Tuesday, May 27, 2014

கோச்சடையான் வசூலில் எப்படி?

கோச்சடையான் படத்தை சவுந்தர்யா எடுத்தாரு எடுத்தாரு எடுத்துக்க்கிட்டே இருந்தாரு. ஆண்டுகள் கடக்கக் கடக்க, படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் வலுத்துக்கொண்டே போனது. கடைசியில் ஒரு வழியா  படம் வெளி வந்துவிட்டது. சவுந்தர்யாவின் அனுபவத்தை வைத்துப் பார்த்தால் இப்படத்திற்கு வந்துள்ள  விமர்சங்கள் நல்லாவே வந்து இருக்கின்றன.

முக்கியமாக ரஜினி ரசிகர்களை இந்தப்படம் ஏமாற்றவில்லை!

அடுத்தது, வசூல் நிலவரம் எப்படி?

எந்திரன், விஸ்வரூபம் போன்ற படங்களோட கோச்சடையானை கம்பேர் பண்ண வேண்டுமா? இல்லைனா சும்மா வசூல் பற்றி சொல்லலாமா?

என்னைப் பொருத்தவரையில் இந்தப்படம் போட்ட காசை எடுத்தாலே மிகப் பெரிய வெற்றினு சொல்லுவேன்.

கடந்த வீக் எண்ட் வசூல் 42 கோடி என்று ஈரோஸ் நிறுவனமே வெளியிட்டு உள்ளது.

அதாவது இது அஃபிஸியல் ஸ்டேட்மெண்ட்! சும்மா ஆளாளுக்கு ஒண்ணச் சொல்லி, கடைசியில் தயாரிப்பாளர்கள் வந்து இன்னொரு தொகையை எந்திரனுக்கு சொன்னது போலல்லாமல், இது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாகச் சொன்ன தொகை!

இது பெரிய தொகையா? னு கேட்டால், சேட்டலைட் ரைட்ஸ், ம்யூசிக் ரைட்ஸ்னு பல மொழிகளில் இந்தப்படம் ஏற்கனவே விற்கப்பட்டு இருக்காம், சும்மா சுமாரான ஒரு தொகையைப்போட்டு அதை கூட்டினால் ஒரு 20 கோடியாவது தேறிடும்.சரி இப்போதைக்கு 62 கோடினு வச்சுக்குவோம்.

இது மூன்று அல்லது நான்கு நாட்கள் வசூல். இது கோடை விடுமுறை காலம். இந்தப் படம் சிறுவர்களை ஏமாற்றவில்லை. அதனால் ஓரளவுக்கு தொடர்ந்து வசூலாகிக்கொண்டே போச்சுனா மூனு வாரத்தில் 200 கோடியை தொட்டுவிடுமா? என்பதெல்லாம் தெரியவில்லை!

சரி, எப்படி 42 கோடி கணக்கு?

அமெரிக்கா மற்றும் கனடாவில் 3 கோடி

தமிழ்நாடு  25 கோடி

ஆந்திரா, கேரளா, கர்நாடகா: 7 கோடி

ஹிந்தி வேர்ஷன்: 3 கோடி

யு கே, மலேசியா, சிங்கப்பூர், மிடில் ஈஸ்ட், ஆஸ்திரேலியானு எல்லாத்தையும் கூட்டி ஒரு 4 கோடி

கணக்கு சரியா வருதா? :)

இதில் வேடிக்கை என்னவென்றால், கமல் ரசிகர்களெல்லாம் இந்த 42 கோடி வசூலையே பொய்னு சொல்ல ஆரம்பிச்சுட்டானுக.

விஸ்வரூபம் வந்த போது, ஒரு நாளைக்கு 10 கோடி 15 கோடினு கூட்டிக்கிட்டே போனானுக! அப்போ அதையும் நம்பலையா இவர்கள்??

* ஆந்திராவில் மனம் ரிலீஸ் ஆச்சு, அதனுடைய வசூல் கோச்சடையான் வசூலைவிட ஆந்திரா மற்றும் அமெரிக்காவில் இரண்டு மடங்கு தான். இல்லைனு யாரும் சொல்லவில்லை! இருந்தும், மொத்த வசூல் என்னனு பார்த்தால் கோச்சடையான் வசூலில் பாதிகூட மனம் வசூல் கெடையாது. ஏனென்றால், மனம், கனடா, மலேசியா, சிங்கப்பூர், மற்றும் மிடில் ஈஸ்டில் கனிசமான தொகை வசூல் செய்யவில்லை. அதேபோல், கோச்சடையான் பிர மாநிலங்களில் வசூல் செய்வதுபோல், மனம்  தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா போன்ற மாநிலங்களில் எதுவும் பெருசா வசூல் பெறவில்லை!

* அதேபோல் HEROPANDI என்கிற  ஹிந்திப்படம் ஒண்ணு ரிலீஸ் ஆச்சு. வட இந்தியாவில் மட்டும்தான் இந்தப்படம் பெரியளவில் வசூல் செய்தது. ஓவர் சீஸ்ல சொல்லிக்கிறாப்பிலே வசூல் செய்யவில்லை.

ஆக, மொத்த வசூல்னு பார்த்தால் கோச்சடையாந்தான் முன்னால நிக்கிது என்பது புரியும்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஆந்திரா மற்றும் மொத்த வசூல் எவ்ளோனு மனம் மற்றும் ஹீரோபாண்டிக்கு நான் கொடுக்கத் தயார்.

* HEROPANDI  collection 20 கோடிகள் (பாக்ஸ் ஆஃபிஸ் இந்தியா , Times of India சொல்வது)

Heropanti Box Office: earns Rs 21 crores in opening weekend



* மனம்

 NoImage
இப்போ 4 வது நாள் கலக்சன் என்னனு பார்த்தால்..

கோச்சடையான் 8-10 கோடி வசூல்

மனம் 2.5-3 கோடி வசூல்

ஹீரோபாண்டி  6.5 கோடிகள்.


நிச்சயம் கோச்சடையான், கோடை விடுமுறையில் தொடர்ந்து ஒரு ரெண்டு வாரமாவது தொடர்ந்து இதே வசூலைத் தரும். யாரு உண்மையான வின்னர்னு நீங்களே சொல்லுங்கள்!










Friday, May 23, 2014

கோச்சடையான் வெற்றியா?! அப்டேட்

சவுந்தர்யாவின் எப்ஸ்பெண்சிவ் விளையாட்டு பொம்மைதான் கோச்சடையான்.

மோஷன் டெக்னாலஜி அது இதுனு சொல்லி பெரிய முயற்சி எடுக்கும் அனுபவமே இல்லாத ஒரு குழந்தையின் படைப்புத்தான் இது.

படம் எப்படி இருக்கப் போதோ? என்கிற பீதியில் அலைவது முக்கியமாக  சௌந்தர்யா அப்பாவின் ரசிகர்கள்தான்.

இதுவரை வந்திருக்கும் விமர்சனங்கள் மற்றும் துவீட்டுகள்படி பார்த்தால் படம் ஒருவழியாக தேறிவிடும் என்றே தோன்றுகிறது. கே எஸ் ரவிக்குமாரின், கதை திரைக்கதை மற்றும் ஏ ஆர் ரகுமானின் இசை இரண்டும் படத்தை ஓரளவு மேல்கொண்டு வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது.


 






ReviewPuram ‏@reviewpuram 1m
#Kochadaiiyaan is exhilarating! And HIS voice is more than enough to entertain! ARR is the backbone of the film. EPIC so far...


Ck Mohammed ‏@Ck_Mohammed 7m
The First show just got over @soundaryaarajni you made it big . thalaivaaaaaaa movie blockbuster #Kochadaiiyaan pic.twitter.com/2LJic1kqHj

#Kochadaiiyaan - of course the animation could have better but then we must appreciate the new attempt, do watch in 3D

Sathish ‏@Sathish_Klcc 22m
#Kochadaiiyaan Brave..Clean Narration without any confusion.. @superstarrajini Real Legend pic.twitter.com/hAhpXECBt4

Rajasekar ‏@sekartweets 23m
#Kochadaiiyaan - The climax dialogues of superstar evoke thundering response. Film ends with a surprise note, all set for a sequel

ReviewPuram ‏@reviewpuram 24m
#Kochadaiiyaan interval: Grand canvas, spectacular dialogues and a wonderful compilation of Thalaivar's entertaining mannerisms...


Rajasekar ‏@sekartweets 26m
#Kochadaiiyaan - loved the 3D work in the introduction shots. Dialogues, Rajini's mannerisms, ARR's BGM in war sequences created the magic

Rajasekar ‏@sekartweets 28m
#Kochadaiiyaan -3.5/5,The majestic Rajini steals the show. Kudos to @soundaryaarajni for the effort, a proud rocking debut for sure

bharathnt ‏@bharath1 35m
The real hero of #Kochadaiiyaan is K S Ravikumar.


The good news : it feels very much like a #Rajini film with heroism of #epic proportions. #Kochadaiiyaan
#Kochadaiiyaan, a decently made animated film with Rajini magic, 
K S Ravikumar's superb dialogues and A.R. Rahman's brilliant music
.@soundaryaarajni's prjt mgmt skills are GRT. To pulloff such a mammoth project straightaway ! #Salute #Kochadaiiyaan
#Kochadaiiyaan . What A movie. Therrifffficccc. @superstarrajini. thalaivaa.... u r THE KADAVUL. was moved to tears watchin the end credits
Ellai Unakillai #Thalaivaa.. #Kochadaiiyaan... @superstarrajini and @soundaryaarajni paves way for a new market... Creates history.. 
Inspite of amateur motioncapture its #Kochadaiiyaan and Rana who keeps you entertained. Grt Bgm. Slow paced songs. Grt attempt.
A strong plot. And, a stronger hero. Both augment each other, and the result - A Blazing .@Kochadaiiyaan!
Kochadaiiyaan:1/0 INIFINITY, Simple story,engagng screenplay,Rajini voice,ARR mus,overal movie rocks,go n enjoy tis new exp. Standing applause in NJ, none went out till the thank you note. Fans & all audience enjoyed.
Kochadiiyaan Is a Hard Code attempt in Tamil Cinema. But it lacks Originality. And, seems like a Cartoon Movie.
இதுவரை வந்த விமர்சங்கள் எதுவும் மோசமாக இல்லை! வெற்றி நிச்சயம் ஆனால் எவ்வளவு பெரிய வெற்றி என்பதே இப்போது  கேள்விக்குறி!



Thursday, May 22, 2014

பதிவர் சந்திப்பின்போது பொறணி பேசுவதைப் பத்தி எழுதுங்களேன்?

எல்லா பதிவர் சந்திப்பிலும் நடக்கிற சிறப்பு நிகழ்ச்சி, கற்றது, புகைப்படங்கள். பதிவர் பட்டறைனு எல்லாரும் எழுதுறாங்க. இது தவிர "பிஹைண்ட் த சீன்" நடப்பதை யாருமே எழுதுவதில்லை! நீங்க எதுவுமே சொல்லாவிட்டாலும், சந்திப்பின்போது யார் யாரு தலையெல்லாம் யாரு யாரிடம் உருளும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. :)




 ஒத்த கருத்தைக்கொண்டவர்கள் ரெண்டு பேர் சந்திக்கும்போது அவர்களுக்கு ஒவ்வாத கருத்தைக் கொண்ட ஒரு பதிவர், எரிச்சலூட்டும் பதிவர்கள், திமிர் பிடித்த பதிவர்கள் போன்றவர்கள் பற்றி "காதும் காதும் வைத்தது போல" "கலந்துரையாடல்" நடக்கத்தான் செய்யும்.

என்னைக்கேட்டால் அந்தப் பகுதி ரொம்ப இண்டெரெஸ்டிங்காகவும் இருக்கும்னு சொல்லுவேன். நாகரிகம் கருதி அதைப்பத்தி யாருமே விரிவாக எழுதுவதில்லை. அப்படியெல்லாம் எதுவுமே நடக்கலைனு எல்லாம் பொய் சொல்லாதீங்கப்பா.



ஒரு முறை பதிவர் ஒருவர் இலை மடிப்பதைப் பற்றி விமர்சிச்சு அந்த விவாதம் ஒரு 1000 பதிவுகளை உருவாக்கி, பதிவுலகில் மதச்சண்டை ஒண்ணு பெருசா நடந்த ஞாபகம் வருகிறது.

அதன் பிறகு வேறு எதுவும் பெரிய கலவரம் நடக்கவே காணோம். எல்லாரும் ஒரு "காண்ஃபிடென்ஸியாலிட்டி அக்ரீமெண்ட்" எல்லாம் போட்டுத்தான் இப்படி பிறர்பற்றி பேசுவீங்களா என்னனு தெரியலை.

"பொறணி" என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் எனப்தை நான் சொல்ல வேண்டியதில்லை. இன்னைக்கு பொறணி பேசாமல் எல்லாரும் டி வி பார்க்கிறது, வேலைக்குப் போறதுனு பிஸியானதும் நம்மில் மனநோயாளிகள் அதிகமாகி விட்டார்கள் என்று ஒரு "டேட்டா கலெக்ஷன்" கூட இருக்கு! :)

Wednesday, May 21, 2014

தமிழனின் திமிரும் அகந்தையும் தலைகாட்டும் தருணங்கள்!

பொதுவாக தமிழர்கள் என்றாலே மற்றவர்களிடம் ஒரு "மட்டமான ரெப்யூட்டேஷன்" உண்டு. இது பொதுவாக பிற மாநிலங்களில் வாழாத தமிழர்களுக்கு தெரியாது. பிற மாநிலத்தவர்கள் உங்களைப் பற்றி நீங்கள் அருகிலில்லாதபோது என்ன பேசுகிறார்கள் என்று ஒரு சில பிற மாநில நண்பர்களிடம் அல்லது தோழிகளிடம் விசாரித்துப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

பொதுவாக தமிழர்களிடம் உள்ள அந்தத் திமிர் அல்லது அகந்தை எல்லோரிடமும் அல்லது எல்லா நேரங்களிலும்  தலைகாட்டாது. தமிழர்கள் என்றால் பொதுவாக திருக்குறள் பேசிக்கொண்டு ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் எல்லாம் பேசிக்கொண்டு , கண்ணதாசன் பாடல்களைப் பாடி தத்துவங்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் .

தனக்கு ஒண்ணுமே  தெரியாது னு சொல்றவங்களையும் , தனக்கு நிகராக அவர்களை நினைப்பவர்களையும்கூட சரியாகப் புரிந்துகொண்டு அவர்களை தனனைப்போல்  மதிக்கவும் தெரிந்தவர்கள்தான் தமிழர்கள். தேவையே இல்லாமல் மற்றவரின் கொள்கைகளையோ, அறியாமையையோ, நம்பிக்கையையோ, ஏழ்மையையோ, இயலாமையையோ  ஏளனமாக இவர்கள்  பேசுவதில்லை!

ஆனால்...ஒரு சில நேரங்களில், ஒரு சிலருடன் இவர்கள் விவாதிக்கும்போது, ஒரு சிலருடைய "ஆட்டிட்டூட்" பிரச்சினைகளால்  ஏற்படும் விவாதம் விபரீதமாகி  நிற்கும். அது நிச்சயம் "ஈகோ- க்ளாஷ்" தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படி ஆகும்போது  விவாதம் தலை கால் தெரியாமல், கட்டுக்கடங்காமல் போவதுண்டுதான்!

அப்படி ஒரு சூழல் உருவாகும்போது விவாதம் நடக்கும் அந்தத்  தளம் நடத்துபவருக்கே என்ன செய்வதென்று தெரியாத ஒரு சூழல் உருவாகிவிடும். இதெல்லாம் தமிழ் இணையதளங்களில் காலங்காலமாக தமிழர்களுக்குள் நடப்பதுதான். புதிகாக ஒன்றும் உருவாகவில்லை!

பதிவர்களுக்குள் பிரச்சினையை எப்படி தீர்ப்பது? னு திரு தனபாலன் பதிவு போட்டு அனலைஸ் செய்துகொண்டு  இருக்கிறார்

இதையெல்லாம் தீர்ப்பது, அல்லது நடக்காமல் செய்வது என்பதெல்லாம் நடக்கிற காரியமா? என்னனு எனக்குத் தெரியவில்லை. மேலே உள்ள பதிவில் இதுபோல் பதிவர்கள் இடையில் வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பற்றி  ஆராய்ச்சி பண்ணுகிறவர்கள், பொதுவாக விவாதங்களில் தலையிடாமல் நாகரீகமாக ஒதுங்கிக்கொள்ளத் தெரிந்தவர்கள். இவர்களை "சமர்த்து" என்று சொல்லலாம்தான். ஆனால் தமிழர்களில் பல வகை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்! எல்லாத் தமிழர்களும் இவர்களைபோல் "பெரிய மனிதர்கள்" கெடையாது. இவர்களுக்கு இன்னொரு வகைத் தமிழர்களின் மனநிலை, "டெம்ப்பரமெண்ட்" எல்லாம் சரியாகப் புரிவதில்லை!

ஒரு சில தமிழர்களிடம் விவாதங்கள் எப்படியெல்லாம் கரை புரண்டு ஓடி, கடைசியில்  எப்படி நிற்கிறது என்று பார்க்க வேண்டுமென்றால்,

"ஏன் இப்படி!"   தளத்தில் உள்ள பதிவுகளுக்கான கீழே உள்ள தொடுப்புகளில் உள்ள பின்னூட்டங்களை (பதிவை அல்ல) வாசித்தால் தெரியும்..

தமிழனிடம் தூங்கிக்கொண்டு இருந்த  திமிரும் அகந்தையும் ஆணவமும் வெளிவரும் சில தருணங்கள் இருக்கின்றன! அப்படி ஆணவம் தலைத்தூக்கும் தருணங்கள் என்னவெல்லாம் என்று கீழே உள்ள பதிவுகளில் பின்னூட்டங்கள் படித்தால் உங்களுக்கு விளங்கலாம்.

கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post

பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1

இதுபோல் நடக்கும் விவாதங்களையெல்லாம் "விதண்டாவாதம்" "வேலையில்லாதவன் செய்வது" "வரட்டு கவுரவம்" என்று சொல்லலாம்தான். ஆனால் ஒரு சில நேரங்களில் பதிவுலகில் இவைகளை தவிர்க்க முடியாது. ஆமா, மேலே உள்ள விவாதத்தில்  யாரு ஜெயிச்சா?னு அப்பாவியாக கேள்வி கேட்காதீர்கள். இதுபோல் "நான் என்னும் அகங்காரம்" தலைதூக்கி கரை புரண்டு ஓடும் விவாதங்களில் வெற்றி,  தோல்வி என்பதெல்லாம் கெடையாது!

Disclaimer: இப்பதிவில் இடப்படும் பின்னூட்டங்கள் வெகு கவனமாக மட்டுறுத்தல் செய்யப்பட்டு வெளியிடப்படும்!

அறிவியல் சொல்லிக்கொடுப்பது கற்றுக்கொள்ளத்தான்! மூன்று

அறிவியல் என்பது கடல்! அது சரி, எதுதான் கடல் இல்லை? தமிழும் கடல்தான்!  பெண்கள் மனமும் கடல்போல ஆழமானதுதான். உண்மைதான் அறிவியல்போலவே அவைகளும் கடல்போல ஆழமானதுதான். ஆமா, ஏகப்பட்ட கடல்கள் இருக்கு நம்மைச் சுத்தி! :-))

"ஒரு ஆசிரியர்னா அவர்களுக்கு எல்லாம் தெரியும். அவங்க சொல்றதை எல்லாத்தையும் மதிக்கணும்" என்பது  நம்மிடம் உள்ள தவறான புரிதல். அந்த ஆசிரியர்  அந்த சக்ஜெக்ட்ல பி எச் டி வாங்கி இருக்கலாம்..அதனால என்ன இப்போ?

இங்கேதான் அறிவியலாளன் என்பவன் பிரச்சினைக்குரிய ஒரு ஆளாகிறான். எதையும், யாரையும்  ஆராய்வதில தப்பில்லை! அறிவியலாளனுக்கு அடிப்படை என்னவென்றால் உண்மை! வெறும் நம்பிக்கை கெடையாது! அதனால அவன் எதையும் சும்மா நம்ப மாட்டான்! உண்மையைத்தவிர! உண்மையைக் கத்துக்கணும்னா நீ உண்மையானவனா இருக்கணும். அட் லீஸ்ட் புரியாததை புரிஞ்சதுனு சொல்லி நடிக்கக்கூடாது. அப்படி உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டால் அது நீயே உனக்கு வச்சிக்கிறத் தடைக்கல்!

நான் ஒருமுறை என் வாத்தியாரிடம் போயி வெட்கத்தைவிட்டு "இது எனக்கு புரியலை சார். இதுக்கு என்ன அர்த்தம்? கொஞ்சம் விளக்க முடியுமா?" னு கேட்டேன். அதுக்கு அவர் என்னை அழச்சுண்டு போயி பல புத்தகங்களைப் புரட்டி என் அறியாமையைப் போக்குவார்னு நெனச்சுண்டு இருந்ததால் நான் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தேன். அவர், உடனே இந்தப் புத்தகத்தை எடுத்துப் பாரு, அதில் விளக்கி இருப்பான்னு பதில் சொன்னாரு. இதில் என்ன பிரச்சினைனா இவர் சொல்ற புத்தகம் எனக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது!  மேற்படிப்புக்கு பாடம் நடத்தும் நம்ம வாத்தியார்கள் வாரத்துக்கு ரெண்டு க்ளாஸ்தான் எடுப்பது வழக்கம். மத்த நேரமெல்லாம் காண்டீன், ஷேர் மார்க்கட்,  மண்ணாங்கட்டினு பொழைப்பை ஓட்டிக்கிட்டு திரிகிறது. ஒருத்தன் தெரியலைனு வந்து கேட்கிறான். நீதான் ரெண்டு மணி நேரத்துக்கு பதிலா இன்னொரு மணி நேரம் செலவழிச்சு விளக்கினால்த்தான் என்ன? என்றெல்லாம் கேள்வி அவர்களைக் கேட்கமுடியாத பருவம் அது. பல வாத்தியார்களுக்கு மாணவர்கள் கேள்வி கேட்பதே பிடிக்காது! அப்படியே கேட்டுப்புட்டான்னா இப்படி எதையாவது சொல்லி பொழைப்பை ஓட்ட வேண்டியது. அப்புறம் எங்கேயாவது அவனைப்போட்டு சுழிக்கிறது! எதுக்குடா வம்புனு முட்டாளாவே இருந்துட்டா நெறைய மதிப்பெண்களுடன் வெளியே போயி "சாதிக்கலாம்"!

எனிவே, பாடம் நடத்துவது எதுக்குனு பார்த்தால், கற்றுக்கொள்வதற்கே என்பேன் நான். அறிவியல் கட்டுரைகள் எழுதுவது அறிவியல் கற்றுக்கொள்ளவே! உங்களுக்கு ஒண்ணு நல்லாப் புரிஞ்ச மாரி இருக்கும். ஆனால் அதை இன்னொருவருக்கு விளக்கும்போதுதான் நமக்கே இன்னும் அது சரியாப் புரியலைனு புரியும். நான் சொல்வது வேறமாரிப் புரிதல். சும்மா விக்கில தோண்டி எடுத்து வந்து, தோண்டி வந்ததெல்லாம் நமக்குப் புரிந்துவிட்டதுபோல நடிப்பதல்ல!

கற்றுக்கொடுக்கணும்னா நமக்குப் புரியாததை ஏற்றுக்கொண்டு, மேலும் அதைப்பத்தி படிச்சு கற்றுக்கொண்டு விளக்கணும். அப்படியெல்லாம் எல்லாரும் செய்வதில்லை!

இது புத்திசாலிகளுக்கான உலகம்! இதுபோல் சிரத்தையுடன் கற்றுக்கொண்டு கற்றுக்கொடுக்கும் முட்டாள்களுக்கானது அல்ல! அப்படிக் கற்றுக்கொள்வதால், கற்றுக்கொடுப்பதால் வேறு யாருக்கும் நன்மையோ இல்லையோ, உங்களுக்குத்தான் நன்மை. அதைப்பற்றி நீங்க இப்போ இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

அதனால் பாடம் சொல்லிக்கொடுப்பதே நாம் இன்னும் கற்றுக் கொள்வதற்குத்தான், நாம் இன்னும் நன்றாக புரிந்துகொள்ளத்தான். என்ருமே நாம் அனைவருமே மாணவர்கள்தான்.

சரி, ப்ரோட்டீன்னா என்ன?

அமினோ அசிட்கள் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்து பெரிய ஒரு பெரிய மாலிக்யூலா எப்படி ஆகும்?



மேலே உள்ளமாரித்தான் ஒண்ணோட ஒண்ணு சேரும். இதுபோல் நூற்றுக்கணக்கான வேற வேற அமினோ ஆசிட்கள் ஒண்ணு சேர்ந்தால் ஒரு ப்ரோட்டீன் உண்டாகும். நான் சொன்னதுபோல் அந்த ப்ரோட்டினுக்கு உயிர் இருக்கு!

சரி, இந்த மாரி யாரு ஒரு ப்ரோட்டினை உருவாக்குவது?


டி என் எ தான் எந்த மாரி ப்ரோட்டீன் உருவாகணும் என்கிற "கோடிங்" எல்லாம் கொடுக்கும், அதை உருவாக்குவது ஆர் என் எ வும்,  என்ஸைம்களும் (ப்ரோட்டின்கள்தான்) சேர்ந்து.

நம்ம ஆய்வகத்தில் வேதிக்குடுவைகளில் செய்வதைவிட இந்த டி என் எ  சொல்லும் "கோடிங்"கை (அதாவது என்ன மாரி ப்ரோட்டீன் அல்லது டி என் எ வேணும்னு சொல்றதை), ஆர் என் எ வும், ப்ரோட்டீன்களும் (என்சைம்களும் ) சேர்ந்து படுவேகமாக உருவாக்கிவிடும்!

அப்படி உருவாக்கும் உயிருள்ள ப்ரோட்டீன் எப்படி இருக்கும்?




என்ன மறுபடியும் கலர் கலரா ரிப்பனா? :)) ஆமா, இது டி என் எ இல்லை! ப்ரோட்டீன் ரிப்பன்கள்! அதாவது பக்கத்துல போயி பார்த்தால்..
 

பக்கத்திலே போயி ரிப்பனைப் பார்த்தால் மேலே இருக்கமாரித்தான் இருக்கும்.

நீங்க மட்டுமில்லை, பெரிய பெரிய பயாலஜிஸ்ட்ஸ்களுக்குக்கூட அதை கீழே கொடுக்கப்பட்டது போல் பார்க்கப் பிடிக்காது. ரிப்பனாகத்தான் பார்க்கப் பிடிக்கும்!

இப்போ ப்ரோட்டின்னா என்னனு புரிஞ்சிருச்சா? :)))

-தொடரும்

******************

ப்ரோட்டீன் என்றால் என்னவென்று மறுபடியும் ஒரு முறை சொல்லி யிருக்கிறேன்.

இது ஒரு மீள் பதிவே!

This is for reminding myself to start writing about this science articles. Because of lack of time I could not write more. Trust me, writing this kind of article in "taminglish" takes much more time than writing a "hot topic post" and get easy attention!

Tuesday, May 20, 2014

கதை எழுதுறாராம் கதை!

புதுசா ஏதாவது கதை எழுதணும்னு உக்காந்து தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்தான், மோஹன். அவன் என்ன யோசித்தாலும் அவனுக்கு வரும் சிந்தனைகள் எல்லாமே ஏற்கனவே எங்கேயோ படித்ததாவோ அல்லது யாரோ எழுதியதாகவே இருந்தது. காதல், கல்யாணம், உறவுகள், உணர்ச்சிகள் எல்லாமே அந்தக்காலத்தில் இருந்து  இன்றைய எந்திர வாழ்விலும் இருக்கும் பழமையானவைதானே? இதிலே என்னத்த  புதுமையை புகுத்துவது? பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம், துவேஷம், நன்றிமறத்தல், பழிவாங்குதல் போன்றவை எல்லாம் காலங்காலமாக மனிதர்கள் அனுபவித்துக் கொண்டுவரும் உணர்வுகள்தானே? காதல் தோல்வி, நண்பன் துரோகியாவது, தகாத உறவு, திடீர் விபத்தில் சாவது இதெல்லாம் காலங்காலமா பல கதைகளில் பலர் எழுதிட்டாங்ளே. இதிலே என்னத்த புதுசா நம்ம எழுதிக் கிழிக்கிறது? மோஹன் எதை எடுத்து ஒரு புதிய கோணத்தில் யோசிச்சாலும் புதுசா எதுவும் அதிலே தெரியவில்லை! எல்லாமே ஏற்கனவே பலர் இவனைவிட நல்லாவே அனுபவித்து எழுதியதாகத்தான் இருந்தது. எல்லோரும் ஏற்கனவே சொன்னதை நம்மளும் புதுசா கதை எழுதுறோம்னு எதுக்கு திருப்பிச்சொல்லணும்?.

அப்படி ஏதாவது எழுதினால் ஏதாவது புதுசா ஒரு ப்ளாட் வச்சுக் கதை எழுதணும்! எதையாவது புதுமையாகச் சொல்லணும்! இதுவரை யாருமே சொல்லாதது. இதுவரை யாருமே எழுதாதது. இப்ப விகடன் குமுததில் வருகிற எல்லாமே பழசாத்தான் தோனுது. அதி வரும் கதைகள் பலவருடங்கள் முன்னால எங்கேயோ எப்போவோ படித்ததுபோல இருக்கு.

ஏதாவது ஆங்கிலக் கதை படிச்சு அதை இங்கே தமிழ்ல சொல்லலாமா? அதுபோல திருட்டுத்தனம் செய்வதில் எதுவும் பெரிதாக திருப்தி கெடைக்கமாட்டேன்கிதே?  என்ன பண்றது?

சாமியார்களைப் பத்தி இல்லைனா பிச்சைக்காரர்களைப் பத்தி எழுதலாமா? அதுவும் பலர் எழுதிட்டாங்களே!

அப்போ ஹோமோ செக்ஸுவல் காதல் பற்றி எழுதினால் புதுமையாக இருக்குமா? அவங்களுடைய காதல் மற்றும் காமவாழ்க்கை பத்தி எழுதினால்? மட்டமான எண்ணங்கள்னு மக்கள் கண்டபடி திட்டுவானுகளோ? ஆனால் புதுமையாக இருக்குமே? ஒரு சில வாசகர்களாவது புரிந்துகொள்வார்களே?

இல்லை வில்லனை ஹீரோவாக்கி கதை எழுதிவிடலாமா? அதவாது நம்ம ஃபேர்ரி டேல்களில் உள்ளது போலல்லாமல் கெட்டவன்  நல்லா வாழ்வதாகவும், நல்லவர்கள் ஒரு பாவமும் செய்யாதவங்க எல்லாக் கஷ்டமும் அனுபவிச்சு பரிதாபமாக சாவது போல எழுதினால் என்ன?  அதாவது ஹிட்லர் உலகை வென்றதுபோல! உலகத்தில் இதுபோல நடக்கலையா என்ன? அப்படி எழுதினால் ஒருமாதிரியாக புதுமையா இருக்குமா? புதுமையாத்தான் இருக்கும் ஆனால் அப்படி ஒரு கதையை யார் படிப்பா? என்ன கதை எழுதினாலும் கதையின் நாயகன் நல்லவனாகத்தான் இருக்கணுமா? அப்படித்தானே காலங்காலமா எழுதுறாங்க? நம்ம மட்டும் அதை எப்படி மாற்றுவது?

பேசாமல் கடவுள் மனிதன் செய்யும் அயோக்கித்தனத்தைப் பார்த்து துன்பம் தாங்காமல் கஷ்டப்பட்டு மனம் உடைந்து அழுகிற மாதிரி. அவரை ஒரு சில நல்ல மனிதர்கள் காப்பாத்தி, சமாதானப் படுத்தி  வாழ வைப்பது போல எழுதினால் என்ன? அப்படி எழுதினால் இதுவரைக்கும் யாரும் எழுதாத புதுமையான கதையா இருக்குமே? ஆனால் கதை படிக்கிறவன்ல 90% மேலே ஆத்திகனாத்தான் இருக்கான். கடவுளை எல்லாம் இப்படி ஆக்கினால், கதைக்கு "படுகேவலம்" னுதான் விமர்சனம் வரும். அதென்ன வாசகர்களை திருப்தி படத்துறவந்தான் எழுத்தாளனா? தன் எண்ணங்களை துணிவாக வெளிப்படுத்துபவன் இல்லையா உண்மையான எழுத்தாளன்? இப்படி மோஹன் லூசுத்தனமான யோசித்துக் கொண்டிருக்கும்போது..

"என்னங்க ஒரே யோசனையாயிருக்கு?" என்றாள் மனைவி ருக்மணி ஒரு தினுஷான இழுவையுடன்.

"சும்மாதான்..ஏதாவது புதுமையா எழுதலாம்னு ஒரு புது ப்ளாட் சீரியஸா யோசிக்கிறேன்" என்றான்.

"நீங்க இன்னும் இதை விடலையா?"

"எதை?"

"அதான் இந்த கதை எழுதுறதைத்தான்.. படு மட்டமா இருக்கு உங்க கதை எல்லாம்! இதுக்கு செலவழிக்கிற நேரத்தில் ஏதாவது ஓவர் டைம் வேலை பண்ணினால் இதைவிட பத்து மடங்கு சம்பாரிக்கலாம். உங்களுக்கு எதுக்குங்க இதெல்லாம்?"

"உன்னிடம் போய் சொன்னேன் பாரு! நான் எழுதுற எந்தக்கதையுமே  உனக்குப் பிடிக்காது! உன்னிடம் கொடுத்து விமர்சனம் பண்ணச்சொன்னால் மொதல்ல, கதையில் வரும் ஹீரோயினைத்தான் கவனிப்ப,  உனக்கு என் கதையில் வர்ற எந்த ஹீரோயினை பிடிக்கவே பிடிக்காது. அதனாலேயே மனசாட்சியே இல்லாமல் தாறுமாறா ஏதாவது விமர்சனம் பண்ணுவ!"

"என்ன சொல்றீங்க? உங்க ஹீரோயின் மேலே எல்லாம் எனக்கு பொறாமைனு தானே சொல்ல வர்றீங்க?"

"இல்லை. உன் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு ஹீரோயினை உருவாக்கினால், அந்த ஹீரோ என்னவோ நான் போலவும், அந்த ஹீரோயின் ஏதோ உன் சக்களத்தி போலவும் எதையோ கற்பனை பண்ணுறயே ஏன் அது? சும்மா ஒரு கற்பனைதானே இந்தக் கதை,  அதில் வருகிற கேரக்டர்கள் இதெல்லாம்? நீ அப்படி யோசிக்க வேண்டியதுதானே? "

"ரசிச்சு ரசிச்சுத்தானே கதை எழுதுறீங்க? உங்க கதையிலே வர்றாளே அந்த ஹீரோயினை ரசிச்சு ரசிச்சுத்தானே வர்ணிச்சு எழுதுறீங்க?"

"சும்மா ஒரு  கற்பனைக் கதைதானே? கற்பனை நாயகிதானே அவள்?"

"உங்க கற்பனையில் வரும் பொண்ணும் நிஜம்தான்!"

"அதெப்படி கற்பனை நெஜமாகும்?"

"அது நெஜம்தான். கதையா இருந்தாலும் அதுவும் ஒரு உண்மையான உணர்ச்சிகள் உள்ள பெண்தான். உங்களால நெஜத்தில் முடியாததை எல்லாம் கதையில் உருவாக்கி அவ கிட்ட நல்லா ஜொள்ளு விடுறீங்க"

"நாசமாப் போச்சு போ!"

"அதனாலதான் உங்க கற்பனை நாயகியை எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. அதுவும் அந்த ஹீரோயின் எப்போவுமே என் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இருக்கிறாளே அது ஏன்?."

"எல்லாக்கதையிலுமே உன்னை மனசில் வச்சு ஹீரோயினா எழுதினால், எல்லா ஹீரோயினுமே ஒரே மாதிரி இல்ல இருப்பாங்க?"

"இருந்துட்டுப் போகட்டுமே?"

"அப்படி எழுதினால் யார் படிப்பா?"

"ஏன் படிக்க மாட்டாங்க?"

" சினிமாலகூட நடிகைகளுக்கு மார்க்கட் கொஞ்ச நாள்தான் இருக்கு. காலேஜ்ல முதல் வருடம் வந்து சேருற பெண்களுக்குத்தான் மார்க்கட்! ரெண்டாவது வருடம் போயிட்டா அவ பேரழகியா இருந்தாலும் எவனும் திரும்பிக்கூட பார்க்கமாட்டான்"

"அதனால?"

"அதனால் ஒண்ணுமில்ல. உன்னப்போயி என் கதையை விமர்சனம் பண்ண சொன்னேனே, என்னைச் சொல்லனும்"

"ஆமா, உங்க கதையை வேறெப்படி விமர்சனம் பண்றது? மட்டமா இருந்தா மட்டம்னுதான் சொல்லமுடியும்?"

"பேசாமல் நான் எழுதுற குப்பையை படிக்காமல் இருந்து விடேன்?"

"நான் ஒரு ஜீவனாவது படிக்கிறேனே உங்க கதையை ? அதை நினத்து சந்தோஷப்படுங்கள்! அதுவும் இல்லாமல் போயிடப்போது!"

"அப்பப்போ இப்படி வேற காமெடி பண்னுற?"

"உண்மை அதுதான்!"

"பேசாமல், நியூமூன், ஹாரி பாட்டர் மாதிரி ஏதாவது புதுமாதிரியா எழுதலாம்னு இருக்கேன்!"

"ஆமா எழுதி உங்ககதையை வச்சு கோடி கோடியா சம்பாரிச்சு எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி தரப்போறீங்களாக்கும்?".

"தமிழ்ல கதை எழுதி இன்னும் யாருமே கோடி சம்பாரிக்கவில்லையாம். தமிழ் எழுத்தாளர் எல்லாம் ஏழைகள்தான்.பலர் பிச்சைக்காரகள்தான்"

"சுஜாதா எல்லாம் ஏழையாவா இருந்தார்?"

"அவர் சம்பாரிச்சது கதை எழுதி இல்லையாம். அவருக்கு பி இ எல் ல ஒரு நிரந்தர வேலை இருந்துச்சு. அதை வச்சுத்தான் அவர் பொழைப்பு ஓடுச்சாம்! கதை எல்லாம் சும்மா பொழுதுபோக்குக்காக, பேரு, புகழுக்காக எழுதினாராம்."

"அப்போ, ஒரு நல்ல கதையா அர்த்தமா எழுதி, சுஜாதாவுக்கே கெடைக்காத "ஞானபீட பரிசு" (Jnanpith award) வாங்கி பணக்காரறாகுங்க"

"அந்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?'

"எவ்வளவு?"

"வெறும் ஏழு லட்சம்தான்! உனக்கு வேண்டிய வைர நெக்லஸ் வாங்க அந்தப்பணம் பத்தாது"

"சரி சரி, இதை விட்டுட்டு ஆகவேண்டியதைப் பாருங்க! கதை எழுதுறாராம் கதை!"

-முற்றும்
**************

நீங்க படிச்சது இல்லைதானே?

ஏற்கனவே படிச்சாச்சா?!!

 ஆமா இதுவும் மீள்பதிவுதான்.

Monday, May 19, 2014

கொஞ்ச நாள் தனியறையில் படுங்க டார்லிங்!

கல்லூரியில் படிக்கும்போதூ லலிதாவைக் காதலிக்காத ஆளே இல்லை! அவளிடம் ஜொள்ளுவிடாத மாணவனும் ஏன் ஆசிரியரும் அவனுக்குத்தெரிய இல்லை! லலிதா ஒரு அழகுதான். அவள் பேசினால் ஒரு அழகு, நடந்தால் ஒரு அழகு, சிரித்தால் ஒரு அழகு, அவள் கல்லூரி காண்டீனில் காஃபி குடிப்பதும் ஒரு அழகுதான்.

 எத்தனையோ அப்ளிக்கேஷன் வந்தும் லலிதா அவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வசந்த்தைத்தான் காதலித்தாள். அன்று அவள் காதல் இனித்தது. அதைவிட அவள் இனித்தாள்.  

ஆனால் இன்று??

 அவர்களுக்கு  கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆகிவிட்டது. இன்றும் லலிதா ஒரு அழகுதான். தன் இதயத்தை வசந்த்திடம் கொடுத்து  அவனைக் காதலித்து மணந்து கொண்ட அவள் வசந்த்தின் எல்லா ஆசையையும் நிறைவேற்றினாளா ? 

பாவம் வசந்த் அன்று இரவும் பெருமூச்சுவிட்டுவிட்டுத்தான் தூங்கினான். அவன் ஆசைகள்  நிராசையாக ஆனதால். வசந்த் எத்தனையோ வாதம் செய்துபார்த்தாலும் லலிதா இந்த ஒரு விசயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தாள். போதாக்குறைக்கு நாளையிலிருந்து,  "கொஞ்ச நாள் தனியறையில் படுங்க டார்லிங்!"னு இவனை தனியாக ஒரு அறையில் தூங்கவும் சொல்லிவிட்டாள்..

 

**********

“அந்தப் படத்தில் பார்த்த இல்லையா லலிதா?”

“அதனால் என்ன வசந்த்? எனக்கு அது மாதிரி படமே பிடிக்கலை. அருவருப்பா இருக்கு. என்னால் ரசிக்க முடியவில்லை”

“நிறையப்பேர் அப்படித்தான் சந்தோஷப்படுத்திக்கிறாங்க.  இந்த ஃபாரத்தில் வாசிச்சியா?”

“ஆமா நீங்க காட்டிய டிஸ்கஸனைப் பாத்தேன். அனானிமஸா ஒரு சிலர் வந்து ஏதோ எழுதி இருக்காங்க. ஆனா எனக்கு சுத்தமாகப் பிடிக்கலை வசந்த்”

“நம்மளும் ட்ரைப் பண்ணினால் என்ன? கேக்கிறேன்னு கோவிச்சுக்காதே. ட்ரை பண்ணாமல் உனக்கு எப்படித் தெரியும்? உனக்கு பிடிச்சாலும் பிடிக்கும்”

“அது ஹைஜீனிக் இல்லை வசந்த். அன்ஹெல்த்தி! மேலும் அப்படி செய்யாதனால நீங்க ஒண்ணும் குறைஞ்சிபோயிட மாட்டீங்க, வசந்த் டார்லிங்!”

“அவங்க எல்லாம் நல்லா இருக்குனுதானே சொல்றாங்க?”

“எனக்கு இது ஒரு லிமிட்டை க்ராஸ் பண்ணி நீங்க மிருகமாகிக்கொண்டு போறமாதிரி இருக்கு. என்னைக்கேட்டால் இதெல்லாம் ஆறாவது அறிவின் துஷ்பிரயோகம்னுதான் சொல்லுவேன்”

“நீ ஏன் அப்படி நினைக்கிற?”

“மன்னிக்கவும் வசந்த், நான் நினைக்கலை, அதுதான் உண்மை!”

“இல்லை லலிதா..”

“சரி, வசந்த், எல்லாம் ட்ரை பண்ணனும்னு சொல்றீங்க இல்ல? ஒரு சில ஆம்பளைங்க ஆம்பளைங்களோடயே படுக்கிறாங்க. ரெண்டு ஆண்கள் சந்தோஷமாக இருக்காங்க. சரியா? அதுவுந்தான் படிக்கிறீங்க. இல்லையா வசந்த்?”

“ஆமா. அதனால?”

“நீங்களும் அது மாதிரி எதுவும் ட்ரை பண்ணியதுண்டா, வசந்த்?"

"ச்சீ ச்சீ!"
 
"என்ன ச்சீ?  ஒருவேளை உங்களுக்கும் பிடிச்சாலும் பிடிக்கும். ட்ரை பண்ணினால்தானே தெரியும்?”

“ச்சீ, நெனச்சாலே எனக்கு வாம்மிட் வருது”

“எனக்கும் அதேபோல்தான் இருக்கு, நீங்க சொல்வது. நான் என்ன சொல்ல வர்றேன்னா, எல்லாரும் செய்றாங்கனு  நம்ம செய்யணும்னு ஒண்ணும் இல்லை, வசந்த். நம்ம நம்மளாவே இருப்போமே, டார்லிங்? நம்ம அளவுக்கு அவங்க சந்தோஷமா இருக்காங்கனு எனக்கு தோனலை”

“எனக்கு போர் அடிக்குது ருட்டீன், லலிதா”

“எதுதான் போர் அடிக்காது? அதுவும் ருட்டீன் ஆனதும் அதுவும் போர் அடிக்கத்தான் செய்யும். அப்புறம் அவன் இப்படி செய்றான், இவ அப்படிச் சொன்னானு புதுசா இன்னோண்ணை  ஆரம்பிப்பீங்க. கோவிச்சுக்காதீங்க உங்களுக்கு எல்லாமே உதிர்த்துவிட்டது வசந்த். எது ரைட், எதுதப்புனு தெரியாமல் பித்துப்பிடிச்சு அலைறீங்க. இட் ஈஸ் டேஞ்ஜரஸ், வசந்த் டார்லிங். யு ஆர் பிகமிங் சிக், டார்லிங்”

“இல்லை லலிதா..”

“வசந்த்! நான் சொல்லுறதை கேளுங்க, ப்ளீஸ்”

“என்ன சொல்லு”

“தேர் இஸ் நோ லிமிட் ஃபார் திஸ். டோண்ட் யு சி தட், டார்லிங்?”


“அதனால?”

“ஐ டோண்ட் வாண்ட் டு ட்ரை  அண்ட் ஃபைண்ட் த லிமிட்”


“லலிதா! யு ஆர் மை பெட்டர் ஹால்ஃப், ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி ஆனஸ்ட் வித் யு”

ஸோ அம் ஐ, டார்லிங்.  நானும் என்னுடைய  "ஆனஸ்ட் ஒப்பீனின்ய்னை"த் தான் சொல்றேன், வசந்த்”

ஐ லவ் யு லலிதா”

“ஐ லவ் யு மோர், டார்லிங்.
நான் ஒண்ணு சொல்றேன் கேக்கிறீங்களா?”

“என்ன?”

“கொஞ்ச நாள் வேற வேற ரூமில் படுப்போமா?”

“ஏன்?”

“உங்க பக்கத்தில் படுத்துப் படுத்து  எனக்கும்  ருட்டீன் போர் அடிக்குது. சரியா?"

"என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்க,  சரியா?”அவள் சிரித்தாள்

“ம்ம்.. சரி நாளையில் இருந்து..”

*****








அதன்பிறகு வசந்த், லலிதாவை அணைத்துக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டான். அவள், அவன் நெத்தியில் முத்தமிட்டாள். வசந்த் மட்டுமல்ல, லலிதாவும்தான் அப்போது ஒரு பெருமூச்சுவிட்டாள். அவளும்தான்  தன் கணவன் எப்படி எல்லாம் இருக்கணும் என்று கனவுகண்டிருக்கிறாள் . வசந்த் இப்பொழுது ஆசைப்படுவது போல,   ஒரு மிருகமாக தன் கணவன் அமையணும் என்று அவள் ஒருநாளும் ஆசைப்பட்டதில்லை. ஆசைகள் நிராசைகள் ஆவது வசந்த்க்கு மட்டுமல்ல, லலிதாவுக்கும்தான்.



Sunday, May 18, 2014

அமெரிக்க விசா மறுக்கப்பட்ட மோடி?! வரவேற்கப் படுகிறார்!

நேற்று என் பி ஆர் (நேஷனல் பப்ளிக் ரேடியோ) ல உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியுடன் புதிய பிரதமராக ஹிந்து நாஷனலிஸ்ட் பார்ட்டி (பி ஜே பி) நரேண்ட்ர மோடி, பதவி ஏற்பார் என்ற செய்தி சொல்லப்பட்டவுடன்..என்னதான் நம்ம மோடி பத்தி  சொல்றாங்கனு கவனித்துக்கேட்டேன்.

மோடியின் மிகப்பெரிய வெற்றியையும், அப்சொலூட் மெஜாரிட்டியையும் சிலாஹித்துப் பேசியவர்கள், ஒரு முறை மோடிக்கு அமெரிக்க விசா மறுப்பப்பட்டதைப் பற்றி சொல்லி அதைப்பற்றி "டிஸ்கஸ்" பண்ணினார்கள்.

அதாவது குஜராத்தில் இந்து முஸ்லிம் கலவரத்தின்போது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் கொல்லப்பட்டார்கள் என்றும் அப்போது முதல்வராக இருந்த ஹிந்து நாஷனலிஸ்ட் மோடி அதற்கான  சரியான "ஆக்சன்" எடுக்கவில்லை என்று அமெரிக்கா நம்பியதால் அவருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டதாக "நியாயப் படுத்தப் பட்டது".

எனிவே, மோடியை ஒரு ஹிந்து நாஷனலிஸ்ட் பார்ட்டியை சேர்ந்தவர் என்று ஹிந்து ஹிந்து என்று அழுத்தமாக சொல்வதுபோல் இருக்கிறது.

அவருடைய மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அவரை அமெரிக்கா வரவேற்கிறது என்றுதான் வெள்ளை மாளிகை சொல்கிறது. இருந்தாலும், மோடியின் "மதச்சார்பற்ற நேர்மையை" அமெரிக்கா, மற்றும் பல மேற்கத்திய சூப்பர் பவர்கள் கவனமாக கண்காணிப்பார்கள் என்று தோன்றுகிறது.

Previously denied a visa, new Indian PM 'will be welcomed' to U.S.

India's next prime minister, Narendra Modi, greets supporters at his mother's home in Gandhinagar on Friday, May 16. Modi is the leader of the Hindu nationalist Bharatiya Janata Party, or BJP. After a five-week-long election, the BJP swept the ruling Indian National Congress from power. Official results were expected later Friday.
நரேண்டிர மோடி

(CNN) -- Indian Prime Minister-elect Narendra Modi "will be welcomed" to the United States, the White House said on Friday. Spokesman Jay Carney said President Barack Obama "does plan to reach out" to him soon.

In a statement, State Department spokeswoman Jen Psaki said Modi would get a visa to the United States once he takes office and forms a government. Modi was denied one several years ago.

 Now, however, Modi would be eligible for an A1 visa, said Psaki. Heads of government use such visas to travel to the United States.

"We congratulate Narendra Modi and the BJP on its victory in winning a majority of seats in India's historic national election, which saw more voters cast their ballots freely and fairly than in any election in human history," Psaki's statement said. "Secretary Kerry has also offered his congratulations, and looks forward to working with the BJP on expanding our shared prosperity and security."

Modi's Hindu nationalist Bharatiya Janata Party appears to have captured a landslide victory and he will likely become prime minister.

"Once a new Government is formed, we look forward to working closely with the Prime Minister and the Cabinet to advance our strong bilateral partnership," the State Department statement said.

In 2005, the United States denied Modi a visa because of his alleged role in anti-Muslim violence three years earlier in Gujarat state, where he was chief minister.

More than 1,000 people were killed, mostly Muslims. A Supreme Court-ordered investigation in India absolved him of blame last year.

CNN's Kevin Liptak contributed to this story.

எது எப்படியோ மோடியின் "உண்மை முகம்" விரைவில் உலகிற்கும் பிறமதத்தவருக்கும் தெரியப்போகிறது. ஹிந்து வெறியர்கள் அவர் பெயரைக் கெடுக்க முயல்வது ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். அதுபோக, மோடியின் பெயரை பலவாறு கெடுக்க "மற்றவர்கள்" பல "ப்ளாட்கள்" வுடன் செயல்படவும் வாய்ப்பிருக்கிறது.

மோடி, தன்னை மதச்சார்பற்றவர் என்று உலகுக்குக் காட்டுவது ஒரு மிகப்பெரிய "சேலெஞ்" தான்.

Friday, May 16, 2014

பழைய நண்பரை, இ-மெயில், போன் எண் இல்லாமல் எப்படி தேடுவது?

நட்பு வட்டம் நாட்கள் ஆக ஆக மாறிக்கொண்டேதான் போகுது. புது நாடு, புது நண்பர்கள் என்று ஆரம்பித்து, புது ஊரு, புது நண்பர்கள்னு ஆகி வாழ்க்கை சக்கரம் ஓடுது. இருந்தாலும் ஒரு சில பழைய நண்பர்களை வாழ்நாள் பூராம் மறப்பது கஷ்டம். திடீர்னு அவரகளுடன் செலவழித்த அந்த இனிமையான நாட்கள் ஞாபகம் வந்து,

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே! 
இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன்?

னு சேர்ந்து பழசை எல்லாம் பேசணும்போல தோனுது!

 


அவர்களோட அடித்துக்கொண்டு உருண்ட, கருத்து வேறுபாடு வந்து கோபித்துக்கொண்டதெல்லாம் மறந்து போயிடுது.

You just feel like you want to say "Hi" to them. You do expect them to say a "hi" back. As you were a good friend to them you deserve a response back from them. Or not?

சரினு, இ-மெயிலை தோண்டி எடுத்து ஒரு பத்து இருபது இ-மெயில் அனுப்பியும் பதிலே வரலை! ரெண்டு தர ஃபோன் பண்ணி (அது இப்போ யாரு நம்பரோ?) மெசேஜ் விட்டாலும் இ-மெயிலையும் காணோம், ஒரு எழவையும் காணோம்.

சரி, "செத்துட்டான் விடு"னு போகவும் முடியவில்லை! இப்படி ஒரு பதிவை எழுதி "நண்பர்"  வாசிச்சு "ரெஸ்பாண்ட்" பண்ணுவான்னு ஒரு பதிவு இது.

Only in these occasions some of us realize how weak-minded we are though we pretend like that we are very tough! :(

திமுக வின் வீழ்ச்சி! திராவிடர்களின் வெற்றி?!

எதிர்பார்த்தது போலவே 2 ஜி ஸ்கேண்டல் விளைவால், திமுகவுக்கு அடி விழுந்துள்ளது! என்னதான் சின்னப்புள்ளைத்தனமான அரசியல் செய்து கடைசி நேரத்தில் காங்கிரஸிடம் இருந்து திமுக ஒதுங்கி வந்து தனித்து நின்னாலும், காங்கிரஸை தூக்கி எறிய முன்வந்த மக்கள் திமுகவையும் தூக்கி எறிந்துள்ளார்கள். இன்று காங்கிரஸின் சத்ரு யாரென்றால் அது அதிமுக என்றாகிவிட்டது. அதனால் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

* ஈழத்தமிழர்கள், மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் எல்லாருமே விரும்பியது இதுதான். மேலே மோடியின் ஆட்சி! கீழே அன்னையின் ஆட்சி! ஆக இது திராவிடர்களின் வெற்றி? It is ironic, திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தோல்வி, பார்ப்பனரை தலைவியாகக் கொண்ட ஜெயாவின் வெற்றி, திராவிடர்களின் வெற்றி!!

* ஒருவகையில்  பார்ப்பனர்களின் பொற்காலம் இதுனு சொல்லலாம்!  தான் அறவே வெறுக்கும்  திமுக வீழ்ச்சி இங்கே! தன் பார்ப்பனத் தலைவியின் ஆட்சி வேறு இங்கே! மேலே? தான் விரும்பும்  இந்துத்தவாவின் ஆட்சி! இதைவிட பார்ப்பனர்களுக்குப் பொற்காலம் என்ன இருக்க முடியும்? 

என்ன கூடவே இருந்துகொண்டு அவாளை பிரிக்கிற வருண்? தாயாப் பிள்ளையா பழகிக்கொண்டு இருக்கோம்? னு கதை எல்லாம் சொல்லி செண்டிமெண்டலாக டச் பண்ன வேண்டாம்.  இது அரசியல்! இங்கே உறவுகளுக்கு இடமில்லை! பந்த பாசத்திற்கு  இடமில்லை!புரிந்து கொள்ளவும்!

ஆக, ஒரு பக்கம் திராவிடர்களின் பொற்காலம்!

இன்னொரு பக்கம் பார்ப்பனர்களின் பொற்காலம்! 

ஏன் அவர்களை திராவிடகள், பார்ப்பனர்கள்னு அசிங்கமாச் சொல்லிப் பிரிக்கிற, வருண்? காலங்காலமாக அவா தங்களை பிரித்துகொண்டுதான் நம்முடன்  வாழ்கிறார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதேபோல்தான் வாழ்வார்கள் . யார் பிரிக்கிறா? நானா?

1000 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு என்ன சொல்லும்?

* திமுகவின் தோல்வி திராவிடர்களின் தோல்வி என்றுதான் சொல்லும்!

* பார்ப்பனரை தலைவியாகக் கொண்ட கட்சியின் வெற்றி? வரலாறு என்ன சொல்லும்?  திராவிட முண்டகளுக்கு அறிவு கெடையாது. தன்னை தானே ஆள என்றுமே தகுதி உள்ளதாக இந்த காட்டுமிராண்டிகள் நினைப்பதில்லை! தன்னை ஆள ஒரு பார்ப்பனர்தான் தகுதியானவர் என்பதை ஒப்புக் கொண்டு அவரை வணங்கி வழிபட்ட காலம் இது என்றுதான் வர்லாறு சொல்லும்.

நம்பினால் நம்புங்கள், இப்படித்தான் வரலாறு சொல்லும்! இல்லை என்று சொன்னால் நீங்கள் ஒரு அடி முட்டாள்!

Thursday, May 15, 2014

பல்லழகி, என் பேத்தி ஒரு பேரழகி!

சரஸ்வதியால் நம்பவே முடியவில்லை! அவள் கண்களுக்கு ஏதோ சினிமா நடிகை, இல்லை மாடல் போல இருந்தாள் அவள் பேத்தி வசந்தி. அமெரிக்காவில் இருந்து 5 வருடம் சென்று வந்த தன் பேத்தியின் வளர்ச்சியைப் பார்த்து வியந்தாள்! வசந்திக்கு வயது 17 ஆகிறது. கொள்ளை அழகா இருக்காள் என் பேத்தி என்று அவளுக்கு சுத்திப்போட்டாள். ஊர்க்கண்ணு பட்டுறப்போகிறது என்று யாரிடமும் வசந்தியை காட்டக்கூட பயந்தாள், சரஸ்வதி. வசந்தி பேசும் ஆங்கிலமும், மழலைமொழி போல் பேசும் தமிழும்! எல்லாமே சரஸ்வதிக்கு அழகாத்தான் தெரிந்தது.

பார்ப்பதற்கு சரஸ்வதி சிறுவயதில் இருந்தது போலவேதான் இருந்தாள் வசந்தி. கண் மூக்கு, காது, நிறம், ஏன் உடல்வாகுகூட அப்படியே சிறுவயதில் சரஸ்வதி இருந்ததுபோல்தான் இருந்தது. ஆனால் வசந்தியின் வெண்மையான பல்வரிசை மட்டும்..
 

அவள் புன்னகைக்கும்போது எவ்வளவு அழகா இருக்கிறாள்! வசந்தியின் பல்வரிசை தன் பல்வரிசைபோல் தாறுமாறாக இல்லாமல் எவ்வளவு வரிசையா இருக்கு! என்று வியந்தாள். தன் பேத்திக்கா இவ்வளவு அழகான பல்வரிசை! என்று சரஸ்வதியால் நம்பவே முடியவில்லை!

தனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து சரஸ்வதி வாழ்நாளில் சிரிக்ககூட பயப்படுவாள். வாயை பொத்திக் கொண்டுதான் சிரிப்பாள். அவளுக்கு 50 வயதாகும்வரை யாராவது ஃபோட்டோ எடுத்தால்கூட ஒதுங்கி ஓடிவிடுவாள். அவ்வளவு விஹாரமாக இருந்தது அவள் பல்வரிசை. தன் பல்வரிசைமட்டும் நல்லா இருந்தால் எவ்வளவு அழகா நான் இருந்து இருப்பேன் என்று சரஸ்வதி வாழ்நாளில் ஏங்காமல் இருந்த நாளே இல்லை. சமீபத்தில் பார்த்த படையப்பா படத்தில் வரும் அந்த பாடல் வரி (முகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை) எவ்வளவு சரியாக உள்ளது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்வாள். இப்போது அவளுக்கு பல்லெல்லாம் போய் 78 வயதாகிவிட்டது. பல்லெல்லாம் போய்விட்டதால் அந்த பிரச்சினை இல்லை!

சரஸ்வதி அன்று மகனுடன் கோவிலுக்கு போகும்போது மருமகள் சாந்தி, மற்றும் பேத்தி வசந்தி யாரும் இல்லாமல் அவனிடம் தனியாக பேச நேரம் கிடைத்தது. அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் மகன் ராஜேந்திரனுடன் நடந்து எங்கே போனாலும் அவளுக்கு பெருமையாக இருக்கும். அதுதான் அவளுக்கு சொர்க்கம்!

சாமி கும்பிட்டுவிட்டு கோயிலில் மணல் பகுதியில் அம்மாவும் மகனும் அமர்ந்தார்கள்.

“உன் பேத்தி அபப்டியே உன்னை மாதிரியேதான் இருக்காம்மா” என்றான் மகன் ராஜேந்திரன் பெருமையாக.

“குணம் சரிதான்டா. ஆனால் பார்க்க அவள் என்னை மாதிரி இல்லைடா! அவள் பேரழகியா இருக்காள் என் பேத்தி. என்னை மாதிரியா இருக்காள்?” என்றாள் பெருமையாக.

“இல்லம்மா அவள் உன்னை மாதிரியே டபுள் ஆக்ட்டாக இருந்தாள்” இங்கே பாரு அவளுடைய பழைய படங்கள் எல்லாம்” என்று தன்னிடம் இருந்த ஒரு சின்ன ஆல்பத்தை காட்டினான்.

சரஸ்வதியால் நம்பவே முடியலை!! 4 வருடம் முன்னால் எடுத்த படத்தில் அவள் பேத்தியின் முகம் தான் சிறுபிள்ளையாக 13 வயதில் இருந்தது போலவே இருந்தது. முக்கியமாக அவள் பல்வரிசை!

“எப்படிடா இப்போ முகம் வேற மாதிரி இவ்வளவு அழகா இருக்கு?” என்றாள் அம்மா புரியாமல்.

“நீ பிறந்து வளர்ந்த காலத்தில் “ஆர்தோடாண்டிக்ஸ்” என்கிற பல் வைத்தியம் எல்லாம் இந்தியாவில் இல்லை அம்மா. அதனால் உனக்கு உன் ப்லவரிசையை சரிசெய்யும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வசந்திக்கு உனக்குப் போலவே இருந்த பல்வரிசையைத்தான் “ஆர்த்தோடாண்டிக்ஸ்” பல் வைத்தியம் செய்து  சரி செய்தோம்” என்று விளக்கினான்

“எப்படிடா? அம்மாவுக்கு புரியவே இல்லை. அதெப்படி இப்படி அழகா மாற்றமுடியும்?” என்றாள் சரஸ்வதி ஆச்சர்யமாக.

“அமெரிக்காவில் பொதுவாக எல்லோருக்கும் பல்வரிசை சரியாக இருக்கும் என்பதை பார்த்து இருக்கியா அம்மா?”

“ஆமாடா வெள்ளைக்காரங்களுக்கெல்லாம் சரியாக அழகா பல்வரிசை இருக்கும், பார்த்து இருக்கேன் அங்கே வசந்தி பிறந்த போது வந்தபோது மற்றும் டி வி யில் பார்க்கும்போது. அவங்க வெள்ளைக்காரங்க இல்லையா? அவங்களுக்கு ஏன்டா நமக்கு மாதிரி பல்வரிசை வருது?”

“இல்லம்மா அவர்களிலும் பலருக்கும் உனக்கு, மற்றும் வசந்திக்கு போலதான் சிறுவயதில் இருந்து இருக்கும். ஆனால் அவர்கள் அதை சின்ன வயதிலேயே சரி செய்துவிடுவார்கள்.”

“எப்படிடா இப்படி மாற்ற முடியும்!!!”

“வசந்திக்கு பர்மனெண்ட் பற்கள் வந்தவுடன், மேலே இரண்டு பற்கள், கீழே இரண்டு பற்கள் நாலு பற்களை ஆப்பரேஷன் செய்து முதலில் எடுத்துவிட்டார்கள்! அப்புறம், பலவிதமா ப்ரேஸஸ் (உலோக கம்பிகள் வைத்து) அழுத்தி அந்த இடைவெளியை சரி செய்தார்கள். ஒரு நாளில் ஒரு மாதத்தில் இதையெல்லாம் செய்ய முடியாது! இரண்டு வருடம் வைத்தியம் செய்து அவள் பல்வரிசையை சரி செய்தார்கள்”

“நெஜம்மாவாடா! இப்படியெல்லாம் செய்யமுடியுமா!”

“நீயும் அமெரிக்காவில், ஏன் இந்தியாவில்கூட இப்போ பிறந்து இருந்தால் உன் புன்னகையையும் அழகா ஆக்கியிருக்கலாம்மா” என்றான் ராஜேந்திரன்.

“நான் அதைப்பற்றி இப்போ கவலைப்படலைடா, ராஜா. என் அழகான பேத்தியை பார்க்கும்போது என்னை சரிசெய்து பார்ப்பது போலதான் இருக்குடா அம்மாவுக்கு” என்றாள் சரஸ்வதி குரல் தளுதளுக்க.

“இப்போ எல்லாம் விதியை மதியால் வெல்லலாம் அம்மா! விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் ரொம்ப முன்னேறிவிட்டது.” என்றான் ராஜேந்திரன்.

 --------------------

இதுவும் மீள்பதிவே!

தலைப்பு பெயர் மட்டும் மாற்றிவிட்டேன்:

விதியை மதியால் வெல்லலாம் அம்மா!

விஞ்ஞானிகள் புனிதமானவர்களா?!

அறிவியல் எனறால் உண்மைகளின் பிறப்பிடம். அறிவியலில் ஆராய்ச்சி செய்றவன் எல்லாம் புனிதத்தொழில் பண்ணுகிறான் என்கிற மிகத்தவறான கண்ணோட்டம் விஞ்ஞானிகளை தூரத்தில் இருந்து பார்க்கும் பலருக்கும் உண்டு. ஆனால் விஞ்ஞானியும் கேவலம் சாதாதரண மனுஷ்ந்தான். பண ஆசை, புகழ் ஆசை, நோபல் பரிசு ஆசை உள்ளவர்கள் பலர் உண்டு. இதுக்காக சில கீழ்தரமான வேலைகள் செய்கிற விஞஞானிகளும் பலர் உண்டு. இதில் பலர் தப்பித்துக்கொள்வதும் உண்டு. ஒரு சிலர் மாட்டிக்கொள்வதும் உண்டு!

* இந்தா ஒரு கதை ஹிந்துல வந்திருக்கு. இவர், இண்டோ- அமெரிக்க "Chandrayaan" ப்ராஜஎக்ட்ல வேலை பார்த்தவராம். பெயர் Dr. Nozette. எஃப் பி ஐ இவரை அரெஸ்ட் பண்ணி இருக்கு! என்ன பண்ணினார்னா, ஒரு இஸ்ரேலி கம்பெணியிடம் பெரிய தொகை ( $2,25,000) பேரம் பேசி இருக்காரோ வாங்கினாரோ னு குற்றச்சாட்டு. இப்போ பிடிச்சுட்டாங்க!

http://www.hindu.com/2009/10/21/stories/2009102161571300.htm


* ராமன் ரிசேர்ச் இண்ஸ்ட்டிடூட்டில் முன்பு வேலை பார்த்த ஒரு விஞ்ஞானி, (பெயர் சொல்ல முடியாது) ஒரு ஸ்பெக்ட்ரோ ஃபோட்டோ மீட்டர் வாங்காமலே, வாங்கியதாக கணக்கு காட்டி அந்தப் பணத்தை அப்படியே அடித்துவிட்டார். கடைசியில் இதை கண்டுபிடித்தவுடன் அவர் அந்த இண்ஸ்டிடூட்டைவிட்டு மரியாதையாக வெளியேறும் நிலைமை 9நம்ம ஊரில் இதுபோல் பெருந்தலைகளை காப்பாத்தி விடுவார்கள்) வந்தது. இந்த விசயம் ரொம்ப வெளியே வரவில்லை.

* நம்ம மேதை சி வி ராமனே, பங்களூரில் ஐ ஐ எஸ் சியில் இருக்கும்போது, ஆராய்ச்சிக்காக வாங்கிய ஒரு சில வைரங்களுக்கு சரியான கணக்கு காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டினால், அங்கே இருந்து வெளியே வந்து, ராமன் ரிசேர்ச் இண்ஸ்டிடூட் ஆரம்பித்த பழங்கதையும் உண்டு.

* பல வருடங்கள் முன்னால், ஒஹையோ ஸ்டேட் யுனிவேர்ஸிட்டி யில் வேலை பார்த்த ஒரு பெரிய விஞ்ஞானி, "லியோ பக்கட்" என்கிறவர், யு டி ஆஸ்டினை சேர்ந்த இன்னொரு விஞ்ஞானியான ஸ்டீவ் மார்ட்டினுடைய ரிசேர்ச் ப்ரப்போஸலில் உள்ள ஐடியாக்களை திருடியதற்காக, சேர்மேனாக இருந்த அவரை அந்த கம்மிட்டியில் இருந்து விலக்கினார்கள், அமெரிக்கன் கெமிகல் சொசைட்டி!

* ஹார்வேர்ட் யுனிவேர்சிட்டியில் நோபல் பரிசு வென்ற இ ஜே கோரே யின் பல ஆய்வுக்குறிப்புகளில் "ரிப்ரொடியுசபிலிட்டி பிரச்சனை" உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் பல உண்டு!

* நம்ம ராமர் பிள்ளை பெரிய சயண்டிஸ்ட் இல்லை தான்! அவரும் ஹர்பல் பெட்ரோல் தயாரிச்சதா புருடா விட்டார்! இந்த ஆர்ட்டிகிலை உலகத்த்ரம் வாய்ந்த  "நேச்சர்" ல பிரசுரிச்சு இந்தியர்கள் மானம் போனதும் இன்னும் மறக்க முடியவில்லை!

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!

என்கிற கண்ணதாசன் வரிகளில் உண்மை எப்போதுமே உண்டு!

ஒரு சாதாரண ஜானிட்டராக இருந்து தன் வேலையை அழகா அர்த்தமாக செய்து வாழ்பவர்களும் உண்டு. ஊரும் பேரும் புகழும் பெரிய விஞ்ஞானியாகி, பேருக்காகவும் புகழுக்காகவும் கீழ்த்தரமான வேலைகள் செய்து மாட்டிக்கொள்ளாமல் போனவர்களும் உண்டு!

ஒருவன் தரத்துக்கும் அவன் அந்தஸ்துக்கும், ஏன் அறிவுக்கும்,  சம்மந்தம் இல்லை என்பதை எத்தனை பேரு புரிந்து வைத்துள்ளாகள்??


இதுவும் மீள்பதிவே!

Wednesday, May 14, 2014

காயத்ரியின் பகல்கனவு! (ஸ்ட்ரிக்ட்லி வயதுவந்தவர்களுக்கு மட்டும்!)

காயத்ரிக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம்  ஆகிறது. வருடங்கள் போனதே தெரியலை. இப்போ எல்லாம் ஹரி அவளை சரியாக் "கண்டுகொள்வதே" இல்லை.

"ஆமா, நல்லா டி வி பாருங்க, ஸ்போர்ட்ஸ் பாருங்க, "எல்லாம்" பாருங்க! என்னையும் கொஞ்சம் கண்டுக்கிறதுதானே?" னு மனதுக்குள்ளே புலம்பிக்கொண்டு கவர்ச்சியா மினி ஸ்கேர்ட் டுடன், ஒரு ரிவீலிங்கா டாப்ஸும் போட்டுக்கொண்டு வந்து டி வி பார்த்துக் கொண்டிருந்த கணவன் ஹரி அருகில் அமர்ந்தாள் காயத்ரி.

"ஏன்டி இந்த வயசுல இப்படி அலையிற?" ங்கிறமாதிரி ஏதோ வினோதமாக அவளைப் பார்த்தான் ஹரி. பக்கத்தில் உக்காந்ததால் பேருக்கு அவள் கன்னத்தில் ஒரு முத்தம். அதைக் கொடுக்காமல் இருந்தாலே பரவாயில்லைனு தோனுச்சு அவளுக்கு. இந்த ஊரில் உள்ள அமரிக்கர்கள் மனைவியிடம் ஃபோன் பேசிட்டு மறக்காமல் "ஐ லவ் யு" சொல்லிட்டு வைக்கிற மாதிரி இருந்தது அவளுக்கு.

இந்தியாவில் இருக்கும்போது நல்லாத்தானே இருந்தாரு, ஒரே ரொமாண்டிக்கா! அமெரிக்கா வந்து ஒரு நாலு வருஷம்தான் ஆகுது. அதிலிருந்து வேலை அதிகம், பையனா பார்த்துக்கனும்னு போனதுனாலேயே என்னவோ தெரியல, ஒண்ணும் பெருசா ரொமான்ஸே இல்லை. ஒரே ஒரு பையன்தான், அவனும் இப்போ வீட்டில் இல்லை, ஸ்கூல்ல ஏதோ கேம்ப்க்கு போயிட்டான். அவன் திரும்பி வீட்டுக்கு வர நாலு நாள் ஆகும். இப்போதைக்கு ப்ரைவஸிக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை, நெறையாவே இருக்கு. ஆனால் இவர்மட்டும் ஏன் இப்படி ஜடமா இருக்கிறார்? ஒருவேளை  இவருக்கு டெஸ்டாஸ்டீரோன் லெவெல் கொறைஞ்சிருச்சா? என்னனு தெரியலை. இல்லைனா இந்தியாவிலே மாதிரி இவருக்கு ஆளும் பேருமா கூட்டமா இருந்தாத்தான் இவருக்கு மூடு வருமா? இதையெல்லாம் அவரிடம் வெளிப்படையாக் கேட்டு டிஸ்கஸ் பண்றதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது. அவளா அவரைப் புரிஞ்சுக்கனும்! இந்த நாலு நாள்ல இவரை ஏதாவது ஒரு வழி பண்ணியே ஆகனும்னு ஒரு முடிவுக்கு வந்தாள்.

"நான் இந்த அவ்ட்ஃபிட்ல செக்ஸியா இருக்கேனா?" என்று கடைசியில் அவளே அடக்கமுடியாமல் கேட்டுவிட்டாள். அப்படிச் சொல்லி அவன் அருகில் நல்லா உரசுராப்பில உக்காந்து கணவனை செட்யூஸ் பண்ண ட்ரை பண்ணினாள், காயத்ரி. ஹரிக்கு என்னமோ அந்த அரைகுறை ட்ரெஸ்ல அவளைப்பார்த்து ஒண்ணும் உணர்ச்சியெல்லாம் பொங்கி வரலை, ஆனால் அவள் தேவையை புரிந்துகொண்டு, ஏதோ கடமையைச் செய்வதுபோல போனது அன்று இரவு.

காயத்ரிக்கு கடமைக்காக காதலோ, காமமோ சுத்தமாக பிடிக்காது. வாரம் ஒருமுறையானாலும், ஏன் மாதம் ஒரு முறையானாலும் பரவாயில்லை, ஆனால் ஹரி அவகிட்ட வந்து நல்லா வழியனும், அவளையும் அவள் அழகையும் அப்படி இப்படி அனுபவிச்சு பார்த்து ரசிக்கனும், அவன் பார்க்கும் பார்வையிலே அவளுக்கு உடம்பில் நெறைய கெமிக்கல் ரியாக்ஷன் நடக்கனும். அப்புறம் அவளை திடீர்னு கட்டி அணைச்சு அவ இடுப்பில், உதட்டில், மார்பில், கழுத்தில் எல்லா எடத்துலயும் கிஸ் பண்ணி அவளை அவன் மெய் மறக்க வைத்து, ஒரு சின்ன ஆர்கஸம் அவளுக்கு வருமளவுக்கு முத்தம் கொடுத்து அவ மூடை ஏத்தி அவளை ரெடியாக்கனும்! அது மாதிரி அன்புதான் காய்த்ரிக்கு வேணும். அதுதான் அவளுக்குப் பிடிக்கும். அதெல்லாம் அமெரிக்கா வந்தபிறகு நடந்தமாதிரியே இல்லை. இப்போ அந்த ஆசையெல்லாம் அவளுடைய பகல்கனவு மாதிரி ஆயிடுத்து. அவள் கனவை நனவாக்காமல் ஏதோ இதுவும் ஒரு வேலை போல் அவன் செய்வதால் ஹரிமேலே எரிச்சலும் கோபமுமாத்தான் வந்தது அவளுக்கு.

அடுத்தநாள் ஃப்ரெண்ஸ்ட்ட லேடீஸ் நைட் அவுட் ல இதைப்பத்தி பட்டும் படாமலும் நாசூக்காக பேசினாள். "நீ ஒண்ணும் கவலைப்படாதே! இங்கேயும் அதே கதைதான்" என்று சிரித்தாள்கள் தோழிகலெல்லாம். அப்போத்தான் புரிந்தது, வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போலனு. அவ்ளோதானா? காதல், காம வாழ்க்கை எல்லாம் அதுக்குள்ள முடிஞ்சதுபோல என்று ஒரே கவலை அவளுக்கு. ஆனால், அவள் தன்னைத்தானே அவள் பாத்ரூமில் கண்ணாடியில் பார்க்கும்போது இன்னும் அழகா எடுப்பா, கவர்ச்சியாத்தான் இருந்தாள். அதை உறுதிப்படுத்துவதுபோல வொர்க்ல, ஷாப்பிங் போகயிலே எல்லாம் நெறையவே அட்டன்ஷன் கெடச்சது, காயத்ரிக்கு. நேத்துக்கூட ஒரு கடையில் உள்ள செக் அவுட்ல உள்ள டெல்லர் அவளை அப்படி ஒரு பார்வை பார்த்தான். தேவையே இல்லாமல் அவளிடம் வழிஞ்சான். காயத்ரிக்கு எரிச்சல்தான் வரும் கண்டவனும் தன்னை அளவுக்கதிகமா பார்க்கிறது, தன்னுடன் தேவையே பேசுவது இதெல்லாம். கல்யாணம் ஆனவள்னு இதுகளிடம் சொல்ல "ரிங்"கா போட்டுக்கொண்டு அலையமுடியும்? என்று தனக்குள்ளே திட்டிக்கொள்வாள்.

ஃப்ரெண்டு ஒருத்தி ஏதோ ஐடியா கொடுதாள்னு ஒருமாதிரி விக்டோரியா சீக்ரட்ஸ் போயி, புதுசா ஒரு ஸ்பெஷல் பேண்டிஸ் ஒரு பேரை வாங்கி வந்திருந்தாள் காயத்ரி. அன்று சனிக்கிழமை, கீழே பேஸ்மெண்ட்ல லாண்ட்ரி போடும்போது அரைகுறையா ஒரு சின்ன ஸ்கேர்ட் மட்டும் போட்டுக்கொண்டு உள்ளே அந்த புது பேண்டிஸை போட்டு இருந்தாள். வேணும்னே பழைய க்ளோத்ஸை ட்ராப் பன்ணிட்டு எடுப்பதுபோல் உட்கார்ந்தாள். அவளுக்கு உதவ எதிர்புறமாக உட்கார்ந்து துணிகளை எடுத்த ஹரி, அவளையும், அவள் உள் ஆடையையும் நல்லாவே கவனித்தான்.

"என்ன காய்த்ரி பேண்டிஸ் கிழிஞ்சி இருக்கு? நல்லது எதுவும் இல்லையா? இதிலேகூட சிக்கனமா? நாளைக்கு போய் ஒரு டசன் எடுத்துண்டு வரலாம்" என்றான் விபரம் புரியாமல்.

"உங்களை என்ன பண்றது?", னு நினைத்துக் கொண்டாள் மனசுக்குள்ளேயே. "இது புது பேண்டிஸ்தான்யா மக்கு" னு ஹரியிடம் விளக்கம் சொல்ல அவளுக்கு இஷ்டமில்லை.

அடுத்த நாள் எரிச்சலும் கோபமுமா இருந்தாள். வாஷிங் மெஷினில் ஏதோ கோளாறுன்னு அவள் போட்டுக்க ஒண்ணும் மாட்டாமல் ஷூட்கேஸ்ல தேடி ஒரு பழைய சேலையையும், அதுக்கு மேட்சிங் ப்ளவ்ஸையும் மாட்டிக்கொண்டு இருந்தாள். நல்லவேளை ப்ளவ்ஸ் சைஸ் இன்னும் அவளுக்கு ஃபிட் ஆவதுபோல சரியா இருந்தது. அமெரிக்கா வந்ததிலிருந்து மாடர்ன் ட்ரெஸ்தான் இப்போலாம் காயத்ரிக்குப் பிடிக்கும். சேலையெல்லாம் இந்தியாவிலே கட்டியதுதான். அந்த சேலையை உடம்பெல்லாம் மாட்டிக்கொண்டு திரியிறது சுத்தமா பிடிக்காது, காயத்ரிக்கு.

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்ல உக்காந்து முக்கியமான ப்ராஜக்ட் ஒண்ணுல சீரியஸா வேலை செய்துகொண்டிருந்த ஹரிட்ட அவசரமாக காஃபியை கொண்டுவந்து கொடுத்தாள்.

"என்ன காலையிலே வேற அவுட்ஃபிட் போட்டிருந்த, திடீர்னு சேலையில் இருக்க?" னு விசாரித்தான் ஹரி.

"ஆமா, புது வாஷிங் மெஷின் வாங்கனும் போல. இது அவ்வளவுதான். கரெக்ட்டா என் ட்ரெஸ் எல்லாத்தையும் போடும்போது மெஷின் போயிடுத்து. வாரண்ட்டி இருக்குனு கால் பண்ணினால் சர்விஸ்க்கு ஆட்கள் நாளைக்குத்தான் வருவார்களாம்! அதான் இந்த சேலையை உடம்புமுழுவதும் சுத்திக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு" என்றாள் எரிச்சலாக.

"இங்கே வா உன்னிடம் முக்கியமான ஒண்ணு கேக்கனும்" னு அவளை கையைப்பிடிச்சு பக்கத்தில் இழுத்தான் ஹரி.

"அடுப்புல பால் இருக்கு, விடுங்க" என்று ஓடிப்போயி அடுப்பில் இருந்ததை கவனித்தாள். அவளுக்கு இன்னும் புரியலை.

"ஹேய் காயத்ரி! இழுத்துப்போத்தினால்தான்டி நீ பயங்கர செக்ஸியா இருக்க !" னு அவள் காதருகில் முனுமுனுத்தான். அவள் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து பின்னால் இருந்து கட்டி அணைத்தான். அவள் கழுத்தில் அவன் இதழ்கள் பதிந்தது. என்றும் போலில்லாமல் வித்தியாசமாக அவனுடைய முத்தங்கள் சத்தமாகவும் அவள் உடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. அவன் கைகள் அவள் உடம்பில் தெரிந்த எல்லா "கேப்" களிலும் ஊர்ந்தது, பிறகு கைகளை அவன் உதடுகளும் ஃபாளோ பண்ணின. காய்த்ரி ஸ்ட்வை ஆஃப் பண்ணினாள் . ஸ்டவ்வில் உள்ள நெருப்பு அணைந்தது, ஆனால் அவன் கொடுக்கும் முத்தத்தால் அவள் உடல் கொதித்தது, பொங்கியது. அதன்பிறகு அவள் எதுவும் பெருசா பேசவில்லை. இன்று என்னவோ புதுமாதிரியாக அவளுக்கு வழங்கும் அன்புடன் அவன் அவளை ஹீரோயினாக வைத்து ஒரு கதையும் சேர்த்துச் சொன்னான். ரொம்ப ரொம்ப மோசமான கதை அது. ஆனால், அதுதான் அவளை எளிதாக அவனுக்கு முன்னால் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது . எவ்வளவு நாளாச்சு இப்படி இவர் "அன்பா" இருந்து!

ஷவரில் குளித்துக்கொண்டிருக்கும்போது இன்பத்தில் ஆழ்த்திய ஹரியை நினைத்தாள், "யாரையும் கேட்டால், இவர் ஒர் பக்கா ஜெண்டில்மேன் னு சொல்வாங்க. இவர் வண்டவாளம் எல்லாம் எனக்குத்தானே தெரியும்? வர வர ரொம்ப ரொம்ப மோசம் இவர்" என்று எண்ணி வெட்கப்பட்டாள். அங்கே பாத்ரூம் ஓரத்தில் இவ்வளவுக்கும் காரணமான, தன் கனவை நனவாக்கிய அந்த பழைய புடவையைப் பார்த்து தனக்குள் சிரித்தாள்.

குளித்துவிட்டு வெளியே வந்தவள், அப்போது பாத்ரூமில் நுழைந்த ஹரியிடம் , "ப்ராஜெக்ட் டெட் லைன், நாளைக்குனு சொன்னீங்க! ரெண்டு மணி நேரம் வேஸ்டாயிடுச்சே? பாவம் நீங்க!" என்றாள் கிண்டலாக.

"நீதான் சதி பண்ணிட்டடி! ஏன் எனக்கு ப்ரமோஷன் கெடைக்கிறது பிடிக்கலையா? உன்னைவிட ரொம்ப அதிக சாலரி வாங்கிடுவேன்னு இப்படி செக்ஸியா சேலையைக் கட்டி வந்து கவுத்தீட்டயேடி" என்று அவள் பின்புறம் தட்டிவிட்டு அவள் கன்னத்தில் லேசா முத்தமிட்டு உள்ளே சென்றான்.

அவனுக்கு "அரைகுறை" காயத்ரியைவிட, உடம்பெல்லாம் மறைத்து சேலையில் இருக்கும் "பத்தினி" காயத்ரிதான் கவர்ச்சியாக இருக்கிறாள் என்பது இப்போதாவது தெளிவாகப் புரிந்ததே. "நல்ல வேளை வாஷிங் மெஷின் "ரிப்பேர்" ஆச்சு" னு தனக்குள் சொல்லி சிரித்துக்கொண்டாள். ஒருவழியாக அவள் பகல்கனவு நனவானது. 
 *********************

இது ஒரு மீள்பதிவே!

காயத்ரியின் பகல்கனவு! (18 + ONLY)

Tuesday, May 13, 2014

அடங்காத காளை ஒண்ணு அடிமாடானது!

"என்ன மோகன்! என்னைக்கு வந்தீங்க இந்தியாவுக்கு? என்று விசாரித்தார் அவனுடைய பி எஸ் ஸி க்ளாஸ்மேட் ராஜாராம்.

"நேற்றுத்தான்" என்றான் புன்னகையுடன்.

"மனைவி, மகன் எல்லாம் வரலையா?"

"இல்லை" என்று அதோட முடித்துவிட்டான், மோகன்.

மோகனுக்கும் அவன் மனைவி வித்யாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவன் மகன், விக்ரம், அம்மாவுடன் போய்விட்டான். அவனுக்கு 17 வயது ஆகிறது. ஹைஸ்கூல் முடித்துவிட்டான். கடந்த ஒரு ஆண்டு சில மாதங்களாக வாழ்க்கையை அவனுக்காக தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான் மோகன்.

மோகன் ஒரு நாள் உட்கார்ந்து தன் வாழ்க்கையைப்பற்றி யோசித்தான். கடந்த 50 வருட வாழ்க்கையில் எப்போ அவனுக்கு சுதந்திரம் இருந்தது? பள்ளியில் சந்தோஷமாக இருந்தான், பிறகு, கல்லூரியில். ஆனால் கல்யாணம் ஆனதிலிருந்து அவனுடைய ஒவ்வொரு சுதந்திரமும் பறிபோனது. புகை பிடிப்பதை நிறுத்தினான், குடிப்பதை நிறுத்தினான், நல்ல நண்பர்களையும் குறைத்தான். மனைவி, குழந்தை, குடும்பம், இதுதான் வாழ்க்கை என்று போனது. ஒரு சினிமா பார்ப்பதில்லை, ஒரு டிவி ஷோகூட பார்க்க முடியவில்லை. எதுவுமே அவனுக்கென்று செய்ய முடியவில்லை! தான் சம்பாரித்த பணமெல்லாம் அவன் மனைவியும் மகனும் இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். வர வர வீட்டில் அவன் ஒரு ட்ரைவர் போல ஆனான். அவன் குரலுக்கு எந்த மதிப்பும் அந்த வீட்டில் இல்லை. வீட்டில் அதிகமாக சம்பாரிப்பது அவன். குறைய தனக்கென்று செலவழிப்பதும் அவன் தான். தன் மகன் படிப்புக்காக எல்லா பணத்தையும் செலவழித்தான், சேமிப்பில் போட்டு வைத்தான். தனக்கு என்று ஓய்வு காலத்தில் வாழக்கூட போதுமான பணம் போட்டு வைக்கவில்லை அவன். பிச்சை எடுக்க வேண்டியதுதான் வயதான காலத்தில்.

எதுக்காக சம்பாரிக்கிறோம்? யாருக்காக வாழ்கிறோம்? என்ன வாழ்க்கை? என்கிற விரக்தி வந்தது அவனுக்கு. மகன், மனைவி என்பதே சொந்தம்போல் தோனவில்லை அவனுக்கு. மேலும் இந்த தன் குடும்ப வாழ்க்கையால் அவனால் தன்னை பெற்ற தாய் தந்தையர்களுக்கும் தைரியமாக உதவ முடியவில்லை. போய் நிம்மதியாக அவர்களிடம் பேச முடியவில்லை, ஆறுதல் சொல்ல முடியவில்லை. இந்தியா வரும்போதுகூட மனைவி ராஜியம்தான்! மகன் மனைவி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான் . அப்போதுதானே ஒரு நல்ல குடும்பத்தலைவன் என்று சொல்வார்கள்? என்னதான் அவன் குடும்பத்திற்காக தியாகம் செய்தாலும் அவனை அவன் மனைவி ஆயிரம் குறை சொல்லத் தயங்கவில்லை.

யோசிக்க யோசிக்க இப்படி வாழ்வதற்கு பேசாமல் போய் சேர்ந்தால் என்ன? என்று தோன்றியது மோகனுக்கு.

தன் அம்மா அப்பாவுக்கு எதுவும் செய்யனும் என்றால் பயந்துகொண்டு செய்யும் நிலைமை போல் ஆனது. அதை அடியோடு வெறுத்தான் மோகன். எல்லாமே ஏதோ போலி வாழ்க்கைபோல வாழ்க்கை தோன்றியது. வாழ்க்கையில் எந்த விதமான இனிப்பும் இல்லை அவனுக்கு.

அமெரிக்காவில் பிறந்த அவன் மகனோ, தான் வெறுத்த அமெரிக்க கலாச்சாரத்தின் மொத்த முழு உருவமாக இருந்தான். தன் மகனிடம் உள்ள இதே குணங்களை அமெரிகர்களிடம் பார்த்து வெறுத்து இருக்கிறான். இன்று அதேபோல் தான் இருக்கிறான் அவன் மகன். அப்போ அவன் மகனையும் அதே அளவு தான் வெறுக்கனுமா என்ற கேள்வி வந்தது மோகனுக்கு? ஆக மொத்ததில் நன்றிகெட்ட மனைவி! நன்றினா என்னனு கேட்கிற மகன். இவன் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குடும்பத்தலைவன்!

ஒரு நாள் புதிதாக லைசெண்ஸ் வாங்கிய அவன் மகன் விக்ரம், எப்போதும்போல அது இல்லை, இது இல்லை, என்பதுடன் எனக்கு புது Sports car வேணும் என்றான். அதன் விலை $30,000.

"நீ சம்பாரிதித்து வாங்கு! என்னால் அவ்வளவு பணம் உனக்கு செலவழிக்க முடியாது!" என்றான் மோகன்.

"ஏன் நீங்க வாங்கி தந்தால் என்ன?" என்றாள் வீட்டில் ராஜியம் நடத்தும் மனைவி வழக்கம்போல. அவள் எதிலும் தோல்வியே அடைந்ததில்லை.

"அப்போ நீ சம்பாரித்து வாங்கிக்கொடு" என்றான்.

"என்ன சொல்றீங்க?!" என்றாள் எரிச்சலுடன்.

"நான் தமிழ்லதானே சொன்னேன்?" என்றான் மோகன்.

"அப்போ அவனுக்கு கார் வேண்டியதில்லையா?. நீங்க வாங்கி கொடுக்க போவதில்லையா?"

"ஒரு புது ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிக்கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அது தேவையும் இல்லை. ஒரு பழைய கார் $2000 வாங்கி இப்போதைக்கு ஓட்டட்டும். அவன் சம்பாரிக்கும்போது அவன் காசு போட்டு பின்னால் ஒரு லெக்ஸஸ், இல்லைனா ஒரு மெர்சிடெஸ் கன்வேர்ட்டிபிள் வாங்கிக்கொள்ளட்டும்" என்றான் மோகன்.

அவன் சொல்வதையெல்லாம் அந்த வீட்டில் யாரும் மதிப்பதில்லை! வழக்கம்போல அவன் மனைவி மோகன் சொல்வதை கேட்காமல் மகனுடன் கார் டீலரிடம் சென்றாள். அந்த நேரத்தில் மோகன் ஒரு லாயரைப்போய் பார்த்தான். ஆனால் இந்த முறை வெற்றி கிடையாது என்பது தெரியாது பாவம் அவளுக்கு.

புது காருடன் மனைவியும் அவன் மகனும் வரும்போது, டைவோர்ஸ் நோட்டிஸை அவன் மனைவியிடம் கொடுத்தான், மோகன்.

"எனக்கு இந்த கார் வேணாம் அப்பா" என்றான் மகன்.

"I am really tired of my family. I want to live alone for a while" என்றான் மோகன் நிதானமாக.

அவன் மனைவி அழுதாள், சாவேன் என்றாள். அது இதுனு பேசினாள். அதற்கெல்லாம் மோகன் இந்தமுறை மசியவில்லை. டைவோர்ஸ் பண்ணி முடித்துவிட்டான் குடும்ப வாழ்க்கையை.

நல்ல ஏரியாவில் அரை மில்லியன் மதிப்புள்ள வீட்டை மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு, தனி அப்பார்ட்மெண்ட் ல ரொம்ப மோசமான ஏரியாவில் குறைந்த செலவில் வாழ்ந்தான் விவாகரத்துக்குப் பிறகு, ஆனால் நிம்மதியாக!

ஒரு சில நண்பர்கள், டி வி, வேலை என்று பொழுது போனது. அவனுக்காக மட்டும் வாழ்ந்தான் மோகன். குடுமபத்திற்கு போதுமான அளவு தியாகம் செய்தாகிவிட்டது! வேலையில் அதிக நேரம் செலவழித்து ப்ரமோஷன் கிடைத்தது. தான் சம்பாரிக்கும் பணத்தில் பாதி மனைவி குழந்தைக்குப்போனாலும், மீதி இருப்பதே பெரிய தொகையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு மன நிம்மதி இருந்தது. எல்லா முடிவும் அவனே எடுக்க முடிந்தது. தன் தவறுக்கு தான் பொறுப்பேற்க அவன் என்றுமே தயங்கியது இல்லை!

இப்போ இந்தியா வர ஒரு மாதம் அவனுக்கு லீவ் கிடைத்தது. வசதி என்ன என்றால், மனைவிக்கு லீவ் இருக்கா, மகனுக்கு லீவ் இருக்கா என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியா வந்தான், தன் ஊருக்கு வந்தான், வந்து அவன் வயதான அம்மா அப்பாவிடம் நிறைய விசயங்கள் பேசினான், நிறைய நேரம் செலவழித்தான். அவர்களுடன் செலவழிக்கும் இந்த நேரம் மிகவும் அர்த்தமானதாக இருந்தது. பழைய நண்பர்களை பார்த்தான். தான் படித்த பள்ளி, போய் வந்த இடங்களுக்கு சென்று வந்தான்.

கடந்த 30 வருடமாக அவனுக்கு இந்த சுதந்திரம் பறிபோய் இருந்தது. அவனுக்கு இந்த வாழ்க்கை ரொம்பவே பிடித்தது. மனைவி குழந்தை என்று தியாகியாக வாழ்ந்து, என்னதான் செய்தாலும் கடசியில் கெட்ட பெயரு வாங்கி கட்டிக்கொள்வதைவிட இது அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருந்தது அவனுக்கு.

*******

மன்னிக்கவும், இதுவும் மீள்பதிவே! :-)

Monday, May 12, 2014

நீதான் ஒண்ட வந்த பிடாரி!

"ஏண்டா அந்த ஆளுக்கு இப்படி ஒரு "மூக்கு உடை" கொடுத்த கார்த்திக்? பாவம்டா அவன்! அவன் மூஞ்சி போன போக்கை பார்த்தியா?" என்றான் சுந்தர்.

"நான் என்னடா செய்தேன்? "சரி அப்போ நீங்க உட்காருங்க! நான் நிக்கிறேன்" னு சொன்னேன். இதிலென்ன பெரிய தப்பு?!"

"என்னடா சுந்தர்? என்னாச்சுடா?" என்றான் அப்போத்தான் அந்த ரூம் உள்ளே வந்த ஆனந்த்.

"இல்லடா இன்னைக்கு ஆட்டோக்காரர்கள்  எல்லாம் ஸ்ட்ரைக்காம்! படம் பார்த்துட்டு ஆட்டோ கிடைக்காமல் பஸ்ல ஏறி சிவாஜி நகர்ல இருந்து வந்தோம். வரும்போது நானும், கார்த்திக்கும் பஸ் ஸ்டாண்டிலேயே ஏறியதால் உட்கார இடம் கெடச்சது. அது 3 பேர் உட்காருகிற சீட். அந்த சீட்ல இன்னொரு குண்டான ஆளும் ஜன்னல் ஓரத்தில் இருந்தான். அந்த குண்டான ஆளு, நான் கார்த்திக் மூனு பேரும் உட்கார்ந்து இருந்தோம் அந்த சீட்ல. நான் நடுவில், கார்த்திக் இந்த உக்காந்து ஓரமா இருந்தான். அடுத்த ஸ்டாப்ல ஒரு ஆள் ஏறி கார்த்திக் பக்கத்தில் நின்னுகொண்டு வந்தான். அவனுக்கு 35 வயசுபோல இருக்கும். நல்லாத்தான் கிழங்கு மாதிரி இருந்தான். அவன் கார்த்திக்கிடம் மெதுவா சொன்னான் "கொஞ்சம் தள்ளி உட்காருங்க! நானும் உட்கார்ந்துக்கிறேன்"னான்.

"சரி, அதுக்கு இவன் என்ன  சொன்னான்?"

"உடனே கார்த்திக் சொன்னான், "இது  மூனு பேர் உட்காருகிற சீட், சார். நீங்களும் உட்கார்ந்தா யாரும் ஒழுங்கா வசதியா உட்காரமுடியாது" னு  இடம் கொடுக்க முடியாதுனு சொன்னான். ஆனால் அவன் இவனை விடலை. "கொஞ்சம் தள்ளி உட்காருங்க அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்துக்கலாம்" னு விடாமல் நிக்கிறான்"

"எரிச்சலில் அவனை திட்டிவிட்டானா கார்த்திக்?"

"இல்லைடா, திட்டலாம் இல்லை! "அப்போ நீங்க உட்காருங்க சார் ! நான் நிக்கிறேன்!" என்றேன். இதைப்போய் பெருசா சொல்லிக்கிட்டு இருக்கான், சுந்தர்"

"அது ஒரு செம சிக்ஸ் டா அவனுக்கு. பாவம் அவன் மூஞ்சி போன போக்க பார்க்கனும் நீ!"

"ஏண்டா கண்டவனையும் போட்டு கடிக்கிற, கார்த்திக்?"

"இங்கே பாரு! நான் உண்மையிலேயேதான் சொன்னேன். I was ready to give my seat to him. It will be VERY uncomfortable for everybody otherwise. அந்த சீட்ல நாலு பேர் உட்காருவது இம்பாஸிபிள்டா. I could stand more comfortably than sitting with great difficulty. அதனாலதான் சொன்னேன். நம்பினால் நம்பு!  I really meant it"

"என்னவோ போ! அவன் இனிமேல் யாரிடமும் இப்படி இடம் கேக்க மாட்டான்" என்றான் சுந்தர்.

"நீ வேற! இவனுகளைப் புரியாமல் நீ பேசுற! காலம்பூராம் அவன் இப்படித்தான் இருப்பான்!

"ஏண்டா டேய்!"

 " சரி, இதைக்கேளுடா! ஒரு நாலு மாசத்துக்கு முன்னாலே  மதுரைக்கு போக வேண்டியதாப்போச்சு. கடைசி நேரத்தில் போனதால, ட்ரயின், டீலக்ஸ் பஸ் எதுலயும் டிக்கட் புக் பண்ண முடியலை. தீபாவளிக்கூட்டம் என்பதால் டிக்கட்டுக்கு சாண்ஸே இல்லை. சரி, மக்களோட மக்களா போவோமேனு மெஜெஸ்டிக்ல ஒரு சேலம் பஸ்ஸை பிடிச்சு போனேன். சேலம் போய் மதுரைக்கு மாறி போய்க்கலாம்னு. நான் கடைசி சீட்ல உட்கார்ந்து இருந்தேன் இன்னும் 5 பேரோட சேர்த்து. கடைசி சீட்னால பஸ் தூக்கி தூக்கிப் போட்டுக்கிட்டே போச்சு. ஹொசூர் போனதும் அங்கே இதே மாதிரி அப்பாவி வேசத்துடன் வந்தான் ஒருத்தன்" "சார் கொஞ்சம் எடம் கொடுங்க, ஓரமா உட்கார்ந்துக்கிறேன்" என்றான் மரியாதையா.

"நானும், சரி தொலையிறான் னு உட்காரவிட்டேன். உட்கார்ந்தான் அந்த அப்பாவி. ஒரு அரை மணி நேரத்தில் என்ன ஆச்சுனா, எல்லாமே மாறிப் போயிடுச்சு! நான் ஏதோ அவன் இடத்தில் உட்கார்ந்த மாதிரி ஓரத்தில் ஒண்டிக்கிட்டு இருக்கேன். அவன் எதைப் பத்தியும் கவலைபடாமல் 2 பேர்க்கு தேவையான சீட் எடத்தை எடுத்துக்கிட்டான். என்னால சுத்தமா உட்காரவே முடியலை. இதை எவனாவது புதுசா ஏறுறவன் பார்க்கிறான்னு வச்சுக்கோ.  என்ன நெனைப்பான் தெரியுமா? நாந்தான் அங்கே ஒண்ட வந்த பிடாரினு நெனைப்பான். Seriously, If anybody, who does not know the "history" sees us, it will look as if he was generous enough to accommodate me in his seat! He does not even remember I let him sit, there! You believe that? We have got these sort of cheap bastards everywhere"

"நீ என்னடா பண்ணின?"

"என்ன பண்ண சொல்ற? அவனுக்கு ஞாபகப்படுத்த சொல்றியா? நீதான் ஒண்ட வந்த பிடாரினு?  வேற வழி தெரியாமல் நான் பேசாமல் எழுந்து நின்னுட்டேன். இதைக்கேளு! அப்பவும் அவன்,  அவனுக்கு இடம் கொடுத்த நான் நிக்கிறதைப்பத்தி கவலையே படலைடா! அவன்  அந்த ரெண்டு ஆளு இடத்தில் வசதியா உட்கார்ந்துட்டு வரான், சந்தோஷமா!"

"அந்த கசப்பான அனுபவத்தில் இவனிடம் இப்படி "ரியாக்ட்" பண்ணுறியாக்கும்?"

"இல்லடா, இவனுகளை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் விட்டேனா, அதையும் நம்ம ஊர் மாதிரி கேவலமா ஆக்கிவிடுவானுக! காட்டுமிராண்டிகள்! கொஞ்சம்கூட புத்தியே கிடையாது"


இதுவும் ஒரு மீள் பதிவே! தலைப்பு கொஞ்சம் "அர்த்தமுள்ளதாக" மாற்றப் பட்டுள்ளது!