Sunday, July 19, 2009

"கடலை கார்னர்" னா என்ன அது, வருண்? (3)

ஆமா, வருண், கடலை கார்னர்னா என்னங்க அது?

சும்மா அரட்டை அடிக்கிறது. இதுல கண்ணன், பிருந்தானு ரெண்டு பேர் இப்போதைக்கு வர்றாங்க. அவங்க ரெண்டு பேரும் சும்மா ஹார்ம்லெஸ்ஸா அரட்டை அடிப்பாங்க. அந்த அரட்டை மூலம் இதில் ஏதாவது ஒரு விசயம் சொல்லப்படும். அவ்வளவுதான்.

ஆமா பெருசா என்ன விசயம் சொல்லி இருக்கீங்க இப்போ?

இந்த லந்துதானே வேணாம்கிறது? :-)

* கடலை கார்னர் (1) ல Printed Journals are going to disappear என்கிற ஒரு விசயம் சொல்லி இருக்கேன்

* கடலை கார்னர் (2) ல Office Space (1999) என்கிற காமடிப் படம் ரெக்கமண்ட் பண்ணி இருக்கேன்.

* அப்புறம் கடலை கார்னர் (3) ல... கடலை கார்னர்னா என்னனு சொல்லி இருக்கேன். போதுமா?

என்னவோ போங்க! :-)))

-தொடரும்

Saturday, July 18, 2009

கடலை கார்னர் (2)

“கண்ணன் சார்!”

“என்ன திடீர்னு ரொம்ப மரியாதை, பிருந்தா?”

“என்னவிட நீங்க வயசுல மூத்தவர்தானே? அதான் சார்..”

“ச்சும்மா ‘வாடா போடா'னு கூப்பிடு, பரவாயில்லை”

“நெஜம்மாவா? எதுக்கு வம்பு? பேசாமல் வாங்க போங்க னே சொல்லுறேன் !”

“சரிங்க பிருந்தா ஆண்ட்டி!”

“ஆண்ட்டியா? கொழுப்புத்தானே? சரி, ஆங்கிலப்படத்தில் ஏதாவது பார்க்கிறாப்பிலே ஒரு படம் சொல்லுங்க. வீக் எண்ட்ல பார்க்க”

“நெறையப்படம் இருக்கே”

“ஒரு நல்ல படமா சொல்லுங்க”

“சரி எனக்குப் பிடிக்கிற படம்லாம் உனக்குப்பிடிக்காது. உன் டேஸ்ட்க்கு ஏற்றார்போல பழைய படம் சொல்லவா ?

"அது ஏன் உங்களுக்கு பிடிக்கிறது எனக்குப் பிடிக்காது?”

“நீ ஒரு பொண்ணு இல்லையா? காட்ஃபாதர் மற்றும் வெஸ்டர்ன் போன்ற படங்கள் எல்லாம் பிடிக்காதுதானே? எனக்கு அதெல்லாம் பிடிக்கும்'

“தெரியலை. சரி உங்களுக்கு பிடிச்ச படத்தில் எனக்கு பிடிக்கும்னு நெனைக்கிற படம் ஒண்ணு சொல்லுங்க”

“என்ன மாதிரி படம் சொல்ல?'

“அப்படினா?”

“ரொமாண்டிக் படம்? இல்லைனா காமெடிப்படம் சொல்லவா ?”

“காமெடிப்படம் சொல்லுங்க”

“ஆஃபிஸ் ஸ்பேஸ் (Office Space")”

“நான் கேள்விப்பட்டதே இல்லையே? ஏதாவது சதி இல்லையே. எதையாவது மனசுல வச்சுண்டு என்னை கவுத்திவிடாதீங்க, சார்”

“சே ச்சே, It came out in 1999. Based on Mike Judge's cartoon. இது ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் இல்லைதான். ஆனா, ஹிலேரியஸ் காமெடி. உனக்குப் பிடிக்கும்”

“என்ன கதை?”

“சும்மா கார்ப்பரேட் அமெரிக்காவை க்ரிடிசைஸ் பண்ணி இருப்பாங்க!”

“கொஞ்சம் கதை சொல்லுங்களேன்”

“It is about three guys who work for a small IT company and one of them is Indian with Indian accent. They hate the workplace and the beuraucratic bullshit and the director, who is a creepy guy. The company will bring a consultant to fire people. It is all about that”

"Who is the hero?"

"Ron Livingston. You might not know him, he is not that popular"

"Who is the heroine?"

"Jennifer Aniston is there. But I would not say she is a heroine"

"I love her"

"I know, Brindha"

“OK, I will rent it and watch as you recommend. What if I don't like that movie?”

“If you dont like it, I will take you out for lunch. What if you love that movie?”

“Well, then I will thank you properly”

“How is that?”

“I don't know. You just have to wait Kannan sir. Let me think about thanking you after I watched the movie”

“That sounds reasonable, Brindha. I hope this is not a trick for a free lunch?”

“You are a crook, Kannan!”

“Ha ha ha. Thanks for the compliment!”

-to be continued

Friday, July 17, 2009

கடலை கார்னர் (1)

"ஹேய் பிருந்தா! யார் அது?"

"எது?"

"உங்களோட படத்துக்கு வந்திருந்தாளே அந்தப் பொண்ணு?'

"என் ஃப்ரெண்டு!"

"அவ என்ன பண்ணிக்கொண்டு இருக்காள்?"

"வேறென்ன வேணும்? அவ சைஸ் எதுவும் வேணுமா?"

"நீ ரொம்ப மோசம், பிருந்தா! ஏ சும்மாதான் கேக்கிறேன்"

"ச்சும்மா? நீங்க திருந்தவே மாட்டீங்களா, கண்ணன்?"

"நான் எப்போ கெட்டுப்போனேன்? திருந்த?"

"பிறவியிலேயே!"

"அடப் பாவி! ஏன்ப்பா இப்படி?"

"நீங்க ஆம்பளைதானே, கண்ணன்?"

"உனக்குத்தான் நல்லாத்தெரியும்! நீ என்ன நினைக்கிற, பிருந்தா?"

"தெரிந்ததால்தான் சொல்லுறேன். திருந்துங்கனு!"

"உனக்கேன் இப்படி கோபம் வருதுனு தெரிஞ்சுக்கலாமா?"

"இது கோபம் இல்லை!"

"வேறென்ன?"

"லேசா பொறாமைனு சொல்லலாம். அதுவும் இல்லை. உங்க மேலே பரிதாபமாக்கூட இருக்கலாம்"

"ஏன் இப்படி இருக்கீங்க?"

"நாங்களா?"

"ஆமா. ஏன்?"

"உங்க கிட்ட ஒண்ணு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க. நாங்க எத்தனையோ தேவலை தெரியுமா? இதேபோல் நான் ஒரு ஆளைப்பற்றி உங்கட்ட கேட்டேன் னு வச்சுக்கோங்க. சும்மா பேச்சுக்குத்தான். உங்க இதயமே நொறுங்கிவிடும்! நாங்க பெரிய மனசு பண்ணி உங்க இதயத்தை பாதுகாக்கிறோம்!"

"அப்பா! எவ்வளோ பெரிய மனசு! எப்படி இதெல்லாம் பிருந்தா!"

"ஜோக் கடிச்சு சமாளிக்க வேணாம் மிஸ்டர்! உங்களுக்கே தெரியும், நான் சொல்வது உண்மைனு"

"அது ஏன் நாங்க மட்டும் அப்படி இருக்கோம்?'

"ஏன்னா நீங்க ஆம்பளை!"

"சரி விசயம் தெரியுமா, பிருந்தா?"

"என்ன விசயம்?"

"இனிமேல் எ சி எஸ் ஜேர்னல் எல்லாமே எலக்ட்ரானிக் வேர்ஷன்ல தான் கிடைக்குமாம். ஆன் லைன்ல மட்டும். ப்ரிண்ட் வேர்ஷன் எல்லாமே 2010 ல இருந்து கம்ப்ளீட்டாக நிறுத்தப்படுகிறது!"

"ஏனாம்?"

"யாருமே ப்ரிண்டெட் வேர்ஷன் வாங்கிறது இல்லையாம். ஒரு 100 காப்பிதான் விக்குதாம்"

"நெஜம்மாவா?"

"ஆமா. இனிமேல் எல்லாமே ஆண்-லைன் சயண்ஸ் தான்! எல்லாமே எலக்ட்ரானிக் உலகம்!"

"ஒரு நாள் இதுபோல குமுதம், விகடன் எல்லாம் ஆன் லைன் ல மட்டுமே கிடைக்கும் நிலைமை வருமா, கண்ணன்?"

"That I am not sure. Because in the scientific world everybody owns a computer and more sophisticated environment. It will take much longer for kumudham, vikatan or even magazines like Time to reach that stage, I think!"

"Thanks for the information!

"You are most welcome! Here is the link for related discussion, check this out!

http://depth-first.com/articles/2009/06/17/beginning-of-the-end-for-acs-journal-print-editions"

-தொடரும்

Thursday, July 16, 2009

Presumed Innocent (A or Restricted)!

வேலையிலிருந்து வழக்கம்போல அன்றும் லேட்டாக வந்தான் ராகவன். மணி 11:30 ஆயிடுத்து. குழந்தைகள் இருவரும் அவர்கள் ரூமில்தூங்கிக்கொண்டு இருங்தாங்க. அவன் மனைவி வித்யா அவர்கள் பெட்ரூமில் பெட்ல தூங்காமல் படுத்திருந்தாள்.

“இன்னும் தூங்கலையா?” என்றான் பெட்ரூமில் நுழைந்த ராகவன், வித்யா தூங்காமல் படுத்திருப்பதைப் பார்த்து.

“இல்லை”

“தூங்காமல் இன்னும் என்ன பண்ணிக்கொண்டு இருக்க?”

“மாஸ்டர்பேஷன்” என்றாள் வித்யா

“ஏன் வித்யா இப்படிப் பேசற?”

“உண்மையைத்தானே சொன்னேன்? உங்களை மாதிரி வொர்க்கஹாலிக்கு மனைவியா இருந்தால் வேற என்ன செய்வது?” என்றாள் வெறுப்புடன்.

ஏன் கேட்டோம் என்று பேசாமல் பாத்ரூமில் முகம் கழுவி வந்து படுக்கையில் விழுந்தான், ராகவன். அந்த கிங் சைஸ் மேட்ரஸில் இருவரும் இரண்டு மூலையில் படுத்து தூங்கினார்கள். அவர்கள் தாம்பத்ய வாழ்வில் இப்போதெல்லாம் காதலும் இல்லை செக்ஸும் இல்லை. 17 வருட குடும்ப வாழ்க்கை இந்த நிலையில் வந்து நின்னது.

வித்யாவுக்கும் ராகவனுக்கும் இரண்டு குழந்தைகள். மூத்தவன் அருண் எழாவது படிக்கிறான். இளையவள் லாவண்யா 5 வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.

கடந்த இரண்டு வருடங்களாகத்தான் ராகவன் - வித்யா உறவு மிகவும் மோசமாகி இருந்தது.. ராகவன் ஒரு பப்ளிக் ப்ராசெக்யூட்டர். கொலை கேஸுகளை எடுத்து குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வாங்கிக் கொடுப்பவன். ஹோமிசைடில் வேலை செய்பவன்.

ராகவன் தன்னைப்பற்றி சொல்கிறான்..கேட்டுக்கோங்க!

I'm a prosecutor. I'm part of the business of accusing, judging and punishing. I explore the evidence of a crime and determine who is charged, who is brought to this room to be tried before his peers. I present my evidence to the jury and they deliberate upon it. They must determine what really happened. If they cannot, we will not know whether the accused deserves to be freed or should be punished. If they cannot find the truth, what is our hope of justice?


அடுத்த நாள் காலையில், ராகவனுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அவனுடைய பாஸ் ஷண்முகம் பேசினார். அவனுடைய கலீக் பிரமிளா கொ லை செய்யப்பட்டுவிட்டதாக சொன்னார். அவளுடைய ஃப்ளாட்டில் யாரோ அவள் தலையில் சுத்தியல் போல ஆனால் ஷார்ப்பான ஒரு ஆயுதத்தை வைத்து அவள் மண்டையை பிளந்து கொன்று விட்டார்களாம். அவளை ரேப் பண்ணிவிட்டு பிறகு கொன்று விட்டதாக தெரிகிறது என்று சொன்னார்.

இதை கேட்டவுடன் ஷாக் ஆகிவிட்டான் ராகவன். பிரமிளா அவனுக்கு ரொம்ப க்ளோஸாக இருந்தவள். உண்மை என்னனா ராகவன் பெண்கள் விசயத்தில் ரொம்ப மட்டமான ஆள். பிரமிளா, ராகவடைய கேர்ள் ஃப்ரெண்டாக கடந்த மாதம் வரை இருந்தவள். அவள் உறவால்தான் ராகவன் - வித்யா வுடைய தாம்பத்ய வாழ்க்கையே இந்த நிலைக்கு வந்தது. பிரமிளா அழகும், கவர்ச்சியும் இளமையும் நிறைந்த ஒர் துடிப்புள்ள பெண். இரண்டு வருடம் முன்புதான் ஃப்ரெஸ் க்ராடுவேட்டாக ராகவனிடம் அஸிஸ்டண்டாக வேலைக்கு வந்து சேர்ந்தாள். வந்த கொஞ்ச நாளில் ராகவனும் அவளும் ரொம்ப க்ளோஸ் ஆகிவிட்டார்கள். ராகவனுடைய வீக்னெஸும், அவளுடைய இளமையும் கவர்ச்சியும் அதற்கு காரணம் என்று சொல்லலாம்.

ராகவன் பழசையெல்லாம் அசைபோட்டான்...

When the affair started... when they just won a big case! அவனுடன் அவன் ஆஃபீஸில் உடலுறவு கொள்ளும் போது அவள் சொன்னது-

“It's going to be so good today”

அவள் சொன்னதுபோலவே Sex was indeed good that day!

பிறகு, ஹோட்டல், அவள் அப்பார்ட்மெண்ட் மற்றும் பல இடங்களில் ராகவனும் அவளும் உறவு கொண்டுள்ளனர். அதில் காதல் எதுவும் பெருசா இல்லை! வெறும் காமம் காமம் காமம்!

அதன் பிறகு ராகவன் டைப் அவளுக்கு பிடிக்காமல் போய்விட்டது. கடந்த 3 மாதமாக இவர்கள் உறவு சுத்தமாக முறிந்துவிட்டது. அவனிடம் இருந்து உறவை முறிக்கும்போது அவள் சொன்னது இப்போது அவன் நினைவுக்கு வந்தது...

“I like you Raghavan! It is just over between us! It is not right for me anymore... I don’t want us end up as enemies...” என்று சொல்லி சுமூகமாக முடித்துவிட்டாள்.

பிரமிளா பெரிய இடத்துக்கு தாவிவிட்டாள். ராகவனுடைய பாஸ் ஷண்முகம் தான் இவனைவிட பவர்ஃபுல் என்று தெரிந்துகொண்டு, அவனிடம் தாவிவிட்டாள். அவள் எந்த ஆண்களிடமும் முயன்று தோற்றதில்லை! ஆண்கள் மேல் அவளுக்கு "அபார மரியாதை" உண்டு! She knows how to get them! They are all easy prey for her. அவளுக்குத் தெரியும், All men need is SEX! அடுத்து ராகவனைவிட பவர் அதிகம் உள்ள ஷண்முகம் பிரமிளாவுடன் பழக்கம் ஏற்பட்டு சுத்த ஆரம்பித்தான் . இதுவும் அங்கே வேலையில் உள்ள எல்லோருக்கும் தெரியும் . பிரமிளாவைப் பொறுத்தமட்டில் Sex is not a big deal! There are more important things in her life like, power, money, career, fame! She can seduce any man to get her job done!

வித்யாவுக்கு ராகவன் - பிரமிளா உறவு நல்லாவே தெரியும். அவளை கொலை செய்துவிட்டார்கள் என்று கேட்டவுடன் ராகவன் ரியாக்ஷனைப் பார்த்து அவனிடம் வந்தாள். ராகவனின் மனநிலை அவளுக்கு நன்றாகப் புரிந்தது.

“You are still in love with her? she is dead! you are still obsessing with her!” என்றாள் வித்யா.

“It was never love” என்றான் ராகவன்.

“Then what was it?” என்றாள் விடாமல்.

“It was never love” ராகவன் மறுபடியும் சொன்னான்.

இந்த கேஸை ராகவன் பாஸ், ஷண்முகம், ராகவனின் மேற்பார்வையில் விடுவதை ஃபோனில் பேசும்போது கேட்ட, வித்யா, ராகவனிடம் வந்து எரிச்சலுடன் சொன்னாள்.

“ Why YOU??? There are hundred and fifty lawyers down there! They could not find one who did not f'ck her to handle this case?”

ராகவன் திரு திருவென்று முழித்துக்கொண்டு கில்ட்டியாக ஃபீல் பண்ணுவதைப்பார்த்து ரசித்தாள், வித்யா. ஆனால் கொஞ்ச நாள் இந்த கேஸை ராகவன் மேற்பார்வையில் விட்டார்கள். ஒரு சில போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தவுடன் எல்லாமே தலை கீழா மாறியது. எவிடென்ஸ் எல்லாம் ராகவன் ஒரு மர்டர் சஸ்பக்ட்டாக ஆக்கியது.

ராகவன் பாஸ் சண்முகம் உடனே இந்தக்கேஸை ராகவனிடம் இருந்து இன்னொரு ப்ராசெக்யூட்டர் சிவராமனுக்கு மாற்றினார். இந்த கேஸை எடுத்து நடத்தும் ராகவனுடைய எதிரி சிவராமன். ராகவனும் பிரமிளாவும் ஒண்ணா சுத்துவதை பல முறை பார்த்தவன். ராகவனை சுத்தமாக பிடிக்காத அவனுடைய ரைவல்.

அதற்கு அடுத்த நாள் ராகவனை போலிஸ் அரெஸ்ட் செய்தது. அவன் ஒரு மர்டர் சஸ்பக்ட் இப்போது. பெயில் செட் பண்ணினார்கள்.

ராகவன், பிரமிளாவுடைய மாஜி காதலன் என்று வேலையில் பலருக்கும் தெரியும், அவங்க உறவு முறிந்ததும் தெரியும். அவன் அவள் ஃப்ளாட்டிற்கு போய் வந்ததற்கு ஆதாரம் இருப்பது போலவும், அவன் கொலைசெய்து இருக்கலாம் என்றும் ஆனது. மேலும் ராகவனுடைய விந்துக்கள் அவள் உடம்பில் இருந்ததாகவும் ஒரு ரிப்போர்ட் வந்தது. ராகவனுடன் உறவை அவள் முறித்ததால் ஏற்பட்ட வெறியில் ராகவன் அவளைக் கற்பழித்து கொன்னதாக செய்துவிட்டதாக கேஸ் ஜோடிக்கப்பட்டது.

ஆனால் ராகவனின் இன்னொரு காவல்துரை நண்பன் சம்பத் ஹோமிசைடில் வேலை செய்தான். சம்பத் ஒரு ஹோலமிசைட் காப். ராகவனும் அவனும் பல கேஸ்களில் வேலை செய்து இருக்காங்க. அவன் அடிக்கடி கேஸ் பற்றி பல தகவல்கள் சொன்னான். கேஸ் போகும் வளைவுகளையும் கவனமாகப் பார்த்துக்கொண்டு வந்தான்.

முதலில், கோடிக்கணக்கில் பணம் செலவழித்து ஜாமினில் வெளியே வந்தான் ராகவன். பிறகு ட்ரயல் ஆரம்பித்தது. சபாபதி என்கிற பெரிய கிரிமினல் வக்கீலை ஹயர் பண்ணினான். சபாபதி, ராகவனுக்காக வாதாடினார். ஆனால் ராகவன் கொலை செய்து இருக்கலாம் என்று எல்லோரும் நம்புவதுபோல் இருந்தது. கேஸில் பலவிதமான ஓட்டைகளை காட்டி, சபாபதி வாதாடினார். கடைசியில் போதுமான ஆதாரமில்லாமல் கேஸை தள்ளுபடி செய்தார்கள்.

கேஸ் வெற்றியடைந்த பிறகு அடுத்த நாள், ஆபிஸிலிருந்து புறப்பட்ட ராகவன் பார்க்கிங் லாட்டில் இருந்து அவன் காரை எடுக்கப்போகும்போது, அவன் நண்பன் சம்பத், வந்தான்.

“கார்ல ஃப்ளாட் டயர். ரைட் கொடுக்கிறயா?” என்றான் சம்பத்.

“சரி வா” என்று ராகவன் அவனுடைய "மெர்சிடெஸ் பென்ஸ்" காரில் ஏற்றிக்கொண்டு ஸ்டார்ட் பண்ணினான். கார் கிளம்பியது.

“இந்தா உனக்கு தீபாவளி பரிசு” என்று ஒரு கண்ணாடி தம்ளரை கொடுத்தான் சம்பத்.

அந்த கண்ணாடி க்ளாஸ் ராகவனுக்கு எதிராக இருந்த ஒரு பெரிய எவிடெண்ஸ். அதில் ராகவனுடைய கை ரேகை நன்றாக பதிந்து இருந்தது. அதை பிரமிளா வீட்டில் கொலைநடந்த இடத்திலிருந்து எடுத்து வந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அந்த கண்ணாடி க்ளாஸ் எப்படியோ காணாமல் போய்விட்டது. போலிஸ் தரப்பில் தப்பு என்று வந்துவிடும் என்று அது காணாமல் போனதை வெளியில் சொல்லாமல் மூடிமறைத்து விட்டார்கள் ப்ராஸெக்யூட்டர் மற்றும் போலிஸ் தரப்பில். இந்த கேஸ் தள்ளுபடியாக அது ஒரு முக்கிய காரணம்.

“இதெப்படி உன்னிடம் வந்தது!!!” என்றான் ராகவன்.

“நான் வேற ஒரு விசயமாக போனபோது இது அங்கே இருந்தது, வேற யாரும் பக்கத்தில் இல்லை. இதை அங்கேயிருந்து எடுத்து வந்து என்னுடைய அறையில் வைத்திருந்தேன. என்னிடம் வந்து யாரும் எதுவும் கேட்கவில்லை" என்றான் சம்பத்.

உயிர்காப்பான் தோழன் என்கிற பழமொழி க்கு ஒரு நல்ல உதாரணம் சம்பத் தானென்று நினைத்தான். ஆனால் சம்பத் அதோட நிக்கவில்லை. காரிலிருந்து அவன் வீட்டில் இறங்கும்போது

“ஆமா என்ன நடந்தது?” என்றான் சந்தேகத்துடன்.

“சம்பத்! நீயும் நான் தான் அவளை கொன்னேன்னு நினைக்கிறயா?” என்றான் ராகவன் பரிதாபமாக.

“உன் கை ரேகை இதில் நல்லாப் பதிந்து இருக்கு. இது பிரமிளா வீட்டிலிருந்து எடுத்து வந்தது ” என்றான் சம்பத் . அவனும் ராகவந்தான் கொலை செய்தான் என்று சந்தேகப்படுவது நல்லாத்தெரிந்தது. ராகவன் முகம் மாறிவிட்டது.

"சரி இதை விடு" என்று முடித்தான் சம்பத். அந்த கண்ணாடி தம்ளரை அவன் வீட்டருகில் இருந்த ஒரு சின்ன ஓடையில் தூக்கி எறிந்தான் சம்பத்.

ராகவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ராகவன்தான் பிரமிளாவை கொன்றுவிட்டான் என்று எல்லா வக்கீல்களும், போலிஸும் மற்றும் எல்லோருமே நம்பினார்கள்.

தன் வீட்டிற்கு சென்றான், ராகவன். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர். வீட்டில் மனைவி வித்யாவும் இல்லை. அவள் அவளுடைய வேலை சம்மந்தமாக யுனிவேர்ஸிட்டிக்க்குப் போயிருந்தாள். கதவைத்திறக்கும்போது வீட்டுக்கதவில் ஒரு ஆணி ஒன்று கழண்டு வந்திருந்தது. அதை சரி செய்வதற்காக, தன்னுடைய கீழேஎ பேஸ்பெண்ட் போய் அவன் "டூல் பாக்ஸில்" இருந்த சுத்தியல் ஒன்றைத் தேடினான் ராகவன். அப்போ அங்கே இருந்தது ரத்தக்கறையுடன் அந்த கொலையில் பயன்படுத்திய ஆயுதம்!! அதை எடுத்து அதில் உள்ள ரத்தத்தை கழுவினான், ராகவன்.

அப்படி அந்த ஆயுதத்தைக் கழுவிக் கொண்டிருக்கும்போது அவன் மனைவி வித்யா அங்கே வந்தாள். கிரிமினல் லாயர் ராகவனுக்கு எல்லாமே தெளிவாகப் புரிந்துவிட்டது. எல்லாமே ஒரு ப்ளாட். ஏன் எல்லோரும் தன்னை ஏன் இப்படி சந்தேகப்பட்டார்கள் என்று விளங்கியது!

அவன் கேட்பதற்கு முன்பே வித்யா தன் கணவனிடம் கண்ஃபெஸ் பண்ணினாள்...

You understand what happened had to happen. It couldn't have turned out any other way. A woman's depressed - with herself, with life. With her husband, who had made life possible for her, until he was... bewitched... by another woman. A destroyer.

Abandoned. Like someone left for dead. She plans her suicide...until the dream begins. In the dream, the destroyer is destroyed. That's a dream worth living for.

Now, with such simplicity, such clarity, everything falls into place. It must be a crime that her husband can declare unsolved and be believed by all the world. She must make it look like a rape, but she must leave her husband the clues. Once he discovers who it was, he'll put the case into the file of unsolved murders. Another break-in by some sex-crazed man.

But all his life, he'll know that it was her.

She remembers a set of glasses she bought for the woman some time before; a housewarming gift from her husband and his office. She buys another set. Her husband has a beer one night - doesn't even comment on the glass. Now she has his fingerprints. Then on a few mornings... she... saves the fluid that comes out when she removes her diaphragm. Puts it in a plastic bag. Puts the bag in the basement freezer, and... waits.

She calls the woman and asks to see her; stops first at the University where she works for her PhD and logs into the computer. Now she has her alibi.

She goes to the woman. The woman lets her in. When her head is turned, she removes the instrument from her bag and strikes. The destroyer is destroyed. She takes a cord out that she brought along, and ties her body in ways her husband described that perverts do. She feels power; control. A sense that she's guided by a force beyond herself. She takes a syringe and injects the contents of the ziploc bag. Leaves the glass on the bar. Unlocks the door and windows.

And goes home. And life begins again.

Until a trial, when she sees her husband suffer the way she never intended. She was prepared to tell the truth, right up to the very end. But magically, the charges were dismissed.

The suffering was over. And they were saved!
என்று சொல்லி முடித்தாள்

"SAVED???" என்றான் ராகவன் அழுகையும் விரக்தியுமாக.

ராகவன் தன் மனசாட்சியுடன் பேசுகிறான்...

The murder of Ms Pramila remains unsolved. It is a practical impossibility to try two people for the same crime. Even if it wasn't, I couldn't take his mother from my son. I am a prosecutor. I have spent my life in the assignment of blame. With all deliberation and intent, I reached for Pramila. I cannot pretend it was an accident. I reached for Pramila, and set off that insane mix of rage and lunacy that led one human being to kill another. There was a crime. There was a victim. And there is *punishment*.


-முற்றும்

Americans' morals generally suck big time! They would not mind burrying the facts and punishing the weaker one and living with the crime! They always act like this guy, Raghavan. They trust God and they are SELFISH and they think God will always put up with their bullshit. You can see their moral sucks everywhere. I always wonder about their conscience and how their minds are all so screwed up.

Impotant Note!

இது என் கதை இல்லைங்க. Presumed Innocent னு ஒரு படம் வந்தது.ஒரு நாவலும் இருக்குனு நினைக்கிறேன். இது அந்தப்படத்திலிருந்து தழுவிய கதை.



ஒரு ரிவியூ எழுதலாம்னு பார்த்தேன். அப்புறம் ரிவியூவை வித்தியாசமா தமிழ்ல கதையா எழுதலாம்னு பார்த்தேன். பெயெரெல்லாம் தமிழில் மாற்றப்பட்டு இருக்கு. கடைசில அது இப்படி ஒரு shape க்கு வந்து முடிந்து இருக்கு!

Check out Presumed Innocent in IMDB! Some of the contents given here in English are just "copy-paste" from memorable quotes of Presumed innocent.

Tuesday, July 14, 2009

மிளகாயின் காரத்திற்கு யார் காரணம்?



ஏன் இனிப்பு இனிக்குது? ஏன் மிளகாய் உறைக்கிதுனு பதில் சொல்வது கடினம். ஆனால் சர்க்கரையின் இனிப்புக்காரணம் என்ன? மிள்காயின் உறைப்புக்கு காரணம் என்னனு ஓரளவுக்கு சொல்லிவிடலாம். பொதுவா இதுபோல் தன்மைகளுக்குக் காரணம் ஏதாவது ஒரு கெமிக்கலாகத்தான் இருக்கும்.

இனிப்புக்கு காரணம், க்ளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் என்பது நமக்கு எல்லாம் தெரியும்!

The structure of D-Glucose is given down here!




அதேபோல மிளகாயின் உறைப்புக்கு காரணமும் ஒரு கெமிக்கல்தான். "நாகா" என்கிற ஒரு மிளகாய்தான் உலகத்திலேயே அதிகமான உறைப்புத்தன்மை கொண்டது.

ஏன் இது மட்டும் அப்படி உறைக்குது என்றால் இதில் உள்ள ஒரு Organic chemical தான் காரணம்! அதன் பெயர் "கேப்சாஸின்".

அதனுடைய வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!




மிளகாய்க்கு உறைப்புத்தன்மையை கொடுக்கக்கூடிய கேப்சாஸின் என்கிற இந்த கெமிக்கல் அதிக அளவு நாகா மிளகாயில் இருப்பதால் இது அதிகமாக உறைக்கிறது. இந்த கெமிக்கலும் இதனுடைய பல டெரிவேடிவ் களும்தான் மிளகாய்களின் உறைப்புத்தன்மைக்கு காரணம்.

Saturday, July 11, 2009

நான் எப்படி "வயாகரா" வை கண்டுபிடித்தேன்?

அறிவியலில் பல பெரிய கண்டுபிடிப்புகள் ஆக்ஸிடெண்டல் டிஸ்கவரிதான். பெனிசிலின் மற்றும் பல மருந்துகள் அப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல், வயாகரா என்கிற இந்த உலகப் புகழ்பெற்ற “ஆண்மை வீரியம்” கொடுக்கும் மருந்தை கண்டுபிடித்தது ஒரு எதிர்பாராத கண்டுபிடிப்பு. நான் எப்படி வயாகராவை கண்டு பிடித்தேனென்று அந்த கண்டுபிடிப்பாளர் எழுதிய ஒரு ஆர்ட்டிகிளில் இருந்து முக்கியமான விசயங்களை தமிழாக்கம் செய்துள்ளேன்.

http://www.cosmosmagazine.com/features/print/1463/how-i-discovered-viagra

அதாவது இந்த மருந்தை “ஆண்மையை” வலுப்படுத்த இவர்கள் முயன்று கண்டுபிடிக்கவில்லை.

அப்போ எப்படி கண்டு பிடித்தார்கள்?

”ஆன்ஜினா” என்கிற ஒரு மார்புவலி இருக்கிறது. இது மாரடைப்பு அல்ல! மாரடைப்பு வருவதற்கு அறிகுறி. அதாவாது உங்க இதயத்தில் உள்ள நரம்புகளில் ரத்தம் சரியாக ஓடாமல் லேசாக அடைத்து இருப்பதால் வருவது இந்த வலி. இது மாரடைப்பு பின்னால் வருவதற்கு அறிகுறி.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் பார்க்கவும்.

இது ஆஞ்சினா வரும் மாரடைப்பு அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு உள்ள ரத்தக்குளாயில் ஏற்படும் அடைப்பை காட்டுகிறது.


இந்த ஆஞ்சினா வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்த இந்த வயாகரா கண்டுபிடிப்பாளர்கள், க்ளினிக்கல் ட்ரயல்ஸ் செய்யும்போது ஆஞ்சினா உள்ளஒரு சில வாலண்டீர்களுக்கு, “வயாகரா” மருந்தை கொடுத்து ஆஞ்சினாவை சரி செய்ய முடியுமா? என்று பார்த்தார்கள்.

அப்படிப் பார்க்கும்போது. ஆஞ்சினா உள்ள அந்த நோயாளிகளுக்கு “எரக்ஷன்” அதிக நேரம் இருப்பதாகவும். சிலருக்கு பல மணி நேரங்கள் தொடர்ந்து இருப்பதாகவும் அந்த நோயாளிக ள் “மகிழ்ச்சியுடனும் பயத்துடனும்” வந்து சொல்லி இருக்கிறார்கள்.

உடனே, ஆஞ்சினாவை ப்பற்றி மறந்துவிட்டு, ஆண்மைக்மகுறைவு உள்ளவர்களுக்கு அதே மருந்தை கொடுத்து ப் பார்த்து இருக்கிறார்கள். ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கும “எரெக்ஷன்” வர ஆரம்பித்து சில மணி நேரங்கள் தொடர்ந்து இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

கடைசியில் இது ஆண்மைக்குறைவுக்குநிவர்த்தி செய்யும் மருந்தாக வயாகராவாக மாறி, பல ஆயிரம் கோடி ஃபைசருக்கு கொடுத்து மிகப்பெரிய மார்க்கட்டை பிடித்தது.

What is important for a scientist is that very careful observation. One should not just look ONLY for what you anticipate. You should observe and note the result, which might not be what you anticipated. That is how lots of great discoveries have been made.

ஆண்களுக்கு முடி உதிர்தலுக்கு காரணமான ஹார்மோன்!

ஆண்களுக்கு பெரிய பிரச்சினை ஆரம்பிப்பது அவர்கள் இளம் வயதிலேயே தலை முடி உதிர ஆரம்பிக்கும்போது. அதேபோல் பெண்களுக்கு முகத்தில் லேசாக மீசை வளர்வதும் ஒரு சின்ன குறைபாடு. இது இரண்டுமே நடப்பது அவர்கள் உடலில் செக்ஸ் ஹார்மோன் சுரக்க ஆரம்பித்த பிறகு. அதாவது பொதுவாக பதின்ம வயதுக்கு மேல். இந்த குறைபாடு ஒரு மாதிரியான ஹார்மோனல் இம்பேலண்ஸால்தான்.

இது இரண்டுக்குமே காரணமான ஒரு ஹார்மோன் டைஹைட்ரோடெஸ்டாஸ்டீரோன் என்கிற ஒரு ஸ்டெராயிட்.



இது ஆண் செக்ஸ் ஹார்மோன் டெஸ்ட்டாஸ்டீரோனுடைய மெட்டபொலைட். டெஸ்டாஸ்டீரோனுடைய ரிடக்சன் ப்ராடக்ட்னு சொல்லலாம். ஆனால் இதை டெஸ்டாஸ்டீரோனாக திரும்ப மாற்ற முடியாது. It is an irreversible process.

கொலெஸ்டிரால் (we all know excess of cholesterol presence can cause heart disease) என்கிற ஸ்டெராயிட் மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒரு லிப்பிட். அது இல்லாமல் மனிதன் வாழமுடியாது. கொலெஸ்டிராலில் இருந்துதான் இந்த ஆண் மற்றும் பெண் செக்ஸ் ஹார்மோன்கள் டெஸ்டாஸ்டீரோன் மற்றும் எஸ்ட்ரோஜன்ஸ் உருவாகிறது.

ஆண்களுக்கு டெஸ்டாஸ்டீரரோன் என்கிற ஹார்மோன் கொலெஸ்டிராலி லிருந்து உருவாக்கப்படுகிறது. அதாவது கொலெஸ்டிராலை டெஸ்டோஸ்டீரோனாக மாற்றத் தேவையான என்சைம்கள் ஆண்களிடம் இருக்கின்றன.

அதே சமயம் பெண்களுக்கு எஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன்கள் கொலெஸ்டிராலில் இருந்து உருவாகிறது. பெண்களுக்கும் முதலில் டெஸ்டாஸ்டேரோன் தான் உருவாகிறது, பிறகு இது எஸ்ட்ரொஜெனாக மாற்றப்படுகிறது. அதற்கு தேவையான என்சைம், அரொமட்டேஸ் என்கிற ஒன்று. இந்த என்சைம் பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆண்களுக்கு கிடையாது. அதனால் பெண்களுக்கு உருவாகும் டெஸ்டாஸ்டீரோன், அத்தோடு நிற்காமல் எஸ்ட்ரோஜெனாக மாறிவிடுகிறது. இதுதான் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு மற்றும் பல விசயங்களுக்கு காரணமானது. ஆண்களுக்கு அரொமடேஸ் என்கிற இந்த என்சைம் இருப்பது கிடையாது. அதனால் அது டெஸ்டாஸ்டீரோனுடன் நின்றுவிடுகிறது.

Anyway, the point I want to share here is Dihydrotestosterone is believed to be responsible for developing baldness in men and for the growth of facial and body hair in women. This steroid is also important for men for being a "man". When the amount of this steroid becomes little bit more excess it causes baldness in men. Also, females have a very little testosterone compared to men, which is also believed to be responsible for their sexual drive. But if they have little more excess and get converted to dihydrotestosterone, it causes some trouble like facial hair and body hair of that sort of abnormalities. The same DHT is one which is causing the formation facial and body hair in men as well.

Thursday, July 9, 2009

மைக்கேல் ஜாக்சனின் தோல் வியாதி!

பல உண்மைகள் இப்போ வெளியே வருகிறது. மைக்கேல் ஜாக்சன் எப்படி வெள்ளையா மாறினார்? உடம்பை ப்ளீச் பண்ணிவிட்டார் அது இதுனு சொன்னார்கள். இப்போ அவருடைய டெர்மடாலஜிஸ்ட் சொல்கிறார். அவருக்கு தோல் வியாதி இருந்தது என்று.

வெண்குஷ்டம் (vitiligo) என்று சொல்வார்கள் நம்ம ஊரில். இதற்கும் லெப்ரோஸிக்கும் சம்மந்தமே இல்லை. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாது. ஒட்டுவார் ஒட்டி அல்ல! மேலும் ஒரு பயங்கர வியாதியே இல்லை. ஆனால், உடம்பில் ஏற்படும் அந்த வெள்ளை நிற பாட்ச்சஸ் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். ஒரு சிலருக்கு இதை சரிப்படுத்திவிடலாம். ஒரு சிலருக்கு இது மிகவும் வேகமாகப் பரவும், அதனால் க்யூர் பண்ண முடியாது. வைட்டமின் குறைவுதான் இந்த காரணம்.

இவருக்கு அந்த வியாதி வந்ததால், அதை சரிப்படுத்த முடியாத நிலையில், உடம்பு முழுவதும் அதைப்பரப்பி முழுவதுமாக வெள்ளையாகிவிட்டார் என்பதுதான் உண்மை என்கிறார்கள்.

Tuesday, July 7, 2009

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 10


பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9


ஸ்டீவ் மிக்னெய்ர்- மைக்கல் ஜாக்சன் மரணத்துக்குப்பிறகு, அமரிக்காவில் அடுத்த பரபரப்பு செய்தி இது தான், இவரை இங்கே இழுத்து வர முக்கிய காரணம் இருக்கிறது!

முதலில் செய்தி: முன்னாள் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் ஸ்டீவ் மிக்னெய்ர்(வயது :36), தன் கள்ளக்காதலி சாஹில் கசிமியால் சுட்டுக்கொல்லப்பட்டார். கசிமியும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கசிமிக்கு 20 வயது, ஹோட்டல் வெயிட்ரெஸ். க்ரைம் சீனில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி கசிமியினுடையதாம். ஸ்டீவ் ஏற்கெனெவே திருமணமானவர், மனைவியின் பெயர் மிஷல், இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் இருக்கிறதாம், மனைவிக்கு இந்தக்கள்ளக்காதலைப்பற்றி எதுவும் தெரியாதாம்!

என்னுடைய தோழிகள் வீட்டுக்கு வந்திருந்த போது இந்தச்செய்தியை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது, உடனே ஆளாளுக்கு டிஸ்கஷனில் இறங்கி சில தியரிகள் கண்டுபிடித்தனர்- அதில் சிலவற்றை எழுதுகிறேன்.

தியரி 1: ஸ்டீவ், கசிமியை காதலிப்பது போல நடிக்கிறார். கசிமி ஒரு ஈரானியப்பெண், மற்ற பெண்களை மாதிரி அவ்வளவு சுலபமாக மடிய மாட்டார். "மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன்" என்ற வாக்குறுதியுடன் கசிமியுடன் பழக ஆரம்பித்த ஸ்டீவுக்கு நாளாக, நாளாக கசிமி போரடிக்க ஆரம்பித்தார், கசிமியைப்பார்ப்பதை தொடர்ந்து தவிர்த்து வந்தார். காரணம் புரியாத கசிமி, விவாகரத்து செய்ய சொல்லி வற்புறுத்த, ஸ்டீவ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பிரிய மறுக்க, ஆத்திரமடைந்த கசிமி, ஸ்டீவை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டார்.

தியரி 2: இதில் கசிமி தான் வில்லி- ஸ்டீவை அடிக்கடி தான் வேலை செய்யும் ரெஸ்டாரண்டில் பார்க்கும் கசிமி, அவர் ஒரு மில்லியனர் என்பதை தெரிந்துக்கொள்கிறார். பிறகு ஸ்டீவை காதலிப்பது போல நடித்து, மயக்கி- அவரிடம் இருந்து பரிசுப்பொருட்கள், கார், வீடு போன்றவற்றை வாங்கிக்கொள்ளுகிறார். ஆசை யாரை விட்டது? கசிமிக்கு ஸ்டீவினுடைய பணம் முழுவதுமாக வேண்டும் என்ற பேராசை தொற்றிக்கொண்டது! எனவே ஸ்டீவை விவாகரத்து செய்யச்சொல்லி வற்புறுத்தினார். ஸ்டீவ் மறுத்ததோடு மட்டுமில்லாமல் கசிமியை மெல்ல கைக்கழுவ முயல, ஒரு நாள் தற்கொலை நாடகமாடி ஸ்டீவை தந்திரமாக தன் வீட்டுக்கு வர வைத்த கசிமி, "தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது" என்ற எண்ணத்தில், தன்னோடு ஸ்டீவையும் சேர்த்து கொன்றுவிட்டார்.

தியரி 3
: என்னை தனிப்பட்ட வகையில் ரொம்பவே பாதித்த தியரி இது! ஸ்டீவின் மனைவி மிஷல் இதில் குற்றவாளி. ஸ்டீவும், கசிமியும் உண்மையாகவே காதலிப்பதையும், திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதையும் அறிந்த மிஷல், கோபத்தில் ஆள் வைத்து ஸ்டீவையும், அவர் காதலியையும் சுட்டு கொன்றுவிட்டு, வசதியாக பழியை இறந்த காதலி கசிமியின் மேல் திருப்பிவிட்டார்.

இதில் எந்த தியரியும் உண்மையாக இருக்கலாம், அல்லது எல்லாமே பொய்யாகவும் இருக்கலாம். நிச்சயமாக தெரிந்தது என்னவென்றால், இறந்த ஸ்டீவ் எத்தனை திறமைசாலியாக இருந்திருந்தாலும், இவரை நினைக்கும் போதே "கள்ளக்காதலியுடன் சுட்டுக்கொல்லப்பட்டார்" என்பதும் கூடவே நினைவுக்கு வரும்! இவருடைய குழந்தைகளின் நிலையை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது. அப்பாவின் இழப்பு, கூடவே அவரின் கள்ளக்காதலால் விளைந்த அவப்பெயர்! எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம், ஸ்டீவ் அன்று காதலி வீட்டில் இல்லாமல் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு இருந்திருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பார்!.

முறையற்ற உறவுகள் எந்த அளவுக்கு ஆபத்தாக முடியலாம் என்பதற்கு ஸ்டீவ் ஒரு நல்ல உதாரணம். கசிமி, மிஷல் இவர்களில் யார் கொலைக்காரர் என்பதெல்லாம் தெரியாது, இருந்தாலும் கணவன்/காதலன் என்ன செய்தாலும் அதிகப்பட்சம் சண்டைப்போடுவது அல்லது அழுவது- இதைத்தவிர வேறு எதுவும் செய்யாமல் மெளனமான மனக்குமறல்களோடு தங்கள் வேலையை கவனிக்கும் என் அம்மா, நிம்மி போன்ற சராசரி இந்தியப்பெண்களுக்கு கோவில் கட்டினாலும் தவறில்லை.

- நினைவலைகள் தொடரும்