Tuesday, December 30, 2014

அமெரிக்காவில் பெட்ரோல் விலை மலிவான ரகசியம்!

ஒரு Gallon , அதாவது 3.78 லிட்டர்கள் பெட்ரோல் அல்லது கேஸோலீன் விலை இப்போ ரெண்டு டாலருக்கும் குறைவாக உள்ளது! இதுபோல் கேஸோலீன் விலை குறையும் என்று யாரும் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை.

regular gas: $ 1.99


என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு தேவையான ஆயில், இங்கேயே புதிய தொழில் நுட்ப முறையில்  தோண்டி எடுக்கப் படுகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து ஆயில் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறைத்துள்ளது. விளைவு?  ஒரு பக்கம் அமெரிக்க பொருளாதாரம் திடமாகி உள்ளது. அமெரிக்க டாலர் வால்யூ திடமாக ஆகியுள்ளது. அமெரிக்கா ஆயில் இறக்குமதியை குறைப்பதால் பாதிக்கப்படுவது யாருனு பார்த்தால்..ஆயில் ஏற்றுமதியையே நம்பி வாழும்  ஈரான், ரஷ்யா, வெனிசூலா போன்ற நாடுகள். இந்நாடுகளில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

திடீர்னு எப்படி அமெரிக்காவில் ஆயில் அதிகமாக கிடைக்கிறது? பூமிக்கு கீழே பல ஆயிரம் அடிகளுக்கு கீழே உள்ள ஆயிலை தோண்டி எடுப்பது கடினமாக இருந்தது. இப்போது ஃப்ராக்கிங் னு ஒரு தொழிநுட்ப  முறையில் பல ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே உள்ள ஆயிலை  மேலே கொண்டு வந்துவிடுகிறார்கள். சமீபத்தில் இந்தத் தொழில் நுட்பத்தில் அமெரிக்கா பெரிய முன்னேற்றமடைந்து உள்ளது. இந்த தொழில்நுட்ப முன்னேற்றம்தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.



அதென்ன ஃப்ராக்கிங்?

ஆங்கிலத்தில் சொல்லணும்னா Hydraulic Fracturing (fracking) என்பார்கள்.

ஆங்கிலத்தில் சொன்னால் மட்டும் புரிஞ்சிடப்போதாக்கும்? விளக்கத் தெரியலைனா தெரியலைனு சொல்லு வருண்! னு சொல்றீங்களா?

அதாவது பல ஆயிரக்கணக்கான அடிகள் (மைல் கணக்கில்) கீழே இருக்கும்  எரிவாயு மற்றும் எண்ணெய்யை சாதாரண முறையில் தோண்டி எடுப்பது கஷ்டமாக இருந்தது. இப்போ இந்த ஃப்ராக்கிங்  என்கிற புதிய முறையில் அதை மேலே கொண்டு வந்து விடுகிறார்களாம்.

மேலே உள்ள படத்தைப் பாருங்க
இப்போ புரியுதா?

இம்முறையை செயல்ப்படுத்துவதற்கு நெறையா தண்ணீர் தேவைப்படுகிறது என்கிறார்கள். முதலில் ஒரு சின்ன கிணறு கீழே  பல ஆயிரக்கணக்கான அடிகளுக்கு செங்குத்தாக (vertically) தோண்டுவார்கள், அதன் பிறகு இதே கிணறை தொடர்ந்து கீழே கிடைமட்டமாக  (horizontally) தோண்டுவார்கள்.  இப்படி தோண்டியவுடன் ஆயில் மேலே வந்துவிடாது. ஆயில் அதை சுத்தியுள்ள பாறைகளால் மறைக்கப்பட்டு இருக்கும். இப்போ அந்த கிணற்றின் மூலம் தண்ணீர், மணல் மற்றும் உப்புக்கள் கலந்த ஒரு கலவையை அதிகமான அழுத்தத்தில் செலுத்துவார்களாம். அப்படி அதிக அழுத்தத்தில் இந்தக் கலவையை செலுத்தி அடியில் உள்ள பாறைகளை வெடிக்கவைத்து லேசாக கீறல்கள் ஏற்படுத்தி உடைத்துவிடுவார்களாம். அப்படி பாறைகள் இடையில் ஏற்படுத்தப்பட்ட பெரிய பெரிய கீறல்கள் மூலமாக ஆயில் மற்றும் எரிவாயு மெதுவாக கசிந்து வந்து அப்படியே தண்ணீர் நிறைந்து உள்ள அந்த கிணற்றில் கலந்து, ஆயில் மற்றும் எரிவாயு  டென்ஸிட்டி குறைவாக உள்ளதால் மேலே வந்துவிடுமாம்.

இன்னும் புரியலையா? அப்போ இந்த வீடியோவைப் பாருங்கப்பா! என்னை ஆள விடுங்க!

https://www.youtube.com/watch?v=VY34PQUiwOQ#at=287

குறைபாடுகள்:

இந்த முறையில் ஆயில் எடுப்பதால், மேல் மட்டத்தில் உள்ள தண்ணீரில் எரிவாயு மற்றும் ஆயில் கலந்து, தண்ணீரை "கண்டாமினேட்" பண்ணிவிடும் என்கிறார்கள். மேலும் நிலநடுக்கம், நில அதிர்வு போன்ற பிரச்சினைகள் அதிகமாகும் என்கிறார்கள். அதனால் இந்த ஃப்ராக்கிங் தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்புகளும் உண்டு. 

கே பாலசந்தர்! பிடித்ததும் பிடிக்காததும்

என்னைப் பொருத்தவரையில் பாலசந்தரின் மறைவு, அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகத்துக்கும் பெரிய இழப்புதான். அவருடைய படைப்புகளுக்கு கடந்த இருபது  வருடங்களாக அவ்வளவு வரவேற்பு இல்லை என்றாலும் அப்பப்போ அவர் விழாக்களில், நேர்முக ஒளிபரப்புகளில் கலந்து கொண்டுதான் இருந்தார்.

ரஜனிகாந்த் என்கிற நடிகனை கண்டெடுத்து உலகுக்கு காட்டியவர் மட்டுமல்ல, அந்தப் பெயரையே சூட்டியவர் பாலசந்தர்தான்.

கமலஹாசன்,  பாலசந்தர் திரையுலகிற்கு வருமுன்பே திரையுலகில் சிறுவராக நடித்துவிட்டார். இருந்தாலும், கமலை சரியான தருணத்தில் மேலே ஏற்றிவிட்ட பெருமையும் இவரையே சேரும்.

 



 ***********************************

 மீள் பதிவு ஒன்று

பாலசந்தர்-ரஜினி (குரு-சிஷ்யன்) படங்கள்!

 


 அபூர்வ ராகங்களில் ரஜினியை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர் அவர்கள்தான். இன்றும் ரஜினி, அவரை தன் குருநாதர் என்றுதான் அழைக்கிறார். ஆனால் தமிழில் ரஜினியை வைத்து கே பி இயக்கிய படங்கள் ஆறே ஆறுதான்.

* அபூர்வ ராகங்கள் (1975)

* மூன்று முடிச்சு (1976)

* அவர்கள் (1977)

* தப்புத்தாளங்கள் (1978)

* நினைத்தாலே இனிக்கும் (1979)

* தில்லு முல்லு (1981)


இதில் முழுக்க முழுக்க ரஜினியை ஹீரோவாக வைத்து எடுத்த படங்கள் இரண்டே இரண்டு. * தப்புத்தாளங்கள், * தில்லு முல்லு இரண்டிலும்தான் ஹீரோ. ஒரு 6 வருடகாலத்தில், 1981 லயே குரு சிஷ்யன் "எரா" முடிந்தது.

பிறகு, கவிதாலயா தயாரிப்பில் ரஜினியை ஹீரோவாக வைத்து மற்றவர்களை வைத்து இயக்க வைத்தார் கே பி. இதில் முக்கியமானவர் எஸ் பி எம். இவர் கவிதாலயா ரஜினியை வைத்து தயாரித்த படங்களில் 4 அவுட் ஆஃப் 8 படங்களை இயக்கியுள்ளார். அமீர்ஜான், சுரேஷ் கிருஷ்ணா, கே எஸ் ரவிக்குமார், பி வாசு தலா ஒரு படம் இயக்கியுள்ளார்கள்.

கே பி தயாரிப்பில் ரஜினி நடித்த படங்கள்

* நெற்றிக்கண் (எஸ் பி எம், 1981)

* புதுக்கவிதை (எஸ் பி எம், 1982)

* நான் மஹான் அல்ல (எஸ் பி எம், 1984)

* வேலைக்காரன் (எஸ் பி எம், 1987)

* சிவா (அமீர்ஜான், 1989)

* அண்ணாமலை (சுரேஷ் கிருஷ்ணா, 1992)

* முத்து (கே எஸ் ரவிக்குமார், 1995)

* குசேலன் (பி வாசு, 2008).


 

*************************************

 மீள் பதிவு ரெண்டு

கமல்-பாலசந்தர் உறவு!




ஏக் துஜே கேலியே

 


கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்துல அறிமுகமானார்னு உலகத்துக்கே தெரியும். கமல், படித்துக்கொண்டே பகுதி நேரம் ல தொடர்ந்து நடித்ததாக தெரியவில்லை. இளவயதிலேயே படிப்பை ஒரேயடியாக தலைமுழுகிட்டு சினிமாவைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்.

குழந்தை நட்சத்திரத்திலிருந்து வளர்ந்த ஹீரோவாக வயது வேணுமில்லையா? பெரிய நட்சத்திரமாகுமுன்னர் பதின்ம வயதிலே அவர் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்து இருக்கிறார். காதல் இளவரசனாகுமுன்னே "நான் ஏன் பிறந்தேன்" போன்ற படங்கள் ல எல்லாம் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்து இருக்கிறார் கமலஹாசன்.

பிறகு, பாலச்சந்தர்தான் கமலுக்கு நிறையப்படங்களில் சரியான வாய்ப்புக் கொடுத்து கமல் திறமையை வெளிக்கொண்டு வந்தார். முதலில், அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற பாலசந்தர் படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க ஆரம்பித்தார், கமல். அந்த சமயத்தில் பாலசந்தர் படத்தில் பொதுவா பல முக்கிய பாத்திரங்களைச் சுற்றி கதை இருக்கும். அதில் கமல் திறமையை வெளிக்கொண்டு வரும் ஒரு சில நல்ல ரோல்கள் இவருக்கு கொடுக்கப்பட்டதால் கமலுக்கு நிறைய புகழை அள்ளித்தந்தது.


கமல், பாலசந்தர் இயக்கத்தில் நடித்த தமிழ்ப் படங்கள். (ஒரு சில படங்களை விடுபட்டு இருக்கலாம்! )

* சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)

* அரங்கேற்றம் (1973)

* அபூர்வ ராகங்கள் (1975)

* மூன்றுமுடிச்சு (1976)

* மன்மதலீலை (1976)

* அவர்கள் (1977)

* அவள் ஒரு தொடர்கதை (1978)

* நிழல் நிஜமாகிறது (1978)

* நினைத்தாலே இனிக்கும் (1979)

* வறுமையின் நிறம் சிகப்பு (1980)

* புன்னகை மன்னன் (1986)

* உன்னால் முடியும் தம்பி (1988)



பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த பிற மொழிப்படங்களில் சூப்பர் ஹிட் ஆன படங்கள் இரண்டை கட்டாயம் சொல்லியாகனும்.

* மரோச்சரித்ரா (தெலுகு, 1978)

* ஏக் துஜே கே லியே (ஹிந்தி, 1981)


இயக்குனர்கள் எல்லாம் பள்ளி வாத்தியார்கள் போலதான். இன்று கமலுக்கு உள்ள பெயர், ஸ்டார் வால்யூ எல்லாம் இவரை மேலே கொண்டுவந்த பாலசந்தர் பாரதிராஜாவுக்கு கிடையாது என்பது கசப்பான உண்மை. இன்று பாலசந்தருக்கு வய்து 79 ஆகிவிட்டதாம். தமிழ் திரையுலகில் பாலசந்தர் ஏற்படுத்திய மாற்றம் கமல் மற்றும் ரஜினியின் பங்கைவிட பன்மடங்கு உயர்ந்தது. வாழ்க அவர் இன்னும் நூறு ஆண்டுகள்!

 **************************

 பாலசந்தர் படங்கள் எல்லாவற்றையும் நான் பார்த்ததில்லை. பார்த்த படங்களை லிஸ்ட் பண்ண முயல்கிறேன்.

* எதிரொலி - சிவாஜி, கே ஆர் விஜயா, மேஜர் சுந்தர் ராஜன் நடித்த பழைய படம்

* எதிர் நீச்சல்  (நாகேஷ், ஸ்ரீகாந்த், செளகார், மேஜர் சுந்தர் ராஜன்)

*  இரு கோடுகள் (ஜெமினி செளகார் ஜானகி, ஜெயந்தி ? )

* அனுபவி ராஜா அனுபவி (நாகேஷ், மனோரமா?)

* அபூர்வ ராகங்கள் (கமல், ஸ்ரீவித்யா, ரஜினி அறிமுகம்)

* அவள் ஒரு தொடர்கதை (சுஜாதா, கமல், ஜெய்கணேஷ்)

* அவர்கள் (சுஜாதா, ரஜினி, கமல், ரவிகுமார்)

* மூன்று முடிச்சு (ஸ்ரீதேவி, ரஜினி, கமல்)

* அரங்கேற்றம் (சுமித்ரா, கமல், சிவகுமார்? )

* மன்மதலீலை (கமல், ஆலம், ஒய் விஜயா)

* சொல்லத்தான் நினைக்கிறேன் ( சிவகுமார், கமல்)

* நிழல் நிஜமாகிறது (ஷோபா, கமல்)

* தப்புத் தாளங்கள்( சரிதா, ரஜினி)

* தில்லு முல்லு (ரஜினி, தேங்காய் ஸ்ரீனிவாசன், செளகார் ஜானகி, மாதவி)

* நினைத்தாலே இனிக்கும் (கமல், ஜெயப்ரதா, ரஜினி)

* ஏக் துஜே கேலியே (கமல், ரதி)

* தண்ணீர் தண்ணீர் 

* அக்னி சாட்சி

* சிந்து பைரவி (சிவ குமார், சுஹாஷினி, சுலக்ஷனா)

* வானமே எல்லை

* புது புது அர்த்தங்கள் (ரகுமான், சித்தாரா)

* புன்னகை மன்னன் (கமல், ரேவதி, ரேகா)

* மனதில் உறுதி வேண்டும் (சுஹாஷினி)

* பார்த்தாலே பரவசம் (ஸ்னேஹா)


*****************************

பாலசந்தரையும் அவர் படங்களையும் நான் புகழ வேண்டியதில்லை! உலகமே அதை செய்து கொண்டு இருக்கிறது.

பாலசந்தர் படங்களில் குறை கண்டு பிடிக்க முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. பாலசந்தர் படங்கள் எதார்த்தமா ரியலிஸ்டிக்கா இருக்கும் என்றெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன். இவர் படங்களும் "சினிமாட்டிக்கா" மேலும்  "நாடக பாணியில்" வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான்  இருக்கும்.

மேலும் இவர் படங்களில் முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு "அடல்ட்டரி" மற்றும் "தகாத உறவுகள்" போன்றவை நெறையவே இருக்கும். அதனால் இவருடைய பல படங்கள் குழந்தைகளுக்கு உதவாத  "எ" சான்றிதழ்கள் பெற்றவை. ஆக, இவர் படங்களை சமுதாயத்தை சீரழிக்கும் படங்கள் என்று குதர்க்கமாகவும் விமர்சிக்கலாம்.

நாளைய உலக சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் அமரர் பாலசந்தர் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார். அப்போது அவர் ஒரு தமிழர் என்கிற அடையாளம் சொல்லாமல் சொல்லப்படும். அந்த வகையில் ஒவ்வொரு தமிழருக்கும் பாலசந்தர் பெருமை சேர்த்து தந்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

Friday, December 26, 2014

பதிவுலகில் மிகவும் எரிச்சல் தரும் பதிவர்? சுய அறைதல்!

பொதுவாக இதுபோல் பதிவர்களைப் பத்தி பதிவுகள் எழுதுவது தனிநபர் தாக்குதல்ப் பதிவு அல்லது மற்றும் அநாகரிகமான பதிவு என்று வகைப்படுத்தப்படும். இருந்தாலும் உங்களை நீங்களே திட்டிக்கலாம்! அதை யாரு கேக்க முடியும்? என்ன? அப்படியும்  சொல்லிவிட முடியாதா?  உங்க மேலே கொஞ்சமாவது மதிப்பு, மரியாதை, நட்பு பாராட்டும் ஒரு சிலருக்கு உங்களை நீங்களே விமர்சிக்கிறதும் பிடிக்காது! ஆக, உங்களுக்கு உங்களைத்திட்டுவதற்கான அந்தச் சுதந்திரமும் முழுமையாகக் கெடையாது என்பதே உண்மை.

எப்படியோ இருந்துவிட்டுப்  போகட்டும்.விசயத்துக்கு வருவோம்.

பதிவுலகில் நாம் எல்லோருமே புதியவராக வருகிறோம். புதுப்படம் ரிலீஸ் ஆவது போலதான். புதிதாக வந்த காதலிபோலே கொஞ்ச நாள் நல்லாவே ஓடும். கொஞ்ச நாட்கள்தான் அப்படி. நாள் ஆக ஆக உங்கள் பதிவுகளை வைத்து உங்கள் மேல் ஒரு பல முத்திரைகள் குத்தப்படுகிறது. இதைத் தவிர்ப்பது கடினம். அதாவது இவர்னா இப்படித்தான் எழுதுவாரு என்றாகிவிடும். அதாவது உங்களுடைய  விருப்பு, வெறுப்பு, ரசிப்புத்தன்மை எல்லாம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள், விவாதங்கள் மூலமாக  வெளியில் வந்தவுடன் நீங்க ஒரு முத்திரை குத்தப் பட்ட பதிவர்!

அதுக்கப்புறம் என்ன ஆகும்?

எனக்குத் தெரிய பலருக்கு ஒரு சில பதிவர்களின் பதிவுகளைப் பார்த்தாலே ஆகாது. இதுதான் இயற்கை! மனித இயல்பு!

 சுய அறைதல்...

வேற யாரையும் எதுக்கு இழுக்க? உதாரணத்துக்கு பலருக்கு  வருண் என்கிற பதிவரின் பதிவுகளைப் பார்த்தாலே பிடிக்காது! வந்துட்டான்டா நாதாரி! என்னதான்டா இவன் சொல்றான்? னு  மறக்காமல், கட்டுப்படுத்த முடியாமல் ஒரு எட்டு வந்து பதிவை வாசிச்சுப்புட்டு, வழக்கம்போல திட்டிட்டுப் போயிடுவாங்க. திட்டுவது பின்னூட்டத்தில் இல்லை! மனசுக் குள்ளேயேதான்!

ஆக ஒருவருக்கு முத்திரைகள் குத்தப்பட்ட பிறகு  வருணுக்கு மட்டுமல்ல பொதுவாக உங்களுக்குக்கூட இந்நிலைதான் சாதாரணமாக பதிவுலகில் நடக்கிறது.

என்ன மாதிரி முத்திரைகள்??


 

* வருண் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்!
ஆத்திகர்கள் அதிகமாக உள்ள  இவ்வுலகில் பலருக்கு  "வருண்"  ரொம்ப ரொம்ப கெட்டவன்"! ஆக,  வருணைப் பிடிக்காத, வருணை வெறுக்கும் இந்த அப்பாவிகள் மேல் வருண் கோபங்கொள்ளலாமா? இங்கேதான்  கவனமாக இருக்கணும். இதில் ஆத்திகர்களை  குறை சொல்லவே முடியாது. அவர்கள் சிந்தனைகளை, நம்பிக்கையை  வருண் மதிக்காமல் இருப்பது வருணின் தவறுனுகூட சொல்லலாம்!

* வருண்  "அநாகரிகப் பின்னூட்டமிடுபவதில்" பேர் போகாதவன்!

பல தளங்களில் பலருக்கும் அவர்கள் தளங்களில் பலவிதமான தர்ம சங்கடங்களை உருவாக்கி இருக்கிறான்.

"சனியன் பிடிச்சவன் வந்துட்டான்! இவனை என்ன பண்ணுறது?" எதுக்கு இங்கே வர்ரான்னு தெரியலை!" னு துஷ்டனைக் கண்டால் தூர விலகுனு ஒரு சிலர் ஒதுங்கிப்போவதை  வருணால் உணரமுடியாமல் இல்லை!

* வருண்  பார்ப்பனர்களை இஷ்டத்துக்கு விமர்சிப்பவன்! அதுவும் இந்த நாகரீக உலகில், எந்தவிதமான  ஈவு இரக்கமே இல்லாமல், வரம்பு மீறி விமர்சிப்பவன்!

 பாதிக்கப் பட்ட, பாதிக்கப் படுகிற அப்பாவிப் பார்ப்பனர்கள் பலர், "பாவி இவன் நாசமாப் போகணும்"னு மனதாறத் திட்டலாம். பகவானிடம போயி், "இந்தச் சனியன் ஒழிய ஏதாவது செய்"னு தட்சணை வைத்து வேண்டிக்கலாம். ஏன்  பூஜைகள், யாகங்கள்கூட செய்யலாம். மறுபடியும் அவர்கள் மேல் தப்பில்லை. பாதிக்கப்பட்டவர்கள் அப்படித்தான் தன்னை வறுத்தியவனை சபிப்பார்கள். இதையெல்லாம் புரிந்து  கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அப்பாவிகளை திருப்திப்படுத்த "இல்லாத ஒரு பகவானை" வருண் வணங்கவோ வழிபடவோ முடியாது!

* வருண்  தனிநபர் தாக்குதல் பதிவுகள் எழுதுபவன்!

 கூச்சமே இல்லாமல் பல முறை, பல பதிவர்களை பலவாறு விமர்சிச்சுப் பதிவு எழுதி இருக்கான். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் நட்பு வட்டாரம், அவர்கள் நலம் விரும்பிகள் எல்லாரும் கூடி ஒப்பாரி வைத்துவிட்டு  சபித்துவிட்டுத்தான் போவார்கள். இப்படி பாதிக்கப்பட்ட  பலருக்கும் வருண்  பேரைக் கேட்டாலே வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு  உண்டாவது இயற்கை.  அவர்களும்  வருணை மதிக்கணும், உயர்வாக நினைக்கணும் என்று வருண் நினைத்தால் வருண், வருணாக இருக்க முடியாது!

இதுபோன்ற முத்திரைகள்!

 

நமது கருத்தை ஆணித்தனமாக சொல்லும்போது, பலர் வெறுப்புக்கு ஆளாவது இயல்பு என்பதை ஆறறிவு உள்ள வருண் உணர்ந்து வைத்து இருக்கணும்.

ஆக, இப்படி பல குற்றச்சாட்டு முத்திரைகள் குத்தப்பட்ட  ஒரு சாதாரண பதிவன் வருண்! ஆனால் நீங்க எல்லாருக்கும் எப்போதுமே நல்லவராக இருந்தால் இந்தப் பிரிச்சினை இல்லை! அப்படி நீங்க  நல்லவராக உங்க வீக்னெஸை, விருப்பு வெறுப்பை வெளியே காட்டாமல் இருந்தாலும் நீங்கள் ஒரு மாதிரியான "போர் கேரக்டர்" என்கிற முத்திரை குத்தப்படும்.

நிற்க!

* ஒரு பதிவரை விரும்புவது, வெறுப்பது, சகித்துக் கொள்வதெல்லாம் தனிப்பட்டவாசகர்/பதிவர் தரம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை இவைகளைப் பொறுத்தது.

* ஒருவரை அல்லது அவர் பதிவுகள  ரசிப்பதோ வெறுப்பதோ தனிப்பட்டவர்களின் உரிமை, சுதந்திரம்!

* அவரவர் மனதுக்கு அவர்  அவரே ராஜா/ராணி. அவர்கள் உங்களை வெறுப்பதை  நீங்க என்ன,  யாருமே கட்டுப் படுத்த முடியாது. உங்களால்  எல்லாரையும் திருப்திப் படுத்தவும் முடியாது!

ஆக பதிவுலகில் எப்படி குப்பை கொட்டுவது??

பதிவுலகில் நீண்ட நாட்கள் வாழ ஆசைப்பட்டால், பதிவர்கள் மத்தியிலே நாள் ஆக ஆக உங்கள்மேல் நிலவும்  வெறுப்பையும் சகித்துக்கொண்டு, உதறித் தள்ளிவிட்டுத்தான் போகணும். அப்படி உதறித்தள்ளிவிட்டுப் போக நீங்க கற்றுக்கொள்ளவில்லையென்றால் பதிவுலகம் உங்களுக்கு நரகமாகிவிடும்!

பதிவுலகில் சஞ்சாரம் செய்யும் ஒருவர் நாட்கள் கடக்கக் கடக்க "புகழ்" சம்பாரிக்கிறாரோ இல்லையோ நெறையவே "இகழ்" சம்பாரிப்பதைத் தவிர்க்க முடியாது! இங்கே நான் சொன்னதெல்லாம் உண்மை! உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!

Now Relax please!

 

Wednesday, December 24, 2014

நிறக்குருடு குறைபாடு உள்ளவரா நீங்கள்?

நிறக்குருடு அல்லது கலர் ப்ளைண்ட்னெஸ் என்பது ஒரு குறைபாடு. இந்தக்குறைபாடு உள்ளவர்களுக்கு கண்பார்வை நல்லாத் தெரியும். ஆனால், ஒரு சில நிறங்களை வேறுபடுத்த முடியாது. இதுபோல குறைபாடு உள்ளவர்கள் பல வேலைகளில் புறக்கணிக்கப்பட மாட்டாங்க. இருந்தாலும் ஒரு சில வேலைகளுக்கு (Army, Navy etc) தகுதியில்லாதவர்களாவார்கள்.

கீழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் சதுரமும், அரக்கு வட்டமும் தெரியணும். உங்களுக்கு அரக்கு வட்டம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.



கீழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் வட்டமும், அரக்கு சதுரமும் தெரியனும். உங்களுக்கு அரக்கு சதுரம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.




கீழே உள்ள படத்தில் ஒரு அரக்கு "படகு போல்" வரைந்த படம் தெரியணும். உங்களுக்கு அரக்கு படகு தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.



உங்களுக்கு அரக்கு மற்றும் மஞ்சள் நிறங்கள் தெரியலைனா கவலைப் படாதீங்க! இது ஒண்ணும் பெரிய வியாதி/குறைபாடு இல்லை. இதுபோல் குறைபாடு இருந்து அதை நீங்கள் உணராமல் இருப்பதைவிட தெரிந்து கொள்வது நலம்.

உங்களுக்கு இக்குறைபாடு இருந்தால், அதை இப்போதுதான் இந்தப் பாவி வருணால் தெரிந்துகொண்டால், அதை நீங்கள் வெளியில் (இங்கேயும்தான்) சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

உங்கள் குறைபாடை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். அதுவே போதும்! :)

credit should go to: Colorblindness-test

ஆமா இதுவும் ஒரு மீள்பதிவுதான். :)

Monday, December 22, 2014

கத்தி மற்றும் லிங்கா வசூல் நிலவரம்!

தமிழ்ப் படங்கள் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு. ஆந்திரா பாக்ஸ் ஆபிஸ்லதான் இப்போலாம் தமிழ்ப்படம் எப்படிப் போகுதுனு எழுதுறாங்க.

இவ்வளவுக்கும் கத்தி ஆந்திராவில் ரிலீஸ் ஆகவே இல்லை!

நீங்க கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தால் ஒரு பத்திரிக்கையே முதலில் ஒன்றைச் சொல்லும். ரெண்டாவது நாள், அதே பத்திரிக்கை, அதுக்கு முரணாக ஒரு கருத்தைச் சொல்லும். சினிமா செய்திகள்னு வந்துவிட்டால் தமிழ் பத்திரிக்கை, வலைதளங்கள் மட்டுமன்றி, ஆங்கில்ப் பத்திரிக்கைகளும் முன்னுக்குப்பின் முரணாக எழுதுவதில் விதிவிலக்கல்ல!

ஒரு படம் வெற்றியா இல்லை தோல்வியா? என்று முடிவு செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்..

மிகப்பெரிய வெற்றிபெற்றதாக சொல்லப்படும் கத்தி கலக்‌ஷன் (54 நாட்கள்)! உலக அளவில்!

 NoImage

வெற்றி பெற்றதா இல்லையா? என்று குழப்(ம்)பிக்கொண்டு இருக்கும் லிங்கா (10 நாட்கள்) வசூல் (உலக அளவில்) என்னனு பார்த்தால்..



NoImage

 இந்த ஆந்திராபாக்ஸ் ஆபிஸ் நடத்தும் ஆள் சொல்றபடி பார்த்தால். லிங்கா 10 நாட்களில் 130 கோடி வசூல் செய்துள்ளது.

கத்தி,  54 நாட்களில் 125 கோடி வசூல் செய்துள்ளது. அதாவது லிங்கா வசூலைவிட 5 கோடி கம்மியாத்தான் வசூல் செய்துள்ளது..



 ஆந்திராவை விடு! சென்னையில் மட்டும் எப்படினு கேட்டால்...



Kaththi



Week : 2
Total collections in Chennai : Rs. 5,32,40,818
Verdict: Grand Opening
No. Shows in Chennai (Weekend): 306
Average Theatre Occupancy (Weekend): 85%
Collection in Chennai (Weekend): Rs. 1,24,59,351
No. Shows in Chennai (Weekdays): 408
Average Theatre Occupancy (Weekdays): 55%
Collection in Chennai (Weekdays): Rs. 1,06,71,650




Lingaa


Week : 2
Total collections in Chennai : Rs. 5,34,98,496
Verdict: Grand Opening
No. Shows in Chennai (Weekend): 270
Average Theatre Occupancy (Weekend): 85%
Collection in Chennai (Weekend): Rs. 1,13,80,624
No. Shows in Chennai (Weekdays): 700
Average Theatre Occupancy (Weekdays): 55%
Collection in Chennai (Weekdays): Rs. 1,61,61,508


சென்னையிலும், கத்தியைவிட  ரெண்டு நாள் கம்மியா ஓடிய லிங்கா கலக்சன் தான் அதிகமா இருக்கு. (பிஹைண்ட்வுட் சோர்ஸ்). இதுதான் வசூல் நிலவரம்!

பட்ஜெட்னு பார்த்தால் ரெண்டு படத்துக்கும் அப்படி ஒண்ணும் பெரிய வித்தியாசம் இருக்குமா என்னனு தெரியலை.

ஆனால், கத்தி படம் ப்ளாக் பஸ்டர் என்கிறார்கள்..நீங்களும் ஆமானுதான் சொல்லுவீங்க..

லிங்கா??? வெற்றியா தோல்வியா?? னு தெரியாமல் ஆளாளுக்கு கதை விடுறாங்க!!

64 வயதில் ரஜினி படம் வெற்றியடைய  இதைவிட  எவ்ளோதான் வசூல் பண்ணணும்னு தெரியலை!!!

இல்லைனா ரஜினி படத்துக்குணு வைத்திருக்கிற அளவுகோல் வேறயா? குழப்பாதீங்கப்பா!

Friday, December 19, 2014

லிங்கா பற்றி புரளி பரப்பினால் அபாயம்!!!

பணம் செலவழித்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறாங்க. அது லிங்காவிலிருந்து ஆரம்பம் ஆகிறது. நீங்க ஏதாவது படத்தைப் பற்றி விமர்சிக்க உங்களுக்கு உரிமை உண்டு. படம் நல்லாயிருக்கு இல்லைனா படம் நல்லாயில்லை என்று படத்தை விமர்சிக்கலாம். மற்றபடி, எதையும் மிகைப்படுத்தி எழுதினால் சட்டம் உங்க மேலே பாயலாம். அதுவும் ட்விட்டர், ஃபேஸ் புக்கில் ஆதாரமில்லாமல் தகவல் வெளியிட்டால் உங்க அக்கவுண்ட் முடக்கப் படலாம்.

நீங்க நினைப்பதைவிட இது ஒரு சீரியஸான மேட்டராக மாறிக்கொண்டு வருகிறது. என்னை நம்புங்கள்!

 நேற்று ஒரு யு ட்யூபில் தன்னை திருச்சி தஞ்சாவூர் லிங்கா விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக்கொண்டு இருவர், படத்துக்கு கூட்டமே இல்லை என்று பிரச்சாரம் செய்தார்கள். "இவர்கள் யார்? சில  உண்மைகளோடு பல பொய்களையும் கலந்து ஒரு தகவலை வெளியிடுகிறார்களோ?" என்கிற சந்தேகம்  அந்த யுட்யூப் பார்த்தவர்களுக்கு உருவாகும்! ஏன் என்றால் இவ்வளவு காசு கொடுத்து பட உரிமை வாங்கியவன் இப்படி ஒரு விளம்பரம் வெளியிட்டால் அவனுக்கு இன்னும் நஷ்டம்தான் வரும். ஒரு வியாபாரி அதை நிச்சயம் செய்ய மாட்டான்! எதிர்பார்த்ததுபோலவே  பிறகு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து  இந்த யு-ட்யூப் வெளியிட்ட இவர்கள் விநியோக உரிமை பெற்றவர்கள் அல்ல, பொய்யர்கள், லிங்கா பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.. அவர்களை போலீஸ் தேடுகிறது என்கிற செய்தியும் அடுத்த நாளே வருகிறது.

 https://pbs.twimg.com/media/B5PQ9tMCYAA7o41.jpg

ஆதாரம் இல்லாமல் திரு ஸ்ரிதர் பிள்ளை "லிங்கா லிம்ப்பிங்" என்று அவர் ட்விட்டரில் எழுதியதை பலரும் ட்விட்டரில் எதிர்க்கிறார்கள். "இது  ஆதாரமில்லாத செய்தி" என்கிறார்கள். அவருக்கும் லீகல் பிரச்சினை வர வாய்ப்பிருக்கு போல தோனுது.

லிங்கா படத்தை விமர்சியுங்கள்! படம் நல்லாயில்ல, படம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள். ஆனால் அதே சமயத்தில் அளவுக்கு அதிகமாக உங்க சொந்த வார்த்தையைப் போட்டு வாக்கியங்கள் அமைத்து உங்களையே அறியாமல் பொய்களை எழுதினால் உங்களுக்கும் உங்க தளத்திற்கும் சட்டப்படி பிரச்சினை வரலாம். கவனம்!!

Wednesday, December 17, 2014

லிங்கா பார்த்த கதை!

அமெரிக்கா கொட்டகையில் போயிப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. பல வருடங்களாச்சு! ஆமா, எந்திரன் பார்த்தது. நேரம் சரியாக அமையாததால் கோச்சடையான்கூட பார்க்கவில்லை! அதென்னவோ லிங்கா படம் பார்க்கணும்னு ஒரு ஆவல்.  படம் பார்க்க நேரமும் கிடைத்தது.

ஒரே க்யூரியாஸிட்டி..  இந்த அறுபத்து நாலு வயசுல ரஜனி என்னதான் நடிச்சு இருக்காரு? இந்த வயதில் ஆடி ஓடி "ரஜனியாக" ஸ்டைலுடன் நடிக்க முடியுமா? அதுவும் இந்த வயதில் சின்னப் பொண்ணுங்க  அனூஷ்கா, சோனாக்ஸியோட எல்லாம் ரஜனி டூயட் எல்லாம பாடுவதைப் பார்த்து ரசிக்க முடியுமா? என்ற பதில் தெரியாத கேள்விகளுக்கு பதிலறிய ஆசை. இது போதாதுனு படம் வெளிவரும் முன்னாலேயே ஆளாளுக்கு இது என் கதை என் கதைனு சொல்லி கேஸ் மேலே கேஸ் போடுறாஙகளே?

அப்படி என்னதான் கதை ? சரி போயித்தான் பார்ப்போமே?னு புறப்பட்டுப் போனேன்.

இருங்க!

******************************

இதுக்கு இடையில் பதிவுலகில் விமர்சனங்களும் வந்துவிட்டன.

*  மணிமாறன் (இவர் என்ன மூடுல படம் பார்த்தாரோ?) படம் ஒரு தர பார்க்கலாம்னு ஒரே சலிப்பு! இவர் விமர்சனத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லை!

அப்புறம் நம்ம ரஜினி ரசிகர் கிரி, நான் எதிர்பார்த்ததுக்கு எதிரா இவர் விமர்சனம்! கிரிதான் நமக்கு சுத்தமாப் பிடிக்காத இயக்குனர் பாலா ரசிகரே. அதனால இவர் டேஸ்ட் வேற மாதிரி இருக்கலாம்னு என்னை நானே சரிக்கட்டிக்கிட்டேன்.

* ரஜினி விசிறி ஹாரியின் விமர்சனம். அதுவும்  ஓரளவுக்கு நல்லா இருந்தாலும்,  ரொம்ப நல்லா இருந்ததுனு சொல்ல முடியாது.

எல்லாமே நெகட்டிவ்தான்!

* ரஜினி விசிறி ஆரூர் மூனா விமர்சனம் வந்தது!! விமர்சனம் நல்லா இருந்தது! சரி ரஜினி விசிறியாக இருந்தாலும் இவர் ஓரளவுக்கு நியாயமாகத்தான் எழுதுவாருனு ஒரு நம்பிக்கை வந்தது!

* உண்மைத்தமிழன், சரவணன்  நல்ல விமர்சனம் எழுதி இருந்தாரு. இவரு சுமாரான ரஜினி விசிறி என்றாலும், ஓரளவுக்கு நியாயமாகத்தான் எழுதுவாருனு ஒரு ஆறுதல்.

* அதிசயமாக,  ஜாக்கி சேகர் விமர்சனமும் நல்லா இருந்தது!!! இவர் ஒரு  கமல் ரசிகர்னுகூடச்  சொல்லலாம். இருந்தும் இவர் விமர்சனம் நம்ம ரஜினி விசிறிகள்  கிரி, ஹாரி விமர்சனத்தைவிட  நல்லா இருந்தது.

சரினு ரொம்ப எதிர்பார்க்காமல்த்தான் படம் பார்க்கப் போனேன்..

**************************

நான் போனது முதல் நாள் முதல்காட்சி கெடையாது.  ரெண்டாவது நாள், நைட் ஷோ. அமெரிக்காவில்தான் இப்போலாம் தமிழ்ப்படம் முக்குக்கு முக்கு தினமும் நாலு ஷோ ஓடுதேனு டிக்கட் எல்லாம் ஆண்லைன்ல வாங்கவில்லை! கொட்டகைக்கு ஒரு அரை மணி நேரம் முன்னால போயிட்டேன்.

அங்கே பார்த்தால் ஒரே குடும்பம் குடும்பமா லிங்கா பார்க்கனு குழந்தைகளையும் அழச்சுண்டு வந்துட்டாங்க நம்ம மக்கள். ஒரே பெண்கள் கூட்டம். அவுங்கல்லாம் நம்மல மாரியில்லாமல் ஏற்கனவே டிக்கட்டும் வச்சுண்டு இருந்தாங்க.

சரி கவுண்டரில் போயி லிங்கா ஒரு டிக்கட் னு சொன்னதும் அந்த வெள்ளைக்காரி ஒரு சர்காஸ்டிக் லுக்குடன்!  டிக்கட் விலை  இருபது டாலர் என்றார். "ஆமா எட்டு டாலர்தானே எல்லாப் படமும் இருபது டாலருக்கு அப்படி என்ன படம் பார்க்கிறார்கள்?"  என்பது போல ஒரு லுக்கு விட்டுச்சு அந்த அம்மணி.  "உனக்கு இதெல்லாம் புரியாதும்மா" னு  நானும் சிரிச்சுக்கிட்டேன்.. சரி டிக்கட்டை கொடு னு வாங்கிட்டு உள்ள போனால், ஒரே தாய்க்குலங்கள்தான்ப்பா அலைமோதுச்சுக..

"போய் ஒரு ரோ  ஃபுல்லா சீட் போடணும். அவ வர்ரா. இவ வர்ரா.. ஒண்ணா உக்காந்து பார்க்கணும்"னு ஒரு அம்மா ஒரே  அமர்க்கலம் பண்ணிட்டு இருந்துச்சு!

"நேத்தே முதல் காட்சி முடிந்ததுங்க. இன்னைக்கு கூட்டம் கம்மியாத்தான் இருக்கும். இடம்லாம் ஈஸியா கிடைக்கும்.. கவலைப்படாதீங்க!" னு நானும்  தெரிஞ்ச ஆள் மாதிரி பதில் சொன்னேன். அதென்னனு தெரியல. தமிழ்ப் படம் பார்க்க போனா இந்த ஆண்ட்டிகள் (ரஜினி ரசிகைகள்) எல்லாரும் நமக்கு சொந்தம் போலதான் தோனும். :)

"நீங்கதான் வெங்கட் ஃப்ரெண்டா?"னு இன்னொரு அம்மா என்னிடம் ஓடி வந்துச்சு!

"ஐயோ, அது நான் இல்லைங்க!" னு சொல்லிட்டு வரிசையில் நின்னா ஒரே திருவிழாக்கோலம்தான்.

தியேட்டர் உள்ள போகும்போதே கூட்டம் ஓரளவுக்கு வரும்னு தோன்றியது. கொஞ்சம் நல்ல இடமாப் போயி பிடிச்சுக்குவோம்னு (அமெரிக்காவில் சீட் நம்பர் எல்லாம் கெடையாதுங்க. இவங்க உங்களைவிட கொஞ்சம் பின் தங்கிதான் இருக்காங்க) வேகமா  உள்ள போயிட்டேன். நேரம் ஆக ஆக கூட்டம் கூட்டமா பிள்ளை குட்டிகளை இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க நம்ம மக்கள்.

கழுத்து வலிக்கிறாப்பிலே படம் பார்க்கும் சீட்கள்.. அதாங்க முன்னால முதல் மூனு ரோ மட்டும் ஃபில் ஆக வில்லை. மற்ற ரோ எல்லாமே ஃபில் ஆயிடுச்சு! தியேட்டரில்  ஒரு 80% ஃபுல்லாகி இருந்ததுனு சொல்லலாம். ஒரு 150 பேரு இருப்பாங்கனு நெனைக்கிறேன்.

20 டாலர் தெண்டம் போட்டு படம் பார்க்க வந்து இருக்கேனே?னு ஒருத்தர் கூட கவலைப் பட்ட மாதிரி தெரியலை. இதுல ஒரு சில அம்மாக்கள் விசில் எல்லாம் கொண்டு வந்து அடிச்சுக்கிட்டு படம் பார்க்கிறாங்கப்பா. :)

**********************

பாடல்கள் எல்லாம் ஏற்கனவே வெளி வந்துவிட்டாலும், பாடல்களை அவ்வளவா கேட்கவில்லை. ஏதோ ஒரு 5 பாட்டு இருக்குணு தெரியும். ரெண்டு டூயட்டையும் யு ட்யூப்ல லேசா பார்த்து இருந்தேன்.

சரி, படத்தைப் பத்திச் சொல்லவா?

படம் ஆரம்பம் கிராமத்தில். ஒரு அஞ்சு நிமிடம் ரஜினி இல்லாமலே படம் ஓடுச்சு. அப்புறம்தான்  இண்ட்ரோ சாங் (ஓ நண்பா) வந்தது.

படையப்பாவில்,  சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு னு வெளியே அவுட்டோரில் எடுத்து இருப்பாங்க. இங்கே ஒரு செட்டு போட்டு இந்தப் பாட்டு எடுத்து இருந்தாங்க. பாட்டு நல்லாத்தான் இருந்தது. பார்க்கவும் கேட்கவும்! இந்த வயதில் ரஜினி நல்லா எனெர்ஜ்டிக்காத்தான் இருந்தார்.

அப்புறம், திருடன் ரஜினி- சந்தானம் காமெடி.

 அப்புறம்தான் சேச்சி அனூஷ்கா வந்தார்.

நான் பயந்த மாரி இல்லாமல் 64 வ்யது ரஜினியையும் 25 வயது அனுஷ்காவையும் ஜோடியாக ரசிச்சுப் பார்க்க முடிந்தது. அனுஷ்கா சூரயாவுடன் பார்க்கும்போது ரொம்ப உயரமாத் தெரிவார். இப்போ ரஜினியோட பார்க்கும்போது அப்படித் தெரியவில்லை. மேலும் கொஞ்சம் (ரொம்பவே) வெயிட் போட்டு இருப்பதால் இந்த ஜோடி நல்லாத்தான் இருந்தது.

வேறமாரிச் சொல்லணும்னா இவங்க ரொம்மாண்ஸ்,  சந்திரமுகில , ரஜினி-நயனை ரொமாண்ஸைவிட, சிவாஜில  ரஜினி-ஸ்ரேயா ரொமாண்ஸைவிட, எந்திரன்ல  ரஜினி-ஐஸ்வர்யா ஜோடியை விட நல்லா இருந்தது நான் சொன்னால் நம்ப மாட்டீங்க. என்னுடைய மதிப்பீடு அது.


 



எனக்கு இந்த கெமிஸ்ட்ரி பிடிச்சி இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் அனூஷ்கா சாதாரணமாக ரஜினியோட காசுவலாக க்ளோஸாக நடிச்சு இருந்தார்.

ஆக, என்னுடைய பயம் கொஞ்சம் கொஞ்சமாப் போயிடுச்சு.

அதுக்கப்புறம் படம் ஜாலியாத்தான் போச்சு. காமெடியெல்லாம் சிரிக்க முடிஞ்சது. எரிச்சல் தரவில்லை!

 


இடைவேளைக்கு அப்புறம் படம் நீளம், போர் னு எல்லாரும் சொன்னாங்க, சத்தியமாக எனக்கு அப்படி தோனவில்லை.

 ப்ஃளாஷ்பேக் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ரஜினியின்  நடிப்பையோ பாடல்களையோ, பேக்ரவுண்ட் ம்யூசிக்கோ எனக்கு எதுவும் குறையாகத் தோனவில்லை!

ஆளாளக்கு விமர்சகர்கள் எல்லாம் நல்ல வில்லன் வேணும்னு அடம் பிடிக்கிறாங்க. எனக்கு அதெல்லாம் தேவைப் படவில்லை!

சும்மா சொல்லக்கூடாது சோனாக்சியும் நல்லாவே நடிச்சு இருந்தார். சோனாக்ஸி-ரஜினி காம்பினேஷனும் ரொம்ப விரசமில்லாமல் நாகரீகமாக இருந்தது. அனுஷ்கா-ரஜினி அளவுக்கு கெமிஸ்ட்ரி இல்லை என்றாலும் நல்லாத்தான் இருந்துச்சு. அவர்களுக்கு வரும் டூயட்டும் நல்லாவே இருந்தது.

 


லிங்கேஸ்வரன் ரஜினி பெரியவர்களுக்கும் பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும். (இருங்க! நீஙக ரஜினியை வெறுப்பவராக இல்லை என்றால்! :) )

ரெண்டு டூயட்களுமே நல்லா இருந்தது.

படையப்பா படத்தில் வர்ர  டூயட், எந்திரன் டூயட், சந்திரமுகி டூயட், சிவாஜி டூயட்களைவிட எனக்கு இந்தப் ப்படத்தில் எடுத்து இருந்த டூயட்கள் பிடிச்சதுனு நான் சொல்லணும். :)

 


http://st1.bollywoodlife.com/wp-content/uploads/2014/11/rajini-sonakshi.jpg


அப்புறம் எல்லாரும் குறை சொல்லும் க்ளைமேக்ஸ் எனக்கு எரிச்சல் எல்லாம் தரவில்லை! ரஜினியின் மசாலாப்  படத்தில் க்ளைமாக்ஸ்னா இப்படித்தான் இருக்கும். இதுபோல் மசாலாப் படத்தில் க்ளைமேக்ஸ்னு என்ன எதிர் பார்க்கிறாங்கனு தெரியலை. :)

ஆக இதிலிருந்து உங்களுக்கு நல்லா புரிஞ்சி இருக்கும்?

வருண் ஒரு பக்கா ரஜினி ரசிகன் என்று! நான் ரஜினி விசிறி என்பதால்தான் என்னால ரசிக்க முடிந்ததா என்னனு தெரியவில்லை!

கூட படம் பார்த்த எல்லலோருமே படம் முடிஞ்சு திருப்தியாகப் போனதுபோலதான் தெரிஞ்சது. நான் ஒவ்வொருத்தராப் போயி விசாரிக்கவில்லை.

நீங்க ரஜினியை வெறுப்பவர் இல்லை என்றால் கட்டாயம் போயிப் பாருங்க. ஒரு தர இல்லை, ரெண்டு தர. ரஜினி பிடிக்காதுனா உங்க அபிமான நடிகர் படம் வர்ர வரை வெயிட் பண்ணுங்க!