விருதை, இன்னும்  பத்துப் பதிவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த பத்துப் பதிவர்களும் பல வகைனு சொல்லலாம். அதில் நானும் ஒரு வகை! என்ன வகைனு பதிவர்களான உங்களுக்குத்தான் தெரியும். :)

உலகில் எதுவுமே "ஃப்ரீ" கெடையாது. இந்த விருதும்தான். விருதைக் கொடுத்த கையோடு எனக்கு இப்போ ஒரு வேலையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நானும் ஒரு  நல்ல பத்துப் பதிவர்களுக்கு இந்த விருதைக் கொடுக்கணும் என்று வேண்டப்பட்டுள்ளது. என்ன என்ன? நீயா? அவார்ட் கொடுக்கப் போறியா? சும்மா இருங்கப்பா!னு நீங்க மனதுக்குள்ளேயே பேசுவது புரிகிறது.

சரி, என்னைப்போல் ஆட்களுக்கெல்லாம் விருது கொடுக்கும் தகுதி இல்லைனு வச்சுக்கிட்டு  ஒரு சாதாரண பதிவுலக வாசகனாக பத்து நல்ல பதிவர்களை செலக்ட் செய்து இவ்விருது பெற தகுதி பெற்றவர்கள் என்று உலகிற்கு பரிந்துரைக்கலாம்னு வச்சுக்குவோமா?


பரிந்துரை



ஆயிரக்கணக்கான பதிவர்கள் எழுதும் தமிழ்ப் பதிவுலகில் ஒரு பத்துப்  பேரை மட்டும் செலக்ட் செய்வது ரொம்ப கஷ்டம்தான். இருந்தாலும் முயல்கிறேன்.

நல்ல நண்பர்கள், பல ஆண்டுகளாக எழுதுபவர்கள், மிக உயர்தரத்தில் எழுதுவதால் பரிந்துரைக்க வேண்டிய அவசியமே இல்லாதவர்கள், "தகுதியே இல்லாத வருண்  என்ன என்னைப் பரிந்துரைப்பது?" னு எண்ணும் சில பதிவர்கள் ..போன்றவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு பத்துப் பதிவர்களை பரிந்துரைப்போமா?

நிற்க!

நான் பரித்துரைப்பவர்களுடன் எனக்கு கருத்து வேறுபாடுகளும் நிறையவே உண்டு! அவர்களுக்கு என் எழுத்துப் பிடிக்கணும்னும் அவசியமும் இல்லை!  நமக்குப் பிடித்தவர்களுக்கு நம் எழுத்துப் பிடிக்கணும்னும் ஒண்ணும் இல்லையே?! ஒரு சாதாரண பதிவனாக நான் படித்த பதிவுகளில் இருந்து நான் அறிந்த இவர்களை பரிதுரைக்கிறேன். அவ்ளோதான்.

சரி தொடருங்கள்..

* ஜி எம் பாலசுப்பிரமணியன் அவர்கள் தனது 74 வயதில் பதிவுலகில்  தன் கருத்துக்களை மிகுந்த ஈடுபாடுடன் பகிர்ந்து கொள்கிறார். என்ன வயதாக இருந்தாலும் ஒருவர் பதிவராக பதிவுலகில் நுழைந்துவிட்டால் அறியாத பலருடன் வாதம், விவாதம், கருத்து வேறுபாடெல்லாம் வராமல் இருக்காது. அப்படி இவர் தளத்திலும் இவர் கருத்துக்கு எதிர் கருத்து, விவாதம்னு வரத்தான் செய்யுது. அதையும் சமாளித்து மிகுந்த ஈடுபாடுடன் தொடர்ந்து அதிக நேரம் செலவழித்து எழுதுகிறார். இவரை இந்த விருதுக்குத் தகுதியானவர் என்று  பரிந்துரைக்கிறேன்.

* சமீபத்தில் எழுத ஆரம்பித்த சாமானியன் சாம் அவர்கள்!  ஃப்ரான்சில் இருந்து எழுதுகிறார். நல்ல எழுத்து. அனைத்தும் "அரசியல் கலக்காத" இதயத்தில் இருந்து வரும் கருத்துக்கள். நல்ல நடையுடன் அவர் அனுபவங்களை அழகாகப் பகிர்ந்து கொள்ளுகிறார்.

* உஷா அன்பரசு! ஏற்கனவே பல பத்திரிக்கைகளில் இவர் கதைகள் வெளிவந்துள்ளன. அதனால் நான் பரித்துரைத்து இவர் தரத்தை இன்னும் மேலே உயர்த்துவது கஷ்டம்தான்.  ஆறுமாதகாலமாக  சொந்த வேலைகள் காரணமாகவோ என்னவோ காணாமல்ப்போன இவரை இப்படி ஒரு பரிந்துரை செய்து பதிவுலகை ஞாபகப்படுத்தலாமே என்று ஒரு சின்ன ஆசை..இவரின் சிறப்பு என்னனா, இவர் ஒரு ஆத்திக நம்பிக்கை உள்ளவர், இவர் கணவர், அப்படி இல்லை என்கிறார். அப்படி ஒரு சூழலில் இவர் இருப்பதால், இவர் கருத்துக்கள் நாத்திக ஆத்திக இருபக்கங்களையும் புரிந்து ஒரு "பாலண்ஸ்டா"க இருப்பது போலிருக்கும். இதெல்லாம் எல்லாராலும் முடியாது!

* சின்ன சின்ன சிதறல்கள் அகிலா! இவரைப் பதிவுலகில் ஒரு தலை சிறந்த பெண்ணியவாதினுகூட  சொல்லலாம். ஆண்களை, அவர்களின் அருவருப்பான பகுதியையும் சேர்த்து  நல்லாவே புரிந்து வைத்துள்ளார். புரிந்து வைத்தால் மட்டும் போதுமா? போதாது! அப்பப்போ ஆண்களின் முகத்திரையை கிழித்து, "உள்ளே இருக்கது யாருனு பாரு!" னு சொல்வது போலிருக்கும் அகிலாவின் எழுத்து. எத்தனை பேருக்கு வரும் இந்தத் துணிவு ?

* கெளசல்யா ராஜ்: பல ஆண்டுகளாக தன் மனதோடு மட்டும் தளத்தில் தன் கருத்துக்களை தைரியமாகவும், தெளிவாகவும் பகிர்ந்துகொள்ளுவார். பொதுவாக நம் கலாச்சாரத்தில் இருந்து வரும் பெண்கள் தனக்குத் தோன்றும் அருமையான கருத்துக்களை அளவுக்கு அதிகமாகவே "சென்சார்" செய்துவிட்டு, மேலோட்டமாக அக்கருத்தை சொல்லாமல் சொல்வதுதான்னு இயல்பு. இதனால் பெண்களின் உள்ளுணர்வுகள் பெண்களால் சொல்லப்படாமல், பெண்களைப் புரிந்து கொண்டதாக நம்பும், நடிக்கும் ஆண் மேதாவிகள்தான் "பெண் மனம்" "பெண்ணியம்" பற்றியெல்லாம் பேசுகிறார்கள். பல ஆண்கள் பெண்ணியம் பேசுவது "பெரிய மனுஷன்" என்கிற பட்டம் பெறுவதற்காகவும்,  இவர்கள் தரத்தை "உயர் தரமாக" ஆக்கிக்கொள்ளச் செய்யும் கீழ்த்தரமான அரசியல். இவர்கள்  கருத்துக்கள் பல நேரங்களில் உள்ளப்பூர்வமாக வருவதில்லை. பெண்கள்,  பெண்ணியம் பேசும்போதுதான உள்ளப்பூர்வமான உண்மையான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பது என் எண்ணம்..ஒரு வேளை ஜீன்ஸ் போட்ட பெண்கள்தான் பெண்ணியம் எல்லாம் பேசவாங்கனு தவறான எண்ணத்தில் நீங்க இருந்தா திருமதி ராஜ் பதிவுகளைப் படிச்சுப் பாருங்க!

* முகுந்த் அம்மா: பொதுவாக அதிகமாகப் படித்தவர்கள் தன் படிப்புக்கு ஒத்தவர்களிடம் தான் தன் கருத்துக்களை முக்கியமாக ஆங்கிலத்தில் பரிமாறிக் கொள்வார்கள். "தமிழ் என் தாய்மொழி" என்று சொல்வதற்கு மட்டும்தான் தமிழ்!! பதிவர் முகுந்த் அம்மா  இதில் விதிவிலக்கு. உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். ஆகையால் இவர் பதிவில் சொல்லும் கருத்துக்கள் "அறிவியல் பூர்வமாக" இருக்கும். தன் அனுபவத்தையும், முக்கியமாக வாழ்க்கையில் நடந்த சில சோகங்களையும், இவர் நேரம் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்ளுகிறார். இவர் ஒரு தனித்துவமான பதிவர் என்பது என் தாழ்மையான கருத்து.

*விசுAWESOMEஇவ்வளவு நாள் எங்கே இருந்தாருனு தெரியலை. நல்ல வேளை பதிவுலகம் பத்தி இவருக்கு யாரோ எடுத்துச் சொல்லி அழச்சுட்டு வந்தாங்க. அதோட தமிழ் மணத்திலும் இவரை சேர்த்துக்கொண்டார்கள்! பதிவெழுதுவது  ஒரு கஷ்டமான வேலை! யாருக்கு? என்னைப்போல் சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு, மற்றும் தன் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளத் தெரியாதவர்களுக்குத்தான் அந்தப் பிரச்சினை!  நிச்சயம் நம்ம விசு போன்ற  பதிவர்களுக்கு அப்பிரச்சினை கெடையாது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வாழும் ஒரு சீனியர் தமிழர் இவர். தன்னுடைய எல்லாவிதமான அனுபவங்களையும் அவருடைய பாணியில் என்னமா எழுதுறாரு!!! இவருக்கு மட்டும் ஒரு அஞ்சாறு "versatile blogger award" விருது நானே கொடுக்கலாம்! :) Because he is the real "versatile blogger'! Literally he matches the qualifications too! :)

 * நண்பர் கிரி, நான் பதிவுலகம் வருமுன்பே கிரி ப்ளாக் ல எழுதிக்கொண்டு இருக்கிறார். பதிவுலகில் கொடிகட்டிப் பறந்த பழைய பதிவர்கள் பலர் கடையை அடைத்துவிட்டு போயிட்டாங்க! நண்பர்கள் கிரி, கோவி போன்ற பதிவர்கள் இன்னும் பதிவுலகை மறக்காமல், காலவெள்ளத்தில் காணாமல்ப் போகாமல் இன்னும்  தம்மால் முடிந்தவரை பதிவெழுதிக்கொண்டு இருக்காங்க. கிரி, தன்னை ஒரு ரஜினி ரசிகர்னு தயங்காமல் சொல்கிற பதிவர்களில் ஒருவர். சினிமா மட்டுமன்றி, கணிணி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றியும். அதற்கு தீர்வு என்ன? என்றும் எழுதுவார். தன் வாழ்க்கை பற்றிய அனுபவம்னு பல விசயங்களை ஆடம்பரப்படுத்தாமல் தன்மையாகப் பகிர்ந்துகொள்ளுவார். கிரி ப்ளாக் "ப்ளாக்ஸ்பாட்" இருந்து மாறிய பிறகு இவர் தளத்தில் பின்னூட்டமிட சில பிரச்சினைகள் வருவதால் என்னால் பல கருத்துக்களை அவரிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை! இருந்தாலும், தொடர்கிறேன் என்று சொல்லாமல் நான் தொடரும் தளம் இவர் தளம். பதிவுலகில் இன்னும் நெறையா எழுதச் சொல்லி இவரை ஊக்குவிக்க, இவருக்கு இந்த விருதை நான் பரிந்துரைக்கிறேன்.

* காலம் தளத்தில் எழுதும் நண்பர், கோவி கண்ணன்  இவரும், நான் எழுத ஆரம்பிப்பதற்கு  பல ஆண்டுகள்  முன்பே எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு மூத்த பதிவர். முகநூல் ட்விட்டர் என்று காலம் மாறிக்கொண்டு போனாலும், இவர் காலம் (இவர் தளம்) எப்போதுமே நிகழ்காலம்தான். பதிவுலகை இன்றும் என்றும் மறக்காமல் இன்னும் தொடர்ந்து பதிவுலகில் எழுதிக்கொண்டு இருக்கிறார். நான் எழுத ஆரம்பித்து நெறைய பதிவுகள் எழுதிக்கொண்டு இருந்த காலகட்டத்தில்,     நான் எழுதிய அதே கருத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே கோவி சொல்லியிருக்கிறார் என்று அவர் பதிவின் தொடுப்பைப் பின்னூட்டத்தில் கொடுப்பார். இதுபோல் என்னுடைய பல பதிவுகளில் உள்ள சாரம்  எனக்கு முன்னாலேயே என் அலை வரிசையில் சிந்தித்து எழுதியவர் அவர் என்பதால் என்னுடைய "முன்னோடி"னு கூட "கோவி"யைச் சொல்லலாம். இருந்தபோதிலும் எங்களுக்குள் கருத்து வேறுபாடு, எதிர்ப் பதிவு தாக்குதல் போன்றவையும் நெறையவே இருந்தும் இருக்கிறது .  தமிழ்மணம், சினிமாப் பகுதியை தமிழ்மணத்திலிருந்து தனியாகப் பிரிக்கும்போது, அதற்கு சரியான பெயர் சூட்ட "திரைமணம்" என்கிற பெயரை தேர்ந்தெடுத்து பரிந்துரைத்தவர் கோவி என்பது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. காலம் மாறிக்கொண்டு போனாலும்  அவர் "காலம்" எப்பொழுதுமே மாறுவது இல்லை! கோவியையும் பதிவுலகில் இன்னும் நெறையா எழுதச் சொல்லி  ஊக்குவிக்க,  இவருக்கு இந்த விருதை நான் பரிந்துரைக்கிறேன்.

* கடைசியாக ஈழப் பதிவர் வியாசன், சமீபத்தில் பதிவுலகில் தமிழகத் தமிழர்களையும், இந்தியாவையும் நன்றாகவே விமர்சிக்கிறார் வியாசன். இவருடைய  பதிவுகளால் ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் உள்ள புரிதல்கள், மற்றும் புரியாமை எந்த ஒரு நிலையில் இருக்கிறது என்பது தெளிவுபடுகிறது. எனக்குத் தெரிய தமிழ்நாட்டுத் தமிழர்களை இவ்வளவு உரிமையுடன் எந்த ஈழத்தமிழரும் தொடர்ந்து விமர்சிச்சதில்லை! அப்பெருமை நம்ம நாம் தமிழர் சீமான் அண்ணனின் உடன்பிறவா சகோதரன் வியாசனுக்கே சேரும். இவர் தொடர்ந்து தமிழகத் தமிழர்களின் கையாலாகாததனத்தை விமர்சிக்கணும்னு சொல்லி இவரை ஊக்குவிக்க, வியாசன் அண்ணாச்சிக்கு நான் இவ்விருதை பரிந்துரைக்கிறேன். :)

****************************


விருது கொடுக்கிறேன்னு கொடுத்துட்டு அதோட சேர்த்து இவ்வளவு வேலைகளையும் கொடுத்து  இப்பதிவை எழுதச் செய்த மைதிலிக்கு நன்றி, நன்றி நன்றி! :)))



அப்புறம் இன்னொன்னு, நான் பரிந்துரை செய்த பதிவர்கள் யாரும் தொடர்ந்து இன்னும் பத்துப் பேரை பரிந்துரை செய்ய வேண்டியதில்லை என்கிற மகிழ்ச்சியான செய்தியை சொல்லி முடிக்கிறேன். ஏன் என்றால் ஏற்கனெவே 10 விருது,  நூறாகி, நூறு ஆயிரமாகி, ஆயிரம் பத்தாயிரமாகி நிற்கிறது ..அதனால்  இந்த விருதை திரும்பத் திரும்ப ஒரே பதிவருக்கு கொடுக்கும் சூழ்நிலையில் வந்து நிற்கிறது.  இதை சரி செய்ய ஒரு சின்ன முயற்சிதான் இது. யான் பெற்ற இன்பம் இப்பதிவுலகம் ஏற்கனவே பெற்று விட்டது என்பதால்தான் இந்த பொது நலம்! :)

Tuesday, September 9, 2014

வருணின் சுமாரான உளறல்கள் (4)

பொதுவாக அமெரிக்காவில் வந்து வாழும் இந்தியர்கள் எல்லாம் நன்றாகப் படித்து இங்கே வருபவர்கள்தாம். அதனால் நல்ல பொருளாதார சூழலில் உள்ள இவர்கள்  தன் குழந்தைகளுக்கு படிப்பறிவை ஊட்டி ஊட்டி அவர்களை பெரிய டாக்டராக்கணும்தான் முயல்கிறார்கள். அதேபோல் முயன்று மெடிக்கல் ஸ்கூலில்  இந்தியர்களும் ஓரளவுக்கு கனிசமான அளவு இருக்காங்கனுதான் சொல்லணும். அப்படியே தம் பிள்ளை எவ்வளவு ஊட்டியும் சுமாராகத்தான் படித்தால் இந்தியாவிற்கு அனுப்பி என் ஆர் ஐ கோட்டாவில் டாக்டராக்கனும்னு நிக்கிறாங்க.

நிற்க!

அமெரிக்காவில் உள்ள இந்தியக் குழந்தைகள் எல்லாமே டாக்டராகிவிடுவார்கள்னு பொத்தாம் பொதுவாக அமெரிக்கர்கள்கூட சொல்வார்கள். ஆனால் எந்த ஒரு சமூகத்திலும் எல்லாக் குழந்தைகளும் அறிவாளியாக பிறப்பதில்லை! There is a spectrum of children with different mental and physical abilities! அமெரிக்காவில் பிறந்த குறையுள்ள, மூளை வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தைகளைப் பெற்ற இந்தியத்  தாய் தந்தையரும் இருக்கத்தான் செய்றாங்க!

இந்த ஒரு துரதிஷ்ட பெற்றோர்களை கவனிப்போம்





அப்படி ஒரு குழந்தை பிறந்துவிட்டால்? பிறந்து விட்டது! என்ன செய்யணும்? என்ன செய்வோம்?

 அதுபோல் ஒரு பிரச்சினையை எப்படி சமாளிப்பதென்று பிள்ளைகளை டாக்டராக்கி விடணும் என்கிற ஒரே சிந்தனைக்கு மட்டும் பழக்கப் படுத்தப் பட்ட பல இந்தியர்களுக்கு தெரிவதில்லை! அந்தளவுக்கு இதுபோல் பெரிய பிரச்சினைகளை சமாளிக்க மனப்பக்குவம் பலருக்கு இருப்பதில்லை!

நம்ம ஊரில் திக்குவாய் உள்ளவங்களை, மாறுகண் உள்ளவங்களையும், கொஞ்சம் உடல் ஊனமுற்றவர்களையும்கூட சக மனிதனாக கருதாமல், அவர்களை இரக்கமே இல்லாமல் கேலிப்பொருளாக வைத்து "காமெடி" என்கிற பேரில் இகழ்வதைப் பார்க்கலாம்!  குறையுள்ளவர்கள் மனம் புண்படாமல் எப்படி நடப்பது என்று புரியாத இதுபோல் அறியாமையில்  மூழ்கி உள்ளதுதான் நமது சமுதாயம்!

அப்படி ஒரு சமுதாயத்தில் வளர்ந்த ஒரு பொற்றோருக்கு இதுபோல்  மூளை வளர்ச்சியில்லாத ஒரு குழந்தை பிறந்தால் அப்பிரச்சினையை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் குழப்பத்தில் மனநோய் உண்டாகி விடுகிறது.

நேற்று ஏதோ படித்துக்கொண்டிருக்கும்போது, சுனீத் தவான் மற்றும் பல்லவி தவான் என்கிற இந்தியர்கள் டெக்ஸாஸ் மாநிலத்தில் டாலஸ்ல  தற்கொலை செய்து இறந்துவிட்டதாக செய்தி.

காரணம்?

மன வளர்ச்சியில்லாத ஒரு குழந்தையை பெற்றவர்கள் இவர்கள். அந்தக்குழந்தை கடந்த ஜனவரியில் இறந்துவிட்டது.


murder of her 10-year-old son.


Frisco police Jan. 29 found the body of Arnav Dhawan in his home, lying with a bathtub packed with ice; in court testimony, detectives have stated the decomposition of the body indicates Arnav may have been dead for several days before he was found. Arnav’s mother, Pallavi Dhawan, was questioned and immediately taken into custody when she allegedly nodded “yes” as police asked her if she had killed her son.

Dhawan was held on $50,000 bail until a medical examiner’s report determined that the cause of Arnav’s death was inconclusive. Dhawan still remains a suspect in the case and has not been allowed to go to India to perform the last rites for her son during the Navratri season, an auspicious time to pray for those who have died in unknown circumstances.
Following a 90-minute examining trial Aug. 19, in which Collin County, Texas Justice of the Peace Paul Raleeh ruled there was probable cause for the investigation to continue, Frisco Deputy Chief of Police David Shilson told India-West definitively that Pallavi Dhawan was responsible for the death of her son.
“I can assure you we will be presenting a case to the district attorney which will implicate Mrs. Dhawan of murder,” stated Shilson.
“Our hope is to wrap this up as soon as we can, and present the case to the DA,” he said.
At the examining trial, Frisco detective Wade Hornsby – one of the first responders to the scene – testified that Arnav Dhawan was likely smothered, refuting the Dhawans’ claim that their son had died of a prolonged seizure.
Arnav Dhawan was a special-needs child; since birth, the boy had suffered from a rare neurological disease known as microcephaly – a small head size which leads to incomplete brain development.
But Shilson said there was ample evidence that Dhawan murdered her child and noted inconsistencies in her statements, along with erratic behavior on the evening police found Arnav’s body in the bathtub.
“She indicated she was going to pick up her son at Kumon, but then disappeared and checked into a hotel for a while. It was all very odd,” he said.
There is also physical and digital evidence that must still be examined, said Shilson.
A medical examiner, surveying the badly decomposed body, summated that the little boy had likely died of natural diseases. The report, however, left the cause of death as unknown, noting: “Unusual circumstances cannot be ignored, thus raising the possibility of an unnatural cause of death.” Shilson said the report does not absolve Pallavi Dhawan of murdering her son.
Dhawan and her husband Sumeet Dhawan, along with their attorney David Finn, have criticized Frisco police for an inordinately length of time in completing the investigation of Arnav’s death.
But Shilson said the delay was due to Pallavi Dhawan herself, who has allegedly refused to cooperate with investigators.
In court last week, Hornsby said Pallavi Dhawan was depressed and even suicidal. He had interviewed Dhawan’s husband, Sumeet, at the scene of the incident. Sumeet Dhawan, who was travelling on business at the time of his son’s death, initially described his wife as having a bad temper. Dhawan also told police that his wife was "depressed," "paranoid" and "losing it.” He allegedly said the two were struggling with marital difficulties.
Hornsby reported that police had previously been to the Dhawans’ home, after Sumeet Dhawan called to say his wife was throwing things at him.
Sumeet Dhawan has since denied any possibility that his wife may have killed their child and has stood by her through the prolonged ordeal. He is not a suspect in the case, according to Shilson.
There was no evidence of forced entry to the Dhawans’ home, the deputy chief told India-West, ruling out possibilities of a botched burglary or kidnapping. Nobody else lived in the home besides Pallavi, Sumeet and Arnav.
Collin County First District Attorney Bill Bobiyanski told India-West the case has not yet been presented to the DA’s office. Asked if the DA’s office was negotiating with police to end their investigation and present their case, Bobiyanski said no.
“We are always supportive of a full, fair and complete investigation, in the interest of justice,” he said.
Dhawan’s attorney David Finn had called for the examining trial. In an interview with India-West before the trial, Finn said he hoped the examining trial would reveal new information about Arnav’s death, and effectively end the investigation.
“So much has changed since Pallavi’s arrest that there is no need to move this case forward,” claiming that the medical examiner’s report absolved Dhawan in the death of her son.

 http://www.indiawest.com/news/global_indian/police-enough-evidence-to-charge-mom-with-murder-of-son/article_e9c4bb1a-2c37-11e4-8d75-0019bb2963f4.html

குழந்தை  எப்படி இறந்தது என்று தெரியவில்லை! இங்கேதான் அமெரிக்காவில் நீங்க  கவனமாக இருக்கணும். சில சமயங்களில் உடனே மெடிக்கல் ரிப்போர்ட் படி, குழந்தை எப்படி இறந்ததென்று பார்த்து, உங்களையே குற்றம் சொல்லும் "சட்டம்"!

இந்தியாவில் இதுபோல் சூழலில் உங்கள் படிப்பு, தரம், பணபலம், அரசியல் செல்வாக்கு போன்றவற்றை வைத்து எளிதில் தப்பி விடலாம் (நீங்க குற்றம் செய்தவராக இருந்தாலும்) ஆனால் இங்கே அவ்வளவு எளிதல்ல!

உண்மையில்  இங்கே நடந்தது என்னவென்று எனக்குத் தெரியாது. அக்குழந்தையின் தாய் பல்லவி தவான்தான் குழந்தையை கொன்றுவிட்டதாக "சட்டம்" கையைக் காட்ட! அதன் விளைவால் மனம் உடைந்த இத்தம்பதிகள் தங்கள் முடிவைத் தேடிக்கொண்டார்கள்.



DALLAS (AP) — Authorities confirmed Thursday that the bodies of a man and woman found at a suburban Dallas home are those of the parents of a 10-year-old boy found dead in a bathtub at the house in January — a death for which the mother was charged with murder.
The Collin County medical examiner confirmed that the bodies found Wednesday are those of Sumeet Dhawan, 43, and Pallavi Dhawan, 39, Frisco police said in a statement.
Pallavi Dhawan had been free on $50,000 bond after Frisco police charged her with murder in the death of the Dhawans' son, Arnav. A medical examiner's report had said a natural cause was the most likely cause of the child's death. However, police had said Pallavi Dhawan had confessed to killing the boy — something the family's attorney, David Finn of Dallas, has strenuously denied.
Officers had found Pallavi Dhawan's body in the family's backyard pool and Sumeet Dhawan's body in the house. Police are not saying how they died, and Finn said he had not been told if any marks were found on their bodies.
Assistant Police Chief Darren Stevens said the department has been in contact with the extended Dhawan family "and are doing everything possible to keep them informed over the course of this investigation."
Officers had found Arnav's body on Jan. 29 while making a welfare check at the house. He was wrapped in a cloth up to the neck, and there were empty plastic bags in the tub next to him. A police affidavit says Sumeet Dhawan told investigators that his wife was having mental health issues and that they had been having marital problems.
 Since Pallavi Dhawan's release on bond, Finn had expressed impatience with the police handling of their investigation in light of the medical examiner's findings.
Finn has said that Arnav was a special-needs child, born with a brain cyst and microcephaly, a condition characterized by an abnormally small head, which could have factored in his death.
On Thursday, however, Finn acknowledged: "I'm not sure that we'll ever know what happened."
Finn said he had been in contact with Sumeet Dhawan's relatives, who hope to send the bodies back to India for cremation in accordance with Hindu tradition. It's not clear if the bodies are in a condition suitable for the trip. If they aren't, "they'll be cremated and the ashes sent back to India," Finn said.
 http://www.chron.com/news/texas/article/Bodies-of-man-woman-found-at-home-where-boy-died-5732569.php


ஆக தன் பிள்ளையை டாக்டராக்கணும் என்கிற சிந்தனைக்கே பழக்கப்பட்ட இந்தியர்கள் இதுபோல் ஒரு பாசிபிலிட்டி (குழந்தை பெரிய குறையுடனும் பிறக்கலாம்) இருக்குனு பொதுவாக யோசிக்கத் தவறிவிடுவதால் இவர்களால் இதுபோல் பிரச்சினைகளை சமாளிக்க முடிவதில்லை!





 இவர்களுக்கும் மன நோய் வந்துவிடுகிறது..

அதன்பிறகு எல்லாமே நாசமாகப் போய்விடுகிறது.

I am not suggesting that you should not be optimistic! We should be optimistic! நல்லதே நடக்கும என்றுதான் நினைக்கணும். ஆனால் இதுபோல் ஒரு சூழலுக்கு இயற்கையால் தள்ளப்பட்டால்? அப்படி யாரு வேணா தள்ளப்படலாம்! அப்படி தள்ளப் பட்டால் என்ன செய்வது? அதை எப்படி அனுகுவது? என்பதை இதுபோல் செய்தியைப் படித்தாவது நம்மை தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும்!

"முன் ஜென்மத்தில் செய்த பாவம்!"

"கர்மா"

"கடவுள் சோதிக்கிறார்!"

"இறைவன் இரக்கமில்லாதவன்"

"I dont deserve this! I never harmed anybody! WHY ME???"

என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம்தான்.

ஆனால் இதெல்லாம் பிரச்சினைக்கு தீர்வு தராது. இது ஒரு வாழ்நாள் முழுவதும் சமாளிக்க வேண்டிய பிரச்சினை! இதிலிருந்து நீங்கள் தப்பி ஓட முடியாது. இதை சந்தித்துத்தான் ஆகனும்! சரியா?

இதை நீங்க எப்படி சந்திக்கணும்னு நான் சொல்லப் போவதில்லை! நீங்கதான் உங்க நம்பிக்கைக்கு ஏற்ப உங்க மனதைப் பண்படுத்தி இப்பிரச்சினை அனுகணும்! உங்களை மனநோய் ஆட்கொள்ளாமல் உங்கள் மனதை மனச்சலவை செய்யணும்!

*************************************

Friday, September 5, 2014

நல்ல மகனா? இல்லை நல்ல கணவனா?

“என்னப்பா மாணிக்கம் தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு வரலையா? மதுரைக்கு உன் மனைவி வித்யா வீட்டுக்கு வந்துவிட்டு அப்படியே பாம்பே போயிடுவியா?” என்றாள் அம்மா சத்யா அழுகையுடன்.

“அப்படியெல்லாம் இல்லைம்மா. காரைக்குடிக்கு வர முயற்சிக்கிறேன்” என்றான் மாணிக்கம் வருத்தத்துடன்.

“என்னவோ நீ நல்லா சந்தோஷமா இருக்கனும்ப்பா. அது போதும் அம்மாவுக்கு. நீ தீபாவளி செலவுக்கு அனுப்பிய பணம் கிடச்சதுப்பா” என்றாள் சத்யா.

“சரிம்மா நான் மதுரை வந்து உங்களைக் கூப்பிடுறேன்” என்று ஃபோனை ஹேங் அப் பண்ணினான்.

மாணிக்கத்துக்கு கல்யாணம் ஆகி 6 வருடமாகிவிட்டது. மும்பையில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். நடுத்தர வர்க்கத்தில் பிறந்த அவனை எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு படிக்கவைத்தார்கள் அவனுடைய பெற்றோர்கள்.

அவன் அம்மா சத்யாதான் வித்யாவை அவனுக்கு சரியான மணமகள் என்று தேர்ந்தெடுத்தது. வரதட்சணை எல்லாம் மாணிக்கம் வாங்கவில்லை. அதை அசிங்கமாக நினைப்பவன் தான் அவன். ஆனால் வித்யாவின் பெற்றோர்கள் மகளுக்கு நெறைய நகைபோட்டு கல்யாணம் செய்துவைத்தார்கள். மகளுக்கு நகை போட்டு பெருசா செய்யலைனா அவர்களுக்கு அவமானம் என்று அவர்களா செய்தது அது. அவனைப் பொருத்தமட்டில் அவைகள் அவள் நகைகள். அவளுக்கு அவள் பெற்றோர்கள் கொடுத்தது. மாணிக்கம் அதை தொடப்போவதுகூட இல்லை. அது அவனுக்கு தேவையும் இல்லை. அதை அவர்களுக்கு திருப்பிக்கொடுப்பதிலும் எந்த ஆட்சேபனையும் இல்லை.

கல்யாணம் நடக்குமுன் அவன் மனைவி வித்யாவின் அம்மா, சித்திகள் மற்றும் சொந்தக்காரர்கள் எல்லோருமே அவன் அம்மா சத்யாவிடம் மதிப்பும் மரியாதையுடன் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே அவனுக்கு கொஞ்சம் தள்ளிய சொந்தம்தான். அவன் அம்மா சத்யா மேல் உயிராக இருப்பதுபோல் நடித்தார்கள். ஆனால் மாணிக்கத்துக்கு அப்போவே தெரியும், அவர்கள் அன்பெல்லாம் வெறும் நாடகம் என்று. அவன் நினைத்ததுபோலவே, கல்யாணம் முடிந்த அடுத்த நாளே, எல்லாம் மாறிவிட்டது. மாணிக்கம் என்னவோ இனிமேல் அவர்களுக்குத்தான் சொந்தம் போலவும், அவன் அம்மா சத்யா வேண்டாதவளாக மாறிவிட்டாள். அதை மாணிக்கமே கண் கூடாகப்பார்த்தான். அவன் அம்மாவிடம் வித்யாவின் அம்மா மற்றும் தங்கைகள் பேசுறவிதம், கொடுக்கிற மரியாதை எல்லாமே ஒரே நாளில் மாறியது. இதேபோல் அவர்கள் அவன் அம்மாவை கல்யாணத்திற்கு முன்பு நடத்தி இருந்தால், நிச்சயம் வித்யாவை கல்யாணம் செய்து இருக்க மாட்டான், மாணிக்கம். அவனுக்கு அவன் அம்மா என்றால் உயிர்.

ஆனால் மாணிக்கத்தின் அம்மா அவனிடம் வித்யாவின் ரிலேட்டிவ்ஸ் பற்றி சொல்லி குறைசொல்லும்போது. என்னம்மா இது? உங்களுக்காகத்தான் நான் இவளையே கல்யாணம் செய்தேன்? நீங்கதானே இவளை கல்யாணம் செய்யனும்னு சொன்னது? இப்போ நீங்களே வந்து அழுதால் என்னம்மா அர்த்தம்? என்றான் எரிச்சலுடன். இருந்தாலும் அவனுக்கு புரிந்தது, வித்யா கழுத்தில் தாலி ஏறியதும் வித்யா வீட்டை சேர்ந்தவர்கள் அவன் அம்மாவிடம் திமிருடன் பேசுவது, அலட்சியமாக நடந்து கொள்வது எல்லாமே. ஏதோ இவனை மட்டும் மஹாராஜன் போல் நடத்திவிட்டு அவன் அம்மாவை மட்டமாக நடத்தினால், இவன் எதையும் கண்டுகொள்ளமாட்டான் என்ற நினைப்பா என்னனு தெரியலை. மாணிக்கத்துக்கு எல்லாமே புரிந்தது. இருந்தும் அவன் பொறுமை யாகத்தான் இருந்தான். அவனால் எதுவும் செய்யவும் முடியவில்லை என்பது உண்மை.

நாலு வருடங்கள் முன்னால் வித்யாவின் தங்கை பிரபா திருமணத்துக்கு கடைசி நிமிடத்தில் தேவையான 6 லட்ச ரூபாய் இவன் அக்கவுண்ட்ல இருந்துதான் போனது. ஆறு லட்ச ரூபாய் வித்யா தங்கை கல்யாணத்திற்கு இவன் கொடுத்தது மாணிக்கத்தின் அம்மா அப்பாவிடம் அவன் சொல்லவில்லை. இதுபோல் பெரிய பணம் கொடுக்கும் விசயத்தை அவன் அம்மாவிடம் இருந்து எப்போதுமே மறைத்ததே இல்லை. ஆனால் இன்று இதைச்சொன்னால் தேவையில்லாத பல குழப்பங்கள் வரும் என்று அவன் அம்மா அப்பாவிடம் சொல்லாமல் விட்டுவிட்டான். கல்யாணம் ஆனபிறகுதான் அவன் இதுபோல் நிறையவே பொய் சொன்னான். உண்மைகளை மறைத்தான். கல்யாணம் ஆன பிறகு அவன் தரம் குறைந்துகொண்டு போவது அவனுக்கே புரிந்தது.

அவன் மனைவி வித்யா ஒண்ணும் பெரிய வேலை எல்லாம் பார்க்கவில்லை. ஆனால் அவளொரு நல்ல மனைவி, மற்றும் நல்ல தாய் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இக்கட்டான நிலைமையில் பண உதவி செய்ததால் இவனுக்கு வித்யா அம்மா அப்பா மற்றும் அவர்கள் சொந்தக்காரர்கள் அனைவரிடம் இருந்து தனி மரியாதை எல்லாமே கிடைத்தது. அவன் கொடுத்த அந்தப்பணம் திரும்பி வரப்போவதில்லை என்றும் தெரியும் அவனுக்கு.

வித்யா மற்றும் அவள் குடும்பத்தினருக்கு மாணிக்கத்தின் அம்மா அப்பா மட்டும் எது செய்தாலும் தப்பு. மாணிக்கத்தின் அம்மா அப்பாவுக்கு இப்போது வயதாகிவிட்டது, முன்புபோல் அவர்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பார்த்தால் வித்யா அம்மாவைவிட ஒரு அரைலூசு உலகத்தில் யாரும் இல்லை. மாணிக்கம் தனக்குள் சிரித்துக்கொள்வான். வரதட்சணை பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும் முட்டாள்கள் பலர் இதுபோல் மருமகனிடம் இருந்து பணத்தையெல்லாம் பெற்று சில மனைவிகள் தன் குடும்பத்தை நடத்துவது எங்கே தெரியப்போகிறது? என்று. இதுபோல் இவனுடைய பல நண்பர்களும் உதவி செய்ததாகவும் அவன் கேள்விப்பட்டான்

மதுரை வந்து இறங்கினார்கள் அவனும், மனைவியும், 4 வயது மகள் ராஜியும். வித்யா அப்பா ராமன் வந்து அவர்களை டாக்ஸி பிடித்து அழைத்து சென்றார். வித்யா வீட்டிற்கு வந்தவுடன் வித்யா தங்கை பிரபா அவர் கணவன் ராஜேஷ் எல்லோரும் அவனை அன்புடன் வரவேற்றார்கள். தீபாவளிக்கு என்ன படம் பார்ப்பது, எப்போ கோயிலுக்கு போவது எங்கே ஷாப்பிங் போவது என்று பலவிதமான ப்ளான்கள்.

வித்யாவுடன் தனியாக பேச நேரம் கிடைத்தது அவனுக்கு.

“வித்யா! நான் தீபாவளிக்கு காலையில் இங்கே சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறி காரைக்குடிக்கு எங்க வீட்டுக்கு போறேன் அம்மா அப்பாவை பார்க்க” என்றான் மாணிக்கம்.

“என்னங்க படத்துக்குப்போக டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு” என்றாள் வித்யா.

“அங்கேயும் இதே படம் ரிலீஸ் ஆகுதாம், என் தங்கச்சி மாப்பிள்ளை சொன்னார். நீ இங்கே பாரு நான் அங்கே பார்த்துக்கிறேன், வித்யா”

“இல்லைங்க தீபாவளி அன்று சேர்ந்து படம் பார்க்காம. அடுத்த நாள்வேணா நீங்க போகலாம் இல்லையா?”

“தீபாவளி அன்று என் அம்மா அப்பாவை பார்க்கனும் வித்யா. என்னைப் பெற்றவர்கள் அவர்கள். உனக்காக அவர்கள் உணர்ச்சிகளை மதிக்காமல் இருக்கமுடியாது! அவர்கள் குறையுள்ள சாதாரண மனுஷ ஜென்மம்தான். ஆனா எனக்கு அவங்க அம்மா அப்பா! இதையெல்லாம் சொன்னாத்தான் புரியுமா? உனக்கு அறிவு இல்லையா?” என்றான் சற்றே கோபமாக.

“உங்க வீட்டில் எனக்கு எதுவும் வசதியா இருக்காது” என்றாள் வித்யா.

“உண்மைதான். ஆனா உன்னை கல்யாணம் பண்ணலைனா நான் இதுவரை சம்பாரித்த பணத்தை வைத்து நல்ல வீடுகட்டி அவர்களை ராஜா ராணி போல என்னால் பார்க்க முடிஞ்சிருக்கும். என் சம்பாத்யம் எல்லாம் நம் ஆடம்பர செலவுக்கே போவதால்தான் அவங்க கஷ்டப்படுறாங்க” என்றான் மாணிக்கம்.

“எனக்கு அங்கே வசதியா இல்லை! பாத்ரூம் கூட ஒழுங்கா இல்லை!” வித்யா கண்ணில் வழக்கம்போல கண்ணீர்.

“நம்ம கல்யாணத்திற்கு முன்பும் இதே பாத்ரூம்தான் இருந்தது. உங்க அம்மா அப்பா இந்த பாத்ரூமைப்பற்றி எந்தக்குறையும் அப்போ சொல்லவில்லை! நீயும் எதுவும் சொன்னதில்லை. உன் தங்கை கல்யாணத்திற்கு நாம் கொடுத்த 6 லட்சத்தை வைத்து இதைவிட பலமடங்கு நல்ல வசதியா எல்லாம் என் வீட்டில் கட்டி இருக்கலாம். அதை இன்றுவரை நான் என் அம்மாவிடம் சொன்னதில்லை” என்றான் மாணிக்கம்.

“நான் வரலை அங்கே. ராஜியும் என்னோடதான் இருக்க ஆசைப்படுவாள்” என்றாள் வித்யா.

“இந்தா பாரு! நீ வரலைனா இங்கே யாரும் அழப்போறதில்லை. வேணும்னா இங்கேயே பர்மணண்ட்டா உங்க அம்மா அப்பாவுடன் இருந்துக்கோ. உன் மகளையும் நீயே வைத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு கோபமாக வெளியே புறப்பட்டான் மாணிக்கம்.

“ஹல்லோ”

“யார்ப்பா மாணிக்கமா? நல்லபடியா மதுரை வந்து சேர்ந்தீங்களா?”

“ஆமாம்மா. எந்த பிரச்சினையும் இல்லை. நான் தீபாவளிக்கு மதியம் வீட்டுக்கு சாப்பிட வர்றேன் ம்மா”

“வித்யாவும், உன் மகள் ராஜியும் கூட வர்றாங்களாப்பா?”

“நான் வர்றேன். அது போதாதா உனக்கு? அவங்க வர்றாங்க இல்லை தொலையுறாங்க. நான் தானே உன் பிள்ளை?” என்றான் மாணிக்கம் எரிச்சலாக

“ஏன்ப்பா இப்படிகோவிச்சுக்கிற?' என்றாள் அம்மா.

“பின்னே என்னம்மா நீங்கதான் இந்த சனியனை என் தலையில் கட்டி வச்சீங்க. இப்போ ஏதோ நான் தப்பு செய்துவிட்டது போல பேசுறீங்க? அவளுக்கும் அறிவே இல்லை. உங்களுக்கும் என் நிலைமை புரியலை. உங்கரெண்டு பேருக்கும் இடையில் மாட்டிக்கிட்டு என் நிம்மதி போச்சு” என்றான்.

“இல்லைப்பா அவங்களும் உன்னோட சேர்ந்து வந்தாத்தானே நல்லா இருக்கும்?”

“ஆமா. ஒண்ணு வேணா பண்ணலாம் அம்மா?”

“என்னப்பா சொல்ற?”

“எனக்கு அவளைவிட நீங்கதான் ரொம்ப முக்கியம். உங்க மேலே ஆணை. ஆனால் அவளோ அவ குடும்பமோ உங்களை என்றுமே மதிக்கப்போவதில்லை. ஏன்னா பொதுவா பெண்களுக்கு அழ மட்டும்தான் தெரியும். தன்னைப்போல் மற்றவர்களை நினைக்கவோ, ஒழுங்கா யோசிக்கவோ தெரியாது! அவளோ, அவ அம்மா அப்பா அப்புறம் அவங்க கூட்டமோ உங்கமேலே உள்ளன்போட இருக்கப்போவதில்லை! நான் அவளை விவாகரத்து பண்ணிடவா? அப்படி பண்ணிட்டா நிச்சயம் எப்போவும் போல் என் இஷ்டப்படி என்ன வேணா செய்யலாம் இல்லையா?”

“ஏன்ப்பா இப்படியெல்லாம் பேசுற? நீ நல்லா சந்தோஷமா இருந்தால்தானே அம்மாவுக்கு சந்தோஷம்?”

“சந்தோஷமாவா? உங்களுக்கோ அவளுக்கோ இது புரியப்போவதில்லை. இதற்கு ஒரு நல்ல முடிவுடன் வருவது கஷ்டம்மா. அவ உங்களை ஒரு போதும் புரிஞ்சுக்கப் போவது இல்லை. உங்களுக்கு அந்த ஏமாற்றப்பட்ட உணர்வு ஒரு போதும் போகப் போவதில்லை”

“அவங்க மாறியதைத்தான் நீயே பார்த்தியேப்பா?'

“நான் இல்லைனு சொல்லம்மா. அவங்க என்னை தாங்கோ தாங்குனு தாங்கிக்கொண்டு உங்களை மதிக்காமல் இருப்பது எனக்கு பிடிக்கும்னு நெனைக்கிறீங்களா? எனக்கு உங்களை மதிக்காத யாரையுமே பிடிக்காது. ஆனால் நான் சொல்வது உங்களுக்கு புரியலை. இதுக்கு நான் சொன்ன ஒரே ஒரு முடிவுதான்”

“நீ உன் மனைவி குழந்தையுடன் சந்தோஷமா இருப்பதுதான் எனக்கு நிம்மதிப்பா. விவாகரத்து செய்தால் நிச்சயம் அம்மா சந்தோஷமா இருக்க மாட்டேன். நான் அவ்வளவு கொடுமைக்காரி இல்லை” அழுகையுடன் வந்தது அவன் அம்மா வார்த்தைகள்.

“நான் சந்தோஷமா இருக்கேனா? ஏதோ இருக்கேன் அம்மா. ஆனால் நீங்க இப்படி அழுதுகொண்டு இருப்பது எனக்கு சந்தோஷமா இல்லை. சரிம்மா தீபாவளிக்கு மதியம் பார்க்கலாம்” என்று முடித்தான் மாணிக்கம்.

இணையத்தில் திருடியது


அங்கே இருந்த பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்தான். அவனுக்கு சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று நல்லாவே தெரியும். அவன் மனைவியும், அவன் அம்மாவும் அவனுக்கு தினமும் ரத்தக்கொதிப்பு கொடுக்கிறார்கள். அவன் தூக்கத்தை தினமும் கெடுக்கிறார்கள். அவன் உடல்நலத்தைக்கெடுக்கும் அவர்களை அவனால் தூக்கி எறியமுடியவில்லையே? பாவம் இந்த சிகரெட் மட்டுமா உடல் நலத்தைக் கெடுக்குது? என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தன்னை சமாதானப் படுத்திக்கொண்டான் மாணிக்கம்.


பின் குறிப்பு: இந்தக் கதை முதல்ப் பதிப்பு பல வருடங்கள் முன்பு வந்த போது வாசித்த வாசகர்களில் பலர் இது ஒரு கற்பனைக் கதைனு நம்ப மாட்டேன் என்றார்கள்! :) 

Wednesday, September 3, 2014

வருணின் சுமாரான உளறல்கள் (3)

என் பதிவுகளை ஆரம்பத்திலிருந்து வாசிப்பவர்களுக்கு நல்லாத் தெரியும், "வருணுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!" என்று.  கடவுளை நம்பலைனா வாழ்க்கையில் அர்த்தம் இல்லை என்னும் மனநிலையில் உள்ளவர்கள் நம்மில் பலர். கடவுள், இவர்கள் வாழ்க்கையில் ஆக்ஸிஜனாக இருக்கிறார். கெட்டது நடந்தால், ஆண்டவன் சோதிக்கிறார். நல்லது நடந்தால் ஆண்டவன் அருள் புரிகிறார்..இதுபோல் இவர்கள் சிந்தனைகள் இருக்கும். இன்னொரு எதிர் வகை என்னனா கடவுள் நம்பிக்கையை எவ்ளோ முயன்றும் இவர்களால் கொண்டுவர முடியாதவர்கள். இதுபோலும்  பலர். ஒருவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா, இல்லாதவரா என்பதை வைத்து அவரை அல்லது அவர் தரத்தை எடைபோடுவது முற்றிலும் தவறான ஒன்று. ஒருவருக்கு நீலம் பிடிக்கிறது இன்னொருவருக்கு பச்சை பிடிக்கிறது அல்லது ஒருவருக்கு ரஜினி பிடிக்கிறது, இன்னொருவருக்கு கமல் பிடிக்கிறது என்பது போல்தான் இதுவும். இதைவைத்து ஒருவர் நல்லவர் கெட்டவர் என்று "நீதி" சொல்ல முயல்வது அபத்தம்.  இருந்தாலும் ஆத்திகன் எல்லாம் "சங்கராச்சார்யா" (அதாங்க  மறைந்த சங்கர் ராமனுக்கு பரிச்சயமான "பெரியவர்") மாதிரி ஆட்கள்தான் என்றும், நாத்திகன் எல்லாம் "ஹிட்லர்" மாதிரி அயோக்கியன்கள் என்றும் அப்பப்போ ஒரு பக்கத்தார் இன்னொரு பக்கத்தாரை கை காட்டுவதையும் பார்க்கலாம்.

கடவுள் நம்பிக்கை, பேய் நம்பிக்கை, மறுபிறவியில் நம்பிக்கை, எதிலுமே நம்பிக்கை இல்லாமைனு இப்படி பலவிதமான நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள்  நம்மோடு வாழும் பலருக்கும் உண்டு. இதெல்லாம் ஒருவருடைய "பர்சனல் பிலீஃப்"தான். இருந்தாலும் ஒருவர் தன்னை ஆத்திகரா இல்லை நாத்திகரா? னு வலையுலகில்கூட ஏதாவது ஒரு வகையில் சொல்லித்தான் விடுகிறார்கள். எதார்த்தமான ஒரு நிகழ்வைச் சொல்லும்போது, கோயிலுக்குப் போனேன் மனதில் நிம்மதி வந்துவிட்டதுனு சொல்லிடுவாங்க. நாத்திகர்கள், அதுபோல் சொல்வதை வலுக்கட்டாயமாகத் தவிர்ப்பார்கள்!

இதுதான் நாம் வாழும்  நம்முலகம்!

இப்போ என் உலகத்தைப் பார்ப்போமா?

எனக்குத் தெரிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு கிருத்தவர். ஆனால் சர்ச்சுக்கு போறாரோ இல்லையோ, யோகா, தியானம் அது இதுனு இறங்கிக்கொண்டு இருக்கிறார். வயதில் ரொம்ப மூத்தவர். வாழ்க்கையில் ரொம்பவே அடி பட்டவர்னு நெனைக்கிறேன். அதனால் தற்போது  ஆன்மீகம் அல்லது ஸ்பிரிச்சுவல் வாழ்க்கையில் நம்பிக்கை உள்ளவர்.

அவருடன் பேசும்போது திரும்பத் திரும்ப அவரிடம் இருந்து வரும் கேள்விகள் அல்லது அதைத் தொடர்ந்து வரும் அறிவுரைகள் என்னனா...

"நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்?"

"நாம் ஏன் பிறந்தோம்?"

What is the purpose of "your life"? 

There must be a reason why we are born!

இதுபோல் கேள்விகளை என்னிடம் கேட்பார். ஏன் என்றால் அவரும் தீவிரமாக இக்கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முயல்கிறார். சீரியஸாகவே யோசனைகள் செய்து முயன்று கொண்டிருக்கிறார்.

சரி அவர், "பர்ப்பஸ் ஆஃப் லைஃப்" என்னனு கண்டுபிடிச்சுக்கட்டும்! நம்மளாலே இதெல்லாம் முடியாது!  Wish you good luck! னு  அவரிடம் சொல்லிட்டு இதிலிருந்து ஒதுங்கி விட முயன்றாலும் என்னை விடமாட்டார்.

நீயும் அதுபோல் யோசிக்கணும், அதற்கு விடை கண்டு பிடிக்கணும் என்பார் கனிவுடன். மறுபடியும்...நாம் இறந்த பிறகு நிச்சயம் ஏதோ நடக்கும்.  சரியா? என்பார். நிச்சயம் நாம் பிறந்ததற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு, அதை நாம் சாகுமுன் புரிந்துகொள்ளணும் என்பார். ஒரே விசயத்தையே வேற வேற விதமாக அனுகி இதே கேள்விகளை ப்லவிதமாகக் கேட்பார். நாம் ஏன் பிறந்தோம்னு புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் வாழ்வது அர்த்தமில்லாதது என்பார். அவர் சும்மா எல்லாம் அப்படி சொல்லவில்லை! இதெற்கெல்லாம் விடை கண்டுபிடிக்க முடியும் என்பது அவர் நம்பிக்கை அது. அதனாலதான் சொல்கிறார்.

எனக்கு அவர் பதில் தேடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் என்னால் அதற்கு பதில் தேடி கண்டுபிடிக்க முடியாது! என்று நன்கு தெரியும். என்னைப்பற்றி எனக்குத் தெரியாதா?

"உடனே முயன்றால் முடியாதது எதுவும் இல்லை" னு சொல்லாதீங்க! அது சும்மா ஒரு பழமொழி, உங்களை மோட்டிவேட் பண்ணுவதற்காக சொல்லப்பட்டது. அவ்ளோதான். அப்சொலூட் மீனிங்னு பார்த்தால் அது உண்மை கெடையாது.

 அதனால், சில் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பது  என்னால் முடியாது என்று நம்புவதால் அதில் நான் அதிக ஆர்வம் காட்ட மாட்டேன். அவர் சொல்வதை எல்லாம் ஏனோதானோனு கேட்டுவிட்டு ஒரு மாதிரி "நாகரிகமாக" த் தட்டிக் கழிப்பேன். என்னைப் பொருத்தவரையில் நான் ஒரு "ப்ராக்டிக்கல் பேர்சன்". என்னால் முடியாத ஒன்றை ஏற்றுக்கொண்டு, தோல்வியை ஒத்துக்கொண்டு, என்னால் முடிந்தவற்றை செய்ய முயல்வேன்.  இதை அவரிடம் பல முறை சொல்லியும் இருக்கிறேன்.

என் மனநிலை புரிந்த அவருக்கு என்னைப் பார்த்தால் அதிசயமாக இருக்கும். இப்படியும் ஒரு ஜடமா?னு அவர் என்னைப் பார்ப்பார். அவரைப்  பார்த்தால் எனக்கு வினோதமாக இருக்கும். என்னைப் பொருத்தவரையில் இவர் கற்பனையில் கண்டுபிடிக்கும் விடையும் தவறானதாகத்தான் இருக்கும் என்கிற என் நம்பிக்கை.

 இருந்தாலும் அடுத்த முறை பார்க்கும்போது இதேபோல் ஒரு வாதம் அவரிடம் நடக்கும். இது ஒரு தொடர்கதை..

*****************

அதைவிட இன்னொரு கொடுமை!  எனக்குத் தெரிய ஒரு வெள்ளைக்கார அம்மா இருக்காங்க. அவர்களுக்கு மறுபிறவி மற்றும் முந்தைய பிறவி வாழ்க்கை என்பதிலெல்லாம் சீரியஸாவே நம்பிக்கை இருக்கு. ஆமா, அமெரிக்காவில் வாழும் வெள்ளையர்தான். ஏதாவது "குறி சொல்பவர்போல்" "சைக்கிக்" ட்ட போயி எதையாவது கேட்டுட்டு வந்து, முன்பிறவியில் இவர்தான் என் அப்பாவாம், தங்கையாம்னு கண்டுபிடிச்சு சீரியஸா சொல்லுவாங்க. சிரிக்காமல் இதையெல்லாம் கேட்பதே படு கஷ்டமாக இருக்கும். அவர் நம்பிக்கையை மதித்து சரி சரினு கேட்டுக்குவேன்.

மறுபடியும் நான் இதையெல்லாம் (மறுபிறவி பற்றி) அசட்டையாக கேட்பதைப் பார்த்து அவருக்கு என் மேல் பரிதாபம் உண்டாகும்! அவர் என்னைப்பார்த்து புன்னகைப்பார். எனக்கு அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கும்!நானும் அவரைப்பார்த்து மறுபுன்னகை செய்வேன்.

*********************

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா.. மனிதர்கள் மற்றும் அவர்கள் நம்பிக்கைகள் பலவிதம்.  ஒருவர் நம்பிக்கையை இன்னொருவர் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல! ஒவ்வொருவர் வளர்க்கப்பட்ட விதம் வேறுபடுவதால அவர்களுடைய "கம்ஃபோர்ட்  சோன்" ம் மாறுபடுகிறது.

பார்ப்பனர்கள் வீட்டில் பொதுவாக ஜீசஸையும் அல்லாவையும் சொல்லி சில நல்ல விசயங்களை அவர்களைக் காட்டி அல்லது அவர்கள் போதித்ததை முன் மாதிரியாகக் காட்டி வளர்ப்பதில்லை! அதேபோல் இஸ்லாமியர்கள், கிருஷ்டியன்ஸ் வீட்டில் ராமர், கிருஷ்ணர் அவதாரங்களை முன் மாதிரியாக எடுக்கச்சொல்லி  சொல்லி வளர்ப்பதில்லை!  ஆக, அவர்கள் எப்படி "ஊட்டப்பட்டு" வளர்க்கப் படுகிறார்களோ அதற்கேற்ப அவர்கள் சிந்தனைகள் இருக்கும். இப்படித்தான் மத வெறியர்களும், நாத்திகர்களும், தீவிரவாதிகளும் நம்மில் உருவாகிறார்கள்.

 It all depends on how you are brainwashed! That's all! ஒரு சிலருக்கு அதிக போதனைகள்  "பேக் ஃபயர்" ஆவதும் உண்டு என்பதையும் மறுக்க முடியாது.

என்னைக்கேட்டால் இதெல்லாம் நம்முடைய ஆறாவது அறிவால் வந்த விணை!

அவ்ளோதான்.

****************************

பொதுவாக எனக்கு சொந்தக்கதை எழுதுவதே பிடிக்காது. என் பிரச்சினை என்னோடுனு உலகிற்கு இதையெல்லாம் சொல்வதில்லை. எனக்கு இப்போ ஒரு கோடி ரூபாய் தேவைனு சொன்னால் யாரு கொண்டு வந்து கொடுக்கப் போறாங்க? :) இல்லை எனக்குத் தலைவலினு சொன்னால் மாத்திரை வாங்கி நாந்தான் சாப்பிடணும்.  மற்றவர்களிடம் நம் பிரச்சினையைச் சொல்லி அவர்களை ஏன் கஷ்டப்படுத்தணும்?னு ஒரு "பெரிய" அல்லது "சின்ன" மனசு!

சரி, இதைமட்டும் சொல்லிக்கிறேன்..

எங்கவீட்டில் தோட்டம் வச்சிருக்கோம்!  மல்லிகை, ரோஜா, தக்காளி, கறிவேப்பிலைனு இப்படி பல செடிகள் உள்ள தோட்டங்கள்!

தயவு செய்து உங்க கற்பனையை இங்கேயே நிறுத்தவும்! :)

உடனே ஏதோ ஏக்கர் ஏக்கரா தோட்டம் போட்டு பூக்களையும் காய்கறிகளையும் வருடா வருடம் அறுவடை செய்றோம்னு தப்பா நெனச்சுடாதீங்க.

சும்மா தொட்டியிலே போடுகிற தோட்டம்தான். பொதுவாக தண்ணீர், தொட்டி, மண்னு வாங்கி இதுக்கு செலவழிக்கிற காசுல 10% கூட திரும்ப வராது. சும்மா ஒரு பொழுதுபோக்கு! அவ்ளோதான்.

இவைகளால் ஒரு பத்து கார்பன் டை ஆக்ஸைட் மூலக்குறுகள் அத்தாவரங்களால் உட்கொள்ளப்பட்டு பொல்லுஷன் குறைந்தால் சரிதான் என்கிற ஒரு பொதுநலம்தான். :)

எங்க தோட்டம் பாருங்க!!!

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தக்காளிக்காய் தெரியுதா?

இது கறிவேப்பிலைச் செடி

ரோஜா மொட்டு மலரப்போது (இது சிவப்பு ரோஜா)


மல்லிகைச் செடியில் சில மல்லிகைகள் புன்னகைக்குதா?


ரோஸ் கலர் ரோஜாவும் தக்காளியும் ஏதோ ரகசியம் பேசுறாங்க

இது மலர்ந்த சிவப்பு  கலர் ரோஜா