Friday, August 23, 2013

தமிழ்மணத்தில் ஆபாச நாற்றம் அடிக்க வைக்கும் நிரூபன்!

பொதுவாக ஈழத் தமிழர்கள் பொறுப்புணர்வுடன் கவனமாக பதிவெழுதுவார்கள். வயதில் சிறியவர்களாக இருந்தாலும் நடத்தையில் உயர்தரமாக இருக்கிறார்களே? என்று என்னை வியக்க வைப்பவர்கள் இவர்கள்.  இவர்கள் மட்டும் எப்படி? ஒருவேளை வாழ்க்கையில் பல விதமான இன்னல்களுக்கு ஆளானதால் இப்படி நடந்துகொள்கிறார்களா? எப்படி இவர்கள் மட்டும் தமிழ் நாட்டுத் தமிழர்களைக் காட்டிலும் பொது நோக்குடனும், தமிழ்ப் பற்றுடனும், தரமான பதிவுகளை இடுகிறார்கள் என்றெல்லாம் நான் பொறாமைப் படுவதும் உண்டு. ஆனால் என் எண்ணத்தில் மண் அள்ளிப்போட்டு விட்டார் நிரூபன் என்னும் சகோதரர்.

"சகோதரா!  நாங்களும் உங்களைவிட மோசமானவர்கள், அசிங்கமானவர்கள் தான்" என்பதை நிரூபிக்கும் வகையில் "ஆபாசம்" என்கிற வார்த்தையை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு என்ன எழவை எழுதினாலும் "ஆபாசத்தை" கவனமாக அவர் பதிவின் தலைப்பில் இணைத்து தமிழ்மணத்தையே தொடர்ந்து நாறடிக்கிறார் இந்த நிரூபன்.

இவர் "ஆபாசப் பதிவுகள்" தொடர்ந்து தமிழ்மணத்தின் முகப்பில் அம்மனமாக நின்று நடனம் ஆடிகொண்டு  தமிழ்மணத்தை ஆபாசத்தளமாக பறை சாட்டிக்கொண்டு இருக்கிறது.

வாழ்க இவர் தமிழ்த் தொண்டு!

சேரன் என்னும் அப்பாவும் ஈஸ்வரி என்னும் மாமியாரும்!

சேரன் மகள் தாமினி, அப்பா அம்மாவிடமே திரும்பி சென்றுவிட்டாராம்.   "விஸ்வரூபம்" ரிலீஸ் ஆனபோது அமீரின் நிலைப்பாட்டை வைத்து அவரை "தீவிரவாதி" என்றுகூட விமர்சிச்சது இந்த உலகம். இந்த தாமினி  விசயத்தில் அமீர், சந்துருவுடைய முகத்திரையை விலக்கிக்காட்டி, "சந்துரு நல்லவனாக இருக்க முடியாது"னு உலகுக்கு அவனைக்காட்டியது பாராட்டத்தக்கது. சேரன் குடும்பப் பிரச்சினை இது.."நமக்கு எதுக்கு வம்பு?"னு ஒதுங்கிப் போறவங்கதான் இந்த உலகில் அதிகம்பேர். அமீர், அப்படி செய்யாமல் தன்னால் முடிந்த உதவியை சேரன் குடும்பத்திற்கு செய்துள்ளார். அவர் ஒரு மூனாவது ஆளாக இருப்பதால் அவர் சந்துரு பற்றி சொன்ன விசயங்களுக்கு மதிப்பு அதிகமானதுனு சொல்லலாம். என்னதான் சேரனும், அவர் மனைவியும் எத்தனை முறை சந்துரு நல்லவன் இல்லை என்று சொன்னாலும் உலகம் அதை அப்படியே எடுத்துக்காது என்பதே உண்மை.


Cheran


In an anti-climax, Tamil actor- director Cheran's daughter, who had earlier stated that she would like to stay with her lover, today told the Madras High Court she wished to go with her parents.
Following his daughter's declaration, Cheran prostrated outside the court hall and court complex.
A division bench comprising Justices V Dhanapalan and C T Selvam observed that Damini is at liberty to go as per her wish as she is a major and dismissed a Haebas Corpus petition filed by the mother of her boyfriend.
On August 6, the court had directed Damini to stay with the headmistress of a city school till today.
When the girl was brought to court today, Damini categorically said she would like to go with her parents.
Counsel for her boyfriend opposed it and said she required counselling.
The bench also rejected a fresh affidavit filed by Easwari Ammal, mother of Damini's boyfriend Chandru, which claimed the girl was under pressure.
Later, Cheran told reporters it was not only a victory for him but for every parent and every woman and prostrated outside the court hall and court premises, thanking the High Court and media.
He said the High Court has dismissed the case against his daughter and she realised her mistake.
He also said Damini's decision to go with her parents was solely hers.
Mother of Damini's boyfriend had filed a Habeas Corpus in the High Court, challenging the order of DCP, All Women Police Station to make Damini stay at a government home at Mylapore here.- இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்
சரி இந்த விடயத்தில்  தவறு யார்மேலேனு பார்த்தால், அது சேரன் பொண்ணு மேலேதான். சந்துரு அயோக்கியன் என்றால், அயோக்கியனை அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாத பெண்தான் இவ்வளவுக்கும் காரணம். மற்றவர்கள் தவறேல்லாம் பிறகுதான்.

உடனே அதுக்கு  18 வயதுதான் 25 வயது ஆகியிருந்தால் மூளை நல்லா வேலை செஞ்சிருக்கும் அது இதுனு கதையெல்லாம் விடாதீங்கப்பா. எனிவே, தாமினியின் வாழக்கையில் பெரிய "சேலஞ்ச்கள்" இனிமேல்தான் வரவிருக்கிறது. இனிமேல் அவர் சரியான துணைவனைத் தேடி வாழ்ந்து காட்டணும்!

எனக்கு இந்த "பிரச்சினை"ல புரியாத இன்னொண்ணு இந்தம்மா ஈஸ்வரினு ஒண்ணு இருக்கு இல்ல? அது பத்திதான். எதோ மகன் காதல்ல விழுந்துட்டான்னு மகனுக்கு சப்போர்ட் பண்ணியதெல்லாம் சரிதான். இப்போ தாமினி, தன் மனதை மாற்றிக்கொண்டு (பொண்ணுங்க மனதை மாற்றிக்கிறதெல்லாம் ஜுஜுபி மேட்டர்! ) அப்பா - அம்மாவிடம் போறாள்னு, சரி சனியன் தொலையிது னு  போய் வா னு அனுப்பி வைக்காமல் இன்னும் போட்டுக்கிட்டு.. "இது அவளுடைய அப்பா அம்மா கொடுத்த ப்ரெஷெரால், மற்றும் மீடியா, அமீர் கொடுத்த ப்ரஷெரால் எடுத்த முடிவு" னு இன்னும் போட்டு எழவைக்கூட்டி ஒப்பாரி வைத்து போராடிக்கிட்டு இருக்கு??

* இந்தம்மா ஈஸ்வரி ரொம்ப நல்லவளா? 

* இல்லைனா வடிகட்டிய அயோக்கியச்சியா?

இந்த ரெண்டில் ஒண்ணாத்தான் அந்தம்மா இருக்க முடியும்!

Wednesday, August 21, 2013

மறைந்த அப்துல்லா என்னும் பெரியார்தாசன் நாத்திகத்தை இழிவுபடுத்திவிட்டாரா?!

 சேஷாச்சலமாகப் பிறந்த இவர், பெரியார்தாசனாக மாறி, பிறகு அப்துல்லாவாக மாறி, இப்போ நம்மை எல்லாம் விட்டு பிரிந்துபோய்விட்டார். அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஓசைனு ஒரு தளம் நடத்திவரும் ஆத்திகர் ஒருவர், பெரியார் தாசன், நாத்திகத்தை துறந்து, அப்துல்லா ஆனதை சில அரசியல்வாதிகள் மறைத்துவிட்டார்கள் என்பதுபோல் பதிவைப்போட்டு ஆத்திகர்களிடன் பெரு மதிப்பெண்ணை பெற்றுள்ளார்..

அவர் பதிவில் இட்ட என் பின்னூட்டம் வெளிவருமா? என்று தெரியவில்லை. ஏன் என்றால் நான் என் மனதுக்கு உகந்த பின்னூட்டங்கள்தான் எழுதுவதுண்டு.. ஓசையை திருப்திபடுத்தணும்னு என் கருத்தை பவ்வியமாக எழுதினால் என்னால் நான் சொல்ல வந்ததை சொல்ல இயலாது.

Anyway, here is a COPY of  my response in his blog post

 பெரியார்தாசன் "பகுத்தறிவு உண்மையை மறைக்கலாமோ..."

about late Abdulla aka periyaar dasan!..


எனக்கென்னவோ அவர் நிதானமாக யோசித்து "பெரியார் தாசன்"னு தன் பெயரை மாற்றி இருக்கணும்ணு தோனுது. எதுக்கு இப்படி அவசரப்பட்டாரு?? பெரியார் மற்றும் நாத்திகம், நாத்திகவாதிகள் யோக்கியதனை என்ன? என்று கொஞ்சம்கூட பகுத்தறியாமல் "பெரியார் தாசன்" மண்ணாங்கட்டினு பேரை மாத்திக்கிட்டாரு போல.

நல்லவேளை அப்துல்லாவாகவே கடைசிவரையில் இருந்து மறைந்தார். ஒரு ஆல்பர்ட்டாக அப்புறமாக மாறாமல்.

மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை எல்லாம் ஒருவர் மனம் சம்மந்தப்பட்ட விசயம். கட்சி மாறுவதுபோல ஆத்திகம் நாத்திகம் ஆத்திகம்னு தாவினால் அப்துல்லா அவர்கள் எதையும் தெளிவாகப் பகுத்தறியத் தெரியாதவர் என்றுதான் அர்த்தம்..

ஆமா வருண், அவர் எழவு வீட்டில் ஏன் இப்படி ஒரு "ஒப்பாரி"னு கேட்கலாம்தான்? இந்தப் பதிவே ஒரு ஒப்பாரிதானே? இல்லையா? ஆத்திகம்தான் உயர்வானதுனு வைக்கிற ஒப்பாரிதான் இது. 


ஆனால் உண்மை என்ன? அப்துல்லா ஒரு திடமான முடிவு எடுக்கத் தெரியாதவர், தன் மனத்தையே சரியாக அறியாமல் குழப்பத்தில் வாழ்ந்தவர்  என்பதே. இவர் இன்னும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், "ஐ லவ் ஜீசஸ் "னுகூட சொன்னாலும் சொல்லியிருப்பார்!

உடனே இஸ்லாமியர்கள் எல்லாம் வந்து "அதெல்லாம் அப்துல்லா அப்படி சொல்லி இருக்க மாட்டார்"னு அடித்துச் சொல்வார்கள். அவர்களால், தன் மனதையே தெளிவாக அறிந்துகொள்ளாத அண்ணன் அப்துல்லா மனதை எப்படிப் பகுத்தறிய முடியும், பாவம்??

Saturday, August 17, 2013

பதிவுலகில் புதுசா ஒரு வருண் வந்து இருக்கிறார்!

ஆமா, வருண் என்கிற பேரை நீ என்ன "பாட்டண்ட்" பண்ணி வச்சிருக்கியா? என்ன? மூடுடா! னு சொல்றீங்களா? "வந்துட்டான் வருண் னு இன்னொருத்தன் வந்திருக்கான்!"னு சொல்ல னு நீங்க  எரிச்சலடையிறது தெரியுது. போலி டோண்டுவை வளர்த்துவிட்டவங்க தானே  நீங்க எல்லாம்?  நம்ம தமிழர் களைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன? உங்களைப் பத்தி தெரிந்தாலும் என் பெயரில் பின்னூட்டங்கள் வருவதால் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா?

பதிவுலகில் பல பதிவர்களுக்கு இதுபோல் போலி ஆட்கள் அப்பப்போ வருவாங்க, போவாங்கனு தெரியாது. அதனால நான் சொல்ல வேண்டியதை அவர்களுக்காகவாவது சொல்லணும்.

பதிவுலகில் புதியவர்கள் கவனத்திற்கு..

வருண் என்கிற இந்தப் புது ஐ டி ல அந்த "வின்னி த பூ" படம் இருக்காது!


 My Photo

இந்த வருண் ஐ டி யை நீங்க க்ளிக் செய்தால் உங்களை இந்த வலைதளத்திற்கு  அழைத்து வரும். அதனால, அதுவும்  "இதே வருண்" தான் போல, ப்ரஃபைல் படத்தை மாத்திட்டாரு போலனு ஒரு சிலர் நினைக்கலாம். அதனாலதான் சொல்றேன்.

அப்புறம் இந்த புது "வருண்" என் பின்னூட்டங்களைவிட நாகரிகமாகவும் பின்னூட்டம் இடலாம். என்னைவிட உயர்தரமானவராகவும் இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. அதனால அவரை நான் இகழ முடியாது. என் பிரச்சினை, அவர் ஐ டி யை க்ளிக் செய்தால்  உங்களை என் வலைதலத்திற்கு கொண்டுவந்து விடுவதுபோல் செய்து  அவர் என்னைப் போல் நடிப்பதுதான்.

பின்னூட்டம் வேணும்னு ஏங்கிக்கொண்டு இருக்கவங்க, இவர் பின்னூட்டத்தை அனுமதிக்கலாம். இவரை நாகரிகமாகவும் நடத்தலாம். அதெல்லாம் அவரவர் இஷ்டம். அவரவர்  சுதந்திரம். அவரவர் உரிமை. ஆனால், அவர் கருத்தை என் கருத்தாக மட்டும் தயவு செய்து எடுத்துக்காதீங்க.

ஜெயதேவின் பதிவில், சூர்யா, சிவகுமார் பங்கேற்ற பதிவர் அமுதவன் இல்லத் திருமணம்!! திரு அமுதவன் பற்றி ஒரு கருத்தை சொல்லியிருக்காரு நம்ம புது வருண்.

சிவகுமாரையும் மைக்கேல் ஆஞ்சலோவையும் ஒப்பிட்டு எழுதியவர் நம்ம அமுதவன்.
அந்த விசுவாசத்துக்காவது சிவகுமார் கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும்
Reply
 இதுல திரு அமுதவனை அவமானப்படுத்துவதுபோல் ஒரு கருத்தை நான் சொல்வதுபோல "அந்த வருண்" எடுத்து வைத்துள்ளார். இதுபோல எங்க எல்லாம் கருத்தைச் சொல்லி இருக்காருனு தேடிக் கண்டுபிடிக்க எனக்கு நேரம் இல்லை.

நிற்க, நான் இதைவிட பல மடங்கு அநாகரிக பின்னூட்டமிடுவதுண்டுதான். நான் பெரிய யோக்கியன்னு சான்றிதழ் எல்லாம் என்னால் உங்களுக்குக் காட்ட முடியாது! ஆனால் குதற்கமான ஒரு கருத்தை என் கருத்தைப் போல  முன் வைக்கும் விஷமி இவன் னு எல்லாருக்கும் புரியுமா? என்னனு தெரியவில்லை.

Please understand that I am not responsible for this venomous guy's responses. I am not going to tell you how you should treat him. It is up to you! Thanks, folks.

Friday, August 16, 2013

காதலுடன் முடிந்துவிட்டது! மஹேஷ்காக!

"காதலுடன்" முடிந்துவிட்டது!

ஆறு மாதங்கள் கடந்த பிறகு!

“என்னடா ரமேஷ், நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா? உன் சந்தியாவுக்கு அரேஞ்சிடு மேரேஜ் யாரோ சாஃப்ட்வேர் இஞ்சினியரோட முடிந்துவிட்டதாம்! நீ அவளை கல்யாணம் பண்ணுவனு நெனச்சேன்?” என்றான் நண்பன் கணேசன்.

“ஆமாடா, எல்லாம் முடிந்துவிட்டது. அவள் எங்கிருந்தாலும் வாழ்க!”

“என்ன ஆச்சு?”

“தெரியலைடா. ஏனோ இது வொர்க் அவுட் ஆகல”

“உனக்கு வருத்தம் இல்லையா?”

“கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்ணுறது? லைஃப் கோஸ் ஆன்”

“கொஞ்சம் விபரமா சொல்லுடா, ரமேஷ், ப்ளீஸ்?”

“நானும் கூடத்தான் இருந்தேன் அன்னைக்கு நைட். அவளுக்கு ஜாலியா ஃபுட்பால் டீச் பண்ணிக்கொண்டு இருந்தேன். திடீர்னு அவங்க அம்மாவுக்கு மறுபடியும் உடம்புக்கு சரியில்லைனு ஒரு கால் வந்தது. உடனே மறுபடியும் லீவ் எடுத்துக்கொண்டு லாஸ் ஆஃப் பே ல மறுபடியும் இந்தியா போனாள் சந்தியா. அங்கே போனா, அவ அம்மா ரொம்ப சீரியஸாம். இவ கல்யாணத்தை உடனே நடத்தனும்! அவங்களுக்கு ஏதாவது ஆகுமுன்னே கல்யாணத்தைப் பார்க்கனும்னு அவங்க அம்மா சொன்னாங்களாம். யாரோ ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர் இந்தியா விசிட் பண்ணியவர் டெஸ்பரேட்டா இவளை கல்யாணம் பண்ணுவேன்னு வந்து நின்னாராம். இவ கண்டிஷன் எல்லாவற்றுக்கும் சரி என்று ஒத்துக்கொண்டாராம்”

“என்ன கண்டிஷன்?'

“ஏதோ “ப்ரிநப்” பாம். பெரிய கம்மிட்மெண்ட்ஸ் எதுவும் இல்லையாம். பிடிக்கலைனா எப்போ வேணா டைவோர்ஸ் வாங்கிக்கலாமாம். இவளும் சரினு சொல்லிட்டாளாம்”

“உன்னிடம் எதுவும் கேட்கலையா?'

“இல்லைடா அவமேலே எதுவும் தப்பில்லை! என்னிடம் கேட்டாள். அங்கே இருந்து கால் பண்ணி, நிலைமையைச் சொன்னாள். எனக்கென்னவோ எதுவும் தெளிவா பதில் சொல்ல முடியலை. சரி அவரையே கட்டிக்கோனு சொல்லிட்டேன்”

“ஏன்டா?”

“I loved her for sure but ரைட் ஃப்ரம் தி பிகன்னிங், எனக்கு ஏதோ ஒரு ஃபீலிங் இருந்ததுடா. I never felt like it will work out”

“என்னவோ போ!”

“என்ன பண்ணுறது? எங்க உறவு காதலுடன் முடிந்துவிட்டது டா"

“சோகம்டா”

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை!”


-முற்றும்

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 16

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 15

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 14

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -13

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -12

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -11

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -10

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 9

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 8

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன்-7

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன்-6

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் - 5

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -4

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -3

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் - 2

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -1

Thursday, August 15, 2013

கோடங்கி தளம் இக்பால் செல்வன் மறைந்துவிட்டாரா?

இக்பால் செல்வன் என்கிற பதிவர் ஒரு வலைதளம் ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருந்தார். கனடாவிலிருந்து எழுதுகிறேன் என்பார். சென்னைதான் தன் சொந்த ஊர் என்பார். இவர் ஒரு நாத்திகர். இஸ்லாமியர் அல்ல! இஸ்லாம் மேல் உள்ள காதலால் "இக்பால்" ஆனேன் என்றார். திடீர்னு டொரொண்டோவில் ஃபெட்னா நடந்த சமயத்திலிருந்து இவர் பதிவுலகில் இருந்து மறைந்துவிட்டார் ! சரி, அவர் மறைந்தார் பரவாயில்லை,  அவர் தளமும் மறைந்துவிட்டது!!

என்ன நடக்கிது இங்கே???

When you go to  http://www.kodangi.com/

It says this DOMAIN is FOR SALE? Is this some kind of business he is doing???

இவர் வந்த புதிதில் ஏற்கனவே இதேபோல் ஒரு தளம் (கோணங்கியோ என்னவோ? )  நடத்தியதாகவும், அதை யாரோ முடக்கிவிட்டாதாகவும், புதிதாக இந்த "கோடங்கி" ஆரம்பித்துவிட்டதாகச்  சொல்லிக்கொண்டு இருந்தார்.
 இவருக்கு மூத்த பதிவர் தருமி மொதல்க்கொண்டு பல நாத்திக நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு இவரைத் தனிப்பட்ட முறையில் பர்சனலாகத் தெரிந்தும் இருக்கலாம்.

என்ன ப்பா நடக்குது? திடீர்னு ஒருத்தர் வர்ராரு. ஒரு நாளைக்கு 2 பதிவு எழுதுறாரு. பதிவுலகில் பல நண்பர்களை சந்திக்கிறார், நட்பு பாராட்டுகிறார். திடீர்னு இருந்த சுவடே தெரியாமல்  மறைந்துவிட்டார். அதைவிட மர்மம் என்னனா அவரோட தளத்தையும் காணவே காணோம்!!! அதைவிடக் கொடுமை என்னனா என்னைத் தவிர யாருக்குமே அப்படி ஒரு ஆள் இருந்தாரா என்னனு ஞாபகம் இருக்குமா என்னனு தெரியவில்லை!

கோடங்கி தளம் பற்றி எனக்கு ஏதாவது விபரம் சொல்லுங்க.

நம்ம நண்பர், இக்பால் செல்வன் என்ன ஆனாரோ? உயிரோடதான் இருக்காரா? என்கிற கவலையில் நான் வாடுகிறேன். தயவு செய்து இக்பால் செல்வனுடைய நெருங்கிய  நண்பர்கள் எனக்கு ஆறுதல் தரும் வகையில் நல்ல பதில்கள் ரெண்டைச் சொல்லவும்!

உங்க பதிவு பலரையும் சென்றடையணுமா? இவைகளைத் தவிருங்கள்!

என்னங்க இது!! என் பதிவில் எந்த கெட்டவார்த்தையும் இல்லை! ஏன் தமிழ்மண சூடான இடுகைகள் முகப்பில் தெரியாமல்ப் போயி ஒளிந்துகொண்டது? என்ற குழப்பம் ஒரு சில பதிவர்களுக்கு வருவதுண்டு. அதன்பிறகு அவர்கள் அந்தக் காரணத்தைப் புரிந்துகொளவதும் உண்டு. "முத்தம்மா"னு பேரு உள்ள பதிவுகள் சமீபத்தில் தமிழ்மண சூடான இடுகைகள் முகப்பிலிருந்து புறந்தள்ளப்பட்டதுக்கு காரணம், முத்தம்மாவில் இருக்கும் "முத்தம்"தான்னு நம்புகிறேன்! கணிணி உங்களைவிட அறிவாளி கெடையாது. ஏதாவது கெட்டவார்த்தைகளை வடிகட்டணும்னு ஒரு சில "வடிகட்டி"களை தமிழ்மணம் திரட்டி பயன்படுத்தும்போது இதுபோல் சில தவறுகள் வருவதைத் தவிர்க்க முடியாது!

18, முத்தம், கவர்ச்சி போன்ற வார்த்தைகள் உங்கள் தலைப்பில் இருந்தால் சூடான இடுகைகள் தமிழ்மண முகப்பில் வராமல் பின் தள்ளப்படும்! யாராவது பதிவர்கள் புரியாமல் இன்னும் குழம்பிக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு உதவுமேனு ஒரு நல்ல எண்ணத்தில்தான் இந்த சிறு பதிவு! நன்றி, வணக்கம்!

Wednesday, August 14, 2013

பாவிகளே!!! ஏசு உங்கள் பாவத்தை கழுவுவார்!

காலையில் அவன் பொண்ணு வித்யா மல்லிகைப்பூ பறிக்கிறேன் என்று வெளியே போனவள், கேவிக் கேவி அழுதுகொண்டே வந்தாள். அந்தக் குளவிக் கூட்டிலிருந்து வந்த குளவியிடம் கொட்டு வாங்கிக்கொண்டு வந்து வலி தாங்க முடியவில்லனு ஏங்கி ஏங்கி அழுதாள். அவள் அழுகையை அவனால தாங்க முடியவில்லை! கொளவிக்கு என்ன தெரியும் இவள் சிறுமி, தனக்கு தீங்கெதுவும் செய்யப் போவதில்லை என்று?

பகலில் அந்தக் கொளவியிடம் வம்பு வைத்துக் கொள்ளாமல்,  இரவு ஆனபிறகு வீட்டுமுன் இருந்த இரண்டு சிறு துளைகளையும் சிமெண்ட் வைத்து அடைத்தான், ராமன்.  "இனிமேல் இந்த கொளவிச்சனியன் என் குழந்தையை கொட்டாது" என்கிற நிம்மதி அவனுக்கு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இப்படி அதன் கூட்டை அடைத்துவிட்டால்.. அந்த துளைகளுக்குள்ளே கொளவியின் குழந்தை குட்டிகள் எல்லாம் வெளியே வரமுடியாமல் குடும்பத்துடன் பசியில் வாடிச் சாகுமோ? என்ற மறு எண்ணம் ஒன்று அவன் உள் நெஞ்சில் அவனைக் கொட்டியது. அவனுக்கு வேறு வழி தெரியவில்லை! "நீ வேற எங்காவது போய் கூடு கட்டி வாழ்ந்துக்கோ!"னு சொன்னால் அதென்ன போகவா போகுது? ஆறறிவு உள்ள மனுஷனுக்கே கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் படித்துப் படித்துச் சொன்னாலும், கேட்காமல் முரண்டு பிடித்து செருப்படி வாங்கிக் கட்டிக்கிறான். பாவம் கொளவி, அதுக்கென்ன தெரியும்?

"வாழு! வாழ விடு!" என்றெல்லாம் மனிதர்களுக்குள் தத்துவம் பேசிக்கிறோம். ஆனால் விலங்குகளையும், பறவைகளையும், பூச்சிகளையும், துன்புறுத்தி, எமாற்றி, கொன்று, தின்றுதான் மனிதனால் வாழமுடிகிறது. தன் இனத்தைத் தவிர யாரை நிம்மதியாக வாழவிட்டான் மனிதன்? "வாழு! வாழவிடு!"னு எதற்கு தன்னைத்தானே ஏமாற்றிக்கணும்? மனிதனைவிட அடிமுட்டாள் எவனுமே இல்லை! என்னவோ கடவுள்ங்கிறவன் இவனுக்காகத்தான் இருக்கமாரி ஒரு எண்ணத்துடன் வாழ்ந்து, கடவுளைக் கட்டி அழுது சாகிறான்.

சிமெண்ட் வைத்து அடைத்துவிட்டு வீட்டின் உள் நுழையப் போகும்போது பக்கத்துவீட்டில் வாழும் ஜேம்ஸ், காரிலிருந்து இறங்கி  ராமனுக்கு  ஹாய் சொல்லிவிட்டு அவருடைய வீட்டிற்குள் அவர் கேர்ள் ஃப்ரண்டுடன் நுழைந்தார். அந்த அம்மாவுக்கு ஒரு 40 வயதுபோல் இருக்கலாம். ஜேம்ஸ்க்கு வயது அறுபத்து ரெண்டு. பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர் வயதை ஒத்த மனைவியை சமீபத்தில்தான் டைவோர்ஸ் செய்திருந்தார், ஜேம்ஸ். என்ன பிரச்சினையோ எவனுக்குத் தெரியும்? அவர் மாஜி மனைவி வேறு வீட்டில் வாழ்கிறார் இப்போது.  தன் புது கேர்ள் ஃப்ரண்டுடன் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார் ஜேம்ஸ். இதிலென்ன தப்பு? எனக்கு "காமம்" தேவைப்படுகிறது, அதற்கானதை நான் செய்வேன் என்ற வெள்ளைக்காரர்களின் வெளிப்படையான தத்துவம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனால் ஜேம்ஸ் வளர்க்கும் இரண்டு ஆண் நாய்களுக்கும் அவர் கவனமாக காயடித்து விட்டார்!  அவைகள் பருவ வயதையடையும் போதே! அதில்தான் நியாயம் எங்கே இருக்கிறது என்று விளங்கவில்லை, அவனுக்கு!

மதுரை டவுன்ஹால் ரோட்டிலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் ஒரு சில கிருஸ்தவ மத போதகர்கள், "பாவிகளே!" னு கூச்சல்போட்டு எல்லாரையும் கத்தும்போது ஹிந்துவான ராமனுக்கு எரிச்சல்தான் வந்திருக்கு. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அவனால் இன்று யோசிக்கும்போது உணர முடிந்தது.

Monday, August 12, 2013

ஈரோட்டில் ஜெயமோகனுக்கு அவமானம்?!

அவமானம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒண்ணு. எதிரிகள் மட்டுமல்லாமல், கள உறவுகள், பதிவர்கள், நம்மை நன்கு அறிந்தவர்கள் நம்மை அவமானப் படுத்துவதை யாராலும் தவிர்க்க முடியாது. நம்ம வேணா யாரையும் அவமானப்படுத்தாமல் பக்குவமாக வாழலாம். ஆனால் உலகமே அப்படி இருக்கணும்னு எதிர்பார்த்தால் அது அபத்தமான ஒரு சிந்தனை. இதற்கு ஜெயமோகன் மட்டும் விதிவிலக்கு அல்ல!

எழுத்தாளர்னா கொஞ்சம் பரந்த எண்ணங்கள் இருக்கும். அவர்களுக்கு  மனோதத்துவம் தெரியும். வாழ்க்கையின் தத்துவங்கள் தெரியும். பலருடைய பார்வைகளை புரிந்து கொள்வார்கள். பலரின் பலவிதமான கண்ணோட்டங்கள்  எல்லாம் புரிந்துகொள்ளும் சகிப்புத்தன்மை உள்ளவர்கள். என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இருந்த என் எண்ணத்தில், நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுபவர்களில் முதன்மையானவர் நம்ம ஜெயமோஹன் தான். என்னதான் குடித்தாளும், குட்டிகளுடன் அலைந்தாலும், நட்பு பாராட்டத் தெரியாதவராக இருந்தாலும், அப்பப்போ பிச்சை எடுத்தாலுமகூட சாரு நிவேதிதா, ஜெயமோகனை விட பலமடங்கு உயர்ந்தவர்னு சொல்லுவேன். சாருக்கு கொஞ்சமாவது பொதுஜனத்தின் சைக்காலஜி, மேலும் மற்றவர்கள் மனநிலை பற்றிய ஒரு நல்ல புரிதல் உண்டு. தான் பட்ட அவமானத்திக்கூட பிறர் ரசிக்கத்தக்க நகைச்சுவை கலந்து விமர்சிக்கவும் தெரியும். அதுபோல் ஒரு திறமையோ,  சகிப்புத்தன்மையோ நிச்சயம் ஜெயமோகனுக்கு இல்லவே இல்லை.

இலக்கிய வட்டத்தில் ஜால்ராப் பசங்களோடயே குப்பை கொட்டும் ஜெயமோகனுக்கு இவர்மேல் பலவிதமான மனிதர்கள் இடும் கண்ணோட்டங்களோ, இலக்கியவட்டமல்லாத சாதாரண மனிதன் தன்னை எப்படி எடை போடுவான்? என்பது  பற்றி எந்தவிதமான புரிதலோ, அளவுகோலோ இல்லாமல் அடிமுட்டாளாவே வாழ்கிறார் மனுஷன்.

ஈரோட்டில் பேசப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கே போய் பேசி இருக்கிறார். என்ன காரணத்தாலோ இவர் பேசும்போது நெறையப்பேர் எழுந்து போய்விட்டார்கள் போலும்.  சரி போறான், அவன் கொடுத்து வைத்தது அவ்ளோதான்னு விட்டுட்டுப் போகாமல்..நம்ம சிக்கல் சண்முக சுந்தரம் நாதஸ்வர்த்தை கேட்காமல் வான வேடிக்கையைப் பார்க்கப்போன மக்களை திட்டுறதுபோல் இதை விமர்சிச்சு தன் சிறுபுத்தியை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இவரு, தியானம் பண்ணுறது, யோகா பண்ணுறது, பகவத் கீதை படிக்கிறது போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்றது இல்லைபோல இருக்கு! யாராவது அவரோட ஜால்ராப் பசங்க, அவருக்கு உதவுங்கப்பா!

Friday, August 9, 2013

"குஞ்சு செத்த பய" பதிவுடா இது!

ஒரு பதிவு எப்படி எழுதணும்னு எவனையும் எவனும் சொல்ல முடியாது. அது அவனவன் உரிமை! "கஞ்சிக்கு செத்த பய" சாருக்கான் னு எழுதலாம். அதனுள்ளே "கஞ்சிக்கு செத்த பய" போல ரஜினி இருக்கான்னு விஷத்தைக் கக்கி அதைச் சொல்லாமல் சொல்லலாம். ஏன் "குஞ்சு செத்த பய பதிவு" னு கூட எழுதலாம்.

அதென்ன "குஞ்சு செத்த பய" பதிவு? It is called dead dick! It is useless for sexual intercourse! அதே மாதிரி, இந்த "குஞ்சு செத்த பய" பதிவால் எவனுக்கும் என்ன பிரையோசனமும் இல்லை! அப்படி ஒரு பதிவை ஒருவன்  வரிஞ்சி வரிஞ்சி எழுதுறான்னா அவன் ஒரு  குஞ்சு செத்த பய !

"கஞ்சிக்கு செத்த பய" சாருக்கான் னு சாருக்கானுக்காக வந்து கவலைப்பட்டு ஒப்பாரி வைப்பதுபோல பதிவை ஆரம்பிக்கிறது. ஆனால் ரஜினிகாந்தை  கட்டி இழுத்துக் கொண்டு வந்து, சாருக்கானுக்கு இவனே மாமாவா மாரி, சாருக்கானை  வச்சு ரஜினிகாந்தை கேவலப்படுத்துறது.

அப்புறம் தமிழன் தமிழன்னு  மார்பிலே அடிச்சுக்கிட்டு தமிழனுக்காக ஒப்பாரி வைக்கிறது. தமிழனுடைய நகைச்சுவை உணர்வு பத்தி பேசுறது. தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்னு சொல்றது. இல்லை அவனுக்கு நகைச்சுவை உணர்வு குறைவுனு சொல்றது. தமிழன் எல்லாம் முட்டாப்பயளுக சொல்றது. இல்லை கூறுகெட்ட கூமுட்டைப்பயளுகனு சொல்றது..

கமலஹாசன், மல்லிகா சவுரத், தீபிகா படகோன், ஜாக்கிச் சான் எல்லாரைப்பத்தியும் பத்தி பத்தியா சீரியஸா விமர்சிக்கிறது. சும்மா கெடக்கிற ரஜினி ரசிகர்களை அங்கங்கே கவனாகக் கேவலப்படுத்துறது. ரஜினியை கஞ்சிக்கு செத்த பய னு சொல்லாமல் சொல்லி வஞ்சம் தீர்க்கிறது. இதை எல்லாத்தையும் கோர்வையாகவும், அப்புறம் கொஞ்சம் தேவடியாத்தனம் கலந்தும் குழப்பி குழப்பி திரும்பத் திரும்ப சொல்றது. கடைசியில் நான் சாருக் கான் படம் ரா ஒன் கூட பார்க்கவில்லை ஆனால் தமிழர்கள் சென்னை எக்ஸ்ப்ரெஸ் ஏன் பார்க்கணும், இல்லைனா ஏன்  பார்க்கக் கூடாதுனு பெரிய புடுங்கியாட்டம் அறிவுரை சொல்றது.

இந்தப் பதிவை நம்மாளு வாசிச்சுப்புட்டு என்ன எழவைத்தாண்டா இவன் சொல்ல வர்ரான்?னு அவன் அவன் தலையைப் பிச்சிக்கிட்டு...

* சாருக்கானுக்கு வக்காலத்து வாங்குறானா?

* இல்லைனா சாருக்கானை கேவலப்படுத்துறானா?

* ரஜினியை வச்சு சாருக்கை  கேவலப்படுத்துறானா?

* இல்லை வழக்கம்போல  ரஜினியையும் ரஜினி ரசிகர்களையும் இவன் இஷ்டத்துக்கு வஞ்சம் தீர்க்கிறானா?

* தமிழர்கள் பத்தி இவன் கவலைப்படுறானா?

* இல்லை தமிழர்களை எல்லாம் கூமுட்டைகள்னு கேவலப்படுத்துறானா?

* ஹிந்திக்காரனுக்கா குண்டி கழுவி விடுறான்?

* ஹிந்தியனா இவன்? தமிழின துரோகியா?

இவன் என்ன சொல்ல வர்ரான்னு புரியாமல் குழம்பி, "என்னவோ போ, பெரிய மேதை போல இவன்", "கமலஹாசன் மாரிப் புரியாமல் பேசக்கத்துக்கிட்டான்" னு ஒரு முடிவுக்கு வந்து  "நல்ல பதிவு"  "நல்ல விமர்சனம்" னும் நம்ம நாட்டான் வாழ்த்திப்புட்டு போயிடுவானுக.

ஆனா, உண்மை என்ன? நெசமாவே இவன் என்னதான்  சொல்ல வர்ரான் ? யாரைக் கேவலப்படுத்துறான்? யாரை வஞ்சம் தீர்க்கிறான்? னு பார்த்தால் உண்மை புரியும்.   ஆமா, சொல்ல வர்ரதை நேரிடையாக, பச்சையாக, தெளிவாக சொல்ல முடியாத சரியான "குஞ்சி செத்த பய" இவன்னு!

Thursday, August 8, 2013

விசய்க்கும் எஸ் எ சி க்கும் ஆளுங்கட்சியிடமிருந்து தொடர்ந்து ஆப்பு!

காவலன் படம் வெளிவர இருக்கும்போது வந்த பிரச்சினைகளுக்கு தி மு க தான் காரணம். என் மகரு அடுத்த எம் சி ஆர் ஆகப்போறாரு, அது இதுனு அப்பாவும் மகனும் ஒப்பாரி வைத்தார்கள். நான் அப்போவே சொன்னேன், இந்த "புது எம் சி ஆரை", தி மு க மட்டுமல்ல, அ தி மு க வும் வளரவிடப்போவதில்லை! என்று.

என்னவோ அம்மா ஆட்சி வந்ததும் இவரு என்ன செய்தாலும் கண்டுக்கப்போவதில்லை ங்கிற மனப்பால் குடித்துக்கொண்டு  திரிந்தார்கள் அப்பரும் மகரும்.

நினைத்தது போலவே இப்போ தலைவா வுக்கு தொடர்ந்து ஆப்பு மேலே ஆப்பா வருகிறது. 

Breaking : Thalaivaa's release stalled - Same reasons as Vishwaroopam

Aug 08, 2013
Following the meeting at the Film Chamber involving all the stake holders the decision to indefinitely postpone Thalaivaa's release seems to have been taken on account of security reasons.

The filmmakers had approached the government of Tamil Nadu seeking police protection across the state for all theatres screening the film in the wake of the alarming bomb threats that were supposedly received by some cinema halls. The police however turned down the request stating logistic challenges that would arise in a requirement of such a large scale. One might remember that the government had stated the same reason during the Vishwaroopam issue.

Meanwhile, the word is that the film will release as planned in the rest of the country and the rest of the world. The only affected territories we hear are Tamil Nadu and Pondicherry. Additionally the city's commissioner of police has instructed the makers to take down all hoardings of the film across Chennai. An official statement of the turn of events is still awaited and so is the new release date.

* மொதல்ல சென்சார்ல யு சான்றிதழ் கொடுக்கப் படவில்லை!

போயி ஒப்பாரி எல்லாம் வச்சு யு சான்றிதழை தேத்தினார்கள்!

* இப்போ அடுத்து விஸ்வரூபத்திற்கு வந்த அதே பிரச்சினை னு சொல்றாங்க!

ஆமா, இப்போ என்ன சொல்லப்போறானுக, அப்பனும் மகனும்?

* என் மகன் எம் ஜி ஆர் மாரி  வளர்ந்துடுவான்னு ஆத்தாவுக்கு பொறாமைனா???

திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் பொத்திக்கிட்டு இருப்பானுக . இல்லைனா அழிச்சிடுவார்கள் இவர்கள் "முதல்வர் கனவை"!

Wednesday, August 7, 2013

சாரு நிவேதிதா நல்லா காமெடியா எழுதுகிறார்..

உண்மையைச் சொல்லனும்னா நான் இப்போலாம் சாரு எழுத்தை வாசிச்சுட்டு கோபமடைவது இல்லை! ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக்கொள்வதில்லை! ஒவ்வொரு வரியையும் வாசித்து சிரிப்பது! அது அவர் வைக்கிற ஒப்பாரியாக இருந்தாலும் சரி, ஏதாவது எழவு பத்தி பேசினாலும் சரி, எனக்கு சிரிப்புத்தான் வருது .

* அசோக மித்ரன் னு ஒரு பழைய காலத்து எழுத்தாளர், தனக்குப் பிடித்த நவீன எழுத்தாளர் என்று நம்ம "ஜெயமோகனை"ச் சொல்லியிருக்கிறார்.

* உடனே எழுத எதுவும் சரக்கில்லாத சாரு. "சாகப் போற நேரத்திலே சங்கரா"னு அவரைப்பற்றி கட்டுரை மேலே கட்டுரையா எழுதி, தன் பின் நவீன எழுத்தைப்  புரிந்துகொள்ளுமளவுக்கு அசோக மித்ரனுக்கு போதுமான அளவுக்கு  அறிவு கெடையாதுனு ஒரே ஒப்பாரி!

இதோ சாருவின் காமெடி! வாசிச்சு சிரிங்கப்பா!

தற்கால தமிழ்ப் படைப்புலகத்தில் உங்களைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளராக யாரைக் குறிப்பிடுவீர்கள்?
“ஜெயமோகன். இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் இவர்தான். சில விஷயங்களில் இவரது ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை. இவருக்கு முன்னால் ஆய்வு என்கிற விஷயத்தில் இவரைப் போன்ற தேர்ச்சியை கொண்டிருந்தவர் க.நா.சுப்பிரமணியன்தான்.
இதுதவிர ஜெயமோகன் படைப்புகளில் சில இடங்கள் மிகவும் அபாரமாக இருக்கின்றன. அவரது குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று படித்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. இந்தத் தலைமுறையில் சிறந்த எழுத்தாளர் என்று சொல்லக் கூடிய எல்லாத் தகுதியும் ஜெயமோகனிடம் இருக்கிறது.”

அசோகமித்திரனின் மேற்கண்ட அபிப்பிராயம் பற்றி என்னுடைய கடுமையான கண்டனத்தை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

”இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் தான்” என்று சொல்வதற்கு அசோகமித்திரனுக்கு எல்லா உரிமையும் உண்டு.  நகுலனும் இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ்க் கவிஞர் அழகிய சிங்கர் என்று சொல்லி இருக்கிறார்.  சுஜாதாவும் எனக்குப் பிடித்த கவிஞர் பழமலய் என்று சொல்லி இருக்கிறார்.  முட்டாளாக வாழ்வதற்கும் உளறுவதற்கும் சராசரித் தமிழனுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறதா?  நாங்களும் சராசரிகள் மாதிரி உளறுவோம் என்று தமிழ் எழுத்தாளர்களும் அவ்வப்போது கிளம்புவார்கள்.  அதை நாம் கண்டு கொள்ளக் கூடாது. 

ஆனால்  அசோகமித்திரனின் அடுத்தடுத்த அபிப்பிராயங்கள் தான் படு விஷமத்தனமாக இருக்கின்றன.  ”சில விஷயங்களில் இவரது ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை… இந்தத் தலைமுறையில் சிறந்த எழுத்தாளர் என்று சொல்லக் கூடிய எல்லாத் தகுதியும் ஜெயமோகனிடம் இருக்கிறது” என்றும் விஷத்தைக் கக்கியிருக்கிறார் அ.மி.  இது வெறுமனே ஜெயமோகனைப் பற்றிய அபிப்பிராயம் இல்லை.  மற்றவர்கள் பற்றிய அபிப்பிராயமும் கூட.  ஜெ.வின் ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை என்றால் நாங்களெல்லாம் என்ன இத்தனை காலமாக புடுங்கிக் கொண்டிருக்கிறோமா?  இப்படிச் சொல்வது அயோக்கியத்தனம்.  கயவாளித்தனம்.  ஏனென்றால், அ.மி. வேறு யாருடைய எழுத்தையும் படித்தது இல்லை.  உதாரணமாக, ராஸ லீலா என்ற என்னுடைய நாவலை அவர் படித்திருக்க மாட்டார்.  ஏனென்றால், நான் அவருடைய வீட்டைத் தேடிக் கொண்டு போய் ராஸ லீலாவைக் கொடுத்து அவருக்கு சொம்பு தூக்கவில்லை.
ஆனால் இந்தத் தலைமுறையின் சிறந்த எழுத்தாளரோ ஒவ்வொரு முறை சென்னை வரும் போதும் அ.மி.யைப் பார்க்கிறார்.  ஜெயகாந்தனைத் தேடிப் போய் பார்க்கிறார்.  அந்த இசை அமைப்பாளரைத் தேடிப் போய்ப் பார்க்கிறார்.  அது மட்டும் அல்லாமல், தான் ஆசிரியராக இருந்த ஒரு பத்திரிகையில் (அது அளவில் குமுதத்தைப் போல் நான்கு மடங்கு அகலமும் நீளமும் கொண்டது) பளபளப்பான அட்டையில் (அந்தக் கால debonair ஐ ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்) அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன், ஜெயகாந்தன் என்று இங்கே உள்ள இலக்கிய தெய்வங்களையெல்லாம் புகைப்படமாகப் போட்டு அவர்கள் தங்கள் வாழ்நாளில் கண்டிராத கௌரவத்தைக் கொடுத்தவர் ஜெ. அந்தப் பத்திரிகையை தலைமுறை எழுத்தாளரின் ஒருசில நண்பர்கள் மட்டுமே படித்தார்கள் என்ற விஷயமெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.  வெறும் நடிகைகளின் அரைகுறை ஆடை படங்களையே பார்த்து வெறுத்துப் போயிருந்த அந்த எழுத்தாளர்களுக்குத் தங்களின் போட்டோவை இப்படி முறம் சைஸ் பத்திரிகையின் அட்டையில் பார்த்ததும் எப்படி இருந்திருக்கும்?
இப்படி ஒரே ஒரு எழுத்தாளரின் எழுத்தை மட்டுமே படித்து விட்டு அ.மி. அன்னார் தான் தலைமுறையின் சிறந்த எழுத்தாளர், அவர் அளவுக்கு ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை என்று சொல்வது கயவாளித்தனம் இல்லையா? 

நான் எழுதிய எந்தப் புத்தகத்தை அ.மி. வாசித்திருக்கிறார்?  உலக இசை பற்றி கலகம் காதல் இசை என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.  அதில் Iannis Xenakis இன் பின்நவீனத்துவ இசை பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறேன்.  இப்போது ரஹ்மான் பாணிக்கு ஆதாரமாக இருக்கும் rai music பற்றியும் அதில் கட்டுரைகள் உண்டு.  இதையெல்லாம் பற்றி அரிச்சுவடு அறிவாவது அ.மி.க்கு உண்டா?  உலக சினிமா பற்றி ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். Bergman, Pasolini, Antonioni பற்றியெல்லாம் அ.மி. கேள்வியாவது பட்டிருப்பாரா?  அந்தோனியோனி என்றதும் அ.மி.க்கு வேறு ஞாபகம் தான் வரும்.  ஏனென்றால், அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். 

ஒருமுறை என்னுடைய சிறுகதைத் தொகுதிக்கு அவரிடம் முன்னுரை கேட்ட போது ” எனக்கு இந்தக் கதைகள் புரியவில்லை” என்று எழுதிக் கொடுத்தவர் அ.மி.  அவர் சொன்னது உண்மைதான்.  ஏனென்றால், அவருக்கு metafiction என்றால் என்னவென்று தெரியவில்லை.  Non linear writing பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.  அதனால் என் கதைகள் அவருக்குப் புரியவில்லை.  அது மட்டுமல்லாமல் நவீன எழுத்தின் எந்தப் பாணி பற்றியும், நவீன எழுத்தின் புதிய போக்குகள் பற்றியும் அவர் எதுவும் அறியாதவர்.  அவர் ஒரு பழைய மனிதர்.  பழைய எழுத்தாளர்.  இந்தக் காலகட்டத்துக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாதவர் அவர்.  அவருடைய எழுத்தும் படிப்பும் காஃப்காவோடும் கம்யுவோடும் முடிந்து விட்டது.  இப்படி இந்தக் கால கட்டத்தின் எழுத்துப் போக்கு, இந்தக் கால கட்டத்தின் வாழ்வியல் மற்றும் தத்துவ நெருக்கடிகள் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர் – அதையும் தன் வாயாலேயே “புரியவில்லை” என்று ஒப்புக் கொண்டவர் – மற்றவர்களிடம் ஆழம் இல்லை என்றால் இவர் எந்த ஆழத்தைச் சொல்கிறார்?  சின்ன வயதில் கேட்ட “go deep Thiag” என்ற வார்த்தைகளின் ஆழமா?  எந்த ஆழம் மிஸ்டர் அசோகமித்திரன்?
 ஆக, அசோக மித்ரன், ஜெயமோகனை உயர்த்தி சாருவை மதிக்கவில்லைனதும், அசோக மித்ரனுக்கு என்ன தெரியும், நாந்தான் பெரிய எழுத்தாளன், மேதை, அறிவாளினு வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொள்ள யாரால் முடியும்?

சாருவால் மட்டும்தான் இதெல்லாம் முடியும்!

தொடர்புள்ள பதிவுகள்:

சாரு இல்லாத எஸ் ரா வின் நூறு சிறந்த புத்தகங்கள்!

ஞாநி, மனுஷ்ய புத்திரனை அவமானப்படுத்திவிட்டாரா?!

சீரியஸா கேக்கிறேன்! சாருநிவேதிதா தமிழனில்லையா?

Monday, August 5, 2013

மூளை வளர்ச்சியில்லாத அருள் என்னும் ராமதாசு பக்தன்!!!

அருள் என்னும் அடிமுட்டாளின் உளறல்கள் பதிவுலகை தமிழ் முட்டாள்களின் கூடாரமாக்கிக் கொண்டு வருகிறது. வன்னிய சாதிவெறியை புனிதமான எண்ணம் என்பது போலவும், தன் சாதிக் கட்சி வளர்ப்பை தமிழனுக்கு செய்யும் பெரிய தொண்டு போலவும் பிதற்றியது போதாதன்று அருள் என்னும் இந்த முட்டாள், அன்று திவ்யா, இன்று மேஜர் ஆன சேரன் மகள் என்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தலையிட்டு,  "அவர்களுக்கு, அவர்கள் வாழ்வை, அவர்கள் வாழ்க்கைத் துணவனைப் பற்றி முடிவெடுக்க உரிமை இருக்கு" என்கிற உண்மைக்கூட  புரியாமல் மூளை மழுங்கி அலையும் இந்த ஆளின் உளறல்கள் தொடர்கிறது.

21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை - என்பதில் என்ன தவறு?
அடி முட்டாளே! இதில் தவறென்னனு உனக்கு விளக்கினாலும் அதை புரியுமளவுக்கு உனக்கும் மூளையில்லை! அந்த மரம்வெட்டி காட்டுமிராண்டிக்கும் மூளை இல்லை!

இதில் விளக்கம் கொடுக்க எதுவுமே இல்லை! உனக்கும் உன் தலைவனுக்கு மூளை இல்லை! என்பது மட்டுமே உன் உளறல்களில் இருந்து தெளிவுபடுகிறது! உனக்கும் உன் தலைவனுக்கும் மூளையில்லாததால்தான் "பெண்கள் இன்னும் உங்கள் அடிமையாகவே இருக்க வேண்டும், அவர்களுக்கு மூளை வளர்ச்சி இல்லை" என்பதுபோல் உளறிக்கொண்டே திரிகிறீர்கள்!

"21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை" என்று மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம்  பரிந்துரைத்திருக்கிறது - என்று மருத்துவர் இராமதாசு அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
திடீர்னு என்னடா கன்னடதுக்காரன் சொல்றதெல்லாம் உங்களுக்கு தெய்வ வாக்காக இருக்கிறது?அப்போ காவிரி நீர் பிரச்சினையில் கன்னடக் காரன் சொல்ற நியாயத்தையும் பரிந்துரைப்பானா உன் முட்டாள் தலைவன்?

This idiot is getting on in my nerve these days with his senseless posts!

Friday, August 2, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்- ஆறு

படுக்கையில் மோகன் அணைப்பில் நிர்வானமாக படுத்துக் கெடந்த விஜியின் உதட்டை லேசாக பிடித்து  "என்னடி விஜி இப்படி பழி வாங்கிட்ட?" என்றான் புன்னகையுடன்.

"பழியா? நானா?"

"உனக்கு எல்லாத்தையும் பச்சையாச் சொன்னாத்தான் புரியுமா?"

"நேரம் மிச்சமாகும் இல்ல?"

"ஏன் இப்படி இருக்க, விஜி?"

"நானா? இந்த உலகத்திலேயே உன்னைவிட பச்சையா யாருமே பேச முடியாது! அதுவும் "பெட்ரூம்" வந்துட்டா  "நம்ம மிஸ்டர் டீஸண்ட்தானா இது?!" னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும்."

"என்ன பண்ணுறது? உனக்கு அப்படியெல்லாம் பேசினால்தான் என்னை முந்த முடியுது. உன் வெற்றியிலேதான எனக்கு சந்தோஷம் விஜி? அதான்.."

"ஹா ஹா! அதுகூட உன் சுயநலம்தான்!"

"இருந்துட்டுப் போகட்டும்.  உன்னை சந்தோசப்படுத்துவது என் சுயநலம்னா, நான் சுயந்லவாதியாவே இருந்துட்டுப் போறேன், விஜி!"

" மோகன்! சீரியஸா ஒண்ணு சொல்றேன்! தெளிவாத் தெரிஞ்சுக்கோ! உன்னை நான் சும்மா வச்சிருக்கேன். அவ்ளோதான்!  ரொம்ப கற்பனையை வளர்த்துக்காதே!"

"வச்சிருக்கியா?"

"ஆமா."

"எப்போ கழட்டிவிடப் போற?"

"தெரியலை.   இப்போதைக்கு, என் தேவைக்காக, முக்கியமா. "அதுக்காகவே!"  உன்னை வச்சிருக்கேன்! எனக்குத் தேவையான நேரம் கூப்பிடுவேன். எஸ்கார்ட் சர்விஸ் மாதிரி வந்து ஒழுங்கா வேலையை முடிச்சுட்டு போயிட்டே இருக்கனும்! புரியுதா?"

"அதை ஏன் இப்படி சிரிச்சுக்கிட்டே சொல்ற?"

"புன்னகை?  Polite ட்டா சொல்றதுக்காக! வேறொண்ணும் இல்லை!"

"அப்படியா?"

"ஆமா!"

" சரி எஸ்கார்ட் சர்விஸ்லாம் நெறையா இடத்தில் தொழில் பண்ணுவாங்க! அவங்கல்லாம் பார்ட்னருக்கு ஆர்கஸம் தனக்கு  முன்னால வரணும்னு எல்லாம் நெனைக்க மாட்டாங்க."

"இப்படிப் பேசியேதான் என்னை ஏமாத்துற..உன்னை மிஸ் பண்ண வைக்கிற!!"

"நானா ஏமாத்துறேன்?"

"ஆமா, நீதான்!  பாவம், இப்போ இன்னொருத்தி வேற உன் வலைல மாட்டியிருக்கா. பலியாடாக!"

"யார் அது?  ரேச்சலா?. அவ ரொம்ப நல்ல பொண்ணு. உன்னை மாரி எல்லாம் இல்லை"

"அப்படியா? நல்ல பொண்ணுனா? You dont suck her off and make her come like you do to me?"

"நல்ல பொண்ணுனா? இந்த மாதிரி எல்லாம் அவ பேச மாட்டாள்!"

"உன்னைமாரி பொறுக்கியோட படுத்து எந்திரிச்சதாலே நானும் கெட்ட பொண்ணாயாயிட்டேன். அது சரி, ஏன் உன் "எஸ்காட் சர்விஸ்"க்கு  ரெண்டு கஸ்டமர் போதாதா?"

"எஸ்கார்ட் சர்விஸ் பண்ணுறவங்க நெறையா சம்பாரிப்பாங்களாம். இளமையா இருக்க வரைக்கும்தானே இந்த்த் தொழில் செய்ய முடியும்? ரெண்டு கஸ்டமர் எப்படி பத்தும்?"

"சரி, அவ எவ்ளோ "பே" பண்ணுறா?"

"ரேச்சலா?"

"வேற யாரும் இருக்காங்களா?"

" 50 டாலர் பெர் ஹவர்!"

"கேஷா" இல்லைனா "செக்" கா?

"அதெல்லாம் உனக்கு எதுக்கு?!  நீ எப்படி "பே" பண்ணுவதா உத்தேசம்?"

"இன்னைக்கு நீதான் "பே" பண்ணனும், மோகன்?"

"ஏன்? நீ எதுவும் ஸ்பெஷல்லா கொடுக்கலையே?  நாந்தான், பாவம் மூட் சரியில்லாமல் இருக்காளே விஜினு அன்பை  அள்ளி அள்ளி  கொட்டியிருக்கேன்."

"நீ கொட்டியதெல்லாம் அன்பா?"

"வேறென்ன?"

"பாவி!  நீயாத்தானே தேடி வந்து கதவை தட்டி என்னை ஐஸ் வச்சு, கெஞ்சி, கொஞ்சி அப்பாவிப் பெண்ணைக் கெடுத்த?"

"ஆமா. ஹார்மோன்கள் எல்லாம் பொங்கி வழியும் உன் கோபத்தை எல்லாம் போக வைக்க செக்ஸ் ஒண்ணுதான் ஒரே வழினு எனக்கு நல்லாத் தெரியும். இப்போப் பாரு உன் முகத்தில் என்ன ஒரு சந்தோஷம்! ஏண்டி இப்படி இருக்க?"

"சரி, அவளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிற?" புன்னகைத்தாள்

"ஸ்ட்ரிக்ட்லி ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மட்டும்தான்."

"ஏன்? நீ வாங்கிற சம்பளம் பத்தலையா? இப்படி tutoring அது இதுனு எதுக்கு side business வேற?" 

"இது சும்மா பொழுது போக்குக்காக. என்னால முடிஞ்ச ஒரு உதவி. It is lot of fun too! You know, I enjoy helping others"

"அடேங்கப்பா! சரி, உதவினா எதுக்கு அவர்லி 50 டாலர் வாங்குற?"

"அவளுக்கு ஒரு மணி நேரம் பாடம் எடுக்க நான் 4 மணி நேரம் செலவழிச்சுப் படிக்கிறேன். அதனால் 50 டாலர்லாம் ஒண்ணும் அதிகமான சார்ஜ் இல்லை! அவ எதிர்காலத்தில் டாக்டராகி கோடி கோடியா சம்பாரிக்கப் போறா. இதெல்லாம் பெரிய காசா என்ன?"

"அவளுக்கு சொல்லிக்கொடுக்க 4 மணி நேரம் படிச்சேன் அது இதுனு கதை விடாதே! நீ கரச்சுக் குடிச்ச சப்ஜெக்ட் தானே?"

"அதனாலென்ன? பரிட்சை எழுதப்போறது நான்னா படிக்காமல் நேரபோயி எழுதலாம். பாடம் சொல்லிக்கொடுக்கணும்னா, அவள் லெவலுக்கு எப்படி பாடம் நடத்தனும்னு புரிந்து அதற்கேற்றார்போல டீச் பண்ணனும். அது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும். உனக்கென்ன தெரியும்?"

"ஏன் அவ ரொம்ப மக்கா?"

"இல்லையே ரொம்ப ஸ்மார்ட்டாத்தான் இருக்கா? She picks up pretty well"

"அவளுக்கு டீச் பண்ண அவ்ளோ பிடிக்கிதா? அவளே வேணாம்னு சொன்னாலும் நீ விட மாட்ட போல?"

"I love this job, Viji! More than fucking!"

"அவ ரொம்ப அழகா இருக்கா இல்ல? அதான் உனக்குப் பிடிக்கிது, மோகன்!"

"இல்லடா. ஸ்டூடண்ட்க்கு அழகெல்லாம் முக்கியம் இல்லை!"

" என்ன திடீர்னு "டா" போட்டு கொஞ்சுற?"

"ஏன் உன்னை நான் கொஞ்சக்கூடாதா விஜி?"

"Dont do that, please."

"ஏன்?"

" Just come over here and fuck me and make me cum  and  go back. Seriously, thats all I need from you, Mohan."

"OK, if you say so!"

"please, dont be nice to me,anymore! I mean it."

"OK, hereafter, I will treat you like a whore! Deal?"

"Deal, Thanks!"

-தொடரும்

Thursday, August 1, 2013

ஈழத்தமிழர்களும் நம்ம ஊர் பார்ப்பனர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?

வியாசன்னு புதிதாக ஒரு ஈழத்தமிழர் அதிகமான பதிவுகளும் விவாதங்களும் செய்கிறார். இவர் பதிவுகளை, விவாதங்கள வாசிக்கும்போது ஏற்கனவே எழுந்த சில சிந்தனைகள் மறுபடியும் வருகிறது.

வியாசன்..

* தமிழர்கள் தமிழர்களையே மணக்க வேண்டும் என்றார்.

* பரத நாட்டியத்தை தமிழர்கள் புறக்கணிக்கக்கூடாது என்கிறார்..

* ராஜ ராஜ சோழன் செய்த சாதனைகளை எல்லாம் சிங்களவர்கள் அழிக்கிறார்கள்! தமிழர்களின் சாதனைகளை எல்லாம் வரலாற்றில் இருந்து அகற்றப்படுகிறது என்கிறார்.

இந்தியாவில், பாபர் மசூதியை அகற்றவில்லையா? அதுபோல்தான்  இதையும் செய்கிறார்கள் என்று விளக்க முயன்றால்.. "நம் தமிழர்கள் அப்படி செய்யவில்லை!" "நினைக்கவில்லை" என்கிறார். இவருக்கு தமிழர் சம்மந்தமில்லாத எந்த ஒரு பிரச்சினையும், பிரச்சினையே இல்லை! நம்ம ஊர் காந்தியெல்லாம் ஒரு மனுஷனே இல்லை! பெரியாரை எல்லாம் எள்ளளவும் இவர் புரிந்துகொண்டதாகவும் தெரியவில்லை! புத்தனை அறவே வெறுப்பவர் இவர்னு நினைக்கிறேன். பொதுவாக மேற்கூறிய  எல்லா விசயங்களிலும் நம்ம ஊர் பார்ப்பனர்கள் நிலைப்பாடும் வியாசன் நிலைப்பாடு போல்தான்! பார்ப்பானுக்கு புத்தனையும், காந்தியையும், பெரியாரையும் பிடிக்காதுனு பார்ப்பனரை கவனித்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்!

இவர் வியாசர்னு பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ பதிவுலகில் தமிழ் பிராமணர்களிடம் அன்பாவும் பரிவாகவும் நடந்துகொள்கிறார். யாரோ ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணை மணக்க இருக்கிறேன், என்கிறார் இந்த அன்பர். இவரை ஏதாவது விவாதங்களில் சாடினால் நான் உங்க "மாப்பிள்ளை"தான்னு அன்புடனும் கோபத்துடனும் சொந்தம் கொண்டாடுகிறார். :)

எனக்கு இவர் சிந்தனைகள் சரியாகப் பிடிபட மாட்டேன் என்கிறது. இவர் மட்டுமல்ல பல ஈழத்தமிழர்களிடம் இதேபோல் உணர்ந்து இருக்கிறேன்.

தமிழன் என்கிற அடையாளம் தவிர நாம் இவ்வுலகில் வாழும் ஒரு "நல்ல மனுஷன்" "கெட்டவன்" என்கிற ஒரு பொது அடையாளமும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. தமிழன் என்கிற அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு, உலக நடப்பை, நல்லது கெட்டதை பார்க்கவும் செய்யலாம். ஒரு சாதாரண மனிதனாக. உலக விசயங்களை நாம் விவாதிக்கலாம். இதுபோல் விவாதங்கள செய்வது, நல்லவற்றை மற்றவர்களிடம் கண்டறிந்து வியப்பது, போன்றவை வியாசன் மட்டுமல்லாமல் பல ஈழத்தமிழர்களால் முடியவே முடியாதா?! அவர்களால் சுத்திச் சுத்தி தமிழன், தமிழ் என்கிற ஒரு அடையாளத்திலிருந்து வெளிவர முடியாது என்றே எனக்குத் தோனுகிறது!

"தமிழ்" "தமிழன்" என்கிற ஒரு குறுகிய வட்டத்தில் வாழும்  இவர்களிடம் ஏதோ ஒன்று இவர்களிடம் இல்லாதமாரி எனக்கு தோனுது. இவர்கள் பட்ட கஷ்டங்கள், பட்டுக்கொண்டிருக்க கஷ்டங்களால் இவர்கள் இப்படி ஆகிவிட்டார்களா? இல்லைனா இயற்கையிலேயே இவர்கள் இப்படித்தானா? என்கிற கேள்விகள் என் மனதில் எழுகின்றன.

புத்தர், காந்தி, பெரியார் போன்றவர்களுடைய எண்ணங்களை, சிந்தனைகளை இவர்களால் சுத்தமாகப் புரிந்துகொள்ள இயலவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. இவர்களைப் பொறுத்தவரையில் ஒரு தமிழன் ஏதாவது சொல்லியிருந்தால் மட்டுமே அந்தக் கருத்தை கவனிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். மற்றவர்கள், அது யாராயிருந்தாலும், அவர்கள் என்ன சொல்லியிருந்தாலும் அவர்களை, அவர்கள் சொன்ன கருத்துக்களை புறக்கணிக்கிறார்கள்.

உலகம் என்கிற கடலில்  தமிழர்கள் ஒரு சின்னத்துளிதான் என்பது இவர்களுக்கு விளங்கியதாகத் தெரியவில்லை! தமிழனல்லாதவன் எவனாக இருந்தாலும், அவனுடைய  நற்சிந்தனைகளை, வரவேற்பது,  பாராட்டுவது போன்ற பெரிய மனது இவர்களிடம் இல்லை என்றும் பல சமயங்களில் எனக்குத் தோன்றுகிறது.

ஒரு வகையில் இது நம் நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் குறுகிய சிந்தனை  போலவே இவர்கள் சிந்தனையும் இருப்பதாக எனக்குத் தோனுகிறது. பார்ப்பனர்களுக்கு திராவிடர்கள் வாழ்க்கை முறை பண்பாடுகூட சரியாத் தெரியாதுனு சொல்லலாம். அவர்கள் பிரச்சினை, இந்து மதத்தை காப்பாத்தனும், பார்ப்பானை எவனும் எதுவும் சொல்லிவிடக்கூடாது. அது பத்திரிக்கை வேசித்தனம் செய்யும் சோமாரி ராமசாமியாக இருந்தாலும் சரி, தன்னை உயர்சாதினு பிதற்றும் எந்த அரைவேக்காட்டுப் பார்ப்பானாக இருந்தாலும் சரி! அல்லது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சங்கராச்சாரியாக இருந்தாலும் சரி! பார்ப்பான் நிலைப்பாடு ஒண்ணே ஒண்ணுதான். நம்மோடைய இருந்து, நம்முடனே வாழ்ந்து தண்ணீரும் எண்ணையும்போல்தான் பார்ப்பனர்கள் என்றுமே  நம்முடன் வாழ்கிறார்கள்.  ஈழத்தமிழர்களும் நம் பார்ப்பனர்களைப் போலவே "தமிழன்" "தமிழ் அடையாளம்" என்கிற ஒரு குறுகிய வட்டத்துக்குள் இந்த மிகப் பெரிய உலகில்  வாழ்வதாக எனக்குத் தோன்றுகிறது.

இது உண்மையா? என்னைப்போல் வேறு யாரும் உணர்ந்து இருக்கீங்களா? இல்லை நான் சும்மா பிதற்றுகிறேனா? நாகரீகமான எதிர்வாதம் வரவேற்கப்படுகிறது! நன்றி