Wednesday, October 31, 2012

அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவே வெல்வார்!

இன்னும் ஒரு வாரமே இருக்கு அமெரிக்க தேர்தல் நடந்து, அதன் முடிவு தெரிய. முதல் ப்ரசிடென்ஸியல் விவாத்தத்தில் ப்ரெஸிடெண்ட் ஒபாமா சரியாக விவாதிக்காததால் கவர்னர் ராம்னி வெற்றி பெறும் நிலைமை வந்தது. அதன் பிறகு ப்ரஸிடெண்ட் ஒபாமா சுதாரித்துக்கொண்டு அடுத்த இரண்டு விவாதங்களில் நல்லவிதமாக விவாதிச்சதால், மறுபடியும் ஒபாமா வெற்றி வாய்ப்பை அடைந்துள்ளார் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

இன்றைய நிலையில் ஒபாமா,  300/538  "எலக்ட்டோரல் வோட்" ம்,  ராம்னி 238/538 "எலக்ட்டோரல் வோட்"ம்  பெருவதாக உள்ளது.  270/538 "எலக்ட்டோரல் வோட்" வெற்றிபெற்றாலே ஒபாமாதான் அடுத்த ப்ரசிடெண்டும்.

நெவேடா (NV), ஒஹையோ (OH), ஐயோவா (IA), விஸ்காண்சின் (WI), காலராடோ (CO) போன்ற ஸ்விங் ஸ்டேட்களில் ஒபாமாவுக்கு  வெற்றிவாய்ப்பு  இருப்பதால் அவரே அடுத்த அமெரிக்க ப்ரசிடெண்ட் ஆவார் என நம்பப்படுகிறது.

 






மேலும் விபரங்கள் வேணுமென்றால் 538 என்கிற இந்த தளம் பாருங்க!

I am happy that Obama is going to win! :-)

Tuesday, October 30, 2012

ஐயங்கார் சரி, அதென்ன ஹையங்கார்?!

சாரு, சின்மயி விவகாரம் சம்மந்தமாக இதோட ரெண்டு கட்டுரைகள் எழுதி இருக்காரு. ரெண்டுமே சின்மயிக்கு ஆதரவாக. ரெண்டாவது கட்டுரையில் ஒரு "லெவல்" அதிகமாகவே இறங்கி சின்மயிக்கு வக்காலத்துதான் வாங்குகிறார். சாருவின் ரெப்யூட்டேஷன் உலகறிந்தது என்பதால் இந்த விசயத்தில் சாருவுடைய கருத்தை எவனும் சீரியஸா எடுத்துக்கவில்லை, எடுத்துக்கப் போவதில்லை என்பதே உண்மை! இருந்தாலும் சாருவின் இந்த நிலைப்பாடு அவர் ரசிகர் வட்டத்தில் எரிச்சலைக் கிளப்பியிருக்கத்தான் வாய்ப்பிருக்கு.

மனுஷ்யபுத்திரன் சின்மயியால குற்றம் சாட்டப்பட்டவர்கள் பக்கம் இருந்து அவங்களுக்கு ஆதரவாக வாதிட்டு இருக்காரு. பொதுவாக ஒரு சிலர் "underdog" பக்கம் இருந்து வாதிடுவார்கள். அதுபோல் செய்கிறாரோ என்னவோ. ஆனால் ஜெயமோகன் எரிச்சலடையும் அளவுக்கு மனுஷ்யபுத்திரன் இந்த அதிரடி சட்ட நடவைடிக்கையால்  பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் பேசி இருக்கிறார்.

ஜெயமோகன் நிலைப்பாடு இதில் என்னவாயிருக்கும்னு எனக்கு முன்னாலேயே தெரியும். இருந்தும் எதையும் சொல்லாமல் இருந்தவர் வாயை கிளறி இப்போ வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்காரு ஒருத்தரு. ஒருவேளை வேணும்னே அவர் வாயைப் புடுங்கியிருக்காரா ஒரு சின்மயி ஆதரவாளர்?  என்ற கேள்வியும் எழுகிறது. ஜெயமோகன், பெண்கள் பலவாறு அவமானப்படுத்தப் படுகிறார்கள் என்றும், அதனால பதிவுலகைவிட்டு ஓடிவிடுகிறார்கள் என்றும் சொல்கிறார்.மேலும் ராஜன் தரப்பில், அவருக்கு ஆதரவு கொடுக்க பல லட்சங்கள் திரட்டப்பட்ட்டுள்ளது என்றும் அது தவறு என்பது போலவும் சொல்றாரு. எனக்கென்னவோ பாதிக்கப் பட்டவர்கள் நட்பு வட்டாரம் மற்றும் அவர்கள் வேலையிழப்பு போன்றவற்றை மனதில் கொண்டு மனிதாபமானத்துடன் ஒரு சிலர் அவர்களுக்கு உதவ முன் வந்திருக்கலாம். இதை, ஜெயமோகன் இப்படி  விமர்சிப்பது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை.

டாக்டர் ருத்ரன்கூட  நம் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது சரியல்ல என்கிறார்!!! ராஜன் தரப்புக்கு இவர் கைகொடுப்பது மிகப்பெரிய விடயம்!

*********************

ராஜன் நண்பர்கள் அவருக்கு எப்படி உதவலாம் என்று யோசித்தால், எனக்கு தோணுறது இதுதான்.

* ராஜன் என்ன எழுதினாரோ எழுதியது எழுதியதுதான். அதை இல்லை என்று சொல்ல முடியாது. Plead guilty!

* ராஜன் ஏன் எழுதினார்? என்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது சின்மயி பக்கத்தில் உள்ள குறைகளை எடுத்து வைக்கலாம்.

* ராஜன் தான் செய்ததை எல்லாம் "தன்  கருத்துச் சுதந்திரம் என்று நினைத்தேன் " என்றுதான் சொல்லனும்.

சின் மயினிடம் உள்ள குறைபாடுகள்..

அ) இவர் தன்னை ஹையங்கார் என்கிறார் என்கிறார்கள்!!! Even if she claims that as a joke,  தன் சாதியை உயர்சாதி என்று பீத்துவது பலருக்கும் எரிச்சலைக் கிளப்பும்! மேலும் அது சிறுபிள்ளைத்தனம்! இளையராஜா, ரகுமான், யுவன் சங்கர் ராஜா, இவங்க எல்லாம்தான் இவருக்கு சாண்ஸ் கொடுப்பவங்க. அவங்கல்லாம்  ஹையங்கார் இல்லை! அவங்க இதை வாசிச்சுப்புட்டு என்ன நெனைப்பாங்க! This is certainly casteist attitude! என்பதை மறுக்கமுடியாது.

ஆ) இன்னொரு இடத்தில் "so called thazthhappattavarkaL"  என்கிறார்!  If she claimed herself as hiyengar,  அவருக்கு இது மிகப் பெரிய பிரச்சினைதான். She is talking as if nobody is inferior by birth when she criticizes about the reservation. Then why the heck she claims herself as "higheyngar"? Now, it is hard to justify her stand on reservation as she sounds like a hypocrite and a casteist as she thinks her caste is SUPERIOR or not???!  (அரசியல்வாதிகள் இதைப் பெரிதுபடுத்தி தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமே உண்டாக்கலாம்!)

 இ) மேலும் சின்மயி  தனக்கு சாதகமான ட்விட்களை மட்டுமே காட்டுகிறார் என்கிறார்கள். இவர் காட்டும் ஸ்க்ரீன் ஷாட் "fabricated"  னு மாமல்லன் சொல்கிறார். மாமல்லனுடைய ரெண்டு ட்வீட்கள் ஒரே ட்விட் நம்பருடன் (# 421) வருது!!!அதெப்படி சாத்தியம்னு எனக்கு இன்னும் புரியலை! If the defense can prove that the screen shot she shows  is a fabricated one, she will be in big trouble!

ஈ) ரிசர்வேஷனை விமர்சிப்பது, மீனவர்களுக்கு ஆதரவு தராத நிலைப்பாடெல்லாம் "பொதுப் பிரச்சினைகள்". அதில் "தவறான" ஒரு கருத்துச் சொல்லியிருந்தால் அதில் பாதிக்கப் பட்ட பொதுமக்களை விடுங்க. தாழ்த்தப்பட்டவர்கள், மீனவர்கள் சம்மந்தப்பட்ட பெரிய ஆர்கனைசேஷன்கள் தன்னை ஹையங்கார் என்று சொல்பவரைப் பார்த்து எரிச்சலடைந்து  இதைப் பெரிதாக்கினால, சின்மயி மேல் பலவாறு குற்றம் சாட்டி பல கேஸ்கள் போடலாம்தான். ஆனால் அது ராஜனுக்கு எப்படி உதவும் என்று எனக்குத் தெரியவில்லை.

உ) ராஜனை மஹேஷ் மூர்த்தி என்கிற க்ரிடிக் ட்விட்டரில் நல்லா எழுதுறார்னு விமர்சிச்சதும், அதை சின்மயி சீரியஸாக எடுத்துக்கொண்டு அவர் பெயரை நீக்கு இல்லை என் பெயரை நீக்குனு போராடியிருக்கிறார் என்கிறார்கள். இவருக்கு இதெல்லாம் தேவையா? ராஜனின் வெறுப்பை சம்பாரிப்பதற்கு இவரே காரணம் எனலாம்.

இதுபோல் ராஜனின் "defense" ராஜன் நிலைப்பாட்டை நியாயப்படுத்தலாம்!

ஆக மொத்தத்தில் இந்தப் பிரச்சினை போகிற போக்கைப் பார்த்தால்...

* சைபர் க்ரைம் சட்டக்காவலர்கள், இதற்குமுன் பதிவு செய்யப்பட்ட பல கேஸ்களை எல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, தன்னை உயர்சாதி என்றும், ஹையங்கார்  என்றும் பெருமையடித்துக்கொள்ளும் பிரபலம் ஒருவருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது எப்படி சரி?  என்று பெரிதுபடுத்தினால் இதனால்  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்லை!

Friday, October 26, 2012

சைபர் க்ரைம் என்கிற பீதி! வருகிறது பதிவுலகின் இருண்டகாலம்!

சின்மயி ஹராஸ்மெண்ட் கேஸ் போட்டாலும் போட்டார். ஒரு நாளும் இல்லாத திருநாளா காவல்துறை உடனே செயல்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்தது மட்டுமல்லாமல், அதற்குள் ஒருவரை வேலையில் இருந்து தற்காலிகமாக விலக்கியுள்ளார்கள்!!!

 இப்போ கருத்துச் சுதந்திரம்னா என்ன? என்ன எழுதினாலும் சைபர் போலிஸ் நம்மள அரெஸ்ட் செய்வாங்களா? என்கிற பீதி பதிவுலகில் உண்டாகியுள்ளது.

பதிவெழுதும் முன்னால் யோசிச்சு யோசிச்சு, எதுக்கு வம்புனு பலர் ட்ராஃப்ட்லயே விட்டு விட்டதுபோல இருக்கு.

இது பத்தாதுனு, சைபர் க்ரைம் னு யாரைவேணா ஜோடிச்சு உள்ளே பிடிச்சுப் போடலாம் என்பதுபோல் சட்டம் அறிந்த பிரபு ராஜதுரை ஒரு பதிவை எழுதி எல்லாருக்கும் இன்னும் கொஞ்சம் பீதியைக் கிளப்பியுள்ளார்.

சின்மயி கேஸுக்கு பலம் வகிப்பது..

* அவர் ஒரு கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்.

* அவர் தாயாரையும் இகழ்ந்து பேசியுள்ளனர்.

* தொடர் தொந்தரவு என்பது ரொம்ப முக்கியம். ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டு போவது வேறு. தொடர்ந்து "டார்கெட் "செய்வது வேறு

* அவர் ஒரு பிரபலம் என்பதால் " defamation" முயற்சியா? என்றும் ஒரு கேள்வியைத் தொடுக்கிறார்.

* அவர் யாரையும் வரம்புமீறி தனிமனிதரைத் தாக்கவில்லை. ஆனால் அவர் தாக்கப்பட்டு இருக்கிறார். இது ஒருபக்கத்தாக்கு!

* அவர் இட ஒதுக்கீடு மற்றும் மீனவர் பற்றி சொன்ன கருத்துக்கள், பொதுக் கருத்துக்கள். அதையும் வலையுலகில்  திரிக்கப் பட்டதாக ஒரு விளக்கப் பதிவு வேறு போட்டு இருக்கிறார்.

 Facing abuse and a backlash of rumours

 மேலே உள்ள இந்தப் பதிவில் உள்ள ஒரு முக்கியமான  ட்வீட் சம்மந்தமாக காட்டியிருக்கும்  ஸ்க்ரீன் ஷாட் டை கடுமையாக, விமர்சிச்சு  பதிவர் மாமல்லன், ஏதோ ஒரு "manipulation"  நடந்து இருப்பதாகவும் சொல்கிறார்.  அதையும் கட்டாயம் வாசிச்சுடுங்க!

ஒரு ஸ்கிரீன் ஷாட்டும் அதன் நோய்க்கூறுகளும்


 * "அசிங்கப் பட்டாள் சின்மயி" என்கிற ஐ டி யை எப்படி நியாயப் படுத்துவது ??? இந்த ஐ டி தயாரித்தவர் எப்படி சட்டத்தின் முன்னிருந்து தப்பிக்க முடியும்??

சரி, வரம்பு மீறீட்டாங்க! மறுப்பதற்கில்லை!

ஆனால் இதற்கு என்ன தண்டனை?

* இதுபோல் தமிழ் நாட்டு வரலாற்றில் எந்த கேஸும் நடந்ததில்லைனு சொல்லலாம்.

* இணையதள உலகில் கருத்துச் சுதந்திரம் என்பது அதைப்பற்றி பேசும் யாருக்குமே தெளிவாகத் தெரியாத ஒரு நிலையில் என்ன தண்டனை கொடுக்கலாம் இவர்கள் செய்த குற்றத்திற்கு?

* இதுபோல் தவறுகள் செய்து பலர் தண்டனை அனுபவித்து இருந்தால், இதுபோல் இவர்கள் தொடர் தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள் என்பதென்னவோ மறுக்க முடியாது.

* இவர்களை சட்டம் மன்னித்து, கடுமையா எச்சரிக்கை செய்து விட்டுவிட்டால் என்ன?

* ஏற்கனவே எல்லாப் பத்திரிக்கைகளிலும் அவர்கள் படம் வந்து அவர்கள் பட்ட அவமானம் போதாதா? இதைவிட என்ன தண்டனை இவர்களுக்கு வேண்டிக்கெடக்கு?

என்றெல்லாம் பலரும் எண்ணுவதென்னவோ மறுக்க முடியாது.


பதிவுலகிற்கு பெரிய இழப்பு?

* இனிமேல் பெண்கள் எழுதும் பதிவிற்கு மாற்றுக்கருத்து வைக்கவே யாரும் முன்வரமாட்டார்கள். எதுக்கு வம்பு?

* பின்னூட்டங்கள் எழுதவும் பலவிதமாக யோசிப்பார்கள்.

* 8 + 2 = 11 என்றாலும் "ஆமா ஆமா"னுதான் எல்லோரும் போவார்கள்!

* உப்புச் சப்பில்லாத பின்னூட்டங்கள் நிறையவே பார்க்கலாம்.

* இப்படி அநியாயத்துக்கு மரியாதை கொடுப்பதால் பெண்கள் "சம உரிமையை" ஒரு மாதிரியாக "அதிக மரியாதை கொடுக்கப்பட்டு"  இழக்கிறார்கள்னு கூடச் சொல்லலாம்.

* இதுபோக இனிமேல் நியாயமான எதிர்வினைப் பதிவுகள், பிரபலங்களை விமர்சிக்கும் பதிவுகள், விவாதப் பதிவுகள் எல்லாம் குறைய வாய்ப்பதிகம்.

* இங்கே யாரும் சம்பாரிக்க வரவில்லை. சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கத்தான் பதிவுலகுக்கு வருகிறார்கள். அதற்குக் கிடைக்கும் சம்பளம் உங்கள் வேலை இழப்பு என்று வருமானால், யாரு பதிவெழுதுவா?

* பதிவுலகம் ஒரு உப்பு சப்பில்லாத இடமாவதால், கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்கள் வேறு வேலையைப் பார்க்க கிளம்பலாம். பதிவுலகத்தின் இருண்ட காலம் ஆரம்பிக்கலாம்!

எனிவே, இப்போது cyber crime சம்மந்தமாக நடப்பதெல்லாம் வருங்கால பதிவுலகுக்கு நல்லதுக்கா கெட்டதுக்கானு தெரியவில்லை! 

பொறுத்திருந்துதான் பார்க்கனும்.

Monday, October 22, 2012

தமிழ்நாட்டில் மின்வெட்டு பத்தி துக்ளக் சோ ராமசாமி!

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின்வெட்டு! மின்வெட்டால் தொழிற்சாலைகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம், மக்கள் பலவாறு அவதிப்படுறாங்க! தமிழ்நாட்டில் பல ஊர்களில் வயதானவர்கள் எல்லாம் மின் விசிறி இல்லாமல் எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் வாடி வதங்குகிறார்கள். பதிவுலகிலேயே பலர் இதுபற்றிப் புலம்பித் தள்ளுறாங்க.  இந்த ஒரு சூழலில் நம்ம நியாயஸ்தன்  சோ ராமசாமி என்கிற அரசியல் விமர்சகர், மற்றும் ஆசிரியர் என்ன செய்துள்ளார்?

இந்தாளு நேர்மையான்வர், தமிழ் மக்களைப் பற்றி கவலைப்படுபவர், தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளை எந்த ஆட்சியிலும் விமர்சிப்பவர் என்றால் ஒரு கார்ட்டூனாவது இதைப் பற்றி விமர்சிச்சு போட்டு இருக்கனும்.

ஆட்சி மாறி ஒரு 16 மாதங்கள் ஆன பிறகும், முழுநேரவேலையாக கருணாநிதி, மற்றும் மத்திய சர்க்காரை விமர்சிக்கும் இவர், கொஞ்சம் கூட நியாயம்னா என்னனு தெரியாமல், தமிழ்நாட்டில் நடக்கும் மின்வெட்டு, விலைவாசி சம்மந்தமாக எந்தக் கருத்துமே சொல்லாமல் வாயைப் பொத்திக்கொண்டு இருக்காரு. இவர் ரசிகர்கள் விமர்சிப்பதுபோல, மதிப்பதுபோல இவர் ஒரு நியாயமான, பத்திரிக்கை தர்மம் தெரிந்த  பத்திரிக்கையாளரா? இல்லை  இன்றைய ஆளுங்கட்சிக்கு முழுநேர தொண்டரா இவர்?

இல்லை  மின்வெட்டைப் பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் தாறுமாறா இவர்  விமர்சிச்சு இருக்கார் என்றால் அது சம்மந்தமான தொடுப்புக்கள் தரவும்! நன்றி!

Friday, October 19, 2012

பாடகி சின்மயிக்கு ஒரு சபாஷ்!

 நமக்கு இந்த ப்ளாக்ரை கட்டி அழவே நேரத்தைக்காணோம். அதனால இந்த முகநூல், ட்விட்டரு பக்கமெல்லாம் போறதே இல்லை. அந்த உலகம் என்னனே தெரியாது. பாடகி சின்மயி தன் பிரச்சினைகளோட காவல்துறைக்கு போனதும்தான் என்னனு தெரியுது.

கீழே உள்ள தகவல் ஒரு இணைய தளத்திலிருந்து அள்ளிட்டு வந்தது.

குழலி பக்கங்கள் பதிவிலிருந்துதான் என்ன நடந்ததுனு பார்க்க "அங்கே" சென்றேன்! குழலி பக்கங்களில் கொடுத்த ஒரிஜினல் இணைப்பு இங்கே!
 
சவுண்ட் கேமரா ஆகஷன்?

இது சம்மந்தமாக என்னுடைய கருத்தை தெளிவாகச் சொல்லத்தான் இந்தப் பதிவு! :)

மற்றொரு புகார் மனுவில்,"ட்விட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி,"சமீப காலமாக ட்விட்டர் இணையதளத்தில் அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும் மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.

இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.
குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும் என்னை பற்றி நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம் மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் யார் என்ற விவரங்களையும், 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன். எனவே இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்”என்றார்.
என்னைப் பொறுத்தவரையில் இணையதள கருத்துச் சுதந்திரம் என்பது என்ன? அது தனிமனிதருக்கு எந்த அளவுக்கு உண்டு என்பது யாருக்குமே சரியாத் தெரியாது.

சட்டப் பாதுகாவலர்கள் மற்றும் "சைபர் க்ரைம்" போன்ற சட்டங்கள் என்னவென்று யாருக்குமே தெளிவாகத் தெரியாது.

ஆனால் இந்த மாதிரி கோஷ்டி சேர்ந்துகொண்டு ஒருவரை தொடர்ந்து போய் "சித்ரவதை" செய்வதை, அட் லீஸ்ட் தாழ்மையுடன் சின்மயி வேண்டி கேட்டுக் கொள்ளும்போது நிறுத்தி இருக்கனும்.

ஒருவர் தன்னால "தாங்கமுடியலை இந்த டார்ச்சர்" னு சொல்லும்போதும் தொடர்ந்து போயி சித்ரவதை பண்ணுவது மிருகத்தனம்!

இந்த கேஸ் எப்படிபோகுதோ? எப்படி முடியப்போதோ? என்னனு  தெரியலை.

ஆனால், இதுபோல் "கம்ப்ளைன்ட்" பண்ணுவதால்  அந்த வில்லன்கள் ஆறு பேரும் இனிமேலாவது மூடிக்கிட்டு இருப்பானுகனு நம்புறேன். 
இதுபோல் கேஸ்கள் பதிவு செய்தால்தான் கொஞ்சமாவது நம்மாளுக ஒழுங்கா நடப்பானுக.

ஒருவர் அனானிமஸாக இருந்தாலும், ஐ பி அட்ரெஸை வைத்து அவர்களை பிடிப்பது மிகவும் எளிது என்பது நெறையப்பேருக்கு தெரியுமா என்னனு தெரியலை.

 இணைய தளத்தில் இன்னொரு பிரச்சினை என்ன என்றால், இதுபோல் ஹராஸ் பண்ணுபவர்கள் வயதில் இளையவர்களாவும், மைனராகவும் கூட இருக்கலாம்.

எனிவே, அம்மா ஆட்சி நடக்குது. அம்மா, அந்த ஆறு பேரையும் பிடிச்சு உள்ளே போட்டு கொஞ்சம் "பேர்" சம்பாரிக்கலாம்!

இதுபோல் அந்த ஆறு மூதேவிகளையும், அதுக செய்த அநியாயத்தையும்  போலிஸிடம் போயி,  சட்டப்படி இதை அணுகும் சின்மயி க்கு ஒரு "ஓ" போடுங்கப்பா! 

நானும் நீயும் சுயநலவாதிதான்!

நான் வென்றேன்
நான் வீழ்த்தினேன்
நான் நகைத்தேன்
நான் சாதித்தேன்
நான் உதவினேன்
நான் கவர்ந்தேன்
நான் உயர்ந்தேன்
நான் பாராட்டினேன்
என்கிற நான் சுயநலவாதிதான்!

நான் தோற்றேன்
நான் வீழ்ந்தேன்
நான் அழுதேன்
நான் புலம்பினேன்
நான் குழம்பினேன்
நான் இழந்தேன்
நான் மறந்தேன்
நான் உணர்ந்தேன்
என்கிற பரிதாபநானும் சுயநலவாதிதான்!

நான் நீயாவதும்
நீ நானாவதும்
நானும் நீயும் நாமாவதும் இயல்புதானே?

Thursday, October 18, 2012

மேடம்! உங்க பேண்ட்ஸ்ல "ஸிப்" திறந்திருக்கு!

சரவணனுக்கு சிறுவதிலிருந்தே இந்தப்பழக்கம் உண்டு. தெருவில் நடுரோட்டில் வாழைப்பழத் தோல் கிடந்தால் அதை கவனமாக எடுத்து குப்பையில் போடும் வழக்கம் . உடைந்த கண்ணாடி கிடந்தாலோ அல்லது ஒரு ஆணி கிடந்தாலோ அதை குனிந்து கவனமாக எடுத்துக்கொண்டு போய் ஓரமாகப் போடுவான். ஒரு சில நண்பர்கள் இதெல்லாம் தேவையில்லை என்று நினைப்பதையும் பார்த்து இருக்கான். இதெல்லாம் ஒரு "ஹாபிட்". அவனுக்கு பழகிவிட்டது.

இன்று காலையில் சிகாகோவில் வேலைக்கு புறப்பட்டு மெட்ரோ ரயிலில் ஏறி வந்து உட்கார இடம்தேடும்போது கூட்டம் அதிகமில்லை. எல்லா இருக்கைகளிலும் இருவர் அல்லது ஒருவர் அமர்ந்திருந்தார்கள். ஒரு இருக்கையில் மட்டும் யாரும் இல்லை என்பதால் தன் பேக்- பாக் கை அருகில் வைத்து அமர்ந்தான். இப்போது மணி காலை எட்டு நாற்பத்தைந்து. அவனுக்கு ஒன்பதரைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. இந்த ட்ரயினில் போனால் ஒன்பது பதினைந்துக்கு இவன் ஆஃபிஸில் இருக்கலாம்.

அடுத்த ஸ்டாப்பில் ஒரு சுமார் முப்பது வயதிருக்கும் அழகான கவர்ச்சியான வெள்ளைக்காரப் பெண் ஏறி வந்தாள், உடனே இவன் தன்னுடைய பேக் பாக்கை எடுத்துவிட்டு அவளுக்கு இடம் கொடுத்தான். அவளுக்கு இடம் கொடுக்கும்போதுதான் கவனித்தான், அவள் அவசரத்தில் பேண்ட்ஸ் zipப்பை மாட்ட மறந்திருந்தாள்! முன்னால் அந்தப் பகுதியில் அவளுடையை சிவப்பு பேண்டிஸை நல்லாவே பார்க்க முடிந்தது! அவளோ அதை சுத்தமாக உணராமல் அவன் அருகில் அமர்ந்து ஏதோ ஒரு கதைப்புத்தகத்தை திறந்து வாசிக்க ஆரம்பித்தாள்.

சரவணனைத்தவிர யாரும் அவளின்  இந்தக் கோலத்தை கவனிக்கவில்லை! அவனுக்கு ஒரே "டிலெம்மா" அவளிடம் அவளுக்கு மட்டும் கேட்கும்படி அவளை சரி செய்ய சொல்லுவோமா? இல்லை வேண்டாமா? என்று. ஒன்ஸ் அவள் இதை "ரியலைஸ்" செய்யும்போது எத்தனை பேர் என்னை இப்படிப் பார்த்தார்களோ? என்றுதான் அவள் யோசிப்பாள். சரி "பொலைட்"டாக அவளிடம் சொல்லிவிடலாம் என்று திரும்பினான்!

ஆனால் அவனுக்கு சக்கண்ட் தாட் ..

அவள் யாருனே இவனுக்குத் தெரியாது. அவளிடம் சொல்வதால் இவன் தன்னை இப்படிப் பார்த்துவிட்டானே என்று அவள் எம்பாரஸ் ஆகலாம். இவனுடைய இந்த "உதவி"யை அவள் வேறு மாதிரி எடுத்துக் கொண்டால்? அதாவது நான் உன் உள்ளாடையைப் பார்த்துவிட்டேன் என்று இவன் சொல்வதாக.. அவ என்ன மாதிரி டைப்போ, யாரோ?

இதுபோல் அவனுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் டயானா என்று ஒருத்தி இதுபோல மறந்ததையும், அதை யாரோ ஒரு பாய் "ஃப்ரெண்ட்" சரிசெய்யச் சொன்னதையும் சொன்னாள். அதற்கு அவள் எப்படி ரியாக்ட் செய்தாள் என்று சொன்னவரிகளை அவன் இன்னும் மறக்கவில்லை.
"Oh gosh, the panty thing is the worst. That happened to me when I was in Texas, and it was a male friend who told me. I was so embarrassed."

தன் தோழர் சொன்னதுக்கே டயானா அப்படி ஃபீல் பண்ணியதாக சொன்னாள், நம்ம எதுக்கு சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள என்று மனதை மாற்றிக் கொண்டான்.

இவ்வளவு வளர்ந்த பின்னும் அவனுக்கு இதுபோல் விசயங்களில் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. இன்னொரு முறை அவன் இந்தியாவில் படித்துக் கொண்டிருந்தபோது, லேடீஸ் ஹாஸ்டல் பின்புறம் இவன் அறையிலிருந்து பார்த்தால் நல்லாத் தெரியும். பக்கத்தில் உள்ள சேரியில் உள்ள சில பொறுக்கிப் பசங்க இரவு 7-8 மணிப்போல வந்து லேடீஸ் ஹாஸ்டலில் உள்ள "வெண்டிலேட்டர்" மூலம் பாத்ரூமில் எட்டி பார்ப்பதை பார்த்த இவனும் இவன் நண்பர்களும், ஒரு சின்ன சத்தம் போட்டதும் அவர்கள் ஓடி விட்டார்கள்.

அது போதாதென்று அடுத்த நாள் அவனுடைய சகமாணவி மாலினியிடம், இதைப்பத்தி சொல்லி கவனமாக அவள் ஹாஸ்டலில் வெண்டிலேட்டரை அடைத்து வைத்துக்கொள்ளும்படி சரவணன் சொன்னான். அதற்கு மாலினியிடமிருந்து வந்த ரியாக்ஷன் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை! என்னவோ இவனே பாத்ரூமில் எட்டிப்பார்த்தது போல ஒரு "கேவலமான தேங்க்ஸுடன்" போனாள். சரவணனுக்கு எதுக்குடா இதைப்போயி சொன்னோம்னு ஆகிவிட்டது. இவளுகளை நிர்வாணமா பார்த்தால் என்ன? இல்லை கற்பழித்தால்தான் நமக்கென்ன? என்று நினைத்தான்.

அவன் ஸ்டாப் அதற்குள் வந்துவிட்டது. அவளிடம் எதுவும் சொல்லாமல் இறங்கி தன் வேலை செய்யும் இடத்திற்குப் போனான். "எவ எப்படிப்போனா நமக்கென்ன? உதவி செய்கிறோம் என்று வம்பை விலைக்கு வாங்காமல் இருப்பது நல்லது" என்று நினைத்துக்கொண்டான், சரவணன்.

****

இதுவும் ஒரு மீள்பதிவே!

Wednesday, October 17, 2012

இம்முறை பராக் ஒபாமாவுக்கே ஜெயம்!

அமெரிக்காவில் நவம்பர் 6, 2012 ல் தேர்தல்!  செப்டம்பர் 2012 முடியும் வரை, வந்த கருத்துக் கணிப்பின்படி  வெற்றிபெரும் வாய்ப்பில்  +3 பாயிண்ட்ஸ் போல முன்னிலையில் இருந்தவர் டெமக்ரெட்ஸ் பார்ட்டியைச் சேர்ந்த, தற்போதைய ப்ரஸிடெண்ட் பராக் ஒபாமா தான்! ஆனால் அக்டோபர் 3, 2012 ல் முதல்  நடந்த முதல் ப்ரசிண்டெண்சியல் விவாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஒபாமா மிகவும் "நாகரிகமாக" நடந்துகொண்டதாலோ என்னவோ, அவர் எதிராளி ரிபப்ளிகன் கவர்னர்  மிட் ராம்னி அவரை விவாதத்தில் வென்றார்.

சரி,  ஒரு விவாதத்தில் மிட் ராம்னி வென்றதால அப்படி என்ன மாறிவிடப்போகிறது? என்று எண்ணினால், அக்டோபெர் 3  2012 ல இருந்து எல்லாவிதமான கருத்துக்கணிப்பும் கவர்னர் ராம்னிக்கு ஆதரவாக அமைந்து, அதுவரை  கருத்துக்கணிப்பின் படி முன்னிலையில் இருந்த ஒபாமா  வெற்றி வாய்ப்பிலிருந்து சறுக்கி கீழே வந்துவிட்டார்!!! முதல் ப்ரசிடெண்சியல் விவாதத்திற்குப் பிறகு கருத்துக்கணிப்பின்படி கவர்னர் மிட் ராம்னி  +1 பாயிண்ட் அதிகமாகி எல்லாமே மாறிப் போயிருந்தது.

இந்நிலையில் நேற்று, (அக்டோபர் 16) நடைபெற்ற ரெண்டாவது ப்ரசிண்டெண்சியல் விவாதத்தில் (மொத்தம் 3 விவாதங்கள்) ஒபாமா சிறப்பாக விவாதிச்சு, ராம்னியை பலவிதமாகத் தாக்கி விவாதத்தில் வென்றார் என்கிறது அரசியல் விமர்சகர் உலகம்.

இதனால் கருத்துக்கணிப்பில் ஏற்படும் மாற்றங்கள் தெரிய இன்னும் சில நாட்களாகலாம்!

* நேற்று நடந்த விவாதம் நம் கருத்துக்களங்களில் நடப்பதுபோல் "அடி தடி" ஆவது போலத்தான் காரசாரமாகப் போனது!

* முக்கியமாக, செப் 11, 2012 வில்  லிபியாவில் நடந்த இழப்பை, சுட்டிக்காட்டும்போது கவர்னர் மிட் ராம்னி கொஞ்சம் சொதப்பிவிட்டதால் அதில் அவர் ஆதாயம் அடையமுடியாமல்ப் போனது அவருக்கு பெரிய மைனஸ் பாயிண்ட்டாக ஆகிவிட்டது என்பது கோடிட்டுக்காட்ட வேண்டிய ஒன்று.

* இன்னும் இது ஒரு இழுபறி தேர்தலாகவே உள்ளது.  

* ஒபாமா வெல்வார் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில்தான் இன்றைய நிலைமை இருக்கிறது.

சில கருத்துக்கணிப்புகள் கொடுக்கும் வரைபடங்கள் கீழே!






*************




அடுத்த வருகிற மூன்றாவது மற்றும் கடைசி ப்ரசிடெண்ஸியல் விவாதம், வருகின்ற திங்களன்று, அக்டோபர் 22, 2012 நடக்கவுள்ளது. கடைசி விவாதத்தில் "வெளிநாட்டு அஃபையர்ஸ்/பாலிஸிகள்" பற்றி விவாதிப்பதால் ஒபாமா விற்கு விவாதத்தில் வெற்றியிருக்க வாய்ப்பிருக்கு என்கிறது கருத்துக்கணிப்பு உலகம்!

பொறுத்திருந்து பார்ப்போம்! :)

பள்ளியில் வாத்தியார் மாணவிகளை அடிக்கலாமா?

அமெரிக்காவில் ஆராய்ச்சிமேலே ஆராய்சி செய்து பெற்றோர்கள் குழந்தைகளை அடிச்சு வளர்ப்பது தப்புனுதான் நம்புறாங்க. அடிப்பதால் எந்த பிரையோசனும் இல்லை. கனிவாக பேசித்தான் தப்பு செய்றதை தடுக்கனும். பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் "ஃப்ரஷ்ட்ரேஷன்களை"தான் குழந்தைகளிடம் காட்டுறாங்க, அதான் அடிக்கிறாங்க. அப்படிக் காட்டுவதால் குழந்தைகள் பின்னால தன்னம்பிக்கை இல்லாமல் போவாங்கனு பலவிதமாக ஆராய்ச்சி எல்லாம் செஞ்சு குழந்தைகளை அடிக்கக்கூடாதுனுதான் சொல்றாங்க.

டெக்ஸாஸ் மாநிலத்தில் மாணவ மாணவிகளை "ஸ்பேண்க்" பண்ணலாம் என்று சட்டம் அனுமதி கொடுத்தது என்பதே இந்த செய்தி படிக்கும் வரை எனக்குத் தெரியாது.

அமெரிக்காவில் எப்படி இதெல்லாம் பாஸிபிள்னு எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது!!!

Should Teachers Be Allowed to Spank Students?

A Texas school district changes its corporal-punishment policy — by expanding rather than limiting teachers' rights to paddle students. Is spanking really the best way to discipline kids?


Peter Dazeley / Getty Images

 Spanking is one of the many things about which parents agree — passionately — to disagree. Most American parents swear by the old adage “Spare the rod, spoil the child,” but others are horrified by the very thought of raising a hand to a kid. And that’s why corporal punishment in schools is an even thornier issue, as highlighted by a Texas school district’s recent decision to change its spanking policy. After two parents complained that their daughters had been beaten hard enough to develop bruises and burnlike redness on their skin, the Springtown school board voted last week to amend its corporal-punishment rules. Rather than abolishing the practice, however, the board members took pains to preserve teachers’ ability to physically discipline students:
parents must now opt in with written permission allowing their children to be paddled when teachers feel it’s justified; previously, parents had to opt out of corporal punishment.
The school board also expanded its spanking policy overall by deciding to allow teachers to punish students of the opposite gender.
Parents can now designate whether they’re O.K. with a male or female school official doling out the paddling. The initial complaints from the two parents had centered on the fact that their daughters were punished by a male teacher, violating Springtown’s then requirement that same-gender teachers carry out any physical punishment.

எல்லாக் கதையும் படிக்கனும்னா இங்கே போங்க!

 Should Teachers Be Allowed to Spank Students?


 The U.S. hasn’t adopted such a ban; a bill to end corporal punishment in schools was introduced in Congress in 2011 but remains in committee. In the meantime, spanking is likely to continue generating high passions and even higher stakes as individual states and school districts decide how to interpret the available evidence on the effect of corporal punishment on our children’s health.
 டெக்ஸாஸ் ஒரு காட்டுப்பயலுக ஊருபோல!


SPRINGTOWN, Texas (AP) — Like many schools in Texas, "spare the rod and spoil the child" might be considered the motto at Springtown High School.
But when two teenage girls there reportedly suffered bruises after being paddled by male assistant principals, some parents complained. They weren't upset about the punishment itself, but instead that the school violated the policy requiring an educator of the same sex as the student to dole out the paddling.
So the school district has changed its policy — to expand, not abolish, corporal punishment. Board members voted Monday night to let administrators paddle students of the opposite sex, after Superintendent Michael Kelley cited a lack of women administrators to carry out spankings.
The new policy says a same-gender school official must witness the paddling, which is just one "swat," and that parents also can request one spanking per semester. In all cases, a parent must give written permission and request it in lieu of another punishment, such as suspension or detention.
"I personally think Texas is getting a black eye because of this," Kelley told The Associated Press. "People are assuming a school district can do whatever it wants because of this. That's not the case."
Texas law allows schools to use corporal punishment unless a parent or guardian prohibits it in writing. The issue of the student or educator's gender is not addressed, and there are no state standards on the minimum or maximum ages of students who can be spanked, according to the Texas Education Agency.
Cathi Watt, whose daughter was one of the two girls recently paddled, said Tuesday that she's OK with paddlings in schools "because they need it once in a while, and I got them when I was a kid." But she said the male administrator used too much force, so she does not support the new policy.
Watt said her 16-year-old daughter, Jada, deserved to be spanked after she spoke sarcastically to a teacher and an assistant principal, "but she did not deserve to be bruised."
"And what kind of message does it send these boys?" Watt said. "Is it telling them that it's OK to hit a girl?"
Texas is one of 19 states allowing schools to spank students, but 97 of the nation's 100 largest school districts have banned corporal punishment, according to the Center for Effective Discipline.
About 75 percent of the state's school districts use corporal punishment, including Springtown, a town of about 2,700 located about 30 miles northwest of Fort Worth, according to People Opposed to Paddling Students, a group based in Houston. Some of the major districts, including Fort Worth, don't paddle students.
"It is never OK to hit a child. ... Men should not be padding teenage girls, because there is a sexual connotation with teen girls but also with teen boys," said Jimmy Dunne, president of People Opposed to Paddling Students.
State Rep. Alma Allen, D-Houston, thinks schools should never spank children, but her bill to abolish corporal punishment in Texas schools never passed. She said the compromised version of her bill, which did become law, was that parents could opt in.
"Parents can choose whether to spank their children at home," Allen said. "When you send a child to school, it should be a place to be motivated — not a place to be beaten."


கண்டவனையும் உங்க குழந்தைகளை ஸ்பேங்க் பண்ண அனுமதிக்க இஷ்டம் இல்லைனா இடத்தை காலி பண்ணுவது நல்லது!

என்னை பொறுத்தவரையில், குழ்ந்தைகளை வாத்தியார், வாத்தியம்மாக்கள் அடிப்பது தப்பு! வேற மாதிரி தண்டனை வழங்கலாம்! ஆனால் நம்ம ஊரில் இன்னும் "அடியாத மாடு படியாது", "அடி உதவுறாப்பிலே அண்ணன் தம்பி உதவமாட்டான்" னு எதையாவது சொல்லிக்கிட்டு திரிவார்கள்!

உங்க குழந்தைகள்! பலி கொடுப்பதோ, பாதுகாப்பதோ உங்க உரிமைதான்! நான் இல்லைனு சொல்லவில்லை! என்னைப்பொறுத்தவரையில் குழந்தைகளை வாத்தியார் அல்லது ஆசிரியை அடிப்பது தப்பு தப்பு தப்பு! :)

Tuesday, October 16, 2012

தி ஜானகிராமன் மேலைநாட்டுக் கதைகளை காப்பியடிச்சாரா?

எனக்கு எழுத்தாளர் சுஜாதா எழுத்தெல்லாம் ரொம்பப் பிடிக்காது. ஏன் சுஜாதா பார்ப்பனர்னால பிடிக்காதா? நிற்க!  எனக்கு ஜானகிராமன் எழுத்தும் ரொம்பப் பிடிக்கும்!  அப்போ உனக்கு "ஐயர்" னாப் பிடிக்கும் "ஐயங்கார்" னா பிடிக்காதா? னு மறுபடியும் வம்பு பேசக்கூடாது! எனக்கு சாண்டில்யன் (ரங்க பாஷ்யம்) வரலாற்றுக் கதைகளும் பிடிக்கும்.

எனிவே, இன்னைக்கு சுஜாதாவை தலையில் தூக்கி வைத்து, நான் அவர் விசிறினு  ஆடவில்லையென்றால் பதிவர்களுக்கு மரியாதை இல்லை என்ற சூழல்களிலும் இதைச் சொல்லுகிறேன்! பொதுவாக அறிவியல், சஸ்பெண்ஸ், த்ரில்லர் போன்றவைகளைவிட மனித "மனவியல்" சம்மந்தப்பட்ட எழுத்தே என்னால் ரசிக்க முடிகிறது.

ஜானகிராமன் மனித மனத்தை (சைக்காலஜி) அழகாகப் புரிந்து கொண்டவர். முக்கியமாக ஆண்களை! அவர் எழுதும் எழுத்து பெண்களை கவருவது அரிது என்று நினைக்கிறேன். கவனம்!  நான் அரிது என்றுதான் சொல்கிறேன்.  எந்தப் பெண்னையும் கவராது என்று சொல்லவில்லை!

ஜானகிராமனின் எழுத்து நடை, சூழ்நிலைகள், பேசும் தமிழ்  எல்லாமே நிச்சய்ம "யுனீக்" தான். அவர் இலக்கியத்தரம் உயர்தரம்தான். அதை "காப்பி" என்று எந்த மடையனும் சொல்லமாட்டான். அதேபோல் அவர் எழுதும் "அடல்ட்டரி" அல்லது கள்ளக்காதல் அல்லது தகாத உறவு என்பதெல்லாம் எல்லாக் கலாச்சாரத்திலும் உண்டுதான். ஒரு சில கதைகளில் வரும் விசயங்கள் மேலைநாட்டில் நடந்தவைகளை தழுவியதுபோல் இருக்கும். அதெல்லாம் பரவாயில்லை!

நான் சொல்ல வருவது   முக்கியமாக தி ஜா ரா உருவாக்கும் "பெண் பாத்திரங்கள்" எல்லாம் எதற்கும் நுணிந்தவங்களாக, இளகிய மனதில்லாமல், ஏதோ மேலைநாட்டுப் பெண்கள் போல இருந்ததுனு என்பது என் புதிய கண்டுபிடிப்பு.

சரி, அவர் எழுதிய சில கதைகளையும், அவைகளில் வந்துள்ள பெண் பாத்திரங்களையும் கொஞ்சம் மேலோட்டமாகப் பார்ப்போம்!

* தேடல் னு ஒரு சிறுகதை. இதில் வரும் ராமரத்ணத்தை ஒரு நல்ல கலாரசிகனாக காட்டியிருப்பாரு. அவர் மனைவி தன் குழந்தை பெற்றுக்கொள்ள (பிரசவத்திற்கு) அவள் அக்காவீட்டிற்கு போவாள் (அம்மா இல்லை என்பதால்). அக்கா கணவன் ஒரு வக்கீல், குழந்தை பொறந்து இருக்கும்போது  கொழுந்தியாவையும் மயக்கி, மனைவியாக்கி வீட்டோடயே வச்சுக்குவாரு. அதோட அவ்ளோதான். குழந்தையுடன் திரும்பி வந்த மனைவியை, "சரியில்லை" என்று உணர்ந்து திருப்பி அக்காவீட்டுக்கே அனுப்பிடுவாரு ராமரத்ணம்! பிரிந்துடுவாங்க. கடைசியில் அவர் பொண்ணு (அவருக்குப் பிறந்தது)  பள்ளியில் படிக்கும்போது, அவளை யார்னு தெரிந்து, சிரத்தையுடன் அவளோட போயி பேசுவாரு, தன்னை "தந்தை"னு அறிமுகப்படுத்திக்கொண்டு. அப்புறம் இந்தப் பிரச்சினைக்கு உதவும் இன்னொரு க்ரிஷ்டியன் டீச்சரோடு செட்டில் ஆயிடுவாரு.

* வீடு னு ஒரு கதை. இது ஒரு குறுநாவல். கணவன் டாக்டர், மனைவி வீட்டரசி. குழந்தைகள் இருக்கும். மனைவிக்கும் டாக்டரிடம் வேலைபார்க்கும் டாக்டருக்கு மிகவும் நம்பிக்கையான கம்பவுண்டருக்கும் ("பெரிய டாக்டர்") கள்ள உறவு ஆரம்பிச்சுரும்.. டாக்டர் ரெண்டு பேரையும் கையும் களவுமாப் பிடிச்சுருவாரு. ஆனால் மனைவியோ, எந்தவித "கில்ட்டி" உணர்வுகளும்  இல்லாமல் "கம்பவுண்டரோட" செட்டில் ஆகத் தயாராகிவிடுவாள். அப்புறம் கடைசியில் அவங்க ரெண்டு பேரும் நடக்கும் சண்டை. வசிச்ச அந்த வீடு யாருக்கு  சொந்தம் னு டாக்டருக்கும், அவர் மாஜி மனைவிக்கும் சண்டை நடப்பதுபோல கதை முடியும்.

* அம்மா வந்தாள் அலங்காரம்.  இதையெல்லாம் பத்தி ஏற்கனவே கொஞ்சம் இந்தத் தளத்தில் எழுதியாச்சு.  புருசனோட வாழ்ந்துகொண்டே கள்ளக்காதலனுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தாலாவது பரவாயில்லை. அவனோட சேர்ந்து, அவனுக்கு ரெண்டு பிள்ளைய வேற பெத்துக்குவா இந்த "மகராசி"அலங்காரம்!

* மரப்பசு அம்மணி. இதையும் பத்தி ஏற்கனவே இந்தத் தளத்தில் எழுதியாச்சு. இதில்.. கோபாலி,  பட்டாபில இருந்து, ப்ரூஸ்னு வெள்ளைக்காரன் வரை நூற்றுக்கணக்கானவரிடம் படுக்கை அறையில் "உறவாடி" ஆம்பளைங்க எப்படி எப்படி, எவன் எவ்ளோ நேரம் தாக்குப் பிடிக்கிறான்? எவனால தனக்கு"ஆர்கஸம்" கொடுக்க முடிஞ்சதுனு ஒரு பெரிய ரிசேர்ச் சே பண்ணுவாள் நம்ம அம்மணி!

* இன்னொரு சிறுகதை. இந்தக் கதை பேரு என்னனு ஞாபகம் இல்லை.  ஒரு கணவன் மனைவி இருப்பாங்க. ஒரு நாள் மனைவி மட்டும் ரயில்ல பொறந்த வீட்டுக்கோ எதுக்கோ போவாள். அங்கே ஒரு கூட ட்ராவல் பண்ணுகிற  ஒரு ஆள் இவளை பேசியே, அவளைப் புகழ்ந்து, செட்யூஸ் பண்ணி இவளோட ரயிலில் உறவு வைத்துக்கொள்வான் (இவளும் விரும்பித்தான்) .

* அப்புறம் நம்ம நளபாகம், ரங்கமணி . என்ன ஒரு கேரக்டர்! நளபாகம் பத்தியும் இந்தத் தளத்தில் எழுதியாச்சு!


  மேலே சொல்லப்பட்ட எல்லாப் பெண் பாத்திரங்களும் ஒரு "மாதிரியானவைகள்" தான்.  இவர் கதைகளில் வரும் பெண்கள் கேரக்டர்கள் பொதுவாக எளிதாக ஏற்றுக்கொள்ளும்படி இருக்காது. அதனால ஆளாளுக்கு ரிசேர்ச் பண்ணி இப்படி அப்படி னு சொல்லி யிருக்காங்க.  ஒரு சிலர், கோபமடைந்து, இந்தாளுக்கு "பித்துப் பிடிச்சிருச்சு" "இவர் ஒரு பர்வர்ட்"னு ஜானகிராமனை ஆளாளுக்கு திட்ட ஆரம்பிச்சுட்டா! :) நெறைவே  இந்த பாத்திரங்கள் பத்தி விவாதிச்சு இருக்காங்க, இன்னைக்கும் விவாதிச்சுக்கிட்டு இருக்காங்க.

எனக்கென்னவோ, இவர் பெண்கள் கேரக்டர்கள் எல்லாமே ஒரு மாதிரி மேலைநாட்டுக் கதைகள், சினிமாக்கள் போன்றவற்றில் படித்த ஒரு சில பெண் கேரக்டர்களாக இருக்கலாம்! அவைகளை ஒரு மாதிரி "தமிழ்ப் படுத்தி" தமிழில் நம் கலாச்சாரத்தில் அலங்காரம், ரங்கமணி, அம்மணினு உருவாக்கிவிட்டார் நம்ம, தி ஜா ரா!  அதன் காரணமாகவே இந்த கேரக்டர்களை பலரால புரிஞ்சுக்கவே முடியலையோ என்னவோ! 


தொடர்புடைய பதிவுகள்:

பொம்மனாட்டிக்கு என்னையா வேணும்?- ஜானகிராமன்

தாய் என்பவள் தெய்வம் போன்றவளா? (I) அம்மா வந்தாள் 

நளபாகம் எழுதிய ஜானகிராமன் ஒரு அசிங்கமான எழுத்தாளரா?!  நளபாகம்,

படித்ததில் பிடிக்காதது- மரப்பசு விமர்சனம்!  மரப்பசு


Monday, October 15, 2012

அருவருப்வை அகற்றும் பாலியல் உணர்வுகள்!

அறிவியல் ஆராய்ச்சிகள் பல வகை!

* குடுவைகளில் வேதிப்பொருள்கள் கவனமாகக் கலக்கி, புதிய மருந்துகளை உருவாக்கி நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தல், ஒரு வகை!

* விலங்குகளுக்கு எல்லாவிதமான விஷ மருந்துகளை கொடுத்து, அவைகளை தண்ணியடிக்க வைத்து, சிகரெட் குடிக்க வைத்து, விலங்குகள் எவ்ளோ நாள் "தாக்குப் பிடிக்கிது" னு பார்க்கிறது, இன்னொரு வகை.

இதுபோல்தான் அறிவியல்கூடங்களில் பலவிதமான ஆராச்சி எல்லாம் செய்றாங்க. அதன் விளைவாகத்தான்  நமக்கு "போலியோ தடுப்பு ஊசி"ல இருந்து  முதல்கொண்டு "வயாகரா" வரை இன்று கிடைக்கிறது.

ஆனால் ஒரு சில பத்திரிக்கைகள் படிக்கும்போதுதான் பல வகையான ஆராய்ச்சிகள் இந்த உலகில் நடந்துகொண்டு இருக்குனு விளங்குது.

இங்கே தலைப்பில் சொன்ன ஆராய்ச்சி ஒண்ணு பண்ணியிருக்காங்க!

இது டைம் ( TIME ) பத்திரிக்கையில் வந்த ஆர்ட்டிக்கிள்!

Dimitri Vervitsiotis / Getty Images

* If you think about it, sex is actually sort of disgusting, what with all the sweat, saliva, fluids and smells. So much so that a group of researchers from the Netherlands got to thinking, How do people enjoy sex at all?
* According to their small new study, people — at least women — may be able to get over the “ick” factor associated with sex by getting turned on.
* S exual arousal overrides the natural disgust response, the researchers found, and allows women to willingly engage in behaviors that they might normally find repugnant.

 என்ன சொல்றாங்கனா, "செக்ஸ்" அல்லது "காமம்" அல்லது "பாலியல் உந்துதல்" என்பதே அசிங்கமான அருவருப்பான ஒண்ணுதான். இந்தக் கருத்தை நாம் அனைவருமே "சுயநினைவோட" இருக்குறப்ப ஏற்றுக்குவோம். ஆனால், இதே நீங்க காம-உணர்வு ததும்பும் நிலையில் இருக்கும்போது, நீங்க செய்கிற அருவருப்பான செயல் உங்களுக்கு அருவருப்பாக தோணுவதில்லை!  அதாவது  "நிதானத்திற்கு" வரும் வரைக்கும்.

இது நமக்கு நல்லாவே தெரிந்த, உணர்ந்த ஒண்ணுதான்.

* அதனாலதான் நம்ம காமத்தை மிருக உணர்வு என்கிறோம்.

* அதை நாலு சுவருக்குள் உலகறியாமல் செய்கிறோம்.

*  பொது இடங்களில் காமம் அனுமதிக்கப்படவில்லை!

இருந்தாலும் இதை மெனெக்கெட்டு ஆராய்ச்சி பண்ணியிருக்கு இந்த நெதெர்லாந்து நாட்டு "க்ரூப்". இந்த ஆராய்ச்சியெல்லாம் எதுக்கு? இதுமாரி ஆராய்ச்சிக்கெல்லாம்  எவன் "பணம்" கொடுப்பான்? என்கிற விபரமெல்லாம் எனக்குத் தெரியாது!

* The study, conducted by scientists at the University of Groningen, involved 90 women who were randomly assigned to one of three groups.
1) One group watched a “female friendly” erotic video;
2) another watched a video of high-adrenaline sports like skydiving or rafting, designed to be arousing but not sexually so;
3) and the third group watched a neutral video clip of a train.

Afterward, all the women were asked to perform 16 tasks, most of them icky, like drinking from a cup with a bug in it (the bug was fake), wiping their hands with a used tissue, eating a cookie that was next to a live worm or putting their finger in a tray of used condoms.
The researchers found that the women who watched the sexually arousing video rated the unpleasant tasks as less disgusting than did their counterparts who were not sexually aroused. They were also more likely to complete more of the tasks, suggesting that sexual arousal not only dampens the disgust response but also influences how much women are willing to do.
That helps explain why so many people keep having sex, despite the inherent messiness of it, the researchers said. “The findings indicate that both the impact of heightened sexual arousal on subjective disgust and also on disgust-induced avoidance will act in a way to facilitate the engagement in pleasurable sex,” the authors wrote.
Previous studies suggest that sexual arousal has the same effect on men. “I think this study is interesting in that it helps support the idea that sexual arousal lowers inhibitions and often enables one to participate in activities that they might normally find disgusting or off-putting,” Dr. Ian Kerner, a sexuality counselor and author based in New York City who was uninvolved with the study, told ABC News.
The findings may also shed light on conditions involving sexual dysfunction. Lack of sexual arousal may interfere with healthy sex by failing to dampen the disgust factor, the authors said. Essentially, if women are not appropriately aroused before sex, they may find it even more repulsive and increasingly start to avoid it. Low arousal can also render women physically unable to enjoy sex, the authors said:

அதாவது என்ன ஆராய்ச்சி செஞ்சிருக்காங்கனா, ஒரு 90 பெண்களை 3 க்ரூப்பா பிரிச்சு இருக்காங்க

1) ஒரு க்ரூப்  பெண்களை   "ஒரு மாதிரியான" காம வீடியோவை  பார்க்கவிட்டு இருக்காங்க.

2) ரெண்டாவது க்ரூப்பை "ஸ்போர்ட்ஸ்" வீடியோ பார்க்க விட்டு இருக்காங்க.

3) மூனாவது க்ரூப்பை சும்மா ஏதோ நியூட்ரல் வீடியோ பார்க்கவிட்டு இருக்காங்க.


இந்த மூனு கோஷ்டியையும் ஒண்ணு சேர்த்து, சில அருவருப்பான காரியங்களை செய்ய சொல்லியிருக்காங்க.

* குடிக்கிற பாணத்தில் ஒரு சில பூச்சிகளைப் போட்டு (ப்ளாஸ்டிக்தான்) அதை குடிக்கச் சொல்லி இருக்காங்க.

* ஒரு பிஸ்கட்டை உயிரோட இருக்க புழுக்களுக்கு பக்கத்தில் வச்சு அதை எடுத்து சாப்பிட சொல்லியிருக்காங்க.

இதுபோல் ஒரு 16 அருவருப்பான "டாஸ்க்" கொடுத்து செய்யச் சொல்லியிருக்காங்க.

இதுபோல இந்தப் பெண்களை செய்யச் சொன்னபோது, காமம்-ததும்பிய நிலையில் உள்ள பெண்கள் (அந்த மாதிரி வீடியோ பார்த்த பெண்கள்)  இதுபோல அருவருப்பான காரியங்களை நல்லா திறம்பட செய்தாங்களாம்! அவங்களுக்கு இதுபோல் அருவருப்பான காரியம் அருவருப்பாகத் தெரியலையாம்! மற்றவர்கள் இவர்களோட போட்டிபோட முடியவில்லையாம்.

சரி இதிலிருந்து என்ன கத்துக்கிட்டாங்கனா,

பெண்களை முதலில் காமம்-ததும்பும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு  உறவு வைத்துக்கொண்டால் உங்க அருவருப்பான ஆசைகளை எல்லாம் பூர்த்தி செஞ்சுக்கலாமாம்! அவர்களும் விரும்பி ஈடுபாடுடன் உங்களோட உடலுறவு வச்சுக்குவாங்களாம்!

* இது என்ன மாதிரிப் பெண்களுக்குப் பொருந்தும்?

* இது இப்போ ரொம்ப அவசியமா? னு கேக்காதீங்க! :) அதெல்லாம் தனிப்பட்ட நபரைப் பொறுத்து! நான் எஸ்கேப்!


பின்குறிப்பு: 

ஜெயதேவ் ஒரு நல்ல பதிவு போட்டு இருந்தாரு.

மூன்றில் ஒரு பங்கு வைரத்தால் ஆன பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!!

ஏதோ புது வைரக்கிரகம்  ஒண்ணுகண்டு பிடிச்சி இருக்காங்கனு. அதில் உள்ள "back references"  பார்க்கப் போகும்போது,  டைம் பத்திரிக்கையில் அந்த வைரக்கிரகம் சம்மந்தமாக ஒரு ஆர்ட்டிகிள் இருந்தது. அதை என்னனு பார்க்கப்போனால் இந்த ஆர்ட்டிக்கிளும் பக்கதில் இருந்தது . சரினு அள்ளிட்டு வந்தேன்!

அதனால இந்த "அருவருப்புப் பதிவுக்கு"  பாதி க்ரிடிட் ஜெயதேவ்க்குத்தான் கொடுக்கனும்!

அவர் "இதுல க்ரிடிட் வேணாம், என்னை விடுங்க"னு  எடுத்துக்கலைனா நானே வச்சுக்கிறேன்! நான் சொல்ல வேண்டியது என் கடமை! :))))

தமிழன்னா என்ன? அவனும் ஆம்பளைதானே?!

"ஏய்! சுவேதா! ஆமா என்ன ஆச்சு? உன் நண்பர் "சுரேஷ்"க்கு ஒரு ஹாய் கூட சொல்ல மாட்டேன்கிற?"

"அந்த கருத்துக்களத்திலேயா?"

"ஆமா. முன்னால் எல்லாம் ரொம்ப நல்லா பேச்சிக்குவ. இப்போ என்ன ஆச்சு? ஒரு ஹாய்கூட சொல்ல மாட்டேன்கிற?"

"நீங்க எப்போதாவது பொண்ணா இருந்து இருக்கீங்களா, ராஜ்?"

"ஏன் இப்படி ஒரு கேள்வி?"

"ஒரு பொண்ணா இருந்தீங்கன்னாத்தான் கீழ்த்தரமான ஆம்பளைங்க பத்திப் புரியும்"

"ஏய்! ட்ரை மி ப்ளீஸ்!"

"இந்த ஆளூ ஒழுங்கா பேசுறார். கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்கு. இவரும் ஐ டி ல தான் இருக்கார்னு என் ஃபோன் # கொடுத்தேன்"

"கால் பண்ணி பேசினாரா?"

"மொதல்ல ஒழுங்காத்தான் பேசினார். ஏதோ ஜோக் அடிப்பார், எனக்கு சிரிப்பு வராது. இருந்தாலும் சிரிச்சு வைப்பேன்"

"ஏய் இழுக்காமல் சொல்லேன்?"

"ரொம்ப "inappropriate"டா நடந்துக்கிட்டார், ராஜ். ஒரு நாள் கேவலமா ஏதேதோ பேசிட்டார். ஏதோ ஜோக் அடிக்கிறது போலே. ஐ நோ ஹி மெண்ட் இட்"

"என்னதான் சொன்னார்?"

"அதை உங்ககிட்ட சொல்லவே கஷ்டமா இருக்கு.. ராஜ் !"

"சும்மா எனக்கு மட்டும் கேக்கிறார்போல சொல்லு! ப்ளீஸ்?"

அவள் அதை சொன்னாள்

"வாட் எ ச்சீப் பாஸ்டட் ஹி இஸ்! எப்படி இப்படி எல்லாம் கேக்கலாம் உன்னிடம்?"

"என்னை கேட்டால்? நீங்களும் ஆம்பளைதான் உங்களுக்குத்தான் தெரியனும்"

"ஏய்! நான் எல்லாம் நான் யார்ட்டயும் அப்படி நடந்ததே இல்லைப்பா"

"ரொம்ப அருவருப்பா இருக்கு, ராஜ். அந்த ஆளைப் பத்தி நெனைக்கவே! என்ன மட்டமா நடந்துக்கிறான்!"

"நாடுவிட்டு நாடு வந்திருக்கோம். இவரும் ஒரு தமிழர்தானே? கல்யாணம் ஆனவர்னு நம்பி நீ ஃபோன் # கொடுத்த! இவ்வளவு கீழ்தரமான ஆளா இருப்பான்னு நான் கனவு கூட காணலை"

"நானும்தான். என்னால நம்பவே முடியலை. ஒரு நிமிஷம் நான் பேசவே இல்லை. அப்புறம் எப்படியோ ஹாங் அப் பண்ணினேன்"

"ஏன் இப்படி நம்ம தமிழர்களே இன்னொரு தமிழ் பொண்ணுட்ட மட்டமா நடந்துக்கிறாங்க? அதுவும் கல்யாணம் ஆனவன்! பொறுக்கியைவிட கேவலமா நடந்து இருக்கான்"

" தமிழன்னா என்ன? அவனும் ஆம்பளைதான்,  ராஜ்!"

"என்ன சொல்ற?"

"அடுத்த ஜென்மத்தில் பொண்ணாப் பிறந்து பாருங்க! இந்த ஜென்மங்களின் உண்மை சுரூபம் அப்போத்தான் தெரியும், ராஜ்!"

*****

இது ஒரு மீள் பதிவு!

Sunday, October 14, 2012

மாமன்னன் அலெக்சாண்டரை வீழ்த்திய புருசோத்தமன்?

என்னைப் பொறுத்தவரையில் வரலாறு என்பதே பிரச்சினையான ஒரு பாடம். என்னையா பிரச்சினை உமக்கு? நல்லாத்தானே இருக்கு? இந்த மன்னன் இவனைக் கொன்றான், இந்த மன்னன் இவனை வென்றான் என்றுதானே சொல்றாங்க? இதிலென்ன பிரச்சினை உமக்கு?

அறிவியல் உண்மைகள் இன்றும் உண்மைகள்தாம்!ஆனால் வரலாறு? பலவாறு திரிக்கப்படலாம்!

* சூக்ரொஸ் என்பது ஒரு க்ளுக்கோஸ் மற்றும் ஒரு ஃப்ரூக்டோஸ் மாலிக்யூல்கள் இணைந்தவை என்பதை இன்றும் சரியா என்று பார்க்கலாம்!

* பொட்டாஸியம் சையனைட் விஷம் என்பதை இன்றும் சரி பார்க்கலாம்!

ஆனால் அல்க்ஸாண்டர் புருசோத்தமனை வென்றாரா? இல்லை தோல்வியடைந்து திரும்பினாரா? என்பதை எல்லாம் எது சரி எது தவறென்று இன்று நாம் கண்டுபிடிப்பது கடினம். வரலாற்று உண்மைகள் திரிக்கப்படலாம்! பொய்யாக்கவும் படலாம்!

நாட்டுப்பற்றுள்ள இந்தியர்கள் இன்று...

* அலக்ஸாண்டர் புருசோத்தமனை வென்றாரென்றால் ஏன் வென்ற நாட்டை அவரிடமே திருப்பிக் கொடுக்கனும்?

* அவ்வளவு இளகிய மனதெல்லாம் நாடுவிட்டு நாடு சென்று உலகை ஆள நினைக்கும் அரசர்களுக்கு இருக்குமா என்ன? சாத்தியமே இல்லை!

* ஏன் வென்றுவிட்டு தன் நாட்டிற்கு திரும்பிப் போகவேண்டும்? என்று குதற்கம் பேசலாம்!

 தர்க்கரீதியாகப் பார்த்தால்கூட ஏதோ இடிக்கிறதே?

Did Alexander really defeated the Indian king Porus?

British historians used to talk of Alexander as ``the world conqueror'' who ``came and saw and conquered'' every land he had visited. He is still advertised in Indian text-books as the victor in his war with India's Porus (Puru). However, the facts as recorded by Alexander's own Greek historians tell a very different tale. And Marshal Zhukov, the famous Russian commander in World War II, said at the Indian Military Academy, Dehra Dun, a few years back, that India had defeated Alexander.

Best Answer - Chosen by Voters

I do not know what Marshall Zhukov said and in which context.
Greek and Latin historians agree in saying that Alexander did conquer Porus. In fact I was reading this episode in Quintus Curtius last night.
Historians do not tell the same stories according to their sources. Arrian is the most reliable because he used first hand sources: Ptolemy I who was one of Alexander's generals and Aristobulus who was an engineer in Alexander's expedition. Arrian compares the two, often relates what the two said and their discrepancies.
What Alexander did was to fool Porus into thinking he was fleeing. In fact he was just going around and attacking Porus from the rear of his army while Seleucus and his men were in charge of seriously injuring the elephants with their axes (Alexander's orders, not Seleucus' idea). Meanwhile, Alexander had also chosen a part of his army to attack the front of Porus'army.
In addition, the soil was slippery and the Indian archers who had huge arches and huge arrows, did not have a stable and firm grip on the ground to throw their arrows. The elephants turned against their own army. It was a debacle. Alexander won. He was very impressed by Porus'courage and he gave him his kingdom back with more territories than before (so says Quintus Curtius). Alexander did that with all his conquests but there were always Macedonians militaty men to control the king or the satrap of the conquered territory or satrapy.

Alexander has remained undefeated because he used his wits in addition to his powerful army which could move fast, had powerful weapons and siege machines, and was completely devoted to their king, Alexander.
For the past half century for some reasons, people try to make Alexander look ugly, blood thirsty, weak, thinking only about his male lovers, etc... However, they have to admit he was an enduring man, courageous, brave, generous, and above all extremely intelligent.

Source(s): 

Other Answers (6)

  • Alexander -did- defeat Porus in the Battle of Hydaspes ...


    But his troops refused to cross the Ganges and attack the states (Magadha and Bengal) beyond ... they had been shaken by the battle with a relatively small power and tired as they already were, did not wish to march further ...


    This is what the Greek historians and probably Marshall Zhukov was referring to ...
    In a way India and Porus signaled the end of Alexander's campaign ...
    (though its really hard to say what would have happened if he did march further)
    0% 0 Votes
    • 2 people rated this as good
  • The problem with "Alexander's own Greek historians" is that we don't know what they said. Every contemporary text has been lost. The nearest we have are histories by Arrian, Plutarch, Diodorus Siculus and Quintus Curtius Rufus. It is probable that these people read the original sources, but we can't be absolutely sure.

    All are in agreement that Alexander was victorious over Porus at the Hydaspes.
  • Ya. He defeated porus and captured him alive. After capturing him...., Alexander: "how should i treat you" porus:"as a king" alexander was shocked by his bravery and as a reward he gave back the kingdom to him. This is what i have in my text books.
    • 4 years ago
  • Well, Alexander came to India, beat them in a batlle, then turned around and went back to Greece.
    Alexander could claim victory, but India remained free of Macedonian rule

  • Alexander never lost a battle, but they never really garrisoned troops in india probably do to the distance. but they definitely surrendered to him.
Alexander accepts the surrender of Porus

File:Alexander the Great (356-23 BC) and Porus (oil on canvas).jpg

இந்த சண்டை 2000 ஆண்டுகள் முன்னால் நடந்தது. அதை எப்படி சரி பார்ப்பது? யாரை நம்புவது?  எதற்காக யாரையும்  நாம் நம்பனும்?

ராமாயாணம், மகாபாரதம் என்பதெல்லாம் கற்பனைக் கதைகளா? இல்லை உண்மைக் கதைகளா? ஹனுமான், வாலியெல்லாம் குரங்குகளா? இல்லை மனிதர்கள் தாமா? ராமர் பாலம் கட்டித்தான் கடல் கடந்தாரா? இதுபோல் வரலாற்றில் பல பிரச்சினைகள் எனக்கு! பல காரணங்களால் வரலாறு திரிக்கப் படுகின்றன. கதைகள் வரலாறாக்கப்படுகின்றன.

வரும் வரலாறில், பதிவுலகிலேயே ஒருவரை எளிதாக அயோக்கியனாகவும் இல்லைனா நல்லவனாகவும் சித்தரிக்கலாம்.ஒரு 100 ஆண்டுகள் சென்றபிறகு இங்கே நடக்கும் விவாதங்கள், வாதங்களை வைத்து எவன் யோக்கியன், எவன் அயோக்கியன் என்று சொல்வது அவ்வளவு எளிதல்ல! பதிவுலகில் "வாழும்" நம்முடைய ஒவ்வொருவர்  வரலாறும் பலவாறு திரிக்கப்படலாம்!

Saturday, October 13, 2012

நாத்திகன் என்பவன் யார்?



பண்பில்லாதவன்
பாசமில்லாதவன்
அன்பில்லாதவன்
இரக்கமில்லாதவன்
ஆணவம் பிடித்தவன்
அநாகரிகமானவன்
என்றெல்லாம் இகழப்படுபவன்!

உண்மையானவன்
கன்னியமானவன்
மனிதாபமுள்ளவன்
மனசாட்சியுள்ளவன்
தன்மானமுள்ளவன்
நேர்மையானவன்
என்று ஒருநாளும் மதிக்கப்படாதவன்!

கடவுளை வாழ்த்தி 
கடவுளை வணங்கி
கடவுளைப் புகழ்ந்து
கடவுளைத் தாலாட்டி
கடவுளைப் பாராட்டி
கடவுளை ஏமாற்றி
தன்னையும்  ஏமாற்றி வாழத்தெரியாதவன்!
 



Friday, October 12, 2012

கொடூரவாதிக்கு மறுபெயர் வாஸ்கோட காமா!

இந்தியாவை "கண்டு பிடிச்சது" யார்?னு வரலாற்றில் சொல்லப் படுவது வாஸ்கோட காமா! அதாவது ஐரோப்பாவில் போர்ச்சுக்கீஸிலிருந்து  இந்தியாவை குறுக்குவழியில் அடைய கடல் மார்க்கமாக  வந்தவர் இவர்!

இவர் எப்படிப்பட்டவர்? எப்படி இந்தியாவுக்கு வந்து இந்தியாவை கொள்ளையடிச்சு, இந்தியாவிலேயே வாழ்ந்து உயிர்விட்டார்? என்பது வேடிக்கை! சமீபத்தில் இவரைப்பத்தி படிக்க நேர்ந்தது.

இதுதான் இவர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு வந்த பாதை!

 


இவரு ஒரு போர்ச்சுகீஸை சேர்ந்த கிறித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த கொடூரமான கொலைகளைப் படிக்கும்போது எவ்ளோ ஒரு கொடூரவாதி இவன்னு தோனும்!

Pilgrim ship incident

On his second voyage, Vasco da Gama inflicted acts of cruelty upon competing traders and local inhabitants, which sealed his notoriety in India.[26][27] During his second voyage to Calicut, da Gama intercepted a ship of Muslim pilgrims at Madayi travelling from Calicut to Mecca. Described in detail by eyewitness Thomé Lopes and chronicler Gaspar Correia as one that is unequalled in cold-blooded cruelty, da Gama looted the ship with over 400 pilgrims on board including 50 women, locked in the passengers, the owner and an ambassador from Egypt and burnt them to death. They offered their wealth which 'could ransom all the Christian slaves in the Kingdom of Fez and much more' but were not spared. Da Gama looked on through the porthole and saw the women bringing up their gold and jewels and holding up their babies to beg for mercy.'[28]

இது வரலாறு! இதில் உண்மை எம்புட்டுனு எவனுக்குத் தெரியும்? என்றெல்லாம் வாதம் செய்யலாம். 

ஆனால் வழியில் சென்ற ஒரு கப்பலை பிடிச்சு அதில் இருந்த சாதாரண மக்கள் இஸ்லாமியர்கள் (இஸ்லாமானவர்கள்?) 500 பேரை (50 பெண்களையும் சேர்த்து) எரிச்சு கொன்று இருக்கான் இந்த கொடூரமானவன்!

ரத்தம் கொதிக்கிதா? இல்லையா? செத்தவன் நம்மள ஆள வந்த முஸ்லிம்தானே? நமக்கென்ன? :-)) இப்படித்தான் நம்ம எல்லாரையுமே ஆள விட்டு இருக்கோம்! :)

இதுபோக மீன் பிடிக்கும் தொழிலில் உள்ள பலர் (இந்துக்கள்தான்) பலியானதாகவும், இவனால் இரக்கமே இல்லாமல் அவர்கள்  கொல்லப்பட்டதாகவும்  படிச்சு இருக்கேன்!

அடுத்துப் பார்ப்போம்...

After demanding the expulsion of Muslims from Calicut to the Hindu Zamorin, the latter sent the high priest Talappana Namboothiri (the very same person who conducted da Gama to the Zamorin's chamber during his much celebrated first visit to Calicut in May 1498) for talks. Da Gama called him a spy, ordered the priests' lips and ears to be cut off and after sewing a pair of dog's ears to his head, sent him away.[26]

இந்தியாவுக்கு இரண்டாவது முறை வந்தபோது ஒரு நம்பூதிரி ஏதோ பேச்சு வார்த்தைக்கு அனுப்பப் பட்டு இருக்காரு.  

அவரை "ஒற்றர்" என்று சொன்னதுடன் (ஒற்றரா இருந்து இருக்கலாம்), அவருடைய உதடுகளையும், காதையும் வெட்டி எறிந்துவிட்டு, அவரு காதுகளுக்கு பதிலாக நாயின் காதை தைத்து அவனை அனுப்பி இருக்காரு! என்ன ஒரு கொடூரம்! 

 நம்ம மக்கள் எல்லாம் பாவம் இதுபோல் கொடூரவாதிகளைப் பார்த்து பயந்து அவன் சொல்றதை எல்லாம் கேட்டு, இங்கேயிருந்து என்னவெல்லாம் கொள்ளையடிக்கனுமோ அடிக்க விட்டுக்கொண்டு இருந்து இருக்காங்க.

 







ஆனால் இன்றும் கொலைகாரரான இவருக்கு நாம்  தகுந்த மரியாதை கொடுத்துக்கொண்டுதான் இருக்கோம்! நமக்குத்தான் ரொம்ப பெரிய மனசாச்சே!

 The port city of Vasco da Gama in Goa is named after him, as is the crater Vasco da Gama on the Moon. There are three football clubs in Brazil (including Club de Regatas Vasco da Gama) and Vasco Sports Club in Goa that were also named after him. There exists a church in Kochi, Kerala called Vasco da Gama Church, and a private residence on the island of Saint Helena. The suburb of Vasco in Cape Town also honours him.
இவர்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவங்க என்பதுதான் இதில் மிகவும் வேடிக்கையான விசயம்!

பயங்கரவாதம் பத்தி எல்லாம் பேசுறோம். கடவுள் நம்பிக்கை உள்ள இவரும் இந்தியர்களை "terrorize" பண்ணிதான் தான் சாதிக்க வேண்டியதை சாதிச்சு இருக்காரு!

இவரு நாத்திகர் என்றால் அதன் விபரம் இங்கே பின்னூட்டத்தில் தரவும்! நன்றி

அனேகமாக இவரு இப்போ சொர்க்கத்தில் இருப்பாரு!

தந்தை பெரியார் நரகத்தில் இருப்பாரு! :)

Thursday, October 11, 2012

கெட்டகுடியே கெடும்! கடலை கார்னர்- 79

"சமைச்சுட்டீங்களா, கண்ணன்?"

"ஏன் இப்படி துண்டை  மட்டும் கட்டிட்டு வந்து நிக்கிற? போய் ஒழுங்கா ட்ரெஸ் பண்ணிட்டு வா!"

"என்ன பண்ணிருக்கீங்கனு பார்த்துட்டுப் போறேனே?"

"இவ்வளவு நேரமா குளிச்ச?"

"இல்லை, பாத்ரூம்ல தூங்கி எழுந்துண்டு  வர்ரேன்!"

"சரி சரி, இப்படி அரைகுறையா நிக்காம போயி ஏதாவது நைட்டி கிய்ட்டி மாட்ட்டிட்டு வா! ஓரளவுக்கு சமையல் முடிச்சாச்சு! இந்த கீரைய மட்டும் கொஞ்சம் தாளிக்கனும்!"

"பரவாயில்லையே கண்ணன்! கம கமனு சமையல் மணக்குது! எப்படி இதெல்லாம்?"

"போயிட்டு வாடி!"

"சரி, இந்த துண்டை மட்டும் பாத்ரூம்ல போட்டுடுங்க! நான் போயிட்டு வர்ரேன்"

"ஓ மை காட்! நீ ரொம்ப மோசம்!"

"ஒழுங்கா சமச்சு முடிங்க!"

**************

"சரி இப்போ சொல்லுங்க! எப்படி சமைக்க கத்துக்கிட்டீங்க?"

"நாளைக்கு நீ என்னை டைவோர்ஸ் பண்ணிட்டு போயிட்டேனா? நானா சர்வைவ் ஆகனுமில்ல? அதான்"

"கல்யாணமே இன்னும் பண்ணல?"

"கல்யாணம் நடந்து, விவாகரத்து நடந்துருச்சுனா?"

"ஹா ஹா ஹா!"

"ஏய் என் கோ-வொர்க்கர் காத்தரைன் கதை கேட்டயா?"

"என்ன சொன்னாள்?"

"ரெண்டு நாள் முன்னால ராபர்ட்டோடையும் ப்ரேக் அப் பண்ணிட்டாளாம்! ஒரே அழுகை"

"ராபர்ட் யாரு?"

"அவந்தான் அவளோட புது பாய் ஃப்ரெண்டு! ஒரு மாதமா "டேட்" பண்ணூறா! ராஜரை டைவோர்ஸ் பண்ணுறதுக்கு முன்னாலேயே இவனோட சுத்தியிருப்பாள்னு நெனைக்கிறேன்."

"அவ எக்ஸ் ராஜர் நல்ல டைப் மாறித்தானே தெரிஞ்சது?"

"ராஜர் ஒரு ஜெண்டில்மேன் தான், பிருந்த். காத்தரைனுக்கு  அவனை அதுக்குள்ள போரடிச்சிருச்சாம். அவனுக்கு குழந்தை பெத்துக்க இஷ்டம் இல்லை. அவன் ரொம்ப "சென்ஸிட்டிவ்" அது இதுனு எதையோ சொல்றாள். எல்லாம் ராபர்ட்டை மீட் பண்ணிய பிறகுதான்.."

"ராபர்ட்டை நம்ப முடியாதா?"

"எனக்கென்னவோ அவளோட மாஜி ஹஸ்பண்ட்  ராஜர் பரவாயில்லைனு தோணுது. ராபர்ட் இவளை கலயாணம் எல்லாம் பண்ணப் போறதில்லை!"

"ஏன்?"

"இங்க பாரு! காதரைனுக்கு அப்பா யாருனே தெரியாது! அம்மா சிங்கிள் மதரா வளர்த்து ஆளாக்கி இருக்காள். சாதாரண வாழ்க்கைனா என்ன? அப்பா அம்மானா எப்படி இருப்பாங்க? எதுவுமே தெரியாது! அனுபவிக்கவில்லை! "

"அதனால?"

"அவளுக்கு சரியான் துணையை தேடிக்கத் தெரியலை! கணவனை எப்படி தேர்ந்தெடுக்கிறதுனு தெரியலை! அவளை வழி நடத்த ஆள் இல்லை!'

"உங்க கலீக்தானே? நீங்க செய்ய வேண்டியதுதானே?"

"நான் படிச்சுப் படிச்சு சொன்னேன். ராஜர் அவ்ளோ மோசமாத் தெரிய்லைனு. அப்படிச் சொன்னால் அவளுக்கு கோபம் வருது. நமக்கெதுக்கு வம்பு? னு விட்டுட்டேன்."

"இப்போ என்ன சொல்றீங்க?"

"ராபர்ட் அவளைக் கலயாணம் பண்ணப் போவதில்லை! ராஜரிடம் இவ திரும்பிப் போகவும் முடியாது! அவ அம்மா வாழ்க்கை மாரியேதான் இவள் வாழ்க்கையும் முடியும்!"

"பெரிய ஞானி நீங்க! சும்மா இருங்க கண்ணன். ராபர்ட் போனா என்ன? அவ நிச்சயம் ஒரு நல்ல பார்ட்னரை கல்யாணம் செய்து நல்லா வாழலாம்!"

'எனக்கென்னவோ அப்படி தோணலை!"

"ஏன்?"

"பட்டகாலிலேயே படும்! கெட்ட குடியே கெடும்!" என்பது பழமொழி!

"ஹா ஹா ஹா!"

"நான் அவளை கவனிச்சுக்கிட்டேதான் இருக்கேன். நான் பார்த்தவரைக்கும் அவகிட்டதான் பிரச்சினை. அவளாள ஒரு ஆளோட நம்பி வாழ்ந்து முடிக்க முடியாது!'

"இப்படியெல்லாம் யாரையும் நீங்க ஜட்ஜ் பண்ண முடியாது! கூடாது!"

"ஆனால் பண்ணத்தான் செய்றோம்! உன்னை ஜட்ஜ் பண்ணாமலா இருக்கேன்? நீ ட்ரெஸோட எப்படி இருக்க? ட்ரெஸ் இல்லாம எப்படி இருக்க? நீ நல்ல பொண்ணா? இல்லை கெட்ட பொண்ணானு?"

"சரி, ஜ்ட்ஜ் பண்ணிய ரிசல்ட் சொல்லுங்க!"

"அது டின்னருக்கு அப்புறம்? என் சாப்பாடு எப்படி இருக்குனு நீ ஜட்ஜ் பண்ணிய பிறகு!'

"நான் குறை எதுவும் சொல்லப் போவதில்லை!"

"சரி, பார்க்கலாம்! ஒரு அஞ்சு நிமிடம் என்னை தனியா விடுறியா?"

"சரி நான் லிவிங் ரூம்ல இருக்கேன்!"

-தொடரும்

தொடர்புடைய பதிவு!

காம விரதம்! கடலை கார்னர் -78 (18+ மட்டும்)



Wednesday, October 10, 2012

பதிவுலக சூப்பர் ஸ்டார் சுவனப் பிரியன்!

இன்னைக்கு பதிவுலகில் பெரிய யோக்கியராக நீங்க பட்டம் பெற வேண்டுமென்றாலும், உங்க பதிவு பிரபலப் படுத்த வேண்டுமானாலும் நீங்க இஸ்லாமியப் பதிவர்களுக்கு எதிராகப் பதிவு எழுதனும்! அப்படி நீங்க எழுதினால் உங்க பின்புலம் என்னனு பார்க்காமல்,  நீங்க சொல்ற விடயத்தில் உண்மை எம்புட்டு இருக்குனுகூடப் பார்க்காமல் நீங்க நல்லவர்! நாணயமானவர்! என்று கருதப்படும்!

நான் உண்மையை, அனுபவிச்சதை, பார்ப்பதைத்தான் சொல்லுறேன்! :-)

பொதுவா ஏதாவது  பர்தா குர்தானு, தமிழர்களுக்கு சம்மந்தமே இல்லாத, இந்தியாவுக்கு சம்மந்தமில்லாத,  உலகில் ஏதாவது ஒரு மூலையில் நடப்பதை கொண்டு வந்து இங்கே பேசி பெண்ணியம் பேசனும்!

 இல்லைனா மஞ்சள் பத்திரிக்கை (tabloids) ல வந்து ஒரு செய்தியை கதையாக்கி விக்கலாம்!  சமீபத்தில் "சன்" என்கிற மஞ்சள் பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி "உண்மைக்கதை"யாக்கப்பட்டது.

"சன்" என்கிற "டாப்லாயிட்" பத்தி ஒரு ஆளு என்ன சொல்றார்னா..
Published on 12:01BST, 1 Jul 2011 0 Comments
Tom Newham

 Think for a second. What is the single most terrifying thing you can contemplate? Spiders? Snakes? Michael Howard? Regardless of who you are, deep down there is a tought that really makes you shudder.

For me, it’s the fact that people who read the Daily Mail have the right to vote. I’m unapologetic for this view, by the way. I think readers of the Daily Mail, the Sun, the Express, the Mirror, the Daily Star and so on should be ruthlessly hunted down and stripped of any right to decide who runs the country.

பதிவுலகைப் பொறுத்தவரையில் மஞ்சள் பத்திரிக்கைனா யாருக்கென்ன? இஸ்லாமியருக்கு எதிராக இருந்தால் போதும், உடனே ஒரு கூட்டமே வந்து உங்க பதிவுக்கு ஒரு 25+ ஓட்டைப்போட்டு அந்தப் பதிவில் சொல்லப்பட்ட எல்லாமே உண்மை என்பதுபோல ஆக்கிவிடுவார்கள்! அந்த மதிப்பெண்கள் உங்கள் எழுத்துக்காக கிடைத்ததல்ல!

 அடுத்து பின்னூட்டங்களில் "சு பி க்ரூப்" னு ஒரு சாடுதலுடன் பின்னூட்ட எழவு ஆரம்பமாகும். அது யாரு?

 நம்ம அண்ணன் சூப்பர் ஸ்டார் சுவனப் பிரியன் தான்.

 ஒரு காலத்தில், ரஜினி,  சாரு நிவாதிதா போல இன்னைக்கு அண்ணன் சுவனப் பிரியனை ஆக்கிப்புட்டாங்க அவருடைய எதிரணி மக்கள்! அவரு பேரை எல்லாப் பின்னூட்டத்திலும் பார்க்கலாம்! இந்தப் பதிவுகூட அண்ணன் பேரைப் போட்டதால சூடாயிடும்! :))))

பின்னூட்டங்களில் பதிவுக்கு சம்மந்தம் இல்லாமல் "சு பி க்ரூப்" னு சொல்லி தாக்குதல் ஆரம்பம் ஆகும். ஆனதும் எங்கேயிருந்தோ, என்னைக்கு எழுதியதையோ அள்ளிவந்து  அரைகுறை பின்னூட்டங்கள் வெட்டி ஒட்டப்படும்! அதுக்கப்புறம் பதிவுக்கும்  பின்னூட்டத்துக்கும் சம்மந்தம் இருக்காது. "சு பி அங்கே அப்படி சொன்னாரு.." "சு பி இங்கே இப்படிச் சொன்னாரு"   "நாங்கதான் உலகத்திலேயே யோக்கியன்" அப்படி இப்படினு ஒரே காடாத்துத்தான்!

 பதிவுலகில் நம்ம சு பி அண்ணன் என்னதான் செஞ்சாரு, இப்போ என்ன  செய்ராருனு எனக்குத் தெரியலை! நான் நெஜம்மாவே அவர் தளத்தையோ அவர் பின்னூட்டத்தையோ தொடர்வது இல்லை! நான் பார்க்கிறவரைக்கும் என்னைப் போலல்லாமல் நாகரிக பின்னூட்டங்கள்தான் போடுறாரு. பதிவிலும் சரி, பின்னூட்டத்திலும் சரி, வார்த்தைகளை அளந்துதான் விடுறாரு! ஆனா ஒண்ணு அவர் மதத்தை, இஸ்லாத்தை, அவர் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லைதான்! ஆமா, யாரு தன் மதத்தை விட்டுக்கொடுக்கிறா?

பொதுவாக இஸ்லாமியனாக இருந்துகொண்டு தப்பு செய்றவன் எல்லாம் சரியாக இஸ்லாமை சரியாகப் புரிந்து கொள்ளவில்லைனு சொல்லி அவனுகள இஸ்லாத்தில் இருந்து ஒதுக்கி விடுவாரு நம்ம சுவனப் பிரியன்! இதை எப்படி தப்புனு சொல்லமுடியும்?? நிச்சயமாக தப்புனு சொல்ல முடியாது!! இதே போல் பிற மதத்தவரும் செய்யலாம்தான். ஆனால் எல்லாராலையும் எல்லாம் முடியாது.

ஆனா ஒண்ணு,

* இங்கேவுள்ள மதப் பதிவுகளை வாசிச்சுப்புட்டு யாரும் மதம் மாறப் போவதில்லை!

* அதேபோல இங்கே உள்ள மத-மறுப்பு, மத-எதிர்ப்பு பதிவுகளை வாசிச்சுப்புட்டு யாரும் அந்த மதத்தை தூக்கி எறியவும் போறதில்லை!

* சும்மா, சண்டை, சச்சரவு, வாதம், விவாதம், விதண்டாவாதம், தனிநபர் தாக்குதல் இத்யாதி இத்யாதிதான்.


எது எப்படியோ,  சுவனப் பிரியன்  அண்ணாச்சி இப்போ பதிவுலக சூப்பர் ஸ்டாராகிட்டாரு!

வாழ்க சு பி அண்ணன்! இன்றைய பதிவுலக சூப்பர் ஸ்டார்! :)

அவரை பதிவுலக சூப்பர் ஸ்டாரக்கிய பெருமை யாரைச் சேரும்?  அவர் நண்பர்களை அல்ல! அவர் பதிவை வாசிச்சு அவரை கரிச்சுக் கொட்டுபவர்களைத்தான் சேரும்! :)))

ஆமாங்க, பதிவுலகில் உங்க நண்பரை விட உங்கள் எதிரணியைச் சேர்ந்தவர்தாம் உங்களுக்கு "புகழ்" தேடித் தருவார்கள்! :)

இந்தப் பதிவை  நம்ம "சூப்பர் ஸ்டாருக்கு" சமர்ப்பிக்கிறேன்! :)

Monday, October 8, 2012

அவரு..அவரு..ஒரு..

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரப்போறாங்க! சீக்கிரம் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, அலங்காரம் பண்ணிக்கோம்மா லதா!" என்றாள் அம்மா, வாசுகி!

"இதோ ஒரு நிமிஷம் அம்மா!" என்று தன் அறையில் ஜி மெயிலை மட்டும் செக் பண்ணிவிட்டு, எல்லா விண்டோஸையும் க்ளோஸ் பண்ணிவிட்டு எழும்போது அவள் மாணிட்டரில் இருந்த ஃபேவரைட் நடிகரின் போஸ் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஸ்டைலாக வந்து நின்றது. லதா, எழுந்து புடவை மாற்றி, மேக்-அப் பண்ணுவதற்காக ஓடினாள்.

லதாவுக்கு காதல் கல்யாணத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதுவும் இந்த கம்ப்யூட்டர் ஆண்-லைன் காதல் தலைவிரித்தாடும் இந்தக்காலத்தில்! நேற்றைய காதல் ஜோடிகளெல்லாம் இன்று பிரிந்து தியானமும் மெடிட்டேஷனும் செய்துகொண்டிருக்கிற இந்த நவீன உலகத்தில், காதல் எல்லாம் சும்மா கொஞ்ச நாள் உடல்ப்பசிக்குத்தான் என்று நம்பினாள், லதா. ஆனால் கணவன் மனைவி உறவு பலப்பட ஓரளவு ஒரே டேஸ்ட் இருக்கனும். ஒருவர் ரசிப்பதை இன்னொருவர் நிச்சயம் வெறுக்கமட்டும் கூடாது என்று முழுமையாக நம்பினாள் அவள்.

லதாவை பெண்பார்க்கவந்த மாப்பிள்ளை குடும்பம் உயர்தரமானதாகவும், மாப்பிள்ளை மோகன் நல்ல உயரமாக, மாநிறமாக, ஆள் ரொம்ப அழகா இருந்தார், மேலும் நல்ல வேலையும் பார்த்துக்கொண்டிருந்தார். புன்னகையுடன் நல்ல மேன்னர்ஸுடன் நாகரீகமாகப் பேசினார். அப்பா, அம்மா, அண்ணாவுக்கும், அவள் தங்கை ஹேமாவுக்கும், ஏன் அவளுக்கும் அவரை ரொம்பவே பிடித்துவிட்டது. அன்று இரவு அப்பாவிடம் ஒருமாதிரி மாப்பிள்ளையைத் தனக்குப் பிடித்ததாக சொல்லிவிட்டாள், லதா.

அதன்பிறகு ஒரு நாள் குடும்பத்துடன் போய் அவர் வீட்டில் ஸ்னாக்ஸ், காஃபி சாப்பிட்டுவிட்டும் வந்தார்கள். இன்னொரு நாள் அவள் அம்மா அப்பாவின் ஏற்பாட்டின்படி, அவளும், மோகனும், அவள் அப்பா சீனிவாசன், மற்றும் அம்மாவுடன் சேர்ந்து கோயிலுக்கு போனார்கள். கோயிலில் இவர்களை தனியாக பேசிக்கொள்ள வசதி செய்துகொடுத்தார்கள், அவளுடைய அன்பான அப்பா, அம்மா. லதா ஒரு பச்சைகலரில் பட்டுச்சேலை கட்டிப்போயிருந்தாள். மாப்பிள்ளை மோகனுக்கு அந்த சேலையில் அவள் இருக்கும் அழகு ரொம்பவே பிடித்ததாக சொன்னார். அவர் அணிந்துவந்த பேண்ட்ஸ், டி-ஷிர்ட்டும் கலர் செலக்ஷன் அவளுக்கும் பிடித்தது. போகப்போக அவரை ரொம்ப ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது அவளுக்கு. இருந்தாலும் ஏதோ ஒண்ணு அவரிடம் கேக்கனும்னு அவள் மனதில் உறுத்தல் இருந்தது. அது ரொம்ப சில்லியான விஷயம் என்பதால அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

ஒரு மாதிரி நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் 3 மாதத்தில் திருமணம் என்று கல்யாணத்தேதியும் முடிவானது. நிச்சயம் செய்யப்பட்டு முடிந்து சில நாட்களில் அவளுக்கு கல்யாணத்திற்கு வாங்கிய நகை, பட்டுப்புடவை காட்டுவதற்காக லதாவையும் தன்னுடன் அழைத்து சென்றார் தந்தை சீனிவாசன். கொஞ்ச நேரம் பேசியபிறகு அவளை மோகன் தன்னுடைய அறைக்கு தனியாக அழைத்துச் சென்றார். லதா, மோகனின் அறையில் ஒரு 5 நிமிடம் இருந்துவிட்டு அங்கே இருந்து அவருடன் வெளியே வந்தாள்.

வந்தவள் முகம் வேற மாதிரி ஒரு கலவரத்துடன் இருந்ததை கவனித்தார், தந்தை. மகளின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த அவர், "சரி, ஒண்ணும் இருக்காது, நாளைக்கு சரியாகிவிடும்" என்று ரொம்ப கேள்வி கேட்காமல் விட்டுவிட்டார். ஆனால் அடுத்த நாளும் லதா முகத்தில் அதே போல் ஒரு கலவர உணர்ச்சி இருந்ததை கவனித்தார். கடைசியாக, அவள் அறைக்கு சென்று உட்கார்ந்து மெதுவாக லதாவிடம் கேட்டேவிட்டார்,

“என்னம்மா லதா, ஒரு மாதிரியா இருக்க?”

“இல்லப்பா ஒண்ணுமில்லை”

“சும்மா சொல்லும்மா” என்றார்.

“இனிமேல் இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியாதாப்பா?” என்றாள் பரிதாபத்துடன்.

“என்னம்மா நடந்தது?”

“ஒண்ணுமில்லைப்பா அவரோட குடும்ப வாழ்க்கை ஒத்துப்போகாதுனு தோனுதுப்பா எனக்கு”

“என்னம்மா நடந்தது, அவர் ரூமிலே? எதுவும் தப்பா நடந்துகொண்டாரா உன்னிடம்?”

“இல்லைப்பா. அவர் எதுவும் தப்பா எல்லாம் நடக்கவில்லை. எனக்குத்தான் அவர் டேஸ்ட் பிடிக்கலை அப்பா”

“விபரமா சொல்லும்மா. எதுனாலும் பரவாயில்லை” என்றார் அன்புடன்.

லதா, அழ ஆரம்பித்துவிட்டாள்.

“சும்மா சொல்லும்மா. கல்யாணத்தை நிறுத்திடுவோம். என்ன காரணமா இருந்தாலும் பரவாயில்லை” என்றார் அப்பா கனிவுடன்.

“அவர்.. அவரு, ஒரு.. என்று ஒருவழியாக விசயத்தைச் சொல்லி முடித்தாள் லதா. தன் மகள் மனதை நன்கு அறிந்தவர் சீனிவாசன். அவளுக்கு பிடிக்கிற சின்ன சின்ன விசயங்களையும், அவள் வெறுக்கிற சில்லியான விசயங்களையும் கவனித்து அவள் எண்ணங்களை மதிப்பவர் அவர். அவருக்கு தெளிவாக மகளின் அச்சம் புரிந்தது. "அதனால் என்னம்மா? இதெல்லாம் பெரியவிசயம் இல்லை" என்று சொல்லி அவளை ஃபோர்ஸ் பண்ண விரும்பவில்லை அவர். அத்துடன் கல்யாணத்தை ஒரு வழியாக நல்லமுறையில் நிறுத்திவிட்டார்கள். நேரிடையாக மாப்பிள்ளையிடமே தன் மகள் பலஹீனத்தை சொல்லிக் கேட்டதும், மோகனும் சரி என்று சொல்ல, கல்யாணம் சுமூகமாக நிறுத்தப்பட்டது.

லதா, அவள் தந்தையிடம் சொன்னது இதுதான், "ஏன்னா ஏன்னா அவர் ஒரு கமல் ரசிகர்ப்பா"

-முற்றும்

இது ஒரு மீள் பதிவு!

குறிப்பு: கதை முன்பு பிரசுரித்தபோது, பின்னூட்டத்தில் பதிவர் மணிகண்டன் கொடுத்த ஆலோசனைப்படி இதில் முடிவை "ட்ரிம்" செய்து இருக்கேன்! அவருக்கு என் நன்றிகள்! :-)

படம்: ரஜினி ரசிகைகள் (கூகில் மற்றும் பிஹைண்வுட்ஸ்)

Friday, October 5, 2012

பரதத்தையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் இக்பால்!!

தமிழர்கள் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தன் பெண் குழந்தைகளுக்கு சாதி மதம் என்கிற வேறுபாடெல்லாம்  பார்க்காமல் எல்லா சாதியினரும், பல மதத்தவரும்  (இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் கூட எனக்குத்தெரிய) இந்திய  நடனம் சொல்லிக்கொடுப்பது வழக்கம். பரதநாட்டியம் என்கிற நடனம் நாடுவிட்டு நாடு வந்து வாழும் தமிழர்கள் கலாச்சாரமாகிவிட்டது. தமிழ் குழந்தைகளில் இருந்து இளம்பெண்கள் வரை   பரத நாட்டியம் ஆடுவதை சாதாரணமாக வட அமெரிக்கத் தமிழர்கள் விழாக்களில் பார்க்கலாம்.

பரத நாட்டியம் எப்படி ஆரம்பிக்கப் பட்டது என்பதை எல்லாம் யாரும் தோண்டி எடுப்பதில்லை. அது தேவையுமில்லை! இன்றைய தினத்தில் அது ஒரு நல்ல நடனக்கலை, அவ்வளவுதான். அதனால்  இங்கு வாழும் தமிழர்கள், தன் மகள்களுக்கு இந்தியக் கலாச்சாரத்தில் இருந்து வந்த ஒரு நாட்டியத்தை கற்றுக்கொடுக்க, சிரத்தையுடன் 5 வயதிலிருந்து 18 வயதுவரை பரதநாட்டியம் கற்றுக்கொடுக்கிறார்கள். 10 வருடம் பழகிய பின்னர் கடைசியில் கல்லூரிக்குப் போகும்போது அரங்கேற்றம் நடத்துகிறார்கள்.

 மகளுக்கு திருமணம் செய்வது போல், விருந்து கொடுத்து நடத்துகிறார்கள் இந்த அரங்கேற்றத்தை! ஏன் என்றால் தன் மகள் திருமணத்தை இவர்களால் நடத்த இயலுமா என்ன வென்று தெரியாது. ஆமாம், மகள் ஒரு கருப்பனை மணக்கலாம், வெள்ளையனையும் மணக்கலாம், திருமணத்திற்கு இவர்களை இவர்கள் பொண்ணூ அழைக்கவேண்டும் என்றும் இல்லை.

அதில், கிருஷ்ணர் கோபியருடன் பாடிய பாட்டு அது இதுனு பாடல்கள் வரும்தான். அதில் வரும் பாடல்வரிகள் அர்த்தம் எல்லாம் நம் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதைப்பத்தி அமெரிக்காவில் கனடாவில் வளரும் தமிழர்களின் குழந்தைகளுக்குக் கவலையும் இல்லை!

இக்குபால் செல்வன் என்னும் ஒரு அரைவேக்காட்டுப் பதிவருக்கு எந்த ஒரு விடயத்தை  எடுத்தாலும் அதை படுகேவலமாக விமர்சிப்பது என்பதே வேலையாப் போச்சு.

பொய்யும் புரட்டுமா எதையாவது உண்மைபோல எழுதுறது, ஆனால் அவர் விமர்சனம் என்னவோ "பர்ஃபக்ட்" என்பதுபோல வாக்கியங்களை அமைப்பார்.

இப்போ இவருக்கு கிடைத்துள்ளது இந்த பரதநாட்டியம்! 

இந்துக்கள் நாட்டியத்தை விமர்சிச்சு பிறமதத்தவரிடம் நல்ல பேரு எடுக்கிறாராம் இந்த பதிவுலக வியாபாரி! 

யாரைவேணா விற்பார் இவரு பொழைப்பை ஓட்ட!

* '' அரங்கேற்றம் '' செய்வதில் ஒவ்வொரு பெற்றோரும் தமது செருக்கை, பெருமிதங்களை வெளிப்படுத்தவே விரும்புகின்றனர்.  பிள்ளைகள் மீதான பரிவோ, கலையார்வமோ, பண்பாட்டின் மீதான விருப்போ கிடையாது. 

ஆமா, இவருக்குத்தான் எல்லாம் தெரியும்! கலைபத்தி பேசுற எல்லாம் தெரிந்த மேதையைப் பாருங்கப்பா!

* சுருக்கமாகச் சொல்லப் போனால் பந்தா செய்யவே அரங்கேற்றங்கள் நடத்தப்படுகின்றனர். 

அவன் அவன் கஷ்டப்பட்டு சேமித்து தன் மகளுக்கு அரங்கேற்றம் நடத்துறான். இந்தாளு வாய் கூசாமல் பேசுறாரு!!

* ஒரு அரங்கேற்றம் செய்ய இவர்கள் செய்யும் செலவுகளை நினைத்தால் மலைக்கச் செய்யும். 

ஆமா, அது என்ன உன் அப்பன் வீட்டு காசா? இது அவன் பிரச்சினை!


* அண்மையில் ஒரு பெண்ணின் நாட்டிய அரங்கேற்றம் செய்திருந்தனர். அவர்கள் சாலையில் போவோர் வருவோர் எல்லோரையும் அழைத்திருந்தனர். ஒரு பெரிய மண்டபம் பிடித்து நடத்தினார்கள். அங்கே போனால் மொக்கை தான் மிச்சம் எனலாம். 

 என்னத்துக்கு ஆர் எஸ் வி பி பன்ணிட்டு நாட்டியம் பார்க்கப் போனீர்? சாப்பாடு இனாமாக் கெடைக்கிதுனா?


* கலை ரசனை இல்லாதோர் தான் அரங்கத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். 

கலை ரசனை இருந்த ஒரே ஆளு நம்ம "இக்குபால் செல்வன்" தான்!
 

* ஆடும் சிறுமியோ பாவமாக ஒவ்வொரு பாடலுக்கும் ஆடிக் கொண்டிருந்தாள். ஐயகோ ! இந்த அரங்கேற்றாம் செய்ய எவ்வளவு செலவாகி இருக்கும் என விசாரித்த போது தலையே சுற்றி விட்டது. சுமார் ஐம்பதாயிரம் கனடிய டாலர்கள் ( 25 லட்சம் இந்திய ரூபாய்கள் ) செலவாகியுள்ளனவாம். 

இந்தப் பதிவை இவருக்கு அழைப்பிதழ் அனுப்பியவங்களுக்கு அனுப்புங்கப்பா! 25 லட்சம் என்பது பச்சைப் பொய்! 5-6 லட்சம் (10-12 k us $ ஆகலாம்).


* இவ்வளவு செலவு செய்து அரங்கேற்றம் செய்யும் பிள்ளைகள் கலைத் துறையில் சாதிக்கப் போகின்றனவா என்றால் இல்லை, உயர் பள்ளிக்குச் சென்ற பின் நாட்டியங்களை விட்டுவிடுவோரே மிகுதியாக உள்ளனர். 


 அதனால என்ன? இது ஒரு உடற்பயிற்சி போல இருந்துட்டுப் போகட்டுமே! உமக்கென்ன பிரச்சினை?


* அதன் பின் அது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதும் இல்லை. பெரும்பாலும் தமது பணப் பலத்தைப் பிறர் மத்தியில் நிலைநாட்டவே அரங்கேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன, அவற்றைப் படம் பிடித்து உள்ளூர் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பணம் கட்டி விளம்பரப் படுத்துகின்றனர். ஏன் இவ்வளவு செலவு என்று கேட்டால் ஒரு பதிலும் நமக்குக் கிடைக்காது. 


உமக்கென்ன பதில் வேண்டிக்கெடக்கு? அவன் காசு, அவன் செஞ்சிட்டுப்போறான்?? உம்மிடம்  அவன் எதுக்கு செலவு கணக்குக் காட்டனும்? எனக்குப் புரியவில்லை!


* இதில் என்ன கொடுமை என்றால் எதோ ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு அரங்கேற்றம் நிகழ்கின்றன என நினைக்க வேண்டாம். ஆயிரக் கணக்கான அரங்கேற்றங்கள் நடத்தப்படுகின்றன. சொல்லப் போனால் சொந்தக் காரர்களில் ஒருவர் அரங்கேற்றம் செய்துவிட்டால், போட்டி போட்டுக் கொண்டு பிறரும் அதனைச் செய்கின்றனர். இவர்கள் இதற்காக விரயம் செய்யும் பணமானது பல சமயம் லட்சம் கனடிய டாலர்களைக் கூடத் தொட்டுவிடுவதுண்டு. எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு பணம் என்று வேறு சிந்திக்கத் தூண்டுகின்றது. செலவு செய்யும் பல பெற்றோர்கள் வியாபாரிகளோ, ஐந்திலக்க சம்பளம் பெறுவோரோ இல்லை. பலரும் இயல்பான நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே ஆவார்கள். 


இதுக்கு என்ன மில்லியன் டாலரா செலவு?? நடுத்தர குடும்பத்தினர் ஒரு 10 வருடம் (நடனம் கற்கும் போது) சிறு சேமிப்பு செய்தால் இதை எளிதாக நடத்தலாம்!


* இலங்கையில் தமிழர்கள் பலர் போதிய வாழ்வாதாரம் இன்றித் துன்பப் படுகின்ற சூழலில், இங்குள்ள தமிழர்களின் இவ்வளவு பெரிய ஆடம்பரங்கள் தேவை தானா ? அல்லது அரங்கேற்றங்களைக் கோவில்களில் உள்ள சிறிய மண்டபத்தில் நடத்தினால் போதாதா ?


எல்லாரும் டெய்லி ரெண்டு மணி நேரம் ஒப்பாரி வச்சா நல்லதா?? அதை செய்யட்டுமா??


* கலைகள் வளர்வது நல்லது தான், ஆனால் வெறும் பகட்டுக்காக பிள்ளைகள் மீது திணிப்புக்கள் செய்வதும், எத்தனைப் பிள்ளைகள் அரங்கேற்றம் தாண்டியும் கலைப் பயணத்தைத் தொடர்கின்றன சொல்லுங்கள். 

கலையை எப்படி வளர்க்கனும் இவரிடம் கேளுங்கப்பா! கலைத் திருமகன் இவருதான், "இக்குபாலு செல்வனு"!


* அத்தோடு கடன் பட்டும், முறையற்ற வழிகளில் பணம் சேர்த்தும் ஆடம்பர அரங்கேற்றங்கள் எல்லாம் தேவை தானா என்பது தான் எனதுக் கேள்வி.

 தேவைதான். 

* இவ்வாறாக பணத்தை விரயமாக்குவதைக் காட்டிலும், அப் பணத்தை சேமித்து வைத்தால் எதிர்க்காலத்தில் குழந்தைகளின் மேற்கல்வியை கடன் இல்லாமல் பெற முடியுமல்லவா. சற்றே சிந்தியுங்கள் தமிழர்களே!


பரதநாட்டியம் முடித்த பெண்கள் அனைவருமே கல்லூரி சென்றுதான் படிக்கிறாங்க!  கல்லூரிச் செலவுக்காக அவங்க அப்பா அம்மா உம்மிடம் வந்து பிச்சை கேட்டாரா என்ன, இக்குபாலு?


முடிவுரை!
 
அமெரிக்க, கனடாவில் தன் இளம் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் சொல்லிக்கொடுக்கிற பெற்றோர்கள் எல்லாம் இதை கவனிக்க!

இக்பால் செல்வன் சொல்கிறார்..


"இங்குள்ள தமிழர்கள் அப்படிச் செய்வது இல்லை, பெண் பிள்ளையாக இருந்தால் ஒரு ஐந்து வயதிலயே கொண்டு போய் ஒரு பரத்தையர் நாட்டிய வகுப்பில் சேர்த்துவிடுகின்றார்கள்."

எல்லாரும் உங்க பொண்ணுகளை கொண்டுபோயி  பரத்தையர் நாட்டிய வகுப்பில் சேர்த்து விடுறீங்களாம்!

Thursday, October 4, 2012

“நான்” என்னும் அகந்தை!

“நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” என்கிற கண்ணதாசன் வரிகள் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் வந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு இந்த “நான்” என்னும் அகந்தை ஒரு சில சின்ன வெற்றிக்குப்பிறகு வந்துவிடுகிறது. “நெனைப்பு” அதிகமாயிடுது. அது வந்துவிட்டால் அந்த இடத்தில் ஒருவன் முட்டாளாகிறான்.

“எப்படி?”

* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!

* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.

* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.

* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் ஒரு பெரிய தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். அமோகமாக வாழ்ந்துகொண்டிருந்தார். ஒருமுறை நான் வெளியூரிலிருந்து படிக்கும்போது, லீவுக்கு ஊருக்குப்போகும் போனேன், அப்போ, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். “என்ன ஆச்சுடா?” னு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ தண்ணியைப்போட்டு சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை திட்டினாராம். அப்பாவை திட்டியதை கேட்ட ஒரு 18 வயது பையன், சிறுவன், உணர்ச்சிவசப்பட்டு "என் அப்பாவை திட்டிவிட்டானே?" னு ஒரு  கத்தியை வைத்து குத்தகூடாத இடட்த்தில் குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்!

என்ன "சண்டைக்கோழித் திரைப்படம்" கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை! என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா ஒரு சின்னப்பையன் கொன்னுபுட்டான்" என்று சிரித்தார்கள்.

“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.

ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?

இது ஒரு மீள்பதிவு!

Wednesday, October 3, 2012

மத உணர்வு தப்பு! இன உணர்வு சரியா? ஏன்?

ஒருவர் அவருடைய  ஊர், நாடு, கண்டம் எதாயிருந்தாலும் பரவாயில்லைனு விட்டுவிட்டு அவர் தன் மதத்தை சேர்ந்தவர் என்பதால், தன் ஊருக்கு எதிராக, தன் நாட்டுக்கு எதிராக அவர் செய்த "தவறு"களை  நியாயப் படுத்த முயற்சித்தல், அவருக்கிழைத்த "அநீதி"யை எடுத்து விமர்சித்தல், அவருக்காக வரிந்துகொண்டு வருதல், என்கிற மத அடிப்படையான செயலை தவறு என்பதுபோல்தான் நாம் வாதிடுகிறோம். ஆமாம், யாரு இந்த நாம்? பொதுநோக்குப் புத்தியுள்ள, நம்மைப்போல நல்லவர்கள்! :-)

* மத உணர்வு என்பது நல்லதல்ல என்கிறோம்!

* மதத்தால் ஒன்றுபடுவது தவறென்கிறோம்!

* ஒருவனே தேவன் என்றால் எல்லாமதத்தவரும் இறைவன் குழந்தைகள்தானே? என்கிறோம்

* "ஐயா வருண்! நான் அப்படியெல்லாம் சொல்வதில்லை" என்றால் நீங்கள் இங்கே விமர்சிக்கப்படவில்லை! தயவு செய்து இதை கண்டுக்காதீங்க!

இறைவன் ஒருவனே என்றால், எல்லோரும் அந்த இறைவனை வணங்கவே, திருப்திப்படுத்தவே பல மதங்களும் உருவாக்கப்பட்டது என்கிற போதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று சொல்வதுகூட இறைவனுக்குக்கூட  நகைப்பை உண்டாக்கலாம்.

நாம் இப்படி சொல்வதை

* "மத உணர்வு கொண்டர்வர்கள்",

* "தன் மதம்தான், வழிதான் சரியானது என்று மதத்தால் ஒன்று சேர்பவர்கள்",

"இந்த மதவுணர்வு தவறானது என்கிற  நம்முடைய  நிலைப்பாட்டை" ஏற்றுக்கொள்ளத் தயங்குறாங்க.  மத உணர்வில் தவறென்ன? என்கிறார்கள். இருந்தாலும் இவர்கள், தம்முடைய இந்த நிலைப்பாடை "சரி" என்று வெளிப்படையாக வாதிடுவதில்லை!

ஏன் மத உணர்வு நல்லதல்ல என்பதற்கு சில காரணங்கள் நாம் சொல்லலாம்.

* சூழ்நிலை 1) நீங்க வக்காலத்து வாங்கும் அவர் அயல் நாட்டவராக இருக்கும்போது, அந்த நாடு நம் நாட்டுக்கு எதிரியாக இருக்கும்போது, உங்க மத உணர்வு,  உங்களை "தேச துரோகி" யாக்குதுபோல் ஒரு சூழ்நிலை உருவாகும் ஒரு அபாயம் இருக்கு!

* சூழ்நிலை 2) மதச்சார்பற்ற நாட்டில் வாழும் நீங்க நாட்டுப்பற்று உள்ளவராக இருக்கனும்னு எதிர்பார்க்கப்படுது. மத அடிப்படையில் நீங்கள் போகும்போது உங்கள் நாட்டுப்பற்று கேள்விக்குறியாகிற ஒரு அபாயமும் இருக்கு.

இப்படியெல்லாம் பிரச்சினைகள் இருக்குனு சொல்லி நாம் விவாதிக்கலாம். ஆனால்.. என்ன ஆனால்.. இதை எப்படி "நியாயப் படுத்தலாம்" னு பிறகு பார்ப்போம்.

அதாவது மதப்பற்று உள்ளவங்க,

* சூழ்நிலை 3) சூழ்நிலை 4) என்று பலவகைகளை காட்டி இதுபோல் சூழ்நிலைகளில் என்னுடைய மதவுணர்வு தப்பில்லை என்று வாதிடுவார்கள்

************************************

இன உணர்வு பத்தி பேசுவோம்..  

இங்கே நாம் அனைவரும் தமிழர்கள்! ஒரே இனம்!

சரி, நாம், " தமிழா! இன உணர்வு கொள்!" னு சொல்றோம். நாம் திராவிடர்கள் எல்லாம் ஒண்ணு சேரனும் என்கிறோம்!

 சில நேரங்களில் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்று சொல்லிப் நம்மைவிட்டுப் பிரிக்கிறோம்!

காரணம்?

* வீடு வாடகைக்கு விடப்படும்! பார்ப்பனர்களுக்கு மட்டும்! (இதுபோல் விளம்பரம்)

* மாமிசம் சாப்பிடுறவா ஆத்துக்கெல்லாம் எப்படி போகுறது? அவா ஆத்துல கவிச்சு வாடை இல்ல அடிக்கும்ண்ணா! (இதுபோல் எண்ணங்களுடன் திரியிறவங்க)

இவர்கள்தான் இதற்கு காரணம்!

சரி இனவுணர்வு பத்தி தொடருவோம்..

இனவுணர்வு  மட்டும் சரியா? ஏன் சரி??

* அ) ஒரு பிரச்சினை....அதில்  நம் மொழிபேசுபவர் தவறாக நடக்கிறார். மாற்று மொழி பேசுபவர் ஒரு அப்பாவி. நியாயம் நம் இனத்தவர்,  தமிழரிடம் இல்லை. பிறமொழி பேசுறவர் சொல்வதில், செய்வதில்தான் நியாயம் இருக்கு.  இந்த சூழலில் இன உணர்வு கொள்ளனுமா? இல்லைனா நியாயமாக நல்லவரான பிறமொழி பேசுறவர்  பக்கம் சேரனுமா?

* ஆ) ஒரு பார்ப்பனர் வீட்டு அப்பாவி பெண்ணிடம் ஒரு திராவிடர் தவறா நடந்துகொள்கிறார். அந்தப்பொண்ணு பாவம், எந்தத் தப்பும் செய்யவில்லை!
இந்த சூழலில் தமிழா நீ "இன உணர்வு" கொள்வியா? பாவம் தவறு செய்யாத ஒருவருக்கு கை கொடுப்பியா?

நம்ம  பொதுக்கட்டுரை எழுதுறோம். பலரையும் பலவாறு விமர்சிக்கிறோம். தமிழர் என்கிறோம். திராவிடர் என்கிறோம். இந்தியர் என்கிறோம். இன உணர்வு கொள் என்கிறோம். நாட்டுப்பற்று வேண்டும் என்கிறோம். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனாக ஒரு சூழ்நிலையில் எப்படி நடக்கிறோம்? என்பது வேறு விசயம்.

அதாவது தனிப்பட்ட ஒரு மனுஷனாக

* மேலே உள்ள சூழ்நிலை அ) ல நான் அந்த மாற்று மொழி பேசுபவனுக்குத்த்தான் ஆதரவு கொடுப்பேன்! நீங்க எப்படி வேணா இருந்துட்டுப் போங்க!

* மேலே உள்ள சூழ்நிலை ஆ) ல நான் அந்த அப்பாவிப் பெண்ணுக்குத்தான் ஆதரவு கொடுப்பேன்.

அப்படி நான் செய்வதால் இப்போ நான் தமிழ் இன உணர்வு மொழியுணர்வு இல்லாதவனாகவும். திராவிட உணர்வு இல்லாதவனாகவும் ஆகிறேன். ஆமாம் நான் இனி துரோகிதான்.

முடிவுரை:

இங்கேதான் நீங்க இன உணர்வுனு நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை  புரிந்து கொள்ளனும். 

* நாம் நியாயமான பிரச்சினைக்குத்தான் நம் இன உணர்வை, மொழி உணர்வை காட்டனும். 

* தமிழனுக்கு அநியாயம் நடக்கும்போதுதான் நாம் தமிழா இன உணர்வு கொள் என்கிறோம்! 

* தீண்டாமை, உயர்சாதி என்று வரும்போதுதான் திராவிடன் என்று நம்மை ஒன்று சேர்க்கிறோம். 

* தமிழ் மொழியை இகழும்போதுதான் நாம் இனவுணர்வு கொள்ளனும்!


அதேபோல், மதவுணர்வு கொள்பவர்களும் இதேபோல் நாங்க எம்மதத்தில் அப்பாவிகள் பாதிக்கப் படும்போதுதான் எம்மதத்தவருக்கு குரல் கொடுக்கிறோம். இதில் தவெறன்ன? என்று கேட்டால், அவர்களுக்கு நம் பதிலென்ன?

நீங்களே சொல்லுங்கள்! :)

நன்றி,  வணக்கம்!