Wednesday, November 30, 2011

எக்ஸைல் நாவல்- விமர்சனம்!

எக்ஸைல் னு சாருநிவேதிதா ஒரு நாவல் எழுதி வெளியிட்டு இருக்காருனு பல இடங்களில் படிச்சேன். என்னப்பா தலைப்பு இது எக்ஸைல்? ஆங்கில வார்த்தை எக்ஸைல்தானா இது? இல்லை போஸ்ட் மாடர்ன் தமிழா?? சரி, எதைப்பத்தி இந்தக் கதைனு ஒரு ஆர்வத்தில் அது பத்தி எதுவும் புக் ரிவியூ இருக்குமானு தேடிப் பார்த்தேன். ஆனால் சாரு கதைக்கு ரிவியூ ஒண்ணும் மாட்டல.. சரினு ஆங்கிலத்தில் exile னு போட்டுத் தேடிப்பார்த்தால் ஒண்ணு மாட்டுச்சு!

ஆனால் இந்த எக்ஸைல் நம்ம சாருவுடைய நாவல் அல்ல. ரிச்சேர்ட் பேட்டர்சன் னு ஒரு ஆளு எழுதிய த்ரில்லர். சரி என்னதான் இருக்குனு பார்ப்போம்னு வாசிச்சுப் பார்த்தால் கொஞ்சம் இண்டெரெஸ்டிங்காத்தான் இருக்கு.

அதாவது ஒரு அமெரிக்கன் யூத வழக்கறிஞர், ஒர் பாலஸ்தினிய பெண்ணோட ஒரு அஃபையர் வச்சிருந்து இருக்காரு. அதுவும் 13 வருடங்களுக்கு முன்னால.

இப்போ இவரு அமெரிக்காவில் பெரிய வழக்கறிஞராக பழசையெல்லாம் மறந்து நிம்மதியா வாழ்ந்துகொண்டு இருக்காரு. அந்த அம்மா (இவரோட எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்டுதான்) கணவருடன் அமெரிக்கா விசிட் செய்ய வருகிறதாக் சொல்லி இவரை தொடர்பு கொண்டு இருக்கிறார். இவர் அமெரிக்கா வரும் காரணம் இஸ்ரேல் ப்ரைம் மினிஸ்டர் அமெரிக்காவில் கொடுக்கும் ஒரு மேடைப் பேச்சு கேடகவோ அல்லது அது சம்மந்தமாக.

அந்த மேடைப்பேச்சு நடக்கும்போது இரண்டு தீவிரவாதிகளால் இஸ்ரேல் ப்ரைம் மினிஸ்டர் படுகொலை செய்யப்படுகிறார்!!

அந்த நேரத்தில் தன் கணவருடன் அமெரிக்கா வந்திருந்த இந்த பாலஸ்தீன பெண்மணி, ஒரு மர்டர் சஸ்பெக்ட் ஆகி, அமெரிக்காவில் இவரை அரெஸ்ட் பண்ணி விசாரனைக் கைதியாக வைத்துள்ளார்கள். இந்த ஒரு சூழ்நிலையில் தனக்கு நல்லாத் தெரிந்த தன்னுடைய மாஜி காதலனை இவரு தன் தரப்பில் வாதாடச்சொல்லி வேண்டிக்கிக்கிறார்.

தீவிர யோசனைக்குப் பிறகு, இவரும் அந்த கேஸை எடுத்துக்கொண்டு வாதாடுகிறார். அப்போது விசாரணையின்போது பல உண்மைகள் வெளியே வருகிறது..

நான் இங்கே எழுதியுள்ளது கீழே கொடுத்துள்ள ஒரிஜினல் ரிவ்யூவின் அரைகுறை தமிழாக்கம்தான். ஆனால் இதைப் படிச்சபோது எனக்கே இந்தக் கதையை படிக்கனும்னு ஆவல் வந்தது! தேடி எடுத்து படிச்சால் நான் விமர்சன்ம் கொடுக்கிறேன். உங்களுக்குப் பிடிச்சால், நீங்களும் எடுத்துப் படிச்சுப் பாருங்க!

Author: Edwen DavisPublished: Jan 21, 2007 at 7:32 pm

Richard North Patterson continues to show his mastery of the legal thriller in Exile, his latest journey into the world of crime, and the courts of America. In Exile we meet David Wolfe, a Jewish attorney, who while in Harvard law school had an affair with a Palestinian woman from the West Bank. Some 13 years later Hana Arif, the one true love of his life, contacts him again while on a trip with her husband to counter the speeches given by the Israeli prime minister, who is seeking to broker peace between Israel and the Palestinians. After a speech in San Francisco two Palestinian suicide bombers assassinate the prime minster and thus this enlightening journey into the morass of the Middle East begins.

During the investigation Hana Arif and her husband become persons of interest and have their passports confiscated by the FBI. She contacts David, a former US Prosecutor with a promising political career ahead of him, to ask that he represent her in this process. This is one of the most important decisions of David's life, because he knows how damaging it could be to his future prospects in politics. Following his heart, and ideals, he agrees to represent her at the meeting between her and the FBI. The meeting takes place on the day of the mourning for the Israeli Prime Minister, which he had planned on attending with his fiance, the daughter of a Holocaust survivor. This begins the tension that leads to the end of that relationship, adding to the stress of representing Hana.

In the course of the investigation the FBI charges Hana with being the handler of the two suicide bombers, due to the testimony of the one who survived. This leads to David appearing in a court case that is followed around the world. It takes him to Israel, the West Bank and deep into the heart of the tension between Israel and the Palestinian. The personal upheaval includes the end of the relationship with his fiance, he loss of friends, and the end of his political hopes. During the course of the pretrial actions there are discoveries that shake David to core of his identity and change his very outlook on life.

In Exile once again Richard North Patterson has given us a grand story, yet somehow he also educates us on one the most misunderstood problems the world faces today. I can only say thank you to him for the mastery with which he handles this wonderful novel and will be waiting impatiently for his next work In this world and all of its tensions we need works like this to broaden our base of understanding, the only true hope for a solution of the problems in the Middle East.

Read more: http://blogcritics.org/books/article/book-review-exile-by-richard-north/#ixzz1fDS83ZvL


Friday, November 25, 2011

பொய்யன் ஜெயமோஹனும் நம்ம ஊரு மாரியாத்தாவும்!

ஏய் இவன் புளுகுறான்ப்பா! நு நீங்கள் சொல்ல முடியாத அளவுக்கு பொய் சொல்லக்கத்துக்கிட்டானுக இன்றைய இந்துத்தவாக்கள். அதுவும் என்ன திமிர்! அது எப்படி திமிருடன் புளுகிறது? னு கேக்கிறீங்களா? இவனுக எழுதுற குப்பைகளின் ஆரம்பத்திலேயே இவனுகதான் பெரிய புடுங்கி மாதிரித்தான் ஆரம்பிப்பானுக! கீழே இருக்கு பாருங்க! வாசிச்சுப் பாருங்க!

பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை நம்பியே நம்மில் பலர் பேசுகிறார்கள் . ஒவ்வொருமுறையும் அடிப்படைத்தகவல்களைச் சொன்னபின்னரே பேசவேண்டியிருக்கிறது.

இவரு பெரிய மகா மேதை! இவருக்கு மட்டும்தான் எதையும் சரியாத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்காம்!

சரி ஏதாவது ஒரு நல்ல சிந்தனையைத்தூண்டும் கேள்வி, நம்ம மாரியத்தாவும் ஏசுவும் ஏதாவது கடவுள்கள் காண்ஃபரன்ஸ்ல மீட் பண்ண்ணிக்கிறாங்கனு வச்சுக்குவோம், அப்போ என்ன மொழியில் அவங்க ரெண்டு பேரும் (அதான் மாரியாத்தாவும் ஜீசஸும்தான்) பேசிக்குவாங்க? னு கேட்டால், இந்தாளைப் பொருத்தவரையில் அது ஒரு வெட்டிப்பேச்சு, வீண்பேச்சு! ஆனால் பலருக்கு இப்படி கேட்க்கப்படும் குதர்க்கக் கேள்விகளும் நல்ல சிந்தனையைத்தூண்டும் கேள்வியாகத் தோனலாம்! So he is not an authority to judge any question and say which is sensible question and which is not! He is also another "human moron" just like any brainless Hindu fanatic!

இவனுக எழுதுற கட்டுரையில் எந்தவிதமான “எவிடெண்ஸோ” “ஆதாரமோ” கொடுக்காமலே பெரிய ஆதாரம் கொடுத்தது போலவும், அந்த ஆதாரம் உயர்தரமானது என்பது போலவும் எழுதுவானுக இந்தக் கொம்பனுக.

சம்ஸ்கிருதத்தின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் உருவாக்கிய மேதைகளில் கணிசமானவர்கள் தென்னாட்டினர். அதன் பெரும்கவிஞர்களும், ஞானிகளும் பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள். அது வைதிகத்துக்கு மட்டுமல்ல சமணத்துக்கும் பிற்கால பௌத்ததுக்கும் மொழிதான். அதுதான் இந்திய நாத்திகத்திற்கும் மூலமொழி.

இதுதான் இந்திய நாத்திகத்துக்கு மூலமொழி!!! என்னடா சொல்றான் இந்த ஆளு? இவன் பேசுறது எல்லாத்தையும் தலையை ஆட்டிக்கிட்டு கேட்டுக்கிட்டு திரிகிறவனையெல்லாம் செருப்பால அடிக்கனும்!

இவனுக எழுத்துப்பிழை இல்லாமல் செந்தமிழில் எழுதுற குப்பையை வாசிக்கிற நம்மாளு என்னவோ இவன்தான் பெரிய கொம்பன் போலனு நெனச்சுக்க்கிறான்! இவன் புளுகிறதை எல்லாம் நம்பி ஏதோ உண்மை இருக்கோ கொஞ்சம் பயந்துடுவான். பாமரமக்களிடம் எழுத்து ஜாலத்தை வைத்துக்கொண்டு இவன்தான் எல்லாம் அறிந்த மேத நு ஒரு பிரமை உண்டாகுற அளவுக்கு இதுமாதிரி எதையாவது புளுகிறது!

உண்மை என்னவாயிருக்கும்னு மூளையைக்கசக்கி கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால்..

பார்ப்பணர்கள் (மற்றும் உயர்சாதி திராவிட நாய்களும்), ஆரியக்கடவுள்களை பெரிய தெய்வங்களாக கோயில்களில் அமர்த்திக்கொண்டு சமஸ்கிரதத்தை அரைகுறையாகவோ, அரைவேக்காட்டுத்தனமாகவோ கற்று வைத்துக்கொண்டு சில திராவிட நாய்கள் துணையுடன் சமசஸ்கிரதத்தில் வழிபாடு நடக்கும் கோயிலுக்குள்ளே மறத்தமிழர்களை கீழ்சாதினு சொல்லி விடவில்லை. தன்னை “பிள்ளை”னு பெருமையாக சொல்லிக்கொண்டு திரியும் மலையாளிகளுக்கு தமிழ்க்கடவுள் பத்தி என்னடா தெரியும்? வெறும் ஏட்டுச்சுரைக்காய்தான்! இவனுக பாட்டன் முப்பாட்டானுகளுக்கு மாரியாத்தாவையும் தெரியாது அவளைப் பெற்ற ஆத்தாளையும் தெரியாது!

பார்ப்பணர்கள் வணங்கும் “பெரிய கடவுள்” இருக்கிற தெய்வ ஸ்தங்களுக்கு சமஸ்கிரதத்தில் அர்ச்சனை பண்ணி, பாடி, ஆடி, மகிழ்விச்சு, சாமிக்கு ஜால்ரா அடிச்சு அதைவைத்து இவனுக பொழைப்பை ஓட்டினானுக.

நம்மாளு, அதான் நம்ம மறத்தமிழர்கள் கோயிலுக்குள்ளேயும் போகமுடியாமல் சமஸ்கிரதமும் புரியாமல் என்ன செஞ்வான்? முனியசாமி, அய்யனார், பத்ரகாளி, மாரியாத்தா, காளியாத்தா நு அவனுக்குத் தேவையான தெய்வங்களை அவனே உருவாக்கிக்கொண்டு, தான் உருவாக்கிய தன் தெய்வங்களுக்கு தனக்குத் தெரிந்த தமிழ் முறைகளில், தமிழ் மொழியிலேதான் பாடி வேண்டி வழிபட்டான். தீண்டாமையை செயல்படுத்தி வாழ்ந்துகொண்டிருந்த பாப்ப்பணர்கள்ட்டப் போயி நின்னு, கெஞ்சி எனக்கு சமஸ்கிரதம் சொல்லித்தா நு நம்மாளுக நிக்கலை. தானே தனக்குத் தேவையான பல கடவுள்கள் உருவாக்க்கி, ஒயிலாட்டம், கரகாட்டம், முளைக்கொட்டு அது இதுனு பல கூத்துக்கள் உண்டாக்கி, கொண்டாடி, கூத்தாடி தமிழன் வாழ்ந்தான்.

இன்னைக்கு இந்த மலையாளி மற்றும் இந்துத்தவா வந்து தமிழன் எப்படி தன் தெய்வங்களை வணங்கனும் சொல்றான்யா!

தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு, தேவபாஷா சமஸ்கிரதத்தில்தான் மாரியாத்தா, முனியசாமி, சோனையா, ஐயனாரு போன்ற தமிழர்கள் உருவாக்கிய சிறிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்யனுமாம்!

சம்ஸ்கிரதத்தில் சாமிக்கு ஜால்ரா அடிச்சால்தான் ஹிந்து தெய்வங்கள் எல்லாம் தங்களை உலகமையமாக்குவதை எண்ணி சந்தோஷப்படுங்களாம்!

எல்லாரையும் அன்னைக்கே ஒழுங்கா கோயிலுக்குள்ளே விட வக்கில்லை! நாந்தான் உயர்சாதி! சமஸ்கிரதம்தான் தேவ பாஷை! கடவுளுக்கு நாங்க சமசஸ்கிரதத்தில் பேசினால்தான் புரியும்! நீயெல்லாம் கடவுளை கும்பிடவே தகுதியில்லாதவன்னு னு சொல்லிக்கிட்டு திரிஞ்சவனுக இன்னைக்கு அன்று தூக்கி எறியப்பட்ட மறத்தமிழனையும் அவன் உருவாக்கிய கடவுள்களையும் பெரிய மனசு பண்னி சேர்த்துக்கிறானுகளாம்! தமிழன் உருவக்கிய தமிழ்க்கடவுளுக்கும் வடமொழியில் அர்ச்சனை பண்ணுவதுதான் முறையாம்! பலமொழிகள்ல கடவுளுக்கு அர்ச்சனை பண்ணினால் கடவுளுக்கு பகதர்களின் மொழி புரியாமல் ஒரே குழப்பமாயிருக்குமாம்!

மாரியாத்தா பத்தி இந்தாளுடைய பிதற்றல்கள்!!
தமிழக மாரியம்மன்களுக்கு சம்ஸ்கிருத வழிபாடு கண்ணெதிரே உருவாகிக்கொண்டிருக்கிறது. சென்ற இருபதாண்டுக்காலத்துக்குள் சுடலைமாட சாமிக்கு சம்ஸ்கிருத சுலோகங்கள் உருவாகிவந்திருக்கின்றன

மாரியாத்தாவுக்கு சமஸ்கிரதத்தில்தான் அர்ச்சனை பண்ணனும்னு எவனும்போயி இவனுகள்ட்டப் போய் அழவில்லை! இவனுகளா ரொம்ப அக்கறையா, பெரிய மனசுபண்ணி, மாரியாத்தாவுக்கு சமஸ்கிரதத்தில் அர்ச்சனை பண்ணுறதுக்காக எவனோ ஒரு மெண்டல் சுலோகம் தயாரிச்சுக்கிட்டு இருக்கானாம். ஆமா ரொம்ப ரொம்ப கஷ்டம் பாருங்க மாரியாத்தாவும் சமச்கிரதம் சுலோகங்கள் எல்லாம் தயாரிக்கிறது? மாரியாத்தாவுக்கு சுலோகம் தயாரிச்சுப் புடுங்கப்போறேன்னு நாலு பேருக்கு பொழைப்பு ஓடும் இல்லையா? அதுக்குத்தான்.

மாரியாத்தா என்ன எழவைப்பாடினாலும் எதுவும் சொல்லப்போவதில்லை! அதென்ன பக்தனே உன் சம்ச்கிரதத்தில் இதில் சொற்பிழை இருக்கு பொருட்பிழை இருக்குனா சொல்லப்போவுது? அதுக்கே சமஸ்கிரதம் புரியாது! நம்ம மாரியாத்தாவுக்குத் தாய் மொழி அதை உருவாகிய தமிழனின் தமிழ்தானே? அதுக்கு எப்படி சமஸ்கிரதம் எல்லாம் புரியும்??


என்னவோ மாரியாத்தா இவனுக கனவுல வந்து எனக்கு சமஸ்கிரதத்தில்தான் எனக்குப் பாடி நீங்க அழனும், ஒப்பாரி வைக்கனும் அப்போத்தான் இந்து மதம் வளரும்னு சொன்னதுபோல??? மாரியாத்தாவுக்கு இனிமேல் சமஸ்கிரதத்தில் ஸ்லோகம்லாம் எழுதி அர்ச்சனை பண்ணி இந்து மதத்தை வளர்த்துக் கிழிக்கபோறானுகளாம்!

தமிழன் கவனமாக இருக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகி வருகிறது. கண்டவனையும் பெரிய ஆளாக மதிக்க ஆரம்பித்தால் தமிழனுக்கு ஈனம்தான்!

Wednesday, November 23, 2011

49 வயது ஆண்ட்டியும், 33 வயது ஆணழகனும்!


இன்னைக்கு தேதிக்கு டெமி ஆண்ட்டிக்கு வயது 49 ஆயிடுச்சு. இன்னும் கவர்ச்சியாத்தான் இருக்காங்களானு எனக்குத் தெரியலை. ஆனா இந்த 49 வயதுல, "மெனோப்பாஸ்" கூட வந்துடும்.

அதனாலென்ன?

செக்ஸ் ட்ரைவ் கொறைந்துவிடாதா?

அதனாலென்ன?

இல்ல.. டெமி ஆண்ட்டியை காதலிச்சு திருமணம் செய்த ஆஷ்டன் குட்சருக்கு இப்போ 33 வயசுதான் ஆகுது. இதெப்படி இந்த மேரேஜ் வொர்க் அவ்ட் ஆகும்? ஒரு வேளை டெமி ஆண்ட்டி ஏதாவது ஹார்மோன் எடுத்துக்கொண்டு அவங்க செக்ஸ் ட்ரைவை பூஸ்ட் பண்ணிக்குவாங்களோ?

இருந்தாலும் ஆஷ்டனுக்கு 33 வயதுதான்.. Come on! he will soon go, look for a young hot chick to warm up his bed! Come on man! He cant live with this old hag for very long! That is what everybody was thinking or not?

எல்லோரும் நெனச்சது போலவே டெமி ஆண்ட்டி சமீபத்தில் ஆஷ்டனை டைவோர்ஸ் பண்ணப்போவதாக சொல்லியிருக்காங்க. ஆக, "ஹாட் ஆஷ்டன்" is available NOW! எனக்குத் தெரிய எல்லாப் பெண்களுமே ஆஷ்டன் இஸ் ஹாட் னுதான் சொல்றாங்க! Honestly, he looks like a moron to me! Who cares what I think of him? He is HOT according to girls!

டெமி ஆண்ட்டிக்கு இதற்கு முன்னால் ப்ரூஸ் வில்லிஸோட திருமணமாகி அவரோட ஒரு 13 வருடம் திருமண பந்தத்தில் குப்பை கூட்ட முடிஞ்சது. இந்த தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் . 13 வருடமா? ரொம்ப அதிகம் இதெல்லாம்னு ரெண்டு பேரும் டைவோர்ஸ் பண்ணிக்கிட்டாங்க.

2000க்கு அப்புறம் டெமி ஆண்ட்டி ஆஷ்டனோட ஒரு ரெண்டு மூனு வருடம் சுத்திட்டு, 2005 ல கல்யாணம் செய்துக்கிட்டாங்க. ஆனால் டெமி ஆண்ட்டிக்கு ஆஷ்டனுடன் எவ்வளவு நாள் ஓடும் என்ற கேள்வியை பலர், ஏன் நானே எழுப்பியுள்ளேன்னு நெனைக்கிறேன் (தோண்டி எடுக்கனும்). சரி, இப்போ பதில் கெடச்சிருச்சு. 6 வருடம்கூட தாங்கலை.

இவர்கள் ரெண்டு பேருக்கும் இடையில் இருந்தது "ஓப்பன் மேரேஜ்"தான்னு ஒரு சிலர் சொல்றாங்க. ஆமா, அதென்ன ஓப்பன் மேரேஜ்? டெமியும் ஆஷ்டனும் கணவன் மனைவிதான். ஆனால் அவங்க ரெண்டுபேருக்கும் இடையில் "ஓப்பன் மேரேஜ்" அக்ரிமெண்ட் இருந்தால் ரெண்டு பேரும் தான் விருப்பப்பட்டவருடன் படுத்துக்கலாம். இல்லை 3 பேரா இல்லை நாலு பேரா, இல்லை ஏழுபேராக்கூட சேர்ந்து படுத்துக்கலாம். செக்ஸெல்லாம் ஒண்ணும் பெரிய மேட்டர் கெடையாது. இதெல்லாம் ஒரு ஹை - லெவெல் அண்டர்ஸ்டாண்டிங்! Only "highly civilized people" would go for it, they say! சரி, "ஓப்பன் மேரேஜ்"னா அப்புறம் என்ன இப்போ பிரச்சினை? ஒருவேளை அதிலும் பலமாதிரி பிரச்சினைகள் வரலாம் போல இருக்கு.

முடிவுரை:

"living together", "open marriage" அது இதுனு பல வாழ்க்கை முறைகள் வந்தாலும், ஆண்-பெண் உறவு எனபது இன்றும் எளிதாக உடையக்கூடிய ஒரு காம்ப்லெக்ஸ் உறவு என்பதை யாரும் மறுக்க முடியாது. இதுபோல் வாழ்க்கை முறைகளால், நாம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டோம் என்பதெல்லாம் வெறும் உளறல்கள்தான்!

Friday, November 18, 2011

அம்மா எனக்கு துரோகம் பண்ணிடுத்து!!

தமிழ்நாட்டில் அம்மா ஆட்சி வந்ததும் தமிழ்நாட்டின் பொற்காலம் ஆரம்பமாயிடுச்சுனு நம்பி மோசம் போயிட்டேன். நான் கண்ட தமிழ்நாட்டின் பொற்காலக்கனவு இன்னும் என்னுடைய பதிவில் அப்படியே இருக்கு! கனவு நனவாகும்னு பார்த்தால்.. அம்மா என்னையும் என் பதிவையும் என் கணக்கை எல்லாம் தப்புக் கணக்காக்கிடுச்சு!

அப்படி என்ன கனவு கண்டடா மூதேவி?னு கேக்குறீங்களாப்பூ!

இங்கே இருக்கு படிச்சுப் பாருங்கப்பூ!


இப்போ நம்ம ஜெயலலிதா என்ன செய்யப்போகிறாரு தெரியுமா?

* சங்கர் ராமன் கொலைவழக்கை முட்டுக்கட்டை போட்டு வைத்ததே கருணாநிதிதான். சங்கராச்சார்யா கேஸ் விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டு வருவார்! எப்போ? இன்னும் ஒரு வருடத்திற்கு முன்னால் குற்றவாளிக்கு இருக்கு ஆப்பு!

* தமிழக மீனவர்கள் இனிமேல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், படகுல ஏறி "அதோ அந்தப் பறவை போலே வாழ வேண்டும்னு" பாடிக்கிட்டே மீன் பிடித்து சந்தோஷமாக வாழலாம்! மீனெல்லாம் கடல்ல இருந்து பாய்ந்துவந்து படுகுக்குள்ளே படுத்துக்கும்! அப்படி பாய மறுத்துச்சுனா மேலே உள்ள காங்கிரஸை விரலை விட்டு ஆட்டிருவாரே நம்ம தமிழினத் தலைவி!

* ஈழம்? ஈழத்தமிழர்களுக்காக தன் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் கொடுத்து அவர்களை தனிநாடு பெற்று மகிழ்ச்சியாக வாழ வைப்பார், தமிழினத்தலைவி!

* ஆமா "பவர்கட்" னா என்ன? அப்படினு ஒரு நிலை தமிழ்நாட்டில் விரைவில் வந்துவிடும்!

* டாஸ்மாக் மது, கருணாநிதி ஆட்சியில்தான் பலகோடிக்கு விற்பனையானது. ஜெயா ஆட்சியில் மது விற்பனை குறையும்! பதிவுலகில்கூட இனிமேல் யாரும் தண்ணியடிக்க மாட்டாங்க! May be alcohol consumption will reach all-time LOW!

* விலைவாசி ஏற்றத்திகு காரணம் கருணாநிதிதான். வந்துகொண்டிருக்கிற ஜெயாவின் ஆட்சியில் விலைவாசி ஏற்றமா? இனிமேல் "விலைவாசி இறக்கம்"தான் போங்கோ!

* பெட்ரோல், குக்கிங் கியாஸ் விலையும் ஜெயா ஆட்சியில் மிகவும் குறையும் என நம்புவோம்! பருப்பு எண்ணெய் விலையெல்லாம் இப்போ இருக்கிறதுல பாதி ஆகிவிடும்.

* "பார்ப்பணர்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும்" என்கிற "போர்ட்" அல்லது "விளம்பரம்" வந்தால் அவர்களை பிடித்து உள்ளே போடுவார் இந்த திராவிடர்களின் "பார்ப்பணத் தலைவி"!

தமிழகத்திற்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. ஆமா, நம்ம குத்துப் பாட்டு விசய் படமெல்லாம் ஓடிக்கிட்டே இருக்கும்! அப்புறம் என்ன? இனிமேல் தமிழ்நாட்டில் தமிழனுக்கு எல்லாம் பொற்காலம் தான்.


* விலைவாசி ஏறிக்கிட்டே போகுது. மாடையெல்லாம் ஏழைகளுக்கு இனாமாக்கொடுத்துப்புட்டு இப்போ பால் வெலையை ஏத்துது!

* சங்கர் ராமன் ஆவி இன்னும் ஷாந்தி அடையாமல் அலையுது! பாவம் அதை கவனிக்காமல் அம்மா என்னடானா ரித்தீஸ் அடிச்சுட்டுப் போன கறுப்புப்பண ஷூட்கேஸை எல்லாம் திருப்பி வாங்க நில அபகரிப்பு வழக்கைப்போட்டு "கறுப்பாவே" வசூல் பண்ணிக்கிட்டு இருக்கு!

* தாழ்த்தப்பட்டவர்களை எல்லாம் ஏறி மிதிக்குது!

ஏண்டா வருண் இப்படி ஒரு எழவுப்பதிவைப் போட்டு ஒப்பாரி வச்சிட்டு இருக்க?

என்ன பண்ணுறதுப்பூ? எனக்காகவா நான் ஒப்பாரி வைக்கிறேன்? அம்மாக்கு ஓட்டுப்போட்டு, அம்மாக்கு பிரச்சாரம் பண்ணி, ஆரியத்தாய் திராவிடர்களை ஆண்டால்த்தான் எங்க நாடு முன்னேறும், மக்கள் நிம்மதியா இருப்பாங்கனு அம்மாக்கு கொடிபிடிச்ச திராவிடர்கள் எல்லாம் விலைவாசி ஏறும்போது மூடிக்கிட்டு இருக்கும்போது நாந்தான் அவங்களுக்கும் சேத்து ஒப்பாரி வைக்க வேண்டியதாப்போச்சு!

Thursday, November 17, 2011

திரு ஷண்முகவேல்! இது 21ம் நூற்றாண்டு சார்!

திரு. ஷண்முகவேல்! நீங்க மனநலமருத்துவரைப்போல பல பிரச்சினைகளை எழுதிட்டு வர்றீங்கனு உங்க பதிவிலிருந்து பார்த்து வருகிறேன். ரொம்ப நல்ல விசயம். உங்களால் நெறையப்பேர் பலன் அடையிறாங்கனு மொதல்ல தெளிவாக சொல்லிடுறேன். ஆனால் சமீபத்தில், நீங்க என்னனா "பெண்களும், ரகசியங்களும்" அப்படி இப்படினு போட்டு ஏதோ 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டு இருக்கிற ஒரு செக்ஸிஸ்ட் ஆண் கவுண்சலிங் பண்ணுறமாதிரி எழுதுறீங்க? அதுவும் இந்த உலகத்துக்கே தெரியுறாப்பிலே!! அமெரிக்கா, ஐரோப்பாவில் வாழ்ற தமிழ்ப்பெண்கள் எல்லாம் வாசிக்கிறாப்பிலே இணையதளத்தில் இப்படியெல்லாம் எழுதிக்கிட்டு இருக்கீங்க?

என்ன சார் இதெல்லாம்? ஆணும் பெண்ணும் சமம் இல்லையா? உடளலவில் இல்லை! உணர்வளவில், அறிவளவில்? குறைகளிலும் நிறைகளிலும்? இல்லையா??

ஆமா, ஆண்களிடம் ரகசியம் சொன்னால் அது எங்கேயும் போகாமல் அவர்களிடமே செத்துவிடுமா என்ன? அந்தமாதிரி ஆம்பளைங்கதான் நெறையா இருக்காங்களா? நீங்க என்ன "ஒளறுவாயி ஆம்பளைகளே" பார்த்ததில்லையா? எதைச்சொன்னாலும் அதுவும் "யார்ட்டயும் சொல்லிடாதே" னு சொன்னால் ஒரு 100 பேருட்ட சொல்ற ஆண்களைப் பார்த்ததில்லையா?? கோடிக்கணக்கில் இருக்காங்க சார்! இருந்தாலும் அவங்க எல்லாமே விதிவிலக்கா என்ன?

அதேபோல் பெண்கள் தங்கள் கூமுட்டைக்கணவன் ஒளறுவதை எல்லாம் வெளியே சொல்லாமல் அவர்களிடமே வைத்து மறைத்து சமத்தாக இருப்பதை பார்த்ததில்லையா சார்? என்ன் சார் இதெல்லாம்? எந்த உலகத்தில் நீங்க வாழ்றீங்க? எந்த நூற்றாண்டில் வாழ்றீங்க? இது 21ம் நூற்றாண்டு சார்! விழிச்சுக்கோங்க!

சார், என்னுடைய வேண்டுதல் என்னனா.. You should not stereotype women and that too being a counselor and all? இதை நான் உங்களுக்கு ஏன் சொல்றேன்னா, இதை சொல்லாமல் உங்க தலைப்புகளை வாசிச்சு, உங்க பதிவை வாசிச்சுப்புட்டு பின்னூட்டமிடாமல் பல பெண்கள் கொதிச்சுக்கிட்டு இருக்காங்க- நாகரிகம் என்கிற பேரில், உங்களை புண்படுத்த வேணாம்னு. அவங்க கொதிதெழுந்துகொண்டு இருப்பது உங்களுக்கு இன்னும் புரியலையா? புரிஞ்சுக்கோங்க சார். நீங்க ஒரு பெண்ணை பத்தி எழுதுவது வேற. "பெண்கள்" அப்படினு பொதுப்படையா சொல்றது வேற! You also sound like a sexist and doing counseling only for MEN!

அப்புறம் நான் எங்கேயிருந்தோ வந்து குதிக்கவில்லை. நானும் இப்படித்தான் பேசிக்கிட்டு இருந்தேன் (நம்ம கலாச்சாரத்தில் இருந்து வந்ததால்), அப்புறம் நெறைய நலம்விரும்பிகள் என்னிடம் எடுத்துச் சொன்னாங்க, இப்படி "பெண்கள்"னு "ஸ்ட்டிரியோடைப் " பண்ணி பேசுறது தப்புனு. அப்படியெல்லாம் இந்த நவீன உலகத்தில் பேசப்படாது அப்படி இப்படினு (இதில் நெறையப்பேரு பெண்கள்தான்)!

தடங்களுக்கு வருத்தம்தான்! தொடருங்கள் உங்கள் நற்பணியை!

திரைமணம் பகுதி படு கவர்ச்சியா இருக்கு!

தமிழ்மணத்தில் திரைமணத்தை தனியாகப் பிரிச்சபோது இருந்தது போலவே சமீபத்தில் (எப்போ இருந்துனு தெரியலை) திரைமணம் திரட்டியை மாற்றியமைத்துள்ளது ரொம்ப நல்லாயிருக்கு. இடையில் ஏதோ வேற ஃபார்மட்ல திரைமணம் மாற்றப்பட்டபோது ஆரம்பத்தில் நல்லாயிருந்தது. அப்புறம் நாள் ஆக ஆக, கண்ட குப்பைகளும் அங்கே வந்து குவிவதுபோல ஒரு பிரமை ஏற்பட்டது. மேலும் தமிழ்மணத்தில் "சிக்நேச்சர்" அதில் இல்லாமல்ப் போய்விட்டது. அங்கு செல்லும்போது தமிழ்மணம் சம்மந்தமில்லாத ஏதோ வேறு தளம் சென்றதுபோல தோன்றியது. அதனால என்னைப்போல பலருக்கும் (எனக்கு மட்டும்தானா?னு தெரியலை :) ) திரைப்படப்பிரிவில் பதிவு போடவே "மூட் " வரலை.

இப்போ என்ன காரணத்தாலேயோ திரைமணம் பகுதி பழைய கவர்ச்சியான திரைமணமாக மாற்றப்பட்டுள்ளது திரைப்படப்பிரிவில் பதிவுபோட பலரையும் ரொம்ப ஊக்குவிக்கிது. இந்த "ஃபார்மட்ல" தான் தமிழ்மணம் "சிக்நெச்சர்" (அப்படினா என்னனு கேக்காதீங்க) தெரிகிறது!

திரைப்படப்பதிவை ஊக்குவிப்பது நல்லதா கெட்டதா என்பது விவாதத்திற்குரிதாக ஒருபக்கம் இருக்கட்டும். திரைமணத்தின் இந்த ஃபார்மட் நல்லாயிருக்குனு மட்டும் சொல்ல வந்தேன்! என்னைப் பொருத்தவரையில் பொய்கலப்பு மற்றும் தேவையில்லாத ஆபாசக்கலப்பில்லாமல் எதை எழுதினாலும் பரவாயில்லை! மேலும் சிலநேரம் வலைபதிவர்களுக்கு பலவிதமான அரசியல் பிரச்சினைகள், சாதிப்பிரச்சினை, மதப்பிரச்சினைஅது இதுனு தேவையில்லாத வம்பில் மாட்டாமல் பதிவுபோட திரைப்படப்பதிவுகள் உதவுகினறன என்பது என் நம்பிக்கை.

மறுபடியும் இதுவும் எதிர்காலத்தில் மாற்றத்துக்கு உள்ளாகலாம்தான். ஏதோ தோன்றியதை மைக் போட்டு சொல்லனும்னு தோனுச்சு, அதான் இந்தப் பதிவு! நன்றி! :)

Wednesday, November 16, 2011

நக்கீரன் விடும் புருடாவா இது?



ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சு சாதித்த சாதனைகள் பல. இன்னும் தமிழ் சரியாகக்கூட பேசத்தெரியாத ஒரு நடிகன், எப்படி சினிமாவைக் கரச்சுக்குடிச்சதாக சொல்லப்படும் பெரிய பெரிய மேதைகளை எல்லாம் விட சாதிக்க முடிஞ்சது? என்பதும் இன்றுவரை பெரிய புதிராத்தான் இருக்கு.

அதைவிட புதிர் என்னன்னா கடந்த வருடம் ஜூன் மாதம் ராணா படத்துக்கு பூஜைபோடும்போது திடீரென ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஐ சி யு வில் வைக்கப்பட்டு, பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு பலவித புரளிகள் கிளப்பப்பட்டு.. சிங்கப்பூர் சென்று வைத்தியம் பார்த்து திரும்பி வந்து,.. இன்னைக்கு ரஜினி ஓரளவு உடல்நலத்துடன் இருப்பது. ஆனால் இன்னைக்கு வரை ரஜினி உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை அதுவும் புதிராத்தான் இருக்கு.

இதற்கிடையில் ரஜினி உடல்நிலை காரணமாக ராணா படம் கைவிடப்பட்டதாக behindwoods. com ல சொன்னாங்க.

The mega project of Superstar Rajinikanth Rana has been dropped. Rajinikanth met up with director KS Ravikumar at the latter’s office and after a two-hour discussion the duo decided to drop the project on grounds that the movie will take one and a half years to complete and requires immense efforts which the actor is unable to provide at this point of time.

Moreover, Rajini has also offered a new script to KS Ravikumar which is on lines of Muthu and Padayappa, earlier releases of the Superstar. The new project may commence from January it is expected. An official confirmation in this regard will be out shortly.

It may be mentioned here that Rajinikanth developed health complications during the pooja of Rana and was later flown to Singapore for treatment.

மறுபடியும் ராணா படப்பிடிப்பு ஆரம்பிக்கப்போறதா எந்தவிதமான கூச்சமோ வெட்கமோ இல்லாமல் சொல்வதும் இவர்களே!



Contrary to reports that Rana has been shelved, the film’s producer Eros International has issued a press statement to put an end to all confusion. According to the press statement, Rana’s shooting schedules will be finalized during the month of December, keeping in mind Rajnikanth’s health conditions.

The director of Rana, KS Ravi Kumar has said, “Though Rajinikanth has recovered fully well and is keen to start the shooting, we have delayed the start of the shooting, as we don’t want to rush him to start the film shooting immediately, as the film has Rajini playing triple role and has some stunning stunt sequences.”

Sunil Lulla, Managing Director, Eros International Media Ltd stated: “It is a proud project for us and we don’t mind waiting to be a part of this ambitious project with Rajinikant as we want him to rest for some more time. Hence we have decided to take the decision on the shooting dates in December 2011.”

நேற்று படத்தை கம்ப்ளீட்டாக ட்ராப் பண்ணிவிட்டதாக, எந்தவித சந்தேகம் இல்லாமல்ச் சொல்லிவிட்டு, இன்னைக்கு அதற்காக வருத்தமோ மன்னிப்போ கேட்காமல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்போவதாக சொல்லும்போது எனக்கு நல்லாத்தன் வாயில வந்தது.

behindwoods!!!

You are the one who reported, Rana has been dropped. Now you act like someone else said that? What the fuck is this behind-moronic-woods?? I think you owe an apology to the public for this fuck-up!

இதுபோல் நம் இணையதளப் பத்திரிக்கைகள்கூட தான் சொன்ன செய்தி தவறானதுனு சொல்லி மன்னிப்பு கேட்கத் தெரியாத நாகரிகம் தெரியாதவர்களாகத்தா இருக்காங்க ! காலம் மாறுது நாம் முன்னேறுகிறோம் ஆனால் நம் தரம்மட்டும் ஏன் முன்னேறமாட்டேங்கிதுனு தெரியலை.

நம்ம நக்கீரனில் இன்னொரு செய்தி!





‘ராணா’ பட ஷூட்டிங் பெங்களூரில் 3 நாட்கள் நடக்கிறது. அங்கு நைஸ் ரோடில் நடக்கும் படப்பிடிப்புக்காக நேற்றிரவு விமானத்தில் ரஜினி பெங்களூர் புறப்பட்டு சென்றார்.

13ம் தேதி முதல் 15ம் தேதி ஷூட்டிங் நடக்கிறது. தீபிகா படுகோனுடனான காட்சிகள் கடைசி 2 நாட்கள் படமாக்கப்படுகின்றன.


தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்திற்காக ரஜினி தங்கும் வழக்கமான ஓட்டல் முழுவதும் படப்பிடிப்புக் குழுவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பில் பென்ட்லி கன்டினட்டல் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் கார்கள் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தச்செய்தி உண்மையாக இருக்க சாண்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி. தினபூமினு இன்னொரு பத்திரிக்கை தவிர வேற யாருமே இதைப்பத்தி எதுவுமே எழுதலை!

Tuesday, November 15, 2011

செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லை! (18+ மட்டும்)

"யு பாஸ்டர்ட்!"னு கத்தினாள் காமினி.

"இப்போ என்ன சொல்லிட்டேன் னு சும்மா கத்துற? நானே உன்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சும் சும்மா "கூலா" இருக்கேன். "

"அதுக்காக?"

"ஏன் டென்ஷன் ஆகுற? இல்லை, நீ மட்டும் எஞ்சாய் பண்ணுற இல்லை?.. நான் சொல்றபடிச் செய்தால் எனக்கும் கொஞ்சம் "ஃபன்" னாயிருக்குமேனுதான் கேட்டேன்."

"பாஸ்டர்ட்!"

" ஏன் சும்மா துள்ளுற? உனக்கெல்லாம் இது சாதாரண விசயமாயிருக்கும்னு நெனச்சேன். சரி, பிடிக்கலைனா பிடிக்கலைனு நாகரிகமா சொல்ல வேண்டியதுதானே?" என்றான் கோபமே படாமல்.

"நாகரிகமாவா? இவ்வளவு கேவலமா கேட்டுட்டு?"

"யா, யு ஆர் ஃபக்கிங் அரவுண்ட் வித் திஸ் கை. நான் ஏதோ கேக்கக்கூடாத கேட்டுட்டதா பொங்கி எழுற? நீ செய்றது தெரிஞ்சப்புறமும், நான் உன்னை என்ன "ஸ்லட்"னா அநாகரிகமா சொன்னேன்? உன் தேவைகளை நான் புரிஞ்சுக்கல? நான் ஈஸியா எடுத்துக்கல?"

"அதுக்காக? இவ்வளவு கேவலமா இருக்கியே நீ?"

"நானா? கேவலமாவா? நீ பெரிய பத்தினி தெய்வம் பாரு! உனக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுவோமா? . நல்லவேளை உனக்கு எதுவும் குழந்தை பொறக்கலை."

காமினி அழுதுகொண்டே கோபமாக வீட்டைவிட்டு வெளியே போய் அவள் காரை ஸ்டார்ட் பண்ணிப் புறப்பட்டுப் போனாள். அடுத்த சில நாட்களாக வீட்டுக்குத் திரும்பி வரலை. ஏதாவது வக்கீலைப் பார்த்து பேசிட்டு இருப்பாள் என நம்பினான் விவேக்.

-------------------
சில நாட்களில்..

"என்னடா காமினியை காணோம்?" என்றான் ஈவனிங் வீட்டுக்கு வந்த நண்பன் பாலு.

"உனக்கு என்ன காஃபிதானே வேணும்? நான் போட்டுத் தர்றேன்!"

"என்னடா ஆச்சு? அவங்க காரையும் காணோம்?"

"அவளை ஒருவழியா ஒரு நல்ல "ப்ளாட்" போட்டுத் தலை முழுகியாச்சுடா! அனேகமா 100% திரும்பி வரமாட்டாள்"

"அதைப்பத்தி கேட்டியா என்ன?"

"ஆமா, நான் கூலா சொன்னேன் "அதனால ஒண்ணும் இல்லை" "செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லை காமினி" "நம்ம மாரி "கணவன் - மனைவி" உறவுதான் ரொம்ப முக்கியம், அதுதான் ரொம்ப ஸ்ட்ராங்கானது" னு சொல்லிட்டு, அவகிட்ட நான் ஒரு "ப்ராபஸிஷன்" சொன்னேன்."

"ப்ராப்பஸிஷன்? என்ன ப்ராப்பஸிஷன்? "

"நீ செய்றத செஞ்சுக்கோ, எனக்கு ஒரு உதவி செய்றயானு ஒரு "டீல்" போட்டேன்.."

" யு மேட் எ டீல் வித் ஹெர்? ஆர் யு ஜோக்கிங்?"

"ஆமடா! ஆனால் அந்த பத்தினி தெய்வம் பொங்கி எழுந்துடுச்சு! நான் அவங்கள ரொம்ப அவமானப்படுத்திப்புட்டோமாம். அழுதுக்கிட்டே கோவிச்சுக்கிட்டு ஓடியே போயிட்டா! இனிமேல் என்னை இப்படி ஏமாத்த வேண்டியது இல்லைல? அவனோடைய 24 மணி நேரமும் படுத்து எந்திரிச்சு காமலாகத்தில் சஞ்சரிக்கலாம். ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கலாம். என்ன சொல்ற?"

"என்னடா நடந்துச்சு? என்ன கேட்ட அவள்ட்ட? என்ன பரப்பஸிஷன்?"

"மொதல்ல அவனோட படுத்து எந்திரிக்கிறது ரொம்ப சுகம்மா இருக்கானு கேட்டேன்.."

"வாட்!!"

"அவளுக்கு முகம் போன போக்கைப் பார்க்கனுமே நீ!"

"நெஜம்மாவே அப்படியே கேட்டியாடா?"

"என்ன நீ? அவ அதைத்தான பண்ணிக்கிட்டு இருக்காள்? என்னவோ நான் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னது மாரி கேக்கிற?!"

"உனக்குத்தான் தெரிஞ்சிருச்சு இல்லை. அதுக்காக இப்படியா நேரிடையா கேப்பாங்க?"

"இதைக்கேளுடா! அடுத்து நான் சொன்னேன், "செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை, காமினி" "நானும் உங்களோட சேர்ந்துக்கிறேன்..லெட் அஸ் ஹாவ் ஃபன் டுகெதெர். ஐ ஹோப் யு டோண்ட் மைண்ட்" னு சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.."

"ஓ மை காட்!"

"ஷி ஹாஸ் பீன் ஸ்லீப்பிங் வித் திஸ் கை அண்ட் ச்சீட்டிங் மி!"

"அதுக்காக? இதெல்லாம் ரொம்ப அதிகம்டா! இதெல்லாம் "செடிஸ்டிக்"டா. நம்ம அவர்கள் ராமநாதன் பரவாயில்லை போல!"

"சும்மா இருடா! இவ உண்மையான ரூபம் தெரியும்போது எனக்கு எப்படி இருந்து இருக்கும்? சரி என்னைப் பிடிக்கைலா, இவளுக்கு அவனோட படுக்கத்தான் பிடிக்குதுனா , என்னை டைவோர்ஸ் பண்ணிட்டுப் போயி அவனோட படுக்க வேண்டியதுதானே? என்ன மயிறுக்கு இந்த ஏமாத்து வேலை? பணத்துக்கு ஒருத்தன் படுக்க இன்னொருத்தன் இவளுக்கு! அவ அழும்போது எனக்கு சிரிப்புத்தான் வந்தது."

"அதுக்காக? என்ன கேக்கிறதுனு இல்லையாடா, விவேக்?"

"நம்புனா நம்பு, I felt great asking that and insulting that SLUT! என்ன பண்ணுவா? அவ லாயர்ட்டப் போயி இப்படி கேக்கிறான் இந்தப் பொறுக்கி னு சொல்லுவா? சொல்லிட்டுப் போகட்டும்! லாயர் என்ன சொல்லிடப் போறான்? நீ மட்டும் ரொம்ப யோக்கியமானு மனசுல நெனச்சுக்குவான்.."

"ஒருவேளை லாயர் அவளைக் கண்வின்ஸ் பண்ணி அனுப்பி உன் டீலுக்கு ஒத்துக்க வச்சுட்டா? ஜஸ்ட் கிடிங்"

"ஹா ஹா ஹா. நான் என் லாயரைப் பார்த்து பேச வேண்டியதுதான் இவளை எப்படி ஒரேயடியா தலை முழுகுறதுனு! வீட்டு "லாக்" கை முதல்ல மாத்தனும்!"

Monday, November 14, 2011

இந்தவாரம் வேலாயுதம் மண்ணைக் கவ்வியது!

""ரொம்ப ஆடாதீங்கடா அரை டவுசர்களா" னு சொல்றாப்பிலே இருக்கு சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்ல இந்த வார வசூல் நிலவரம்!! போனவாரம் #1 ஆக பீத்தப் பட்ட வேலாயுதத்தை "ஏழாம் அறிவு" இரண்டாம் இடத்துக்கு தள்ளி மறுபடியும் முதல் இடத்தைக் கைப்பற்றியது!!

ஏழாம் அறிவு #1!!




Cast: Suriya, Shruthi Hassan
Direction: A.R.Murugadoss
Music: Harris Jeyaraj
Production: Udhayanidhi Stalin (Red Giant Movies)



Murugadoss’s sci-fi thriller attempts to bring back Bodhidharma to life and traces his roots to Tamil Nadu. But other than that, 7aum Arivu is an attempt that needed extensive research.

Trade Talk:
First two weeks have been good with collections, thanks to spectacular advance bookings.

Public Talk:
Suriya’s Matraan.

No. Weeks Completed: 2
No. Shows in Chennai over this weekend: 378
Average Theatre Occupancy over this weekend: 75%
Collection over this weekend in Chennai: Rs. 7,672,207
Total collections in Chennai: Rs. 6.43 Crore

மண்ணைக்கவ்விய வேலாயுதம் #2!!



Cast: Vijay, Genelia, Hansika Motwani, Saranya Mohan, Santhanam
Direction: Jeyam Raja
Music: Vijay Antony
Production: Aascar Films

Velayudham is the surprise Diwali package. The unapologetically commercial flick makes no bones about being so and that’s part of the fun.

Trade Talk:
After being released in many theatres in the city, Velayudham is making good business.

Public Talk:
Did you hear they are banning Genelia from acting in Telugu movies?

No. Weeks Completed: 2
No. Shows in Chennai over this weekend: 324
Average Theatre Occupancy over this weekend: 80%
Collection over this weekend in Chennai: Rs. 6,667,185
Total collections in Chennai: Rs. 6.21 Crore

Verdict: Very Good Opening

-----------------

பாவம் வேலாயுதம் கிழிச்சிருச்சுனு போட்ட ஆட்டமெல்லாம் ஒரு வாரத்தில் அடங்கிறாப்பிலே ஆயிப்போச்சு! :(

என்ன பண்ணுறது? :(

கேரளாவிலும் 7 ம் அறிவு , கலக்சனில் வேலாயுதத்திற்கு எந்தவகையிலும் குறையவில்லை என்கிறார்கள்!! :))

Thursday, November 10, 2011

வித்யாபாலனின் ஆபாசப்படம்!



நம்ம "மடோனா" சேச்சி மாதிரி இந்தம்மா வித்யாபாலனுக்கும் எப்படியோ பாப்புளர் ஆகனும்ங்கிற ஒரு ஆட்டிட்டுட்?! 33 வயசாயிடுச்சு இன்னும் "சிங்கிள்" தான்! அதனால்தானோ என்னவோ, இவர் நடிக்கிற "ஆபாசப்பட"த்துக்காக இவரு கொடுக்கிற "போஸ்", இந்தப்படத்தை "ப்ரமோட்" பண்ணுறதுக்காக இவரு ஆடும் ஆட்டம் (நடனம்) எல்லாம் ரொம்ப ரொம்ப மோசமாயிருக்கு!

ஆனால் ஒண்ணு, சில்க் ஸ்மிதாவைப் படத்திலே பார்த்தால் எனக்கு உள்ள மூடும் ஓடியே போயிடும்! வித்யாபாலனைப் பார்த்தால் அப்படி சொல்ல முடியலை! இஸ் ஷி ஹாட் ஆர் வாட்?!

கொஞ்ச நாள் முன்னால் இவரு இந்த "டேர்ட்டி பிக்ச்சர்" சம்மந்தமாக ஒரு ஆபாசப்படம் ஒண்ணு பார்த்ததாக சொல்லி எதையோ மென்னு முழுங்கினார்.

ஆபாசப் படம் பார்த்தாரா வித்யாபாலன்?!


அதுல, ஏன் காலஞ்சென்ற நடிகை சில்க்கை மட்டும் தனிமைப்படுத்தி சில்க் வாழ்க்கை பற்றி இந்தப்படம்னு சொல்லிக்கிட்டு திரிகிறானுக? அதெப்படி ஒரு நடிகையை மட்டும் இப்படி கேவலப்படுத்தலாம்? ஒருவேளை கேட்க ஆள் இல்லையா? .. ஆமாங்க! கீழே படிச்சுப் பாருங்க!


எம்பதுகளிலே சில்க் ஸ்மிதானு ஒரு கவர்ச்சி நடிகை இருந்தது எல்லாருக்கும் தெரியும். மறைந்துவிட்ட இந்த நடிகை, கமல், ரஜினி படங்களில் எல்லாம் நெறையா நடிச்சு இருக்காரு. பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை ல கூட ஒரு வித்தியாசமான ரோல் பண்ணியிருப்பார்.

பல படங்களில் நடிச்சு "கவர்ச்சிக் கன்னி" யாக இருந்த இவர், திடீர்னு ஒரு நாள் போயி சேர்ந்துட்டார். தற்கொலைனு சொல்லப்பட்டது! கொலையாக்கூட இருக்கலாம்னு பேசப்பட்டது. இதெல்லாம் ஒண்ணும் சினிஃபீல்ட்ல் ல புதுசு கெடையாது! அதாவது குணச்சித்ர நடிகை ஊர்வசி ஷோபாவும் அப்படித்தான் இறந்தார். பாக்யராஜ் முதல் மனைவி ப்ரவீனாவும் குறைந்த வயதில் போய் சேர்ந்தார். கோழிகூவுது விஜி, சிம்ரன் தங்கை, லக்ஷ்மி ஸ்ரீ இப்படி பலர் இறந்துபோயிருக்காங்க!

எனக்கு என்ன புரியலைனா என்ன திடீர்னு இந்த ஒரு நடிகையை மட்டும் ஒரே அக்கறையோட இவர் வாழ்க்கையை படம் பிடிக்கிறாங்களாம்? சில்க் ஸ்மிதாவை மட்டும் ஏன்?? இவருக்கு மட்டும் கேட்பார் யாரும் இல்லையா? நிச்சயம் அப்படித்தான் இருக்கனும், பாவம்!

இப்போ புதுசா கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா போர்னோக்ராஃபியிலே இறங்கியதாக இன்னைக்கு சொல்றாங்க! சரி அப்படியே இருந்துட்டுப்போகுட்டும்! ஏன் இதுபோல் பல நடிகைகள் விபச்சாரத்தில் இறங்கியதாக நாம் படிக்கலையா என்ன? படங்களுடன் லெனின்னு ஒரு ஆளு நெறையப்பேரு படங்களைப் போடலையா? அவங்க வாழ்க்கையை எல்லாம் படம் பிடிக்காமல் ஏன் இறந்துபோன சில்க் ஸ்மிதாவை மட்டும் தோண்டி எடுக்கிறாங்கனு தெரியலை!

கேட்க ஆளில்லையா? நான் கேட்டதை யாரோ படிச்சுட்டுப்போயி சில்க்கோட தம்பிட்ட சொல்லிட்டாங்க போலயிருக்கு! :)

Its time the makers of The Dirty Picture take a stand on what they want their film to be known for. Right from the beginning, director Milan Luthria has said it is a biopic on actress Silk Smitha.

Now, that Silk's brother has raised objections, Balaji Films has sent across a note that the film is not about any actress. It's a fictional story about an ambitious girl. "Balaji wishes to clarify that The Dirty Picture is the romantic journey of a fiercely ambitious starlet who dreams of making it big on the silver screen", the note read. "It draws inspiration from the strugglers in the 80s whose indomitable spirit made them emerge triumphant and create a unique space for themselves in the male-dominated film industry," it further read.

The film is not a formal biopic or biography, as is being speculated. It is a work of fiction, and any characters resemblance to real persons, living or dead, is coincidental.

அதாவது இப்போ பிரச்சினைனு வந்ததும் இது சில்க் பத்தி இல்லைனு (பொய்)சொல்றானுக! This is how they cover their bottom now!!! அப்படினா என்னத்துக்கு சில்க் சில்க் னு சொல்லிக்கிட்டு திரிஞ்சானுகனு தெரியலை.

இந்த படத்தைப் ப்ரமோட்ப் பண்ண இந்தம்மா எப்படியெல்லாம் கோதால இறங்குதுனு பார்த்துக்கோங்கப்பூ!!!




I am just curious.. Will Vidya Balan's mom be proud of her for this kind of "slutty" performance or what?

Tuesday, November 8, 2011

விஜய்க்கு சூர்யா எவ்வளவோ மேல்!

வேலாயுதம் படம் ஓரளவுக்கு பிக் -அப் ஆனதுல இருந்து எங்கே பார்த்தாலும் சக்ஸஸ் மீட், பிஹைண்ட்வுட்ஸ ல பரிசு கொடுக்கிறது, சாட் பண்ணுகிறேன்னு விசயின் சிறுபிள்ளைத்தனம் தான் பார்க்க முடியுது. என்னவோ உலகத்தரத்திலே ஒரு படம் கொடுத்துட்டதுபோல! ஆமா முன்னப்பின்ன வெற்றியையே பார்த்ததில்லையா இந்த ஆளு? னு எல்லாரும் புருவத்தை சுறுக்குமளவுக்கு கேவலமாயிருக்கு!

இதுல வேடிக்கை என்னனா வேலாயுதம் ஹிட் சரி, அப்போ காவலன் ஃப்ளாப்பா? னு கேட்டால் "பே பே" னு முழிக்கிறானுக!




காவலன் சென்னை கலக்சனை ப்பார்த்தால் மங்காத்தா கலெக்சன் பக்கத்தில்கூட இல்லை. நான் பொய்யெல்லாம் சொல்லலங்க! கீழே நீங்களே பார்த்துக்கோங்க


காவலன்!

Cast:
Vijay, Asin, Rajkiran, Vadivelu
Direction: Siddique
Music: Vidyasagar
Production: C. Ramesh Babu

No. Weeks Completed: 6
No. Shows in Chennai over this weekend: 24
Average Theatre Occupancy over this weekend: 42%
Collection over this weekend in Chennai:Rs.208,560
Total collections in Chennai: Rs. 3.36 Crore

Verdict: Average



மங்காத்தா!

Cast: Ajith Kumar, Trisha, Arjun, Andrea Jeremiah, Lakshmi Rai, Premji, Anjali, Vaibhav

Direction: Venkat Prabhu
Music: Yuvan Shankar Raja
Production: Dayanidhi Azhagiri

No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 75
Average Theatre Occupancy over this weekend: 50%
Collection over this weekend in Chennai: Rs. 838,680
Total collections in Chennai: Rs. 8.07 Crore

Verdict: Blockbuster


பொங்கலுக்கு வந்த காவலன் கிழிச்சுருச்சு, அது இதுனு சொன்னது எல்லாம் பொய்! காவலன் உண்மையிலேயே ஃப்ளாப்னு இப்போ வேலாயுதம் வந்ததும்தான் தெளிவாகத் தெரியுது!

சரி, உனக்கு என்ன பிரச்சினை? எனக்கு பிரச்சினையில்லை! விஜய், விஜய் அப்பா, அப்புறம் விஜய் ரசிகர்கள் எல்லாம் எப்படியாவது வேலாயுதத்தை பெரிய ஹிட்ட்டாக்க்கிப்புடனும்னு நாலுகால்ல நிக்கிறாங்க. வேலாயுதம் ஹிட்னு சொல்ல ரொம்ப கஷ்டப்பட்டு அதோடு சரிக்கு சரி நிக்கும் ஏழாம் அறிவை முந்திப்புடுச்சு, அப்புறம் கொஞ்ச நாள் முன்னால வந்த மங்காத்தாவை முந்திடுச்சுனு சொல்றதுக்கு பதிலா ப்ளாப்பாப்போன காவலனை கம்ப்பேர் பண்ணலாம் னு எனக்கு தோணுது. ஆனால், அப்படி செய்யனும்னா இப்போவாவது உண்மையை ஒத்துக்கொள்ளனும்! என்ன உண்மை? அதான் காவலனும் ஃப்ளாப் படம்தான் னு!

ஏழாம் அறிவு பயங்கரமாக எதிர்பார்க்கப்பட்டு, விகடன் தவிர (48/100) மற்ற விமர்சகர்கள் மத்தியில் பயங்கர அடிவாங்கியது உண்மைதான். ஆனால் என்ன காரணமோ படம் தோல்வினு சொல்ல முடியாத அளவுக்கு ரெண்டு வாரக் கலக்சன் சென்னையில் 4.58 கோடிகள்னு வந்து நிக்கிது. படம் எல்லா எடத்திலேயுமே நல்லாப் போகுதுனு வேற சொல்றாங்க.

ஆந்திராவிலும் ரா ஒன் /ஜி-1 கலக்சனைவிட இந்தப்படம் (7th sense) அதிகமாக வசூல் பண்ணியிருக்கு! மேலே உள்ள படத்தைப் பாருங்க!

இந்த விஜய் தொடர் ஒளறல் (வேலாயுதம் கிழிச்சிடுச்சுனு) தாங்கமுடியாமல் சூர்யா தெளிவாக ஒரு ப்ரஸ் மீட் கொடுத்து இருக்காரு!

Suriya met the press in a jubilant and happy mood to celebrate the success of his 7 Aum Arivu and to thank the media for their support.

The actor said, “At the start of my career, I could never imagine that any film of mine would get this kind of a response as 7 Aum Arivu has got and that any of my films could do such business. The film has had a tremendous response. Many viewers who haven’t gone to the theatres in a long time have come to see this film, as per what some exhibitors have told me. A very different crowd has come to see this film at many places. Both in India and overseas the response has been terrific. I want to thank the media for their role in supporting me through my career and also pointing out any flaws which made me introspect.”

He agreed that the film had got a mixed response from the media in their reviews but added that the exhibitors, producer and director are very happy with the results. “Singham was my biggest commercial success till now but this film’s collections have surpassed that in the first ten days itself,” he said.



இப்போ சொல்லுங்க நடிப்பிலும் சரி, நாகரிகத்திலும் சரி, நடத்தையிலும் சரி, விஜய்க்கு சூர்யா எம்புட்டோ மேல்தானே?

இவ்வளவு தெளிவா விளக்கியதுக்கப்புறமும் இனிமேல் எவனாவது காவலன் ஹிட் னு சொல்லிக்கிட்டு திரிஞ்சா அப்புறம் நல்லாயிருக்காது சொல்லிப்புட்டேன் ஆமா!

Friday, November 4, 2011

சாதனைகள் படைத்த வேலாயுதம்?! உண்மைகள்!

இப்போ எல்லாம் ஒரு படம் வெற்றியா தோல்வியானு கண்டுபிடிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டமாப் போயிடுச்சு! வெளி வந்தபோது வெற்றினு சொன்னபடமெல்லாம் பின்னால நஷ்டமடைந்ததா வேற சொல்றாங்க! பொதுவாக எல்லாப்படங்களுமே நாலு வாரம்தான் ஒழுங்கா ஓடுது. இதுல முதல் மூனு நாள்யே 50 கோடி எடுத்துட்டார்கள் னு சொல்றாங்க! அப்புறம் இந்த "சக்ஸஸ் மீட்" னு ஒண்ணை வேணும்னே ஆரம்பிச்சு படத்தை வெற்றிப்பாதையில் செலுத்த முயல்றாங்க! இந்த சக்ஸஸ் மீட்டே வியாபார யுக்திதான்! ஏன்ப்பா வெற்றி யடைந்ததை 25 நாளுக்கப்புறம் கொண்டாடக்கூடாதா??

சரி, வேலாயுதத்தைப் பார்ப்போம்! போன பொங்கலுக்கு அப்புறம் விஜய் படம் தீபாவளிக்குத்தான் வந்திருக்கு! பெரிய இடைவெளிக்கு அப்புறம்!

காவலன் வெளியிடப்பிரச்சினைகள், தியேட்டர்கள் கெடைக்கலை, திமுக ஆட்சி விஜயைக் கவுத்துறாங்கனு சொல்லிச் சொல்லி எழவைக்கூட்டினாங்க. அப்புறம் காவலன் தடைகளைமீறி பெரிய வெற்றியடைந்துவிட்டதாக ஊர் உலகத்துல உள்ள விஜய் ரசிகர்கள் எல்லாம்- அண்ணே சந்திரசேகராவையும் சேர்த்துத்தான் - சொன்னாங்க! ஆக விஜய் படம் காவலன் கவுத்தப்பட்டதால் பாக்ஸ் ஆஃபிஸில் முதல் இடத்தை பெற முடியாமல் ரெண்டாவதுக்கு போனதுனு நம்பினோம்! அதுக்கப்புறம் அது முதல் இடத்தை அடையவே இல்லை. சிறுத்தைதான் #1 ல கடைசிவரை இருந்தது. அது தான் காவலனை விட வெற்றி பெற்றது!

சரி, இப்போ அதிமுக ஆட்சி வந்துருச்சு. 10 மாதங்களுக்கு அப்புறம் நம்ம விஜய் படம் அம்மா ஆட்சியில், அம்மா ஆசிகளுடன் வெளிய வருது! இப்போவாவது #1 இடத்தைச் சென்னையில் பெற்றதா? அதுவும் இல்லை! ஏழாம் அறிவைக் கொஞ்சம் முன்னால தள்ளி, விளம்பரம் பண்ணி அப்படி இப்படினு ஏழாம் அறிவுதான் #1 ஆகிப்போச்சு!

ஆந்திராவில் ஏழாம் அறிவு ஒரு 200 தியேட்டர் போல ரிலீஸ் பண்ணி இருப்பாங்க. ஹைதராபாத்லயே ஒரு 50 தியேட்டர்ல வெளி வந்தது. எப்படி கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் ஒரு 20 கோடியைத் தேத்திடும். வேலாயுதம் இந்த இருபது கோடியைப் பெறவே முடியாது!

சரி, யு கே ல எப்படி?

ரா ஒன் க்கு சுமார் 908,768 ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ், வேலாயுதம் 66,842 பவுண்ட்ஸ் அப்புறம் ஏழாம் அறிவு 55,600 பவுண்ட்ஸ்னு வந்து நிக்கிது! ரா ஒண்ணு எங்கேயோ போயிடுச்சு!

வேலாயுதம் கலக்சன் காவலன் கலக்சனைவிட கொஞ்சம் அதிகம்!

ஏழாம் அறிவு கலக்சன் காவலனைவிட கொஞ்சம் அதிகம். வேலாயுதத்தைவிட கொஞ்சம் கம்மி!

6 Ra.One UK/Ind/USA \£908,768 Eros - 1 94 \£9,668 \£908,768


22 Kaavalan Ind £49,475 Ayngaran 0 1 17 £2,910 £49,475



23 7 Aum Arivu Ind \£55,602 B4U - 1 19 \£2,926 \£55,602


21 Velayutham Ind \£66,843 Ayngaran - 1 17 \£3,932 \£66,843


ஆனால்
யு கே னு எடுத்துக்கிட்டா அஜீத்துடைய "மங்காத்தா" தான் காவலன், வேலாயுதத்தை எல்லாம் விட கலக்சனில் ரொம்ப அதிகம்!


15 Mankatha Ind \£110,383 Ayngaran - 1 16 \£6,899 \£110,383

மலேசியாவில் எப்படி?

இங்கேயும் அப்படி ஒண்ணும் வேலாயுதம் எழாம அறிவைவிட ரொம்ப முன்னால் போனதாகத் தெரியலை! ஓப்பெனிங் ரெண்டு படத்துக்கும் நல்லாத்தான் இருந்ததாக சொல்றாங்க.


அமெரிக்காவில் எப்படி?

இங்கே ஏழாம் அறிவுதான் அதிகாம திரையிடப்பட்டது. இங்கேயும் வேலாயுதம் அப்படி ஒண்ணும் அதிகம் கலக்ட் பண்ணியிருக்க முடியாது. ரெண்டாவது வாரம் கலக்ஷன் என்பது அமெரிக்கா, யு கே ல எல்லாம் அர்த்தமற்றது. மலேசியால என்ன நடக்குதுனு பார்ப்போம்.

இதுவரை வேலாயுதம் எதையும் பெருசா சாதிக்கவில்லை! இனிமேல் எப்படினு பார்ப்போம்! :)

Wednesday, November 2, 2011

தங்கம் பதுக்க ஒரு விபரீத வழி!

உலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க!

தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதும் இந்தியாதான். தங்கம் தங்கம்னு அலைபவர்கள், 100 சவரன், 200 சவரன்னு நகைபோட்டு திருமணம் செய்பவர்களும் இந்தியர்கள்தான். இன்னைக்கும் தங்கத்தில் "இன்வெஸ்ட்" பண்ணுறதுதான் புத்திசாலித்தனம்னு நம்புறவங்களும் நம்ம மக்கள்தான்.





ஆமா தங்கத்துக்கு ஏன் இம்பூட்டு மதிப்பு?

அது எப்போவுமே பிரகாஷமாக இருப்பதுதான்னு சொல்லலாம். அது ஏன்? It does not get oxidized easily like Iron or other metals னு சொல்லலாம். அதைவிட முக்கியக்காரணம் என்னனா அதனுடைய Natural abundance ரொம்ப கம்மி என்பதே! அப்படினா? உலகமே ஒரு நூற்றி பதினெட்டுத் தனிமங்களால் ஆனதுதான். ஒவ்வொரு தனிமமும் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இயற்கையில் கிடைக்கிறது. ஒரு தனிமத்தை இன்னொரு தனிம்ம்மா மாத்துவதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்.

குதற்கமா ஒரு கேள்வி!

சப்போஸ் திடீர்னு தங்கம் டன் கணக்கில் கெடைக்குதுனா?? தங்கத்திற்கு மதிப்புக் குறைந்துவிடும். அது குறைய கிடைப்பதால்தான் அதற்கு மதிப்பு! டன் கணக்கில் எங்கேயோ கெடச்சதுனா தங்கம் வச்சிருக்கவன்லாம் தலையில் துண்டைப் போட வேண்டியதுதான். அதை வச்சு வேற எதுவும் பெருசா பண்ண முடியாது!

உலகமே 118 தனிமங்களால் ஆனதா? ஆமாம்! உங்களையும் என்னையும் சேர்த்துதான். கடவுளும் இதில் அடங்குவாளா/வாரா னு கேக்காதீங்க? அடங்கனும்! நம்ம உடம்பெல்லாம், நம்ம சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை எல்லாமே இந்த 118 தனிமங்களால் ஆனதுதான். அதுல ஒரு தனிமம்தான் இந்தத் தங்கம் என்கிற உலோகம்!




Au தான் இந்த உலோகத்தினுடைய "சிம்பல்"!

அணு எண்: 79

அப்படினா என்னங்க? அதெல்லாம் எதுக்கு? ஃப்ரீயா விடுங்க! அது ஒண்ணும் இப்போ முக்கியம் இல்லை!

விஷத்தங்கம்:

தங்கம் ஒரு விஷத்தன்மை இல்லாத உலோகம்தான். அதனாலதான் தங்கப்ஸ்பம்லாம் சாப்பிடுறாங்களானு தெரியலை. ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதான்.

தங்கத்தை விஷமாக்க முடியுமா? ஏன் முடியாது? Au(CN)3 என்பது தங்கத்தின் விஷ வடிவம். தங்கத்தை ஒரு சயனோ காம்பவுண்டாக மாற்றி (அதாவது கோல்ட் சையனைட்) விட்டால் இதனுடைய நிறம் வெள்ளை. கிலோ கணக்கில் நீங்க வச்சிருந்தாலும் அது தங்கமாக யாருக்கும் தெரியாது! அதாவது கிலோகணக்கில் கோல்ட் சையனைடா நீங்க பதுக்கி வைத்தால் அதை தங்கம்னு கண்டுபிடிப்பது கஷ்டம்.

வேணும்கிற போது சையனைடை கழட்டிவிட்டுட்டு தங்கமா மாத்திக்க வேண்டியதுதான்!

அவ்வளவு ஈஸியா பண்ணிட முடியுமா? முடியலைனா என்னிடம் கொடுத்துருங்க! உங்களுக்கு எதுக்கு இந்த விஷம், விஷப்பரீட்சை எல்லாம்? :)