Thursday, April 30, 2009

"பன்றி காய்ச்சல்" (Swine flu) பீதி!



பொதுவாக சாதாரண காய்ச்சல் (influenza aka flu) ஒரு வைரல் இன்ஃபெக்ஷன். நம்முடைய உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி, கிருமிகளுடன் சண்டை போட்டு ஜெயிக்கனும். Antibiotics எல்லாம் இதுபோல் வைரல் இன்ஃபெக்ஷனுக்கு உதவாது. இருந்தாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள், எச் ஐ வி உள்ளவர்கள் இதில் செத்துக்கொண்டுதான் இருக்காங்க.

இன்ஃப்ளுவென்ஸா (ஃப்ளூ) விற்கு தடுப்பு ஊசி கொண்டு வந்துவிட்டார்கள். அதனால் ஒவ்வொரு வருடமும் ஃப்ளூ சீசன் வரும்போது, அமெரிக்கா போன்ற நாடுகளில் வயதானவர்கள் இந்த தடுப்பு ஊசி போட்டுக்கொள்கிறார்கள். இதனால் சரியான எதிர்ப்பு சக்தி இல்லாத ஒரு சிலரும் ஃப்ளூ வந்து உயிர் பிழைத்துவிடுகிறார்கள்.

இந்தியாவில் நான் வாழும்போது காய்ச்சலுக்கெல்லாம் தடுப்பு ஊசி போட்டதில்லை. ஆனால் இன்று எப்படி என்று தெரியவில்லை. 99.99% நம்முடைய எதிர்ப்பு சக்தி போராடி இந்த வைரஸை வென்றுவிடும். வெகு சிலர் சாவார்கள்.

இப்போ இந்த "பன்றி காய்ச்சல்" (swine flu) என்கிற இந்த இன்னொரு வகை ஃப்ளூ மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்கா வந்து இருக்கிறது. 24 மணி நேரம் செய்திசொல்லும் சில சேனல்கள் இதைப்பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கார்கள். இன்ஃப்ளுவென்ஸாவை நம் உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தி எப்படி சண்டைபோட்டு வெற்றியடைகிறதோ, அதே போல் இதையும் சண்டை போட்டு வெற்றியடையனும். ஏனென்றால், இது, மலேரியா, டைஃபாயிடு போன்ற பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் அல்ல. வைரல் இன்ஃபெக்ஷந்தான். இதில் சாவது உடம்பில் எதிர்ப்பு சக்தியில்லாதவர்கள் மட்டும்தான்.

இன்றைய தேதிக்கு இதற்கு தடுப்பு ஊசி தயாராக இல்லை என்பதாலும் மெக்ஸிக்கோவில், 20-50 வயதில் உள்ளவர்கள் பலர் இந்த காய்ச்சலால் இறந்துவிட்டதாலும் அமெரிக்காவில் கொஞ்சம் குழம்பிப்போய் இருக்காங்க. அதனால் அமெரிக்காவில் இந்த காய்ச்சல் வந்தவர்கள் மற்றவர்களுக்கு இது பரவாமல் இருக்க கட்டாயம் லீவ் எடுத்து வீட்டிலேயே இருக்கச் சொல்லுகிறார்கள்.

Wednesday, April 29, 2009

விஜய்காந்தின் புதியபடம் மரியாதை ஒர் பழைய குப்பையாம்!


இந்த விக்கிரமன் நம்ம விசய்காந்த கீரோவா வச்சு ஒரு படம் எடுத்து விட்டு இருக்கார்.

படம் பேர் என்னா அண்ணத்தேனு கேட்டா, மரியாதை னு சொன்னாங்க!!

படம் எப்படி இருக்குனு கேட்டா படம் பெரிய குப்பைனு சொல்றாங்க!

அதென்னவோ தெரியலை, நம்ம கருப்பு எம் மு சியார் அரசியலில் நுழைந்தபிறகு, சினிமாவில் அவர் உப்பு விக்கப்போனா மழை பெய்யுது. மாவு வாங்கப்போனா காத்தடிக்குது.

பாரதிராஜா சிவாஜியை வைத்து எடுத்து "முதல் மரியாதை" ஒரு அழகான காவியமாக வந்தது. முதல் மரியாதை வரும்போது ஏறக்குறைய சிவாஜி இருந்த ஷேப்பிலேயே இருக்கும் கேப்பிட்டனை வச்சு அதுபோல் ஒரு காவித்தை கொடுக்க போறார் விக்கிரமன் என்று எல்லோரும் ஏங்கிக்கொண்டு இருந்தார்கள்,

ஆனா என்ன செய்வது இந்த "முதல்" இல்லாத "மரியாதை" ஒரு பழைய குப்பையாகிவிட்டதாக சொல்றாங்க.

* இந்தப்படம் பிஹைண்ட் வுட்ஸ்ல முதல் வாரத்திலேயே நாலாவது இடத்தை பெற்றுள்ளது. பெரிய சாதனைதான்!

* Sify க்காரனுக சொல்றாங்க, விக்ரமன் இன்னும் 70 லேயே இருக்கார்னு!

கேப்பிட்டனு! உங்களுக்கெல்லாம் இப்போ எதுக்கு இந்த "மரியாதை"?

"மரியாதை" எடுத்து மரியாதையை கெடுத்துக்கிட்டாரு நம்ம கேப்பிட்டனு! தயவு செய்து இதோட நிறுத்திக்கவும்!

Tuesday, April 28, 2009

ரஜனிகாந்த் செய்த குடிதண்ணீர் வசதி!



கிருஷ்ணகிரி அருகே உள்ள ந(நா)ச்சிக்குப்பம் என்கிற சிறிய கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்த் குடிநீர் வசதி செய்துகொடுத்துள்ளாராம். இங்கே ஒரு 2.49 ஏக்கர் நிலம் வாங்கி அதில் இந்த வசதியை கொண்டு வந்துள்ளாராம். இது ஆடு-மாடுகளுக்கு தண்ணீர் குடிக்கும் வசதிபோல் தெரிகிறது.

இங்கே ஒரு சிறு கல்யாண மண்டபம் மேலும் விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் விரைவில் அமைக்கப்படுமாம். இது இவர் தாய்-தந்தையரின் (ராம்பாய் மற்றும் ராஜோஜி ராவ்) நினைவாக செய்துள்ளாராம்.

ரஜினி ரசிகர், கார்த்திக் என்பவர்தான் இதை செய்யச்சொல்லிக் கேட்டாராம். அவர் வேண்டுதலின் பேரில் இதை செய்ததாக சொல்கிறார்கள்.

Monday, April 27, 2009

திராவிட இனத்துரோகிகள் வைகோவும், ராமதாசும்தான்!

இந்தியாவில் இதுவரை பிரதமராக இருந்தவர்களில் 99% ஆரியர்கள்தான். திராவிடனுக்கு ராமாயணத்திலும் சரி, டெல்லியிலும் சரி மரியாதை இல்லை. அது ஏன்?? திராவிடனுக்கு இனப்பற்று கிடையாது. திராவிடனுக்கு எதிரி இன்னொரு திராவிடன்தான். ஒரு திராவிடனை ஒழிக்க இன்னொரு திராவிடன் வெள்ளைக்காரனுடன் சேரவும், பார்ப்பனர்களுடன் சேரவும் தயங்க மாட்டான்!

சோ ராமசாமியையும் ஹிந்து ராமையும் திட்டுவதெல்லாம் அர்த்தமற்றது. இன்று ஜெயலலிதாவுக்கு ஆயில் அடிப்பது திராவிட துரோகிகள் திரு. வைகோவும், திரு. ராமதாசும்தான்! தமிழ்நாட்டிலே எத்தனை ஆயிரம் திராவிட தலைவர்கள் இருக்கார்கள்?? அது ஏன் இந்த பாமர திராவிடர் ராமதாசுக்கும், சுயமரியாதையை காற்றில் பறக்கவிட்ட வைக்கோவிற்கும், 10 கோடி திராவிடன் வாழும் தமிழகத்தில் ஒரு "பாப்பாத்தி" க்குத்தான் பிரதமராக தகுதி இருப்பதுபோல தோனுது??

*** From Hindu!

To a question on MDMK leader Vaiko’s suggestion of projecting Ms. Jayalailthaa for the post of Prime Minister in the event of Third Front forming the government, Dr. Ramadoss endorsed it and said his party would certainly support the candidature of Ms. Jayalalithaa who, he said, had all the qualifications to hold the post. ***


ராமதாஸ், வை கோ போன்ற திராவிட கோடரிக்காம்புகள் பார்ப்பனர்களுக்கு மட்டும் பெரிய தலைவராக தகுதி உள்ளதாக உறுதியாக நம்புகிறார்கள்! இந்த மனப்போக்கு திராவிடர்களிடம் இருக்கும்போது, "பார்ப்பான் பார்ப்பான்" என்று சோ ராமசாமியையும், ஹிந்து ராமையும் திட்டுவதெல்லாம் அர்த்தமற்றது!

திராவிடனுக்கு எதிரி என்றுமே திராவிடன்தான். பார்ப்பனர்கள் அல்ல! இனவெறி எனபது ஈழத்தமிழர் பிரச்சினையில் மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன?

இன உணர்வு கொள்! இன உணர்வு கொள்! என்று சும்மா ஈழத்தமிழர் பிரச்சினையில் மட்டும் காட்டினால் போதாது!

Saturday, April 25, 2009

காதலுடன் 14

"சந்தியா! ரமேஷ்தான் பேசுறேன்! எங்கே போன சந்தியா? ஆளையே காணோம்! இது என்னுடைய ஐந்தாவது மெசேஜ் -கடந்த பத்து நாட்களில். இன்னும் உயிரோட இருந்தால் கால் ரிடெர்ன் பண்ணு ப்ளீஸ்" என்று அவளுக்கு வாய்ஸ் மெசேஜ்ல சொல்லி முடித்தான்.

சந்தியாவின் அமைதிக்கு காரணம், திடீர்னு இந்தியாவில் இருந்து அவள் அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை என்று ஃபோனில் சொன்னார்கள். மைல்ட் அட்டாக்தான் என்றார்கள். இப்போ ஹாஸ்பிட்டலில் இருப்பதாகவும் சொன்னாங்க. மைல்ட் அட்டாக் என்றாலும் உடனே புறப்பட்டு இந்தியா போய்விட்டாள், சந்தியா. அவசரமா டிக்கெட் புக் பண்ணி புறப்பட்டதால் அவளால் இந்த ஷாக் நியூஷை ரமேஷிடம் சொல்ல முடியவில்ல. இ-மெயில் அனுப்பவும் நேரமில்லை, மேலும் மனசு ரொம்ப குழம்பிய நிலையில் இருந்ததால் யாரிடமும் சரியாக்கூட சொல்ல முடியவில்லை. வேலையில் லீவ் அப்ரூவல் வாங்கவே போதும் போதும்னு ஆயிடுச்சு.

இந்தியா போனதும் ஏர்போர்ட்ல இருந்து நேராக ஹாஸ்ப்பிட்டல்தான் போனாள். அங்கே அம்மா பெட்ல இருந்தாள். அப்பா, அவளருகில் அமர்ந்து அழுது ரொம்ப கலங்கிப்போய் இருந்தார். அப்பா, அம்மா ரெண்டுபேரும் சண்டை போட்டுத்தான் பார்த்து இருக்காள், சந்தியா. இதுபோல் அப்பா அம்மாவுக்காக கலங்கி, அழுது அவள் இன்றுவரை பார்த்ததில்லை. இப்போதுதான் புரிந்தது அவளுக்கு நல்லா சண்டை போட்டார்கள் ஒருவரை ஒருவர் கம்ப்ளைண் செய்தார்கள் என்றால் நல்லா ஹெல்த்தியாக இருக்காங்கனு அர்த்தம்னு.

அம்மாவுக்கு உள்ள ஹெல்த் ப்ராப்ளம்ஸ் ஓரளவுக்கு அவளுக்குத் தெரியும். கொலெஸ்டிரால் அதிகமாக இருக்கிறது அதுபோக சேர்த்து ஹைப்பர் டென்ஷனும் இருக்குனு தெரியும் அவளுக்கு. ஆனால் கொலெஸ்டிரால், ஹைப்பர் டென்ஷன் யாருக்கு இல்லை? எல்லோருக்குமா ஹார்ட் அட்டாக வருது?

கொஞ்ச நாளாவே ஒழுங்கா அல்லோப்பதி மாத்திரை மருந்துகள் சாப்பிடாமல், ஹைப்பர் டென்ஷன் சரிபண்ண யோகா பண்ணுறேன், ஆயுர்வேத/சித்த மெடிசினை சாப்பிட்டால் நல்லதுனு சொன்னாங்கனு என்று ஃபோனில் சொல்லிக்கொண்டு இருந்தாள் அம்மா. இப்படி கண்ட வைத்தியம் செய்து உடம்பை கெடுத்துக்கொண்டாள் என்று நம்பினாள் சந்தியா. என்ன வேதிப்பொருள் இருக்குனே தெரியாத கண்ட ஆயுர்வேத மாத்திரை/மருந்துகள் சாப்பிடுவது பைத்தியக்காரத்தனம் என்று நினைத்தாள் சந்தியா. ஆனால் இவள் சொல்வதையெல்லாம் அவள் அம்மா கேட்பதாக இல்லை.

ஓரளவுக்கு அம்மா உடல்நிலை நார்மல் ஆனவுடன் அம்மாவுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர், அந்த கார்டியாலைஸ்டிடம் அம்மா உடல்நிலைபற்றி தனியாக பேசினாள், சந்தியா. கொலெஸ்டிரால் அதிகமானதுனாலதான் பிரச்சினை என்றார் அவர். இப்போ ஆஞ்சியோ ப்லாஸ்டி பண்ணி இருக்கோம். இதோட அவங்க ரெகுலரா மெடிசின் சாப்பிடனும், டயட்ல இருக்கனும். லிப்பிட்டார் ப்ரிஸ்க்ரைப் பண்ணியிருக்கேன். அது ஓரளவுக்கு கொலெஸ்டிராலை குறைத்து கீழே கொண்டு வரனும். தவிர ஹைப்பர் டென்ஷன் பில்ஸையும் ரெகுலராக சாப்பிடனும். மேலும் 3 மாதம் ஒருமுறை செக் அப்க்கு தவறாமல் வரனும். இனிமேல் யோகா பண்றேன், மெடிட்டேஷன் பண்ணி நான் ஹைப்பர் டென்ஷனை குறைக்கிறேன் என்று சொல்லி கொடுத்திருக்கிற ப்ரிஸ்க்ரிப்ஷனை சாப்பிடாமல் கவனக்குறைவா அவங்க இருக்கக்கூடாது என்று வார்ன் பண்ணினார்.

சந்தியா, இந்தியாவில் இருந்த ரெண்டு வாரம் அம்மாவை நல்லா கவனித்துக்கொண்டாள். அதற்குமேல் லீவ் கிடைக்காததால 2 வாரம் கழித்து புறப்பட்டு திரும்பி வந்தாள். வரும்போது அம்மாவிடம் ஒழுங்கா மாத்திரை சாப்பிடு, இந்த ஆயுர்வேத மற்றும் சித்த மெடிசினை தயவு செய்து விட்டுத்தள்ளு என்று கடிந்து சொல்லிவிட்டுவந்தாள். மேலும் அப்பாவிடமும் அம்மா கவனமாக மாத்திரை மருந்து சாப்பிடுறாங்களானு பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து சேர்ந்தாள்.

வந்ததும், ரமேஷிடம் இருந்து, வாய்ஸ் மெசேஜஸ் பல இருப்பதைப் பார்த்தாள். உடனே ரமேஷை கூப்பிட்டாள்.

"ஹாய் சந்தியா!"

"அவசரமா இந்தியா போகவேண்டியதாச்சு, ரமேஷ். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை"

"என்ன ஆச்சு, சந்தியா?”

“ஹார்ட் அட்டாக், ரமேஷ். ரொம்ப நாளா ஹைப்பர் டென்ஷனும், கொலெஸ்டிராலும் இருக்கு. ஆனா அவங்க ஒழுங்கா டயட்ல இருக்கிறது இல்லை, செக் அப் பண்றதில்லை, மாத்திரையும் ஒழுங்கா நேர நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. இப்போ ஹார்ட் அட்டாக்ல வந்து நிக்குது”

“ஐ ஆம் சாரி டு ஹியர் சந்தியா. இப்போ எப்படி இருக்காங்க?”

“இப்போபரவாயில்லை ரமேஷ். ஆஞ்சியோ ப்ளாஸ்ட்டினு ஏதோ ஒரு ப்ரொஸஸுட்ஜர் பண்ணி இருக்காங்க. இப்போ பரவாயில்லை, ரமேஷ். வீட்டுக்கு வந்துட்டாங்க. கவனமா இருக்கனும்னு டாக்டர் சொல்றார்”

“ஹார்ட் டிஸீஸ் எல்லாம் இப்போ ஈசியா ட்ரீட் பண்ணிடலாம் சந்தியா. லேட்டெஸ்டா நெறைய டெவெலப்மெண்ட்ஸ் ஆயிருக்கு சந்தியா. கவலைப்படாதே ”

“என்னவோ போங்க, ரமேஷ்” என்றாள் சோகமாக.

“மனசு சரியில்லையா?”

“ஆமா என்னென்வோ புரட்சியா பேசுறேன். அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லைனா, தாங்க முடியலை, பாருங்க”

“ஹேய், ஐ மிஸ்ட் யு எ லாட், சந்தியா”

“சாரி, உங்ககிட்ட சொல்ல முடியலை, ரமேஷ். அவசரமா டிக்கட் புக் பண்ணிப்போக வேண்டியதாயிடுத்து. மனசும் ரொம்ப குழம்பி இருந்தது”

“பரவாயில்லை. நான் கொஞ்சம் பயந்துட்டேன், அவ்வளவுதான். உனக்கு இப்போ "ஜெட்லாகா" இருக்கா?”

“ஆமா”

“நைட் உனக்கு தூக்கம் வருமா?”

“வராதுதான். ஏன் நீங்க என்ன செய்யச் சொல்றீங்க?”

“நான் வேணா அங்கே வரவா?”

"நல்ல ஐடியா. வந்து என்னை தூங்க வைக்கவா இல்லை தூக்கத்தை கெடுக்கவா?” அவள் சிரித்தாள்.

“ஆமா ரெண்டுக்கும்தான்”

“சரி வாங்க. இன்னைக்கு ஃப்ரைடே நைட் தானே?”

“தனியா ஒரு பெட் இருக்கா?”

“இல்லைனா என்ன இப்போ? ஏன் என்னோட சேர்ந்து படுத்துக்க வேண்டியதுதானே?”

“அதானே?”

“அதெல்லாம் இருக்கு, வாங்க!”

“ஏய்”

“நெஜம்மாவே இன்னொரு பெட் ரூமில் ஒரு ட்வின் சைஸ் மேட்ரஸ் இருக்கு.பயப்படாமல் வாங்க”

சரியா, 9 மணிக்கு காலிங் பெல் அலறியது. ரமேஷ்தான் என்று பார்த்துவிட்டுக் கதவைத்திறந்தாள்.

“வாங்க, ரமேஷ்” என்றாள்.

“என்ன அதிசயமா சேலை கட்டி இருக்க!” அவளை வித்தியாசமாக பார்த்தான்.

“சும்மாதான்”

“ஏய், ஐ தின்க் ஐ மிஸ்ட் யு எ லாட். மே பி ஐ ஷுட் கோ பேக் ஹோம்”

“வாட்!! என்ன ஆச்சு?” என்று சொல்லிக்கொண்டே அவள் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டிருந்தாள். ரமேஷ் அவள் பின்னால் அருகில் நின்று கொண்டு அவள் காதுகளில் முனுமுனுத்தான்.“சேலையில் ரொம்ப செக்ஸியா இருக்க” என்று.

அவள் முதுகோட உரசுவதுபோல் நின்றான். அவள் உடலில் இருந்து ஒரு மணம் வந்தது. அவனுடைய சூடான மூச்சுக்காற்று அவள் கன்னத்தில் பட்டது. அவள் நிலைமையை சமாளித்து சுதாரிக்கும் முன்னால் அவள் கழுத்தில் அவன் இதழ்களை பதித்தான். சந்தியா அப்படியே சிலையாக நின்றாள்.

“என்ன சொன்னீங்க?” என்றாள் மெதுவாக சிறிது நேரம் கழித்து.

“இல்லை, நீ சேலையில் இருப்பதால் ரொம்ப ரொம்ப செக்ஸியா இருக்க. நான் இங்கே இருந்தால் உன்னை ஏதாவது செய்துவிடுவேன். அதனால் திரும்பி போயிடுறேன்..” என்று சொல்ல்லிக்கொண்டே அவள் கன்னத்தில் தன் உதட்டைப்பதித்தான். அவன் முந்த்தங்களால் சந்தியா உடம்பில் என்னென்னவோ நடந்தது. அவள் பாதிக்கண்களை மூடி இருந்தாள். அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று யோசிக்கும்போது மறுபடியும் காலிங் பெல் அடித்தது. ரமேஷ் இன்னொரு முறை அவள் கழுத்தில் லேசாக முத்தமிட்டுவிட்டு மெதுவாக பின்னால் நகர்ந்தான்.

பெல் சத்தத்தால் சுயநினைவுக்கு வந்த சந்தியா, மெதுவாக வெளியே பார்த்தாள். அங்கே பக்கத்தில் வசிக்கும் ஒரு வயதான அமெரிக்க வெள்ளைக்காரப்பெண்மணி நின்று கொண்டு இருந்தார்.

சந்தியா கதவைத்திறது, "ஹாய் க்ரிஸ்டீன். எனி ப்ராப்ளம்?" என்றாள்.

“Pardon me, Sandhya, please, Can I borrow your jumper cable? My Car battery seems to be dead as I was away for a while. I have to go out shopping now”

“Sure, let me come down and get that for you. It is in my car” என்றாள் சந்தியா.

சந்தியா தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு அந்த அம்மாவுடன் நடந்து வெளியே போனாள்.

-தொடரும்

Tuesday, April 21, 2009

உளறலா? இல்லை ராஜதந்திரமா இது, கலைஞரே?!

முதல்வர் கலைஞர் கருணாநிதி, பிரபாகரனை மனிதாபிமான அடிப்படையில் "தன் நண்பர்" என்பதுபோல் சொல்லியுள்ளார். இது போல் அவர் சொன்னது, பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்போது அவர் சொன்னதை சரி செய்து திரும்ப வேறுமாதிரி சொல்கிறார் என்கிறார்கள்.

சிலர் நினைக்கிறார்கள் இது (இந்த ஸ்டேட்மெண்ட்), திரு. கருணாநிதியின் உளறல் என்று. அதாவது பிரபாகரனை அவர் நண்பர் என்று தேவை இல்லாமல் சொல்லியுள்ளார் என்று. இது காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டுபண்ணலாம்.

ஆனால்...

என்ன ஆனால்?

கவனித்துப்பார்த்தால் இது ஒரு கலைஞரின் ராஜதந்திரமாகக்கூட இருக்கலாம்.

* காங்கிரஸ் இதை எதிர்த்து அரசியல் செய்யும் நிலையில் இன்று இல்லை! அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

* இது நிச்சயம் ஈழத்தமிழர்களையும் ஈழத்தமிழர் அபிமானிகளையும் மறைமுகமாக திருப்திப்படுத்தித்தான் இருக்கும்- உளறலாக இருந்தால்கூட.

* ஈழத்தமிழர் பிரச்சினனயை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும், வை கோ வோ, ராமதாஸோ, ஜெயலலிதாவோ இதை வைத்து, இதை க்ரிடிசைஸ் செய்து அரசியல் செய்தால், விபரீதமாக முடிய வாய்ப்புள்ளது.

கவனமா இருங்கப்பா! ஒண்ணு கெடக்க ஒண்ணாகிடறப்போது! :-)))

Monday, April 20, 2009

சத்யராஜ்க்கு “ஹீரோ ரோல்” அஸ்தமித்துவிட்டதா?!



நடிகர் சத்யராஜ் சமீபத்தில் * பெரியார், * ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவருடைய நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. அப்படி இருந்தும் அதன்பிறகு அவர் தமிழ்ப்படத்தில் ஹீரோவாக நடித்து எதுவும் படம் வருவதுபோல் தெரியலை.

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து வில்லனாக நடித்து ஹீரோவாக வெற்றி வாகை சூடியவர் சத்யராஜ். இவர் ஒரு தலைசிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் பெற்றவர். அதன்பிறகு ஹீரோவாக ஆகி, ஹீரோவாகவும் நிறையப்படங்களில் நடித்து புகழ் உச்சியை அடைந்தார்.

அதென்னவோ தெரியலை, தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு திடீர்னு “ஹீரோ கரீயர்” முடிஞ்சிடும். அப்படி நெறைய நடிகர்களுக்கு முடிந்து உள்ளது. உதாரணம்: மோகன், கார்த்திக், அரவிந்த்சாமி மற்றும் பலர். இப்போது சத்யராஜ் படமே ரொம்ப நாள் வராததைப்பார்த்தால், அவர் தமிழ் சினிமா கதாநாயகனாக இனிமேல் நடிக்கமாட்டார் போல் தோனுது.

இப்போது சத்யராஜ் ஒரு மலையாளப்படத்தில் நடிக்கப்போவதாக பேசப்படுகிறது. நிச்சயம் இவருடைய திறமைக்கு தமிழ்ப்படங்களில் நிறைய வில்லன் ரோல்களில் நடிக்கச்சொல்லி போட்டிப் போட்டுக்கொண்டு கொடுப்பார்கள். ஆனால் இவருடைய “பெரிய ஈகோ” வால் இவர் அமரர் செய்சங்கர் போல் வில்லனாக இன்னொரு இன்னிங்ஸ்ல நடிக்க மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

புரட்சித்தமிழன் சத்யராஜ் நடிக்கப்போகும் மலையாளப்படத்தின் பெயர், Trigger ராம்! :-)))

Friday, April 17, 2009

ஜெயலலிதாவின் ஆபாச அரசியல் நடனம்!


ராஜிவ் காந்தி மரணத்தில் “சோல் பெனிஃபிஸியரி” (sole beneficiary) ஜெயலலிதாதான். ஈழப்பிரச்சினையை அரசியலாக்கி ஈழத்தமிழர்வாழ்வைப்பற்றி கவலையே படாமல் இரக்கமில்லாமல் அரசியல் செய்து முதல்வரானது இதே ஜெயலலிதா.

· இது எப்படி ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் ஈழ அபிமானிகளுக்கும் மறக்கும்?

· இன்று ஜெயலலிதா ஈழத்தமிழருக்காக போ ராடுவதும் அரசியல்தான்.

சரி ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி! யாரைவேணா விற்று பதவியைப்பிடிக்க தயங்க மாட்டார் என்று மரமண்டை தமிழர்களுக்கு புரியாதா?

****Jayalalitha, however, made her stand clear that her party would never support the armed struggle of the LTTE, because of its murky track record involving the killing of Rajiv Gandhi on Tamil Nadu soil.****

கருணாநிதி சொத்து சேர்ப்பது, பண அரசியல் செய்வது, சட்டம் ஒழுங்கை சரியாக பாதுகாக்காதது, ஈழப்பிரச்சினையில் காங்கிரஸை எதிர்த்து போராடாதது எல்லாம் உண்மைதான். நான் இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் ஈழத்தமிழர் நலனைப்பற்றி ஜெயலலிதாவும், ஈழத்தமிழர்கள் படுகொலை நடக்கும்போதும் நேற்றுவரை காங்கிரஸ் ஆட்சியில் பதவி அனுபவித்த அன்புமணி ராமதாஸும் ஈழத்தமிழர்களுக்காக போராடப்போகிறார்கள் என்று நம்பும் தமிழர்கள் இருந்தால், தமிழர்கள்தான் முட்டாள்களில் #1 என்பேன் நான்.

ஈழத்தமிழர்கள் பிரச்சினையை பயன்படுத்தும் ஜெயலலிதாவின் அரசியல் யுக்தி, ஜெயலலிதாவின் ஒரு அசிங்கமான ஆபாச அரசியல் நடனம்!

Thursday, April 16, 2009

சாவுகிராக்கி!

அந்த மெடிக்கல் ஷாப்க்கு மூர்த்தி போகும்போது மணி ஈவெனிங் 6:30 இருக்கும். தன் பைக்கை முன்னால் நிறுத்திவிட்டு, அந்த கடைக்குச் செல்லும்போது அங்கே ஒரே பழைய சேலைகட்டிய ஒரு அம்மா தன் பிள்ளையை தோளில் போட்டுக்கொண்டு ஒரு சீட்டை அந்த கடைக்காரனிடம் கொடுத்தாள். அந்த அம்மா வாங்கி போகட்டும் என்று அமைதியாக நின்றான்,மூர்த்தி.

கடைக்காரனுக்கும் அவளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் அவனுக்கு புரிந்தது இதுதான். அந்த காகிதத்தில் உள்ள “ப்ரிஸ்க்ரிப்ஷன்”க்கு தேவையான பணம் ரூ 800. ஆனால் தமிழ் தெரியாத அந்த கடை முதலாளியிடம் அவள் கொடுத்த பணமோ ரூ 200. காய்கறி கடையில் பேரம் பேசுவதுபோல், “இந்தப்பணத்திற்கு கொடுங்க” “என்னிடம் வேறபணம் இல்லை” என்று தமிழிலேயே பேசுகிறாள் அந்த கடைக்காரனிடம்.

அவளைப்பார்த்தால் ஏதோ சித்தாள் வேலை, அல்லது கூலிவேலை பார்க்கும் தமிழ் பேசும் ஏழைத்தாய் என்று தெளிவாக தெரிந்தது. "அந்த சீட்டில் என்ன எழுதி இருக்கிறது?", "அதற்கு எவ்வளவு காசு ஆகும்?" என்று அவளுக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை. கணவன் இருக்கிறானோ இல்லை இன்னும் உழைத்துக்கொண்டு இருக்கானோ தெரியவில்லை. பெங்களூரில் போய் உழைத்து பிழைக்க சென்ற ஏழைத்தமிழச்சிகளில் அவளும் ஒருத்தி.

கடைக்காரன் ஒரு வட மாநிலத்தவனோ, அல்லது கன்னடிகாவோ தெரியவில்லை, பார்த்தால் தமிழனாகத் தெரியவில்லை. இந்த அம்மாவை என்ன செய்வது, அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் முழிக்கிறான். அவனுக்கு என்னவோ அவளைப்பார்த்தாலே எரிச்சலும் கோபமும்தான் வருகிறது. அவன் பாஷையில் இதெல்லாமவனுக்கு “சாவுகிராக்கி”!

கடைக்கு வந்து காத்திருக்கும் மூர்த்திக்கு மறுபடியும் ஒரு வரவேற்பு புன்னகை இட்டுவிட்டு, அந்த அம்மாவை விரட்டுகிறான் அவன். இந்தக்காசுக்கு அந்த மருந்தை கொடுக்க முடியாது என்று அரைகுறைத்தமிழில்.

இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, அந்த தமிழ் அம்மாவிடம் “என்ன சீட் இங்கே தாங்க பார்ப்போம்?” என்றான்.

தமிழில் பேசியதும், உடனே அதை அவனிடம் கொடுத்தாள். அது ஒரு டாக்டர் எழுதிக்கொடுத்த "ப்ரிஸ்க்ரிப்ஷன்" என்று விளங்கியது.

“டாக்டர் இந்த மருந்து சாப்பிடனும்னு சொல்றார்” என்றாள் அவள் தமிழில்.

கடைக்காரனும், அவன் நிலைமையை ஆங்கிலத்தில் மூர்த்தியிடம் சொன்னான். மூர்த்திக்கு நிலைமை புரிந்தது. அவளால் ரூ 800 இப்போ கொடுக்க முடியாது என்றும், இந்த 200 ரூபாயே எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரித்தாளோ என்று.

மூர்த்தி கடைக்காரனிடம் திரும்பி, “Please give that medicine and get the whatever money she gives you, I will pay you the rest” என்றான். அவனுக்கு கோயில் உண்டியலில் எல்லாம் பணம் போடும் பழக்கமில்லை. பிச்சைக்காரகளுக்கும் பணம் கொடுக்கும் வழக்கமும் இல்லை.

மூர்த்தி சொன்னதும், கடைக்காரன், ஒரு வினாடி மூர்த்தியை ஒரு மாதிரியாகப் பார்த்தான். ஆனால் உடனே புன்னகையுடன் மறுபேச்சில்லாமல், அந்த மருத்து மாத்திரைகளை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டான். அவளுக்கு மூர்த்தி என்ன சொன்னான் என்று கூட சரியாகப்புரியவில்லை. மருந்தை வாங்கிக்கொண்டு நன்றியுடன் அவள் புறப்பட்டாள். அவள் முகத்தில் ஏற்பட்ட “சிறிய மகிழ்ச்சி” இன்றும் மூர்த்தியால் மறக்கமுடியாது.

மூர்த்தி, அவன் வாங்க வந்த மருந்துகளை வாங்கிவிட்டு, அந்த 600 வையும் சேர்த்து கொடுத்துவிட்டு நகர்ந்தான். அவனுக்கு அந்த ரூ600 ஒண்ணுமே இல்லாத சாதாரண ஒரு பணம். இதுபோல் சிறு உதவியை மனிதாபிமானம் என்று நம்பினான். ஆனால் அந்த ஏழைத்தாய்க்கு? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வது இவள் போல் ஏழைகளுக்குத்தான் நன்றாகப் பொருந்தும் என்று நினைத்துக்கொண்டான். மூர்த்திக்கு கடைக்காரன்மேல் தவறாக எதுவும் தோனவில்லை. அவன் ஒரு வியாபாரி. பரோபகாரி இல்லை. ஏழைகளை பார்த்து பார்த்து “டயர்டாகி” விட்டானோ என்னவோ பாவம் என்று நினைத்தான் மூர்த்தி.

Wednesday, April 15, 2009

எஸ் எஸ் சந்திரனுக்கு இதய வலி-போட்டியாளர் மாற்றம்!



மத்திய சென்னையில் திரு. தயாநிதிமாறனுக்கு எதிராக எஸ் எஸ் சந்திரன் அ இ அ தி மு கழகத்தின் வேட்பாளராக போட்டி போட இருந்தார்.

அவருக்கு இதயவலி வந்ததால், தேர்தல் டென்ஷன் அவருக்கு உடல்நலகுறைவை உண்டு பண்ணும், மற்றும் உயிருக்கே ஆபத்து வரலாம் என்று வேறு வேட்பாளரை நிறுத்தவுள்ளார்கள்.

இந்த மாற்றத்தின்படி தயாநிதிமாறனை எதிர்த்து போட்டி இடப்போவது, எஸ் எம் கே. முகம்மது அலி ஜென்னா என்பவர் ஆவார்.

Monday, April 13, 2009

தமிழின துரோகிகள் பலவகை!


நல்லவேளை ப சிதம்பரம் ஒரு பார்ப்பனரல்ல! நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பை சேர்ந்தவர். இவர் பார்ப்பனராக இருந்து இருந்தால், இதைவிட 10 மடங்கு இவர்மேல் இழிமொழிகள் வரும்.

தமிழன் தமிழன் என்று அடிச்சுக்கிறவன், ஒரு சீக்கியர் தமிழனை செருப்பை தூக்கி தாக்குவதை ரசிப்பானா?

நமக்குள் 1000 பிரச்சினை இருக்கலாம், என்ன இருந்தாலும் சிதம்பரம் ஒரு தமிழ்நாட்டில் பிறந்த தமிழன்.

அவரை செருப்பால் அடிக்க முயற்சித்ததை பார்த்து ரசிப்பவனை தமிழின துரோகி என்கலாமா?

கூடாதா? ஏன் கூடாது?

தமிழ், தமிழினப்பற்று, தமிழ் துரோகிகள் போன்றவைகள் எப்போதுமே விவாதத்திற்குரிய ஒரு சப்ஜெக்ட்தான்.

என்னைக்கேட்டால் தமிழன் ப. சிதம்பரத்தை செருப்பால் அடிப்பதை பார்த்து ரசிக்கும் ஒரு சில "தமிழ் பற்றாளர்களும்" தமிழின துரோகிகள் தான்!

வைகோவை எதிர்த்து காங்கிரஸ் வெற்றி பெற முடியுமா?!


விருதுநகரில், வை கோபால்சாமி போட்டியிடுகிறார். கம்மா நாய்டு அல்லது நாயக்கர் வகுப்பை சேர்ந்தவர் இவர். இந்த தொகுதியில் நாயக்கர்கள் வாக்கு கனிசமாக உள்ளது. அது போக, மறவர்கள், நாடார்கள், தலித் ஓட்டுக்கள் கனிசமாக உள்ள எம் பி தொகுதி இது.

இவரை எதிர்த்து தி மு க போட்டிக்கு (தற்போது அது காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட தொகுதி) ஒரு ஸ்ட்ராங்க் கேண்டிடேட்டை நிறுத்தலாம் என்கிற வதந்தி நிலவுகிறது. ஆனால் அது நடக்கப்போவதில்லை.

வை கோபால்சாமி, அனேகமாக காங்கிரஸ் வேட்பாளரைத்தான் எதிர்ப்பார். இதுவரை காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று நம்புகிறேன். அப்படி வரும்போது, ஈழத் தமிழர்கள் பிரச்சினையை பெரிது படுத்தப்பார்ப்பார். அது தவிர வேறு எப்படி அம்மாவுடன் சேர்ந்து ஒத்து ஊதப்போகிறார் என்பது தெரியவில்லை.

விருதுநகர் தொகுதி இப்போதைக்கு, வை கோ வெற்றி பெற வாய்ப்பு உள்ள ஒரு தொகுதி போல்தான் உள்ளது. ஆனால் காங்கிரஸ் மோகம் என்பது லோக் சபா எலெக்ஷனில் ரொம்ப சாதாரணம். காங்கிரஸ் ஒரு ஸ்ட்ராங் கேண்டிடேட் நிறுத்தினால், வை கோ கண்னில் விரலை விட்டு ஆட்டலாம்.

இதில் பரிதாபம் என்னவென்றால் ஈழத்தமிழர் பிரச்சினைதான் இந்த தேர்தலில் எல்லோரும் பயன்படுத்துகிற ஒரு "அரசியல் ஆயுதம்".

என்னைப்பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களின் கண்ணீரை அரசியலுக்காக பயன்படுத்துகிற எவனுமே ஒரு கேவலமான தமிழன்.

தமிழ் ஈழம் பொறுத்தவரையில் இதுவரை தமிநாட்டில் உள்ள எந்த அரசியல்வாதியாலும் ஒண்ணும் கிழிக்க முடியலை என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் மனசாட்சியுள்ள தமிழ் அரசியல்வாதிகள் இதைப்பற்றி பேசாமலாவது விடலாம்! ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்கப்பாடுவதாக சொல்லி இதில் அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்க வேண்டிய ஒன்று.

Sunday, April 12, 2009

கடற்கொள்ளைகாரர்கள்! ஹீரோக்களா?




கடற்கொள்ளைக்காரர்கள் என்பது சினிமாவிலும் கதைகளிலும் படிப்பது போலில்லாமல் இப்போது உண்மையிலேயே நடக்குது. கடற்கொள்ளை நடக்கும் இடம் மேலே உள்ள வரைபடத்தில் உள்ளது. ஏழை நாடுகளான சொமாளியா நாட்டை சேர்ந்தவர்கள் இதில் பெரிய ஹீரோக்களாக இருக்கிறார்கள்.



ஒரு கப்பலை பிடித்து அது அவர்கள் வசமாக ஆனதும் எப்படி ரேன்சம் தொகையை பெறுவார்கள்?

என்ன சொல்றாங்கனா, ஹைஜாக் பண்ணியவுடன், இவர்களுக்கு ரான்சம் தொகையை பெற்றுத்தர, இவர்கள் ஒரு மிடில்மேனை ஹயர் பண்ணுவாங்களாம். அந்த மிடில்மேன் தான் இந்த பேரம் பேசுவது என்கிறார்கள். அந்த மிடில்மேன் க்கும் கொள்ளைப்பணத்தில் ஒரு பங்கு உண்டாம்.

பொதுவாக, பணமாகத்தான் அந்த பணயத்தொகையை பெறுவார்களாம். நான் கூட தங்கமாக பெறுவார்களோ என்று யோசித்தேன். $50 மற்றும் $100 டாலராக கொண்டு வந்து கொடுக்கச்சொல்வார்களாம். பணத்தை எண்ணுவதற்கான மெஷின் வைத்து இருப்பாங்களாம். அதோடு கள்ள நோட்டா என்று கண்டுபிடிக்கும் மெஷினும் வைத்திருப்பாங்களாம்.

21ம் நூற்றாண்டில் இருக்கிறோம். ஆனால் கடல்கொள்ளைக்காரர்களை இன்னும் ஒழிக்க முடியவில்லை. கப்பலை ஹைஜாக் பண்ணி இவர்கள் பெறும் பணம் வருடத்திற்கு $100 மில்லியனுக்கு மேலாம்!

யாரை யாரையோ ஹீரோ என்கிறோம். இவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் போல தோனுது!

Saturday, April 11, 2009

Unforgiven(A)-மன்னிப்பே கிடையாது! (முடிவு)


லிட்டில் பில், சரியாக இடதுமார்பில் குண்டு துளைக்கப்பட்டு கீழே கிடப்பான். அவனை சுற்றி அவன் டெபுட்டி நான்கு பேர் சாக/செத்தும் கிடப்பார்கள். அதில் ஒரு குண்டான டெபுட்டி, அந்த எழுத்தாளன் மேலே விழுந்து கிடப்பான்.

எல்லோரும் ஒடிவிடுவார்கள்- உயிரோடு இருக்கும் சார்லி என்கிற டெபுட்டியும் வெளியே ஓடிவிடுவான். அப்போ, அந்த எழுத்தாளன் கீழே இருந்து எழுந்திரிப்பான்,

“என்னை சுட்டுட்ட, என்னை சுட்டுட்ட” என்றான் தன் மேல் உள்ள ரத்தத்தை பார்த்து அழுதுகொண்டே எந்திரிப்பான்.

“உன் மேலே குண்டு படல” என்பான் வில் மன்னி தன் ரிவால்வாரை அவனை நோக்கி பாயிண்ட் பண்ணி.

“என்னிடம் துப்பாக்கி இல்லை. தயவு செய்து என்னை சுடாதே!"

“அந்த ரைஃபிலை எடு” என்பான் வில் மன்னி

"நான் ஒரு எழுத்தாளன்” என்பான்.

"கடிதம் எழுதுவியா?"

"இல்லை புத்தகங்கள்!" என்பான்

“அந்த ரைஃபிலை எடுத்து என்னிடம் தா”

“நீ ஐந்து பேரை கொன்னுட்ட! நீ ஒரே ஆளு” என்று சொல்லிக்கொண்டே அவனிடன் ரைஃபிலை எடுத்துக்கொடுப்பான்.

மரணக்காயங்களுடன் கிடக்கும் லிட்டில் பில் இதை வேடிக்கை பார்ப்பான். இப்போ அந்த எழுத்தாளன் ஹீரோ வில்லியம் மன்னி ஆகி இருப்பான்!

“yeah” என்பான் வில் மன்னி.

“யாரை முதல்ல கொன்ன?”

“என்ன?!!” எரிச்சலுடன் கேட்பான் வில் மன்னி.


“இல்லை, திறமையான கன் ஃபைட்டர்ஸ் உடைய பெஸ்ட் ஷாட் முதல் ஷாட்டாகத்தான் இருக்கும்னு லிட்டில் பில் சொன்னான். நீ அவனை கொன்னுட்ட. நீ அவனைத்தான் முதல்ல சுட்ட இல்லையா?” என்பான்.

“ஐ ஆம் அல்வேஸ் லக்கி” என்பான் வில் மன்னி.

“ரெண்டாவது யாரை சுட்ட?” என்பான்.

வில் மன்னி எரிச்சலாகி, “ஐ கென் ஒன்லி டெல் ஹு இஸ் கோயிங் டு பி லாஸ்ட்?” என்று அவனை நோக்கி துப்பாக்கியை காட்டுவான். Meaning, he will kill him if he keeps talking/annoying like this!

அதோடு, அந்த எழுத்தாளன் வெளியே நடந்து போயிடுவான். William Munny wont fall for his compliments or anything. He just has finished what he has to and want to get back home. So, his hero-worshipping wont please him or anything. He will just say I AM LUCKY that I am alive and they are dead. That is all.

அந்த எழுத்தாளன் வெளியே போனதும், வில் மன்னி மறுபடியும் ரைஃபிலை லோட் பண்ணிட்டு கொஞ்சம் விஷ்கியை ஊற்றி குடிப்பான்.

அந்த நேரத்தில் மரணக்காயங்களுடன் இருக்கும் லிட்டில் பில் தன் ரிவால்வாரை வைத்து வில் மன்னியை சுட பாயிண்ட் பண்ணப்போவான். வில் மன்னி தன் ரைபிலை வைத்து அவன் ரிவால்வாரை தட்டிவிட்டு விட்டு, அவன் அருகில் போவான். தன்னுடைய துப்பாக்கியை அவன் கழுத்தில் க்ளோஸாக வைத்து ட்ரிகரை “காக்” பண்ணுவான்.



இந்த நேரத்தில் சாகக்கிடக்கும் லிட்டில் பில் சொல்லுவான்.



“நான் ஒரு வீடு கட்டிக்கொண்டு இருந்தேன். I don't deserve to die like this”

“Deserve got nothing to do with it” என்பான் வில்லியம் மன்னி.

“See you in Hell, William Munny” என்பான் லிட்டில் பில்- வில் மன்னி சுடப்போகும் குண்டை வாங்க தயாராகிக்கொண்டு.

“Yeah” என்று எந்தவித இரக்கமும் இல்லாமல் சுட்டு கொல்லுவான் வில் மன்னி.

It is interesting to note that Little Bill hated Assassins all his life. He said that to the writer “I hate assassins and that assassins are low characters” not long ago. Now that Little Bill himself finally gets killed by an Assassin for his brutality and for his dictatorship! Yeah, it is not fair that an assassin is killing him. God is not fair either lots of times or not?

அங்கே அரைகுறையாக இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு சில டெபுட்டிகளையும் சுட்டு கொன்னுட்டு வெளியே வர தயாராவான், வில் மன்னி. அவனுக்குத்தெரியும் எல்லோரும் மிரண்டு போய் இருக்கிறார்கள் என்று. அவர்களை மிரட்டியே இங்கிருந்து தப்பிக்கனும் என்று முடிவு செய்வான்.

“நான் இப்போ வெளியே வரேன். எவனாவது என் மேலே சுட முயற்சி செய்த உன்னை மட்டுமல்ல, உன் குடும்பம், நண்பர்கள் யாரையும் உயிரோட விடமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே வெளியே வருவான்.

லிட்டில் பில் மற்றும் 4 டெப்டிகள் செத்துட்டானுக, என்கிற சூழலில் யாருக்கும் அவனை சுட தைரியம் இருக்காது.

வெளியே வந்து, தன் குதிரையை அவிழ்த்துவிட்டு தன் நண்பன் நெட் லோகனுடைய பாடியை பார்ப்பான்.

“என் நண்பனை ஒழுங்கா மரியாதையா புதைத்து விடுங்கள். இனிமேல் எந்த விலைமாதையும் குத்துறது வெட்றது என்பதெல்லாம் செய்யாதே! அப்படி ஏதாவது செய்தால் நான் திரும்ப வந்து உங்க எல்லோரையும் கொல்லுவேன்” என்று சொல்லிவிட்டு குதிரையில் ஏறி போவான்.

அவனை பயத்துடன் ஊரே வேடிக்கை பார்க்கும். விலைமாதுகள் அவனை நன்றியுடன் பார்ப்பார்கள். அந்த் எழுத்தாளன் இந்த அதிசயத்தை கண்கூடாக பார்த்து தன் கதையை எழுதி முடிக்க தயாராவான்.

வில் மன்னி, மிசவ்ரிக்கு திரும்பி வந்து தன் மனைவி புதைபட்ட இடத்தில் அவளுக்கு ஒரு மலர் வளையம் வைத்துவிட்டு அந்த ஊரை காலி செய்து குழ்ந்தைகளுடன் வேறு ஊருக்கு போய்விடுவான்.

கடைசிப்பகுதி இந்த யு-ட்யுப் க்ளிப்ல இருக்கு!

http://www.youtube.com/watch?v=5SO5VO2ixWY



அவ்வளவுதான் :-)))))

Friday, April 10, 2009

Unforgiven (A)-மன்னிப்பே கிடையாது! (4)



மேலே படத்தில், பாதிக்கப்பட்ட விலைமாது டெலைலியா மற்றும் விலைமாது ஸ்ட்ராபெர்ரி


ஐந்து நாட்கள் வைரல் ஃபீவருக்கு அப்புறம் வில்லியம் மன்னி பிழைத்துவிடுவார்! ஜுரம் சரியாகி முழிக்கும்போது, பார்ட்னர்கள், நெட் லோகன் மற்றும் ஸ்கோஃபீல்ட் கிட் இருவரும் இருக்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட அந்த விலைமாது, முகத்தில் கீறல்களுடன் அருகில் வில் மன்னி அருகில் இருப்பாள். வில்லியம் மன்னிக்கு சாப்பாடு கொடுப்பாள். சாப்பிட்டுவிட்டு, வில்லியம் மன்னி ப்ரெண்ட்ஸ் ரெண்டுபேரும் எங்கேனு கேட்பார். அவர்கள் அந்த கவ்பாய்ஸ் ரெண்டு பேரையும் தேடிப் போயிருக்காங்க என்பாள்.

அவள் அஹோர முகத்தை பார்த்துவிட்டு,

"உன்னைதான் வெட்டி கீறினார்களா?" என்பார் வில் மன்னி.

"ஆமா" என்பாள் கவலையுடன்.

" உன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் பேமெண்ட்ல அட்வாண்ஸ் வாங்கிக்கொள்கிறார்கள்.
காசு கொடுக்காமல் எங்களிடம் செக்ஸ் வச்சிக்கிறாங்க" என்பாள்.

"அப்படியா?"

"உனக்கு ஃப்ரீயா வேணுமா?" என்பாள்

"உன்னோடவா? வேணாம்!" என்பார் வில் மன்னி.

அவள் கீறுபட்டு இருப்பாதால் அப்படி சொல்வதாக நினைத்துக்கொண்டு "நான் என்னிடம்னு சொல்லல. மற்ற விலைமாதுகளிடம் நீங்க வச்சுக்கலாம்" என்பாள் ஒரு காம்ப்ளெக்ஸுடன்.

வில் மன்னி சொல்வார், "நீ இப்படி வெட்டுப்பட்டு இருப்பதால் நான் அப்படி சொல்லவில்லை. என் மனைவியால் விலைமாதிடம் என்னால் போகமுடியாது. If I wish to have sex I would certainly have with you than other two girls. You are a beautiful women and you just ahve scars" என்பார்.

"I admire you for being truthful to wife and all. I know lots of men who are not like you!"

"I suppose"

"Your wife is back in Kansas?"

"yeah, she is watching over the younger ones"

The way he says seem as if his wife is alive and taking care of the children in Kansas. He will sound like an excellent human being for her.

"இந்தாங்க உங்களுடைய தொப்பி. நீங்க க்ரீலிஸ்ல விட்டு வந்துட்டீங்க" என்று வில் மன்னியிடம் அவன் தொப்பியை கொடுப்பாள்.

"அந்த செரீஃப், பெரிய முரடன் அவன், அடி அடினு அடிச்சே என்னை கொல்லப்பார்த்தான். இன்னும் என்னை தேடிக்கிட்டு இருக்கானா?"

"லிட்டில் பில்? இல்லை, நீங்க பயந்துகொண்டு திரும்பி போயிட்டதாக நினைக்கிறான்" என்பாள்.

"Are you really gointg to kill those cowboys?" க்யூரியஸா கேட்பாள்.

"I guess so. Still the payment coming. right?"

"yeah".

இதுவரைக்கும், வில்லியம் மன்னி ஒரு நல்ல "வைஸ் மேன்" ஆகத்தான் தெரிவார். ஒரு கொலைகாரன், அயோக்கியன் என்பது இதுவரை தோனாது. He will not take the sherif's brutal beating personally either. He will let it go. All he cares now is the money and killing those two guys and get the money, go back. He does not care about anything. He gets into business now!


முதல் கொலை (டேவி):

டேவி என்கிற அந்த இளைஞன் நண்பர்களுடன் ஒரு குன்றுப்பகுதியில் குதிரையில் ரைட் பண்ணி விளையாண்டு கொண்டு இருப்பான். பக்கத்தில் உள்ள குன்றுகளில் இவர்கள் மூவரும் மறைந்து நின்று அவனை சுட முயல்வார்கள். முதலில் "நெட் லோகன்" தன் ஸ்பென்ஸர் ரைஃபிலை வைத்து அவனை சுடுவார். அந்தப்பையனின் குதிரையில் குண்டு பட்டு குதிரை கீழே சாய்ந்து விழும். அது விழும்போது டேவியின் கால் குதிரைக்கும் தரைக்கும் இடையில் மாட்டி அவன் கால் உடைந்துவிடும். சுடுவதிலிருது தப்பிக்க அவனால் குன்றுகளின் மறைவுக்கு ஓடிப் போகமுடியாது. நண்பர்கள் எல்லாம் சுடுகிற சத்தம் கேட்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள். டேவி கால் உடைந்து தைரில் இருப்பான்.

இப்போ இதெல்லாம் தூரத்தில் நடப்பதால் ஷாட்-ஷைட்டெட் ஸ்கோஃபீல்ட் கிட்-க்கு ஒரு மண்ணும் விளங்காது. என்ன நடக்குது? அவன் செத்துட்டானா? சுட்டுட்டியா? னு கேட்பான்.

நெட் லோகனுக்கு அவனை சுட்டுக்கொல்ல மனசு வராது. தயங்குவான். "

அவன் மலைக்குன்றுகளில் மறையும் முன்னால அவனை முடிக்கனும், “நெட்”" என்பான் வில் மன்னி.

“நெட்” ர¨ஃபிலை வில் மன்னியிடம் கொடுத்துவிடுவான்- நீ சுடு என்பதுபோல். வில் மன்னி இரண்டு குண்டு மிஸ் பண்ணிய பிறகு கடைசி ஷாட்ல அவனை சரியாக வயிற்றில் சுடுவான். அவன் அந்தக்காயத்தில் செத்துவிடுவான்.

இந்த கொலை செய்துவிட்டு திரும்பி வரும்போது நெட் லோகன் ஒரு மாதிரியாகிவிடுவான். அவனுக்கு திடீர்னு பெரிய கில்ட்டி ஃபீலிங்/பயம் வந்துவிடும்.

டேவியை கொன்னுட்டு அடுத்தவனை எப்படி கொல்வதுனு ப்ளான் பண்ணும்போது, நெட் சொல்லுவான், "நான் திரும்பிப்போறேன்" என்று.

வில் மன்னி சொல்லுவான், "நெட்" நீ இங்கேயே இரு, அவனையும் சுட்டுட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சீக்கிரம் போயிடுவோம் என்று. ஆனால் நெட், வில் சொல்வதை கேட்காமல் புறப்பட்டு திரும்பி போவான். அவன் ஸ்பென்சர் ரைஃபிலை வில் மன்னிக்கு வேணுமானு கேட்பான். வில் மன்னி வேணாம். நான் உன் ஷேரை கொண்டு வறேன் என்று அனுப்பிப்வைப்பான்.

நெட் லோகன் மாட்டிக்குவார் (செரீஃப்பால் கொல்லப்படுவார்):

நெட் திரும்பிப்போகும்போது, அவனை சில ஃபார்ம் வொர்க்கர்ஸ் அடையாளம் கண்டு பிடித்து கொண்டுவந்து லிட்டில் பில்லிடம் கொண்டுவருவார்கள். லிட்டில் பில் நெட் லோகனை சித்ரவதை செய்து ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருடைய பெயர், ஊர் பற்றி கேட்பார். நெட் லோகன் உண்மையை சொல்லாமல் பொய் பெயர் விலாசம் சொல்லி சமாளிப்பான். ஆனால் அவனை விசாரிக்கும்போது அருகில் அந்த கதை எழுதுகிறவன் நோட்ஸ் எடுப்பார். அதில் அவன் சொல்லும் பெயர்கள் முன் பின் முரணாக இருப்பதை காட்டுவான். உடனே லிட்டில் பில் நெட் சொல்றது பொய்கள் என்று புரிந்து கொள்வான். அவனை இன்னும் சித்ரவதை பண்ணுவார் செரீஃப்.

இரண்டாவது கொலை (க்விக் மைக்):

நெட் மாட்டியது வில் மன்னிக்கும், கிட் க்கும் தெரியாது. அவர்கள் க்யிக் மைக்கை கொல்ல ஆயத்தமாகி காத்திருப்பார்கள். க்விக் மைக் நண்பர்களுடன், டெபுட்டியின் பாதுகாப்பில் இருப்பார். அப்போது அவன் எப்போ வெளியே வருவான் என்று வில் மன்னியும், கிட் டும் காத்திருப்பாங்க. அவன் வெளியில் உள்ள டாய்லெட் போவதற்காக் தனியாக வெளியே வருவான். ஒரு டாய்லெட் உள்ளே நுழைந்ததும், வில் மன்னி, கிட் இடம் சொல்லி அவனை சுட சொல்லுவான். கிட் அவன் அருகில் சென்று டாய்லெட்லயே வைத்து சுட்டு க்விக் மைக்கை சுட்டுக் கொல்லுவான். சுட்டுவிட்டு உடனே இருவரும் குதிரையில் ஏறி பறந்துவிடுவார்கள்.

இதுதான் கிட் செய்யும் முதல் கொலை என்பதால் கொலை செய்துவிட்டு அவனால் அதை ஜீரனிக்க முடியாது. பயங்கர கில்ட்டி ஃபீலிங்குடன் இருப்பான். நிறைய குடிப்பான்.

நெட் லோகன் மற்றும் கிட் இருவருமே கொலை செய்ததால் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணுவார்கள். வில் மன்னிதான் எதுக்குமே கலங்க மாட்டான்.

அந்த நேரத்தில் அவர்கள் சொன்னபடி சரியாக $1000 கொண்டுவந்து ஒரு விலை மாது அவர்களிடம் கொடுப்பாள். கொடுத்ததும் பணத்தை 3 ஷேரா பிரி என்பார் வில் மன்னி. நெட் ஷேரை நான் கொண்டு போய் கொடுக்கிறேன் என்பான் வில் மன்னி.

அதைக்கவனித்த விலைமாது, நெட் இறந்துவிட்டதாகவும், அது அவர்களுக்கு தெரியும் என்று நினைத்ததாகவும் சொல்லுவாள். அது மட்டுமில்லாமல், அவன் "பாடி"யை க்ரீலிஸ் முன்னால் வைத்து “அசாஸின்களுக்கு இதுதான் இங்கு நடக்கும்” என்று அவன் மேல் ஒரு “சைன்” வைத்து இருப்பதாகவும் சொல்லுவாள்.

இந்த இடத்தில் வில் மன்னி பயங்கர கடுப்பாகிவிடுவான். இதுவரை அவன் பணத்துக்காக கொலை செய்துவிட்டு போவதாக இருப்பான். செரீஃப் அவனை அடித்ததை எல்லாம்பற்றி கவலையே படமாட்டான். ஆனால் இப்போ தன் நண்பன் "நெட் லோகனை" லிட்டில் பில் கொன்னுட்டதாக சொன்னதும் பயங்கர கோபம் வந்துவிடும். அதுவும் அவன் மேலே ஒரு “சைன்” வைத்து இருப்பதை கேட்டதும் வெறியே வந்துவிடும்.

இதுவரை குடிக்காமல் இருந்த வில்லியம் மன்னி, கிட் இடம் இருந்த விஷ்கியை வாங்கி குடிப்பான். பிறகு அந்த விலைமாதிடம் என்ன நடந்ததுனு தெளிவாக கேட்பான்.

அவள் சொல்லுவாள், "நெட் டை ஒரு சில ஃபார்ம் வொர்க்கர்ஸ் பிடிச்சிட்டு வந்தாங்க. அவனை அடிச்சு நீங்க யாருனு விசாரித்தான் லிட்டில் பில். முதலில் நெட் எதையுமே சொல்லவில்லை ஆனால் நீங்க க்யிக் மைக்கை கொன்னவுடன், அதிஅ கேள்விப்பட்ட லிட்டில் பில் அவனை ரொம்ப சித்ரவதை பண்ணியதும், அவன் உங்களைப்பற்ரி உண்மையைச் சொன்னான், நீங்க வில்லியம் மன்னி என்றும், மிசவ்ரியிலிருந்து வருகிறீங்க என்றும், நீங்க ரொம்ப மோசமான கொலைகாரர் என்றும், நெட்டை லிட்டில் பில் கொன்னால், நீ நிச்சயம் திரும்பி வந்து லிட்டில் பில்லை கொன்னுடுவ என்றும் சொன்னான். லிட்டில் பில் சிதரவைதிலேயே அவன் செத்துட்டான்"

“என்னைப்பற்றி உண்மை தெரிஞ்சதும் அதைக்கேட்டு லிட்டில் பில் பயந்தானா?”

“இல்லை” என்பாள்.

“நெட் லோகன் யாரையும் கொல்லவில்லை. நம்ம ரெண்டு பேரும் செய்த கொலைகளுக்கு அவனை கொன்னுருக்கான் லிட்டில் பில்” என்பால் கிட் டை பார்த்து.

பிறகு, "உன்னுடைய ஸ்கோஃபீல்ட் ரிவால்வாரை கொடு!" என்பான்.

"எதுக்கு வில்?"

"என்னிடம் கொடு" என்பான் கோபமாக.

"கிட்" பயந்துகொண்டு அதை அவனிடம் கொடுப்பான்.

“நீ லிட்டில் பில்லை கொல்லப்போறியா? நான் உன்னை மாதிரி இல்லை, வில். நான் இனிமேல் நான் யாரையும் கொல்ல மாட்டேன்” என்பான் கிட்.

வில் மன்னி, "நீ திரும்பி போ மிஸ்" என்று விலைமாதை அனுப்பிவிட்டு,

“நீ ஒண்ணும் பயப்படாதே கிட்! நான் சொல்வதுபடி நீ கேட்கவில்லையென்றாலும் நான் உன்னை கொல்ல மாட்டேன். நீ ஒரு நண்பந்தான் எனக்கு இருக்க” என்பான் வில் மன்னி. பயந்து போய் இருக்கும் கிட் இடம் பணத்தை கொடுத்து, நீ என் ஷேரையும், நெட் ஷேரை என் வீட்டில் கொடுத்துவிடுனு சொல்லுவார் மன்னி. அவனிடம் இருந்து ஸ்கோஃபீல்ட் ரிவால்வாரை வாங்கிக்கொள்வான் வில் மன்னி.

விஷ்கியை எல்லாம் குடித்துவிட்டு, கிட் டை சவுத் நோக்கி அனுப்பிவிட்டதனியாக நேர சலூனுக்கு வருவான் வில்லியம் மன்னி.

அந்த சலூன் முன்னால “நெட் லோகன்” பிணத்தை ஒரு சவப்பெட்டியில் வைத்து இருப்பார்கள்.



அவன் மேலே “திஸ் இஸ் வாட் ஹேப்பன்ஸ் டு அசாஸின்ஸ்” அப்ப்டினு ஒரு சைன் வச்சிருப்பாங்க.



வில் மன்னி நண்பனின் அந்த கோலத்தை பார்த்துவிட்டு உள்ளே நுழைவான்


ஆனால், அவன் வருகையை யாருமே எதிர்பார்க்க மாட்டாங்க. அவர்கள் அனைவரும் லிட்டில் பில் தலைமையில் இவர்கள் இருவரையும் எப்படி துரத்திபோய்ப் பிடிப்பது என்று ப்ளான் போட்டுக்கொண்டு இருப்பார்கள். அதாவது அடுத்த நாள் காலையில் புறப்பட்டு போய் அவர்களை பிடிப்பதாக பேசிக் கொண்டு இருக்கும் போது, வில் மன்னி தன்னுடைய ஷாட் கன்னை காக் செய்கிற சத்தம் கேக்கும்.

எல்லோரும் திரும்பிப்பார்ப்பார்கள். அங்கே தனியாக தன்னுடைய “ஷாட் கன்” துப்பாக்கியை லிட்டில்பில்லை நோக்கி பாயிண்ட் பண்ணி நிற்பான், வில்லியம் மன்னி.



விலைமாதுகள், அந்த எழுத்தாளர், டெபுட்டிகள் எல்லோருமே ஷாக் ஆயிடுவாங்க! எழுத்தாளனுக்கு ஒரே சந்தோஷமாகவும் ஆகும். உள்ளே நுழைந்தவுடன் வில் மன்னி, லிட்டில் பில்லை நோக்கித்தான் தூப்பாக்கியை பாயிண்ட்பண்னி பிடித்து இருப்பான்.

“சலூனுக்கு சொந்தக்காரன் யாரு?” என்பான் வில் மன்னி.

யாரும் ஒண்ணும் சொல்லாமல் இருக்கும்போது, ஒரு குண்டா இருக்கிற டெப்புட்டியை நோக்கி, “நீ சொல்லு!” என்பான்.

அதற்குள் ஸ்கின்னி “நான் தான் இதன் ஓனர்” என்று முன்னால் வருவான்.

அவனை சுடப்போவான் வில் மன்னி. அவனை சுடப்போகும்போது, லிட்டில் பில் கத்துவான், “ஹோல்ட் இட்” என்று.

அதையெல்லாம் சட்டை செய்யாமல் ஸ்கின்னியை தன் முதல் குண்டுக்கு பலியாக்கி சுட்டு கொல்லுவான்.



ஸ்கின்னியை கொன்னதும், லிட்டில் பில் டென்ஷனாகி, “நீ ஒரு கோழை! நிராயுதபாணியை சுட்டுட்ட!” என்பான்.

அதைப்பத்தி எல்லாம் வில் மன்னி கவலையே படமாட்டான்.

“He should have armed himself if he is going to decorate the salon with my friend (ned logan)” என்பான்.

“நீ தான் வில்லியம் மன்னியா? பெண்களையும் குழந்தையையும் கொல்லும் அயோக்கியன்!” என்பான் லிட்டில் பில்.

"That's right. I've killed women and children. Killed just about everything that walks or crawled at one time or another. And I'm here to kill you, Little Bill, for what you done to Ned." என்பான் வில் மன்னி.

அவன் ஷாட் கன் ல மிச்சம் இருக்கிற ரெண்டாவது குண்டை வைத்து லிட்டில் பி லை சுட அவனை குறிவைப்பான்.

“அந்த ஒரு குண்டை வைத்து என்னைய சுட்டதும், இவனை சுட்டுக்கொல்லுங்கள்!” என்று தைரியமாக சொல்லுவான் லிட்டில் பில்.

வில் மன்னி சுடபோவான், ஆனால் அதில் குண்டு இருக்காது (மிஸ் ஃபயர் ஆயிடும்).

உடனே லிட்டில் பில் நேர்வஸா அவன் துப்பாக்கியை எடுக்கப்போவான், எல்லா டெப்புட்டியும் துப்பாக்கியை எடுத்து வில் மன்னியை சுட ரெடியாவாங்க!

வில் மன்னி மிஸ் ஃபயரானதும் உடனே சுதாரிச்சு தன்னுடைய ஷாட் கன் னை லிட்டில் பில் மேலே தூக்கி எறிவான். கன் லிட்டில் பில் மேலே விழுந்ததும் அதனால் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகி, வில் மன்னியை தன் ரிவால்வார் வைத்து சுடும்போது ஃபர்ஸ்ட் ஷாட்டை மிஸ் பண்ணிவிடுவான். ஆனால் அதற்குளவில்மன்னி தன்னுடைய ஸ்கோஃபீல்ட் ரிவால்வாரை எடுத்து, லிட்டில் பில்லை மிஸ் பண்ணாமல் நெஞ்சில் சுட்டுவிடுவான். லிட்டில் பில் கீழே விழுந்துவிடுவான். அடுத்து அவனை நோக்கி சுடும் நாலு டெபுட்டிகளையும் தொடர்ந்து வில் மன்னி சுடுவான். 5 பேரும் மரண காயங்களுடன் கீழே விழுவார்கள்.

-அடுத்த பகுதியில் முடியும்

Thursday, April 9, 2009

Unforgiven (A)-மன்னிப்பே கிடையாது! (3)


நம்ம க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (வில்லியம் மண்ணி) ஒரு ரிட்டயர்ட் திருடன், குடிகாரன், கொ லைகாரன். ஆனால் இன்று திருந்தி வாழ்கிறார். இவரை திருத்தியது இவருடைய அழகான இளம் மனைவி. இவரை இவர் மனைவி எதுக்காக கல்யாணம் செய்தார் என்று யாருக்கும் புரியவில்லை. இவர் ஒரு திருடன் கொலைகாரன் என்பது அறிந்தும் இவரை மணந்துகொள்வார். காதல்! இவரை கல்யாணம் செய்து இவரை நல்வழிப்படுத்திவிட்டு 2 வருடம் முன்னால் அவர் மனைவி பெரியம்மை நோயால் போய் சேர்ந்துவிடுவார். மனைவியை இழந்த இவர் இப்போது தன் இரு குழந்தைகளுடன் மிசவ்ரியில் யாருக்கும் தெரியாமல் ஒரு பன்னி பண்ணை வைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார். வில்லியம் மன்னிக்கு இப்போ வயதாகிவிட்டது, குடிப்பதில்லை, கொலை யெல்லாம் விட்டு பல வருடங்கள் ஆச்சு. துப்பாக்கியே தூக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்படி இவர் ஒளிந்து எந்த வம்பிலும் மாட்டாமல் ஒதுங்கி நல்வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கும்போது ஒரு இளைஞன் இவரை தேடிக்கொண்டு வருகிறான். இவன் பெயர் “ஸ்கோஃபீல்ட் கிட்” நு சொல்லிக்க்குவான். அதாவது அவன் ஒரு “ஸ்கோஃபீல்ட்” பிஸ்டல் ஹேண்டில் பன்ணுவதில் மன்னன் என்பதால் அந்த அடைமொழி என்பான்.இவன் ஒரு மாதிரியான சைல்டிஷ் கேரக்டர்.



“நீங்கதான் வில்லியம் மன்னியா? உங்களை பார்த்தால் அப்படி தெரியலை. என் அங்கிள் பீட் சொன்னார், நீங்க ஒரு பெரிய கன்ஃபைட்டர்னு. எனக்கு ஒரு பார்ட்னர் வேணும்னா, நீங்கதான் நல்ல ஒரு சாய்ஸ் என்றார். உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கு” என்பான்.

“உள்ளே போய் பேசலாம்” என்பார் வில் மன்னி குழந்தைகள் அருகில் இருப்பதால்.

“என்ன விசயம்?” நு கேட்பார்.

அதற்கு அந்த இளைஞன் சொல்லுவான். நான் "பீட்"டினுடைய நெஃப்யூ இதுபோல் வயாமிங்ல ஒரு விலைமாதை இரண்டு பேர் கண்டமேனிக்கு காயப்படுத்திவிட்டார்கள். அவர்கள் இருவரையும் கொன்றால் $1000 ரிவார்ட். அவர்களைக் கொல்ல எனக்கு ஒரு பார்ட்னெர் வேணும் என்று. உடனே "வில் மன்னி" (க்ளிண்ட் ஈஸ்ட்வுட்) சொல்வார் தான் திருந்தி வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். என் மனைவி என்னை திருத்திவிட்டாள். உன் அங்கிள் பீட் சொன்னதுபோல் நான் இப்போது இல்லை என்று விளக்கி அவனை அனுப்பிவிடுவார்.

உடனே அந்த சிறுவன், உங்க மனதை மாற்றினால், நான் வடக்குப்பக்கம் வயாமிங் நோக்கிப் போகிறேன் நீங்க வந்து சேர்ந்து கொள்ளுங்கள். உங்களைப் பார்த்தால் ரொம்ப கஷ்டப்படுவதுபோல் இருக்கு, இந்தப்பணம் நல்லா உதவலாம் என்று சொல்லிவிட்டு போவான்.

அவன் போனவுடன் வில் மன்னிக்கு மனது மாறும். மனைவியும் உயிருடன் இல்லாததால், ஏன் செய்யக்கூடாதுனு ஒரே மனக்குழப்பமா இருக்கும். தன் துப்பாக்கியை எடுத்து சுட்டுப்பார்ப்பார். சரியாக சுடக்கூட தெரியாது. குதிரையில் ஏறினால், அதிலிருந்து வழுக்கி விழுவார். எப்படியோ கஷ்டப்பட்டு குதிரையில் ஏறி துப்பாக்கி, மற்றும் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு, தன் குழந்தைகளை கவனமாக இருக்க சொல்லிவிட்டு புறப்படுவார்.

போகும் வழியில் தன் நண்பன் நெட் லோகனையும் (மார்கன் ஃப்ரீமேன்) அழைத்துக்கொண்டு போவார்.

பணம் தேவை என்பதாலும், ஒரு பெண்ணை அகோரப்படுத்தியதாலும் இருவருக்கும் அது தப்பாகத்தோனாது. வேதாளம் முருங்க மரத்தில் ஏறும்!

இருவரும் அந்த சிறுவனை கொஞ்ச நாளில் கேட்ச் பண்ணுவார்கள். அவன் முதலில் “நெட்” சேர்வதை விரும்ப மாட்டான். பிறகு “நெட்” என் ஃப்ரெண்டு, அவனை நீ சேர்க்கலைனா, நானும் வரவில்லைனு வில் மன்னி சொன்னதும், அந்த சிறுவன் சரி என்பான். 3 பேரும் $1000, சமபங்கா பிரிச்சுக்கலாம் என்று வயாமிங் நோக்கி போவார்கள்.

போகும் வழியில், அந்த சிறுவனுக்கு “ஷார்ட் சைட்” அவன் இதுவரை யாரையும் கொன்றதில்லை எனபதை, வில் மற்றும் “நெட் லோகன்” புரிந்து கொள்வார்கள். வில் லும், நெட் டும் பழங்கதை பேசிக்கொண்டு போவார்கள். யார் யாரை கொன்றார்கள், என்ன என்ன அயோக்கியத்தனம் எல்லா செய்தார்கள் என்று. இந்த பையன் ஸ்கோஃபீல்ட் கிட் ஏதாவது பொய் சொல்லிக்கொண்டு உளறிக்கொண்டே வருவான். அவன் சொல்லும் கதைகளையெல்லாம் இவர்கள் இருவரும் நம்பமாட்டார்கள்.

பிக் விஷ்கியில் இவர்கள் மூவரும் நுழையும்போது, இங்லிஷ் பாப் வெளியே அனுப்பப்படுவார். அன்றும், இடி மின்னல் மழையாக இருக்கும். இரவு நேரம். வில்லியம் மன்னிக்கு ஒரு ஃப்ளூ (காய்ச்சல்) வந்துவிடும். ஏதோ உளற ஆரம்பித்துவிடுவார். மூவரும் அந்த சலூன் (க்ரீலீஸ்) உள்ளே போவார்கள். க்ளிண்ட் (வில்லியம் மன்னி) மட்டும் குடிக்க மாட்டார், விலைமாதுவிடம் போவது தப்பு என்று நினைப்பார். அதனால், வில்லியம் மன்னி மட்டும் அங்கே பார்ல உட்கார்ந்து இருப்பார். மற்ற இருவரும், மேலே போய் அந்த விலைமாதுகளிடம் தாங்கள் வந்த விசயத்தையும், அவர்களை கொல்லப்போகிறோம் என்றும் சொல்வார்கள். அதற்காக அட்வாண்சாக அவர்களிடம் படுப்பார்கள். இப்போ விசயம் செரீஃப்க்கு போய்விடும். அதாவது 3 ஸ்ட்ரேஞ்சர்ஸ் வந்து இருக்காங்க, அவர்களிடம் துப்பாக்கி இருக்கு என்று.

உடனே நம்ம ப்ரூட்டல் செரீஃப் லிட்டில்பில் அங்கே வருவார். இப்போ வில்லியம் மன்னி மட்டும்தான் இருப்பார். ஒரு விஷ்கி பாட்டில் டேபில் மேலே இருக்கும். நெட் லோகன், நண்பனை குடிக்க சொல்லி வலிய்றுத்திவிட்டு மேலே விலைமாதுவிடம் போய்விடுவார்.

செரீஃப் வந்தவுடன், வில் மன்னியிடம்

"உன் பெயர்?'

"வில்லியம்"

"வில்லியம்??"

"ஹென்றிஷா"

இங்கே க்ளிண்ட் உண்மை பேரை சொன்னால் பெரிய விபரீதம் ஆகிவிடும். வில்லியம் மன்னி என்கிற பேர் அமெரிக்கா முழுவது பிரபலம்.

"துப்பாகி எதுவும் வச்சிருக்கியா?'

"இல்லை"

"உன் ஃப்ரெண்ட்ஸ் மேலே இருக்காங்க இல்ல? அவர்கள்?'

"அவங்ககிட்டயும் இல்லை"

செரீஃப், வில் மன்னி அருகில் வந்து செக் பண்ணுவார். துப்பாக்கி அவர் வைத்திருப்பார். அதை செரீஃப் கையில் வாங்கிக்கொண்டு,

"இது என்ன?"

"அது பாம்பு கீம்பு வந்தால் கொல்வதற்கு"

"இங்கே பாம்பு கிடையாது, மிஸ்டர் ஹென்றிஷா"

"லோட் பண்ணல, பவுடர் ஈரமா இருக்கு"

இப்போது, எல்லோரும் இருப்பார்கள். அந்த எழுத்தாளர், எல்லா டெப்புட்டிகளும், ஒரு சில விலைமாதுகள், ஸ்கின்னி எல்லோருமே வேடிக்கை பார்ப்பார்கள்.

செரீஃப், இது மாதிரி பொய் சொல்லி சமாளிப்பதை பார்த்ததும் பயங்கர கடுப்பாயிடுவார் தன் பிஸ்டலை வச்சி வில்லியம் மன்னி (க்ளிண்ட்) முகத்தில் ஓங்கி ஒரு அடி அடிப்பார். கீழே விழுவார் வில்லியம் மன்னி. முகத்தில் கீறல் விழுந்து ரத்தமா ஓடும். அவருக்கு காய்ச்சல் வேற, வயதும் ஆகிவிட்டது, துப்பாக்கியும் இல்லை. தற்காப்புக்காக விஷ்கி பாட்டிலை எடுக்கப்பார்ப்பார், அதை எடுத்தவுடனே அடுத்த அடிவிழும். அடினா உங்க அடி எங்க அடி இல்லை. பூட்ஸ்கால எத்தி எத்தி வில்லியம் மன்னியை பிச்சு பிச்சு எடுப்பார் செரீஃப்.

அடிச்ச அடினால எழுந்திரிக்கக்கூட முடியாது. அப்படியே தவழ்ந்து வெளியே போவார். எல்லோரும் ஷாக் ஆகி நிற்பார்கள். அந்த எழுத்தாளர் திரு திரு னு முழிப்பார்.

இங்கே செரீஃப் வந்ததை பார்த்தவுடன், ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரையும் வேறொரு வழியில் அனுப்பிவிடுவார்கள் அந்த விலைமாதுகள். எப்படியோ தடவி தடவி வெளியே வரும் வில்லியம் மன்னி யை பின்னாலிருந்து வந்து ஃப்ரெண்ட்ஸ் குதிரையில் ஏற வைத்து அழைத்து செல்வார்கள்.

செரீஃப் வெற்றிப்புன்னகையுடன் இருப்பார்.

வில்லியம் மன்னிக்கு இந்தக்காயங்களுடன் காய்ச்சல் அடிக்கும். ஊருக்கு வெளியே விலைமாதுகள் உதவியுடன் ஒரு இடத்தில் 3 பேரும் தங்குவார்கள். வில் மன்னி காய்ச்சலில் ஒரே புலம்பல். அவருக்கு சாகப்போகிற பயம் வந்துடும். செத்துவிடார் என்றே ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் முடிவு செய்துவிடுவார்கள். இந்த சூழ்நிலையில் அந்த "கிட்", நெட் லோகனிடம்,

"வில் செத்தால் என்ன பண்றது?" என்பான்.

"புதைப்போம்" என்பார் நெட்.

"இல்லை, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்ந்து அந்த 2 பேரையும் கொன்றுவிடலாம். நீ உதவி செய்" என்பான்.

"நான் அவன் இல்லாமல் யாரையும் கொல்லமாட்டேன்" என்பார் நெட் லோகன்.

வில்லியம் மன்னி பிழைப்பாரா, சாவாரா என்ன ஆகப்போதுனு பயந்துகொண்டு இருப்பார்கள்.

-தொடரும்

Wednesday, April 8, 2009

Unforgiven(A)-மன்னிப்பே கிடையாது! (2)

போலிஸ் செரீஃப் லிட்டில் பில் வருவார்! மழை இடி மேலும் அது ஒரு இரவு நேரம்! லிட்டில் பில் வந்தவுடன் அந்த ஸ்ட்ராபரி என்கிற விலைமாது அவர்களை இப்படி செய்த கொடுமைக்காக தூக்கில் போட வேண்டும் என்று கேட்டுக்கொள்வாள்.

"இவர்களை தூக்கில் போடுங்க லிட்டில் பில்!" என்பாள் ஸ்ட்ராபெர்ரி

ஆனால் லிட்டில் பில் க்கு விலைமாது மேலெல்லாம் பெரிய மரியாதை இல்லை. அவர் நம்பிக்கை என்னனா "No whore is gold"! இவள் இப்படி பேசுவதே பிடிக்காது அவருக்கு. அவரோட டெப்டி ஒருவரை போய் "சவுக்கு" எடுத்து வர சொல்லுவார். அதாவது, இவர்களுக்கு தண்டனை சவுக்கால் இவர்களை அடிப்பது. இவர்களை சவுக்கால் அடித்து தண்டித்தால் போதும் என்று முடிவு செய்து, இவர்களை தண்டிக்க ஒரு சவுக்கால் அடிக்க ஆயத்தமாவான்.

அப்பொழுது, பாதிக்கப்பட்ட அந்த விலைமாது (டெலிலா) வின் ஓனர் "ஸ்கின்னி" சொல்லுவான். நான் காசு கொடுத்து அவளை வாங்கி வந்து இருக்கிறேன். இந்த நிலைமையில் அந்த விலைமாதிடம் யாரும் உறவுக்கு போக மாட்டார்கள். அதனால் என்னுடைய ப்ராப்பர்டி டேமேஜ் ஆனதற்கு லயபிலிட்டி வேணும். அவளிடம் இனிமேல் யாரும் போகமாட்டார்கள், அதனால் எனக்கு பணம் வேணும் என்பார்.

உடனே செரீஃப் சவுக்கடியை கைவிட்டு வேறு நீதி வழங்குவார். அதாவது குற்றவாளிகளுக்கு ஃபைன்!! அவர்கள் வைத்திருக்கும் குதிரைகள் மைக் 4 மற்றும் டேவி 2 கொண்டுவந்து ஸ்கின்னியிடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர் வழங்கும் நீதி.

இப்போ நட்டமடையாதது ஸ்கின்னி என்கிற அந்த பிம்ப்-வியாபாரி! ஆனால் அந்த விலைமாதுவின் அழகு சிதைந்துவிட்டது. அதற்கு எந்த தண்டனையும் கொடுக்கவில்லை! இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு விலைமாது என்பதால் அவளை நாயைவிட கேவலமாக மதிப்பார் அந்த செரீஃப். ஆனால், ஸ்ட்ராபெர்ரி இந்த அநியாத்திற்கு பழி தீர்க்காமல் விடப்போவதில்லை என்று முடிவெடுத்து விடுவாள். விலைமாதுகள் அனைவரும் ஒன்று சேருவார்கள். ஸ்கின்னிக்கு தெரியாமல் எவ்வளவு பணம் சேர்த்து வைத்து இருக்கீங்கனு பேசுவார்கள். ஒரு $500 போல தேறும். ஆனால் இன்னும் சேர்த்து $1000 சேர்ந்தவுடன் அந்த இருவரையும் கொலை செய்கிறவர்களுக்கு $1000 பரிசு என்று நாடுமுழுவதும் பரப்ப முடிவு செய்வார்கள்.

செரீஃப் சொன்னது போல் அபராதமாக குற்றவாளிகள் இரண்டு பேரும் ஒரு 6 குதிரைகளை ஸ்கின்னியிடம் கொடுத்து, ஸ்கின்னியை சமாதானப்படுத்துகிறார்கள். அப்போது டேவி என்கிற அந்த சின்னப்பையன், தன்னுடைய நஷ்டயீடாக ஒரு அழகான குட்டி குதிரை ஒன்றை அந்த விலைமாதுக்கு கொடுக்க முற்படுவான். ஆனால் அவர்கள் அவனை அதற்கு அவனை கல்லால் அடித்தே துரத்திவிடுவார்கள். விலைமாதுகள் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அவர்களால் இவர்களை மன்னிக்கவே முடியாது! இவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதென்று! இவர்களை உயிரோடு பார்க்க இஷ்டப்படவில்லை!

தான் சாதாரண விலைமாதுகள் எப்படி இதை செய்யமுடியும்? பணத்தால்தான் சாதிக்கலாம்! இவர்களை கொல்பவர்களுக்கு $1000 ரிவார்ட், என்கிற செய்தி ரகசியமாக பரப்புகிறார்கள். விலைமாதுக்களிடம் வரும் ஒரு சிலர்கள் அந்த செய்தியை டெக்ஸாஸ் வரை பரப்புகிறார்கள்.

இதுபோல் $1000 ரிவார்ட் விசயம் லிட்டில் பில்லுக்கு தெரிய வருகிறது. இருந்தும் விலைமாதுக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை! ஆனால் ஊரில் யாரும் துப்பாக்கி வைத்திருக்கக்கூடாது என்கிற சட்டம் கொண்டு வரப்படுகிறது! இதற்கிடையில் லிட்டில் பில் தன்னுடைய வீட்டில் கார்ப்பண்டர் வேலை செய்து ஓரளவு கட்டி முடிக்கிறார்.

முதலில் இந்த செய்தி ஒரு கன்ஃபைட்டர் அண்ட் கில்லர் இங்லிஷ் பாப் (English Bob )என்பவரை அடைகிறது. இவர் யாருனா நம்ம ரிச்சேர்ட் ஹாரிஸ் (Richard Harris).



இவர் இங்கிலாந்திலிருந்து வந்த ஒரு கொலையாளி/கன்ஃபைட்டர். இவர் கணக்குக்கு நெறைய பேரை கொன்று இருக்கிறார். இவர் எதுக்கெடுத்தாலும் அமெரிக்கன் அரசியல் திட்டத்தை அதாவது ஜனாதிபதித்துவத்தை கேலி செய்து, ரொம்பவே பேசுவார். இது அமெரிக்கர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் இருந்தாலும் இவன் ஒரு கொலையாளி/கன் ஃபைட்டர் என்பதால் யாரும் ஒண்ணும் செய்யாமல் விட்டுவிடுவவர்கள். இப்போ இங்லிஷ் பாப் இந்த இரண்டு பேரையும் கொன்னுட்டு $1000 ரிவார்டை வாங்க பிக் விஷ்க்கிக்கு வருகிறார்.

An interesting part of this story is that, கொலையாளி English Bobக்கு ஒரு பயோக்ராஃபர்/எழுத்தாளர். அவர் பெயர், W.W. Beauchamp.



அவர் "ட்யூக் ஆஃப் டெத்" என்கிற கதை இங்லிஷ் பாப் பின் "சாதனைகளை" வைத்து எழுதிக்கொண்டு இருப்பார். இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமே, ரொம்ப பயந்த சுபாவம்.

இந்த கதை எழுதுகிற பார்ட் இந்தக்கதையில் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒண்ணு. இதுபோல் இதுவரை எந்தப்படத்திலும் ஒரு கேரக்டர் பார்த்ததில்லை. அதுமட்டுமல்ல, புகழுக்கு மனுஷன் எப்படி அடிமையாகிறான் என்பதை இந்த கேரக்டர் மூலம் அழகா க்ளிண்ட் சொல்லி இருப்பார். நடக்கப்போற இந்த கொலைகளை வேடிக்கை பார்க்கவும் அதைப்பற்றி எழுதவும் இந்த ஜேர்னலிஸ்ட் (writer) இங்லிஷ் பாப் வுடன் வருவார். இதிலென்ன விசயம்னா இங்லிஷ் பாப் தன்னை பெரிய ஹீரோவாக்க நெறைய பொய் சொல்லி தன்னை மிகப்பெரிய ஒரு கதானாயகன் போல அந்த பயோக்ராஃபரிடம் சொல்லி இருப்பார். ஆனால் அவர் சொன்னதில் பாதி பொய் என்று தெரியாது.

இங்லிஷ் Bob, Big whiskey வந்தவுடன், இந்த விலைமாதுகள் ஒரே சந்தோஷமா இருப்பாங்க! ஆனால், வந்து கொஞ்ச நேர்த்திலேயே, "லிட்டில் பில்" டெபுட்டிகள் இங்லிஷ் பாபை அனுகி அவாரிடம் உள்ள துப்பாக்கிகளை கொடுக்க சொல்வார்கள் (அதுதான் சட்டம்). இங்லிஷ் பாப் கொடுக்காமல், ஏதோ கதை சொல்லிவிட்டு போயிடுவார். இன்னொரு விசயம் என்னனா, அங்கே இருக்கிற லிட்டில் பாப் டெபுட்டிஸ்ல யாருமே ரொம்ப திறமையானவர்களோ, தைரியமானவர்களோ கிடையாது. லிட்டில் பில் மட்டும்தான் பெரிய ஆளு. அதனால் டெபுட்டிகளால் இங்லிஷ் பாபை கட்டுப்படுத்த முடியாது. லிட்டில் பில்லிடம், அவர் டெப்புட்டிகள் இங்லிஷ் பாப் என்ற கொலைகாரன் வந்து இருக்கான் என்று அவரைப்பற்றி சொன்னதும் விசயத்தை கேட்டு லிட்டில் பில் வருவார். அப்போதுதான் இங்லிஷ் பாப் க்கும் லிட்டில் பில்லுக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.

இருவரும் ஒருவரை ஒருவர் மற்றவர் முன்னால் முறைப்படி அறிமுகப்படுத்திய பிறகு, இங்லிஷ் பா இடம் இன்றைய சட்டம் என்னனு சொல்லி, அவரிடம் துப்பாக்கிகளை கொடுக்க சொல்லி கேட்பார்- துப்பாக்கி முனையில், லிட்டில் பில். இங்லிஷ் பாப் தன்னிடம் உள்ள ஒரு துப்பாக்கி மட்டும் கொடுத்துவிட்டு நழுவப்பார்ப்பார். இந்த நேரத்தில் ஊரே இந்த காட்சியை வேடிக்கை பார்க்கும். ஆனால் லிட்டில் பில், இங்லிஷ் பாபை அத்துடன் விடாமல் மறைத்து வைத்திருக்கும் ஒரு சிறிய துப்பாக்கியையும் வாங்கிவிட்டு, இங்லிஷ் பாபை, கண், காது, மூக்கு தெரியாமல் அடி அடினு அடிச்சு சட்னி ஆக்குவார். பிறகு ஜெயிலில் போடுவார். இதுபோல அடித்தால்தான் ஒருவரும் இதுபோல் வரமாட்டார்கள் என்கிற எண்ணம், லிட்டில் பில்லுக்கு. இதை வேடிக்கை பார்த்த ஊர்மக்கள், மற்ரும் விலைமாதுக்கள் எல்லோருமே இனிமேல் எவனும் வரமாட்டான் அடி வாங்க என்று நினைப்பார்கள்.

இங்லிஷ் பாப் ஜெயில்ல இருக்கும்போது அவருக்கு கேட்பதுபோல இப்போ பயோக்ராஃபர், லிட்டில் பில்லுடன் பேசிக்கொண்டு இருப்பார். அப்போ அவர் எழுதிய கதையை படித்துவிட்டு அதில் சொன்ன பொய்களையெல்லாம் கேலி செய்து சிரிப்பார் லிட்டில் பில். இங்கே ரெண்டு மேட்டெர் டெவெலப் ஆகும். ஒண்ணு, அந்த பயோக்ராபருக்கும் லிட்டில் பில் இங்லிஷ் பாபைவிட பெரிய ஹீரோவாக தோனும். லிட்டில் பில்லுக்கும் தன்னுடைய புகழ் இது போல் ஒரு எழுத்தாளர்மூலம் பரவனும்னு ஆசை வரும். இருவரும் நல்ல நண்பர்களாகிவிடுவார்கள். இங்லிஷ் பாபை ஊரை (பிக் விஷ்கி) விட்டு வெளியே அனுப்பிவிட்டு. ட்யூக் ஆஃப் டெத் கதையில் லிட்டில் பில் ஹீரோ போல மாற்றியமைப்பார்.

நம்ம லெஜெண்டரி ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (வில்லியம் மன்னி) பற்றி அடுத்த பகுதியில்!

-தொடரும்

Tuesday, April 7, 2009

Unforgiven (A)-மன்னிப்பே கிடையாது (1)!



* எனக்குத்தெரிய oscar committee ஒரு "வெஸ்டர்ன் மூவி" க்கு ஆஸ்கர் (பெஸ்ட் பிக்ச்சர்) வழங்கியது இதுதான் முதல் தடவை!

* Clint Eastwood, ஆஸ்கரை (பெஸ்ட் இயக்குனர்) தட்டிக்கொண்டு போனதும் இதுவே முதல் தடவை!



பொதுவாக க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வெஸ்டெர்ன் படங்கள்னா என்ன? சும்மா துப்பாக்கி சூடா இருக்கும். கடசியில் ஹீரோ மட்டும் தப்பிப்பார் என்று சொல்லி அதையெல்லாம் ஒரு படமாகவே விமர்சகர்கள் கருவதில்லை. ஆனால் இந்தப்படத்திற்கு பெஸ்ட் பிக்சர் ஆஸ்கர் கிடைத்தது!

அப்படி என்னப்பா இருக்கு இந்தப் படத்தில்?

என்னைக்கேட்டால் இந்தப்படத்தில் எல்லாமே இருக்கு. ரொம்ப வித்தியாசமான ஒரு வெஸ்டெர்ன் மூவிதான் அண்ஃபர்கிவென்!

கதை:

லேட் 18ம் நூற்றாண்டில் நடப்பதுபோல் எடுத்து இருப்பார்கள். Wyoming state-ல ஒரு சின்ன ஊர் Big Whiskey. அங்கே ஒரு சட்டத்தைக்காக்கும், அதே சமயத்தில் தான் வைத்ததுதான் சட்டம், நியாயம் என்று எண்ணும் ஒரு ஷெரீஃப் (Police head) இருக்கிறார். இவர் பெயர் Little Bill Daggett ! இவர்தான் நம்ம Gene Hackman!



பிக் விஸ்கியில் இவர்தான் சட்டம்! இவர்தான் நீதிபதி! இவர்தான் எல்லாம் அங்கே! இவருக்கு கீழே 4-5 டெப்டி காவலர்கள். ஒரு காலத்தில் "லிட்டில் பில்" ஒரு பொறுக்கி, ரவுடி! கன் ஃைபட்டர்! ஆனா இன்று Little Bill சட்டப்பாதுகாவலன். தான் என்கிற அகந்தையிலும், தன்னை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையுடன் ராஜா போல் இருக்கிறார் அந்த சின்ன டவுனில். இவர் தனக்கு ஒரு வீடு தானே தச்சுவேலை (காப்பெண்டர்) வேலை பார்த்து கட்டிக்கொண்டு இருப்பார். கடைசிக்காலத்தில் ஓய்வு பெற்ற பிறகு அங்கே வாழ்வதாக திட்டம்.

"பிக் விஷ்கி" டவுன்ல "க்ரிலீஸ்" என்கிற ஒரு சலூன் நடத்தி வருகிறார் "ஸ்கின்னி" என்கிற ஒரு வியாபாரி. இவர் வியாபாரம், சாப்பாடு, மதுபானங்கள் மற்றும் விபச்சாரம். பாஸ்டனிலிருந்து 5-6விபச்சாரிகளை வாங்கி வந்து அவர்களை வைத்து அந்த ஊரில் பிஸினஸ் நடத்தி வருகிறார்.

இப்படி Big whiskey town அமைதியாக போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு நாள் நல்ல இடி, மின்னல், மழை பெய்து கொண்டு இருக்கும்போது அந்த சலூனில் ஒரு பெரிய பிரச்சினை வெடிக்கிறது.

"Quick Mike" மற்றும் Davey என்கிற இரண்டு ஃபார்ம் வொர்க்கர்ஸ் (Cowboys) அந்த விபச்சாரிகளிடம் பொழுதுபோக்க வந்திருப்பார்கள். Davey என்பவன் ஸ்ட்ராபெர்ரி என்கிற ஒரு பெண்ணுடன் இருப்பான். அதே நேரத்தில் அடுத்த அறையில் மைக் என்பவன், அங்கே உள்ள “டெலிலா” என்னும் இன்னொரு அழகான விபச்சாரியிடம் படுக்கப்போவான். அப்படிப் போகும்போது, அவள் மைக்கினுடைய “ஆணுறுப்பை” பார்த்ததும் ”என்ன இவ்வளவு சின்னதாக இருக்கு?” என்று அவளையே அறியாமல் நகைத்துவிடுவாள். இப்படி அவள் நகைத்தது ஒரு பெரிய விபரீதமாகிவிடும்!

Mike க்கு ஏற்கனவே உள்ள இண்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வெடித்து கேவலம் ஒரு வேசி, அவன் குறியைப்பார்த்து கேலிபண்ணி சிரித்துவிட்டாள் என்று பயங்கர கோபம் வந்துவிடும். அந்த கோபத்தில், அவன் மிருகமாகிவிடுவான்! அந்த விலைமாதுவை கையில் இருந்த கத்தியை வைத்து அவன் நண்பன் டேவியின் உதவியுடன் முகம், மார்பு, எல்லா இடங்களிலும் கத்தியால் கீறி, வெட்டி அவளை அகோரப்படுத்திவிடுவான். அப்படி வெட்டுவதற்கு உதவியது அவன் நண்பன் டேவி. அவன் ஒரு டீன் ஏஜ் பையன். ஏதோ தெரியாமல் மைக்குக்கு பயந்து கொண்டு அவளை நல்லா பிடித்துக்கொள்வான் மைக் அவளை கத்தியை வைத்து கீறுவதற்கு. நல்லா அவளை வெட்டி காயப்படுத்தி அவள் முக, உடலழகை சிதைத்த பிறகு அந்த விபச்சாரிகளின் ஓனர், ஸ்கின்னி, வந்து ஒரு துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி இவர்கள் இருவரையும் ஒரு கயிறு வைத்து கட்டிப்போடுவார்கள். போட்டுவிட்டு, நம்ம சட்டப்பாதுகாவலர் லிட்டில் பில்(செரீஃப்)டம் வந்து தண்டனை/நியாயம் வழங்க அவரை அழைத்து வரச் சொல்லச்சொல்லி தூதுவிடுவார்கள்.

மீதி அடுத்த பகுதியில்

-தொடரும்

Saturday, April 4, 2009

வை கோ விற்கு நாலுமே தேறாத தொகுதிகள்!


என்றைக்கு வை கோ அவர்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தாரோ அன்னைக்கே பிடிச்சது சனியன் இந்த “பெரிய மனிதருக்கு”! இப்போ அவர் மதிமுக இருக்கும் நிலையில் "மறுமலர்ச்சி" அடைமொழியை பெறுவதைவிட "மடிந்தமலர்ச்சி" அடைமொழிதான் பொருந்தும். ஜெயலலிதாவை வளர்த்துவிட்டது யாரு? நெடுஞ்சிழியன், காளிமுத்து, ஆர் எம் வீரப்பன் போன்றவர்கள்! எல்லாரும் மறத்தமிழர்கள்! அவர்களுக்கும் வை கோ வுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? எனக்கென்னவோ ஒண்ணும் பெருசா தெரியலை!

ஜெயலலிதா எப்போதுமே ஈழத்தமிழர்களுக்கு எதிரிதான் என்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இந்த பிரச்சினை பொறுத்தவரையில் வை கோ வும் ஜெயலலிதாவும் தண்ணீரும் எண்ணையும் போல்தான்! ஒன்றாக கலப்பது கடினம்-அவர்கள் ஈழத்தமிழர், தனி ஈழம் கொள்கையில்!

இப்போ விஜய்காந்துவும் வை கோபால்சாமியின் ஜாதியை சேர்ந்தவர் (இருவரும் நாயக்கர்கள்?)என்பதால் ஓரளவுக்கு வை கோ வின் ஜாதி ஓட்டு பிரிந்துவிட்டது. அதனால் இன்றைய நிலைமைக்கு வை கோ விற்கு ஜாதி ஓட்டு பலமும் இல்லை! கொள்கை பலம் என்றும் பெருசா ஒண்ணுமே இல்லை! வை கோ கடித்தாலும் விசம் ஏறாத ஒரு “தண்ணிப் பாம்பு” தான் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் நிலைமைக்கு! என்பதை புரிந்து கொண்டார் அன்னையார்!

வன்னியர்கள் அளவுக்கு இவர் ஜாதியான நாயக்கர்கள் ஓட்டுக்கள், கனிசமாக ஒரு சில ஏரியாவில் மட்டும் கிடையாது. அவர்கள் பரவலாக எல்லா இடங்களிலும் இருக்காங்க. அதனால் இவருக்கு ராமதாஸைவிட ஜாதி பலம் மிக மிக கொஞ்சம்!

இன்றைய அரசியலில் வை கோ விடம் எதுவும் பெரிய கொள்கையோ, பெரிய மாஸோ, பெரிய தனித்துவமோ, பணமோ, எதுவுமே இல்லை என்று தெரிந்தவுடன், "அன்னையார்" வை கோ விடம் பேசுகிற பேரமிதுதான். "உங்களுக்கு எதுவும் பெரிதாக செய்ய முடியாது! கொடுக்கிறதை வாங்கி கொண்டு போங்க!" என்று சொல்லாமல் சொல்லுகிறார் அன்னையார். இதுதான் இன்றைய "மடிந்தமலர்ச்சி" தி மு க தலைவர் பரிதாப நிலை.

* அ தி மு க அணியில் இருந்து வெளியில் வந்தால் அசிங்கம்! ரொம்ப காலம் கடந்தும்விட்டது. எங்கே போறது?

* சரி, தனித்து போட்டியில் நின்றால், ஒரு பயலும் ஓட்டுப்போட மாட்டான்.

* சரி, ஐந்து வேணாம், அன்னையார் பெரியமனதுடன் கொடுக்கும் நாலையாவது வாங்கிக்குவோம் என்றால், அம்மா கொடுக்கிற நாலும், “தயாநிதி மாறன் தொகுதி”, “மு க அழகிரி தொகுதி” போன்றவைகள்! இதை வாங்குவதற்கு சும்மாவே போயிடலாம் “பெரிய மனது” தன்மையை காட்டி!

என்ன பண்ணுவார் பாவம் இந்த கோபால்சாமி? :(

ஜெ கே ரித்தேஷ் (முகவை குமார்) எம் பி சீட்க்கு முயற்சி!!


* நாயகன், * காணல் நீர் போன்ற படங்களில் நடித்தவர் முகவை குமார். இவருக்கும் தமிழ் வலைபூக்களில் ரசிகர், ரசிகைகள் அதிகம். இவர் இப்போது தி. மு.க சார்பில் இராமநாதபுரம் (முகவை) தொகுதியில் எம் பி சீட்க்கு முயற்சி செய்து கொண்டுள்ளதாக வதந்திகள் அடிபடுகிறது. இவர் முக்குலத்தோரில் தேவர் வகுப்பை சார்ந்தவர்.

தற்போது இந்த தொகுதியில் எம் பி ஆக இருந்து வருவது திருமதி. பவானி ராஜேந்திரன். இவர் முக்குலதோர் வகுப்பில் அகம்படியர் (அகமுடையார்) பிரிவை சேர்ந்தவர். இந்த தொகுதியில் தேவர் வாக்குகள் அதிகம். அதன் பிறகு அகம்படியர் வாக்குக்கள். முஸ்லிம்கள் மற்றும் கோனார் , மற்றும் தலித் ஓட்டுக்களும் கனிசமாக உள்ள தொகுதி இது.

திருமதி பவானி ராஜேந்திரனுக்கு முன்பு அதே குடும்பத்தில் அமரர் திரு. எம் எஸ் கே சத்தியேந்திரன் பலமுறை எம் பி யாக தேர்ந்தெடுக்கப் பட்டவர். இந்த தொகுதியில் எம் எஸ் கே குடும்பம் காலங்காலமாக தி மு க வில் இருந்து வருகிறார்கள். அதனால் முகவை குமாருக்கு இந்த சீட் கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை. பார்க்கலாம்!

Thursday, April 2, 2009

இந்த முறை ரஜினி ரசிகர்கள் ஓட்டு யாருக்காம்?

டாக்டர் ராமதாஸின் "ரஜினி அட்டாக்" கினால் சென்ற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர்கள் பா. ம. க வுக்கு எதிராக ஓட்டுப்போட்டார்கள். கடந்த முறை காங்கிரஸுடன் கூட்டணியா இருந்ததால் ஒரு பெரிய இழப்பும் டாக்டர் ராமதாசுக்கு ஏற்படவில்லை. ஆனால் இந்த முறை பா.ம.க நிலைமை கொஞ்சம் வேறு என்று சொல்லலாம்.

ரஜினி ரசிகர்களின் ஓட்டு பா.ம.க - அ.இ.அ.தி,மு,க வை கொஞ்சம் பாதிக்கலாம். ஏன்னா ரஜினி ரசிகர்கள் பா ம க கூட்டணியான அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் ஓட்டு போடமாட்டார்கள் என்று தோன்றுகிறது. பொதுவாக விஜய்காந்துக்கு ரஜினி ரசிகர்கள் ஓட்டுப் போடுவதில்லை. அதனால் ரஜினி அபிமானிகளால் இந்த முறை பயன்பெறப்போவது காங்கிரஸ்-திமுக கூட்டணியாகத்தான் இருக்கும்.

ரஜினி ரசிகரகளுக்கு டாக்டர் ராமதாஸினால் ஏற்பட்ட நாவினாற் சுட்ட வடு இன்னும் ஆறி இருக்க வாய்ப்பில்லை. எத்தனை ரஜினி ரசிகர்கள், அபிமானிகள் ராமதாஸின் தாக்குதலை யெல்லாம் மறந்து இருப்பார்கள்? ரஜினி ரசிகர்களுக்கு டாக்டர் ராமதாஸ் என்றாலே ஒரு வெறுப்பு உண்டாகும் அளவுக்கு ஆகிவிட்டது என்றுகூட சொல்லலாம்.

நான் சொன்னதுபோல என்னுடைய கணக்குப்படி பார்த்தால் இந்த முறை ரஜினி ரசிகர்கள் ஓட்டு காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக்குத்தான் போகும். ரஜினி ரசிகர்கள் ஓட்டு எந்தவிதமான பெரிய விளைவையோ, தேர்தல் முடிவை மாற்றம் செய்யும் ஃபேக்டர் இல்லை என்று விவாதிக்கலாம். அது ஒருபுறமிருக்க, யாருக்கு இவர்கள் ஓட்டுக்கள் போகும் என்றால் பெரும்பாலும் அவைகளைப் பெறப்போவது தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிதான்!

இல்லைனு சொல்றீங்களா? ஏன்? :-)

காதலுடன் -13

அன்று சனிக்கிழமை, சந்தியாவுக்கு ஒரு விருந்தாளி வந்து இருந்தாள். அது சந்தியாவின் சினேகிதி லதா. கல்லூரியில் சந்தியாவின் சீனியர் லதா. சீனியராக இருந்தாலும் நல்ல தோழி, இருவரும் ரொம்ப க்ளோஸ். இப்போ லதா, கல்யாணம் ஆகி ஒரு குழந்தையுடன் ஹுயூஸ்டன் டெக்ஸாஸ்ல செட்டில் ஆகி இருந்தாள. கம்பெணி வேலையாக ஏதோ மீட்டிங்னு சிகாகோ வந்திருந்தவள், சந்தியாவை கால் பண்ணி பேசினாள் அவள் "ஷாட் விசிட்" பற்றி சொன்னாள். உடனே சந்தியா, லதாவை அவள் தங்கியிருந்த ஹோட்டலில் போய் சந்தித்தாள். பிறகு டிவான் ஸ்ட்ரீட்க்கு ஸாப்பிங்க்காக அழைச்சுட்டு போனாள். ஷாப்பிங் முடித்துவிட்டு அங்கேயே இந்தியா பாலஸ்ல டின்னர் சாப்பிட அழைத்து சென்றாள்.

“என்னடி லதா எப்படிப்போகுது வாழ்க்கை?”

“என்ட்ட ஒண்ணும் பெருசா விசயம் இல்லை. நீதான் சொல்லனும்”

“உனக்கு ரமேஷ் தெரியும் இல்ல? நான் ஒரு வழியா ரமேஷ்ட்ட ப்ரப்போஸ் பண்ணிட்டேன்”

“நீயா?!!”

“ஏன் ஒரு பொண்ணு ப்ரப்போஸ் பண்ணக்கூடாதா? எனக்கு அவர் கம்பெணி ரொம்ப பிடிக்குது. அதாண்டி. அப்புறம் சொல்லாமல் விட்டுட்டமேனு பின்னால நான் வருத்தப்படக்கூடாது பாரு”

“கம்பெணியா? எங்கே? பெட்லயா?”

“ச்சீ! அப்படியெல்லாம் எதுவும் இன்னும் ட்ரை பண்ணலடி!”

“அப்போ வேற என்ன கம்பெணிடி?'

“"இதை" தவிர உனக்கு வேற நெனைப்பே இல்லையாடி லதா?”

“என் பிரச்சினை எனக்கு. இதை எல்லாம் உன்ன மாதிரி க்ளோஸ் ஃப்ரெண்ஸ்ட்டதானே பேசமுடியும்? கம்பெணி மீட்டிங்லயா பேசமுடியும்? ஒரே "போர்" டி, சந்தியா”

“என்ன சொல்றார் உன் கணவர் ஸ்ரிதர்? உன் பையன் சதீஸ், அப்பாவோடயே இருந்துக்கிட்டானா?”

“ரெண்டு நாள்தானடி! நாளைக்கு காலையில் திரும்பிடுவேன். நான் இல்லாமலும் அவங்க வாழக் கற்றுக்கொள்ளனும் இல்லையா?”

“உண்மைதான். மற்றபடி ஸ்ரிதர் உன் மேலே பிரியமா இருக்காரா?'

”ஏன் கேக்கிற? அப்பா மாதிரியா நடந்துக்கிறார்?”

“நீயும் ஆரம்பிச்சுட்டியா?. ஏன்டி கல்யாணம் ஆகி சில வருசத்திலேயே ஒரே கம்ப்ளைண்ட் பண்ணுறீங்க? இங்கேயும் ஒருத்தி இருக்கா காவியானு”

“போன வாரம் வீக் டேஸ்லயே எந்நேரமும் இண்டெர்னெட்லயே இருந்தார். நல்லா நாலு கொடுத்தேன்”

“ஏன் இண்டெர்னெட் போகக்கூடாதா?”

“இண்டெர்னெட்ல என்ன பண்றாருனு நினைக்கிற? எல்லா நேரமும் "அதுதான்" பார்த்துண்டு இருக்கார். அதையே 24 மணி நேரம் பார்த்தா? என்னடி செய்றது? மனுஷனுக்கு கொஞ்சமாவது கட்டுப்பாடு வேணும்னு ஏன் சொல்றாங்கனு இப்போத்தான் புரியுது”

“அதனால் என்ன? அவர் அடல்ட்தானே?”

“நீ வேற! என்னவா? அதோட விளைவுகள் என்னை பாதிக்குது. யாரையோ நெனச்சுண்டு என்னோட படுக்கிறது இருக்கட்டும் ஒருபக்கம். சரி என்னனு தொலையிறான் மனுஷன்னு விட்டா. ஏற்கனவே பத்து நிமிஷம் தாக்குப்பிடிக்கிற இவர் இப்போ ரெண்டு நிமிஷத்துல வந்து நிக்கிறார்”

“என்னடி சொல்ற? நெஜம்மாவா?”

“எல்லாம் "அது" பார்க்கிற எஃபக்ட்தான்! அதை பார்த்து பார்த்து இந்த ஆளு ஒரு மாதிரி இம்பொட்டண்ட் ஆகிட்டார்னு சொல்றேன்”

“நல்ல ஜோக்டி!” சந்தியா சிரித்தாள்.

“ஹே! நான் ரொம்ப சீரியஸாத்தான் சொல்றேன். He watches all the time and get aroused and so in bed he lasts only two minutes or even less”

“Really? அப்புறம்?”

“அப்புறம் என்ன? Once they are done, you know how men are? They are just dead meat and worthless to you anymore for that night. That is not enough for me. எனக்கு மூடு வரும் முன்னாலே அவர் முடிச்சு எழுந்துடுவார்”

“அதுக்கு காரணம் போர்ன் தான் நு சொல்றியா ?”

“நிச்சயமாக! He was performing much better before. Honestly this enternet world screwed up my sex life. Because he can only watch and fantasize, could not execute anything properly in his real life”

“என்னடி நிஜம்மாத்தான் சொல்றியா?”

“Trust me, too much of anything is not good. எந்நேரமும் இதுலயே நாக்க தொங்கப்போட்டுக்கிட்டு உக்காந்தா, எதுக்கு பொண்டாட்டி? சிங்கிளாவே குப்பை கூட்ட வேண்டியதுதானே? இவர் சிங்கிளா இருந்தா ரெண்டு நிமிஷம்னா என்ன, 1/2 நிமிஷம்னா என்ன? யாருக்கு கவலை?”

“என்னவோ போ! நீ தான் அனுபவசாலி... சொல்ற, நான் கேட்டுக்கிறேன்”

“சரி, என் கதையை விடு. ரமேஷ் என்னதான் சொல்றார்?”

“He likes me but...”

“But what?”

“He needs some time”

“என்ன அவசரம்? இப்போத்தான் இண்டெர்ஸ்டிங்கா இருக்கும். அப்புறம் ஒண்ணும் த்ரில்லிங்கா இருக்காது”

"Check this out! I am planning to seduce him!"

"Hey! that is interesting thought! Tell me all about your strategy"

"Nope, I cant tell you that! I was only joking"

"I dont believe you"

"சரி சாப்பாடு ஆறுவதற்கு முன்னால் சாப்பிடுடி"

-தொடரும்