Saturday, October 31, 2009

நோபல் பரிசையும் விட உயர்ந்த பரிசு!

“அங்கேயிருந்தும் திருப்பி அனுப்பிட்டானுகளா?! ஏன்டா டேய்! இதுவரை நூறு ஜேர்னலுக்கு இந்த ஆர்ட்டிகிளை அனுப்பிட்ட! ஒருத்தன்கூட உன் ரிசல்ட்டை சரினு ஏற்றுக்கொள்ளவில்லை! எல்லோரும் ரிஜெக்ட் பண்ணிடுறானுக!” என்று சிரித்தான் நண்பன் பாலு.

“இல்லடா, அந்த ஆளு ஜான்சனுடைய ஃப்ரெண்டு எவனுக்காவது ரிவியூ வுக்கு போயிருக்கும். அதான் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க! ஜான்சன் வெள்ளைக்காரன் மற்றும் நோபல்பரிசு வென்றவர். அவரை இன்னொரு வெள்ளைக்காரனே விட்டுக்கொடுப்பானா?” என்றான் மதிமாறன் வருத்தத்துடன்.

“நம்ம இந்தியன் ஜேர்னல் எதுலயாவது பப்லிஷ் பண்ணப்பாருடா, மதிமாறா!”

“நம்ம மக்கள் அதைவிட மோசம்டா. அதெப்படி நோபல்பரிசு பெற்ற ஜான்சன் ரிசல்ட்ஸ் தப்பா இருக்கும்? நீ ஏதோ உளறுற என்பதுபோல் எழுதி எல்லோரும் ரிஜெக்ட் பண்ணுறானுக. எனக்கு இதுவரை ஒரு நல்ல பப்ளிக்கேசன்கூட இல்லையேடா. அதான் பிரச்சினை”

“உன் பாஸ் என்னடா சொல்றான்?”

“அவனுக்கும் எனக்கும் என்னைக்கு ஒத்துப்போச்சு? அவனும் என் ரிசல்ட்டை இப்ப நம்ப மாட்டேன்கிறான். இதுவரை 100 ஜேர்னலுக்கு அனுப்பியாச்சா? இனிமேல் இதை வேற எங்கேயும் அனுப்ப அவனால் முடியாதுனு சொல்றான்”

“ஒண்ணு பண்ணுடா, ஜான்சன் ஆர்ட்டிக்கிள் சயன்ஸ்லதானே வந்தது? அதனால் சும்மா சயன்ஸ்க்கே உன் ஆர்ட்டிக்கிளையும் அனுப்பிப் பாருடா”

“நீ வேற! சயன்ஸ்ல எல்லாம் நம்ம பேப்பர் எடுப்பார்களா? அது டாப் க்ளாஸ் ஜேர்னல்டா. மேலும் அதுலதான் ஜான்சன் எடிட்டோரியல் அட்வைசரா இருக்கான். போன வேகத்தில் நேர திரும்பி வந்துடும். அவர் ரிசல்ட்டை எப்படி தப்புனு ஒரு இந்தியன் சொல்றதுனுதான் எல்லோரும் ஏகமனதாக திருப்பி அனுப்பிடுவானுக”

நண்பன் பாலு போன பிறகும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு அங்கேயே இருட்டில் உட்கார்ந்திருந்தான் மதி. சிறு வயதில் இருந்தே அவனுக்கு பிடிவாதம் மட்டுமன்றி தன்னம்பிக்கையும் அதிகம். இதனால் அவனுக்கு கெட்ட பெயரும் அதிகம். இந்த ஆராச்சிக்குறிப்பை அவன் ஏதாவது ஒரு ஜேர்னலில் பப்ளிஷ் செய்தால்தான் அவன் தீசிஸ் எழுதமுடியும். ஆராய்ச்சிப் படிப்பில் ஐந்தாவது வருடத்தில் இருக்கும் மாணவன் அவன். பிரச்சினை என்னனா நோபல் பரிசு வின்னர் வில்லியம் ஜான்சனுடைய ஒரு ஆராச்சிக்குறிப்பில் கொடுத்த எல்லாமே இவனுடைய ஆராய்ச்சியின்படி தவறு என்று வருகிறது. இவனுடைய அனுகுமுறையில் தயாரித்த வேதிப்பொருள்கள் ஜான்சன் தயாரித்த அதே வேதிப்பொருள்களின் வேதித்தன்மைகளைவிட முற்றிலும் மாறுபடுகிறது. எந்த முறையில் தயாரித்தால் என்ன? ஒரே வேதிப்பொருளுக்கு ஒரே ப்ராபர்டீஸ்தான் இருக்கனும். யார் தயாரித்த தண்ணீராக இருந்தாலும் தண்ணீருக்கு பாய்லிங் பாய்ண்ட் 100 செல்சியஸ்தான் இருக்கனும். அதன் ஃப்ரீஸிங் பாயிண்ட் 0 செல்சியஸாகத்தானே இருக்கனும்? அதே போல்தான் இவன் தயாரித்த வேதிப்பொருளும், ஜான்ஸன் தயாரித்ததும் ஒரே வேதிப்பொருள். அவைகளின் வேதித்தன்மை மாறக்கூடாது. ஆனால் ஜான்சன் சொல்லுவதற்கும் இவனுக்கு வரும் ரிசல்ட்ஸ்கும் சம்மந்தமே இல்லாமல் வருகிறது. யாரோ ஒருவர் சொல்வது தவறு. அது ஜான்சன் என்று இவன் நம்புகிறான். ஆனால் உலகத்தில் எந்த ஒரு சயன்டிஸ்ட்டும் இவனை நம்ப மாட்டேன்கிறாங்க.

மதியைப் பொறுத்தவரையில் அவன் தயாரித்தமுறையிலோ, அல்லது தயாரித்த வேதிப்பொருள்களிலோ எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எந்த ஜேர்னலுக்கு அனுப்பினாலும், உடனே திரும்பி வந்துவிடுகிறது. காரணம்? ஜான்சன் ஒரு நோபல் பரிசு பெற்ற வெள்ளைக்காரன். மதிமாறன் ஊர் பேர் தெரியாத ஒரு தமிழன். அதனால் இவனுடைய ஆராய்ச்சி ரிசல்ட்ஸை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எங்கே போனாலும் ஜான்சன் நண்பர்கள், அதனால் இவன் அனுப்பிய அடுத்த நாளே, இவன் ஆர்ட்டிகிள் திரும்பி வந்துவிடுகிறது. மதிமாறனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசியில் பாலு சொன்னது போல சயன்ஸுக்கும் அவன் பாஸிடம் கெஞ்சி அனுப்பினான். 100% திரும்பி வந்துவிடும் என்று தெரிந்தும் சும்மா பேருக்கு அனுப்பி வைத்தான்.

ஒரு 6 வாரம் கழித்து வந்த இ-மெயிலில்:

Your paper has been accepted for Publication in Science என்று வந்தது, சயன்ஸ் ஜேர்னல் எடிட்டரிடம் இருந்து! இதுவரை அவன் ஆராய்ச்சி மாணவனாக இருக்கும் யுனிவேர்சிட்டி ஆஃப் ஹைதராபாத் ல இருந்து ஒரு ஆர்டிக்கிள் கூட சயன்ஸ் போன்ற ப்ரஸ்டிஜியஸ் ஜேர்னலில் வந்ததில்லை. இவன் பாஸ் மற்றும் இவனுக்கு மட்டுமல்ல, அந்த யுனிவேர்ஸிட்டிக்கே இதுதான் சயன்ஸ் ஜேர்னலில் முதல் பப்ளிக்கேஷன்.

நிச்சயம், எப்படியோ ஜான்சனை பிடிக்காத யாரோ ஒருவரிடம் இந்த ஆர்ட்டிக்கிள் ரிவியூவுக்கு போயிருக்கு. அதனால்தான் இதை அக்சப்ட் பண்ணிக் கொண்டார்கள் என்று புரிந்தது, மதிமாறனுக்கு. நண்பர்கள், தோழிகளெல்லோருக்கும் ஒரு பெரிய பார்ட்டியே கொடுத்தான் மதிமாறன். ஒழிந்தான் ஜான்சன்! என்று கத்திக்கொண்டே அந்த வெற்றியைக் கொண்டாடினார்கள்.

பார்ட்டியெல்லாம் முடித்துவிட்டு திங்கள் கிழமை ஆய்வகம் சென்றதும் இ-மெயில் செக் பண்ணினான். அவன் பாஸிடம் இருந்து ஒரு ஃபார்வேர்டெட் மெயில் ஒண்ணு வந்திருந்தது.

Dear Shanmugam and Mathimaran,

I am William Johnson from Harvard University. Congratulations for your recently accepted Publication in Science. In an unofficial note, I just want to let you know that I am the one who reviewed your article, and accepted for publication in Science. It took a long 5 weeks to complete reviewing your paper because I asked my co-worker to repeat your experiments and prepare those compounds and check the results to make sure your results are really reproducible as you claimed. Then I wanted to compare them with what I reported two years ago. Well we learnt that your results are reproducible and perfectly all right. Then I asked my coworker to repeat my own research work and asked him to make those compounds we reported again by the method published by me. To my surprise, what we found was, the compounds prepared by our method are not as pure as yours and the results we published are not reproducible. Somehow the coworker of mine who carried out these experiments earlier did hide the problems associated with the procedure, we published. So, my results and what we claimed in our paper have problems. But your method seems to work perfectly all right. So, I decided to accept your paper in the Science magazine in order to fix the FACTS and SCIENCE right. I will also withdraw my published paper with an apology in the near future.

I am really sorry that I published misleading irreprodicible results. Because of my published contradictory results, you might have gone through difficulites to publish your results, mainly because of my reputation as a Nobel Prize winner. Best wishes!

Sincerely yours,

William Johnson.

கடித்ததை வாசித்தவுடன் மதிமாறன் தொண்டையெல்லாம் அடைத்தது. இந்த அளவுக்கு ஹானஸ்டான, பெருந்தன்மையுள்ள ஒரு விஞ்ஞானி ஜான்சனை அவன் திட்டாத நாளே இல்லை. ஒவ்வொரு முறையும் அவன் பேப்பர் ரிஜெக்ட் ஆகும்போது, இது ஜான்சன் வேலையாக இருக்கும் என்பான். உலகமெல்லாம் அவன் நண்பர்கள் இருக்காங்க, அவங்கதான் வேணும்னே அவன் பேப்பரை ரிஜெக்ட் பண்ணுவதாக நம்பினான் மதிமாறன். ஆனால் இன்று அதே ஜான்சன், தன் தவறை ஒத்துக்கொண்டது மட்டுமல்லாமல் மதிமாறனுடைய ஆர்ட்டிக்கிளை பப்லிஷ் செய்ய உதவியதால் அவனைப்பொறுத்தவரையில் அவர் நோபல் பரிசை விட பெரிய பரிசை பெற்றுவிட்டார். திரு ஜான்சன் உண்மையிலேயே எவ்வளவு பெரிய மனிதர் என்று நினைக்கும்போது அவன் கண்களில் நீர் வந்தது.

Friday, October 30, 2009

அவரு..அவரு..ஒரு...(சர்வேசன் -500-போட்டி)

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரப்போறாங்க! சீக்கிரம் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, அலங்காரம் பண்ணிக்கோம்மா லதா!" என்றாள் அம்மா, வாசுகி!

"இதோ ஒரு நிமிஷம் அம்மா!" என்று தன் அறையில் ஜி மெயிலை மட்டும் செக் பண்ணிவிட்டு, எல்லா விண்டோஸையும் க்ளோஸ் பண்ணிவிட்டு எழும்போது அவள் மாணிட்டரில் இருந்த ஃபேவரைட் நடிகரின் போஸ் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் வந்து நின்றது. லதா, எழுந்து புடவை மாற்றி, மேக்-அப் பண்ணுவதற்காக ஓடினாள்.

லதாவுக்கு காதல் கல்யாணத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதுவும் இந்த கம்ப்யூட்டர் ஆண்-லைன் காதல் தலைவிரித்தாடும் இந்தக்காலத்தில்! நேற்றைய காதல் ஜோடிகளெல்லாம் இன்று பிரிந்து தியானமும் மெடிட்டேஷனும் செய்துகொண்டிருக்கிற இந்த நவீன உலகத்தில், காதல் எல்லாம் சும்மா கொஞ்ச நாள் உடல்ப்பசிக்குத்தான் என்று நம்பினாள், லதா. ஆனால் கணவன் மனைவி உறவு பலப்பட ஓரளவு ஒரே டேஸ்ட் இருக்கனும். ஒருவர் ரசிப்பதை இன்னொருவர் நிச்சயம் வெறுக்கமட்டும் கூடாது என்று முழுமையாக நம்பினாள் அவள்.

லதாவை பெண்பார்க்கவந்த மாப்பிள்ளை குடும்பம் உயர்தரமானதாகவும், மாப்பிள்ளை மோகன் நல்ல உயரமாக, மாநிறமாக, ஆள் ரொம்ப அழகா இருந்தார், மேலும் நல்ல வேலையும் பார்த்துக்கொண்டிருந்தார். புன்னகையுடன் நல்ல மேன்னர்ஸுடன் நாகரீகமாகப் பேசினார். அப்பா, அம்மா, அண்ணாவுக்கும், அவள் தங்கை ஹேமாவுக்கும், ஏன் அவளுக்கும் அவரை ரொம்பவே பிடித்துவிட்டது. அன்று இரவு அப்பாவிடம் ஒருமாதிரி மாப்பிள்ளையைத் தனக்குப் பிடித்ததாக சொல்லிவிட்டாள், லதா.

அதன்பிறகு ஒரு நாள் குடும்பத்துடன் போய் அவர் வீட்டில் ஸ்னாக்ஸ், காஃபி சாப்பிட்டுவிட்டும் வந்தார்கள். இன்னொரு நாள் அவள் அம்மா அப்பாவின் ஏற்பாட்டின்படி, அவளும், மோகனும், அவள் அப்பா சீனிவாசன், மற்றும் அம்மாவுடன் சேர்ந்து கோயிலுக்கு போனார்கள். கோயிலில் இவர்களை தனியாக பேசிக்கொள்ள வசதி செய்துகொடுத்தார்கள், அவளுடைய அன்பான அப்பா, அம்மா. லதா ஒரு பச்சைகலரில் பட்டுச்சேலை கட்டிப்போயிருந்தாள். மாப்பிள்ளை மோகனுக்கு அந்த சேலையில் அவள் இருக்கும் அழகு ரொம்பவே பிடித்ததாக சொன்னார். அவர் அணிந்துவந்த பேண்ட்ஸ், டி-ஷிர்ட்டும் கலர் செலக்ஷன் அவளுக்கும் பிடித்தது. போகப்போக அவரை ரொம்ப ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது அவளுக்கு. இருந்தாலும் ஏதோ ஒண்ணு அவரிடம் கேக்கனும்னு அவள் மனதில் உறுத்தல் இருந்தது. அது ரொம்ப சில்லியான விஷயம் என்பதால அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

ஒரு மாதிரி நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் 3 மாதத்தில் திருமணம் என்று கல்யாணத்தேதியும் முடிவானது. நிச்சயம் செய்யப்பட்டு முடிந்து சில நாட்களில் அவளுக்கு கல்யாணத்திற்கு வாங்கிய நகை, பட்டுப்புடவை காட்டுவதற்காக லதாவையும் தன்னுடன் அழைத்து சென்றார் தந்தை சீனிவாசன். கொஞ்ச நேரம் பேசியபிறகு அவளை மோகன் தன்னுடைய அறைக்கு தனியாக அழைத்துச் சென்றார். லதா, மோகனின் அறையில் ஒரு 5 நிமிடம் இருந்துவிட்டு அங்கே இருந்து அவருடன் வெளியே வந்தாள்.

வந்தவள் முகம் வேற மாதிரி ஒரு கலவரத்துடன் இருந்ததை கவனித்தார், தந்தை. மகளின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த அவர், "சரி, ஒண்ணும் இருக்காது, நாளைக்கு சரியாகிவிடும்" என்று ரொம்ப கேள்வி கேட்காமல் விட்டுவிட்டார். ஆனால் அடுத்த நாளும் லதா முகத்தில் அதே போல் ஒரு கலவர உணர்ச்சி இருந்ததை கவனித்தார். கடைசியாக, அவள் அறைக்கு சென்று உட்கார்ந்து மெதுவாக லதாவிடம் கேட்டேவிட்டார்,

“என்னம்மா லதா, ஒரு மாதிரியா இருக்க?”

“இல்லப்பா ஒண்ணுமில்லை”

“சும்மா சொல்லும்மா” என்றார்.

“இனிமேல் இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியாதாப்பா?” என்றாள் பரிதாபத்துடன்.

“என்னம்மா நடந்தது?”

“ஒண்ணுமில்லைப்பா அவரோட குடும்ப வாழ்க்கை ஒத்துப்போகாதுனு தோனுதுப்பா எனக்கு”

“என்னம்மா நடந்தது, அவர் ரூமிலே? எதுவும் தப்பா நடந்துகொண்டாரா உன்னிடம்?”

“இல்லைப்பா. அவர் எதுவும் தப்பா எல்லாம் நடக்கவில்லை. எனக்குத்தான் அவர் டேஸ்ட் பிடிக்கலை அப்பா”

“விபரமா சொல்லும்மா. எதுனாலும் பரவாயில்லை” என்றார் அன்புடன்.

லதா, அழ ஆரம்பித்துவிட்டாள்.

“சும்மா சொல்லும்மா. கல்யாணத்தை நிறுத்திடுவோம். என்ன காரணமா இருந்தாலும் பரவாயில்லை” என்றார் அப்பா கனிவுடன்.

“அவர்.. அவரு, ஒரு.. என்று ஒருவழியாக விசயத்தைச் சொல்லி முடித்தாள் லதா. தன் மகள் மனதை நன்கு அறிந்தவர் சீனிவாசன். அவளுக்கு பிடிக்கிற சின்ன சின்ன விசயங்களையும், அவள் வெறுக்கிற சில்லியான விசயங்களையும் கவனித்து அவள் எண்ணங்களை மதிப்பவர் அவர். அவருக்கு தெளிவாக மகளின் அச்சம் புரிந்தது. "அதனால் என்னம்மா? இதெல்லாம் பெரியவிசயம் இல்லை" என்று சொல்லி அவளை ஃபோர்ஸ் பண்ண விரும்பவில்லை அவர். அத்துடன் கல்யாணத்தை ஒரு வழியாக நல்லமுறையில் நிறுத்திவிட்டார்கள். நேரிடையாக மாப்பிள்ளையிடமே தன் மகள் பலஹீனத்தை சொல்லிக் கேட்டதும், மோகனும் சரி என்று சொல்ல, கல்யாணம் சுமூகமாக நிறுத்தப்பட்டது.

லதா, அவள் தந்தையிடம் சொன்னது இதுதான், "அப்பா! அவரு.. அவரு ஒரு. கமல் ரசிகர் அப்பா.. கமல் ரசிகரா இருந்தாலே பிரச்சினை, அவர் ஒரு கமல் வெறியர் போல இருக்குப்பா. கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் சேவர், மற்றும் ரூமில் உள்ள சுவரில் உள்ள போஸ்டர் எல்லாமே குணால யிருந்து தசாவதாரம் வரை எல்லா போஸ்டரருமாயிருக்கு. எனக்கு என்னவோ அவருடன் ஒத்துப்போகும்னு தோனலை. இது சில்லியான விசயம்தான் ஆனால் எனக்கு முக்கியமான விசயமும் கூட. என்னைப்பொறுத்தவரையில் ரெண்டு பேருக்கும் ஓரளவுக்கு ஒரே டேஸ்ட் இருக்கனும்” என்று அழுகையுடன் முடித்தாள் படித்த வேலைபார்க்கும் அறிவாளி மகள். புன்முறுவலுடன் அவள் ரூமிலும் அவள் கம்ப்யூட்டர் ஸ்க்ரினிலும் உள்ள ஸ்டெயிலானா போஸ்களை பார்த்தார், தந்தை.

கொஞ்ச நாள் சென்று மறுபடியும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும் போது தரகரிடமும், மாட்ரிமோணியிலும் முதலில் தெளிவாகப் சொல்லப்பட்ட ஒரு முக்கியமான மேட்டர், “மாப்பிள்ளை ரஜினி ரசிகராக இருக்கனும்” என்று.

Wednesday, October 28, 2009

சினிமா தயாரிப்பு என்கிற சூதாட்டம்!

சினிமா தயாரிச்சு சம்பாரிச்சு எத்தனை பேர் வெற்றியடைந்துள்ளார்கள் என்று பார்த்தால் விரல்விட்டு எண்ணி விடலாம். இதில் பணத்தைப்போட்டு அழிந்தவர்கள்தான் ஏராளம். சரி அழிந்தவர்கள்ல கொஞ்சப்பேரைப் பார்ப்போம்!

* அசோகன் ( எம் ஜி ஆர் வைத்து நேற்று இன்று நாளை தயாரித்து பல இன்னல்களில் மாட்டியதாக கேள்வி).

* சந்திரபாபு (எம் ஜி ஆர் வைத்து மாடி வீட்டு ஏழை என்கிற படம் தயாரிக்க முயன்று தோல்விடயந்ததாக கேள்வி)

* எ எம் ரத்னம் ( நல்லா மேலே வந்து கொண்டிருந்த இவர் இப்போ மகனை வச்சு ஒரு படம் எடுத்து விழுந்து ஆண்டியாயிட்டார்னு கேள்வி)

* காலஞ்சென்ற ஸ்ரீதர் (பல வெற்றிப்படங்களை தந்த இவர், கடைசிக்காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டதாகக் கேள்வி)

* ஜி வெங்கடேஸ்வரன் (எல்லோருக்கும் தெரிந்த கதைதான் இவர் தற்கொலைக்கதை)

* ஸ்ரீ ப்ரியா (தயாரித்த "நீயா" ஓரளவுக்கு போச்சு . அப்புறம் வந்த "நட்சத்திரம்" ஃப்ளாப். நெறையா பணத்தை விட்டதாகக் கேள்வி)

* வி கே ராமசாமி கார்த்திக்கை வச்சு எடுத்த படங்கள் படுதோல்வியை தழுவின.

* தேவர் ஃபில்ம்ஸ் (எம் ஜி ஆரை வைத்து நிறைப்படங்கள் எடுத்த தேவர் ஃபில்ம்ஸ், பிறகு ரஜினியை வைத்து பல வெற்றிப்படங்களையும் தந்தது. ஆனால் இப்போ என்ன ஆச்சுனு தெரியலை). நல்ல நிலையில் இல்லை என்கிறார்கள் சிலர்.


சினிமா எடுத்து அப்போ யார்தான் சம்பாரிச்சா?

* எ வி எம் (அவர்கள் ஸ்டுடியோ இருந்தது பெரிய பலம்)

* காலஞ்சென்ற பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் (இவர் ஒரு ரீமேக் பாலாஜி)

* எம் ஜி ஆர், ரஜினியை வைத்து சம்பாரிச்ச சத்யா மூவீஸ்

* பஞ்சு அருணாச்சலம் (பி ஏ ஆர்ட் ப்ரொடக்ஷன்ஸ்)

* பாக்யராஜ் மற்றும் டி ராஜேந்தர் (இயக்கி, நடித்து, தயாரித்து சம்பாரிச்சாங்க)

* இளையராஜாவின் பாவலர் க்ரியேசன்ஸ்

* கமலஹாசனின் ராஜ்கமல் பிக்ச்சர்ஸ்

* சிவாஜி ஃபில்ம்ஸ்

* பாலசந்தரின் கவிதாலயா (குசேலனில்கூட நஷ்டம் ப்ரமிட் சாய்மீராவுக்குத்தான்)

* மணிரத்னம்.

சினிமா தயாரிப்பு ஒரு மாதிரியான பெரிய அள்வுல விளையாடுகிற சூதாட்டம்தான். இதில் இறங்காமல் இருப்பது நல்லது!

Tuesday, October 27, 2009

தமிழ்மணத்தின் மணமும், தரமும் உயர்ந்துள்ளது!

சூடான இடுகைகளை ஒருவழியாக சினிமாப்பகுதிகளுக்கு மட்டும் தள்ளிவிட்டு, வாசகர் பரிந்துரையை மட்டும் தமிழ்மண முகப்பில் காட்டுவதால் தற்போதுள்ள தமிழ்மண முகப்பு வெறும் கவர்ச்சியாக இல்லாமல் கருத்தாழமிக்கதாக உள்ளது.

தற்போது உள்ள நிலையில் பதிவர்களுடைய “அடிதடி”, ஒருவரை ஒருவர் திட்டுவது, ஒருவரை ஒருவர் இறக்குவது போன்ற பதிவுகள் வாசகர் பரிந்துரையில் தாக்குப்பிடிக்காமல் முகப்பிலிருந்து அதிவிரைவில் ஓடிவிடுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் -ve மதிப்பெண்கள் (0 மதிப்பெண்) கொடுக்க வாய்ப்பு இருப்பதால். -ve மதிப்பெண்கள் கொடுக்க வாய்ப்பு இருப்பதால்தான் இதுபோல் காரசாரமான தனிநபர் தாக்குதல் பதிவுகளை முகப்பிலிருந்து பதிவர்களே எளிதாக தூக்கி எறியமுடிகிறது.

அதென்னனு தெரியலை, தோழர் த, ஜீவராஜ் அவர்கள் பதிவுமட்டும் ஒரு சில சமயங்களில் அனுபவம்/சமூகம் பகுதியிலிருந்து மறைவதே இல்லை. போனமுறை துளசி டீச்சர் வேண்டி இந்த குறைபாடு சரி செய்யப்பட்டது. இப்போ மறுபடியும் அதே சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த “glitch” ஐ தமிழ்மண நிர்வாகம் சரி செய்தால் நல்லா இருக்கும். அவ்ளோதான்!

புரட்சி திராவிடன் சத்யராஜின் அடுத்த இன்னிங்ஸ்!


வில்லனாக அறிமுகமானவர்தான் சத்யராஜ். அந்தக்காலத்து எ வி எம் படம் பாயும்புலி ல எல்லாம் ஒரு சின்ன வில்லன் ரோல்தான் செய்தார். பிறகு தனக்கே உள்ள தனித்திறமையால் வில்லனாகவே கலக்கு கலக்குனு கலக்கினார் . காக்கிச்சட்டையில் இவர் செய்த வில்லன் ரோலும், மிஸ்டர் பாரத்தில் இவர் செய்த அப்பா-வில்லன் ரோலும், கமலையும் ரஜினியையும் விட நடிப்பில் கிளப்பியதாக பலராலும் பேசப்பட்டது.

அதன் பிறகு ஹீரோவாக நடித்து தன்க்கென்று ஹீரோ அந்தஸ்தை சம்பாரித்து ஒரு பெரிய ஸ்டாரானார், சத்யராஜ். இவர் நடித்த கடலோரக்கவிதைகள், வேதம் புதிது, நடிகன், கடமை கன்னியம் கட்டுப்பாடு, பூவிழி வாசலிலே போன்றவை இவருக்கு ஹீரோ அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள உதவிய படங்களில் சில.

சத்யராஜ் கொஞ்சம் அதிகமாக மேடைப்பேச்சில் பேசி கெட்டபெயர் கொஞ்சம் சம்பாரித்துக்கொண்டார். மற்றபடி நடிப்பில் இவரை யாரும் சோடை சொல்ல முடியாது.
இப்போது இவர், ஆயிரம் விளக்கு என்கிற படத்தில் , பாக்யராஜ் மகன் சாந்தனுவுடன் ஒரு முக்கிய ரோல் செய்கிறார். இது தவிர, ஒரு தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிப்பதாகவும், ஒரு மலையாளப்படத்தில் ஒரு வித்தியாசமான ரோல் செய்வதாகவும் வதந்திகள் உலவுகின்றன. புரட்சித்தமிழன் இப்போது பலமொழிகளிலும் நடித்துப் புரட்சி திராவிடன் சத்யராஜாகிவிட்டார்!

ஹீரோவாக நடித்து சாதித்ததைவிட சத்யராஜ் இதுபோல் ரோல்களில் சிறப்பாக நடிக்க முடியும் என்பது என் நம்பிக்கை! இவருடைய புது அத்தியாயத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Monday, October 26, 2009

காலத்தால் “அழியும்” இயக்குனர்கள்!


நடிகைனா அவர்களுக்கு தமிழ் சினிமாவில் பாப்புளாரிட்டி இருப்பது மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு பத்து வருடகாலம்தான். இது எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் சரி. எந்தக்காலமாக இருந்தாலும் சரி.

இசையமைப்பாளர்னா? அவர்களும் ஒரு 10-15 வருடகாலம்தான் ஒரு கம்மாண்டிங் பொசிஷன்ல இருக்காங்க. இதில் கே.வி மஹாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏன் ரகுமான் கூட விதிவிலக்கல்ல!

சரி அடுத்து இயக்குனர்களை எடுத்துக்குவோம். பெரிய பெரிய ஆட்களெல்லாம், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், டி ராஜேந்தர், மணிரத்னம், எஸ் பி முத்துராமன், சந்தான பாரதி, மணிவண்ணன், ஆர் சுந்தர் ராஜன், சுரேஷ் கிருஷ்ணா, வாசு எல்லோருக்குமே ஒரு 10-15 வருடகாலம்தான். அதன்பிறகு இவர்களை யாருமே சீண்டுவதுகூட இல்லை. அதாவது மரியாதையா இவர்கள் ஒதுங்கிக்கொள்வது நல்லது. பாலச்சந்தர் எல்லாம் இன்னைக்கு படம் இயக்கினால் எ-க்ளாஸ் மக்கள்கூட பார்க்கத் தயங்குகிறார்கள். பாரதிராஜா எல்லாம் இப்போ படம் எடுத்தால் நாங்க பார்க்க மாட்டோம் என்கிறார்கள். பாக்யராஜா?, ஆளை விடுங்க சார் நு ஒதுங்கி ஓடுறாங்க. மணிரத்னமா? அவர் ஹிந்திலயே இருக்கட்டும், அவருக்கு தமிழ் படம் எடுக்கிற சரக்கு இல்லை என்று பலரும் நம்புறாங்க. சங்கர், ஒரு எக்ஸப்ஷனா என்பதை காலம்தான் பதில் சொல்லனும். ஆனால் சங்கர் ஒரு கன்வண்ஷ்னல் இயக்குனர் அல்ல! அவர் இதுவரை இயக்கியவையை விரல்விட்டு எண்ணிடலாம்.

ஆனால், நடிகர்கள்.. சிவாஜி - எம் ஜி ஆர் 30 வருடம் கொடிகட்டிப்பறந்தார்கள். எம் ஜி ஆர், அரசியலால்தான் ஒதுங்கினார். சிவாஜி கடைசிக்காலம் வரை என்ன நடித்தாலும் பார்க்க ரசிகர்கள் இருந்தாங்க. அதேபோல்தான் நம்ம ரஜினி - கமல். கடந்த 35 வருடங்களாக கொடிகட்டிப் பறக்கிறார்கள். இவர்களை உருவாக்கிய இயக்குனர்கள் எல்லாம் இவர்களைப்பார்த்து மலைத்து நிற்கிற பரிதாப நிலை வந்துவிடுகிறது. என்னைக்கேட்டால் இது ரொம்ப ரொம்ப ரொம்ப அநியாயம். ஏன் இயக்குனர்கள் அனைவருமே காலத்தால் அழிந்துவிடுகிறார்கள் என்பது என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிர்.

Sunday, October 25, 2009

சிவாஜியை ஓவெர்டேக் செய்த தசாவதாரம்!


ரஜினி நடித்து சங்கர் இயக்கிய எ வி எம் மின் சிவாஜி ஜூன் 2007 ல வெளிவந்தது. இந்தப்படம் பல முந்திய சாதனைகளை பாக்ஸ் ஆஃபிசில் முறியடித்தது. மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் டி வி ரைட்ஸ் கலைஞர் டிவி பெற்றது.

ஆஸ்கர் பிலிம்ஸ் பெரும்பொருட்செலவில் தயாரித்து, கே எஸ் ரவிக்குமார் இயக்கி, கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் ஜூன் 2008 ல் வெளிவந்தது. அதாவது சிவாஜி வெளியாகி ஒரு வருடம் கடந்த பிறகுதான் தசாவதாரம் திரையிடப்பட்டது. இதுவும் மிகப்பிரம்மாண்டமாக திரையிடப்பட்டு மிக வெற்றிகரமாக ஓடியது. இதனுடைய டி வி ரைட்ஸையும் அதே கலைஞர் டி விதான் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியது.

சிவாஜியைவிட ஒரு வயது குறைவான தசாவதாரம், கடந்த தீபாவளிக்கு சின்னத்திரையில் (கலைஞர் டிவி) ஒளிபரப்பட்டது. ஆனால் சிவாஜி இன்னும் ஒளிபரப்பப்படவில்லை! சிவாஜிக்கு ஏதோ ஸ்பெஷல் ரூல்ஸ் எ வி எம் போட்டதாக அந்நேரம் ஒரு பெரிய வதந்தி உலவியது. அதாவது படம் வெளிவந்து 3 ஆண்டுகள் சென்றபிறகுதான் டி வி யில் ஒளிபரப்பப்படும் என்று. அது வதந்தி அல்ல, உண்மை என்று இப்போது தோன்றுகிறது! அதேபோல் ஒரு ஸ்பெஷல் ரூல் தசாவதாரத்துக்கு இல்லை என்று இப்போதுதான் தெரிகிறது. சிவாஜி அளவுக்கு மிகப்பெரிய படமான தசாவதாரத்துக்கும் அதே ரூல்ஸ் இருந்ததாக நான் கேள்விப்பட்டதாக ஞாபகம்.

Saturday, October 24, 2009

“போடா லூசு!” -கடலை கார்னர் (28)

“Hi Stacy! Let me ask you this. Are you proud of being an American?”

“I would say, I just happened to be an American. Why, Kannan?”

“I don't know. Someone says “if there were no oil in middle east, there would have been peace.”

“Unfortunately it is true, US gets involved in their affairs because they have oil.”

“I don't know, it is kind of bothering me.”

“We can't control that Kannan. It does not matter, we have to be patriotic and loyal to our country or not?”

“OK, Stacy.”

“Let us not worry about things which can't be controlled by us.”

“That is right!”

“Hi Stacy! Hello Kannan!”

“Hi Brindha!”

“Hi Stacy! You forgot about your appointment now or what?”

“Oh, I almost forgot. See you later Kannan! I have to run now!”

“நீயும் போகனுமா?”

“இல்லையே. பாவம் உங்க கம்பெணியை அனுப்பிட்டேன் அதனால கொஞ்ச நேரம் இருக்கேன்”

“எப்படி இருக்க பிருந்தா?”

“நீங்களே பார்த்து சொல்லுங்க. எப்படி இருக்கேன்?”

“சரியா பார்க்க முடியலை. உன் ட்ரெஸ் உடம்பை மறைக்குது. மத்தபடி நல்லாத்தான் இருக்க”

“நல்லானா?”

“உன்னை அப்படியே கடிக்கனும் போல இருக்கு.”

“ஆமா, இன்னும் ரெண்டு நாள் இருக்கே?”

“எதுக்கு?”

“எதுக்குனா?”

“உன் பேசாவிரதம் முடியவா? ரெண்டு நாளைக்கு அப்புறம் ஏதாவது பெருசா தரப்போறியா?”

“பெருசானா?”

“யு நோ.”

“நோப், ஐ டோண்ட் நோ.”

“இங்கே பக்கத்தில் இந்தப்பக்கம் வந்து உட்காரு சொல்லுறேன்”

“சரி” நு சொல்லீட்டு அவன் பக்கத்தில் வந்து அவன் அருகில் உட்கார்ந்தாள் பிருந்தா.

“காதுல சொல்லவா?” அவள் இடது கையை தன் வலது கையால் பிடித்தான்.

“உங்க மூச்சுக்காத்து ஏதோ செய்து. ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கீங்க போல, கண்ணன். என் கன்னத்தை கடிச்சுடாதீங்க”

“நீயும்தான். நீ, என் கன்னத்தை கடிங்க, கண்ணன்னு சொல்றமாதிரி இருக்கு”

“இருக்கும் இருக்கும்”

“இவ்ளோ நாள் பேசாமலிருந்ததுக்கு உன் வீட்டிலே டின்னர் தாவேன்?”

“அதுக்கென்ன? என்ன சாப்பாடு வேணும் வெஜ்ஜா நான் வெஜ்ஜா?”

“நீ என்ன?”

“நானா? என்னை சாப்பிடப்போறீங்களா?”

“சாப்பிட்டாலும் சாப்பிட்டுவிடுவேன். ஏண்டி இப்படிப் படுத்துற?”

“ஆமா நான் என்ன உங்க ஆத்துக்காரியா? வாடி போடினு சொல்றீங்க?"

“ஆத்துக்காரினா?”

“ஃஒய்ஃபானு கேட்டேன்.”

“உங்காத்து பாஷைலாம் எனக்குப்புரியாது! ஆனா ஆத்துக்காரிங்கிறது ஒரு மாதிரி செக்ஸியாத்தான் இருக்கு.”

“நெஜம்மாவா?”

“ஆமா, ஒய்ஃப்னா வாடி போடினு சொல்லலாமா? வாங்க பிருந்தா போங்க பிருந்தானு சொல்லக்கூடாதா?”

“சொல்லலாமே.”

“நீ என் ஒய்ஃப்னா உன்னை வேற என்ன செய்யலாம்?”

“வேறன்னா?”

“அதான் ஒய்ஃப்னா வாடிபோடினு சொல்லலாம்னு சொன்ன இல்லை?'

“ஆமா.”

“வேற என்ன செய்யலாம்?”

“எனக்கு கால்வலிச்சா, கால் அமுக்கிவிடலாம்”

“அப்புறம்?”

“எனக்கு முத்தம் கொடுக்கலாம்”

“அப்புறம்?”

“எனக்கு ஊட்டி விடலாம்”

“அப்புறம்?”

“அவ்வளவுதான்!”

“ஏய் என்னை ஏமாத்தாதே! இதுக்காக உன்னை கட்டிக்கனுமா?”

“சரி, எங்கேனாலும் முத்தம் கொடுக்கலாம்.”

“உன் நெத்தியிலேகூட கொடுக்கலாமா?”

“நெத்தியிலேயா? நெத்தி மட்டும்தானா இருக்கு என்ட்ட?”

“வேறென்ன இருக்கு?”

“**** யு கண்ணன்!”

“ஆண்ட்டிட்ட சொல்றேன். இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை சொல்லி என்னைத் திட்டுறனு”

“LOL! நான் சொன்னதை அப்படியே சொல்லிச் சொல்லுங்க. சரியா? கண்ணன்! எல்லோரும் நம்மள ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்க.”

“சரி பார்க்கட்டும். உன்னை அப்படியே கிஸ்பண்ணவா?”

“உதட்டிலேயா?”

“உதட்டிலேயா வேணும்?”

“எங்க கொடுக்கப் போறீங்கனு கேட்டேன்.”

“உனக்கு அச்சம், மடம், நாணம் இதெல்லாம் இல்லையா? இந்த பாட்டு கேட்டு இருக்கியா, "நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய்விடுமோ" ?”

“கேட்டதில்லையே. சரி, ஏன்?”

“இப்படி பப்ளிக்கா உதட்டில் முத்தம்கொடுடானு ஒத்தக்காலில் நிக்கிற?”

“நீங்க பாட்டுக்கு நெத்தியிலே கொடுத்தால், எல்லோரும் நம்மள வேற மாதிரினு நெனச்சுக்குவாங்க. எனக்கு ரொம்ப அவமானமாப்போயிடும்.”

“ஏன்டா இப்படி இருக்க?”

“யு ட்ரைவ் மி க்ரேஸி!”

“சரி வேலைக்கு போ! ரொம்ப நேரமாச்சு. உன் பாஸ் தேடி வந்துறப்போறாரு.”

“சரி, முத்தம் இல்லையா?”

“இன்னொரு நாளைக்கு.”

“போடா லூசு!”

“இவ்ளோ செல்லமா திட்டுற! உனக்கு என் மேலே அவ்ளோ லவ்வா?”

“ஆமா. சரி நான் போயிட்டு வர்றேன்.”

“லெட் மி வாட்ச் யுவர் பட் வென் யு வால்க் அவே!”

“ச்சீ.!”

“ஏதோ உன்னைப்பார்த்து ரசிப்பது பிடிக்காத மாதிரி..”

“சரி வர்றேன்.”

-தொடரும்

Friday, October 23, 2009

கடவுள் இல்லை! ஆனால் பேய் இருக்கு!

கடவுள் நம்பிக்கை இல்லைனா நாத்தீகவாதிகள்! இல்லை, பகுத்தறிவு வாதிகள்! னு இவங்க தங்களை சொல்லிக்கிறாங்க!

இந்த நாத்தீகம், ஆத்தீகம், நம்பிக்கை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜக்ட்! பல நாட்டிலிருந்து வர்றவங்க கிட்ட பேச வாய்ப்பு கிடைக்கிறது . பொதுவா பகுத்தறிவுவாதிகள் கடவுளை நம்புவதில்லை. ஆனால் அப்படி ஒருவர் சொல்றார்னு அவர் பேய்களை நம்பமாட்டார்னு நீங்க அடிச்சு சொல்ல முடியாது!

சீனா, ஈஸ்டர்ன் யூரோப்பி லிருந்து வரும் பலரிடம் பேசும்போது தெரியவந்தது. அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை! மனதாற கடவுளை இவர்கள் நம்பிவதில்லை. கடவுளோ ரிலிஜனோ இவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கம் வகிப்பதுமில்லை! உடனே இதை வைத்து நாம் இவர்கள் பேய் நம்பிக்கை இல்லாதவர்கள்னு நினைத்து விடக்கூடாது! நான் அப்படித்தான் முன்னால (ள) எல்லாம் நினைப்பேன். சில பேரிடம் பேசிய பிறகு என் தவறு புரிந்தது.

பலர் என்ன சொல்றாங்கன்னா,

* எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் பேய் (ஃகோஸ்ட்) ல நம்பிக்கை உண்டு!

இவர்களை எந்த வகையில் சேர்ப்பதுனு எனக்குத் தெரியலை! ஆனால் கடவுளும் சரி, பேயும் சரி, ஜோசியமும் சரி, அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று!

Thursday, October 22, 2009

தமிழன்னா என்ன? அவனும் ஆம்பளைதானே?!

"ஏய்! சுவேதா! ஆமா என்ன ஆச்சு? உன் நண்பர் "சுரேஷ்"க்கு ஒரு ஹாய் கூட சொல்ல மாட்டேன்கிற?"

"அந்த கருத்துக்களத்திலேயா?"

"ஆமா. முன்னால் எல்லாம் ரொம்ப நல்லா பேச்சிக்குவ. இப்போ என்ன ஆச்சு? ஒரு ஹாய்கூட சொல்ல மாட்டேன்கிற?"

"நீங்க எப்போதாவது பொண்ணா இருந்து இருக்கீங்களா, ராஜ்?"

"ஏன் இப்படி ஒரு கேள்வி?"

"ஒரு பொண்ணா இருந்தீங்கன்னாத்தான் கீழ்த்தரமான ஆம்பளைங்க பத்திப் புரியும்"

"ஏய்! ட்ரை மி ப்ளீஸ்!"

"இந்த ஆளூ ஒழுங்கா பேசுறார். கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்கு. இவரும் ஐ டி ல தான் இருக்கார்னு என் ஃபோன் # கொடுத்தேன்"

"கால் பண்ணி பேசினாரா?"

"மொதல்ல ஒழுங்காத்தான் பேசினார். ஏதோ ஜோக் அடிப்பார், எனக்கு சிரிப்பு வராது. இருந்தாலும் சிரிச்சு வைப்பேன்"

"ஏய் இழுக்காமல் சொல்லேன்?"

"ரொம்ப "இனப்ப்ரோப்ரியேட்டா" நடந்துக்கிட்டார், ராஜ். ஒரு நாள் கேவலமா ஏதேதோ பேசிட்டார். ஏதோ ஜோக் அடிக்கிறது போலே. ஐ நோ ஹி மெண்ட் இட்"

"என்னதான் சொன்னார்?"

"அதை உங்ககிட்ட சொல்லவே அசிங்கமா இருக்கு.. ராஜ் !"

"சும்மா எனக்கு மட்டும் கேக்கிறார்போல சொல்லு!"

அவள் அதை சொன்னாள்

"வாட் எ ச்சீப் பாஸ்டர்ட் ஹி இஸ்! எப்படி இப்படி எல்லாம் கேக்கலாம் உன்னிடம்?"

"என்னை கேட்டால்? நீங்களும் ஆம்பளைதான் உங்களுக்குத்தான் தெரியனும்"

"ஏய்! நான் எல்லாம் நான் யார்ட்டயும் அப்படி நடந்ததே இல்லைப்பா"

"ரொம்ப அருவருப்பா இருக்கு, ராஜ். அந்த ஆளை பத்தி நெனைக்கவே! என்ன மட்டமா நடந்துக்கிறான்!"

"நாடுவிட்டு நாடு வந்திருக்கோம். இவரும் ஒரு தமிழர்தானே. கல்யாணம் ஆனவர்னு நம்பி நீ ஃபோன் # கொடுத்த! இவ்வளவு கீழ்தரமான ஆளா இருப்பான்னு நான் கனவு கூட காணலை"

"நானும்தான். என்னால நம்பவே முடியலை. ஒரு நிமிஷம் நான் பேசவே இல்லை. அப்புறம் எப்படியோ ஹாங் அப் பண்ணினேன்"

"ஏன் இப்படி நம்ம தமிழர்களே இன்னொரு தமிழ் பொண்ணுட்ட மட்டமா நடந்துக்கிறாங்க? அதுவும் கல்யாணம் ஆனவன்! பொறுக்கியைவிட கேவலமா நடந்து இருக்கான்"

"ஏன்னா தமிழரும் ஆம்பளைதான்! அதான் ராஜ்"

"அப்படினா?"

"அடுத்த ஜென்மத்தில் பொண்ணாப் பிறந்து பாருங்க! இந்த ஜென்மங்களின் உண்மை சுரூபம் அப்போத்தான் தெரியும், ராஜ்!

Wednesday, October 21, 2009

விஞ்ஞானிகள் புனிதமானவர்களா?

அறிவியல் எனறால் உண்மைகளின் பிறப்பிடம். அறிவியலில் ஆராய்ச்சி செய்றவன் எல்லாம் புனிதத்தொழில் பண்ணுகிறான் என்கிற மிகத்தவறான கண்ணோட்டம் விஞ்ஞானிகளை தூரத்தில் இருந்து பார்க்கும் பலருக்கும் உண்டு. ஆனால் விஞ்ஞானியும் கேவலம் சாதாதரண மனுஷ்ந்தான். பண ஆசை, புகழ் ஆசை, நோபல் பரிசு ஆசை உள்ளவர்கள் பலர் உண்டு. இதுக்காக சில கீழ்தரமான வேலைகள் செய்கிற விஞஞானிகளும் பலர் உண்டு. சிலர் தப்பித்துக்கொள்வதும் உண்டு. ஒரு சிலர் மாட்டிக்கொள்வதும் உண்டு!

* இந்தா ஒரு கதை ஹிந்துல வந்திருக்கு. இவர், இண்டோ- அமெரிக்க "Chandrayaan" ப்ராஜஎக்ட்ல வேலை பார்த்தவராம். பெயர் Dr. Nozette. எஃப் பி ஐ இவரை அரெஸ்ட் பண்ணி இருக்கு! என்ன பண்ணினார்னா, ஒரு இஸ்ரேலி கம்பெணியிடம் பெரிய தொகை ( $2,25,000) பேரம் பேசி இருக்காரோ வாங்கினாரோ னு குற்றச்சாட்டு. இப்போ பிடிச்சுட்டாங்க!

http://www.hindu.com/2009/10/21/stories/2009102161571300.htm


* ராமன் ரிசேர்ச் இண்ஸ்ட்டிடூட்டில் முன்பு வேலை பார்த்த ஒரு விஞ்ஞானி, ஒரு ஸ்பெக்ட்ரோ ஃபோட்டோ மீட்டர் வாங்காமலே, வாங்கியதாக கணக்கு காட்டி அந்தப் பணத்தை அடித்துவிட்டார். கடைசியில் அவர் அந்த இண்ஸ்டிடூட்டைவிட்டு மரியாதையாக வெளியேறும் நிலைமை வந்தது. இந்த விசய்ம் ரொம்ப வெளியே வரவில்லை.

* நம்ம சி வி ராமனே, பங்களூரில் ஐ ஐ எஸ் சியில் இருக்கும்போது, ஆராய்ச்சிக்காக வாங்கிய ஒரு சில வைரங்களுக்கு சரியான கணக்கு காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டினால், அங்கே இருந்து வெளியே வந்து, ராமன் ரிசேர்ச் இண்ஸ்டிடூட் ஆரம்பித்த பழங்கதையும் உண்டு.

* பல வருடங்கள் முன்னால், ஒஹையோ ஸ்டேட் யுனிவேர்ஸிட்டி யில் வேலை பார்த்த ஒரு பெரிய விஞ்ஞானி, "லியோ பக்கட்" என்கிறவர், யு டி ஆஸ்டினை சேர்ந்த இன்னொரு விஞ்ஞானியான ஸ்டீவ் மார்ட்டினுடைய ரிசேர்ச் ப்ரப்போஸலில் உள்ள ஐடியாக்களை திருடியதற்காக, சேர்மேனாக இருந்த அவரை அந்த கம்மிட்டியில் இருந்து விலக்கினார்கள்!

* ஹார்வேர்ட் யுனிவேர்சிட்டியில் நோபல் பரிசு வென்ற இ ஜே கோரே யின் பல ஆய்வுக்குறிப்புகளில் ரிப்ரொடியுசபிலிட்டி பிரச்சனை உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் பல உண்டு!

* நம்ம ராமர் பிள்ளை பெரிய சயண்டிஸ்ட் இல்லை தான்! அவரும் ஹர்பல் பெட்ரோல் தயாரிச்சதா புருடா விட்டார்! இந்த ஆர்ட்டிகிலை "நேச்சர்" ல பிரசுரிச்சு இந்தியர்கள் மானம் போனதும் இன்னும் மறக்க முடியவில்லை!

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!

என்கிற கண்ணதாசன் வரிகளில் உண்மை எப்போதுமே உண்டு!

ஒரு சாதாரண ஜானிட்டராக இருந்து தன் வேலையை அழகா அர்த்தமாக செய்து வாழ்பவர்களும் உண்டு. ஊரும் பேரும் புகழும் பெரிய விஞ்ஞானியாகி, பேருக்காகவும் புகழுக்காகவும் கீழ்த்தரமான வேலைகள் செய்து மாட்டிக்கொள்ளாமல் போனவர்களும் உண்டு!

Tuesday, October 20, 2009

விஜய், அஜீத்தை முந்திய சூர்யா!



தமிழ்நாட்டைப்பொறுத்தமட்டில் ரஜினி, கமலுக்கு அப்புறம் விஜய்தான் அடுத்த பெரிய ஹீரோ. அதேபோல் அஜீத்துக்கும் ஸ்டார் வால்யூ உண்டு. ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரையில் கதை வேறமாதிரி போகுது. ரஜினி, கமல் படங்களுக்கு அடுத்தது விஜய் யோ, அஜீத்தோ இல்லையாம்! சமீபத்தில் சூர்யா படங்கள்தான் நல்லாப்போகிறதாம்.


அமெரிக்காவைப் பொறுத்தவரையில், படம் எவ்வளவு பெரிய ஓப்பனிங் கொடுக்கிறது என்பதுதான் ரொம்ப முக்கியம். ஏன்னா படம் பலவாரங்கள் எல்லாம் ஓடுவதில்லை. ஒண்ணு ரெண்டு ஷோலயே எவ்வளவு அள்ளுகிறார்கள் என்பதுதான் முக்கியம்.


பெரிய ஊர்கள் நியூ ஜெர்ஸி, சிகாகோ, டாலஸ், ஹ்யூஸ்டன், அட்லாண்டா, லாஸ் ஏஞ்சலஸ் போன்ற நகரங்களில் பொதுவாக தமிழ்ப்படங்கள் சில வாரங்களுக்கு மேலும் ஓடும். மற்ற சிறிய நகரங்களிலெல்லாம் ஒரு வீக் எண்ட்ல ரெண்டுல இருந்து ஆறு காட்சிகள் திரை இடுவாங்க அவ்வளவுதான். அதில் கிடைக்கும் கலக்ஷன்தான் முக்கியம். படம் ஊத்திக்கிட்டாக்கூட நல்ல ஓப்பனிங் இருந்தால் போட்டகாசை எடுத்து லாபமும் அடைந்துவிடுவார்கள்!குசேலனில்கூட லாபம் சம்பாரித்து விட்டார்களாம்!!

தசாவதாரம் vs உன்னைப்போல் ஒருவன்


சில வேற்றுமைகளை முதலிலும், ஒற்றுமைகளைப் பிறகும் பார்க்கலாம்!

* தசா, மிகப்பெரிய பட்ஜெட். கமல் படங்களிலேயே #1 பட்ஜெட்! ஆனால் உன்னைப்போல் ஒருவன், சமீபத்திய கமல் படங்களிலேயே, மிக குறைந்த பட்ஜெட்! ஒரு மாதிரி சங்கர் ஸ்டெயில்ல கமல் ஃபாளோ பண்ணுறாரு. பெரிய பொருட்செலவு, ஆஸ்கர் ரவி படம்! மிகச்சிறிய பட்ஜெட், கமல் சொந்தப்படம்!

* தசா, வில், கமல், பத்து வேடங்களில் நடிச்சு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அவர்தான். இந்த கான்செப்ட் புரியாமல் ஜாக்கிச்சானே குழம்பிட்டாராம்! மாறாக, உன்னைப்போல் ஒருவனில், கமல் பேக் சீட்ல உட்கார்ந்து, மோகன்லாலுக்கு கதானாயகன் ரோலை கொடுத்துவிட்டார்.

* தசா, மிகப்பெரிய அளவில் அட்வர்டைஸ் செய்யப்பட்டது! ஜாக்கிச்சான் வந்தார். மற்றும் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி, ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் உன்னைப்போல் ஒருவன் எந்த ஒரு சத்தமே இல்லாமல் வெளியே வந்த படம்.

* தசா, வின் டி வி ரைட்ஸ் கலைஞர் டி வி, மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியது. அந்த அளவுக்கு எந்தப்படத்துக்கும் ஒரு விலை கொடுக்கலைனு சொல்றாங்க. உன்னைப் போல் ஒருவன் டி வி ரைட்ஸ் பத்தி எனக்கு எதுவும் தெரியலை. அப்படி ஒண்ணு ம் பெரியவிலைக்கு போகலைனு நினைக்கிறேன்.

* தசா, வை திராவிட மற்றும் திராவிட கழக மக்கள் அவ்வளவு ரசிக்கவில்லை. பலர் அதை வெறுத்தார்கள். உன்னைப்போல் ஒருவனை தி க மக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களும் ரசிக்கவில்லை!

* தசா, இயக்கம் கே எஸ் ரவிக்குமார் மற்றும் இசை Himesh Reshamiyya. ரெண்டுபேருமே பாப்புளர் ஆனவங்க. ஆனால் உன்னைப்போல் ஒருவன் இயக்கம், Chakri Toleti (அறிமுகம்), இசை, ஸ்ருதி ஹாசன் (அறிமுகம்).

* தசாவில் கமலுக்கு ஹீரோயின் உண்டு. ஆனால் உன்னைப்போல் ஒருவனில் இல்லை.

ஒற்றுமைகள்:

* ரெண்டுமே ஓரளவுக்கு, க்ரிட்டிக்களை கவர்ந்தது. ஆனந்த விகடனில் பெரிய அளவுக்கு மார்க் வாங்கவில்லை!

* ரெண்டுலயுமே ஆங்கில வசனங்கள் ரொம்ப ரொம்ப அதிகம்

* ரெண்டுமே வியாபாரரீதியில் வெற்றிப்படங்கள்தான். தசா, எ செண்டர்களில் ரொம்ப நல்லா போச்சு! இதுவும் ஓரளவுக்கு நல்லாத்தான் போகிறது.

* நான் ரெண்டையுமே தியேட்டரில் பார்க்காமல் டி வி டி லதான் பார்த்தேன் :)))

*ரெண்டுமெ கமலை ஒரு மாதிரி இந்துத்தவானு "பொய்குற்றச்சாட்டு" செய்ய வைத்த படங்கள்!

Sunday, October 18, 2009

தீபாவளியாவது.. மண்ணாங்கட்டியாவது!

“ஹலோ! ஹல்லோ! அண்ணே! இருக்கீங்களா?”

“என்னப்பா சாமிநாதா! எப்படி இருக்க?”

“அண்ணே! தீபாவளி எல்லாம் விசேஷமா கொண்டாடினீங்களாண்ணே?”

“அமெரிக்காவிலே இருந்துக்கிட்டா?! தீபாவளியாவது மண்ணாங்கட்டியாவது... அட போப்பா நீ வேற!”

“ஏண்ணே நரகாசுரனை கொன்னதை கொண்டாடி பெருசா நீங்க ஜெலபெரேட் பண்ணலையாண்ணே?”

“தீபாவளிக்கு நரகாசுரனை எல்லாம் நெனச்சதில்ல. தீபாவளின்னா புது ட்ரெஸ் போடனும். காலையில் எழுந்து தலைமுழுகிட்டு அம்மா சுட்ட பலகாரங்கள் சாப்பிடனும். அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார் படம் பார்க்கனும். அடுத்து லட்சுமி வெடியை, திரியிலுள்ள பேப்பரை கொஞ்சம் எடுத்துவிட்டு, கைலபிடிச்சுக்கிட்டே திரியில் நெருப்பு வச்சு மேலே தூக்கி போட்டு வெடிக்கனும், அப்படி வெடிக்கும்போது அந்த பேப்பரெல்லாம் மேலே இருந்து அழகா விழும்! ஒரு 1000 வாலாவை கைலயே பிடிச்சு கொஞ்ச நேரம் வெடிக்கவிட்டுட்டு பாதி வெடிச்சதும் அப்படியே மேலே தூக்கிப்போட்டு வெடிக்னும்! அப்புறம் ராக்கட்டை கைலபிடிச்சு கொளுத்தி மேலே விடனும். இதெல்லாம் அமெரிக்கால எங்கே பண்ண? ஏன்ப்பா நீ வேற ஃபோன் போட்டு கொல்லுற”

“நான் ஆதவன் பாத்தேண்ணே! படம் பரவாயில்லை சுமாரா இருக்குண்ணே. ஏன்ண்ணே! ஆதவன் அங்கேயும் ரிலீஸ் ஆகி இருக்காமுல்லண்ணே?”

“நம்ம ஊர்ல இருந்தால்தான் தீபாவளி, பட்டாசு, படமெல்லாம் பார்க்க அர்த்தமா தெரியும். இங்கே இருந்துக்கிட்டு தீபாவளி கொண்டாடுறதுக்கு சும்மாவே இருக்கலாம்”

“அப்போ என்னதாண்ணே பண்ணுனீங்க?”

“கால் பண்ணி அம்மா அப்பாவிடம் பேசினேன். அவங்க கிட்ட ஊர் நிலவரம், ஊர்ல என்ன படம் ஓடுது, என்ன என்ன சமைச்சீங்கனு கேட்டேன். அம்மா உடனே, "நீ இல்லாமல் என்ன தீவாளி?"னு ஒரு அழுகை.. பேசிவிட்டு, கொஞ்சம் பழைய தீபாவளியை நெனச்சுப்பார்த்து பெருமூச்சு விட்டேன். இப்படித்தான் போச்சு என் தீவாளி”

“சரிண்ணே, அப்புறம் இன்னொரு நாள் பேசுறேன்”

"உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்ப்பா, சாமிநாதா!"

"ரொம்ப டேங்க்ஸ்ண்ணே!"

Saturday, October 17, 2009

கமல்-50 யில் எரிச்சலை கிளப்பிய ராதிகா!


"என்னங்க! கமல்-50 ல ராதிகா பேசியது பிடிச்சதாங்க உங்களுக்கு?"

" நான் இன்னைக்கு வரை ராதிகா மேலே கொஞ்சம் நல்ல மரியாதை வச்சிருந்தேன். ஆனால் அதெல்லாம் இன்னையோட போச்சு! மேடையில் ராதிகாவினுடைய மட்டமான ஆட்டிட்டூட் எரிச்சலை கிளப்பியது எனக்கு. "என்னதான் வேணும் இந்தம்மாக்கு? "னு எனக்கு புரியலை"

"ஆமா, உங்களுக்குத்தான் லேடிஸ் டாமினேட்டிவா பேசினால் பிடிக்காதே?. என்னை மாதிரி எல்லோரும் இருப்பாங்களா?"

" உடனே இப்படி ஏதாவது அநியாயமாப்பேசாதே! இது வந்து ஒரு மேடை அதுவும் ஒரு ரொம்ப சீரியஸான ஒரு விழா. இதிலே கழுதை வயசான இவருக்கு எப்படி பேசனும்னு தெரியாதா? I dont know what she wanted, she was embarrassing everybody especially Kamal. She can do such kind of talk in a picnic or in a informal function. மேடையில் நின்னுக்கிட்டு she was behaving like an ass with a filthy attitude!"

"எனக்கும் ரொம்ப பிடிக்கலைதாங்க. பெரிய பெரிய ஆட்களெல்லாம் அவையடக்கத்துடன் பேசிவிட்டு போறாங்க! பாலச்ச்சந்தர், எ வி எம் சரவணன், எஸ் பி எம் எல்லோரும். ஆனா இவர் என்னானா.."

"இவகிட்ட மைக்கை கொடுத்தது எவன்னு தெரியலை. அவனை அறையனும்! அப்படியே கழுத்தைப் பிடிச்சு மேடையில் இருந்து தள்ளலாம்னு தோனுச்சு எனக்கு"

"ஒருவேளை நடிகர்களைவிட நாங்க ஒண்ணும் கொறஞ்சவங்க இல்லைனு காட்டுறாங்க போல."

"அதை இப்படியா காட்டனும்? ஒரு ராதிகா- 30 நடத்திக்காட்டலாம் இல்லையா? இவர் கண்ணா பின்னானு பேசியும் கமலஹாசன் உண்மையிலேயே நல்லா பிஹேவ் பண்ணினார். இந்தம்மா ஏதோ உளறிட்டுப்போகட்டும்னு விட்டுவிட்டு, தான் சொல்ல வேண்டியதை அவர் தெளிவா சொல்லிட்டாரு"

"ராதிகா, கமலைப் புகழ்ந்து பேசியதுகூட நல்லா இல்லைதான். இந்த சாண்ஸை பயன்படுத்தி தன்னை பெரியாளா காட்ட முயற்சித்த மாதிரித்தான் எனக்கே தோனுச்சுங்க"

"கோவிச்சுக்காதே! என்னைக்கேட்டால் பொதுவா நடிகைகளுக்கு சரியாப்பேசத்தெரியாது போல. சரோஜாதேவியா இருக்கட்டும், ஊர்வசியா இருக்கட்டும். பேசியதில் பாதிப்பேருக்கு மேலே இப்படித்தான்"

"எனக்கு கெளதமி பேசியது பிடிச்சதுங்க"

"ஏய், எனக்கும்தான். கெளதமி மட்டும் உண்மையிலேயே ரொம்ப நல்லா பேசினார். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது அவர் பேசியது. ஐ லவ்ட் ஹெர் ஸ்பீச் அண்ட் த வே ஷி தாங்க்ட் கமலஹாஷன்! இட் வாஸ் பியூட்டிஃபுள்!"

Thursday, October 15, 2009

ரஜினியின் பெருந்தன்மை! கமலின் நெகிழ்ச்சி!


“தமிழ் சரியாப் பேசத்தெரியாவிட்டாலும் நம்ம சூப்பர் ஸ்டார் பேச்சுதான், கமல்-50 யில் # 1 ஸ்பீச்னு நான் சொல்றேன். அண்ணே நீங்க என்ன சொல்றாப்ல?”

“நான் இல்லைனு சொல்லலடா தம்பி. கமல்-50 லயே ரஜினி பேச்சு பிரம்மாதமாத்தான் இருந்தது. கமல் சொன்னதுபோல “எவன்யா இப்படி ஒரு சகநடிகனை மனதாற உயர்த்திப் பேசுவான்?”

“அண்ணே! ஒண்ணு மட்டும் உண்மை, சிவாஜி, எம் ஜி ஆரையோ அல்லது எம் ஜி ஆர் சிவாஜியையோ இப்படி புகழ்ந்து பேசியதில்லைனு பெருசுகளெல்லாம் சொல்றாப்பில. ரஜினி-கமல் போல அவர்கள் நெறைய படங்களில் இணைந்தும் நடிக்கவில்லை. இல்லையா அண்ணே?”

“ரஜினி-கமல் வேறு! சிவாஜி-எம்ஜியார் வேறு! அவர்கள் காலமும் சரி. அவர்கள் சூழ்நிலையும் சரி”

“ரஜினியால எப்படிண்ணே இப்படி முடியுது? கமல் மட்டும்தான் கலைத்தாயின் செல்லக்குழந்தைனு மனதாற சொல்ல முடியுது?”

“இது கமலோட ஃபங்சன். இதில், கமலை மேல்தூக்கித்தான் பேசனும்னு நல்லா உணர்ந்து இருக்கிறார் ரஜினி. நாகரீகம் தெரிந்தவர் ரஜினி. அப்படி கமலை புகழ்ந்து சொன்னதால, ரஜினி கீழே போகல! இன்னும் கொஞ்சம் மேலேதான் போயிருக்காரு. அதான் இதில் உள்ள தனித்துவம் அல்லது ரஜினித்துவம்”

“அப்போ கமல் ரசிகர்களிடமே ரஜினி நல்ல பெயர் வாங்கிட்டாருனு சொல்ல வர்றீங்களா, அண்ணே?”

“நிச்சயமாக! கமல் ரசிகர்களே அசந்து போய்விட்டார்கள் நு சொல்லலாம்”

"கமல் ரசிகர்களிடமும் பெரிய கைதட்டல் பெற்றுவிட்டாருனா, அது ரஜினியின் பெரிய சாதனைதாண்ணே!"

“மற்றவர்களை புகழ்ந்தும் ரஜினி புகழின் உச்சிக்கு மேலே போயிடுறாரு!”

“அண்ணே! அதான் ரஜினி!”

சில ஆசைகள் என்றுமே நிராசைதான்! (18+)

கல்லூரியில் படிக்கும்போதூ லலிதாவைக் காதலிக்காத ஆளே இல்லை! அவளிடம் ஜொள்ளுவிடாத மாணவனும் ஏன் ஆசிரியரும் அவனுக்குத்தெரிய இல்லை! லலிதா ஒரு அழகுதான். அவள் பேசினால் ஒரு அழகு, நடந்தால் ஒரு அழகு, சிரித்தால் ஒரு அழகு, அவள் கல்லூரி காண்டீனில் காஃபி குடிப்பதும் ஒரு அழகுதான். எத்தனையோ அப்ளிக்கேஷன் வந்தும் அவள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வசந்த்தைத்தான் காதலித்தாள். அன்று அவள் காதல் இனித்தது. அதைவிட அவள் இனித்தாள். இன்று அவர்கள் கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆச்சு, இன்றும் அவள் ஒரு அழகுதான். ஆனால் வசந்தின் எல்லா ஆசையையும் நிறைவேற்றினாளா லலிதா? வசந்த் அன்று இரவும் பெருமூச்சுவிட்டுவிட்டுத்தான் தூங்கினான், அவன் ஆசைகள் நிராசையாக ஆனதால். அவன் எத்தனையோ வாதம் செய்துபார்த்தாலும் லலிதா இந்த ஒரு விசயத்தில் பிடிவாதமாக இருந்தாள். நாளையிலிருந்து இவனை தனியாக ஒரு அறையில் தூங்கவும் சொல்லிவிட்டாள்..

**********

“அந்தப் படத்தில் எல்லாம் செய்றாங்க இல்லயா லலிதா?”

“அதனால் என்ன வசந்த்? எனக்கு அது மாதிரி படமே பிடிக்கலை. அருவருப்பா இருக்கு”

“நிறையப்பேர் செய்றாங்க, இந்த ஃபாரத்தில் வாசிச்சியா?”

“ஆமா நீங்க காட்டியதை பதிவுகளைப் பாத்தேன். அனானிமஸா ஒரு சிலர் எழுதி இருக்காங்க. ஆனா எனக்கு சுத்தமாகப் பிடிக்கலை வசந்த்”

“நம்மளும் ட்ரைப் பண்ணினால் என்ன? ட்ரை பண்ணாமல் எப்படித் தெரியும்? உனக்கு பிடிச்சாலும் பிடிக்கும்”

“அது ஹைஜீனிக் இல்லை வசந்த். மேலும் அப்படி செய்யாதனால நீங்க ஒண்ணும் குறைஞ்சிட மாட்டீங்க, வசந்த்!”

“அவங்க எல்லாம் நல்லா இருக்குனுதானே சொல்றாங்க?”

“எனக்கு இது ஒரு லிமிட்டை க்ராஸ் பண்ணி மிருகமாகிக்கொண்டு போறமாதிரி இருக்கு, வசந்த். ஆறாவது அறிவின் துஷ்பிரயோகம்தான் இது”

“நீ ஏன் அப்படி நினைக்கிற?”

“மன்னிக்கவும் வசந்த், நான் நினைக்கலை, அதுதான் உண்மை!”

“இல்லை லலிதா..”

“சரி, எல்லாம் ட்ரை பண்ணனும்னு சொல்றீங்க இல்ல? ஒரு சில ஆம்பளைங்க ஆம்பளைக்ன்களோட படுக்கிறாங்க. அதுவுத்தான் படிக்கிறீங்க. இல்லையா வசந்த்?”

“ஆமா. அதனால?”

“நீங்களும் அது மாதிரி எதுவும் ட்ரை பண்ணியதுண்டா? ஒருவேளை உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கும். ட்ரை பண்ணினால்தானே தெரியும்?”

“ச்சீ”

“நான் என்ன சொல்ல வர்றேன்னா, எல்லாரும் செய்றதை நம்ம செய்யனும்னு ஒண்ணும் இல்லை, வசந்த். நம்ம நம்மளாவே இருப்போமே, டார்லிங்? நம்ம அளவுக்கு அவங்க சந்தோஷமா இருக்காங்கனு எனக்கு தோனலை”

“போர் அடிக்குது, ருட்டீன், லலிதா”

“எதுதான் போர் அடிக்காது? அதுவும் ருட்டீன் ஆனதும் அதுவும் போர் அடிக்கும். அப்புறம் அவன் இப்படி செய்றான், இவ அப்படிச் சொன்னானு புதுசா ஆரம்பிப்பீங்க. உங்களுக்கு எல்லாமே உதிர்த்துவிட்டது வசந்த். எது ரைட், எதுதப்புனு தெரியாமல் பித்துப்பிடிச்சு அலைறீங்க. இட் இஸ் டேஞ்சரஸ், வசந்த். யு ஆர் பிகமிங் சிக், டார்லிங்”

“இல்லை லலிதா..”

“வசந்த்! நான் சொல்லுறதை கேளுங்க, ப்ளீஸ்”

“என்ன சொல்லு”

“தேர் இஸ் நோ லிமிட் ஃபார் திஸ். டோண்ட் யு சீ தட், டார்லிங்?”

“அதனால?”

“ஐ டோண்ட் வாண்ட் டு ட்ரை ஃபைண்ட் த லிமிட்”

“லலிதா! யு ஆர் மை பெட்டர் ஹால்ஃப், ஐ ஆம் ஹானஸ்ட் வித் யு”

“ஸோ அம் ஐ, டார்லிங்”

“ஐ லவ் யு லலிதா”

“ஐ லவ் யு மோர், டார்லிங். நான் ஒண்ணு சொல்றேன் கேக்கிறீங்களா?”

“என்ன?”

“கொஞ்ச நாள் வேற வேற ரூமில் படுப்போமா?”

“ஏன்?”

“உங்க பக்கத்தில் படுத்து ருட்டீன் போர் அடிக்குது. நான் சொல்றதைக் கேளுங்க, சரியா?”அவள் சிரித்தாள்

“ம்ம்”

*****

வசந்த், லலிதாவை அணைத்துக்கொண்டு தூங்கிவிட்டான். அவள், அவன் நெத்தியில் முத்தமிட்டாள். அவன் மட்டுமல்ல, அவளும் தன் கணவன் இப்படி எல்லாம் இருக்கனும் என்று ஆசைப்பட்டு இருக்கிறாள். வசந்த் இப்பொழுது ஆசைப்படுவது போல அவன் இருக்கனும்னு அவள் ஒருநாளும் ஆசைப்பட்டதில்லை. ஆசைகள் நிராசைகள் ஆவது எல்லோருக்கும்தான்.

Wednesday, October 14, 2009

தினமலரின் கருத்துச் சுதந்திரமும் சிறுபிள்ளைத்தனமும்!

தினமலர், பாட்டியான நடிகைகள் படத்தை எல்லாம் போட்டு, விபச்சாரம் செய்வதாக வெளியிடுவார்களாம். ஏன் னா அது கருத்துச்சுதந்திரம்! அவர்கள் உண்மையை வெளியிடுவார்களாம்! இது தேசத் தொண்டாம்!

சரி, அது அவர்கள் கருத்துச் சுதந்திரம்னா? நடிகர்கள், தங்களை கேவலப்படுத்திய பத்திரிக்கையாள்ர்களை கேவலமாக பேசுவது அவர்கள் பேச்சு சுதந்திரம் இல்லையா?

சரி, நீங்க பெரிய ஜேர்னலிஸ்ட் ஆச்சே! அதற்கு சட்டப்படி வழக்கு தொடர்ந்து தண்டிப்பதை விட்டுவிட்டு, இதென்ன, நான் இவர்கள் சம்மந்தப்பட்ட செய்திகளை போடமாட்டேன் என்கிற சிறுபிள்ளைத்தனம்???



பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசிய சத்யராஜ், சூர்யா, சேரன், விவேக் உள்ளிட்டவர்களின் செய்திகளை புறக்கணிக்க சினிமா பிரஸ் கிளப் முடிவு செய்துள்ளது. சினிமா பிரஸ் கிளப் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. சங்கத்தின் மூத்த உறுப்பினர் மாவணன், தலைவர் சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பொதுச்செயலாளர் எம்.பி.ஆபிரகாம் லிங்கன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திரையுலகினால் கடுமையான அவமரியாதைக்கு உட்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களின் உணர்வுகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன் பின்னர் கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

* திரையுலகினர் பற்றி வந்த செய்தியால் திரையுலகினர், குறிப்பாக சம்பந்தப்பட்ட நடிகைகள் மன வருத்தத்தை சினிமா பிரஸ் கிளப் புரிந்து கொள்கிறது. இது தொடர்பாக 7.10.09 அன்று நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் திரையுலகில் மதிப்பு மிக்க இடத்தில் இருக்கும் சத்யராஜ், சூர்யா, விவேக், சேரன் ஆகியோர் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தி ‌பேசியது எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு சினிமா பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

* எங்கள் உறுப்பினர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இனி நடைபெறும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் சம்பந்தப்பட்டவர்கள் தரும் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்வதில்லை என சங்கம் தீர்மானிக்கிறது.

* பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய விவேக், சேரன், சூர்யா சத்யராஜ் ஆகியோர் தொடர்பான செய்திகளை புறக்கணிப்பது தொடர்பாக அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும், உரிமையாளர்களையும் சந்தித்து ‌வேண்டுகோள் வைப்பது.


* இந்த பிரச்னை தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் சென்னை பிரஸ் கிளப், சென்னை பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பத்திரிகையாளர் கூட்டுக் குழு நடவடிக்கைகளுக்கு சினிமா பிரஸ் கிளப் முழு ஆதரவு தெரிவிக்கிறது.

* நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் விவேக், அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் வகையில் பொது நிகழ்ச்சியில் பேசியிருப்பதையும், அவருடைய திரைப்படங்களில் ஊனமுற்றோர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி வசனம் பேசி வருவதையும் மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி, அந்த விருதை திரும்பப் பெற வேண்டுகோள் வைப்பது.

கூட்ட முடிவில் அமைப்பின் பொருளாளர் ராமானுஜம் நன்றி கூறினார்.

http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1114&Cat=2


நீ என்னை எதுக்கு திட்டின? நான் இனிமேல் உன் சம்மந்தப்பட்ட செய்தியை பிரசுரிக்க மாட்டேன்! என்று சிறுபிள்ளைத்தனம் பண்ணுகிறது பத்திரிக்கை உலகம்!

சிரிப்புத்தான் வருது இவங்க பத்ம ஸ்ரீயை விவேக்கிடம் இருந்து திரும்ப வாங்க கோரிக்கை விடுவது!

Tuesday, October 13, 2009

ஓ..அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்!- கடலை கார்னர் (27)

"ஏய் பிருந்து! நான் தான்! ஃபோனை பிக் அப் பண்ணுடி"

"ஹல்லோ!"

"ஏய்!! எப்படி பிக் அப் பண்ணின!!! நான் மெசேஜ் விடலாம்னுதான் போனேன்"

"சும்மாதான்"

"உன் குரலைக்கேக்க நல்லா இருக்குடா! உனக்கு ரொம்ப பெரிய மனசுதான். வர வர உன் மனசும் பெருசாகிக்கிட்டே வருதுடா!"

"மனசும்மா? வேறென்ன எனக்கு பெருசாகிக்க்கொண்டு இருக்கு?"

"அதெல்லாம் பச்சையா சொல்ல முடியாது"

"ச்சும்மா சொல்லுங்க..."

"உனக்கு நான் அதை சொல்றதை காதுகுளிர கேக்கனுமா? யு ஆர் க்ரேஸி"

"ஆமா" அவள் சிரித்தாள்.

"உன்னை நீ ரெண்டு "மிரர்" வச்சு முன்னால பின்னால எல்லாம் உன் அழகைப் பார்க்கிறதில்லையா?"

"நீங்க ரொம்ப மோசம், கண்ணன். ஆமா என்னப்பத்தி எப்போவுமே ஏன் இப்படி கெட்ட கெட்ட மாதிரியே யோசிக்கிறீங்க?"

"நானா? நீயா?"

"கேள்வியைப் பாருங்க, கேள்வியை!"

"அது ஏன்னு தெரியலை, ஆனால் உன்னிடம் மட்டும் அப்படித்தான் பேச பிடிக்குது"

"என்னிடம் மட்டுமா? பொய்!"

"நெஜம்மாத்தான். அப்படி பேசினால்தான் உன்ட்ட ஏதாவது அர்த்தமா பேசின மாதிரி இருக்கு"

"ஏன் நல்ல பையனா, நல்லவிதமா பேசினால் என்னவாம்?"

"அது ரொம்ப போர் அடிக்குதே.. ஏய்! நல்லவனா நடிக்கிறதெல்லாம் ஊருக்கு! உன்னிடம் இல்லை"

"ஏன் நான் ரொம்ப ஸ்பெஷலா, கண்ணன்?"

"ஆமடா. இதை எத்தனை தர கேப்ப?"

"சும்மா நடிக்காதீங்க, கண்ணன். எப்படி நம்புற மாதிரி கூசாமல் பொய் பேசுறீங்க?"

"ஏய்! பொய்யெல்லாம் இல்லை. எங்கே அடிச்சு சத்தியம் பண்ண?"

"எனக்கு அந்த இடம்தான் ஞாபகம் வருது"

"எந்த இடம்?"

"அதான் நீங்க சொல்லுவீங்கள்ல?"

"மறந்து போச்சு, நீயே சொல்லேன்?"

"நானா? சாண்ஸே இல்லை! என்னிடம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இல்லை அது"

"ஓ அதுவா?"

"ஆமா, ட்யூப் லைட்! உங்ககிட்ட ஒண்ணு கேக்கனும்னு நெனச்சேன், அதென்ன பிருந்து, பருந்துனு என்னை கூப்பிடுறீங்க?"

"ஓ அது சும்மா ஸ்பெல்லிங் மிஸ்டேக்!"

"ஆஹஹா! பேசும்போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுற ஒரே ஆள் நீங்கதான் கண்ணன்" அவள் சத்தமா சிரித்தாள்.

"ஏன் உனக்குப் பிடிக்கலையா?"

"நல்லாத்தான் இருக்கு ரொம்ப யுனீக்கா"

"அப்புறம் என்ன? பிடிக்குதுனு சொல்றதுக்காக கேட்டியா?"

"ம்ம்"

"ஆமா ஏன் உன் குரல் ஒரு மாதிரியா இருக்கு? ஏதாவது பிரச்சினையா?"

"ஒண்ணுமில்லையே. கண்ணன்! அப்புறம் ஒரு விசயம்!! எனக்கு ஒரு "காப்" டிக்கட் கொடுத்துட்டா இன்னைக்கு"

"லேடியா? அதான். ஜெண்டில்மேன் எல்லாம் உனக்கு டிக்கட் கொடுக்கமாட்டான்"

"அது ஏனாம்?"

"உன் அழகைப்பார்த்து மயங்கி, எதுக்கு உன் காரை நிறுத்தினோம்னு மறந்துடுவான். அப்புறம் அப்பாலஜைஸ் பண்ணிட்டு போகச்சொல்லிடுவான்"

"அவ்வ்வ்வே"

"ஸ்பீடிங் டிக்கட்டா? நிதானமா ஓட்டுறதுதானே? எவ்வளவு 100 டாலரா?"

"ஸ்பீடிங் டிக்கட் இல்லை, கண்ணன். சும்மா ஒரு லைட்ல ஃப்ளாஷிங் ரெட் இருந்தது. நான் நிறுத்திட்டுத்தான் எடுத்தேன்..அவ நிறுத்தலைனு சொல்றா"

"அப்போ நீ வேணா கோர்ட்ல போயி அப்பியர் ஆகுறியா?"

"அப்பியர் ஆனா?"

"ஹண்ட்ரட் டாலர் சேவ் பண்ணலாம்"

"ஏன் ஜட்ஜ் என்னைப்பார்த்து மயங்கிவிடுவாரா?" அவள் சிரித்தாள்.

"இல்லை, அந்த காப் பொதுவா கோர்ட்க்கு வரமாட்டாள். அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அவ வரலைனா கேஸை டிஸ்மிஸ் பண்ணிடுவாங்க"

"நெஜம்மாவா?"

"ஆமடா. சரி இதைப்பத்தி கவலையை விடு! டிக்கட்டை "பே" பண்ணாதே. கால் பண்ணி, நீ இண்ணொஸண்ட்னு சொல்லு! கோர்ட்ல அப்பியர் ஆகுறேன்னு சொல்லு"

"சரி"

"இதை என்னிடம் சொல்லத்தான் ஃபோனை எடுத்தியா?"

"அதெல்லாம் இல்லை! பேசினதுனால சொன்னேன். சரி இப்போ வச்சிடவா? இன்னும் மூனு நாள் இருக்கு இல்லையா?"

"ஆமா, எதுக்கு இந்த "பேசாவிரதம்" இருக்க?'

"அதுவா.. சும்மாதான். என்னை ஒரு வழிக்கு கொண்டு வரத்தான்"

"உன்னையா? அப்படினா?"

"உங்காளோட பேசாமல் இருந்தால் எப்படி இருக்குனு பார்த்தேன்"

"நிம்மதியா இருந்தியா?"

"எங்கே நிம்மதியா இருக்க விட்டீங்க?"

"ஏன் கனவிலே வந்து உன்னை கிஸ் பண்ணீனேனா?"

"ஆமா"

"எந்த இடத்திலே?"

"அதெல்லாம் சொல்ல மாட்டேன். கனவிலே நீங்க ரொம்ப ரொம்ப மோசம்"

"ஏய் மோசமா கனவுகண்டது நீ! அப்படி மோசமான கனவுதான் உனக்கு வருமா?"

"அப்படி காண வச்சது நீங்கதான்!"

"ஸோ, உனக்கு மோசமா கனவு வந்ததுக்கு நான் காரணம்? அது என் தப்பா?"

"ஆமா, ஆமா, ஆமா, ட்யூப் லைட்"

"ஏய் பிரூந்து, I have got to go with Mike. He will show up any moment"

"இனிமேல் மூனுநாள் சென்றுதான் பேசுவேன்"

"சரி, Thanks for relaxing the rule and talking with me, today"

"கண்ணன்!"

"என்னடா?"

"ஐ ஜஸ்ட் லவ்ட் யுவர் மெசேஜெஸ். பை"

- தொடரும்

பத்திரிக்கைத் தொழிலில் விபச்சாரம் இல்லையா?

நடிகைனா ரொம்ப இளக்காரம்தான். தினமலர் பத்திரிக்கைக்காரர்களுக்கு சப்போர்ட்டா மேதாவி என் ராம் முதல்க்கொண்டு எல்லா பத்திரிக்கைகாரனும் இந்த "புனிதன்" லெனினை கைது செய்ததுக்கு வரிந்துகட்டிக்கொண்டு தான் போயிருக்கிறார்கள்!

நடிகர்கள், தன் சக நடிகையை விட்டுக்கொடுக்காதற்கு காரணம் அவர்களுக்கு பெரிய அவமானத்தை தேடிக்கொடுத்துள்ளது, தினமலர். பெரிய "சூப்பர் ஸ்டார் நடிகை"யா இருந்த நடிகைகள் பிழைப்பே ஒரு 5 வருசம்தான். அதுக்கப்புறம் எவனும் சீண்டமாட்டான். நாய்மாதிரி இன்னொரு இளம் நடிகை பின்னால போயிடுவான் எல்லா ஆம்பளையும். அப்படியிருக்க, இதில் இதுபோல் தொழிலில் இறங்கும் லெவெல்ல இருக்கிற நடிகைகள்னா, பொழைப்பு எத்தனை நாளைக்கோ? தவறாமல் எயிட்ஸும் வாங்கிவிடுவார்கள்னு நினைக்கிறேன் படுக்கிற பெரியமனிதர்களிடம் இருந்து. அதுக்காக விபச்சாரம் சரினு சொல்லல நான்.

என்னைக்கேட்டால் விபச்சாரம் நடிகைகள்மட்டும் செய்யலை, பத்திரிக்கைக்காரன் மட்டும் என்ன செய்றான்? பொய்யும் புரட்டுமே, இதயமே இல்லாமல், பேச்சுச் சுதந்திரத்தை வைத்து பலவிதமான பத்திரிக்கை விபச்சாரங்கள் செய்கிறார்கள்ங்கிறதை தினமும் பார்க்கத்தானே செய்றோம்?

அட் லீஸ்ட் விபச்சாரி தன் உடலை விற்று பிழைக்கிறாள். பத்திரிக்கைக்காரர்கள் இன்னொருவர் வாழ்க்கையை அவமானப்படுத்தி தன் வயித்தை கழுவிறான். சரி இவர்கள் சொல்வதுபோல விபச்சாரத்தில் கலந்துகொண்ட நடிகைகள் படத்தை போட்டு இவங்க பத்திரிக்கை தர்மத்தை காப்பாத்துறாங்கனு வச்சுக்குவோம்.

அபப்டிப்பார்த்தால் அந்த நடிகை விபச்சாரிட்ட போயி படுக்கிற ஆம்பளைங்க எல்லாம் குற்றவாளிகள் தானே? ஒரு பொம்பளைட்ட 100 ஆம்பளை படுத்து எந்திரிக்கிறான்!

பத்திர்க்கைக்காரர்கள் புனிதர் லெனின், வாய்கிழியப்பேசும் என் ராம் எல்லோருக்கும் என் கேள்வி இதுதான்!

* இவர்கள் குற்றம்சாட்டுகிற அந்த நடிகைகள்ட்ட படுத்தெழுந்த ஆம்பளைங்க ஃபோட்டொகளை எல்லாம் அந்த நடிகைகள் கொடுத்தால் அதையும் போடுவாங்களா?

* விபச்சாரிட்ட போறவன் இவர்களை மாதிரி பத்திரிக்கைக்காரன், அரசியல்வாதி எல்லா விதமான ஆம்பளையும்தான் இருப்பான் இதில். யாரா இருந்தாலும் அவன் ஃபோட்டோவை போடுவீங்களா?

* தினமலர் லெனின் அந்த வேலையை அடுத்து செய்யனும். அந்த மாதிரி விபச்சாரத்தில் கலந்துக்கிற ஆம்பளைங்க படங்கள் போட்டால் பத்திரிக்கையில் போட இடம் பத்தாது அது இதுனு சொல்லக்கூடாது.

*அந்த நடிகைகள்ட்ட படுக்கிறவனுக படத்தைப்போடுவதும் பத்திரிக்கை தர்மம்தான், மாமா வேலை இல்லை!

Monday, October 12, 2009

வேட்டைக்காரன் பதுங்குகிறானா?- தீபாவளிக்கு இல்லையாம்!


பாவம் விஜய் ரசிகர்கள்! எ வி எம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் வேட்டைக்காரன், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலையாம். தீபாவளிக்கு அப்புறம் 3 வாரங்கள் சென்றுதான் ரிலீஸ் ஆகப்போகிறதாம்.


While trade circles were abuzz with the news that another top star’s film, Vijay’s Vettaikaran, will also hit screens on the same day as Aadhavan, Suriya clarifies that the film has been postponed by three weeks. Which leaves the actor to compete with Jayam Ravi’s Peranmai and Namitha’s Jaganmohini.

http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Suriya-on-his-new-film/articleshow/5116275.cms


என்ன காரணமோ என்ன செண்டிமெண்ட்டோ இல்லை நம்ம சந்திரசேகராவோட மூடநம்பிக்கையோ என்னனு தெரியலைப்பா. ஏன் இப்படி வேட்டைக்காரன் பதுங்குகிறான்??

பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்றார்கள் அமெரிக்கர்கள்!


நோபல் பரிசு பொருளாதத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது

1) Elinor Ostrom, என்கிற பேராசிரியையும் (Indiana University) மற்றும்

2) Oliver E. Williamson, (a retired professor at the University of California-Berkeley)நோபல் பரிசுத்தொகையான $1.4 million னை பகிர்ந்து கொள்வார்கள் .

* எல்லனார் ஆஸ்ட்ராம் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெறும் முதல் பெண்மணி!

* இந்த நோபல் பரிசு அவருக்கு கிடைத்ததறிந்து தான் அதிர்ச்சி அடைந்ததாக தன்னடக்கத்துடன் சொல்லியுள்ளார் பேராசிரியை ஆஸ்ட்ராம்

English கடலை கார்னர் (26)

“Where is your friend today, Stacy?”

“You don’t know? He has gone on a trip to Boston for a week, Brindha”

“Really?”

“Yes”

“Are you telling the truth, Stacy?”

“Do I sound like I am lying? How can he share that with you? You don’t want to talk to him now, right?”

“This is an exception. He should have told me about this trip”

“Call him and ask him then!”

“I will”

“Wait a minute, how can you call him now?”

“Why not?”

“You told him not to talk to you for a week. It is only four days as of now”

“Yeah, but you don’t know something he does”

“What is it?”

“He leaves voice messages to me everyday”

“LOL”

“I am not lying, Stacy”

“I know. Dont worry, Brindha! Kannan will be here soon”

“You lied to me, Stacy!”

“So did you. You never told me about the messages he is leaving. What kind were they?”

“Those are in thamizh" she smiled

“What kind of game you two are playing anyway?”

“I don’t know. Don’t tell him I told you about the messages”

“OK, I wont. What sort of messages are they, Brindha? Tell me bit more about them”

“They are very sexy and caring and, I love them”

“Oh my God!”

“Really good ones. I save them all”

“I could sense that there was something going on like this between you two”

“Have you ever been in this situation?”

“Not like this. But I think I would love this kind of game”

“Kannan is a very interesting personality, Stacy. He knows how to keep a relationship not becoming a boredom”

“I know. This looks childish but interesting too”

“Such a small break helps us understand how much we like talking to each other”

“Hi Stacy and Brindha!”

“Hi Kannan!”

“How is your new boyfriend, Greg, Stacy?”

“I don’t know whether he is my boyfriend. He seems to lie a lot”

“Why? Is he saying “You are beautiful” “I love you so much” and so? LOL”

“Am I not beautiful, Kannan?”

“Of course you are but some men used to tell that to get into your pants”

“Yeah, I know all men are bastards. But some bastards are so loveable too, you see”

“Yeah, Greg is not one of them?”

“Well, I am not sure, Kannan. I suspect very much. I need someone who is loving and caring and trustworthy. The other things are secondary including sex”

“I see, then you have a long wait to find that guy”

“Do you believe what Kannan says, Brindha?”

“I don’t know, Stacy. I hardly know about men" Brindha smiled

“Why don’t you educate us about men, Kannan?”

“Even I don’t understand some men. How can I educate you?”

“What kind you don’t understand?”

“Child abusers, rapists, and some punks in India even pour acid on some girls' face because they did not love these punks or some nonsense?”

“Pouring acid in girls' face!!!”

“I have read some cases and it had happened in India”

“That is cruel, Kannan. I had a good opinion on Indians until now"

“We have worst people as well, Stacy. I am not lying”

“We should lynch such bastards, Kannan!”

“I am with you on this, Stacy. So the point is, it is not that all men understand “what men really are?”. There are some psychos living with us too”

"But you are a loveable SOB, Kannan!"

"Should I take you out for dinner for this compliment, Stacy?"

"Yeah, why not?"

"Your boyfriend might mind"

"Greg? I am going to dump him. I don think I am going to go out with him again"

"That is convenient"

"But we might have another problem. What do you think, Brindha?"

"Hey, leave me out of this, Stacy!" Brindha said.

"You dont mind if I go out with Kannan? LOL"

"You can sleep with him too if you wish!"

"LOL"

"I have to go now" Kannan left abruptly.

-to be continued

Saturday, October 10, 2009

குங்குமம்- நான் மிகவும் ரசித்த படம்!



சிவாஜி, எஸ் எஸ் ஆர், “ஊர்வசி” சாரதா, விஜயகுமாரி நடித்த படம்தான் இந்த குங்குமம். நிறையப்பேர் பார்த்திராத ரொம்ப பாப்புளர் ஆகாத ஒரு படம்னு நான் நம்புறேன். அந்தக்காலத்தில் இது ஒரு வெற்றிபடம்கூட இல்லை என்கிறார்கள். ஆனால் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். மறுபடியும் இன்னும் ஒரு முக்கோணக் காதல்!

இயக்கம்: கிருஷ்ணன் - பஞ்சு, இசை: கே வி மஹாதேவன், பாடல்கள்: கண்ணதாசன்

* பாடல் (1) குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம் (டைட்டில் பாடல்)

சிவாஜி, விஜயகுமாரிக்கு முறைப்பையன். இருவருக்கும் ஒரு பாடல் வரும். ஆனால் சிவாஜி விஜயகுமாரியை காதலிப்பதாக காட்டமாட்டார்கள்.

* பாடல் (2) பூந்தோட்டக்காவல்க்காரா பூப்பறிக்க இத்தனை நாளா? (விஜயகுமாரிக்கும் சிவாஜிக்கும் இந்தப்பாடல்).

இந்தப்பாடல்மூலம் சிவாஜியை சீக்கிரம் தன்னை மணந்து கொள்ள சொல்லுவார் விஜயகுமாரி. :)

இந்த சூழ்நிலையில் திடீர்னு ஒரு நாள் ஒரு கொலை நடக்கும். அங்கே போய் பார்த்தால் எஸ் வி ரங்காராவ் கொலை செய்ததாக காட்டப்படும். அங்கே எதார்த்தமாகப் போகும் சிவாஜி “நீங்களா!!!” என்று ஆச்சர்யப்பட்டு, ரங்காராவை அங்கிருந்து அனுப்பிவிட்டு தான் கொலைப்பழியை ஏற்றுக்கொண்டு கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க மாறுவேடம் பூண்டு திரிவார். படத்தில் க்ளைமேக்ஸ் வரைக்கும் மாறுவேடத்தில் சிவாஜி இருப்பதுதான். உண்மையான கொலையாளி யார் என்பதும் முடிவில் சொல்லப்படும்.

சிவாஜி பல வேஷங்கள் போடுவார்- போலிஸை ஏமாற்ற. ஒரு முறை பெண் வேடத்திலும் வருவார். இவரை தேடி கண்டுபிடிக்க அமர்த்திய போலிஸ் அதிகாரி நம்ம எஸ் எஸ் ஆர். சிவாஜியை வலை வீசித்தேடுவார்.

இதிலே சிவாஜி போடும் ஒரு வேடம்தான் சிவாஜி ஒரு வாத்தியாராக வருவது. சாரதாவின் தம்பிக்கு வாத்தியாராக வந்து வீட்டுடன் தங்கி இருப்பார். இது சாரதாவின் முதல் தமிழ்ப்படம் என்று சொல்கிறார்கள். ஸ்லிம்மா ரொம்ப அழகாவே இருப்பார் சாரதா. இவருடைய தந்தையாக சகஸ்ரநாமம் நடித்து இருப்பார். இவர் ஒரு நீதிபதி. சாரதாவுக்கு கல்யாணம் நிச்சயப்பட்டிருக்கும், அவருடைய ஃபியாண்ஸே எஸ் எஸ் ஆர்.

தன் மகள் சாரதாவுக்கு சகஸ்ரநாமம் நல்ல ஃப்ரீடம் கொடுப்பார். இப்படி கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கும் சூழ்நிலையில், சிவாஜி, வாத்தியார் வேடத்தில் சாரதா தம்பிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருவார். சிவாஜி- சாரதா இண்டெராக்ஷன் ஜாலியா இருக்கும்.

கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட Sharadha will fall in love with Shivaji. She can't control herself in falling in love with shivaji knowing that she is engaged to SSR. ஆனால் சிவாஜி ஒரு குற்றவாளி, அதுவும் கொலைக்குற்றவாளினு தெரியாது.

உண்மை நிலவரம் தெரிந்த சிவாஜி, சாரதாவை புறக்கணிக்கவும் முடியாது, தன்னை கொலைக் குற்றவாளினு சொல்லவும் முடியாது. இந்த சூழ்நிலையில் எஸ் எஸ் ஆரும் அவர் வருங்கால மனைவியைப் பார்க்க, ஜொள்ளுவிட அடிக்கடி வருவார். மாறுவேடத்தில் இருக்கும் கொலைக்குற்றவாளி சிவாஜியிடம் இவருக்கும் பரிச்சயம் ஏற்படும். சிவாஜிக்கும் எஸ் எஸ் ஆருக்கும் ஒரு சின்ன விவாதம் நடக்கும். இருவருக்கும் இடையில் சும்மா தமிழ் விளையாடும். ரெண்டு பேரும் இலக்கியத்தமிழ் பேச்சிலும், வாதத்திலும், தமிழ் உச்சரிப்பில் கிளப்பிவிடுவார்கள்.

நிச்சயிக்கப்பட்ட சாரதா சிவாஜியை விரும்புவது, சிவாஜி அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதேசமயத்தில் அவரை காதலிக்காமல் இருக்க முடியாது என்கிற நிலைமை இந்த இரண்டு பாடல்களில் அழகா தெரியும்.

பாடல் 3) (சாரதா சிவாஜியை காதலிப்பதை சொல்லுவார். சிவாஜி அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தயங்குவார்)

படம் : குங்குமம்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : கே.வி.எம்.
நடிகர்கள் : சிவாஜி, சாரதா

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு (தூங்காத)

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவையென்று ஒன்று (தூங்காத)

யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று ஒன்று (தூங்காத)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று (தூங்காத)

நன்றி: சந்த்ரு
-----

பாடல் 4) சிவாஜி, சாரதாவுக்கு தன்னிலைமை விளக்க முயன்று, அவர் காதலை ஏற்றுக்கொள்ள தன்னால் முடியாது என்பதுபோல பாடுவது.

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்பச் சிறையில் மலைந்த மலர் நான்

நானே எனக்குப் பகையானேன் - என்
நாடகத்தில் தான் திரை ஆனேன்
தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது

விதியும் மதியும் வேறம்மா - அதன்
விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா - என்
வழி மறைத்தாள் விதியம்மா

-------------

கடைசியில் சிவாஜிதான் குற்றவாளி, மாறுவேடத்தில் இருக்கிறார், மற்றும் தன் ஃபியாண்ஸியும் அவரைக் காதலிக்கிறார் என்று அறிந்த எஸ் எஸ் ஆர் சிவாஜியை அரெஸ்ட் செய்ய வருவார்.

இந்த சூழ்நிலையில், சாரதா ஒரு பாட்டுக்கச்சேரியில் பெர்ஃபார்ம் பண்ணுவார். சிவாஜியை தன் பெர்ஃபாமெண்ஸ்க்கு அழைத்து இருப்பார் சாரதா. சிவாஜி, சாரதாவின் அழைப்பை ஏற்று அவர் பெர்ஃபார்ம் செய்யும் பாட்டுக்கச்சேரியில் வந்து சிறப்பு பார்வையாளராக அமர்ந்திருப்பார். சாரதா ஒரே குழப்பத்துடனும் பதஸ்தத்துடனும் இந்தப் பாடலை பாடுவார் (எஸ் எஸ் ஆருக்கு சிவாஜி யாருனு தெரிந்துவிட்டது என்பதால்)

பாடல் 5) * சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா என்கிற அருமையான பாடல் பாடுவார்.

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

உலகம் தெரியவில்லை... உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை... உலகம் தெரியவில்லை

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி... ஆ..ஆ..
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி
அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி.
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

வாசல் ஒன்றிருக்கும்.... வாசல் ஒன்றிருக்கும்
ஆசை கொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும்.... வாசல் ஒன்றிருக்கும்
ஆசை கொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும்

கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி..
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
---------------

மேடையில் இசைக்குழுவினருடன் பாதிப்பாடல் பாடும்போதே தன் குழப்ப மனநிலையில் இவர் பாடமுடியாமல் ஸ்டக் ஆகிவிடுவார். “உலகம் தெரியவில்லை.. ஒன்றும் புரியவில்லை”னு கீறிய ரெக்கார்ட் மாதிரி பாடுவார். இவர் சோலோவாக பாடவேண்டிய பாடல் இது. ஆனால் குழப்பத்தில் ஸ்டக் ஆகி விடுவார். பார்வையாளராக இருந்த சிவாஜி, நிலைமையை சமாளிக்க “மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி” என்று இவருக்கு பாடல்வரி எடுத்துக்கொடுத்து பாட ஆரம்பித்து பாடிக்கொண்டே மேடையில் போய் அமர்ந்து சாரதாவுக்கு உதவுவார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து இந்தப்பாட்டைப் பாடுவார்கள். I just loved that scene!

அப்புறம், எஸ் எஸ் ஆர் அங்கே வந்தவுடன், சாரதா மேடை விளக்கை அணைத்துவிடுவார். சிவாஜி தப்பி ஓடிவிடுவார். எஸ் எஸ் ஆர் சாரதாவை கொலைகுற்றவாளிக்கு உதவியது தப்பு என்று கடிந்துகொள்வார்.

கடைசியில், ரங்காராவ் சிவாஜியின் தந்தை என்பது சொல்லப்படும். ரங்காராவ் கொலைக்குற்றத்தில் தூக்குக்குப் போனால் தன் தாயின் குங்குமம் போக நேரிடும் என்கிற செண்டிமெண்ட் தான் படத்தின் “டைட்டில்”.

உண்மையில் ரங்காராவும் கொலை செய்து இருக்க மாட்டார். அதனால் கடைசியில் உண்மையான குற்றவாளியை பிடித்து விட்டு, சிவாஜியையும், ரங்காராவையும் விடுதலை செய்வார்கள். சிவாஜி-சாரதா திருமணம் முடியும் (?) நு நினைக்கிறேன்.

The best part in this movie is, Sharadha-Shivaji love scenes. Songs! :))

Friday, October 9, 2009

தமிழ் இலக்கியத்துக்கு நோபல்- சாருவா? ஜெயமோவா?

தமிழன் வேதியிலில் நோபல் பரிசு வாங்கியாச்சு! இயற்பியலில் ரெண்டு நோபல் பரிசுகள் வாங்கியாச்சு. பெங்காளியைவிட, ஏன் ஹிந்திக்காரன், மலையாளி, ஆந்திராக்காரன், கன்னடிகா எல்லோரையும் விட தமிழன் அறிவியலில் பெருசா சாதிச்சுட்டான்னு நம்ம சொல்லிக்குவோம்.

இப்போ அறிவியலில் சாதிக்கனும்னா அதற்கான ஆய்வுக்கூடம் வேணும். பணம் வேணும். பணம் இல்லைனா, நல்ல அறிவியற்கூடம் இல்லைனா அறிவியலில் ஒண்ணும் பண்ண முடியாது. அதனால தமிழன் இந்திய பிரஜையைத் துறந்து, வேற நாட்டில் இருந்துதான் ரெண்டு நோபல் பரிசு வாங்கி இருக்கார்கள். இராமனைத்தவிர மற்ற இருவரும் இந்தியர்கள் அல்ல! ஆனால் தமிழர்கள்.

இப்போ இலக்கியத்தில் ரவீந்திரநாத் தாகூர் ஒரு நோபல் பரிசு வாங்கிட்டாரு. அதனால பெங்காளிகள் இலக்கியத்தில் நோபல் பரிசு வாங்கிவிட்டார்கள். மேலும் இலக்கியத்தில் சாதிச்சு நோபல் வாங்க பணம் தேவையில்லை. பெரிய வசதிகள் எதுவும் தேவையில்லை. ஆனால் ஒருவர் சிறந்த படைப்பாளியா மட்டும் இருக்கனும். ஏழையா இருந்தாலும் அறிவாளியா, க்ரியேட்டிவா இருந்தால், நோபல் பரிசு இலக்கியத்தில் வாங்கிவிடலாம்.

அதனால என்ன சொல்ல வர்றேன்னா நம்ம சாரு நிவேதிதா, கமலஹாசனைப்பத்தி விமர்சிக்கிறதுலையும், உலக சினிமா பத்தி பேசுறதுலயுமே நேரத்தை கழிச்சு, சும்மா அரை டவுசர்களிடம் வலையுலக சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கியே எவ்வளவு நாள்தான் ஓட்டப்போறாரோ? என்னைக்கேட்டால் பெருசா அவர் ஏதாவது உலக இலக்கியத்தில் சாதிக்கனும். உலக சினிமா பத்தி எத்தனையோ பேசும் இவர் உலக இலக்கியம் பத்தி பேசனும். பேசி, இவருடைய சிந்தனைகளை, ஆக்கத்தை படைப்பை வைத்து தமிழ் இலக்கியத்தில் நோபல் பரிசு வாங்கிய முதல் தமிழனா ஆகனும்!

அதேமாதிரி நம்ம ஜெயமோகனும், சும்மா ஒரு நோபல் பரிசுகூட வாங்காத மலையாளிகளை தமிழர்கள் ரோல் மாடலா நெனைக்கனும்னு சொல்லாமல், மலையாளிகள், தெலுங்குக்காரங்க, கன்னடக்காரங்க எல்லாம் தமிழர்கள்போல் அறிவியலில் நெறையா சாதிச்சு நோபல் பரிசு வாங்கனும்னு ஒரு கட்டுரை எழுதனும்.

அப்புறம் ஜெயமோகன் சும்மா இந்த பொணம் திங்கிற அஹோரிச்சாமியார் களை எல்லாம் பத்தி ஆராய்ச்சி பண்ணாமல், அதையெல்லாம் பத்திக் கவலைப்படாமல், எதாவது இலக்கியத்தில் பெருசா சாதிச்சு தமிழ் இலக்கியத்தில் ஒரு நோபல் பரிசு வாங்கி பெருசா சாதிக்கனும். நான் தமிழ்ல எழுதினாலும் பிறப்பால் நான் ஒரு மலையாளினு உலகத்துக்கு சொல்லனும்னு நான் தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்.

பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு "கொடுக்கப்பட்டது"!!!


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நோபல் அமைதி பரிசு வென்றுள்ளார்! நம்ம ஜார்ஜ் புஷ்க்குத்தான் ஒபாமா நன்றி சொல்லனும். அவர்தான் ஒபாமாவை "அமைதி விரும்பி" போல காட்ட உதவிசெய்துள்ளார்!

நெறையப்பேர் இதைக்கேட்டு அதிர்ந்து போயிள்ளார்கள். ஒபாமாவுக்கு நோபல் பரிசு பெற இன்னும் தகுதி வரவில்லை என்றே பல நாட்டுத்தலைவர்களும் சொல்கிறார்கள்.

நோபல் கம்மிட்டி சொல்வது இத்தான்!

The Norwegian Nobel Committee said it gave the prize to Obama for his "efforts to strengthen international diplomacy," his "vision of and work for a world without nuclear weapons" and for inspiring hope and creating "a new climate in international politics."



என்னுடைய தனிப்பட்ட்ட கருத்து, He did not EARN it. He has been "given". May be he will bring peace because he has been given that award!

Thursday, October 8, 2009

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

நம்ம ஊர் பக்தர்கள் எல்லாம் என்னமோ அவர்களை கீழே கொண்டுவரனும் என்கிற ஒரே காரணத்துக்காக பெரியார்தான் இருக்கிற கடவுளை இல்லைனு சொல்லி, கடவுள் நம்பிக்கையை ஒழிக்க முயன்றதாக நினைக்கிறார்கள். சமீபத்தில் எடுத்த ஒரு “சர்வே” படி ஜப்பான் நாட்டில் 60-65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. வியட்நாமில் 81% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஐரோப்பாவில் உள்ள முன்னேறிய பெரிய நாடுகளில் 40-50% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஜப்பானியர்கள் கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ள அமெரிக்காவையோ (அதிசயம்! அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிகக் குறைந்த விழுக்காடுகள்) அல்லது இந்தியாவையோ விட எந்த வகையிலும் குறையவில்லை. உழைப்பிலும் சரி, டெக்னாஜிலும் சரி, அறிவியலிலும் சரி, தத்துவங்களிலும் ஜப்பானியர்கள் யாருக்கும் என்றும் இளைத்தவர்கள் அல்ல!

கடவுள் பக்தியில்லாமல் மனசாட்சியுடன் நடந்து அறிவியலில் சாதிக்கலாம், சந்தோஷமாக வாழலாம், கடின உழைப்பும் உழைக்கலாம் என்பதை நாம் இதிலிருந்து உணரவேண்டும். ஒருவருடைய மத, கடவுள் நம்பிக்கையும், அவர்களுடைய சாப்பிடும் உணவுவகைகளும் ஒருவருக்கு அறிவையோ, திறமையையோ கொடுப்பதில்லை என்பதை நாம் தெரிந்துகொண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் சாதிக்க முடியும் என்கிற மூட நம்பிக்கை யிலிருந்து நாம் விடுபட வேண்டும்.


ஏன் ஜப்பானியர்களை கொண்டுவந்து வாதம் பண்ணுகிறேன் என்றால், அவர்களிடம் சாதி கிடையாது, தாழ்வு மனப்பாங்கு கிடையாது, மேலும் அவர்கள் சாதனைகள் நாமறிவோம்.

கமலுக்கு பாஷா கண்டனம்!!!



சென்னை, அக்.8: உன்னைப் போல் ஒருவன் படத்தின் கதை தொடர்பாக நடிகர் கமலஹாசனுக்கு எஸ்.ஏ.பாஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமல் நடிப்பில் "உன்னைப்போல் ஒருவன்" திரைப்படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் பாஷா அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

வன்முறைக்குக் காரணமானவர்களை கொல்வதில் தவறில்லை என்கிற கருத்தின் அடிப்படையில் கதையை அமைத்திருப்பதன் மூலம் சட்டத்தை தன் கையில் கமல் எடுத்துக் கொண்டிருக்கிறார் என அந்தக் கடிதத்தில் பாஷா குறிப்பிட்டிருக்கிறார்.

கோவை குண்டுவெடிப்பில் தண்டனை பெற்றுள்ள என்னைப் போன்றவர்கள் அமைதிவழியில் தீர்வுகாணத் திட்டமிட்டிருக்கும்போது, வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்கிற ரீதியில் படம் எடுக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், இதுபோன்ற படத்தை எடுக்கும்போது தம்மைப் போன்றவர்களிடம் ஆலோசித்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வன்முறைக்கு உண்மையிலேயே காரணமானவர்களைக் குறிப்பிட்டுப் படமெடுக்க கமலுக்குத் துணிவுண்டா எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

-நன்றி தினமணி

Wednesday, October 7, 2009

ஏன்டி ரொம்ப பிகு பண்ணிக்கிற? -கடலை கார்னர் (25)

பிருந்தா தன் வாய்ஸ் மெசேஜெஸ் செக் பண்ணினாள். புதுசா ஒரு ஐந்து மெசேஜெஸ் இருந்தன.

"ஹாய் பிருந்தா! ஏன்டி ரொம்ப பிகு பண்ணிக்கிற? உன்னிடம் ஒரு முக்கியமான ரகசியம் சொல்லனும்! ப்ளீஸ் கால் பண்ணுறியா?"

"ஹாய் பிருந்து! என் செல்லம் இல்லயா நீ? என ராணி இல்லையா நீ! உன்னைய எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா? ப்ளீஸ் கால் ரிட்டர்ன் பண்ணுடா"

"ஏய் பிருந்து! இந்த காலை ரிட்டர்ன் பண்ணினால் உனக்கு "அந்த இடத்தில்" முத்தம் கொடுப்பேன். வேண்டாம்னா போ!"

"பிருந்தா! ஏண்டி என் உயிரை வாங்கிற? நல்ல பெண்ணா லட்சனமா என் காலை ஒழுங்கா ரிட்டர்ன் பண்ணு, ப்ளீஸ்!"


"ஏய் பிருந்தா செல்லம்! ஏன்டா இப்படி இதயமே இல்லாமல் இருக்க? உன் குரலைக்கேக்க ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு! என காலை ரிட்டர்ன் பண்ணுடா, ப்ளீஸ்!"


ஐந்து மெசேஜெஸ்சும் கண்ணனிடம் இருந்துதான் வந்திருந்தன. அதுவும் தொடர்ந்து!. அவைகளை பல முறை கேட்டு ரசித்தாள் பிருந்தா. அவளுக்கு கண்ணன் குரல் ரொம்ப பிடிக்கும்.

"கால் பண்ணிடுவோமா?" என்று யோசித்தாள். அப்புறம் "நல்லாதானே இருக்கார், என்ன அவசரம்?" என்று தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். அவளுக்கு கண்ணன் மெசேஜெஸ் ரொம்ப ரொம்ப பிடிச்சது.

அடுத்த நாள் முழுவதும் கண்ணனை பார்க்காமல் அவாய்ட் பண்ணிட்டாள் பிருந்தா. அன்னைக்கு ஈவெனிங் செல் ஃபோனை ஆஃப் பண்ணி வச்சுட்டாள். ஆணாகி இருந்தால் எடுத்து விடுவோமோனு பயம் அவளுக்கு!

ஒரு 10 மணிப்போல மறுபடியும் செல் ஃபோனை ஆண்பண்ணி மெசேஜெஸ் செக் பண்ணினாள்.

"வர வர ரொம்பத்தான் உனக்கு கொழுப்பு அதிகமாகிறது! என்ன இன்னைக்கு காண்டீன்ல் கூட ஆளையே காணோம்? உன்னை என்ன பண்ணலாம்? பேசத்தான் மாட்ட சரி? உன்னை நான் பார்க்கக்கூடக் கூடாதா? இதெல்லாம் அநியாயம். மீதிய அடுத்த மெசேஜ்ல கேளு! கொஞ்சம் செக்ஸியா இருக்கும்"

"ஏய்! நீ ஒளிந்தால் நான் என்ன உன்னை பார்க்க முடியாதா? நீ இன்னைக்கு போட்டிருந்த அந்த க்ரீன் கலர் ஸ்கேர்ட்டும், டாப்ஸ்ம் உனக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு, பிருந்தா! உள்ளேயும் அதே கலர்தானா? என்ன வெட்கம்? இன்னைக்கு ரொம்ப அழகா இருந்த அந்த அவுட் ஃபிட்ல. ஆனால் நீ ட்ரெஸே போடாமல் இருந்தால் அதைவிட அழகா இருப்ப தெரியுமா? எனக்கு எப்படி தெரியும்னு கேக்கிறயா? நான் கற்பனையில் உன்னை அப்படிப் பார்த்தேன். நீ பிறந்த மேனியா இருக்கும்பொது ரொம்ப ரொம்ப அழகுடி என் செல்லம்!"

இந்த மெசெஜை கேட்டதும் அவள் முகம் சிவந்துவிட்டது. கடைசி மெசேஜயும் கேட்டாள்.

"ஃபோனை பிக் அப் பண்ணி என்னோட ஒழுங்கா பேசலைனா இப்படித்தான் இருக்கும் என் மெசேஜெஸ்! என்ன மெசேஜெஸ் ரொம்ப பிடிக்குதா? என்ன சிரிப்பு?"


"ச்சீ கண்ணன் ரொம்ப ரொம்ப மோசம்" என்று சொல்லிக்கொண்டாள், பிருந்தா. ஆனால் அந்த மெசேஜைசை 10 தர திரும்ப திரும்ப கேட்டாள்.

அடுத்த நாள், காண்டீன்ல பிருந்தா, ஸ்டேசியுடன் உட்கார்ந்து இருந்தாள். கண்ணன் போய் எதிர்புறமாக் உட்கார்ந்தான்.

"What's up Stacy?"

"Kannan! at least say, "Hi" to Brindha! Just a "hi"!"

"ஹாய் பிருந்தா!" என்றான் கண்ணன் அப்பாவி போல.

பிருந்தா, "ஹாய்" னு சொல்லும்போதே சிரித்துவிட்டாள்.

"What is so funny, Brindha?"

"Nothing. I have to go now" பிருந்தா சிரித்துக்கொண்டே எழுந்து ஓடிவிட்டாள்.

"What are you looking at Kannan!"

"Tell her she has a nice butt!"

"LOL"

"Please do tell her"

"Why did not you tell her that?"

"I will tell her after four days"

"I don't think you guys are really mad at each other. You guys are playing some sort of game"

"Why do you think so?"

"I can see her face. She is very happy to see you!"

"I cant understand women, Stacy"

"I think you do, Kannan"

"What do you mean?"

"You know what I mean. You are a BIG liar"

"May be I am. Thanks for the "conduct certificate"

"LOL" OK I will see you later, Kannan!"

-தொடரும்

வேதியிலில் தமிழனுக்கு நோபல் பரிசு!




LONDON: He may have migrated to the US long back, but Indian-American Venkatraman Ramakrishnan on Wednesday made a billion people back home proud
by winning the Nobel Prize for Chemistry for his pioneering work on ribosome, a cellular machine that makes proteins.

57-year-old Ramakrishnan, born in the temple town of Chidambaram in Tamil Nadu, is the seventh Indian or of Indian origin to win the prestigious award.

Born in 1952, Ramakrishnan earned his B.Sc. in Physics (1971) from Baroda University in Gujarat and later migrated to the US to continue his studies where he later got settled and attained US citizenship.

He earned his Ph.D in Physics from Ohio University in the US and later worked as a graduate student at the University of California from 1976-78.

During his stint at the varsity, Ramakrishnan conducted a research with Dr Mauricio Montal, a membrane biochemist and later designed his own 2-year transition from physics to biology.

As a postdoctoral fellow at Yale University, he worked on a neutron-scattering map of the small ribosomal subunit of E Coli. He has been studying ribosome structure ever since.

Tuesday, October 6, 2009

அவன் என் அம்மாவைப் பத்தி தப்பா பேசினான்!

அந்தப் பையன் பேர் முனியசாமி. வயசு ஒரு 16 இருக்கும். நாலாவதிலேயே படிப்பை நிறுத்திவிட்டார் அவன் அப்பா, கருப்பையா. அவர் வச்சிருக்க மூங்கில் மரம் போன்றவை விற்கும் கடையில் அவந்தான் எல்லாம். யாரோடையும் சரியாக்கூட பேசமாட்டான். எல்லாரும் அவனை “மெண்டலு” நுதான் பின்னால பேசுவானுக. அவனுக்கு அவன் “அம்மாவை” பத்தி என்ன சொன்னாலும் பயங்கர கோபம் வரும்.

கருப்பையா கடைக்கு அநியாய வட்டிக்கடை “சண்டியர் சந்திரன்” கருப்பையாவைத் தேடி வந்தார்.

“வாங்க சந்திரன்! அடுத்த மாதம் தர்றேங்க பணம்!” என்றார் கருப்பையா.

“இல்லங்க, இப்போ பணம் வேணும்” என்றார் சந்திரன்.

சந்திரன் அந்ததெருவிலே பெரிய சண்டியர். அவர்ட்ட வட்டிக்கு வாங்கிவிட்டு அது இதுனு ஏமாத்த முடியாது. யாரையும் துண்டைப்போட்டு தெருவில் இழுத்து வட்டிப்பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவார். ஆள் வாட்ட சாட்டமா இருப்பார். கருப்பையா, இவரைவிடவயதில் மூத்தவர் ஆனா ரொம்ப சின்ன தேகம் அவருக்கு.

“சொல்றேன் இல்லை சந்திரன், இப்போ பணம் இல்லப்பா! வேணும்னா கல்லாவ வந்து பாரு! வச்சுக்கிட்டா இல்லனு சொல்றேன்”

“நீங்க என்ன பண்ணுவீங்கனு தெரியாது அண்ணே. எனக்கு இப்போ பணம் வேணும்!”

“சொல்றேன் இல்லப்பா!”

“யோவ்! நானும் சொல்றேன்ல? சோத்துக்கு உப்புப் போட்டுதானே சாப்பிடுற?”

“என்னப்பா சந்திரா மனுஷனுக்கு மனுஷன் இதுகூட!”

“என்னயா மனுஷன் நீ! இந்த பொழைப்புக்கு...”

************************************

2 மணி நேரம் சென்று அந்த ஊர் போலிஸ் ஸ்டேஷன்ல

“உன் பேரு?”

“முனியசாமி சார்”

“அப்பா பேரு?”

“கருப்பையா”

“ஏண்டா இப்படி செய்த?”

“என் அம்மாவைப் பத்தி தப்பா பேசினான் அந்த ஆளு. கையில் இருந்த கத்தியை வச்சு சொருகினேன்! இனிமேல் பேசுவானா, அவன்?”

“அதுக்காக? அவர் ஆஸ்பத்திரியில் இருக்கார்டா. பொழப்பாருனு தெரியலை. இப்படியா செய்வாக?”

“சாகட்டும்! என் அம்மாவைப்பத்தி தப்பாப் பேசினால் அப்படித்தான் குத்துவேன்!'

“இவனை உள்ளே போடுங்கப்பா!

*****************************

“என்னடா ஆச்சு, ராமா?”

“அந்த மெண்டலுப்பய “முனி” குத்திப்புட்டான்ப்பா நம்ம சந்திரன் அண்ணனை!”

“நம்ம சண்டியர் சந்திரனையா! அந்த ஆளு 4 பேரை வெட்டுவானே”

“உண்மைதான். திடீருனு கத்தியை எடுத்துப்போய் சொருகிட்டான் அந்த மெண்டலு. வயித்துல குத்திப்புட்டான்ப்பா. உள்ளே ஈரக்கொலைய காலிபண்ணிட்டான் போலே. அண்ணே போய் சேர்ந்துட்டாரு!”

“என்னதாண்டா அப்படிச் சொல்லிப்புட்டாரு சந்திரன்?”

“வட்டிப்பணம் வாங்கப் போகும்போது அவர்தான் தாறுமாறா பேசுவார் இல்ல?”

“அந்த மெண்டலு குத்துற அளவுக்கு என்ன எழவைச்சொன்னான் மனுஷன்?”

“கருப்பையா அண்ணன் ட்ட “இதுக்கு உன் பொண்டாட்டியை கூட்டிக்கொடுக்கலாம்” னு சொல்லி இருக்காரு! அந்த மெண்டல் உள்ளே இருந்து ஓடி வந்து “என்னடா சொன்ன என் அம்மாவைனு” சொருகிட்டான்”

“நாசமா போச்சு போ! இனி மேல் அவனைக் கொன்னாத்தான் என்ன? அண்ணன் சந்திரன் திரும்பி வரமாட்டாரு!”

இருவர் உள்ளம்- திரை விமர்சனம்


சிவாஜி - சரோஜாதேவி நடித்த ஒரு க்ளாசிக். திரைக்கதை வசனம்: கலைஞர் கருணாநிதி. பெண் மனம் என்கிற லக்‌ஷ்மியுடைய கதையை திரைப்படமாக எடுத்த படம்தான் இது. கதை. படத்தைவிட நல்லாயிருக்கும். ஆனால் முத்தான கண்ணதாசன் எழுதிய பாடல்கள் கதையில் இல்லை. இயக்கம்: எல் வி ப்ரசாத் இசை: கே வி மஹாதேவன், பாடல் வரிகள்: கண்ணதாசன்.

இந்தக் கதையைத் தழுவி நெறையப்படம் இப்போ வந்திருக்கிறன. ஒண்ஸ் மோர் நு ஒரு விஜய் படம் இந்தக்கதையை சேர்த்து வந்ததால் இந்தப்படம் யங்கர் ஜெனெரேஷனுக்கும் ஓரளவுக்குத் தெரியும். மெளனராகம் கதைகூட ஒரு மாதிரி இந்தக்கதை மாதிரித்தான்னு சொல்லலாம். இன்னும் நெறையப் படங்கள் இந்தக் கதையைத் தழுவி வந்து இருக்கின்றன.

கதை என்னனா, சிவாஜி ஒரு ப்ளே பாய். பணக்காரன், ஊர் சுற்றிக்கொண்டு பல பெண்களுடன் பழகிக்கொண்டு, உறவு வைத்துக்கொண்டும் இருப்பவர்.

* 1) பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

என்கிற பாடல்மூலம் இவர் லீலைகள் சொல்லப்படும். இவருடைய நண்பன் பாலாஜியும் இதே ரகம்தான். ரெண்டு பேரும் அழகான எந்தப்பெண்னையும் விடுவதில்லை. சும்மா சுத்த வேண்டியது கழட்டி விடவேண்டியது.

இந்த மாதிரியான ஜாலியான் சிவாஜி வாழ்க்கையில் திடீர்னு ஒரு பெண் வந்துவிடுவாள் சிவாஜி, ஒரு ஏழை டீச்சர், சரோஜாதேவியை எதேச்சையாக சந்திப்பார். எந்தப்பெண்ணையும் விடாத சிவாஜி இவரையும் காதலிக்க ஆரம்பித்துவிடுவார். திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவார். தான் பணக்காரன், அழகா இருப்பவன், தன்னை ஆசையுடன் சரோஜாதேவி மணந்துகொள்வார் என்று அவர் போடும் கணக்கு தப்புக்கணக்காகிவிடும்.
சரோஜாதேவிக்கு அவரையும் அவர் நடத்தையும் சுத்தமாக பிடிக்காது. சரோஜாதேவின் அப்பா, ”அய்யா தெரியாதையா” ராமாராவ். அவர் ரெண்டாந்தாரம் ஒரு இளம் மனைவியை கல்யாணம் செய்துகொண்டு மகள் சரோஜாதேவியிடமும் அக்கறையுடன் இருப்பார்.

சிவாஜியின் ஆசையை சரோஜாதேவியிடம் சொல்லிப் பார்ப்பார். சரோஜாதேவி, சிவாஜியை மணப்பது முடியவே முடியாது என்று உறுதியாக சொல்லிவிடுவார். சிவாஜி, எப்படியாவது அவரை மணந்தே ஆகனும்னு நிப்பார்.

ஒரு நாள் சிவாஜி தன் தங்கைக்கு ட்யூசன் சொல்லிக்கொடுக்க என்று பொய்சொல்லி சரோஜாதேவியை வீட்டில் யாரும் இல்லாத நேரம் அழைத்துவருவார். வீட்டில் யாரும் இருக்கமாட்டாங்க என்பதால் தன் விருப்த்தை, சரோஜாதேவியை மணம்முடிக்க ஆசை என்று மறுபடியும் நாகரீகமாகத்தான் சொல்லுவார். சரோஜாதேவி அவரை கண்ணா பின்னானு திட்டி அனுப்பிவிடுவார். ஆனால் எதார்த்தமாக வீட்டிற்கு திரும்பிவந்த சிவாஜி லிலேடிவ்ஸ் அவர்கள் சூழ்நிலையை தவறாக பலர் புரிந்துகொள்வார்கள். சரோஜாதேவியும் சிவாஜியும் விரும்பிப் பழகுவதுபோல் நினைத்து இவர்கள் உறவு ஊருக்குத்தெரியும். பிரச்சினை வேறு கோணத்தில் மாறும்.

சிவாஜி அப்பாவாக ரங்காராவ். ஒரு ஜட்ஜ். அம்மா வா நடிச்சது யார்? கண்ணாம்பாவா? எம் வி ராஜம்மாவா? இல்லை ஜெ ஜெ அம்மா சந்தியாவா? தெரியலை . சிவாஜி ஒரு வழியா தன் அம்மாவை கண்வின்ஸ் பண்ணி, அப்பாவுடைய "அர்ச்சனை" களுடன், அண்ணன் (நடிகவேள்) ஆசியுடன் சரோஜாதேவியை மணம் முடித்த்துக்கொள்வார்.

ஆனால், கல்யாணம் ஆன பிறகும் சரோஜாதேவி அவரை அடியோடு வெறுப்பார். இருவருடைய தாம்பத்ய வாழ்க்கையும் நரகமாகப் போகும். சிவாஜி, நல்லவராக திருந்தினாலும் அவரை நம்பமாட்டார் சரோஜாதேவி.

என் நண்பர் ஒருவர் சொன்னார், அவர் அப்பாவுடன் கல்யாணம் ஆன கொஞ்ச நாள் அவரோட அம்மா பேசவே இல்லையாம். அழுதுகொண்டே இருந்தாங்களாம். ஏன் னா அவங்க அப்பா "கருப்பா" இருக்கிறார் என்பதால்! ஆனால், Later, his mom learned to appreciate his dad. We see this in our culture, then, now and in the future too. இதுபோல் நெறைய கேஸ் நம்ம கலாச்சாரத்தில் பார்க்கிறோம். We learn to appreciate what we got and grow up!


சிவாஜி, முதலிரவில் பாடும் பாடல்

* 2) கண்ணெதிரே தோன்றினாள், கனிமுகத்தைக் காட்டினாள். நேர் வழியில் மாற்றினாள்.

இந்தப்பாடல் முடிந்தவுடன், சரோஜாதேவி அழுவார். சிவாஜி தன்னை ஃபோர்ஸ் பண்ணி மணந்துகொண்டார் என்று குற்றம் சாட்டுவார். சிவாஜிக்கு தன் கணக்கு தப்பு என்பது இப்ப்போத்தான் புரியும். ஹி வில் ஃபீல் கில்ட்டி.

அடுத்து வீட்டில் ஒரு விசேஷத்தில் எல்லாரும் இருக்கும்போது, சரோஜாதேவியை ஒரு பாட்டுப் பாடச்சொல்வார்கள்.

* 3) இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா?

அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே!
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே! ( படத்திலேயே பெஸ்ட் சாங் இதுதான்!) பாடலை அழுதுகொண்டே பாடுவார்.

இந்த பாடலின் வரிகளில் இருந்து (கண்ணதாசன்) சிவாஜி-சரோஜாதேவி உறவில் உள்ள பிரச்சினை, அப்போது அங்கே இருந்த சிவாஜியின் கண்டிப்பான அப்பா ரங்காராவுக்கு, மற்றும் எல்லோருக்கும் தெரிந்துவிடும். சிவாஜிமேல் எந்தவிதமான நல்லெண்ணமும் இருக்காது அவர் அப்பா ரங்காராவுக்கு. தன் மகன் பொறுக்கி என்று அவர் மேலெப்போதுமே வெறுப்பாத்தான் இருப்பார் ரங்காராவ்.

சரோஜாதேவி அப்பப்போ சிவாஜி மேல் கொஞ்ச நம்பிக்கை வந்து ஒவ்வொரு சமயம் நல்லா நடந்துகொள்வார். அந்த சூழ்நிலையில் இந்த இரண்டு டூயட் பாடல்கள் வரும்.

* 4) நதியெங்கே போகிறது கடலைத்தேடி

* 5) அழகு சிரிக்கிறது ஆசை துடிக்கிறது

ஒருமுறை சரோஜாதேவிக்கு ஜுரம் வந்து அவர் கஷ்டப்படும்போது சிவாஜியின் பணிவிடைகளைப் பார்த்து சரோஜாதேவி நெகிழ்ந்து அழுவார். அதையும் சிவாஜி தவறாகப் புரிந்துகொண்டு பாடும் பாடல்

* 6) ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய்?

மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதன் என்று புரிந்துவிடும்
ஊர் சுமந்து போகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும் (கண்ணதாசன் வரிகள்)

இந்தப்படத்தில் இன்னொரு சிறப்பு என்னனா, நடிகவேள், வித்தியாசமான ஒரு ரோல் ல நடித்து இருப்பார். சிவாஜியின் அண்ணன், நடிகவேள். ஒரு "வீணாப்போன" லாயராக நடித்து இருப்பார். இவருக்கு ஜோடி டி பி முத்துலச்சுமி. இவர்களுக்கு நெறைய குழந்தைகள் இருக்கும்.

* 7) ஆராரோ ஆராரோ இந்த அசட்டுப் பயபுள்ள ஆராரோ (ஏ எல் ராகவன்) என்கிற காமெடிப் பாட்டு இவர்களுக்கு.

கடைசியில் டிப்பிகல் நம்ம கல்ச்சரில் நடப்பதுபோல் திருமணம் முடிந்த பிறகு சிவாஜி திருந்திவிட்டார் என்று தெரிந்தவுடன், அவரை ஏற்றுக்கொள்ள ரெடியாவார் சரோஜாதேவி. ஆனால் ஒரு கொலைக்கேஸில் மாட்டிக்குவார்.
சிவாஜி, ஒரு தான் செய்யாத கொலையில் மாட்டிக்குவார். கொலை செய்தது டி ஆர் ராமச்சந்திரன். அதாவது சிவாஜியுடைய பழைய கேர்ள் ஃப்ரெண்டு (மணமானபிறகும்), மறுபடியும் அவரை உறவுக்கு அழைப்பார். சிவாஜி முடியாதுனு சொல்லியபிறகும் விடமாட்டார். தன் மனைவி நடத்தைமேல் கோபம் கொண்ட கணவர் டி ஆர் ராமச்சந்திரன் இவரை கொலை செய்துவிடுவார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்து சிவாஜியை இதில் ஃப்ரேம் பண்ணிவிடுவார்கள். சரோஜாதேவி சிவாஜியை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில் கொலைக்கேஸில் மாட்டிக்குவார்.

சிவாஜியின் தந்தை ரங்காராவ், நீதிபதி, சிவாஜிதான் கொலை செய்து இருப்பார் என நம்புவார். சிவாஜியின் அண்ணன், நடிகவேள்தான் கடைசியில் சிவாஜிக்காக வாதாடுவார்.

கடைசியில் கொஞ்சம் சினிமாட்டிக்கா, சிவாஜிமேல் முழு நம்பிக்கை கொண்டுவிட்ட சரோஜாதேவி போய் கொலையாளியை கண்டுபிடித்து கொண்டுவந்து அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து சிவாஜியை கொலைத்தண்டனையிலிருந்து காப்பாற்றுவார்.
சுபம்

Sunday, October 4, 2009

சேரனின் “குப்பை பொக்கிசம்” - விமர்சனம் (2)


“ஓவர் க்ரிடிசிஸம் உடம்புக்கு நல்லதில்லை! இந்தா பாரு, திட்டுறதை நிறுத்திவிட்டு படத்திலே ஏதாவது நல்லவிசயம் இருக்கத்தான் செய்யும். அதைச் சொல்லலாம் இல்லையா?”

“ஜானகி ராமனின் மரப்பசு நாவலை ஹீரோயினை படிக்கச் சொல்லுகிறார், சேரன்”

“ஏன் படிக்கனும்னு சொல்றாரா?”

“அதையும் சொல்லி இருக்கலாம். சேரனே படிச்சாரோ என்னவோ ”

“இதெல்லாம் ரொம்ப அதிகமா இல்லையா?”

“எனக்கு அப்படித்தான் தோனுது. சரி விடு”

“ஹீரோயின் பத்மப்ரியா எப்படி?”

“தேர் வாஸ் சம்திங் மிஸ்ஸிங் இன் ஹெர் ஃபார் பீயிங் எ இஸ்லாமிய பொண்ணு”

“வாட் இஸ் தட்?”

“ஐ டோண்ட் நோ ”

“சரி அப்புறம் கதை எப்படி முடியுது?”

“Somehow I don’t think any wife will be able to live with Husband’s past love life. இதில் சேரன் மனைவியாக வருபவர் கணவன் காதல் வாழ்க்கையை சரியாக புரிந்து கொள்கிறார்னு சொல் கிறார்”

“There may be exceptions”

“Of course”

“அப்பா தன் காதலி நதிராவை பார்க்காமலே இறந்துவிடுகிறார். ஆனால் மகன் அவர் இருப்பிடம் கண்டுபிடிச்சு மலேசியா போய் அந்த கடிதங்களை கொடுக்கிறார். அவளுக்கு வயது ஒரு 59 இருக்கனும். பட் ஷி லுக்ஸ் லைக் ஷி இஸ் 80!”

“வயசான பத்மப்ரியா நடிப்பு எப்படி?”

“மேக் அப் பும் சரி, நடிப்பும் சரி சகிக்கலைப்பா!. She was a bad selection for this role. It is just too much for her”

“படத்திலே என்னதான் பிடிச்சது?”

“ஜோக்கூட கடி ஜோக்தான். சேரன் படுதோல்வி அடைந்துள்ளார்- எல்லாவகையிலும். ஆனால், விஜயகுமார் நடிப்பு நல்லா இருந்தது!”

“அப்பா! கடைசியில் ஒரு ஆளையாவது பாராட்டினயே!”

சேரனின் “குப்பை பொக்கிசம்” - ஒரு விவாத விமர்சனம்


“தமிழ்க் கலாச்சார காவலர் சேரருடைய பொக்கிசம் பார்த்தேன்!”

“Only NOW!! என்ன உன் டோனே சரியில்லை!”

“பட ஆரம்பமே எனக்கு பிடிக்காத “ப்ரிட்ஜெஸ் ஆஃப் மேடிஷன் கவுண்ட்டி” மாதிரி இருந்துச்சு”

“அதிலிருந்து அடிச்சுட்டானா?”

“ப்ளாட் ஒரு மாதிரியா அதிலிருந்து அடிச்சதுதான். வெள்ளைக் காரன் மாதிரி யோசிக்க ஆரம்பிச்சா தமிழ் கலாச்சாரத்தை எங்கே காப்பாத்த?”

“என்ன கதை?”

“கதைய விடு! First of all I wonder who the f'k told Cheran that it is OK to read someone’s personal letters and diary after he/she is dead?”

“May be the other genius, “Guatham Menon”!”

“ அப்பாவுடைய பர்சனல் டைரியை/கடிதங்களை ஒரு இந்தக்காலத்து பையன் வாசிப்பது போல ஆரம்பிக்கிறாரு படத்தை. தட் இஸ் ஃப்ரம் தட் ஹாலிவுட் மூவி”

“ஐ டோண்ட் திங்க் ஐ கென் ரீட் மை டாட்ஸ் டைரி, ஈவென் இஃப் ஹி இஸ் டெட்”

“மீ நெய்தர். ஆனா தமிழ் கலாச்சார காவலருக்கு அதெல்லாம் சகஜமோ, என்ன எழவோ போ”

“என்ன தான் படம்?”

“புதுசா ஒரு மண்ணும் இல்லை. இவரு ஒரு அழகான முஸ்லிம் பெண்ணை பார்க்கிறார், வழியிறார், இலக்கியத்தை அலசுறார் அப்புறம் வழக்கம்போல நிறைவேறாத காதல், காதல் தோல்வி . மதம் குறுக்கே நிக்கிதாம். பொண்ணோட அப்பா புது மாதிரியா கவிழ்த்திவிடுறாராம்”

“சரி அப்புறம்?”

“ஹேய் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சேரன் மூஞ்சியை எப்படிப்பா பார்க்கிறது? No offense. He does not have any changes in his freaking expression. He acts like a typical cocky guy with a egoistic face as if he is f’king flawless. He hardly knows how to flirt either”

“May be people love watching his face. You are different. So let it go”

“May be so. இதைக்கேளு, இவருக்கு இவர் காதலிட்ட இருந்து பதில் இல்லை. தேடி வர்றார்.வீடு காலிபண்ணி எங்கேயோ சந்திரமண்டலத்துக்கு போயிடுறாங்க அவங்க ஃபேமிலி. Now he goes and finds a guy who worked for that family and poor guy. And he BEATS him up!’

“He beats up a labourer?”

“yeah, that guy has nothing to do with anything. He beats him up asking questions about their whereabouts because that guy is poor. What kind of f’cking right anybody has to do that? I got irritated. Wanted to whack that moron Cheran just for that scene only”

“I don’t understand”

“He shows his emotions to somebody who has nothing to do with it. Because he is poor. Where else he can show? I dont know what the hell he thought”

“இந்தா பாரு இதுதான் தமிழ் கலாச்சாரக் காவலர்கள் செய்வார்கள்.”

“மீத குப்பையை அப்புறம் சொல்லுறேன்”

-to be continued

எதையும் மறக்க முடியவில்லை -கடலை கார்னர் (24)

"Hi Stacy!"

"Hello KannAn"

"You look beautiful today, Stacy"

"Thanks. What are you upto? It is flattering, indeed"

"I am honest as usual, Stacy"

"LOL, BTW, Why are you two not talking to each other, Kannan? You behave like Brindha is not here at all!"

"Oh Brindha! She is mad at me for a reason I dont know. She wont talk to me for a week. I let her be happy for a week. As a gentleman I respect her request!"

"Are you mad at Kannan, Brindha?"

"yeah" Brindha smiled.

"You guys are like kids. Not talking to each other for a week. Is that some kind of Indian thing? I never heard of a case like this. LOL"

"Hey! It is not me who wanted to do. If she says so, what do you want me to do? Force her to talk to me? That is not my type"'

"Why are you mad at him, Brindha?"

"It is personal, Stacy, please?"

"OK, I dont want to get into that. You both are grownups. I did not know you Indians are crazy"

"I will see you later, Stacy" Brindha left from there.

"So, whats up Stacy? Dont worry about Brindha. She will be fine.I guess she is doing some experiments on herself"

"What do you mean?'

"I think she is trying to learn about herself"

"Whatever. Anyway, Kannan, Did you hear about a woman who has problem forgetting anything?"

"What do you mean by probelem forgetting?'

"She has an extraordinary memory"

"Who is that?"

"She does not want to reveal her name. They call her "AJ" now. She has an unbelievably extraordinary memory"

"Really? How old is she?"

"40-year old woman"

"Are you serious? She may be exaggerating, Stacy"

"She wasn't exaggerating, Kannan"

"How do you know?"

"It is a serious stuff, now. McGaugh and fellow UCI researchers Larry Cahill and Elizabeth Parker have been studying the extraordinary case of AJ who has "nonstop, uncontrollable and automatic" memory of her personal history and countless public events"

"And?"

"If you randomly pick a date from the past 25 years and ask her about it, she'll usually provide elaborate, verifiable details about what happened to her that day and if there were any significant news events on topics that interested her. She usually also recalls what day of the week it was and what the weather was like"

"jeez, you know it is a torture too. Forgetting things is a gift for us. She is unfortunate"

"You always look at issues in a different angle, Kannan. Yes, I agree it is true that forgetting past is a gift. We dont want to remember the bad, bitter experiences. Nevertheless this is an interesting case for scientists and so they are studying about her seriously"

"The only problem is that nobody can double check her information. We just have to trust her"

"That is true but she does have a problem forgetting Kannan"

"So, How are the Bears doing?"

"I dont watch football, Kannan"

"What do you watch during weekends? Some dirty movies?"

"LOL"

"Is that an Yes?"

"Nope, I watch some romantic comedy movies, Kannan. Mostly rent them"

"I usually own movies I like, Stacy"

"I dont because once I own it, I wont feel like watching it"

"That is true. What is your favorite one?"

"I watched "There is something about Marry" this weekend"

"I love that one"

"You do?"

"That is hilarious, Stacy. Your friend is coming back to get you"

"Stacy! You said you wanted to check out something? It is about time"

"Yeah, I almost forgot, Brindha. I have to go now with Brindha. See you later"

"OK, Bye, Stacy"

-to be continued