Thursday, January 31, 2013

கோடங்கி தளத்தில் நடக்கும் மாயம்!

பதிவர் இக்பால் செல்வன் மட்டுமல்ல எவனாயிருந்தாலும் சரி, பதிவுலக பொழைப்பை ஓட்டுவதற்காக தமிழனை இழிவுபடுத்தி மலையாளியை தடவிவிட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும். சரி, அப்படி ஒரு பதிவு வரும்போது அதை தமிழனாகிய நான் இழிவு படுத்த ஒரே ஒரு வழி அந்தப்பதிவுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கொடுப்பது. அதுபோல் பிடிக்காத பதிவுக்கு மைனஸ் மதிப்பெண் கொடுப்பது ஒவ்வொரு வாசகனின் உரிமை. ஆனால் அந்த உரிமை கோடங்கியில் எனக்கு மறுக்கப்படுகிறது!

இக்பால் செல்வனின் கோடங்கி தளத்தில் தமிழ்மணப்பதிவுப்பட்டையில் நான் கொடுக்கும் மைனஸ் மதிப்பெண் add ஆகமாட்டேன் என்கிறது. இது எனக்கு ரெண்டாவது முறையாக நடக்கிறது! சரி ஏதோ தவறு செய்துவிட்டேனோ என்று மறுபடியும் "மதிப்பிடல்" செய்தால், "நீ ஏற்கனவே ஓட்டு போட்டுட்டா முண்டம்!"னு சொல்லுது! சரி, தமிழ்மண பதிவுப்பட்டை "ஓட்டுரிமையில்" ஏதோ மாற்றம் நடந்து இருக்கலாம், நமக்கு தெரியாமல் இருக்கலாம் என்று அதை "டெஸ்ட்" செய்ய,  அதேபோல் மைனஸ் மதிப்பெண் என் தளத்தில் என் பதிவுக்கு கொடுத்தால் அது சரியாக  add ஆகிறது!!!  இதெப்படி சாத்தியம்?

தமிழ்மணப் பதிவுப்பட்டை எல்லாத்தளங்களிலும் ஒரே மாதிரித்தான் வேலை செய்யணும். அதுதான் ஜனநாயக முறைப்படி சரி. ஒவ்வொரு தளங்களிலும் (கோடங்கியில் ஒரு மாதிரியும் ரிலாக்ஸ் ப்ளீஸில் இன்னொரு மாதிரியும்) வேறு வேறு மாதிரி வேலை செய்வது எப்படி நியாயம்?

மறுபடியும் கேட்கிறேன்! தமிழ்மணப் பதிவுப் பட்டை எல்லாத் தளத்திலும் ஒரே மாதிரித்தானே செயல்படணும்?

யாராவது விளக்கம் கொடுங்க! என் அறியாமையையும், அதனால் வந்த கோபத்தையும் போக்குக! நன்றி!

Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் பாக்ஸ் ஆபிஸ் உண்மை நிலவரம்!

மலேசியா சிங்கப்பூர் மற்றும் மத்தியகிழக்கு இஸ்லாமிய நாடுகளில் விஸ்வரூபம் வெளிவராததால் அங்கிருந்து வழக்கமாக வருகிற வருமானம் பெரிய அளவில் விஸ்வரூபத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளிலும் அங்கே வாழும் இஸ்லாமியர்களும், கமலஹாசனையும் விஸ்வரூபத்தையும் சரியாக புரிந்து கொள்வார்கள் என்று நம்பினாரா கமஹாசன்?? நாத்திகரான கமலஹாசனுக்கு மத நம்பிக்கை, சாதி நம்பிக்கை உள்ளவர்கள் மனப்போக்கு நிச்சயம் புரியவில்லை என்பதே தெளிவாக விளங்குகிறது!

சரி, இஸ்லாமிய நாடுகள் அல்லாத மேலை நாடுகள்.. அமெரிக்கா, கனடா, யு கே போன்ற நாடுகளில் விஸ்வரூபம் கலக்சனை மட்டும் பார்ப்போம்.

* அமெரிக்கா மற்றும் கனடாவில் விஸ்வரூபம் வசூல்!

 U.S.A. BOX-OFFICE


  • RACE 2: In its opening weekend, the film has collected $ 8,84,757 [Rs. 4.77 crores] on 153 screens, with the per screen average working out to $ 5,783.

Note:- The figures mentioned below of *all* films are of *reported screens* only. The totals could be much higher.

  • VISHWAROOPAM [Tamil]: In its opening weekend, the film has collected $ 6,34,912 [Rs. 3.43 crores] on 44 screens, with the per screen average working out to $ 14,430. 
  • VISHWAROOPAM [Telugu]: In its opening weekend, the film has collected $ 1,02,657 [Rs. 55.38 lacs] on 28 screens, with the per screen average working out to $ 3,666.

* யு கே வில் விஸ்வரூபம் வசூல்

U.K. & IRELAND BOX-OFFICE


  • RACE 2: In its opening weekend, the film has collected £ 3,56,258 [Rs. 3.02 crores] on 76 screens, with the per screen average working out to £ 4,688. 
  • VISHWAROOPAM [Tamil]: In its opening weekend, the film has collected £ 95,676 [Rs. 81.23 lacs] on 19 screens, with the per screen average working out to £ 5,036. Includes Thu previews.

இந்தியாவை விட்டுத் தொலைத்துவிட்டு , மேலை நாடுகளில் வசூல் எப்படினு பார்த்தால் தமிழ்ப் படங்களின் முந்தைய சாதனையை விஸ்வரூபம் முறியடித்தது னு சொல்ல முடியாது என்பதே உண்மை நிலவரம் ! 

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் தடை நீக்கம்! கமல் விசிறிகள் கொண்டாட்டம்!

இன்றைய செய்திப்படி சென்னை உயர்நீதி மன்றம் கமலுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லியுள்ளது! நீதிமன்ற தீர்ப்பின் படி விஸ்வரூபம் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை, அதனால் படத்தை திரையிடலாம் என்பது!

தமிழ்நாடு அரசாங்கம் இதை எப்படி செய்லபடுத்தப் போகிறது என்பதை இனிமேல்தான் பார்க்கவேண்டும்!

 இதற்கிடையில் கமல் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்!!!

எப்படி?

யாரென்று தெரிகிறதா?

இவன் தீயென்று புரிகிறதா?

தடைகளை வென்று சரித்திரம் படைத்தவன் 

ஞாபகம் வருகிறதா?

Monday, January 28, 2013

சீமானும், விஸ்வரூபமும், கருத்துச் சுதந்திரமும்!

சமீபத்தில் யாருமே எதிர்பார்க்காதபடி நாம் தமிழர் கச்சியைச் சேர்ந்த சீமான் கமலுடைய கருத்துச் சுதந்திரத்துக்கு வக்காலத்து வாங்காமல் இஸ்லாமியர்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து  அவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதாவது விஸ்வரூபத்தைப் போலவே செல்வமணியின் குற்றப்பத்திரிக்கை என்கிற படமும் சென்ஸார் போர்டையே கடந்து வராமல் தடை செய்யப்பட்டது. அதனால, கருத்துச் சுதந்திரம் என கத்துபவர்களே  இது ஒண்ணும் புதிய விடயம் அல்லனு சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.   கமலஹாசனும் இஸ்லாமிய சகோதரர்களும் உட்கார்ந்து கலந்து பேசி இதை சரி செய்யணும்னு சொல்லியிருக்காரு, இந்தத் தமிழர். இது  பல கமல் விசிறிகளுக்கும் எரிச்சலைக் கிளப்பியுள்ளது. இருந்தாலும் இதைப்பத்தி விமர்சிக்க கமல் விசிறிகள் யாரும் தயாராக இல்லை. இஸ்லாமியர்களை விமர்சிப்பதிலேயே இவர்கள் காலம் தள்ளுகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் இதைப் பத்தி வாயைத் திறந்துபேசிய போதும், கமல் தரப்பும், இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து பேசி படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்று சொல்லி தப்பித்துக் கொண்டார். இதை யாரும் கமலுக்கு இவர் சப்போர்ட் செய்ததாக எடுத்துக்கவில்லை என்பதே உண்மை!

 ரஜினிகாந்த் வாயைத் திறந்தவுடன்தான், அதுவரை பொத்திக்கொண்டு இருந்த  பாரதிராஜா, பார்திபன், அஜீத், அமீர் போன்றவர்கள் இதைப்பற்றி கருத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள்.ஆனால் நம்ம புரச்சித் தமிழன் ச்த்யராஜ் எல்லாம் இன்னும் பொத்திக்கிட்டுதான் இருக்காரு!

இது போதாதுனு நம்ம மருத்துவர் ராமதாஸ் வேற கமலுக்கு முழு ஆதரவாக கருத்துச் சொல்லியிருக்கிறார். இதே ராமதாஸ்தான் பாபா ரிலீஸ் ஆகும்போது கருத்துச் சுதந்திரத்தை மதிக்காதவர், ஏறி மிதித்தவர் னு நினைவில் கொள்க!

இதில், இன்னொரு முக்கியமான அரசியல் என்னனா முதல்வர் ஜெயாவின் நிலைப்பாடு!

அதாவது இஸ்லாமியர்கள் அதிருப்தியை மனதில் கொண்டு, வரப்போகும் கலவரத்தைத் தடுக்க இந்தப்படத்தை 15 நாட்கள் தடை செய்ததாக சொல்லப்பட்டாலும், திரைமறைவில் நடந்த பல பிரச்சினைகள நாம் கவனிக்க வேண்டும்.

* ஜெயா டி வி க்கு விற்கப்பட்ட சாட்டலைட் ரைட்ஸ் ல மாற்றம் நடந்து இருக்கிறது. அதாவது இப்போது விஸ்வரூபம் சாட்டலைட் ரைட்ஸை  விஜய் டிவிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டி ட்டி எச் ரிலீஸ் பிரச்சினையாலும், சன் டி வி டி ட்டி எச் ரிலீஸ்ல ஒரு அங்கம் வகித்ததாலும் ஏற்பட்ட விளைவு இது என்கிறார்கள்.

* சமீபத்தில் கமல் ஹாசன், அமைச்சர் பா சிதம்பரம் நம் பிரதமராகி நமக்கு பெருமை சேர்க்கணும் என்று சாதாரணமாகச் சொன்னது முதல்வர் ஜெயாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்கிறார்கள்.  சீமானின் இஸ்லாமியர் ஆதரவு நிலைப்பாட்டுக்கும், கமலின் இந்த "காமெண்ட்"தான் காரணம் என்றும் நாம் ஒரு "தியரி" வெளியிடலாம்!

எல்லாம் சரி, பதிவுலகில் கருத்துச்சுதந்திரம் என்று வாய்கிழிய பேசும் பலர், இஸ்லாமியர்களையே கையைக் காட்டிவிட்டு உள்ளே நடந்துள்ள பல குழப்பங்களுக்கு காரணமான மம்மியிடம் மட்டும் பம்முவது ஏன்?

இதே நிலையை திமுக ஆட்சி உருவாக்கியிருந்தால் இப்போ மூடிக்கிட்டு இருக்கிற அரசியல் மேதாவிகள் எல்லாம், இஸ்லாமியர்களை விட்டுவிட்டு கருணாநிதியை இஷ்டத்துக்கு விமர்சிச்சு பதிவுபோட்டுக்கொண்டு இருப்பார்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்லணுமா??

Thursday, January 24, 2013

விஸ்வரூபக் கமலுக்காக அழுது ஒப்பாரி வைப்போமா?!

விஸ்வரூபத்திற்கு இஸ்லாமியர்கள் தேவையில்லாமல் கொதித்தெழுகிறார்கள் என்று நம்புகிறார்கள் கலை, கலை, கலை என்று சினிமாவை கட்டி அழும் கமல்ஹாசனின் விசிறிகள். இவர்களைப் பொறுத்தவரையில் சினிமாவை ஒரு கலையாகவும், கமலை ஒரு கலைஞனாகவும் எல்லாரும் பார்க்க கத்துக்கணும் என்கிற எதிர்பார்ப்பு!

இஸ்லாமியர்கள் பார்வையில் விஸ்வரூபம்..

இந்தப்படம் முழுக்க முழுக்க  தீவீரவாதம் பற்றியது. இதில் தீவிரவாதிகளாக வருபவர்கள் எல்லாரும் இஸ்லாமியர்கள். 

"எங்களை ஏன் இப்படியே தீவிரவாதிகளாகவே காட்டுறீங்க?" என்கிறார்கள் இஸ்லாமியர்கள். அதனால் இப்படத்தை தடை செய்யச் சொல்லி வேண்டுதல் விடுத்து, முதல்வர் ஜெயாவின் கருணையில் இடைக்கால தடை வாங்கியுள்ளார்கள் இந்தப் பட வெளியீட்டுக்கு!

சரி நம்ம கமல் கதாபாத்திரம் இந்தப்படத்தில் ஒரு  இஸ்லாமியர் இல்லையா?னு கேட்டால்..நம்ம ஹீரோ கமல் இந்தப்படத்தில் ஒரு பார்ப்பனராக நடித்து உள்ளாராம்! ஒருவேளை "இஸ்லாமியப் பார்ப்பனரா" என்னனு எனக்குத் தெரியலை.

கமலையும், கமல் விசிறிகளையும், நடுநிலைவாதிகளையும் பொறுத்தவரையில் இது ஒரு கற்பனைக் கதை என்பதை எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ளணும்! அப்புறம் இதில் வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளை கலையுணர்வுடன், கலைத்துவமாக, ஒரு காதாபாத்திரங்களாக மட்டும் அனைவரும் பார்க்க வேண்டும்! ஆமா, பார்ப்பானாக வரும் கமலையும்தான்! மதச்சாயம் பூசி இந்தப்படத்தில் வரும்  யாரையும் நீங்க பார்க்கப்படாது! அதுபோல் ஒரு திறந்த மனது இஸ்லாமிய சகோதரர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது!

மிகவும் அப்பாவியான, உலகமே அறியாத, உலக நாயகன் கமல், அவருடைய  இஸ்லாமிய சகோதரர்கள் எல்லாம் இவருடைய கலை ஆர்வத்தையும், இவர் நல்ல எண்ணத்தையும்  "சரி யாக" புரிந்து கொள்வார்கள் என்றும் விஸ்வரூபம் படத்தைப் பாராட்டுவார்கள்  என்றும் நம்பி மோசம் போய்விட்டார் போல் தெரிகிறது.   கமலின் இஸ்லாமிய சகோதரர்கள்  அனைவரும் இந்தப் படத்தை கலைக் கண்ணோடும், இதில் வரும் கதாபாத்திரங்களுக்கு மதச்சாயம் பூசாமலும், பார்ப்பாரகள், மேலும் இந்தப் படத்த்தை முழுமனதாகப் பாராட்டுவார்கள் என்று ஏமாந்து நிற்கிறார் உலகம் அறியாத உலக நாயகன் கமல்!

* கமல்ஹாசன் என்கிற இந்த அப்பாவிக் கலைஞன்  தற்போது படும் இன்னல்களுக்காக நாம் எல்லாம் கூடி ஒப்பாரி வைத்து அழுவோமா?

* இல்லைனா "உன்னைப்போல் ஒருவன்" வெளியிட்ட போதே அந்தப் படத்தை இஸ்லாமியர்கள் எடுத்துக் கொண்ட, விமர்சித்த விதத்திலிருந்து  இவர் பாடம் கற்று, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டுவதை அதோட இவர் நிறுத்தி இருக்கணுமா?

இது விவாதிக்க வேண்டிய விடயம்!

Tuesday, January 22, 2013

விஸ்வரூபத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் இயக்கம்!

ஒரு வழியாக டி ட்டி எச் பிரச்சினை ஓய்ந்தது! படம் நல்லபடியா 25 தேதி வெளி வரப்போகுதுனு கமல் ரசிகர்கள் எல்லாம் சந்தோசப்பட்டுக் கொண்டு இருக்கும்போது மறுபடியும் பழைய  பிரச்சினை ஆரம்பிச்சுருச்சு! இது எதிர்பார்த்த ஒண்ணுதான்! இஸ்லாமியர்கள் எல்லாம் கமல் திரு குர்ரான் அது இதுனு சொல்லும்போதே "என்ன குர்ரானா?" "தீவிரவாதமா?" னு ஒரே குழப்பத்துடன் இருந்தார்கள்.

தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு!

நான் ஏற்கனவே சொன்னேன் கமல் எந்தமாரி (தீவீரவாதிகள் பக்கம் நியாயம் இருப்பதாகவோ அல்லது  அதை தப்பு என்று சொன்னாலும்) எடுத்து இருந்தாலுமே, இஸ்லாம் அல்லது இஸ்லாமியர்கள் பற்றி இவர் ஒரு வரி பேசினாலே இஸ்லாமியர்களுக்கு எரிச்சல்தான் வரும் என்று. இதில் இவரு தப்பிக்க வழியே இல்லைனு தெரியும்.

கமல், டி ட்டி எச் வெளியீட்டுக்கும் முயன்ற காரணமே இதுதான். இந்தப் படத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு வரும் என்று நன்கு அறிந்துதான் அதை முயன்றார்.  அந்த முயற்சி பல காரணங்களால் தோல்வியடைந்து விட்டது. இப்போ பழைய, இவர் ஓரளவுக்கு எதிர்பார்த்த இஸ்லாமியர்கள் எதிர்ப்புப் பிரச்சினை மறுபடியும் கிளம்பியுள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாத கமலை கடவுள் காப்பாத்த மாட்டாரு! அவரை யாராவது மனிதநேயம் பாராட்டுறவங்க காப்பாத்தினால் சரி!

காப்பாத்துவாங்களா??

என்ன பிரியாணி வேணுமா?


Friday, January 18, 2013

படு மட்டமான கதை! வ்வ்வ்வே வாந்தி வருது!

"இது என்ன கதை? படு மட்டமா இருக்கு!"

"ஏன் இந்தக் கதைக்கு என்னடி?"

"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க?"

"சும்மா ஒரு கதை! அவ்ளோதான்!"

"சும்மா ஒரு 200 வரி எதையாவது லூசுத்தனமா பத்தி பத்தியா எழுதி ,அதை கதைனு நீங்க சொல்லிட்டா அது கதையாயிடுமா?"

"ஏன் ஆகாது? எல்லாரும் அப்படித்தானே எதையாவது கதைனு  எழுதுறாங்க?"

"அதுக்காக? இது மாதிரியா? நீங்க நல்ல கதை எல்லாம் தமிழ்ல படிக்கிறதே இல்லையா?"

" நானும் பல கதைகளைப் படிச்சுட்டு  "இது என்ன கதை? படு மட்டமா இருக்கு"னு தான் உன்னைமாரியே நெனைக்கிறேன். "

"ஹா ஹா ஹா! உங்களுக்கும் கதை  எழுதத் தெரியலை. அடுத்தவா எழுதுற நல்ல கதையையும் பாராட்டத் தெரியலை. ஆனா நெனப்பு மட்டும்.."

"இந்தா பாரு, வசந்தி!  நான் கதை எழுதுறேன்னு எவன் எழுதியதையும் தழுவி எழுதுறது இல்லை. ஏதாவது ஒரு கருத்தை சொல்லணும்னா அதை கதை வடிவுல சொல்றது அவ்ளோதான்."

"சரி அப்படியே இருக்கட்டும்! இந்தக் கதையில் வர்ர உங்க பவித்ராவைப் பத்தி என்ன சொல்ல வர்ரீங்க?'

"அப்படினா?"

"இல்லை அவளுக்கு எந்த ஆம்பளையையும் பிடிக்கலைனு சொல்றீங்க. சரியா?'

"ஆமா!"

"அப்போ அவளுக்கு காம உணர்ச்சிகளே, உணர்வுகளே கெடையாதா?"

"நீ என்ன கதை படிச்ச?  அவளுக்கு அழகான கவர்ச்சியான் பெண்களைப் பார்த்தால் ஒரு மாதிரி அட்ராக்சன் இருக்கிறப்பிலேதானே எழுதியிருக்கேன்?"

"அப்படினா?"

"அப்படினா பவித்ராவுக்குப் பெண்களைப் பிடிக்கிதுனு சொல்றேன். பெண்கள் மேலே ஒரு அட்ராக்சன்"

"அப்படினா?"

"அப்படினா, அப்படித்தான்!"

"இப்படியெல்லாம்.. பவித்ரா மாதிரி உண்மையிலேயே யாரும் இருப்பாங்களா என்ன?"

"மேலை நாடுகள்ல எல்லாம் இதையெல்லாம் சாதாரணமாக ஏத்துக்கிட்டாங்க! ஹை ஸ்கூல்லயே அவங்க செக்ஸுவல் ஓரியண்டேஷனை கண்டுபிடிச்சு, நான் "straight" நான்  "gay"னு தெளிவா சொல்லிடுறாங்க. அதை எல்லாரும் ஏத்துக்கவும் செய்றாங்க. நம்ம ஊர்லதான் இன்னும் இதை பெரிய தப்பாக்குறாங்க! ஒரு 30 வருடத்துக்கு அப்புறம் இவ்ங்களும் இதை  ஏத்துக்குவாங்க! இது மாரித்தான் எல்லா விசயத்திலும் நம்ம ஒரு 30 வருடம் பின் தங்கி இருக்கோம்!"

"சரி, இதை சொல்லுங்க! அது மாதிரி உணர்வுகள் இருக்கிற பெண்களுக்கு ஒருவேளை எஸ்ட்ரோஜனுக்கு பதிலா ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்டாஸ்டீரோன் சுரக்குமா?'

"அதுதான் இல்லை! இது ஹார்மோனல் பிரச்சினை இல்லைனு சொல்றாங்க!"

"சரி,  இந்தப் பவித்ரா இன்னொரு பெண்னோட சேர்ந்து வாழ்றானே வச்சுக்குவோம். இது என்ன வாழ்க்கை அவள் வாழ்றது? இதுல என்ன சந்தோசம்  கிடைக்கும்?"

"மொதல்ல சந்தோசமான வாழ்க்கைனா என்னனு சொல்லு!"

"யாராவது ஒரு நல்ல பார்ட்னரை தேர்ந்தெடுத்து, அவரைக் கல்யாணம் பண்ணி, குழந்தைகள் பெற்று, அவர்களை வளர்த்து ஆளாக்கி, அவங்க வளந்ததும் நம்ம நிம்மதியா வயதாகி சாகிறது."

"இதுதான் பலருக்கு சந்தோசமான வாழ்க்கை! இதுலயும் மாரிட்டல் ப்ராப்ளம்ஸ், செக்ஸுவல் ப்ராப்ளம்ஸ், இன்ஃபெடிலிட்டி, கணவன் ஏமாத்துவது, மனைவி கணவனை ஏமாத்துவது, மிட் லைஃப் க்ரைஸிஸ், அது இதுனு இருக்கத்தான் செய்யுது. சரி, எல்லாரும் இப்படித்தான் வாழணும்னு இல்லையே, வசந்தி!"

"அப்படினா?"

" நல்லா இருந்த ஒரு ஆளுக்கு 25 வயதில் திடீர்னு ஒரு நாள் கால்ப்பந்து ஆடும்போது "படாத இடத்தில்" பந்து அடித்து, அந்த இடத்தில் அடி பட்டதால, ஆண்மை இல்லாமல் போயிடுதுனு வச்சுக்குவோம்.."

"சரி"

"அவர் இனிமேல் இதுபோல் நீ சொன்ன ஒரு சாதாரண வாழக்கை வாழ  முடியாது"

"அதனால?"

"வாழ்க்கை பூரம் அவர் இந்த ஆக்ஸிடெண்டை நினைத்து, தான் இழந்ததை நினைத்து அழது அழுது புலம்பி வாழணுமா, அவரு? இதுதான் அவருக்கு வாழ்க்கையா? இல்லைனா, செக்ஸை மட்டும் விட்டுவிட்டு, விளையாட்டு அது இதுணு மற்றவைகளில் தன் மனதைச் செலுத்தி சந்தோஷமாக அவர் வாழ கத்துக்கணுமா?"

"இது ஒரு ஸ்பெஷல் கேஸ்"

"இந்த மாரி சில விபத்துகளால் பிறப்புறுப்பை பாதியில் இழக்கிறவங்களும் இந்த உலகில் வாழ்த்தான் செய்றாங்க. உடனே அவங்க எல்லாம் தற்கொலை பண்ணிட்டு செத்துடுறது இல்லை!"

"எதுக்கு அதுபோல் ஒருவரைப் பற்றி நீங்க இப்போ யோசிக்கணும்னு தெரியலை!"

"கோவிச்சுக்காதே! இப்போ நெறையப்பேருக்கு மார்புப் புற்றுநோய் வருதுணு சொல்றாங்க. கொஞ்சவயதிலே பல பெண்களுக்கு வருது. அவங்க அதை "ட்ரீட்" பண்ணிட்டு கேன்சர் சர்வைவராக  வாழத்தான் செய்றாங்க! ஏன் உனக்குக்கூட  ஒரு நாளைக்கு வரலாம்!'

"இப்போ எதுக்கு இதைப் பத்தி எல்லாம் சொல்லி என்னை மூட் அவ்ட் ஆக்குறீங்க?'

"இங்க பாரு! நீ சொல்றபடி. ஒரு சாதாரண வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதில்லை! அவர்களும், இந்த உலகில் நம்மோட வாழ்ந்துகொண்டுதான் இருக்காங்க! அவங்களுக்கும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாம் வந்து போயிட்டுத்தான் இருக்கு! சரியா?"

" "

"என்ன பேச்சையே காணோம்?"

"ப்ரெஸ்ட் கேன்சர் யாருக்குனாலும் வரலாமா?'

"அப்படித்தான் சொல்றாங்க"

"இல்லை அதுக்கப்புறம், சர்ஜரிக்கு அப்புறம்... வாழ்க்கை அவங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரே டிப்ரெஷனா இருக்காதா?"

"என்ன பண்ணுறது? வாழ்க்கையை வேறமாரிப் பார்த்து வாழ்க் கற்றுக்கணும். நெனச்சதும் சாகவா முடியும்?"

"ஆமாம். நெனச்ச நேரம் சாக முடியாது இல்ல? பல ரெஸ்பாண்ஸிபிலிட்டிகள் இருக்கும் நமக்கு இல்லை?"

"அதைத்தான் சொல்றேன். ஒருவரின்  வாழ்க்கை எப்ப வேணா எப்படி வேணா தலை கீழாக மாறலாம். ஒருவருக்கு திடீர்னு பல இழப்புகள் ஏற்படலாம்.. அதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பெண் "ஓரினச்சேர்க்கை"யில் ஆர்வம் உள்ளவளா அவள் தன்னை உணர்ந்து  அதற்கேற்றார்போல் அவர் வாழ்க்கையை அமைப்பது ஒண்ணும் பெரிய தப்பில்லை!'

"ஆக உங்க பவித்ரா  கதை உலகுக்கு ரொம்பத்தேவையான ஒண்ணுனு சொல்றீங்களா?'

"நான் அப்படி சொல்லவில்லை!"

"என்னதான் சொல்றீங்க?"

"அந்தக் கதையை நீ இவ்ளோ மட்டம் தட்ட வேண்டியதில்லை!"

"உங்க கதைனால "ரொம்ப நல்லாயிருக்கு"னு பொய் சொல்லணுமா நான்?"

"மக்கு! அது என் கதையே இல்லைடி! யாரோ  ஷாமளா னு ஒரு அம்மா "நெட்" ல எழுதிய கதை! நான் எழுதினமாரி, "காப்பி பேஸ்ட்" பண்ணி உன்னிடம் காட்டினேன்."

"ஆக இது உங்க கதையே இல்லை?"

" இப்போச் சொல்லு! கதை எப்படி இருந்தது?"

"உங்க கதை இல்லாதனால..இப்போ யோசிச்சுப் பார்த்தால் கொஞ்சம் அர்த்தமுள்ளதாகத்தான் இருக்கு!"


**********

Wednesday, January 16, 2013

ஜெயமோகனும் சாகித்ய அகாதமி விருதும்!

இந்த வருடம் சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் தானியல் சொல்வராஜ்க்கு வழங்கியுள்ளார்கள். "தோல்" என்ற இவர் எழுதிய நாவலுக்கு இந்த விருதைக் கொடுத்துள்ளார்கள். இதில், இவர் தோல் பதனிடுபவர்கள் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளார். "பரவாயில்லையே, தேவையான ஒரு புதினம்தான். இதுபோல் வாழும் ஏழை மக்கள் வாழ்க்கையைப் பற்றி சிரத்தையுடன் எழுதியிருக்காரே" னுதான் என்னை மாரி ஆட்களுக்கு எல்லாம் தோன்றியது.

தோல் திண்டுக்கல் பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலையை மையமாகக் கொண்டு முற்போக்கு எழுத்தாளர் தானியல் செல்வராசு எழுதியுள்ள தமிழ் புதினமாகும். தோல் பதனிடும் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள், இதனால் தொழிலாளர் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும் மற்றும் தங்கள் போராட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்று உரிமைகளை மீட்டதையும் இப்புதினம் விவரிக்கிறது. இவை அப்பகுதிவாழ் மக்களின் வழங்குமொழியிலேயே விவரிக்கப்பட்டுள்ளது. 117 கதைமாந்தரைக் கொண்டு 26 அத்தியாயங்களில் இந்த புதினம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் நீளத்தைக் கண்டு பலரும் பதிப்பிக்காதநிலையில் 2010ஆம் ஆண்டிலேயே இது நண்பரொருவரின் உதவியால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.[1] இந்த புதினத்திற்கு தமிழக அரசு சார்பில் 2011ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதும் 2012ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்துள்ளன.
 எழுத்துலக அரசியல் பற்றி தெரியாதவன் நான். அதனால் நான் பார்க்கும் கோணம் மிகவும்  எளிமையானது. ஆனால், இந்த விருது பெற்றவர் தகுதி பற்றி இலக்கிய மேதாவி ஜெயமோவன் என்ன சொல்றார்னு நீங்களே வாசித்துப் பாருங்கள்!

******************************

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலந்தானே?
சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டவுடன் (நான் எதிர்பார்த்தது வேறாக இருந்தாலும்) முதலில் உங்கள் தளத்தில்தான் தேடினேன்…செல்வராஜ் யாரென்று அறியலாம் என்று. யார் எந்த விருது பெற்றாலும் முதல் வாழ்த்து சொல்லும் நீங்கள் இந்த முறை மௌனம் சாதித்து விட்டீர்கள். யார் அவர்?
அன்புடன்
இளம்பரிதி


அன்புள்ள இளம்பரிதி அவர்களுக்கு

டி செல்வராஜ் மூத்த முற்போக்கு எழுத்தாளர். இருபதாண்டுகளுக்கு முன் நான் வாசித்தவற்றில் அவரது மலரும் சருகும், தேநீர் போன்றவை அந்தவகை எழுத்துக்களுக்குள் நல்லவை என்ற எண்ணம் இருந்தது
இப்போது வாசிக்கையில் பாவமாக இருக்கிறது. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் கதைச்சுருக்கம் சொல்ல அதைக்கேட்டுப் பிள்ளைகள் எழுதிய கதைகள் போல. ஒரே மாதிரி சொற்றொடர்கள். ஒரே மாதிரி கதைப்போக்கு.
அவரது விருதுபெற்ற தோல் என்னும் நாவலை அவர் ஐம்பதுகளில் எழுதினார் என்ற எண்ணமே வந்தது. இலக்கியம் என்பதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
இச்சூழலில் நான் என்ன சொல்வது? தமிழிலக்கியத்தின் தலைவிதி. இந்த விருதுடன் அவர் எங்காவது ஓய்ந்தால்கூடத் தமிழுக்கு நல்லதுதான். இல்லாவிட்டால் விருதுக்காக மூன்று வருடங்களுக்கு ஒரு படைப்பு எனப் பிதுக்கி வெளியே தள்ளிக்கொண்டே இருப்பார். வயதும் ஆகிறது.
தமிழில் பொதுவாக விழுமியங்கள் அளவுகோல்கள் முக்கியமே இல்லை. நம்மவரா இல்லையா என்பதே எங்கும் செல்லுபடியாகிறது. எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரு பொது அளவுகோலை நாம் கையாள்வதில்லை. நமக்குத் தெரிந்த ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்கிறோம்.
சாகித்ய அக்காதமியில் விருதுபெற்றவர்கள் மேலும் விருதுகளைத் தீர்மானிப்பதில் முக்கியமான செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
சாகித்ய அக்காதமி ஆரம்பிக்கப்பட்டபோது ராஜாஜி அதில் செல்வாக்கை செலுத்தினார். அவருக்குப் பிரியமான பேராசிரியர்கள் உள்ளே சென்றார்கள். தங்களுக்கும் தங்களுக்கு உகந்தவர்களுக்கும் விருதுகளை அளித்துக்கொண்டார்கள். ஆரம்பத்தில் சாகித்ய அக்காதமி விருது பெரும்பாலும் பேராசிரியர்களுக்கே கிடைத்தது
பின்னர் பேராசிரியர்கள் அவர்களுக்குப்பிடித்த வணிக எழுத்தாளர்களை விருதுபெறச் செய்தார்கள். அகிலனும் நா.பார்த்தசாரதியும் அவ்வாறு விருது பெற்றார்கள். நா.பார்த்தசாரதி உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்டவர். சிறந்த இலக்கியவாதிகளை விருதுக்குள் கொண்டுவர உண்மையாகவே முயன்றார்.
அவ்வாறு அவர் விருதுபெற்றுத் தந்தவர்களில் தவறான தேர்வு என்பது வல்லிக்கண்ணன்தான். வல்லிக்கண்ணனின் வறுமையே நா.பார்த்தசாரதியை அம்முடிவை எடுக்கச்செய்தது என அவரே சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் வல்லிக்கண்ணன் சக இலக்கியவாதிகளுக்கு விருது வழங்கப்படக்கூடாதென்பதில் மிகத்தீவிரமாக இருந்தார். முற்போக்கு ஆசாமிகளை உள்ளே கொண்டுவருவதே அவரது குறி. அதற்காக அவர் வணிக எழுத்தாளர்களுடன் ஒத்துழைத்து அவர்கள் விருதுபெற வழிவகுத்தார். அவர்கள் இவருக்கு அவ்வப்போது விட்டுக்கொடுத்தார்கள்
விளைவாக அக்காதமியில் கொஞ்சம் கொஞ்சமாக முற்போக்கு கும்பல் உள்ளே புகுந்து இடம் பிடித்தது. விருதுகளை அவர்களுக்கே அளித்துக்கொள்ள ஒரு மாஃபியா மாதிரி செயல்படுகிறார்கள். சரிதான், புரட்சி நடத்தி மத்திய அரசைக் கைப்பற்ற முடியவில்லை. சாகித்ய அக்காதமியையாவது கைப்பற்றினோம் என்ற நிறைவு மிஞ்சட்டும்
ஜெ
*******************


சரி, மேலே உள்ள "ஜெயமோவன் பதிலை" வாசிச்சுட்டீங்களா? எத்தனை பேரு தலையை உருட்டுறாரு பாருங்க இந்தாளூ!!!

 * திரு செல்வராஜ்க்கு சாகித்ய அகாதமி பெறத் தகுதி இல்லையாம். ஏன் என்றால் அவருக்கு இலக்கியம் தெரியாதாம்! இன்னைக்கு இந்த விருதுவை பரிந்துரைக்க இருக்கும் குழுவில் உள்ளது ஒரு மாஃபியா முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டமாம்!

* ஆக, போன வருடம் சாகித்ய அகாதமி விருது வாங்கிய சு வெங்கடேசனும் இதுபோல் முற்போக்கு மாஃபியா கும்பலை சேர்ந்தவர்தானா? அதனால்தான் "காவல் கோட்டம்" புதினமும் சாகித்ய அகாதமி விருது பெற்றது போலும்!

* அதற்கு முன்னால் விருந்து பெற்ற "நாஞ்சில் நாடன்" னும் இந்த மாஃபியா கும்பலை சேர்ந்தவரா? னு ஜெயமோவன் தான் சொல்லணும்!

ஆமா, எப்படி இந்த மாஃபியா கும்பல் இந்தக் குழுவை ஆக்கிரமிச்சாங்க???

இது சுத்தமான "ஜெயமோவன் தியரி" (ஆரம்பம்)

* சாகித்ய அகாதமி ஆரம்ப காலத்தில் ராஜாஜி, உள்ளே நுழைந்து, தமிழ் பேராசிரியர்களுக்கு மட்டுமே விருதை வாரிவழங்கிபுட்டாராம். அவங்களுக்கு இலக்கியம் தெரியுமா என்னனு தெரியலை!

* ஆக, ராஜாஜி ஊக்குவித்த அந்த பேராசியர்கள் எல்லாருக்கும் ஒரு மண்ணும் தெரியாதாம்! அந்த கூமுட்டைகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து, தகுதியே இல்லாத வணிக எழுத்தாளர்களுக்கு விருதை அள்ளி வழங்கிப்புடுச்சுகளாம். அதனாலதான் அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் புதினத்திற்கு க்கு சாகித்ய அகாதமி கொடுத்தார்களாம்! அகிலன் ஒரு சாதாரண வணிக எழுத்தாளராம்!!! பாரதீய ஞான பீடப் பரிசு பெற்றிருந்தாலும் அவருக்கும் இலக்கியம் தெரியாது போலும்! ஆக அகிலனுக்குக் கொடுத்ததும் தவறான ஒண்ணு.

* நா பார்த்தசாரதி ஓரளவுக்கு தகுதியுள்ளவராம்! ஆனால் அவருக்கும் அறிவு கெடையாதாம்! ஏழை பாழைனு இரக்கப்பட்டு தகுதியே இல்லாத வல்லிக்கண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருதை கொடுத்து எல்லாத்தையும் நாசம் பண்ணிப்புட்டு போயிட்டாராம், நா பா.

* வல்லிக்கண்ணன், வணிக எழுத்தாளர்களை கைக்குள் போட்டுக்கொண்டு இலக்கியம் தெரியாத முற்போக்கு மாஃபியாக்களை ஒவ்வொருவரா உள்ளே கொண்டு வந்து சேர்த்துவிட்டு அவரும் போயிட்டார் போல!

ஆக, இப்போ இருக்க முற்போக்கு மாஃபியா கும்பல்,  யாருக்கு இலக்கியம் தெரியாதோ அவங்களை தேடிப்பிடிச்சு தகுதியே இல்லாதவங்களுக்கு சாகித்ய அகாடமி விருதைக் கொடுத்துப் புடுறாங்களாம்!

ஜெயமோவன் தியரி இங்கே முடிவடைந்துவிட்டது!

உண்மையான  சாகித்ய அகாமி விருது பெற்வர்கள் லிஸ்ட் கீழே இருக்கு!



எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை, இந்தாளு ஜெயமோவனுக்கு என்னப்பா பிரச்சினை?? என்ன எழவைப் பத்தி பேசினாலும் இந்தாளு அதில் இறங்கி, அதில் புதைந்து கிடக்கும் விசயங்களை இவர் இஷ்டத்துக்கு ஜோடிச்சு அரசியல்தான் பேசுறாரு!

ராஜாஜி தமிழ் பேராசிரியர்களை ஊக்குவிச்சது தப்பு! தமிழ் பேராசிரியர்கள், நா பார்த்தசாரதி, அகிலன், ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது அடி முட்டாள்த்தனம்! அடுத்து நா பா, வல்லிக்கண்ணனுக்கு விருதை வழங்கியது உலகமகா குற்றம்!!! ஒரு சாதாரண transition னை என்னமாரி எல்லாம் குதற்கமா விவரிக்கிறாருனு பாருங்கப்பா!!!

-------------------------

இந்தாளு, ஜெயமோவன், இதே மாரித்தான் லீனா மணிமேகலை விவகாரத்தில் எஸ் வி ராஜதுரைக்கு அங்கேயிருந்து காசு வருது, இவனுக்கு இங்கே இருந்து காசு வருதுனு எதை எதையோ ஆதாரமில்லாமல் பொலம்பி. ஒளறித்தள்ளி  அதன் விளைவுகளை தொடர்ந்து அனுபவிச்சாரு ! அப்புறம் இவன் என்னை இப்படி திட்டிப்புட்டான் அது இதுனு ஒரே ஒப்பாரி மேல் ஒப்பாரி வச்சாரு!

இப்போ இன்னைக்கு இருக்க சாகித்ய அகாதமி குழுவை முற்போக்கு மாஃபியா கும்பல்னு சொல்லாமல் சொல்றாரு!!!

ஒருவேளை இந்தமாரி ஒப்பாரி வைத்தால்தான் அடுத்து இவருக்கு விருது ஏதாவது கொடுப்பாங்கணு பார்க்கிறாரோ? 

ஆக, இந்தாளு பொலம்பலை நிறுத்தணும்னா ஒரே வழிதான்!

தயவு செய்து இந்தாளுக்கு தமிழ்ல என்ன என்ன விருது கொடுக்க முடியுமோ, எல்லா விருதுகள்லயும் ஒண்ணு ஒண்ணு கொடுத்துத் தொலைங்கப்பா!  

ஆமா, சாகித்ய அகாடமில இருந்து பாரதிய ஞான பீட விருது வரைக்கும்! 

இல்லைனா, இந்தாளு எதை எடுத்தாலும் அதில் அரசியல்ப் பேசி வைக்கிற ஒப்பாரியை தாங்கவே முடியாது போல!

Thursday, January 10, 2013

என்னுடைய டி ட்டி எச் புக்கிங் பணம் எங்கே கமல்ஹாசன்?

கமல் என்னனா, தான் சொன்னதுபோல் படத்தை டி ட்டி எச் ல கொடுக்காமல்,  "இது என் பொருள், நான் வைக்கிறதுதான் சட்டம்" னு இன்னும் வீம்பு பேசிக்கொண்டு இருக்கிறார். இதைப் பார்த்து எரிச்சல் அடைந்தோ என்னவோ "டைம்ஸ் ஆஃப் இந்தியா" வில் ஒரு கட்டுரை வந்து இருக்கு. அதில் ஒரு ஆள், A Subramani, என் பணம் எங்கே கமல்? னு கேட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.


kamalahassan


Mr Kamal Haasan, where is my money?

 எழுதியவர். எ. சுப்பிரமணி!


Irked over the delay of Vishwaroopam, Kamal Haasan's latest flick, on DTH, a fan writes to apprise the actor how he felt cheated.


Dear Padmashri Mr Kamal Haasan,


I am writing this representing the collective and the rightful indignation of thousands of your fans who shelled out sums ranging from Rs 500 to Rs 1,200 to watch the so-called pre-release premiere of your film 'Vishwaroopam' on DTH.


Mr Kamal, I am the head of a family of four and, just like you, Rajni and Barack Obama, I too have two daughters. We restrict our cinema theatre visits only for real biggies such as Enthiran and Avatar for a wholesome effect. And the moment you unveiled Vishwaroopam, we decided that the film fell in that category and that we all should book tickets in a swanky theatre for a quality entertainment. We, of course, were aware that such an experience comes with a fat price tag.


But, then, you started talking about pre-release of the V-film on DTH. You did everything right to promote your film. You got the audio CD released by a physically disabled fan. Your appearance on a hugely popular TV show as guest was a mega hit among children. You spoke so well that many children, as those in my family, prevailed upon their fathers to book a slot on DTH. You spoke as to how you spent Rs 95 crore on the movie, and how it is your right to choose the medium of release. You even claimed that you already had 390 theatres under your kitty to release the film after its DTH debut.


Then you visited the Chennai city police commissioner's office, with your publicist in tow, complaining of certain threats. Even when my Editor doubted whether it was a publicity stunt, I, quite naively, defended you, saying, "no, boss. It looks like Kamal's battle against the theatre lobby."


When Regent Saimira dragged you to high court demanding refund of Rs 4 crore it had apparently paid you as advance for a still-born film and sought to stall Vishwaroopam's release, your advocate-brother and your goodself filed a counter explaining the economics behind film-making. You said the failed deal cost you Rs 40 crore. You won the case, Mr Kamal, as the court dismissed the suit.


Then, convinced that you will stand by your resolve to give us a pre-theatre release experience of the V-film at 9.30pm on January 10, I paid up not Rs 1,000 but an apex fare of Rs 1,200. While I had decided to return early for the advertisement-free entertainment that night, my children decided to stay up for the rendezvous.


Well, Mr Kamal, today is January 10. Where is the film? And, more importantly, where is my money?


On Wednesday, you again appeared in TV, your publicist in tow, telling us that the release date has been postponed and that you would try to release the film simultaneously on DTH and theatres. You said your money is at stake and that you felt cheated.


Hold on, Mr Kamal, you are mouthing my dialogue. It is we, having signed up for the DTH rendezvous, who should be complaining that we had been betrayed, my children disappointed and our money stolen from our wallets. When my daughter asked me, "daddy, is Kamal uncle cheating us?" I defended you and tried hard to explain her the business matrix behind your failure. But it did not wipe off her disappointment entirely.


Remember the Baaba days of superstar Rajnikanth. Riding high on his popularity wave in 2002, they slapped an entry fee on Rajni fans, merchandised his pictures and even banned his fans from using his images without 'authorisation'. They sought to metamorph a people's star into a body corporate, a Rajni Inc. The film bombed -- of course not because fans failed Rajni. It was vice versa.


But more than grieving over the failure of their superstar's film, Rajni fans felt betrayed.


Kamal fans and those who hold him aloft as the pride of Indian cinema are now engulfed in the same sense of betrayal. I know people who bought new DTH because of Vishwaroopam. Now the set top box in their hall will grimly remind them of the betrayal. You may say it is all beyond your limits and that you too lost to the theatre lobby, but we put the money in an unknown service provider's kitty believing your words.


Two things are clear. One, you have got tons of free publicity for your film and you are sure to reap a bumper harvest. Two, you proved my Editor right.


Now, Mr Kamal, tell us how are you going to help us get back the money?

இதுபோல் டி ட்டி எச் காரன் அவன் இவன்னு பலரும் பிரச்சினை செய்ய வாய்ப்பிருக்கு. எனக்கென்னவோ ஆழம் தெரியாமல் கமல் காலை விட்ட மாதிரித்தான் இருக்கு.

ஆனால், இப்போவும் கமலஹாசன் பேசுவதைப் பார்த்தால்  இன்னும் அடங்கிறமாரி தெரியலை! He has not apologized to anyone! He just blames others!

Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் முதலில் DTH யில் ரிலீஸ் முயற்சி படுதோல்வி!

சந்தேகமே இல்லாமல், விஸ்வரூபம், தியேட்டரில் வெளிவரும் முன்னால்  டி ட்டி எச் ல் வெளிவரப்போவதில்லை என்று உறுதியாகிவிட்டது! என்னப்பா  நம்ம கலைஞானி, உலக நாயகன் கமலுக்கு இப்படி ஒரு சோதனை?! 

Vishwaroopam to hit theatres first

A still from the much-awaited Kamal movie
From The HIndu

Kamal Haasan’s novel move to leverage technology and create a new revenue stream for his film Vishwarooopam through a direct-to-home television premiere has been torpedoed by the traditional players — theatre owners and distributors keen on protecting their turf.
By Tuesday night, the actor-director, Tamil Nadu Film Theatres Owners’ Association and producer-director Keyar together decided that the film will hit the theatres first. “The day and date when it is expected to be released will be decided at the second round of meeting tomorrow [Wednesday],” said R Pannerselvam, general secretary of the association. In an age when the money a movie makes in the first few weeks of its release often determines its success, Mr. Haasan was hoping the DTH screening would be a big help.

An official statement from Airtel CEO for DTH/Media Shashi Arora said: “In line with the postponement of the release date of the movie Vishwaroopam across theatres and DTH platform by Rajkamal Films, we have stopped booking for the movie premiere that was scheduled for January 10 at 9.30 p.m.” 

Ever since the actor announced his ambitious plan for DTH, it has been a match of bobbing and weaving with a section of theatre owners and distributors who view the move as being detrimental to the theatre business. 

Last week, the Tamil Nadu Theatre Owners Association and the Tamil Nadu Film Distributors Federation decided not to screen and distribute movies that are released on DTH platform. Subsequently, bookings were open only in a limited number of theatres for Vishwaroopam.
 -----------------

 Chennai, Jan. 8: Following his marathon meetings with theatre owners and film distributors, Kamal Haasan has put off the release date of his mega-budget movie Vishwaroopam — both on the direct-to-home platform and theatres.

Though there is no official communiqué from RaajKamal Films on this to the media, it is learnt that the producer has sent out mails to all DTH service providers stating the decision to postpone the release date of the movie. Following this, DTH service providers have stopped accepting bookings from their subscribers.

In his response to Business Line, Shashi Arora, CEO, Airtel DTH, said with the postponement of the release date of the movie by RaajKamal Films, the service provider was not taking bookings any more for the movie premiere that was scheduled for January 10 at 9.30 p.m. “We are awaiting confirmation from the producer on the revised dates,” he said.

Representatives of RaajKamal Films are seeking at least 400 screens across Tamil Nadu to launch the movie. But, since most theatre owners have already signed up for two other Tamil films and a Telugu film, due for release around the same time, screens are not available on January 11. Hence, theatre owners have requested RaajKamal Films to reschedule the release to a subsequent date, “preferably to January 26,” sources said.

Even though some theatres launched bookings for the movie, not many booked tickets as there was confusion among Kamal Haasan's fans on the release date.

The whole episode started with Haasan's decision to premiere the multi-lingual film on the DTH platform a day before its theatre release. Theatre owners protested this move saying “it will set a precedent for other film makers and producers that can wipe out the business of cinema halls,” and they refused to offer screens. Even theatre owners in Andhra Pradesh, Karnataka and Mumbai too joined the protest.

The film maker is now set to be in talks with theatre owners to decide on the release date of the film - both in theatres and the DTH platform.

 
TNTOA not issued any press statement, confirm their stand after Federation ( theater& distributors) meeting. lot of confusion.
TNTOA hav agreed to release the muvi only if the DTH telecast is after 5 weeks frm the date of release
Vishwaroopam theatrical release postponed 2 Jan 25. TNTOA will cooperate & give maximum screens provided no DTH premiere.


இப்படி ஒரு சோகமான நிலைமை ஆகிவிட்டதால்  நம்ம விடாக்கண்டன் கமலஹாசன் பெரிய வம்பில் மாட்டிக்கிட்டார், பாவம்.

இதில் கமலுக்கு துரோகம் செஞ்சவங்கனு பார்த்தால் ஒரு பெரிய லிஸ்டே கொடுக்கலாம்! அதை எல்லாம் விடுங்க!

இந்த புதிய முயற்சியின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்னனு பார்த்தால்..நம்ம பொதுமக்கள்தான்..

ஆமா, டி ட்டி எச் ஒளி பரப்பு அட்வாண்ஸ் புக்கிங் எதிர்பார்த்த அளவு அமோகமாகப் போகவில்லை! ரூ 1000 அல்லது ரூ 500 கொடுத்துப் பார்க்க லட்சக்கணக்கான மக்கள் தயாராக இல்லை! அதாவது ஒரு 10-15 லட்சம் பேரு புக் பண்ணி இருந்தால், கமல், தனக்கே ஆன திமிருடன் தியேட்டர்க் காரனுகளை கண்டுக்காமல்கூட விட்டு இருக்கலாம்! ஆனால் கமலோட கெட்ட நேரம் அது நடக்கவில்லை! டி ட்டி எச் மூலம் வரப்போகும் வருமானம் ரொம்ப கம்மியாக இருப்பதால், போட்ட காசை எடுக்கணும்னா  நல்ல தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்து பெரிய ஓப்பனிங் கலக்சன் எடுக்க வேண்டியது தயாரிப்பாளர் கமலஹாசனுக்கு இன்றியமையாத்தாகிடுச்சு.
தியேட்டர் ஓனர், விநியோகஸ்தர்கள்னு பலருடனும் கருத்து வேற்றுமையால் மோதியதால் இவர் படத்துக்குக் கிடைத்த மிச்ச மீதீ தியேட்டர்கள் தரமானவைகள் அல்ல!  இந்த சூழ்நிலையில், ஒரு வேளை,, ஒரு வேளை, படமும்  விழுந்துச்சுனா,  நிலைமை ரொம்ப மோசமாயிடும்னு ஆயிப்போச்சு. அதனால இப்போ கமல் தன் நிலையில் இருந்து இறங்கி தியேட்டர் ஓனர்கள் வழிக்குப் போக வேண்டிய கட்டாயம் உண்டாயிருச்சு!


* நம்ம சண்டியர் கரன் னு கமல் அபிமானி சொன்ன எஸ்டிமேட், ரூ 300 கோடி வசூல்  எல்லாம் சும்மா வதந்திதான்னு தெளிவாகத் தெரியவருகிறது!

* எனக்கு இப்போ டி ட்டி எச் காரர்களை கமல் எப்படி சமாளிக்கப் போறாருனு தெரியலை. அவனுக ஏதாவது நஷ்டயீடு வேணும் அது இதுனு சொன்னால்.. எனக்கு நெனைக்கவே பயம்மா இருக்கு!

*  டி ட்டி எச் ஐடியா உலகமஹா ஐடியாணு உசுப்பேத்தி விட்டவர்களை எல்லாம் என்ன செய்றது இப்போ?

சரி நடந்தவை  நடந்தவைகளாக இருக்கட்டும்! நடப்பவைகள் நல்லவைகளாக அமையட்டும். விஸ்வரூபம் படம் பெருவெற்றியடைந்தால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லாமல்ப் போய்விடும்! இன்னும் கமல் தோற்கவில்லை!

Monday, January 7, 2013

கறுப்புப்பணமும் ரசினியின் TEA பார்ட்டியும்!

 Actor Rajinikanth addresses the members of the Tamil film fraternity, who were on hunger strike, demanding the repeal of service tax, in Chennai on Monday. Photo: S.S. Kumar


ரஜினிகாந்த் போல பெரிய பணக்காரர்கள், கோடி கோடியாக சம்பாரிக்கிறவங்க, அதிகமான வருமான வரி கட்ட ஏன் அழுகிறாங்கனு தெரியவில்லை. இவர்கள் சம்பாரிக்கும் வருமானத்திற்குத்தான் வரி இங்கே என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவும். அமெரிக்காவில் TEA (tax enough already) நு சொல்றவங்க பில்லியனர்களும், மில்லினர்களும்தான். அதே போல் இப்போ இந்தியாவிலும் கோடி கோடியாக சம்பாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்க்கொண்டு நடிகர்கள் விஜய், சூர்யா, சத்யராஜ்னு ஆளாளுக்கு ஒரு 13% வரி அதிகமாக கட்ட அழுகிறார்கள்.

அதாவது பரவாயில்லை, அப்படி அதிகமாக்கினால் கறுப்புபணம் அதிகமாயிடும்னு கேணத்தனமான ஒரு சமாளிப்பு. இது போல் ரஜினி பேசுவது எப்படி இருக்குனா, அதிகமாக எங்களுக்கு வரி போட்டால் நாங்க கறுப்பில் வாங்குவோம்னு சொல்வதாகத்தான் தோணுது.


ஹிந்துவிலிருந்து ஒரு காமெண்ட்!
Film industry people are good in giving lip service only it seems for
the country. Almost all the sectors are paying service tax now. Even for
life saving medicines, we pay tax. Reality being so, entertainment
industry people, not want to be taxed is amusing. True in every walk of
life, all are financially not sound - but they all pay tax. If film
industry people are concerned about disparities in their field, they
should correct themselves like reducing their fees in terms of crores
and so on.
from:  Gopalan
Posted on: Jan 7, 2013 at 17:04 IST

இவர்களுக்கு  வரும் வருமானத்தில் ஒரு 13% அதிகமாக வருமான வரி கட்டினால் என்னாகும்? இவங்க எல்லாம் தெருவுக்கு வந்திருவாங்களா என்ன? நடிகர் ரஜினிகாந்த் பேசாமல் இதுபோல் போராட்டத்தில் கலக்காமல் ரெஸ்ட் எடுக்கலாம். ஏன் இப்படி?

நம்ம கமலு மட்டும் கலந்துக்கல போல இருக்கு. அவருக்கு விஸ்வரூபப் பிரச்சினையை சரிக்கட்டவே நேரத்தைக் காணோம், இதில் வேற கலந்துக்க எங்கே நேரம் இருக்கப்போது!

ஒருவேளை கமல் மட்டும் இதை வரவேற்கிறாரா? விபரம் சொல்லவும்!

Friday, January 4, 2013

2013! பதிவுலகிற்கு நல்ல காலம் பொறந்திருச்சு!

2013 பொறந்துருச்சு! பிரகாஷுக்கு ஒரே கில்ட்டி ஃபீலிங்!  அவன் அவன்  நியு இயர் ரெசொலுஷன்னு "நான் சிகரட்டை விட்டுறப் போறேன்", "நான் நான்வெஜ் சாப்பிடப்போறதில்லை", "நான் தினமும் 5 மைல் ஓடப்போறேன்" னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனால் பிரகாஷுக்குமட்டும்  இந்த வருடம் அந்தமாரி எதுவும் ஐடியாவே இல்லை.

அதற்கு காரணம் இருந்தது. கடந்த வருடங்களில் அவன் எடுத்த நியூ இயர் ரெரொலுஷன் படி எதையும் அவனால்  சில மாதங்களுக்கு மேலே ஒழுங்கா செயல்படுத்த முடியவில்லை! இந்த வருடம் பிரகாஷ்  ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். எப்படியாவது நம்மளால செயல்படுத்த முடிந்த ஒரு நியு இயர் ரெசொலுஷன் தான் இந்த வருடம் கவனமாக எடுக்கணும் என்று. இல்லைனா "உனக்கெல்லாம் எதுக்குய்யா ரெசொலுஷன் மண்ணாங்கட்டி?" னு அவன் மனசாட்சியே அவனை அறையும்!

அப்படி என்ன ஒரு ஈஸியான/உருப்படியான  ரெசொலுஷன் எடுக்கலாம்? னு யோசித்து யோசித்து  கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். "பிரகாஷு கார்னர்" என்று அவன் ஒரு தளம் வைத்திருந்தான், நம்ம பிரகாஷ். அவன் வலைதளத்தில் எழுதும் பதிவு எவனுக்கும் பிடிக்கிதோ இல்லையோ, பதிவெழுதுவதுமட்டும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். உண்மையைச் சொன்னால் பிரகாஷ், பதிவுகள்னு எதுவும் பெருசா  எழுதி நாட்டைத் திருத்தவில்லை! அவனுடைய எழுத்த்துக்குணு அவன் ஒண்ணும் பல விசிறிகளைப் பெறவில்லை! ஏதோ ஏனோ தானோனு தனக்கு தோணுகிற என்னத்தையாவது ஒரு பதிவை எழுதுவான். ஒவ்வொரு சமயம் நம்ம எதுக்கு இப்படி மாஞ்சிக்கிட்டு பதிவெழுதனும்? னு அவனே நினைப்பதுண்டு. இருந்தாலும் பதிவெழுதுறேன்னு எதையாவது தொடர்ந்து கிறுக்காமல் அவனால இருக்க முடியாது. பிரகாஷ், எதையாவது கட்டுரை, கதைனு எழுதிட்டு அதையும் தமிழ் மணம் அது இதுனு எல்லாத் திரட்டியிலும் சேர்த்து விடுவான்.  அவன் எழுதுறதை ஒரு நாளைக்கு எவனாவது தெரியாமல் அவன் தளத்திற்கு வந்துவிட்ட ஒரு பத்து இருபது  பேர் படிப்பார்கள். அப்படிப் படிக்கிறவங்களும் படிச்சுட்டு கருத்துனு எதுவும் பெருசா சொல்ல மாட்டாங்க! ஒவ்வொரு சமயம், உண்மையிலேயே தப்பித் தவறி நல்லா எழுதி இருந்தாலும்கூட இவன் பதிவை  வாசிச்சுட்டு  எதுவுமே  சொல்ல மாட்டாங்க, அவன் வாசகர்கள்! ஆனால் ஏதாவது சொற்குற்றம், பொருள் குற்றம், எழுத்துப் பிழைனு அவன் பதிவில் தப்பு விட்டு இருந்தால், அந்தக் குறையை மட்டும் பொறுப்பா வந்து சொல்லிட்டுப் போயிடுவாங்க. அதுபோல் குறை சொல்லும்போதுதான்  "இவங்க எல்லாம்கூட நம்ம பதிவை வாசிக்கிறாங்க போல?" னு பிரகாஷ் தெரிந்து கொள்வான்.

சரி, இதுதான் சரியான முடிவு!

ஒரு வருடம் ஒரு பதிவுமே எழுதாமல் இருப்பதென்பது பெரிய தியாகம்தான். நமக்கும் நல்லது. நம்ம எழுத்தை  அமைதியாக வாசிச்சு ரசிக்கும் விசிறிகளையும் ஒரு மாதிரி எழுத்துத் தீணி போடாமல் பழி வாங்கியதுபோல் இருக்கும்னு தன் முடிவைத் தானே மெச்சிக்கொண்டான். ஆனால் இந்த நியு இயர் ரெசொலுஷனை பதிவுலகில் சொல்லியே ஆகணுமே? இதை சொல்லலைனா எப்படி எல்லாருக்கும் நம்ம  ரெசொலுஷன் இதுதான்னு  தெரியும்? சரினு வேற வழியில்லாமல் "உங்க நலன் கருதி, 2013 ல் நான் பதிவெழுதப் போவதில்லை! உங்களுக்கெல்லாம் நல்ல காலம் பொறந்திருச்சு" னு ஒரு தலைப்பைப் போட்டு உருக்கமாக தன் முடிவை/நியு இயர் ரெசொலுஷனைத் தெளிவாகச் சொல்லி ஒரு பதிவு எழுதி வெளியிட்டுவிட்டான்! தமிழ்மணத்தில் அதை இணைத்தும் விட்டான், பிரகாஷ்.

ஆனால் என்னைக்கும் இல்லாமல் அவனோட அந்தப் பதிவை வாசகர்கள் ஒரு 100 பேர் வாசகர் பரிந்துரைவில் பரிந்துரை செய்து, தமிழ் மணம் மகுடத்தில் வேற ஏற்றி விட்டு விட்டார்கள்!. ஏன்னு தெரியலை அந்தப் பதிவுக்கு அர்த்தமான பின்னூட்டங்களும் ஒரு 100க்கு மேலே வந்து இருந்தன!

"என்ன பிரகாஷ்  இப்படி செஞ்சுட்டீங்க?"னு ஒரு சில இளம் யுவதிகள்

"நீங்க கட்டாயம் தொடர்ந்து எழுதணும்!"னு மதிக்கத்தக்க பல பதிவர்கள்.

"என்ன பிரகாஷ், இப்போத்தான் உங்களுக்கு நல்லா கோர்வையா எழுத வருது! இப்போ நீங்க நிறுத்தக்கூடாது!" னு உரிமையுடன் சிலர்.

"உங்க எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு, பிரகாஷ்! நான் ரெகுலரா உங்க தளம் வாசிப்பேன். ஆனால் பின்னூட்டமிடுவதில்லை"னு ஒரு இருபது பேர்.

அப்படி இப்படினு ஆளாளுக்கு பின்னூட்டத்தில் புகழ்ந்ததும், பிரகாஷாக்கு நிலை கொள்ளவில்லை! எப்படியும் அவர்களுக்கு தன் நிலைமையை விளக்கி நன்றி சொல்லணும்னு இன்னொரு பதிவை எழுதினான். :))) ஆக, கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் அவன் நியு இயர் ரெசொலுஷன் நாசமாப் போனது! :-)

பாவம் பிரகாஷ், "நம்ம மக்கள், யாரையும் ஒழுங்கா வாழவும் விடமாட்டானுக, நிம்மதியா சாகவும் விடமாட்டானுக" என்கிற உண்மை இப்போக்கூட அவனுக்கு விளங்கவில்லை என்பதுதான் அதைவிட சோகம்!