Friday, April 30, 2010

சுறா விஜய்யும், அவருடைய அரசியல் கனவும்!


இளயதள விசய் இன்னொரு மசாலா கலந்த படத்தோட வ்ந்திருக்காராம்! அதான் சுறா. என்ன ஒரு பேரு செலெக்சன்!

இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதிய எல்லாருமே ஒண்ணுமட்டும் சொல்றாங்க. நம்ம விசய் அரசியல்ல இறங்குவதுபோல மெசேஜ் கொடுக்குதாம்! 35 வயசுலயே இவருக்கு அரசியல் ஆசை என்பது எரிச்சலைக்கிளப்புதுனு நெறைய தடவை சொல்லியாச்சு.

இவரோட அப்பா எஸ் ஏ சந்திரசேகரா மகனை முதல்வராக்கிப்புடனும்னு பைத்தியம் பிடிச்சித் திரியிற மாதிரி இருக்கு! படத்துக்குப் படம் ஒரே மசாலா, அரைச்சமாவையே அரைக்கிறார் வருங்கால முதல்வராக ந்நெனைக்கும் விசய். ரஜினி எல்லாம் முள்ளும் மலரும், புவனா ஒரு ? 16 வயதினிலே போன்ற ஒரு சில படங்கள் பண்ணி தனக்கு நடிக்கவும் தெரியும்னு காட்டிவிட்டுத்தான் மசாலால இறங்கினார்.

ஆனா நம்ம விசய் அப்பாவை வச்சு சினிமால நொழஞ்சாரு. இப்போ நான் முதல்வராகியே ஆகனும்னு நிக்கிறார். இதெல்லாம் இப்போ தேவையா?


ஒருவேளை இந்த அரசியலில் இறங்கி கிழிக்கப்போவதுபோல பட்ம் காட்டுறதையே தன் ஃபார்முளாவா ஆக்கிக்கிட்டாரோ என்ன எழவோ!

Rediff: Give your brains a rest, and enjoy this mass masala entertainer. That much is guaranteed.

Rediff Rating: **

ரொம்ப சுமாரான விமர்சனம்தான்! மூளையில்லாதவனுக்குத்தான் இந்த சுறாங்கிறமாதிரி இருக்கு.

Indiaglitz: Strictly for Vijay fans. மத்தவங்க எல்லாம் ஒதுங்கிக்கனுமா? சுமாரான விமர்சனம்தான்!

Sify:
இது கொஞ்சம் பாஸிட்டிவ் விமர்சனம்! ஒரு கமர்ஷியல்லா வெற்றிப்படம் என்பது போல நல்லாவே எழுதி இருக்காங்க!


விஜய்படமெல்லாம் தீயேட்டரில் போய்ப் பார்க்கிறத சுத்தமா நிறுத்தியாச்சு! அதனால் விஜய்க்கு ரசிகர்/ரசிக்கைகள் கொறஞ்சிடுவாங்களா என்ன? நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிக்கிட்டுத்தான் இருக்காங்க! விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பதில் எனக்கு என்றுமே கொஞ்சம்கூட சந்தேகமில்லை!

விமர்சகர்களும், இவரோட அப்பாவும் அடிக்கடி இவரோட இந்த அரசியல் பிரவேஷம்பத்தி பேசாமல் இருந்தா விஜயை கொஞ்சமேனும் மதிக்கத் தோனும்.

Thursday, April 29, 2010

ஆண்ட்டி எவ்ளோ அழகா இருக்காங்க!- கடலை கார்னர் (51)

"ஆண்ட்டி! இவர்தான் இன்னைக்கு நம்ம ட்ரைவர்.. கண்ணன்னு சொன்னேன் இல்லயா?!"

"ஹலோ ஆண்ட்டி!"

"ஹல்லோ!"

"உங்களுக்கு ஏதாவது சமச்சுப் போட்டாளா ஆண்ட்டி? இவ சமையல வாயில வைக்க முடிஞ்சதா?"

"பிருந்தா ரொம்ப நல்லா சமைக்கிறாள், கண்ணன். நீங்க சும்மா என்னை காயத்ரினே கூப்பிடுங்களேன்!"

"இவ மட்டும் உங்களை ஆண்ட்டினு சொல்றா? இதென்ன டிஸ்க்ரிமினேஷன்?"

"இல்ல, பிருந்தா சொன்னா ஒரு மாதிரி இருக்கு.. நீங்க சொன்னா வேறமாதிரி இருக்கு"

"கண்ணன்! ஜாடையாச் சொன்னால் புருஞ்சிக்கோங்க! உங்களை பார்த்தா அவங்க வயசுமாதிரி இருக்கோ என்னவோ ? ஹா ஹா ஹா"

"ஆமா இங்கே நானும் இவங்களும அடல்ட்ஸ், நீ ஒரு டீனேஜர்! உனக்கு நெனப்புத்தான், பிருந்த்"

"நான் ஒண்ணும் டீனேஜெர்னு சொல்லல!"

"இதுக்கு முன்னால டெவான் போயிருக்கீங்களா, காயத்ரி?"

"காயத்ரியா?!!! என்ன இப்படி ஆண்ட்டிய ஏகவசனத்திலே கூப்பிடுறீங்க, கண்ணன்? " பிருந்தா சிரித்தாள்.

"ஆண்ட்டினு சொன்னா அவங்க வேணாம்ங்கிறாங்க.. வேணா அக்கானு கூப்பிடவா?"

"ஐயோ அக்கா எல்லாம் வேணாம்!"

"ஏய், உண்மையிலேயே இவங்களை பார்த்தால் உன் வயசு மாதிரித்தான் இருக்கு."

"என்வயசு மாதிரி இருக்கா? ஆமா, எனக்கு என்ன வயசுனு சொல்றீங்க இப்போ?"

"நான் சொல்லி முடிச்சுக்கிறேனே?. இருந்தாலும் கல்யாணம் பண்ணி வாழ்ந்த அனுபத்திற்காக கொஞ்சம் மரியாதை கொடுக்கனும்னுதான்.. ஆண்ட்டினேன்"

" சரியாப் போச்சு! கல்யாணம் ஆகி இருந்தா மரியாதை கொடுக்கனுமா?"

"இல்லையா? அனுபவசாலியாடுறாங்க இல்லையா?"

"அப்போ எனக்கு கல்யாணம் ஆனதும் மரியாதையா பிருந்தா மேடம்னு சொல்லுவீங்களா, கண்ணன்?"

"சொல்லீட்டாப் போச்சு! இங்கே பாருங்க காயத்ரி! நீங்க இளமையா இல்லைனு சொல்றா!"

"அவ அப்படியெல்லாம் சொல்லல கண்ணன்!"

"ஆண்ட்டி! கண்ணன் பயங்கரமா பொய் சொல்லுவாரு. நம்பி ஏமாந்திடாதீங்க! உங்க முன்னால ஒரு மாதிரி பேசுவாரு. அப்புறம் உங்க முதுகுக்குப் பின்னால் வேறமாதிரி பேசுவாரு!"

"அவருக்கு நான் ரொம்ப யங்கா தெரியிறேனோ என்னவோ, பிருந்தா! ஹா ஹா ஹா"

"அப்படி சொல்லுங்க!"

"பாவம் நீங்க, ஆண்ட்டி!"

" அவ சொல்றது உண்மைதான். உங்க முன்னால ஒரு மாதிரி, பின்னால வேறமாதிரித்தான் பேசுவேன். ஆனால் நீங்க இல்லாதபோது உங்களைப்பத்தி நல்லபடியாத்தான் பேசுவேன்"

"நல்லபடியானா என்ன அதுனு சொல்லுங்க!" என்றாள் பிருந்தா.

"நல்லபடியானா, அவங்க முதுகுக்குப் பின்னால "ஆண்ட்டி எவ்ளோ அழகா இருக்காங்க!"னு உன்னிடம் சொல்லுவேன்!"

"ஏன் அதை நேர சொன்னால் என்ன? மயங்கி விழுந்துடுவாங்களாக்கும்"

"எனக்கு உண்மையிலேயே இப்போ மயக்கம் வருது, பிருந்தா!"

"ஹா ஹா ஹா"

"பிருந்த்! சரி, ஏதாவது காஃபி கீஃபி இல்லையா எனக்கு?"

"ஆரஞ்ச் ஜூஸ் வேணா வேணுமா, கண்ணன்? உங்களுக்குகாக காஃபி எல்லாம் போட்டுத்தர முடியாது!"

"சரி அதையாவது ஊத்திக் கொடு!"

"இருங்க கொண்டு வர்றேன்."

-----------------------------------------

"இந்தியா விசிட் பண்ணுறீங்களா?"

"இல்ல கண்ணன். சும்மாதான் ரின்யுவ் பண்ணி வைக்கிறேன்!"

"உங்க எக்ஸை ஏன் அடிச்சு விரட்டிட்டீங்கனு சொல்லுங்களேன்.."

"அடிச்சு வெறட்டினேனா?!"

"இல்லை, ஐ மெண்ட் ஏன் டைவோர்ஸ் பண்ணீட்டிங்கனு கேட்டேன்?"

"என்னவோ போங்க! லவ்மேரேஜ்தான் பண்ணிக்கிட்டோம். நாளாக ஆக லவ்வையும் காணோம், மேரேஜையும் காணோம்!"

"ஐ ஆம் நாட்மேக்கிங் யு அண்கம்ஃபர்ட்டபிள், ரைட்?"

"இல்லை கண்ணன். ஐ ஆம் ஃபைன்."

"எதுவும் சீரியஸ் பிரச்சினையா?"

"தெரியலை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து போரடிச்சுருச்சோ என்னவோ?"

"அப்படினா?"

"லவ் பண்ணும்போது கத்துக்க வேண்டியது நெறையா இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வேண்டியதெல்லாம் பாக்கி இருக்கு. கலயாணத்துக்கப்புறம் அப்படி ஒண்ணூம் பெருசா இல்லாமப் போயிடுது போல. மிஞ்சுவது வெறும் வெறுப்புத்தான்."

"அன்பே இல்லாமல் எப்படிப் போகும்?"

"போகாதுதான். அன்பு, பரிவு இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனால் வெறுப்பு அதைவிட பலமடங்காயிடும். அதனால அன்பு, பரிவு எல்லாம் அதில் ஒண்ணுமில்லாமப் போயிடுது."

"ஆர் யு ஹாப்பி நவ்?"

"ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்த பிறகு சும்மா சேர்ந்து வாழ்றது இருக்கே, அது ரொம்ப சோகம்! அதுக்கு இது பரவாயில்லை!"

------------------------------

"இந்தாங்க ஆரஞ்ஜ் ஜூஸ்! ஐஸ் க்யூப்ஸ் இதிலே இருக்கு எவ்ளோ வேணுமோ போட்டுக்கோங்க!"

"தேங்க்ஸ் பிருந்த்!"

"உங்களுக்கு எப்போ கல்யாணம், கண்ணன்?"

"எனக்கா? வீட்டிலே பொண்ணு பார்த்துண்டு இருக்காங்க, காயத்ரி!"

"வீட்டிலே பார்க்கிறாங்களா!!"

"ஏன் அதிசயமா கேக்கிறீங்க?"

"இல்ல இந்தக் காலத்தில் அரேஞ்சிட் மேரேஜா பண்ணப்போறீங்க!"

"நோ அஃபெண்ஸ் பட் ல்வ மேரேஜ் எல்லாம் உங்க மேரேஜ் மாதிரித்தான் முடியுதுங்க காயத்ரி. அதான் ஜாதகம் கீதகம் எல்லாம் பார்த்துக் கல்யாணம் பண்ணலாம்னு பார்க்கிறேன்."

" கண்ணனுக்கு வர்றவ ரொம்பப் பாவம், ஆண்ட்டி!"

"சே சே"

"நெஜம்மாத்தான்!"

"ஏண்டி பாவம்? என்னவோ என்னோட வாழ்ந்து என்னை டைவோர்ஸ் பண்ணின மாதிரி சொல்லுற?"

"இல்ல இல்ல, அன்பாலேயே கொன்னுடுவீங்கனு சொல்ல வந்தேன்!"

"ரெண்டுபேரும் என்னை ரொம்பக் குழப்பாதீங்க!"

"நெஜம்மாத்தான் ஆண்ட்டி. கண்ணன் அப்பப்போ ரொம்ப ஏங்க வச்சுடுவார்!"

"ஏங்க வைக்கிறதுனா?"

"அதெப்படி சொல்றது..?"

"சரி அவங்கள போட்டு அறுக்காதே! புறப்படுவோமா?"

-தொடரும்

Monday, April 26, 2010

ராமனும் நாந்தான் ராவணனும் நாந்தான்!


விக்ரம் நடிக்க மணிரத்னம் இயக்க ராவன் அல்லது ராவணன் படம் பேரு அறிவிச்சதும் எனக்கு ஒரே குழப்பம். என்ன படம்ப்பா இது? புராணப்படமா இல்லை சமூகப்படமா? இதுபோல் க்யூரியாஸிட்டியை உருவாக்குவதே மணிரத்னத்தின் முதல் வெற்றி! போய் எல்லா விபரத்தையும் படிக்கலாம். எல்லார் கற்பனையும் வாசிச்சால் ஓரளவுக்கு கதை புரியத்தான் செய்யும். ஆனால் தலைப்பை வச்சே படத்தை யூகிப்பதே ஒரு கெட்ட பழக்க மாயிடுச்சு! தளபதி மாதிரி ஒரு சமூகப் படம் போல இருக்கு! அதாவது தளபதி "கர்ணன்" படத்தை தழுவியதுபோல இந்த ராவணன்!

இந்தப் படத்தில் என்ன விஷேசம்னா, நடிகர் விக்ரம் முதல்முறையாக மணிரத்னத்துடன் இணைவதுதான்! இவருடைய நடிப்பையும், திறமையையும் வெளிக்காட்டி ஸ்டார்வால்யுவை மேலே கொண்டுபோக மணிரத்னம் கொடுத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு இது. தமிழில் உள்ள எல்லா டாப் ஸ்டார்களும் விக்ரம் மேல் பொறாமைப் பட வைக்கும் நிலையை ராவன் அறிவிப்பும், படப்பிடிப்பும் உருவாக்கியுள்ளது.

கமலுக்கு அடுத்து விமர்சகர்களால் கண்ணா பின்னானு பாராட்டுப்பெற்ற ஒரே தமிழ் நடிகர் விக்ரம்தான்! கமலே ஒருமுறை விக்ரமைப் பற்றி விமர்சகர்கள் பாராட்டுவதைத் தாங்க முடியாமல் விக்ரமுக்கு காமெடி பண்ணத்தெரியாது என்று சொல்லி தன்னை ஒரு படி மேலே உயர்த்திக்கொண்டார்!

இன்று விமர்சகர்களால் திறம்மைமிக்க நடிகர் என்று பாராட்டப்பட்டது உண்மைதான் என்று உணர்த்தும் அளவுக்கு மணிரத்னமும் விக்ரமை நம்பி எதிரும் புதிருமான ரெண்டு ரோல்களை ரெண்டு வேர்ஷன்ல கொடுத்துள்ளாராம். அதாவது ஹிந்திப்படத்தில் இவர் ஐஸ்வர்யாராயின் போலிஸ் கணவரான தேவ் என்ற பாத்திரத்திலும், தமிழில், "outlaw" மற்றும் ஹீரோ பாத்திரமான "வீரா" வாகும் நடிக்கிறாராம்! மொத்தத்தில் ரெண்டு ரோலுமே படத்தில் முதன்மைப் படுத்தப்பட்ட கேரக்டர்கள்!

இதில் வீரா கேரக்ட்டர்தான் ஹீரோவாக இருக்கும் போல இருக்கு. போலிஸ்காரர் கேரக்டர் ரசிகர்களைப் பொறுத்தவரையில் வில்லந்தான் என்று தோனுது.

இதுமாதிரி, ராமனாகவும், ராவணனாகவும் . ஹிந்தி மற்றும் தமிழில் நடிக்கும் விக்ரம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்!

ஆமா இதில் ராமன் ராவணன் எங்கிருந்து வந்தார்கள்னு கேக்குறீங்களா? ஒரு யூகத்தில் ஈஸீயா சொல்லலாமே.

தேவ் - ராமன்

ராகினி (தேவின் மனைவி)- சீதை

வீரா (beera)- ராவணன்.

அனேகமாக ராகினியை, வீரா கடத்தி வச்சு இருப்பாரு! நிச்சயம் இந்த ராவணன் (வீரா)வும் அவரிடம் பலவந்தமாக தவறாக நடக்காமல் டீசண்டான கைதியாக வச்சிருப்பாரு! :)

ராவன், ஆடியோ ஏப்ரல் 24 ரிலீஸ் ஆயிடுச்சு. ஏ ஆர் ரகுமான் - மணிரத்னம் படப்பாடல்கள் என்னைக்கு சோடை போச்சு?

படம் ஜூன்ல வெளிவரப்போகுதுனு சொல்றாங்க! நிச்சயம் வெள்ளித்திரையில் பார்க்க வேண்டிய படம்தான்!

Let us hope the movie lives up to the expectations! We always expect too much from maNirthnam, which often bring him down these days. :)

Sunday, April 25, 2010

ரெட்டைச்சுழி- விமர்சகர்கள் ரசிக்கவில்லை!


இயக்கத்தில் ஒருவர் இமயம்னா இன்னொருவர் சிகரம்! அதில் யாருக்குமே என்றுமே சந்தேகம் இல்லை! ஆனால் நடிப்பில்? நிச்சயமாக ரஜினியளவுக்கோ, கமல் அளவுக்கோ இவர்கள் சிறந்த நடிகர்களல்ல! ரொம்ப சாதாரண நடிகர்கள்தான் பாலச்சந்தரும் பாரதிராஜாவும் என்பதை புரிஞ்சுக்கனும். எஸ் பிக்ச்சர்ஸ் புது முயற்சிதான் சிகரத்தையும், இமயத்தையும் வெள்ளித்திரையில் காட்டும் இந்த முயற்சி.

பாலசந்தரும், பாரதிராஜாவும் நடிகர்களாக தோற்காவிட்டாலும், இவர்களை வைத்து இயக்கிய இயக்குனர் தாமிரா வெற்றியடையவில்லை என்பதே விமர்சகர்களின் ஏகமனதான தீர்ப்பு! ஆனால் கார்த்திக் ராஜாவின் இசை ந்ல்லாயிருக்குனு சொல்றாங்க!

விமர்சகர்களின் பார்வையில் உள்ள மதிப்பீடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Behindwoods: Verdict: 2/5

*****

Rediff: Rediff Rating: 2/5

*****

Sify: Sify Rating: Big Bore!

Indiaglitz: பெருசா எதுவும் பாராட்டவில்லை!


எல்லா விமர்சகர்களுமே படத்தை பாராட்டமுடியாமல் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.

பதிவுலக விமர்சகர்கள் என்ன் தீர்ப்பு வழங்கியிருக்காங்கனு நான் இன்னும் பார்க்கவில்லை. எது எப்படியானாலும் கடைசியில் மக்கள் தீர்ப்பே படத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும்! அது என்னனு இன்னும் 2 வாரத்தில் தெரியும்.

இன்னொரு வதந்தி என்னனா, பாரதிராஜா கொஞ்சம் உள்ளே நுழைந்து இயக்குனருக்கு படவோட்டம், மற்றும் முடிவு எப்படியிருந்தால் நல்லாயிருக்கும்னு வலியுறுத்தி அவைகள் சம்மந்தமான அறிவுரைகளை அள்ளி வழங்கினாராம். அதுக்கப்புறம் இவர்களுக்கிடையில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டுவிட்டதாகவும் பிறகு படத்தை முடிக்க பெரும்பாடாகிவிட்டதாக் சொல்றாங்க! :(

Saturday, April 24, 2010

டொயோட்டாவா, கொக்கா?




பல அவதூறுகளால் விற்பனை பாதிக்கப்பட்டதால், இந்த மாதம் விற்பனையை அதிகமாக்க
டொயோட்டா நிறுவனம் 0% வட்டி 5 வருடங்களுக்கு என்கிற "டீல்" ஆஃபர் செய்தார்கள். அதன் விளைவால், டொயோட்டா கேம்ரி, மற்றும் டொயோட்டா கரோல்லா இரண்டும் ஹாண்டா அக்கார்டின் விற்பனையைவிட அதிகமாக விற்கப்பட்டு அவைகளின் விற்பனை ராங்க் மேலே வந்துள்ளது.

மேலே உள்ள படத்தில் 10 வது ஜெனெரேஷன், டொயோட்டா கரோல்லா!

அமெரிக்காவில் மார்ச் 2010 விற்பனையில் டாப்-10 கார் விற்பனை விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) Ford F-Series: 42,514
2) Toyota Camry: 36,623
3) Toyota Corolla: 29,623
4) Chevrolet Silverado: 29,886
5) Honda Accord: 29,120 (2,587 Crosstours)
6) Toyota RAV4: 25,781
7) Nissan Altima: 24,649
8) Ford Fusion: 22,773
9) Honda Civic: 22,463
10) Ford Focus: 19,500

கடந்த மாதம் (ஃபெப் 2010) விற்பனை விபரம்!

1. Ford F-Series: 32,895
2. Honda Accord: 22,456 (including 2,432 Crosstours)
3. Chevy Silverado: 19,822
4. Toyota Corolla: 16,996
5. Toyota Camry: 16,552
6. Honda Civic: 16,471
7. Ford Fusion: 16,459
8. Nissan Altima: 16,198
9. Ford Escape: 15,156
10. Chevy Malibu: 15,150


டொயோட்டா கேம்ரி விற்பனை இதேபோல் தொடர்ந்து மேலேயே இருக்குமா என்பது அடுத்த மாதம் தெரியும். :)

Friday, April 23, 2010

ஒரு பிறவி! மூன்று வாழ்க்கைகள்!

பாஷா படத்துல (வைரமுத்து/வாலி ?) தத்துவப்பாடல் ஒண்ணு இருக்கும், அதுல 64 வயதானதும், ஒருவருக்கு வாழ்க்கையே முடிந்துவிட்டது போலவும் அதுக்கு மேலே உயிரோட இருந்தால் நிம்மதியில்லைனு ( நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்ல) னு எழுதி இருப்பார். இது நம் வாழ்க்கைமுறையில் ஓரளவுக்கு உண்மைதான்.

அந்தக்காலத்துப்படம் வியடநாம் வீடுவில் சிவாஜி (ப்ரஸ்டிஜ் பத்மநாபன்) ரிட்டயர்ட் ஆனவுடன், ஒழுங்கா பிற்காலத்தை யோசித்து சேமித்து வைக்காததால, அவரால் அதுக்கப்புறம் வரும் வாழ்க்கையை ஈஸியாக எடுத்துக்க முடியாது! வயதானவுடன் பணம் இல்லை, (தன் மருத்துவச் செலவுக்குக்கூட), ஏகப்பட்ட கம்மிட்மெண்ட்ஸ் இன்னும் இருக்கு என்று வரும்போது, தான் சிறுவயதில் செய்த (தெரிந்தோ தெரியாமலோ) பாவத்தையெல்லாம் இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பதுபோல ஆயிடுது பலருடைய வாழ்க்கை!

வயதானதும் என்ன வேணும்? பணம்தான்! எதுக்கு? மருத்தவச் செலவுக்கு! சாப்பாட்டுக்கு! ஆனால் வருமானம் இல்லையே?


நம்மில் பலர், குழந்தைகளுக்காக எல்லாத்தையும் கொடுத்துட்டு, கடைசியிலே வள்ந்தவுடன் அவங்ககிட்ட திட்டு வாங்கிக்கிட்டு, தன் கெளரவம், மரியாதை எல்லாத்தையும் இழந்து வயதான காலத்தில் பரிதாபமாக வாழ்கிறார்கள். இது பத்தாதுனு, இவர்களுக்கு ஏதாவது பெரிய வியாதி வந்துவிட்டால், இவர்கள் வாழனும்னு ஆசைப்பட்டாலும், அதற்கான செலவை செலவுசெய்ய அவர்கள குழந்தைகளால் முடிவதில்லை! ஹெல்த் இண்சூரண்ஸ் இருப்பதில்லை.

பொதுவாக, அமெரிக்கா, அலலது எந்த மேற்கத்திய நாடுகள்னா, 65 வயதுக்குமேலே இவர்களுக்கு Medicare/Medicaidஹெல்த் இண்சூரெண்ஸ் (எல்லா குடிமகன்/ள் களுக்கும்!) அரசாங்கமே கொடுக்குது. இதனால் இவர்கள் நல்ல மருத்துவ உதவியால் 90 வ்யதுவரைக்கும்கூட உயிர் வாழ்றாங்க!

வாழ்க்கை 1 (phase 1):

பொதுவாக, சிறுவயதில் 30 வயதுவரைக்கும், பயமறியாமல் பல உறவுகள் வச்சுக்கிறாங்க, எல்லாவிதமான கெட்ட பழக்கமும்கூட செய்றாங்க! ஒரு சிலர் ட்ரக் அடிக்ட்டாகி வீணாவும் போயிடுறாங்க! (மைக்கேல் ட்க்லஸ் மகன் ட்ரக் டீலரானது போல) . ஆனால் பெரும்பாலும், பலருடனும் வாழ்ந்து 30 வ்யதில் யாரோடையாவது ஒரு நம்பிக்கையான ஆளுடன் செட்டில் ஆகிறாங்க! சீரியஸாக தன் வாழ்க்கைய ஆரம்பிக்கிறாங்க!


வாழ்க்கை 2 (phase 2) :

30-65 வயதுவரை, தனக்கு பிற்காலத்திற்கான "சேவிங்ஸ்" வெகுகவனமாக பண்ணி வச்சுக்கிறாங்க! தன் குழந்தைகள் பணத்தில் பிற்காலத்தில் வாழுவதாக இவர்கள் நினைப்பதில்லை! குழந்தைகள் பெற்றுக்கொண்டு அவர்களை 18 வய்துவரை நல்லா கவனித்து மேலே கொண்டுவந்து விட்டு விடுறாங்க. கல்லூரிப் படிப்பு ரொம்ப எக்ஸ்பெண்ஸிவ் என்பதால் பொதுவாக குழந்தைகள் அரசாங்க கடனுதவி வாங்கித்தான் படிக்கிறாங்க! பொதுவாக குழந்தைகளே 18 வயதுக்கு மேலே தன் சுதந்திரத்தைக் கருதி பெற்றோருக்கும் பாரமாக இல்லாமல் வெளியே போயிடுறாங்க.


வாழ்க்கை 3 (phase 3) :

இந்த கடைசி ஒண்ணு இவர்கள் 65-90 வயதில் வாழும் வாழ்க்கை! இது தான் நமக்கு ரொம்ப வித்தியாசமான தோன்றும் ஒண்ணு. வயதான இவர்கள் எல்லா வியாதியுடனும், தானே தன் காரை ஓட்டிக்கொண்டு, தனக்கு ஷாப்பிங் பண்ணிக்கொண்டு வாழ்கிறார்கள். கண்ணும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது, ஆனால் அனுபவத்தால் எப்படியோ கார் மட்டும் இவர்களால் இன்னும் ஓட்டமுடியுது!

இந்த வயதில் இவர்கள் தன்னுடைய வீட்டு மார்ட்கேஜ் செலுத்தி முடிச்சுறாங்க. அந்த சொந்த வீட்டை விற்றுவிட்டு ஒரு சின்ன அப்பார்ட்மெண்ட்க்கு போய் வாழ்றாங்க.

இந்த வயதான சமயத்தில், இவர்கள் டைவோர்ஸி அலலது இயற்கையாகவே தன் துணையை இழந்துட்டாங்கன்னா, வெட்கமே படாமல் இன்னொரு துணையை தேடிக்கிறாங்க! தன் கணவன்/மனைவியுடன் வாழ்ந்த காலம் பழைய காலமாகப் போயிடுது இவங்களுக்கு. இன்றைய வாழ்வில் உள்ள துணையுடன் தன் இன்பதுன்பங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து முடிக்கிறாங்க.

இவர்கள் வாழும் இந்த மூன்றாவது வாழ்க்கை இன்னும் நம் கலாச்சாரத்தில் சரியான புரிதல் இல்லை! நம்ம ஊர்ல வயசான பிறகு துணை வேணும்னா, அவங்க தேவைகளை புரிஞ்சிக்காம. நம்ம ஆட்கள் ஒரு மாதிரியா பார்ப்பதுடன், பலவிதத்தில் துன்புறுத்த ஆரம்பிச்சுடுவாங்க! இதனால் இதுபோல பலவகையில் குழம்பி, யாருக்கும் தெரியாமல் தவறு செய்றாங்க.

க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தன் 65 வயதில் ஒரு குறைந்த வயது அம்மாவை மணந்து குழந்தையும் பெற்றுக்கொண்டார். இதையெல்லாம் யாரும் பெருசா எடுத்திக்கிறதில்லை.

பொதுவா மேலை நாடுகளில் இதுபோல் இன்னொரு துணை தேடும் இவர்களுடைய குழந்தைகள் இந்த சமயத்தில் இரண்டாவது வாழ்க்கையில் இருக்காங்க (30-65 வயதில்). அவர்களும் வயதான தன் பெற்றோர்கள் இன்னொரு துணையைத தேடிக்கொள்வதைப்புரிஞ்சுக்கிறாங்க. ஒரு சில பெற்றோர்கள் இன்னொருவரை திரும்ணம்கூட செஞ்சிக்கிறாங்க. இல்லைனா கேர்ள் ஃப்ரெண்டு/பாய் ஃப்ரெண்டாக இருந்துக்கிறாங்க). இதுபோல வயதான காலத்தில் இவர்கள் செய்வதை இவர்களுடைய மகன்/மகள்கள் சின்ன மனக்கசப்புடன் மன்னித்து புரிஞ்சிக்கொண்டு, ஏற்றுக்கிறாங்க!


நம்ம ஞாநி, மு க ஓய்வெடுக்கனும், ஓய்வெடுக்கனும்னு எழவைக்கூட்டி ஒரு ஆயிரம் கட்டுரை எழுதி இருப்பார். இதுபோல் வயதானவர்களை வயதை ஒரு காரணமாகச் சொல்லி "டிஸ்க்ரிமினேஷன்" செய்வதெல்லாம் மேலை நாடுகளில் வரவேற்கப் படாது!

Wednesday, April 21, 2010

காயத்ரி ஆண்ட்டி! கடலை கார்னர் (50)

"பாஸ்போர்ட் கொடுத்துட்டாங்களா, ஆண்ட்டி?"

"ஆமா, பிருந்தா, பிரச்சினை எதுவும் இல்லை! "

"கண்க்ராட்ஸ்! வீட்டுக்கு போகலாமா? நாளைக்கு டெவான்ல போயி ஷாப்பிங் பண்ணலாம்! வேற எங்கேயும் எதுவும் வாங்கனுமா ஆண்ட்டி, சிகாகோல?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல!"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையா? ஹா ஹா ஹா"

"எதுக்கு சிரிக்கிற, பிருந்தா?"

"இல்ல, ஏதோ ஞாபகம் வந்துருச்சு. சாரி ஆண்ட்டி!"

"என்ன ஞாபகம் வந்துச்சு"

"அப்புறம் சொல்றேனே, ப்ளீஸ்? அப்புறம் நாளைக்கு காலையில என் ஃப்ரெண்டு கண்ணன் னு ஒருத்தர் இருக்காரு. அவரும் நம்மளோட டெவான் ஸ்ட்ரீட் வர்ராரு. அவர்தான் நம்ம ட்ரைவர்! உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லைதானே?"

"இல்லை பிருந்தா. யார் அவரு?"

"ஃப்ரெண்டுதான், நல்லாத் தமிழ்லயும் பேசுவாரு!"

"ஃப்ரெண்டுனா?"

"நண்பர்னு தமிழ்ல சொல்லுவாங்க இல்ல, ஆண்ட்டி?!"

"அது இல்ல... வேற மாதிரி ரொம்ப க்ளோஸா?"

"இப்படி நொழச்சுக்கேட்டால், அவர் உங்ககிட்ட ஒரு பதில் சொல்ல சொன்னாரு! சொல்லிடவா?"

"என்ன சொல்லச் சொன்னாரு?"

"கார்ல வேணாம். வீட்டுக்குப் போனதும் சொல்றேன்."

"சரி"

-----------------------------------

"இந்தாங்க காஃபி, ஆண்ட்டி! சுகர் அதிகமா வேணும்னா போட்டுக்கோங்க!"

"தேங்க்ஸ்!"

"ஆமா, கண்ணன் என்ன சொல்லச் சொன்னாரு?"

"உங்க காதிலே சொல்லவா?"

"ம்ம்"

" "

"ச்சீ! நீ ரொம்ப மோசம் பிருந்தா! பாய்ஃப்ரெண்டுனு சொல்ல வேண்டியதுதானே? அதுக்காக இப்படியா?"

"பாய்ஃப்ரெண்டுனு சொன்னா இன்னும் நெறையா கேள்வி கேப்பீங்கனுதான் இப்படி சொல்ல சொன்னாரு!"

"ரொம்ப மோசமான ஆளா, கண்ணன்?"

"ரொம்ப ரொம்ப மோசம், ஆண்ட்டி!"

"சரி எனக்கு ஒரு ஐட்டம் வாங்கனும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறியா?"

"நான் அப்போவே நெனச்சேன். என்னனு சொல்லுங்க!"

"இல்ல, இது வெளியூர்னால பிரச்சினை இல்லைனு பார்த்தேன். உனக்குத் தெரியலைனா, வேற யார்ட்டயாவது எங்கே கிடைக்கும்னு கேக்கிறியா? எனக்குனு யார்ட்டயும் சொல்லக் கூடாது! "

"என்ன ஒரே புதிர் போடுறீங்க.. என்ன ஐட்டம்? சரி என் ஃப்ரெண்டு இன்னொருத்திக்குனு சொல்றேன்"

"காதுலயே சொல்றேன், இங்கே வா!"

" "

"சரி கேக்கிறேன். கேட்டு சொல்றேன். சரியா?"

"சும்மா எங்கே கடை இருக்கு. கிடைக்குமானு மட்டும் கேளு!"

"இதெல்லாம் நிச்சயம் கெடைக்கத்தான் செய்யும். சரி கேக்கிறேன். என் ஃப்ரெண்டு ஒருத்திக்குனு சொல்லிக் கேக்கிறேன். சரியா?"

"தேங்க்ஸ், பிருந்தா!"

"ஆமா, எவ்வளவு நாளாச்சு ஆண்ட்டி உங்க டைவோர்ஸ் ஆகி?"

"மூனு வருஷமாச்சு!"

"இப்போ யாரையும் டேட் பண்ணுறீங்களா?"

"இல்ல, பிருந்தா."
----------------------------------

"என்ன பிருந்த்! எங்கே இருந்து பேசுற?"

"பாத்ரூம்ல இருந்து பேசுறேன்! ஒரு வழியா பாஸ்போர்ட் வாங்கிட்டாங்க! காயத்ரி ஆண்ட்டிட்ட சொல்லிட்டேன் நீங்கதான் நாளைக்கு எங்களுக்கு ட்ரைவெர்னு!"

"சரி, வர்ரேன். டெவான் ஸ்ட்ரீட் போறது தவிர வேறென்னவும் வாங்கனுமா அவங்களுக்கு?"

"ஆமா! அவங்ககிட்ட தெரிஞ்சமாதிரி காட்டிக்காதீங்க! மொதல்ல தயங்கினாங்க. அப்புறம் கடைசில சொல்லீட்டாங்க! ஹா ஹா ஹா!"

"ஏய் என்னனு சொல்லு!"

"அவங்க, அது என் ஃப்ரெண்டு ஒருத்திக்குனு சொல்லி யார்ட்டயாவது கேக்க சொன்னாங்க! உங்ககிட்ட கேக்கிறதுதான் எனக்கு ஈஸி! உங்ககிட்ட நான் எப்படி பொய் சொல்ல முடியும்? ஹா ஹா ஹா!"

"என்னடி சொல்ற? என்ன வேணுமாம்? சொல்லீட்டு சிரி"

"பாவம் கண்ணன்.. அவங்களுக்கு ஏதோ "டாய்" வாங்கனுமாம்."

"டாய்ஸ்ரஸ்க்கு கூட்டிப்போ!"

"அய்யோ இந்த டாய் எல்லாம் டாய்ஸ்ரஸ்ல கெடைக்காது! அவங்களுக்கு! புரியலையா?"

"புரியுது புரியுது"

"இதுமட்டும் நல்லாப் புரியுமே!"

"ஆண்லைன்ல ஆர்டர் பண்ணச்சொல்லு பிருந்த்! எந்த பிரச்சினையும் வராது."

"ஆண்லைன்லயா?"

" தட் இஸ் த பெஸ்ட் வே! காண்ஃபிடெண்ஷியலா டெலிவெர் பண்ணிடுவாங்க! யாருக்கும் உள்ள என்ன இருக்குனு தெரியாது. யு கேன் ஃபைண்ட் சம் லின்க்ஸ் ஈஸிலி!'

"சரி, அப்போ அவங்களையே ஆர்டெர் பண்ணிக்க சொல்றேன்! உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும், கண்ணன்?"

"ஸ்டெய்ஸிதான் ஒரு நாள் சொன்னாள்!"

"இதெல்லாம் அவகிட்ட எதுக்கு பேசினீங்க?"

"ஏய்! இது இன்னொரு காண்டெக்ஸ்ட்ல பேசும்போது ஏதோ ஜோக் மாதிரி சொன்னாள்."

"சரி, ஆண்ட்ட்ட சொல்றேன்!"

"ஏய் அவங்களுக்குத்தானே?"

"ஆமா! ஏன் எனக்கொண்ணு வாங்கினால் தப்பா?"

"இல்லையே."

"எனக்குத்தான் நீங்க இருக்கீங்களே?!"

"சரி, ஆண்ட்டிட்ட நான் எதையும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டேன். கவலைப் படாதே!"

"எனக்கு உங்களைத் தெரியாதா?"

"என்ன தெரியும்?"

"இந்த மாதிரி மேட்டர்ல எல்லாம் ஜோக்னு ஏதாவது பண்ண மாட்டீங்கனு தெரியும்!"

"எதுக்கும் நீ என்னிடம் கேட்டதா அவங்ககிட்ட சொல்லாதே!"

"ஸ்டெய்ஸிட்ட கேட்டதா சொல்றேன். சரியா?"

"ஓ கே டா!"

" உங்களுக்காகத்தான் ஒரு பொய் சொல்றேன்!"

"என்ன செய்வ பாவம். வாழ்க்கையிலே இதுதான் நீ சொல்ற மொதல் பொய்! இல்லையா?"

"ஹா ஹா ஹா! அப்புறம் இன்னொரு விசயம், கண்ணன்."

"என்ன பிருந்த்?"

"அவங்க கிட்ட நீங்க என்னோட "அந்த buddy" னு சொல்லியாச்சு!"

"விளையாடுறியா?"

"நீங்க சொன்ன மாதிரியே நொழச்சு நொழச்சு கேட்டாங்க.. அதான் பச்சையா சொல்லீடேன்!"

"இந்த லேடீஸே ரொம்ப மோசம்ப்பா!"

"அப்படியா!'

"சரி நாளைக்கு பார்ப்போம்!"

"லவ் யு கண்ணன்!"

"லவ் யு டூ, டார்லிங்!"

-தொடரும்

wordpress க்கு மாற்றினால் பின்னூட்டமிடுவதில்லை?!

நண்பர் கிரி, சமீபத்தில் அவர் தளத்தை வேர்ட்ப்ரஸ்க்கு மாற்றியுள்ளார். இவர் தளம் நல்லா வளர வாழ்த்துக்கள். பொதுவாக நான் வேர்ட் ப்ரஸ்ல உள்ள தளங்களில் பின்னூட்டமிட்டமிடுவதில்லை. தமிழ்மணம் தளம் மட்டும் இதற்கு விதிவிலக்கு! காரணம்? வேர்ட்ப்ரெஸ்த் தளங்களில் பின்னூட்டமிடும்போது என்னுடைய இ-மெயில் அட்ரெஸ் கொடுக்கச் சொல்கிறது. கொடுத்தால் என்ன? என்னை பொறுத்தவரையில், இ-மெயில் அட்ரெஸை எதற்காக கொடுக்கனும்னு புரியலை.

எப்படிப்பார்த்தாலும் பின்னூட்டம் என்பது அந்தத்தளத்திற்கு நீங்கள் செய்யும் சிறு உதவி! அந்த உதவியை வாங்க ஏன் இப்படி கருத்துச் சொல்ல வருபவரை ஒரு இக்கட்டுக்கு உள்ளாக்கனும்? இதை வேர்ட்ப்ரஸ் தளங்களில் உள்ள மிகப்பெரிய குறையாக நான் கருதுகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். திரட்டிகள் இ-மெயில் அட்ரெஸ் கேட்பது சரி. ஏன் என்றால் அவைகள் மூலம் நம் தளம் வளர்கிறது. ஆனால் பின்னூட்டங்களால் பின்னூட்டமிடப்படும் தளம்தான் வளருது இல்லையா? ப்ளாக்ஸ்பாட் தளங்களில் இந்தப் பிரச்சினை இல்லை! வருண் என்கிற என்னுடைய பெயரிலேயே நம்முடைய ப்ரஃபைல் மூலம் நம் தளத்திற்கு வந்து நம்மை பப்ளிக்காக அனுகலாம். அதே சமயத்தில் உங்கள் இ-மெயில் ஐ டி யைக்கொடுக்க வேண்டியதில்லை. அதனால் "பளாக்ஸ்பாட்" தளங்கள் எல்லாவகையிலும் வசதியாக தோனுது. :)))

I believe e-mail id is very personal and so blogging should not require personal details especially when internet is vulnerable for all sort of attacks and hacking!

Monday, April 19, 2010

அனுராதா ரமணன் - ஜெயேந்திர சரஸ்வதி மீள்பார்வை!

காஞ்சி சங்கராச்சார்யாவை தூய்மையானவராக்க முடியாமல் ஈ வெ ரா வை கேவலப்படுத்தும் சுழியம் போல ஹிந்து வெறியர்களுக்கு சில விடங்களை ஞாபகப்படுத்த இந்த "ரிவியூ".

நித்யானந்தா வேஷித்தனம் பண்ணி மாட்டினால் ஈ வெ ரா பற்றி பேசவேண்டியது! இதனால் நித்யானந்தா செய்தது சரி என்று ஆகாது!

ஜெயேந்திர சரஸ்வதி பத்தி அவதூறு வந்தால் ஈ வெ ரா வை திட்டவேண்டியது!
இதனால் ஜெயேந்திர சரஸ்வதி செய்தது செய்யாததாகாது!

ஒருவருடைய தரத்தை விமர்சிக்கும்போது, இன்னொருவரை விமர்சித்து அதை சரிக்கட்டப் பார்ப்பது மடமை! இதைப்போல் மடமைகள்தான் இன்றைய இந்துமத வெறியர்களின் அசாத்திய சாதனைகள்!


ஈ வெ ரா வைப்பற்றி அப்புறம் பார்ப்போம். இப்போ ஹிந்துவான அனுராதா ரமணன், "இந்து மதக்கடவுள்" போல் பிதற்றும் ஜெயேந்திர சரஸ்வதி பற்றி என்ன சொல்லியிருக்கிறார்னு பார்ப்போம்!


எழுத்தாளர் அனுராதா ரமணன் கொடுத்த நேர்முக பேட்டி இங்கே!

/////It was 1992. I had quit as editor of the Tamil magazine Shubamangala, and was editing another magazine, Valaiosai, which was not doing too well. It was at that point that I received a message from Shankaracharya Jayendra Saraswati suggesting that I edit a new spiritual magazine the math was planning to launch. I come from a family which holds the Kanchi math, especially Paramacharya Chandrasekharendra Saraswati, in high regard. My father felt this was an invitation from god. I readily agreed. A woman was deputed by the math to facilitate my meeting with Jayendra Saraswati.

During the first meeting, Jayendra Saraswati suggested that the new spiritual magazine be called 'Amma' and discussed its concept. There were to be further meetings which happened during the afternoon hours after the bhaktas completed their darshan. At these brainstorming sessions, there would be only three people in the room—Jayendra Saraswati, myself and the woman who mediated between us. This woman would fetch me in a car from Chennai and escort me to Kanchipuram.

The first four meetings were professional. During the fifth meeting, diverting from spirituality, Jayendra Saraswati started speaking vulgarly to my escort. Till then, I had been taking notes with my head bent. When I looked up I was shocked by the sight of her and the seer in close physical contact. I felt a storm had hit me. He then spoke in a lustful manner to me and expressed a desire for similar intimacy with me. I stood up, more shocked, and raised my voice and asked him, "Are you human?" To this Jayendra Saraswati did not offer a reply, instead he enquired of my escort: "As you usually do, didn't you tell this woman in advance about this?" The woman said no. Then the Shankaracharya pulled her up using abusive language.

I wanted to leave. But my escort physically tried to stop me. Jayendra Saraswati addressed me again: "Look, if you cooperate, I can extend you all kinds of benefits. This is my place. If you, who have lost your husband, can sport kumkum and be well-dressed, what's wrong if I desire you? If you talk about this incident outside the math, I will spread stories about your lack of character."

I rushed back home in a bus. I did not tell anyone about the incident. But I could not sleep. The next day the woman who had escorted me to the math and her husband came drunk to my home and they attacked me physically and verbally. I shared my grief with a woman police officer friend of mine. She asked me for a written complaint, but I desisted saying the math, and Hinduism as such, will suffer a loss of face. At that point I suffered a paralytic attack on my left leg. I even lost part of my speech because of the shock. It took me a year to recover. I continue to receive threats from Jayendra Saraswati and also offers of compromise.

I am often asked why I am bringing up all this now. I am not sharing my anguish and shock to strengthen the other cases against the Shankaracharya. Nor am I planning to make a formal police complaint. When Tamil magazines to which I had often contributed started associating my name wrongly with Jayendra Saraswati, I felt the need to set the record straight.

And this is not the first time I have tried to state the facts. In 1993, I was writing a weekly column, 'Speaking the Truth', for Dinamalar, the Tamil daily. After running 27 columns, they refused to publish my 28th since I had mentioned the Shankaracharya episode. The paper was under pressure from the math. At that point our society was not willing to believe what I was saying. I am sure several women have had similar harrowing experiences like I did at the math.

Yes, I am a Brahmin. But what happened between me and the Shankaracharya is an issue between a man and woman. I am a woman. He is a man. There are those who say that any attack on Jayendra Saraswati is an attack on Hinduism. That's rubbish. Even Veerappan was a Hindu. The problem is we have some expectations of a mathadipathi (head of a math), but Jayendra Saraswati does not live up to those expectations. He is an ordinary man with the needs and desires of any ordinary man.

As a writer, I move in several circles. At a party, I know how to be on guard and protect myself from potential harassment. But when such a propositioning happens in a math and is made by the mathadipathi, it leaves one shocked and confused.////


* அனுராதா ரமணன் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி? என்பது இங்கே முக்கியமல்ல! அவர் ஒரு சாதாரண மனுஷி என்பதை மறுத்ததில்லை!

* "பெரியவர்" ஒரு சபலமுள்ள ஆண் மட்டுமல்ல, ஒரு பெண்ணை மிரட்டுமளவுக்கு சாதாரண சின்னப்புத்தி உள்ள மனுஷன் தான் என்பதை இந்த ஆர்ட்டிக்கிள் மூலம் இந்து வெறியர்கள் மரமண்டையில் ஏற்ற ஒரு சின்ன முயற்சி!

* இதில், கிறுத்தவர்கள், இஸ்லாமியர்கள், பெளத்தமதத்தவர், சமண மதத்தவர் முயன்று "பெரியவரை" சின்னவராக்கியதாக சொன்னால், நீ ஒரு ஹிந்து வெறியன்! பொய்யன்! என்பதைத்தவிர வேறென்ன?

"Periyavar", the saint has EARNED his "disrepect" by his own actions! Only a cheap brainless closed-minded fanatic will blame others for his misbehavior or cheap behavior!

The interesting part of this article from "outlookindia" is that the responses from some closed-minded hindu fanatics! They are ignorant and they think that Anuradha Ramanan brought down hinduism. That is not true! She only revealed that the "one" whom people believed as a "Godman" is just a normal human being with DESIRES!

Friday, April 16, 2010

சுழியம் என்கிற மதவெறியனின் பிதற்றல்கள்!

கடவுள் இருந்தால் அவன்/ள் ஒருவனா(த்தி)கத்தான் இருக்கமுடியும் என்பது ஆறறிவு படைத்த மதவெறி பிடிக்காத சிந்திக்கத்தெரிந்த மனிதனுக்குப் புரியும்! ஆனால் மதவெறி பிடித்தவர்களுக்கு விளங்காது! மதவெறி தலைக்கேறிவிட்டால், யாரையும் , யாருடைய செயலையும் பகுத்தறிய முடியாது! ஹிந்து மதவெறி பிடித்த நேத்துராம் கோட்சே தான் ஹிந்துவான காந்தியை கொன்னவன்.

அது பழைய விசயம் என்றெல்லாம் விட்டுவிடமுடியாது! இதுபோல் மதவெறியர்கள் இன்னைக்கும் இருக்கார்கள் என்பதை இந்த "சுழியம்" என்கிற ஒரு மதவெறியரின் தொடர் பின்னூட்டங்களில் இருந்து அறியலாம்!

ஆன்மீகம் பற்றி திருமதி உஷா அவர்கள் ஒரு பதிவு எழுதியுள்ளார்கள். எங்கே இவர் சிந்தனையத்தான் பார்ப்போமேனு போய் பார்த்துவிட்டு ஒரு பின்னூட்டமிட்டேன்.

சரி வேற என்ன பின்னூட்டங்கள் இருக்குனு பார்ப்போம்னு பார்த்தால்...

தன்னால் முடிந்த அளவுக்கு திறந்தமனதுடன் எழுதிய திருமதி உஷாவின் பதிவில் இந்த மத வெறியர் (சுழியம்)போட்ட பின்னூட்டங்களில் ஒரு சின்னப் பகுதி இது! இந்தக்குப்பையை வாசிக்காமல் விட்டுட்டு மேலேயும் போகலாம்!

---------------------------------

****சுழியம் சொல்வது...

அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிற, பிறசாதியினருக்கும் மரியாதை தருகின்ற, தலித்துகளின் குடிசைகளுக்குச் செல்லுகின்ற இந்த சங்கராச்சாரியாரைக் கேவலப்படுத்துவதில் பல சடங்காச்சார பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுகூட நியாயம்தான்.

ஆனால், இப்படி தலித்துகள் உள்ளிட்ட அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைத்து, அவர்களுக்கு உதவி செய்ய அமைப்புகளையும் ஏற்படுத்திய ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மேல் கிறுத்துவ அமைப்புகள் பொய்யான புகார்களைப் போட்டு அழிக்கின்றன என்பது மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும்.

அவரின்மேல் உள்ள ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமல் போய்விட்டன. இருந்தாலும், அவர் குற்றமற்றவர் என்ற உண்மையைச் சொல்லாமல் தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. கேஸ் இழுத்தடிக்கப்படுகிறது.

எல்லாம் பகவான் பார்த்துக்கொடுதான் இருக்கார்! சங்கர் ராமன், அனுராதா ரமணன், நம்ம செயேந்திரர் எல்லாரையும் ஒண்ணாக்கூட்டிப் பேசி, ஒரு முடிவுக்கு வருவார்!

அவர் மேல் உள்ள கேஸ் வாபஸ் செய்ய வேண்டும் என்றால், அவர் மடத்தில் பிராமணர்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்று பேரம் பேசிய இந்து பத்திரிகை அதிபர் பற்றி யாரும் பேசப் போவதில்லை. ஜனகல்யாண் அமைப்பின் சாதனைகளைப் பற்றி யாரும் பேசப் போவதில்லை.

அவருடைய நிலைக்கு இணையான ஒரு போப்பை விடுங்கள், தமிழ் நாட்டில் சிறுவர்களைப் புணரும் கிறுத்துவப் பாதிரியார்கள் மேல் இத்தகைய பிரச்சாரங்கள் தொடருகின்றனவா? வாரம் இரண்டு கொலைகளைச் செய்யும் இசுலாமிய சகோதரர்களைப் பற்றி...?

அத்னால இவரையும் விட்டுடுடனுமா?

அரசியல் செல்வாக்கு இல்லாத, சாதி வெறி பிடித்த, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது எளிமையான வேலை. ஆதரவற்ற ஏழை கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைப்பது முற்போக்கு என்று போதிக்கப்பட்டால் அதையும் செய்பவர்கள்தான், காஞ்சி மடாதிபதியையும் கேவலப் படுத்திப் பேசி, எழுதி கைதட்டு வாங்கிக்கொள்ளுகிறார்கள்.

தீப்பொறி ஆறுமுகம் பேச்சிற்குக் கைதட்டும் மக்கள்தான் இதற்கும் கைதட்டுகிறார்கள்.

அடுத்ததாக, மகாப் பெரியவரின்மேல் மரியாதை எனக்கு இருக்கிறது, மகாப் பெரியவரும், பெரியாரும் என்றெல்லாம் கட்டுரை எழுதி இருக்கிறேன் என்று சொல்லி உங்களது நடுநிலைமையைப் பறை சாற்றியது குறித்து.

மகாப் பெரியவரின் வாரிசு தலித்துகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். பள்ளிகளும், மருத்துவமனைகளும், சமூக சேவை அமைப்புகளும் ஏற்படுத்தினார். கலைஞர்களையும், அறிஞர்களையும் கௌரவித்தார்.

அவரைப் பின்பற்றும் பார்ப்பனர்கள்தான் தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்களை அதிகம் செய்கின்றனர். தமிழ்நாட்டுக் காவல் நிலையங்களில் உள்ள வன்கொடுமைப் புகார்கள் எதுவும் இந்தப் பார்ப்பனர்கள் மேல் இல்லை.

காஞ்சி சங்கராச்சாரியார்கள் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அதற்குத் தீர்வாக ஒரு நேர்மறையான மாற்றுப் போக்கை முன்வைத்தார்கள். வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார்கள். எதையும் அழிக்கவோ உடைக்கவோ சொல்லவில்லை.

ஆனால், ஈவேரா என்ற அந்தப் பிறவி இதுவரை பேசியதில் வளர்ச்சிப் பணிகள் பற்றி ஏதேனும் பேசியிருக்கிறதா ?

தலித் பெண்கள் ஜாக்கெட் போட்டதால்தான் துணி விலை ஏறியது என்று பேசி இருக்கிறது. அதனது சாதிக்காரர்கள் தலித்துகளை ஒட்டுமொத்தமாக எரித்தபோது கண்டுகொள்ளாமல் போனது. சாதிப் புத்தி உண்டு அது மாறாது என்று வலியுறுத்தி இருக்கிறது. காசு கொடுக்காதவரைத் திட்டிப் பேசுவது, கேவலப்படுத்துவது என்ற கலாச்சாரத்தைத் தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தது அது. பாதிரியார்கள் இந்து மதத்தைப் பற்றி தெருக்களில் செய்த வசவை, காசு வாங்கிக்கொண்டு மேடையில் செய்து பெரும்பணம் ஈட்டியது அது. கிறுத்துவப் பாதிரிகள் பேசியதைத்தான் நானும் பேசுகிறேன் என்று சொல்லாமல், இதெல்லாம் நானே சொந்தமாக யோசித்துக் கண்டுபிடித்தக் கேள்விகள் என்று வெட்கம் இல்லாமல் ஒவ்வொரு முறையும் பொய் சொன்னது. அதன் வாரிசுகளும் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள். உன் புத்தியில் தோன்றியதைச் செய் என்று மேடையில் பேசிவிட்டு, நான் சொல்லுவதைக் கேட்கும் முட்டாள்தான் எனக்கு வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் பேசியது இந்த ஈவேரா. நாடகமாட மேடை, மேடையில் சொன்னதை செயல்படுத்தாத நடைமுறை இதுதான் ஈவேரா. அதன் மேடைப் பேச்சைப் படித்துப் பாராட்டவும் பத்து இளிச்சவாயர்கள்.

அதனது வாரிசுகள்தான் திண்ணியத்தில் மலத்தை மனிதர் வாயில் திணிக்கிறார்கள். சாதிப் பெயரில் ஓட்டு வாங்குகிறார்கள். அவர்களிடையே கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு. வன்கொடுமை சட்டத்தின் மேல் அவர்கள்மேல்தான் புகார்கள் இருக்கின்றன.

இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில்தான் அதிகம். அதுவும் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின்புதான் இந்தக் கொடுமைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
ஈவேரா என்பது சாதி வெறியின் கௌரவத் தோற்றம். அந்த மலத்தோடு, மகாப் பெரியவர் என்னும் மலரை ஒப்பிடாதீர்கள். நுனிப்புல் மேயாமல் சற்று விஷயங்களைத் தெரிந்துகொண்டு எழுதுங்கள்.

சுழியம் சொல்வது...
தவறான வாக்கிய அமைப்பு:

அரசியல் செல்வாக்கு இல்லாத, சாதி வெறி பிடித்த, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது எளிமையான வேலை.

சரியான வாக்கியம்:

அரசியல் செல்வாக்கு இல்லாத, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது சாதி வெறி பிடித்தவர்களுக்கு எளிமையான வேலை.****
-----------------------------

Now, let us analyze the responses of this hindu fanatic!

This fanatic's responses are 10 times bigger than ORIGINAL POST, in which no sane person would find any fault!!! Believe it are NOT, this guy(cuziyam) is really SCARY! He filled that responses column of that blog with all his fanatic garbage and irrational thoughts!

Look at the words he uses to compare a rationalist EVR with a guy who has been accused of murdering late Sankar Raman and accused of misbehaving with a writer, anuradha ramanan!

Trust me, these religious fanatics are several folds worse than any rationalist!

They will try cover an elephant's huge butt with their tiny hand and think that they can fool the world by lying!

சரி, ஈ வெ ரா வை என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும். இந்த மதவெறியனுக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு என்பதை மதிப்போம்!

* சங்கர் ராமனை யார் கொன்னது? கிறுத்தவ பாதிரியார்களா இல்லை இஸ்லாமியர் களா?

இந்துக்கள்!

* தன்னிடம் தகாத முறையில் நடந்ததாக சொன்ன அனுராதா ரமணன் ஒரு கிறுத்தவரா இல்லை இஸ்லாமியர்ரா?

இந்து!

மதவெறி தலைக்கேறினால் யோசிக்க முடியாது. சுழியம் இன்னொரு தளத்தில் போய் இதுபோல் பின்னூட்டங்களால், யானையை பூனையாக்க முயன்று இதுபோல் பிதற்ற மட்டும்தான் முடியும்!

Thursday, April 15, 2010

யார் அந்த மாமி?- கடலை கார்னர் (49)

"பிருந்த்! யார் அது புதுசா ஒரு மாமி காலையிலே உன்னோட திரிஞ்சது?"

"அதை ஏன் கேக்குறீங்க, என் ஃப்ரெண்டோட அத்தை. திடீர்னு காலையிலே கால் பண்ணி, என் ஆண்ட்டி சிகாகோ வந்திருக்காங்க, அவங்களை கவனிச்சுக்கச் சொன்னாள். அவங்க நேர இங்கேயே வந்துட்டாங்க! இன்னைக்கும் இந்த வீக் எண்ட் டும் என்னோடதான் "ஸ்டே"ப் பண்ணப்போறாங்க. "

"அவங்களோட ஆத்துக்காரர் வரலையா?'"

"டைவோர்ஸீ, கண்ணன்!"

"இப்போ சுதந்திரப்பறவைனு சொல்லு! எவனுக்கும் அடிமையா இருக்க வேண்டியதில்லை,பாரு!"

"ஆமா, நல்லா பறந்தாங்க போங்க! அவங்க இருக்க வெயிட்டுக்கு ஓடுறதே கஷ்டம்!"

"ஏய்! அவங்க வயசுல நீ எப்படி இருப்பியோ? ஆனா நீ எப்படி இருந்தாலும் நல்லாத்தான் இருப்ப, பிருந்த்"

"இப்போ எதுக்கு இந்த ஐஸ்?"

"இல்ல, அந்த மாமிட்ட நீங்க ரொம்ப ஸ்லிம்மா அழகா இருக்கீங்கனு சொல்லி நான் அவங்கள நம்பவைக்கவா?"

"அதுக்காக இப்படி ஒரு பச்சைப்பொய் சொல்லனுமா என்ன?"

"ஸ்லிம், குண்டு இதெல்லாம் ரிலேடிவ்தானே? வொர்க் அவ்ட் பண்ணித்தான் இந்த நிலைமையோ என்னவோ! சரி, ஆத்துக்காரனை அடிச்சு வெறட்டியாச்சு சரி! அவங்களுக்கு பிள்ளை குட்டி எதுவும் கெடையாதா?"

"இல்லையாம். அதான் பிரச்சினையோ என்னவோ!"

"அதென்ன பிரச்சினை? ஏன் நிம்மதியா 24 மணி நேரமும் எந்தத்தொல்லையில்லாமல் ரெண்டுபேரும் ஜாலியா காமசாஸ்திரம் படிக்க வேண்டியது தானே?"

"இப்படியும் இதை பாஸிட்டிவா சொல்லலாமா? பிள்ளை குட்டி இருந்தா, அதுக செய்ற பிரச்சினையில் இவங்க ஒற்றுமையா இருந்து இருக்க வாய்ப்பிருக்கு இல்லையா, கண்ணன்?

"ஏய்! நீ பிருந்தா தானே? கொஞ்சம் எழுந்து திரும்பி நில்லு! உன்னக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கிறேன்"

"என்னையா கிள்ளிப்பார்ப்பாங்க? உங்களைத்தான் கிள்ளிப் பார்க்கனும்! அதுவும் இங்கேயா கிள்ளுவாங்க?"

"அங்க கிள்ளினாத்தான் உனக்கு வலிக்காது! என்ன இப்படி "பெரிய ஞானி" மாதிரி பேசுற நீ, பிருந்த்?"

"எல்லாம் உங்களோட இண்ஃப்ளுயெண்ஸ்தான்!"

"இப்போ குறை எதுவுமேயில்லாமலே அமெரிக்கன்ஸ்லாம் குழந்தை பெத்துக்கிறதில்லை! சந்தோஷமாத்தானே இருக்காங்க? நம்மதான் குழந்தைதான் ஒலகம்னு நெனைக்கிறது. பெத்து, வளர்த்து ஆளாக்கிவிட்டுட்டு, அப்புறம் "சோதனை மேல் சோதனை" "பாலூட்டி வளர்த்த கிளி" னு தத்துவம் பேசிக்கிட்டு திரியுறது"

"இதெல்லாம் என்ன பழமொழியா?"

"உன்ட்ட போயி சொன்னேன் பாரு! இதெல்லாம் பழைய தத்துவப்பாடல்கள், அம்மணி!"

"அம்மணினா?"

"அம்மணினா ஜானகிராமன் கதையில் வர்ற ஹீரோயின் னு அர்த்தம்!'

"ஜானகிராமன் கதை படிச்சதில்லையே! எந்த நாவல் இது?"

"மரப்பசு! நீ கட்டாயம் படிக்கனும்! ஆண்ட்டிய வாங்கி அனுப்பச் சொல்லு!!"

"சரி, இந்த வாரம் பேசும்போது அம்மாவ வாங்கி அனுப்பச் சொல்றேன்."

"சரி, அந்த மாமி எங்க போச்சு இப்போ, ஆளைக் காணோம்?"

"அவங்களா? வீட்டிலே கொண்டுபோய் விட்டுட்டு வந்திருக்கேன்."

"சிகாகோ சுத்திப் பாக்கத்தான் வந்திருக்காங்களா?"

"இல்லை, கண்ணன், பாஸ்போர்ட் ரினீவ் பண்ண! அது எக்ஸ்பயர்ட் ஆயிடுச்சாம். கவனிக்காம விட்டுட்டாங்களாம். அதான் நேரடியா இங்கே இண்டியன் கான்சலேட்க்கு வந்துட்டாங்க! காலையிலேயே போய் "பேப்பர் வொர்க்" எல்லாம் முடிச்சுட்டாங்களாம்! ஈவெனிங் போய் பாஸ்போர்ட் வாங்கிட்டு வந்துட்டு, ரெண்டு நாள் என்னோட டேரா! வீக் எண்ட் கொஞ்சம் சிகாகோ சுத்திக் காட்டனும்.""

"மாமியக் கூட்டிக்கிட்டு நல்லா ஜாலியா சுத்து!"

"நீங்களும் வாங்களேன்!"

"வந்து என்ன பண்ண? அவங்களப் பக்கத்துல வச்சுக்கிட்டே உன்ன ரொமாண்ஸ் பண்ணவா? பாவம்டா!"

"இதுல என்ன பாவம் இருக்கு? அவங்களுக்கு இப்போ யாராவது புது பாய்ஃப்ரெண்டு இருந்தாலும் இருப்பார்."

"யார் சொன்னா?"

"அவங்கள பார்த்தால் பாவமா எல்லாம் தெரிய்லை, கண்ணன். நிம்மதியா இருக்க மாதிரித்தான் தெரியுது."

"அது சரி! ஹஸ்பண்ட் போர் அடிச்சிருச்சுனு, டைவோர்ஸ் பண்ணிட்டு புதுசா பல அட்வெஞ்சர்லகூட இறங்கி இருக்கலாம்! சரி, அவங்க பேரென்ன?"

"காயத்ரி. ஒண்ணும் ரொம்ப பேசக்கூட இல்லை. என் ஃப்ரெண்டு நந்தினி சொல்லித்தான் பர்சனல் மேட்டர் இவ்வளவும் தெரியும்!"

"பாஸ்போர்ட் வாங்கிட்டு இன்னைக்கே போகவேண்டியதுதானே? எதுக்கு ரெண்டு நாளு இங்கே டேரா?"

"நீங்க ரொம்ப மோசம் தெரியுமா?"

"என்ன மோசம்?"

"உங்க உபசரிப்பத்தான் சொன்னேன்! எப்படி வெறட்டுறது?"

"எல்லாம் ஒரு சுயநலம்தான். நீ வீக் எண்ட் இந்த மாமியோட சுத்துவ. உன் வீட்டுப்பக்கம் வர முடியாது.. எனக்கு போர் அடிக்கும்னு தான்.."

"இல்லைனா வந்து வீக் எண்ட் பூராம் எனக்கு எல்லா இன்பமும் தரப்போற மாதிரித்தான்.."

"இல்ல, ஏதாவது இந்த மாதிரி தொந்தரவு வந்தால்தான் உன் மேலே அன்பு ரொம்ப வழியுது எனக்கு, பிருந்த்! "

"அது ஏன் அப்படி?"

"தெரியலையே."

"அவங்களுக்கு, டெவான் ஸ்ட்ரீட் போயி நெறையா ஷாப்பிங் பண்ணனுமாம்! இங்கே எல்லாம் "சீப்"பா கெடைக்குதாம்!"

"எங்கே இருந்து வர்றாங்க?"

"கான்ஸாஸ் சிட்டி. அங்கேலாம் டெவான்ல இருக்க மாதிரி இந்தியன் ஷாப்ஸ் இருக்காதாம்!"

"எப்படி? பறந்தா?"

"ஆமா, ஏரோப்ளான்ல ஏறி உக்காந்து பறந்துதான் வந்திருக்காங்க. பின்னே என்ன 8 மணி நேரம் ட்ரைவ் பண்ணியா வருவாங்க?"

"இங்கே வந்து கார் ரெண்ட் பண்ணி இருக்காங்களா?"

"இல்லை கண்ணன். டாக்ஸிலதான் போய் வர்றாங்க! சிகாகோ ட்ராஃபிக்ல ட்ரைவ்ப் பண்ண பயமாம்!"

"ஈவெனிங் நீ போய் என் பி சி டவர்ல பிக் பண்ணனுமா?"

"ஆமா. போய் பிக் அப் பண்ணிட்டு வீட்டுக்கு போகனும்."

"சரி, வீட்டுக்குப் போனதும் ஈவனிங் கூப்பிடுறேன்."

"வீக் எண்ட் நீங்களும் கூட வாங்க. இல்லைனா எனக்கு போர் அடிக்கும்!"

"சரி பார்க்கலாம்! என்னை யாருனு சொல்லப்போற?"

"சும்மா ஃப்ரெண்டுனு சொல்றேன்."

"எப்படி ஃப்ரெண்டுனு நொழச்சுக் கேட்டா, சும்மா f'ck buddy னு சொல்லு!அப்போத்தான் சும்மா இருப்பாங்க!"

"ஹா ஹா ஹா!"

-தொடரும்

Tuesday, April 13, 2010

பைத்தியக்காரனின் "காதல் புனிதமானதா"? -எதிர்வினை

காதல் புனிதமானதா? னு ஒரு பதிவு போட்டு அதற்கு மீள்பதிவும் போட்டு இருக்கார் பைத்தியக்காரன் (திரு. சிவராமன்) .

நான் இப்போத்தான் இந்த பதிவைப் பார்த்தேன்! இந்த எதிர்வினைக்கு காரணம், காதல் புனிதமானதா? சொல்லியிருக்கிற இவருடைய தியரி எல்லாம் விவாதத்துக்குரியதாகவும் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது .

இது ஒரு "ஹெல்த்தி" யான எதிர் வாதம்/ எதிர்வினை தான். சும்மா இவரோட கற்பனை தியரியை எல்லாம் உண்மை உண்மைனு சொல்லியிருக்கிறது சரியல்ல என்பதை சொல்லாமல் இருக்க முடியலை. அதனால் இதை யாரும் தவறாக எடுத்துக்க வேணாம்!

இதற்கு அவர் பதில் சொல்லனும்னு தேவையுமில்லை! ஏகப்பட்ட கருத்து வேற்றுமை இருப்பதால் இது சம்மந்தமாக ஒரு 100 பின்னூட்டங்கள் அவர் தளத்தில் போட வேண்டி வரும். அதைத் தவிர்க்கத்தான் இந்தப் பதிவு!

மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை: காதலிப்பதுமில்லை: பாசம் செலுத்துவதுமில்லை: தோழமையோடு பழகுவதுமில்லை... இதுதான் உண்மை.

இது உண்மை அல்ல! பைத்தியக்காரனின் நம்பிக்கை அல்லது கற்பனை! உண்மை என்கிற வார்த்தையை இங்கே இருந்து மொதல்ல தூக்கனும்!

சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்பவராக நீங்கள் இருந்தால், ஒரு நிமிடம்... நிஜமாகவே நீங்கள் சிந்திக்கிறீர்களா?

இவருக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி உளறுகிறார்னு "நான் சிந்திக்கிறேன்"! அது சிந்தனை இல்லை என்கிறீர்களா? :)

எதிர்பாலினத்தை 'காதலிப்பதாக' சொல்லும்போதே மற்றவர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்பதை அழுத்தமாக உணர்த்துகிறோம். ஒருவரை நேசிக்கும்போதே வேறு யாரையும் அந்த இடத்தில் வைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். மொத்தத்தில் ஒவ்வொரு வார்த்தையும் அதற்கான எதிர்மறையை தனக்குள் சுமந்து கொண்டே அலைகிறது.

எதிர்பாலினத்தைத்தான் காதலிக்கனும்னு இல்லை. ஓரினச்சேர்க்கையில் உள்ளவர்கள் தன் பாலினத்தில் உள்ளவர்களையே காதலிக்கிறார்கள். உங்களுக்குத் தெரியும் இல்லையா?

இப்படி புனிதமாக நாம் நினைக்கும் அனைத்துமே வெறும் புடலங்காய்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், உண்மை அதுதான்.

புனிதமும் இல்லை, புடலங்காயும் இல்லை சரி ! உண்மை உண்மை என்று நீங்கள் கூறுவது "உண்மையும்" அல்ல!

உண்மையில் தன்னைத் தவிர வேறுயாரையும் யாரும் காதலிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வது மட்டுமே இயல்பானது.

அப்படியே வச்சுக்குவோம்! தன் சுயநலத்திற்காக காதலிப்பது அப்போ ஏன் உண்மை இல்லை? காதல் என்பது சுயநலம். சுயநலம் என்பது உண்மை! னு நான் சொல்றேன். காதல் என்பது இயலபானதுதான்!

அடுத்தவரை வீழ்த்த நாம் நடத்தும் நாடகமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தமே அடுத்தவர் முன்னேறாமல் தடுப்பதுதான்.

என்ன சொல்றீங்க??? வாழக்கையின் ஒரு பகுதி வேணா, மற்றவர் முன்னேறாமல் தடுப்பதாக இருக்கலாம். வாழ்க்கையே, வாழ்க்கையின் அர்த்தமே அதுதான் என்பது அபத்தம்!

மனதின் சந்தோஷமே அடுத்தவரின் வீழ்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது.

அபத்தமான ஸ்டேட்மெண்ட்!!!
கிடையவே கிடையாது!

உங்க தளத்தில் பின்னூட்டத்தில் சொன்னது (மாடெரேஷன் பண்ணவில்லை இன்னும்) மறுபடியும் இங்கே!

ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன்!

One had a wonderful sex with his partner and both had wonderful climax at the same time on that fine fine day. They both were very happy after the sex. They felt great about the sex on that day.

Are you saying that is NOT HAPPINESS?

One can be happy in several ways. You don't have to defeat someone for being happy!


புனிதம் என்று காலம்காலமாக நம்பப்பட்டும், பேசப்பட்டும் வரும் விஷயம் காதல்.

காதலை விடுங்க! புனிதம்னு ஒண்ணு இருக்குனு நம்புறீங்களா? புனிதம் எதிலிருக்குனு மட்டும் சொல்லுங்க! இவ்வளவு நேரம் நீங்க சொன்ன தியரி எல்லாமே இந்த புனிதத்திற்கு எதிரா போகப்போது! புனிதமே இல்லைனு நீங்க ஏற்றுக்கொண்டால் உங்க தலைப்பே அபத்தம்!

உண்மையில் காதலைப் போன்ற பம்மாத்தான விஷயம் வேறு எதுவுமே இல்லை.

உண்மைனா என்னனே உங்களுக்கு சரியா தெரியலை சார்! மறுபடியும் மறுபடியும் நீங்க உண்மை உண்மைனு எதையோ சொல்றீங்க! பம்மாத்துனா என்னனு விளங்கவில்லை! புனிதத்துக்கு எதிர்ப்பதமா?

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். தனக்குள் இருக்கும் பெண்ணின் பிரதிபலிப்பை வேறொரு பெண்ணிடம் 'சாயலாக'க் காணும் ஆண், அவளை 'காதலிப்பதாக' நினைக்கிறான். அவளை அடைவதன் மூலம், வேறொரு ஆணிடம் அவள் போவதை தடுக்கிறான். இதே தியரியை பெண்ணுக்கும் பொருத்தலாம்.

What about GAYS then??? You dont think they are Humans? So, your theory fails here as gays get attracted to the same sex people!

பிரச்னை என்னவென்றால் ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் மறுபாதியை 'பலரிடமும்' காண்பதுதான். அதனால்தான் 'அனுபவம்' கூடக் கூட, காதல் உணர்வு வளர்ந்து கொண்டே போகிறது. மறுபாதியை காணும்போதெல்லாம் காதல் உணர்ச்சி பெருக்கெடுக்கிறது. பரிணாம வளர்ச்சியில் இந்த உண்மையை ஆண், பெண் இருவருமே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் 'காதலுக்காக' வகுக்கப்பட்ட பல வார்த்தைகள் இன்று செல்லரித்துப் போய் ஆவணக் காப்பகங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

Again this is your theory. It can be destroyed completely by showing the love life of gays!

இன்று சராசரியாக ஒவ்வொருவரும் 12 அல்லது 13 வயது முதலே மறுபாதியை எதிர்கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அதுமுதலே 'காதல்' உணர்வு அரும்ப ஆரம்பித்துவிடுகிறது. அதனால்தான் 23 வயதுப் பெண்ணிடம் ஒரு ஆண் காதலிப்பதாக சொல்லும்போது அவள் சிரிக்கிறாள். 'வேணாம்பா நாம ஃபிரெண்ட்சா இருப்போம்...' என்கிறாள். அவளுக்குத் தெரியும் போகப் போக இதுபோல இன்னும் பலரை எதிர்கொள்ள நேரிடும் என்று.

எல்லாரும் சிரிக்க மாட்டாங்க! யார் சொல்றாங்கங்கிறதை பொறுத்து இங்கே! காதல் அரும்ப வயசெல்லாம் இல்லை சார்!

ஒவ்வொருவரும் இன்று நேரில், தொலைபேசியில் அல்லது செல்லில், மெயிலில், சாட்டில் எதிர்பாலினத்தை சேர்ந்த பலரிடமும் தினமும் பேசுகிறார்கள், பழகுகிறார்கள். எதற்காக பேசுகிறோம், சிரிக்கிறோம் என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் தெரியாததுபோல நடந்து கொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம், அந்த உறவை அனுமதிக்கிறது. தப்பித் தவறி யாராவது ஒருவர் வெளிப்படுத்தும்போது, திடுக்கிடுவது போல் காட்டிக்கொள்வது நமது 'புனிதத்தை' காப்பாற்ற உதவுகிறது.

புனிதம்னா என்னனு நீங்க சொல்லனும்! நீங்க புனிதம் என்கிற ஒரு வார்த்தையை அழகா உதாரணத்துடன் விளக்குங்க! காதல் எனபது புனிதமானதோ இல்லை அபத்தமானதோ எனக்குத் தெரியலை. காதல் என்பது ஒரு உணர்வு, அவ்வளவுதான்!

மன்னிச்சுக்கோங்க! இந்தப் பதிவு ஏதோ டீனேஜ் பையன் காதல்னு சொல்லி உளறுவதுபோல் இருக்கு! இதை உண்மையிலேயே எழுதியது நீங்கள் தானா!!

2010 ல் வெற்றிப்படங்கள் மூன்று!


தமிழ் சினிமா, டி வி யால் (சின்னத் திரை) பாதிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். இருந்தாலும் தமிழ்ப் படங்கள் வருகைகள் எதுவும் குறையவில்லை. வாரத்துக்கு 2 படமாவது புதுசு புதுசா வந்துகொண்டேதான் இருக்கு. 2010 ஆரம்பித்ததிலிருந்து ஒரு 50க்கு மேல்ப் பட்ட படங்கள் வந்துவிட்டன. இதில் சந்தேகமே இல்லாமல் வெற்றி பெற்றவைனு பார்த்தால் ஒரு மூனு பட்ங்கள்தான்!

* தமிழ்ப் படம்

* விண்ணைத்தாண்டி வருவாயா?

* பையா

மற்றபடி முக்கியமான படங்கள் கோவா, அசல், தீராதவிளையாட்டுப் பிள்ளை எல்லாம் வெற்றியடைந்ததாக சொல்ல முடியாது.

தமிழ்ப்படம் கொஞ்சம் வித்தியாசமான படம் என்பதால் வெற்றி. இதுபோல் தமிழில் வந்த முதல்ப் படம் இதுதான்! இதுபோல் கிண்டல்களை பாஸிட்டிவாக நடிகர்களும் ரசிகர்களும் எடுத்துக்கொண்டதுதான் மிகப்பெரிய வெற்றிதான்!

விண்ணைத்தாண்டி வருவாயா? ஒரு சாதாரண காதல்ப் படம். காதலுக்கு குறுக்கே நிற்பது மதம். நம்ம ஏதோ முன்னேறிட்டோம்னு பிதற்றிக்கொண்டு இருக்கோம். இன்னும் நம்ம கலாசாதத்தில் காதலிச்சவரை கலயாணம் பண்ண தில்லு உள்ள இளசுகள் இல்லை என்பதை அடிப்படையாக வச்சு எடுத்த படம். அந்தக்காலத்தில் காதல்னா, சும்மா ஒருவரை ஒருவர் பார்த்துக்கிறது, ஏதாவது சூழ்நிலையில் பேசிக்கிறது அப்புறம் லவ் லெட்டெர் கொடுக்கிறதுனு போச்சு, இப்போ என்னனா காதல் ப்ரிமேரிட்டல் செக்ஸுடனும் அது போகுதுனு எல்லோருமே அடிச்சு சொல்றாங்க! ஆனால் ப்ரிமாரிட்டல் செக்ஸ் வச்சுக்கிறது தப்பில்லையாம். அவங்களை கல்யாணம் பண்ணினால்தான் பெரிய தப்பாம்! அதனால நம்ம முதலிரவு இன்னும் சிறப்பத்தான் போகும். அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் முதலிரவு என்பதால்! இதுபோல் இருக்க நம்ம அரைவேக்காட்டுக் கலாச்சாரத்தில் உள்ள காதல் தோல்வியடைந்த கோழைகள் எல்லாம் இந்தப் படத்தைப்பார்த்து அழுதழுது கண்ணீர்விட்டுப் பார்த்து வெற்றியை பெற்றுத் தந்துவிட்டார்கள் போல இருக்கு! பெருமைப்பட வேண்டிய விசயம்தான்னு சொல்றீங்களா?

பையாவும் ஒரு சாதாரண காதல் கதைதான். அதே லிங்குசாமி ஸ்டயிலில் வந்து இருக்கு! ஆரம்பத்திலேயே முடிவு தெரியும். இருந்தாலும் ஒரு பொண்ணோட பையன் படம் முழுவதும் சுத்துவதையும், அந்த ஹீரோவுடைய அசாத்திய ஹீரோயிசத்தையும் நம்ம ஆளு இன்னும் ரசிக்கிறாங்க. பாடல்களும் நல்லா இருப்பது ஒரு பெரிய ப்ளஸ்னும் சொல்லலாம்! லிங்குசாமிக்கு இந்தப்படம் ஃப்ளாப் ஆகாம எப்படியோ தப்பிச்சிருச்சு! அண்ணே லிங்கு, காதல், சண்டை, பாட்டுனு எடுத்தால் நம்மாளு எப்போவுமே பார்ப்பான்னு நெனச்சா இதுக்கப்புறம் கஷ்டம்தான்.

அப்புறம் நெறையப் படங்கள் 10 லட்சம் போட்டு 20 லட்சம் அலல்து 40 லட்சம் எடுத்து இருக்கலாம். அதுபோல சின்ன பட்ஜட் சின்ன வெற்றியை எல்லாம் கணக்குல எடுக்கலை :)))

Monday, April 12, 2010

திருவள்ளுவருக்கும் சாதிச் சாயம்!


இப்போ எதுக்கு இந்த சாதி மேட்டர்னு கோபம் வருதா? நம்ம விக்கில திருவள்ளுவர் பற்றி என்ன போட்டிருக்காங்கனு பார்த்தால் அவர் சாதியைத்தான் பெருசா ரிசேர்ச்ப் பண்ணி மொதல்ல போட்டு இருக்காங்க!

திருவள்ளுவர் ஒரு பார்ப்பனராக இருந்தாலும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. காரணம்? அவர் வெஜிட்டேரியன், கடவுள் நம்பிக்கை உள்ளவர். மேலும் அந்தக்காலத்தில் பார்ப்பனர்களைத் தவிர வேற யாரு படித்து இருந்தா? வேற யாரையும் கோயில்கள் மற்றும் பள்ளிக்கூடம் பக்கத்திலேயே விடவில்லையே!

படிச்சவங்கதானே குறளெல்லாம் எழுதமுடியுமானு கேக்காதீங்க? மேலும் அவர் புலால் உண்ணுவதை தப்புனு சொல்லியிருக்கார் அதனால அவர் பார்ப்பனராகத்தான் இருக்கனும் என்று நம்புபவர்கள் பலர் இருந்தாலும் எதுக்கு வம்புனு ஒரு சிலர் வெளியே சொல்வதில்லை. வெளியே ஒரு சிலர்தான் சொன்னாலும், திருவள்ளுவர் ஒரு வெஜிட்டேரியன் என்பதே இதற்கு அடிப்படைக்காரணம்.

புலால் உண்ணுவது தப்புனு சொல்லிட்டு திருவள்ளுவரே அந்தத் தப்பை செய்தும் இருக்கலாம் னுகூட விதண்டாவாதம் பண்ணலாம். நம்ம மக்களிடம் எப்போவுமே உபதேசம் ஊருக்குத்தானே? நம்ம எது சரினு சொல்வதை நாமே ஃபாலோ பண்ணுவதில்லை! ஏன் னா நாமெல்லாம் கேவலம் மனுஷர்கள் (திருவள்ளுவரையும் சேர்த்து)

ஆனால் இன்னொரு பக்கம் திராவிடத் தமிழர்கள் திருவள்ளுவர் யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும், ஆனால் பார்ப்பனர்ங்கிறதை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கங்கனம்கட்டி, திருவள்ளுவர் பார்ப்பனராக இருக்கவே முடியாது என்பதை பலவிதமாக நிரூபிக்க முயன்று ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளனர். திருவள்ளுவர் ஒரு சமண மதத்தைச் சார்ந்த "ஜெயின்" னாக இருக்கலாம் என்று பலர் ஒரு முடிவே செய்துட்டாங்க! திருவள்ளுவர் ஒரு சமண மதத்தை சேர்ந்த "ஜெயின்", ஆனால் தமிழர்னு பலரும் நம்புறாங்க!

சமீபத்தில் இவர் சாதி/மதம்/குலம் பத்தி என்ன சொல்றாங்கனு பார்த்தால், "வள்ளுவர்" என்கிறது ஒரு ஆதி திராவிட வகுப்பைக்குறிக்கும். அதனால் திருவள்ளுவர் ஒரு ஆதி திராவிடராகத்தான் இருக்கும் என்று நெறையா ரிசேர்ச் பண்ணி சொல்லியிருக்காங்க! திருக்குறள்ல திருவள்ளுவர், "வள்ளுவர்" னு கையொப்பம் இட்டு இருந்தாரா? இவருடைய பெயர் வள்ளுவர்னு நமக்கு எப்படி தெரிந்தது? னு எனக்குத் தெரியலை. இந்த ஆதி திராவிடர் என்கிற தியரி அவருடைய பெயர் வள்ளுவர் என்று இருப்பதால் வந்த தியரி.

நல்லவேளை, திருக்குறளோட ஒரு தன் சாதிச்சான்றிதழையும் இவர் வைச்சிட்டுப் போகலை! திருவள்ளுவர் காலத்தில் ஜாதியெல்லாம் இருந்து இருக்குமானும் எனக்குத் தெரியலை.

அப்புறம் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப் படத்தில் உள்ள மாதிரி திருவள்ளுவர் இருந்து இருப்பார்னு ஒரு நம்பிக்கை. சிவன், விஷ்ணு, லக்ஷ்மி, சரஸ்வதி, முருகன், விநாயகர் படங்கள் சிலைகள் மாதிரித்தான் திருவள்ளுவர் படமும். திருக்குறளுடன் சேர்ந்து இவர் ஓவியம் அல்லது சிலை எதுவும் கிடைக்க வில்லைனு நினைக்கிறேன்!

மேலும் சில நம்பிக்கைகள் .

* திருக்குறள் (எல்லாக் குறளுமே) ஒருவரால் எழுதப்பட்டது என்று நம்புகிறார்கள்!! பலரால் எழுதப்பட்டு "வள்ளுவர்" அதை தொகுத்து வழங்கவில்லை என்று நம்பப்படுகிறது!

* திருவள்ளுவர் ஒரு பெண்ணா இருக்க முடியாது என்று நம்பப் படுகிறது. காரணம்? திருக்குறளில் கொஞ்சம் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தி இருப்பதாகவும் பெண்ணியவாதிகள் சொல்றாங்க!

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு!

என்கிற குறளை திருவள்ளுவரைப் பற்றிய தியரி களுக்கும் நாம நிச்சயம் "apply" பண்ணனும்

Sunday, April 11, 2010

Smart என்னும் பதிவுலக நண்பர்!

என்னுடைய காரசாரமான சாதி எதிர்ப்பு கொள்கை ப் பதிவில் ஒரு 50க்கு மேலே பின்னூட்டமிட்ட நண்பர்தான் ஸ்மார்ட் என்னும் பதிவுலக நண்பர். இவர் என்னுடைய எரிச்சலிலும் கோபத்திலும் எழுதிய ஒரு மூனு பதிவுகளில் எழுதிய பல பின்னூட்டங்களில் இருந்து என்ன சொல்றார்னா

* ஒருவர் தன் சாதியை இணையதளத்தில் சொல்லுவதில் தப்பில்லை!

நான் அதை தேவையே இல்லாத ஒரு விசயம் என்பதுடன், முடிந்தால் சாதியை மறைப்பது நல்லது என்று நம்புறேன்.

* ஒவ்வொருவரும் தன் சாதியை பெரிதாக நெனச்சுக்கலாம்.

தேவையே இல்லாத பெருமை இந்த சாதிப்பெருமை என்கிறேன் நான்.

* ப்ராமின் என்பதோ இல்லைனா வடகலை அய்யங்கார்னு சொல்வது பார்ப்பனர்னு சொல்வது அல்ல!

எனக்கு சிரிப்புத்தான் வருது இவர் வாதத்தைப்பார்த்து.

* I am proud to be born a Brahmin என்பதில் எந்தத் தவறும் இல்லை! அதைத் தவறுனு சொல்வதுதான் பெரிய தப்பு!

என்னைப் பொறுத்தவரையில் இதுபோல் பேசுவது சுத்தமான சிறுபிள்ளைத்தனம். பெரிய மனிதர்கள் யாருமே இப்படிப் பேசமாட்டார்கள்.

* எனக்கு ராகவன் மேலே (சாதிப் பெருமை பேசுவதால்) வரும் கோபத்திற்கு காரணம் பொறாமை யாம்!

சிரிப்புத்தான் வருது எனக்கு.

* “பெரியார்” “வீரபாண்டியன்” என்கிற முகமூடிப்பதிவர்களை நான் விமர்சிப்பது தப்பு. ஏன்னா “நீங்க தந்தை பெரியாரையும் வீரபாண்டியனையும் அவமானப் படுத்தீட்டங்க” என்கிறார்!


இதென்ன விதண்டாவாதம்? என்கிறேன் நான்.

* டாக்டர் ருத்ரனிடம் மன்னிப்புக் கேட்கப்பட்டுவிட்டது என்கிறார். அதனால் இந்தப் பதிவு (டாக்டர் ருத்ரனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது தேவை இல்லை) இந்தப் பதிவை எடுத்துடுங்க! என்றார்.

உண்மையிலேயே எனக்கு நெறைய விசயம் தெரியாது. சென்னை பதிவர்களுக்குள் உள்ள பாலிட்டிக்ஸ் தெரியாது. சாதிப்பிரச்சினைகள் மேலும் எந்தப் பதிவரையும்கூட எனக்குத் தெரியாது. மேலும் இந்தப் பதிவால் யாருக்கும் பாதகமில்லை சில முகமூடிகளைத் தவிர்த்து என்று நம்புறேன்.

* அப்புறம் வருண் என்றால் சமஸ்கிரதப் பெயர். “வ” வும், “ரு” வும் “ண்” ம் தமிழ் எழுத்துக்களா இருந்தாலும் வருண் ஒரு சமஸ்கிரதப் பெயர் என்று கேலி செய்கிறார்·

சரி, ஒத்துக்கிறேன். சமஸ்கிரதப்பெயராவே இருந்துட்டுப் போகட்டுமே. செத்துக்கொண்டு இருக்கிற சமஸ்கிரதம், இந்த வருண் என்கிற பெயரிலாவது வாழ்ந்துட்டுப் போகட்டுமே!

* அவரிடம், “ ஆமா உங்க தமிழ்ப் பேரென்ன ஸ்மார்ட்? (நிச்ச்யம் இது தமிழ்ப் பெயரோ, ச்மஸ்கிரதப்பேரோ இல்லை. தொரை நாட்டில்தான் இப்படி பேரு வச்சுக்குவாங்க்) ஒருவேளை ராவணனோ?” னு கேட்டதுக்கு உங்களுக்கு பார்ப்பனத் திமிர்! என்கிறார்.

சிரிக்கிறேன். திமிரு எல்லாருக்கும்தான் இருக்கு. அதென்ன பார்ப்பனத்திமிர்னு ஸ்பெஷல் க்ரிடிட்?

* என் பதிவுகளைப் பார்த்து நீங்க யாருக்கோ கூலிவேலை செய்றீங்க! என்கிறார்.

நான் எந்தக் குழுவிலும் இல்லை என்கிறேன். எனக்கு கூலி வேலையெல்லாம் பழக்கமில்லைனு சொல்றேன்.

இது எல்லாத்தையும் நாகரீகமாகத்தான் தன் பின்னூட்டங்களில் சொன்னார். கடைசியில் அவர் தளத்தில் எனக்கு ஒரு ராங்க் ம் கொடுத்துள்ளார். என்ன ராங்க்னு சரியாக்கூட எனக்கு சரியாப் புரியலை. இவர் கொடுத்த ராங்க கொடுப்பவர் இவருக்குத்தான் ரொம்ப பெருமை சேர்க்கும். அதாவது இவர் தன்னைத்தானே ”ஸ்மார்ட்” னும் நான் எல்லாம் முட்டாள்னு சொல்வது போலத்தான் இருக்கு!

ஆமா இவர் இவரைப்பற்றி என்னதான் நினைத்து இருக்கார்னு தெரியலை! “ஸ்மார்ட்” னா?

-----------------------

இந்த ஸ்மார்ட் பத்தி என்னுள் எழும் சில கேள்விகள்!


* யாருங்க இந்த ஸ்மார்ட் நு திடீர்னு வந்து முளைத்துள்ளார்?

* இவர் ஏன் இந்த ராகவனுக்கு இப்படி வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்குகிறார்?

* இந்த ராகவனுக்கு இப்படி ஒரு விசிறியா!

* இந்த ராகவன், பதிவர் ஸ்மார்ட் க்கு ஒரு கோயில் கட்டனும்!

* ஏன் இவரு ராகவன் போல ஒரு சிலர் தவறே செய்வதில்லைனு நம்புறார்?·

* ஆமா இந்த ராகவன் என்ன கடவுளா என்ன? சாதாரண தன் சாதியைப் பெருமையாக சொல்லிக் கொள்ளும் மனுஷன் தானே?

* ஏன் இப்படிஒரு 50-60 பின்னூட்டம்போட்டு நான் ஏதோ காமெடி பண்ணுறேன்னு அவரே அவருக்கு நிரூபித்துக் கொண்டார்?


மேலே என் மனதில் ஸ்மார்ட் பத்தில் எழும் கேள்விகள், பதிலை எதிர்பார்த்து கேட்கப்பட்ட கேள்விகளல்ல! இன்னும் ஒரு 100 பின்னூட்டங்களில் பதில் கொடுக்கப் பட்டாலும் அவைகள் எனக்கு திருப்திகரமாக இருக்கப்போவதில்லை என்று தெரிந்தும், நான் வியந்து கொண்டிருக்கும் கேள்விகள்!

அப்புறம் எதுக்கு இந்தப்பதிவு?

பலவிதமான பின்னூட்டஙக்ளை தொடர்ந்து எழுதி, நான் சொல்ல வந்த சீரியஸான மேட்டரை, “ஸ்மார்ட்” அவர் திறமையால காமெடியாக்கி விட்டதாக நினைத்துக் கொள்கிறார். இங்கே யாரும் காமெடி பண்ண வரவில்லை! என் இதயத்திலிருந்து வந்த மன எரிச்சலையும் கோபத்தையும்தான் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்பதை அவருடைய பல பின்னூட்டங்களால் மறைக்க முடியாது என்பது அவருக்கு விளங்கனும் என்பதற்காக!

Friday, April 9, 2010

அமா பாக்கிலாம்! -கடலை கார்னர் (48)

"என்ன கண்ணன், ஸ்டெய்ஸி ஏதோ சொல்றா?"

"என்ன சொனாள்?"

"கோபம் வந்து யாரையோ அவகிட்ட ரொம்ப திட்டினீங்களாமே?"

"ஆமா, நீங்க வெள்ளைக்காரங்க எல்லாம் இப்படித்தான் . பேசுறதெல்லாம் பொய்யினு நல்லா திட்டு திட்டுனு திட்டினேன்"

"அவ நல்லா சிரிக்கிறா. உங்களை "ரேசிஸ்ட்" னு சொல்றா! ஆமா, என்ன பிரச்சினை, கண்ணன்?"

"ஸ்டீவன் க்ரூப்ல ராஜர் (Roger) னு ஒரு லூஸு இருக்கான், தெரியுமா?"

"ராஜர் தெரியும்!"

"அவன் என் க்ரூப்ல வந்து எதையாவது கடன் வாங்க வேண்டியது. திருப்பி கொண்டு வந்து ஒழுங்கா கொடுக்கிறது இல்லை. என் க்ரூப்ல யாராவ்து ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணனும்னா, அந்த எக்விப்மெண்ட் இவன்கிட்ட இருக்குனு சொல்றாங்க. அவன் அதை ஒடச்சுட்டானா என்னனு தெரியலை. அவன் கிட்ட கேட்டா நான் பாரோ பண்ணலைனு சொல்றான். உடனே எனக்கு கோபம் வந்துருச்சு. யாருக்கும் எதையும் கொடுக்காதே. கொடுத்தா ஒரு லாக் புக் போட்டு எழுதிட்டுக் கொடுனு சொன்னேன். அவ்வளவுதான்!"

"ஸ்ட்ய்ஸிட்ட என்ன சொன்னீங்க?"

"அவ, ராஜரை ஏன் உனக்கு பிடிக்க மாட்டேங்கிதுனு கேக்கிறா. அவகிட்ட "I can not trust you white people. You lie a lot" னு சொன்னேன்"

"அதுக்கு?"

"ஏன் அப்படி சொல்ற" னு கேட்டாள். ஏன்னா உலகத்திலே எந்த தேசத்திலேயுமே அந்த தேசத்திற்கு சொந்தமான ஆதிவாசிகளை அழிச்சுட்டு அதை தன் தேசமா ஆக்கியதில்லை! அது அமெரிக்காவில் மட்டும்தான் நடந்து இருக்கு. இது பாவ தேசம்! அதனால நீங்க எல்லாம் ரொம்ப மோசம்! னு சொன்னேன்.. அப்போ "நீ எதுக்கு இங்கே வந்து இருக்க? னு கேக்கிறா?"

"நீங்க என்ன சொன்னீங்க?"

"உன்னை மாதிரி ஆட்களுக்கு நல்லா செக்ஸியா எல்லாம் இருக்கு. ஆனா மூளை மட்டும் இல்லை! உங்களுக்கு எதை எப்படிப் பண்ணூறதுனு ஒழுங்கா சொல்லித்தரத்தான் வந்து இருக்கேன்னு சொன்னேன்?. அதுக்கு அவ என்ன சொல்றா தெரியுமா?'

"என்ன சொன்னாள்? சொன்னால்த்தானே தெரியும்?"

"To pay you back, I can also teach you sex" னு சொல்றா. அது மட்டும் அவளுக்கு என்னைவிட நல்லாத் தெரியுமாம்!"

"இதையெல்லாம் என்னிடம் சொல்லல அவ!!!"

"நல்லா ஃபில்ட்டெர் பண்ணிட்டா போல இருக்கு. இதை எப்படி உன்னிடம் சொல்லுவா?"

"சரி, அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?"

"நானா? " Dont worry! Bridndha can teach me better" னு சொன்னேன்!"

"ரியல்லி!"

"ஆனால், அவ சொல்றா "பிருந்தாவுக்கு ஒண்ணும் தெரியாது! நான்தான் எக்ஸ்பர்ட்னு" சொல்றா!"

"வரட்டும் அவ!"

"ஆமா, அது உண்மைதானே, பிருந்த்?"

"அதனால, அவளை டீச் பண்ண சொல்லப்போறீங்களா?"

"இல்லை இல்லை நாங்களா கத்துக்கிறோம்னு தான் அவ கிட்ட சொன்னேன்!"

"வரட்டும் அவளை என்ன பண்ணுறேன் னு பாருங்க!"

---------------------

"இந்தா வர்ரா பாரு! ஆட்டிக்கிட்டு! சிரிப்பை பாரு!"

"So what is going on racist tamils? LOL!"

"F'ck you Stacy!"

"I would love that. Let us schedule it for some time!" LOL

"Schedule what?" Brindha asked.

"F'cking!" LOL

"Kannan is telling a lot about your little meeting! You filtered a lot Stacy! Or Kannan made it up a lot?" said Brindha.

"What did you tell Brindha, Kannan?"

"Whatever you told me!"

"You know what Kannan told me, Brindha?"

"What?"

"He said that I have a nice butt. That is why he puts up with me with all my poor experimental skills! Otherwise he would have fired me long time ago, he says" LOL

"I did not say that! Don't believe her Brindh!"

"I really dont know who is lying here!" Brindha smiled.

"I did not say that in that discussion!"

"Dont trust him Brindha! Kannan is a perv!"

"No, you are a perv! Not me, Stacy!"

"Well, only a perv can figure out another perv, Kannan! So, you are one too!"

"OK, cut it out guys!"

"It is time to get back to work. I have a meeting at 3pm. See you girls!"

"See you later Kannan! Take it easy!"

"பார்க்கலாம் கண்ணன்!"

"அமா பாக்கிலாம்!" said Stacy.

"தமிழை கொலை பண்ணாதே! அது ஆமா பார்க்கலாம்!" கண்ணன் கிளம்பினான்.

"What did he say, Brindha!"

"He said your tamil pronunciation is beautiful!"

"You are a liar, Brindha!"

"I liked it, Stacy!"

"Thanks!"

-தொடரும்

Tuesday, April 6, 2010

பிடிக்காத ரஜினி படம்!


ரஜினி படங்கள் பொதுவாக பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாக இருக்கும்! உலகத்தில் எந்த ஒரு மனிதனும் 100 பேரோட சண்டைபோட்டு ஜெயிக்கமுடியாது என்பது எல்லாருக்கும் தெரியும். அது, "சிவாஜி" யா இருந்தாலும் சரி, வேட்டையாடு விளையாடு "ராகவனா" இருந்தாலும் சரி, "அந்நியனா" இருந்தாலும் சரி அது சினிமாலதான் இதெல்லாம் நடக்கும்! இதுபோல் குறைகள் ரஜினி படத்தில் நெறையவே பார்க்கலாம். ஆனால் சினிமா என்பது பொழுதுபோக்குனு மட்டும் பார்த்தால் பொதுவாக ரஜினி படங்களை ரசிக்கலாம்.

மகேந்திரன் மூனாவது முறையாக ரஜினியுடன் இணைந்து எடுத்தப் படம்தான் நான் சொல்ல வருகிற "கை கொடுக்கும் கை". முதல்ப் படம் முள்ளும் மலரும், ரெண்டாவது, ஜானி. இந்த மூனாவது படத்தில் வரும் நாயகி ரேவதி கண் பார்வை இல்லாதவராக நடித்து இருப்பார். இது ஒரு மாதிரி மலையாளப் படம் இல்லைனா புட்டண்ணாவுடைய கன்னடப்படம்போல் ஒரு சீரியஸான படம் இது.



ரஜினி நல்லாவே நடித்து இருப்பார் பாடல்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.ஆனால்...

அதாவது உலகத்தில், கற்பழிப்பு நடந்துகொண்டுதான் இருக்கு, கொலைகள், ட்ரக் எடுக்கிறவங்க, குடிக்கு அடிமையாகி எதைப்பத்தியுமே கவலைப்படாமல் மனைவியைக்கூட வித்து வாழ்பவர்கள். இதெல்லாம் நம்மால செய்ய முடியாது என்பது மட்டுமல்ல நம்மால் இதுபோல் விசயங்களை பார்த்து ரசிக்கவும் முடியாது! ஆனால் ஊர் உலகத்தில் எல்லாமே நடகக்த்தான் செய்யுது. அதைப் போய் சினிமால பார்க்கனுமா என்ன?

கை கொடுக்கும் கை படத்தில் எனக்கு என்ன மிகப் பெரிய பிரச்சினைனா,

* கண் பார்வை தெரியாத அவர் குளிக்கும்போது ஒரு கேரக்டர் அதை வேடிக்கை பார்ப்பது போலவும்,

* கண் பார்வை தெரியாத இவரை கற்பழிப்பது போலவும் சில மிருகத்தனமான காட்சிகள் வரும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தப் படம் எடுத்த மகேந்திரன் என்ன மாதிரி நெனச்சு எடுத்தார்னு தெரியலை (edited as per prasanna rajan's suggestion) . இதுபோல் குறையுள்ளவர்களை இதுமாதிரியான இன்னல்களுக்கு ஆளாக்குவது மிருகத்தனம். மிருகத்தைவிட கேவலமான மனித மிருகங்களால்தான் இதெல்லாம் செய்யமுடியும். இல்லைனா மனநிலை சரியில்லாதவர்களால். இதைப்போயி ஒரு படத்தில் காட்டணுமா என்ன? அதனால் யாருக்கு என்ன பாடம் புகட்டப்படுகிறது?

திரு. பிரசன்னா ராஜன் , நான் சொன்ன கருத்தில் உள்ள தவறுகளை இந்த பின்னூட்டங்களில் சொல்லியுள்ளார். வாசிப்பவர்கள் உண்மையை உணரவேண்டும் என்பதற்காக அதை இங்கே தருகிறேன்

Prasanna Rajan said...

மகேந்திரன், ஞாநி அவர்கள் நடத்தும் ‘கேணி’ சந்திப்பில் ஒரு முறை பேசினார். அவரிடம், அவர் இயக்கத்தில் பிடிக்காத படம் என்ன என்று கேட்க, “கை கொடுக்கும் கை” என்று உடனே பதில் அளித்தார்.

மேலும் நீங்கள் குறிப்பிடும் காட்சிகள், மகேந்திரன் விரும்பி எடுத்ததே அல்ல. இதன் மூலப் படத்தில் அந்த காட்சிகள் இல்லவே இல்லை. உண்மையை சொல்லப் போனால் தயாரிப்பாளர், ரஜினியை நச்சரிக்க, ரஜினி பின்னர் மகேந்திரனிடம் அந்த காட்சிகளை இணைக்க சொனார்.

மகேந்திரனை ஒரு ‘சைக்கோ’ என்று ஏன் இப்படி ஒருமையில் விமர்சிக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் 'Auteur’ என்ற பதத்தில் அழைக்கக் கூடிய, விரல் விட்டு எண்ணக் கூடிய படைப்பாளிகளுள் ஒருவர் அவர். உங்கள் பதிவை மட்டும் படித்து விட்டு பின்னூட்டத்தை படிக்காமல் எத்தனையோ பேருக்கு நீங்கள் சொல்வது மட்டும் தானே சென்றடையும்.

தயவு செய்து உங்கள் பதிவில் உள்ளதை மாற்றி விடுங்கள். இது போன்ற வெளிப்படையான கருத்துகளை தீர விசாரிக்காமல் எழுதாதீர்கள்...

----

Prasanna Rajan said...

மன்னிக்க வேண்டும் வருண். ‘சைக்கோ’ என்ற பதம் மட்டுமல்ல, நீங்கள் மகேந்திரனை பற்றி குறிப்பிட்ட மொத்த கருத்தையும் தவறு என்கிறேன். இருப்பினும் அதை நீக்கியதற்கு நன்றி.

ரஜினி மஹேந்திரன் பக்கம் போகவில்லை என்பதை விட, மகேந்திரன் ரஜினி பக்கம் போகவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் இதற்கு அடுத்து மற்றொரு ரீமேக் படத்தில் ரஜினி நடிக்க, மகேந்திரனை இயக்குமாறு தயாரிப்பாளர் அழைக்க மகேந்திரன் மறுத்து விட்டார்.
-------
க்ளிண்ட் ஈஸ்ட்வுட் படமான "ஹை ப்ளைண்ஸ் ட்ரிஃப்டர்" னு ஒரு படம் இருக்கு. அதிலே, க்ளிண்ட், ஒரு பெண்ணை கற்பழிப்பதுபோல படம் பிடிச்சு இருப்பாங்க. ஆனால், அந்தப் பெண் க்ளிண்ட்டிடம் இருந்த மிருகத்தனத்தை தூண்டி, மிருக உணர்வை வெளிக்கொண்டு வந்ததற்காக அது ஒரு தண்டனை என்பது போல இதை எடுத்து இருப்பாங்க! அதனால்அவ்வளவு மோசமான இந்த மிருகத்தனமான கற்பழிப்பு சீன்ல கூட இதுபோல் மிருக உணர்வை யாரிடமும் தூண்டக்கூடாது என்கிற பாடம் சொல்லப் பட்டதாகத்தான் எனக்குத் தோனுது. The rape can be justified to some extent in "High Plains Drifter" but not in "கை கொடுக்கும் கை" என்பது என் தாழ்மையான எண்ணம்!

படம் படுதோல்வினு நம்புறேன். காரணம் என்னனா இந்தப்படத்தை சாதாரண மனிதாபிமானம் உள்ளவர்கள் ரசிக்கவோ, பார்க்கவோ முடியாது! அதுவும் ரஜினி படம் பார்த்து ரசிப்பவர்களுக்கு சாண்ஸே இல்லை!

இந்தப்படத்துக்கு அப்புறம் ரஜினி, மஹேந்திரன் பக்கமே போகலை! (மஹேந்திரன் ரஜினி பக்கமே போலை என்பதுததான் உண்மை என்கிறார் பிரசன்னா ராஜன்- edited later) :)))

Monday, April 5, 2010

என்ட்ட சொல்ல என்ன வெக்கம்? கடலை கார்னர் (47)

"பிருந்த்! அப்பா! கடைசில ஃபோனை பிக் அப் பண்ணிட்டயா!"

"ஹாய் கண்ணன்!

” என்ன பண்ணிட்டு இருந்த, பிருந்த்?"

"என்ன திடீர்னு இந்நேரம் ஈவெனிங் கூப்பிடுறீங்க?"

"சும்மாதான். என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல.."

"உங்களைபத்தித்தான் யோசிச்சிண்டுருந்தேன்"

"என்னை நெனச்சுட்டே எதுவும் கெட்டபழக்கம் செஞ்சிண்டு இருந்தியா?"

"அப்படியெல்லாம் இல்லையே!"

"அப்படியெல்லாம் இல்லையா? இல்லை இல்லையா?"

"ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"ரொம்ப வித்தியாசம் இருக்கு. இல்லைனு சொன்னா இல்லைனு அர்த்தம். அப்படியெல்லாம் இல்லைனு இழுத்தா .. அதுக்கு வேற அர்த்தம்!"

"என்னவோ என்னை கையும் களவுமா பிடிச்ச மாதிரிதான் பேசுறீங்க?"

"இல்லையா? என்ட்ட சொல்ல என்ன வெக்கம், பிருந்த்?"

"நீங்க ரொம்ப ரொம்ப மோசம் தெரியுமா, கண்ணன்?"

"இப்போ என்னடி மோசமாப் பண்ணீட்டேன்?"

"பதில் சொன்னால் அதை கேட்டுக்காமல், எனக்கே சந்தேகம் வர வைக்கிறீங்களே.. நீங்க மோசம் இல்லையா?"

"நீ பதில் ஒழுங்கா சொன்னால் நான் ஏன் இப்படி சொல்றேன்?"

"நான் ஒழுங்கா சொல்லலயா?"

"கொஞ்சம் இழுத்த!"

"நான் பாவம் கண்ணன். என்னை விட்டுடுங்க ப்ளீஸ்?"

"ஒரு முத்தம் கொடு. விட்டுடுறேன்."

“ஃபோன்லயா?”

“ஆமா! கொடுடீ!”

"ச்சு ச்சு, ரெண்டு கொடுத்தாச்சு போதுமா?"

"தேங்க்ஸ்! ஏய் நேத்து நீ என் கனவிலே வந்து என்னை கெட்ட வார்த்தை சொல்லி திட்டுன பிருந்த்!"

"கெட்ட வார்த்தை சொல்லியா? நெஜம்மாவா?"

"ஆமா!"

"நீங்க என்ன தப்பு செஞ்சீங்க?"

"கனவைக் கேளு! கனவுல நீ என்னுடைய அடிமையா இருக்க, பிருந்த்!"

"அடிமைனா?"

"அதான் ஸ்லேவா?'

"ஓ! அப்புறம்?"

"நான் டி வி பார்த்துக்கிட்டே எனக்கு “டீ போட்டு எடுத்து வா”னு சொன்னேன்"

"சரி.."

"நீ சரினு கிச்சனுக்கு போற! நீ நடந்துபோறபோது உன் செக்ஸியான பின்னழகைப் பார்த்ததும் எனக்கு இன்னொரு ஐடியா வருது. உன்னைத் தொடர்ந்து கிச்சனுக்கு வந்து டீ எடுத்து வரும்போது நேக்கடா வானு ஆர்டர் போடுறேன்"

"நேக்கடாவா? கேக்கவே நல்லாயிருக்கே! அதுக்கு நான் என்ன சொன்னேன்?"

"பயங்கரமா கோபம் வந்து கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டிட்டு ஓடியே போயி பெட்ரூம்ல படுத்துக்கிட்ட!"

"அப்புறம்?"

"நான் டீ போட்டு கொண்டு வந்து, உன்னை கொஞ்சி, கெஞ்சி, சரிப்படுத்தினேன்"

"நான் திட்டியெல்லாம் இருக்க மாட்டேன்."

"ஏய் இது என் கனவு இல்லையா? அதான் கெட்டவார்த்தை சொல்லி திட்டின.."

"என்ன கெட்டவார்த்தை சொன்னேன்?"

"You dirty bastard! What do you think of yourself son of a bitch? huh!" னு சொல்லி நல்லா கோபமா திட்டின.. உடனே நான் உன் கோபத்தைப் பார்த்து பயந்துட்டேன். திட்டிட்டு அழுதுக்கிட்டே பெட்ரூக்கு ஓடிப்போயிட்ட"

"கனவிலேதான் நான் அப்படி.."

"நெஜத்திலேனா எப்படி?"

”உங்களுக்கு கனவுல எதைக்கேக்கனும், உண்மையில் எது கேக்கனும்னு தெரியாது! சரியான மக்கு நீங்க, கண்ணன்"

"என்னடி சொல்ற?"

"நீங்க என் ஸ்வீட் ஹார்ட் இல்லையா?. எனக்கு கோபம் வர்ற அளவுக்கு அப்படி என்ன பெருசா தப்பா கேட்டுட்டீங்க?"

'அது சரி!"

"அப்புறம் எப்படி என்னை சமாதானம் பண்ணினீங்க?"

"பெட்ல குப்புறப்படுத்து இருந்த உன் பக்கத்தில் வந்து உக்காந்து “சாரி டா” னு சொன்னேன். அப்புறம் உனக்கு நானே டீ போட்டு வந்து “இந்தா டீ” னு கொடுத்தேன். உடனே தேங்க்ஸ்னு வாங்கி வச்சுட்டு அதைக்குடிக்காமல் மறுபடியும் குப்புறப் படுத்துக்கிட்ட. அப்புறம் “இன்னும் கோபமா இருக்கியா பிருந்த்?”னு உன் காதிலே கேட்டுட்டு கழுத்திலே லேசா கிஸ் பண்ணீனேன்."

"அதுக்கு திட்டலையா?"

"இல்லை. நீ ஒண்ணுமே சொல்லல. மறுபடியும் உன் காதுல கிஸ் பண்ணினேன். நீ திரும்பி மெதுவா திருப்பி மல்லாக்கப் படுத்த. அப்புறம் உன் கன்னத்தில் கிஸ் பண்ணீனேன்., அதுக்கும் ஒண்ணும் சொல்லல. மெல்ல சிரிச்ச.."

"அப்புறம்?"

“உன் உதட்டில் கிஸ் பண்ணினேன். ”

“உதட்டிலேயா..?'

“ஆமா அப்படியே என்னை கட்டி பிடிச்சுக்கிட்ட நீ. ஏய் நீ பொய்தானே சொன்ன?

“அப்போ இல்லை, ஆனா இப்போ அது பொய்யாயிடுச்சு, கண்ணன்”

“யூ ஆர் சோ ஹானஸ்ட் டார்லிங். தட் இஸ் வாட் ஐ லவ் எபவ்ட் யூ!”

“தேங்க்ஸ் ஃபார் ஷேரிங் த லவ்லி ட்ரீம்”

“நாளைக்கு பார்க்கலாமா?”

“குட் நைட்!”

-தொடரும்

கார்த்தியின் பையா- விமர்சகர்களின் பார்வையில்!


ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்புறம் வருவதால், இதிலேயாவது கார்த்தியின் ஹீரோயிஸத்தைப் பார்க்கனும்னு எல்லாரும் ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.
அப்போ படம் எப்படி இருக்கு?

எங்க ஊர்ல இந்தப்படம் திரையிட்டால் கட்டாயம் பார்க்கனும்/பார்த்து இருப்பேன்!

ஆண்லைன்ல இந்தப் படத்தைப் பார்க்க இஷ்டமில்லை! ஏன்? எப்படியாவது ஒரு பாஸிடிவ் விமர்சனம் தரனும்னு ஒரு ஆசை- அதனாலதான்!

இணையதளத்தில் உள்ள விமர்சகர்கள் என்ன சொல்றாங்கனு பார்ப்போம்!

Rediff:

நிறைகள்: கார்த்தியின் ஸ்க்ரீன் ப்ரெசெண்ஸ், அழகி தமன்னா, யுவனின் இசை!

பெரியகுறை: லிங்குசாமியின் திரைக்கதை! வில்லனை வீணாக்கிட்டாங்க

ஓவெராலாப் பார்த்தால் இது ஒரு மாதிரி -ve reviewதான்!

------------------------------
Sify: Verdict: Fast and Furious! (அப்படினா என்ன? எனக்கு அர்த்தம் தெரியலை..) . அப்புறம் பொழுதுபோக்குக்குப் படம் பார்ப்பவர்னா உங்களுக்குப் பிடிக்கும்!

குறைகள்: திரைக்கதை, எதிர்பார்த்த க்ளைமேக்ஸ், வில்லனை வீணாக்கிட்டாங்க!

நிறைகள்: கார்த்தி, யுவன், தமன்னா.

ஓவெரால்லா பார்த்தால் +ve review!

----------------------------

Indiaglitz: – Accelerating Adventure!

பொழுதுபோக்குப் படம்னுதான் சொல்றாங்க!

ஓவெரால்லா பார்த்தால் இதுவும் ஒரு +ve review!

கூட்டிக்கழிச்சுப் பார்த்தால், 2/3 நல்லாயிருக்குனுதான் சொல்றாங்க! Rediff தவிர, மற்ற இரண்டும (Sify and Indiaglitz) நல்லாத்தான் இருக்கு.

நான் படம் பார்த்துட்டு என் விமர்சனத்தை தர்றேன்! :)

Friday, April 2, 2010

டாக்டர் ருத்ரனிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கிறேன்!

சாதியை ஏன் இன்னும் கட்டிக்கிட்டு அழுகிறீங்க? னு ஒரு பதிவு போட்டால், சரி பதிவுபோட்ட என்னைத்தானே தாக்குவானுகள்னு கொஞ்சம் கவனக்குறைவா இருந்துட்டேன்.

பதிவு எழுதிய என்னைத்தாக்காமல் முகமூடிகளால் தாக்கப்பட்டது டாக்டர் ருத்ரன்!

மொதல்ல என்ன நடக்குதுனே எனக்கு சரியாப் புரியலை. அப்புறம்தான் புரிந்தது டாக்டர் ருத்ரந்தான் இந்த முகமூடிகளின் முக்கிய ”டார்ககெட்” என்று.

சாதியைக் கட்டி அழும் பார்ப்பனர்களை, சாதியை தூக்கி எறினு சொன்னா, அது பிடிக்காமல் சாதி வெறிபிடித்த யார் வந்து என்னைவிட்டுவிட்டு டாக்டர் ருத்ரனை தாக்குவானு சொல்லுங்க? தாக்கியது சாதிவெறின்கள் ரெண்டு பேரு, ஆனால் அவனுக அவனுகளுக்கே வச்சுக்கிட்ட பேரு என்ன தெரியுமா?

* பெரியார்

* வீரபாண்டியன்

----------------------
இந்த அசம்பாவிதம் என் தளத்தில் நடந்ததாலும் நான் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்ததற்காகவும் நான் டாக்டர் ருத்ரனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! நான் உடனே இந்த கோழைகளின் பின்னூட்டங்களை எடுக்காததற்கு காரணம், ஜாதி வெறிபிடிச்சு எப்படி அலையிறானுகள் பார்க்கத்தான்!

இணையதளத்தில் இதுபோல் தாக்குதல் எல்லாம் எனக்கு பழக்கம்தான். ஆனால் டாக்டர் ருத்ரனுக்கு பழக்கமிருக்குமா என்னனு எனக்குத் தெரியலை. இதையெல்லாம் தட்டிவிட்டுட்டு போயிக்கிட்ட்டே இருங்க, டாக்டர் ருத்ரன்! னு சொல்லவும்தான் இந்தப்பதிவு!

எல்லாரும் கவனமா இருங்க! ஜாதி வெறிபிடிச்சு அலையிறானுக மூளையில்லாத மடையனுகள்!

The same masked morons will come in different id! I am looking forward to seeing the "periyar" and "veerapandian"! LOL