Saturday, December 21, 2013

தேவயானிக்கு துரோகம் செய்தது மலையாளி சங்கீதா! அமெரிக்கா இல்லை!

சங்கீதா ரிச்சர்ட் ஒரு மலையாளி! "Opportunist"! மலையாளிகள் தான் முன்னேறவேண்டுமென்றால் யாரை வேணா கவிழ்த்தி முன்னேறுவார்கள் என்பதற்கு இது ஒரு அழகான உதாரணம். "அடிமையாக" இருக்க ஒத்துக்கொண்டு, அந்த எழுதப்படாத (சட்டவிரோதமான) அக்ரிமெண்டை ஏற்றுக்கொண்டு அமெரிக்க வந்தபிறகு, அமெரிக்க சட்ட திட்டங்களை உணர்ந்து, தேவயாணியை தப்பிக்கவே முடியாதபடி கவிழ்த்தி விட்டார் மலையாளி சங்கீதா என்பதே உண்மை!

மலையாளிகளுக்கு நன்றிக்கடன் சம்மந்தப்பட்ட மாரல்ஸ் எல்லாம் ரொம்ப கம்மி என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சங்கீதா ரிச்சர்ட், அமெரிக்க குடியுரிமை பெற, தன் எஜமானிக்கு தக்க சமயத்தில் ஆப்பு வைத்து விட்டார் என்பதே உண்மை நிலவரம்.

அதை விட்டுப்புட்டு இதில் அமெரிக்காவை திட்டுவதோ, அமேரிக்கர்களை விமர்சிப்பதோ அடிமுட்டாள்தனம். அமெரிக்காவின் சட்டதிட்டங்களைப் பொருத்தவரையில், தேவயாணி குற்றவாளி. சங்கீதாவின் துரோகத்தை அமெரிக்க சட்டதிட்டம் புரிந்துகொள்ளாது! அதைப்பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை! கவனமாகப் பார்த்தால் ஒரு இந்தியன் இன்னொரு இந்தியனுக்கு விளைத்த "அடிமைத்தனம்" ஒரு பக்கம்! அது ஒருவிதமான குற்றம்தான். இன்னொரு பக்கம் சந்தர்ப்ப சூழ்நிலையை சரியாக தனக்கு சாதகமாக பயன்படுத்தி தேவயாணிக்கு துரோகம் செய்த மலையாளி சங்கீதா இன்னொரு இந்தியன்.

இதற்கிடையில் அமெரிக்காவை திட்டுவதோ, அமெரிக்க சட்டக்காவலர்களை விமர்சிப்பதோ வெட்டி வேலை!

இரண்டு இந்தியர்களுக்குள் உள்ள "அப்யூஸ்" அல்லது "துரோகம்" என்பதை புரிந்துகொண்டு அமெரிக்காவை விட்டுத் தொலைங்கப்பா!

Friday, December 20, 2013

சங்கர் ராமன் செத்தது மாரடைப்பு நோயால்?

ராமபகவான், கிருஷ்ண பகவான், பார்வதி சேச்சி, சரஸ்வதி ஆண்ட்டி, சிவா அங்கிள், விஷ்ணு அண்ணா எல்லாருமா ஒண்ணா என் கனவில் வந்தா! வந்து என்ன சொன்னா தெரியுமா?




*****

பகவான் எல்லாரும் ஒண்ணா வந்ததும், இதை கேட்டுற வேண்டியதுதான் னு..

"என்னங்க இத்தனை தெய்வங்கள் நீங்கல்லாம் இருக்கீங்க! பாவம் ஒரு அப்பாவி பிராமணனைப் போட்டுத்தள்ளிட்டாணுக! பார்ப்பாணுக எல்லாம் தீர்ப்பை கேட்டுட்டு கம்முனு இருக்காணுக! இதெல்லாம் என்ன நியாயம்?"னு கேட்டுப்புட்டேன்

"சிவா அங்கிள் டிப்பார்மெண்ட் அது! அவர்ட்டயே கேளுங்க!" னு சொன்னார் விஷ்ணு அண்ணா!

"என்ன அங்கிள்? அழிவதெல்லாம் உம்மாலதான்னு சொல்றா? இப்படி தீர்ப்பை சொல்லிப்புட்டா? சங்கர் ராமன் செத்ததாவது உண்மையா? அவரை கொலைதானே செஞ்சா? அதுவும் இல்லையா? Someone has to pay for it, you know?.."

"என் பக்தன் சங்கர் ராமன் செத்தது உண்மைதான்..ஆனா.."

"ஆனா? என்ன அங்கிள்?"

"அவரு செத்தது மாரடைப்பால்! நாந்தான் அவர் வாழ்ந்தது போதும்னு அவர் உயிரை எடுத்தேன்!"

"என்ன அங்கிள், உங்க பக்தன் என்பதால இப்படி  கொலைகாரப் பசங்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்குறேள்?"

"இதெல்லாம் நாத்திகனான உனக்குப் புரியாது! பக்தர்களுக்கு மட்டுமே புரியும்!'

"ஆக, சங்கர் ராமன் மாரடைப்பால் செத்ததுக்கப்புறம் அவரை வெட்டினாளா? என்ன அங்கிள் இப்படி கதை விடுறேள்? என்ன நியாயம் இது?"

"ஐயோ ஐயோ! உங்களுக்கு என்னாச்சு?" என் மனைவி கத்தினதும் முழிச்சேன்!

அடச்ச்சே இது கனவா?!!




Tuesday, December 17, 2013

என்னை கொலைகாரனாக்க முயலும் தமிழ் சீரியல்கள்!

"நீயா நானா?" வில் என்னைக்கு  "எப்படி உடலைக்குறைத்து ஃபிட் டா இருக்கிறது?" என்பதுபற்றி ஒரு விவாதத்தையோ, இல்லைனா  "உடல் பயிற்சி, டயட் பற்றி"  ஒரு விவாதத்தையோ  உடல் பெருத்துக்கொண்டே போகும் மேதை நம்ம கோபிநாத் நடத்துறவரைக்கும் இந்த ஷோவைப் பார்க்கிறது இல்லைனு ஒரு முடிவுக்கு வந்தாச்சு!

சரி, "தெய்வம் தந்த வீடு" னு ஒரு சீரியல் ஒண்ணு டெய்லி போடுறாணுகளே என்னதாண்டா சொல்ல வர்ராணுகனு பார்த்தால்..

மாமியார்னு ஒண்ணு இருக்கு, அதுக்கு அப்புறம் வர்ரேன். அதோட சேர்த்து சீதானு ஒரு அழுமூஞ்சி, கூமுட்டை மருமகளையும், ப்ரியானு இன்னொரு வினைசிறுக்கி மருமகக் கேரக்டரையும் வச்சிக்கிட்டு டெய்லி எழவைக் கூட்டுறானுகப்பா. அந்த வீட்டில் மருமக சீதா என்கிறவ ரொம்ப பாவப்பட்ட ஜென்மமாம், அனாதையா வளர்ந்தவளாம்! ரொம்ப நல்லவளாம், ரொம்ப இண்ணொசண்டாம், ஆனா அவ ஒண்ணுவிட்ட அக்கா, அதான் அந்த வினைச் சிறுக்கி ப்ரியாவுக்கு நன்றிக் கடனுக்காக பொய் மூட்டைகளை அள்ளிவிடுவாளாம்! இது எப்படி இருக்கு? In order to cover venomous, wicked bitch Priya's bottom, she lies, manipulates and does every damn thing! But She(Seetha)  is SO INNOCENT!

அப்புறம் இந்த ப்ரியாச் சிறுக்கி இருக்கா இல்ல? அவ, இந்த சீதாக் கூமுட்டையை, ஒரு நாள் "லாப் டாப்பை" சுத்தம் செய்ய, அதை சோப் போட்டு கழுவச்சொல்லி கொடியிலே காயப்போடச் சொல்லுவாளாம்! உடனே இவளும் லாப் டாப்பை சோப் போட்டு வாஷ் பண்ணி கொடியிலே காயப்போடுவாளாம்! க்ளிப் எல்லாம் மாட்டி கொடியிலே லாப் டாப்பை காயப்போடுறதையும் காட்டுறாணுகப்பா!! இதையெல்லாம் ஒரு அரைமணி நேரம் ரசிச்சு ரசிச்சு எடுத்து இருக்காணுக!!!

அப்புறம் சித்ரானு ஒரு மாமியார் கேரக்டர். அந்தம்மாதான் இந்த எழவைத் தயாரிக்கிதா என்னணு தெரியலை. ஏதோ ஒரு நூற்றாண்டுக்கு முன்னால வாழ்ந்த பழைய காலத்து ஆந்திரா சமீன் மாமியார்மாதிரி அந்த வீட்டிலே மாமியார் ராஜியம் நடத்துறா அந்த மாமி!

அதுக்கடுத்து  இந்த சரவணன் மீனாச்சி சீரியலை இன்னும் போட்டு இழு இழுனு இழுத்து, இப்போ இன்னொரு ஜூனியர் சரவணன் மீனாச்சியை உருவாக்கி கொல்லுறாணுக!!

எப்படிப்பா இதுமாரி தமிழ் சீரியல் எல்லாம் தயாரிக்க இவனுகளுக்கு ஐடியா வருது?!!

இந்த எழவையெல்லாம் பார்த்தப்புறம் நம்ம பேசாமல் கெடைக்கிற நேரத்திலே நம்ம கடலைக் கார்னரையாவது தொடரலாம்னு தோணுது. :)

Monday, December 16, 2013

பதிவர் anand R க்கு தமிழ்மணம் தனி பகுதி ஒதுக்க வேண்டுகோள்!

யாருனு தெரியலை இந்த கமர்ஷியல் பதிவர் anand R  என்று சொல்லிக்கொண்டு திரிவது?? ஒரு அப்பாவி குழந்தைப் படத்தை ஒண்ணை மாட்டிக்கிட்டு ஒரு நாளைக்கு 10-20 பதிவுகளை தமிழ்மணத்தில் தட்டிவிட்டு, அந்தத் தளத்தில் எல்லா இடங்களிலும் கமர்ஷியல் தொடுப்புகளை கொடுத்து எழவைக் கூட்டுறான் இந்தாளு.

இந்தப் பதிவர், ஆனந் ஆர் எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி, இ மெயிலில் வரும் "spam" போலதான் இந்தாளுடைய கமர்ஷியல் பதிவுகள் இருக்கின்றன.

தமிழ்மணம் நிர்வாகிகள் இவருடையத் தமிழ்த்தொண்டைப் பாராட்டி இவருக்கென்று தமிழ்மணத்தில் ஒரு தனிப் பகுதி ஒதுக்கி இவரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

எங்கே இருந்துப்பா வர்ராணுக இவனுக?  இதுமாரி கமர்ஷியல் நிறைந்த தளம் ஆரம்பிச்சு, தமிழ்த் தொண்டு ஆற்றி தமிழ்மணத்தின் தரத்தை குறைக்க?

இந்தப் பதிவரை ஏதாவது செய்யுங்கப்பா! நன்றி!

Sunday, December 15, 2013

வித்யா,சோமு,காமினி! (மெச்சூர் வாசகர்களுக்கு மட்டும்)

"மனைவியென்றால் ரொம்ப இண்ட்டிமேட், ஒருவன் தன் எல்லா ஆசைகளையும், வீக்னஸையும் மறைக்காமல்ச் சொல்லி தன் காமதாபத்தை தீர்த்துக்க ஒரு வடிகால் அவள்" னு சோமுவிடம் எந்த மடையன் சொன்னான்னு தெரியவில்லை! கண்டவன் சொன்னதையெல்லாம்  நம்பி தன்னுடைய "பாண்டஷி உலகை" மனைவி வித்யாவிடம் இருட்டில்  உளறி இன்னைக்கு நாசமாப் போயி நடுத்தெருவில் நின்னான் சோமு!

வக்கீல், கோர்ட், அது இதுனு போயி கடைசியில் எல்லாம் ஒரு வழியா நல்லபடியா  முடிஞ்சது. அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இருப்பதால தேவையில்லாத சொந்தக்காரர்கள் ஒப்பாரி, செண்டிமெண்ட்ஸ், நண்பர்கள் அறிவுரைகள் எதுவும் இல்லாம ஒருவழியா "நல்லவிதமாக" விவாகரத்தானது.

இவர்களுக்கு இல்லரவாழ்வினால் ஒரே ஒரு ஆண் குழந்தை. பையன் ப்ரவீனும், "அம்மா, அம்மா" னு சோமுவுக்கு "பை" சொல்லிவிட்டு வித்யா பின்னாலேயே ஓடிட்டான்.  எல்லாம் முடிஞ்சு இப்போ ஒரு வருடத்திற்கு மேலாகுது. விவாகரத்து "அஃபிஸியல்" ஆகிவிட்டது.

****

அன்று வேலை முடிஞ்சு வந்து ஈவனிங் "ஜாகிங்" போயிக்கொண்டிருந்த சோமு, வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தான். "ஜாகிங்" போகக்கூட எட்டு வருடமாக இழந்திருந்த அவனுடைய தனிமனிதச் சுதந்திரம்  கடந்த ஒரு வருடமாக திரும்ப கிடைத்து இருந்தது. சினிமா, பார், டென்னிஸ் க்ளப், வொர்க் அவ்ட், அரை மாரத்தான் ஓடுறது னு தன் நேரத்தை இப்போதெல்லாம் "அர்த்தமாக" செலவழித்துக் கொண்டு இருந்தான், சோமு.

போன வாரம் ஈவனிங் இண்டோர் ஸ்விமிங் பூல் ல காமினியைப் பார்த்தான்.   எக்ஸ் வைஃப் வித்யாவுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் அவள். எதிரும் புதிருமாக அவளைப் பார்த்ததும், "இவ எங்கே இங்க வந்தாள்?"னு யோசனையுடன் ஒரு  "ஹாய்" சொல்லிட்டு ஒதுங்கி லாக்கர் ரூமுக்குள்  நுழைந்து விட்டான்.

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி அங்கே பார்த்தான். அவளும் அதே சிட்டி செண்டருக்குத்தான் வொர்க் அவ்ட் பண்ண வருகிறாள்னு  புரிந்தது அவனுக்கு.


*****

சோமு-வித்யா தம்பதிகளுக்குள் கவர்ச்சி, காதல், காம லீலைகள் எல்லாம் ஆடி அடங்கியவுடன், ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடு தலைதூக்கியது. அடுத்து  ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவர் குறையை இன்னொருவர் சொல்லிக்காட்டி அசிங்கச் சண்டை போட ஆரம்பித்தபோது,  சோமுவுடைய வரம்புமீறல் மற்றும்  அவனோட எல்லா வீக்னெஸுகளும் தெரிந்த வித்யா அவனை  எளிதில், குற்றவாளியாக ஆக்கி வாய்ச்சண்டையில் வென்றாள். மனைவி என்று  நம்பி  அவளிடம் படுக்கை அறையில் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் அவனுக்கு எதிராக அவள் திருப்பும்போது சோமுவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"இதெல்லாம் துரோகம்டி வித்யா! ஆம்படையான் படுக்கையறையில், படுக்கும்போது  சொன்னதையெல்லாம் எனக்கு எதிரா ஆக்குறியே! உன்னை பகவான் மன்னிப்பானா?" என்றெல்லாம் வசனம் பேசிப்பார்த்தான் சோமு.

அவளோ  "நானும் எத்தனை காலமா பொறுமையா பார்த்துண்டே இருந்தேன். ஒரு நாளாவது, ஒரு நேரமாவது, ஏதாவது நல்லவிதமா சொல்லுவேளானு ஏங்கினேன்! ஒவ்வொரு நாளும் அந்த இருட்டில் என் ஆசை கனவை எல்லாத்தையும் நொறுக்கிப் பாழாக்கிட்டேள்! இன்னும் இருண்டுகொண்டேதான் போகுது" என்றாள் அழுகையுடன்.

"உனக்காகத்தானடி எல்லாம் செஞ்சேன்! உன்னை சந்தோஷப்படுத்தனும்னு" என்றான் கோபத்துடன்.

"இந்தா பாருங்கோ! அந்தக் கண்றாவியை எல்லாம் எனக்காக செஞ்சேன்னு சொன்னேள்னா,  அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்!"

"ஆமடி, ஆம்படையான், அவனோட ஆசையை எல்லாம் ஆத்துக்காரிட்ட சொல்லி தீர்த்துக்காமல்,  யாருட்டடி சொல்றது?"

"ஆசையில்லை அதெல்லாம்! உங்களுக்கு காமப் பித்து பிடிச்சு இருக்கு! நேக்கென்ன மனமருத்துவமா தெரியும்? உங்க கண்றாவி காமப் பித்தையெல்லாம் கேட்டு, அதற்கு தீர்வு சொல்ல?"

"ஊரு ஒலகத்துல எல்லா ஆம்படையானும் இப்படித்தாண்டி இருப்பா!"

" உங்களை மாதிரியா? நானும் ருக்மிணி. பத்மா, காமினி எல்லார்ட்டையும் இந்தக் கொடுமையை எல்லாம் சொல்லி அவா ஆத்துக்காரர பத்திக் கேட்டுப் பார்த்தேன். அவா எல்லாம் "என்னடி சொல்ற வித்யா?" "இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லைடி!" னு அதிசயமா கேக்குறா! அவா ஆத்துக்காரர் எல்லாம் உங்களை மாரி காமப்பித்துப் பிடிச்சு அலையலை. அவா எல்லாம் பக்கா  ஜெண்டில் மேனாக்கும்"

"அப்போ யாராவது வப்பாட்டியிடம் இல்லைனா தேவடியாளிடம் போயித்தான் என் ஆசையை எல்லாம் தீர்த்து இருக்கனும்ங்கிறயாடி? அப்போ எதுக்குடி நீ? சும்மா சமச்சுப் போடவா?"

"இனிமேல் எவட்ட வேணா போங்கோ! நேக்கென்ன? உங்களைத்தான் நான் ஒரேயடியா தலை முழுகியாச்சே?"னு சண்டை போட்டுட்டு அவ  எல் எ க்கு போனவதான். அதோட அவ திரும்பி வரவே இல்லை! ப்ரவீன்கூட அவனை கால் பண்ணுவது இல்லை!

 தனிமரமானான் சோமு!

****

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி ஜிம்ல பார்த்தான். வேற நண்பர்களிடம் கால்ப் பண்ணி அவளைப்பத்தி விசாரித்தபோது  காமினிக்கும் அவள் கணவன் ராஜ்க்கும் டைவோர்ஸ் ஆகிவிட்டதாக சொன்னார்கள். அவனுக்குத் தெரிய ரெண்டு பேருக்கும் குழந்தையும் கெடையாது!

ஈவனிங்  பக்கத்தில் இருந்த "கால்டிஸ் காஃபி" ஷாப்ல  மறுபடியும் காமினியைப் பார்த்தான் . அவள் தனியாக வந்திருந்தாள். காஃபி வாங்கிக்கொண்டு சோமுவைப் பார்த்து ஸ்மைல் பண்ணிக்கொண்டு அவன் அருகில் வந்தாள். அவனுக்கு அவள்  இவனை  "ஸ்டாக்" பண்ணுவது போலக்கூட  ஒரு பிரமை.

"ஹாய் சோமு! ஹவ் ஆர் யு?" என்றாள் காசுவலாக.

"ஐ அம் ஃபைன், காமினி. ஹவ் ஆர் யு?"

"டு யு மைண்ட்?"னு அவன் உக்காந்து இருந்த டேபிலில் எதிரில் அமர்ந்தாள்.

 அவள் ஒரு மாதிரியா ஸ்கேர்ட் போட்டு செக்ஸியாக இருந்தாள். அவளுக்கு ரொம்ப கவர்ச்சியான மார்பகங்கள். மேலும் அவள் உடலில் இருந்து வந்த அவள் போட்டிருந்த பர்ஃப்யூம் தனிமையில் வாடும் இவனை ஏதோ செய்தது. கொஞ்ச நேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.

"ஆமா, உங்க எக்ஸ் வித்யா எங்கே இருக்கா இப்போ?" என்று அமைதியை உடைத்தாள் அவள்.

"டைவோர்ஸ்க்கு அப்புறம் "எல் எ" க்கு மூவ் பண்ணிட்டாள். அவளோட ப்ரதர் அங்கே டாக்டரா இருக்கார். ஹி இஸ் சப்போர்டிங் ஹெர்"

"ரியல்லி?"

"ஏங்க, வித்யா  உங்க ஃப்ரெண்ட்தானே? அதிசயமா என்னிடம் இதையெல்லாம் கேக்குறீங்க?" என்றான் சோமு ஒரு மாதிரியான வாய்ஸில்.

"இல்லை எனக்கும் ராஜ்க்கும் நெறையா பிரச்சினை வந்ததும், நான் யாரையும் கால் பண்ணலை.  ஐ லாஸ்ட் டச் வித் ஹெர்" என்றாள்.

"குழந்தை எதுவும் உண்டா உங்களுக்கும் ராஜ்க்கும்?!"

"இல்லை, சோமு! அதான் எல்லாம் ஈஸியா முடிந்தது. நான் இங்கே ரெண்டு ப்ளாக் தள்ளி ஒரு அப்பார்ட்மெண்ட்லதான் இருக்கேன். ஐ அம் லிவிங் அலோன்" என்றாள் அழுத்தமாக.

"ராஜ், ஜெண்டில்மேன் ஆச்சே? என்ன ஆச்சு?"

"ஜெண்டில்மேன் எல்லாம் ஃப்ரெண்டா இருந்தாத்தான் நல்லாயிருக்கும். புருசனா இருந்து டெய்லி அரச்ச மாவையே அரச்சா  ரொம்ப போர் அடிக்கும்!"னு ஒரு மாதிரியாகச் சிரிச்சாள் காமினி.

ஏற்கனவே அவள் உதடுகள் அவனை என்னவோ செய்தது. அவள் இதுபோல் பேசுவது அவனை மேலும் உன்மத்தம் கொள்ளச் செய்தது.

"சரி, நான் போயிட்டு வர்ரேன்ங்க. ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு"னு புறப்பட எத்தனித்தான்.

"உங்க ஃபோன்  # கொடுங்களேன், சோமு?" என்றாள் காமினி.

"இது என் ஹோம் #"னு அதை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

*************
அன்று இரவு  டின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போகும்போது, அவன் ஹோம் ஃபோன் அலறியது.

"ஹல்லோ! நாந்தான் காமினி"

"சொல்லுங்க "

"உங்ககிட்டு ஒண்ணு கேக்கனும்?"

"என்னங்க?"

"இல்லை, உங்க எக்ஸ் வித்யா உங்களைப் பத்தி நெறையா கம்ப்ளைய்ன் பண்ணுவா..'

"என்னனு?"

"நீங்க ரொம்ப மோசம் அது இதுனு."

"ஆமா நான் மோசம்தான்"

" இல்லை இல்ல, படுக்கையறையில்  ரொம்ப "டேர்ட்டி"யா பேசுவீங்களாமே?"

" "

"உண்மையா, சோமு?"

" "

"இல்ல, அதுமாதிரிப் பேசினால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்"

"சாரி, காமினி, ஐ ஹாவ் டு ஸ்லீப் நவ்" னு அவசரமாக ஃபோனை ஹேங் அப் பண்ணிட்டான் சோமு.

சோமுவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே இந்த விசயத்தில் ஒருத்திட்டப்பட்ட அவமானம் வாழ்நாளுக்கும் போதும். திடீர்னு இப்போ வந்த இந்தக் காமினியை நம்பி எதையாவது ஒளறிட்டு எதுக்கு வம்பு? னு அவனுக்கு அந்த வினாடி  புத்தி வந்துவிட்டது. ஆனால் ஒரு கணம்தான் அப்படி தோன்றியது அவனுக்கு. ஃபோனை கட் பண்ணிய மறுகணமே, ஏதோ தவறு செய்துவிட்டது போல உணர்வு வந்து அவனைக் கொன்றது.

ஒரு வேளை வித்யா போலில்லாமல் காமினி வேற டைப்பாக இருந்து தன்னுடைய உளறல்களையெல்லாம் ரசித்தால்?  படுக்கை அறையில் நான் இழுக்கும் இழுவைக்கெல்லாம் சரியாக வருவாளோ? என்னுடைய  தேவைக்கெல்லாம் காமினிதான் சரியான மருந்தோ? அவளுக்கும் என்னைப்போலவே இதேபோல் காமப்பித்து பிடிச்சு இருக்குமோ? அதனால்த்தான் ராஜுடன் அவளால் திருப்தியாக நிம்மதியாக வாழ முடியவில்லையோ? இவளோடு இணைந்தால், ஒருவர் இன்னொருவருவருக்கு மருந்தாக ஆகி இருவரும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறதோ?  என்று குழம்பி குழம்பி தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து கடைசியில் எப்படியோ அன்று இரவு தூங்கினான் சோமு.

அடுத்த நாள், ஈவ்னிங்,  அதே நேரத்தில் வழக்கம்போல் காமினியை "ஜிம்" ல பார்த்தான். ஆனால் அவளோ, இன்று அவனுக்கு ஒரு "ஹாய்"கூட சொல்லாமல் வேண்டும் என்றே சோமுவைத் தவிர்த்துவிட்டு கண்டுக்காமல் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். அடுத்து ஒரு முறை அவன் லாக்கர்க்கு சொல்லும் வழியில் அவளை மறுபடியும் பார்த்தான். அப்போவும், அவனை  தவிர்த்து வேகமாக அவன் முன்னால் நடந்துபோனாள். அப்படி நடந்துபோகும்போது  காமினியின் பின்னழகு அவனை கேலி செய்து கொண்டே நகர்ந்தது. சோமுவால் அவள் ஆடைகளை கலைந்து அவளை நிர்வாணமாக நடக்கவிட்டு அவள் பின்னழகை மனக்கண்ணால் வேடிக்கை பார்க்காமல் இருக்கமுடியவில்லை .

பாவம் சோமு,  "சரி இதோட போய் தொலையிறா சனியன்,  நமக்குக் கிடைத்த  சுதந்திரம் பறிபோகாமல் இருக்கிறதே"னு காமினியை உதறித்தள்ளிவிட்டு  சந்தோஷப்படமுடியாமல் அடி முட்டாளாகிக்கொண்டு போனான். அதென்ன வென்று புரியவில்லை, அவனை அவள் தவிர்ப்பதால் அவள் இன்னும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாள். தனிமையில் துணையில்லாமல் வாடும் அவனுக்கு தானாகவே அவனை நோக்கி வந்த  அவள் ரொம்பவே தேவைப்பட்டாள்.  அன்று இரவு படுக்கையில் படுத்த அவன் அவளை  தன் மனதில் கொண்டு வந்து ஒவ்வொரு ஆடையாகக் கலைந்து  நிர்வாணமாக்கி காமினி அழகை மறுபடியும் ரசிக்க ஆரம்பித்தான்.

அமுதம்போல் அவன் ஃபோன் இனிமையாக இசைத்தது

"ஹல்லோ?"

 காமினிதான்!

"what did you think? I am a whore or something, you bastard!" என்று கத்தினாள்.

"இல்லங்க.."

" Dont you ever hang up on me! Do you UNDERSTAND?"

"சாரிங்க, காமினி! நான் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன்"

"என்ன குழப்பம்?"

"இல்லை திடீர்னு என்னைப் பத்தி எல்லாம் தெரிந்தது போல.. பேசினீங்க..அதான்"

"நான் சைக்காலஜி டீச் பண்ணுறேன். அதான் என்னுடைய வேலை! மேலும் உங்க ஆத்துக்காரி உங்களப் பத்தி எல்லாத்தையும் என்னிடம் புட்டுப் புட்டு வச்சுட்டா"

" "

"Are you there?"

"Yes"

"நான் சொல்றதைக் கேளுங்க, சோமு!"

"சரிங்க"

"I know we are made for each other!"

"எப்படிச் சொல்றீங்க?"

"நான் ஈவனிங் "ஜிம்" ல உங்களைக் கடந்து முன்னால போனேன் இல்லை? நீங்க லாக்கர் ரூம் போகும்போது?"

"ஆமா?"

"பின்னால இருந்து என்ன பண்ணினீங்க அப்போ?"

" "

"Be honest and tell me. Did you look at my butt?"

" "

"Did you undress me and watched my naked butt in your fucking mind or not?"

" "

"உண்மையை சொல்லுடா, பொறுக்கி!"

"காமினி"

"வாட்?"

"உன்னை நான் மனசுக்குள்ளேயே வேறென்னவெல்லாம் செஞ்சேன்னு தெரியனுமா, உனக்கு?"

"யெஸ்"

"நாளை நைட் நீ உன் வீட்டிலேதான் இருப்பியா?"

"ஆமா"

"உன் வீட்டிற்கு வந்து நானே செஞ்சு காட்டுறேன். சரியாடி? தேவடியா!'

"இப்போத்தான் வித்யா சொன்ன சோமு மாதிரி பேசுறீங்க..என்னால அவ்ளோ நேரம் பொறுமையா இருக்க முடியாது"

"நீ சைக்காலஜி டீச்சர்னு சொன்ன? எப்படியோ ஒரு நாள் சமாளி."
----------------------------

அடுத்த நாள் காலையில் வேலைக்குப் போகுமுன்  சோமு சீரியல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.. யாரோ வீட்டு பெல்லை அடிச்சாங்க. யாருடா இப்போ?னு யோசனையுடன் கதவைத் திறந்தான்.

"டாடீ!" னு  ப்ரவீன் கத்தினான். அருகில் வித்யா நின்னுகொண்டிருந்தாள்.

ப்ரவீனை தூக்கி வைத்துக்கொண்டு, "என்ன திடீர்னு?" என்றான் வித்யாவிடம்.

"அண்ணாவுக்கும், மன்னிக்கும் ரொம்ப பிரச்சினை அதிகமாகி டெய்லி சண்டை போடுறா. டைவோர்ஸ் பண்ணிக்கப்போறாளாம்! அங்கே இருந்தால் ப்ரவீன் படிப்பும், மனசும் ரொம்ப  பாதிக்கப்படுது.."

"ஈவ்னிங் பேசலாமா? நான் இப்போ வேலைக்குப் போகனும்!" என்றான் சோமு.

"ஈவ்னிங் சீக்கிரம் வாங்கோ! நான் நெறையா பேசனும்"னு மிகவும் அன்பாகச் சொன்னாள், வித்யா!

வேலைக்குப் போக தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு யோசனையுடன் காரில் அமர்ந்து புறப்பட்டான், சோமு!

-முற்றும்

இது இந்தத்தளத்தில் ஏற்கனவே வந்தஒரு மீள் பதிவுதான். Older version has been edited and modified a bit.

Thursday, December 12, 2013

பாரதியின் பிறந்தநாளை மறந்த தமிழறிஞர்கள்! கவிஞர்கள்!

போன வருடம் 2012ல ரஜினி பிறந்த தினத்தென்று பதிவுலக மாமேதைகள், கவிஞர்கள் (நம்ம கவிஞர் மதுமதியும்தான்), ரஜினியைத் தூக்கிக் கொண்டாடும் தமிழ் சமூகம், மீடியா பாரதியை  மதிக்கலைனு என்று ஒரே ஒப்பாரி வைத்தார்கள்.

இவர்களுக்கும் ரஜினி பொறந்தநாள் அன்றுதான் பாரதி பொறந்தநாள் ஞாபகம் வந்ததோ என்னவோ!என்ற கேள்வி எழாமல் இல்லை!

ரஜினியை, கரிப்பதை விட்டுப்புட்டு ஒழுங்கா பாரதி பொறந்த தினத்திற்கு அவரை வாழ்த்துவதுதான் பெரிய மனுஷனுக்கு அழகுனு இவர்கள் ஒப்பாரிப் பதிவில் இட்ட பின்னூட்டத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது.

சரி, இந்த முறை (2013) என்ன பண்ணுறாங்கனு பார்ப்போம்னு காத்திருந்தால் எனக்குக் கிட்டியது ஏமாற்றமே! :(

இந்த வருடம் பாரதி பிறந்ததினத்தென்று அவருக்கு ஒரு வாழ்த்தோ,  நினைவுகூர்தலோ எதுவுமே இவர்கள் வலைதளத்தில் காணோம்!

2012ல டிசம்பர் 12 வாக்கிலே  சில வலைபதிவுகளில் வந்த பதிவுகள் சில உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது!

பாரதியும் சூப்பர் ஸ்டாரும்- ரமணி சார் பதிவு!

ரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை- கவிஞர் மதுமதி


இந்த வருடம் டிசம்பர் 11ல இவர்கள் பாரதியை வாழ்த்தி ஏதாவது பதிவு எழுதினாங்களா?னு நீங்கதான் சொல்லணும்!

Wednesday, December 11, 2013

ஜெயதேவ் பண்டாரமும், அவனோட வெளக்கெண்ணை பதிலும்!

ஆமா, கடவுளை உருவகிச்சது யாருடா, பண்டாரம்?

\\மனிதமனம் கடவுளை உருவகிக்கவில்லைனா, யாரு உருவகிச்சா?\\
பண்டாரத்தின் பதில்: இறைவன் ஆரம்பமும் முடிவும் இல்லாதவன், அவன் எப்போதும் இருப்பவன், அவனை உருவாக்க யாருடைய மனமும் தேவையில்லை, பிணமும் தேவையில்லை.

பண்டாரத்தின் அகந்தையைப் பார்த்தீங்களா? 

கொஞ்சம்கூட யோசிக்காமல் என்னவோ எல்லாம் தெரிந்த பெரிய புடுங்கிமாரி பதில் சொல்றான்!

இவன் ஒரு அடிமுட்டாள்னு காட்ட இந்த ஒரு உதாரணம் போதும்.  

கொஞ்சம் யோசிங்க, இங்கே "கடவுள்" இப்படிப் பட்டவன்னு வரையுறுப்பது இந்தப் பண்டாரம்தான். இது எவனுக்காவது புரியலையா? சரி இந்தப் பண்டாரம் யாரு? மனுசனா? பகவானா? இவன் பதிவில்/பதிலில் இவன் மனம் பேசுதா? இல்லை இவன் பொணம் பேசுதா?

இந்த ஜெயதேவ் பண்டாரம் சுத்தமான மூளை மழுங்கிய நிலையில் இருப்பதால், இதைச் சொல்வது, தான்தான் என்கிற சுயநினைவுகூட இல்லாமல் பேசுறான் இந்த வெளக்கெண்ணை!

இவனையெல்லாம் வளரவிடாமல் களை எடுக்கலைனா தமிழ் சமூகம் மட்டுமல்ல, தமிழ் மணமும் நாற்றமடிக்கும். இந்தமாரி, தன்னிலைகூட  உணராத முட்டாப்பயளுகளுக்கு ஜால்ரா அடிக்கிறவனுகளையும் கொண்டுபோய் பொதைக்கணும்!

ஆமாம், "ஜெயதேவ் பண்டாரமும், அவனோட வெளக்கெண்ணை பதிலும்!" இதுதான் பதிவின் தலைப்பு!

Monday, December 9, 2013

ஆத்திக அதிமேதாவிகளின் விதண்டாவாதம்!

கடவுளை உணர்ந்தது மனிதமனமா? இல்லை ஆட்டுகுட்டி மனமா? என்ற கேள்விக்கு "மனிதமனம்" என்பதுதான் பதில். இல்லையா? விலங்குகளுக்கு கடவுள் இருப்பது தெரியுமா? தெரிந்தும் இருக்கலாம்! தெரியாமலும் இருக்கலாம். நமக்கு விலங்குகள் பேசுவதும், வணங்குவதும் தெரியாது, புரியாது.

"ஆத்திக பண்டாரங்களை என்னைக்குமே திருத்த முடியாது!  விவாதம் என்கிற பேரில் எதையாவது ஒளறிக் கொட்டுங்கள்" என்கிற உண்மையைச் சரியாக உணராமல், "காமக்கிழத்தன்" என்கிற பதிவர், கடவுள்சம்மந்தமான சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

உடனே, நீ கேள்வி கேட்டுப்புட்டியா, இந்தா என் பதில்கள்னு நம்ம ஆத்திகச் சண்டியர் செஜதேவ், பதில்னு எதையோ உளறிக்கொட்டி, "நாத்திகனெல்லாம் கூமுட்டைனு இவரு நிரூபிச்சதா  நினைப்பதுடன், சில ஆத்திகப் பண்டாரங்களிடம் சான்றிதழ்களையும் பெற்று வெற்றியடைந்துள்ளார்". இந்தச் சான்றிதழ்களை இவர் பகவானிடம் கொண்டுபோய்க் காட்டி, பகவானை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அவர் மனதில் இடம் பிடித்து உள்ளார் இந்த ஆத்திகச் சண்டியர். இருந்துட்டுப் போகட்டும்!

சரி, இவர் பதில்னு என்ன சொல்கிறார்னு பார்ப்போம்..

மகான் ஜெயதேவ் உளறியதில் ஒரு பகுதி இது.
****மனித மனம் பொதுவாக தன்னுடைய அனுபவத்தில் எதைப் பார்க்கிறதோ அதை வைத்தே மற்ற எல்லாவற்றையும் ஒப்பிட்டுத் தீர்மானிக்கும்.  அதைத் தாண்டி அதனால் யோசிக்க முடியாது.  இங்கே நாம் காணும் விஷயங்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்தவையாக இருக்கும்.  உதாரணத்திற்கு 'தந்தை'என்று சொன்னால் மகன்/மகள் என்று ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் தந்தை என்பதற்கே பொருள் இல்லாமல் போய் விடும்.  அதே போல மகன் என்று இருந்தால் தந்தை என்ற ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் மகன் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.  இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை.   இதைப் போல நாம் இங்கே காணும் அனைத்தும் Relative Truth என்று ஆங்கிலத்தில் சொல்லப் படும் ஒன்றை ஒன்று சார்ந்த விடயங்கள். ஒரு உண்மை இன்னொரு உண்மையை சார்ந்து நிக்கிறது, ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றும் இல்லை. ஆனால் இறைவன் என்பவன் Absolute Truth, பரம்பொருள். ****


என்ன சொல்றார், இந்த மகான்?

இந்த மேதாவி மனிதமனம் பற்றி பேசுகிறார். மனிதமனம் ஒன்றை புரிந்துகொள்ளும்விதம் பற்றி விளக்கம் அளிக்கிறார் இந்த வெளக்கெண்ணை மகான்!

இதற்கு உதாரணம்னு மனிதமனத்தின் உணருதலில் "தந்தை" "மகள்" தாய்" "காதல்"  "கற்பு" "அன்பு" "பாசம்" போன்றவை எல்லாம் "ரிலேடிவ் ட்ருத்" தாம். ஆனால் "கடவுள்"என்கிற இன்னொரு மனிதமனத்தின் பிதற்றல் மட்டும் "அப்சொலூட் ட்ருத்"தாம்!

இந்த மகான் மனிதனா? இல்லை மண்ணாங்கட்டியா?   இல்லை பகவானா?

என்னுடைய புரிதல்: இந்தாளும் ஒரு மனுசந்தான்! இவர் உளறுவதும் மனிதமனத்தின் மனப்பிதற்றல் தான்! ஆக "கடவுள்" என்று இவர் உளறுவதும் இந்தத் தனி மனிதனின் பிதற்றல்தான்! மனிதமனம் பிதற்றும் ("கடவுளை") மட்டும் ஏன்  "Absolute Truth" என்று பிதற்றுகிறார் இந்த அரைவேக்காடு???

மனிதமனம் பத்தி ஒளறும் இந்தப் பண்டாரத்திற்கு தான் ஒரு மனிதன் என்கிற சுயநினைவே இல்லை! தான் உளறும், தான் பேசும் "கடவுளும்" மனிதமனத்தின் பிதற்றல்தான் என்கிற உணர்வும் இல்லை!

* ஏன்ப்பா இந்தாளுக்குக் கடவுளை அறிமுகப்படுத்தியது யார்?

என்னுடைய புரிதல்:  இவருக்குக் கடவுளை உணர வைத்ததும் இன்னொரு மனிதன் எழுதிய புத்தகமோ, சொற்பொழிவோ, இல்லை அர்ச்சனையோதான்!  இதைக்கூடச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எல்லோரையும் கூமுட்டை என்று உளறுகிறது இந்தக் கூமுட்டை!

"கடவுள்" என்கிற புரிதலும் மனிதமனத்தில் உருவாகி, மனிதமனத்தால் புரிந்து கொள்ளப்பட்டு, ஒரு மனிதனிடமிருந்து இன்னொருமனிதனுக்குப் பரவிய "ஒரு தொற்று நோய்"தான் என்பதை இந்த கூமுட்டை ஏன் உணரமுடியவில்லை???

"கடவுள் பக்தி" என்னும் மனிதமன நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வியாதியஸ்தந்தான் இந்த ஜெயதேவ் என்னும் பண்டாரமும்!  

அந்த பக்தி என்னும் வியாதி முற்றிப்போய், இந்தப் பண்டாரம் உளறும் உளறல்களில், தானும் ஒரு மனிதந்தான், தான் உளறும்  "கடவுளும்" மனிதனின் பிதற்றல்களில் ஒன்றுதான் என்றுகூட புரியாமல், என்னவோ தானே "கடவுள்" என்பதுபோல் வியாக்யாணம் பேசும் ஒரு கூமுட்டைதான் இந்தாளு!

ஜெயதேவ் is talking about "relative truth"! When it comes to "God" which should be another RELATIVE TRUTH discovered by human mind , he calls that as "absolute truth" for his convenience. His same "senseless mind" is the one came up with the "God concept" as well. As it comes from same "dead mind" of his, we should call "God" as relative truth as well. 

That is as simple as that!

Friday, November 22, 2013

தமிழ் கலாச்சாரத்தில் நடு இரவில் இருட்டில் இருவர்!

என் நண்பன் சாமி வசிக்கும் தெருவில் வாழும் அம்மா அது.  ஒரு 46 வயது இருக்கும். எதிர்த்தாப்பிலே நடந்து வந்தது.  அது பேரெல்லாம் எதுக்கு?"

"அந்த அம்மா ரொம்ப மோசம்டா" என்று என் காதைக் கடித்தான் சாமி.

"ஆமா யாரைத்தான்  நல்ல அம்மானு நீ சொல்லியிருக்க சாமி?"

"இப்பப்பாரு என்னைப்பார்த்தால் பயந்து நடுங்கும் பாரு !" என்றான். அத்துடன் அந்தம்மா இவனை தவிர்க்க முடியாத படி நின்றான். அவன் சொன்னதுபோலவே சாமியைப் பார்த்தவுடன் ஏதோ பேயறைந்தது போல் அது பயந்து ஒதுங்கியது போலதான் எனக்கும் தோணுச்சு.

"என்னடா சாமி? ஏன் இப்படி உனைப்பார்த்து பேயைப் பார்த்ததுபோல் பயப்படுது?" என்றேன் நான்.

"அதை ஏன் கேக்கிற? அதுக்கு நம்ம வயதில் பையன் இருக்கான்டா. ஓர் பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டு இருக்கு. ஆனால் தரங்கெட்டதனமா நடந்துகொள்கிறது.."

"என்னடா சொல்ற? எதுவும் தெருச் சண்டையில் இஷ்டத்துக்குப் தாறுமாறாப் பேசுமா? உங்க தெருலதான் பொன்மொழியெல்லாம் அதுலதானே வரும்?  "நீ அவனை வச்சிருக்க, இவனை கூட்டி கொடுத்தது தெரியாதா?" னு இஷ்டத்துக்கு திட்டுவாங்களே? அது மாரிப்பேசுமா சண்டையிலே?" என்றேன் நான்.

"அதாவது பரவாயில்லை. இது அதைவிட மோசம்"னு மறுபடியும் புதிர் மேலே புதிர் போட்டான் சாமி.

"என்னனு சொல்லித் தொலைடா, சாமி"

"இதைக்கேளு!  ஒரு நாள் சக்கண்ட் ஷோ முடிஞ்சு வந்து இங்கே நின்னு வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இருந்தோம். ஒரு 20 வயதுப்பையன் இந்த சந்துலயிருந்து வெளியே வந்தான். அவன் யாருனு கவனிச்சுப் பார்ததேன். அவன் யாருனு தெரியும் எனக்கு. அவன் இந்தத் தெரு இல்லை. என்னடா இன்னேரத்திலே ஏண்டா லேடீஸ் பொது டாய்லெட் பக்கம் இருந்து வருகிறான்? னு நாங்க பேசிட்டு விட்டுட்டோம்.  ஆனால் நான் அதோட விடலை சரினு அவன் மேலே ஒரு கண்ணு வச்சிட்டு இருந்தேன். இன்னொரு நாள் நைட் இதே மாரி நைட் ஒரு மணி இருக்கும் அங்கேயிருந்து வெளிய போனான். அவன் போன அப்புறம் கொஞ்ச நேரத்தில் அதே சந்திலிருந்து இந்தம்மாவும்  வெளிய வந்து அவங்க வீட்டுக்குப் போச்சு..இதில் இன்னொரு விசயம் என்னனா இந்த அம்மா புருஷனிடம்தான் இந்தப் பையன் ஏதோ வேலை செய்றான். அடிக்கடி அவங்க வீட்டுக்கு வருவான். எனக்கு என்னடா எதோ நடக்குது போல னு சந்தேகம் வந்துச்சு"

"நாசமாப் போச்சு போ."

"அப்புறம் ஒரு நாலு நாள் இருக்கும், அன்னைக்கு தெருல ஏதோ கோயில் திருவிழா நடந்துச்சு. திருவிழா எல்லாம் முடிஞ்ச பிறகு நைட் அதே பையன் அந்த சந்துக்குள்ள சுத்திப் பார்த்துட்டு யாருக்கும் தெரியாமல்ப் போனான். கொஞ்ச நேரத்திலே அந்தம்மாவும் அதே சந்துக்குள்ள் போச்சு. நானும் என் ஃப்ரெண்டும் போய் ரெண்டு பேரையும் கையும் களவுமா பிடிச்சாச்சு!"

"அடப்பாவி!   ரெண்டுபேரை நிம்மதியா சந்தோஷமா இருக்க விடமாட்டியா? "

"அவனை ஒரு அறை அறைஞ்சி. "இந்தப்பக்கம் உன்னை இனிமேல் பார்த்தேன் கொன்னேபுடுவேன்!" னு  அனுப்பிட்டு. இந்த அம்மாவ, "ஏய் உனக்கு வயசு என்ன? இந்த வயசுல என்ன இதெல்லாம்?" னு கேட்டேன். என்னத்தை சொல்ல போ!  கையெடுத்து என்னை கும்பிடுதுடா! "யார்ட்டையும் சொல்லிராதே" னு கெஞ்சுது. சரி, "இனிமேல் இப்படி செய்யாதே! வயசுக்கேத்தாப்பிலே நடந்துக்கோ" னு திட்டி, அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டு வந்துட்டேன். என்ன பொம்பளைடா இதெல்லாம்?" என்றான் சாமி வருத்தமும் கோபமுமாக.

"ஏண்டா டே! பாவம் அவங்க சந்தோஷத்தைக் கெடுத்து, அந்தமம்மாவை சாகிறவரைக்கும் உன்னை மறக்க முடியாத அளவுக்கு ஆக்கிப்புட்ட!" என்று கேலியாக அவனிடம் நான் சொல்லி சமாளிச்சாலும் உள்மனதில் "ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? அதுவும்  இந்த வயதில்?" னு மனதில் ஒரு சோகமான பரிதாபமான உணர்வுதான் வந்தது எனக்கும்.

"விட்டுத் தொலைடா!  உன்  மிரட்டலில் "தூக்குக் கீக்கு போட்டு செத்திறப்போது பாவம்!" என்றேன் உண்மையான பயத்துடன்.

*****************

அந்த நினைவுகள், அந்த அம்மாவின் பரிதாப முகம், சாமியைப் பார்த்து அது மிரண்ட பார்வை எல்லாம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அப்படியே நிற்கிறது, எனக்கு.

சினிமாக்கள் (அவள் ஒரு தொடர்கதை), கதைகள் (தி ஜா ரா வின் அம்மா வந்தாள்) போன்ற புனைவுகளில் மட்டுமல்லாமல், இதுபோல் அம்மாக்கள்  தகாத உறவுகளில் மாட்டிக்கொண்டு பிடிபட்டு முழிப்பது எல்லாம் காலங்காலமாக நமது கலாச்சாரத்தில் கிராமங்கிளில் கூட நடக்கத்தான் செய்யுது.

இதுபோல அம்மாக்கள் ஒரு சில விழுக்காடுகள்தான் என்றாலும் "ஒரு சிலர் காமத்திற்காக, ஏன் இப்படி தன் வயது, தன் நிலமை, தன் தரம் என்பதை எல்லாம் யோசிக்காமல் தன்னிலை மறந்து தவறாக நடந்துக்கிறாங்க? என்கிற கேள்விக்கு என்ன பதில் இருக்கிறதென்று தெரியவில்லை.

"அவள் தேவைகளை ஆம்படையான் ஒழுங்காத் தீர்த்து வைக்கவில்லை! இதிலென்ன பெரிய தப்பு?" என்று பெண்ணியவாதியாக வாதிடலாம். "அவங்க புருசன் எப்படியோ? அவன் ஒழுங்காயிருந்தால் ஏன் இப்படி அந்தம்மா அலையுது?" என்றும் வாதம் மற்றும் விதண்டாவாதம் பேசலாம்தான்.

நம்மூர்களில் வாழும் மெஜாரிட்டி "அறிவுகெட்ட ஆண்கள்" கோடிக்கணக்கான "பெண் என்னும் பேதையர்கள்" எல்லாம் இதை எல்லாம் பார்த்து, கேள்விப்பட்டு, "தேவடியாள் ஊர் மேயிறாள்" னு இதுபோல் அம்மாக்களை ஜாடையில், மற்றும் சண்டைகளில் திட்டுவதுதான் கிராம வழக்கம். ஆனால் இதில் சிந்திக்க வேண்டியதும், இதுபோல் நடப்பவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ளவும் நாம் கற்றுக்கொண்டால்தான் நாம் மனிதாபிமானிகளாகவும், பண்பாடு தெரிந்தவர்களாகவும் ஆகிறோம்.

மேலை நாகரீகத்தில் இதையெல்லாம் மன்னிக்கக் கற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் நாம் எப்படி??

-முற்றும்


Thursday, November 14, 2013

ஈ வே ரா, ஈ வெ ரா, ஈ வெ இரா, செயமோகன்!

பொதுவாக பெரியார் பெயரை ஈ வே ரா னு எல்லோரும் தவறாக எழுதுவாங்க, சொல்லுவாங்க. ஈ வே ரா னா ஒரு ராகத்தோட சொல்லலாம் என்பதாலோ என்னவோ. பலர் இந்தத் தவறைச் செய்ததால், நம்ம ஜெயமோகனும் இந்தத் தவறைச் செய்து இருக்கிறார். நம்மைச் சுற்றி உள்ள சூழல்கள் நம்மை ஓரளவுக்கு பாதிக்கத்தான் செய்யும். இது இயற்கை. சரி, நம்ம செய்வதால் அது சரி என்று இல்லை. ஒருவர் அதைத் தவறுனு  சுட்டிக்காட்டும்போது, ஒரு பெரிய மனுஷன் என்ன செய்யணும்? தான் செய்த ஒரு சின்ன தவறைத் தவறுதான் னு ஏற்றுக்கொண்டு ஒரு சிறு மன்னிப்பை சொல்லிவிட்டால் அதோட வேலை முடிந்தது.

அதைவிட்டுப்புட்டு, சின்னப்புள்ளத்தனமா "நான் ஏன் தவறு செய்தேன்? நான் சொன்னதுதான் தமிழ் உச்சரிப்பு முறைப்படி சரி! நீங்க எல்லாரும் யோக்கியமா? இத்யாதி இத்யாதினு ஒரு பெரிய கட்டுரை எழுதி கடைசியில் நான் எழுதியதுதான் சுத்தமான தமிழ் உச்சரிப்புனு முடிச்சு..
தான் சொல்வது, தான் செய்வதுதான் எப்போவுமே சரினு ஒரு பெரிய விளக்கம்..


அதற்கு ஒரு சிறு பின்னணி உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பிழையாகவே ஒரு கட்டுரையில் ஈவேரா என்று எழுதியிருந்தேன். என்ன காரணம் என்றால் தமிழில் திருப்பதியின் பெயர் வேங்கடம்தான். வெங்கடம் அல்ல. அந்த அடிப்படையில்தான் கி.வேங்கடசுப்ரமணியன் என்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி என்றும் எழுதுகிறார்கள். ஈவேரா அவரது பெயரை அப்படித்தான் எழுதுவார் என்று ஓர் அனிச்சையான நம்பிக்கையால் அப்படி எழுதினேன்.

ஆனால் எனக்கு ஆக்ரோஷமான நாலைந்து கடிதங்கள் வந்தன. ஈவேரா அவர்களின் தந்தைபெயர் வெங்கிட்ட நாயக்கர் என்றும் ஆகவே அவரது பெயரை ஈவெரா என்றுதான் எழுதவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆனால் என் பெயரை செயமோகன் என்று எழுதியிருந்தனர். அத்தனை பெயரையும் தமிழ்ப்படுத்தி எழுதக்கூடியவர்கள் அவர்கள். சுந்தர இராமசாமி என்று எழுதக்கூடியவர்கள். இன்றைக்கும் தமிழ் விக்கிபீடியாவில் இந்தக்கொள்கை உடையவர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெயரை அப்பெயருக்குரியவர் எப்படி எழுதுகிறாரோ அப்படி எழுதவேண்டும் என்பதுதான் மரபு. உலகளாவிய ஒரு நாகரீகம் அது. ஆனால் நீங்கள் பிறர் பெயரை உங்கள் கொள்கைப்படி மாற்றி எழுதுகிறீர்கள். அதற்கு மொழிசார்ந்த நியாயங்களைச் சொல்கிறீர்கள். அந்த நியாயம் உங்கள் தலைவருக்குச் செல்லுபடியாகாதா என்ன? அவரது பெயரை ஏன் தமிழ்முறைப்படி எழுதக்கூடாது? ஈ.வே.இராமசாமி என்றுதானே அவரை எழுதவேண்டும்? ஏன் தெலுங்கு உச்சரிப்பைத்தான் எழுதவேண்டும் என்கிறீர்கள்?
’சரி, கொள்கையளவில் ஒரு பொதுமுடிவுக்கு வருவோம். பெயர்களை மாற்ற பிறிதொருவருக்கு உரிமை இல்லை. தன் பெயரை ஒருவர் எப்படி எழுத விரும்பினாரோ அப்படித்தான் அனைவரும் எழுதவேண்டும். ஏனென்றால் அது ஓர் ஆவணம், ஓர் அடையாளம், அவ்வளவுதான். அது உங்களுக்கும் எனக்கும் பொருந்தும் விதி, ஆனால் ஈவேரா அவர்களுக்கு விதிவிலக்கு என்றால் அதை நான் ஏற்கமாட்டேன்’ என அவர்களுக்கு எழுதினேன். அதற்கு 16 பக்க வசைதான் பதிலாக வந்தது. நான் பிடிவாதமாக ஈவேரா என்று –தமிழ் மரபுப்படி – எழுத ஆரம்பித்தேன். அப்படியே கை பழகிவிட்டது.

இப்போதுகூட ஈவெரா என்று தெலுங்கு உச்சரிப்பையே எழுதத்தயார். பிற பெயர்களில் கைவைப்பது பிழை என இதைச் சுட்டிக்காட்டுபவர்கள் கொள்கையடிப்படையில் ஒத்துக்கொள்ளட்டும்.பிற தெலுங்கு, இந்தி பெயர்களையும் அவர்களின் மொழிமரபுப்படியே எழுதட்டும்.
 ஆக, இவர் என்ன தப்பு செய்தாலும், அது இவர் தமிழ்மரபை மனதில் கொண்டு தமிழுக்காக அவர் செய்த தவறு!! ! :))) ஈ வெ ரா என்பது தெலுகு உச்சரிப்பு!  இவரு செய்ததுதான் சரியான தமிழ்! அதுதான் சரி சரி சரி!

 ஈ வெ ரா பெயர் தெலுகு உச்சரிப்பில்தான் இருக்கு. அதனால என்ன இப்போ? அவரு வீட்டிலே எல்லாரும் தெலு(ங்)குலயோ இல்லை கன்னடத்திலேயோதான் பேசி இருப்பாங்க. அதானே அவர்களுக்குத் தாய்மொழி?

பின்னால் தன்னை ஒரு தமிழன் னு மார்தட்டிய பெரியார், கன்னடத்திலே, தன் தாய்மொழியில் இளமையில் பேசியிருக்கக்கூடாதுனு சொல்வாரா?

மேலும் ராமசாமி என்பதே "பகவான்" ராமன் பேரை தழுவியது. ஆக இவரும் "பகவானின்" சுமார்  42வது அவதாரம்தான்னு ஏதாவது விளக்கம் சொன்னாலும் சொல்லுவா!

நான் அப்போவே சொன்னேன். ஜெயமோகனைப் பிடிச்சுக் கொண்டுபோயி ஏர்வாடில கட்டிப்போடுங்கப்பானு!  எவன் கேக்கிறான்! இப்போ எல்லாரையும் ஏர்வாடிக்கு அனுப்பிரும்போல இந்த ஒரு மேதாவி! :)



Tuesday, November 5, 2013

பதிவெழுத சரக்கு தீர்ந்து போயிடுச்சா? இல்ல செத்துட்டானா?!

ஒரு காலத்தில் பெரும்புள்ளியா இருந்தவங்க எல்லாம் பதிவுலகைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா கழண்டு காணோமாப் போயிடுறது பதிவுலகில் சாதாரணம்.  பதிவுலகில் ரொம்ப நாள் குப்பை கொட்டுறவங்களுக்குத் தெரியும் இந்த "ட்ரெண்ட்". இன்னொரு பக்கம் புதுசா வர்ர திறமைமிக்க பதிவர்கள் எல்லாம் வந்த கொஞ்ச நாளில், அவர்களுக்கு கிடைக்கும் "வரவேற்பில்", "மரியாதையில்"  நாந்தான் இங்கே ராஜா னு ஒரு நெனைப்போட திரிவதையும் பார்க்கலாம். இது போல் புதிய ராஜாக்கள்  வருவதும், கொஞ்சநாள் ஆள்வதும், பிறகு அழிவதும் பதிவுலகிலும் காலங்காலமா நடந்துகொண்டுதான் இருக்கு.  ஒரு சில ராஜாக்கள் ஆண்டபிறகு காணோமாப் போறது  மட்டுமல்ல! அவங்க தளமும் பதிவுகளும்கூட அவர்களோட சேர்ந்து காணோமாப் போயிடுது! இவனுக செத்துத் தொலையிறானுக! இவனுக பதிவும் ஏன் இவனுகளோட சாகணும்னு எனக்கு விளங்குவது இல்லை! தமிழன் செதுத்துக்கிட்டுதான் இருக்க்கான் ஆனால் தமிழ் ஒரு நாளும் சாகாது! இல்லையா?

ஏன் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவங்க, திறமைமிக்க பதிவர்கள்  எல்லாம் ஏனோ ஒதுங்கி ஓடிறாங்க. இந்த "ராஜாக்கள்" ஏன் திடீர்னு "துறவரம்" போயிடுறாணுக? என்ன காரணம்? செத்துட்டாணுகளா? னு யோசித்துப் பார்த்தால்..

வாழ்க்கைச் சக்கரம் சுழலும்போது, ஒவ்வொருவருடைய தேவைகள், ஆசைகள், இண்டெரெஸ்ட் எல்லாம் மாறிக்கொண்டே வருது. நேற்று முக்கியமாக தோன்றிய பதிவுலக பிரவேஷம் இன்னைக்குத் தோன்றுவதில்லை! வேலைப் பளு காரணமாக சில பதிவர்கள் ஒதுங்கிடுவாங்க! குடும்ப சூழல்களில் ஏற்படும் மாற்றங்களால் சிலர்! உடல்நலக்குறைவு காரணமாக ஒரு சிலர்! காதல், கல்யாணம், குழந்தைகுட்டி னு ஒரு சிலர் போயிடுறாங்க. திடீர்னு "இளவரசர்" புத்தனுக்கு வந்தமாரி ஞானோதயம்!  என்னைத்த பதிவெழுதி என்னத்தக் கிழிக்கப் போறோம்? னு திடீர்னு ஒரு  ஞானோதயம் ஒரு சிலருக்கு. இந்த பதிவெழுதுற நேரத்தில் கொஞ்சம் பகுதி நேரம் வேலை பார்த்தாலாவது, கொஞ்சம் பணமாவது சம்பாரிக்கலாம். பதிவெழுதி, கதை எழுதி, தளத்தில் விளம்பரப்படுத்தி சம்பாரிக்கிறதுல வர்ர காசை வச்சு   நாக்கு வழிக்கக்கூட முடியாது! எதுக்கு இப்படி நேரத்தை செலவழிச்சு.. இவனுகளோட கட்டி உருண்டு.. கடைசியில் அவன் அவன் கருத்தோட திரும்பிப் போயி.. நாந்தேன் ஜெயிச்சேன்னு லூசுமாரி சொல்லிக்கிட்டு திரிய? இது வெட்டி வேலைனு புரிஞ்சு ஒதுங்கிக்கிறவங்க ஒரு சிலர். இப்படிப் பல காரணங்கள் சொல்லலாம்.

ஆமா ரொம்ப நாள் குப்பை கொட்டிய வருணை எங்கப்பா காணோம்? செத்துட்டானா? எல்லாரு எழவைப்பத்தியும் ஒப்பாரி வைப்பானே? கடைசியில் இவனும் செத்துட்டானா? னு எவனாவது எழவுச் செய்தி சொல்றதுக்கு முன்னால இப்படி ஒரு பதிவைப் போடுறதுக்கு நேரம் ஒதுக்கி எப்படியோ ஒளறிக்கொட்டி உயிருடன் வந்துவிட்டான் வருண்!  :)

Tuesday, October 15, 2013

நமது தமிழ்க்கலாச்சாரப் பெருமைகள் பேசுவோமா?!!

"ஈ" படத்தில் ஜீவாவின் பிறப்பு.. ஒரு புத்திசுவாதினமில்லாத பிச்சைக்காரியை யாரோ ஒரு "புண்ணியவான்" கெடுத்து அவளுக்கு பிறந்த செல்லப்புத்திரனாக, ஒரு அனாதையாகக் காட்டுவார்கள்.

அதேபோல் தளபதி படத்தில் சூர்யா (ரஜினி), ஒரு  கல்யாணம் ஆகாத ஒரு தாய்க்கு பிறந்த மகனாகக் காட்டுவார்கள்.

சமீபத்தில் வந்த கடல் திரைப்படத்தில் தாமஸ் ( கெளதம் கார்த்திக்) என்கிற கதாநாயகன் பாத்திரம்.. அந்த அப்பாவிப் பையன் பாத்திரத்தை  ஒரு கேவலமான அப்பனால் உருவாக்கப்பட்டவனாக காட்டி..அவனின் தந்தை, அவனைத் தந்தையாக ஏற்றுக்கொள்ளக் கெஞ்சிக் கூத்தாடியும் (டி என் எ அனாலிஸிஸ் எல்லாம் பற்றி தெரியாத சமுதாயம்) மறுப்பதையும் காட்டிவிட்டு, கடைசியில் அந்தப் பொறுக்கி சாகும்போது அவனுக்காக எந்தத் தவறுமே செய்யாத இந்தப் பையன் ஏங்கி ஏங்கி அழுவதுபோலவும் காட்டுறாரு நம்ம மணிரத்னம்..(அதெப்படி இவன் இழிநிலைக்குக் காரணமான ஒரு பொறுக்கி மேலே இவனுக்கு பாசம் பொங்குதுனு எனக்கு இன்னும் புரியலைங்க மணி??)

நமது சமுதாயத்தில்,   "தமிழ் கலாச்சாரத்தில்" இதுபோல் உருவாக்கப்பட்ட அப்பாவிகளும், அவர்களை உருவாக்கிய "பெரிய மனிதர்களும்" இருக்காங்க. இதுபோல் பொறுக்கிகளால் உருவாக்கப்படும் அப்பாவிகள் மனநிலை பாதிக்கப்பமளவுக்கு பலவிதமான இன்னல்களையும், அவலங்களையும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நம்மைப்போன்றோர் பொதுவாக சினிமாலதான் காண்கிறோம். ஆனால் இது போல் நிகழ்வுகள், நடைமுறையில் நம்மைச் சுற்றி  நமது உயர்தரத் தமிழ் கலாச்சாரத்தில் காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபோல் எந்தத்தவறும் செய்யாத "தவறானவர்களாக பிறந்தவர்கள்" நம்முடன் இவ்வுலகில், நம்மைச்சுற்றி  வாழ்ந்துகொண்டுதான் இருக்காங்க. ஏன், புத்திசுவாதினமில்லாத பிச்சைக்காரி ஒருத்தி கற்பமாக ஆகி அலைவதை நானே எங்க ஊரில், நமது திருநாட்டில் பார்த்து இருக்கேன். தளபதி சூர்யாக்களும், கடல் தாமஸ்களும், ஈ க்களும்  தூக்கி எறியப்பட்ட அனாதைகளாக  நம் கலாச்சாரத்தில்  நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்றாங்க. அவர்களைப் பற்றியெல்லாம் சிந்திக்க நமக்கு நேரம் எங்கே இருக்குது?

இதுபோல் ஆட்களை கற்பனைப்பாத்திரமாக சினிமாவில் நாம் பார்க்கும்போது அந்தக் கேரக்டராக நம்மை ஒரு நிமிடம் வைத்து, "நான் அந்த நிலையில் இருந்தால் என்ன ஆகியிருப்பேன்???" என்று யோசித்துப் பார்த்தால்கூட "அப்படி யோசித்த ஒரு சிந்தனையை" வெளியே சொல்லத் தயங்குபவர்கள்தான் தமிழன் தமிழன் என்று வெட்டிப் பெருமை பேசிக்கொண்டு அலையும் நாம் எல்லோருமே.

இதுபோல் பிறக்கும் குழந்தைகள் எந்தத் தவறுமே செய்யாதவர்கள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காதுனு நம்புறேன். "கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த  பாவம், கர்மா னு என்ன எழவையாவது சொல்லிச் சமாளிப்பார்கள். ஆனால் அதுபோல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு??  ஏதோ ஒரு அறியாமையில் வாழும் பொறுக்கி ஆண் செய்ததன் விளைவே இவர்கள் உருவானத்துக்குக் காரணம் என்பதைத் தவிர வேறு விளக்கம் எதுவும் இல்லை!

இதுபோல் அனாதையாக உருவாக்கப்பட்ட அப்பாவிகளை  நாம் சக மனிதனாக, சகோதரனாக, சகோதரியாக, காதலனாக, காதலியாக அல்லது மனைவியாக, கணவனாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நம்மிடம் மனப்பக்குவம் இருக்கிறதா? அல்லது தைரியம் இருக்கிறதா? என்று யோசித்துப் பார்த்தால்... நம்மைப் பற்றி நமக்கு என்ன புரியும்?? நாம் சினிமாப் பார்த்து அவர்களுக்காக அழுவதைத் தவிர்த்து வேறெதும் "பெரிய தியாகம்" செய்யத் தாயாராக இல்லாத சாதாரண ஒரு கோழைத்தமிழன்தான் என்று  நம்மைப் பற்றி நாம் புரிந்துகொள்வோம்!

இப்படி நம்மில் 99% விழுக்காடுகள், கோழைகளாகவும், இதுபோல் பிரச்சினைகளை எதிர்கொள்ள அல்லது கையாள வழி தெரியாதவர்களாகவும், இதுபோல் பிரச்சினைகளை சமாளிக்க சரியான மனப்பக்குவமில்லாதவர் களாகவும்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். உண்மை நிலவரம் இந்த லட்சணத்தில் இருக்கும்போது  நமக்கு,  தமிழன், தமிழ் கலாச்சாரம், செம்மொழி மண்ணாங்கட்டினு எதுக்கெடுத்தாலும் தமிழன் பெருமை என்ன வேண்டிக்கெடக்கு?

Friday, October 4, 2013

தமிழ்மண ஓட்டுப்பெட்டி? ரிலாக்ஸ் ப்ளீஸ் தளத்தில் குழப்பம்??

தமிழ்மண ஓட்டுப்பெட்டில என்னவோ பிரச்சினை இருக்குனு நம்ம தனபாலன் சொன்னாரு. எனக்கு ஒண்ணும் தெரியலையே, எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதேனு சொன்னேன்.. ஆனால் இந்தியாவிலிருந்து எழுதும் பலரும் இந்தத்தளத்தில் உள்ள தமிழ்மண ஓட்டுப்பெட்டியில் பிரச்சினை என்று அடித்து சொன்னார்கள்.

இப்போத்தான் இந்தப் புதிருக்கு விடை தெரிந்தது..

ரிலாக்ஸ் ப்ளீஸ் என்கிற ஒரே தளம் இரண்டு விதமாகத் தெரிகிறது..

இந்தியாவில் இருந்து பார்ப்பவர்களுக்கு ரிலாக்ஸ் ப்ளீஸ் இப்படியும் http://timeforsomelove.blogspot.in/ தெரிகிறது!!

இதனுடைய அலெக்ஸா ட்ராஃபிக் ரேட்டிங்.. கீழே இருக்கு பாருங்க..


Global Rank

Rank in India

India Flag154,608  


இந்த வலைபூவில் தமிழ்மணத்தில் இணைத்த பதிவுகளையும் இன்னும்  இணைக்காததுபோல இருக்கு..கீழே உள்ளதை க்ளிக் செய்து பாருங்க..


நான் ஒரு இந்தியன் என்று பெருமையா சொல்லிக்கோங்க!!


******************************
நான் யு எஸ் ல இருந்து நுழையும்போது ரிலாக்ஸ் ப்ளீஸ் இப்படியும் http://timeforsomelove.blogspot.com/ தெரிகிறது..

இதனுடைய அலெக்ஸா ட்ராஃபிக் ரேட்டிங் என்னனா..


Global Rank

 நான் இங்கேயிருந்து பார்க்கும்போது எனக்கு ஒரே பதிவு, தமிழ்மணத்தில் இணைத்து இருப்பதாக வேறமாதிரி காட்டுது.. கீழே உள்ள தொடுப்பை க்ளிக் செய்யுங்கள்...
 மேலே உள்ள பதிவுதான் நான் இங்கே இருந்து பார்ப்பது!!! :-)
----------------------------------------------------------- 
என்ன எழவோ போங்கப்பா!!! :) 
 

Friday, September 27, 2013

நான் ஒரு இந்தியன் என்று பெருமையா சொல்லிக்கோங்க!!

டெல்லியில் பேருந்தில் நடந்த கற்பழிப்பு! பிஹாரில் குழந்தைகள் பூச்சுக்கொல்லி மருந்தை சாப்பிட்டு பரிதாபமாக இறந்தார்கள்! இதுபோல் இந்தியாவில் நடக்கும் மட்டமான விடயங்கள்தான் உலகில் பல மக்களுக்கும் பகிரப்பட்டது!

சமீபத்தில் வெளிவந்துள்ள "நேர்மை, நாணயம்" பற்றிய ஆராய்ச்சியில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது!  உலக அளவில் நான் இந்தியன், நாங்கள்லாம் நேர்மை, நாணயத்துக்கு பேர் போனவர்கள்னு சொல்லிக்கொள்ளலாம்! :)

உலகில் உள்ள பலநாடுகளில் உள்ள பெரிய நகரங்களில் ஒரு சின்ன ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.

அதாவது ஒவ்வொரு நகரங்களிலும் 12 "வாலட்" அல்லது "மணி பர்ஸை" சுமார் $50 பணத்துடன், மற்றும் அதில் "முகவரி", "செல் ஃபோன் நம்பர்" எல்லாவற்றையும் வைத்து "பூங்கா" அல்லது பொது இடங்களில் "தவறவிட்டதுபோல்" விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். இதை எடுத்த எத்தனை பேர் பொறுப்பாக உரியவரிடம் திருப்பிக்கொடுக்க முயல்கிறார்கள் என்பதே இந்த ஆராய்ச்சி.

இதில், இந்தியா (மும்பை) இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. அதாவது தவறவிட்ட 12 மணிபர்ஸில் 9 திரும்பி வந்து விட்டதாம்!

In Mumbai, nine out of 12 wallets were returned.
In Mumbai, nine out of 12 wallets were returned. 

Friday, September 20, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்! -ஏழு

மோகன், விஜியைப் பற்றி "சீரியஸாக" யோசித்தான். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம். சாதாரண ஜோக்கைகூட பின்னால் சீரியஸாக எடுத்து ஆராய்வான். "ஜோக்" என்பதால் அது அர்த்தமற்றது என்று சிரித்துவிட்டுப் போகாமல் அதையும் எடுத்து சீரியஸாக அசைபோடுவான் அனலைஸ் செய்வான்.
ஒருமுறை அவனுக்கு நன்கு தெரிந்த இன்னொரு தோழியிடம் இதேபோல் பிரச்சினை வந்தது.

"க்ளோஸ் ஃப்ரெண்ட்" என்றால் என்ன? நம்ம "ஸ்ட்ரெங்த்" மற்றும் நம் "வீக்னெஸ்"கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள்!  நம்மைப்பற்றி, நம்மிடம் உள்ள குறைபாடுகளை, நம் வீக்னெஸ்களை  நன்கு அறிந்தவர்கள்தான் நம் க்ளோஸ் நண்பர்கள், தோழிகள். நம் மனது சங்கடப்பட்டு, குழம்பி  இருக்கும் ஒரு குழப்ப நிலையில் அவர்களிடம் மனம் திறந்து நம்மை திறந்து காட்டலாம். அவர்கள்மேல் நாம் அதிக நம்பிக்கை வைத்து இருப்பதால் நாம் அவர்களிடம் கவனக்குறைவாக இருக்கலாம். ஒருவரிடம் கவனக்குறைவாக இருக்கலாம் என்றால் உங்களுக்கு "ஸ்ட்ரெஸ்" குறையும். "ஸ்ட்ரெஸ்" குறையும்போது உங்க மனநிலை சந்தோஷப்படும். அதனால்தான் நாம் ஒவ்வொருவருக்கும்  நண்பர்கள் தேவைப்படுகிறது. ஆனால் அதே நண்பர்களுக்குள் உறவு முறிந்துவிட்டால்? அல்லது மனஸ்தாபம் வந்துவிட்டால்?  எந்த ஒரு சாதாரண உறவு நாளுக்கு நாள் பலப்பட்டு  நட்பு என்ற பாலம் உறுதியானதோ. அதே பாலம் கீறல்பட்டு, பலவீனப்பட்டு உடைவதும் இயற்கைதான். இதைப் புரிந்துகொள்ளாமல் நட்பென்கிற உறவு எல்லாம் அப்படி இல்லைனு விவாதிப்பது விதண்டாவாதம். நட்பென்கிற உறவு முறியும்போது  இருவருக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஒன்று உண்டு. அவர்கள் நண்பனாக நம்மை நம்பி காட்டிய அவர்கள் வீக்னெஸுக்கு எதிராக நடந்து கொள்ளக்கூடாது. இது எழுதப்படாத ஒரு உடன்பாடு! நம் நண்பர்களின் வீக்னெஸை அறிந்த நான் முந்தைய நண்பரை குத்திக் கிழிப்பது, காயப்படுத்துவது மிக மிக எளிது..அவன் தோழி அதைத்தான் செய்தாள், "நீ மூச்சுவிட்டால்கூட அதன் அர்த்தம் எனக்குத்தெரியும். என்னிடம் கதை விடாதே" என்று சொன்ன ஒரே வாக்கியத்தில் பட்ட கீறல் என்றுமே சரியாகவில்லை..அப்படியான பிறகு, அவனால் அந்த உறவை மதிக்க முடியவில்லை  நாகரிகமாக ஒதுங்கிவிட்டான் மோகன். இதேபோல் மோகனின்தோழியும் மோகனிடம் உள்ள குறைகளை அடுக்கலாம். அவனை சுயநலக்காரன் என்கலாம். பிடிக்கலைனா ஒதுங்கிக்கொள்வது நல்லது. இல்லை நாங்க 10 வருடம் நண்பர்கள், என்ன எழவுவந்தாலும் கட்டி அழத்தான் செய்வோம் என்றால் அழுங்க!

அதுவும் இன்றைய நட்பு? முகநூல் நட்பு, இணையதள நட்பு என்று அர்த்தமில்லாத, உருப்படியில்லாத உறவுகள் நிறைந்த modern f'cking world இது. முக நூலில் ஒருத்தனுக்கு நண்பர்கள் ஆயிரம் பேர் இருந்தால், அவன் ஒவ்வொரு நாளும்  குறைந்தது மூனு பேருக்காவது பொறந்தநாள் வாழ்த்துசொல்லணும்! ஆக முகநூல் நண்பர்களில் டெய்லி நண்பன் எவனுக்காவது ஒருத்தனுக்கு ஒவ்வொரு நாளும் பொறந்தநாள் இருக்கும். நண்பர்கள் வட்டம் கூடக்கூட நட்பு என்பது அர்த்தமற்றதாகிறது என்பதற்கு முகநூல் நட்பு ஒரு அழகான உதாரணம்! கிறுக்குப்பயலுகதான் எல்லாரையும் நண்பர் தோழன்னு சொல்லிக்கிட்டு அலைவான். முகநூல் நண்பர்கள் உலகம் சரியான முட்டாப்பய உலகம்தான். இன்றைய நட்பு இப்படி கேலிக்கூத்தாக இருக்கும்போது, அப்பப்போ திருக்குறள் பழமொழி மண்ணாங்கட்டினு எதையாவது சொல்லி நாங்க அப்படிப்பட்ட  "நண்பர்கள்" இப்படிப்பட்ட நண்பர்கள்னு ஒளறிக்கொண்டு திரிய எப்போவுமே ஒரு கோமாளிகள் கூட்டம் இருக்கத்தான் செய்யுது.

விஜியை நினைத்தால் அவனுக்கு ஒரு வகையில் குழப்பமாக இருந்தது. மேலும் பயம்மாகவும் இருந்தது. உறவு என்பது ஒருவரை ஒருவர் நம்பணும். அந்த நம்பிக்கையில் மண் விழுந்தால் அதுக்கப்புறம் இன்று இல்லை என்றாலும் நாளை அது பெரிய பிரச்சினையாகும். மோகனிடம் மிகப் பெரிய குறைபாடு ஒன்று உண்டு.  விஜி அழுவதை அவனால் தாங்க முடியாது. அவனைப்பொறுத்தவரையில், அவனை "பாஸ்டட்"னு அவள் உண்மையான கோபத்துடன் திட்டினாலும் தாங்கிக்கொள்வான். அவள் அழுதுகொண்டு பேசினால் அல்லது அழுதுவிட்டு அவனிடம் பேசாமல் விட்டுவிட்டால் பயந்துவிடுவான். அழுகைதான் பெண்களுக்கு வடிகால். அது மோகன்போல் ஆண்களுக்கு மிகப்பெரிய சங்கடம். அழுதழுது ஆண்களை பெண்கள் கொல்வது பெண்களுக்கு விளங்குவது இல்லை! பிரச்சினை என்றால் பேசித் தீர்த்துக்கொள்வோம்! எதற்காக இந்த அழுகை? ஒப்பாரி? மோகனால் அவனுடைய சுயநலக்கோணத்தில்தான் எந்தப் பிரச்சினையையும் பார்க்க முடியும். அவளிடம் உள்ள குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தினான்.

மோகனின்  நினைவலைகளை உடைக்க அவன் செல் ஃபோன் அலறியது. யாரென்று பார்த்தான். அனுடைய கோ-வொர்க்கர் "லாரா" கால் பண்ணினாள்.

"What's up Laura?"

"Nothing. Just called to say "hi" to you.."

"There must be something. Tell me."

"I dont know, your friend manikkam.."

"He is not my friend. I just know him because he is from my home state. He just moved from France  and so I talked to him. "

"Well.."

"What about him?'

"I dont know. I used to talk to him when I go for coffee and sometimes in the hallway. He somehow finds me"

"I did not know that you talk to him that much.. What now?"

"Well, he was asking me out today!"

"Really?"

"Yeah. I am sure, he knows that I have a fiance. I have told him several times. YOu know me, I tell this to anyone I know.  Also you told me that he is married. Right?"

"Well..That's what he told me. But I never met his wife"

"I think, him asking me out is.. that's kind of creepy, you know."

"So, now you bring this issue to my attention because he is an Indian and I am an Indian and we speak the same language..Right? You fucking racists whites"

"Ha ha ha. No, I just wanted to tell you that he asked me out. As he is kind of a mutual friend to us."

"What did you tell him?"

"I kind of got confused and asked, "Is your wife joining us too?

"Interesting. And?"

"I thought he wanted to go out with me and my fiance and him and his wife or something. He was kind of shocked when I asked about his wife. He says that she is in India now."

"He wants to go out with you for dinner. Some kind of date? Or just wants to talk to you."

"Well, you know..He was very nervous for some reason.. he said, how about friday for dinner?"

"Did you say "No"?"

" Not yet, but I will soon. Honestly I know how to deal with this. I just wanted to tell that he asked me out. I did not think he would"

"You want to tell me because.. you want to brag that you are attractive and so many people wants to take you out?"

"Ha ha ha"

"How come I never asked you out, Laura?"

"That's funny, Mohan"

" I cant tell you what I know of him, Laura. But I am kind of shocked too. You know that all men are bastards. Right?"

"Ha ha ha"

"OK, thanks for sharing this.  I will talk to you tomorrow at work."

"OK, mohan!"

ஏன்னு தெரியவில்லை, மாணிக்கத்தை நினைத்தால் மோகனுக்கு பயங்கர எரிச்சலாக வந்தது. மாணிக்கம் ஃப்ராண்ஸிலிருந்து அமெரிக்கா வந்து ரெண்டு மாதங்கள்தான் இருக்கும். இந்த கம்பெணியில் சேர்ந்த உடனே, இன்னொரு டிவிஷன்ல வேலை பார்க்கும் அவன்  எப்படியோ மோகனைத் தெரிந்துகொண்டு அவனிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். இருவரும் தமிழ்ல பேசிக்கொண்டார்கள். அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, மனைவியும் அவனுடன் அமெரிக்கா வந்து இருக்கிறார்கள். இருவருக்கும் குழந்தைகள் இல்லைனு மோகனுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்குள் என்ன பிரச்சினைனு புரியவில்லை, அவன் மனைவியைப்பற்றி அவன் அதிகம் பேசுவதில்லை. அரேஞ்சிட் மேரேஜ் என்பதுபோல்தான் சொன்னான். அவனைப்பற்றி மோகனுக்கு அவ்வளவுதான் தெரியும்.

மாணிக்கத்துக்கு லாராவை "இந்த அளவுக்குத்" தெரியும்னு இன்று அவள் சொல்லித்தான் மோகனுக்கே தெரியும். எவன் எவளோட ஜொள் விடுறான், யாரை "ஸ்டாக்" பண்ணுறான் னு பார்த்துக்கொண்டு இருக்க எல்லாம் யாருக்கு நேரம் இருக்கு? போனவாரம் மாணிக்கத்துடன் பேசும்போது அவன் மனைவி இந்தியா போயிருக்கதா சொன்னான். பார்க்க, பழக எல்லாம் சாதாரண தமிழ்ப் பையன் மாதிரித்தான் "நல்ல" "அப்பாவிபோல்"தான் தெரிந்தான். லாராவிடம் இதுபோல் "டேட்டிங்" போக கேட்டிருப்பான்னு மோகன் நினைக்கவில்லை.

என்ன வேணும் இவர்களுக்கு? வெள்ளைக்காரியோட டேட்டிங் போயி அவர்களை மணம் முடிக்கணும்னா ஏன் ஊருக்குப்போயி  இப்படி அரேஞ்சிட் மேரேஜ் பண்ணிக்கொண்டு வந்து ஒரு பொண்ணோட நிக்கிறாணுகனு விளங்கவில்லை. சரி யாராவது "சிங்கிள்"யிடம் போய் கேட்டாலாவது பரவாயில்லை. லாராவுக்கு போனவருடம் டைவோர்ஸ் ஆகி, இப்போ ஒரு "ஃபியாண்ஸெ" இருக்கான். இருவரும் இன்னும் ரெண்டு மாதத்தில் திருமணம் செஞ்சுக்கப் போறாங்க. லாரா, நிச்சயம் இதை மானிக்கத்திடம் பலமுறை சொல்லி இருப்பாள். அது தெரிந்தும், மனைவி ஊரில் இல்லாதபோது இவளோட "டின்னர்"க்கு முயற்சி?  "லாரா" ஒரு ஓட்டை வாய். எல்லாவற்றையும் மோகனிடம் சொல்லிவிடுவாள். லாரா, மோகனின் கோ-வொர்க்கர்னு தெரிந்தும், எப்படியோ அவளை மோகனுக்குத் தெரியாமல் அணுகி அவளுடன் பழகி இருக்கிறான், மாணிக்கம்.

ஒரு முடிவுக்கு வந்தான் மோகன். இனிமேல் மாணிக்கத்திடம் எதிரும்புதிருமாகப் பார்த்துவிட்டால், "ஹாய்" சொல்லிவிட்டு ஒதுங்க வேண்டியதுதான். Manickam is certainly too smart to be friends with Mohan. தமிழன், நம்ம ஊர்க்காரன் என்பதால் கண்ட தரங்கெட்டவனையும் கட்டி அழணும்னு எதுவும் இல்லை. தமிழர்களில் எல்லாவகையான தேவடியாமகன்களும்தான் இருக்காணுக! தமிழில் பேசுறான்னு ஒரே காரணத்திற்காக கண்ட தேவடியாமகன்களையும் தொப்புள்கொடி உறவுனு சொல்லிக்கொண்டு திரிய மோகன் ஒண்ணும் ஈழத்தமிழரல்ல! சாதாரண சுயநலமுள்ள தமிழ்நாட்டுத் தமிழன்ந்தான் அவன்.

-தொடரும்.

Wednesday, September 18, 2013

தெருஓரத்தில் குப்பை, சிறுநீர், நடுத்தெருவில் செக்ஸ்!

நம்ம இக்பால் செலவன் அவர்கள், கற்பு, காமம்னு வந்துப்புட்டா ரொம்ப லிபெரலாயிடுவாரு! இவர் எங்கே பிறந்து எப்படி வளர்ந்து வந்து கனடாவில் போயி கிழிகிழினு கிழிக்கிறாருனு தெரியலை! இதுக்கு முன்னால நம்ம "மேதை ஞாநி", காதலர்கள் செக்ஸ் வச்சுக்க பார்க்களில் வசதியில்லைனு ரொமவே ஒப்பாரி வச்சாரு! பீச் பார்க்ல எல்லாம்  அரசாங்கமே காண்டம் சப்ளை பண்ணி ரூம் வசதி எல்லாம் செஞ்சு கொடுக்காமல் காதலர்கள் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுவதாக ரொம்பக் கவலைப்பட்டாரு! ஆனால் அதே சமயத்தில், "கிளிமன்சரோ பாடலை" சின்மயி பாடியது தவறு, அபச்சாரம்னு பெரிய அறிவுரையுடன் வியாக்யாணம் பேசினாரு! ரஜினிகாந்த்  சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயமாக இருந்தாலும் இந்தாளுக்கு மூளை ஒழுங்கா வேலை செய்யாது! ஒரு பக்கம் பயங்கர லிபெரலாப் பேசுறது, அப்புறம்  இன்னொரு பக்கம் ஏதோ கன்செர்வாட்டிவா காட்டிக்கிறது. இது நம்ம க்ரிட்டிக்களிடம் உள்ள மாபெரும் பிரச்சினை!

சரி நம்ம இக்பால் என்ன சொல்றாருனு பார்ப்போம்!

நம் நாட்டில் ரோட்டில் KISS அடிக்க முடியாது, ஆனால் PISS அடிக்கலாம். !


ரோட்டில் சிறுநீர்கழிப்பது ரொம்ப தப்புனு சொல்றாரு! 

சரி, தெருக்குத் தெரு சுத்தமான பாத்ரூம் இருந்தால் நம்மாளு நிச்சயம் பாத்ரூம்லதான் போயி சிறுநீர் கழிப்பான். நாறும் பாத்ரூமைவிட திறந்தவெளி "சுத்தமானது/சுகாதாரமானது" என்பதால்தான் சிறுநீர் நாற்றம் அடிக்காத ஒரு இடமாப் போயிப்பார்த்து சிறுநீர் கழிக்கிறான். இதுதான் உண்மை நிலவரம்! மக்கள்த்தொகை அதிகமாவதால் பொதுஜனங்களுக்கு இதுபோல் எந்தவிதமான வசதியும் செய்துகொடுக்கமுடியாமல் அரசாங்கம் அல்லல்ப் படுகிறது. அவசரத்துக்கு நம்மாளு ஓரமா ஒதுங்கிடுறான். என்னைமாரி ஆட்கள் எல்லாம் நாடுவிட்டு நாடு போய் அமெரிக்காவில் வாழ்வதற்கு ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த பாத்ரூம் வசதி இங்கே அதிகம் என்பதால்னுகூட சொல்லலாம். ஒரு சிலநேரம் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபூட் ரெஸ்டாரெண்ட்களைக்கூட அவசரத்திற்கு மக்கள் பயன்படுத்திக்கிறாங்க!

நம்ம ஊரில் நடுத்தெருவில் சிறுநீர்கழிப்பது சரி என்று யாரும் வாதிடவில்லை! அதற்கு காரணம் அவனின் "திமிரோ" இல்லை ஊரிலுள்ளவனுக்கெல்லாம் நம்ம குஞ்சை காட்டணும்னுனோ யாருக்கும் ஆசை கெடையாது! போதுமான வசதியின்மை! ஏழைகள் பெருத்த இந்தியா என்பதால்தான் என்பதை இக்பால் அவர் மண்டையில் ஏற்றணும். சிறுநீர் கழிக்கும் தவறை சுட்டிக்காட்டி, நம்ம இக்பால் பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை சரி என்பதுபோல் வக்காலத்து வாங்குவது எரிச்சலைக் கிளப்புகிறது. கிஸ் பண்ணுறது தப்பு இல்லைனா  நடுரோட்டில் அம்மனமா ரெண்டுபேரு செக்ஸ் வச்சிக்கிறதுல என்ன தப்பு?னு இக்பால் கேட்பாரோ?

Yeah, Tell me Iqbal, what is wrong in "you are doing your naked girlfriend in public so that everybody can watch you??" I mean you are fucking her in PUBLIC! You dont see anything wrong with that either. Right?

WHY DON'T YOU DARE in your Canadian LAND?

Now you have to start explaining me the difference between kissing and fucking! Go on explain!

BTW, Here is your bullshit!

உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு பெண் குளிப்பதையும், காதலிப்பதையும், உறவாடுவதையும், ஏன் மலம் கழிப்பதையும் கூட வக்கிரமாய் படம் எடுத்து இணையத்தில் உலாவ விடுவதில் இந்தியர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். 

I don't think you can prove that. Sick motherfuckers are everywhere including THE LIBERAL  north-america and LIBERAL Europe! Dont go on write such bullshit just to prove your fucking point!

Tuesday, September 10, 2013

புத்துயிர் பெற்று வரும் கோச்சடையான்!

"மருதநாயகம்" னு எவனாவது சொன்னால், "உனக்கு வேற வேலை இல்லையா? சும்மா கமல் மருதநாயகம் எடுக்கப் போறாரு, எடுப்பாரு னு இந்த எழவையே எத்தனை வருடம்டா சொல்லிக்கிட்டு அலைவீங்க?" என்று எகத்தாளமாக பேசுவதில் தவறேதும் இல்லை!  இப்போ நம்ம சவுந்தர்யா சேச்சியுடைய "மோஷன் பிக்ச்சர் டெக்னாலஜியான கோச்சடையானையும்" இழுக்க இழுக்க, இதுவும் "மருதநாயகம்" நிலையைத்தான் அடைந்து கொண்டு இருந்தது. இப்போ சமீபச் செய்திகளால் கோச்சடையானுக்கு ஏதோ புத்துயிர் வந்துவிட்டதுபோல் இருக்கிறது!

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து அவருடைய உண்மையான "ஹெல்த்" எப்படி இருக்கிறது என்கிற கேள்விக்குறி எல்லோர் மனதிலும் இருப்பதால், சவுந்தர்யாவின் கோச்சடையான் போல ஒரு அனிமேஷன் அல்லது மோஷன் பிக்ச்சர் எடுக்கும் முயற்சி நிச்சயமாக நல்ல ஐடியாதான். ஆனால் அதை செயல்படுத்த எத்தனை ஆண்டுகள்? என்பதே  பிரச்சினை. படம் வெளிவர காலம் கடக்கக் கடக்க படம் வெளி வராது என்றுதான் ஊர் உலகம் பேசும்.

எதிர்பார்த்ததைவிட காலம் தாமதம் அடைந்துவிட்டதால், நம்ம சூப்பர் ஸ்டாருடைய கோச்சடையான் இப்ப வரும், வந்துரும், வந்துக்கிட்டே இருக்குனு சொல்லச் சொல்ல எரிச்சல்தான் வந்தது. மற்றவர்களைவிட முக்கியமாக ரஜினி ரசிகர்களுக்கு!

ஒரு வழியாக இப்போது இந்தப்படத்தின் ட்ரைலர் வெளிவந்துவிட்டது! படம் டிசம்பர் 12 வெளிவருவதாக சொல்கிறார்கள். இருந்தாலும் "மணிரத்னமே மார்க்கட் இழந்து நிற்கும் இந்த நவீன திரையுலக காலத்தில் கத்துக்குட்டி சவுந்தர்யாவின் கோச்சடையான் எந்தளவுக்கு வெற்றி பெறும்?" என்கிற கேள்வி ரஜினி ரசிகர்கள் எல்லோருக்கும் பீதியைக் கிளப்புகிறது என்றால் அது மிகையல்ல.

இந்தப்படத்தில் ஒரு சில ப்ளஸ் பாயிண்ட்ஸ்னு பார்த்தால்..

* ஏ ஆர் ரகுமானின் இசை!

* நம்ம க்யூட் தீபிகா படகோன் இருக்கார்!

* இந்தப் படத்திற்கு ஜெயலலிதாவின் "கருணை"யால் வரிவிலக்கு கொடுக்கப் படுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது

ஆனால் என்னதான் ரஜினி ரசிகர்கள் கூட்டம் எங்கும் இருந்தாலும் அவர்கள் மட்டும் பார்ப்பதால் இந்தப் படம்  மட்டுமல்ல  எந்தப் படமும் வெற்றியடையாது. பொது ஜனங்கள், முக்கியமாக ஓரளவுக்கு  சிறுவர்களை கவர்வதுபோல இந்தப்படம் இருந்தால், அவர்களை வைத்து படம் ஓரளவுக்கு வெற்றியடையலாம். மற்றபடி, இவ்வளவு காலதாமதத்திற்குப் பிறகு படம் வெளிவந்தாலே அதுவே ஒரு பெரிய வெற்றிதான்!

 கோச்சடையான் ட்ரைலர் தொடுப்பு (என் டி ட்டிவி)! (இதில் ஏதோ காப்பிரைட் பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது).

முள்ளும் மலரும் படத்தில் உணர்ச்சிபொங்கப் பார்த்த ரஜினியை இந்த கோச்சடையான் பொம்மை ரஜினியோட ஒப்பிட்டுப் பார்த்தேன்! சோகம்ப்பா! :(

Thursday, September 5, 2013

என்ன விசய், எஸ் எ சி!! தலைவா சக்சஸ் மீட் எல்லாம் இல்லையா?

தலைவாக்கு வச்ச ஆப்புல நம்ம ஊர் கதாநாயகர்களிலிருந்து, தயாரிப்பாளர்கள் வரை எல்லாரும் குழம்பிப் போயி இருக்காணுக! விஸ்வரூபத்திற்கு தடை! அடுத்து தலைவாக்கு தடை!னு தமிழ்நாடு அரசு 144 தடை அது இதுனு புதுசா ஆரம்பிச்சு எல்லாரையும் குழப்பி எடுத்துக் கொண்டு இருக்கிறது. விஸ்வரூபம் இதிலிருந்து தப்பிச்சதுக்கு காரணம், திருட்டு விசிடி ல படம் பார்த்தால் ஒரு பயலுக்கும் புரியலை! ஒருவேளை தியேட்டர்ல போயிப்பார்த்தால் புரிஞ்சாலும் புரியும்னு தேட்டருக்குப் போனால் அங்கேயும் அதே எழவுதான்! ஆனால் தேட்டருக்குப் போயி நம்மாளு தட்சணை வச்சது வச்சதுதானே? ஆனால் தலைவா விசயத்தில் திருட்டு விசிடிலயே கதை எல்லாம் புரிஞ்சிடுச்சுனு நம்மாளு காசை மிச்சம் பண்ணிட்டான்!

விஸ்வரூபத்தை டி ட்டி எச் ல ரிலீஸ் பண்ணப்போறதா சொல்லி கமலஹாசன் சாதிச்சதைவிட, ஆளுங்கட்சிக்கு ஒரு படத்தை தடை செய்ய புதுமாதிரியான ஒரு யுக்தியை கற்றுக் கொடுத்து,  யாருக்கு வேணா, எந்தப் படத்துக்கு வேணா  ஆளுங்கட்சி ஆப்பு வைக்கலாம்னு ஒரு பாடம் கற்றுக் கொடுத்து சாதிச்சது பெரிய "ஒலக சாதனை" தான். ஆக மொத்தத்த்தில் தலைவாவுக்கு ஆப்பு வச்சது விஸ்வரூபம்தான்னு கூட சொல்லலாம்!

தலைவாவுக்கு எதுக்குத் தடை என்பது இன்னும் சரியாகப் புலப்படவில்லை! இதுல என்ன வேடிக்கைனா நம்ம புரச்சித் தமிழன் சத்யராஜும் தலைவால ஒரு பாத்திரத்தில் நடிச்சு இருக்காரு. இந்தப் பிரச்சினையில் கருத்துச் சுதந்திரம் அது இதுனு வாயைத் திறக்கவே இல்லை, மனுஷன். அதைவிட வேடிக்கை, நம்ம ரசினியின் நிலைப்பாடு.  என்ன எழவுப் பிரச்சினையா இருந்தாலும், இளைய நடிகர்களுக்கு உதவுவதாகச் சொல்லி ஏதாவது சொல்லுவாரு. ஆனால் இந்தத் தலைவா விசயத்தில் எதுவும் வாயைத் திறக்கவே இல்லை!!

நம்ம வருங்கால முதல்வர், விசய், தலைவா பிரச்சினைக்கு வந்த காரணங்களையும், அதனால் தமிழ்நாடு அரசு தவிர்க்க முடியாமல் விதித்த தடையையும் சரியாகப் புரிந்துகொண்டு அதை எல்லாம் புறந்தள்ளி, திருட்டு வி சி டி எல்லாம் வந்தப்பிறகு தலைவாவை வெற்றிகரமாக வெளியிட உதவிய ஜெயலலிதாவுக்கு நன்றி, நன்றி, மிக்க நன்றி, மிகவும் நன்றினு தொடர்ந்து நன்றி  சொன்னாரு சொல்லிக்கிட்டே இருந்தாரு. இப்படி நன்றி சொல்வதிலேயே மூழ்கிவிட்டதாலோஎன்னவோ  இப்போ தலைவாவின் சக்ஸஸ் மீட்டை செயல்படுத்தாமல் மறந்துட்டாங்க நம்ம அண்ணா எஸ் எ சியும் தம்பி விசய் யும்! ஒருவேளை அடுத்து ஜில்லாவுக்கும் ஆப்பு வந்துடுமோனு பயந்துகொண்டு இருக்காங்களோ? என்னவோ? யாருக்குத் தெரியும்? :)

Friday, August 23, 2013

தமிழ்மணத்தில் ஆபாச நாற்றம் அடிக்க வைக்கும் நிரூபன்!

பொதுவாக ஈழத் தமிழர்கள் பொறுப்புணர்வுடன் கவனமாக பதிவெழுதுவார்கள். வயதில் சிறியவர்களாக இருந்தாலும் நடத்தையில் உயர்தரமாக இருக்கிறார்களே? என்று என்னை வியக்க வைப்பவர்கள் இவர்கள்.  இவர்கள் மட்டும் எப்படி? ஒருவேளை வாழ்க்கையில் பல விதமான இன்னல்களுக்கு ஆளானதால் இப்படி நடந்துகொள்கிறார்களா? எப்படி இவர்கள் மட்டும் தமிழ் நாட்டுத் தமிழர்களைக் காட்டிலும் பொது நோக்குடனும், தமிழ்ப் பற்றுடனும், தரமான பதிவுகளை இடுகிறார்கள் என்றெல்லாம் நான் பொறாமைப் படுவதும் உண்டு. ஆனால் என் எண்ணத்தில் மண் அள்ளிப்போட்டு விட்டார் நிரூபன் என்னும் சகோதரர்.

"சகோதரா!  நாங்களும் உங்களைவிட மோசமானவர்கள், அசிங்கமானவர்கள் தான்" என்பதை நிரூபிக்கும் வகையில் "ஆபாசம்" என்கிற வார்த்தையை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு என்ன எழவை எழுதினாலும் "ஆபாசத்தை" கவனமாக அவர் பதிவின் தலைப்பில் இணைத்து தமிழ்மணத்தையே தொடர்ந்து நாறடிக்கிறார் இந்த நிரூபன்.

இவர் "ஆபாசப் பதிவுகள்" தொடர்ந்து தமிழ்மணத்தின் முகப்பில் அம்மனமாக நின்று நடனம் ஆடிகொண்டு  தமிழ்மணத்தை ஆபாசத்தளமாக பறை சாட்டிக்கொண்டு இருக்கிறது.

வாழ்க இவர் தமிழ்த் தொண்டு!

சேரன் என்னும் அப்பாவும் ஈஸ்வரி என்னும் மாமியாரும்!

சேரன் மகள் தாமினி, அப்பா அம்மாவிடமே திரும்பி சென்றுவிட்டாராம்.   "விஸ்வரூபம்" ரிலீஸ் ஆனபோது அமீரின் நிலைப்பாட்டை வைத்து அவரை "தீவிரவாதி" என்றுகூட விமர்சிச்சது இந்த உலகம். இந்த தாமினி  விசயத்தில் அமீர், சந்துருவுடைய முகத்திரையை விலக்கிக்காட்டி, "சந்துரு நல்லவனாக இருக்க முடியாது"னு உலகுக்கு அவனைக்காட்டியது பாராட்டத்தக்கது. சேரன் குடும்பப் பிரச்சினை இது.."நமக்கு எதுக்கு வம்பு?"னு ஒதுங்கிப் போறவங்கதான் இந்த உலகில் அதிகம்பேர். அமீர், அப்படி செய்யாமல் தன்னால் முடிந்த உதவியை சேரன் குடும்பத்திற்கு செய்துள்ளார். அவர் ஒரு மூனாவது ஆளாக இருப்பதால் அவர் சந்துரு பற்றி சொன்ன விசயங்களுக்கு மதிப்பு அதிகமானதுனு சொல்லலாம். என்னதான் சேரனும், அவர் மனைவியும் எத்தனை முறை சந்துரு நல்லவன் இல்லை என்று சொன்னாலும் உலகம் அதை அப்படியே எடுத்துக்காது என்பதே உண்மை.


Cheran


In an anti-climax, Tamil actor- director Cheran's daughter, who had earlier stated that she would like to stay with her lover, today told the Madras High Court she wished to go with her parents.
Following his daughter's declaration, Cheran prostrated outside the court hall and court complex.
A division bench comprising Justices V Dhanapalan and C T Selvam observed that Damini is at liberty to go as per her wish as she is a major and dismissed a Haebas Corpus petition filed by the mother of her boyfriend.
On August 6, the court had directed Damini to stay with the headmistress of a city school till today.
When the girl was brought to court today, Damini categorically said she would like to go with her parents.
Counsel for her boyfriend opposed it and said she required counselling.
The bench also rejected a fresh affidavit filed by Easwari Ammal, mother of Damini's boyfriend Chandru, which claimed the girl was under pressure.
Later, Cheran told reporters it was not only a victory for him but for every parent and every woman and prostrated outside the court hall and court premises, thanking the High Court and media.
He said the High Court has dismissed the case against his daughter and she realised her mistake.
He also said Damini's decision to go with her parents was solely hers.
Mother of Damini's boyfriend had filed a Habeas Corpus in the High Court, challenging the order of DCP, All Women Police Station to make Damini stay at a government home at Mylapore here.- இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்
சரி இந்த விடயத்தில்  தவறு யார்மேலேனு பார்த்தால், அது சேரன் பொண்ணு மேலேதான். சந்துரு அயோக்கியன் என்றால், அயோக்கியனை அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாத பெண்தான் இவ்வளவுக்கும் காரணம். மற்றவர்கள் தவறேல்லாம் பிறகுதான்.

உடனே அதுக்கு  18 வயதுதான் 25 வயது ஆகியிருந்தால் மூளை நல்லா வேலை செஞ்சிருக்கும் அது இதுனு கதையெல்லாம் விடாதீங்கப்பா. எனிவே, தாமினியின் வாழக்கையில் பெரிய "சேலஞ்ச்கள்" இனிமேல்தான் வரவிருக்கிறது. இனிமேல் அவர் சரியான துணைவனைத் தேடி வாழ்ந்து காட்டணும்!

எனக்கு இந்த "பிரச்சினை"ல புரியாத இன்னொண்ணு இந்தம்மா ஈஸ்வரினு ஒண்ணு இருக்கு இல்ல? அது பத்திதான். எதோ மகன் காதல்ல விழுந்துட்டான்னு மகனுக்கு சப்போர்ட் பண்ணியதெல்லாம் சரிதான். இப்போ தாமினி, தன் மனதை மாற்றிக்கொண்டு (பொண்ணுங்க மனதை மாற்றிக்கிறதெல்லாம் ஜுஜுபி மேட்டர்! ) அப்பா - அம்மாவிடம் போறாள்னு, சரி சனியன் தொலையிது னு  போய் வா னு அனுப்பி வைக்காமல் இன்னும் போட்டுக்கிட்டு.. "இது அவளுடைய அப்பா அம்மா கொடுத்த ப்ரெஷெரால், மற்றும் மீடியா, அமீர் கொடுத்த ப்ரஷெரால் எடுத்த முடிவு" னு இன்னும் போட்டு எழவைக்கூட்டி ஒப்பாரி வைத்து போராடிக்கிட்டு இருக்கு??

* இந்தம்மா ஈஸ்வரி ரொம்ப நல்லவளா? 

* இல்லைனா வடிகட்டிய அயோக்கியச்சியா?

இந்த ரெண்டில் ஒண்ணாத்தான் அந்தம்மா இருக்க முடியும்!

Wednesday, August 21, 2013

மறைந்த அப்துல்லா என்னும் பெரியார்தாசன் நாத்திகத்தை இழிவுபடுத்திவிட்டாரா?!

 சேஷாச்சலமாகப் பிறந்த இவர், பெரியார்தாசனாக மாறி, பிறகு அப்துல்லாவாக மாறி, இப்போ நம்மை எல்லாம் விட்டு பிரிந்துபோய்விட்டார். அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஓசைனு ஒரு தளம் நடத்திவரும் ஆத்திகர் ஒருவர், பெரியார் தாசன், நாத்திகத்தை துறந்து, அப்துல்லா ஆனதை சில அரசியல்வாதிகள் மறைத்துவிட்டார்கள் என்பதுபோல் பதிவைப்போட்டு ஆத்திகர்களிடன் பெரு மதிப்பெண்ணை பெற்றுள்ளார்..

அவர் பதிவில் இட்ட என் பின்னூட்டம் வெளிவருமா? என்று தெரியவில்லை. ஏன் என்றால் நான் என் மனதுக்கு உகந்த பின்னூட்டங்கள்தான் எழுதுவதுண்டு.. ஓசையை திருப்திபடுத்தணும்னு என் கருத்தை பவ்வியமாக எழுதினால் என்னால் நான் சொல்ல வந்ததை சொல்ல இயலாது.

Anyway, here is a COPY of  my response in his blog post

 பெரியார்தாசன் "பகுத்தறிவு உண்மையை மறைக்கலாமோ..."

about late Abdulla aka periyaar dasan!..


எனக்கென்னவோ அவர் நிதானமாக யோசித்து "பெரியார் தாசன்"னு தன் பெயரை மாற்றி இருக்கணும்ணு தோனுது. எதுக்கு இப்படி அவசரப்பட்டாரு?? பெரியார் மற்றும் நாத்திகம், நாத்திகவாதிகள் யோக்கியதனை என்ன? என்று கொஞ்சம்கூட பகுத்தறியாமல் "பெரியார் தாசன்" மண்ணாங்கட்டினு பேரை மாத்திக்கிட்டாரு போல.

நல்லவேளை அப்துல்லாவாகவே கடைசிவரையில் இருந்து மறைந்தார். ஒரு ஆல்பர்ட்டாக அப்புறமாக மாறாமல்.

மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை எல்லாம் ஒருவர் மனம் சம்மந்தப்பட்ட விசயம். கட்சி மாறுவதுபோல ஆத்திகம் நாத்திகம் ஆத்திகம்னு தாவினால் அப்துல்லா அவர்கள் எதையும் தெளிவாகப் பகுத்தறியத் தெரியாதவர் என்றுதான் அர்த்தம்..

ஆமா வருண், அவர் எழவு வீட்டில் ஏன் இப்படி ஒரு "ஒப்பாரி"னு கேட்கலாம்தான்? இந்தப் பதிவே ஒரு ஒப்பாரிதானே? இல்லையா? ஆத்திகம்தான் உயர்வானதுனு வைக்கிற ஒப்பாரிதான் இது. 


ஆனால் உண்மை என்ன? அப்துல்லா ஒரு திடமான முடிவு எடுக்கத் தெரியாதவர், தன் மனத்தையே சரியாக அறியாமல் குழப்பத்தில் வாழ்ந்தவர்  என்பதே. இவர் இன்னும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், "ஐ லவ் ஜீசஸ் "னுகூட சொன்னாலும் சொல்லியிருப்பார்!

உடனே இஸ்லாமியர்கள் எல்லாம் வந்து "அதெல்லாம் அப்துல்லா அப்படி சொல்லி இருக்க மாட்டார்"னு அடித்துச் சொல்வார்கள். அவர்களால், தன் மனதையே தெளிவாக அறிந்துகொள்ளாத அண்ணன் அப்துல்லா மனதை எப்படிப் பகுத்தறிய முடியும், பாவம்??

Saturday, August 17, 2013

பதிவுலகில் புதுசா ஒரு வருண் வந்து இருக்கிறார்!

ஆமா, வருண் என்கிற பேரை நீ என்ன "பாட்டண்ட்" பண்ணி வச்சிருக்கியா? என்ன? மூடுடா! னு சொல்றீங்களா? "வந்துட்டான் வருண் னு இன்னொருத்தன் வந்திருக்கான்!"னு சொல்ல னு நீங்க  எரிச்சலடையிறது தெரியுது. போலி டோண்டுவை வளர்த்துவிட்டவங்க தானே  நீங்க எல்லாம்?  நம்ம தமிழர் களைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன? உங்களைப் பத்தி தெரிந்தாலும் என் பெயரில் பின்னூட்டங்கள் வருவதால் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா?

பதிவுலகில் பல பதிவர்களுக்கு இதுபோல் போலி ஆட்கள் அப்பப்போ வருவாங்க, போவாங்கனு தெரியாது. அதனால நான் சொல்ல வேண்டியதை அவர்களுக்காகவாவது சொல்லணும்.

பதிவுலகில் புதியவர்கள் கவனத்திற்கு..

வருண் என்கிற இந்தப் புது ஐ டி ல அந்த "வின்னி த பூ" படம் இருக்காது!


 My Photo

இந்த வருண் ஐ டி யை நீங்க க்ளிக் செய்தால் உங்களை இந்த வலைதளத்திற்கு  அழைத்து வரும். அதனால, அதுவும்  "இதே வருண்" தான் போல, ப்ரஃபைல் படத்தை மாத்திட்டாரு போலனு ஒரு சிலர் நினைக்கலாம். அதனாலதான் சொல்றேன்.

அப்புறம் இந்த புது "வருண்" என் பின்னூட்டங்களைவிட நாகரிகமாகவும் பின்னூட்டம் இடலாம். என்னைவிட உயர்தரமானவராகவும் இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. அதனால அவரை நான் இகழ முடியாது. என் பிரச்சினை, அவர் ஐ டி யை க்ளிக் செய்தால்  உங்களை என் வலைதலத்திற்கு கொண்டுவந்து விடுவதுபோல் செய்து  அவர் என்னைப் போல் நடிப்பதுதான்.

பின்னூட்டம் வேணும்னு ஏங்கிக்கொண்டு இருக்கவங்க, இவர் பின்னூட்டத்தை அனுமதிக்கலாம். இவரை நாகரிகமாகவும் நடத்தலாம். அதெல்லாம் அவரவர் இஷ்டம். அவரவர்  சுதந்திரம். அவரவர் உரிமை. ஆனால், அவர் கருத்தை என் கருத்தாக மட்டும் தயவு செய்து எடுத்துக்காதீங்க.

ஜெயதேவின் பதிவில், சூர்யா, சிவகுமார் பங்கேற்ற பதிவர் அமுதவன் இல்லத் திருமணம்!! திரு அமுதவன் பற்றி ஒரு கருத்தை சொல்லியிருக்காரு நம்ம புது வருண்.

சிவகுமாரையும் மைக்கேல் ஆஞ்சலோவையும் ஒப்பிட்டு எழுதியவர் நம்ம அமுதவன்.
அந்த விசுவாசத்துக்காவது சிவகுமார் கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும்
Reply
 இதுல திரு அமுதவனை அவமானப்படுத்துவதுபோல் ஒரு கருத்தை நான் சொல்வதுபோல "அந்த வருண்" எடுத்து வைத்துள்ளார். இதுபோல எங்க எல்லாம் கருத்தைச் சொல்லி இருக்காருனு தேடிக் கண்டுபிடிக்க எனக்கு நேரம் இல்லை.

நிற்க, நான் இதைவிட பல மடங்கு அநாகரிக பின்னூட்டமிடுவதுண்டுதான். நான் பெரிய யோக்கியன்னு சான்றிதழ் எல்லாம் என்னால் உங்களுக்குக் காட்ட முடியாது! ஆனால் குதற்கமான ஒரு கருத்தை என் கருத்தைப் போல  முன் வைக்கும் விஷமி இவன் னு எல்லாருக்கும் புரியுமா? என்னனு தெரியவில்லை.

Please understand that I am not responsible for this venomous guy's responses. I am not going to tell you how you should treat him. It is up to you! Thanks, folks.

Friday, August 16, 2013

காதலுடன் முடிந்துவிட்டது! மஹேஷ்காக!

"காதலுடன்" முடிந்துவிட்டது!

ஆறு மாதங்கள் கடந்த பிறகு!

“என்னடா ரமேஷ், நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா? உன் சந்தியாவுக்கு அரேஞ்சிடு மேரேஜ் யாரோ சாஃப்ட்வேர் இஞ்சினியரோட முடிந்துவிட்டதாம்! நீ அவளை கல்யாணம் பண்ணுவனு நெனச்சேன்?” என்றான் நண்பன் கணேசன்.

“ஆமாடா, எல்லாம் முடிந்துவிட்டது. அவள் எங்கிருந்தாலும் வாழ்க!”

“என்ன ஆச்சு?”

“தெரியலைடா. ஏனோ இது வொர்க் அவுட் ஆகல”

“உனக்கு வருத்தம் இல்லையா?”

“கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்ணுறது? லைஃப் கோஸ் ஆன்”

“கொஞ்சம் விபரமா சொல்லுடா, ரமேஷ், ப்ளீஸ்?”

“நானும் கூடத்தான் இருந்தேன் அன்னைக்கு நைட். அவளுக்கு ஜாலியா ஃபுட்பால் டீச் பண்ணிக்கொண்டு இருந்தேன். திடீர்னு அவங்க அம்மாவுக்கு மறுபடியும் உடம்புக்கு சரியில்லைனு ஒரு கால் வந்தது. உடனே மறுபடியும் லீவ் எடுத்துக்கொண்டு லாஸ் ஆஃப் பே ல மறுபடியும் இந்தியா போனாள் சந்தியா. அங்கே போனா, அவ அம்மா ரொம்ப சீரியஸாம். இவ கல்யாணத்தை உடனே நடத்தனும்! அவங்களுக்கு ஏதாவது ஆகுமுன்னே கல்யாணத்தைப் பார்க்கனும்னு அவங்க அம்மா சொன்னாங்களாம். யாரோ ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர் இந்தியா விசிட் பண்ணியவர் டெஸ்பரேட்டா இவளை கல்யாணம் பண்ணுவேன்னு வந்து நின்னாராம். இவ கண்டிஷன் எல்லாவற்றுக்கும் சரி என்று ஒத்துக்கொண்டாராம்”

“என்ன கண்டிஷன்?'

“ஏதோ “ப்ரிநப்” பாம். பெரிய கம்மிட்மெண்ட்ஸ் எதுவும் இல்லையாம். பிடிக்கலைனா எப்போ வேணா டைவோர்ஸ் வாங்கிக்கலாமாம். இவளும் சரினு சொல்லிட்டாளாம்”

“உன்னிடம் எதுவும் கேட்கலையா?'

“இல்லைடா அவமேலே எதுவும் தப்பில்லை! என்னிடம் கேட்டாள். அங்கே இருந்து கால் பண்ணி, நிலைமையைச் சொன்னாள். எனக்கென்னவோ எதுவும் தெளிவா பதில் சொல்ல முடியலை. சரி அவரையே கட்டிக்கோனு சொல்லிட்டேன்”

“ஏன்டா?”

“I loved her for sure but ரைட் ஃப்ரம் தி பிகன்னிங், எனக்கு ஏதோ ஒரு ஃபீலிங் இருந்ததுடா. I never felt like it will work out”

“என்னவோ போ!”

“என்ன பண்ணுறது? எங்க உறவு காதலுடன் முடிந்துவிட்டது டா"

“சோகம்டா”

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை!”


-முற்றும்

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 16

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 15

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 14

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -13

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -12

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -11

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -10

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 9

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 8

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன்-7

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன்-6

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் - 5

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -4

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -3

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் - 2

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -1

Thursday, August 15, 2013

கோடங்கி தளம் இக்பால் செல்வன் மறைந்துவிட்டாரா?

இக்பால் செல்வன் என்கிற பதிவர் ஒரு வலைதளம் ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருந்தார். கனடாவிலிருந்து எழுதுகிறேன் என்பார். சென்னைதான் தன் சொந்த ஊர் என்பார். இவர் ஒரு நாத்திகர். இஸ்லாமியர் அல்ல! இஸ்லாம் மேல் உள்ள காதலால் "இக்பால்" ஆனேன் என்றார். திடீர்னு டொரொண்டோவில் ஃபெட்னா நடந்த சமயத்திலிருந்து இவர் பதிவுலகில் இருந்து மறைந்துவிட்டார் ! சரி, அவர் மறைந்தார் பரவாயில்லை,  அவர் தளமும் மறைந்துவிட்டது!!

என்ன நடக்கிது இங்கே???

When you go to  http://www.kodangi.com/

It says this DOMAIN is FOR SALE? Is this some kind of business he is doing???

இவர் வந்த புதிதில் ஏற்கனவே இதேபோல் ஒரு தளம் (கோணங்கியோ என்னவோ? )  நடத்தியதாகவும், அதை யாரோ முடக்கிவிட்டாதாகவும், புதிதாக இந்த "கோடங்கி" ஆரம்பித்துவிட்டதாகச்  சொல்லிக்கொண்டு இருந்தார்.
 இவருக்கு மூத்த பதிவர் தருமி மொதல்க்கொண்டு பல நாத்திக நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு இவரைத் தனிப்பட்ட முறையில் பர்சனலாகத் தெரிந்தும் இருக்கலாம்.

என்ன ப்பா நடக்குது? திடீர்னு ஒருத்தர் வர்ராரு. ஒரு நாளைக்கு 2 பதிவு எழுதுறாரு. பதிவுலகில் பல நண்பர்களை சந்திக்கிறார், நட்பு பாராட்டுகிறார். திடீர்னு இருந்த சுவடே தெரியாமல்  மறைந்துவிட்டார். அதைவிட மர்மம் என்னனா அவரோட தளத்தையும் காணவே காணோம்!!! அதைவிடக் கொடுமை என்னனா என்னைத் தவிர யாருக்குமே அப்படி ஒரு ஆள் இருந்தாரா என்னனு ஞாபகம் இருக்குமா என்னனு தெரியவில்லை!

கோடங்கி தளம் பற்றி எனக்கு ஏதாவது விபரம் சொல்லுங்க.

நம்ம நண்பர், இக்பால் செல்வன் என்ன ஆனாரோ? உயிரோடதான் இருக்காரா? என்கிற கவலையில் நான் வாடுகிறேன். தயவு செய்து இக்பால் செல்வனுடைய நெருங்கிய  நண்பர்கள் எனக்கு ஆறுதல் தரும் வகையில் நல்ல பதில்கள் ரெண்டைச் சொல்லவும்!

உங்க பதிவு பலரையும் சென்றடையணுமா? இவைகளைத் தவிருங்கள்!

என்னங்க இது!! என் பதிவில் எந்த கெட்டவார்த்தையும் இல்லை! ஏன் தமிழ்மண சூடான இடுகைகள் முகப்பில் தெரியாமல்ப் போயி ஒளிந்துகொண்டது? என்ற குழப்பம் ஒரு சில பதிவர்களுக்கு வருவதுண்டு. அதன்பிறகு அவர்கள் அந்தக் காரணத்தைப் புரிந்துகொளவதும் உண்டு. "முத்தம்மா"னு பேரு உள்ள பதிவுகள் சமீபத்தில் தமிழ்மண சூடான இடுகைகள் முகப்பிலிருந்து புறந்தள்ளப்பட்டதுக்கு காரணம், முத்தம்மாவில் இருக்கும் "முத்தம்"தான்னு நம்புகிறேன்! கணிணி உங்களைவிட அறிவாளி கெடையாது. ஏதாவது கெட்டவார்த்தைகளை வடிகட்டணும்னு ஒரு சில "வடிகட்டி"களை தமிழ்மணம் திரட்டி பயன்படுத்தும்போது இதுபோல் சில தவறுகள் வருவதைத் தவிர்க்க முடியாது!

18, முத்தம், கவர்ச்சி போன்ற வார்த்தைகள் உங்கள் தலைப்பில் இருந்தால் சூடான இடுகைகள் தமிழ்மண முகப்பில் வராமல் பின் தள்ளப்படும்! யாராவது பதிவர்கள் புரியாமல் இன்னும் குழம்பிக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு உதவுமேனு ஒரு நல்ல எண்ணத்தில்தான் இந்த சிறு பதிவு! நன்றி, வணக்கம்!

Wednesday, August 14, 2013

பாவிகளே!!! ஏசு உங்கள் பாவத்தை கழுவுவார்!

காலையில் அவன் பொண்ணு வித்யா மல்லிகைப்பூ பறிக்கிறேன் என்று வெளியே போனவள், கேவிக் கேவி அழுதுகொண்டே வந்தாள். அந்தக் குளவிக் கூட்டிலிருந்து வந்த குளவியிடம் கொட்டு வாங்கிக்கொண்டு வந்து வலி தாங்க முடியவில்லனு ஏங்கி ஏங்கி அழுதாள். அவள் அழுகையை அவனால தாங்க முடியவில்லை! கொளவிக்கு என்ன தெரியும் இவள் சிறுமி, தனக்கு தீங்கெதுவும் செய்யப் போவதில்லை என்று?

பகலில் அந்தக் கொளவியிடம் வம்பு வைத்துக் கொள்ளாமல்,  இரவு ஆனபிறகு வீட்டுமுன் இருந்த இரண்டு சிறு துளைகளையும் சிமெண்ட் வைத்து அடைத்தான், ராமன்.  "இனிமேல் இந்த கொளவிச்சனியன் என் குழந்தையை கொட்டாது" என்கிற நிம்மதி அவனுக்கு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இப்படி அதன் கூட்டை அடைத்துவிட்டால்.. அந்த துளைகளுக்குள்ளே கொளவியின் குழந்தை குட்டிகள் எல்லாம் வெளியே வரமுடியாமல் குடும்பத்துடன் பசியில் வாடிச் சாகுமோ? என்ற மறு எண்ணம் ஒன்று அவன் உள் நெஞ்சில் அவனைக் கொட்டியது. அவனுக்கு வேறு வழி தெரியவில்லை! "நீ வேற எங்காவது போய் கூடு கட்டி வாழ்ந்துக்கோ!"னு சொன்னால் அதென்ன போகவா போகுது? ஆறறிவு உள்ள மனுஷனுக்கே கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் படித்துப் படித்துச் சொன்னாலும், கேட்காமல் முரண்டு பிடித்து செருப்படி வாங்கிக் கட்டிக்கிறான். பாவம் கொளவி, அதுக்கென்ன தெரியும்?

"வாழு! வாழ விடு!" என்றெல்லாம் மனிதர்களுக்குள் தத்துவம் பேசிக்கிறோம். ஆனால் விலங்குகளையும், பறவைகளையும், பூச்சிகளையும், துன்புறுத்தி, எமாற்றி, கொன்று, தின்றுதான் மனிதனால் வாழமுடிகிறது. தன் இனத்தைத் தவிர யாரை நிம்மதியாக வாழவிட்டான் மனிதன்? "வாழு! வாழவிடு!"னு எதற்கு தன்னைத்தானே ஏமாற்றிக்கணும்? மனிதனைவிட அடிமுட்டாள் எவனுமே இல்லை! என்னவோ கடவுள்ங்கிறவன் இவனுக்காகத்தான் இருக்கமாரி ஒரு எண்ணத்துடன் வாழ்ந்து, கடவுளைக் கட்டி அழுது சாகிறான்.

சிமெண்ட் வைத்து அடைத்துவிட்டு வீட்டின் உள் நுழையப் போகும்போது பக்கத்துவீட்டில் வாழும் ஜேம்ஸ், காரிலிருந்து இறங்கி  ராமனுக்கு  ஹாய் சொல்லிவிட்டு அவருடைய வீட்டிற்குள் அவர் கேர்ள் ஃப்ரண்டுடன் நுழைந்தார். அந்த அம்மாவுக்கு ஒரு 40 வயதுபோல் இருக்கலாம். ஜேம்ஸ்க்கு வயது அறுபத்து ரெண்டு. பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர் வயதை ஒத்த மனைவியை சமீபத்தில்தான் டைவோர்ஸ் செய்திருந்தார், ஜேம்ஸ். என்ன பிரச்சினையோ எவனுக்குத் தெரியும்? அவர் மாஜி மனைவி வேறு வீட்டில் வாழ்கிறார் இப்போது.  தன் புது கேர்ள் ஃப்ரண்டுடன் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார் ஜேம்ஸ். இதிலென்ன தப்பு? எனக்கு "காமம்" தேவைப்படுகிறது, அதற்கானதை நான் செய்வேன் என்ற வெள்ளைக்காரர்களின் வெளிப்படையான தத்துவம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனால் ஜேம்ஸ் வளர்க்கும் இரண்டு ஆண் நாய்களுக்கும் அவர் கவனமாக காயடித்து விட்டார்!  அவைகள் பருவ வயதையடையும் போதே! அதில்தான் நியாயம் எங்கே இருக்கிறது என்று விளங்கவில்லை, அவனுக்கு!

மதுரை டவுன்ஹால் ரோட்டிலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் ஒரு சில கிருஸ்தவ மத போதகர்கள், "பாவிகளே!" னு கூச்சல்போட்டு எல்லாரையும் கத்தும்போது ஹிந்துவான ராமனுக்கு எரிச்சல்தான் வந்திருக்கு. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அவனால் இன்று யோசிக்கும்போது உணர முடிந்தது.

Monday, August 12, 2013

ஈரோட்டில் ஜெயமோகனுக்கு அவமானம்?!

அவமானம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒண்ணு. எதிரிகள் மட்டுமல்லாமல், கள உறவுகள், பதிவர்கள், நம்மை நன்கு அறிந்தவர்கள் நம்மை அவமானப் படுத்துவதை யாராலும் தவிர்க்க முடியாது. நம்ம வேணா யாரையும் அவமானப்படுத்தாமல் பக்குவமாக வாழலாம். ஆனால் உலகமே அப்படி இருக்கணும்னு எதிர்பார்த்தால் அது அபத்தமான ஒரு சிந்தனை. இதற்கு ஜெயமோகன் மட்டும் விதிவிலக்கு அல்ல!

எழுத்தாளர்னா கொஞ்சம் பரந்த எண்ணங்கள் இருக்கும். அவர்களுக்கு  மனோதத்துவம் தெரியும். வாழ்க்கையின் தத்துவங்கள் தெரியும். பலருடைய பார்வைகளை புரிந்து கொள்வார்கள். பலரின் பலவிதமான கண்ணோட்டங்கள்  எல்லாம் புரிந்துகொள்ளும் சகிப்புத்தன்மை உள்ளவர்கள். என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இருந்த என் எண்ணத்தில், நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுபவர்களில் முதன்மையானவர் நம்ம ஜெயமோஹன் தான். என்னதான் குடித்தாளும், குட்டிகளுடன் அலைந்தாலும், நட்பு பாராட்டத் தெரியாதவராக இருந்தாலும், அப்பப்போ பிச்சை எடுத்தாலுமகூட சாரு நிவேதிதா, ஜெயமோகனை விட பலமடங்கு உயர்ந்தவர்னு சொல்லுவேன். சாருக்கு கொஞ்சமாவது பொதுஜனத்தின் சைக்காலஜி, மேலும் மற்றவர்கள் மனநிலை பற்றிய ஒரு நல்ல புரிதல் உண்டு. தான் பட்ட அவமானத்திக்கூட பிறர் ரசிக்கத்தக்க நகைச்சுவை கலந்து விமர்சிக்கவும் தெரியும். அதுபோல் ஒரு திறமையோ,  சகிப்புத்தன்மையோ நிச்சயம் ஜெயமோகனுக்கு இல்லவே இல்லை.

இலக்கிய வட்டத்தில் ஜால்ராப் பசங்களோடயே குப்பை கொட்டும் ஜெயமோகனுக்கு இவர்மேல் பலவிதமான மனிதர்கள் இடும் கண்ணோட்டங்களோ, இலக்கியவட்டமல்லாத சாதாரண மனிதன் தன்னை எப்படி எடை போடுவான்? என்பது  பற்றி எந்தவிதமான புரிதலோ, அளவுகோலோ இல்லாமல் அடிமுட்டாளாவே வாழ்கிறார் மனுஷன்.

ஈரோட்டில் பேசப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கே போய் பேசி இருக்கிறார். என்ன காரணத்தாலோ இவர் பேசும்போது நெறையப்பேர் எழுந்து போய்விட்டார்கள் போலும்.  சரி போறான், அவன் கொடுத்து வைத்தது அவ்ளோதான்னு விட்டுட்டுப் போகாமல்..நம்ம சிக்கல் சண்முக சுந்தரம் நாதஸ்வர்த்தை கேட்காமல் வான வேடிக்கையைப் பார்க்கப்போன மக்களை திட்டுறதுபோல் இதை விமர்சிச்சு தன் சிறுபுத்தியை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இவரு, தியானம் பண்ணுறது, யோகா பண்ணுறது, பகவத் கீதை படிக்கிறது போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்றது இல்லைபோல இருக்கு! யாராவது அவரோட ஜால்ராப் பசங்க, அவருக்கு உதவுங்கப்பா!

Friday, August 9, 2013

"குஞ்சு செத்த பய" பதிவுடா இது!

ஒரு பதிவு எப்படி எழுதணும்னு எவனையும் எவனும் சொல்ல முடியாது. அது அவனவன் உரிமை! "கஞ்சிக்கு செத்த பய" சாருக்கான் னு எழுதலாம். அதனுள்ளே "கஞ்சிக்கு செத்த பய" போல ரஜினி இருக்கான்னு விஷத்தைக் கக்கி அதைச் சொல்லாமல் சொல்லலாம். ஏன் "குஞ்சு செத்த பய பதிவு" னு கூட எழுதலாம்.

அதென்ன "குஞ்சு செத்த பய" பதிவு? It is called dead dick! It is useless for sexual intercourse! அதே மாதிரி, இந்த "குஞ்சு செத்த பய" பதிவால் எவனுக்கும் என்ன பிரையோசனமும் இல்லை! அப்படி ஒரு பதிவை ஒருவன்  வரிஞ்சி வரிஞ்சி எழுதுறான்னா அவன் ஒரு  குஞ்சு செத்த பய !

"கஞ்சிக்கு செத்த பய" சாருக்கான் னு சாருக்கானுக்காக வந்து கவலைப்பட்டு ஒப்பாரி வைப்பதுபோல பதிவை ஆரம்பிக்கிறது. ஆனால் ரஜினிகாந்தை  கட்டி இழுத்துக் கொண்டு வந்து, சாருக்கானுக்கு இவனே மாமாவா மாரி, சாருக்கானை  வச்சு ரஜினிகாந்தை கேவலப்படுத்துறது.

அப்புறம் தமிழன் தமிழன்னு  மார்பிலே அடிச்சுக்கிட்டு தமிழனுக்காக ஒப்பாரி வைக்கிறது. தமிழனுடைய நகைச்சுவை உணர்வு பத்தி பேசுறது. தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்னு சொல்றது. இல்லை அவனுக்கு நகைச்சுவை உணர்வு குறைவுனு சொல்றது. தமிழன் எல்லாம் முட்டாப்பயளுக சொல்றது. இல்லை கூறுகெட்ட கூமுட்டைப்பயளுகனு சொல்றது..

கமலஹாசன், மல்லிகா சவுரத், தீபிகா படகோன், ஜாக்கிச் சான் எல்லாரைப்பத்தியும் பத்தி பத்தியா சீரியஸா விமர்சிக்கிறது. சும்மா கெடக்கிற ரஜினி ரசிகர்களை அங்கங்கே கவனாகக் கேவலப்படுத்துறது. ரஜினியை கஞ்சிக்கு செத்த பய னு சொல்லாமல் சொல்லி வஞ்சம் தீர்க்கிறது. இதை எல்லாத்தையும் கோர்வையாகவும், அப்புறம் கொஞ்சம் தேவடியாத்தனம் கலந்தும் குழப்பி குழப்பி திரும்பத் திரும்ப சொல்றது. கடைசியில் நான் சாருக் கான் படம் ரா ஒன் கூட பார்க்கவில்லை ஆனால் தமிழர்கள் சென்னை எக்ஸ்ப்ரெஸ் ஏன் பார்க்கணும், இல்லைனா ஏன்  பார்க்கக் கூடாதுனு பெரிய புடுங்கியாட்டம் அறிவுரை சொல்றது.

இந்தப் பதிவை நம்மாளு வாசிச்சுப்புட்டு என்ன எழவைத்தாண்டா இவன் சொல்ல வர்ரான்?னு அவன் அவன் தலையைப் பிச்சிக்கிட்டு...

* சாருக்கானுக்கு வக்காலத்து வாங்குறானா?

* இல்லைனா சாருக்கானை கேவலப்படுத்துறானா?

* ரஜினியை வச்சு சாருக்கை  கேவலப்படுத்துறானா?

* இல்லை வழக்கம்போல  ரஜினியையும் ரஜினி ரசிகர்களையும் இவன் இஷ்டத்துக்கு வஞ்சம் தீர்க்கிறானா?

* தமிழர்கள் பத்தி இவன் கவலைப்படுறானா?

* இல்லை தமிழர்களை எல்லாம் கூமுட்டைகள்னு கேவலப்படுத்துறானா?

* ஹிந்திக்காரனுக்கா குண்டி கழுவி விடுறான்?

* ஹிந்தியனா இவன்? தமிழின துரோகியா?

இவன் என்ன சொல்ல வர்ரான்னு புரியாமல் குழம்பி, "என்னவோ போ, பெரிய மேதை போல இவன்", "கமலஹாசன் மாரிப் புரியாமல் பேசக்கத்துக்கிட்டான்" னு ஒரு முடிவுக்கு வந்து  "நல்ல பதிவு"  "நல்ல விமர்சனம்" னும் நம்ம நாட்டான் வாழ்த்திப்புட்டு போயிடுவானுக.

ஆனா, உண்மை என்ன? நெசமாவே இவன் என்னதான்  சொல்ல வர்ரான் ? யாரைக் கேவலப்படுத்துறான்? யாரை வஞ்சம் தீர்க்கிறான்? னு பார்த்தால் உண்மை புரியும்.   ஆமா, சொல்ல வர்ரதை நேரிடையாக, பச்சையாக, தெளிவாக சொல்ல முடியாத சரியான "குஞ்சி செத்த பய" இவன்னு!

Thursday, August 8, 2013

விசய்க்கும் எஸ் எ சி க்கும் ஆளுங்கட்சியிடமிருந்து தொடர்ந்து ஆப்பு!

காவலன் படம் வெளிவர இருக்கும்போது வந்த பிரச்சினைகளுக்கு தி மு க தான் காரணம். என் மகரு அடுத்த எம் சி ஆர் ஆகப்போறாரு, அது இதுனு அப்பாவும் மகனும் ஒப்பாரி வைத்தார்கள். நான் அப்போவே சொன்னேன், இந்த "புது எம் சி ஆரை", தி மு க மட்டுமல்ல, அ தி மு க வும் வளரவிடப்போவதில்லை! என்று.

என்னவோ அம்மா ஆட்சி வந்ததும் இவரு என்ன செய்தாலும் கண்டுக்கப்போவதில்லை ங்கிற மனப்பால் குடித்துக்கொண்டு  திரிந்தார்கள் அப்பரும் மகரும்.

நினைத்தது போலவே இப்போ தலைவா வுக்கு தொடர்ந்து ஆப்பு மேலே ஆப்பா வருகிறது. 

Breaking : Thalaivaa's release stalled - Same reasons as Vishwaroopam

Aug 08, 2013
Following the meeting at the Film Chamber involving all the stake holders the decision to indefinitely postpone Thalaivaa's release seems to have been taken on account of security reasons.

The filmmakers had approached the government of Tamil Nadu seeking police protection across the state for all theatres screening the film in the wake of the alarming bomb threats that were supposedly received by some cinema halls. The police however turned down the request stating logistic challenges that would arise in a requirement of such a large scale. One might remember that the government had stated the same reason during the Vishwaroopam issue.

Meanwhile, the word is that the film will release as planned in the rest of the country and the rest of the world. The only affected territories we hear are Tamil Nadu and Pondicherry. Additionally the city's commissioner of police has instructed the makers to take down all hoardings of the film across Chennai. An official statement of the turn of events is still awaited and so is the new release date.

* மொதல்ல சென்சார்ல யு சான்றிதழ் கொடுக்கப் படவில்லை!

போயி ஒப்பாரி எல்லாம் வச்சு யு சான்றிதழை தேத்தினார்கள்!

* இப்போ அடுத்து விஸ்வரூபத்திற்கு வந்த அதே பிரச்சினை னு சொல்றாங்க!

ஆமா, இப்போ என்ன சொல்லப்போறானுக, அப்பனும் மகனும்?

* என் மகன் எம் ஜி ஆர் மாரி  வளர்ந்துடுவான்னு ஆத்தாவுக்கு பொறாமைனா???

திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் பொத்திக்கிட்டு இருப்பானுக . இல்லைனா அழிச்சிடுவார்கள் இவர்கள் "முதல்வர் கனவை"!